Search This Blog

Friday, May 6, 2011

உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள

உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள

ஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கணணி கற்களால் தாக்கப்பட்டுள்ளது என்று திரையில் காட்டும்.சில வேளைகளில் நாம் வைரஸ் இணைந்த அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட கோப்பு ஒன்றை இயக்குவோம். வைரஸ் கணணி உள்ளே புகுந்து கொள்ளும். ஆனால் அப்போது நமக்கு எதுவும் தெரியாது.
ஆனால் அதன் பின் கணணி இயக்கத்தில் பல மாறுதல்கள் தெரியும். அதனைக் கொண்டு நம் கணணியில் வைரஸ் வந்துள்ளது என அறியலாம். அத்தகைய மாறுதல்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கணணி மெதுவாக இயங்கும்.
2. ஒரு சில கட்டளைகளுக்குப் பணிந்து விட்டு பின் கணணி இயங்காமல் அப்படியே உறைந்து போய் நிற்கும். இந்நிலையில் என்ன நடக்கிறது என்ற பிழைச் செய்தி கிடைக்காது. ஒரு சில வேளைகளில் இந்த பிழைச் செய்தி கிடைக்கலாம்.
3. உங்கள் கணணி கிராஷ் ஆகி உடனே தானே ரீ பூட் ஆகும். இது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தானே நடக்கும். ஏனென்றால் உங்கள் கணணியின் பாதுகாப்பு சிஸ்டத்தினை கணணி உள்ளே வந்துள்ள வைரஸ் உடைக்க முயற்சிக்கிறது. அப்போது விண்டோஸ் தானாக ரீபூட் செய்கிறது. ஆனால் அவ்வாறு ரீபூட் ஆன பின்னரும் அது முடங்கிப் போய் நிற்கும்.
4. வன்தட்டில் உள்ள தகவல்கள் உங்களுக்குப் பிரச்சினையைத் தரலாம் அல்லது வன்தட்டை அணுக முடியாமல் போகலாம்.
5. திடீர் திடீர் என தேவையற்ற பிழைச் செய்தி வரலாம். உங்கள் கணணியை ஸ்கேன் செய்திடுங்கள். உங்கள் கணணியில் வைரஸ் உள்ளது. இலவசமாக ஸ்கேனிங் செய்து தருகிறோம் என்று ரிமோட் கணணியில் இருந்து செய்தி வரும்.
இதன் மூலம் வைரஸை அனுப்பி உங்கள் கணணியைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேறு ஒருவர் தன் கணணி மூலம் முயற்சிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
6. கணணியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருளிலும் இ.எக்ஸ்.இ கோப்புகள் அங்கும் இங்குமாய் பல நகல்களில் இருக்கும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் ஐகான்களில் கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயங்காது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளெல்லாம் பொதுவாக தற்போது உலா வரும் வைரஸ்களினால் ஏற்படும் மாற்றங்கள். இன்னும் பல வகைகளில் வைரஸ் பாதிப்பினை கணணியில் அறியலாம். வழக்கமான வகையில் இல்லாமல் கணணி இயக்கத்தில் இணைய இணைப்பில் மாறுதல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.
முதலில் உங்கள் தகவல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்துவிடுங்கள். ஆண்டி வைரஸ் தொகுப்பினை அவ்வப் போது அப்டேட் செய்திடுங்கள். நேரம் கிடைக்கும் போது மாதம் ஒரு முறையாவது ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி அனைத்து டிரைவ்களையும் சோதித்து விடுங்கள்.

மனித இனம் அழிந்த பிறகும் கூட உயிர் வாழும் உயிரினங்கள்: விஞ்ஞானிகள் தகவல்


மனித இனம் அழிந்த பிறகும் கூட உயிர் வாழும் உயிரினங்கள்: விஞ்ஞானிகள் தகவல்

பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன் விலங்கினங்கள் தோன்றி வாழ்ந்து வந்தன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.ஆனால் பிரளயம், இயற்கைச் சீற்றம் என்று ஏதாவது காரணத்தினால் இந்த உலகம் அழிந்தாலும் கூட சில விலங்குகள் மிச்சமிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். பூமியின் சரித்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதில் மனித இனம் இருக்கப் போவது மிகக் குறுகிய காலம் தான்.
சுமார் ஐந்து கோடி வருடங்களுக்குப் பிறகு தான் பூமியில் மனிதன் இருக்கமாட்டான். ஆனால் விசித்திரமான புது வகையான மிருகங்கள் நிச்சயமாக உலாவிக் கொண்டிருக்கும் என்கிறார் பூமி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நியூயார்க்கைச் சேர்ந்த டொக்டர் சைமன்.
அந்த விசித்திர மிருகங்களின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை இவர் தலைமையிலான ஆய்வு கற்பனை செய்து வைத்திருக்கிறது. ஐந்து கோடி வருடங்களுக்குப் பிறகு இன்றுள்ள முயல்கள் ஆறடி உயரம் இருக்கும். நீண்ட கால்களுடன் பார்ப்பதற்கு அருவருப்பாகக் காட்சியளிக்கும் என்கின்றனர்.
மேலும் பாம்புகளின் குறைந்த பட்ச நீளம் முப்பது அடியாக இருக்கும். மேலும் அவை யாரையும் கொத்தத் தேவையில்லை. மாறாக விஷத்தை ஐம்பது அடி தூரம் வரை பீய்ச்சியடித்து எதிரிகளைக் கொல்லும் வல்லமை பெற்று இருக்கும்.
ராட்சத அணில்கள் தங்கள் வாலை பாராசூட் போல பயன்படுத்தி மரத்துக்கு மரம் தாவும். மான்களோ தோற்றத்தில் காண்டாமிருகம் போல காட்சியளிக்கும். அது போன்ற விலங்குகளுக்கு "நைட் ஸ்டார்க்கர்" என்று இப்போதே பெயரும் வைத்து விட்டனர்.

