Search This Blog

Tuesday, September 11, 2018

புல்லுமலையில் நீரெடுத்து போத்தலில் அடைத்து விற்கும் கம்பனி ஒன்றின் முன்னைடுப்புகள் தொடர்பாக


மட்டக்களப்பில் தண்ணீர் போராட்டம் பிரவகித்திருக்கும் இந்தக் காலத்தில் பலரும் பல விதமாக இது பற்றி எழுதியும், செயல்பட்டும் வருகிற போதினில் இந்த மண்ணில் வாழும் நான், கருத்துச் சொல்லாதிருப்பது எனது நெஞ்சாங்கூட்டை வாளால் அறுப்பது போல் உணர்வதால் எழுதுகிறேன்.
உலகின் எல்லாப் பாகங்களிலும் குடிநீர் தட்டுப்படத் தொடங்கிவிட்டது.நீர் சூழ் உலகில் 15% மட்டுமே நன்னீர் என்பதை அறிவோம். நன்னீரைப் புதுப்பிக்கும் ஒரே வழியாக மழை மட்டுமே காணப்படுகிறது.மழை நீர் பூமிக்கடியிலும், நீரேந்து நிலைகளிலும் சேமிக்கப்பட்டு மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பனி மலைகள் உருகுவதாலோ, மலை முகடுகளிலிருந்து ஊற்று வீழ்ச்சியாகவோ மட்டக்களப்பு மக்களுக்கு நீர் கிடைப்பதில்லை. நமது மாவட்டத்தில் மழை வீழ்ச்சி குறைவடையத் தொடங்கி நீண்ட காலமாயிற்று என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
உலகில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் பொருளாகி பல்லாண்டுகள் கடந்துவிட்டன.
பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் தாதுப் பொருட்களைக் கிண்டி எடுத்து பணமாக்கி வங்கிகளில் முதலீடு செய்தன. இப்போது தாதுப் பொருட்கள் முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டதனால், தண்ணீரைக் கிண்டி எடுத்துப் பணமாக்க கம்பனிகள் முயல்கின்றன.இவ்வாறான பல திட்டங்களில் இலங்கை அரசு பல ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளது.இவ்வாறே உள்ளூராட்சி நிறுவனங்களும் இது விடயத்தில் சோரம் போயுள்ளன. இவ்வாறு மக்கள் நலனுக்கு எதிராக போத்தலில் நீரை அடைத்து விற்கும் கம்பனிக்கு அனுமதி அளித்ததனால் சோரம் போயுள்ள உள்ளாட்சி நிறுவனங்களில் ஏறாவூர் பற்று பிரதேச சபையும் இணைந்துகொண்டுள்ளது.
மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகவே இடம்பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.ஆனால் மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் அரசியல் போர் தண்ணீருக்கானது எனக் காட்ட முற்படும் இரு தரப்பையும் சேர்ந்த பிற்போக்கு அரசியல்வாதிகளையும் மக்கள் இனங்காண வேண்டும்.
1) தண்ணீரைத் தனியார்மயப்படுத்த அனுமதிக்க முடியாது.
2) உலகவங்கி 1997 இல் தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பொலிவியா நாட்டுக்கு நிதியுதவி அளித்ததைப் போல இலங்கையில் செயல்பட அனுமதிக்க முடியாது.
3) தண்ணீர் விற்பனைப் பண்டமல்ல, அது மக்களுக்கான இயற்கையின் கொடையாகும்.
மேலே குறிக்கப்பட்ட மூன்று அடிப்படைகளிலும் இருந்து வழுவுதல் மனுக்குல விரோத செயல்பாட்டுக்கு உதவுதலாக அமையும்.
மேற்சொன்ன அனைத்து உண்மைகளுக்கும் அப்பால் புல்லுமலையில் நீரெடுத்து போத்தலில் அடைத்து விற்கும் கம்பனி ஒன்றின் முன்னைடுப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர் மற்றும் ஆதரவு நிலைப்பாடுகள் காணப்படுவதை அவதானிக்கிறேன்.
இயற்கையை நேசிப்பதாகவும், தமிழர் பூமியைக் காப்பதாகவும், தமிழ் உணர்வாளர்கள் போலவும் காட்டிக்கொண்டு மட்டக்களப்பில் பிரதேசத் தமிழரசியல் குழு ஒன்று, இந்த நீரைச் சுரண்டும் முயற்சியை முஸ்லிம் சமூகம் செய்வதாக தந்திரமாகப் பிரச்சாரம் செய்கிறது.
வழமையான முஸ்லிம் வணிக அரசியலாளர்கள் - புல்லுமலைப் போத்தல் நீர் விவகாரத்தை எதிர்ப்பதை முஸ்லிம் என்ற அடையாளத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் மக்களை உணர்ச்சிக் கொம்பில் ஏற்றி இலாபம் சம்பாதிக்க முயல்கிறார்கள்.
நமது நாட்டில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட கடந்த பல பத்தாண்டுகளாக மூன்று இனத்தவர்களாலும் தீவிர உணர்ச்சி அரசியல் செய்யப்பட்டு வருகிறது. அரசியலில் தானாக உணர்ச்சி வசப்படுதல் நன்மையை நோக்கியதாகவும்- வேறெவராலும் உணர்ச்சிவசப்படுத்துதல் தீமையை நோக்கியதாகவும் அமையும் என்ற அனுபவ ரீதியான எதார்த்தத்தை பெரும்பாலோர் திரிகரண சுத்தியுடன் இன்னும் உணரவில்லை.
