Search This Blog

Saturday, December 10, 2022

Chennakeshava Temple or Vijaya Narayana Temple


 Beluru (also known earlier as Velapuri, Velur and Belapur in olden times) is situated on the banks of Yagachi River and was one of the capitals of the Hoysala Empire. Renowned for its magnificent Hoysala temple complex, the Chennakeshava Temple (also called Vijaya Narayana Temple), which was built by Hoysala King Vishnuvardhana to commemorate his victory over the Cholas in 1116 AD. The temple is believed to have been built by master craftsmen – Dasoja and Chavana, a father and son duo.

Chennakeshava Temple:

This star shaped temple is believed to have taken around 103 years to build. At the entrance facing the temple is a towering Gopura and a magnificent sculpture of Garuda, Lord Vishnu’s carrier, palms touching in pious homage. The temple stands on a platform and has exquisite artwork on its outer walls adorned with bracket figures depicting the Puranas and Epics, all carved to perfection. The lower frieze has a series of charging elephants and horses; the elephants symbolize courage while the horses are for speed. It is also believed that Shantaladevi, the queen of King Vishnuvardhana is the model for one of the sculptures – Darpana Sundari (lady with the mirror). Just outside is an interesting piece of sculpture, called the Gravity pillar which is carved out of a single rock and stands in its own weight. People can actually swipe a piece of paper across it. Equally impressive are the temples of Kappe Chennigaraya, Soumyanayaki, Andal and other Vaishnava manifestations, which surround the main temple.

And if you thought that, this is supreme stone carving skills, then just step inside. The craftmanship inside is much finer than outside. The sanctum has a magnificent 3.7 m tall image of Lord Vijaya Narayana in black stone. The prabhavali of this idol has the 10 avatars of Lord Vishnu, wrought very perfectly. The doorway with the dwarapalakas is very elegantly carved. The Garbhagriha is stellar in shape and its zigzag walls make the figures of 24 forms of Lord Vishnu look different at different times of the day due to light and shade effect. The bracket figures of madanikas (celestial nymps) are elaborately done with even water drops chiseled to perfection. There are 4 bracket figures on the ceiling which is believed to be inspired by queen Shantaladevi’s beauty. One can see the lathe turned pillars highly polished and intricate carvings even in the dark and no two pillars are alike. The Narasimha Pillar, it seems, was built to rotate on its base. The Mohini Pillar is the most beautiful among the pillars. A unique aspect in this is the artist has left a small space blank – it is believed that it is a challenge to others to do a better carving and to convey that art never dies as it is infinite.

The Temple Architecture

The Hoysalas used soft soapstone for their structures as they were found suitable for intricate carvings. Enclosed by a Prakara with a Gopurabuilt in the Vijayanagar style, the temple stands on a platform or Jagati and looks like a huge casket. The fine workmanship and skill visible in this masterpiece is truly breathtaking.

Chennakeshava Temple is proposed to be listed under UNESCO World Heritage Sites.
It is open daily from 7.30 AM till 7.30 PM. 

Nearby: Halebeedu (20 kms), Mullayyanagiri Peak (50 kms), Shettihalli Church (55 kms), Yagachi Dam (4 kms) and Sakaleshpura (35 kms) are some attractions that can be visited along with Beluru. 

Visit: Beluru is 220 kms from Bengaluru and 155 kms from Mangaluru. Mangaluru is also the nearest airport. Hasana junction 40 kms away is the nearest railway station. Bus services are available to reach Beluru from Hasana city. Beluru and surrounding areas are best explored in a taxi/own vehicle. 

Stay: KSTDC runs the hotel Mayura Velapuri, 500 meters from Beluru Chennakeshava Temple complex. Hasana city, 40 kms from Beluru has more stay options. 

https://hassan.nic.in/en/tourist-place/chennakeshava-temple-belur/

https://www.karnataka.com/belur/chennakesava-temple-belur/

Theory of Stupidity

Dietrich Bonhoeffer was a Lutheran pastor and theologian in Germany during World War II. He was hanged in a concentration camp at Flossen burg because of his opposition to the Nazis and for that part, he played in an assassination plot against Hitler. 

In prison, he began to try to understand how good, intelligent, and peaceful people could become supporters of such an evil regime. That led to his theory that the greatest opponent to truth and reason was not evil, but stupidity. 

“If we want to know how to get the better of stupidity, we must seek to understand its nature.” — Dietrich Bonhoeffer

“If we want to know how to get the better of stupidity, we must seek to understand its nature,” wrote Bonhoeffer in his treatise. And the nature of stupidity has its roots deep in the subconscious. The fundamental mechanics of the human experience drives it. As ancient philosophers noted, humans are social animals. It is this very sociability that is at the base of stupidity.

“We note further that people who have isolated themselves from others or live in solitude manifest this defect less frequently than individuals or groups inclined or condemned to sociability. And so it would seem that stupidity is perhaps less psychological than a sociological problem.” — Dietrich Bonhoeffer

Stupidity is a group phenomenon. An individual can act stupidly, but that does not affect the whole. However, when a group works stupidly, that dramatically impacts the individual, compounding the entire effect. In many ways, something with initially positive ramifications stabbed humanity in the back.

Human nature doesn’t change as the years pass by. The inner workings of individual people are the same as those of their remote ancestors living on the savannas of Africa 50 thousand years ago. Some of these internal processes stretch even further back, millions of years into the past, when primitive brains started to develop.

When you speak with a stupid person, it does not seem like that person is speaking from their own heart or mind but in catchphrases and slogans adopted from others. Stupidity, to Bonhoeffer, originates when people give up their independent thinking and parrot the words and phrases of the rising power movement. They “jumped on the bandwagon” and ceased thinking independently. He observed that stupidity was found less among isolated people and more in social groups. As you reflect on the evening news and its daily presentation of people doing crazy things to others, consider that they may not be evil or malicious, but rather, stupid.

Italian economic historian Carlo M. Cipolla believes so. In his book 'The Basic Laws of Human Stupidity', Cipolla identifies four different kinds of people – stupid people, helpless people, intelligent people, and bandits.

As a group, stupid people are far more powerful than the Mafia and the Military-Industrial Complex because they actually drive and influence social outcomes. 

