Custard Apple is known as a Seethaphal can be a exotic fruit tree that grows up easily.It was initially culivated in West Indies. Its organic name is ‘ANNONA SQUAMOSA’. It’s very famous in India. The pulp of this fruit is blended with milk for making custard. Because it delivers the taste of custard it can be called ‘Custard Apple‘. The fruit contains a peculiar aroma. Custard Apple can be used for making Jams, Jellies and sherbets.
The plant is propagated by grafting together with from your seeds. Custard Apple Grafted plants generate fruits through the first year by itself. The plant usually flowers between March and July. The fruits must be plucked before they’re ripe and stored for ripening.
Custard apple encourages digestion and it is used as a treatment for vomiting, diarrhoea, dysentry and vertigo. The unripe fruit is dried and powdered and it is usedas a treatment for treating lice. The fruit is reduced in calorie content and possesses minerals like iron, phosphorous, calcium and riboflavin.
The plant is actually a evergreen shrub and grows to just around 6 mts. The plant bears flowers within the senior branches as well as the fruits produce within the mature branches and they are usually round. The flesh is white and creamy having a sugary taste. The seeds are black in color having a shine. The seeds are usually not consumed for they’re slightly poisonous.
Video
சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.
இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது
பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்: சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
முகப் பருக்கள் குணமடையும்: சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.
மேனி பளபளப்பாகும்: விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்
எலும்பு பலமடையும்: சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்: சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்: சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.
இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.
பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.
பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.
சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.
காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.
சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.
சான்றுகள்
கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில்தான் எந்தவொரு சமூகம் அல்லது அரசாட்சியின் வரலாற்றையும் எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டு, தொல்பொருள், மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் முற்கால சோழர்கள் பற்றி சிறந்த சான்றுகளாக உள்ளன.
கல்வெட்டுகள்
சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை மற்றும் சோழர்கால அரசியல், பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதிக்ககப்பட்டுள்ளன. தஞ்சை பெதிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஜ்வரர் ஆலயத்தில் கல் வெட்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல முக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.
மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சி முறையைப் பற்றி திருவந்திபுரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. குடவோலை முறை, கிராம நிர்வாகம், வரி வசூல் முறை, நில வருவாய் முறை ஆகியவை குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. சில கல்வெட்டுகளில் மெய்கீர்த்திகள் எனப்படும் மன்னர்களின் வெற்றி வரலாறுகளும் காணப்படுகின்றன.
அன்பில் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டுகள், கரந்தை செப்பேடுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள் ஆகியன சோழர்களைப் பற்றிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கின்றன. சைவ மதம் அங்கு சிறப்புடன் இருந்தது குறித்து தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர்களின் சமகால அரசர்களான சேரர், பாண்டியன், இராஷ்டிர கூடர், கங்கா ஆகியோர் வெளியிட்ட கல்வெட்டுகளும் சோழர்களின் சிறப்புகள் பற்றிக் கூறுகின்றன.
நினைவுச் சின்னங்கள்:
சோழர்கால வரலாற்றை அறிந்துகொள்ள நினைவுச் சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாய் பயன்படுகின்றன. நினைவுச் சின்னங்கள் ஆலயங்களின் பகுதிகளாக உள்ளன. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராபுரத்திலுள்ள ஐராவதீஸ்வரர் ஆலயம், திருபுனவத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயம் சோழர்காலத்தின் முக்கிய நினைவுச் சின்னங்கள் ஆகும்.
நாணயங்கள்:
சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும், வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சினனமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பபடுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். சோழ அரசர்களின் காலங்களை வரிசைப்படுத்தவும், சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்துகொள்ளவும் இந்நாணயங்கள் பெரிதும் பயன்படுகின்றன.
இலக்கியம்:
சங்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் பற்றி, அறிந்துகொள்ள இலக்கியங்கள் சிறந்த சான்றுகளாக உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணம் சைவ பக்தர்களைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார். ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஒட்டக்சுத்தரின் மூன்று உலாக்கள், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் சோழர்கள் பற்றி பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன. வீர சோழியம், வநசோழ சரிதம், ஸதல புராணம், சோழ வம்ச சரிதம் ஆகிய இலக்கியங்கள் முற்கால சோழ அரசர்கள் பற்றி அறிய உதவும் சறந்த இலக்கியச் சான்றுகளாக உள்ளன.
அயல்நாட்டு சான்றுகள்:
சோழ அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையயே இருந்த உறவுகள் பற்றி இலங்கை இலக்கியமான மகாவம்சம் கூறுகின்றது. மேலும் இந்நூல் இலங்கையில் சோழர் ஆட்சி குறித்தும் கூறுகின்றது. ஐரோப்பிய பயணி மார்க்கோ போலோ, அயல்நாட்டு எழுத்தாளர் மெகஸ்தனிஸ் ஆகியோர் சோழர்களைப் பற்றி பல சுவையான தகவல்களைக் கூறுகின்றனர். அல்பெரூணி எனும் முகமதிய வரலாற்றாசிரியரும் சோழர்கள் பற்றி எழுதியுள்ளார்.
பிற்கால சோழ அரச குலம்:
பிற்கால சோழ அரச மரபை உருவாக்கியவர் விஜயாலயன் என்ற அரசர் ஆவார். இவர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி கி.மு. 850 ல் அதை சோழ நாட்டின் தலைநகராக்கினார். பல்வல மன்னர் அபராஜிதனை தோற்கடித்து அவரது இராஜ்ஜியத்துடன் இணைத்துக்கொண்டார். சிவ பக்தரான இவர் பல இடங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்.
முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:
உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் பற்றி நிறைய தகவல்களைத் தருகின்றன. இவர் ஆதித்யனின் மகனாவார். இவர் டிதன் இந்தியாவின் பல பகுதிகளை வென்று தனது நாட்டுடன் இணைந்து தமது பேரரசின் எல்லையை வடக்கே நெல்லூர் வரை விரிவுபடுத்தினார். பாண்டிய மன்னரைத் தோற்கடித்து வெற்றிகரமாக மதுரையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியை போற்றும் விதமாக இவருக்கு ‘மதுரை கொண்டான்’ என்ற பட்டடம் வழங்கப்ப்டடது. அத்துடன் மேலும் இலங்கை மற்றும் பாண்டிய அரசர்களின் கூட்டு ராணுவத்தைத் தோற்கடித்ததால் இவர் ‘மதுரையும் ஈழமும் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றார்.
இவர் ஒரு சிவபக்தர். இவர் சிதம்பத்தில் உள்ள நடராஜர் ஆலயத்திற்கு பொன்னால் கூரை வேய்ந்தார். எனவே இவர் ‘பொன்வேய்ந்தசோழன்” என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் கிராம நிர்வாகம் சிறப்புற்று காணப்பட்டது. பராந்தகனுக்குப் பிறகு கண்டராதித்தியன். அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் அரசாண்டனர்.
முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014
இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். திருவலாங்காடு செப்பேடுகள் இராஜராஜன் பற்றி கூறுகின்றன. இவர் சோழர் குலத்தின் மிக வலிமை மிக்க மன்னராவார். முதலாம் இராஸராஸ சோழனின் சிறப்புகள் சோழ நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றன. இவர் காலத்தில் பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டன. இராஜராஜனிடம் வலிமை மிக்க ராணுவம் இருந்தது. இவர் சேரரின் ராணுவத்தை திருவனந்தபுரத்தில் தோற்கடித்தார். இவர் கொல்லத்தை சார்ந்த பாஸ்கர ரவி எ்னற மன்னனையும் தோற்கடித்து, ‘காந்தளூர் சாலை கலமருதளிய’ என்ற பட்டம் பெற்றார். இவர் அமரபுஜங்கன என்ற பாண்டிய மன்னனை வென்றார். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனு ராதபுரத்தையும் இலங்கையின் வட பகுதியையும் இவர் கைப்பற்றினார். இவர் புலனருவா நகரத்தைப் புதிய தலைநகராக்கி அங்கு பல கோவில்களைக் கட்டினார். இவர் சேர, பாண்டிய, இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று
மும்முடி சோழன்” என்ற பட்டம் பெற்றார். இவர் மைசூர் பகுதியில் உள்ள கங்கபடி, தடிகை பாடி, நொளம்ப்பாடி ஆகியவற்றை வென்றார். இவர் விளிங்ஞம் என்ற பகுதியை வென்று ‘திக் விஜயம்’ நடத்தினார். மாலத் தீவுகள், கலிங்கம் ஆகியவற்றையும் வென்றார். இவருக்கு ‘அருண்மொழி’, ‘இராஜகேசரி’ போன்ற பட்டங்கள் உண்டு. இராஜராஜ சோழனுக்கு அவரது மகன் பட்டத்து இளவரசான ராஜேந்திரன் ஆட்சி மற்றும் போர்ப்பணிகளில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.
இராஜராஜ சோழன் ஒரு சிறந்த நிர்வாகி, தமது ஆட்சி காலத்தில் இவர் நில அளவை முறையை அறிமுகப்படுத்தினார். இவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உள்ளாட்சி நிர்வாக முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். இவர் தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார். இவர் புத்த மதத்தையும் சைவ சமயத்தையும் ஆதரித்தார். நாகப்பட்டினத்தில் புத்தஆலயம் கட்டட அனுமதி அளித்ததோடு ஆனைமங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1002 – கி.பி.1044:
முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறினார். முதலாம் இராஜேந்திரனைப் பற்றி திருவாலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் ஆகியன பல தகவல்களைக் கூறுகின்றன. இவர் ஒரு சிறந்த நிர்வாகியும், போர் வீரரும் ஆவார். இவரின் தந்தையாருடைய இராணுவ தீரச்செயல்களிலும் சிறந்த நிர்வாகத்திலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவர் பதிவ ஏற்றவுடன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி இலங்கையில் சோழர் ஆட்சியை நிலை நிறுத்தினார். இவர் தனக்கு உதவ தன் மகன் இராஜாதி ராஜனை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.
தனது ஆட்சியின் போது இவர் பல சிவ ஆலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினார். இவர் வங்காள அரசன் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்து கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். இந்நீர், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழ கங்கம் என்ற நீர்பாசன ஏரியில் சேர்க்கப்பட்டடது. இந்த வெற்றியைப் போற்றும் விதமான இராஜேந்திர சோழனுக்கு ‘கங்கை கொண்டான்” என்ற சிறப்புப்பட்டம் சூட்டப்பட்டது.
இவர் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழப்புரத்திற்கு மாற்றினார். இவர் இலங்கையை கைப்பற்றினார். பின்னர் சேர பாண்டிய அரசர்களை வெற்றிக்கொண்டார். சாளுக்கிய குல அரசன் இரண்டாம் ஜெயசிம்மனோடு இவர் போரி்ட்டார். கலிங்கத்து அரசனையும் இவர் வெற்றிகொண்டார். இவர் ஒரு வேதக்கல்லூரியை நிறுவினார். முதலாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன், அதிராஜேந்திரன் ஆகிய அரசர்கள் சில வருடங்கள் சோழ நாட்டை ஆட்சி செய்தனர்.
முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:
சோழர் வரலாற்றில் குலோத்துங்கசோழன் மிகப்பெரிய திருப்புனையை ஏற்படுத்தினார். குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம், இராணுவ வெற்றிகள் பற்றி விளக்குகின்றன. இவர் சேர பாண்டிய மன்னர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மேற்கு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தியனுடன் இவர் போரிட்டார். குலோத்துங்கன் காலத்தில் சோழப்பேரரசு மிகவும் பரந்து காணப்பட்டது. வினயாதித்யாவிடம் இருந்து வெங்கியின் ஆட்சியைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழனை சீனா போன்ற தூர கிழக்கு நாடுகள் நன்கு அறிந்திருந்தன. இவர் சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பினார். இவர் இலங்கையின் வட பகுதியில் தன் ஆதிக்கத்தை இழந்தார். ஆனால் தென் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். இவர் கலிங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சோழப்பேரரசின் பொருளாதார நிலையை முன்னேற்றமடைய செய்தார். பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி முறையான நில அளவை முறையினை இவர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.
மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட பல விதமான வரிகளை நீக்கி, வரி சுமையில் இருந்து மக்களை மீட்டடதால் இவருக்கு ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நிர்வாக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சோழப் பேரரசு இவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. இவரது ஆட்சியில் உள்நாட்டு அமைதியும் சிறந்த நிர்வாகமும் சோழமக்களுக்கு கிடைத்தன.
சோழ அரசர்களில் மிகவும் சிறந்த அரசராக முதலாம் குலோத்துங்கன் கருதப்படுகிறார். அவருக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.
Shortness of breath with activity, at rest, or when lying flat
Swelling of the legs, feet, ankles, belly or other areas
Dizziness, lightheadedness, fainting, or near fainting
Chest pain or discomfort
Rapid, pounding, or fluttering heartbeat
Anxiety or fatigue
Coughing while lying down or with mucus
Reduced ability to exercise
These symptoms may indicate a serious condition and require medical attention. However, some are not specific to a weak heart and may result from other causes. You should see a doctor immediately if you have any of these symptoms.
Teri W. Odom. (Credit: Image courtesy of Northwestern University)
Science Daily — Nanotechnology offers powerful new possibilities for targeted cancer therapies, but the design challenges are many. Northwestern University scientists now are the first to develop a simple but specialized nanoparticle that can deliver a drug directly to a cancer cell's nucleus -- an important feature for effective treatment.
They also are the first to directly image at nanoscale dimensions how nanoparticles interact with a cancer cell's nucleus.
"Our drug-loaded gold nanostars are tiny hitchhikers," said Teri W. Odom, who led the study of human cervical and ovarian cancer cells. "They are attracted to a protein on the cancer cell's surface that conveniently shuttles the nanostars to the cell's nucleus. Then, on the nucleus' doorstep, the nanostars release the drug, which continues into the nucleus to do its work."