40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்


40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்

40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான். இவ்வாறு 40 வயதில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்கள், எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும் என்கின்றனர் மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள்.
40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைபயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். மேலும் இந்நிபுணர்கள் பல யோசனைகள் கூறியுள்ளனர் அவைகளுள் ஒன்று உடற்பயிற்சி.
ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சியோ அல்லது ஓட்ட பயிற்சியோ அல்லது இன்னும் பிற விளையாட்டோ அல்லது உடற் பயிற்சி கூடத்திலோ இவைகளுள் ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும்.மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு மூல காரணமான உங்களது மன அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கட்டாயம் பல வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாமல் போனால் ஆரோக்கியத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை. உதாரணத்திற்கு ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள் உடலினை விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது.

ஒசாமா தாக்கப்பட்ட நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய உளவாளி

ஒசாமா தாக்கப்பட்ட நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய உளவாளி

அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்தவாரு நேரடியாகப் பார்வையிட்டுள்ளார்.இந்தத் தாக்குதல் இடம்பெறும் காட்சிகளை வெள்ளை மாளிகையின் "சிடுவேஷன்" அறையில் இருந்து ஜனாதிபதி ஒபாமா, உப ஜனாதிபதி, ராஜாங்கச் செயலாளர் உட்பட இன்னும் சில முக்கிய பிரமுகர்களும் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
இதில் ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தவிர இன்னும் ஒரு பெண் படத்தின் பின்னால் காணப்படுகின்றார். கருமையான கூந்தலுடன் காணப்படும் இந்தப் பெண் யார்? என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
அமெரிக்காவின் உயர்மட்ட முக்கியப் பிரமுகர்கள் கூடும் அந்த அறைக்குள் அவர் எப்படி வந்தார்? ஹிலாரியைத் தவிர அங்கிருந்த ஒரே பெண் அவர் தான். இவர் 40 வயதுக்கும் குறைவானவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அந்தப் படத்தில் இவரின் பெயர் ஓட்ரி டொமஸன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இவர் யார்? ஏன் அங்கு வந்தார்? என விளக்கமளிக்க முடியாமல் உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் ஒரு உயர் மட்ட உளவாளியாக இருக்கலாம் என்று சில புலனாய்வு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அந்தப் பெண் படத்தில் தோன்றி தனது முகத்தைக் காட்டியுள்ளதால் அவர் இப்போது ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பிரிட்டனில் அதிகரித்து வரும் பேஸ்புக் குற்றங்கள்


பிரிட்டனில் அதிகரித்து வரும் பேஸ்புக் குற்றங்கள்

பிரிட்டனில் பேஸ்புக்கைப் பாவித்து இடம்பெறும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.பாலியல், மிரட்டல், கொள்ளை, கொலை என எல்லா வகையான குற்றச் செயல்களும் பேஸ்புக் வழியாக இடம்பெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பேஸ்புக் பல குடும்பப் பிரச்சினைகளுக்கும், வாழ்க்கைப் பங்காளிகளுக்கிடையில் கருத்து மோதல்களுக்கும் கூட காரணமாகியுள்ளது. அதே போல் அது பல பிரச்சினைகளைத் தீர்த்தும் வைத்துள்ளது.
இந்த சமூக இணையத்தளத்தைப் பயன்படுத்தி சில குற்றவாளிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். சிலர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் பேஸ்புக் வழியாகக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
எவ்வாறாயினும் கடந்தாண்டில் பேஸ்புக் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவே மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களில் 6200 குற்றச் செயல்கள் பேஸ்புக் வழியாக இடம்பெற்றவை.
ஒரு மணிநேரத்துக்கு ஒன்று என்ற ரீதியில் பேஸ்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. 14 வயதான ஒரு பெண் பேஸ்புக் வழியாக தொடர்பான ஒருவருடன் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதுபோல் இன்னும் பல சம்பவங்களும் பேஸ்புக் வழியாக இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் பல பாகங்களிலும் பேஸ்புக் வழியான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது. சமூக இணையத்தளங்கள் அளவுக்கு அதிகமான வெளிப்படைத் தன்மை கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நாளை 279 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல்!

பிரித்தானியாவில் நாளை 279 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல்!

இளவரசர் சாள்ஸ் அமெரிக்கா பயணம் – இன்று ஒபாமாவை சந்திக்கிறார்!

இளவரசர் சாள்ஸ் அமெரிக்கா பயணம் – இன்று ஒபாமாவை சந்திக்கிறார்!

எயர் இந்திய விமானிகளின் வேலைநிறுத்தம் – சென்னையில் 25விமானங்கள் நிறுத்தம்!

எயர் இந்திய விமானிகளின் வேலைநிறுத்தம் – சென்னையில் 25விமானங்கள் நிறுத்தம்!

அருணாசல பிரதேச முதல்வரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

அருணாசல பிரதேச முதல்வரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

கனிமொழி நாளை கைது?

கனிமொழி நாளை கைது?

