Search This Blog

Tuesday, December 4, 2018

New UK 50 Pound Note May Feature India's Sir Jagadish Chandra Bose

The Bank Of England has announced it will be redesigning the 50 UK Pound currency note, replacing it with a prominent name from the world of science.
And surprisingly (or unsurprisingly?), the name of Indian scientist Sir Jagadish Chandra Bose has been featured in the nomination list.

Sir Jagadish Chandra Bose, Jagadish also spelled Jagadis, (born November 30, 1858, Mymensingh, Bengal, India (now in Bangladesh)—died November 23, 1937, Giridih, Bihar), Indian plant physiologist and physicist whose invention of highly sensitive instruments for the detection of minute responses by living organisms to external stimuli enabled him to anticipate the parallelism between animal and plant tissues noted by later biophysicists. Bose’s experiments on the quasi-optical properties of very short radio waves (1895) led him to make improvements on the coherer, an early form of radio detector, which have contributed to the development of solid-state physics.
After earning a degree from the University of Cambridge (1884), Bose served as professor of physical science (1885–1915) at Presidency College, Calcutta (now Kolkata), which he left to found and direct (1917–37) the Bose Research Institute (now Bose Institute) in Calcutta. To facilitate his research, he constructed automatic recorders capable of registering extremely slight movements; these instruments produced some striking results, such as Bose’s demonstration of an apparent power of feeling in plants, exemplified by the quivering of injured plants. His books include Response in the Living and Non-Living (1902) and The Nervous Mechanism of Plants (1926).

Monday, December 3, 2018

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !


1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.
3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.
4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.
5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.
6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )
8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.
12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.
13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.
14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.
16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.
18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.
19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.
20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.
23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.
24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.
25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.
26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.
27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.
32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
33 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.
34 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
35 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.
36 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.

Wednesday, November 28, 2018

Job oppertunities in Saudi Aramco

This is to announce that Saudi Aramco - SMP employment Project Management Team (PMT) advise to recruit/ hires Indian nationals in the India to hires around 200 open positions all disciplines as per below requirements:
Engineer – Mechanical, Electrical, Civil, Piping, Control & Instrumentation, Process, Structural, Architectural, Communication, Mechanical + Piping, Rotating Equipment, Construction Specialist, Safety/Field Compliance Officers, Environmental Coordinator, Cost Engineer, Scheduling Engineer, Estimating Engineer, Estimating Engineer, Planning Analyst, Quantity Surveyor, Quality Control and Materials Specialist.
Please take note:
1) Interview location is in Chennai - Velachery at Hotel Westin.
Interview Dates: December 2-6, 2018.

2) Interested candidates should be available for personal interview in India / Chennai during the period as mentioned above.
All positions requires minimum of 15 years' experience for Bachelor's degree holders and having SOLID in Oil, Gas, & Petrochemical Constructions business and professional experiences.
All resumes to be submitted to JATCO should have the following information to be visible on the TOP MOST LEFT:
Name of the candidate :
Position Applied :
Current Location :
Total Years of Experience :
Passport Number :
Saudi Aramco Badge # : (if candidates having Aramco experience)
Looking forward to hearing from you ASAP.
E-mail Address: smpemployee@jatco.com.sa
SUCCESS
Isn't about how much money we make.
It's about the difference we make in people's lives.

Monday, November 26, 2018

MP44 (Sturmgewehr 44), Germany

The StG 44 (abbreviation of Sturmgewehr 44, "assault rifle 44") is a German selective-fire rifle developed during World War II. It is also known under the designations MP 43 and MP 44 (Maschinenpistole 43 and 44).
The StG 44 was the first successful and widely produced design to use a new shorter cartridge, which permitted controllable automatic fire from a weapon more compact than a battle rifle, coupled with the recognition that most aimed rifle fire in combat situations did not exceed a few hundred metres.
By all accounts, the StG 44 fulfilled its role effectively, particularly on the Eastern Front, offering a greatly increased volume of fire compared to standard infantry rifles. It would go on to influence the AK-47 in the years following shortly after the war. However, it came too late to have a significant effect on the outcome of the war. Its lasting effect was its major influence on modern infantry small arms development, giving rise to an entire class of weapons using the name assault rifle.

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த வேற்று மாநிலத்தினர்! VS தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத தமிழர்கள்!


