Search This Blog

Wednesday, September 2, 2015

காடன் மலை- மா. அரங்கநாதன்,

‘‘ஐயா-மலையை வலப்புறமா சுத்தணுமா-இடப்புறமாவா.’’
‘‘எப்படி வேண்டுமானாலும் சுத்து - மலையைப் பாக்கணும் - அதுதான் முக்கியம்.’’
அந்த இடத்திற்கு விசேட நாளன்று அவன் சென்றிருக்கக் கூடாது. விசேடங்கள் இட விசேடத்தை மங்கச் செய்யும். பெரிய அரண்மனை போன்ற கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஒரு மூலையில் எங்கேயும் பார்க்காதவாறு உட்கார்ந்து கொண்டிருந்த தாடிக்காரிடம் ஏனோ பேச வேண்டும் போலத் தோன்றிற்று. கேட்ட கேள்விக்கு அவர்தான் இப்படிப் பதில் சொன்னார்.
காடன் மலையோடு அவனுக்குச் சொந்தம் உண்டென்று பல்லாண்டு காலமாக கருதிக் கொண்டுmaaranganaவந்திருக்கிறான். பள்ளி செல்லும் பருவம் முதற்கொண்டு மலை அவனிடம் பேசி வந்திருக்கிறது. எட்டாம் வகுப்பில் தோற்றுப்போன செய்தியோடு வீடு திரும்புகையில் மலையைப் பார்ப்பதைத் தவிர்த்தான். பார்த்திருந்தால் அது சிரித்திருக்காது - அவனுக்கு ‘வெவ்வெவ்வே’ காட்டியிருக்காது. மலையின் அனுதாபம் எப்படியேனும் வெளிப்பட்டிருக்கும். அது காடன் மலை.
மீண்டும் ‘ஐயா’ என்றான். தாடிக்காரர் அவனை இப்போது கவனிப்பதாக இல்லை. எனவே கோவிலின் மற்றப் பகுதிகளுக்குச் சென்றான். உட்பிரகாரங்கள் மனிதக் கும்பலால் அழகிழந்து காணப்பட்டன. வெளிச்சம் குறைவாக விழுந்த ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். நேரஞ் செல்லச் செல்ல, கும்பல் அவனிருந்த ப்கத்திலும் வந்து மோதி உட்கார்ந்தது. திடகாத்திரம் உள்ளவனாதலால் சமாளித்துக் கொண்டான்.
இரண்டு மணி நேரம் அவனும் அந்தக் கும்பலுமாக இருந்த இடத்திற்கு வருகை தந்தது, அவன் அதுவரை கேட்டிராத ஒரு முடிவின் ஓசையும் ஒரு கருவிய்ன பிளிறலும். இந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பவனான போதிலும், இந்த இடத்தையே சார்ந்தவன் என்று சொல்ல முடியாது. அதனால்தான் அவ்விசைக் கருவிகளைப் புதிதாகச் செவியுற்று அதிர்ந்தான்.
காடன் மலையில் பண்டாரங்கள் மிகுதி. திருவிழாவின்போது அவர்கள் கூட்டம் இன்னுமதிகம். சுற்று வட்டார ஊர்களிலிருந்து நேர்ந்து கொண்ட காணிக்கையைச் செலுத்த, கரும்புத் தொட்டிலிலே குழந்தையைக் கொண்டு வரும் பெற்றோரும் அதிகம். அவர்களில் சிலர் துணியால் வாயை மூடிக்கொண்டும் இருந்தனர். மாமியார்கள் இருக்க முடியாதென அவன் நினைத்தான்.
கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து கொண்டிருப்பதில் ஒரு லாபமும் இருந்தது. பக்கத்திலிருந்த இருவர் பேசிக்கொண்டிருந்த விஷயம். அவனுக்கு அது உதவியாக இருந்தது.
‘‘மூணு நாளா வெளிப் பிரகாரத்திலே அப்படியே உட்கார்ந்திருந்தாராம். பேச்சில்லை. மாமியாரு கொடுமையாலே சாமியாரா மாறிட்டாராம்.’’
சிரிப்புடன் கூடிய பேச்சு. அவனுக்கு அது போது மானதாக இருந்தது.
‘கோனாரே’ என்றழைத்தது, அந்தக் குரல். அதே தாடிப் பண்டாரம்தான். அவன் பேசுவதற்காக நின்றான். 
‘‘எதைத் தேடி நீங்க வந்தாப்பில - முத்துக்கறுப்பக் கோனாரையா.’’
காடன் மலை வரும்போது, வழியில் ஆறு ஒன்றில் இருவர் தவம் புரிந்து கொண்டிருப்பதை அவன் பேருந்தில் இருந்தவாறே பார்த்தான். அப்படியல்ல - அவர்கள் மீன்தான் பிடித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அருகே சென்றதும் கண்டு தெரிந்து கொண்டான். இந்தப் பண்டாரமும் அதுபோன்றே இருக்கலாம். மீன் பிடிப்பதும் மோட்டார் பழுது பார்ப்பதுங்கூட தவநிலைதான் என்று எங்கோ படித்ததும் அவன் ஞாபகத்தில் வந்தது.