Cipolla found that the same proportion of people in any group tended to be stupid, even within the group of Nobel laureates or professors, or even blue-collar workers. The reality is that we have to face the same proportion of stupid people, no matter where we go or travel.

Everyone underestimates the effects of stupid people in action because it is not apparent. As a result, non-stupid people underestimate the damaging power of stupid people.

Intelligent people benefit themselves and society; bandits steal from others to benefit themselves; helpless people are exploited for their naivety despite contributing positively to society. However, stupid people are counterproductive to both their own individual and society's overall interests.

Cipolla says that a stupid person is far more dangerous, especially if the individual was born into the elite class. Their total damage capacity is infinite within their potential position as bureaucrats, generals, and even politicians.

As stated by Yuval Harari, history teaches us that people must never underestimate the role of stupidity in human history. It is one of the most powerful forces around the world.

We cannot trust human decency and supposedly good human leadership to do what is best for humanity. We can only hope that is the case, but stupid humans could win at the end of the day.

Thanks
https://medium.com/lessons-from-history/bonhoeffers-theory-of-stupidity-explains-the-world-perfectly-957cbb3fbac1
https://www.muskogeephoenix.com/news/lifestyles/grace-for-the-day-bonhoeffer-s-theory-of-stupidity/article_a384dc5f-6221-5208-bbfd-c109281db72e.html
https://www.nzinitiative.org.nz/reports-and-media/opinion/new-opinion-7/

Thursday, December 1, 2022

‘அப்பன்’ Appan Movie Review

 ஒரு கட்டில். அதைத் தொடுவது போல மேலிருந்து தொங்கும் ஒரு கயிறு. கால்களில் அசைவு வராத ஐம்பது வயதைக் கடந்த ஒரு மனிதன் படுத்திருக்கிறான். அவன் தான் இட்டியச்சன். கயிற்றைப் பிடித்து கொஞ்சம் நிமிர்ந்து, தலையணையில் சாய்ந்து உட்கார்ந்து கொள்ள முடியும். அவ்வளவுதான் அவனது இயக்கமும் உலகமும். மலை சார்ந்த பகுதியில் சுற்றிலும் ரப்பர் மரங்கள் சூழ்ந்த அந்த வீட்டில் அவனது மனைவி, மகன், மருமகள், பேரன் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அவர்களை எதிர்பார்த்துத்தான் இருக்கிறான் இட்டியச்சன். அந்த வீட்டைத் தாண்டி காமிரா வேறெங்கும் செல்லவில்லை.

“நான் இட்டியச்சன் சாவது போல ஒரு நல்ல கனவு கண்டேன்.” என இட்டியச்சனின் மனைவி விழிப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. இட்டியச்சன் சாவதோடு கதை முடிகிறது. பார்வையாளர்களுக்கு படமே ஒரு கெட்ட கனவாக இருக்கிறது. ஆணாதிக்கத்தில் ஊறிப் போன உயிரும் உடலும் கொண்ட இட்டியச்சன் அந்த வீட்டில் உள்ள அனைவரையும் படுத்தும் பாடு இருக்கிறதே அதுதான் கதை. அந்த வீடும், தோட்டமும் இட்டியச்சனின் பேரில் இருக்கிறது. வன்மம், வக்கிரம், சுயநலத்தின் மொத்த வடிவாய் இருந்து ஆட்டிப் படைக்கிறான். அதைக் காட்சிப்படுத்தி சொல்லியிருக்கும் விதத்தில் மலையாளப்படம் ‘அப்பன்’ ( Appan ) முக்கியமானது.
சிக்கல் மிகுந்த மனித உறவுகளை நுட்பமாகச் சொல்கிறது. இட்டியச்சனின் மகன், மருமகள், பேரன் அனைவரும் நம் முன்னே வாழ்ந்திருக்கிறார்கள். “அப்பாவை நீ நல்லா பார்த்துக் கொள்வாயா?’ என இட்டியச்சனின் மகன், தனது மகனிடம் கேட்கும்போது நெகிழ வைக்கிறது. ( சோனி லைவில் பார்க்கலாம்)
Thanks

Mathavaraj

Wednesday, November 30, 2022

How genetic and environmental factors control the social behavior in early life

 Little is known about how social behavior develops in the earliest stages of life. But most animals––including humans––are born with an innate ability to interact socially or form bonds with others. And that contributes to success throughout life.


Now, a new animal study points to a gene that is important for the earliest development of basic social behaviors.

The work also suggests that exposure to certain drugs and environmental risk factors during embryonic development can cause changes to this gene, leading to alterations in social behavior that are similar to those found in individuals who have autism. Much to their surprise, the researchers also found they could reverse some of the effects using an experimental drug.
http://sciencemission.com/site/index.php?page=news...

Monday, November 28, 2022

WAYS TO MITIGATE SELF-DOUBT


Over the years, I have seen many people struggle with self-doubt. They question each and every action of theirs and this can become a debilitating thought pattern that sabotages their chances for success.
Unfortunately, we all struggle with self-doubt at one point or another. It is important to learn how to overcome self-doubt to be able to live to your fullest potential.
Here are seven techniques to help you mitigate self-doubt and live with confidence.
1. Find a mentor or someone who you can go to for advice or venting
Find that person who really listens to you, understands you, and helps to place your feet back on the ground; whether it be a therapist, parent-figure, sibling, or whomever else you trust. They can help identify, and challenge your unhealthy beliefs, without passing judgment.
2. Surround yourself with real friends
Identify those friends who support you, advise you, and encourage you – the friends who think you are a superstar. Those friends are worth your time.
3. Forgive yourself
Forgiving yourself is oftentimes harder than forgiving others. You are constantly dwelling on those times you failed, or caused someone harm. You are playing victim, and holding yourself back from a life of betterment. Find that strength to overcome these shortcomings. Transfer the energy spent feeling guilt and self-criticism into the positive aspects of your life, and move forward. Self-compassion is okay.
4. Set reachable goals that you can accomplish
Your goals should be ever evolving and changing. Give yourself permission to try new things, but don’t be unrealistic. Your long-term success and health will be dependent on your manageable, immediate goals. And always remember to reward yourself – even for the small things.
5. Find your breath when you're feeling overwhelmed
Life can become extremely overwhelming, and it is your job to mitigate the obstacles it throws your way. Deep breathing is an excellent day-to-day tool to help reduce stress, and ultimately self-doubt.
6. Write it down
The therapeutic act of writing your thoughts –both positive and negative – will shed some light on what is really running through your mind. Take some time throughout the day to document everything from a daily stress, to an amazing accomplishment.
7. Stop trying to make everyone else happy
By trying to make everyone else happy, people end up with no time for themselves. People place their own happiness in the hands of others, and lets face it- people are hard to please. This translates into a world of extreme self-doubt. It is time to respect yourself and you will be surprised by the results that come.
https://www.psychologytoday.com/.../7-ways-mitigate-self...
I would request ALL of you to SHARE this on your Facebook wall so that others may read and benefit.
Thank you.
Dr. Sanjay Chugh
Senior Consultant Psychiatrist
S-132, Greater Kailash Part 2, New Delhi - 110048 (INDIA)