ஓசாமா பின் லேடன் கொல்லப்பட்ட முழு விபரங்களையும் அமெரிக்கா வெளியிட வேண்டும்- நவநீதம் பிள்ளை

ஓசாமா பின் லேடன் கொல்லப்பட்ட முழு விபரங்களையும் அமெரிக்கா வெளியிட வேண்டும்- நவநீதம் பிள்ளை

இறுதிதீர்ப்பு நாளில் ஆண்டவராகிய ஏசுகிறிஸ்துவின் முன்னாலோ அல்லாவின் முன்னாலோ நாம் நிறுத்தப்படப் போகிறோம் -இது உண்மையா ??

இறுதிதீர்ப்பு நாளில் ஆண்டவராகிய ஏசுகிறிஸ்துவின் முன்னாலோ அல்லாவின் முன்னாலோ நாம் நிறுத்தப்படப் போகிறோம் -இது உண்மையா ??

by Keyem Dharmalingam on Monday, 02 May 2011 at 08:24
அல்லாவின் முன்னால் மனிதன்நிற்பது உண்மையா?
 ஆன்மிகம், இந்து மதம், இஸ்லாம் மதம், கிறிஸ்த்துவ மதம், கேள்விகள் 1000
 நன்றி:- யோகி ஸ்ரீ ராமானந்த குரு.

  லகம் அழியப்போகிறது இறுதிதீர்ப்பு நாளில் ஆண்டவராகிய ஏசுகிறிஸ்துவின் முன்னாலோ அல்லாவின் முன்னாலோ நாம் நிறுத்தப்படப் போகிறோம் என முஸ்லிம்களும் கிறிஸ்த்தவர்களும் மாறிமாறி பேசிவருகிறார்கள்.  இது உண்மையா? இதைப்பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என பலர் கேட்கிறார்கள் குர்-ஆனில் நயமான ஒரு விஷயம் சொல்லப்படுகிறது.  ஐந்து கடமைகளை நிறைவேற்றி அல்லாவினுடைய எண்ணப்படி வாழ்ந்து மரித்து போன ஒரு முஸ்லிம்முக்கு மண்ணறையாகிய  கல்லறை விரிந்து இடம் கொடுக்கும். குளிர்ந்த காற்று வீசும் நல்ல வெளிச்சம் கொடுக்கும்.  ஒரு புது மாப்பிள்ளை பள்ளியறை கட்டிலில் எப்படி சந்தோஷமாக உறங்குவானோ அதே போன்றே கல்லறைக்குள் உறங்குவான்.

 அல்லாவின் விருப்பத்திற்கு விரோதமாக நடப்பவனின் கல்லறை அவனை இறுக்கும்.  வெப்பம் சுட்டெரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  ஏறக்குறைய பைபிளும் இதே போன்று தான் பேசுகிறது. கல்லறையில் இருக்கும் உயிர்கள் உலக அழிவிற்கு பிறகு இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் முன்னால் கொண்டுவரப்படும். உயிர்களின் நல்லது கெட்டதிற்கிணங்க சொர்க்கமோ, நரகமோ கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். கடவுளே இல்லையென சொல்லுகின்ற நாத்திகவாதிகள் சொர்க்கம், நரகம் என்பதை ஏற்று கொள்ளுவது இல்லை. எரிகின்ற தீபம் அனைந்து விட்டால் எப்படி எல்லாம் முடிந்து விடுகிறதோ அதே போலவே மரணத்தோடு மனித வாழ்க்கை முடிந்து விடுகிறது என்கிறார்கள்.

  இறுதி தீர்ப்பு என்பதையும் மரணத்தோடு எல்லாம் முடிகிறது என்பதையும் இந்து மதம் ஏற்று கொள்வதில்லை.  ஒரு உயிரானது படிப்படியாக கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு போகிறது.  அப்படி போகும் பாதையில் அது கணக்கற்ற ஜனன மரணங்களை சந்திக்கிறது.  அதாவது நாம் புதிதாக பிறப்பதும் இல்லை.  முதன் முறையாக சாவதும் இல்லை.  இதற்கு முன்னால் எத்தனையோ முறை பிறந்தும் இருக்கிறோம்.  இறந்தும் இருக்கிறோம். கடவுளை உணரும் வரை பிறப்பு இறப்பு சூழலில் சிக்கி தான் தீர வேண்டும். மற்ற மதங்கள் மனிதனை மனிதனாக மட்டும் தான் பார்க்கின்றன.  இந்து மதம் மனிதனை வெறும் மனிதனாக கருதுவதில்லை.  ஆண்டவனின் ஒரு அம்சமாக, ஆண்டவனின் சொரூபமாகவே பார்க்கிறது.  


இதற்கு மேல் சிந்திக்க மாட்டேன் என்ற நிலை வரும் போது நாத்திக கொள்கை கூட அறிவு பூர்வமானது தான். ஆனால் இந்த விஷயத்தில் இஸ்லாம் கிறிஸ்தவ சமய கொள்கைகள் அறிவு பூர்வமானது என்று சொல்லி விட முடியாது.  அல்லாவை ஏற்றவனுக்கு கல்லறை சுகமானது.  ஏற்காதவனுக்கு துக்கமானது என்றால் பிறந்து மூன்று வருடத்தில் அல்லாவையோ ஏசுவையோ ஏன் சிவபெருமானையே கூட யார் என்று தெரியாமல் தான் எதற்காக பிறந்தோம் என்று உணராமரல் செத்து போகும் குழந்தை இறுதி தீர்ப்பு நாள் வரை கல்லறைக்குள் எப்படியிருக்கும்? சுகமாகவா? சோகமாகவா? என்ற கேள்விகளுக்கெல்லாம் அந்த மதங்களில் எந்த பதிலும் இல்லை. அதனால் தான் இந்து மதம் இறுதி தீர்ப்பு நாள் என்று எதையும் சொல்லவில்லை என மறுப்பு சொல்லி மறுபிறப்பு கொள்கையை நம் முன்னால் வைக்கிறது.  மறுபிறப்பை நிறுபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லையே தவிர புணர் ஜென்மம் என்பதை அனுபவபூர்வமாக  நம்ப கூடியதாக இருக்கிறது. மறு பிறப்பிற்க்கு எப்படி ஆதாரம் இல்லையோ அதே போல இறுதி தீர்ப்பு நாளை நம்புவதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

