Search This Blog

Friday, May 14, 2021

Sri Ranganatha Temple Ornaments arranged for photograph 1896-1898


 Sri Ranganatha Temple is one of the largest and most sacred complexes. This Vaishnava temple is situated on the holy island of Srirangam in the Cauvery River. The temple building started in the Chola period. Still, most of the works were carried out from the 13th to the 17th century under the patronage of the Pandya, Hoysala, Vijayanagara and Nayaka rulers. Coming to these ornaments.

This photograph shows part of the vast amounts of jewellery the temple received as donations from devotees. Indian Archaeological survey arranged these ornaments to have photographed in the year between 1896-1898.

The Sri Ranganathaswamy Temple dedicated to Ranganatha, a form of the lord, Maha Vishnu, located in Srirangam, Tiruchirapalli, Tamil Nadu, India.
The temple is glorified by Alvars in their Divya Prabhanda and has the unique distinction of being not only the foremost among the 108 Divya Desams dedicated to Vishnu, but also the largest functioning Hindu temple in the world.
Thanks 

Indian Contents

Saturday, May 8, 2021

பன்றிமய கோட்பாடு என்றால் என்ன!

 


































ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன் ஒரு அப்பாவி குடிமகனை கைது செய்து மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான்.
நிரபராதியான அந்த குடிமகன் ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தான். " நான் நிரபராதி, ஏன் என்னை கைது செய்தீர்கள்? ஏன் என்னை சிறையில் அடைத்தீர்கள்?" என்று உரக்கக் கதறினான்.
பின்னர் அவனை ஒரு மீட்டர் மாத்திரமே விசாலமான ஒரு தனிச் சிறையில் அடைக்கும்படி கட்டளை வந்தது.
மீண்டும் ஆர்பாட்டம் செய்தான். ஆனால் இம்முறை "நான் நிரபராதி" என்ற வாதத்தையை மறந்துவிட்டான். "இது என்ன கொடுமை! இந்தச் சிறையில் எப்படி இருப்பது! உறங்குவது! அமர்ந்து கொண்டுதானே உறங்க முடியும்! இது உங்களுக்கே தப்பாக தெரியவில்லையா?" என கதறினான்.
சினம் கொண்ட ஜெயிலர் இன்னும் நான்கு சிறைக் கைதிகளை அவனோடு சோர்ந்து அந்த சிறிய கூட்டில் அடைத்துவிட்டான்.
இப்போது ஐந்து பேரும் இணைந்து கூக்குரலிட்டனர். "எங்களால் முடியாது. நாங்கள் மூச்சுத்திணறி செத்துதுவிடுவோம். உங்களுக்கு ஈவிரக்கம் எதுவும் இல்லையா?" என புலம்பினார்கள்.
மேலும் சினம் கொண்ட ஜெயிலர் ஒரு பன்றியை அவர்களோடு சிறையில் அடைத்து விட்டான்.
விரக்தியடைந்த அவர்கள், " நாங்கள் இந்த அசிங்கத்தோடு இந்தச் சிறிய கூட்டில் எப்படி இருப்பது! தயவுசெய்து இந்த பன்றியை மாத்திரமாவது வெளியே எடுத்துவிடுங்கள் "என கெஞ்சிக்கேட்டனர்.
தயவு காட்டிய ஜெயிலர் பன்றியை வெளியே எடுத்தான். அடுத்த நாள் அரசன் அந்தப் பக்கமாக வந்து " இப்போது உங்கள் நிலை எப்படி?" என்று விசாரித்தான்.
"நாங்கள் நல்ல சுகமாக இருக்கிறோம். எங்கள் பெரிய பிரச்சினை தீர்ந்துவிட்டது " என்று பதில் கூறினார்கள்.
இப்படித்தான் நாடுகளில் பன்றிமய கோட்பாடு அமுல்படுத்தப் படுகிறது. பன்றியை மாத்திரம் எடுத்து விட்டால் போதும் என்ற கோரிக்கையில் ஆர்பாட்டம் முடிந்துவிடுகிறது. அதற்கு முன்னால் இருந்த விவகாரம், அதற்கும் முன்னால் இருந்த மூல விவகாரம் எல்லாம் மறக்கடிக்கப்படுகிறது.
புதுப் பது பிரச்சினைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். முடிவில் பன்றிமய கோட்பாட்டை அவிழ்த்து விடுகின்றனர். பின்னர் நாம் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக முதன்மைப் பிரச்சினைகளை மறந்துவிடுகின்றோம்.
தமிழாக்கம் / imran farook

Tuesday, May 4, 2021

Cancer prevention tips that work

Cancer is a large group of diseases that can start in almost any organ or tissue of the body when abnormal cells grow uncontrollably, go beyond their usual boundaries to invade adjoining parts of the body and/or spread to other organs. The latter process is called metastasizing and is a major cause of death from cancer. A neoplasm and malignant tumour are other common names for cancer.



Cancer is the second leading cause of death globally, accounting for an estimated 9.6 million deaths, or one in six deaths, in 2018. Lung, prostate, colorectal, stomach and liver cancer are the most common types of cancer in men, while breast, colorectal, lung, cervical and thyroid cancer are the most common among women.

