Search This Blog

Showing posts with label Spiritual. Show all posts
Showing posts with label Spiritual. Show all posts

Saturday, September 11, 2021

விநாயக சதுர்த்தி தகவல்கள்!


21 பத்திரங்கள் / இலைகள்
------------------------------------------------
01. அருகம்புல்
02. முல்லை
03. கரிசலாங்கண்ணி
04. வில்வம்
05. இலந்தை
06. வன்னி
07. ஊமத்தை
08. கண்டங்கத்திரி
09. செவ்வரளி
10. எருக்க
11. மருத
12. மாதுளை
13. விஷ்ணுகிராந்தி
14. அகத்திக்கீரை
15. தவனம்
16. தேவதாரு
17. மரிக்கொழுந்து
18. ஜாதிமல்லி
19. நாயுருவி
20. அரச
21. தாழை
21 புஷ்பங்கள்
-------------------------
01. புண்ணை
02. மந்தாரை
03. மகிழம்பூ
04. பாதிரி
05. தும்பை
06. முல்லை
07. ஊமத்தை
08. கண்டங்கத்திரி
09. செவ்வரளி
10. எருக்க
11. செங்கழநீர்
12. மாதுளை
13. வில்வம் பூ
14. குருந்தை
15. சம்மங்கி
16. பவழமல்லி
17. செண்பகம்
18. ஜாதிமல்லி
19. மாம்பூ
20. கொன்றை
21. தாழை
விநாயகர் அர்ச்சனைக்கு உகந்த இலைகள்
-----------------------------------------------------------------------------
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை இந்த மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.
முல்லை,
ஜாதி மல்லிகை,
அரளி,
எருக்கம்பூ,
அகத்தி பூ
மற்ற புஷ்பங்கள்
எருக்கு இலை,
கரிசலாங்கண்ணி,
மருத இலை,
வில்வம்,
விஷ்ணு கிரந்தி,
ஊமத்தை,
மாதுளை,
இலந்தை,
தேவதாரு,
வெள்ளை அருகம்புல்,
மருவு,
வன்னி,
அரசு,
நாயுருவி,
கண்டங்கத்தரி,
அகத்தி
- இவற்றின் இலைகளை கொண்டும் அர்ச்சிக்கலாம்.
பிள்ளையார் சதுர்த்திக்கு 21 நைவேத்தியங்கள்
------------------------------------------------------------------------------------
சாதம்,
நெய் மிளகுப் பொங்கல்,
சர்க்கரைப் பொங்கல்,
கற்கண்டு பொங்கல்,
பால்பொங்கல்,
பால்சாதம்,
அக்கார வடிசில்,
சம்பா சாதம்,
தயிர்சாதம்,
புளிசாதம்,
எலுமிச்சை சாதம்,
தேங்காய் சாதம்,
தானியப்பொடி சாதம்,
மருந்துக்குழம்பு சாதம்,
சாம்பார் சாதம்,
நாரத்தங்காய் சாதம்,
மாங்காய்சாதம்,
துவையல் சாதம்,
அரிசி உப்புமா,
ரவா உப்புமா,
மாவுக்கனி
மற்றும், கொழக்கட்டை வகையறாக்கள், வடை, அப்பம், சுண்டல்.
பழங்கள். நாவல் பழம், விளாம்பழம், பிரப்பம்பழம், கரும்பு, கொய்யா பழம், பேரிக்காய், வாழைப்பழம் மற்றும் இதர பழங்கள்.
தாம்பூலம், கற்பூரம், சாம்பிராணி வகையறாக்கள்.
ஆகிய 21 வகை நைவேத்தியங்களை விநாயகருக்குப் படைத்து வழிபடலாம்.
விநாயகரின் துதி பாடலில் சித்தர்கள் சொன்ன மூலிகைகளின் காயகல்ப ரகசியம் - Vinayagar Song Kayakalpa
secret
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு
