Search This Blog

Saturday, November 14, 2015

ப. சிங்காரம்

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், திருபத்தூர் வட்டம், சிங்கம்புணரி என்னும் கிராமத்தில் நாடார் பேட்டையில் 1920_ஆம் ஆண்டு ஆகஸ்டு 12_ஆம் தேதி ப. சிங்காரம் பிறந்தார். தந்தை மூக்க நாடார் என்ற கு. பழநிவேல் நாடார் ; தாயார் பெயர் உண்ணாமலை அம்மாள். இவர்களுக்கு சிங்காரம் மூன்றாவது மகன். அப்போது, சிங்காரத்தின் தந்தை, அண்ணன்கள் ப. சுப்பிரமணியம், ப. பாஸ்கரன் மற்றும் அவரது தாத்தா ப. குமாரசாமி நாடார் ஆகியோர் சேர்ந்து சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.
சிங்காரம், சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியும், பின்னர் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பும் பயின்றார். 1938_ஆம் ஆண்டு செ.கா. சின்னமுத்துப்பிள்ளை என்கிற சிங்கம்புணரிக்காரர் இந்தோனேஷியாவில் மைடான் என்ற இடத்தில் நடத்தி வந்த வட்டிக் கடையில் வேலை செய்வதற்காக கப்பலில் சென்றார். 1940_ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பின்னர் மீண்டும் இந்தோனேஷியா சென்று அங்கு மராமத்துத் துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். இச்சமயத்தில் தென்கிழக்காசிய யுத்தம் மூண்டது. யுத்தம் முடிந்ததும் இந்தோனேஷிய இராணுவ அரசின் அனுமதி பெற்று, பினாங்குக்குக் கப்பலில் சரக்குகள் அனுப்பும் வர்த்தகத்தைச் சில தமிழர்களுடன் சேர்ந்து செய்தார்.
யுத்த காலத்தில் இந்தோனேஷியாவை ஜப்பான் துருப்புகள் கைப்பற்றியபோது அங்கிருந்த நூலகம் சூறையாடப்பட்டு, புத்தகங்கள் தெருவில் வாரிக் கொட்டப்பட்டிருக்கின்றன. இச்சந்தர்பத்தில் நூலகத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவர் மூலம் சிங்காரத்துக்கு பல ஆங்கில நூல்கள் கிடைத்தன. அப்போது, குறிப்பாக ஆங்கில நாவல் வாசிப்பு சிங்காரத்துக்கு ஏற்பட்டது. அவரை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் ஹெமிங்வே.
இந்தானேஷியாவில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். தலைப்பிரசவத்தின் போது அவரது மனைவியும் பிறந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டனர்.
1946_ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பிய சிங்காரம் பின்னர் மீண்டும் இந்தோனேஷியா செல்ல திட்டமிட்டார். ஆனால் கடைசிவரை அங்கு செல்லாமல் மதுரையிலேயே தங்கிவிட்டார். 1947_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’ பத்திரிகையின் மதுரைச் செய்திப் பிரிவில் சேர்ந்தார். சொந்த ஊருக்கும், நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் செல்வதை தவிர்த்து மதுரை ஒய்.எம்.சி.ஏ.வில் தனியாக தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். 1987_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 1997_ஆம் ஆண்டு ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் அவரை நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியது. பிறகு மதுரை, விளக்குத்தூண் அருகிலுள்ள நாடார் மேன்சனில் வாடகை அறையெடுத்து தங்கியிருந்தார். கடைசி காலத்தில் அவரது வாழ்நாள் சேமிப்பான ரூபாய் ஏழு லட்சத்தை, மதுரை நாடார் மகாஜன சங்கம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகைத் திட்டத்திற்காக வழங்கினார். அப்போது தனது பெயரில் அறக்கட்டளை, புகைப்படம் திறப்பு போன்றன வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டாராம்.
நாடார் மேன்சனில் வாழ்ந்த கடைசி மூன்று மாதங்களிலும்கூட, எல்லோருடனும் சுமுகமாகப் பழகியபோதும், யாருக்கும் தொல்லை தரக்கூடாது என்று ஒதுங்கியே இருந்தார். சொந்த வாழ்க்கை பற்றியோ அந்தரங்க விஷயங்களையோ எப்போதும் அவர் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. இப்படி அவராக விரும்பி, தனியாக ஒதுங்கி வாழ்ந்ததற்கு, 25_வது வயதில் அவரது இளம் மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டது, வாழ்க்கைப் பற்றிய அவநம்பிக்கை-யையும் இறுக்கத்தையும் அவரிடம் ஏற்படுத்திவிட்டது-தான் காரணம் என்று கூறப்படுகிறது.
எழுத்துலகத்திலிருந்தும் குறிப்பாக நூல்களை பதிப்பிப்பதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகத் தொடர்ந்து எழுதாமல் ஒதுங்கிக் கொண்டார். 1950_ஆம் ஆண்டு ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினார். புலம் பெயர்ந்து அந்நியச் சூழலில் வாழும் தமிழர்கள் வாழ்வை களனாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இது. இதைப் பிரசுரம் செய்ய மதுரைக்கும் சென்னைக்குமாக பல தடவைகள் அலைந்தார். பின்னர் ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினார், திரும்பி வந்தது. ஒன்பது வருடங்களுக்கு பிறகு 1959_ஆம் ஆண்டு கலைமகள் நாவல் போட்டியில் ‘கடலுக்கு அப்பால்’ முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. 1962_ஆம் ஆண்டு ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். அது பத்து ஆண்டுகளாக பல பிரசுரகர்த்தர்களின் கைமாறி, கடைசியில் மலர் மன்னன் (‘1/4’ இதழை நடத்தியவர்) எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக 1972_ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தால் பெரியதாகயிருக்கிறது என்கிற காரணம் சொல்லி எடிட் செய்யப்பட்டு, வெளியானது. ‘‘அதிகாரம், செல்வாக்கு, நட்பு, அரசியல் போன்ற பல குறிக்கீடுகளால் படைப்பு தீர்மானிக்கப்-படும் தமிழ்ச் சூழலில், எழுத்தாளனுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று ஒதுங்கியிருந்த சிங்காரம் பல காலமாகச் சற்றும் பொருட்படுத்தப்படாமல் அசட்டையாக ஒதுக்கப்பட்டிருந்தது ஆச்சர்யமில்லை’’ என்கிறார் விமர்சகரான சி. மோகன். ‘புதுயுகம் பிறக்கிறது’ பத்திரிகையில் வெளியான நாவல் பற்றிய கட்டுரையில் தொடங்கி தமிழ்ச் சூழலில் ப. சிங்காரத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் சி. மோகன் மட்டும்தான். சிங்காரத்தின் மறைவுக்குப் பின்னர் 1999_ஆம் ஆண்டு தமிழினி பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ இரண்டு நாவல்களையும், எடிட் செய்யப்படாத மூலப் பிரதியை தேடியெடுத்துப் பதிப்பித்தது.
ப. சிங்காரம், வாழ்வின் கடைசி 2 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 1997_ஆம் ஆண்டு டிசம்பர் 30_ஆம் நாள் விடாத வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மதுரை, கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே மருத்துவமனையிலிருந்து ஸ்கேன் எடுப்பதற்காக வெளியே சென்ற வழியில் ஆம்புலன்ஸிலேயே அவர் உயிர் பிரிந்தது. மதுரைக்கு அருகில் தத்தநேரி சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