Saturday, November 24, 2018

The Roses of Heliogabalus is an 1888 painting by the Anglo-Dutch

“Deep into that darkness peering, long I stood there, wondering, fearing, doubting, dreaming dreams no mortal ever dared to dream before.”
—Edgar Allan Poe, The Raven

Image : The Roses of Heliogabalus is an 1888 painting by the Anglo-Dutch artist Sir Lawrence Alma-Tadema depicting the young Roman emperor Elagabalus hosting a banquet.
The painting depicts a (probably invented) episode in the life of the Roman emperor Elagabalus, also known as Heliogabalus (204–222), taken from the Augustan History. Although the Latin refers to "violets and other flowers", Alma-Tadema depicts Elagabalus smothering his unsuspecting guests with rose petals released from a false ceiling.
Mike Patton, Litany IV (Moonchild) 
Cecile G. Tamura

Tuğrul Tower



Tuğrul Tower is a 12th-century tower in the city of Rey, Iran. The 20 meters tall brick tower is the tomb of Seljuk ruler Tuğrul Beg, who died in Rey in 1063. The tower is kept by Iran's Cultural Heritage Organization.

Thursday, November 22, 2018

Maximum Seating Distance from 4k Screen



Since resolutions found today are almost exclusively 4k/Ultra HD, It takes a very big TV watched from very close to see imperfections related to the resolution. Because of this, one can appreciate their TVs from much closer for a more immersive experience. Think of it like a movie theater, the more a TV fills your view, the more captivating the content will be.

That doesn't mean you should be sitting a foot away from your TV. Not everybody prefers having the largest screen possible. The human visual system has an angle of view of about 135 degrees horizontally, and while it makes some sense for movies to get as large a TV you can get, content isn't produced to be viewed while filling the entire field of vision. This becomes very apparent if you try to watch sports from up close while fixating a single part of the screen, as it gets quite nauseating.


Higher field of view was first made possible with Full HD resolutions, but 4k enhances that ability even more. Sitting close to a 1080p TV will often make it seem like you are watching your TV through a screen door, even if it is playing a high quality 1080p HD movie. By increasing your distance from the TV, the density of the details will also increase, producing a better image. This is the angular resolution: the number of pixels per angle. The farther away, the higher the angular resolution will be.

Since 4k TVs have such a large density of pixels, it is much more difficult for this issue to arise. You need to be quite close to a fairly large TV for it to be noticeably annoying.
The limit to which you can increase the angular resolution by stepping back depends on your visual acuity. At some point, your eyes are not good enough to distinguish all the details. Studies show that someone with 20/20 vision (or 6/6 in Europe) can distinguish something 1/60 of a degree apart. This means 60 pixels per degree or 32 degrees for a 1080p television. 4k UHD TVs double that to 64 degrees. Keep in mind that you can see a single pixel from further away (depending on its contrast with the rest of the picture).






For 4k, this distance is often too close for most people. This is because 1080p was designed around the field of view logic above. It is the cutting point at which both the optimal field of view and 60 pixels per degree meet. For lower resolutions, it meant sitting a bit further than preferable to not notice the pixels, 4k resolutions and higher give you a lot more freedom. Because of this, visual acuity isn't really the best way to find the right distance anymore, and it should instead be used as a way to figure out the closest point you can sit to a TV without hitting its resolution limitation.
Thanks
https://www.rtings.com/



