Search This Blog

Tuesday, September 29, 2020

Language can also be present in the absence of sound, What happens to the electric waves in our brain

 What happens to the electric waves in our brain when we generate a linguistic expression without emitting any sound?

Language can also be present in the absence of sound, when we read or when we use words while thinking.
"The very fact that the majority of human communication takes place via waves may not be a casual fact; after all, waves constitute the purest system of communication since they transfer information from one entity to the other without changing the structure or the composition of the two entities. They travel through us and leave us intact, but they allow us to interpret the message borne by their momentary vibrations, provided that we have the key to decode it. It is not at all accidental that the term information is derived from the Latin root forma (shape): To inform is to share a shape.
In his “Philosophical Investigations,” Ludwig Wittgenstein asked: “Is it conceivable that people should never speak an audible language, but should nevertheless talk to themselves inwardly, in the imagination?” "

Electrodes on the brain have been used to translate brainwaves into words spoken by a computer – which could be useful in the future to help people who have lost the ability to speak.

When you speak, your brain sends signals from the motor cortex to the muscles in your jaw, lips and larynx to coordinate their movement and produce a sound.

“The brain translates the thoughts of what you want to say into movements of the vocal tract, and that’s what we’re trying to decode,” says Edward Chang at the University of California San Francisco (UCSF). He and his colleagues created a two-step process to decode those thoughts using an array of electrodes surgically placed onto the part of the brain that controls movement, and a computer simulation of a vocal tract to reproduce the sounds of speech.

Cecile G. Tamura


Read more: https://www.newscientist.com/article/2200683-mind-reading-device-uses-ai-to-turn-brainwaves-into-audible-speech/#ixzz6ZP8kSBlo

Sunday, September 27, 2020

COVID-19 (coronavirus) and Herd immunity

 

How Do We Become Immune?

When germs enter your body, your immune system springs into action. Here's how it works:

  • Bacteria and viruses like the one that causes COVID-19 have proteins called antigens on their surfaces. Each type of germ has its own unique antigen.
  • White blood cells of your immune system make proteins called antibodies to fight the antigen. Antibodies attach to antigens the way a key fits into a lock, and they destroy the invading germ.
  • Once you've been exposed to a virus, your body makes memory cells. If you're exposed to that same virus again, these cells recognize it. They tell your immune system to make antibodies against it.

Vaccines work in much the same way. They expose your body to an antigen that trains your immune system to fight that germ in the future. Because vaccines contain weakened or killed versions of viruses, you become immune without getting sick.

Why is herd immunity important?

Herd immunity occurs when a large portion of a community (the herd) becomes immune to a disease, making the spread of disease from person to person unlikely. As a result, the whole community becomes protected — not just those who are immune.

 

Often, a percentage of the population must be capable of getting a disease in order for it to spread. This is called a threshold proportion. If the proportion of the population that is immune to the disease is greater than this threshold, the spread of the disease will decline. This is known as the herd immunity threshold.

 

What percentage of a community needs to be immune in order to achieve herd immunity? It varies from disease to disease. The more contagious a disease is, the greater the proportion of the population that needs to be immune to the disease to stop its spread. For example, the measles is a highly contagious illness. It's estimated that 94% of the population must be immune to interrupt the chain of transmission.

 

How is herd immunity achieved?

There are two paths to herd immunity for COVID-19 — vaccines and infection.

 

Vaccines

A vaccine for the virus that causes COVID-19 would be an ideal approach to achieving herd immunity. Vaccines create immunity without causing illness or resulting complications. Herd immunity makes it possible to protect the population from a disease, including those who can't be vaccinated, such as newborns or those who have compromised immune systems. Using the concept of herd immunity, vaccines have successfully controlled deadly contagious diseases such as smallpox, polio, diphtheria, rubella and many others.

 

Reaching herd immunity through vaccination sometimes has drawbacks, though. Protection from some vaccines can wane over time, requiring revaccination. Sometimes people don't get all of the shots that they need to be completely protected from a disease.

 

In addition, some people may object to vaccines because of religious objections, fears about the possible risks or skepticism about the benefits. People who object to vaccines often live in the same neighborhoods or attend the same religious services or schools. If the proportion of vaccinated people in a community falls below the herd immunity threshold, exposure to a contagious disease could result in the disease quickly spreading. Measles has recently resurged in several parts of the world with relatively low vaccination rates, including the United States. Opposition to vaccines can pose a real challenge to herd immunity.