All quiet on the western front review

 All Quiet on the Western Front ( மேற்கு முனையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது) சினிமா 2022ல் மீண்டும் தயாரிக்கப்பட்டு Netflix-ல் காணமுடிகிறது. ஏற்கனவே 1930லும், 1979லும் தயாரிக்கப்பட்ட படம் இது.

இந்த நாவலை 1929ல் ரெமார்க்யூ எழுதினார். 1932ல் அவரது புத்தகம் தடை செய்யப்பட்டது. 'ஜெர்மனியே எழுந்திரு' என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டு ஹிட்லரின் வெறியர்கள் தெருக்களில் புத்தகத்தை தீ வைத்து எரித்தனர். அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அவரது படம் திரையிடப்பட்ட அரங்குகளுக்குள் எலிகளை பிடித்து விட்டனர். குண்டுகளை எறிந்தனர். ரெமார்க்யூ ஜெர்மனியிலிருந்து ஒரு அகதியாய் வெளியேற வேண்டியிருந்தது.
போருக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கும் என்ன உறவு என்று கேள்வி கேட்டு மனிதகுலத்தின் மீது ஒரு நீண்ட விசாரணையை இந்த நாவல் நடத்துகிறது. யார் வென்றாலும், யார் தோற்றாலும் எல்லாவற்றையும் இழக்கப் போவது இருதரப்பு மக்கள் என்பதை வெறுமை படர, படர உணர்த்தி விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் பருவங்கள் அதுபாட்டுக்கு வழக்கம்போல் மாறிக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி 'போர் இயற்கைக்கு விரோதமானது' என்பதை குறிப்பறிய வைக்கிறது.
முன்பின் தெரியாத இன்னொரு நாட்டின் ஒரு வீரனை எந்த சம்பந்தமுமில்லாமல் கொல்ல வேண்டியிருக்கிறது. பிறிதொரு நேரத்தில் கொன்றவனும், கொல்லப்படுகிறவனும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்திருக்கக்கூட முடியும் என்றெல்லாம் நாவல் நம்மிடம் உரையாடுகிறது. தேசம் என்றும், மண் என்றும் உருவேற்றி அதற்குள் தேசீயவாதம் என்னும் வெறியை ஊட்டி, வல்லரசு என்று இராணுவசக்தியை வளர்ப்பது யாருக்காக என்று அதிகாரத்தின் மீது கணைகளை இந்த நாவல் வீசியிருக்கிறது.
மிகச் சரியாக உணர முடிந்தால் இந்த நாவல் பகவத் கீதைக்கும் நேர் எதிரான கலகக்குரல். 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்று அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ணனோடு இந்த நாவல் அனுபவத்தின் தளத்தில் நின்று எதிர்வாதம் செய்கிறது. இந்த அரசியலைப் புரிந்து கொண்டதால்தான் நாஜிக்கள் அந்த நாவலை தடை செய்திருந்தார்கள்.
மனித உயிர்களை ஒரு புழுவுக்கும் கூட மதிக்காமல், முன்வைக்கப்படும் தேசம் குறித்த பெருமிதம், தேசியம் பற்றிய கற்பிதங்கள், இராணுவ வீரன் குறித்த புளகாங்கிதங்கள் அனைத்தையும் இந்த நாவல் உடைக்கிறது.
1952ல் தடை நீங்கினாலும், நாவலில் வரும் பாமரின் கதாபாத்திரம் போல, ரெமார்க்யூ தனது சொந்த ஊருக்கு கடைசி வரை திரும்பவில்லை. 1970, செப்டம்பர் 25ல் ரிமார்க்யூ ரோமில் இறந்து போகிறார். அவர் பிறந்த ஜெர்மனியில் ஒரு வார இதழில் அஞ்சலி செலுத்தி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அவரது புகழ்பெற்ற இந்த நாவல் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அந்த நாவல் மட்டும் உலகம் முழுவதும் 80 லட்சம் பிரதிகள் இது வரை விற்பனையாகி இருக்கிறது.
"அவர்கள் உடல் ரீதியாக போர்களிலிருந்து தப்பியிருந்தாலும், உள்ளரீதியாக அழிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இன்றைய சந்ததியிடம் இந்த நாவல் பேச முயற்சிக்கும்." இப்படித்தான் நாவலைப்பற்றிய ஒரு வரி முன்னுரையாக ரெமார்க்யூ குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய சந்ததியினருக்கும் கொண்டு செல்வதற்காக மீண்டும் படமாக்கப்பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பத்திலும், கதையை காட்சிப்படுத்துவதிலும் தேர்ந்து இப்போது படம் அழுத்தமாக வெளிவந்திருக்கிறது. கூடவே ஒரு நாவலை எப்படி சினிமாக்குவது என்னும் பாடமும் எடுக்கப்பட்டிருக்கிறது.
(பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாவல் குறித்து நான் ‘புத்தகம் பேசுது’ இதழில் எழுதிய கட்டுரையின் சுட்டி முதல் கமெண்ட்டில்…..)
Thanks mathavaraj_cinema_experience

Tuesday, November 22, 2022

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை படித்ததில் பிடித்தது!