சம்மந்தனின் தவறுகள் – எதிர்க்கட்சித் தலைவராக



Karunakaran Sivarasa

1. 26.11.2018 வெள்ளிக்கிழமை இரவு மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பை மீறிய செயல், ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கை, அரசியல் சதி என்றால், அதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சம்மந்தன் உடனடியாகக் கண்டிக்கவில்லை. அது தவறு என்றும் சொல்லவில்லை. இது தவறெனச் சம்மந்தன் கருதியிருந்தால் மகிந்த ராஜபக்ஸ பதவியேற்ற அன்றிரவே தனது எதிர்ப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய பொறுப்பாகும்.
2. மறுநாள் மகிந்த ராஜபக்ஸ சம்மந்தனை அழைத்தது தனக்குரிய பெரும்பான்மைக்கான ஆதரவைப் பெறுவதற்காகவே. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சம்மந்தனை மகிந்த அழைக்கவில்லை. அப்படிப் பேசவும் இல்லை. இதைத் தெரிந்து கொண்டே சம்மந்தன் மகிந்த ராஜபக்ஸவைச் சந்திக்கச் சென்றிருந்தார்.
கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையிலேயே “சந்திரிகா குமாரதுங்கவின் தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா?” எனக் கேட்டதை நாம் அவதானிக்கலாம்.
முதலில் இந்தச் சந்திப்பே தவறானது.
ஏனெனில் பிரதமரை நியமித்தபோது குறைந்த பட்ச நாகரீகமாக அதைப்பற்றிய தகவலை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஜனாதிபதி தெரியப்படுத்தியிருக்க வேணும். அப்படிச் செய்யவே இல்லை. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக ஏற்றுக்கொண்டே சம்மந்தன் சந்தித்திருக்கிறார். அந்த அடிப்படையில்தான் சந்திரிகா முன்வைத்த தீர்வுத்திட்டத்தை அமூல்படுத்தமுடியுமா என்று கேட்டதும்.
இதன் மூலம் மகிந்த ராஜபக்ஸவின் பிரதமர் நியமனத்தைச் சம்மந்தன் ஏற்றிருக்கிறார். அதாவது கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும்.
சம்மந்தனின் கோரிக்கையை அல்லது அந்த நிபந்தனையை மகிந்த ராஜபக்ஸ ஏற்றிருந்தால் இன்று அவர் கூட்டமைப்பின் ஆதரவோடு பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்ற தலைவர். பிரதமர். அதற்குப் பிறகு பாராளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை மைத்திரி எடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது. இப்போதைய குழப்பங்கள், இழுபறிகள், பாராளுமன்ற மோதல்கள் போன்றவையும் வேறு விதமாகியிருக்கலாம். இல்லாமலும் போயிருக்கும். அதாவது சட்டபூர்வமான பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நீடித்திருப்பார்!
(இப்படியெல்லாம் செய்து விட்டு முன்பின் முரணாக “மகிந்த ராஜபக்ஸவின் பிரதமர் நியமனம் சட்டவிரோதமானது” என்று கூட்டமைப்பினால் எப்படிச் சொல்ல முடியும்?)
3. பாராளுமன்றம் கலைக்கப்பட்டபோது அது அரசியல் சாசனத்துக்கும் மக்களுடைய ஆணைக்கும் எதிரானது. ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையிலிருந்து தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை.
4. நீதிமன்றத் தீர்ப்பையடுத்துப் பாராளுமன்றம் கூடியபோது அதிகாரப்போட்டிக்காக பாராளுமன்றத்தில் முறைகேடாக உறுப்பினர்கள் நடந்து கொண்டமையை எதிர்க்கவோ கண்டிக்கவோ இல்லை. ஆனால், அதற்கான எதிர்ப்புக்குரலைக் கொடுத்திருக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவருக்குரியது.
5. மகிந்த ராஜபக்ஸவின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை மறுத்து ஜனாதிபதி அடாத்தாகச் செயற்படுவதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்தானத்திலிருந்து இதுவரையில் சம்மந்தன் எதிர்க்கவில்லை. அப்படி ஒரு அறிக்கை கூட வந்ததில்லை.
6. அதிகாரப் போட்டியின் காரணமாக நாட்டுக்கும் ஆட்சிக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நெருக்கடி மற்றும் பாதகமான நிலைமை குறித்து மக்களுக்கு உத்தியோக பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் எதையும் சொல்லவேயில்லை. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சியில் நாட்டிலுள்ள முக்கியமான தரப்பினருக்குள்ள பொறுப்பை உணர்த்தி அவர்களை அணிதிரட்ட வேண்டிய கடமையையும் செய்யவில்லை.
7. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை போன்றவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கையீனமும் மரியாதைக்குறைவும் ஏற்பட்டிருக்கும்போது அந்த வெற்றிடத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பு அதற்கான குரலை உயர்த்துவது. அதை அவர் செய்யத் தவறியுள்ளார்.
8. இந்தக் காலகட்டத்தில் சம்மந்தன் மகிந்த, மைத்திரி, ரணில் ஆகியோரைப் பல தடவை சந்தித்திருக்கிறார். அவர்களுடன் கூட்டமைப்பின் தலைவராகப் பேசியிருக்கிறாரே தவிர, எதிர்க்கட்சித் தலைவராக இல்லை. ஒரேயொரு தடவை மட்டுமே ஜனாதிபதிக்கு நீங்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்கிறீர்கள் எனக் கூறியிருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவருடன் நீங்கள் சந்திக்கிறீர்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தரப்பினரின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி, அவரவரின் பொறுப்புகளுக்குப் பதிலளிக்கும் நிலையை உணர்த்தியிருக்க வேணும்.
(நடந்த சந்திப்புகளை நினைவு கொண்டு பார்த்தால் இந்த உண்மை புரியும்).