DNA Proves Slain Terrorist is bin Laden & Facial Recognition Confirms: Bin Laden is Dead

DNA Proves Slain Terrorist is bin Laden & Facial Recognition Confirms: Bin Laden is Dead

By Bridget Johnson, & By William Deutsch,
The White House announced late last night that al-Qaeda leader Osama bin Laden had been killed in a nighttime raid in Pakistan, sparking street celebrations in New York and Washington. Far from hidin...g in a dusty cave, bin Laden was holed up in a three-story fortress Abbottabad, a town about 35 miles north of Islamabad, a well-to-do area that is home to many retired Pakistani military officials. After quickly turning the terror figurehead's body into fish food by dumping him at sea, administration officials have just said that DNA tests prove that the man killed is in fact bin Laden.

Now the U.S. will have to pick a way in which to release photos of bin Laden's body. But will that stop conspiracy theorists? Sen. Lindsey Graham (R-S.C.), a member of the Armed Services Committee, said it "didn't make a lot of sense" to bury him at sea so quickly. The U.S. defended the decision as being a burial in accordance with Islamic law and not creating any sort of burial place that could serve as a shrine to the man who ordered the deadliest terrorist attacks on U.S. soil.

The last bin Laden message came on Jan. 21 (Al-Jazeera has a complete timeline), but for years al-Qaeda No. 2 Ayman al-Zawahri has been a more public face of the terror organization in its videos. Not only could the killing of bin Laden make al-Qaeda and its affiliates more determined to retaliate against the U.S. and her allies, but other Islamist terror organizations will be anxious to step up to the plate.
On June 7, 1999 Osama bin Laden became one of the FBI's 10 Most Wanted. Today, his picture sports a red banner reading "Deceased."However, it didn't take long for conspiracy theories to spin up over the exact identity of the man killed in Abbottabad on Sunday. So how exactly was bin Laden's death confirmed? Various news agencies are reporting that the CIA's own facial recognition technology identified the face of Osama bin Laden with 95% accuracy. Facial recognition works by mapping points on a face and creating a biometric template. The template is, essentially, a digital code that describes the subject's face. The trick with facial recogntion has always been that images taken from even slightly different angles will result in a variation of the the biometric template. So a 95% match is about as good as it gets.

In addition to the facial recognition technology, authorities have apparently compared bin Laden's DNA to that of several of his relatives. The exact identity and number of the relatives used for the DNA samples has not been revealed. No surprise there. It's not unthinkable that the government has also been able to collect samples of bin Laden's own DNA from locations where he has lived over the years. The body was also identified by a female survivor of the attack; a woman believed to be one of bin Laden's wives.
See more

ஆளுமை திறன் என்பது கர்வமல்ல ஒரு வித இன்பம். விடுதலை இல்லாத அடிமைகள். (சிறு கதை)

ஆளுமை திறன் என்பது கர்வமல்ல ஒரு வித இன்பம். விடுதலை இல்லாத அடிமைகள். (சிறு கதை)

by Keyem Dharmalingam on Wednesday, 04 May 2011 at 09:16
விடுதலை இல்லாத அடிமைகள். (சிறு கதை)

மனுஷனாக பிறந்தவன் எந்த வேலையையும் செய்யலாம், பாழாய்போன மேனேஜர் வேலையை தவிர, ஒரு வாயாடி பெண்டாட்டிக்கு புருஷனாக இருப்பது தான் மகா கஷ்டமென சந்திரன் சொல்லுவான். அது  அவன் அன்றாடம் படுகின்றபாட்டில் சொல்லுவது தான், மனைவி என்ற கஷ்டம் வீட்டுக்கு வந்தால் தான் கழுத்தை நெறிக்கும். அலுவலக பொறுப்பு என்ற கஷ்டம் கண்ணை மூடி தூங்கினால் கூட பசி நேரத்தில் பொறை வாங்கி போட்ட நாய் போல கூடவே தொடரும். கல்யாணமாகி பதிமூணு வருஷமாச்சு. பெரிய மேனேஜர் என்ற கித்தாப்பு, பொண்டாட்டி, பிள்ளைக்கு ஒரு குண்டுமணி தங்கம் கூட சேர்த்துவைக்க துப்புயில்லை என்று மனைவி வாய் வலிக்க திட்டினாலும் போப்பா ரிஜிஸ்டர் ஆபிஸில் பியூனா வேலை பார்க்கும் ஆறுமுகம் மாமா கூட அவர் பையனுக்கு கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்கிறார் நீ பெரிய மேனேஜர் ஒரு சைக்கிள் கூட வங்கி தரகூடாதா என்று பையன் நாக்கை பிடுங்குகிற மாதிரி கேட்டாலும் கூட அவை எதுவுமே உரைக்கமாட்டேன் என்கிறது. சதாசர்வ காலமும் விரட்டிக் கொண்டே இருக்கும் மேல்திகாரிகளும் எவ்வளவுதான் உருட்டி மிரட்டினாலும், கெஞ்சி கூத்தாடினாலும் அசையவே மறுக்கும் பணியாளர்களும்... ச்சே! ரெண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கும் பிழைப்பு ஒரு பிழைப்பா?