 மகாவித்வான் மீனாட்சி

சுந்தரம்பிள்ளைக்கு பிற்காலக்
கம்பர் என்றே பெயர். தமிழ்
நூல்களை இவர் தேடித் தேடி
வெளிக்கொண்டு வந்த ஆர்வம்தான் பின்னாளில் உ.வே.சாவிற்கு ஓலைச்சுவடி தேடத் தூண்டுகோலாக இருந்தது என்றால் மிகையாகாது. தெருத் தெருவாக பிச்சையெடுத்து உண்ணும் ஒருவருக்குத் தண்டியலங்காரம் என்னும் நூலறிவு உண்டு என்பது
அறிந்து அவர் பின்னால் சென்று தண்டியலங்காரம் கற்றார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.
மகாவித்வான் மீனாட்சி
சுந்தரம்பிள்ளையின்
மாணாக்கர்கள் யாரென்று பட்டியல் தருகிறேன். பாருங்கள்.
1)மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) உ.வே.சுவாமிநாத ஐயர்
3) பூவாளூர் தியாகராசச்
செட்டியார்
4) சவுரிராயுலு பிள்ளை
5) வல்லூர் தேவராசப்பிள்ளை
(இவர்தான் நாம் குறிப்பிடும்
தேவராயசுவாமிகள்)
இப்படிப் பலப்பல ஆல மரங்களை உருவாக்கிய தாய் ஆலமரம்தான் தமிழ் பெரிய பாட்டனாரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.
இவரும் ஆறுமுக நாவலரும்
ஒருகாலத்தவர் என்பர்.
ஒருமார்கழியில் விடியற்காலையில்
வைகையாற்றில் இருவரும்
நீராடினார்களாம். அப்போது
மார்கழிக் குளிரைக் குறித்து
“பனிக்காலம் கொடியது”
என்றாராம் ஆறுமுக நாவலர்.
அதற்கு நாவலரின் கருத்தை
ஒட்டியே “பனிக்காலம் மிகவும்
நல்லது” என்றாராம் மீனாட்சி
சுந்தரம்பிள்ளை.
புரியவில்லையா?
பனிக்காலம் = பனிக்கு + ஆலம்
ஆலம் என்றால் நஞ்சு.
பனிக்கு நஞ்சு மிகவும் நல்லது. அதாவது கொடிய பனியை விட நஞ்சு நல்லது என்று பொருள்.
இது செவிவழிச் செய்திதான்
என்றாலும் நினைவு
கொள்வதற்குத் தக்க சுவையான செய்தி.
இங்கனம் புகழ் மிகுந்த தன்னுடைய ஆசிரியரான மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளையின்
சரித்திரத்தை நூலாகவே எழுதி
வெளியிட்டிருக்கிறார்
தமிழ்த்தாத்தா உ.வே.சா.
பெங்களூரிலிருந்த தமிழன்பர்கள் அழைப்பின் பேரில் அங்கு சென்றார் தமிழ் பெரிய பாட்டனார்.
அவரைத் தன்னுடனேயே தங்க
வைத்து விருந்துவகை செய்தார் தேவராயன்.
கற்றுக் கொடுப்பதற்கு நல்ல
ஆசானும் கற்றுக்கொள்வதற்கு
நல்ல மாணவனும் இருந்தால்
அவ்விடத்தில் சிறந்த அறிவு
வேள்வி நடக்கும். அதுதான்
நடந்தது.