சம்மந்தன் செய்திருக்க வேண்டியதும் செய்ய வேண்டியதும்
கருணாகரன்
2015 க்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகப் பலமுடைய தலைவராக இருப்பவர் திரு. சம்மந்தன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று சொல்ல முடியும். எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற இருநிலைகளிலும் அவருடைய பலம் மிக உயர் வலுவுடையது. அதாவது எதையும் தீர்மானிக்கும் அரசியற்சக்தி இப்பொழுது சம்மந்தனிடமுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவினதும் ஐ.தே.கவினதும் அரசியல் தலைவிதியைத் தீர்மானித்துக் கொண்டிருப்பதே இன்று சம்மந்தன்தான். ஏன் மகிந்த ராஜபக்ஸவினுடையதும்தான்.
சம்மந்தன் நினைத்திருந்தால், மகிந்த ராஜபக்ஸவின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்து அவரைப் பிரதமராக்கியிருக்க முடியும். ரணிலைக் களத்திலிருந்து அகற்றுவதும் தொடர்ந்து வைத்திருப்பதும் கூடச் சம்மந்தனின் கைகளிலேயே உள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலை நீடிப்பதும் முடிவுக்கு வருவதும் கூடச் சம்மந்தனின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதனால்தான் அவரை மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஆள்மாறி ஆளாக அடிக்கடி அழைத்துப் பேசுகிறார்கள். தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்கிறார்கள் (கெஞ்சுகிறார்கள்).
இது ஏறக்குறைய 2009 க்கு முன்பு விடுதலைப்புலிகளிடம் இருந்த பலத்துக்கும் வாய்ப்புகளுக்கும் நிகரானது. அதையும் விடப் பலமானது எனலாம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தடுமாற்றங்களில்லாமல், வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களில் சிக்கிச் சீரழியாமல், சுமந்திரனின் தனிப்பட்ட விருப்பங்களுக்கெல்லாம் இழுபடாமல் துணிவோடும் தூரநோக்கோடும் நல்ல முடிவுகளைச் சம்மந்தன் எடுப்பாராக இருந்தால் எதையும் செய்ய முடியும். மாற்றங்களை உண்டாக்க முடியும்.
ஆனால், இதெல்லாத்தையும் பெறுமதியற்று வீணாக்கிக் கொண்டிருக்கிறார் சம்மந்தன். (மடியில் மாணிகக் கற்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. அவ்வளவையும் அவர் மண்ணாக்கிக் கொண்டிருக்கிறார்). அவருடைய கைத்தடியாக இருக்கும் சுமந்திரன் ஆணைக்கொம்பாக மாறியதன் விளைவே இது.
இதில் முதல் பலியாகியிருப்பது சம்மந்தன். சம்மந்தன் பலியாகியிருப்பதன் மூலமாக தமிழ் மக்கள். மட்டுமல்ல, முழு இலங்கைத்தீவும்தான்.


A computational foundation for thalamic engagement in cognitive flexibility.

Cecile G. Tamura
Neural representations of task rules are maintained in the prefrontal cortex, the part of the brain responsible for planning action. 
A new study from MIT has found that a region of the thalamus is key to the process of switching between the rules required for different contexts. This region, called the mediodorsal thalamus, suppresses representations that are not currently needed. That suppression also protects the representations as a short-term memory that can be reactivated when needed.
:The findings could help guide the development of better artificial intelligence algorithms. The human brain is very good at learning many different kinds of tasks — singing, walking, talking, etc. However, neural networks (a type of artificial intelligence based on interconnected nodes similar to neurons) usually are good at learning only one thing. These networks are subject to a phenomenon called “catastrophic forgetting” — when they try to learn a new task, previous tasks become overwritten.
Halassa and his colleagues now hope to apply their findings to improve neural networks’ ability to store previously learned tasks while learning to perform new ones."
Interactions between the prefrontal cortex (PFC) and mediodorsal thalamus are critical for cognitive flexibility, yet the underlying computations are unknown. To investigate frontothalamic substrates of cognitive flexibility, we developed a behavioral task in which mice switched between different sets of learned cues that guided attention toward either visual or auditory targets. We found that PFC responses reflected both the individual cues and their meaning as task rules, indicating a hierarchical cue-to-rule transformation. Conversely, mediodorsal thalamus responses reflected the statistical regularity of cue presentation and were required for switching between such experimentally specified cueing contexts. A subset of these thalamic responses sustained context-relevant PFC representations, while another suppressed the context-irrelevant ones. Through modeling and experimental validation, we find that thalamic-mediated suppression may not only reduce PFC representational interference but could also preserve unused cortical traces for future use. Overall, our study provides a computational foundation for thalamic engagement in cognitive flexibility.

19th century ottoman daggers

The hardstone hilt with scattered gilt decoration above a steel blade with damascene calligraphy, the silver scabbard with floral design and inset with ruby red and emerald green stones



This Butterfly was an owl in past life.


Fixed vs Growth Mindset

Carol Dweck studies human motivation. She spends her days diving into why people succeed (or don’t) and what’s within our control to foster success. Her theory of the two mindsets and the difference they make in outcomes is incredibly powerful.
As she describes it: “My work bridges developmental psychology, social psychology, and personality psychology, and examines the self-conceptions (or mindsets) people use to structure the self and guide their behavior. My research looks at the origins of these mindsets, their role in motivation and self-regulation, and their impact on achievement and interpersonal processes.”

In a fixed mindset, people believe their qualities are fixed traits and therefore cannot change. These people document their intelligence and talents rather than working to develop and improve them. They also believe that talent alone leads to success, and effort is not required.
Alternatively, in a growth mindset, people have an underlying belief that their learning and intelligence can grow with time and experience. When people believe they can get smarter, they realize that their effort has an effect on their success, so they put in extra time, leading to higher achievement.