 

Natural infection

Herd immunity can also be reached when a sufficient number of people in the population have recovered from a disease and have developed antibodies against future infection. For example, those who survived the 1918 flu (influenza) pandemic were later immune to infection with the H1N1 flu, a subtype of influenza A. During the 2009-10 flu season, H1N1 caused the respiratory infection in humans that was commonly referred to as swine flu.

 

However, there are some major problems with relying on community infection to create herd immunity to the virus that causes COVID-19. First, it isn't yet clear if infection with the COVID-19 virus makes a person immune to future infection.

 

Research suggests that after infection with some coronaviruses, reinfection with the same virus — though usually mild and only happening in a fraction of people — is possible after a period of months or years. Further research is needed to determine the protective effect of antibodies to the virus in those who have been infected.

 

Even if infection with the COVID-19 virus creates long-lasting immunity, a large number of people would have to become infected to reach the herd immunity threshold. Experts estimate that in the U.S., 70% of the population — more than 200 million people — would have to recover from COVID-19 to halt the epidemic. If many people become sick with COVID-19 at once, the health care system could quickly become overwhelmed. This amount of infection could also lead to serious complications and millions of deaths, especially among older people and those who have chronic conditions.

 

How can you slow the transmission of COVID-19?

Until a COVID-19 vaccine is developed, it's crucial to slow the spread of the COVID-19 virus and protect individuals at increased risk of severe illness, including older adults and people of any age with underlying health conditions. To reduce the risk of infection:

 

Avoid large events and mass gatherings.

Avoid close contact (within about 6 feet, or 2 meters) with anyone who is sick or has symptoms.

Stay home as much as possible and keep distance between yourself and others (within about 6 feet, or 2 meters) if COVID-19 is spreading in your community, especially if you have a higher risk of serious illness. Keep in mind some people may have the COVID-19 virus and spread it to others, even if they don't have symptoms or don't know they have COVID-19.

Wash your hands often with soap and water for at least 20 seconds, or use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol.

Wear a cloth face covering in public spaces, such as the grocery store, where it's difficult to avoid close contact with others, especially if you're in an area with ongoing community spread. Only use nonmedical cloth masks — surgical masks and N95 respirators should be reserved for health care providers.

Cover your mouth and nose with your elbow or a tissue when you cough or sneeze. Throw away the used tissue.

Avoid touching your eyes, nose and mouth.

Avoid sharing dishes, glasses, bedding and other household items if you're sick.

Clean and disinfect high-touch surfaces, such as doorknobs, light switches, electronics and counters, daily.

Stay home from work, school and public areas if you're sick, unless you're going to get medical care. Avoid public transportation, taxis and ride-sharing if you're sick.

Thanks https://www.mayoclinic.org/,https://www.webmd.com/

Could Herd Immunity Protect Us?

Herd immunity happens when a large part of the population -- the herd -- is immune to a virus. This can happen either because these people got vaccinated or had already been infected. Herd immunity makes it harder for a virus to spread. So even those who haven't been sick or vaccinated have some protection.

The more contagious a virus is, the more people need to be immune for herd immunity to kick in. The SARS-CoV-2 virus is so contagious that experts estimate about 70% of people in a community will need to be immune to have herd protection. That number might be hard to get to without a vaccine or a whole lot of people getting sick.



If You've Had COVID-19, Are You Immune?

Health experts don't know whether we really become immune to COVID-19 after we're infected. And if we do have immunity, we don't know how long it might last. Thus far, there have been only a few incidents of confirmed re-infections. With two cases, it appears the patients were re-infected by the same strain, while the third was infected with a slightly different strain of the virus.

Monday, September 21, 2020

Euler’s identity "The most beautiful equation."

 Euler’s identity is an equality found in mathematics that has been compared to a Shakespearean sonnet and described as "the most beautiful equation." It is a special case of a foundational equation in complex arithmetic called Euler’s Formula, which the late great physicist Richard Feynman called in his lectures "our jewel" and "the most remarkable formula in mathematics."