The cancer burden continues to grow globally, exerting tremendous physical, emotional and financial strain on individuals, families, communities and health systems. Many health systems in low- and middle-income countries are least prepared to manage this burden, and large numbers of cancer patients globally do not have access to timely quality diagnosis and treatment. In countries where health systems are strong, survival rates of many types of cancers are improving thanks to accessible early detection, quality treatment and survivorship care.


Screening tests can help detect malignancies in their earliest stages, but you should always be alert for symptoms of the disease. The American Cancer Society developed this simple reminder years ago:

C: Change in bowel or bladder habits
A: A sore that does not heal
U: Unusual bleeding or discharge
T: Thickening or lump in the breast or elsewhere
I: Indigestion or difficulty in swallowing
O: Obvious change in a wart or mole
N: Nagging cough or hoarseness


So if you're interested in preventing cancer, take comfort in the fact that simple lifestyle changes can make a difference. Consider these cancer-prevention tips.




1. Don't use tobacco

Using any type of tobacco puts you on a collision course with cancer. Smoking has been linked to various types of cancer — including cancer of the lung, mouth, throat, larynx, pancreas, bladder, cervix and kidney. Chewing tobacco has been linked to cancer of the oral cavity and pancreas. Even if you don't use tobacco, exposure to secondhand smoke might increase your risk of lung cancer.

Avoiding tobacco — or deciding to stop using it — is an important part of cancer prevention. If you need help quitting tobacco, ask your doctor about stop-smoking products and other strategies for quitting.

2. Eat a healthy diet

Although making healthy selections at the grocery store and at mealtime can't guarantee cancer prevention, it might reduce your risk. Consider these guidelines:

  • Eat plenty of fruits and vegetables. Base your diet on fruits, vegetables and other foods from plant sources — such as whole grains and beans.
  • Maintain a healthy weight. Eat lighter and leaner by choosing fewer high-calorie foods, including refined sugars and fat from animal sources.
  • If you choose to drink alcohol, do so only in moderation The risk of various types of cancer — including cancer of the breast, colon, lung, kidney and liver — increases with the amount of alcohol you drink and the length of time you've been drinking regularly.
  • Limit processed meats. A report from the International Agency for Research on Cancer, the cancer agency of the World Health Organization, concluded that eating large amounts of processed meat can slightly increase the risk of certain types of cancer.

In addition, women who eat a Mediterranean diet supplemented with extra-virgin olive oil and mixed nuts might have a reduced risk of breast cancer. The Mediterranean diet focuses mostly on plant-based foods, such as fruits and vegetables, whole grains, legumes, and nuts. People who follow the Mediterranean diet choose healthy fats, such as olive oil, over butter and fish instead of red meat.

3. Maintain a healthy weight and be physically active

Maintaining a healthy weight might lower the risk of various types of cancer, including cancer of the breast, prostate, lung, colon and kidney.

Physical activity counts, too. In addition to helping you control your weight, physical activity on its own might lower the risk of breast cancer and colon cancer.

Adults who participate in any amount of physical activity gain some health benefits. But for substantial health benefits, strive to get at least 150 minutes a week of moderate aerobic activity or 75 minutes a week of vigorous aerobic activity. You can also do a combination of moderate and vigorous activity. As a general goal, include at least 30 minutes of physical activity in your daily routine — and if you can do more, even better.

4. Protect yourself from the sun

Skin cancer is one of the most common kinds of cancer — and one of the most preventable. Try these tips:

  • Avoid midday sun. Stay out of the sun between 10 a.m. and 4 p.m., when the sun's rays are strongest.
  • Stay in the shade. When you're outdoors, stay in the shade as much as possible. Sunglasses and a broad-brimmed hat help, too.
  • Cover exposed areas. Wear tightly woven, loose fitting clothing that covers as much of your skin as possible. Opt for bright or dark colors, which reflect more ultraviolet radiation than do pastels or bleached cotton.
  • Don't skimp on sunscreen. Use a broad-spectrum sunscreen with an SPF of at least 30, even on cloudy days. Apply sunscreen generously, and reapply every two hours — or more often if you're swimming or perspiring.
  • Avoid tanning beds and sunlamps. These are just as damaging as natural sunlight.

5. Get vaccinated

Cancer prevention includes protection from certain viral infections. Talk to your doctor about vaccination against:

  • Hepatitis B. Hepatitis B can increase the risk of developing liver cancer. The hepatitis B vaccine is recommended for certain adults at high risk — such as adults who are sexually active but not in a mutually monogamous relationship, people with sexually transmitted infections, people who use intravenous drugs, men who have sex with men, and health care or public safety workers who might be exposed to infected blood or body fluids.
  • Human papillomavirus (HPV). HPV is a sexually transmitted virus that can lead to cervical and other genital cancers as well as squamous cell cancers of the head and neck. The HPV vaccine is recommended for girls and boys ages 11 and 12. The U.S. Food and Drug Administration recently approved the use of the vaccine Gardasil 9 for males and females ages 9 to 45.