ஆனால் இந்த கஷ்டம் யாருக்கு தெரிய போகிறது, போன வாரம் ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், பெண்ணுடைய பெரியப்பாவோ, சித்தப்பாவோ தெரியல வாய் நிறைய பல்லாக சிரித்தார் விழுந்து விழுந்து உபசரித்தார் வருவோர் போவோரிடமெல்லாம் இவர் அந்த கம்பெனியில் பெரிய மேனஜர் இவர் வைத்துதான் அங்கு சட்டம் என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை பேரு பெத்த பேரு தாய்க்கு நீலு லேது என்ற தெலுங்கு பழமொழிதான் நினைவுக்கு வந்தது என் அலுவலக பியூன் ஒரு நாள் நம்ம மேனேஜர் இருக்கதே அது வெறும் சொரண கெட்ட ஜென்மம் எதையும் ஒரு தடவை சொன்னா புரிஞ்சிக்கவே புரிஞ்சிக்காது இதுக்கெல்லாம் எவன் தான் மேனேஜர் போஸ்ட் போட்டானோ அவனை உதைக்கனும் என்று வசைமாரி பொழிந்து பேசிக் கொண்டிருந்ததையும் ஏனய்யா இந்த மேனேஜர் சுத்த வெளக்கெண்ணையா இருப்பானா தலபாடா அடிச்சிகிட்டாலும் ஆமை மாதிரியே நகர்ரான் யாரையும் வேலை வாங்கவே தெரியாதவானா இருக்கிறான். இவன்கிட்ட மாட்டிகிட்டு நமக்கு தான் தலைவலியா இருக்கு என்று ஜி.எம் விமர்சித்ததையும் வெளியில் சொல்லவா முடியும் ?

கர்பவதியாக இருப்பவள் கூட பத்து மாதத்தில் பிள்ளையை பெற்று சுமையை குறைத்து விடுவாள். ஆனால் எனது மேனேஜர் என்ற சுமை 58 வயது வரையில் குறையவே குறையாதா ? யாரை பார்த்தாலும் இன்னிக்கு மச்சினிச்சியை பெண் பார்க்க வர்றாங்க சீக்கிரமா போகனும் என்றால் உடனே மேனேஜரை பார் என்பது தான் பேச்சு. இன்னிக்கு ஓவர்டைம் செய்ய முடியாது என்று டைபிஸ்ட் சொன்னால் அதை என் என்னிடம் ஏன் சொல்கிறாய் மேனேஜரிடம் சொல்லு, என்னால் இந்த பில்லை பாஸ் பண்ண முடியாது வேண்டுமானால் மேனேஜரை சொல்ல சொல்லு, எனக்கு இன்கிரிமெண்ட் குறைவாக வந்திருக்கிறது என்றால் உடனே மேனேஜரை பார் இப்படி எதற்கெடுத்தாலும் என் தலையை உருட்டுவது முடியவே முடியாதா ?

தோட்டத்தில் குரங்கு தொல்லை அதிமாகி போய்விட்டது என்றால் இரண்டு, மூன்று இளநீர் வெட்டி அதில் ஏதாவது ஒன்றிற்குள் செத்து போன தண்ணிர் பாம்பை போட்டு வைத்து விடுவார்களாம், இளம் தேங்காய்க்கு ஆசைப்பட்ட குரங்கு அவரசமாக துவாரத்தில் கையைவிட்டு இன்னதென்று தெரியாமல் பாம்பை வெளியில் எடுக்குமாம் அது செத்து போன பாம்பு ஒன்றும் செய்யாது என்ற ஞானம் குரங்கிற்கு இருந்தால் அது எப்போதோ மனிதனுக்கு புத்தி சொல்ல ஆரமித்து இருக்குமே பாவம் கையில் இருக்கும் பாம்பை பார்த்து பயந்து அதை கீழே போடவும் தெரியாமல் மரத்திற்கு மரம் தாவுமாம். அதை பார்த்து பயப்படும் மற்ற குரங்குகள் தோட்டத்திற்கு பக்கமே சில காலம் வராதாம், ஏறக்குறைய நானும் அப்படி தான் மேனேஜர் என்ற பதவியை கீழே போடவும் தெம்பில்லை. தக்க வைத்து கொள்ளவும் தகுதியில்லை, இரண்டும் கெட்டான் பிழைப்பு பிழைக்க வேண்டியிருக்கிறது எல்லாம் தலையெழுத்து.

இப்படி நான் குழப்பி கொண்டு திரியும் போது தான் சந்திரன் ஒரு உண்மையான விஷயத்தை தோலுரித்து காட்டினான். இதேபார் நாகராஜ என்னை கேட்டால் உன் எம்.டி.க்கும் ஜி.எம் க்கும் சுத்தமாக அறிவு இல்லை என்றே சொல்லுவேன். உனக்கு மேனேஜர் பதவி கொடுத்ததில் இரண்டு வேலைகாரர்களை அவர்கள் இழந்து விட்டார்கள் என்றான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் ஒருவன் போஸ்டிங் வந்ததற்கு எப்படி இரண்டு வேலை கெடும் ? ஒன்றுமே புரியாமல் அவனிடம் புரியும்படியாக சொல் என்றேன். இதோ பார் நீ ஹெட்கிளார்க்காக இருந்த போது அருமையாக வேலை செய்தாய். உன் மேஜையில் எந்த பைலையுமே தூங்கவிட்டது இல்லை. உன் சுறுசுறுப்பை பார்த்து தான் தடாலடியாக நிர்வாகம் உன்னை மேனேஜராக்கியது. இதனால் ஒரு நல்ல ஹெட்கிளார்க் இல்லாமல் போனார் உனக்கு வேலை செய்யதான் தெரியுமே தவிர வேலைவாங்க தெரியாது. இதனால் நிர்வாகத்திற்கு நல்ல மேனேஜரும் இல்லை இதனால்தான் உன் நிர்வாகத்திற்கு முளை இல்லாயென்றேன் என்று விளக்கினான். அவன் சொல்வது மிக சரியாகத்தான் பட்டது. ஹெட் கிளார்க் பதவியை விட்டுவிட்டு என்று மேனேஜர் ஆனேனோ அன்றே என் நிம்மதி போச்சு, சந்தோஷம் போச்சு, உறக்கம் கூட ரொம்ப தொலைவிற்கு எட்டி போச்சு.