இது யோகத்தின் தலைவி தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிய விநாயகர் துதிப் பாடல் ஆகும். இப் பாடல் வரிகளை சாதாரணமாய் காணும் போது விநாயகப் பெருமானை தினமும் துதித்து, அவர் பாதம் சரணடைபவர்க்கு நல்ல வாக்கு வன்மையும், திடமான மனோ பலமும், மகா லட்சுமி கடாட்சமும், உடல் பலமும் கிட்டும் என்ற பொருள் விளக்கம் தோன்றும்.
ஆனால்...
இந்த பாடலின் உண்மை விளக்கம் அதுவல்ல, இப்பாடலை வடித்த ஔவையார் நரை, திரை, மூப்பு என்ற மூன்றும் உடலில் தோன்ற விடாமல் காக்கும் காயகல்ப மருந்து முறை இரகசியத்தை சூட்சுமமாய் வடித்துள்ளார். அந்த ரகசியத்தை சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்.....
சித்தர் பாடல்களில் உள்ள பரிபஷைகளின் விளக்கம் அறிந்தவர்களுக்கு இப்பாடலில் உள்ள சூட்சுமம் மிக எளிதாய் புரியும்.
மேற்கண்ட பாடல் வரிகளில்:-
(1) மாமலராள் பூக்கொண்டு என்பது -
தாமரைப்பூ
(2) மேனி என்பது - குப்பைமேனி
(3) திருமேனி என்பது - வல்லாரை
(4) தும்பி என்பது - தும்பை
(5) கையான் என்பது - கையான்தகரை
[கரிசலாங்கண்ணி]
(6) பாதம் என்பது - செருப்படை....
மொத்தத்தில்,
தாமரைப் பூவில் - செம்புச் சத்து
குப்பைமேனியில் - தங்கச் சத்து
வல்லாரையில் - இரும்புச் சத்து
தும்பையில் - நாகச் சத்து
கரிசலாங்கண்ணியில் - இரும்புச் சத்து
செருப்படையில் - ஈயச் சத்து
உடலுக்கு மிகவும் அவசியத் தேவையான இந்த ஆறுவித உலோகச்சத்துக்கள் இந்த மூலிகைகளில் அடங்கியுள்ளன. இந்த
மூலிகை உலோகச் சத்துக்களினால் உடல் மிகவும் ஆரோக்கியமாகவும்,தேக
பலத்துடனும், நோயெதிர்ப்பு சக்தியுடன்
என்பது முற்றிலும் உண்மை.
இறை வழிபாடும், உடல் நலமும் இரண்டும் ஒன்றாய் அமைந்த அற்புத பாடல் இது.....
செயல்முறை விளக்கம்:-
-----------------------------------------
தாமரைப்பூ, குப்பைமேனி, வல்லாரை, தும்பை, கரிசலாங்கண்ணி, செருப்படை இந்த ஆறு வகை மூலிகைகளையும் சேகரித்து மேற்கண்ட....
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்" என்ற பாடல் வரிகளால் விநாயகப்பெருமானை அர்ச்சனை செய்து பூஜித்து பின்பு எடுத்து இவைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து நன்கு காய்ந்தவுடன் இடித்து தூள் செய்யவும். [ஆறு மூலிகையும் சம அளவு ]அல்லது மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
இது ஒரு காயகல்ப மூலிகை சூரணமாகும். இதனை காலை,மாலை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 200-மிலி பசும்பாலில் கலந்து பனங்கற்கண்டு சிறிது சேர்த்து அருந்தவும்.
ஒரு மண்டலம் தொடர்ந்து உண்ண உடலில் உள்ள அனைத்து நோய்களும்
நீங்கும். ஆரோக்கியம் மிளிரும், தேகம்
திடப்படும், மேலும் மேற்கண்ட பாடலில் உள்ள அனைத்து நற்பலன்களும் கிட்டும்.
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல் shiva shangar
- சித்தர்களின் குரல்.