6. Avoid risky behaviours

Another effective cancer prevention tactic is to avoid risky behaviours that can lead to infections that, in turn, might increase the risk of cancer. For example:

  • Practice safe sex. Limit your number of sexual partners and use a condom when you have sex. The more sexual partners you have in your lifetime, the more likely you are to contract a sexually transmitted infection — such as HIV or HPV. People who have HIV or AIDS have a higher risk of cancer of the anus, liver and lungs. HPV is often associated with cervical cancer, but it might also increase the risk of cancer of the anus, penis, throat, vulva and vagina.
  • Don't share needles. Sharing needles with people who use intravenous drugs can lead to HIV, as well as hepatitis B and hepatitis C — which can increase the risk of liver cancer. If you're concerned about drug misuse or addiction, seek professional help.

7. Get regular medical care

Regular self-exams and screenings for various types of cancers — such as cancer of the skin, colon, cervix and breast — can increase your chances of discovering cancer early, when treatment is most likely to be successful. Ask your doctor about the best cancer screening schedule for you.

Thanks to

https://www.mayoclinic.org

https://www.who.int

https://www.health.harvard.edu


Wednesday, April 21, 2021

The theater at Petra archaeological site

Petra: the ancient city carved out of red sandstone rocks‌ in Jordan. Stunning architecture in a dramatic natural setting, combining Hellenistic elements with traditional Nabataean rock-hewn tombs and temples. Rich history spanning from prehistoric times to 12th century, and then disappearing from people's memory until it was rediscovered in the 19th century. UNESCO World Heritage Site and one of the New 7 Wonders of the World.

பெட்ரா என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது. Wikipedia

Monday, March 29, 2021

Harakiri Movie (Ritual suicide by disembowelment with a sword)

பொதுவாக சாமுராய் வீரர்களது படங்கள் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் பறைசாற்றுபவையாகவே பெரும்பாலும் அமைகின்றபொழுதிலும் ஒரு சில படங்கள் மறுபுறம் அவர்களது வாழ்விலேற்படும் துன்பியல் நிகழ்வுகளையும் வெளியுலகிற்கு வெளிப்படுத்துவதும் ஆங்காங்கே நிகழ்கின்றது.

Ageing samurai Hanshiro Tsugumo (Tatsuya Nakadai) arrives at the home of Kageyu Saito (Rentarô Mikuni) and asks to commit a ritual suicide on the property, which Saito thinks is a ploy to gain pity and a job. Saito tells Tsugumo of another samurai, Motome Chijiiwa (Yoshio Inaba), who threatened suicide as a stratagem, only to be forced to follow through on the task. When Tsugumo reveals that Chijiiwa was his son-in-law, the disclosure sets off a fierce conflict.

அகிரோ குரோசாவின் 07 சாமுராய்கள் படத்தைத் தொடர்ந்து அவ்வாறான ஒரு துன்பியல் நிகழ்வை வெளிப்படுத்தும் ஒரு திரைப்படமாக 1962 களில் Masaki Kohayashi யினது இயக்கத்தில் Ginichi Kishimoto அவர்களது தயாரிப்பில் Tatsuya Nakadai மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில்
தனது குடும்ப வறுமை, மனைவி , பிள்ளை இருவரதும் மோசமான உடல்நிலையைக் கவனத்திற்கொண்ட சாமுராய் வீரனொருவன் உதவி பெறுவதற்காக ஒரு சாமுராய் தலைவரது இல்லத்தை நாடி தான் Harakiri எனும் சாமுராய் வீரர்கள் மாத்திரமே புரியும் தற்கொலையை புரிய உதவுமாறு கோருகிறான். அவன் தங்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக வந்துள்ளதாகக் கருதி அவனை உடன் தற்கொலை செய்ய அவ்வீட்டிலுள்ளவர்கள் நிர்ப்பந்தப்படுத்தி மிக மோசமாக அவனை தற்கொலைபுரிய வைக்கின்றனர். அவனது நிலையைப் புரிந்துகொள்ளாது நடந்த சாமுராய் வீரர்களை பழிவாங்குவதற்காக அவனது மாமனாகிய மற்றுமொரு சாமுராய் வீரன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே படத்தின் பிரதான கதைக்கருவாக அமைகின்றது.
இத்திரைப்படத்தின் கதையானது Yasuhika Tukiguchi யினது Ibunronin Ki எனும் நாவலை அடிப்படையாக கொண்டுள்ளது. 1619- 1630 வரையான அமைதி நிலவிய காலப்பகுதியில் ஜப்பானில் தங்களது பிரபுக்களை இழந்த சாமுராய் வீரர்களது கவனிப்பாரற்ற நிலை , வறுமை போன்ற விடயங்களை பொதுமக்கள் மாத்திரமன்றி சக சாமுராய் வீரர்களும் புரிய முயற்சிக்காமை, அவர்களது நிலையை அறிய முயற்சிக்காது அவர்களை ஏளனம் செய்தல், தற்கொலையை அங்கீகரித்தல் என்பவற்றினூடாக அவர்களது நிலை எவ்வளவு மோசமாக காணப்பட்டது என்பதை இத்திரைப்படம் தத்ரூபமாக சித்தரிக்கின்றது.
படத்தின் முடிவில் சாமுராய் வீரர்களும்.. ஏன் அனைத்து மனிதர்களும் நம்மைப் போல் இரத்தம் சதை நிரம்பியவர்களே அவர்களது நிலையை புரிய முயற்சிக்காவிட்டாலும் உபத்திரவம் புரியாது இருப்போம் அதுவே உயிர்களுக்குச் செய்யும் உதவி என்பதை இத்திரைப்படம் கோடிட்டுக் காட்டுகிறது.
இத்திரைப்படம் 08 விருதுகளைப் பெற்றதுடன் 2011 கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜப்பானிய திரைப்பட இயக்குனர் Takashi Miike ஆல் 3D திரைப்படமாக Harakiri- Death of a Samurai எனும் பெயரில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Pragash Sinnarajah