Odom is the Board of Lady Managers of the Columbian Exposition Professor of Chemistry in the Weinberg College of Arts and Sciences and a professor of materials science and engineering in the McCormick School of Engineering and Applied Science.
Using electron microscopy, Odom and her team found their drug-loaded nanoparticles dramatically change the shape of the cancer cell nucleus. What begins as a nice, smooth ellipsoid becomes an uneven shape with deep folds. They also discovered that this change in shape after drug release was connected to cells dying and the cell population becoming less viable -- both positive outcomes when dealing with cancer cells.
The results are published in the journal ACS Nano.
Since this initial research, the researchers have gone on to study effects of the drug-loaded gold nanostars on 12 other human cancer cell lines. The effect was much the same. "All cancer cells seem to respond similarly," Odom said. "This suggests that the shuttling capabilities of the nucleolin protein for functionalized nanoparticles could be a general strategy for nuclear-targeted drug delivery."
The nanoparticle is simple and cleverly designed. It is made of gold and shaped much like a star, with five to 10 points. (A nanostar is approximately 25 nanometers wide.) The large surface area allows the researchers to load a high concentration of drug molecules onto the nanostar. Less drug would be needed than current therapeutic approaches using free molecules because the drug is stabilized on the surface of the nanoparticle.
The drug used in the study is a single-stranded DNA aptamer called AS1411. Approximately 1,000 of these strands are attached to each nanostar's surface.
The DNA aptamer serves two functions: it is attracted to and binds to nucleolin, a protein overexpressed in cancer cells and found on the cell surface (as well as within the cell). And when released from the nanostar, the DNA aptamer also acts as the drug itself.
Bound to the nucleolin, the drug-loaded gold nanostars take advantage of the protein's role as a shuttle within the cell and hitchhike their way to the cell nucleus. The researchers then direct ultrafast pulses of light -- similar to that used in LASIK surgery -- at the cells. The pulsed light cleaves the bond attachments between the gold surface and the thiolated DNA aptamers, which then can enter the nucleus.
In addition to allowing a large amount of drug to be loaded, the nanostar's shape also helps concentrate the light at the points, facilitating drug release in those areas. Drug release from nanoparticles is a difficult problem, Odom said, but with the gold nanostars the release occurs easily.
That the gold nanostar can deliver the drug without needing to pass through the nuclear membrane means the nanoparticle is not required to be a certain size, offering design flexibility. Also, the nanostars are made using a biocompatible synthesis, which is unusual for nanoparticles.
Odom envisions the drug-delivery method, once optimized, could be particularly useful in cases where tumors are fairly close to the skin's surface, such as skin and some breast cancers. (The light source would be external to the body.) Surgeons removing cancerous tumors also might find the gold nanostars useful for eradicating any stray cancer cells in surrounding tissue.
The National Institutes of Health supported the research.
Science Daily — Using light-harvesting nanoparticles to convert laser energy into "plasmonic nanobubbles," researchers at Rice University, the University of Texas MD Anderson Cancer Center and Baylor College of Medicine (BCM) are developing new methods to inject drugs and genetic payloads directly into cancer cells. In tests on drug-resistant cancer cells, the researchers found that delivering chemotherapy drugs with nanobubbles was up to 30 times more deadly to cancer cells than traditional drug treatment and required less than one-tenth the clinical dose.
"We are delivering cancer drugs or other genetic cargo at the single-cell level," said Rice's Dmitri Lapotko, a biologist and physicist whose plasmonic nanobubble technique is the subject of four new peer-reviewed studies, including one due later this month in the journal Biomaterials and another published April 3 in the journal PLoS ONE. "By avoiding healthy cells and delivering the drugs directly inside cancer cells, we can simultaneously increase drug efficacy while lowering the dosage," he said.
Delivering drugs and therapies selectively so they affect cancer cells but not healthy cells nearby is a major obstacle in drug delivery. Sorting cancer cells from healthy cells has been successful, but it is both time-consuming and expensive. Researchers have also used nanoparticles to target cancer cells, but nanoparticles can be taken up by healthy cells, so attaching drugs to the nanoparticles can also kill healthy cells.
Rice's nanobubbles are not nanoparticles; rather, they are short-lived events. The nanobubbles are tiny pockets of air and water vapor that are created when laser light strikes a cluster of nanoparticles and is converted instantly into heat. The bubbles form just below the surface of cancer cells. As the bubbles expand and burst, they briefly open small holes in the surface of the cells and allow cancer drugs to rush inside. The same technique can be used to deliver gene therapies and other therapeutic payloads directly into cells.
This method, which has yet to be tested in animals, will require more research before it might be ready for human testing, said Lapotko, faculty fellow in biochemistry and cell biology and in physics and astronomy at Rice.
The Biomaterials study due later this month reports selective genetic modification of human T-cells for the purpose of anti-cancer cell therapy. The paper, which is co-authored by Dr. Malcolm Brenner, professor of medicine and of pediatrics at BCM and director of BCM's Center for Cell and Gene Therapy, found that the method "has the potential to revolutionize drug delivery and gene therapy in diverse applications."
"The nanobubble injection mechanism is an entirely new approach for drug and gene delivery," Brenner said. "It holds great promise for selectively targeting cancer cells that are mixed with healthy cells in the same culture."
Lapotko's plasmonic nanobubbles are generated when a pulse of laser light strikes a plasmon, a wave of electrons that sloshes back and forth across the surface of a metal nanoparticle. By matching the wavelength of the laser to that of the plasmon, and dialing in just the right amount of laser energy, Lapotko's team can ensure that nanobubbles form only around clusters of nanoparticles in cancer cells.
Using the technique to get drugs through a cancer cell's protective outer wall, or cell membrane, can dramatically improve the drug's ability to kill the cancer cell, as shown by Lapotko and MD Anderson's Xiangwei Wu in two recent studies, one in Biomaterials in February and another in Advanced Materials in March.
"Overcoming drug resistance represents one of the major challenges in cancer treatment," said Wu. "Targeting plasmonic nanobubbles to cancer cells has the potential to enhance drug delivery and cancer-cell killing."
To form the nanobubbles, the researchers must first get the gold nanoclusters inside the cancer cells. The scientists do this by tagging individual gold nanoparticles with an antibody that binds to the surface of the cancer cell. Cells ingest the gold nanoparticles and sequester them together in tiny pockets just below their surfaces.
While a few gold nanoparticles are taken up by healthy cells, the cancer cells take up far more, and the selectivity of the procedure owes to the fact that the minimum threshold of laser energy needed to form a nanobubble in a cancer cell is too low to form a nanobubble in a healthy cell
The research is funded by the National Institutes of Health.
Isolation of MAP requires collection of infected white bloods cells from blood samples via centrifugation. For direct nPCR analysis, DNA directly isolated from white blood cells is purified in multiple steps prior to amplification and detection by gel electrophoresis. Meanwhile, culture-based nPCR requires the growth of MAP in specialized liquid media for 12 weeks, followed by DNA isolation before nPCR. Hybridizing magnetic relaxation sensors (hMRS) can detect MAP DNA in minimally processed blood samples via changes in magnetic signal (”¤2) in 1 hour, as opposed to 24 hours for direct nPCR and 12 weeks for culture nPCR. (Credit: Kaittanis et al., PLoS ONE, 2012; DOI 10.1371/journal.pone.0035326) Science Daily — Researchers at the University of Central Florida have developed a novel technique that may give doctors a faster and more sensitive tool to detect pathogens associated with inflammatory bowel disease, including Crohn's disease.