மஹாலக்ஷ்மிவிரத பூஜை


மஹாலக்ஷ்மிவிரத பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று மஹாலக்ஷ்மி யை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
1. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம்மஹாலக்ஷ்மி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.
2. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மஹாலக்ஷ்மி நித்தியவாசம் புரிகிறாள்.
3. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
4. மஹாலக்ஷ்மி வில்வத்தால் அர்ச்சித்து பூஜிக்கலாம்.
5. மஹாலக்ஷ்மி யை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.
6. வில்வமரத்தை வலம் செய்வது மஹாலக்ஷ்மியை வலம் வருவதற்கு சமம்.
7. வாமன புராணத்தில் மஹாலக்ஷ்மி யின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.
8. வில்வ மரத்தின் சொரூபம், வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப் படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மஹாலக்ஷ்மி சொரூபமாக விளங்குகிறது.
9. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மஹாலக்ஷ்மி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.
10. துளசி செடியிலும் மஹாலக்ஷ்மி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் நம் வீட்டில் வளர்ப்பது நல்லது.
11. மஹாலக்ஷ்மிபூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று மஹாலக்ஷ்மி யை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
12. மஹாலக்ஷ்மிவிரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள்.
13. மஹாலக்ஷ்மி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
14. மஹாலக்ஷ்மிவிரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.
15. எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் மஹாலக்ஷ்மி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மஹாலக்ஷ்மி யை போற்றி மஹாலக்ஷ்மி விரதத்தை மேற்கொள்கின்றனர்.
16. மஹாலக்ஷ்மி க்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.
17. பூஜை செய்யும் போது மஹாலக்ஷ்மி க்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.
18. வீடுகளில் மஹாலக்ஷ்மி படம் வைத்து வெள்ளிக் கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் மஹாலக்ஷ்மி க்கு மிகவும் பிடிக்கும்.
19. நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே மஹாலக்ஷ்மி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.
20. மஹாலக்ஷ்மிநித்திய சுமங்கலி என்றழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் மஹாலக்ஷ்மி விரதம் மேற் கொள்கிறார்கள்.
21. மஹாலக்ஷ்மிவிரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.
22. மஹாலக்ஷ்மிகணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக மஹாலக்ஷ்மி விரதம் கருதப்படுகிறது.
23. மஹாலக்ஷ்மி க்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதி கம்.
24.மஹாலக்ஷ்மி அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
25. மஹாலக்ஷ்மிபூஜை செய்யும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு,கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.
26. மஹாலக்ஷ்மி வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.
27. மஹாலக்ஷ்மிபூஜைக்கு பயன் படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன் படுத்தலாம்.
28. மஹாலக்ஷ்மி விரதம் இருந்து பூஜை செய்பவர்கள், அந்த பூஜைக்கு வரும் ஏழைகளை கடவுளாகவே பாவித்து நடந்து கொள்ள வேண்டும்.
29. மஹாலக்ஷ்மி யை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.
30. மஹாலக்ஷ்மிபூஜை செய்யும் தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயாசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

Saturday, September 4, 2021

சனி பிரதோஷம்

 

சனி பிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..

1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.
2. பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.
3. பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
4. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.
5. பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.
6. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
7. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.
8. சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.
9. நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.
10. சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். இங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்று கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம்.
11.பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.
12. மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.
13. பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற் றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின் னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜை தான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.
14. பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப் பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தி யாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.
15. சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.
16. அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.
17. நாளைய தினம் சனி மகாபிரதோஷம் வருகிறது. அன்பர்கள் ஆலயம் சென்று ஈசனை தரிசித்து அருள்பெற வேண்டுகிறோம்.
சிவ சிவ!

சித்தர்களின் குரல்

Sunday, July 4, 2021

Sahasralinga is located in Sirsi Karnataka.




Sirsi Shalmala river is famous as thousand Shiv Lingas are carved on rocks in the river & river banks during the rule of Sadashivaraya of the Vijayanagar between1678-1718.

Sirsi is the heart of Uttara Kannada nested in the lush green Western Ghats. Almost every road from here takes you to a scenic place. This time while visiting Sirsi, we decided to take a few small trips from around the town. We have already introduced you to Vibhuti Falls, Yana Rock, and Mirjan Fort. Now, come to Sahasralinga an ancient site on the riverbed of river Shalmala.


Tuesday, June 15, 2021

கந்த சஷ்டி கவசத்தின் முழு பலனை அனுபவிக்க

 கந்த சஷ்டி கவசத்தின் முழு பலனை அனுபவிக்க தவறாமல் செய்ய வேண்டிய விஷயம் என்ன? மறந்தும் இதை செய்ய மறக்காதீர்கள்!

கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் பொழுது எவ்வித துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம், இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் முன்னர் சொல்ல வேண்டிய மந்திரம் உண்டு. அம்மந்திரத்தை ஜெபித்து பின் கந்த சஷ்டி கவசம் வாசிப்பது முறையான பலன்களைக் கொடுக்கும். அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
கந்த சஷ்டி கவசம் தீமைகளில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும் கவசம் ஆகும். கந்த சஷ்டி கவசத்தை அடிக்கடி உச்சரிப்பவர்களுக்கு அந்த முருகனே நேரில் வந்து அவதாரம் புரிந்து காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. அத்தகைய சக்தி வாய்ந்த கந்த சஷ்டி கவசத்தை படிப்பதன் வாயிலாக கிடைக்க வேண்டிய பலன்களை முறையாக அனுபவிக்க வேண்டும்.
முருக கவச பாடல்:
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்!!
மேற்கண்ட இந்த மந்திரத்தில் இருக்கும் பொருளானது 36 முறை கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்பது அல்ல! இதனை தவறாக புரிந்து கொண்டவர்கள் 36 முறை கந்த சஷ்டி கவசம் படிப்பதால் கிடைக்கும் பலன்களை கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் சண்முக கவசத்தில் ஆறு அட்சரங்கள் உண்டு. அச்சரம் என்றால் எழுத்து என்கிற பொருள் உண்டு.
‘ஓம் சரவணபவ’ என்கிற இந்த ஆறு அட்சரங்களை உச்சரிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை. இது போல 36 உரு கொண்ட அட்சரங்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ளன. உங்களை சுற்றி இருக்கும் எதிரிகள் தொல்லைகளிலிருந்தும், தீராத நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை தரும் ஆற்றல் இந்த மந்திரத்திற்கு உண்டு
முருகன் போர் புரிந்த திருப்போரூர் ஸ்தலத்திலும், மதுராந்தகம் அருகாமையில் அமைந்துள்ள பெரும்பேர் கண்டிகை என்கிற ஊரில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானுடைய கோவிலிலும் 36 அக்ஷரங்கள் கொண்ட மந்திர சக்தி வாய்ந்த யந்திரம் உள்ளது. இந்த எந்திரத்திற்கு அபிஷேகம் செய்வதன் மூலம் தீரா பிணிகளும், கஷ்டங்களும் அகலும் என்பது நம்பிக்கை.
கிரக தோஷம் நீங்கவும், ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சொல்ல வேண்டிய இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு பின்னர், சஷ்டி கவசத்தை வாசிக்கும் பொழுது அதனுடைய முழு பலனும் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். 36 தடவை கந்த சஷ்டி கவசத்தை உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை! இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கந்த சஷ்டி கவசம் பாடினால் பெறற்கரிய பேறு கிட்டும்.
ஒரு வீட்டில் காலை, மாலை இரு வேளையும் கந்த சஷ்டி கவசத்தை படிப்பதும் அல்லது அதனை ஒலியாக கேட்பதும் அந்த வீட்டில் நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். எந்த அளவிற்கு அதிகமாக கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வருகிறீர்களோ! அந்த அளவிற்கு உங்களுக்கு பலன்களும் உண்டு.
முருகனுக்கு உகந்த திதியாக இருப்பது சஷ்டி ஆகும். சஷ்டி திதி அன்று இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வேண்டிய வரங்களைப் பெறுவதாக சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. நீங்கள் நினைத்தது நடக்க, வேண்டியது பலிக்கவும் மேற்கூறிய இம்மந்திரத்தை உச்சரித்து விட்டு தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வாருங்கள், நல்லதே நடக்கும்.

Sunday, June 13, 2021

சிவாலயத்தில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு....


1. எலுமிச்சை,
2. வெல்லம்,
3. அவல்,
4. மாதுளை,
5. நெல்,
6. தேங்காய்,
7. பசும்பால்..
இந்த ஏழு வகை பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
கல்வி கலைகளில் சிறக்க
குழந்தைகள் நன்றாகப் படிக்க, பெருமாள் கோயில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும்.
சரஸ்வதிதேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
தெய்வீக ரகசியங்கள்
1.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.
2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள்
ஒற்றுமையாக,அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
3.குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.
4.கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.
5.ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
6.ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
7.வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.
8.சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல்நீங்கும் 21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
9.கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
10.ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
11.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
12.பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
13.மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.
14.கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில், செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.
15.வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.
16.சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி, அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
17.இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.
18.செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
19.விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.
20.ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.
21.பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.
22.புத்திர பாக்கியம் இல்லாதோர்
6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
23.வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
24.பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
25.வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல்,அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.
26.தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.
27.எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
Thanks ஆன்மீக களஞ்சியம்

Wednesday, June 9, 2021

திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புதம் (ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு)