‘‘ஐயா-எனக்கொண்ணும் புரியல்லே - எல்லாம் தெரிஞ்சவங்க நீங்க. நான் கோனாரைத் தேடித்தான் வந்தேன்.’’ 
‘‘தேடிப் பிரயோசனம் இருக்காது - தானா வரணும்.’’
அவன் எதுவும் பேசத் தெரியாது நின்றான். மாலை விழாவிற்கான கூட்டம் மோதிற்று. தூரத்தே காடன் மலையைத் திரும்பித் திரும்பிப் பார்த்து தவித்தனர். மந்திரி வரக்கூடும். பக்திப் பாடல்கள் ஒலித்தன. கடவுள் இல்லையென்று சொல்பவருக்குத் தகுந்த பாடங் கற்பிக்க வேண்டும் என்று பிரசங்கி வேண்டுகோள் விடுத்தார். பண்டாரம் முகத்தில் ஏளனம்.
ஓரே கூச்சல். காடன் மலையில் தீ எரிந்து கொண்டிருப்பதை வரவேற்ற மக்களின் குதூகலம். பண்டாரம் தாடியை நீவிக்கொண்டார்.
‘‘முத்துக்கறுப்பக் கோனார் என் தாய் மாமன். அவரைத் தேடித்தான் இங்க வந்தேன். பிரகாரத்திலிருக்கறப்ப சொன்னாங்க, ‘யாரோ மாமியார் கொடுமையாலே சாமியாரா மாறிட்டாரு’ அப்படின்னு - அது அவராயிருக்கும்.’’
‘‘நினைச்சேன் தம்பி. அந்த ஆளு முகச்சாயல் கொஞ்சம் ஒங்கிட்டேயிருக்கு-ஒம் பேரு என்ன?’’
‘‘சுப்பிரமணி.’’
‘‘வாய்யா கோனாரே’’ என்று சத்தமிட்டவாறே, தாடி தூரத்தில் ஒருவரை நையாண்டியுடன் வரவேற்றார். சுப்பிரமணி திரும்பிப் பார்த்தான். வந்துகொண்டிருந்தது இன்னொரு தாடி.
காடன் மலையில் சிறிது மழை தூறியது. தெருக்களில் நின்று பார்த்தால் மலையுச்சியில் மேகக் கூட்டம் கசிந்துருகி நீர் வடிப்பதை இங்கிருந்து துல்லியமாகப் பார்க்க முடியும். இந்த விழாவிற்கு மழையும் கட்டாயம் வரவேண்டும்.
பெரிய கோபுரத்திற்கு ஒரு பறவைக் கூட்டம் வந்திறங்கி, அங்கேயும் மனிதக் கும்பல் அடைத்துக் கொண்டுள்ளதைக் கண்டு தயங்கி சிறகடித்து நின்று, பின்னர் வேறு இடந்தேடிச் சென்றது. தலையைத் திருப்பி பண்டாரத்தைப் பார்த்தான் சுப்பிரமணி. இன்னொரு பண்டாரம் போய் விட்டிருந்தார்.
‘‘இன்னிக்கி நான் எதுவும் சாப்பிடல்லே. ராத்திரி ஒரு வீட்டிலே சாப்பிடக் கூப்பிட்டிருக்காங்க. போகணும். வேணும்னா இப்ப ஒரு காப்பி குடிக்கலாம்’’ என்றார் தாடி அவனைப் பார்த்து.
சுப்பிரமணி அவசரத்துடனும் வெட்கத்துடனும், ‘வாங்க ஐயா-சாப்பிடலாம்’ என்று அழைத்தான்.
‘‘எப்படி எப்படி - தமிழ்லே பேசி இரந்துண்டா அவன் பிச்சைக்காரன் - பண்டாரம் இல்லையா?’’ என்றார் நமட்டுச் சிரிப்போடு. சுப்பிரமணி எதுவும் பேசவில்லை.
‘‘இப்ப சொல்லு.’’
நுரை பொங்கி வழிந்த காப்பியை அப்படியே ஒரே முழுங்கில் குடித்துவிட்டு எழுந்தார் தாடி.
வெளியே மண்தெரிந்த இடத்திலெல்லாம் மனிதர்தாம். நடப்பது சௌகர்யமாக இருக்கவில்லை.
‘‘அவரா இஷ்டப்பட்டுத்தான் மாமா கல்யாணம் பண்ணிக் கிட்டாராம். வாத்தியார் வேலை சௌகரியமாத்தான் இருந்தது. ஒரே ஒரு பையன். என்னைவிடச் சின்னவன். வேலை கிடைக்கல்லே. சண்டை போடுவான் வீட்லே அடிக்கடி.’’
‘‘ஒனக்கு எப்படி வேலை கிடைச்சதோ?’’
‘‘அப்பாக்கு சர்க்கார் வேலை. அவரு செத்துப் போனதாலே அந்த வேலையை எனக்குக் கொடுத்தாங்க. பி.டபிள்யூ.டி.’’