Kakad Aarti (Suryodya Purva) | Shirdi Sai Baba | Early Morning Aarti

The Key to Inability to Cope with Stress, Memory Loss, and, MAJOR DEPRESSION

MINERALOCORTICOID RECEPTORS in the Brain:
The Key to Inability to Cope with Stress, Memory Loss, and, MAJOR DEPRESSION
and, oh yes, the SUICIDE EPIDEMIC in the Transgender Community ! !
Why, because they are the first line of defense that allows proper coping with stress (and cortisol) in both the HIPPOCAMPUS and the AMYGDALA Below are 16 Research Publications cited. We selected only a few comments verbatim from each. Truly they are a revelation when they are read.
Brain MINERALOCORTICOID RECEPTORS- Stress and MAJOR DEPRESSION & an ALERT for TG Persons
https://www.academia.edu/…/Brain_MINERALOCORTICOID_RECEPTOR…
(there is an automatic log in from Facebook available)
Introduction:
 I came across the hidden elephant in the room in all HRT and all Transgender Studies for the past two decades, the relentless and obligatory and automatic use of Spironolactone...first at the outset of any Transition..
.and, then, as mystifyingly, seemingly forever, years and years and even decades in a TG woman whose Testosterone levels were already incredibly low, and lower than most GG women.
But in this document, I have assembled some other research..that doesn't even, on the face of it, have to do with the Suicides of Transgender Folks.. But, if you bear with me, you wil see that it does.
This was what had to be done in order to understand the striking brain fog and depression and ultimately, the suicide, of so many Transgender persons.
Ultimately it came down to the Medical Profession mistreating the TG community and in fact damaging their brains to further Depression from the very start of the Medically supervised Transition that was offered.
•The neuronal mineralocorticoid receptor: from cell survival to neurogenesis.
•The coming out of the brain mineralocorticoid receptor”
The multifaceted mineralocorticoid receptor.
•Evolution of hormone selectivity in glucocorticoid and mineralocorticoid receptors.
•The brain mineralocorticoid receptor: greedy for ligand, mysterious in function"
•Mineralocorticoid and glucocorticoid receptors at the neuronal membrane, regulators of nongenomic corticosteroid signaling.
•The brain mineralocorticoid receptor and stress resilience.
•Mineralocorticoid Receptor Blockade Prevents Stress-Induced Modulation of
•Multiple Memory Systems in the Human Brain
•Mineralocorticoid receptor stimulation improves cognitive function and decreases cortisol secretion in depressed patients and healthy individuals.
•Blocking Mineralocorticoid Receptors IMPAIRs, Blocking Glucocorticoid Receptors ENHANCEs Memory Retrieval in Humans
•Decreased expression of mineralocorticoid receptor mRNA and its splice variants in postmortem brain regions of patients with major depressive disorder.
•Glucocorticoid and mineralocorticoid receptor expression in the human hippocampus in major depressive disorder.
•Depressed patients in remission show an interaction between variance in the mineralocorticoid receptor NR3C2 gene and childhood trauma on negative memory bias
•MineraloCorticoid Receptor Iso/Val Genotype Moderates the Association Between PreviousChildhood Emotional Neglect and Amygdala Reactivity
•Adolescents with Major Depression demonstrate increased Amygdala Activation.
•The prototypic mineralocorticoid receptor agonist aldosterone influences neurogenesis in the dentate gyrus of the adrenalectomized rat.
•Aldosterone: good guy or bad guy in cerebrovascular disease?
•Stress, glucocorticoid hormones, and hippocampal neural progenitor cells: implications to mood disorders

Friday, November 13, 2015

Dietary fiber effect depends on the gut microbiomes


Previous studies at the have shown that the gut microbiota is altered in metabolic diseases such as type 2 diabetes, and that the gut microbiota contributes to obesity, diabetes and cardiovascular disease.
A new study, published in Cell Metabolism, shows that people with better control of blood sugar after eating barley kernel bread also have a different balance of microbes in the gut.

Thursday, November 12, 2015

System Concept


Low-power CMOS circuits coupled with ultrasonic harvesting and
backscatter communication can provide a toolset from which to build
scalable, chronic extracellular recording systems.
This paper focuses on the fundamental system design trade-offs
and ultimate size, power, and bandwidth scaling limits of systems
built from low-power CMOS coupled with ultrasonic power delivery
and backscatter communication. In particular, we propose an
ultra-miniature as well as extremely compliant system, shown in Fig.
1, that enables massive scaling in the number of neural recordings
from the brain while providing a path towards truly chronic BMI.

These goals are achieved via two fundamental technology innovations:
1) thousands of 10 – 100 µm scale, free-floating, independent sensor nodes, or neural dust, that detect and report local extracellular electrophysiological data,
and 2) a sub-cranial interrogator that establishes power and communication links with the neural dust. The interrogator is placed beneath the skull and below the dura mater, to avoid strong attenuation of ultrasound by bone and is powered by an external transceiver via RF power transfer. During operation, the sub-cranial interrogator couples ultrasound energy into the tissue and performs both spatial and frequency discrimination with sufficient bandwidth to interrogate each sensing node.
Neural dust can be either an active node, which rectifies or recovers power at the sensing node to activate CMOS electronics for data pre-processing, encoding,
and transmission, or a passive node, which maximizes the reflectivity of the dust as a function of a measured potential. For both schemes, neural dust can communicate the recorded neural data back to the interrogator by modulating the amplitude, frequency, and/or phase of the incoming ultrasound wave.

Learning disabilities share common defects

A study of two models of intellectual disability in mice has found that they share similar disease mechanisms.
Researchers found that treatment with a statin drug called Lovastatin - commonly used to treat high cholesterol - can correct high levels of protein production in the brain linked to the conditions.
The findings suggest that different types of intellectual disabilities may benefit from common therapeutic approaches, the researchers say.

Wednesday, November 11, 2015

RAM


காசி அன்னபூரணி எப்படி உருவானாள் தெரியுமா?


காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன்; தனஞ்செயனோ தரித்திரன். ஒரு நாள் மணிகர்ணிகை துறையில் நீராடி, விஸ்வேஸ்வரர்- விசாலாட்சியை தரிசித்து விட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த தனஞ்செயன், தன்னை அன்னதோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான். அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி தந்து, ‘‘தனஞ்செயா, முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜகுமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள் வேட்டைக்குச் சென்று, காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்தனர். அப்போது அவர்களைக் கண்ட முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை உபசரித்தார்.