படத்தில் உள்ளது
மீனாட்சி சுந்தரம் பிள்ளை (இடது)
முத்துக்குமரப்பிள்ளை(வலது)
தமிழ் பெரிய பாட்டனாரிடம் மொழியின் வளமும்
இலக்கணமும் கற்றார் தேவராயன். கடினமான யாப்பருங்கல காரிகை
கற்பதை விடப் பேரிகை கொட்டிப் பிழைப்பு நடத்தலாம் என்று ஒரு சொலவடை உண்டு.
ஆனால் தேவராயன் மிக எளிதாக
யாப்பருங்கல காரிகை என்னும் செய்யுள் இலக்கண நூலைக் கற்றார்.
கற்றதனால் ஆய பயனாக சிறந்த செய்யுட்களையும் இயற்றினார். அந்தச் செய்யுட்களில் மீனாட்சி
சுந்தரம்பிள்ளையின் கருத்துப்படி திருத்தங்களும் செய்தார்.
மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு
உழைக்கத் தெரிந்த அளவுக்குப் பிழைக்கத் தெரிந்திருக்கவில்லை.
அவரை அப்படிப் படைத்த
பிழைக்குத் திருத்தம் செய்ய
முருகன் விரும்பியதாலோ
என்னவோ தேவராயனை அவருக்கு மாணாக்கராக்கினார்.
பெங்களூர் ு:் பெரிய பாட்டனார்
திருச்சீராப்பள்ளி திரும்பும்
நாளும் வந்தது. கல்விக் கொடை தந்த ஆசானுக்குச் செல்வக் கொடை அளிக்க விரும்பினார் தேவராயன்.
ஐயாயிரம் வெள்ளைப் பொற்காசுகளும்
அழகான பட்டாடைகளும் தந்து
ஆசானை வணங்கினார்.
கணக்குப்பிள்ளை தொழிலை
மறந்து தமிழ்த்தொண்டில்
ஆழ்ந்திருந்த மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு
இந்தப் பரிசு மிகப்பெரிய பரிசு.
இன்றைக்கும் இந்த அளவு பரிசு மிகப் பெரிய பரிசுதான்.
தன்னுடைய மாணவனை உளமார வாழ்த்தினார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. பேரும் புகழும் பெற அவர் வாழ்த்திய வாழ்த்துதான்
இன்றும் நாம் தேவராய சுவாமிகளை நினைவில் வைத்துப் பார்க்கும்
பெருமையைக் கொடுத்தது
என்று சொல்வதும் சரியே.
ஆசான் கிளம்பிச் சென்ற பின்னர் பெங்களூரில் கணக்குப்பிள்ளை தொழிலையும் தமிழ்த் தொண்டையும் தொடர்ந்து
செய்தார் தேவராயன்.
பெங்களூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று இருக்கிறதா என்று
தெரியவில்லை. பெங்களூர்
தமிழ்ச்சங்கத்தில் யாருக்கேனும்
தெரிந்திருக்கலாம்.
பெங்களூர் நண்பர்கள் இதுகுறித்து விசாரித்து விவரம் தந்தால் நன்று.
இளம் வயதிலேயே கல்வியும்
செல்வமும் அள்ளக் குறையாமல் சேர்ந்தவருக்கு வயிற்றில் வலியும் சேர்ந்தது.
பெங்களூரின் மிக நல்ல
மருத்துவமனையில் சிறப்பான
மருத்துவர்களின் சிகிச்சை
எடுத்துக் கொண்டாலும் வயிற்றுவலி தீரவேயில்லை.
செல்வத்தை அள்ளியள்ளிக்
கொட்டினாலும் வயிறு சொன்ன பேச்சு கேட்கவில்லை. வலியும் குறையவில்லை.
தன்னுடைய திறமை வேலை
செய்யாத பொழுது ஆண்டவனை நினைத்துப் பார்ப்பதுதானே நமது செயல்!
அப்பரும்
பகழிக்கூத்தரும் ஆதிசங்கரரும்
கொண்ட வயிற்றுவலியை
நினைத்துப் பார்த்தார்.
அப்பேர்ப்பட்ட பெரியவர்களுக்கு
ஆண்டவன் இறங்கி வந்து அருள்வது உண்டு. ஆனால் தம்மைப் போன்றவர்களுக்கு இறைவன் உதவுவானா என்று ஒரு ஐயம். வலிக்கும் சந்தேகத்துக்கும்இடையில் தவித்த தேவராயனது
மனது ஒரு முடிவுக்கு வந்தது.
ஆம். இனிமேலும் வலியினால்
உண்டாகும் வேதனையோடு
வாழ்வதில் பயனில்லை என்று
முடிவு கட்டி தன்னுயிரை
மாய்க்க எண்ணினார்.
இருபதுகளில் ஒருவருக்கு
வரவேண்டிய எண்ணமா இது!
அந்தோ! தேவராயனுக்கு வந்தது. தமிழ்க் கடவுளான முருகன் குடிகொண்ட திருச்செந்தூர்க் கடலில் மூழ்கி இறக்கத் திட்டம் கொண்டு பெங்களூரிலிருந்து
கிளம்பினார் தேவராயன்.
ஆனால் இறைவன் எண்ணம்
வேறுவிதமாக இருந்தது.
திருச்செந்தூருக்குச் சாவைத்
தேடிச் சென்ற தேவராயனை சஷ்டி வரவேற்றது. சஷ்டித்
திருவிழாவைக் கொண்டாடி
விட்டு உயிரை விடலாம் என்று
தற்கொலையை ஆறு
நாட்களுக்குத் தள்ளிப் போட்டார் தேவராயன்.
அப்படித் தள்ளிப் போட்டதுதான்
செந்தூர் முருகனின்
அருட்கொடையை நமக்கு அள்ளிப் போட்டது.

சிவாயநம

Ilango Krishnan

இன்றைய மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய கருத்து

 பண்டைய சீனர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்காக சீனப் பெருஞ்சுவரை நிர்மாணித்தனர். அதன் அதிகபட்ச உயரத்தின் காரணத்தினால் யாருமே அதன் மீது தாவி, ஏறி உள்நுழைய முடியாது என அவர்கள் உறுதியாக நம்பினர்.

ஆனால் சீனச் சுவர் நிர்மாணிக்கப்பட்டு முதல் நூற்றாண்டு காலப்பகுதிக்குள் மாத்திம் சீனா மூன்று போர்களை சந்தித்தது. அந்த மூன்று முறையும் சீனச் சுவரை ஊடறுத்துச் செல்ல வேண்டிய தேவை எதிரிகளின் காலாற்படைகளுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் வாயிற்காவலுனுக்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு, வாயிற்கதவினூடாக அவர்கள் நுழைந்தனர்.
சுவரை கட்டியெழுப்புவதில் சோலியாக இருந்த சீனர்கள், வாயிற்காவலாளியை கட்டியெழுப்ப மறந்து விட்டனர்.
மனிதனை கட்டியெழுப்புவது வேறு அனைத்தையும் கட்டியெழுப்புதவற்கு முன்னர் செய்ய வேண்டிய விடயமாகும். இன்றைய மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய கருத்து இது.
கீழைத்தேய அறிஞர் ஒருவர் சொல்கிறார். ஒரு சமூகத்தின் நாகரீகத்தை அழிக்க விரும்பினால் அங்கே மூன்று வழிமுறைகள் உள்ளன.
1- குடும்பங்களை சீர்குழைத்தல்
2- கல்வியை இல்லாமல் செய்தல்
3- முன்மாதிரிகளையும், மூலாதாரங்களையும் வீழ்த்துதல்
குடும்பத்தை சீர்குழைக்க வேண்டுமா? தாயின் வகிபாகத்தை இல்லாமல் செய்யுங்கள். தாய் 'குடும்பத் தலைவி' என்று சொன்னால் அவள் வெட்கப்பட வேண்டும் என்ற அளவில் அவளை ஆக்கிவிடுங்கள்.
கல்வியை இல்லாமல் செய்ய வேண்டுமா? சமூகத்தில் ஆசிரியருக்கு உள்ள முக்கியத்துவத்தை வழங்காதீர்கள். அவர்களின் அந்தஸ்த்தை குறைத்து, மாணர்களும் அவர்களை பரிகஷிக்கும் அளவுக்கு செய்து விடுங்கள்.
முன்மாதிரிகளை வீழ்த்த வேண்டுமா? அறிஞர்களை குறைகாணுங்கள். அவர்கள் மீது சந்தேககங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது மதிப்பை கொச்சைப்படுத்துங்கள். அவர்களை செவிமடுக்கவோ, பின்பற்றவோ யாரையும் விட்டுவிடாதீர்கள்.
உணர்வுபூர்வ தாய் இல்லாமலாகி, தூய்மையான ஆசிரியரும் இல்லாமலாகி, முன்மாதிரியும், மூலாதாரமும் வீழ்ச்சியுறும் போது பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட தலைமுறையை உருவாக்க யார் இருக்கப் போகிறார்கள்?!

