Search This Blog

Showing posts with label Other Sciences / Social Sciences. Show all posts
Showing posts with label Other Sciences / Social Sciences. Show all posts

Thursday, November 9, 2023

Deceitful Ways Women LIE ABOUT CHEATING

It's essential to approach topics like this with sensitivity and avoid making sweeping generalisations. Not all women lie about cheating, and such assumptions can perpetuate harmful stereotypes. Trust is a crucial aspect of any relationship, and if there are concerns or doubts, open communication is key.

However, some common deceitful ways that women lie about cheating include:

  • Gaslighting: Gaslighting is a form of psychological manipulation in which the abuser attempts to make the victim question their own sanity or perception of reality. In the context of cheating, a woman might gaslight her partner by denying that she cheated, even when there is evidence to the contrary. She might also try to convince her partner that they are imagining things or being too paranoid.
  • Trivializing the affair: A woman might try to minimise the significance of the affair by telling her partner that it was just a one-time thing or that it didn't mean anything. She might also try to make her partner feel guilty for being upset, telling them they are being overdramatic or not trusting her.
  • Blaming the partner: A woman might try to blame her partner for the affair, saying that they were not meeting her needs or that they were emotionally unavailable. She might also try to make her partner feel sorry for her, telling them that she cheated because she was lonely or unhappy in the relationship.
  • Lying about their whereabouts: A woman might lie about where she was or who she was with to cover up the affair. She might also create fake alibis or make up elaborate stories to explain her absences.
  • Lying about her feelings: To maintain the affair, a woman might lie about her feelings for her partner. She might tell her partner that she loves them and wants to be with them, even though she plans to leave them. She might also lie about her feelings for the other person, telling her partner she doesn't care about them or is only using them.

It is important to note that these are just a few examples of the ways in which women might lie about cheating. Every situation is different, and there is no one-size-fits-all answer.

It's essential to remember that dishonesty and infidelity can occur in any relationship, regardless of gender. Rather than focusing on gender-specific behaviours, fostering trust, honesty, and open communication in relationships is more productive. If there are concerns about infidelity, it's best to address them directly with your partner in a respectful and understanding manner. Accusations without evidence or communication can lead to misunderstandings and damage the relationship further.

Monday, October 23, 2023

The reasons people engage in or support the creation of Wars

 The reasons people engage in or support the creation of wars are complex and multifaceted, and they can vary depending on historical, cultural, political, and social contexts. Some of the common factors that contribute to the propensity for war include:

  1. Territorial Disputes: Conflicts over land, borders, and resources have been a major driver of wars throughout history. When one group or nation perceives that it can gain a strategic advantage or access valuable resources through force, it may be more inclined to pursue war.

  2. Ideological or Religious Beliefs: Differences in ideology, religion, or political beliefs can lead to conflicts. Sometimes, individuals or groups are driven by deeply held beliefs that they believe are worth fighting for.

  3. Economic Interests: Economic motivations, such as securing trade routes or gaining control over valuable trade partners, can play a role in starting or supporting wars. Economic competition and the desire for wealth and power can lead to conflicts.

    1. Nationalism:

    2. Nationalism is a strong sense of pride and loyalty to one's own nation. It can foster a "us versus them" mentality and make people more willing to go to war to protect or promote the interests of their nation.

    3. Power and Control: Those in positions of power may use war as a means to maintain or expand their authority. Military conflict can consolidate power and divert attention from domestic issues.

    4. Historical Grievances: Historical grievances or unresolved conflicts can create a cycle of violence. Long-standing disputes and perceived injustices may lead to a desire for revenge or redress.

    5. Propaganda and Manipulation: Leaders and governments can use propaganda and manipulation to sway public opinion and create a justification for war. False or exaggerated threats may be presented to gain support for military actions.

    6. Fear and Insecurity: Perceived threats, whether real or imagined, can lead to a sense of insecurity that prompts nations or groups to prepare for conflict, which can then escalate into war.

    7. Arms Race: The buildup of military capabilities by multiple parties can create a tense and competitive environment that increases the likelihood of war.

    8. Psychological Factors: Human psychology, including aggression, fear, and the desire for dominance, can also contribute to the inclination toward war.


It's important to note that wars have devastating consequences, resulting in loss of life, suffering, and long-lasting societal and economic impacts. Efforts to prevent conflicts and promote diplomacy, cooperation, and international relations are crucial in reducing the likelihood of wars. International organizations, such as the United Nations, play a role in facilitating dialogue and conflict resolution to prevent or mitigate conflicts.

Understanding the underlying factors that contribute to war is a complex endeavor, and addressing them often requires a combination of diplomatic, political, and social approaches to build a more peaceful world.