முனிவர் வழங்கிய அன்னம் சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது. ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத் தோன்றியது. எனவே, சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். அப்படி அன்னத்தை அவமானப்படுத்தியதாலேயே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். அன்னத்தை அவமதிக்காத சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான். நேம நியமங்கள் வழுவாமல் விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்ன தோஷ நிலை மாறி அவள் அருள் பெறலாம்!’’ என்றார்.
அதன் பின் தனஞ்செயன் அன்னபூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அணுகி யாரைப் பூஜிக்கிறார்கள் என்று கேட்டான் தனஞ்செயன். பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த சிவனின் பசிப்பிணி அகல பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு கபாலத்தை நிரப்பினள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர் அவர்கள். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரத முறைகளை விளக்கினர். அதன்படி காசிக்கு வந்த தனஜ்செயன், விரதம் இருந்து அன்னபூரணியின் அருள் பெற்றான்.
‘‘இந்த விரதத்தை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. உனக்கு அருள் பாலிக்க நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்கிறேன்!’’ என்றாள்.
அதனால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்த அன்னபூரணி ஆலயம்.
நித்ய ஆனந்தகரீ வர அபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|
நிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|
ப்ராலேய அசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (1)

அனுதினமும் ஆனந்தம் அளிப்பவளே! அபய வரத கரங்கள் உடையவளே! அழகின் ரத்தினக் கடலே!
எம் பாவத் தொகுப்பை நாசம் செய்பவளே! காட்சிதந்து அருளும் மாஹேஸ்வரியே!
மலையரசன் ஹிமவானின் வம்சத்தைத் தூய்மையாக்குபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

நானா ரத்ன விசித்ர பூஷணகரீ ஹேம அம்பர ஆடம்பரீ|
முக்தா ஹார விலம்பமான விலஸத் வக்ஷோஜ கும்பாந்தரீ|
காச்மீரா கருவாஸிதா ருசிகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (2)

நாலாவித விசித்திர ரத்ன ஆபரணங்கள் அணிந்தவளே! தங்கப் பட்டாடை அணிந்தவளே!
முத்துமாலை மார்பின் நடுவே ஆடும்படி அலங்கரிக்கப் பட்டவளே!
காஷ்மீர அகில் தூபம் சூழ, நறுமணம் நிரம்பப் பெற்றவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

யோக ஆனந்தகரீ ரிபு க்ஷயகரீ தர்மைக நிஷ்டாகரீ|
சந்த்ர அர்க அனலபா ஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ|
ஸர்வ ஐச்வர்யகரீ தப: பலகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (3)

யோகானந்தத்தை அருள்பவளே! தர்மத்தின் மீதிலேயே சிந்தையைச் செலுத்த வைப்பவளே!
சந்திரன் சூரியன் அக்னிக்கு ஈடான ஒளியோடு திகழ்பவளே! மூவுலகையும் காப்பவளே!
அனைத்து விதமான செல்வங்களையும் தருபவளே! தவப் பலனைத் தரும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

கைலாச அசல கந்தராலயகரீ கௌரீ ஹ்யுமாசங்கரீ|
கௌமாரீ நிகமார்த்த கோசரகரீ ஹ்யோங்கார பீஜ அக்ஷரீ|
மோக்ஷ த்வார கவாடபாட நகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (4)

கயிலாச மலைக் குகையை வீடாகக் கொண்டவளே! பொன்னிறத்தில் ஒளிரும் உமாதேவியே! சங்கரன் துணைவியே!
இளமை பொருந்தியவளே! வேதப் பொருளை அறியச் செய்பவளே! ஓங்காரத்தை பீஜாட்சரமாகக் கொண்டவளே!
மோட்ச வாசலைத் திறந்தருளும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

த்ருச்யா த்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரம்மாண்ட பாண்டோதரீ|
லீலா நாடக ஸூத்ர கேலனகரீ விக்ஞான தீபாங்குரீ|
ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (5)

இக-பர சுகம் பெறக் காரணமாக இருப்பவளே! பிரமாண்டத்தை வயிற்றில் தாங்கியவளே!
உலகியல் நாடகத்தை நடத்தும் நாயகியே! அனுபவ ஞான விளக்கின் சுடராய் ஒளிர்பவளே!
மகேச்வரனின் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரி பாவாகரீ|
காச்மீரா த்ரிபுரேச்வரீ த்ரிநயனீ விச்வேச்வரீ சர்வரீ|
ஸ்வர்க த்வார கவாட பாடனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (6)

எல்லா எழுத்துகளுக்கும் காரணமாய் இருப்பவளே! முத்தொழில்களின் தோற்றத்துக்கும் மூலகாரணப் பொருளே!
மங்கலக் குங்குமம் தரித்தவளே! முப்புரம் எரித்த முக்கண் முதல்வனின் பத்தினியே! உலக நாயகியே! எங்கும் இருப்பவளே!
சுவர்க்க உலகத்தின் வாசல் கதவைத் திறந்து அருளும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

உர்வீ ஸர்வ ஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ|
வேணி நீல ஸமான குந்தலதரீ நித்ய அன்னதானேச்வரீ|
ஸாக்ஷான் மோக்ஷகரீ ஸதா சுபகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (7)

பூமி உருவாக இருப்பவளே! அனைத்து மக்களுக்கும் ஈச்வரியே! வெற்றியைத் தரும் வித்தகியே! கருணைக் கடலே!
அழகுப் பின்னலுடன் கருங்குழல் கொண்டவளே! தினம்தினமும் அன்னதானம் அளிக்கும் அன்னையே!
மோட்சம் அருள்பவளே! மங்கலம் தருபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

தேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதா தாக்ஷாயணி ஸுந்தரீ|
வாமா ஸ்வாது பயோதரா ப்ரியகரீ ஸௌபாக்ய மாஹேச்வரீ|
பக்தாபீஷ்டகரீ ஸதா ஸுபகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (8)

அனைத்து அபூர்வ ரத்தினங்களாலும் ஒளிர்பவளே! தாட்சாயணி தாயே! அழகு மிகுந்த அன்னையே!
ஈசனில் பாதியாய் இடப்புறம் கொண்டு ஈசன் விரும்பும் இனியதைச் செய்பவளே! சௌபாக்கியம் கொண்ட மகேசன் மனைவியே!
பக்தரின் விருப்பத்தை நிறைவேற்றித் தருபவளே! என்றும் சுபமானதைச் செய்பவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

சந்த்ர அர்க அனல கோடி கோடி ஸத்ருசீ சந்த்ராம்சு பிம்பாதரீ|
சந்த்ர அர்க அக்னி சமான குண்டலதரீ சந்த்ர அர்க வர்ணேச்வரீ|
மாலா புஸ்தக பாச அங்குசதரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (9)

கோடிக்கணக்கான சந்திர சூரிய அக்னியருக்கு ஒப்பானவளே! பிறைச் சந்திரன் போல் கோவைப்பழ வதனம் கொண்டவளே!
சந்திர சூரிய அக்னியர்போல் ஒளிவீசும் குண்டலங்கள் அணிந்தவளே! சந்திர அக்னியின் ஒளி நிறத்தவளே!
மாலை புத்தகம் பாசம் அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

க்ஷத்ர த்ராணகரீ மஹாபயகரீ மாதா க்ருபா ஸாகரீ|
ஸர்வ ஆனந்தகரீ ஸதாசிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீ|
தக்ஷா க்ரந்தகரீ நிராமயகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (10)

சத்திரியரைப் போல் சாமானியரைக் காப்பவளே! பயத்தைப் போக்கி அருள்பவளே! கருணைக் கடலான தாயே!
அனைவருக்கும் ஆனந்தத்தையே அருள்பவளே! சதாசிவன் துணை லோகநாயகியே! முப்போதும் மங்கலமே தருபவளே!
வாட்டும் பிணியை ஓட்டுபவளே! நோயற்ற வாழ்வு அளிப்பவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ||

அன்னம் நிறைந்தவளே! என்றும் பூரணமாக இருப்பவளே! சங்கரனின் பிராண நாயகியே!
மாதா பார்வதியே! எமக்கு ஞான வைராக்கியம் ஏற்பட பிட்சை இட்டு அருள்வாய்!

மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:|
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம்||

எனக்குத் தாய் - பார்வதீ தேவீ! தந்தை - மகேஸ்வரன்!
சொந்தங்கள் - சிவபக்தர்கள்! என் தேசம் - மூவுலகமுமே!
தமிழாக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

Diabetes drug reduces risk of heart failure and may prevent it

In the trial, patients with type 2 diabetes and risk factors for heart disease were randomized to receive once-daily doses of either the glucose-lowering drug empagliflozin (10 mg or 25 mg doses), or a placebo. The drug or placebo was given in addition to standard care.
At the end of the trial period, investigators found that patients treated with the drug experienced reductions in blood sugar and blood pressure, as well as weight loss, compared to those on placebo.

Secret Underground City of Ellora Caves - Ancient Aliens In India?



We are at Ellora caves in India, and I am going to show you some solid evidence about a secret underground area that is hidden under these caves. As you can see, there is a rectangular tunnel about 1 foot wide that is vertically going down, and is not open for public access. I asked the security guards if I could take a closer look and they told me that visitors are not allowed but they also told me that, this tunnel is over 40 feet deep and then it takes a right angle turn to proceed underground. Nobody knows what's inside after that because the tunnel becomes too narrow for human beings to get through it. 
Here is another one that is hiding in plain sight. You can see a channel on the ground and there is a small rectangular opening at the end of this passage that would drain the water to the other side of the temple. But, I went to the other side of this rock but guess what? It is a solid stone!! So, there is no other way, except that this rectangular opening leads to the underground. Notice that the rectangular opening is only large enough for a 10 year old to go in? Since adult human beings can't access it, was it designed for human beings at all? 

This is another hidden passage in Ellora caves that I tried to get through, but after 10 feet, it becomes so narrow that I can't go any further. Where do these mysterious tunnels lead? Who could have used such narrow passages? The other important question is: how can you carve such narrow passages if human beings cannot even get through them? Was it carved by humans at all? Were these carved for extraterrestrials that are smaller than human beings?

Notice how this entrance is clearly going underground, in this cave temple. These are underground areas hiding in plain sight. The security guards told me that there are several underground tunnels in Ellora caves which gradually become too narrow for human beings to access them, and all of them are locked. From these old doors, we can assume that these tunnels have been closed from public access at least 30 to 40 years ago. 

These underground tunnels are not found in the same area, but are scattered over many different caves in Ellora, which stretches across a few miles. Is it possible that there could be a vast underground city like Derinkuyu in Turkey? Derinkuyu is an enormous underground city with advanced technical features that could accommodate more than 20,000 people, which was hidden for centuries only to be discovered in 1965. 

If it is true that there is a vast underground city in Ellora, shouldn't there be ventilation shafts that would allow air from the ground to reach below. In Derinkuyu, there are thousands of holes drilled from the ground that act as ventilation shafts to the underground city. Look at this long ventilation shaft in Ellora caves that is drilled secretly in a dark chamber. It is about 4 inches wide, but it is so deep that we can't even see the other end. Could this be a ventilation shaft that reaches the underground city?

How about this ventilation shaft, which is also going underground? You can also see hundreds of holes like this drilled on the rock floor. Some of them are unfinished, and only few inches deep, but notice how the other holes have been closed with concrete recently. I asked why some of these holes have been closed and my tour guide told me that someone dropped their car keys into one of them, but these holes are so deep that they couldn't retrieve it. So, they just covered these holes by putting concrete over them.

What else could be the purpose of these deep holes on the floor, if they are not ventilation shafts? Why would hundreds of holes be drilled on these rock floors with painstaking efforts without any reason? Now, this is one of the abandoned, bat infested places and let's take a look at what's inside. This seems like a very old sanctum holding a lingam, which is a Hindu god. Centuries ago, plenty of water would be poured on this lingam everyday as part of religious worship, and it would drain through this channel. Notice that this water drain has been closed recently with some rocks. Where would the water go? Let's see...It would go vertically down through this tunnel. 

Unless there is an area underground, this would be pointless because the water would just overflow all over the place! All over Ellora caves, there are hundreds of idols which would require thousands of gallons of water poured on them every day. Was this a technique to get clean water underground that could be used for different purposes? 

