Search This Blog

Thursday, December 12, 2013

திருமணம்

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் கொடிய விலங்குகளின் தொல்லை அதிகம் இருந்ததால்,புலி வேட்டையில் வெற்றி பெற்றவனுக்கே பெண் கொடுத்தார்கள்.
காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் ஒரு பெண் பிறந்ததுமே ஒரு காளையினை வளர்க்கத் துவங்கி விடுவார்கள்.பெண் பருவமடைந்ததும் காளையை அடக்குபவனுக்கே பெண்ணைக் கொடுத்தார்கள்.
வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் இளவட்டக்கல் தூக்கியவனுக்கே பெண்.
கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் நீந்துபவனுக்கு மரியாதை இருந்தது.நீச்சல் வீரனுக்கும்,படகுப் போட்டியில் வெல்பவனுக்குமே பெண் கிடைப்பாள்.
காலம் செல்லச் செல்ல வீரர்களுக்கு இருந்த மரியாதை ஆயதங்களைக் கையாளக்கூடிய திறமை சாலிகளுக்குக் கிடைத்தது.
இப்போது பணம் படித்தவர்களுக்கே முதல் மரியாதை.
வரும் காலத்தில் உடல் நலன் அடிப்படையிலேயே திருமணம் நடக்கும்.

- ஜெயராஜன் - மதுரை

No comments:

Post a Comment