இந்த நிலைமையில் புல்லுமலை நீரரசியல் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.புல்லுமலை தமிழ் சிங்கள எல்லைப் பிரதேசமாகும் இங்கே தமிழ் முஸ்லிம் முரண்பாடு ஆழமாவது அப்பகுதியில் அரசின் ஆதரவுடனான சிங்களக் குடியேற்றத்தை இலகுவாக்கும் என்பதை உணர்தல் வேண்டும்.
தமிழரசியல்வாதிகளே!
சமூகத்தளத்தில் வேலை செய்வது என்பதையும், ஆட்சித் தளத்தில் வேலை செய்வது என்பதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். நீங்கள் இந்த நல்லாட்சியில் எதிர்க்கட்சியில் இருந்தவாறே ஆளுங்கட்சி உறுப்பினர்களாகச் செயல்படுகிறீர்கள் என்பதையும் மறக்கவேண்டாம்.ஆகவே, இந்த நீர் கொள்ளையை நிறுத்துமாறு ஜனாதிபதியையும், பிரதமரையும் கோருங்கள். ஏனெனில் இத்திட்டத்துக்கான அனுமதியை அரசாங்கமே வழங்கியுள்ளது. இந்தப் பிரச்சினை ஈழ தேச மக்களுக்கும் ஒரு கம்பனிக்கும் இடையிலான பிரச்சினையே அன்றி தமிழ்- முஸ்லிம் ஈழவர்களுக்கிடையிலான பிரச்சினை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
முஸ்லிம் குழுநிலை அரசியல்வாதிகளே!
நீங்கள் ஜனாதிபதியையும், பிரதமரையும் ஆராதித்து செய்யும் ஆட்சித்தள அரசியலை ஒத்தி வைத்து சமூகத்தள அரசியலை செய்வீர்களானால் பிரகாசம் பிறக்கும். ஒரு பன்னாட்டு முஸ்லிம் கம்பனிக்கு உதவுவதைவிடவும் தமிழ் முஸ்லிம் உறவை மீளக் கட்டி எழுப்புவதற்கு உதவுவதும், இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதும் பல நூறு மடங்கு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
பிளாஸ்டிக் போத்தல்களில் அடைத்த தண்ணீரைக் குடிப்பது மிகப் பெரும் சுகாதாரக் கேடாகும்.இது எங்கும் சொல்லப்படவில்லை. பிளாஸ்டிக் பாவனையை இலங்கையில் தடை செய்துள்ள இந்த அரசாங்கம் எப்படி பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அடைத்து விற்கும் கம்பனிக்கு அனுமதி வழங்கும் என்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் தைரியம் இந்த அரசியல்வாதிகளுக்கு ஏன் வரவில்லை?
மேலும், தியேட்டர் மோகனை இந்தப் போராட்டத்திற்கு முன்னிலைப்படுத்தியது மாபெரும் தவறாகும்.இவரது நடவடிக்கைகள் பலவற்றின் காரணமாக முஸ்லிம்கள் இவரைத் தங்களுக்கு எதிரானவர் என்று கருதுகிறார்கள். இவர் முன்னர் கிழக்கு மாகாணத்தின் ஆழும் தரப்பாக இருந்த சந்திரகாந்தனின் விடுதலைப் புலிகள் மக்கள் கட்சியின் (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி) முக்கிய பிரமுகராக இருந்தார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மத்தியில் ஆட்சியிலமர்ந்த பின் அக்கட்சியின் அமைப்பாளராக உள்ளார்.தன்னை தனது சொந்தத் தேவைக்கேற்ப ஆழுங்கட்சியின் பிரமுகராக மாறிக்கொள்ளும் இவர், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஏறாவூர் பற்றில் கட்சி தொடர்பான விடயங்களில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார். ஆழுங்கட்சிகளை அவாவி நிற்கும் மோகன் ஏன் இந்த வாய்ப்பை மக்கள் நலனுக்காகப் பாவிக்க முயலவில்லை? இவர் பிரதமரிடம் நீர்ப்பிரச்சினையை எடுத்துக் கூறி கம்பனியின் நடவடிக்கைகளைத் தடை செய்திருக்கலாமே! ஏன் அம்முயற்சியைச் செய்யவில்லை?
தமிழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நீர்க் கொள்ளையின் பாதிப்புகளை இரு சமூகங்களுக்குள்ளும் எடுத்துச் சொல்லி ஹர்த்தாலை இரு சமூக மக்களும் ஒன்றித்துச் செய்திருந்தால் அது அரசுக்கான சரியான அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்.
எதிர் காலத்தில் இவ்வாறு ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு தமிழர்களுக்குள்ளும், முஸ்லிம்களுக்குள்ளும் மூன்றாவது அணிகளின் தோற்றமும் இவ்வணிகளின் கூட்டும் அவசியம் என்பதைப் புல்லுமலை நீர் பிரச்சினை நமக்கு உணர்துகிறது. இன்னும் பல தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளில் கிடைத்த பாடமும் இதுதான். ஆனால் நாம் இன்னும் அனுபவங்களில் இருந்து கிடைத்த பாடங்களைக் கணக்கில் எடுக்கத் தொடங்கவில்லையே!
 Basheer Segu Dawood