The equation combines five of the most important numbers in mathematics. These are:
1 – the basis of all other numbers
0 – the concept of nothingness
pi – the number that defines a circle
e – the number that underlies exponential growth
i – the "imaginary" square root of -1
The numbers all have many practical applications, including communication, navigation, energy, manufacturing, finance, meteorology and medicine.
But that's not all. Euler's identity also contains the three most basic mathematical operations: addition, multiplication and exponentiation.
Thanks

Cecile G. Tamura

கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்

 


1950-கள் தொடங்கி 1980-கள் வரையிலான காலப் பகுதியில் திரையிசைப் பிரியர்களின் இதயங்களில் கொள்ளை கொண்ட பல பாடல்களை எழுதியவர், இலக்கிய எழுத்தாளர்.
குறைந்த அளவில் பாடல்கள் புனைந்தாலும் ரசிகர்கள் மனதில் நிறைந்த அளவில் முத்திரை பதித்த கவிஞர் இவர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள வேளுக்குடி கிராமத்தில் 1920-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி பிறந்தவர் கு.மா.பாலசுப்பிரமணியம். தந்தையார் குறிச்சி மாரிமுத்து. இவரது 4 வயதிலேயே தந்தை காலமாகிவிட்டதால் 6-ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடரமுடியவில்லை. தாயார் தமிழ், இலக்கிய ஆர்வலராக இருந்தபடியால் தாயாரிடமே தமிழும், ஆன்மீகமும் கற்றுக்கொண்டார்.
தனது 16-ஆவது வயதிலேயே சிறு கதைகளைத் தமிழ் வார மஞ்சரியில் எழுதிவந்தார். இவரது தமிழ் ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட சென்னைத் தமிழ் ஆசிரியர் ஒருவர் இவருக்குத் தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். பிரபல தமிழ்ப் பத்திரிகைகளான தமிழ் முரசு, தமிழ்க்குரல் போன்றவற்றில் வெளிவந்த இவரது கட்டுரைகளைப் பார்த்த அறிஞர் அண்ணாவின் பாராட்டை இவர் பெற்றார்.. 1945 இல் கோழும்பில் இருந்து வெளிவந்த வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக இணைந்தார்.
1951-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் சொந்தத் தயாரிப்பான ‘ஓர் இரவு’ பாடல் சந்தர்ப்பம் இவருக்குக் கிடைத்தது. பெண்ணினத்தின் துன்பம் வெளிப்படுத்தும் வகையில் ’பெண்ணாக பிறந்தாலே வாழ்வில் எந்நாளும் துயர் தானோ’ என்ற பாடல் எழுதினார். 1952-இல் ஆர்.சுதர்சனத்தின் இசையில் ‘வேலைக்காரன்’ படத்தில் 5 பாடல்கள் எழுதினார். ’ஆனந்தமே ஆஹா ஆனந்தமே அறியாமல் மனதில் பொங்கும் ஆனந்தமே’ என்ற பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலில் ஒலித்தது.
1953-இல் ஜி.ராமனாதனின் இசையில் ’இன்ஸ்பெக்டர்’ திரைப்படத்திற்காக எழுதினார், ‘மூடியிருந்த விழியில் வந்த மோகனக் கண்ணன் விளையாடினான் என்ற பாடல். 1954-இல் ‘ரத்த பாசம்’, 1955-இல் ‘செல்லப்பிள்ளை’க்காக 4 பாடல்கள் எழுதினார். ‘காவியக் காதல் வாழும் ஓவியம் நானே’ பாடல் சுதர்சனத்தின் இசையில் ஒலித்தது. ஜிக்கியின் குரலில் ’மதனா எழில் ராஜா நீ வாராயோ’ மிகப் பிரபலமான பாடல். இப்போதும் இலங்கை வானொலியில் கேட்கலாம். இப்பாடலில் பாடலின் இடையே கே.ஆர்.ராமசாமி, கே.சாவித்திரி, டி..எஸ்.பாலையா ஆகியோரின் குரல்களும் ஒலிப்பது சிறப்பு. இதே ஆண்டில் ‘கோமதியின் காதலன்’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’, இந்தியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட ’சாம்ராட்’ என்ற 3 படங்களில் பாடல்களை எழுதினார். பிற மொழிகளிலிருந்து தழுவி எடுக்கப்படும் படங்களுக்குப் பாடல்கள் எழுதுவது மிகவும் சிரமம். ‘இன்பக் கண்ணாளன் உனை நான் காணவில்லை, எந்தன் கண்ணோடு இமையே மூடவில்லை’ என்ற பாடலை அப்படத்திற்காக எழுதினார். இந்தியில் ஹேமந்த்குமார் இசையமைத்த அதே மெட்டில் அதே உச்சரிப்பை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகள் அமையவேண்டும். அதே வேளையில் பொருளும் விளங்கும் வகையில் இருக்கவேண்டும். கு.மா.பா. மிக அழகாக பாடல் வரிகளைத் தந்திருக்கிறார். அதற்கு உதாரணம் லக்ஷ்மி சங்கர் பாடிய ’நிலா வானிலே மேகமாய்’.
1951-இல் அறிமுகமான பிரபல பாடகி பி.சுசீலாவிற்கு 1955-இல் மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த பாடல் ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக் கண் தேடுதே’. 1955-இல் வெளிவந்த இப்படத்தில் அடப்பள்ளி ராமராவின் இசையில் அந்தப் பாடலை இயற்றியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் காந்தம்போல் கவர்ந்திழுத்த பாடல்கள் இது.