The microbes reappear years later and can cause serious health problems such as seen in tuberculosis cases. Current testing methods to find these hidden microbes exist, but require a long time to complete and often delay effective treatment for weeks or even months.The new nanoparticle-based technique also may be used for detection of other microbes that have challenged scientists for centuries because they hide deep in human tissue and are able to reprogram cells to successfully evade the immune system.
UCF Associate Professor J. Manuel Perez and Professor Saleh Naser and their research team have developed a method using nanoparticles coated with DNA markers specific to the elusive pathogens. The technique is effective and more accurate than current methods at picking up even small amounts of a pathogen. More important, it takes hours instead of weeks or months to deliver results, potentially giving doctors a quicker tool to help patients.
"Our new technique has surpassed traditional molecular and microbiological methods," said Naser, a professor at the UCF College of Medicine. "Without compromising specificity or sensitivity, the nano-method produced reliable and accurate results within hours compared to months."
The group's translational research works was recently published in the journal PLoS ONE.
The team created hybridizing magnetic relaxation nanosensors (hMRS) that can fish out and detect minuscule amounts of DNA from pathogens hiding within a patient's cells. The hair-thin hMRS are composed of a polymer-coated iron oxide nanoparticle and are chemically modified to specifically bind to a DNA marker that is unique to a particular pathogen.
When the hMRS bind to the pathogen's DNA, a magnetic resonance signal is detected, which is amplified by the water molecules that surround the nanoparticle. Then the researcher can read the change in the magnetic signature on a computer screen or portable electronic device, such as a smartphone, and determine whether the sample is infected with a particular pathogen.
The researchers used Mycobacterium avium spp. paratuberculosis (MAP), a pathogen that has been implicated in the cause of Johne's disease in cattle and Crohn's disease in humans, to test out their technique. They used a large number of blood and biopsy tissue samples from patients with Crohn's disease and meat samples from cattle with Johne's disease.
"It is all about giving medical professionals easy and reliable tools to better understand the spread of a disease, while helping people get treatment faster," said Perez, who works at UCF's Nanoscience Technology Center. "That's my goal. And that's where nanotechnology really has a lot to offer, particularly when the technology has been validated using clinical, food and environmental samples as is in our case."
The National Institute of General Medical Sciences (NIGMS), which is a part of the National Institutes of Health, and funded the research, said this kind of basic research can provide the foundation for medical breakthroughs.
"Just last year, Dr. Perez and his team unexpectedly discovered the DNA binding property of their magnetic nanosensors, and now they have shown that it may become the basis for a rapid, sensitive lab test for hard-to-measure bacteria and viruses in patient samples," said Janna Wehrle, Ph.D., of NIGMS. "This is a wonderful example of how quickly an advance can move from the research bench to meet an important clinical need."
Charalambos Kaittanis, who received his doctoral degree at UCF and worked as a postdoctoral Research Associate under Perez, has lead the experimental work in this study. Kaittanis is now a research fellow at Memorial Sloan-Kettering Cancer Center.
கம்பன் என்னும் கவிச்சக்கரவர்த்தியை பள்ளியில் நான் தமிழ் இலக்கியம் படிக்கும் போது ஓர் வம்பனாகக் கண்டதுண்டு. ஆமாம் தமிழ் ஆசிரியரின் கம்ப இலக்கிய விளக்கத்தை அந்நாளில் ஒரு சித்திரவதையாக எண்ணி அய்யய்யோ! கம்பன் என்னும் வம்பனுக்கேனிந்த வேலை ? என்று எண்ணிக் கசந்ததுண்டு. ஆனால் கம்பனின் கல்வியறிவு எல்லையில்லாதது. அவனுடைய அறிவு அவனது காலகட்டத்தில் வானளாவி இருந்தது. கவிச் சக்கர்வர்த்தி என பல மன்னர்களால் போற்றப்பட்டவன். அவனின் கற்பனை எனும் மகாசக்தியில் சில சக்தியை மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதில் சொல்லப்படும் கருத்துக்களை சமயம் சார்ந்ததாக எடுத்துக் கொள்ளாமல் தமிழ் இலக்கியம் என்பதாய் எடுத்துக் கொண்டு பார்க்கலாமா...!
1. இராமன் தனியாகத் தூங்கினானா?
விசுவாத்திர முனிவருடனும், தம்பி இலக்குவனுடனும் இராமர் மிதிலை நகர வீதியில் நடந்து கொண்டிருக்கிறார். கன்னிமாடத்திலே நின்றிருக்கும் கயல்விழி மாதுவின் விழிகளும், அயோத்தி இளவரசன் இராமனின் விழிகளும் ஒன்றையொன்று கவ்விக் கொள்கின்றன.
இரண்டு இளநெஞ்சங்கள் ஒன்றுடன் ஒன்று பூப்பந்து விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டன. முற்றும் துறந்த முனிவனும் இதை முக்காலும் உணர்ந்து கொள்ளத் தவறவில்லை.
மிதிலை மன்னன் ஜனகனின் விருந்துபசாரத்தில், அவர்களது விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்கள். இரவு வந்தது, காதலில் விழுந்த உள்ளங்களுக்கு இந்த இரவு ஒரு கொடுமையான பொழுதல்லவா?
முனிவரும், தம்பியும் படுத்துறங்க தன்மையான் இடத்தைத் தேடி பாய் விரித்துப் படுக்கிறான் ராகவன். நாமெல்லோரும் அவன் அப்போது தனிமையில் வாடுகிறான் என்று எண்ணுகிறோம்.
இங்கேதான் கம்பன் தனது கற்பனைச் சிறகை அழகாய் விரிக்கிறான்.
அவன் தனியனாக இல்லை என்பதை எப்படி விளிக்கிறான் பாருங்கள் !முனியும் தம்பியும் போய் தமக்கு இனிய பள்ளிகள் எய்திய பின், இருட் கனியும் போல்பவன், கங்குலும், திங்களும் தனியும், தானும், அத் தையலும், ஆயினான் -என்ன சொல்கிறான் கம்பன் ?
முனிவரும், தம்பியும் தமக்கென இனிமையான தூக்கத்திற்கு உகந்த இடத்தைத் தேடியதும், கருமை நிறம் கொண்ட இராமன் தனியனாகத் தூங்கவில்லையாம்.