‘‘அதுதான் கேட்டான்.’’
தாடி இதன்பிறகு கேள்வி எதையும் கேட்கவில்லை. ஆனால் நிறையப் பேசினார்.
திண்டிவனம் பக்கத்திலேயே தனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிந்தவுடன் சமாதானமடைந்திருந்தான் முத்துக்கறுப்பன். அது அவன் சகோதரியைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிற இடம். அவள் கணவருக்கு அங்குதான் வேலை. எனவே எந்தச் சங்கடமும் இருக்கவில்லை. ஆசிரியர் வேலை மனதிற்கு இதமளித்திருந்தது. சக ஆசிரியர்கள் நன்கு பழகினர். மீதியுள்ள பணிக்காலம் முழுவதையுமே அவன் அங்கே கழித்து விடவும் தயாராக இருந்தான். ஒரு வகையில் அவ்வாறுதான் ஆயிற்று. அந்த ஊரிலேயே அவனுக்குத் திருமணம் நடந்தது. இஷ்டப்பட்டுத்தான் கல்யாணம். பெண் அந்த ஊர்தான். ஒரே ஒரு நிபந்தனையுடன்தான் நடந்தது என்று சொல்லலாம். பெண்ணின் தாயாரும் அவர்களோடுதான் இருப்பாள் - காப்பாற்ற வேண்டும். அது ஒன்றும் பெரிய விஷயமில்லையென்று முத்துக்கறுப்பன் நினைத்தான். அவன் சகோதரியும் எதுவும்சொல்லவில்லை. அவன் இஷ்டப்படியே எல்லாம் நடந்தன. பின்னாளில் சகோதரியின் கணவர் காலமானாலும், மகன் சுப்ரமணிக்கு அரசுத்துறையில் வேலைக் கிடைத்தபடியால் முத்துக்கறுப்பனுக்கு புதிய பொறுப்புகள் எதுவும் வந்து சேரவில்லை. தன் மகனுக்கு படிப்பு ஏறவில்லையே; வாத்தியார் மகன் மக்காக இருக்கிறானே என்ற கவலை மட்டுமே உண்டு. ஆனால் அந்த மகன் சாமர்த்தியசாலி - ஊரிலுள்ள அனைவரோடும் தொடர்புகொண்டு, ஏதாவது சம்பாதித்துக்கொண்டும் சேமித்துக்கொண்டும் தானிருந்தான் என்பதையோ மற்ற இளைஞரிடம் காணமுடியாத குணம் - பணத்தின் சக்தியை அறிந்த குணம் - அவனிடமிருந்ததையோ, முது;துக்கறுப்பன் அறியவில்லை.
பையனின் பாட்டியும் அம்மாவும் அவனுக்கு இன்னும் வேலை கிடைக்காதது பற்றி; பேச ஆரம்பித்திருந்தனர். வேலை கிடைக்கவில்லை. அதுவும் சுப்ரமணிக்கு வேலை எப்படிக் கிடைத்தது என்று தெரிந்த பிற்பாடு அந்தப் பையன் அமைதி குலைத்தவன் ஆனான். பாட்டியிடம் மட்டுமே மனம்விட்டுப் பேச முடிந்தது. அந்தப் பேச்சில் அவன்கேட்ட கேள்வி ஒன்று அந்தப் பாட்டியையே சிந்திக்க வைத்தது. வேண்டியது தானே. நாளைக்கு காப்பாற்றப் போகிறவன் கேட்ட கேள்வி. கேட்டதும் அத்தனை அறிவு கெட்ட கேள்வியல்ல. ‘‘அப்பா செத்துப்போனா, சர்க்காரில் வேலை தருவாங்க இல்லையா?’’ என்பதுதான் அது. சரி - சாவது இலேசான விஷயம் அல்ல. அதற்கும் அரசு ஆணைக் குறிப்பில் ஒரு விதிமுறை இருக்கிறதே. கேட்டறிந்து பையன் சொன்னான். ‘‘அரசு ஊழியர் காணாமல் போய்விட்டால் ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர், திரும்பி வராவிட்டால் அவர் இறந்துவிட்டதாகக் கருதி, அவர் பிள்ளைக்கு கருணை அடிப்படையில் Nவுலை தரலாம் - வழி இருக்கிறதே - எனக்கு இப்போ பதிடினட்டுத்தான் ஆகுது.’’
இந்தப் புத்திசாலித்தனத்திற்காகவே அரசு ஒரு வேலை அளித்திருக்க வேண்டும் அல்லவா? இதைத்தான் முத்துக்கறுப்பனிடம் அவர்கள் வெகுசகஜமாக எடுது;துச் சொல்லியிருக்க வேண்டும். அதாவது ‘செத்துப் போ அல்லது எங்காவது ஒழிந்து போ’ - அதுதானே அதற்கு அர்த்தம். இது ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நடந்த விஷயம். இதில் அவன் மனைவியின் பங்கு என்னவென்று ஊகிக்கத்தான் முடியும். திங்கட்கிழமை காலை வெளியே சென்ற முத்துக்கறுப்பன் இன்னமும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன கதை இதுதான்.