1957-இல் 3 படங்கள். ‘அம்பிகாபதி’,’சக்கரவர்த்தித் திருமகள்’, ‘தங்கமலை ரகசியம்’. அம்பிகாபதியில் ரி.எம்.சௌந்தரராஜன், பி.பானுமதி பாடிய ‘மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே’ என்ற பாடலை அழகு தமிழ் கொஞ்சி விளையாட எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். எஸ்.ராமனாதன் வித்தியாசமான முறையில் அக்காதல் கீதத்தை முஹாரி ராகத்தில் இசை வடிவம் கொடுத்திருந்தார். ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் ‘காதல் என்னும் சோலையிலே ராதே ராதே’, ’எல்லையில்லா இன்பத்திலே’ பாடல்கள். 1958-இல் ‘சபாஷ் மீனா’, ‘உத்தம புத்திரன்’, ‘பூலோக ரம்பை’, ‘எங்கள் குடும்பம் பெரிசு’ என்ற படங்கள். ‘சபாஷ் மீனாவில் 3 பாடல்கள். ‘சித்திரம் பேசுதடி’, ’ஆணாக பிறந்ததெல்லாம்’ , ‘அலங்கார வல்லியே அல்லியே’ பாடல்கள் நேயர் நெஞ்சங்களில் சுவடுகள் பதித்த பாடல்கள்.
1959-இல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக ஜி.ராமனாதன் இசையில் பதினொரு பாடல்கள் எழுதினார் கு.மா.பாலசுப்பிரமணியம். அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதே ஆண்டில் மேலும் ஆறு படங்களுக்குப் பாடல்கள் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு. அவை ‘கல்யாணிக்குக் கல்யாணம்’, ‘நல்ல தீர்ப்பு’, ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, ’புதுமைப் பெண்’, ‘யானை வளர்த்த வானம்பாடி’, ‘மரகதம்’ ஆகிய படங்களில் இவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘மரகதம்’ படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடிய ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே. பாடல் ‘சபாஷ் மீனா’ படத்திற்காக கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதினார். ஆனால் அந்தப் பாடல் அப்படத்தில் இடம்பெறாமல் போனதால் சந்திரபாபு அப்பாடலை ‘மரகதம்’ படத்திற்கு சிபாரிசு செய்து அதில் பாடி நடித்தார்.
1960-இல் எட்டுப் படங்களில் அவரது பாடல்கள் இடம் பிடித்தன. அவை சவுக்கடி சந்திரகாந்தா, ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’, ’கடவுளின் குழந்தை’, ‘களத்தூர் கண்ணம்மா’ , ‘குழந்தைகள் கண்ட குடியரசு’, ’பெற்றவள் கண்ட பெரு வாழ்வு’, ‘சங்கிலித் தேவன்’ , ‘விடி வெள்ளி’ ஆகியன. 1961-ஆம் ஆண்டு அரசிளங்குமரி’, ’கானல் நீர்’ , ’திருடாதே’ படங்களில் ஒவ்வொரு பாடல்கள் எழுதினார். 1962-இல் ’தெய்வத்தின் தெய்வம்’, ‘கொஞ்சும் சலங்கை’ , ‘பட்டினத்தார்’ என 3 படங்களில் அவரது பாடல்கள் இடம்பிடித்தன. எஸ்.ஜானகிக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்த ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம்.
புகழ் பெற்ற பாடல்களைப் பாடியவர்கள் பிரபலமடையும் அதே நேரம் பாடலுக்கு முகம் கொடுத்தவர்களை எவரும் கண்டுகொள்வதில்லையென்பது வருத்தப்பட வேண்டிய ஒரு விடையம்.
1963-இல் ‘சித்தூர் ராணி பத்மினி’, ‘நானும் ஒரு பெண்’ ஆகிய படங்கள். நானும் ஒரு பெண் படத்தில் ‘ஏமாறச் சொன்னது நானோ என் மீது கோபம் தானோ’ பாடலை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். 1964-இல் ‘சித்திராங்கி’, 1966-இல் ‘மகாகவி காளிதாஸ்’ படத்தில் மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் என்ற அற்புதமான பாடல். 1967-இல் ‘பக்த பிரகலாதா’ , 1980-இல் சலீல் சௌத்ரி இசையில் தூரத்து இடி முழக்கம் என்ற படத்திற்காக இவர் எழுதிய பாடல் ‘மணி விளக்கே’ என்று ஆரம்பிக்கும் பாடல்.
கு.மா.பாலசுப்பிரமணியம் கடைசியாக எழுதிய பாடல் ‘கனவுகள் கற்பனைகள்’ படத்தில் கங்கை அமரன் இசையில் ‘வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே’ என்று ஆரம்பிக்கும் பாடல். 54 படங்களில் 170 பாடல்களை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். 
1975-ஆம் ஆண்டு தமிழக அரசினால் கலைமாமணி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1994-ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று இப்பூவுலகை நீத்தார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்களில் நம்மோடு வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும் ‘இன்னிசைச் சுவடுகள்’ நிகழ்ச்சியிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது. நிகழ்ச்சியை வழங்கியவர் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. விசாலாக்ஷி ஹமீத்’ அவர்கள். தயாரிப்பு:- திருமதி.ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள்.

தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல

தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும். ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை. ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி, நிலம், பண்பாடு, பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன?

எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்?

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.
தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.
'துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே' என்கின்றது புறநானுற்று அறம்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பார் திருவள்ளுவர்.
இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.
தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.
ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது.
பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.
நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும்.
அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.
நன்றி - ஸ்டாலின் ஞானம்

நெடுமரங்கட்கு ஓர் அஞ்சலி


புற்களை விரும்பிக் கால்கள் பதிப்பீர்
குட்டைச் செடி களை உதைத்து மிதிப்பீர்
நிமிர்ந்த நெடுமரம் வணங்க மறுக்கும்
கொடுவாள் ஏந்தி வெட்டிச் சரிப்பீர்
விதைகளினின்றும் வேர்களினின்றும் மரங்கள் விளையும் விந்தை அறியா மூடர் நீவிர்
கையில் ஏந்திய ஆயுதங் கனத்து
இரும்பு நெகிழ்ந்து கயிறாய்த் திரிந்து
கையைப் பிணைத்துங் கழுத்தை நெரிக்கையில்
விழுந்த மரங்கள் வனமெனச் சூழும்
-பேராசிரியர் சிவசேகரம்
‘தேவி எழுந்தாள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

Saturday, September 12, 2020

பின்னணிப் பாடகி கே.ஜமுனாராணி

 



கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

தமிழில் பிரபலமான துள்ளிசைப் பாடகியர்களுள் இவரும் ஒருவர். பாடல் பதிவின் போதோ, மேடை நிகழ்ச்சிகளின் போதோ இவர் ஆடிக்கொண்டே பாடுவதில்லை என்பது சிறப்பு.