அவனுடன் ஜந்து இருந்ததாம். எவை அந்த ஜந்துகளாம் ?கங்குல் - இருள் திங்கள் - வெண்ணிலா தனிமை - தனிமை உணர்வு தான் - தன்னைப்பற்றிய உணர்வு (இந்த உணர்வு இல்லாதவனால் காதலைப் பரிபூரணமாக எப்படி உணர்ந்து கொள்ள முடியும்?) அத்தையல் - அவனது உள்ளத்தைக் கவர்ந்த அந்தக் கனிகையும் அங்கே மனத்தளவில் அவனுடன் இருந்தாளாம். தனியனாக தன்னுடைய காதல் நினைவுகளில் அழுந்தியவாறு படுத்திருக்கும் அயோத்தி இளவரசனாக எமது கண்ணுக்குப் புலப்படும் இராமனுடன் ஐந்து இருக்கின்றன என்னும் கற்பனை வளத்தைக் கொண்டு கவி சொன்ன கவிச்சக்கர்வர்த்தியின் கற்பனைச் சக்தியை என்னவென்று சொல்வது?
2. அணுவைப் பிளக்க முதல் அறிவுரை?
உலகின் அனைத்து பொருட்களின் கடைசித் துகள் அணு என்கிறது விஞ்ஞானம். அந்த அணுவைப் பிளக்க முடியாது என்னும் கருத்துப் பல காலங்களாய் நிலைப்பட்டு இருந்தது. ஆனால் இன்றைய அதிவேக விஞ்ஞான உலகத்தில் அணுவைப் பிளந்து அதன் சக்தியைப் பயன்படுத்தும் உத்தியைக் கண்டு விட்டார்கள் மனிதர்கள்.
ஆனால் பல நூற்றாண்டு காலங்களுக்கு முன்னால் கவிச்சக்கரவர்த்தி கம்பனோ அணுவைப் பிளப்பது ஆகக்கூடியது ஒன்றே என்னும் கருத்தை வலியுறுத்தி தனது கவியின் மூலம் கருத்தை இயம்பியுள்ளான்.
ஆமாம். "இரணிய வதை படலம்" என்னும் கம்பனின் ஆக்கத்தைப் பலரும் அறிந்திருப்பீர்கள்.
இரணியன் என்றொரு அரசன் இருந்ததாகச் சொல்கிறது இதிகாச வரலாறு. இதில் அவனுக்குப் பிரகலாதன் என்னும் மகன் இருந்தான். பிரகலாதனோ அரியின் மீது அளவில்லாப் பக்தி கொண்டிருந்தான். அல்லும் பகலும் அரியின் நினைவினிலே, அரியின் பக்தியிலேயே கழிக்கலானான். அவனது தந்தை இரணியனுக்கோ இது ஆத்திரமூட்டியது. தனதி மைந்தனின் செய்கையை வெறுத்தான். அவனை நிந்தித்தான். ஆத்திரம் தாள மாட்டாமல் மகனைப் பார்த்து,
" உன் கடவுள் அரி எங்கேயிருக்கிறான்?" என்று உறுமுகிறான்.
அதற்கு அவன் பிரகலாதனோ, " என் கணால் நோக்கிக் காண்டற்கு எங்கனும் உளன்காண்! எந்தை"
-என் கண்ணால் காணும் காட்சிகள் அனைத்திலும் என் இறைவன் அரி நீக்கமற நிறைந்திருக்கிறான் தந்தையே!" என்கிறான்.
அதற்கு இரணியனோ விடாமல்,"ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய்; தூணில் நின்றுளன் எனின் கள்வன், நிரப்புதி நிலைமை!" எங்கும், எதிலும் உன் அரி நிறைந்திருக்கிறான் என்கிறாயே அப்படியானால் அவன் இங்கிருக்கும் இந்தத் தூணில் இருக்கிறானா என்று காட்டு பார்க்கலாம் என்கிறான்.
அதற்கு அவன் மைந்தன் பிரகலாதன் சொல்லும் விடையாகக் கம்பன் தந்த கவியிலே தான் அவனது விஞ்ஞான அறிவு துலங்குகிறது."சாணிலும் உளன் ; ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட கோணினும் உளன் ; மாமேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற தூணினும் உளன் ; நீ சொன்ன சொல்லினும் உளன்"
அங்குலத்தின் ஒரு பாகமாகிய சாண் என்னும் மிகவும் சிறிய பகுதியிலும் உள்ளான்.
ஒரு ரூபாயை நூறு பகுதிகளாகப் பிரித்தால் ஒரு சதம் வருகிறது. அதே போல அனைத்துப் பொருட்களிலும் கடைசி அந்தமாகிய அணுவினை நூறு கூறுகளாகப் பிரித்தால் வருவது கோண் என்னும் சிறு துளியாம் அதில் கூட அரி இருப்பான் என்கிறான் பிரகலாதன்.
இது கம்பனின் நுண்ணறிவுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
அணு என்னும் பகுதியை உடைத்தால் கூட அதிலும் இறைவன் இருக்கிறான் என்று அன்றே எழுதத் தூண்டிய கம்பனின் கற்பனை சக்தியை என்னெவென்று சொல்வது?
3. நாடு எப்படி இருக்க வேண்டும்?
மகாகவி பாரதியார் ரசித்த முதன்மையான கவிஞர்களில் முன்னிற்பவர் கம்பர். கம்பரின் கவித்திறனை ஆழமாய் ரசித்தார் பாரதியார். மகாகவியின் " நான் " என்னும் கவிதையை எடுத்துக் கொண்டால், அதிலே அவர் தன்னுடைய மனதின் விரிவளவை, பரந்த தன்மையைக் குறிப்பிடுவதற்கு,விண்ணில் திரிகின்ற மீனெல்லாம் நான் அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான் அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
என்று அத்தனை பிரமாண்டமான விடயங்களைக் கூறிவிட்டு அடுத்ததாக,"கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்கிறார்.
இத்தனை அண்டப் பிரம்மாண்டமான விடயங்களோடு கம்பனின் கவிதைகளை ஒப்பிட்டுக் கூறுமளவிற்கு கம்பனின் கவிதைகளை மாகாகவி பாரதியார் ரசித்திருந்திருக்கிறார். மகாகவி பாரதியாரின் தமிழ்ச் சாதி என்னும் கவிதையில் ஒரு பகுதி,"சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும், திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும், 'எல்லையன் றின்மை' எனும்பொருள் அதனைக் கம்பன் குறிக்கோளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச் சாதியை "அமரத் தன்மை வாய்ந்தது" என்று உறுதிகொண் டிருந்தேன். "
இங்கே அவர்,"எல்லையன் றின்மை எனும்பொருள் அதனைக் கம்பன் குறிக்கோளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்"
என்று கம்பனின் கவிகளின் எல்லையற்ற தன்மையை எண்ணி வியக்கிறார்.
கம்பனின் எல்லையற்ற தன்மையைக் காட்டும் திறமை. அவர் தனது கவிதைகளிலே கையாண்ட வழிமுறைகள் பல. தான் மதிப்புக் கொண்டு, மிகவும் பெருமையாகச் சொல்லப்போகும் விடயத்தை மிகவும் எதிர்மறையாக ஆரம்பித்து அதற்கு ஒரு விளக்கத்தைக் கொடுக்கும் ஆற்றல் கம்பனுக்கு மிகையாக இருந்தது.