முத்துக்கறுப்பன் போளுர் வரை நடந்து சென்றதாகத் தெரிகிறது. அங்கு எப்போதோ தெரிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அவனைக் கண்டு வீட்டிற்கழைத்து சாப்பாடு போட்டிருக்கிறார். திரும்பவும் புறப்பட்ட அவனிடம், ‘எங்கே’ என்று விசாரித்தபோது, மலையைச் சுட்டிக் காட்டியிருக்கிறான். எத்தனை பேரைத்தான் இந்த காடன் மலை தன்னிடம் அழைத்திருக்கிறதோ?
அவன் மலையைச் சுற்றவில்லை. ஊரைச் சுற்றி வந்தான். கோவில் வெளிப் பிரகாரத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான். வேட்டி மேலும் அழுக்காயிற்று. நெடிதுயர்ந்த ஒரு பண்டாரம் அவனிடம் பேசாது ஒரு துண்டை நீட்டினார்.
பண்டாரங்களிடம் பேசுவது எளிதாக இருக்காது என்று அவன் நினைத்திருக்கலாம். இரண்டு நாள் கழித்து போளுர் ஆசிரிய நண்பர் கோவிலுக்கு வந்து அவனிடம் சிறிது பேசிவிட்டு அகன்றார். அதன் பின்னரே அவன் எப்படியோ ஆரம்பித்து தனது கதையை அந்தப் பண்டாரத்திடம் சொல்ல முடிந்தது. முடித்துவிட்டு, கேள்வியாக இல்லாது வேறு எதுவாகவோ சொன்னான்.
‘‘மனிதரை எப்படி நம்புவது...’’
‘‘ஏன் மாடுகள் இல்லையா நம்புவதற்கு - இதோ பாரு - இந்த மலையில் ஒரு காடன் மனிதரைவிட ஆட்டையும், மாட்டையும்தான் நம்பினான்’’ என்று பண்டாரம் தெரிவித்தார்.
‘‘மலையைச் சுத்தலையா கோனாரே?’’
இருவரும் கோவில் பக்கமாக வந்துவிட்டனர். விழா முடிந்து விட்டதற்கான அறிகுறி தெரிந்தன. மலையைப் பார்த்துக்கொண்டே கூட்டம் கலைகிறது.
‘‘சுத்த வேண்டியதுதான் ஐயா - மீதி விவரமும் தெரிஞ்சா நல்லாயிருக்கும்.’’
‘‘மீதி என்ன மீதி - எப்போதுமே மீதி இருக்கும். முத்துக்கறுப்பக் கோனார் வேலையை ராசினாமா பண்ணியாச்சு. போளுர் நண்பர்தான் எல்லாம் முடிச்சுக் கொடுத்தாரு... ராசினாமா பண்ணிவிட்டதாலே மகனுக்கு வேலை கிடைக்காது.’’
‘‘எனக்கு மாமாவைப் பார்க்கணும் ஐயா.’’
‘‘மலையைச் சுத்து - பாக்கலாம். அந்தத் திருப்பத்திலே சேரி இருக்கும் - ராப் பள்ளிக்கூடம் அங்கே. அங்குள்ள பிள்ளைகளுக்குப் பாடம். தங்கல் அங்கேயேதான். நல்ல இடம் - வெளியே வந்தா மலை தெரியும்.’’
‘‘நல்லதையா - ஐயாவும் வந்தா நல்லாயிருக்கும். ஒரு வேளை சேரிப்பக்கம் வரமாட்டீங்களோ?’’
‘‘கோனாரே - பண்டாரம் பாத்த வேலையைத்தான் இப்ப முத்துக் கறுப்பக் கோனாரு பாக்காரு - நல்லாவே பாடம் சொல்லித் தாராருன்னு பிள்ளைங்க சொல்லுது - எனக்கு இங்கிலீசு வராது. இப்ப இந்தப் பாடமும் நல்லபடியா நடக்குதாம். சரி. போயிட்டு வா-நான் அந்தப் பக்க மூலையிலேதான் இருப்பேன். வசதியான இடம். அங்கிருந்து பாத்தாத்தான் மலை நல்லாத் தெரியும் - போயிட்டு வா.’’
*****
நன்றி: மா. அரங்கநாதன் தளம்

Sleep apnea and brain damage


The blood–brain barrier limits harmful bacteria, infections and chemicals from reaching the brain; studies have found that compromised blood-brain barrier function is associated with significant brain damage in stroke, epilepsy, meningitis, multiple sclerosis, Alzheimer's disease and other conditions.
The damage to the brain likely stems in part from the reduction of oxygen to the body as a result of the repeated breathing interruptions. But doctors do not yet fully understand exactly what causes the brain injury and how it progresses.
While previous studies have found that reduced exposure to oxygen and high blood pressure can affect the blood–brain barrier, which in turn can introduce or enhance brain tissue injury, the publication in Journal of Neuroimaging is the first to show that this breakdown occurs in obstructive sleep apnea.