Monday, September 10, 2018

Hero of the Freedom ,Respect


தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.


1.அகச்சுரப்பியியல் – Endocrinology
2.அடிசிலியல் – Aristology
3.அடையாளவியல் – Symbology
4.அண்டவியல் – Universology
5.அண்டவியல் – Cosmology
6.அணலியல் – Pogonology
7.அருங்காட்சியியல் – Museology
8.அருளரியல் – Hagiology
9.அளவீட்டியல் – Metrology
10.அற்புதவியல் – Aretalogy
11.ஆடவர் நோயியல் – Andrology
12.ஆய்வு வினையியல் – Sakanology
13.ஆவணவியல் – Anagraphy
14.ஆவியியல் – Spectrology
15.ஆறுகளியல் – Potamology
16.இசையியல் – Musicology
17.இந்தியவியல் – Indology
18.இயற்பியல் – Physics
19.இரைப்பையியல் – Gastrology
20.இலக்கிலி இயல் – Dysteleology
21.இறை எதிர் இயல் – Atheology
22.இறைமையியல் – Pistology
23.இறைமையியல் – Theology
24.இன உறுப்பியல் – Aedoeology
25.இன்ப துன்பவியல் – Algedonics
26.இனப் பண்பாட்டியல் – Ethnology
27.இனவியல் – Raciology
28.ஈரிடவாழ்வி இயல் – Herpetology
29.உடலியல் – Physiology
30.உடற் பண்டுவஇயல் – Phytogeography
31.உடற்பண்பியல் – Somatology
32.உடுவியக்கவியல் – Asteroseismology
33.உணர்வகற்றியல் – Anesthesiology
34.உயிர் மின்னியல் – electro biology
35.உயிர்ப்படிமவியல் – Paleontology
36.உயிர்ப்பொருளியல் – Physiology
37.உயிர்மியியல் – Cytology
38.உயிரித் தொகை மரபியல் – Population Genetics
39.உயிரித்தொகை இயக்க இயல் – Population Dynamics
40.உயிரிய இயற்பியல் – Biophysics
41.உயிரிய மின்னணுவியல் – Bioelectronics
42.உயிரிய வேதியியல் – Biochemistry
43.உயிரிய வேதிவகைப்பாட்டியல் – Biochemical taxonomy
44.உயிரியத்தொழில் நுட்ப இயல் – Biotechnology
45.உயிரியப் பொறியியல் – Bioengineering
46.உயிரியல் – Biology
47.உயிரினக் காலவியல் – Bioclimatology
48.உயிரினச் சூழ்வியல் – Bioecology
49.உருவகவியல் – Tropology
50.உருள்புழுவியல் – Nematology
51.உரைவிளக்கியல் – Dittology
52.உளவியல் – Psychology
53.ஊட்டவியல் – Trophology
54.எகிப்தியல் – Egyptology
55.எண்கணியியல் – Numerology
56.எரிமலையியல் – Volconology
57.எலும்பியல் – Osteology
58.எலும்பு நோய் இயல் – Osteo pathology
59.எறும்பியல் – Myrmecology
60.ஒட்பவியல் – Pantology
61.ஒப்பனையியல் – Cosmetology
62.ஒலியியல் – Phonology
63.ஒவ்வாமை இயல் – Allergology
64.ஒழுக்கவியல் – Ethics
65.ஒளி அளவை இயல் – Photometry
66.ஒளி இயல் – Photology
67.ஒளி உயிரியல் – Photobiology
68.ஒளி விளைவியல் – Actinology
69.ஒளி வேதியியல் – Photo Chemistry
70.ஒளித்துத்த வரைவியல் – Photozincography
71.ஓசையியல் – Acoustics
72.கசிவியல் – Eccrinology
73.கட்டடச்சூழலியல் – Arcology
74.கடப்பாட்டியல் – Deontology
75.கடல் உயிரியல் – Marine biology
76.கடற் பாசியியல் – Algology
77.கண்ணியல் – Opthalmology
78.கணிப்பியல் – Astrology
79.கதிர் மண்டிலவியல் – Astrogeology
80.கதிர் விளைவியல் – Actinobiology
81.கரிசியல் – Hamartiology
82.கரிம வேதியியல் – Organic Chemistry
83.கருத்தியல் – Ideology
84.கருதுகை விலங்கியல் – Cryptozoology
85.கருவியல் – Embryology
86.கருவியல் – Embryology
87.கல்வி உளவியல் – Educational Psychology
88.கலைச்சொல்லியல் – Terminology
89.கழிவியல் – Garbology
90.கனி வளர்ப்பியல் – Pomology
91.கனிம வேதியியல் – inorganic chemistry
92.கனியியல் – Carpology
93.கனியியல் – Pomology
94.காளானியல் – Mycology
95.காற்றழுத்தவியல் – Aerostatics
96.காற்றியக்கவியல் – Aerodynamics
97.காற்றியல் – Anemology
98.கிறித்துவியல் – Christology
99.குடல் புழுவியல் – Helminthology
100.குருட்டியல் -Typhology
101.குருதி இயல் – Haematology / Hematology
102.குளுமையியல் – Cryology
103.குற்றவியல் – Criminology
104.குறிசொல்லியல் – Parapsychology
105.குறிப்பியல் – Cryptology
106.குறியீட்டியல் – Iconology
107.கெல்டிக் சடங்கியல் – Druidology
108.கேட்பியல் – Audiology
109.கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)-Pasimology
110.கையெழுத்தியல் – Graphology
111.கொள்ளை நோயியல்- Epidomology
112.கோட்பாட்டியல் – Archology
113.கோளியல் – Uranology
114.சங்குஇயல் – Conchology
115.சமயவிழாவியல் – Heortology
116.சரி தவறு ஆய்வியல் – Alethiology
117.சாணவியல் – Scatology
118.சிலந்தி இயல் – Araneology
119.சிலந்தியியல் – Arachnology
120.சிறப்புச் சொல் தோற்றவியல் – Onomatology
121.சீனவியல் – Sinology
122.சுரப்பியியல் – Adenology
123.சூழ் வளர் பூவியல் – Anthoecology
124.சூழ்நிலையியல் – Ecology
125.செதுக்கியல் – Anaglyptics
126.செய்கை இயல் – Dactylology
127.செல்வ வியல் – Aphnology
128.செல்வவியல் – Plutology
129.செவ்வாயியல் – Areology
130.செவியியல் – Otology
131.சொல்லியல் – Lexicology
132.சொல்லியல் – Accidence
133.சொற்பொருளியல் – Semasiology
134.தசையியல் – Myology
135.தண்டனையியல் – Penology
136.தமிழியல் – Tamilology
137.தன்மையியல் – Axiology
138.தன்னியல் – Autology
139.தாவர உள்ளியல் – Phytotomy
140.தாவர நோய் இயல் – Phytopathology
141.தாவர வரைவியல் – Phytography
142.தாவரஊட்டவியல் – Agrobiology
143.தாவரவியல் – Botany
144.திணைத் தாவர இயல் – Floristics
145.திணையியல் – Geomorphology
146.திமிங்கில இயல் – Cetology
147.திருமறைக் குறியீட்டியல் – Typology
148.திருமனையியல் – Naology
149.திரைப்படவியல் – Cinimatography
150.தீவினையியல் -Ponerology
151.துகள் இயற்பியல் – Particle physics
152.துகளியல் – Koniology
153.துதிப்பாவியல் – Hymnology
154.துயிலியல் – Hypnology
155.தூய இலக்கியல் – Heirology
156.தூள்மாழை இயல் – Powder Metallurgy
157.தேர்தலியல் -Psephology
158.தேவதை இயல் – Angelology
159.தேவாலயவியல் – Ecclesiology
160.தேனீ இயல் – Apiology
161.தொடர்பிலியியல் – Phenomenology
162.தொண்டை இயல் – Pharyngology
163.தொல் அசீரியர் இயல் – Assyriology
164.தொல் உயிரியல் – Palaeontology
165.தொல் சூழ்நிலையியல் – Paleo ecology
166.தொல் பயிரியல் – Paleobotany
167.தொல் மாந்தவியல் – Paleoethnology
168.தொல் மீனியல் – Paleoichthylogy
169.தொல் விலங்கியல் – Palaeozoology
170.தொல்தோற்ற இனவியல் (மாந்த – மாந்தக்குரங்கினவியல்) – Anthropobiology
171.தொல்லிசையியல் – Ethnomusicology
172.தொல்லியல் – Archaeology
173.தொல்லினவியல் – Paleethnology
174.தொல்லெச்சவியல் – Archaeozoology
175.தொழில் நுட்பச் சொல்லியல் – Orismology
176.தொழில் நுட்பவியல் – Technlogy
177.தொழிற்சாலை வேதியியல் – industrial chemistry