தீபவம்ஸ, மஹாவம்ஸவும், முன்னைய ஆராய்வாளர்களும்



தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற பாளி நூல்களில் கூறப்பட்டுள்ளவைகளை, 1500ஆம் ஆண்டுகளிலிருந்து, ஐரோப்பிய, இந்திய, இலங்கை, மற்றும் ஆராய்வாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர், இன்றும் ஆராய்கின்றனர், நூற்றுக் கணக்கான ஆய்வுக் கட்டுரைகளும், ஆய்வு நூல்களும் இவை பற்றி எழுதப்பட்டுள்ளன. இவர்களுள், போர்த்துக்கேய, ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களுக்குப் பிற்பட்ட ஐரோப்பிய ஆராய்வாளர்களான George Turnour, Hermann Oldenberg, R.O. Franke, Rhys David, V. A. Smith, H. C. Norman, J. F. Fleet, Kern, Wilhelm Geiger என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அன்று ஜேர்மனிய ஆராய்வாளர்களே, இந்நூல்களை ஆராய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
ஐரோப்பிய ஆராய்வாளர்கள், தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களில் கூறப்பட்டுள்ள கதைகளுக்கும், கிரேக்க, இலத்தீன மொழிகளின் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமையை ஆராய்ந்து, ஒப்பிட்டு உள்ளனர், சில கேள்விகளையும் எழுப்பியிருந்துள்ளனர். உதாரணமாக: விஜயனதும், 700 தோழர்களதும் இலங்கை அடைவையும், அதைத்தொடர்ந்து குவேனியால் செய்யப்பட்டவைகளையும், ஐரோப்பிய ஆராய்வாளர்கள், கிரேக்க Homer இன் இலக்கியங்களில் Circe தீவில் Ulysses இறங்கிய துடனும், அதன்பின்னர் நடைபெற்றவைகளுடனும் ஒப்பிட்டுள்ளனர்.
தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களை அன்று ஆராய்ந்த ஐரோப்பியர்கள், தமக்குத் தெரிந்திருந்த கிரேக்க, இலத்தீன இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்கும், இலங்கையின் பாளி மொழி நூல்களில் கூறப்பட்டிருந்தவைகளுக்குமிடையில் காணப்பட்ட மிக நெருங்கிய ஒற்றுமைகளை அடையாளங் கண்டனர். அந்த ஒற்றுமை எப்படி உருவாகியிருக்கமுடியும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர்.
ஆனால், அதற்கான விடைகளை, அவர்களால் ஆதாரபூர்வமாகக் காணமுடியாதே போனது. அவர்கள் குறிப்பிட்டமைபோல், இந்த ஒற்றுமை தற்செயலாக நடைபெற்றிருக்க முடியாது என்றே எவரையும் அவை கருதவைக்கும். ஆனால், இது எப்படி நடைபெற்றிருக்க முடியும் என்பதற்கான விடையை அறிவதைப் பொறுத்தமட்டில், அங்கு மூன்றே நடைபெற்றிருக்கமுடியும். அவையாவன:
1) இலங்கையில் பாளி மொழியில் இந்த நூல்களை எழுதியவர், அன்று, கிரேக்க நாட்டிற்கு, அல்லது “கொன்ஸ்தாந்திநோப்பிள்” (Constantinople) இற்குச் சென்றிருந்த நிலையில், அவர் கிரேக்க பண்டைய இலக்கியங்களையும், நூல்களையும் இயற்றியிருக்க முடியும், அல்லது, அவரின் சிந்தனைகளைக் கேட்டு, கிரேக்கர் ஒருவர் இலக்கியங்களை இயற்றியிருக்கமுடியும்;
2) இலங்கையில் பாளி மொழியில் இந்த நூல்களை இயற்றியிருந்தவர், கிரேக்க நாட்டிற்கு, அல்லது கொன்ஸ்தாந்திநோப்பிள் இற்குச் சென்றிருந்த நிலையில், ஹோமரின் இலக்கியங்களையும், ஏனைய இலக்கியங்களையும் அறிய வந்து, நாடு திரும்பி இயற்றியிருந்த இந்த நூல்களில், கிரேக்க இலக்கியங்களிலிருந்து அறிந்தவைகளைப் புகுத்தியிருக்கமுடியும்;
3) கிரேக்க தேசத்திலிருந்து, அல்லது “கொன்ஸ்தாந்திநோப்பிள்” இல் இருந்து இலங்கை வந்திருந்த ஒருவரூடாக அறிந்தவைகளை, இலங்கைப் புலவன் ஒருவன் இந்த நூல்களில் புகுத்தியிருக்கமுடியும்.
இவைகள், ஹோமர் (Homer) பற்றியும், ஹோமரின் காலம் பற்றியும், தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களின் காலங்கள் பற்றியும் ஆராய நிர்ப்பந்திக்கின்றன.
மேலும், தமிழ், இந்திய இலக்கியங்களிலும், இப்படியான ஒற்றுமைகள் உள்ளனவா என்பதை ஆராய, இவை நிர்ப்பந்திக்கின்றன.
எதுவிதத்திலும், மேலே குறிப்பிட்ட மூன்றினுள், முதலிரண்டிலொன்று நடைபெற்றிருந்தால், பூமியின் பல்வேறு மொழிகளைத் தெரிந்திருந்தவொரு பேரறிஞன் ஒருவன், அன்று இலங்கையில் இருந்துள்ளான் என்பதை அது வலியுறுத்தும்.
இந்தநிலையில், இந்த அறிஞன் பூமியின் பல்வேறு மொழிகளை ஒப்பிட்டு ஆராயவும் முற்பட்டேயிருந்திருப்பான். இந்த நிலையில், இலங்கையின் புலவன் எவனாவது, பூமியின் பல் வேறு மொழிகளை அறிந்திருந்தானா என்பதை இலங்கையின் இலக்கியங்களுடாகவும், இலக்கண நூல்களுடாகவும், கல்வெட்டுக்கள், ஏனையவைகளுடாகவும் ஆராய்ந்து அறிய வேண்டியுள்ளது; அவன் யார், அவனது காலம் என்ன என்பவைகள் ஆராய்ந்தறியப்பட வேண்டியுள்ளன.
மறுபுறத்தில், மேலே குறிப்பிடப்பட்டவைகளுள் முதல் இரண்டிலொன்று நடைபெற்று, ஆராய்வாளர்கள் கூறுவது போல், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகள் கி. பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டிருந்தால், அக்காலப் பகுதிகளுக்கு முன்னரே, கிரேக்கர்கள் இலங்கை மொழிகளைப் பற்றியும், தமிழ், சமஸ்கிருத, பாளி மொழிகளைப் பற்றியும் அறிந்திருந்திருப்பர்.
இது, கிரேக்கர்கள் தமது இலக்கியங்கள், மற்றும் மொழியாராய்வு, இலக்கண நூல்களில், கி;.பி.4ஆம் நூற்றாண்டு வரையில,தமிழ், சிங்களம், பாளி, சமஸ்கிருதம் என்ற பிற மொழிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் சந்தர்ப்பங்களை அதிகரிக்கிறது.
இந்தநிலையில், கிரேக்க, இலத்தீன் மொழியாராய்வு நூல்களையும், பிறமொழிகளின் இலக்கண நூல்களையும் ஆராயவேண்டியுள்ளது; அவற்றில் இலங்கை, இந்திய மொழிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பது அறியப்படவேண்டும்.
கிரேக்க, இலத்தீன மொழியாராய்வு நூல்களிலும், இலக்கண நூல்களிலும் இலங்கை, இந்திய மொழிகள் குறிப்பிடப்படாது, இலங்கை, இந்திய மொழியாராய்வு, இலக்கண நூல்கள், கல்வெட்டுக்கள், ஏனையவைகளில் ஐரோப்பிய மொழிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தால், மேற்குறிப்பிட்டவைகளுள் முதலிரண்டில் ஒன்று நடைபெற்றிருக்கவே சந்தர்ப்பங்கள் உண்டு.
துரதிஷ்டவசமாக, தமிழ், சிங்கள, பாளி, சமஸ்கிருத இலக்கண, மொழியாராய்வு நூல்களில், பிற மொழிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதா; எக்காலத்தில், யாரால் அவை குறிப்பிடப்பட்டுள்ளன என்பவைபற்றி, இலங்கை, இந்திய ஆராய்வாளர்கள் ஆராய்ந்து குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது, இலங்கையின் இந்தப் பாளி மொழி நூல்களைப் பற்றிச் சரியாக அறிவதாயின், இலங்கை, இந்திய, ஐரோப்பிய பண்டைய இலக்கண, மொழியாராய்வு நூல்களையும் ஆராய நிர்ப்பந்திக்கிறது.