In the new study, the authors found that in patients who had recently been diagnosed with obstructive sleep apnea and not yet treated, the permeability of the blood–brain barrier was significantly higher than it was in healthy people.
The study was small—nine people with obstructive sleep apnea were compared to nine healthy controls. Now, in addition to confirming these findings in a larger population of obstructive sleep apnea patients, the researchers are planning to study whether strategies known to be effective in overcoming blood–brain barrierbreakdown in people who have had a stroke and other neurological conditions can also help minimize brain injury in people with obstructive sleep apnea or other long-standing respiratory problems.
http://newsroom.ucla.edu/…/ucla-researchers-provide-first-e…

கணக்கு பாடம் சுகம் சொன்னான் கேட்டால் தானே இதைப்பார்த்து எண்டாலும் தெரிஞ்சு கொள்ளுங்கோ


How to Stop Comparing Yourself to Others


1. Don’t listen to the voice inside your head that tells you that you are inadequate.
2. Don’t hang out with people who look for the flaws and can’t see the best in the people in their lives.
3. Recognise that each person is different and unique. There is no-one like you - and you have great attributes.
4. Take note of your efforts, and the progress you have made. You’ve already come far. You should celebrate that!
5. Appreciate others, and what you gain from them. Don’t see them as people who undermine you.
6. Remember that NO-ONE is perfect at all - and that other people struggle with the same stuff as well.
7. Go after what matters the most in this life: being loyal, and thoughtful, and caring, and kind.
The Online Counselling College

Anantashayana Vishnu,


Hampi(Karnataka) Photo credit: Kevin Standage 


Anantshayana Vishnu carved on a bedrock near Phnom Kulen, Cambodia
Dated: ~9th century CE
Remains of ancient lost city and massive temple complex have been discovered near the site.

Tuesday, September 1, 2015

ஜி. நாகராஜனின் படைப்புலகம்-மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்
(1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
தமிழின் நவீன இலக்கிய வெளியில் மத்தியதர வாழ்வின் ஆசாபாசங்களும் பெருமூச்சுகளும் மதிப்பீடுகளும் நம்மை மிகவும் ஆயாசமடைய வைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் வாழ்க்கையின் பரப்பு சின்னஞ்சிறியது; சில உயர் இடைநிலை சாதிகளின் _ வர்க்கங்களின் அனுபவத்திலிருந்தும், கண்ணோட்டத்திலிருந்தும் உருவாக்கப்பட்டது. மத்தியதர வாழ்வின் அறவியல் அழகியல் பிரச்சனைகள் தமிழ் இலக்கியத்தின் பிரச்சனைகளாக இருந்து வந்துள்ளன. வரலாற்றின் ஏற்றத்தாழ்வுகள் வழியே கலை இலக்கியத்தை அவற்றின் நவீன வடிவங்களிலும் ஊடகங்களிலும் கையாளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் தம்முடைய வாழ்வின் நியதிகளையும் தர்மங்களையும் ஒட்டு மொத்த வாழ்விற்கான நியதிகளாக சித்தரித்தனர். இந்த நியதிகளுக்கு வெளியே இருந்த சமூக அடுக்குகளில் வாழ்வு எண்ணற்ற முரண்களோடு தனக்கான மொழியையும் குரலையும் தேடி காலத்தின் மௌனங்களுக்குள் விம்மிக் கொண்டிருந்தது.
இந்த நூற்றாண்டில் நமது அரசியல் பண்பாட்டு நீரோட்டத்தை ஒழுங்குபடுத்திய இரண்டு சக்திகள் காந்தீயமும் மார்க்ஸீயமும் ஆகும். மதங்கள், சாதிகள், வர்க்கங்கள், சமூக உறவுகள், மதீப்பீடுகள், ஒழுங்குகள் தர்க்கங்கள் என சகல பண்பாட்டுக் கூறுகளுக்கும் மறுவிளக்கங்கள் அளித்து ஒரு பொதுவான வாழ்க்கைக் கண்ணோட்டத்தை உருவாக்க முயன்றன. இந்த இரண்டு தத்துவங்களும் சமூகத்தை, வாழ்க்கையை, மனித உறவுகளை அவர்களது உடலை அவர்களது ஹிருதயத்தைப் பற்றித் திட்டவட்டமான முடிவுகளையும் இலட்சியங்களையும் கொண்டிருந்தன. அவை அதிகாரத்திற்கான வேட்கையோடு இணைந்திருந்ததால் புரிந்து கொள்வதைவிட மாற்றியமைப்பதில் தீவிரங்காட்டின. மனித இயல்புகள் அவற்றின் மேல் செலுத்தப்படும் வரையறைகள் பற்றி காந்தீயமும் மார்க்ஸீயமும் கொண்டிருந்த தவறான கற்பிதங்களால் அவை நம் கண்ணெதிரேயே சிதறிவிட்டன.
