Search This Blog

Monday, August 1, 2011

குறுங்கவிதைகள்!


முரண்
ஆசிரியரின் பாடம்
ஆறுவது சினமாம்
அடியோ மாணவனுக்கு

திருப்தி
ரோஜாவில் முள்ளா?
இல்லை! இல்லை!
முள்ளில் தானே ரோஜா!

விளைவு

கால்களும் சோர்ந்தன
கைகளும் சோர்ந்தன
அடக் கூலியுமா?

வேதனை

அன்னதானம் பற்றி
அரைமணி நேரம் பேச்சு
தலைவரோ கஞ்சம்!

எப்போது விடிவு?
வானில் நிலா
பூமியில் வெளிச்சம்
குடிசைக்குள் இருட்டு!
-முனைவர். மா.  தியாகராஜன்சிங்கப்பூர்.

No comments:

Post a Comment