”திரைப்படங்களில் பின்னணிப் பாடுவதில் ஒரு புது வகையைச் செய்ய இவருக்கு வாய்ப்பு கிட்டியது. சாதாரணமாகப் பாடுவதோடு இல்லாமல், ஓரளவு பொப்பிசை எனப்படும் ஜனரஞ்சகமான பாடல்களைப் பாட இவருக்கு சந்தர்ப்பங்கள் கிட்டின. கேளிக்கை விடுதிகளில் நடனமாடும் நடன மாதுக்களுக்கும், கிராமிய, நாடோடிப் பாடல்களைப் பாட இவரது பொருத்தமாக இருந்திருக்கிறது ஜமுனாராணிக்கு”.
’ஆரம்பத்தில் இவர் பரதநாட்டியம் தான் கற்றுக்கொண்டார். இவரது தாயார் திரௌபதி அவர்கள் பெண்களையே கொண்டு அமைத்த வாத்தியக்குழுவில் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வீணையில் தேர்வில் சித்தி பெற்றிருக்கிறார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இவரது குரலைக் கேட்ட அவர் இவரைப் பாடச் சொல்லலாமே எனக் கூறியுள்ளார். அது முதல் தான் பாடுவது என ஆரம்பித்துள்ளார்.

”1952-இல் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘கல்யாணி’ என்ற படத்தில் பாட இவருக்கு சந்தர்ப்பம் அளித்தனர்”. ‘சக்ஸஸ்’ என்ற ஒரு பாட்டும், ‘ஒன் டூ த்ரீ’ என்ற ஒரு பாட்டும் அதில் இவர் பாடினார். இவ்விரண்டு பாடல்களுமே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன.
‘அநேகமாக வில்லி கதாபாத்திரங்கள் ஏற்றவர்களுக்காக ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். “குலேபகாவலி” படத்தில் இவர் பாடிய ’ஆசையும் என் நேசமும் இரத்தப் பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா’ என்ற பாடல் பலரையும் கவர்ந்தது. பழம்பெரும் நடிகைகள் எம்.என்.ராஜம், சூர்யகலா போன்ற நடிகையர்களுக்காக ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார் இவர்.
’விடுதி நடனங்கள்’ பாடல்களா ஜமுனாராணியை பாடச்சொல் என்று அழைப்பார்கள் 1960-களில். ‘மாலையிட்ட மங்கை’யில் மைனாவதிக்காக இவர் பாடிய செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாட்டும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
’அன்பு எங்கே’ படத்தில் ‘மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு’ என்ற பாட்டும் எல்லோரையும் கவர்ந்தது. இப்பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ’குமுதம்’ படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் இவர் இணைந்து பாடிய “மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா’ என்ற பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான பாடலாகும். இப்பாடல் காட்சியில் நடித்தவர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் பி.எஸ்.சரோஜா மற்றும் கள்ளபார்ட் நடராஜனும்.
கவியரசரின் பரிந்துரை
இப்படி பாடிப்பாடி இப்படித்தான் இவரால் பாடமுடியும் என்று ஒரு பெயர் இவருக்கு ஏற்பட்டுவிட்டது. சுந்தர்லால் நட்கர்னி ‘மகாதேவி’ என்ற ஒரு படத்தினை எடுத்தார். அதில் சாவித்திரி பாடவேண்டிய ஒரு பாட்டு. பாடல் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் சொன்னார் இந்தப் பாடலை ஜமுனாராணியைக் கொண்டு பாடச் செய்யலாம் குரல் நன்றாக இருக்கும் என்று. இசையமைப்பாளர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் முடியாது என்று மறுத்துவிட்டனர்.
உடனே கவிஞர் ஜமுனாவைப் பாடச் சொல்லுங்கள். பதிவு செய்த பிற்கு கேட்டுப்பார்ப்போம். நன்றாக வந்தால் நீங்கள் ஊதியத்தை அவருக்கு இரண்டு மடங்காக தரவேண்டும். நன்றாக வரவில்லையென்றால் இன்றைய செலவை நான் தந்துவிடுகிறேன் என்றார். இப்படி இவர்கள் பந்தயம் கட்டிக்கொண்டு இவரைப் பாட வைத்தார்கள். எல்லா தெய்வங்களையும் பிரார்த்தனை செய்துகொண்டு இவரும் பாடினார். “காமுகர் நெஞ்சில் நீதியில்லை” என்ற அந்தப் பாட்டு மிக நன்றாக அமைந்தது. இது இவரது வாழ்வில் நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ‘மன்னாதி மன்னனிலும்’, பாசமலரிலும் [பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்] பாட இவருக்கு வாய்ப்புக்கள் கொடுத்தனர் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்.