பெரும்பாலான தமிழ்ப்படைப்பாளிகள் காந்தீயத்தாலும் மார்க்ஸீயத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவற்றின் நம்பிக்கைகளையும் வரையறைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுக் கொண்டவர்கள். இதன் மூலம் உருவான இலக்கியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வின் முரண்களை எதிர்கொண்டனர். இந்த இலட்சியவாதக் கண்ணோட்டம் கூர்மையாக அம்முரண்களை வெளிப்படுத்துவதற்குப் பதில் மழுங்கடித்தது. அசௌகரியமான உண்மைகளை மூடிமறைத்தது. பொய்யான சமாதானங்களை வழங்கியது. இந்தப் பின்னணியைச் சேர்ந்த படைப்பாளிகள் தம்முடைய சாதீய வர்க்க இருப்பிற்கு வெளியே இருந்த விவசாயிகள், தொழிலாளர்கள், இழிந்த சாதிகள், வேசிகள், பொறுக்கிகள் பற்றி எழுதவே செய்தனர். ஆனால் நமது காலத்தில் மிகவும் அருவருக்கத்தக்க ஓன்றாகிவிட்ட மனிதநேயம் அல்லது சமூக அக்கறை என்ற மேலிருந்த குற்றவுணர்வுப் பார்வையிலிருந்து கடைப்பட்டோர் பற்றிய சித்திரங்கள் உருவாக்கப்பட்டதை இன்றைய நவீன ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பொதுக்கருத்தியலுக்குள் அவர்களுக்கான அசலான இருப்பை இழந்திருந்த கடைப்பட்டோர் தமக்கான வாழ்வியலையும் அறவியலையும் வெளிப்படுத்தும்போது அவை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன, ஜி. நாகராஜனின் படைப்புலகம் ஒரு மத்தியதர வாசகனுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி இத்தகையதுதான். அவனது எல்லா அடிப்படை தார்மீக நியதிகளையும் அது நிராகரித்து விடுகிறது.
ஜி. நாகராஜனின் உலகம் முழுக்க முழுக்க பாலுணர்ச்சியும் குற்றமும் சம்பந்தப்பட்டது. ஆனால் அது பாலுணர்வு மற்றும் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை விவரிக்கும் ஒரு புனைவு அளிக்கக்கூடிய எந்தக் கிளுகிளுப்பையும் சுவாரசியத்தையும் தருவதில்லை. பாலுணர்ச்சியிலும் குற்றத்திலும் படிந்திருக்கும் கனவையும் சாகசத்தையும் நாகராஜன் இரக்கமில்லாமல் அழித்து விடுகிறார். சில சமயம் குரூரமான, சிலசமயம் வேடிக்கையான சில சமயம் அர்த்தமற்ற, சிலசமயம் நெகிழ்ச்சி மிகுந்த ரூபங்களைக் கொல்லும் பாலுணர்ச்சியும் குற்றமும் வாழ்வின் விசித்திரங்களை கண்டடைவதற்கான ஒரு பாதையே தவிர அவையே இலக்குகள் அல்ல பாலுணர்ச்சியும் வன்முறையும் முழுமையாக கட்டவிழும் நாகராஜனின் படைப்புக்களனில் மனிதன் அடையக்கூடிய அவமானங்கள் இம்சைகள், நம்பிக்கைக்கும் மீட்சிக்குமான தத்தளிப்புகள் மீட்சியற்றுப் போகையில் வாழ்வதற்கான சமாதானங்கள் என எண்ணற்ற தளங்கள் விரிகின்றன. நாகராஜனுக்கு மனிதனைப் பற்றியோ வாழ்க்கையைப் பற்றியோ கற்பிதங்கள் இல்லாததால் நிகழ்வுகளை அதன் ரத்தமும் தசையுமான வடிவில் மீட்டெடுக்கிறார். நடைமுறைத் தேவைகளும் வாழ்வதற்கான போராட்டமும் மனிதனின் இரகசிய ஆசைகளுமே வாழ்வின் திசைவழியை; தீர்மானிக்கின்றன; இலட்சியங்களும் மதிப்பீடுகளும் அல்ல என்பதை நாகராஜனின் குரூரமான யதார்தத் தளம் வெளிப்படுத்துகிறது.