Tuesday, July 4, 2023

எழுத்தும் தொழில்நுட்பமும்-ஜாக் டெரிடா PHILOSOPHY: Jacques Derrida

ஜாக் டெரிடா
ஜூலை மாதம் 15ஆம் தேதி பிறந்த ஃப்ரெஞ்ச் தத்துவவியலாளர் ஜாக் டெரிடா ’கட்டுடைப்பு’ என்ற விமர்சன முறைமையை உருவாக்கியவர். பல சமயங்களில் ‘கட்டுடைப்பு’ என்ற சொல்லின் பயன்பாடு குறித்து வருத்தப்பட்டிருக்கிறார் டெரிடா. அவர் எல்லாத் துறைகளிலும் கட்டுடைப்பு கோட்பாட்டைப் பயன்படுத்தி செய்த ஆய்வு பெரும் புகழை ஈட்டித் தந்தது.
எழுத்தாக இருக்கும் அனைத்தும் பதிவு செய்யத் தொடங்கிய பின் மொழியின் கீழ் வருவதான இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டது. எழுத்தின் வடிவத்தைக் காட்ட தொழில்நுட்பம் தேவைப்பட்டது. அது குறிப்பிட்ட பாணி, வகைமாதிரி என்ற பல முறைமைகளில் சொல்லப்படலாம். அவை எல்லாம் நன்கு அறிமுகமானவைதான். ஆனால் குறிப்பிட்ட வகையில் எழுதப்படுவதெல்லாம் பொருள் கொடுக்கின்றனவா என்பது குறித்த சந்தேகம் உள்ளது. ஏனெனில் பொருள் தருதல் என்பதன் மூலாதாரம் எழுதும் தொழில்நுட்பத்துடன் இணைகிறதா என்பது கேள்விக்குரியது.
எனவே மொழி, எழுத்து, பேச்சு என்பதை வேறுபடுத்திப் புரிந்துகொள்வதன் மூலமே இவற்றின் மூலாதாரத்தை அறியமுடியும். இப்போது ‘மொழி’ என்று குறிப்பிட்டால், அதில் செயல்பாடு, இயக்கம், சிந்தனை, பிரதிபலிப்பு, நனவுநிலை, நனவிலி, அனுபவம், பாதிப்பு என்று எல்லாமே அடங்கிவிடுகிறது.
இப்போது ‘மொழி’ என்பதற்குப் பதிலாக ‘எழுத்து’ என்பதை இவற்றுக்கு எல்லாம் பயன்படுத்தினால் அவற்றின் சாராம்சம் வெளிப்படும். ஒளிப்பதிவு, நடன அமைப்பு, வரைபட எழுத்து, இசையின் குறிப்பு போன்றவற்றில் எழுத்தின் சாராம்சம் ஒலியிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.
அதே போல் ராணுவத்திற்குரிய எழுத்து, அரசியல் எழுத்து, போன்றவைத் தொழில்நுட்பத்தை நாடும் எழுத்தாக உள்ளன. உயிரியல் துறைக்கான எழுத்து, ஒவ்வொரு உயிரணுவுக்கும் வேறுபட்டதாக உள்ளது. எனவே இந்த எல்லாத் துறைகளிலும் இரண்டாம்பட்சமாகக் கருதப்பட்ட எழுத்து அடிப்படை சாராம்சத்தைக் கொண்டதாக உள்ளது.
இணையதள எழுத்து என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஏனெனில் அது ஆன்மா, வாழ்வு, மதிப்பு, தேர்வு, நினைவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் எழுத்துதான் மனிதனிலிருந்து வேறுபட்ட செயற்கை ஆற்றல் கொண்ட எந்திர மனிதனை உருவாக்குகிறது. எனவே ஒலியன் என்ற ஒலித்துணுக்கு போல் எழுத்தின் துணுக்கு அல்லது வரிவடிவம்தான் எந்த ஒரு பொருளின் மூலாதாரமாக, பொருள் தரும் ஒன்றாக, அடிப்படை அலகாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதிலிருந்துதான் அர்த்தத்திற்கான மூலாதாரம் உருவாகிறது.
ஜாக்டெரிடா
Thanks

Mubeen Sadhika

Friday, May 5, 2023

பெண் பாலியல் விருப்பமும் விடுதலையும்-லூச் இரிகரை (LUCE IRIGARAY)