கம்பனுடைய கபராமாயணத்தின் காவிய நாயகனாம் இராமனின் சொந்த நாடானா கோசல நாட்டைப் பற்றிக் கூறும்போது,"வரம்பெலாம் முத்தம்"
-தாவிப் பாய்ந்தோடும் தனை படைத்த மதகுகளிலெல்லாம் சங்குகளாம்."மாநீர் குரம்பெலாம் செம்பொன்"
-வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்களில் செய்யப்பட்டுள்ள செய்கரைகளில் பொன் கட்டிகள் இருக்கின்றனவாம்
இப்படியாக இராமனின் கோசல நாட்டை வர்ணிக்கத் தொடங்கி... கோசல நாட்டில் தானம் செய்வோர்கள் இல்லையாம்... அதுமட்டுமா கோசல நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வீரமும் இல்லையாம். அந்நாட்டில் உண்மை பேசுவோர்களும் இல்லையாம், அறிவுடைமை உடையோரும் இல்லையாம்.
திகைத்துப் போகும் நம்மைச் சிந்திக்க வைத்து விடை தருகிறார்.
"வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால் உண்மை இல்லை ஓர் பொய் உரை இலாமையால் ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்" இராமனின் நாட்டுப் பெருமைகளை விளக்கும் தன்மை.
தானம் கொடுப்போர் இல்லை ஏனெனில் அங்கே வறுமையே இல்லையாம். வீரம் மிகுந்த பாராக்கிரமரங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை ஏனெனில் அவர் மீது போர் தொடுக்கும் அளவிற்கு வீரம் கொண்ட எதிரிகள் இல்லையாம். உண்மை பேசுவோர் இல்லை ஏனெனில் அங்கே பொய் உரைப்போர் யாருமேயில்லையாம். மேலும் கோசல நாட்டு மக்கள் எல்லோரும் கேள்வி கேட்டு அனைத்தையும் அறிந்து விடுவார்களாம். அதனால் அங்கே அறிவுடமை என்னும் சொல் உபயோகமற்றுப் போய் விடுகிறதாம்.
எத்தனை அழகான விளக்கத்துடன் இத்தனை கருத்துக்களை எடுத்தியம்பும் கம்பனில் கவிபுனையும் சக்தியை வியக்காமல் இருக்க முடியுமா?
ஒரு உண்மையான, நிறைவான நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதனை மனித தர்மத்தின் அடிப்படையில் வகுத்து,தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க கொண்டல்கள் முழவின் ஏங்க குவளைகண் விழித்து நோக்க தெண்திரை எழினி காட்ட தேம்பிழி மகரயாழின் வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ
மயில்கள் சோலையிலே ஆடிக்கொண்டிருக்க, விளக்குகளைத் தாமரைகள் தாங்குகின்ற போது, மேகங்கள் மத்தளம் போல முழங்க மெதுவாய்த் துளசி கண் திறந்து பார்க்கையில், தெளிந்த அலைகள் நாடகத்திரை போட மதுரகீதம் பொழியும் மகரயாழ் போல வண்டுகள் ரீங்காரம் இட, மருத நாச்சியார் கொலுவீற்றிருப்பதைப் போல அந்த நீர் கொழிக்கும் வயல் அவ்வூரில் செழித்து இருக்கிறாம்.
இந்நாட்டின் மக்கள் எப்படி இருப்பார்கள்? என்று நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுபொருந்திய மகளி ரோடு வதுவையில் பொருந்து வாரும் பருந்தொடு நிழல்சென்(று) அன்ன இயல் இசைப் பயன் துய்ப் பாரும் மருந்தினும் இனிய கேள்வி செவிஉற மாந்து வாரும் வருந்தின் முகம் கண் (டு) அன்ன விழாவணி விரும்பு வாரும்
தமது வயதை ஒத்திருக்கும் மகளிரோடு திருமணத்தில் இணைந்து கொள்வோர் ஒரு பக்கத்தில் ஆரவாரத்தில் திளைக்கிறார்களாம். பருந்து ஒன்று மதிய வெய்யிலில் பறக்கின்றது போல பாட்டோடு இசைந்து இசையும் போகின்றதாம். அப்படியான கச்சேரியை இசைக்கும் அரிய கலைஞர்கள் ஒருபுறத்தில் இசைக்கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். அமுதம் அருந்தித் திளைப்பவர்கள் போல இனிமையான் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டு ஒருபுற மக்கள் ஆனந்தமடைகிறார்களாம்.
கம்பன் கோசல நாட்டில் ஆனந்தமான வாழ்க்கையுடைய மக்கள் வாழுகின்றார்கள் என்பதனை எளிமையாகவும் அருமையாகவும் எடுத்துச் சொல்லும் திறனில் அதைப் படிப்பவர்கள் அசந்து போகிறார்கள். கம்பனின் சக்தி கவிதையில் விளையாடி நம்மை மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது.
4. தாமரை மலர்கள் அகழிக்குப் போனது ஏன்?
கம்பனின் இலக்கியம் சுந்தரமானது, சுகந்தமானது, சுவையானது. கரும்பில் அடிக்கரும்பு சுவை கூடியது என்பார்கள். கம்பராமாயணம் என்னும் அவனது இலக்கியத்தில் அவன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட கற்பனை எல்லைகளை விரித்துத் தன் திறமைக்கு தானே சவால் விடுகின்றான். மனதிலே பூத்து நின்ற அற்புதமான நகரின் வனப்புகளை, அந்நகரிலே வாழும் மக்களின் குணாதிசயங்களை கோபுரமாக்குகின்றான்.
எத்தகைய ஒரு அற்புதமான, ஆனந்தமான, அமைதியான நாட்டிலே வாழவேண்டும் என அனைவரும் எண்ணுகிறோமோ, அத்தகைய ஒரு கற்பனை நாட்டைத் தனது கதாநாயகனின் நாடாக்கி படிப்பவர்களையும் அவனோடு சேர்த்து மகிழ்விக்கிறான்.
கம்பனுடைய கதாநாயகன் ராமனுடைய நாட்டிலே அமைந்துள்ள அழகிய கோட்டையைச் சுற்றி அகழியாம். அந்த அகழியில் குவிந்து பூத்திருக்கும் அழகிய தாமரைகள் எப்படி அங்கு வந்தது?
இராமனுடைய நாட்டிலே உள்ள பெண்கள் அத்தனை பேரும் அழகில் சிறந்தவர்களாம். அவர்களின் அழகைக் கண்ட தாமரைகள் இந்த நாட்டின் பெண்களின் அழகிற்கு எம்மால் ஈடு கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு ஓடிச் சென்று, அந்நகருக்கு வெளியேயுள்ள கோட்டையைச் சுற்றியுள்ள அகழிக்குள் கூட்டமாய் மலர்ந்து விட்டதாம்.
அந்த அகழிகள் எங்கே அமைந்திருக்கின்றன? கோட்டையைச் சுற்றி. அந்தக் கோட்டை நகரின் எல்லைப்புறத்தில் அமைந்திருக்கிறது. கம்பனுடைய கதாநாயகனின் ஊரிலுள்ள பெண்களின் அழகு எப்படிப்பட்டது என்று. அந்த பெண்களின் அழகின் வீச்சத்தோடு தமது அழகை ஒப்பிட முடியாத தாமரை மலர்கள் ஊரின் எல்லைக்கப்பால் ஓடி விட்டதாம். இங்கு கம்பனின் கவிச்சக்தியை விட அவனின் கற்பனைச் சக்தி எப்படி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.