Thirunavukkarasu Senthan

Saturday, November 19, 2022

தொல்காப்பியம்

 தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.


தொல்காப்பியம் என்ற பெயரே தொல்காப்பியன் என ஆசிரியர் பெயராக மாறியது என்று ஒருசாராரும், நூலாசிரியர் பெயராகிய தொல்காப்பியன் என்பதே தொல்காப்பியம் என நூற்குப் பெயராயிற்று என மற்றொரு சாராரும் மொழிவர் “தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி” என்று பாயிர் ஆசிரியர் பனம்பாரனார் கூறியமையால் ஆசிரியரின் இயற்பெயரே அஃது என்றும், தோற்றி என்பதால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்டது. என்பாராய் நூலின் பெயரே நூலாசிரியர்க்கு ஆயிற்று என்றும் வெவ்வேறு நோக்கில் விளக்கம் காண்பர் நூலாசிரியர் பெயர்க்கு முன்னுரிமை தருவோர் காப்பியக்குடியில் பிறந்தமையால் தொல்காப்பியன் எனப்பட்டார் எனக் காரணம் கூறுவர். இதற்குச் சான்றாகச் சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையில் வரும் ‘காப்பியத் தொல்குடி” என்னும் தொகையைச் சுட்டுவா். வடநாட்டில் விருத்தக்காப்பியக்குடி’ என்ற குடி உண்டு என்றும். அதன் மொழி பெயர்ப்பே தொல்காப்பியம் என்றும் கருதுவோர் உளர். தமிழகத்துள் சிறந்தோரை வடபுலத்தாராக்கிக் காட்டுவதில் முனைப்புடைய இலர்.

தம் கூற்றிற்கு அரணாக நச்சினார்க்கினியர் கூறும் கதை அமைந்துள்ளது. அவர் சமதக்கினியின் மகனான திரண தூமாக்கினியாரே தொல்காப்பியர் என்றும், அகத்தியர் தென்னாடு வரும்போது பதினெண் வேளிரோடு தம் மாணவராகிய திரண துமாக்கினியாரையும் அழைத்து வந்தார் என்றும் குறிப்பிடுவார். சமதக்கினியின் மக்கள் பரசுராமன் முதலிய நால்வர் என்றும், அவருள் யார்க்கும் திரணதூமாக்கினி என்ற பெயா இல்லை என்றும் இராமாயணக் கதையால் அறிகிறோம். தொல்காப்பியர் வட நாட்டினின்றும் வந்தவர் என்பதை இரா இராகவஜயங்கார் மு இராகவ ஐயங்கார், & வெள்ளைவாரணர் போன்றோர் தக்க காரணங்களோடு மறுத்துள்ளனர். தொன்மையான இலக்கணக் கருத்துக்களைக் காப்பதால் தொல்காப்பியம் என நூலுக்குப் பெயர் வந்தது எனவும், அதுவே நூலாசிரியர்க்கும் பெயராய் அமைந்தது என்றும் கூறுதல் பொருத்தமாக உள்ளது. தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் பன்னிருவருள் ஒருவர் என்ற கருத்தும் பிற்கால இலக்கணப் பாயிரங்களில் காணப்படுகிறது.

சிறப்பும் சீர்மையும்

1.தொல்காப்பியம் கிடைக்கும் தமிழ் நூல்களில் முதல் நூல். வேத காலத்தது என்று குறிப்பிடும் அளவிற்கு மிகப் பழமையானது. வடமொழிப் பாணினிக்கும் முற்பட்டது; அதனால் பாணினிக்கும் வழிகாட்டியாய் அமைந்தது. உலகமொழி இலக்கணங்களின் முன்னோடி யாகப் பாணினியை மேளாட்டார் குறிப்பிடுவது தவறு தொல்காப்பியமே உலகமொழி இலக்கணங்கள் அனைத்திற்கும் முன்னோடி அது தமிழின் உயிர் நாடி.

2.ஒலிகளின் பிறப்பு, வகைமை சொற்களில் அவை நிற்கும் இடம் ஆகியவை பற்றிய தொல்காப்பியரின் விளக்கங்கள். உலக மொழிகளின் ஒலிகளை ஆயும் ஒலியியலாரை வியப்பில் ஆழ்த்துவன; அவர்களால் பெரிதும் பாராட்டப்படுவன.

 “எழுத்ததிகாரப் பிறப்பியல் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது மட்டுமின்றிப் பிறமொழி ஒலிகளையும் எழுதிக்காட்டும் ஏற்றம் சான்றது. வே மாணிக்க நாயக்கர்

“இலக்கண உலகின் ஏகச் சக்கரவர்த்தி என்று கூறப்படும் பாணினி என்ற வடமொழி ஆசிரியரும், இவ்வளவு விரிவாக (ஒலியை) ஆராய்ந்த திலலை” – எஸ் வையாபுரிப்பிள்ளை

3.வேதங்கள் எழுதாக்கிளவி எனப்பட்டன. வடமொழி இதிகாசங்கள் வாய்மொழியாக வழங்கப்பட்டன. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தான் வடமொழி எழுத்துக்கள் வரிவடிவம் பெற்று வடமொழி இலக்கண இலக்கியங்கள் ஏட்டில் ஏறின வேத காலத்தது எனக் கருதப்படும் பழமை வாய்ந்த (சி.மு 1500) தொல்காப்பியத்தில் தமிழின் வரிவடிவங்கள் குறிப்பிடப்படுகின்றன. உலகில் வரிவடிவம் கூறும் ஒரே பழைய இலக்கணம், தொல்காப்பியமே.