உடலில் இந்த இடங்களில் வலி இருந்தால், என்னென்ன உறுப்புகள் ஆபத்தில் உள்ளது என அர்த்தம்...!


 "வலி"- நாம் பிறக்கும் போதும் நமது உயிரை விடும் போதும் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் ஒரு வித உணர்வை தருவதே. வலி உடல் அளவிலும் உளவியல் ரீதியாகவும் மாறுபடும். ஆனால், அதன் உணர்வு ஏனோ ஒன்றுதான். உடல் அளவில் ஏற்பட கூடிய வலிகளுக்கு மருந்துகள் கண்டறிய முடியும். ஆனால், உளவியல் சார்ந்த வலிகளை குணப்படுத்த நாம் தான் பக்குவமாக கையாள வேண்டும். உடலில் ஒரு சில இடங்களில் வலி ஏற்பட்டால் மோசமான விளைவை கூட தருமாம். எந்தெந்த இடங்களில் வலி ஏற்பட்டால் பேராபத்தை தரும் என்பதை இனி அறிவோம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அடி வயிற்றில் வலியா..? பலர் வயிற்று பகுதியில் ஏற்படும் வலிகளை சாதாரணமாக எடுத்து கொள்வார்கள். ஆனால், அடி வயிற்றில் வலி இருந்தால் கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள். ஏனெனில் கிட்னியில் கோளாறு, குடல் புற்றுநோய், குடலில் சதை வளருதல் போன்ற பிரச்சினையாக கூட இருக்கலாம். எனவே, அடி வயிற்று பகுதியில் வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
ஆண்களின் வலி..! அது என்ன ஆண்களின் வலி..? ஆமாங்க, ஆண்களின் விரைகளில் பயங்கர வலி ஏற்படுமாம். இது போன்ற வலியை கட்டாயம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். மேலும், உங்களின் பிறப்புறுப்பில் வீக்கம் அல்லது சிவந்திருந்தால் பல வித நோய்களுக்கான அறிகுறியாகும். சிறுநீர் கழிக்கும் போது வலியா..? நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி இருந்தால் இவை பாலியல் சார்ந்த தொற்று நோயிற்கான அறிகுறியாக இருக்கலாம். அதாவது, உங்கள் துணையுடன் உடலுறவு வைத்து கொள்ளும் போது, ஒரு வித தொற்றுகள் உங்களின் இனப்பெருக்க உறுப்பில் சென்று பல அபாயகரமான நோய்களை தந்து விடுமாம். எனவே, இது போன்று உங்களுக்கு இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
நடுமுதுகில் வலியா..? முதுகில் ஏற்பட கூடிய வலிகள் முதுகை மட்டுமே பாதிக்கும் என நாம் நம்பி கொண்டிருந்தோம். ஆனால், நடு முதுகில் வலி இருந்தால் கிட்னியில் தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறதாம். இந்த அறிகுறியை அப்படியே விட்டால் சிறுநீரகம் பழுதடைதல், ரத்தத்தில் விஷ தன்மை ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.  இந்த தினசரி பழக்க வழக்கங்கள் தான் உங்களின் நுரையீரலை மோசமான நிலைக்கு தள்ளுகிறது..  அடிக்கடி தலை வலியா..? பலர் இந்த வலியை மிக சாதாரணமாக எடுத்து கொள்வார்கள். ஆனால், இவை மூளையையும் நரம்புகளையும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாகும். ரத்த நாளங்களில் பிரச்சினை, மூளை பாதிப்பு, புற்றுநோய், ரத்த ஓட்டம் தடைபடுதல் போன்ற பிரச்சினைகளால் இந்த வலி ஏற்படலாம்.
 மணிக்கட்டில் வலியா..? மணிக்கட்டு பகுதியில் வலி இருந்தால், அதற்கு காரணம் இவைதான். அதாவது carpal tunnel syndrome என்றழைக்கபடும் தசை சார்ந்த பிரச்சினையாக இது கருதப்படுகிறது. கைகளில் மணிக்கட்டு பகுதியில், முழங்கை பகுதியில் வலி இருந்தால் சற்றே ஆபத்தான அறிகுறியாகும். மார்பக வலியா..? நம் அனைவருக்குமே நன்கு தெரியும், மார்பகங்களில் வலி ஏற்பட்டால் மாரடைப்பு, இதயம் நோய்களாக இருக்கும் என்பது. ஆனால், இதை தாண்டியும் ஒன்று உள்ளது. மார்பக பகுதியில் வலி இருந்தால் அவை மார்பக புற்றுநோயாக கூட இருக்கலாம். அதே போன்று, இந்த வலியை தொடர்ந்து தாடை, தோள்பட்டை, கழுத்து ஆகிய பகுதிகளிலும் வலி உண்டாகும். கீழ் முதுகில் வலியா...?
உங்களுக்கு ஏற்படுகின்ற வலி கீழ் முதுகில் இருந்தால் அவசியம் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும். ஏனெனில், இந்த வலி பித்தப்பையை பாதித்து, சீறுநீரக பிரச்சினை, கை கால் செயலிழத்தல் போன்ற அபாயகரமான நிலையை தந்து விடுமாம். MOST READ: இந்த ஐந்து நபர்களை மட்டும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார் பெண்களின் வலி..! பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படுவது சாகஜம் தான். ஆனால், மாதவிடாய் காலங்கள் அல்லாமல் மற்ற காலங்களில் இது போன்ற வலி இருந்தால், கர்ப்பப்பை கட்டிகளாகவும், சிறுநீரக பாதையில் தொற்றுக்கள் உண்டாகியும் இருக்கலாம்.
பாத வலியா..? பாதங்களில் முள் குத்துவது போன்ற உணர்வு அடிக்கடி இருந்தால் அவை சர்க்கரை நோயிற்கான அறிகுறியாம். மேலும், இது போன்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்வது சிறந்தது. மேற்சொன்ன இடங்களில் வலி இருந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசியுங்கள் நண்பர்களே.

