Search This Blog

Saturday, June 10, 2017

வியக்க வைக்கும் எனது மகாபாரதப் பயணம்




தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற பெயரில், மகாபாரதம் குறித்த ஆராய்ச்சி சம்பந்தமான வீடியோ ஒன்றை பார்த்தேன் .இந்த ஆராய்ச்சி உண்மையா, பொய்யா என்பதை தாண்டி இந்த ஆராய்ச்சியாளரின் ஆய்வு அறிக்கை மிகவும் சுவாரசியமாக இருந்தது .அதாவது மகாபாரத போர் என்பது மேற்கு தொடர்ச்சி மலையை ஆண்ட நூறு குறுநில மன்னர்களுக்கும் ,மதுரையை ஆண்ட ஐந்து பாண்டவர்களுக்கும் இடையில் நடந்த யுத்தம் .இப்பகுதிகளுக்கு இடை ப்பட்ட நிலத்தில் வாழ்ந்த கோனார்கள் இப்போரில் நடுநிலை வகித்தார்கள் .அவர்களின் தலைவன் தான் கிருஸ்ணன் என...்கிறார் இவர் . இதற்கு சான்றாக "ஆதிச்சா நல்லூரில் " இருக்கும் நூறு ஏக்கர் சுடுகாடு ஒன்றையும் அத்துடன் இணைந்த பாண்டவர் கோவிலையும் முன் வைக்கிறார். இந்துக்களின் புனித நூல் எனப்படும் மகாபாரதம் உண்மையில் பாலியல் உணர்வுகளை அடிப்படையாக கொண்டது என்பது இந்நூலை முறையாக வாசித்த அனைவருக்கும் தெரியும் .இதை வெளிப்படையாக சொன்னால் கமல்ஹாசனுக்கு எதிராக கேஸ் போட்டதை போல போடுவார்கள் .மேலும் உக்கிரமாக போர் நடந்து கொண்டு இருக்கும் பொது , தனியாக தள்ளி கொண்டு போய் அர்ஜுனனுக்கு அறிவுரை சொன்னதாக சொல்லப்படும் கிருஷணனின் கீதையின் சாரம் குர்ரானிலும் , பைபிளிலும் சொல்ல பட்ட விசயங்களின் சாரத்துடன் கூடுதலாக சில விசயங்கலும் என்று பல கருத்துக்கள் ஏற்கெனவே வெளியில் வந்து இருக்கிறது . இப்பொழுது இது வேறு விதமான ஆராய்ச்சி .முடிந்தவர்கள் பாருங்கள் .முடிந்தால் "ஹிந்துத்வா " ஆட்களுக்கு சொல்லுங்கள்.இந்துக்களுக்கு என்று உருப்படியான புனித நூல் இல்லாமல் போனதற்கு உண்மையான காரணம் என்னவாக இருக்கும் .? என்ற கோணத்தில் சிந்தித்து உங்கள் பதில்களை கொடுங்கள் . ஒரு சுவாரசியமான விவாதம் ஒன்றை செய்யலாம் நண்பர்களே ! ஹர ..ஹர ..மகாதேவா ! .

Govindarajan Vijaya Padma

No comments:

Post a Comment