4.உலக மொழிகளின் மாபிலக்கணங்கள் பேச்சு மொழியைப் புறக் கணிக்கும். மொழியியலாரோ பேச்சு மொழிக்கு முன்னுரிமை தருவர். தொல்காப்பியம் பேச்சுமொழி, இலக்கியமொழி ஆகிய இரு வகை வழக்கிளையும் ஆராய்ந்து கூறும். பேச்சுமொழிகளையும், வட்டார வழக்குகளையும் (திசைச்சொல் ஆராய்ந்து இலக்கணம் வகுக்கும் முறைமையை முதன்முதலில் கையாண்ட தொல்காப்பியர் இவ்வகையில் இன்றைய மொழியியலார்க்கும் வழிகாட்டி ஆவார்.

5.தொல்காப்பியர் உலகப்பொருட்களை உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துப் பாற்பாகுபாடு செய்தமை, அறிவியற் கண்ணோட்ட முடையது. உலகின், பிறமொழியாளர் அறியாதது. ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் இடையே ஏற்படும் குழப்பத்தைப் போக்கியது. அதனால் தமிழ்த் தொடர்கள் தெளிவும் விளக்கமும் பெறுகின்றன.

6.வெளிப்பட நின்று பொருளுணர்த்தும் தொடரமைப்புக்கள் மறைந்து நின்ற சொற்களால் பொருள் உணர்ந்தற்கேதுவாகிய எச்சவகைகள், கூட்டுச் சொற்களாகிய தொகைச்சொற்கள் (Compound words) பெயரும் வினையுமாகிய சொற்களின் பல்வேறு வகைகள். வேற்றுமைத் தொடர்கள், உரியாலும் இடையாலும் ஏற்படும் சொல்லாக்கங்கள் எனப் பலவாகிய மொழி நுட்பக் கருத்துக்களைத் தொல்காப்பியம் விளக்கி அமைகிறது. இன்றைய மொழியியல் அறிஞரும் போற்றும் நுண்மைகள் பல தொல்காப்பியத்தில் ஒளிர்கின்றன.

7.பிற்காலத்தில் தோன்றிய நன்னூல், இலக்கண விளக்கம் போன்ற மொழி இலக்கணங்கட்கும். இறையனார் களவியல் நம்பியகப் பொருள். புறப்பொருள் வெண்பாமாலை முதலிய பொருள் இலக்கணங்கட்கும், தண்டியலங்காரம். மாறனலங்காரம் போன்ற அணியிலக்கணங்கட்கும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை: யாப்பதிகாரம் முதலிய யாப்பிலக்கண நூல்கட்கும். இலக்கிய வகைமைகளை வரையறுக்கும் பாட்டியல் நூல்களுக்கும் தொல்காப்பியமே வழிகாட்டி இலக்கணத் துறையில் மட்டுமின்றி இலக்கியத் துறையிலும் புதுப்புது இலக்கியங்கள் பிற்காலத்தில் தோன் தொல்காப்பியம் பெரிதும் உதவிற்று. ஆற்றுப்படைப் பாடல்கள். மடல் இலக்கியங்கள். கோவை இலக்கியங்கள், பிள்ளைத்தமிழ் காதல் இலக்கியங்கள். தூது இலக் கியங்கள் களவழி நாற்பது தேரோர் களவழி பள்ளு (ஏரோர் களவழி முதலான பல இலக்கியங்கள் தொல்காப்பிய அகப்புறத் துறைகளின் தாக்கத்தால் அரும்பின. இக்கால இலக்கியங்களிலும் தொல்காப்பியக் கருத்துக்களும் வழி காட்டு நெறிகளும் ஊடுருவியுள்ளன. காலந்தோறும் தோன்றுகிற எல்லாவகை இலக்கண இலக்கியங்களும் தொல்காப்பிய ஆகாயை அடியொற்றித்தான் நடக்கும். இக்கருத்தில்,

“கூறிய குன்றினும் முதனூல் கூட்டித்

தோமின் நுணர்தல் தொல்காப் பியன்தன்

ஆணையில் தமிழறிந் தோற்குக் கடனே“

எனப் பல்காப்பியளார் பாராட்டுவார்.

8.வாழ்க்கை முறை தொழில் மக்களின் பண்புநலன்கள் பண்பாடு நாகரிகம் பொருள்வளம், சமூகநிலை கடவுட்கொள்கை மரபு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கூறுவதால் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வரலாற்று நூலாகவும், நிலப்பாகுபாடு தமிழ் நாட்டெல்லை. மூவேந்தர்கள். போர்முறை ஆட்சிமுறை முதலிய வறறைக் குறிப்பிட லால் அரசியல் வரலாற்று நூலாகவும், தன்கால இலக்கண இலக்கியக் கருத்துக்களை வகுத்துரைப்பதோடு முன்னிலவிய இலக்கண இலக்கியக் கருத்துக்கலளயும் குறிப்பிட்டுச் சுட்டலால் இலக்கிய – இலக்கண வரலாற்று நூலாகவும் தொல்காப்பியம் விளங்குகிறது. தமிழரின் பெருமையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் முதன்மை நாகரிக முன்னோடி நூல் தொல்காப்பியம்.

9.உலகின் பிறமொழி இலக்கணம் எதுவும் பொருளாராய்ச்சியை மேது கொண்டதில்லை. மொழி இலக்கணத்திற்கு நிகராகப் பொருளிலக் கணம் கூறும் உலகின் ஒரே இலக்கணம் தொல்காப்பியம். இக்கால ஆய்வாளர்கள் பொருளதிகாரத்தை நுவல்பொருள் இலக்கணம் என்றும் பானியற் கோட்டாடு என்றும் இலக்கியக் கொள்கை என்றும் இயம்புவர்.

10. தொல்காப்பியம் மொழியிலக்கணம் மட்டும் மொழியாமல் பொருண்மை இலக்கணமும் (Semantics)  பேசுகிறது. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று கூறுவதோடு உரியியலில் சொற்பொருள் விளக் கமும் உரைக்கிறார் சொல்லின் பொருள் மரபு வழியே வருவது எனவே “மரபுநிலை திரியிள் பிறிது பிறிதாகும்” என்பார். தொல்காப்பியர்

கடிசொல் இல்லை காலத்துப் படினே

என்று கூறிப் புதிய புதிய சொற்கள் தோன்றுதலையும் தொல்காப்பியர் வரவேற்கிறார்.