சந்திரன் இது மட்டும் சொல்லவில்லை. மற்றவனின் முகசுழிப்பை சகித்து கொண்டு வேலை வாங்குவது கஷ்டம் தான், யாரோ செய்யாத வேலைக்கு நிர்வாகத்திடம் நாம் பேச்சு வாங்குவதும் சிரமாமான காரியம்தான், பெண்டாட்டி பிள்ளைகளை மறந்து சதா நேரமும் வேலை வேலையென மாரடிப்பது கடினம் தான்.    அவன் சொல்லுவதும் சரி தானே! உன் அடிமை புத்தி உனக்கு சந்தோஷம் என்றால் வேலையை விட்டுவிடு பணிவானவனை மாற்றலாம் அடிமையை மாற்றுவது கடினம். ஆளுமை திறன் என்பது கர்வமல்ல ஒரு வித இன்பம். அந்த போதையில் விழுந்தவன் இன்னும் மேலே போக விரும்புவானே தவிர கீழே எட்டி பார்க்க மாட்டான். நீ அன்னார்ந்து பார்த்தால் கண் கூசும் என்று அச்சப்படும் ஜாதி,ஆனாலும் நிறையபேர் இந்த மேனேஜர் பதவிக்காக ஏங்குகிறார்கள் ஏன் ? நிர்வாகத்திடம் முட்டி மோதி வாங்கத் துடிக்கிறார்களே ஏன் ? அதில் கஷ்டம் இருப்பது அவர்களுக்கு தெரியாது. என்பதாலா ? அப்படியல்ல அதிலுள்ள சிரமங்கள் நன்றாகவே அவர்களுக்கு தெரியும். ஆனாலும் ஒரே இடத்தில் தேங்கிகிடக்க பல மனங்கள் விரும்புவதில்லை. எழுந்து மேலே முன்னேற வேண்டுமென ஒவ்வொரு மனதும் துடிக்கிறது.  எதில் தான் கஷ்டமில்லை எங்கே தான் தோல்வியில்லை. ஆனாலும் அவைகளுக்காக பயந்து மூலையில் கிடந்தால் நான் மேனேஜர், எனக்கு கீழ் பத்துபேர் வேலை செய்கிறான் என்ற சந்தோஷம் கிடைக்குமா ? என் சகலபாடியை பார்த்து நிற்காதவர்கள் என்னை கண்டதும் மரியாதையாக எழுந்து நின்று கை குலுக்கும் போது கிடைக்கும் மகிழ்வை எந்த விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.

  உன் அடிமை புத்தி உனக்கு சந்தோஷம் என்றால் வேலையை விட்டுவிடு, வீணாக புலம்பி நிர்வாகத்தை கெடுக்காதே என்றான். ஆளுமை திறன் என்பது கர்வமல்ல ஒரு வித இன்பம். அந்த போதையில் விழுந்தவன் இன்னும் மேலே போக விரும்புவானே தவிர கீழே எட்டி பார்க்க மாட்டான். நீ அன்னார்ந்து பார்த்தால் கண் கூசும் என்று அச்சப்படும் ஜாதி, பணிவானவனை மாற்றலாம் அடிமையை மாற்றுவது கடினம்.

அவன் சொல்லுவதும் சரிதானே!!!! நீங்களே சொல்லுங்கள்.

HOW TO WORSHIP GOD

கடவுளை எப்படி வணங்க வேண்டும்!!! HOW TO WORSHIP GOD ; சிகாகோ சொற்பொழிவு உரையின் பகுதி.(பேப்பர்-9 &10)

by Keyem Dharmalingam on Wednesday, 04 May 2011 at 15:20

கடவுளை எப்படி வணங்க வேண்டும்!!!  HOW TO WORSHIP GOD
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு உரையின் பகுதி.(பேப்பர்-9),
செப்டம்பர்,19,1893. (தமிழாக்கம்) இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பு பதிவினைத் தனியாக காணவும்.