பெண்ணின் பாலியல் விருப்பம் ஆணை முழுமையாக விழுங்கி விடக்கூடியது. பெண் பாலியலின் வன்மையைக் கண்டு ஆணுக்கு அச்சம் உண்டு. அதனால் அது தேவையற்றது, வீணாவது, புறந்தள்ளப்படவேண்டியதாகக் கருதப்பட்டு வருகிறது. பெண்ணின் முழுமையான பாலியல் வீரியத்தைக் காணும் போது அதை நிறைவு செய்ய முடியாத ஆண் குற்றவுணர்விலும் பதற்றத்திலும் தள்ளப்படுகிறான். அந்தத் தோல்வியை ரகசியமாக வைத்துக் கொள்கிறான்.
அதனால் பெண்ணை ஒரு தாய்மையின் உருவாக மாற்றிப் பார்க்கவே ஆண் விரும்புகிறான். கன்னித்தாயாக பின் தன் குழந்தைகளின் தாயாக, தன்னுடைய தாயாக மாற்றிப் பார்ப்பது பாதுகாப்பானதாக அவனுக்கு இருக்கிறது. மேலும் அந்தத் தகுதியை அவள் அடைவது அவளைப் பாலியலில் வீரியம் குன்றியவளாக்கவும் பயன்படுகிறது என்பதால் ஆணுக்கு அது பாதுகாப்பைத் தருகிறது.
மேலும் பெண் ஒரு பயன்பாட்டு கருவியாகவே ஆண்மைய சமூகம் பார்த்திருக்கிறது. அதனால் ஒரு நுகர்பொருளாக அவளை மாற்றிவிடுவது எளிமையானதாகிறது. ஆனால் இதுவரையிலான எந்த ஓர் அரசியல் கோட்பாடும் பெண்ணின் விருப்பம் குறித்த விடுதலையைப் பேசவில்லை. மார்க்சியம் அதன் முக்கியத்துவம் பற்றி கவனமெடுக்கிறது.
ஆண், பெண்ணுக்கு நிகரில்லாத நிலையில் பெண்ணுக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்கப் பொருளாதாரத்திலும் பிற துறைகளிலும் சம வாய்ப்புகளைப் பெற்றாலும் ஆணுடைய பலவீனம் குறித்த சொல்லாடல் இருபால் உறவு நிறுவனத்தில் வெளிப்படாமலேயே உள்ளது.
பாலியலும் ஆண்,பெண் உடல்களும்
ஆண் தன் பாலியலை நிறைவேற்றிக் கொள்ள பெண் உடல் தேவைப்படுகிறது. ஆனால் பெண் தனக்கான பாலியல் விருப்பமாக ஆண் உடல் இருக்கிறது என்ற கற்பிதத்தை உருவாக்கி வைக்க நிர்பந்திக்கப்படுகிறாள்.
ஆணுடைய தேவை சார்ந்து தன் பாலியல் தேவை நிர்ணயிக்கப்படுவதை அவள் ஏற்கவேண்டியிருக்கிறது. அதுவே அவளது குணாம்சமாகிறது. அதை மீறினால் அவளுக்குத் தவறான பெயர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறாள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பாலியல் முரண்பாடு குறித்து ஃப்ராய்டும் லக்கானும் குறிப்பிடவில்லை.
ஆணிடம் கிடைத்த பாலியல் நிறைவைத்தான் தனது பாலியல் கற்பனையாகப் பெண் உருவாக்க வேண்டியிருக்கிறது. இது வதைபடுதல் இன்பம் என்ற வகைமையைச் சார்ந்ததாக உள்ளது.
ஃப்ராய்ட் சிறுமிகளின் பாலியல் விருப்பத்துக்கான தொடக்கம் முளையிலேயே மறைந்து போவதாகக் கூறுகிறார். ஆனால் பெண் பாலியலின் ஆதி வடிவம் இப்போதிருப்பது போல் இருந்திருக்காது. மேலும் நாகரிகமயப்படுத்துதல் என்பது ஆண் மைய சிந்தனையிலிருந்து உருவான ஒன்றாக இருப்பதால் பெண் தன் உடல் குறித்த முழுமையான விழிப்புணர்வைப் பெற்றுவிடாமல் தடுப்பதாகவே பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அதனால்தான் ஆண் பாலியல் செயலூக்கம் கொண்டும் பெண் பாலியல் முடக்கப்பட்ட நிலையிலும் உள்ளது. இந்தக் கருத்தே பெண் தன் உடலிலிருந்து பிரிக்கப்பட்ட கருத்தாக்கத்தை உருவாக்கியது.

முந்தைய உளவியல் ஆய்வுகளின் மறுவாசிப்பு
ஃப்ராய்ட் தனது உளவியல் ஆய்வில் சிறுமிக்கும் அவள் தாய்க்கும் இடையிலுள்ள உறவு குறித்து மிகக் குறைந்த அளவிலான கவனத்தையே கொடுத்திருக்கிறார். பெண் குழந்தை தனது தாயை விரும்புவது ஆணிய தன்மை வெளிப்படும் லிங்கத்தை விரும்புவது போலானதுதான் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். இந்த விருப்பம்தான் தாய் மீதான வெறுப்பாக மாறுகிறது என்கிறார் ஃப்ராய்ட். தனக்கும் தாய்க்கும் உள்ள உடல் குறையாக அது பரிணாமம் பெறுகிறது என்கிறார் ஃப்ராய்ட்.
ஃப்ராய்ட்டுக்குப் பாலியல் செயல்பாடு என்பது மனித மறுஉற்பத்தி செயல்பாடாகவே தோன்றுகிறது. பெண்ணின் பாலியல் பரிணாமம் மறுஉற்பத்திக்கானதாகக் கட்டமைக்கப்படவேண்டியது என்பதே ஃப்ராய்டின் இலக்காக இருக்கிறது. பெண் என்ற உயிரி சமூகவயப்படுத்தப்பட்டு குடும்பம் என்ற நிறுவனத்தின் உற்பத்தி எந்திரமாக்கப்படும் உளவியலைத்தான் ஃப்ராய்ட் பேசுகிறார். இடிபஸ் சிக்கலின் அடிப்படையில் ஆணைப் போன்ற உடலைப் பெறாத ஏக்கம் கொண்ட மனித உயிரியாகப் பெண் உருவாவதாக ஃப்ராய்ட் வாதிடுகிறார்.
பெண்ணின் அடக்கப்பட்ட பாலியல் விருப்பம் குறித்து ஆய்வு செய்யாத ஃப்ராய்ட் அதனால் ஏற்படும் விளைவுகளை நோயாகப் பாவிக்கிறார். பாலியல் வெறுப்பு, இசிவு நோய் எனப்படும் ஹிஸ்டிரியா, மனப்பிறழ்வு போன்றவற்றால் பெண் பாதிக்கப்படுவதாக ஃப்ராய்ட் கூறுகிறார். இந்த உளவியல் ஆய்வு பெண்ணின் எந்த வகையான இயல்பைக் குறித்தும் பேசுவதாக இல்லை. பெண் ஓர் இருள் பிரதேசமாகவே இதுவரையிலான உளவியல் ஆய்வுகள் பாவிக்கின்றன.
கரன் ஹார்னி, மெலெய்ன் கிளைன், எர்னஸ்ட் ஜோன்ஸ் போன்றவர்கள் ஃப்ராய்டின் ஆய்வை ஏற்கவில்லை. அவர்களுக்குப் பின் வந்த உளவியல் ஆய்வாளர்கள் பெண் உளவியல் குறித்த மாறுபட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
லூச்இரிகரை
Thanks

Mubeen Sadhika

Saturday, April 29, 2023

வாழ்வின் வடிவமும் அரசியலும்-அகம்பென்

வாழ்வின் வடிவம் குறித்து கிரேக்கத்தில் இரு சொற்களில் விளக்கப்படுகிறது. ஒன்று எல்லா உயிரிகளின் நடைமுறை வாழ்தலைக் குறிப்பது. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட உயிரி அல்லது குழுவைச் சார்ந்தவர்களின் வாழ்தலைக் குறிப்பது. வாழ்வின் வடிவம் என அகம்பென் குறிப்பது வாழ்விலிருந்து எப்போதும் அதன் வடிவத்தைப் பிரிக்கவே முடியாது என்ற பொருளில் ஆகும்.