178.தொழு நோயியல் – Leprology
179.தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் – Pestology
180.தொன்மவியல் – Mythology
181.தோட்டுயிரியியல் – Astacology
182.தோல்நோயியல் – Dermatology
183.நச்சியியல் – Virology
184.நடத்தையியல் – Praxeology
185.நரம்பியல் – Neurology
186.நல்லுயிரியல் – Pneumatology
187.நலிவியல் – Astheniology
188.நன்னியல் – Agathology
189.நாடி இயல் – Arteriology
190.நாணயவியல் – Numismatology
191.நாளவியல் – Angiology
192.நிகழ்வியல்- Chronology
193.நிலத்தடி நீரியல் – Hydrogeology
194.நிலநடுக்கவியல் – Seismology
195.நிலாவியல் – Selenology
196.நிலை நீரியல் – Hydrostatics
197.நீத்தாரியல் – Martyrology
198.நீர் வளர்ப்பியல் – Hydroponics
199.நீர்நிலைகளியல் – Limnology
200.நீராடல் இயல் – Balneology
201.நுண் உயிரியல் – Microbiology
202.நுண் வேதியியல் – Microchemistry
203.நுண்பொருளியல் – Micrology
204.நுண்மி இயல் – Bacteriology
205.நுண்மின் அணுவியல் – Micro-electronics
206.நூல் வகை இயல் – Bibliology
207.நெஞ்சக வியல் – Cardiology
208.நெடுங்கணக்கியல் – Alphabetology
209.நெறிமுறையியல் – Aretaics
210.நொதி இயல் – Enzymology
211.நொதித் தொழில் நுட்பவியல் – Enzyme tecnology
212.நோய் இயல் – Pathology
213.நோய்க்காரணவியல் – Aetiology
214.நோய்க்குறியியல் – Symptomatology
215.நோய்த்தடுப்பியல் – Immunology
216.நோய்த்தீர்வியல் – acology
217.நோய்நீக்கியல் – Aceology
218.நோய்வகையியல் – Nosology
219.நோயாய்வியல் – Etiology
220.நோயியல் – Pathology
221.படஎழுத்தியல் – Hieroglyphology
222.படிகவியல் – crystallography
223.பணிச்சூழ் இயல் – Ergonomics
224.பத்தியவியல் – Sitology
225.பயிர் மண்ணியல் – Agrology
226.பயிரியல்-Phytology
227.பரியியல் – Hippology
228.பருப் பொருள் இயக்கவியல் – kinematics
229.பருவ இயல் – Phenology
230.பருவப் பெயர்வியல் – Phenology
231.பல்லியல் – Odontology
232.பழங்குடி வழக்கியல் – Agriology
233.பழம்பொருளியல் – Paleology
234.பற் கட்டுப்பாட்டியல் – Contrology
235.பறவை நோக்கியல் – Ornithoscopy
236.பறவையியல் – Paleornithology
237.பனிப்பாளவியல் – Glaciology
238.பாசி இயல் – Phycology
239.பாப்பிரசு சுவடியியல் – Panyrology
240.பாம்பியல் – Ophiology
241.பார்ப்பியல் Neossology
242.பாலூட்டியல் – Mammalogy
243.பாறைக் காந்தவியல் – Palaeo Magnetism
244.பாறையியல் – Lithology
245.பாறை அமைவியல் – Petrology
246.பிசாசியல் – Diabology
247.பிளவையியல் – Oncology
248.புத்த இயல் – Buddhology
249.புத்தியற்பியல் – New physics
250.புதிரியல் – Enigmatology
251.புதைபடிவ இயல் – Ichnology
252.புல உளவியல் – Faculty Psychology
253.புல்லியல் – Agrostology
254.புவி இயற்பியல் – Geo physics
255.புவி உயிர்ப் பரவியல் – Biogeography
256.புவி வடிவ இயல் – Geodesy
257.புவி வளர் இயல் – Geology
258.புவி வேதியியல்- Geo-chemistry
259.புவியியல் – Geography
260.புவிவெளியியல் – Meteorology
261.புள்ளியல் – Ornithology
262.புறமண்டிலவியல் – Exobiology
263.புற்று நோய் இயல் – Cancerology
264.பூச்சி பொட்டு இயல் – Acarology
265.பூச்சியியல் – Entomology
266.பூச்சியியல் – Entomology
267.பூச்சியியல் – Insectology
268.பெயர்வன இயல் – Acridology
269.பெரு வாழ்வியல் – macrobiotics
270.பேயியல் – Demonology
271.பொதுஅறிவு இயல் – Epistemology
272.பொருள்சார் வேதியியல் – Physical Chemistry
273.போட்டியியல் – Agonistics
274.போதனையியல் – Patrology
275.மகளிர் நோய் இயல் – Gynaecology/ Gynecology
276.மண்டையோட்டியல் – Craniology
277.மண்ணியல் – Pedology
278.மண்புழையியல் – Aerology
279.மணி இயல் – Campanology
280.மணிவியல் – Gemology
281.மதுவியல் – Enology (or Oenology)
282.மர ஒளி வரைவியல் – Photoxylography
283.மரபு இயைபியல் – Genecology
284.மரபு வழியியல் – Geneology
285.மரவரியியல் – Dendrochronology
286.மரவியல் – Dendrology
287.மருத்துவ அளவீட்டியல் – Posology
288.மருத்துவ நோயியல் – Clinical pathology
289.மருத்துவ மரபணுவியல் – Clinical genetics
290.மருந்தாளுமியல் – Pharmacy
291.மருந்தியல் – Pharmacology
292.மருந்து வேதியியல் – Medicinal chemistry
293.மலையியல் – Orology
294.மழையியல் – Ombrology
295.மனக்காட்சியியல் – Noology
296.மனநடையியல் – Nomology
297.மன்பதை உளவியல் – Social Psychology
298.மன்பதையியல் – Sociology
299.மனைவளர்உயிரியல் – Thremmatology
300.மாந்த இனவியல் – Ethnology
301.மாவியல் – Morphology
302.மானிடவியல் – Anthropology
303.மின் ஒலியியல் – Electro-acoustics
304.மின்வேதியியல் – Electrochemistry
305.மின்னணுவியல் – Electronics
306.மீனியல் – Ichthyology.
307.முகிலியல் – Nephology
308.முட்டையியல் – Oology
309.முடியியல் – Trichology
310.முதற்கோட்பாட்டியல் – Archelogy / Archology
311.முதியோர் கல்வியியல் – Andragogy
312.முதுமையியல் – Gerontology
313.முரண் உயிரியல் – Teratology
314.முரணியல் – Heresiology
315.முறையியல் – Systomatology
316.முனைப்படு வரைவியல் – Polarography
317.மூக்கியல் – Rhinology
318.மூதுரையியல் – Gnomology
319.மூப்பியல் – Gerontology
320.மூலக் கூறு உயிரியல் – Molecular biology
321.மெய் அறிவியல் – Philosophy
322.மெய்ம்மி நோயியல் – Histopathology
323.மெய்ம்மியியல் – Histology
324.மேகநோயியல் – Syphilology
325.மொழியியல் – Philology
326.மோப்பவியல் – Olfactology
327.ரூனிக்கியல் – Runology
328.வகையியல் – Taxology
329.வண்ணவியல் – Chromatology
330.வழக்குப் பேச்சியல் – Dialectology
331.வழிபாட்டியல் – Liturgiology
332.வளி நுண்மியல்- Aerobiology
333.வளிநுகரியியல் – Aerobiology
334.வாந்தியியல் – Emetology
335.வாய்நோயியல் – Stomatology
336.வாலில்லாக் குரங்கியல் – Pithecology
337.வான இயற்பியல் – Astrophysics
338.வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) – Aerophilately
339.வானியல் – Astronomy
340.வானிலை இயல் – Neteorology/ Astrometeorology
341.வானோடவியல் – Aerodonetics
342.விசை இயக்க இயல் – Kinetics
343.விண்கற்களியல் – Aerolithology
344.விண்ணுயிரியியல் – Astrobiology
345.விண்பொருளியல் – Astrogeology
346.விந்தையியல் – Thaumatology
347.விலங்கியல் – Zoology
348.விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) – Agronomics
349.வெளிற்றியல் – Agnoiology
350.வேதியியல் – Chemistry
351.வேதிவகைப்பாட்டியல் – Chemotaxonomy
352.வேர்ச்சொல்லியல் – Etymology இட்டவர் முனைவர் இர.வாசுதேவன், ‘தமிழ் மன்றம்’