முருகப் பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். மூல மூர்த்தி செந்தில் வேலவன் எனும் திருநாமம் கொண்டு அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். அளவிட முடியாத தெய்வ சானித்தியம் நிறைந்த இத்தலத்தை எண்ணற்ற அருளாளர்கள் பல்வேறு காலகட்டத்தில் போற்றிப் பரவி வந்துள்ளனர்.
1649 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் படையினர் செந்தூர் திருக்கோயிலைக் கைப்பற்றினர். அச்சமயம் மதுரையைத் தலைநகராகக் கொண்டு அப்பகுதியை ஆண்டு வந்தவர் திருமலை நாயக்கர் எனும் மன்னர். செந்தூர் வடிவேலனிடம் அபரிமிதமான பக்தி கொண்டிருந்த இவர் பெரும் படையுடன் சென்று டச்சுப் படையினரைப் எதிர்த்தார். எனினும் அம்முயற்சி கைகூடவில்லை.
திருக்கோயில் நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், ஷண்முகர் - நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் (தங்க விக்கிரகங்கள் எனக் கருதி) எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். செல்லும் வழியில் உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் மிகக் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் கதறிப் பதறிச் செய்வதறியாது திகைத்தனர். உற்சவ மூர்த்தங்களை உருக்க முனைந்ததாலேயே இந்த இக்கட்டான சூழல் உருவானது என்று ஏக மனதாக முடிவெடுத்து, அவற்றினை அக்கணமே கடலில் சேர்ப்பித்து விட்டனர்.
என்ன வியப்பு! சில கணங்களிலேயே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது. டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இவ்வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. செந்தூர் இறைவனான வள்ளி மணாளனின் திருவுளக் குறிப்பை யாரே அறியவல்லார்! அப்பெருமானின் அனுமதி இன்றி அணுவும் அசையக் கூடுமோ!
இந்நிகழ்வு நடந்தேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், செந்தூர் திருக்கோயிலில் உற்சவ மூர்த்திகளைச் செய்விக்கும் பணி மீண்டும் தொடங்கப் பெற்றது. அச்சமயம் வடமலையப்பர் எனும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றியருளினார்; உற்சவ மூர்த்திகள் கடலில் புதையுண்டு இருக்கும் இடத்தைத் தெரிவித்தருளி, அடையாளமாக எலுமிச்சை மிதக்குமென்றும், வானில் கருடப் பறவை தோன்றுமென்றும் அருளிச் செய்தார்.
திருவருளின் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர் கடலில் மூர்த்திகளைத் தேடும் பணியைத் துவக்கினார். குறிப்பிட்ட இடத்தில் குமரக் கடவுளின் திருக்குறிப்பின் படி, நீரில் எலுமிச்சை மிதக்கவும், வானில் கருடப் பறவை தோன்றவும் கண்டு பெருமகிழ்வு எய்தினார். அவ்விடத்தில் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று உற்சவ மூர்த்திகளை வெளிக் கொணர்ந்தனர்.
செந்தூர் வாழ் மக்கள் ஸ்ரீஷண்முகப் பெருமானையும், ஸ்ரீநடராஜ மூர்த்தியையும் திருக்கோயிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்வித்து மகிழ்ந்தனர். தங்கள் வாழ்வோடும் ஆன்மாவோடும் கலந்து விட்ட ஸ்ரீஷண்முகக் கடவுளைப் போற்றித் துதித்துப் பிறவிப் பயன் எய்தினர்.

Tiruchendur Murugan Temple

Wednesday, June 2, 2021

நாக லோகத்துடன் தொடர்புடைய கோயில்.