வாழ்வின் சாத்தியங்கள் என்பவை வாழ்தலுக்கான வழிமுறைகள், செயல்பாடுகள், நடைமுறைகள் போன்றவை ஆகும். எந்த ஒரு மனித வாழ்வும் உயிரியல் வழிமுறைகளின் படி இருக்கவேண்டும் என்றோ ஏதோ ஒரு தேவையை முன்வைத்தோ நடத்தப்படவேண்டும் என்பதில்லை. வாழ்தலின் சாத்தியங்கள் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாம். அதனால் வாழ்தலைப் பணயம் வைத்துத்தான் எந்த ஒரு மனித வாழ்வும் வாழ்தலுக்கான சாத்தியத்தைத் தேடுகிறது. மனித வாழ்வில் வெற்றியோ தோல்வியோ சாதனையோ வீழ்ச்சியோ மகிழ்ச்சி எப்போதும் பணயம் வைக்கப்படுகிறது. அதுதான் வாழ்வின் வடிவத்தை அரசியல் வடிவமாக மாற்றுகிறது.
அரசியல் அதிகாரம் வாழ்வின் வடிவத்தை உடுப்பற்ற வடிவமாக மாற்றி அமைக்கிறது. வாழ்தல் சட்டத்திற்குள் உள்வாங்கப்படுவது எங்கே என்றால் அது மரண அச்சுறுத்தலைத் தரும்போது மட்டுமே ஆகும். ஆனால் இறையாண்மை அதிகாரத்தின் முன் வாழ்தல் எப்போதும் மரண அச்சுறுத்தலைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் எல்லா மனிதர்களும் இந்த இறையாண்மை அதிகாரத்திடம் தங்கள் உயிரையும் மரணத்தையும் பணயம் வைத்திருக்கின்றன. அதனால்தான் மனித வாழ்வை உடுப்பற்ற வாழ்வாக இறையாண்மை அதிகாரம் கருதுகிறது. மார்க்ஸியம் உருவாக்கிய மனிதன், குடிமகன் என்ற பிளவு இப்போது உடுப்பற்ற வாழ்வு, பல்வேறு வடிவங்களாலான வாழ்வு என்று இடமாற்றப்பட்டுவிட்டது.
பல்வேறு வடிவங்களில் வாக்காளர், தொழிலாளர், பத்திரிகையாளர், மாணவர், எய்ட்ஸ் நோயாளி, மூன்றாம் பாலினத்தவர், மூத்தவர், பெற்றோர், பெண் என்று அது பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வடிவங்கள் அனைத்துமே உடுப்பற்ற வாழ்வைக் கொண்டவை. அந்த வடிவங்களைக் கொண்ட மனிதர்களை வெறும் உடல்களாக மட்டுமே இறையாண்மை அதிகாரம் கருதுகிறது. இப்படிப் பிரிப்பதால்தான் மனித வாழ்வின் மகிழ்வும் பிரிக்கப்படுகிறது என்பதை அகம்பென் வலியுறுத்துகிறார்.
அகம்பென்

Thanks Mubeen Sadhika 

ஜியோர்ஜியோ அகம்பென் இத்தாலிய தத்துவம் மற்றும் தீவிர அரசியல் கோட்பாட்டின் முன்னணி நபர்களில் ஒருவர், சமீபத்திய ஆண்டுகளில், ஆங்கிலோ-அமெரிக்க அறிவுசார் உலகில் பல துறைகளில் அவரது பணி சமகால புலமைப்பரிசில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1942 ஆம் ஆண்டில் ரோமில் பிறந்த அகம்பென், சிமோன் வௌயிலின் அரசியல் சிந்தனை குறித்த முனைவர் ஆய்வறிக்கையுடன் சட்டம் மற்றும் தத்துவத்தில் படிப்பை முடித்தார், மேலும் ஹெகல் மற்றும் ஹெராக்ளிட்டஸைப் பற்றிய மார்ட்டின் ஹைடெக்கரின் கருத்தரங்குகளில் ஒரு முதுகலை அறிஞராக பங்கேற்றார். மசெராட்டா, வெரோனா பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் கற்பித்த அவர், கோலேஜ் இன்டர்நேஷனல் டி பாரிஸில் நிகழ்ச்சிகளின் இயக்குநராக இருந்தார்  . அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகை பேராசிரியராக பணியாற்றிய அவர், நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தின் புதிய பள்ளியில் புகழ்பெற்ற பேராசிரியராக இருந்தார் .செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை அடுத்து அமெரிக்காவிற்குள் நுழையுமாறு அமெரிக்க குடிவரவுத் துறை கோரிய “உயிர் அரசியல் பச்சை குத்தலுக்கு” ​​அவர் சமர்ப்பிக்க மறுத்தபோது அவர் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

