Search This Blog

Thursday, December 25, 2014

ஷம்பலா உலகத்தின் அச்சு

விக்டோரியா லேபெஜ் ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஷம்பலாவை பற்றி ஆய்வு செய்தற் தனது ஆய்வு புத்தகத்தில் கூறுகிறார். துணிவற்ற நவீன சமுகத்திற்கு இந்த மண்டலத்தினுடைய ஆணை தேவை எனவும் மண்டலா(பிரபஞ்சத்தின் ஒரு வரைபட அமைப்பு ) ஒழுங்கற்ற சுருள் போன்ற பிரபஞ்சத்தின் மையம் என கூறும் அவர் மேலும் ,இந்த மையத்தினை தேடி தொடர்வது மூலம் ஷம்பலாவினை அடையலாம். மேலும் ஷம்பலா உலகத்தின் அச்சு என கூறும் இந்த ஆய்வாளர் .இங்கே நாம் அறிய முடியாத அளவில் பல ரகசியங்கள் நிறைந்து இருக்கலாம் என கூறுகிறார். அருங்காட்சியகம் நூலகம் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு பிந்தைய தொழில் நுட்பம், மேலும் சீனர்களின் அறிவிதிறன்படி பிரபஞ்ச கோள்களுக்கு பயணம் செய்ய புதிய வாகனங்கள் ,மற்றும் பிற கிரஹங்களில் வசிப்பவர்களை கண்டறிய உதவும் புதிய வசதிமிக்க தொழில் நுட்பங்கள் இருக்குமென்று கூறுகிறார் . இவைகள் வெறும் ஒரு மதம் சார்ந்த கற்பனை என நாம் புறந்தள்ளி விடலாம் .ஆனால் புதிய நிலம் மற்றும் நாடுகளை கண்டறியும் ஒருவர் பற்றி தன் அனுபவங்களை முன் வைக்கிறார் .
ரஷியாவை சேர்ந்த நிக்கோலஸ் ரோறிச் இவர் பன்முகம் கொண்ட ஒரு மனிதர் நடிகர் கவிஞர் மேலும் தியோசொபிகல் சமுகத்தின் முக்கிய அங்கத்தினரும் கூட
1923 முதல் 1928 வரை இவர்கள் 15500 மைல்கள் 35 நாடுகளின் உயர்ந்த மலை பகுதிகளை கடந்தார்கள் கோபி பாலைவனம் முதல் அட்லாய் மலை வரை 1924 ஆன் ஆண்டு இந்திய மலை பயணங்களை ரோறிச் தன் குழுவினருடன் மேற்கொண்டார்.ரோறிச் தனது பயணத்தின் போது ஷம்பலாவை பற்றி அறிய நேர்ந்தது.

தனது பயணத்தின் போது ரோறிச் ஷம்பலாவை பற்றிய தனது எண்ணங்களை குறித்து வைத்து கொண்டார் பின்னலில் மிக பிரசித்தி பெற்ற நூலாக விளங்கியது அவருடைய குறிப்புகள் அதன் பெயர் altai-himalaya:a travelors guide
ரோறிச் இந்த புத்தகத்தில் ஒரு வினோத சம்பவத்தை விவரிக்கிறார். ரோறிச் தனது பயணத்தை அல்டாய் பயணத்தை முடித்து கொண்டு திரும்பிய பின் ஒரு வெள்ளை தூண் ஒன்றினை நிறுவி அத்தனை ஷ்மபலாவிற்கு அர்ப்பணம் செய்கிறார்.ஆகஸ்ட் மாதம் வெள்ளை தூண் ஷம்பலாவிற்கு அற்பணிக்கபடும் புனித சடங்குகளை செய்ய குறிப்பிட தக்க எண்ணிகையிலான லாமா துறவிகள் கலந்து கொள்கின்றனர் ஒரு மங்கோலிய குழுவின் தலைவர் வர இருக்கும் நாளில் இது குறித்து நல்ல செய்தி அல்லது சூசகமான தகவல் கிடைக்கும் என கூறுகிறார். அவர் கூறிய ஒரு அல்லது இரண்டு நாட்களுக்குள் ஒரு பெரும் கருப்பு பறவை ஸ்தூபிக்கு மேலாக பறந்து அம்பினை போல சூரியனை நோக்கி பாய்ந்து தங்கமென மின்னி எல்லோர் பார்வையும் அதன் மீது இருக்கும் போது சட்டேனே பார்வையில் இருந்து தப்பிய பறவையினை தொலைநோக்கி மூலம் கண்டபோது அட்லாயின் திசையிலுருந்து தென்மேற்கு பக்கமாக பறந்து ஹம்போல்ட் மலையின் பின்புறமாக சென்று மறைந்தது அதாவது ஷம்பலா திசையில் ,இது குறித்த ரோரிசிடம் லாமா ஒருவர் ஷம்பலாவின் கடவுளின் ஆசிர்வாதம் என கூறினார். மேலும் ஒரு ஆச்சர்யமான விஷயம் நமது மஹா விஷ்ணுவின் அவதாரமான கல்க்கி தீமைகளை அழித்து பின் ஷாம்பலில் அரசாள்வர் என கூறப்படுகிறது ஷம்பலா இன்னும் ஏரளாமான ஆச்சர்யங்களை கொண்டு உள்ளது .ஷம்பலாவின் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் என திபெத்தில் பதினான்கு வருடங்கள் ஆய்வு பணி புரிந்த டேவிட் ஒ நில் எனும் பெண் கூறுகிறார் இமயமலை சாரலில் தான் கண்ட அந்த மனிதன் அமைதி தவழும் முகத்துடனும் வானுக்குள் அப்பாலுள்ள பொருள்களை காண்பனை போல கூறிய விழிகளுடன் காணப்பட்டதாகவும் அவனுடைய நடை பாய்ச்சல் போல அதே சமயம் பூமியில் கால் வைக்காமல் பறந்து செல்லும் ஒருவனை போல பெண்டுலம் அசைவதை போல சீரான இடைவெளியில் நடந்து சென்றதாக கூறுகிறார்.பல ஆச்சர்யங்களை கொண்ட ஷம்பலவை இன்னும் தேடி கொண்டே இருக்கின்றனர் .

No comments:

Post a Comment