இந்திய ஆராய்வாளர்களுள், A. L. Basham, Bimala Churn Law, K. A. நீலகண்டசாஸ்த்ரி, மற்றும் ஒருசிலரே, இலங்கையின் இந்த நூல்களை ஆராய்வதில் ஈடுபட்டு இருந்தனர்.
சிங்களவர்களுள், James de Alwis, G. P. Malala sēkara, E. W. Adikāram, S. Paranavitāna, G. C. Mendis, Walpola Rāhula> K. M. D. Silva,மற்றும் சிலர், இந்தப் பாளி மொழி நூல்களை ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்னைய காலங்களிலிருந்து ஆராய்ந்து, ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வந்துள்ளனர்.
ஜேர்மனியின் Bavāria மாநிலத்தின் தலைநகரான Munichஇல், இலங்கையின் இந்தப் பாளி மொழி நூல்களுள் மஹாவம்ஸ என்பதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்களுள் ஒருவரான Dr. Wilhelm Geigeஇன் வழிகாட்டலில் தனது உயர் பட்டப்படிப்பினை 1927 – 1930வரை மேற்கொண்டவரான G. C. Mendis என்பவர், “An Historical Criticism of the Mahāvamsa” என்ற பெரும் ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தார்.
இவர்கள், இந்த நூல்கள் யாரால், எப்பொழுது இயற்றப்பட்டவை; இவைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவை என்பவைகளையெல்லாம் ஆராய்ந்திருந்தனர். G. C. Mendis, தனது “The Pāli Chronicles of Ceylon “ (1946) என்ற ஆய்வுக் கட்டுரையிலும் “Problems of Ceylon History” (1967) என்ற ஆய்வு நூலிலும், இந்தப் பாளி மொழி நூல்களைப்பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். அவர் இந்தப் பாளி மொழி நூலில் கூறப்பட்டுள்ளவைக்கும், சமஸ்கிருத மொழி இலக்கியங்கள் சிலவற்றில் கூறப்பட்டிருப்பவை களுக்கும் இடையிலுள்ள சில ஒற்றுமைகளை எடுத்துக்காட்டியுள்ளார்.
இலங்கை இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளவைக்கும், வட இந்தியச் சமஸ்கிருத மொழி இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்கும் இடையில் காணப்பட்ட சில ஒற்றுமைகளும், கிரேக்க மொழி இலக்கியங்களுக்கும், இலங்கையின் பாளி மொழி இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்குமிடையில் காணப்பட்ட ஒற்றுமையும், 1930ஆம் ஆண்டுகளில், சிங்களவருக்கும் ஆரியன் இனத்தவர்களுக்குமிடையில் ஒருவித இணைப்பை வலியுறுத்திக்கூற, சிங்கள பௌத்தர்களுக்கு மேலும் உதவியாக அமைந்தன.
இவர்களது ஆய்வுகளும், முடிவுகளும், பின்னைய ஆராய்வாளர்களால் எழுதப்பட்டுவரும் நூல்களிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுவரும் போதிலும், இவர்களது ஆய்வுகளும், முடிவுக்கு வரும் முறையும், விஞ்ஞானத் தன்மையற்றதாகவே காணப்படு;கின்றன. இவை தொடர்பாக அவர்கள் கூறுபவைகள் கற்பனைகளாகவே உள்ளன.
தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களில் கூறப்பட்டுள்ள பல் வேறு முக்கிய விடயங்களுக்கும், கிரேக்க, சமஸ்கிருத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சிலவற்றிற்குமிடையில்தான் ஒற்றுமைகள் காணப்படுகின்றன என்பதற்கில்லை.
இலங்கையின் பாளி மொழி நூல்களில் கூறப்பட்டுள்ளவைகளுக்கும், கிரேக்க, சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களில் கூறப்பட் டுள்ளவைகளை விட, தமிழ் புலவர்களுக்கும், அவர்களால் இயற்றப்பட்டதாகக் கூறப்பட்டுவரும் தமிழ் இலக்கியங்கள், விஞ்ஞான நூல்களுக்குமிடையில்தான் மிகப் பெரிய அளவிலும், மிக நெருங்கியதுமான தொடர்புகள் காணப்படுகின்றன.
துரதிஷ்டவசமாக, அன்றைய, இன்றைய சிங்களவர்களும், ஐரோப்பியர்களும், ஏனையோர்களும், இந்தத் தொடர்புகளை அறியுமளவிற்குத் தமது தமிழ் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளமுடியாதநிலை இருந்துள்ள போதும், தமிழக, இலங்கைத் தமிழ் இலக்கிய, வரலாற்;றுப் பேராசிரியர்களும், ஆராய்வாளர்களும்கூட, இன்றுவரை, இவற்றை ஆராய்ந்தறியாத நிலைதான் தொடர்கிறது.
இதற்கு முக்கிய காரணம், மஹாவம்ஸ, தீபவம்ஸ என்ற நூல்கள் பாளி மொழியில் எழுதப்பட்டிருந்த நிலையிலும், சிங்களம், சிங்களவர் என்பவைகளை முன்னைய ஆராய்வாளர்கள் “ஆரியன்,” சமஸ்கிருதம் என்பவைகளுடன் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் தொடர்புபடுத்தி வந்த நிலையிலும், தமிழ் என்றால், திராவிடன், சைவம், “இந்து” என்பவைகளுடனுமே தொடர்புகள் இருக்கமுடியும் என்ற முடிவு முன்னைய ஆராய் வாளர்கள் மத்தியில் மிகவும் உறுதியாக இருந்து வந்த நிலையிலும், தமிழ் இலக்கியங்களுக்கும், இலங்கையின் பௌத்த வரலாற்றினைக் கூறும் நூல்களாகக் கருதப்பட்ட தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களுக்குமிடையில் எந்வித தொடர்புகளும் இருக்கமுடியாது என்ற ஆணித்தரமான முடிவுக்கு, அவர்கள், ஒப்பிடுகையைச் செய்யாதே, வந்திருந்தமையாகும்.
இன்று கூட, மிகச்சிறு பகுதித் தமிழ் ஆராய்வாளர்களும், மக்களுமே, தமிழருக்கும், பௌத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது எனக் கருதுகின்றனர்.
ஆனால், இதற்கான விஞ்ஞானரீதியிலான போதிய ஆதாரங்களை இலக்கிய, தொல்பொருள் ஆய்வுகளுடாக அறியமுடியாத நிலையில்தான் ஆராய்வாளர்கள் இருந்து வருகின்றனர்.
இவை, எமது முன்னைய ஆராய்வாளர்களது ஆராயும் தன்மை, வல்லமை பற்றிச் சிந்திக்கவைக்கிறது; எமது அரசியல்வாதிகளின் அறிவு டைமை பற்றிச் சிந்திக்கவைக்கிறது.
இப்படிக் கூறும்போது, ஒருபுறத்தில், சிலர் மிகவும் அவசர அவசரமாக, 1963ஆம் ஆண்டில், S. J. குணசேகரம் என்பவர் “The Vijayan Legend and the Āryan Myth – A Commentary on Dr. G. C. Mendis’ Mahābhārata Legends in th Mahāvamsa “ என்ற ஆய்வு நூலையும்; “The Sinhalese of Ceylon and the Āryan Theory – Letters of a Tamil Father to his son” என்ற ஆய்வு நூலை, Samuel Livinstone என்பவரும் எழுதியிருந்தனர் எனவும்; அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர் சி. க. சிற்றம்பலம், ஏனையோர்கள், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களை ஆராய்ந்து, அவைகள் கட்டுக் கதைகளைக் கூறுகின்றன என நிராகரித்துள்ளனர் என்றும் கூற முற்படமுடியும்.
ஆனால், இவர்களது ஆய்வுகள் எதுவும், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளை, விஞ்ஞான ரீதியாக ஆராயவே யில்லை; அவர்களது நிராகரிப்புகளுக்கான நியாயப்படுத்தல் கள், விஞ்ஞானத் தன்மையான ஆதாரங்களைக் கொண்டதாகவும் இல்லை. மேலும், முன்னையோர்களது ஆய்வுகள், விஜய, சிங்களவர் என்பவற்றை “ஆரியன்” அல்ல என நிறுவும் நோக்கத்தினைக் கொண்டே இருந்துள்ளனவன்றி, தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களை, இலக்கிய ஆய்வு என்பதற்கு உட்படுத்தவுமில்லை; தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளில் கூறப்பட்டிருப்பவைகள் வரலாற்று உண்மைகளா, இல்லையா என்பதை இலக்கியங்களுடாக உறுதிப்படுத்தவுமில்லை!