இம்மையிலும், மறுமையிலும் கிடைத்தற்கரிய செல்வமாக மனதில் கொண்டு, அன்புடன் அன்புக்காகவே அன்பு செய்ய வேண்டும் என்று வேதங்கள் வலியுறுத்துகின்றன. இப்பூமியில் இந்துக்களுக்கு கடவுளாக கருதப்படும், கிருஷ்ணராக அவதரித்த, அந்த இறைவன், இறைவனை வழி படுவது எவ்வாறு என்பதை வழிமுறைப் படுத்துகிறார் என்று பார்ப்போம். அவர் கூறுகிறார், மனிதன் இவ்வுலகில் ஒரு தாமரை இலையைப் போல வாழவேண்டும், அது தண்ணீரிலேயே வளர்ந்தாலும், தண்ணீரினால் நனைவதில்லையோ அதுபோலவே இவ்வுலகில் வாழவேண்டும் என்கின்றார். மனதை (ஆன்மாவை) இறைவனுக்கும், உடலை (சடத்தை) வாழ்க்கைக்கும் அர்பணிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்திக் கூறுகின்றார். இம்மையிலும், மறுமையிலும் நன்மை பெறவேண்டி இறைவனின்பால் அன்பு செலுத்துதல் நல்லதே. ஆயினும், இறைவனின் அன்பைப் பெற வேண்டி அவனின் பால் அன்பு செலுத்துதல் மிகவும் நல்லதாகும். "இறைவனே, நான் கல்வி வேண்டேன், செல்வம் வேண்டேன், மக்கட்செல்வமும் வேண்டேன், உனது எண்ணப்படியே எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கின்றேன், ஆனால் எவ்வித சுயநலமும் இன்றி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, உன்னையே மனதில் நினைத்து, உன் அன்பைப் பெற உன்பால் அன்பு செலுத்தும் வரம் மட்டும் தந்துவிடு " என்று ஒரு பிரார்த்தனை கூறுகின்றது.



கடவுளை எப்படி வணங்க வேண்டும்:-HOW TO WORSHIP GOD
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு உரையின் பகுதி.(பேப்பர்-10),
செப்டம்பர்,19,1893. (தமிழாக்கம்) இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பு பதிவினைத் தனியாக காணவும்.

மகாபாரதத்திலிருந்து ஒரு எடுத்தக் காட்டு:-ஸ்ரீ கிருஷ்ணர் சீடர்களில் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்ரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர், அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒரு நாள் அரசி யுதிஷ்டிரரிடம் இறைவனிடம் மிகுந்த அன்பும், பக்க்தியையும் கொண்டு, அறத்தில் மிகவும் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வரவேண்டும் என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரர், தேவி, இதோ இந்த இமயமலையைப் பார். எவ்வளவு அழகாக எழிலோடும், மாட்சிமையோடும், கம்பீரத்தோடும் காட்சி அளிக்கிறது. நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும், கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறி கொடுப்பது எனது இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகின்றேன். அது போலவே, இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே, அனைத்து அழகிற்கும், கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே! அவரை நேசிப்பது ஏன் இயல்பு. ஆதலால், அவரை நன் நேசிக்கிறேன். நான் எதுவும் அவரிடம் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலைபேச என்னால் முடியாது. எவ்வித கைமாறும், பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இறைவனில் அருளைப்/அன்பைப்  பெறவேண்டி அன்பு செய்ய வேண்டும் என்பதனையே இது வலியுறுத்துகிறது.

வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ் !!! பொருட்பால்:அரசியல் !!! கொடுங்கோன்மை:அதிகாரம் 56/133 !!!

வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ் !!! பொருட்பால்:அரசியல் !!! கொடுங்கோன்மை:அதிகாரம் 56/133 !!!

by Keyem Dharmalingam on Thursday, 05 May 2011 at 08:01
வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்பொருட்பால்:அரசியல்
கொடுங்கோன்மை:அதிகாரம் 56/133
551.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177124"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing.
Explanation :
The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.
*************************************************
552.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177125"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
As 'Give' the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.
Explanation :
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".
**********************************************
553.
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177126"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.
Explanation :
The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.
************************************************
554.
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177127"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Whose rod from right deflects, who counsel doth refuse,
At once his wealth and people utterly shall lose.
Explanation :
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.
*******************************************
555.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177128"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
His people's tears of sorrow past endurance, are not they
Sharp instruments to wear the monarch's wealth away?
Explanation :
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?
**************************************************
556.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177129"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
To rulers' rule stability is sceptre right;
When this is not, quenched is the rulers' light.
Explanation :
Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.
************************************************
557.
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177130"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.
Explanation :
As is the world without rain, so live a people whose king is without kindness.
************************************************
558.
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177131"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
To poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king.
Explanation :
Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.
*************************************************
559.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177132"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.
Explanation :
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.
**************************************************
560.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177133",
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans' sacred lore will all forgotten lie.
Explanation :
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.
***********************************************

700 கோடியை நோக்கிச் செல்லும் உலக மக்கள் தொகை. -ஐ.நா அறிக்கை

  • வரும் அக்டோபர்-31 ஆம் தேதியன்று உலக மக்கள் தொகை 700 கோடியாக இருக்கும் என்றும், கி.பி.2099 ஆம் ஆண்டுக்குள் அது 10 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் தற்போது வெளியாகியுள்ள ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே உல...க மக்கள் தொகை முந்தைய கணிப்பான 9.15 பில்லியனைத் தாண்டி 9.31 பில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹானியா ஜோல்ட்னிக் தலைமையில் அமைக்கப்பட்ட ஐநா குழுவின் கணிப்புப் படியே உலக மக்கள் தொகை 7 பில்லியனாக அக்டோபர்-31 அன்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தெரிவிக்கும் விதமாக ஐநா அமைப்பான UNFPA சார்பில் ஏழுநாள் கவுண்ட் டவுனை அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை கடந்த 1998 ஆம் ஆண்டு 6 பில்லியனைத் தொட்டது. அதே வருடம் ஜூலையில் 6.89 பில்லியனாக உயர்ந்தது. கி.பி 2100 இல் சீன மக்கள் தொகை, தற்போதைய அளவான 1.34 இல் இருந்து 1 பில்லியனாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.See more

Where to Go During an Earthquake

Please take the time to read this article and look at the pictures at the bottom, it really makes sense…
In light of the earthquake in Christchurch , New Zealand , we should be aware of the escape route when earthquake happens.
 