Friday, March 26, 2021

மட்டக்களப்பின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை

ஈழத்தில் தமிழுக்கும் பெரும் பங்களிப்புச் செய்துள்ள மரபு வழித் தமிழ் புலமையாளர்களில் முக்கியமான ஒருவராகக் கொள்ளப்படவேண்டியவர் கிழக்கிலங்களையின் மட்டக்களப்பு மண்ணின் மைந்தரான புலவர்மணி பெரிய தம்பிப் பிள்ளை.

 

முத்தமிழ் வித்தகர் என்று போற்றப்பட்டவரும் “யாழ் நூல்” தந்த பெருமைக்குரியவரும், பல்கலைக்கழக நிலையில் முதல் தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலானந்தரிடம் கல்விபயின்ற பெருமையும் இவருக்கு உண்டு. 

ஈழத்தில் இலக்கியரசனையை விரிவடையச் செய்தவர்களுள் முக்கியமானவரும் யாழ்ப்பாணத்தில் பண்டிதர்களுக்குப் பணடிதராகவும்: அதேவேளை நவீன உரைநடை இலக்கியத்தின் உரைகல்லாகவும் திகழ்ந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களுடனிணைந்து நாவலர் காவிய பாடசாலையில் கல்விபயின்று கவிஞராய் மேலெழுந்த சிறப்பும் இந்த புலவர் மணிக்குண்டு. 

மட்டக்களப்பின் மண்டூரில் 1899ஜனவரிமாதம் 8ஆம் திகதி பிறந்தவர் இவர். (08.01.1899) மண்டூர் வெஸ்லியன் தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பத் தமிழ்க் கல்வியையும், கல்முனை வெஸ்லி மிஷன் ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்பஆங்கிலக் கல்வியும் பெற்ற இவருக்கு “யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தமிழ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

நாவலர் காவியப் பாடசாலை ஒரு தனித்தன்மை வாய்ந்த நிறுவனம்! அரசினால் வழங்கப்படுகின்ற நன் கொடையைப் பெறும் இப்பாடசாலை இதில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு நன் கொடைவழங்குவது வழக்கமாக இருந்தது. 

சுன்னாகம் அ. குமாரசாமிபுலவர், த.கைலாசப்பிள்ளை, பண்டிதர் மகாலிங்கசிவம், பண்டிதமணி நவநீத கிருஷ்ண பாரதியார், சாவகச்சேரி புலவர் பொன்னம்பலப்பிள்ளை, பண்டிதர் சோமசுந்தரம் என்று யாழ்ப்பாண அறிஞர் பலரின் நட்பும் தொடர்பும் ஆசிரியத்துவமும் இவரது கல்வியை உயர்த்தியுள்ளது. 

தமிழ் கல்விக்காக இவர் மட்டுநகரில் இருந்து யாழ் கூட்டிவந்த நண்பர் இவரை குருநகருக்கருகேயுள்ள மரகதமடம் என்ற இல்லத்துக்கு கூட்டிச் சென்றார். அங்கிருந்த இளைஞர் இவரை வரவேற்று உபசரித்துள்ளார். அந்த இளைஞர் வேறுயாருமில்லை! பண்டிதர் மயில்வாகனம் என்று பெயர் கொண்ட பிற்காலமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரே தான். 

இந்த முதல் சந்திப்பை தன்னுடைய பிற்கால உள்ளதும் நல்லதும் என்ற நூலில் புலவர் மணி பதிவு செய்கின்றார். 

“யாழ்ப்பாணத்தில் வைத்து என் மீது அரும்பிய பண்டிதர் மயில் வாகனனாரின் அன்பு அவர் துறவியான பின்பு அருளாக மலர்ந்துள்ளதை நினைத்து நினைத்து நெஞ்சம் உருகி நின்றேன்.’ 

இந்த முதல் சந்திப்பின் பிறகு அவரைத் தேடிச் சென்று பலவிஷயங்களைக் கற்றுக் கொண்டார். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணக் கோவில்கள் அனைத்திலும் பண்டிதர் மயில் வாகனனாரின் பிரசங்கம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். புலவர் மணியும் விடாமல் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு லயித்துக் கிடப்பார். அப்படி லயித்து லயித்தே நானும் பேசக்கற்றுக் கொண்டேன் பேச்சாளன் ஆனேன் என்றும் குறிக்கின்றார் இவர். 