Wednesday, March 22, 2023

மதமும் உண்மையும்-ஜிஜெக்கின் விளக்கம்


எல்லா மதங்களின் அனுபவங்களும் நடைமுறைகளும் உண்மையையும் அர்த்தத்தையும் உள்ளிணைத்தவையாக உள்ளனவா என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் இறையியலாளர்களால் கடவுளோடு ஏன் சாத்தானும் அதே அளவு ஆற்றல் வாய்ந்த தன்மையுடன் இருக்கிறது என்பதற்கான கேள்விக்கு விடை காண முடியவில்லை. எங்கும் இருக்கும் கடவுளுடன் எந்தத் தீங்கும் இழைக்காத பல்லாயிரம் கோடி பேர் இன்னும் ஏன் இத்தனை துயருடன் இருக்கிறார்கள் என்பதற்கான பதிலை எந்த மதமும் தரவில்லை. அந்தக் கேள்விக்கு மூன்று வகையான விடைகள் தரப்படுகின்றன. 1.பாவத்தின் சம்பளம் மரணம் 2.அறவியல் சார்ந்த நடத்தை நெறிமுறை 3.இறுதி நீதி எனும் தெய்வீக மாயம்.
அதே போல் மற்ற இறையியலாளர்கள் மேலும் மூன்று பதில்களையும் தருகிறார்கள். 1.எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் என்றாலும் அதற்கும் எல்லை உண்டு 2.கடவுள் தனது ஆற்றலை வீணாகச் செலவழிப்பதை விரும்புவதில்லை 3.சாத்தானின் ஆற்றலுடன் கடவுள் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தச் சிக்கலான கேள்விக்கு பின்நவீனத்துவம் எளிமையான ஒரு பதிலை வைத்திருக்கிறது. ஆதிகாலத்து பாவத்தைக் கைவிடுதல் என்பதைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பதில் மனித அந்நியமாதலை உள்ளிணைத்ததாக உள்ளது. அறிவொளி சார்ந்தவர்கள் நல்லதையும் தீயதையும் பிரிக்கிறார்கள். ஒரே கடவுள் கொள்கையினர் தீயதை மனித விடுதலையுடன் இணைக்கிறார்கள். அறிவொளியின் கருத்தைக் கடவுளைக் குறித்த மனிதனுடைய அணுகுமுறையாகக் கொள்ளலாம். ஒற்றைக் கடவுள் கோட்பாட்டில் நல்லதும் தீயதும் இணைந்துவிடுகிறது.
மூன்றாவது வழியாக, துயருற்றிருக்கும் கடவுள் என்ற கோட்பாடு இதற்குப் பதிலாக இருக்கும். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் துயர் போன்ற துன்பத்தை அனுபவிக்கும் கடவுள் மனிதனுடைய துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறார் எனலாம். ஷெல்லிங் எழுதிய ஒரு கவிதை இதற்கு சான்றாகக் கொள்ளாலம்: ‘கடவுள்தான் வாழ்வு, அவர் வெறும் ஓர் உயிர் அல்ல. ஆனால் எல்லா வாழ்வும் விதியைக்கொண்டது. அத்துடன் துயருவதையும் உருவாவதையும் அனுபவிப்பது.’
எனவே துயருரும் கடவுள் இல்லாமல் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் கடவுள் வரலாற்றுடன் இணைந்திருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் துயருரும் கடவுள்தான் இப்போது மனித குலத்தைக் காப்பாற்ற முடியும். பல்லாயிரம் கோடி பேரின் துன்பம் கடவுளின் துன்பம் என ஏற்றுக்கொள்ளலாம். அதனால் அது தெய்வீகமானது.
ஸ்லோவாய் ஜிஜெக்

Mubeen Sadhika

Wednesday, March 15, 2023

பாலியல் உறவுகளும் மீகற்பனையும்(fantasy)-ஜிஜெக்கின்(Slavoj Zizek) விளக்கம்


சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டீஷ் தொலைக்காட்சியில் ஒரு பியர் விளம்பரம் வந்தது. அதில் ஒரு பெண் ஓர் ஓடை அருகே நடந்துகொண்டிருப்பாள். அங்கு ஒரு தவளையைப் பார்ப்பாள். அதை எடுத்து முத்தம் கொடுப்பாள். அது ஓர் அழகிய இளைஞனாக மாறிவிடும். ஆனால் கதை அங்கு முடியவில்லை. அந்த இளைஞன் அந்தப் பெண்ணை பெரும் மோகம் கொண்டு காண்பான். அவளை இழுத்து அணைத்து முத்தமிடுவான். அவள் ஒரு பியர் குப்பி ஆகிவிடுவாள். அதை அவன் தன் வெற்றியின் சின்னமாகக் கையில் வைத்திருப்பான்.
பெண்ணுக்குத் தன் அன்பும் அரவணைப்பும் ஒரு தவளையை ஆணாக்கின. ஆனால் ஓர் ஆணின் அன்பும் அரவணைப்பும் ஒரு பெண்ணை போதை வஸ்தாக்கிவிட்டன. வெறும் அவனுடைய விருப்பத்தின் பொருளாக மாற்றிவிட்டன. இந்த வேறுபாடு பாலியல் ரீதியிலான உறவு என்பதே இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒரு பெண் தவளையுடன் இருக்கலாம் அல்லது ஓர் ஆண் பியர் குப்பியுடன் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணும் ஆணும் இணைந்து இருப்பது சாத்தியமில்லை. அல்லது ஒரு தவளை ஒரு பியர் குப்பியை அணைப்பது கூட சாத்தியப்படலாம்.
இது மீகற்பனை என்பதன் மீதான கவனத்தைக் குவிக்கிறது. அதாவது பெண் தன் மீகற்பனையில் தவளையை ஆணாக எண்ணுகிறாள்; ஆண் பெண்ணை பியர் குப்பியாக எண்ணுகிறான். எனவே ஒவ்வொரு ஆண் அல்லது பெண் தன்னிலையும் தங்களது மீகற்பனைகளின் மூலமாக உருவாக்கப்படும் தன்னிலைகள் குறித்து எடுத்துச் சொல்வதாக படைப்பாக்கங்கள் உருவாக வேண்டியிருக்கின்றன.
இதன் மூலம் உண்மை மீகற்பனையால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றால் மீகற்பனை செப்பனிடப்படாத உண்மையிலிருந்து நம்மைக் காக்கிறது என்று பொருள். எனவே மீகற்பனை உண்மையின் பக்கம் இருக்கிறது. அதுதான் உண்மையை ஏற்கும்படியாகவும் செய்கிறது.
- ஸ்லாவாய் ஜிஜெக்,
தற்காலத்தின் மிக முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாளர்,
சமூக-அரசியல் விமர்சகர்.