Monday, November 19, 2018

வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே' ஹோண்டா



உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாமனிதன்.... படியுங்கள் பகிருங்கள்!

முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.
தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.
அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.
அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.
தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.
Toyoto நிறுவனத்திற்கு piston(உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.
யாருக்காகவும் அவன்காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.
இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.
முதலாவது கனவுத் திட்டம் படுதோல்விஅடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.
புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய pistonமாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.
எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சீமெந்து தட்டுப்பாடு.
எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சீமெந்துக் கூட கிடைக்கவில்லை. ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர்நண்பன்.
இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சீமெந்து கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.
ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.
அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.
ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.
ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.
மொத்தத்தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.
இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........
ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......
“நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெற்றோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.
எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.
அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.
அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.
அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று?????
அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.
கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.
அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.
முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.
5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள்முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.
முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.
அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.
இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.
ஹோண்டா கார்களுக்கு மேற்கத்தேய நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.
ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் அனைவருக்கும் நினைவுக்குவருவது, அதன் மாமனிதன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று.....ஜீ.ஜெ. பிரகாஸ்

திறந்த-மூடிய கதவு


There’s a Final, Forgotten Stage of Maslow's Hierarchy of Needs

Transcendence refers to the very highest and most inclusive or holistic levels of human consciousness, behaving and relating, as ends rather than means, to oneself, to significant others, to human beings in general, to other species, to nature, and to the cosmos. (The Farther Reaches of Human Nature, New York, 1971, p. 269.)

Maslow's hierarchy as we commonly know it is incomplete, says Nichol Bradford. Later in his life, after the hierarchy had been published, Maslow began work on a final stage of human motivation. Self-actualization was not the pinnacle of individual human achievement, but rather self-transcendence. Not an elevation of the self, but a subverting of it.
This takes us to different perspectives on human psychology itself. Achieving self-actualization means resting comfortably inside the boundaries of human psychology — accomplishing what is knowable and testable — while self-transcendence means pushing beyond them. Whether through spiritual meditation, self-denial, or more recently through technological means, challenging the definition of consciousness to expand into new areas of knowledge — beyond self-knowledge — may be the ultimate stage of human development.

One technological path toward self-transcendence is the singularity, an event in which human biology and computers become one. Integrating hardware and software into the flesh and mind of our bodies represents an opportunity to literally overcome our present physical limitations. While this may yet prove a promising endeavor, Bradford says human problems still have human solutions. Overcoming the narrow confines of the self may be as simple as giving yourself over to others: their dreams, their goals, their passions. And by doing so, you become one with them.
https://bigthink.com

Albert Einstein with students at Princeton University, 1946

Albert Einstein with students at Princeton University, 1946. From the archives of the Leo Baeck Institute.

Saturday, November 10, 2018

1970 க்குப் பிறகு 60% மிருகங்கள் அழிந்துள்ளன..!"- அதிர்ச்சித் தரும் WWF அறிக்கை.