மறுபுறத்தில், மற்றொருசாரார், தமிழுக்கும், பௌத்தத்திற் கும் இடையிலிருந்து வந்த தொடர்புகளை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் 1940களிலேயே ஆராய்ந்து நூல் ஒன்றை எழுதியிருந்தார் என்றும்; பல பேராசிரியர்களும், ஆராய்வாளர்களும் தமிழ் நாட்டின் பௌத்தம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகள் “Buddhism in Tamil Nadu” என்ற பெயரின்கீழ் 1998ஆம் ஆண்டில் Institute of Asian Studies சென்னையினால் வெளியிடப்பட்டிருந்தது எனவும்; வேறு பல ஆய்வு நூல்கள் பல ஆராய்வாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூறமுடியும்.
ஆனால், துரதிஷ்டவசமாக, தமிழ் - பௌத்தம் - தமிழ் நாடு என்றவுடன் சகலரும் குறிப்பிடும் மணிமேகலை காப்பியத்தினைக்கூட, இந்த ஆராய்வாளர்களும், பேராசிரியர்களும் விஞ்ஞானரீதியாக ஆராயவில்லை என்பதுதான் கசப்பான, மறுக்கப்படமுடியாத உண்மையாகும்!
இப்படி, இலக்கியங்களைப் பாடசாலை, பல்கலைக் கழகக் கல்விகளில் கற்றிராதவர்களும்; வேறு துறைகளைச் சார்ந்தவர்களும்; இலக்கிய, வரலாற்று ஆராய்வுகளை எப்படிச் செய்வது என்பதைப் பல்கலைக்கழக, உயர் படிப்புக்களில் கற்காதவர்களுமான நாங்கள் கூறுவதை, பெரும்பான்மையான வாசகர்கள் ஏற்பதற்குக் கடினமாகவே இருக்கும். இது, ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என ஏற்கப்பட்டு வந்தவர்கள் பிரச்சனையிலிருந்து நழுவிக்கொள்ளப் பெரும் உதவியாகவுமிருக்கும்.
இப்படியான சூழ்நிலைகளில், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என ஏற்கப்பட்டு வந்தவர்கள் மௌனம் சாதித்துக் கொள்வதையும் காணமுடியும். முறைமையாக்கல் கல்விக்குப் பழக்கப்பட்டவர்களது நிலை, இப்படியேதான் இருக்கமுடியும். இதில் வியப்படைய எதுவுமில்லை.
ஆனால், இந்த முகநூலில் இனிச் செய்யப்படும் ஆய்வுகளையும், வரப்படும் முடிவுகளையும் படித்து, ஆராயும் ஒருவர், தமிழ் பேசும் மக்களின் பரிதாபநிலையை நன்கு உணரமுடியும்.
தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களுக்கும், தமிழிலக்கியங்;கள், விஞ்ஞான நூல்களுக்குமிடையில் காணப்படும் நெருங்கிய தொடர்புகளை முழுமையாக ஆராய்வது, பரந்துபட்டவொரு ஆய்வாகும். இந்தநிலையில், வாசகர்கள் சுய ஆராய்வில் ஈடுபட இடமிளிக்கும் நோக்கிலும், இந்த ஆய்வுகளின் பக்கங்களின் எண்ணிக்கையை தேவையற்ற விதத்தில் அதிகரிக்காது பார்த்துக்;கொள்ளவும், இங்கு தெரிந்தெடுக்கப்பட்ட விதத்திலே, சில மிகமுக்கிய விடயங்கள் மாத்திரம் ஒப்பிடப்பட்டு, ஆராயப்படவேண்டியுள்ளது, ஏனையவைகளை, வாசகர்கள் சுயமாக ஆராய்ந்தறிய விடவேண்டியுள்ளது.
எதுவிதத்திலும், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழியில் மாத்திரம்தான் இன்று கிடைக்கப்பெறுவது, தமிழ் மொழியை மாத்திரம் தெரிந்திருப்பவர்கள், இவற்றினை ஆராய முடியாது செய்துள்ளது. மஹாவம்ஸ நூலைச் சங்கரன் என்பவர் தமிழில் மொழி பெயர்த்திருந்த போதும், அந்த மொழி பெயர்ப்பு நூலானது, யாழ் பல்கலைக் கழக நூலகம் தவிர்ந்த ஏயை நூலகங்கள் எதிலும் கிடைக்கக்கூடியதாக இன்றில்லை.
தீபவம்ஸ நூலானது, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இது, தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களின் ஆராய்வானது, தவிர்க்கமுடியாதபடி, ஆங்கிலம் தெரிந்தோரால் மாத்திரமே ஆய்வு செய்யப்படக் கூடிய நிலை பெருமளவில் காணப்படுகிறது.
அறிவியலைப் பொறுத்தமட்டில், இது, தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களை ஆராய்வதூடாகத் தமிழ் மாணவர்கள் தமது அறிவையும், ஆராயும் தன்மையையும் வளர்த்துக் கொள்வதற்குப் பெரும் தடையாகவுள்ளது. இப் பிரச்சனையையும், ஏனைய பிரச்சனைகளையும் சுலபமாகத் தீர்க்க, எமது மாணவர்கள், தமது ஆங்கில அறிவை உயர்த்திக்கொள்வதே புத்திசாதுரியமானது.
பூமியின் ஒரு மொழியையல்ல, பல முக்கிய மொழிகளையும் கற்றுக் கொள்வது, ஒருவருக்குப் பலவகையிலும் உதவும்; அவரின் சமூகத்திற்கும் உதவும். ஆனால், பிறவொரு மொழியைக் கற்பவர் அந்த மொழியைத் தலைமுறை, தலைமுறைகளாகப் பேசிவந்த சமூகத்தவரே தானும் எனக் கருதாவிடில், அவர் புத்திசாதுரியமானவராக இருப்பார்.
இந்தநிலையில்,விளக்கங்களை முழுமையாக ஏற்படுத்திக் கொள்ளப் போதுமானவை எனக் கருதப்படும் அளவில், மிகக் குறைந்த ஆய்வுகளே இங்கு செய்யப்படுகின்றன. மேலும், விளக்கங்களைத் தொடர்ச்சியாகவும், சுலபமாகவும் ஏற்படுத்த உதவும் விதத்தில், ஒருவித ஆய்வுத்தொடர்ச்சி இருக்கும் விதத்திலேயே, ஆய்வு விடயங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
சில நூல்கள் யாழ் குடாவிலும், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் சாதாரண பொது நூலகங்களில் கிடைப்பது கடினமான நிலை காணப்படுவதால், நூல்களில் இருந்து பெற்றுத்தரப்படும் ஆய்வுகளுக்குத் தேவையான பகுதிகள், முழுமையாகத் தரப்படுகின்றன.
எதுவிதத்திலும், இன்று இணையத்தளங்களில் பண்டைய தமிழ் நுல்களை ஒருவர் முழுமையாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதால், அந்த இனையத்தள விபரங்களும் ஆங்காங்கு தரப்படுகின்றன.
ஆங்கில மொழி நூல்களிலிருந்து தரப்பட்டிருப்பவைகளுக்குத் தமிழாக்கம் தரப்படவில்லை.
எமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாம் ஆய்வுகளைச் செய்யத் தெரிந்தவர்களேயன்றி, சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அல்ல என்றே கருதுகின்றனர். இந்தநிலையில், தமிழாக்க மானது சிலவேளைகளில் கருத்துக்கள் மாற வழிவகுத்துவிடுமாகையால், அவை ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளன.
இங்கு செய்யப்பட்டுள்ள ஆய்வுகளையும், வரப்பட்டு உள்ள முடிவுகளையும் வாதிக்காது விடுவது, இலங்கையின் அரசியல் பிரச்சனைக்கு இறுதித்தீர்வுகான எந்தவிதத்திலும் உதவ மாட்டாது. மாறாக, அது இலங்கையின் அரசியல் பிரச்சனைக்கு இறுதியான ஒரு தீர்வுகாணப்படாது, பிரச்சனை தொடரவே வழியமைக்கும். இது புத்திக்கொவ்வாத செயற்பாடாகவே அமையும்.
கடந்த காலங்களில் நடைபெற்றுவந்ததுபோல், இன்றும் நாம் தவறுகளைத் தொடர்ந்து விடவும் முடியாது, தவறுகள் விடப்படுவதைத் தொடர்ந்து அனுமதிக்கவும் முடியாது. அப்படித் தவறுகள் விடப்படுவதின் தாக்கங்கள், தமிழ் பேசும் சமூகத்தினை மாத்திரமல்ல, இலங்கையின் சகல சமூகங்களையும், மீள்வதற்கு மிகவும் கடினமான நிலையினுள் நிரந்தரமாகத் தள்ளிவிடும்.
Thanks 
Vettivelu Thanam