 Thanks ;Mubeen Sadhika

Sunday, March 12, 2023

Philosophy of Absurdism by Albert Camus

 According to many, the most fundamental philosophical question is what existence means. This is a question that Albert Camus explored in his novels, plays, and essays. His view of life was called absurdism, which held that life had no inherent meaning and that the search for meaning was ultimately futile. Camus even went so far as to suggest that suicide might be the only logical response to this absurdity.

Camus dismissed religion as a source of meaning since it was based on an illusion, and even if God did exist, the amount of pain and suffering in the world made God either an imbecile or a psychopath. Finding Findingships with other people was also dismissed as absurd because everyone we know and love will eventually die, and many will suffer before they do.

Camus did not believe that embracing illusion, as Nietzsche suggested, was a solution to the problem. Instead, Camus believed we should openly acknowledge and embrace life's absurdity. He used the example of Sisyphus, who was condemned to push a boulder up a mountain only to have it roll back down, yet continued to do so for eternity.

While this may not seem like a solution to the problem, Camus believed we needed to confront the truth of life's absurdity and refuse to let it destroy us. He suggested that we "imagine Sisyphus happy," although it may not be comforting.

In conclusion, whether life is absurd is a fundamental philosophical problem, and Camus' view of absurdism suggests that life has no inherent meaning. However, his solution was to confront the truth of this absurdity and embrace it, rather than give in to despair or seek illusory solutions.'

Suicide

Camus unreservedly condemned, strictly criticized, and rejected suicide and existential leap because suicide is a total surrender to absurdity and a full confession that life is too much on the individual. His interest in existentialism is to explain the meaninglessness of life through his explication of the absurd, which is found in human existence, and which continues to torment man until the finality of his existence, which is death. The knowledge that life is absurd is already a step towards conquering the meaninglessness of life. For Camus, therefore, since the absurd has no meaning, man must hold himself apart from it and revolt against it. This is why he suggested philosophical suicide as a solution to reverse the absurdity of life. The question then is, since man believes in the absurdity of existence, then how and where should he direct his conduct? Does suicide solve this problem? The consequences of Camus’ submissions are enormous, but be that as it may, this work attempts a study of the absurdity inherent in human existence to answer the following questions: How far did Camus achieve the idea of the absurdity of life? How realistic is Camus’ attempt to analyze life as meaningless apart from the meaning we give to it? Did Camus actually succeed in his effort to show that life is absurd? Finally, what are the implications of Camus’ absurdity to philosophy and life? This work will adopt expository and analytic methodological approaches. Here we shall, with a detailed and deep reflective inquiry, expose the place of absurdity in Camus’ philosophy to fully understand his understanding of life.


Thursday, March 9, 2023

அறிவிலிருந்து உண்மைக்கும்…உண்மையிலிருந்து அறிவுக்கும்-ஜிஜெக்கின்(Slavoj Zizek) விளக்கம்..

 

அறிவுக்கும் உண்மைக்கும் இடையில் இயங்கியல் இறுக்கம் நிலவும் கோணத்திலிருந்து இதை அணுகலாம். உளவியல் ‘புறவயமான’ அறிவுக்கும் ‘அகவயமான’ உண்மைக்கும் இடையில் இருக்கும் முரண் களனில் வினைபுரிகிறது. உண்மையின் போர்வையில் ஒருவர் பொய் சொல்லலாம் (அதீத கருத்து வெறி உடையவர்கள் தங்களின் விருப்பத்தை மறைத்துக் கொண்டு இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்) ஒருவர் பொய்யின் போர்வையில் உண்மையைச் சொல்லலாம் (மனயிசிவு நடைமுறை அல்லது நாக்குழறி சில சமயங்களில் விருப்பம் வெளிப்பட்டுவிடும்).
இந்த உண்மையும் பொய்யும் அமைப்புக்குள் எப்படி எல்லாம் புதிய வடிவங்கள் எடுக்கின்றன என்பதுதான் இப்போதிருக்கும் விவாதம். இதில் மத ரீதியான கட்டமைப்புக்குள்ளிருந்துதான் பெரும்பாலும் உண்மையும் பொய்மையும் பேசப்படுகின்றன. குறிப்பாக, கிறித்துவ மதம் சார்ந்த நம்பிக்கை உண்மையையும் பொய்மையையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.
கிறித்துவத்திற்கு முந்தைய மதங்கள் ‘ஞானத்தை’ச் சொல்லும் தளத்தில் இயங்கின. காலத்தின் உண்மையை இறைப்பொருளின் மெய்மைக்கு விட்டுக் கொடுப்பதில் கவனம் செலுத்தின. ஆனால் கிறித்துவமோ ஏசுகிறிஸ்துவை காலந்தோறும் அழியாத தனிமனிதனாக வரையறுத்தது. உயிர்த்தெழுதல் அமரத்துவமான உண்மைக்குரிய பாதையாகும் என்றது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கிறித்தவம் தன்னை ‘அன்பின் மதம்’ என்று சொல்கிறது. ஆனால் அப்படியான அன்புக்குரியவர்களைத் தனிமைப்படுத்தி வைத்துப் பார்க்கிறது கிறித்துவம். ஏனெனில் அதில் மதமாற்றமும் பாவமன்னிப்பும் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. மதமாற்றம் காலங்களைக் கடந்த வினை, நித்தியத்தை மாற்றக் கூடியது.
அதே போல் கிறித்தவம் குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல் என்ற விதிவிலக்கை வைத்ததால் அது பாவமன்னிப்புக்கு சான்றளிக்கிறது. உண்மையையும் பொய்மையையும் ஒரே எடையில் வைத்துப் பார்க்க அது உதவுகிறது. மேலும் கிறித்துவம் இறைவனுக்கு வடிவத்தை, முகத்தைக் கொடுத்துப் பார்க்கிறது. எந்த ஒரு மனிதனும் அன்புடையவனாக, கருணை கொண்டவனாக தன் சுற்றத்தைப் பாதுகாப்பவனாக இருக்கிறான் என்றால் அவன் கடவுளின் வடிவம் என்கிறது. அதனால் மனித வரலாற்றில்தான் கடவுள் தன்னை அறியமுடியும். மனிதனின் வாழ்வில்தான் கடவுள் வாழமுடியும்.