விபுலானந்தரூடாகவே யோகர் ஸ்வாமியின் பழக்கமும் தொடர்பும் அருளாசியும் இவருக்குக் கிடைக்கிறது. 

பண்டிதர் மயில்வாகனனார் விவேகானந்த சபையின் நிரந்தரமாகிவிட்ட காலத்தில் புலவர்மணியும் நாவலர் பாடசாலையை விட்டு விலகி விவேகானந்த சபையுடன் இணைகின்றார். மாலைவேளைகளில் நல்லூர் கந்தசாமி கோவிலில் யோகர்ஸ்வாமியும் ஸ்வாமி விபுலானந்தரும் இவரும் திருப்புகழ் படிப்பதுண்டு. 

இவர் சாவகச்சேரி இந்து மகா சபையில் இருந்த போது இவரைத் தேடி சபைக்குவரும் அனைவருடனும் நட்புடனும் சமமாகவும் பழகினார். சாதிவெறி உச்சமடைந்திருந்த காலம் அது. 

இங்குவரும் பள்ளர் பறையருக்கெல்லாம் கதிரை கொடுத்து உபசரிக்கின்றீராமே? இந்த புரட்சிகள் எல்லாம் இங்கே வேண்டாம் என அவர்கள் கடிய பதிலுக்கு இவரும் கடிய, இவரை சபை விலக்கி வெளியேற்றுகிறது. இதனால் வேதனையும் விரக்தியுமுற்றுத் திரிந்த புலவர் மணியை ஆறுதல் வார்த்தைகள் கூறி ஆற்றுப்படுத்தியவர்கள் ஐசக் ‘தம்பையா,  எட்வர்ட் மேதர் போன்ற அமெரிக்கன் மிஷன் கிறிஸ்தவப் போதகர்கள்.‘இங்கே எங்களிடம் பள்ளரும் இல்லை பறையரும் இல்லை! மனிதர்கள் எல்லாரும் சமமானவர்கள். உங்கள் நோக்கம் நிறைவேற நீங்கள் எங்களுடன் இணைந்து செயற்படுங்கள்’ என்று கூறினர். 

புலவர்மணியும் மதம் மாறி கிறிஸ்துவரானார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் ஆசிரியர் பதவியை விட்டு விலகி சாவகச்சேரி மிஷன் கல்லூரியில் தமிழ்பண்டிதராகப்பதவி ஏற்றார். கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த இவரை வேதசாஸ்திர கல்லூரியில் இரண்டு வருடப் படிப்பிற்காக இந்தியாவிலுள்ள பசுமலைக்கு அனுப்பிவைத்தார்கள். அமெரிக்க மிஷனின் அரண்போன்றது பசுமலை. 

‘கிறிஸ்து திருவவதார கீதங்கள்’ என்னும் சிறுபிரந்தம். ‘கிறிஸ்தவ சமய துயிலுணர்ச்சி’ என்னும் சிறு நூல், ‘இந்தியநோக்கில் கிறிஸ்தவ வேத வியாக்கியானம்’ என்னும் கட்டுரை போன்றவை பசுமலை காலத்தில் எழுதியவை. கிறிஸ்தவ சமயப் பிரசங்கியாக, பசுமலை. கோவை, சென்னை எனப் பிரபல்யம் கொண்டார். பசுமலை வேதசாஸ்திர கலாசாலை விடுதி மேற்பார்வையாளராகவும் செயற்பட்டார். ஆனாலும் கிறிஸ்தவமதமும் திருச்சபையும் ஒன்றாக செயற்படவில்லை என்ற உணர்வும், கிறிஸ்தவ சமூகத்தின் மேல்நாட்டு ஏகாதிபத்தியத்தைக் களைய வேண்டும் என்னும் வெறியு், கிறிஸ்தவ மேலைநாடுகளின் நோக்கங்கள் மீதான எதிர்ப்பும் இவரை அலைக்கழித்தன. பசுமலை பயிற்சி முடிந்து யாழ் திரும்பும்போது யாழ்ப்பாணத்தின் திருச்சபை செயலாளர் பதவி இவருக்காக ஒதுக்கப்பட்டுக் காத்திருந்தது. 

பசுமலையில் புலவர்மணி சமயப் பிரசங்கியாக செல்வாக்குடனிருந்த காலத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் விபுலானந்தர் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். தன்னைக் கண்டு மனமுருகிநின்ற புலவர் மணியிடம் ‘மட்டக்களப்பில் அதிகம்வேலையுள்ளது. ஆட்கள் தேவை’ என்று கூறினாராம் விபுலானந்தர். 

இது நடந்தது 1925ல். பசுமலை கலாசாலைப் பதவிகள் தனக்கிருந்த செல்வாக்கு, யாழில் தனக்கென ஒதுக்கப்பட்டுக்காத்திருந்த உயர்பதவி அனைத்தையும் உதறிவிட்டு 1926ல் தனது தாயகமான மட்டக்களப்புக்கு வந்தார். 