The English language has some wonderfully anthropomorphic collective nouns for the various groups of animals.
We are all familiar with a Herd of cows, A Flock of chickens, A School of fish And a Gaggle of geese. However, less widely known is: A Pride of lions, A Murder of crows (as well as their cousins the rooks and ravens), An Exaltation of doves
And, presumably because they look so wise: A Congress of owls. Now consider a group of Baboons. They are the loudest, most dangerous, most obnoxious, most viciously aggressive and least intelligent of all primates. And what is the proper collective noun for a group of baboons? ? ?
Believe it or not ……. A Parliament A PARLIAMENT OF BABOONS!
‘கொள்ளி’, ‘கொல்லி’ என்ற இருவேறு சொற்கள் பலகாலமாக மக்களிடையே வழக்கில் வழங்கி வருகின்றன. எரிதல், எரிவது, என்ற பொருளில் ‘கொள்ளி’ என்ற சொல் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கொல்லி என்பது அழித்தல், அழிதல் என்ற பொருளில் வழங்கப்பட்டு வருகின்றது. ‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ எனற திருக்குறளில் கொல்லி என்பது அழித்தல் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.
ஒரு கோலில்(குச்சி) அல்லது தீப்பந்தத்தில் தீப்பற்றிக் கொள்ளுவதைக் கொள்ளி என்று குறிப்பிடுகின்றனர். விறகுகள் அடுப்பில் எரிகின்றபோது அதனைக் ‘கொள்ளி’ என்று கூறுவர். எரிகின்ற விறகினைக் கொள்ளிக்கட்டை என்பர். இவ்வாறு வழங்கப்படும் இக்கொள்ளி என்ற சொல்லைப் பழமொழிகளில் வைத்து நமது முன்னோர்கள் பல்வேறு விதமான பண்பாட்டு நெறிகளை விளக்கியுள்ளனர்.
எரியும் கொள்ளி
மனிதர்கள் அனைவரும் நல்லவர் அல்லர்.அவர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்களாக இருந்தாலும் சமுதாயச் சூழலால் தீயவர்களாக மாறுகின்றனர். இவ்வாறு தீயவர்களாக மாறுபவர்கள் மிகவும் கொடியவர்களாக எந்தக் கொடுமை செய்வதற்கும் அஞ்சாதவர்களாக இருப்பர். மகாபாரதத்தில் வரும் சகுனியும், ராமாயணத்தில் வரும் கொடுமனக் கூனியும் கொடுமையில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். இவர்களுள் யார் சிறந்தவர் என்று கூறுவது இயலாது. இருவருமே கொடுமையின் உச்சத்திற்குச் சென்றவர்கள். பாரதியார் சகுனியை, மாயச் சகுனி, கள்ளச் சகுனி என்று தமது பாஞ்சாலி சபதத்தில் குறிப்பிடுவது இதனைத் தெற்றென விளக்கும்.
ஹிட்லர், இடிஅமீன், முசோலினி உள்ளிட்டோர் உலகக் கொங்கோலர்கள் ஆவர். இவர்களில் யார் நல்லவர் என்று கூற முடியும்? யாரையும் கூற இயலாது. அதுபோன்றே சமுதாயத்தில் மக்களுக்குத் தீங்கு செய்பவர்களைக் குறிக்க
‘‘எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி
எல்லாம் ஒன்றுதான்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
ஊருக்கு நிழல் தரும் ஆலமரம் ஒன்று இருந்தது. அதில் ஒரு காகம் கூடு கட்டி வாழந்து வந்தது. ஆனால் அந்தக் காகம் அம்மரத்தினடியில் வந்து தங்குவோரின் மீது எச்சமிட்டு அவர்களை வெறுப்பேற்றியது. மக்கள் அனைவரும் அந்தக் காகத்தை வெறுத்துப் பேசியபடி சென்றனர். இதனைக் கவனித்த மற்றொரு காகம் ஏன் இவ்வாறு செய்கிறாய்? மற்றவர்கள் மீது இவ்வாறு எச்சமிடுவது கீழ்த்தரமான செயல் இல்லையா? இதனை விட்டுவிடு என்று அறிவுரை கூறியது. ஆனால் அக்காகம் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று கூறி அம்மர நிழலில் தங்குபவர்களின் மேல் எச்சம் இட்டுக் கொண்டே இருந்தது. வயதாகியதால் அக்காகம் இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போது அருகிலிருந்த தனது மகனான காகத்திடம் நீ என்னைப் போல் இராதே! நீயாவது நல்லவனாக இரு என்று கூறிவிட்டு இறந்து விட்டது.
ஆனால் மகனான காகமோ தன் தந்தை கூறியதைப் பின்பற்றாது அதைவிட வித்தியாசமாக என்ன செய்யலாம் என யோசித்துச் செய்ய ஆரம்பித்தது. ஆலமரத்தடியில் ஆள்கள் வந்தவுடன் அக்காகம் அந்த ஆளின் தலைக்கு நேராக வந்து தங்கும். பின்னர் வந்த ஆள் மேல் நோக்கிப் பார்க்கும்போது அவனது முகத்தில் எச்சமிடும். இவ்வாறு செய்துவிட்டு உயராமான கிளையில் சென்று அமர்ந்து கொள்ளும். இதனால் அனைவரும் அக்காகத்தின் மீது மிகுந்த அருவருப்பு கொண்டனர்.
‘‘…ச்சே அந்தக் காகமும் இந்தக் காகமும் மிகவும் மோசமானவை. இரண்டும் ஒன்றை ஒன்றில் குறைந்தது கிடையாது. கீழ்த்தரமானவை என்று புலம்பி விட்டுச் சென்றனர். பின்னர் அம்மரத்தடியை விட்டுவிட்டு அருகிலுள்ள வேறு மரத்தடியில் தங்க ஆரம்பித்தனர். மேற்குறித்த பழமொழியை இக்கதை நன்கு விளக்குவதாக உள்ளது. இப்பழமொழியைப் போன்றே,
சிலர் பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் பண்புடையவர் ஆவர். அத்தகையவர்களை, ‘அதமர்கள்’, ‘பாவி’ என்று வழக்கில் மக்கள் வழங்குகின்றனர். அத்தகைய தீயவர்களுடன் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் சிலர் வேறு வழியின்றி தீயவர்கள் என்று அறிந்த பின்னரும் அவர்களுடன் தொடர்பு கொள்வர். இதனால் பெரும் துன்பம் அவருக்கு வந்து சேரும்.
