Search This Blog

Thursday, March 3, 2016

எம்.ஜி.ஆரின் அவமான அனுபவங்கள்....

நமக்கு ஏற்படும் அவமானங்களை , மன்னித்து விடலாம்...
ஆனால் ...எளிதில் மறக்க முடியுமா..?
ஆனானப்பட்ட எம்.ஜி.ஆருக்கே ,எவ்வளவு அவமானங்கள்..துன்பங்கள்...!
இதோ..எம்.ஜி.ஆரின் அவமான அனுபவங்கள்....

"நான் ஹீரோவாகவும், டி.வி.குமுதினி ஹீரோயினாகவும் நடிச்சித் தொடங்க இருந்த ‘சாயா’ங்குற படம் விளம்பரத்தோட நின்னு போயிடுச்சி. வேற ஏதேதோ காரணத்தினால அந்தப்படத்தைத் தயாரிப்பாளருங்க கைவிட்டுட்டாங்க.
எனக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்? கடைசில பழியை எம்மேல சுமத்துனாங்க. ‘ராமச்சந்திரன்’ ராசி இல்லாதவன். அதனாலதான் படம் நின்னு போயிடுச்சின்னு சொல்லி எம்மேலேயே எனக்கே ஒரு அவநம்பிக்கை உண்டாகும்படி பண்ணி என்னைக் கோழையாக்கிட்டாங்க.
அப்போ அவுங்களால எனக்கு ஏற்பட்ட அவச்சொல், அவமானம், துன்பம் எதையுமே நான் மறக்கலே. இன்னிக்கும் அதெல்லாம் என் ஞாபகத்துல இருக்கு.
இப்போ எங்கே போச்சு அந்த ராசி? எத்தனையோ நடிகருங்க வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, அவங்கள்ள யாருமே என்னைப்போல அவமானமும், துன்பமும் பட்டிருக்க மாட்டாங்க...."
ஆம்..அவமானங்களை மன்னித்து விடலாம்...
மறப்பது ...... கொஞ்சம் கஷ்டம்தான்...!!

No comments:

Post a Comment