திருகோணமலை, மட்டக்களப்பு என ஆசிரியப் பதவி வகித்து நல்மாணவர்களை உருவாக்கினார். 

ஈழநாட்டில் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த புலவரும் தமிழ் அறிஞரும் சீர்த்திருத்த சிந்தனாவாதியுமான புலவர்மணி சிறியனவும் பெரியனவுமாக 15க்கும் கூடுதலான நூல்களை வெளியிட்டுள்ளார். 

முக்கியமாக பகவத்கீதைவெண்பா 1962 

புலவர் மணி கவிதைகள் 1980 

உள்ளதும் நல்லதும் 1982 

கருமயோகம் : பக்தியோகம் , ஞானயோகம், பாலைக்கலி, விபுலானந்தர் மீட்சிபத்து, புலவர்மணி கட்டுரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. 

புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் தனது 79ஆவது வயதில் 02.11.1978ல் மரணம் அடைந்தார். 

தெளிவத்தை ஜோசப்

http://www.vaaramanjari.lk/




 மட்டக்களப்பின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களைக் கௌரவிப்பதற்காக, 1994 மே மாதம் 22 ஆம் தேதியன்று இலங்கை தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தபால் தலை! எனது சேகரிப்புகளில் ஒன்று... பழையவற்றைப் புரட்டியபோது இன்று கண்ணில் பட்டது!

Pathmanathan Mahadevah


Wednesday, March 17, 2021

யார் தீர்க்க தரிசி ?

 