நன்றி- EROS Vasanthi

Thambiah Pillai Sothilingam

Sunday, September 9, 2018

*எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.*


*ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி,வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.*
*திருவாரூர் தியாகராஜ பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.*
*திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.*
*காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு,மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.*
*திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும், குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.*
*திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசி சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம்.*
*கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர்.உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.*
*ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது.இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.*
*கேரளம்,திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர்.இந்த பால் வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கிறது.*
*நவகிரக,சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.*
*மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும், நிவேதனம் செய்யப்படுகின்றன.*
*கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு,மிளகு, திப்பிலி,ஏலம்,லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது.*
*நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.*
*கேரளம்,குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.*
*திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.*
*கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால் தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.*
*குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு,மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால்,அவருக்கு தலைவலியும், ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.*
*முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றி தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயிலின் பிரதான பிரசாதம்.*
*திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும்,சர்க்கரை பொங்கலும் நிவேதனம் செய்வர்.துவரம்பருப்பு, அரிசி,காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விடப்பட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.*
*சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள்.*

இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!


1) உயரமான போர்களத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கிறது:: உலகிலேயே உயரமான போர்க்களம் என்று கருதப்படும் சியாச்சென் கிளேசியர் (Siachen Glacier) இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 5,000 மீட்டர்களுக்கும் மேலாகும். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இங்கு போரிட்டதுக் குறிப்பிடத்தக்கது.
2) தன்னார்வம் அதிகம்:: உலகிலேயே அதிகமான தன்னார்வ வீரர்கள் கொண்ட ராணுவப்படை இந்தியாவுடையது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
3) மலை பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும் செயல்படுவதில் நமது இந்திய ராணுவ வீரர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர்.
4) கடந்த 2013 ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய மீட்புப் பணியாகக் கருதப்படும் ஆப்ரேஷன் ராஹத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர்கள் நமது இந்திய ராணுவப்படை வீரர்கள். இது, உத்தரகாண்ட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக நடந்தது.
5) கேரளத்தில் இருக்கும் எழிமலாக் கப்பற்படை (Ezhimala Naval Academy) தான் இதன் பிரிவில் ஆசியாவிலேயே பெரியது ஆகும்.
6) உலகிலேயே மிகவும் பழையப் படையாக கருதப்படும் மூன்றில் ஒன்றான குதிரைப்படை இன்னமும் நமது இந்திய ராணுவத்தில் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.
7) இந்திய ராணுவம் கட்டமைத்த பெய்லி பாலம் தான் உலகிலேயே ராணுவ வீரர்களால் மிக உயரத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும். இது கடந்த 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டமைக்கப்பட்டது ஆகும்.
9) கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் 93,000 எதிர் நாட்டு (பாகிஸ்தான்) வீரர்கள் சரணடைன்ததே, ஓர் போரில் சரணடைந்த வீரர்களின் அதிகப்படியான எண்ணிக்கை ஆகும்.
10) உலகிலேயே பெரிய ராணுவ பிரிவுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்காவும், சீனாவும் இருக்கின்றன. நமது நாட்டில் 13,25,000 பட்டாளங்களும், 9,60,000 ரிசர்வ் படைகளும் இருக்கின்றன.
11) அக்னி ஏவுகணை உலகிலேயே சிறந்த ஏவுகணைகளில் இந்தியாவின் அக்னி எவுகனைவும் ஒன்றென்பதுக் குறிப்பிடத்தக்கது.
12) வேகமான ஏவுகணை ப்ராஹ் மோஸ் 2 (BrahMos-2) என்ற நமது ஏவுகணை தான் உலகிலேயே வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.
13) இந்திய ராணுவப்படை கடந்த 1776ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தினால் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது.
14) உலக அமைதிகாக ஐ.நாவிற்கு பங்களிப்பு தரும் பட்டாளங்களில் இந்திய பட்டாளம் தான் பெரியது என்பது பெருமைக்குரியது.
THANKS ONE INDIA....

Thursday, September 6, 2018

Black Flowers...








Mursi , a Nomadic Tribe of herdsmen living in the lower Omo Valley.








The nomadic Mursi people live in the lower area of Africa’s Great Rift Valley. Extreme drought has made it difficult for them to feed themselves by means of traditional cultivation and herding. The establishment of national parks has restricted their access and threatened their natural resources.The Mursi are famous for their stick-fighting ceremony and Mursi women are known all over the world for wearing clay plates in their lower lips. Their economy is concentrated on bartering and sharing possessions. As tourists are now often visiting Mursi villages, offering money in exchange for photographs, the communal economy is changing.

தமிழ் அரசியலின் தப்புத்தாளங்கள்


Karunakaran Sivarasa
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கான தேவைகளைப் பற்றி அரசாங்கத்துடன் பேசுவதில்லை. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “நாங்கள் கோருவது உரிமை அரசியலே தவிர, சலுகை அரசியல் இல்லை” என்பதுவாகும்.
இதைப்பற்றிய விவாதங்களும் விளக்களும் தாரளமாக நிகழ்ந்த பிறகும் இந்த வேதாளம் இன்னும் முருங்கையை விட்டு இறங்கவேயில்லை.
ஆனால், இதற்குப் பின்னே இருக்கிற விசயந்தான் சுவாரசியமானது. நமது கவனத்திற்குரியது.
உரிமையைத் தவிர, சலுகைகள் எதையும் பெறவே மாட்டோம் என்று சொல்கிற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், மலைய மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்களின் கால்களைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிக் கெஞ்சிக் கேட்டு சில வேலைகளைத் தங்கள் பகுதிகளில் செய்து விட்டு தங்களின் நெஞ்சை நிமித்திக் கொண்டு திரிகிறார்கள்.
இதற்காக இவர்கள் மலையக அமைச்சர்களைக் குளிர்விக்கப்படுகிறபாடு கொஞ்ச நஞ்சமல்ல. மலைய அமைச்சர்கள் வடக்குக் கிழக்குக்கு வந்து விட்டால் ஆராத்தி எடுப்பது முதற்கொண்டு கொழும்புக்குப் போகும்போது எடுத்துச் செல்லும் உபாகரப் பொருட்கள் வரையில்... ஸ்.. அப்பப்பா..
இது ஒரு பெரிய காவடி. (காமடி)
இந்தத் தகவலைச் சொல்லிச் சிரித்ததே மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தலைவர் ஒருவர்தான்.
அந்த அரசியல் தலைவர் சொன்னார், “இப்பிடி எங்ககிட்ட கேட்டு (கரைச்சல் தந்து) தங்களோட தேவைகளைப் பெறுவதை விட இவங்களே (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே) அரசாங்கத்திடம் நேரடியாக மக்களுக்கான நன்மைகளைப் பெறலாமே?!” என.
“இதை நீங்களே அவர்களிடம் சொல்லலாமே!” என்றேன்.
“நாங்க பல தடவை சொல்லீட்டம். ஆனா அவங்க கேக்கிற மாதிரித் தெரியேல்ல” என்றார் அவர்.
நான் அவருக்குச் சொன்னேன், “இலங்கையில் மலையக மக்களின் வரலாறு ஏறக்குறைய 200 ஆண்டுகள்தான். ஆனால் அவர்கள் இன்று அரசியலில் பலமானதொரு தரப்பாக மாறியிருக்கிறார்கள். சில பல குறைபாடுகள், விமர்சனங்கள், மறுபார்வைகள் இருந்தாலும் இலங்கையின் யதார்த்த நிலை, பாராளுமன்ற அரசியல் முறைமை போன்றவற்றைக் கவனத்திற் கொண்டு பார்த்தால் மலையத் தரப்பின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பெரியது. ஆனால், வடக்குக் கிழக்கு நமது பாரம்பரியப் பிரதேசம், தமிழர்களே இலங்கையின் மூத்த குடிகள், ஆதியினர், ஆட்சிச் சிறப்புகள் ஆயிரத்தைக் கொண்டோர் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருக்கிற வடக்குக் கிழக்கு மக்களும் அவர்களுடைய தலைமைகளும் இன்று உங்களிடம் (மலையக சமூகத்தினரிடத்திலே) இரந்து வாழும் நிலையில்தான் உள்ளனர். இதற்குள் உலக மகா அரசியல் விளக்கங்கள் வேறு” என்று.
எழுந்து என்னுடைய கைகளை அவர் பற்றிப் பிடித்து கட்டி அணைத்தார்.
அவருக்கு மேலும் சொன்னேன், “உங்களை (அமைச்சர்களை) இப்பொழுது (அமைச்சர்களாக பதவியில் இருக்கும் வரையில்) அவர்கள் அங்கே அழைத்து மதிக்கிறார்கள். இங்கே கொழும்புக்கு வரும்போதும்கூட உங்களைக் கனம் பண்ணுகிறார்கள். ஆனால், இதே மதிப்பை மலைய மக்களுக்கோ வடக்குக் கிழக்கில் உள்ள இந்திய வம்சாவழியினருக்கோ இவர்கள் கொடுப்பதில்லை. இதுதான் அவர்களுடைய தந்திரோபாயம். தாங்கள் சுத்தவாளிகள் என்று காட்டிக் கொள்வது. அதேவேளை தந்திரமாகக் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வது. மறுபக்கத்தில் வேறுபாடுகளையும் நுட்பமாகப் பேணிக் கொள்வது...” என்று.
அவர் பேச்சற்றுச் சில கணங்கள் அப்படியே உறைந்து போயிருந்தார்.