தற்போது இவருக்கு 77 வயதாகிறது. 1938-ஆன் ஆண்டு கே.வரதராஜுலு, கே.திரௌபதி தம்பதியரின் மகளாக ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.
தெலுங்கில் முதன்முதலாக 1946-ஆம் ஆண்டு ’தாசில்தார்’ என்ற படத்தில் பாடினார். தொடர்ந்து ‘தியாகய்யா” என்ற படத்தில் பாடிய பின்னர் பிரபலமானார். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ஏராளமான படங்களில் இவர் பாடியுள்ளார். இவர் மொத்தமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மொழியில் மட்டுமல்லாது சிங்களம், மலையாளம், கன்னடம் மற்றும் தாய் மொழியான தெலுங்கு மொழிகளிலும் பாடியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இளையராஜாவின் இசையில் நாயகன் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் இணைந்து நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது. அடுத்து ‘நீ தொடும் போது’ படத்தில் இளையராஜாவின் இசையில் பாடியவர் 1992-இல் சந்திரபோஸ் இசையில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாடலை ஜிக்கியுடன் இணைந்து பாடினார். இவர் தற்போது குடும்பத்தாருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இவர் பாடிய மேலும் சில அமுதகானங்கள்:
  1. அன்பு எங்கே படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பூவில் வண்டு போதை கொண்டு
  2. அதிசயத் திருடன் படத்தில் யாரென இனிமேல் கேட்காதே
  3. ஆசை படத்தில் ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட ராஜா
  4. இரு கோடுகள் படத்தில் சுசீலாவுடன் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
  5. இருமனம் கலந்தால் திருமணம் படத்தில் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து மலர்ந்திடும் இன்பம் வண்ணம் போலே…
  6. இரும்புத்திரை படத்தில் திருச்சி லோகநாதனுடன் இணைந்து நிக்கட்டுமா போக்கட்டுமா நெஞ்சத் தொறந்து காட்டட்டுமா
  7. உத்தம புத்திரன் படத்தில் ஏ.பி.கோமளா, ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி
  8. எங்க வீட்டுப் பெண் படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து எனக்கு நீதான் மாப்பிள்ள
  9. எங்கள் குல தேவி படத்தில் தனித்துப் பாடிய கண்ணாடி கிண்ணம் காண்பவர்
  10. எங்கள் செல்வி படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலெட்சுமியுடன் இணைந்து பாடிய என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்
  11. எங்கள் குடும்பம் பெரிசு படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து அதிமதுரா அனுராதா ஜீவிதமே…..
  12. கடவுளைக் கண்டேன் படத்தில் பி.சுசீலாவுடன் அண்ணா அண்ணா சுகம்தானா
  13. கடவுளைக் கண்டேன் படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் இணைந்து கொஞ்சம் தள்ளிக்கணும் அங்கே நிண்ணுக்கணும்…..
  14. கவிதா படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து மணக்கும் ரோஜா மை லேடி
  15. கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பார்க்க பார்க்க மயக்குதடி
  16. கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பறக்கும் பறவைகள் நீயே
  17. கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
  18. கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து உள்ளே இருக்கும் பொன்னம்மா
  19. கண் திறந்தது படத்தில் எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து இருக்கும் வரையில் ரசிக்கணும் இன்பமாக இருக்கணும்
  20. காட்டு ரோஜா படத்தில் தனித்துப் பாடிய என்னைப் பாரு பாரு பார்த்துக் கொண்டே இருக்கத்தோணும்
  21. 15.12.1982 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது. 1982-இல் கே.ஜமுனாராணி
Thanks https://antrukandamugam.wordpress.com/