மில்க் வொயிற் என்பது பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட்ட தமிழருடைய சோப்பு தயாரிக்கும் நிறுவனம். தனது விற்பனையினை பிற எந்த நிறுவனங்களை விடவும் மிக அதிகமாக அவரால் விரிவாக்க முடிந்தது. தனது பொருட்களை விற்க “உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்” என்று அவர் கூறி முன்னெடுத்திருக்கிறார்.
தமிழ் மீது இருந்த தீராத பற்றினால் திருவள்ளுவரின் குறளையோ பாரதியின் பாடல்களையோ பனை ஓலையில் அச்சடித்து தனது சோப்புகளுடன் விநி யோகித்திருக்கிறார். தனது தயாரிப்புகளையும் அவர் பொதிந்து கொடுக்க களிமண்ணில் செய்த அழகிய பேழைகளில் வைத்து இலவசமாக கொடுத்தா ர். நூற்பவர்களிடம் இருந்து பெற்ற துணிகளைக் கொண்டு தந்து சோப்பை பொதிந்து விற்பனை செய்திருக்கிறார். இவைகளின் மூலம் அவர் குயவர்களையும், நெசவாளர்களையும் ஆதரித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
மேலும் பனம்பழங்கள் கிடைக்கும் காலத்தில் தனது லாரி நிறை ய பனை விதைகளை எடுத்துக்கொண்டு தந்து பணியாளர்களைக்கொண்டு சாலைஓரங்களில் விசிறி எறியச் சொல்லுவாராம். பனை மீது மீளா க் காதல் கொண்ட பனைக் களப்போராளியான அவரது தயாரிப்புகள் இன்று வளர்ந்து வரும் தலைமுறையினருக்குத் தெரியாமலேயே போகப் போகிறது
உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று மண்ணில் விழும். இரண்டு விரல்களை வளையமாக்கி அதில் வைத்து ஊதி ஊதி மண்ணை நீக்கினால் வெளிநாட்டு ஒலிவ் பழம் தான் இப்போ நினைவை தட்டும் .
காய்ந்து உலர்ந்து போன வேப்பங்கொட்டைகளைக் குவித்து வைத்து அவற்றை இரவில் ஒரு சட்டி தணலில் போட்டு எரிக்கும் போது வெளிப்படும் புகை மண்டலம் வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளாக வரும் நுளம்புக் கூட்டத்தை விரட்டியடிக்கும்..
மருதடிப் பிள்ளையார் கோயிலிலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும் திருவிழா நாட்களில் “மில்க்வைற்” நிறுவனம் கடை பரப்பியிருக்கும் . அப்போது ஒரு அறிவிப்பை அச்சிட்டுப் பகிர்ந்தார்கள். ஒரு கிலோ வேப்பம் கொட்டை கொடுத்தால் ஒரு மில்க்வைற் தொப்பி கிடைக்கும் என்பது தான்.
எத்தனைபேர் தங்களால் முடிந்த கொட்டைகளை சேர்த்துக் கொண்டே வெள்ளைத் தொப்பி வாங்கியிருக்கிறார்கள்
ஒரு கல்லில் இரு மாங்காய் அல்லவா ?
ஓன்று சுயமாக சிந்திக்க வைப்பது சுதேச உற்பத்திக்களை கூட்டுவது ,இரண்டாவது இயற்கையை நேசிக்க வைப்பது .
அப்போது யாழ்ப்பாணத்தில் சுதேச உற்பத்திகள் செழிப்போட்டு இருந்த நேரம் “மில்க்வைற் தொழிலகம்” தம் பங்குக்கு சோப் உற்பத்தியில் பெரும் தொழிற் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. குளிக்க, உடுப்பு தோய்க்க என்றி வித விதமான சவர்க்காரங்கள். சுதேச உற்பத்திகளா கின .
பலரும் சேமித்துக் கொடுத்த வேப்பங் கொட்டைகளைச் சுத்தம் செய்து நுளம்பை விரட்ட மில்க்வைற் வேப்பங்கொட்டைகள் என்றும், அந்த வேப்பங்கொட்டைகளை மூலப் பொருளாக உபயோகித்து “நீம் சோப்” என்றும், வேப்பெண்ணெய் என்றும், “நீமியா” உரம் என்றும் மில்க்வைற் ஸ்தாபனத்தார் உற்பத்திகளை விரித்திருந்தனர்.
HAMMAM சோப்புக்கள் இதே பாணியில் தயாரிக்கப் படுபவையே .
மில்க்வைற் சோப் ஏழைகளின் தோழனாகவும், மத்திய வர்க்கத்தின் காவலனாகவும் அப்போது விளங்கியது..
எப்போதும் உள்ளூர் உற்பத்திக்கு மதிப்புக் கொடுப்பது குறைவு தானே .
பணக்கார வர்க்கம் எப்போதும் பகட்டுத்தானே . லக்ஸ் சோப், ராணி சோப் இவற்றில் தான்
பணத்தில் குளிப்போருக்கு மோகம் அதிகம். .
உடுப்புத் தோய்க்க சன் லைற் சவுக்காரம்,பத்து நீம் சோப் உறைகளை அனுப்பி ஒரு திருக்குறள் புத்தகத்தை வெல்லுங்கள், ஒரு தேகப்பியாசப் புத்தகத்தை வெல்லுங்கள். “பனையை வளர்ப்போம் பயனைப் பெறுவோம்” என்றெல்லாம் சவர்க்கார உறைகளில் அச்சிட்டு மில்க்வைற் காறர் உள்ளூர் மக்களைக் கவர்ந்தா ர்கள்.
ஆனால் பிரயோசனம் அடைந்தது .எல்லோரும் தான்
அரிவரியில் ஆனா ஆவன்னா எழுதிப் பழகப் பனையோலையில் அரிச்சுவடி செய்து பள்ளிக்கூடங்களுக்கும், கோயில்களுக்கும் அனுப்புவதில் இருந்து ஆத்திசூடி நீதி நூல் வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை அச்சிட்டு விநியோகிப்பது, “மில்க்வைற் செய்தி” என்ற சமூக, சமய, அறிவியல் சார்ந்த பத்திரிகையை வெளியிடுவது என்று மில்க்வைற் கனகராசா அவர்களின் பணி விரிந்தது அதனால் அவருக்குச் சிவ தர்ம வள்ளல் என்ற பட்டமும் கிட்டியது. அவருக்கு உறுதுணையாக எழுத்து முயற்சிகளுக்குப் பொறுப்பாக அறிஞர் க.சி.குலரத்தினம் விளங்கினார்.
இரண்டாம் கட்ட ஈழப் போர் கனத்த போது இலங்கை அரசின் பொருளாதாரத் தடை தமிழர் பிரதேசங்களுக்கு அமுலாகியது தொண்ணூறுகளின் முற்பகுதியில். பெற்றோல், டீசல் உட்பட ஐம்பத்துச் சொச்சம் பொருட்களைப் பட்டியலிட்டு இவை பயங்கரவாத நடவடிக்கையை முன்னிட்டுத் தடை செய்யப்படுகின்றன என்று
இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
உடுப்புத் தோய்க்கும் சன் லைட் சோப்புக்கான காலம் போய் நோயாளிகளுக்கு என்று முத்திரை குத்தியிருந்த லைஃப் போய் சோப்புக்கும் மாறினர் . சோப்பைச் சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது, துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் அரங்கேறின. கொஞ்ச நாளில் இருப்பில் இருந்த எல்லா சோப்பும் கடைகளில் காலியாகின.
கையில்ருப்பில் இருந்த பகட்டான சவுக்காரங்கள் தீர்ந்து போக, தாய் வீடு தேடி வரும் மகள் போல எல்லாரும் மில்க்வைற் சோப் நோக்கி ஓடினார்கள் .
மில்க்வைற் சோப் விலை மலிவு என்றாலும் வேகமாகக் கரையக் கூடியது. . என்னதான் உள்ளூர் உற்பத்தியாக இருந்தாலும் சோப் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்குத் தென்னிலங்கையையே தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவியது இதனால்
மில்க்வைற் தொழிற்சாலையும் மெல்ல முடங்கிப் போக, இப்போது மில்க்வைற் சோப்பும் இல்லாத மாதங்களாக நீண்டன.
சுரக்காயைக் காய வைத்து அதன் உள் எலும்புக் கூட்டை எடுத்தால் ஸ்பொன்ச் மாதிரி இருக்கும். அதற்குள் சோப்புத் தண்ணியைக் கரைத்து ஊற்றி வெது வெதுவாக்கி குளிக்கும் போது சோப்புப் போடுவது போலப் போட்டுத் தேய்த்துக் குளிக்க ஆரம்பித்தார்கள்
தமிழன் படாத கஷ்டமா ? என்ன
சரி இப்பொழுது கனகராசா அவர்களின் அரசியல் .நாட்டுப்பற்று தொழில் பற்று பற்றி அறிந்து கொள்ளுங்கள்