ஜி. நாகராஜனையும் அவரது படைப்புகளையும் எப்படி வகைப்படுத்துவது? குறத்தி முடுக்கில் இவ்வாறு எழுதுகிறார்: `தங்களது கொள்கையாலும் நடத்தையாலும் சமூதாயத்திலிருந்து தங்களைத் தாங்களே பகீஷ்கரித்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன்’. இந்த சுயபகிஷ்காரத்தால் சமூகத்தின் ஒழுங்குகளை ஏற்றுக்கொண்டவர்களும் அந்த ஒழுங்குகள் குலைந்து விடாமல் அவற்றை இரகசியமாக மீறுகிறவர்களும் அடைகிற அடிப்படை பாதுகாப்பை இழந்தவர்கள் ஜி. நாகராஜனும் அவரது கதாபாத்திரங்களும். பொதுப் பண்பாட்டினால் குற்ற உலகினர் எனக் கருதப்படும் நாகராஜனின் பாத்திரங்கள் எளிமையும் பரிதவிப்பும் கனவுகளும் கழிவிரக்கமும் குற்ற உணர்ச்சியும் கொண்டவர்கள். `நாளை மற்றொரு நாளே’ யில் மிரட்டிப் பணம் பறிக்கும் கந்தன்தான் தன் குழந்தை இறந்து போனதற்கு அதன் பலூனை சிகரெட்டால் சுட்டு உடைத்ததுதான் காரணம் என நினைத்து மருகுகிறான்; மீனா புணர்ச்சி இன்பத்தின் முடிவில் காணாமல் போன மகளை நினைத்து அழுகிறாள். கந்தன் மீனாவை தன் வாழ்வின் நிச்சயமின்மை காரணமாக ஒரு நல்ல இடத்தில் சேர்ப்பித்துவிட வேண்டுமென்று நினைக்கிறான். ஒரு தந்தை அல்லது தாய், ஒரு சகோதரன் அல்லது பாதுகாவலன் வகிக்கக்கூடிய இடத்தை ஒரு விபச்சாரியின் காதலன் எவ்வாறு மேற்கொள்கிறான், அவர்களுக்கிடையிலான உறவின் இழைகளை எவை தீர்மானிக்கின்றன என்பதை பொதுவான மதிப்பீடுகளின் வழியே அறிய முடியாது. மனிதர்கள் தமக்கிடையே சுயமாக ஏற்படுத்திக் கொள்கிற உறவுகளின் அழங்காண முடியாத பந்தங்களிலிருந்து இத்தகைய தார்மீகப் பொறுப்புகள் எழுகின்றன. குறத்தி முடுக்கில் தங்கம் அவளை நேசிக்கிறவனுக்குப் பதில் அவளைக் கூட்டிக் கொடுத்த கணவனைத் தேடிப் போகிறாள். திருமணம் என்ற உறவிற்கான எல்லா நியமங்களும் அழிந்துவிட்ட ஒரு சூழலுக்குள் வந்த பிறகும் அவளது திருமண உறவிற்கும் பாலியல் தொழில் சார்ந்த பிற உறவுகளுக்கும் நடுவே ஒரு தீர்க்கமான இடைவெளி இருக்கிறது. (இந்த இடைவெளி தங்கத்திற்கும் அவளது உடலுக்குமான இடைவெளியா அல்லது பொதுப் பண்பாட்டிற்கும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்குமான இடைவெளியா அல்லது அறுபடாத உறவா எனும் கேள்விகள் எழுகின்றன.) `துக்க விசாரணை’ எனும் கதையில் ஒருவன் ரோகிணி என்ற விபச்சாரியின் மரணத்திற்குத் துக்கம் கேட்கப் போகிறான். பால்வினை நோயைக் கொடுத்ததற்காக ஒரு வாடிக்கையாளனிடம் செருப்படி வாங்கியதன் அவமானத்தால் ரோகிணி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அறிகிறான். ரோகிணியின் சாயல் கொண்ட துக்கம் விசாரித்தவளிடமே உறவு கொள்கிறான். இதுபோன்ற எளிதில் புரிந்து கொள்ள முடியாத விளக்கமளிக்க இயலாத ஏராளமான சம்பவங்கள் ஜி.நாகராஜனின் படைப்புகள் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஜி. நாகராஜனின் மனிதர்கள் பாதுகாப்பின்மைக்குள் ஒரு பாதுகாப்பையும் உறவின்மைக்குள் ஒரு உறவையும் அவமானத்திற்குள் ஒரு தன்மானத்தையும் நெறியின்மைக்குள் ஒரு நெறியையும் உருவாக்கிக் கொள்ள எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜி. நாகராஜனின் படைப்புகள் மையமான பாத்திரங்களைக் கொண்டவையல்ல. ஒரு சூழலின் குறுக்கும் நெடுக்கமான எண்ணற்ற கோடுகளால் அவரது பாத்திரங்கள் அமைந்துள்ளன. அவை விசேஷமான இயல்புகள் மேல் கட்டப்படுவதில்லை. கந்தன், மீனா, தங்கம் போன்ற பாத்திரங்கள் கூட அவை தம் சூழலோடு கொள்ளும் உறவின் கூர்மை காரணமாக அழுத்தம் பெறுகின்றனவேயன்றி அவற்றின் தனித்துவங்களால் அல்ல. ‘நாளை மற்றொரு நாளே’, ‘குறத்தி முடுக்கு’ அவரது சிறுகதைகள் எல்லாவற்றிலும் அநேக பாத்திரங்கள் ஒரு மின்னலைப் போல கடந்து சென்று கொண்டேயிருக்கின்றன. அதே சமயம் அவை எதுவும் மங்கலானவை அல்ல. நாகராஜன் எதையும் விவரிப்பதோ அழுத்தம் கொடுப்பதோ இல்லை. அவரது பார்வையில் எதுவும் அவ்வளவு முக்கியமானதும் அல்ல. வாழ்வும் எழுத்தும் என்ற கதையில் கேட் அடைக்கப்பட்டுள்ள ரயில்வே கிராஸிங்கில் காத்துக் கிடக்கும் நாகராஜனின் சித்திரம் இது.
