Search This Blog

Thursday, February 16, 2012

படித்ததில் பிடித்தது.


 
Join Only-for-tamil
சந்தன மலரிதழ் சிந்திய தேன்தனில்
செண்பகம் குளித்து வந்தாள்
சாமரம் வீசிய பூமரம் பேசிய
சங்கதி விழியில் சொன்னாள்
குங்கும நுதல்தனில் சங்கமம் ஆகிட
குறுநகை பூத்து நின்றாள்
கொடியினை எடுத்தொரு இடையென கொண்டவள்
குளிர்தரும் நிலவை வென்றாள்

Join Only-for-tamil

திங்களும் தென்றலும் திருடிய மனதினை
தேவதை திருடிச் சென்றாள்
தீண்டலில் உயிர் வரை சீண்டிடும் காற்றென
தேகியை வருடிச் சென்றாள்
மன்மதன் அம்பினை புருவமாய் கொண்டவள்
மனதினை துளைத்து விட்டாள்
மலரணை மீதினில் புதுக்கவி புனைந்திட
மாதெனை அழைத்து விட்டாள்

Join Only-for-tamil

இருபதை தாண்டிய இளமையின் தவமதை
இளையவள் களைத்து விட்டாள்
அறுபதை தாண்டினும் அடங்கிட மறுத்திடும்
ஆசையை விதைத்து விட்டாள்
திருமணம் எனுமொரு மருத்துவம் மாத்திரம்
தீர்த்திடும் நோயை தந்தாள்
கருமங்கள் யாவுமே முடிவதற்குள்ளே
கண்களை விட்டுச் சென்றாள்
 Join Only-for-tamil

நன்றியுடன்
செல்வராஜ்

No comments:

Post a Comment