கள்ளத்தோணி (பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன்)



ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது.
அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல இவரது படைப்புகளில் கண்டிக் கலவரம் 1915, தலித்தின் குறிப்புகள் வரிசையில் இந்த கள்ளத்தோணி நான் வாசித்த மூன்றாவது நூலாக இணைகின்றது.
மலையகத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்கள் என்று இலங்கைக் கரையை அடைந்தனரோ அன்று தொடக்கம் இன்று வரை அவர்களிற்கு இழைக்கப்பட்டுவரும் சமூக அநீதிகளை இந்நூலில் பிரதானமாக கோடிட்டுக் காட்டியுள்ள நூலாசிரியர் அவற்றிற்கான நீதியையும் வேண்டி வலியுறுத்தி நிற்கின்றார். இதற்குப் பக்கபலமாக இறுதி அத்தியாயங்களில் தான் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் எழுதத் துணிந்தமை "எண்ணித் துணிக கருமம்....." எனும் குறள் வரிகளிற்கேற்ப ஆசிரியர் தனது கருத்தில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துரைக்கின்றது.
வலிமை மிக்கவன் தனது எதிரி தன்னைப் பற்றி ஏதாவது உரைக்கும்பொழுது தனது எதிரியை பழிவாங்குவதாக எண்ணி அவனது வலிமை குறைந்த அயலவனை பழிவாங்குவது போல் இலங்கையில் மலையகத் தமிழர்களிற்கெதிராக 1939ல் நாவலப்பிட்டியில் ஏற்பட்ட முதலாவது இனக்கலவரத்தையும் அதன்நீட்சியாக தொடர்ந்து வந்த அரசுகள் ஏற்படுத்திய சட்டங்கள், ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் வரை பல விடயங்களை சுட்டிக்காட்டி அவற்றால் ஏதுமறியா அப்பாவி மக்கள் வஞ்சிக்கப்பட்ட விதத்தையும் வலியுடன் வெளிக்காட்டியுள்ளார்.
தேசங்கள் என்றும் தமது நலன்களுக்கே முன்னுரிமை வழங்கும் எனும் உண்மையை 'கச்சத்தீவு' இலங்கைக்கு வழங்கப்பட்ட வரலாற்றினூடாக இந்நூல் அழகாக வெளிக்காட்டியுள்ளது, வடக்கு கிழக்கை ஆதாரமாகக் கொண்ட மக்களும் வரலாற்றிலிருந்து எதிர்கால நகர்வு தொடர்பான பாடங்களைக் கற்க வேண்டுமென்பதனை இது வலியுறுத்துகின்றது.
இதற்கப்பால், தலைமுறை தலைமுறையாக உரிமைகள் மறுக்கப்பட்டு, இழக்கப்பட்டு,வாய்ப்புகளின்றி, தேசங்களாலும் தேசிய இனங்களாலும் பந்தாடப்பட்ட மக்கள் தங்களை ஏன் மலையகத் தமிழர் என ஓர் தனித்தன்மையுள்ள இனமாகக் காட்ட வேண்டிய அவசியமேற்பட்டதையும் அதற்கான காரணங்களையும் வெளிக்கொணரும் இந்நூல் வரலாற்றை கற்கத் தூண்டுபவர்களிற்கும் வரலாற்றினூடே பாடங்களை கற்க வேண்டிய அவசியமுள்ளவர்களிற்கும் ஓர் பிரதான உசாத்துணையாகவே உள்ளது என்றால் மிகையல்ல.
வரலாற்றில் மலையகத்தை தளமாகக் கொண்ட தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மறைக்கப்படக்கூடாதவை மட்டுமல்ல அது மன்னிக்கப்பட முடியாதவையுமாகும்.
குறிப்பு :- அனைவருக்கும் பயனுள்ள இந்நூலை இலங்கையிலுள்ள பல புத்தக நிலையங்களில் வாங்குவதற்குரிய வசதிகள் உள்ளன. அனைத்து விடயங்களையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ள இந்நூலின் ஓர் பிரதியை தனிப்பட்ட வகையில் கொள்வனவு செய்வதன் மூலம் எம்மவரை நாமே ஊக்குவிக்க முதற்காரணியாக அமைவோம்.
Sarawanan Komathi Nadarasa
Thanks

Pragash Sinnarajah

கள்ளத்தோணி புத்தகத்தை இவ்வாரம் கொழும்பு BMICH இல் புத்தக விற்பனை மற்றும் கண்காட்சியில் வாங்கி, ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.
முன்னர் நான் அறிந்திராத விபரங்களும் இதில் இருந்தன. குறிப்பாக, 'ப்ரஸ்கேர்டில்' பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
83 கலவரங்களைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்ந்து, அதனால் தமது அடையாளங்களைத் தொலைத்து விட்டவர்களில் சிலரைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.
இதிலுள்ள 23 கட்டுரைகளும் முக்கியமானவை.
என்னை மிகவும் திருப்திப்படுத்திய மிகச் சமீபத்திய வாசிப்பு இது.

Pathmanathan Mahadevah