Monday, September 3, 2018

சக்கரை நோயால் பாதிக்கப் பட்ட விரலை வெட்ட வேண்டாம்...!!!


சக்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
மேலும் விபரங்கள் கீழே.!
சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்து பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,
விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,
காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸ்ப்பிடல்களின் தனித்திறமை.
காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்.
அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,
எனது தாயாருக்கு காலில் ஏற்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,
புண் ஏற்பட்ட இடத்தில் விரல் கருப்பாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.
எனக்கு ஒன்று தோன்றியது.மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் ரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.
முடிவில் மரணத்தை தான் தழுவ வேண்டும். இதுதான் நிலை
இதற்கு கண்கண்ட மருந்து .

*ஆவாரம்_இலை*
இந்த இலையை அம்மியில்/மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிட வேண்டும்.
இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.
இது எனது தாயாருக்கு
என் கையாலே செய்து,

அந்த புண்கள் ஆறிய பிறகு நான் பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள்.
இதை அதிகம் பகிா்ந்து பலாின்
கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.!

நன்றி : Parimala Devi

Saturday, August 25, 2018

பொன்னுச்சாமி சேர் ,அவரின் நளவெண்பா பற்றிய இலக்கிய பாடம்

"குலேந்தி! இஞ்ச வா!!! போனமுறை உனக்குத் தமிழுக்கு எத்தினை?"
"52 சேர்"
"பொன்னுச்சாமி சேர் என்னவொரு அழகா தமிழ் படிப்பிக்கிறார்.
போய்த் தமிழ் படி!!
சனியன்! சனியன்!!!"
என்ற காது கிழியும் சத்தத்தில் வேலாயுதம் சேர் சொல்லிக்கொண்டே இருப்பார்.
செல்வவடிவேல் ஆசிரியரின் விஞ்ஞான வகுப்புக்கு அடுத்தது பொன்னுச்சாமி சேரின் தமிழ் வகுப்பு.
அநேக மாணவர்கள் தமிழ் பாட வகுப்புக்கு நிற்காமல், செல்வவடிவேல் ஆசிரியர் வகுப்பு முடிந்து திரும்பும்போது, அவரின் முதுகுக்குப் பின்னால் பதுங்கியபடி சென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறி விடுவார்கள். இந்தச் செயல்களை நன்கு அறிந்திருந்த வேலாயுதம் வாத்தியார், வாசலில் மதிலுக்கு வெளியில் நின்று இவர்களை பல சமயங்களில் “அப்பி” விடுவார்.
இவையெல்லாம் நடப்பது கொக்குவில் மணி டியூஷன் சென்டரில் தான்.
மெல்லிய உயர்ந்த தோற்றம்.
தலையில் ஆங்காங்கே சில முடிகள்.
அரைக்கையில் வெளிர் நிறத்தில் ஷேர்ட்.
நெற்றியில் திருநீற்றுக் குறியும் அதன் மேல் சந்தனப்பொட்டுமிட்டு பொன்னுச்சாமி சேர் தோற்றமளிப்பார். சிலவேளைகளில், காதில் பூவிதழ் ஒன்றும் சொருகி இருப்பார். தோற்றத்தில் கோவில் குருக்கள் போல தெய்வீகமாய் தோற்றமளிப்பார். "தொப்" என சைக்கிளை நிறுத்தி, சைக்கிளைத் தரை வரை சரித்துப் பக்குவமாக இறங்குவார். டபிள் ஸ்டான்ட் சைக்கிள் அது. கண்களில் கொஞ்சம் நீர்ப்பது போலும். சிறு கைக்குட்டை ஒன்றால் அடிக்கடி கண்களை ஒற்றிய படியே இருப்பார். ஏதோவொரு விபத்தின் பின்னர், அதன் தாக்கத்தால் இப்படி ஆகிவிட்டதென அறிந்த நினைவு.
இள மண்ணிறத்தில் ஒரு வட்டத் தொப்பியும் அணிந்து அவர் வருகையில், சாடையாக "Cowboy" மாதிரியே தெரிவதாக, வகுப்பில் சில இளவட்டுக்கள் கிசுகிசுப்பதும் கேட்கும்.
பொன்னுச்சாமி சேர் கொஞ்சம் மென்மையான அணுகுமுறை கொண்டவர்.
"காலைக் கொஞ்சம் ஒதுக்கி வெச்சு வாங்கோ சேர். சூரிய வெளிச்சம் வேட்டிக்கால வருது"
என்று கிண்டல் பண்ணிய சில வம்புப் பயல்களின் எந்தப் பேச்சையும் செவிமடுக்க மாட்டார்.
ஒரேயொரு தடவை அவரின் அதியுச்ச கோபத்தையும் கண்டிருக்கிறேன்.
இலக்கிய பாடங்களில் வரும் பாடல்களை அழகாக ரசித்து அனுபவித்துப் போதிப்பார். அவரது மெல்லிய குரலும் அதற்கு இசைவாகவே அமைந்திருக்கும். அந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி அணியாமல் அவரால் புத்தகங்களை வாசித்துக் கற்பிக்க முடிந்தமை தனிச்சிறப்பு.
தமிழ் இலக்கணம், சமய பாடங்களை விட, அவரின் தமிழ் இலக்கிய வகுப்பு ஒரு தனிக் களை கொள்வது இயல்பு. காரணம், இலக்கிய கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரங்களாக தன்னை மாற்றிக் கொண்டு, அந்தப் பாடத்தில் வரும் கதாபாத்திரங்களுடன் ஐக்கியமாகி விடுவார். அதிலும் இன்றுவரை மறக்க முடியாதது அவரின் நளவெண்பா பற்றிய இலக்கிய பாடம்.
அதுவும் நளவெண்பாவில் நளனைப் பற்றிச் சொன்னதைவிட தமயந்தியைப் பற்றிச் சொன்னதுதான் அதிகம். அதிலும் தமயந்தியின் மார்பினை வர்ணிப்பதுதான் பாடல்களின் பெரும்பகுதி. ஏற்கனவே அந்தந்த வேஷத்தைப் போடும் பொன்னுச்சாமி சேர் இதை சவாலாகவே எடுத்துக்கொண்டாரோ என்னவோ? உதாரணத்துக்கு அதில் ஒரு சில பாடல்களைப் பார்ப்போம். (பல உண்டு-ஆனால், இவை மட்டும்தான் எனக்கு நினைவு உண்டு)