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் இத் தொல்மரபுக்கமையச் சவர்க்காரம் செய்து வந்தோர் இருந்தனர்.
அவர்களில் சவர்க்காரம் கந்தையா இருந்தார். அவர் வளவில் குடிசைக் கைத்தொழிலாகச் சவர்க்காரம் செய்வார்கள்
.கந்தையா வழி வேதிப் பொருள்களைக் கைத்தொழிலாகத் தயாரித்தவர் கனகராசா.அவர்கள் .
கொழும்பில் ஆங்கிலேய lever Brothers சன் லைற் சவர்க்காரத்தைப் புகுத்தியதும் கனகராசா தம் பொருளுக்குச் சந்தை சேர்க்க
1950களின் தொடக்கத்தில் மில்க் வைற் சவர்க்காரம் எனப் பெயரிட்டதுடன் தொழிலகத்தையும் நவீன எந்திரமயமாக்கி ஆங்கிலேயக் கம்பனியாருடன் போட்டியிட்டு, தனக்கென இலங்கை முழுவதும் ஒரு சந்தை வலைப்பின்னலை உருவாக்கினார் .
சுதேச போராட்டம் இது .
1958 ஆனியில் இனக்கலவரம் கொழும்பில் வெடித்தது. சிங்களவர் தமிழரைத் தாக்கினர்
கலவரம் தொடங்கி நடந்த நாள்களில் கடையடைப்புக் கோரிக்கையுடன் திரு. கனகராசா தன் வண்டியில் நகரெங்கும் சுற்றிவந்து துண்டு விளம்பரம் கொடுத்துவந்தார் .
தமிழுணர்ச்சிப் பிழம்பாகத் திரு. கனகராசா யாழ்ப்பாணம் பெரிய கடை எங்கும் உலாவினார். கோபக் கனலுடன் அனைத்து வணிக நிலையங்களையும் இழுத்து மூடுவித்தார்.செயல்வேகத்தின் ஆளுமை அது .
யாழ்ப்பாணத்தில் 1973 ஆவணி தொடக்கம் 1974 தை வரை நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பணிகளை த் தன் பணியாகக் கொண்டவர் திரு. கனகராசா.இது யாருக்கும் தெரியாத விடயமல்ல .
2 ம்திகதி கார்த்திகை 1927 ல் கந்தையா வீரகத்தி அவர்களுக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்,
செல்லையா மகள் நாகம்மா வை 1951 புரடாதிமாதம் பதினான்காம் திகதி மண ம் முடித்து இல்வாழ்வி ல் அடியெடுத்து வைத்தார்
1952 முதல், MILK WHite சவற்காரக் கம்பெனியின் ,உரிமையாளர் ஆகவும்
. தலைவர் Multi Oil Industries Ltd ஆகவும்
Multi Rice Industries ltd . தலைவர் ஆகவும்
Hatton National வங்கியின் ஆயுள் கால உறுப்பினராகவும்
இருந்தார்
1974 முதல் சமாதானநீ த வனாகவும் இருந்தார்
அன்று அவர் போட்ட விதைகள்
அந்தப் பனை மரங்கள்தான் வளர்ந்து இன்று பெரிய மரங்களாக வீதி ஓரமெல்லாம் காவல் வீரர்கள்போல நிற்கின்றன.
இதற்கெல்லாம் காரணமானவரை காலம் மறந்து விட்டது. காலம் மறந்து விட்டதா அல்லது அவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கும் நிலையில் அங்குள்ள மக்கள் இல்லையா என்பதுகூடத் தெரியவில்லை.
சின்னவயது நினைவுகள் எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. எவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு அன்று அவர் செயற்பட்டார் என்பதை நினைக்ககூட அங்கெ மக்கள் சுயநலமிகள் ஆக இருக்கிறார்களா ?
‘உண்மையிலே புதிதாக நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரக்காரணம் யாழ்ப்பாணம் வானம் பார்த்தபூமி என்பதால்தான். ஆறுகள் இல்லாததால், இந்த மண்ணில் மழையை நம்பியே விவசாயம் நடந்தது. கிணற்றில் இருந்தே குடிநீர் பெற்றார்கள். உயர்ந்த மரங்கள் இருந்தால் மழை பெய்வதற்குச் சந்தர்ப்பம் அதிகமுண்டு என்று கருதித்தான் தீர்க்கதரிசனத்தோடு மரம் நாட்டும் முயற்சியில் அன்று ஈடுபட்டார்கள். ஆனால் அதுவே பிற்காலத்தில் எறிகணைகளில் இருந்து குடிமனைகளைக் காப்பாற்றும் பாதுகாப்பு கேடயமாக மாறிவிட்டது.’
‘நாங்கள் அதற்காகத் தொழிலதிபர் கனகராஜாவைத்தன் பாராட்ட வேண்டும்.
-மாணிக்க வாசகர் manikkavasagar.vaitialingam