தன்னிலையாக்கம் குறித்த விளக்கம்-ஜிஜெக்
உடல், மனம் பிளவுபட்டிருப்பதாகக் கருதும் கார்ட்டீசிய ஆவியைத் கல்விப்புலத்தினர் துரத்துகின்றனர். இன்றைய தத்துவக் கல்விப் புலத்தில் பீடித்திருக்கும் ஆவியான கார்ட்டீசியத்தை ஓட்டுவதைப் பெரும்பாலும் எல்லா ஆய்வாளர்களும் செய்துவருகிறார்கள். உடல், மனம் பிளவுபட்டிருப்பதாக ரெனே டெக்கார்ட் சொன்னதை இப்போது யாரும் ஏற்கத் தயாராக இல்லை. அதில் உருவான சுயம் என்பது குறித்த விளக்கத்தைத் தர பலரும் பல தத்துவங்களை உருவாக்கிக் கொண்டே போகிறார்கள்.
ஆனால் எல்லோரும் கார்ட்டீசிய தன்னிலைதான் இதுவரை உருவாக்கப்பட்ட தன்னிலை குறித்த விளக்கங்களிலேயே அதிக ஆற்றல் வாய்ந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
அவர்கள் எல்லோரும் கார்ட்டீசிய தன்னிலைக்கு எதிரான விளக்கங்களை உருவாக்க முனைகிறார்கள். அவற்றை இப்போதாவது தெளிவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஊடுருவும் சுயம் என்ற விளக்கத்தை அடைவதற்கு கார்ட்டீசிய தன்னிலை உதவாது. அதற்கு மூன்று வகையான விளக்கங்கள் தேவைப்படுகின்றன. ஜெர்மன் கருத்தியல்வாதம், அல்தூஸரிய அரசியல் தத்துவம், பன்மைத்துவ தன்னிலைகளைக் கூறும் கட்டுடைக்கும் தத்துவம் ஆகிய மூன்று வகையான சிந்தனைகளினூடாக தன்னிலைக் குறித்த விளக்கம் அறியப்படவேண்டியிருக்கிறது.
முதலாவது சுயத்திற்குள் இருக்கும் பித்துநிலையை மீண்டும் சாதாரண நிலைக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சியாக இருந்தது. அது நனவிலியைத் தன்னிலைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளும் கருத்தாக உருவானது. அடுத்தது இன்றைய சர்வதேச முதலாளித்துவச் சூழலில் அரசியலாக்கப்பட்டத் தன்னிலைதான் சரியான விளக்கமாகக் கொள்ளப்படுகிறது. மூன்றாவது பன்முகத் தன்மைக் கொண்ட தன்னிலைதான் பின்நவீனத்துவ அரசியல் முகத்தைக் காட்டும் என்ற விளக்கத்தைத் தருகிறது.
- ஸ்லாவாய் ஜிஜெக்,
தற்காலத்தின் மிக முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாளர்,
சமூக-அரசியல் விமர்சகர்.
Thanks

Mubeen Sadhika

Thursday, February 23, 2023

குற்றமும் தண்டனையும் குறித்து ஜுடித் பட்லர் விளக்கியது

 ஒருவர் மற்றவருக்கு ஒரு தண்டனையைக் கொடுக்கும் போது உளவியல் அறம் சார்ந்த ‘பொறுப்பு’ ஏற்படுகிறது. அதில் தண்டனைக் கொடுப்பவர் கொள்ளும் இன்பம் குற்றத்திற்கு நிகரானதாகக் கொள்ளப்படுகிறது. குற்றம் இழைத்தவர் ஒரு விதியை மீறிவிட்டார் அல்லது சொன்ன சொல் தவறிவிட்டார் என்பதற்காக நிகழ்த்திய வினையாக மட்டும் தண்டனை இருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்.