Folks, please SHARE, SHARE, SHARE this with your loved ones:
Where to Go During an Earthquake
Remember that stuff about hiding under a table or standing in a doorway? Well, forget it! This is a real eye opener. It could save your life someday.
EXTRACT FROM DOUG COPP'S ARTICLE ON 'THE TRIANGLE OF LIFE'
My name is Doug Copp. I am the Rescue Chief and Disaster Manager of the American Rescue Team International (ARTI ), the world's most experienced rescue team. The information in this article will save lives in an earthquake.
I have crawled inside 875 collapsed buildings, worked with rescue teams from 60 countries, founded rescue teams in several countries, and I am a member of many rescue teams from many countries. I was the United Nations expert in Disaster Mitigation for two years, and have worked at every major disaster in the world since 1985, except for simultaneous disasters.
The first building I ever crawled inside of was a school in Mexico City during the 1985 earthquake. Every child was under its desk. Every child was crushed to the thickness of their bones. They could have survived by lying down next to their desks in the aisles. It was obscene -- unnecessary.
Simply stated, when buildings collapse, the weight of the ceilings falling upon the objects or furniture inside crushes these objects, leaving a space or void next to them - NOT under them. This space is what I call the 'triangle of life'. The larger the object, the stronger, the less it will compact. The less the object compacts, the larger the void, the greater the probability that the person who is using this void for safety will not be injured. The next time you watch collapsed buildings, on television, count the 'triangles' you see formed. They are everywhere. It is the most common shape, you will see, in a collapsed building.
TIPS FOR EARTHQUAKE SAFETY
1) Most everyone who simply 'ducks and covers' when building collapse are crushed to death. People who get under objects, like desks or cars, are crushed.
2) Cats, dogs and babies often naturally curl up in the fetal position. You should too in an earthquake. It is a natural safety/survival instinct. You can survive in a smaller void. Get next to an object, next to a sofa, next to a bed, next to a large bulky object that will compress slightly but leave a void next to it.
3) Wooden buildings are the safest type of construction to be in during an earthquake. Wood is flexible and moves with the force of the earthquake. If the wooden building does collapse, large survival voids are created. Also, the wooden building has less concentrated, crushing weight. Brick buildings will break into individual bricks. Bricks will cause many injuries but less squashed bodies than concrete slabs.
4) If you are in bed during the night and an earthquake occurs, simply roll off the bed. A safe void will exist around the bed. Hotels can achieve a much greater survival rate in earthquakes, simply by posting a sign on the back of the door of every room telling occupants to lie down on the floor, next to the bottom of the bed during an earthquake.
5) If an earthquake happens and you cannot easily escape by getting out the door or window, then lie down and curl up in the fetal position next to a sofa, or large chair.
6) Most everyone who gets under a doorway when buildings collapse is killed. How? If you stand under a doorway and the doorjamb falls forward or backward you will be crushed by the ceiling above. If the door jam falls sideways you will be cut in half by the doorway. In either case, you will be killed!
7) Never go to the stairs. The stairs have a different 'moment of frequency' (they swing separately from the main part of the building). The stairs and remainder of the building continuously bump into each other until structural failure of the stairs takes place. The people who get on stairs before they fail are chopped up by the stair treads - horribly mutilated. Even if the building doesn't collapse, stay away from the stairs. The stairs are a likely part of the building to be damaged. Even if the stairs are not collapsed by the earthquake, they may collapse later when overloaded by fleeing people. They should always be checked for safety, even when the rest of the building is not damaged.
8) Get near the outer walls of buildings or outside of them if possible - It is much better to be near the outside of the building rather than the interior. The farther inside you are from the outside perimeter of the building the greater the probability that your escape route will be blocked.
9) People inside of their vehicles are crushed when the road above falls in an earthquake and crushes their vehicles; which is exactly what happened with the slabs between the decks of the Nimitz Freeway. The victims of the San Francisco earthquake all stayed inside of their vehicles. They were all killed. They could have easily survived by getting out and sitting or lying next to their vehicles. Everyone killed would have survived if they had been able to get out of their cars and sit or lie next to them. All the crushed cars had voids 3 feet high next to them, except for the cars that had columns fall directly across them.
10) I discovered, while crawling inside of collapsed newspaper offices and other offices with a lot of paper, that paper does not compact. Large voids are found surrounding stacks of paper.
Spread the word and save someone's life...
The entire world is experiencing natural calamities so be prepared!
'We are but angels with one wing, it takes two to fly'
In 1996 we made a film, which proved my survival methodology to be correct. The Turkish Federal Government, City of Istanbul , University of Istanbul Case Productions and ARTI cooperated to film this practical, scientific test. We collapsed a school and a home with 20 mannequins inside. Ten mannequins did 'duck and cover,' and ten mannequins I used in my 'triangle of life' survival method. After the simulated earthquake collapse we crawled through the rubble and entered the building to film and document the results. The film, in which I practiced my survival techniques under directly observable, scientific conditions , relevant to building collapse, showed there would have been zero percent survival for those doing duck and cover.
There would likely have been 100 percent survivability for people using my method of the 'triangle of life.' This film has been seen by millions of viewers on television in Turkey and the rest of Europe, and it was seen in the USA , Canada and Latin America on the TV program Real TV.
Subject: Save your life with "The Triangle of Life"
"Triangle of Life":
Without listening or reading, simply by looking at the following self-explanatory photos, you can learn more than in a thousand words about how to protect yourself during a major earthquake...
If you are inside a vehicle, come out and sit or lie down next to it. If something falls on the vehicle, it will leave an empty space