சுமார் 50 வருடகாலத்தில் மற்ற நாடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் அழிந்து இந்தியா, சீனா மற்றும் சுற்றியுள்ள சின்னஞ்சிறிய நாடுகளில் மட்டுமே மனிதர்கள் பிழைத்திருக்கும் நிலை வந்தால் என்ன ஒரு பதற்றமும், பயமும் இருக்கும். ஆனால், எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் அதுதான் நமது துணை இனங்களான மிருகங்களுக்குக் கடந்த 50 வருடங்களில் நடந்துள்ளது என்கிறது 2018 க்கான WWF (World Wide Fund for Nature) அமைப்பின் `Living Planet' ஆய்வறிக்கை. அதன்படி 1970-ம் ஆண்டுக்குப் பிறகு முதுகெலும்பு இனங்களில் சுமார் 60% மனித நடவடிக்கைகளாலும், ஆதிக்கத்தாலும் நடந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. இது பாலூட்டிகள், பறவைகள் என அனைத்தையும் உள்ளடக்கியது.
நாம் எந்த அளவு அழுத்தத்தை மிருகங்களுக்கும் இயற்கைக்கும் தந்துள்ளோம் என்பதை நினைவுபடுத்தும் அபாயமணி இது என்பதை அணிந்துரையில் கூறுகிறார் இதன் நிர்வாக இயக்குநர் மார்கோ லம்பர்டினி. மொத்தமாகப் பூமியில் நடந்துள்ள மாற்றத்தைக் கண்காணித்துள்ள இந்த 75 பக்க அறிக்கையைப் பார்வையிட்டதில் முக்கிய அச்சுறுத்தும் தகவல்களை மட்டும் இங்குப் பட்டியலிடுகிறேன்.
நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை சமீபத்தில் உலகம் மாறியுள்ளது, இயற்கை நமக்கு ஏன் தேவை, பல்லுயிர்களைக் காப்பது ஏன் மிகமுக்கியம் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது. தூய்மையான காற்று, நீர் தொடங்கி வணிகவளங்கள் வரை இயற்கைதான் நமக்கு வாழ்வளித்து வருகிறது. வருடம் 125 ட்ரில்லியன் டாலர்கள் வரை இயற்கையின் வழியாக மட்டும் நாம் வருமானம் ஈட்டுகிறோம். உலகமயமாக்கலுக்குப் பின் கடகடவென வளர்ந்துள்ள நாமும், நம் வணிகமும் இயற்கையை அப்படியே மறந்துவிட்டோம். கடைசி பனியுகத்துக்குப் பிறகு சுமார் 11,700 ஆண்டுகளாகச் சமநிலையில் இருக்கிறது பூமி. இது இன்னும் 50,000 ஆண்டுகள் தொடரும் என்பது கணிப்பு. ஆனால் நடந்துவரும் அதிவேக மாற்றங்களால் அவ்வளவு காலம் தொடர வாய்ப்பில்லை. இந்த யுகமே `Anthropocene' என்றுதான் அழைக்கப்படுகிறது. இதற்கு மனிதர்கள் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்திய காலம் என்று பொருள்.
1500 க்குப் பிறகு அழிந்த மிருக இனங்களில் 75% அதிகமானவற்றுக்கு மனித நடவடிக்கைகள்தாம் காரணமாக இருந்துள்ளனவாம். இதில் விவசாயத்துக்காக அழிக்கப்பட்ட காடுகளும் ஒரு முக்கியக் காரணம். இன்றும் வாழ்வினங்களுக்கு அதே வேட்டையாடுதல், அளவுக்கு அதிகமான மீன்பிடித்தல், காடுகளை அழித்தல் போன்ற நடவடிக்கைகள் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
நிலச் சீரழிவால் நிலம் சார்ந்த சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இது 300 கோடிக்கும் மேலான மனிதர்களையே நேரடியாகப் பாதிக்கிறது. தற்போது உலகில் வெறும் கால் பங்கு நிலம்தான் மனித பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் இருந்துவருகிறது. 2050-ம் ஆண்டை எட்டும்போது இது பத்தில் ஒரு பங்காகிவிடும். இந்த நிலச் சீரழிவால் மகரந்த சேவை செய்யும் தேனீக்கள், பூச்சிகள் தொடங்கி பெரிய மிருகங்கள் வரை பாதிப்புகளைச் சந்திக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைவது மிகவும் மோசமான நிலையைப் பூமியில் உண்டாக்கும். உலகின் 75% பயிர்கள் இந்த மகரந்தம் இல்லையென்றால் உயிர்பெறமுடியாது. இந்தப் பயிர்களும் மற்ற காய்கனிகளும்தாம் மனிதனின் முக்கிய உணவாக அன்று முதல் இன்றுவரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றம் தொடங்கி நகரமயமாக்கல் வரை நாம்தாம் இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கு பெரிய காரணமாக இருந்துவருகிறோம். இந்த மகரந்த சேவகர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டியது நமது கடமை.