தண்டனைக் கொடுத்து அதன் மூலம் குற்றம் இழைத்தவர் படும்பாட்டைத் தனது இன்பமாக தண்டனைக் கொடுப்பவர் அனுபவிப்பது அறமாகக் கருதப்படுவதற்கான காரணம் என்ன என ஆராயவேண்டும். குற்றம் இழைத்தவரின் குற்றத்திற்கு நிகரான தண்டனைக் கொடுப்பதாக மட்டும் சமாதானப்படுத்திக் கொண்டுவிடுவதற்கான அடிப்படை உளவியல் காரணிகள் என்ன என்பதை அறியவேண்டும்.
இதில் குற்றம் இழைத்தவர் ஒரு குறிப்பிட்ட உடன்படிக்கையில் இருக்கிறார். எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண்-பெண் இருவரும் மீறக்கூடாத விதி இருக்கிறது. அதை யார் ஒருவர் மீறும் போதும் அடுத்தவர் உடனே தண்டனையைப் பிரயோகிக்க நினைக்கிறார். இப்படிப்பட்ட உடன்படிக்கை மீறலுக்கு உளப்பூர்வமான அறம் குறித்த சிந்தனை தண்டனை கொடுக்கும் நிலைக்கு ஒருவரைத் தள்ளுகிறது.
இரு பால் உறவு என்ற நிறுவனத்தில் இருக்கும் விதிகளில் குற்றமும் தண்டனையும் கொண்டிருக்கும் உடன்படிக்கையும் மீறலும் பெரும்பாலும் உடல் சார்ந்ததாக இருக்கிறது. இரு பால் நிறுவனமய உறவுகள் சிக்கலில்லாமல் இயங்க இந்த உடன்படிக்கை உளப்பூர்வமாக உள்வாங்கப்பட்டிருக்கிறது.
அதனால் உடல் சார்ந்த மீறல்களுக்குத் தண்டனைகள் வழங்குவது அறத்தின் பாற்பட்ட நடவடிக்கையாகக் கொள்ளப்படுகிறது. குற்றத்தை வழங்கியவர் அதற்கான இன்பத்தை அனுபவிக்கும் அறத்தைக் கைக்கொள்கிறார். குற்றம் இழைத்தவர் உடன்படிக்கை மீறலுக்கான குற்ற உணர்வைக் கொள்கிறார். ஆன்ம சுத்தி என்பதுதான் அதன் அடிப்படை அம்சம்.
இந்த இடத்தில் ‘நான்’ என்ற சுயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய ஆன்ம சுத்தியுடன் இருக்கவேண்டும் என்ற உடன்படிக்கையை இரு பால் உறவின் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும். அது கடமை உணர்வாக மறுபெயரிடப்பட்டிருக்கிறது. கடமையை மீறுபவர்கள் சுயத்தின் மதிப்பை இழந்தவர்களாகிறார்கள். அவர்கள் மீது தண்டனை பிரயோகம் செய்வது அறமாகிறது. எனவே உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல் அறத்தை மீறுபவர்களைத் தண்டிப்பதுதான் எல்லோருடைய சுயத்திலும் உள்வாங்கப்பட்ட திறமாக உள்ளது.
ஜுடித் பட்லர் தன் கோட்பாடுகள் குறித்து…
என் கோட்பாடுகள் அரசியல் புனைவு வகைமையைச் சார்ந்தவை அல்ல. உடல் சார்ந்த வாழ்வு குறித்தப் புரிதல்களை, சாத்தியங்களை மேம்படுத்த உருவாக்கப்பட்டவைதான் என் கோட்பாடுகள். பெண்ணியத்தில் தத்துவரீதியாகவும் உள்ளடக்க ரீதியாகவும் உடல் குறித்துச் சொல்லவேண்டிய அம்சங்கள் பெரும் சிக்கலில் உள்ளதாக நான் கருதியதால் இத்தகைய சிந்தனையை அடைந்தேன்.
சில உடல்கள் தவிர்க்கப்பட வேண்டியவையாகவும் சில உடல்களுக்கான அங்கீகாரம் தரப்படக்கூடாது எனவும் பாரபட்சம் காட்டப்பட்டதால் உடல்களின் அடிப்படை குறித்து ஆராயத் தலைப்பட்டேன். என் கோட்பாடுகள் எல்லாம் அவற்றுக்கான மருந்தோ, உத்தியோ, கற்பனையோ அல்ல. என் சிந்தனை வழியில் உடல்களைச் சமமாகப் பாவித்தலுக்கான தீர்வு குறித்த ஆலோசனை மட்டுமே நான் வழங்கியிருக்கிறேன்.
அதன் மூலம் உடல் மீதான அதிகாரத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.
நாம் யார் என்ற கேள்வியின் பதிலாகத்தான் நாம் கட்டமைக்கப்படுகிறோம். பண்பாடு, சமூகம், இன்னபிற அம்சங்கள் உருவாக்கி வைத்திருப்பதை எதிரொலிப்பதாக ஏன் உடல்கள் மாறிப் போயின என்பதிலிருந்து இதற்கான விடையைத் தேடலாம்.
ஏனெனில் மொழிக்குள் பண்பாட்டுக்குள் சமூகத்திற்குள் செயல்படும் அதிகாரத்தின் விளைவாக நம் சிந்தனை வெளிப்படுகிறது.
இதில் வரையறுத்தல், அடையாளப்படுத்துதல், இனங்காட்டுதல்தான் நம்மைப் பற்றிய நம் தன்னிலை பற்றிய மற்றமையாக உள்ளது. அதனைப் புரிந்துகொள்வதற்கான அம்சங்களை நோக்கிப் போவதன் மூலம் உடல்களின் சிக்கல்களைத் தெளிவாக்கிக் கொள்ளலாம். அதனால் பாலினச் சிக்கலைத் தவிர்க்கலாம்.
ஜுடித்பட்லர்
Thanks

Mubeen Sadhika