1)
மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு – நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.
தமயந்தியினுடைய இடையானது உயர்ந்த இள முலைகளை அவளது வாழ்நாள் முழுவதும் சுமந்து நிற்கும் வன்மையுடையதாகாதெனக் காலில் அணிந்துள்ள சிலம்புகள் , புதிய தேன் மேலெழும் மலர் சூடிய கூந்தலாளின் இரண்டு அடிகளிலும் வீழ்ந்து அவ்வடிகளுக்கு அணியாக அமைந்து வாய் விட்டுப் புலம்பும்!’
அதாவது,
முலைகள் பாரமுடையன; ஆதலின் , தமயந்தியின் இடை அவற்றைத் தாங்க முடியாமல் ஒடிந்துவிடுமாம்! இதை நினைத்து சிலம்புகள் புலம்புகின்றன.
என்பது கொஞ்சம் விளக்கமான உரை.
2)
வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் – சேம
நெடுங்குடையாய என்றுரைத்த நீங்கியதே அன்னம்
ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து.
நாட்டு மக்கட்கு நன்மை செய்கின்ற விரிந்த குடையை உடையவனே, வீமராசனுடைய செல்வ மகளான தமயந்தியின் இளமை தவழும் மார்பினை, உன்னுடைய அழகிய உயர்ந்த தோள்களைப் பொருந்தச் செய்விப்பேன்!’ என்று அன்னம் கூறிவிட்டு நுண்மையான இடையை உடையவளாகிய தமயந்தியிடம் பறந்து சென்றது.
என்பது உரை.
தமயந்தியைக் கட்டியணைத்தால் என்னாகும் என்பதை கொஞ்சம் "ஓவர்"ராகவே விளக்கம் கொடுத்த அவரது நளினம் அப்படியே கண்முன் இன்றும் நிழலாடுகிறது. அத்தனை அற்புதமாய் விளக்கம் கொடுக்கும் பொன்னுச்சாமி ஆசிரியரின் வகுப்பில் அன்றைய தினம் அத்தனை கரவொலி. அனைத்துப் பையன்கள் முகத்திலும் அத்தனை பொலிவு. கீழே குனிந்து மேசையின் கால்களைப் பார்த்தபடி, இருக்கும் பெண்களின் குதிரை வால் கொண்டைகள் சொல்லும்-அவர்களின் அடக்கமுடியாத சிரிப்பினை.
ஒரு நகைச்சுவைக்காக இந்நிகழ்வைச் சொல்லவில்லை. பொன்னுச்சாமி சேரின் அற்புதமான நடிப்பு அப்படி. அப்படியே தன்னை ஒரு "தமயந்தி" ஆகவே நினைத்து, அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.
இன்னுமொரு முஸ்லீம் இனப்பாடப்பகுதி ஒன்று இலக்கியத்தில் வரும்.
"செய்னம்பு நாச்சியார் மான்மியம்"
என்பது பாடம்.
"கட்டிலிலிருந்த காசிம்பாவா உற்றுப்பார்த்தாள் - ஒடுங்கிப்போனார்"
என்ற வரிகளில் மீண்டும் சர்ச்சை கிளப்பிய நினைவுகள் உண்டு.
செய்னம்பு நாச்சியார் செங்காட்டுப் புலி
வாயில்லாமலே வங்காளம் போவாள்
நோயில்லாமலே நூறுநாட் படுப்பாள்
சீட்டுப் பிடித்துச் சேர்த்த பணத்தைக்
கூட்டுப் பெட்டிக்குள் குவித்து வைப்பாள்.
என்று நகைச்சுவை மிக்கதொரு பாடல்களை பொன்னுச்சாமி சேரின் வாயிலிருந்து கேட்பதில் அத்தனை ஆனந்தம்.
நம்ம குடும்பம் நாடே யறியும், கிள்ளிக் கொடுத்தாலும் கிடாரம் வேண்டும், பேச்சுச் செப்பா? பிச்சைச் செப்பா?
என்று அந்த வரிகள் நீண்டு செல்லும்.
இவரது தமிழ் இலக்கண, இலக்கிய மற்றும் சமய பாட குறிப்புகளுக்கு ஒரு அப்பியாசக் கொப்பி வைத்திருப்பார். அதில், எல்லாமே வினா-விடை அமைப்பாகவே இருக்கும். பரீட்சையில் எந்த வினா வந்தாலும், இந்தக் குறிப்புக் கொப்பியிலுள்ள மாதிரி வினாக்களுக்கு வெளியே, ஒருபோதும் வராது. அவ்வளவு துல்லியமாக எழுதப்பட்டது. இந்தக் குறிப்புக் கொப்பியை யாராவது ஒரு மாணாக்கரிடம் கொடுத்து வாசிக்கச் சொல்ல, மற்றைய மாணவர்கள் அதைத் தமது அப்பியாசப் புத்தகத்தில் எழுதிக் கொள்ளச் செய்வார். இறுதியில், அந்தக் குறிப்புப் புத்தகத்தை அந்த மாணவரிடம் கொடுத்து, வீட்டில் எழுதிவரும்படி சொல்லுவார். இப்படி என் கையில் இப்புத்தகம் வந்துவிட்டால், வீட்டில் வைத்து அந்த வருடத்துக்குரிய அனைத்துக் குறிப்புக்களையும் எழுதிவிடுவேன். ஏனென்றால், அடுத்தடுத்த வகுப்புக்களில் எழுதாமல் இருந்து கொஞ்சம் நையாண்டி பண்ணிக்கொண்டிருக்கலாம் என்ற குறுகிய புத்திதான்.
தன் குடும்ப உறவினர்களைப் பற்றி அவ்வப்போது பெருமையாகப் பேசவும் தயங்கமாட்டார்.
"என்ர மகன் ஒருத்தன் இருக்கிறான். அவன் நடந்து போனா, நாலு பெட்டையள் திரும்பிப் பாக்காம போமாட்டாளவை"
என்று தன் மகனைப் பற்றியெல்லாம் பேசி, வகுப்பைக் கலகலப்பாக்குவார்.
அற்புதமான ஒரு தமிழ் விற்பன்னரிடம் தமிழ் படித்த மகிழ்வும் பெருமையும் என்றென்றும் எல்லோர் உள்ளத்திலும் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. வகுப்புக்கு வெளியே தனிப்பட்ட முறையிலும் அவருடன் நெருக்கம் உண்டு. ஒருசில சந்தர்ப்பங்களில் எனக்கு தமிழ்ப் பாடங்களுக்கு உதவியும் செய்திருக்கிறார்.
ஐயனார் கோவிலடியில் சிவப்பிரகாசம் வீதியில் இவரின் வீடு. யாரைக்கண்டாலும், "தம்பி, இஞ்ச உள்ள வந்து இதில கொஞ்சம் புடுங்கிக் கொண்டு போ" என்று தன் ஜம்மு நாவல் மரத்தைக் காட்டுவார். படித்த பிள்ளைகள் மட்டுமல்ல, வீதியால் செல்வோரும் இவர் வீட்டு ஜம்முப் பழத்தைச் சுவைத்திருக்க தவறியிருக்கவில்லை. அளவெட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட இவரின் தமிழ்ப் புலமையை மற்றையவர்களும் அனுபவிக்க இறைவன் இவருக்கு, இன்னும் கொஞ்சம் நீண்ட ஆயுளைக் கொடுத்திருக்கலாம்.
அவரின் நினைவுகளைச் சுமந்த வண்ணம்...
அன்புடன்,
அந்நாள் மாணவன்.
ரஞ்சித் தவராஜா