பூமியில் மண்ணில் இருக்கும் வளங்களும் பெரும் அளவில் சுரண்டப்பட்டு வருகின்றன. உலகின் கால்வாசி உயிரினங்கள் நம் காலின் கீழ் தான் இருக்கின்றன. இதில் இருக்கும் நுண்ணுயிர்கள்தாம் மண்ணின் தன்மையை நிர்ணயிக்கின்றன. கிட்டத்தட்ட மனிதர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் மண்ணுக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருந்துகொண்டேதாம் இருக்கின்றன. மண்ணுக்கு மிகவும் ஆபத்தான சூழல் இருக்கும் பரப்புகளில் இந்தியாவும் இடம்பெறுகிறது.
Soil அறிக்கை:
இந்த வருடங்களில் அடுத்த மிகப்பெரிய பாதிப்புகளை கண்டது காடுகள்தாம். இதற்கென்றே `Living Forests' என்ற சிறப்பு ஆய்வறிக்கையை வெளியிடுகிறது WWF. கால்நடை பராமரிப்பு, அதிக அளவிலான வேளாண்மை, காட்டுத்தீ, சுரங்க வேலைகள், நீர் மின் நிலையங்கள், அதிக அளவில் வெட்டப்படும் மரங்கள் ஆகியவைதாம் காடுகளுக்கு முக்கியப் பாதிப்புகளுக்குக் காரணிகளாகப் பார்க்கப்படுகிறது. அதிக அழிவை 2010 தொடங்கி 2030 வரை சந்திக்கவுள்ள இடங்களும் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அமேசான் போன்ற முக்கியக் காடுகள் பெரும் அழிவைச் சந்திக்கின்றன.
Forest அறிக்கை:
நிலம் மட்டுமல்லாமல் நீர்நிலைகளும் மனித பாதிப்புகளிலிருந்து தப்பிக்கவில்லை. பவளப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள்தாம் மிகவும் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன. 20 கோடிக்கும் மேலான மக்கள் பவளப்பாறைகளை நம்பிதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அது அவர்களுக்கே தெரியாது. அவர்களை பெரும் அலைகளிலிருந்தும், புயல்களிலிருந்தும் பாதுகாப்பது அவைதாம். இப்போது இருக்கும் நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் பாதிக்குள் 90% பவளப்பாறைகள் காணாமல் போக வாய்ப்புண்டு. மேலும் வளர்த்துவரும் சாட்டிலைட், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக மீன்பிடித்தல் எந்த அளவு மீன் இனங்களை அழித்துவருகிறது எனவும் தெரியவந்துள்ளது. பிடிக்கப்படும் 1500 மீன் இனங்களில் 10 மட்டும்தான் மீண்டும் பிடிக்கப்படும் எண்ணிக்கையை அடைகிறது. இது மட்டுமல்லாமல் கடல்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக்தான். கோடிக்கணக்கான டன்களில் பிளாஸ்டிக் கடல்களில் வருடாவருடம் கொட்டப்படுகிறது. இவை மக்காமல் பல வருடங்கள் கடலிலையே தங்குகின்றன. இவை பலவும் உயிரினங்களின் உணவு சங்கிலிக்குள் நுழைந்துவிடுகின்றன. 90% கடல் பறவைகளின் வயிற்றில் ஏதேனும் பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இந்த நிலை வரும் வருடங்களில் இன்னும் மோசமடையும். கடல் என்றில்லாமல் நல்லநீர் நிலையங்களான நதிகளும், குளங்களும் கூட சமீபத்தில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பாதிப்புகள் அனைத்தும் உயிரினங்கள் அழியக் காரணமாக உள்ளன. முக்கியமாக `Neotropical' என அழைக்கப்படும் தென்அமெரிக்கா கண்டத்தில் கடந்த 50 வருடத்தில் எண்ணிக்கையில் உயிரினங்கள் கிட்டத்தட்ட 90% குறைந்துள்ளன. அடுத்து அதிக எண்ணிக்கை குறைந்துள்ளது இந்தியாவை உள்ளடக்கிய 'Indo-Pacific' பகுதியில்தான்.
இது பானையின் ஒரு சோற்றுப்பருக்கைதான். மேலும் பல பாதிப்புகள் இந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றமும், அழிவும் மனிதம் ஏற்படுத்தியதாகக் கூறுகிறது இவ்வறிக்கை. ஆனால் உண்மையில் மனிதம் என்றில்லாமல் நமது பேராசைகளும் அதைச் சுருண்டும் உலக வணிகமும்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறது ஒரு தரப்பு. அவர்கள் பெரும் வணிக முதலாளிகளிருந்து தான் மாற்றம் தொடங்கவேண்டும் என்கின்றனர். ஆனால் அதற்காக இதில் சாமானியனின் பங்கு இல்லவே இல்லை என்று மறுத்துவிடவும் முடியாது. நாம் தொடங்கிய இதை மாற்றுவதற்கான முயற்சி நம்மிடமும் தொடங்கவேண்டும். 
Source_Vikatan.