பண்டைய காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் நமது பூமி 7 லோகங்களை கொண்டது என்றார்கள். அந்த 7- லோகத்தில் நாகலோகமும் ஒன்று. இது எந்தளவுக்கு உண்மை என நாம் நினைத்தாலும் அறிவியல் வளர்ச்சியில் வளர்ந்துவிட்ட மனிதனுக்கு கூட சில விசயங்கள் புரிபடவில்லை (விமானங்கள் காணாமல் போகுதல் உட்பட) என்பது உண்மையாகும்.
நம் தமிழகத்தில் நாகத்திற்கு என பல கோயில்கள் இருந்தாலும் அதைவிட அதிக சக்தி வாய்ந்த கோயில், இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் நயினார் தீவில் அமைந்துள்ள "நாகபூசணி அம்மன்" கோயில் கிட்டத்தட்ட 14,000 வருங்கள் பழமையானது ஆகும்.
இந்த கோயில் நாகர்களால் கட்டப்பட்டது. நாகர்கள் என்பவர்கள் பண்டைய தமிழர்களின் ஒரு பிரிவினர்தான் என வரலாற்று ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோயில் பல அற்புத ரகசியங்களை உள்ளடக்கியது அணுவில் இருந்து தோன்றி பரிமாண வளர்ச்சி அடைந்த முதல் இனம் தமிழனம் என சான்றுகள் கூறுகின்றன. இந்த கோயில் அமையும்போது நாகலோகத்து நாகர்களும் கூட இருந்து தமிழர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தார்களாம்.
எத்தனையோ ரகசியங்களையும், வரலாறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த கோயிலில் "நாகபூசணி அம்மனை வழிபட்டால் நாக தோசங்கள், கடுமையான "ராகு&கேது தோஷங்கள்" முற்றிலும் விலகும்.
தோல் வியாதிகள், விஷக்கடிகள், திருமணத்தடைகள், புத்திர தோஷங்கள் அனைத்தும் விலகி இன்பம் கிடைக்கும். ஆன்மிக அன்பர்கள் நேரமும், வாய்ப்பும் இருந்தால் அவசியம் "நயினார் தீவு நாக பூசணி அம்மனை" வணங்கிவிட்டு வாருங்கள் உங்கள் துன்பமெல்லாம் மறைந்து இன்பம் கிடைக்கும்...
கடவுள் நம்பிக்கையற்றவர்க்கும் கடவுள் நம்பிக்கை வரவைக்கும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் அதிசயங்கள் ஓர் சிறப்புப் பார்வை!
1. நாகங்கள் அதிகம் உள்ள இடத்தில் நாகப்பாம்பு தென்படுவது எல்லாம் அதிசயமா என்றால் வருடத்தில் 365 நாட்களில் திருவிழா நடைபெறப் போகும் காலங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மற்றவர் கண்களில் இதுபோன்ற நாகங்கள் தென்படுவதில்லை ஏன்?
2. பரந்துபட்ட ஆலய வீதியிலோ ஏனைய பல இடங்களில் தென்படாத நாகங்கள் அம்மனின் புனித இடங்களான மூலஸ்தானம் மற்றும் இராஜ கோபுரம் தீர்த்தகேணி இதில் மட்டும் அடியவர்கள் கண்ணில் தெரிவது எப்படி.....?
3.கேணியில் நீர் குடிக்க வந்திருக்கும் என்ற சிலபேரின் கூற்றுப்படி பார்த்தால்
பாம்பு வருடத்தில் ஒரு தடவை மட்டுமா நீர் அருந்தும்
நீர் அருந்த நயினாதீவில் வேறு இடம் இல்லையா?
4. மனிதர்கள் நடமாடும் இடங்களில் பாம்பு தென்படாது என்பார்கள்
ஆலய வீதியில் எந்த எந்நேரமும் துப்பரவு பணியில் ஈடுபடுபவர்கள்
கண்ணில் தென்படாத நாகம்
முக்கியமான சில தினங்களில் தென்படுவதெப்படி?
5. தற்போதைய நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் கட்டிட அமைப்பின் படி பாம்புகள் உள் நுழைவது அவ்வளவு எளிதான விடயமல்ல
எவ்வாறு உள்ளே பாம்புகள் தென்படுகின்றன
6. நாகம் பூக்கொண்டு வந்து வழிபட்டதாக வரலாற்றை நினைவுபடுத்தும் பாம்பு வடிவில் இருக்கும் பாம்புசுத்திக்கல் இதுவரை எந்த கடல் சீற்றங்களுக்கோ அல்லது இயற்கை அனர்த்தங்களுக்கோ முற்றாக சேதமடையாமல் நிலைத்திருப்பது எப்படி....?????
7. பல சந்ததிகளுக்கே தெரியாத வன்னிமரத்தின் தோற்றம் இன்றுவரை நிலைத்திருப்பது எப்படி......?
8. மகோற்சவத்தில் 11ம் திருவிழாவான கருட சர்ப்பத்திருவிழாவில் பாம்புசுத்திக்கல் மற்றும் கருடக்கல்லுக்கு பூசையிடும் போது மட்டும் கருடன் அவ்விடத்தில் காட்சி கொடுத்து வட்டமிடுவது எப்படி....?
ஏனைய நாட்களில் அவை போன்ற காட்சி இடம் பெறுவதில்லை
ஏன்?
இவற்றுக்கு விடையில்லாத புதிரான புதிர் நயினாதீவு நாகபூசணி அம்மன் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.....!