11.பிற்கால நிகண்டுகள் தோன்றத் தொல்காப்பிய உரியியலே வழி காட்டி, அகராதியின் முன்னோடி அது.

12. உலகில் முதன்முதலில் மொழிபெயர்ப்புப் பற்றியும் அதன் வகைகள் பற்றியும் குறிப்பிடும் நூல் தொல்காப்பியம் ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழியின் ஒவி வரிவடிவத்திற்குக் கொண்டு செல்லும் உத்தியினைத் (Translitaration) தொல்காப்பியர், வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும்மே. என்ற நூற்பாவில் குறிப்பிடுவார் சொல்லுக்குச்சொல் பொருள் பெயர்த்தலை மொழி பெயர்த்தல் என்றும் விளங்கும் வகையில் கருத்துப் பெயர்த்தலை அதற்படயாத்தல் என்றும் வகைப்படுத்திக் கூறியுள்ள திறம் பெரிதும் போற்றத்தக்கது.

13. அகப்பொருள் மாந்தரின் பெயர் கூறக்கூடாது என்ற தொல்காப்பியரின் விதி இலக்கிய உணர்வுகளைச் சமுதாயத்திற்குப் பொதுவாக்கமுனையும். இக்காலத்தில் நடப்புச் செய்திகளையோ, புனைவுகளையோ கதையாகக் கூறுங்கால் கற்பளையாகப் பெயர்களைப் படைத்து மொழிவதும் அக்காலத்து அசுமாந்தர் குறிப்பிட்டுப் பெயர் சுட்டப்படாததும் இலக்கியம் ஒருவருக்காகவன்றி எல்லோருக்கும் பொதுவாக உரியது” என்பதில் ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன.

14.உணர்வுகளைப் பொதுலான மெய்ப்பாடுகள் அகப்பொருட்கு மட்டுமே உரிய மெய்ப்பாடுகள் என வேறுபடுத்தி விளக்கி இருக்கும் திறம், இன்றைய உளவியலாளரையும் திகைப்புறச் செய்யும் உளவியல் மட்டுமின்றி உயிர்களின் வகைப்பாடு, ஓரறிவுயிர்களைப் புல்வகை, மரவகை எனப் பகுத்து விளக்கியமை போன்றன, அறிவியற்றுறைக்குச் சவால்களாக அமைவன.

15. “பாணினியின் தெளிவும் பதஞ்சலியின் திட்பமும் அரித்தாட்டிலின் தெளிவும். அவையனைத்திலும் இல்லா வளமும் வளப்பும் அளவை நூன் முறையமைப்பும் பெற்றுச் செறிவும் தெளிவும் நெறியா நெகிழ்வும். நிரம்பியமைந்தது தொல்காப்பியம்” நாவலர் சோமசுந்தர பாரதியார்.

16.இன்றைய அறிஞர்கள் இலக்கணத்தினை வண்ணனை முறையியல் (Descriptive) வரைவியல் (Perscriptive) வரலாற்றியல் (Histo-rical ஒப்பியல் (Comparative) எனப் பலவாறு பகுத்துரைப்பர் அப்பகுப்புத் திறங்கள் அனைத்தும் ஆங்காங்கே பொதுளி நிற்பத் தொல்காப்பியா தம் நூலினை அமைத்துள்ள அருமைப்பாடு பெருமைப்பட வைக்கிறது.

17. இலக்கணமாக மொழி நூலாக ஆராய்ச்சிக் கருவி நூலாக அமைந்த தொல்காப்பியம், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர். நச்சினார்க்கிளியர், தெய்வச்சிலையார். கல்லாடனார் போன்ற பழம் பெரும் புலவர்களின் உரைகளைப் பெறும் மேன்மைமிக்கது. தொல்காப்பியப் பாயிரவிருத்தி முதற்குத்திர விருத்தி போன்ற விளக்கவுரைகள் மட்டுமின்றிச் சோமசுந்தரபாரதியார். அரசஞ்சண்முகனார் போன்றோரின் ஆய்வுரை கட்கும் அரங்கமாகியது பி.எஸ். சுப்பிரமணிய சாத்திரியார், மு இராக வையங்கார். வெள்ளை வாரணனார், இலக்குவனார்.வ. சுப. மாணிக்கனார் முதலிய பலரும் தொல்காப்பியக் கடலுள் முழுகி ஆய்ந்து முத்தெடுத்துள் ளனர். தொடர்ந்து ஆய்வுக்களமாக இருந்து வருவதோடு காலந்தோறும். புதுப்புதுக் கருத்துக்களைத் தோண்டி எடுக்கும் சுரங்கமாகப் – பிரதியாகப் புதுமைப் பொலிவோடு பூத்துக் குலுங்கிய வண்ணம் உள்ளது. தொல்காப்பியம் என்றால் என்ன?

தொல்காப்பியத்தின் முதற்பதிப்பாசிரியர் சி.வை தாமோதரம்பிள்ளை (1892) முடிவாக, நாவலர் சோமசுந்தர பாரதியார் தரும் புகழுரையினை முத்தாய்ப்பாகக் கொள்ளலாம். “குறையியலா நிறைவு அறிவு சால் செறிவு நிரம்புவளம். வரம் பிறவாமல் வரையறுத்து வடித்த முறைவனப்பு, மொழி வளர்ச்சிக்கு என்றும் தளர்ச்சிதராக் கட்டமைப்புகளால் ஒப்புயர்வற்ற சிறப்பு வாய்ந்த இலக்கணநூல் தமிழில் மட்டுமன்று: உலகில் நிலவும் பல மொழிகளில் பாராட்டப்பெறும் எல்லா இலக்கணங்களிலும் இல்லாத இயல்வளமும். எழிலும், பயனும், பண்பும் வாய்ந்தது. வேறெந்தமொழி நூலுக்கும் இல்லாத பழமையும் பெருமையும். அழகும் அருமையும் அமைந்தது.

தொல்காப்பியம் – தொல்காப்பியர் பற்றிய மேற்கண்ட செய்திகள் அனைத்தும் தமிழ் இலக்கிய வரலாறு, க.கோ.வேங்கடராமன் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டன.

Thanks https://kelviyumpathilum.com/