சகுனி தீயவன் என்று அனைவருக்கும் தெரியும். இதனைத் துரியோதனனுக்குப் பலரும் எடுத்துக் கூறினர். துரியோதனனும் சகுனியைப் பற்றி அறிவான். இருப்பினும் துரியோதனன் சகுனியுடன் நட்புக் கொண்டு அவன் கூறியபடி நடந்தான். அதனால் அழிந்தான். இத்துரியோதனன் போன்றே இன்று பலர் தீயவர்களுடன் நட்புக்கொண்டு அழிகின்றனர் என்பதனை,
முடி மென்மையானது. விரைவில் தீப்பற்றும் தன்மை கொண்டது. ஒருவன் எரிகின்ற விறகினைப் பயன்படுத்தி தலை அரிக்கின்றது என சொரிந்து கொண்டால் தீப்பற்றி எரிந்து சாம்பாலாகி விடுவான். அதுபோன்று தீயவர்களுடன் சேர்ந்திருப்பவன் அழிவான் என நட்புக் கொள்ளும் தன்மை குறித்து இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. மேலும் இப்பழமொழியானது,
என்றும் மக்களிடையே வழங்கப்படுகின்றது. முதுகில் சொறிந்து கொண்டாலும் அந்த இடம் புண்ணாகித் துன்பத்தைக் கொடுக்கும். தீய நட்புக் கொள்ளாது நல்லோருடன் நட்புக் கொண்டு வாழ வேண்டும் என்று இப்பழமொழி வழி நமது முன்னோர்கள் பண்பாட்டு நெறியை எடுத்தியம்புகின்றனர்.
பிள்ளையும் – கொள்ளியும்
மனிதன் பெறக் கூடிய பேறுகளில் (செல்வங்களில்) குழந்தைச் செல்வம் முக்கியமானதாகும். குழந்தை இல்லை எனில் வாழ்வு முழுமை பெறாது. அதிலும் ஆண் குழந்தை இல்லாவிடில் பேரிழப்பு என்று கருதக் கூடிய மனநிலை மக்களிடையே காணப்படுகின்றது. பெண் குழந்தை இருந்தாலும் ஆண் குழந்தை பெறுகின்ற போதுதான் வாழ்வு நிறைவுடையதாக இருக்கும் என்று மக்கள் கருதுகின்றனர்.
ஒருவர் இறந்து விட்டால் அவருக்குப் பெண் குழந்தைகளிருப்பின் அக்குழுந்தை கொள்ளி வைக்க முடியாது. ஆண் குழந்தை மட்டுமே கொள்ளி வைக்க உரிமை உண்டு. இது சமுதாயத்தில் எழுதப்படாத சட்டமாக விளங்குகின்றது. ஆண் குழந்தை இருந்து கொள்ளி வைத்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று மக்கள் நம்புவதும் இதற்கு ஒரு காரணமாகும்.
பெண் குழந்தை குடம் உடைக்கும் சடங்கினைச் செய்ய ஆண் குழந்தை கொள்ளி வைப்பான். இதனை,
‘‘கொடமுடைக்கப் பிள்ளை இல்லாட்டியும்
(பெண்குழந்தை) கொள்ளி வைக்கப் பிள்ளை வேணும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
ஆண் குழந்தைகளுக்குரிய சமுதாய மதிப்பினை இப்பழமொழி எடுத்துரைப்பதுடன் பெண் குழந்தைக்கு உள்ள உரிமை மறுப்பினையும் எடுத்துரைக்கின்றது. பெண் குழந்தைக்குக் கொள்ளி வைக்கும் உரிமை கிடையாது. ஆண் குழந்தைக்கு மட்டுமே உண்டு. சமுதாயத்தில் காணப்படும் ஆண், பெண் ஏற்றத் தாழ்வினையும், பாலின வேறுபாட்டையும் உள்ளீடாகக் கொண்டு இப்பழமொழி அமைந்துள்ளது.
வெள்ளி - கொள்ளி
ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. வெள்ளிக்கிழமை இறைவழிபாட்டிற்குரிய நாள். இருப்பினும் இந்தக் கிழமையில் குழந்தை பிறத்தலை மக்கள் விரும்புவதில்லை. வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ பிறந்தால் அக்குழந்தை மிகுந்த துன்பங்களைச் சந்திக்கும். வாழ்வில் போராடும் என்று மக்கள் நம்புகின்றனர். அதிலும் குறிப்பாக ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் தந்தை இறந்து விடுவான். அக்குழந்தையும் வாழ்வில் பல்வேறு விதமான துன்பங்களை அனுபவிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. இத்தகைய மக்கள் நம்பிக்கையை,
‘‘வெள்ளிக்கு உடையவன்
கொள்ளிக்கு உடையவன்’’
என்ற பழமொழி புலப்படுத்துகிறது.
வெள்ளிக் கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் எந்தவிதமாக துன்பமும் ஏற்படாது. என்றபோது மக்களிடையே இப்படியொரு நம்பிக்கை வழங்கப்பட்டு வருவது வியப்பிற்குரியதாக உள்ளது. இத்தகைய மூட நம்பிக்கைகளுக்கு மக்கள முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்ற சிந்தனையை இப்பழமெழி உள்ளீடாகக் கொண்டுள்ளது நோக்கத்தக்கது.
கொள்ளியும் எண்ணெயும்
துன்புறுவோருக்குத் துன்பத்திலிருந்து விடுபடக் கூடிய வழியினைக் கூயி உதவ வேண்டும். அதுவே மனிதத்தன்மை ஆகும். அவ்வாறு உதவ இயலவில்லையெனில் போசாது ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இதனையே,
‘‘நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்’’
என்ற புறநானூற்று வரிகளும் எடுத்தியம்புகின்றது. இன்று மனிதர்கள் நல்லது செய்யா விட்டாலும் தீயது செய்யாது இருக்கின்றார்களா? இல்லையே. மேலும் மேலும் துன்பத்தை மிகுதிப்படுத்தும் செயல்களிலேயே மனிதர்கள் ஈடுபடுகின்றனர். மனிதர்களின் இவ்விழி பண்பினை,
‘‘எரியிற கொள்ளியில எண்ணெய ஊத்துவது போல’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
எரிந்து கொண்டிருக்கும் விறகில் எண்ணெய் ஊற்றினால் மேலும் மேலும் தீ எரியுமே தவிர அதன் வேகம் குறையாது. துன்பத்தினைக் குறைப்பதற்கு வழி கூறாது மிகுதிப்படுத்துவது போல் நடந்தால் அது எரிவதில் மேலும் எண்ணெய் ஊற்றித் தீயை மிகுதிப்படுத்துவதைப் போன்று அமையும். மனிதர்கள் இங்ஙனம் நடந்து கொள்ளக் கூடாது. மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி உணர்த்துவதாக உள்ளது.
இப்பழமெழி உவமைத் தெடடர்போன்று அமைந்திருப்பதால் வழக்குத் தொடரோ என்ற எண்ணம் ஏற்பட்டாலும் அது பழமொழியே ஆகும். உவமை போன்று அமைந்த பழமொழி என்று இதனைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு கொள்ளி என்பது மக்களின் பழக்க வழக்கங்களையும், பண்பினையும் எடுத்துரைக்கின்றதுடன் நல்ல பண்பாட்டு நெறிகளையும் இச்சொல்லமைந்த பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. மூடப் பழக்கவழக்கங்களை விடுத்து முழுமையான பண்பாட்டு வழியில் வாங்குடன் வாழ்வோம்.