Search This Blog

Friday, March 21, 2014

அதிர்ச்சி செய்தி... இப்படியும் இருந்த தலைவர்கள்.

இதைப் படித்தால் உங்கள் கண்கள் நிச்சயம் கலங்கும்.
--------------------------------------------------------------------
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மந்திரிசபையில் ஸ்டீபன் என்பவர் மந்திரியாக இருந்தார்.அவரிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப்பெற
லஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளனர்.

அவர் கடும்கோபத்துடன் பெற மறுத்துவிட்டார்.கொடுக்கவந்தவர்களை விரட்டி அடித்துள்ளார்.இருப்பினும் கையெழுத்துப்பெற முயற்சித்துள்ளனர்.

அவர் வீட்டில் இல்லாதபோது அவர் மனைவியிடம்,ஒரு கோப்பும்,பணமும் வைத்து ஐயாவிடம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டனர்.பணம் உள்ளே இருந்தது அந்த அம்மாவிற்குத் தெரியாது.

வீட்டிற்கு வந்தபொழுது மனைவி,அவர்கள் கொடுத்ததைக் கொடுக்க,உள்ளே பணம் இருந்ததைப் பார்த்துவிட்டு,யார் கொடுத்தார்கள்,ஏன் வாங்கினாய் என கோபித்துள்ளார்.

லஞ்சப்பணத்தை தன் மனைவி வாங்கிவிட்டாளே என்று மனம் உறுத்திய அவர்,ஒரு கண்ணாடி டம்ளரை உடைத்துநுணுக்கி,நீரில் கலந்து,அவரும்,அவர்மனைவியும் குடித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.

மனைவி தெரியாமல் செய்த தவறுக்கே தற்கொலை செய்து தனது நேர்மையை வெளிப்படுத்திய அந்த உத்தம காங்கிரஸ்காரரை பாதம் தொட்டுப் பணிகிறேன்.

இதை தட்டச்சு செய்யும்பொழுதே என் கை நடுங்குகிறது.கண் கலங்குகிறது.

இன்றைய காங்கிரஸ்கட்சியை வன்மத்தோடு அழித்து,ஒழிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

No comments:

Post a Comment