Sunday, July 22, 2018

Sakhavu – Malayala movie : Introduction to communism

Vadakarai Velan

கம்யூனிசத்தின் மீதும் கம்யூனிஸ்டுகள் மீதும் இளைய தலைமுறை கொண்டிருக்கும் எள்ளல் மிகுந்த பார்வையையும், உண்மையான கம்யூனிசம் எப்படிக் கேரள நிலத்தில் வேரூன்றி கிளைபரப்பி மக்கள் வாழ்வில் மலர்ச்சியைக் கொணர்ந்தது என்பதையும் பேசுகிறது ”சகாவு” திரைப்படம்.
இளையவனான கிருஷ்ணகுமார் தான் ஒரு சகாவு என்கிற போர்வையில் மக்கள் பணி எதிலும் ஈடுபடமாலேயே, ஆனால் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என மற்றவர்கள் மதிக்க வேண்டுமென்றும், அதனடையாளம் மூலம் கிடைக்கும் வசதிக வாய்ப்புகளுக்கும் ஆசை கொண்டு, அலட்டல்கள் செய்கிறான். யாரென்று தெரியாத ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது, கட்சி அவனைக் கேட்டுக் கொள்ள ரத்ததானம் செய்ய அரசு மருத்துவமணைக்கு வருகிறான்.
அரம்பகட்ட அலட்டல்களும் அலம்பல்களும் தீர்ந்த பின், தான் ரத்தம் கொடுக்க வந்திருப்பது ஒரு உண்மையான “சகாவு” எனக் கேள்விப்பட்டு, அவரது உறவினர் நண்பர்கள் மூலம் அறிய நேர்கிற “சகாவு கிருஷ்ணன்” முன், தான் ஒன்றுமில்லாத ஒரு வெற்றுப் பதர் என்ற தன்னுணர்வு கொள்கிறான். ஒரு கள்ள சகாவு நல்ல சகாவாக மாறுவதே கதை.
கிருஷ்ணக்குமாருக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் மாறி மாறிப் பயணிக்கும் கதை, மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தரிசு நிலத்தை உழுது, விதைத்து, செடிவளர்த்து மரமாக்குவதைப் போல, கிருஷ்ணன் வெறும் கிருஷ்ணனாக இருந்து “சகாவு” கிருஷ்ணனாக மாறுவதையும் கம்யூனிசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே பரப்பி அவர்கள் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருப்பதையும் தெளிவாகக் காட்டி இருக்கிறார்கள்.
இரண்டு “சகாவு” பாத்திரத்தையும் நிவின் பாலியே செய்திருக்கிறார். இளையோருக்கான ஒரு தென்னாவெட்டு உடல் மொழியும், ஓர் சித்தாந்தத்தின் பால் ஆட்படும்போது வரும் கனிவையும் மிகத் தெளிவாகத் திரையில் காட்டுகிறார்.
கொத்தடிமைகள் போல் இருக்கும் தோட்டத் தொழிலாளிகளை, அவர்கள் வாழ்வை, எளிமயாகக் காட்டி கம்யூனிசம் எப்படி அவர்கள் வாழ்வில் ஒளியூட்டுகிறது என்பதை காட்சிப்படுத்திருப்பது மிக அருமை. சகாவை மூர்க்கமாக எதிர்த்த காவலரே இறுதியில் அவரது உற்ற நண்பராக மாறுகிறார்; “நண்பன் விரோதியாவதில் என்ன ஆச்சர்யம்? என்னைப் போல விரோதியாக இருந்து நண்பனாக மாறுவதுதான் கஷ்டம்”
காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ், சகாவின் மணைவி ஜானகியாக. இளைய வயது ஜானகிகிக்கும் முதிய ஜானகிக்கும்மான உடல்மொழியைக் கவனமாகக் கையாண்டிருக்கிறார். பாராட்டுகள்.
இன்று இணையத்தில், குறிப்பாக முகநூலில் சலம்பும் கட்சி இளைஞர்களையும், சார்ந்திருக்கும் கட்சிச் சித்தாங்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அறியாமையும், அச்சித்தாந்தங்களை நிலை நிறுத்த அவர்களது மூத்தோர் செய்த தியாகங்களை உணராமல் இருப்பதும், அது குறித்த எந்த பெருமிதமும் அற்று இருப்பதும் வருத்தம் தருகிறது.
படம் பார்த்து முடித்ததும், அ.கலையம்புத்தூரில் எங்கள் பால்யவயதில் நாங்கள், கலைஞர் எனக் கிண்டல் செய்த நபர் ஞாபகம் வருகிறார். மு.க போலவே தலை வகிடெடுத்துச் சீவி, பட்டை ஃப்ரேம் கொண்ட கருப்புக் கண்ணாடி, முழுக்கைச் சட்டை அணிந்து, தரைதொடும் துண்டணிந்து, சைக்கிளில் வலம் வருவார், ஹேண்டில் பாரில் மடித்துவைத்த முரசொலி.
இன்று நம் அடையாளங்களை மாற்றிக் கொண்டோம், கூடவே எந்தச் சித்தாந்தத்தின் மீதும் ஈடுபாடு கொள்ளாமல் வாழவும் பழகி விட்டோம்; அந்தந்த நேரச் சுகம் போதுமென.

Communism seems to be the flavour of the season as far as Malayalam cinema is concerned. Recently we saw the release of Tom Emmatty’s Oru Mexican Aparatha (Tovino Thomas) and now we have Sidhartha Siva’s Sakhavu (Nivin Pauly) as well. And there’s Amal Neerad’s Comrade in America aka CIA (Dulquer Salmaan) that is due for release shortly. What’s common to all these films is not just that the communist background, it’s also that these films are being headlined by a popular leading man as well, that surely means that there is definitely an attempt to bring back the theme of communism in Malayalam films. And considering that it is now the LDF-led government in power back in Kerala, this seems to be more than just a casual coincidence. Sidhartha Siva who started off making award winning feature films turned to mainstream commercial films with Kochavva Paulo Ayappa Coelho last year. And with Nivin Pauly on board Sakhavu he has taken a big leap in his career as a filmmaker.

Nivin Pauly plays two different characters, Krishna Kumar and Sakhavu Krishnan. Krishna Kumar is a youth communist leader who is eager to climb up the political ladder by all possible means. Sakhavu Krishnan is a veteran communist leader and social worker, who enjoys the respect of people around him thanks to his good work over the years. 
One fine day unknown to both of them, the lives of Krishna Kumar and Sakhavu Krishnan get entwined in an interesting fashion. Krishna Kumar is asked to donate blood to a patient who is about to undergo a surgery and hence he lands up at a Government hospital. It is only much later that he comes to know that the patient is Sakhavu Krishnan. In the course of the day Krishna Kumar slowly goes on to know the life story of Sakhavu Krishnan in detail. The story shifts between the two time zones regularly, one symbolising the past during the heydays of Krishnan when he was an active communist leader, and the present as seen through the eyes of Krishnan.

Beginning with the voice over of Krishnan it is made very clear by Sidhartha Siva that the film would be a positive tribute to communism and its ideologies. The film is indeed a eulogy of sorts to the communist way of life and why the philosophy is so relevant in Kerala. Now this is a tad risky considering that there is a possibility of alienating a certain section of the audience which is not so fond of political dramas or has a different perspective on communism. The writing by Sidhartha Siva at times results in making the proceedings quite slow in a few places, the duration of 164 minutes making it appear slightly stretched overall. And it’s necessary to note that the film clearly paints Sakahvu Krishnan in extremely positive shades all the way. Luckily the spotlessly white portrayal of Sakhavu Krishnan is balanced by that of the more practical and contemporary Krishna Kumar.

The film benefits a lot by getting the period look (the 1970s) well taken care of, George C Williams’s cinematography and the choice of locations aiding the same. Prashant Pillai’s music goes well with the flow of the film. Of the supporting cast, Althaf as Mahesh provides some laughs while Binu Pappu as Prabhakaran Eerali, Krishnan’s foe turned close friend, Sreenivasan as the doctor treating Sakhavu Krishnan and Baiju as Garudan Kangani, the right hand man of the tea estate manager leave an impact.

Of the women while Aparna Gopinath and Gayathri Suresh have nothing much to do, Aishwarya Rajesh as Sakhavu Krishnan does well despite her limited scenes. Needless to say the main reason why the film works is Nivin Pauly who brings in a spirited performance, portraying both the contrasting characters in a manner that makes one nearly overlook the issues with the film.

Sakhavu is not as splendid a film as one might have expected, but it is a film that does not mislead the viewer and is definitely worth an outing at the cinemas.


Sethumadhavan N