Ectropion ::


Ectropion is a medical condition in which the lower eyelid turns outwards. It is also known as Out Turning of the Eyelid. In severe ectropion, the entire length of the eyelid is turned out. When ectropion is less severe, only one segment of the eyelid sags away from the eye. Artificial tears can help relieve the symptoms caused by ectropion until you can have surgery to correct the condition.
Causes
The primary cause of ectropion is the muscle weakness or tissue relaxation that occurs as part of the normal aging process. Other are :
1. Stroke
2. Skin cancer
3. Injury
4. Scar tissue from injuries or burns
5. Facial palsy
6. Birth defects due to genetic disorders like Down syndrome
7. Prior surgery or radiation treatment of the eyelids
8. Rapid weight loss
Signs and Symptoms
- Excess tearing of the eye (epiphora)
- Dry, painful eyes
- Eyelid turns outward
- Long-term (chronic) conjunctivitis
- Keratitis
- Redness of the lid and white part of the eye
- Irritation of eye.

Augmented Reality for Architectural Visualization


ஒரு பெண்

ஒரு பெண்
தன்னுடைய துயரத்தின் சாயல்
மகள்மீது படிவதை
ஒருபோதும் விரும்புவதில்லை

மகளின் விருப்பங்களைச்
சாத்தியப்படுத்தவே
ஒவ்வொன்றையும்
தேடிக்கண்டடைகிறாள்
முந்தின பருவத்தில்
அவளின் உள்ளிருந்து தெறித்துப்
பரவிய வெளிச்சத்தை
புதிய நிறத்தில்
மகளிடம்
உணர்த்திவிட விழைகிறாள்
அதனாலேயே
கதகதப்பை உணர்ந்தபடி உறங்குகிற
மகளின் கையை விலக்கி
பணியிடம் கிளம்புகிறாள் பெண்.
Courtesy - painting: Rajesh Shah
Sakthi Jothi

The three step plan for creative success

We live in a century of immense change. Yesterday's answers do not resolve the complex problems we face every day. At almost every level and at almost any position we have to invent new solutions or formulate things anew. But creativity is important not only to improve work performance but it is increasingly essential in solving every-day problems of our increasingly complex lives.Creativity improves the quality of life overall. However, enhancing creativity or achieve any mental change is not a quick fix, but the result of a long term, focused process. Creativity is a lifestyle.

Understanding the nature and operation of the mind is the first step to achieve meaningful mental change. Although arbitrary creative ideas happen to anybody, it takes systematic preparation to achieve mental excellence, which is essential to achieve long term creative success. There are three crucial elements to achieve creativity.

(1)  Understand the problem. Without knowing the crux of the contradiction or failings of the problem, creating or finding a solution is not possible. However, detailed understanding is not required! In fact, too many details are confusing and misleading.

(2)  Accept the place where you are. Creativity is not a linear progress. Most often creative solutions come to those, who are not positioned well in the organization or even come from outside. The lower you find yourself compared to your expectation, the better you are positioned for a breakthrough.

(3)  Be immersed in the problem. All creative people have a hundred percent mental commitment. They cannot be disturbed! Whereas environmental disturbances disrupt most people, creative minds thrive on stressful situations, which further sharpen their resolve toward the goal.

This last point is important. Mental commitment is not a forceful and rigid concentration; in fact, creative people do not seem to work on the problem at all! Einstein often received creative inspiration while chatting with friends, or engaged in other mundane activity. Mozart was known to enjoy light hearted partying with friends, but he is said to 'see' a whole symphony in a flash of creative moment. Creativity visits a clear, playful mind: live with a clear conscience. This allows a mental openness toward others and the world. Do not weigh down your mind with worries, lies, remorse. Get rid of grudges, hurts of any kind as soon as you have them. This is an emotionally difficult, and meticulous task, but well worth the effort! You will have to develop a personal method that you can regularly follow. Go for a walk; focus on a mantra, or meditation, with which to liberate your mind from negative mindset. Very often mental house cleaning will immediately create space for a creative solution. Follow up and work on your idea. Ideas are only as good as the diligent, persistent work that follows them. Do not get discouraged, if you receive unworkable, faulty answer at first. If you are persistent and remain optimistic, creative solutions will visit you.

Have a note book in which to collect your unedited thoughts. Some people have a journal at their bedside, to immediately write down ideas as they have them. If you write regularly, your creative potential will accumulate and form as an interconnected whole.

For more information please visit: thescienceofconsciousness.com