நாகராஜனைப் பொறுத்தவரை அடைக்கப்பட்டுள்ள கேட்டுகள் முன் திறப்பிற்காக பொறுமையிழந்து காத்திருப்பதுதான் வாழ்க்கை. திறப்பிற்கான அந்த முட்டி மோதல்களுக்கு மேல் அதற்கு எந்த அர்த்தமோ அழகோ இல்லை.
வாழ்வதற்கான போராட்டத்தில் சிதிலமடைந்துபோன அரசியல், அறிவியல், ஒழுக்கவியல் கற்பிதங்களை எதிர்கொண்ட நாகராஜனின் மொழி மனவறட்சியின் கூர்மையான அங்கத்துடன் உருவெடுக்கிறது. அரசியல் இயக்கங்கள் மனித நடத்தைகள் ஆசைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் இடையிலான நாடகங்கள் மேல் நாகராஜனின் எள்ளல் தீவிரமாக வெளிப்படுகிறது. புதுமைப் பித்தனுக்குப் பிறகு இவ்வளவு விமர்சன பூர்வமான மூர்க்கம் கொண்ட எள்ளலை நாகராஜனிடம் காணமுடிகிறது.
ஜி. நாகராஜனின் கதைகளில் காணப்படும் யதார்த்தவாத சித்திரிப்பு ஒரு தோற்றம் மட்டுமே. ஒரு அப்பாவி வாசகனை எளிதில் ஏமாற்றிவிடக்கூடிய தோற்றம் இது. பௌதீக உலகிற்கும் அக உலகிற்கும் இடையே அவரது மொழி மாறி மாறி இயங்கிக் கொண்டிருக்கிறது. இறந்தகாலமும் நிகழ்காலமும் நிஜமும் கனவும் பல இடங்களில் ஒன்றொடொன்று குழம்பி விழுகின்றன. வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்ட சம்பவங்களால் ஆனதல்ல நாகராஜனின் படைப்பு மொழி. உதாரணமாக டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் எனும் சிறுகதை அதன் உத்தியாலும் மொழியாலும் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் மிக அபூர்வமான ஒரு படைப்பாக இருக்கிறது. ஜி. நாகராஜனின் படைப்புகளில் மிகச் சிறப்பான இயல்பு, அவர் உரையாடல்களை அமைக்கும் விதம். இரண்டு மனிதர்கள் கதையை நகர்த்துவதற்காக ஒரு செய்தியை பரிமாறிக்கொள்வது என்ற நோக்கில் அந்த உரையாடல்கள் அமைந்திருப்பதில்லை. அந்தக் கதைகளுக்கு வெளியேயும் ஒரு வாழ்க்கை முறையின் குரலாக அவை அமைந்திருக்கின்றன. இந்த உரையாடல்களில் மனிதர்களுக்கிடையேயான பேரங்களும் ஏமாற்றுகளும் பாசாங்குகளும் அவலத்தின் முடிவற்ற வெறுமையும் மிகச் சூட்சுமான குறியீடுகளுடன் அமைந்துள்ளன. அபாயமும், நிச்சயமின்மையும் சூழ்ச்சியும் நிறைந்த ஒரு விளையாட்டுக்களனில் சாதுர்யத்துடன் காய்களை நகர்த்துகிற விதமாக இந்த உரையாடல்கள் நிகழ்கின்றன. இந்தப் பேச்சுகளுக்கு விரிந்து கிடக்கும் இடைவெளிகளும் மௌனங்களும் நாகராஜன் தேர்ந்தெடுக்கிற இயல்பான துல்லியமான சொற்களின் மூலம் நம் மனங்களை அதிர்வடையச் செய்கின்றன.
ஜி. நாகராஜனின் படைப்புகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவரை ஆழமாக அறியவும் மதிப்பீடு செய்யவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ள நாகராஜனின் தீவிர வாசகன் என்ற வகையில் இரண்டு கேள்விகள் என்னை அலைக்கழிக்கின்றன.
1. ஜி. நாகராஜனின் பிம்பத்திற்கும் அவரது வாசகனுக்குமான உறவு.
2. படைப்புச் சுதந்தரம் பற்றிய பிரச்சனைகள்.
ஜி. நாகராஜன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைமுறை தொடர்ந்து விவாதத்திற்குள்ளாயிருக்கிறது. அதை ஒழுங்கீனத்தின் அராஜகத்தின் சீரழிவின் வெளிப்பாடாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். தனி மனிதன் மேல் சமூகமும் பண்பாடும் சுமத்துகிற ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு கலகமாக விடுதலைக்கான யத்தனிப்பாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த இரண்டு பார்வைகளுமே நமது ஒழுக்கவியல் எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம். ஆனால், நாகராஜன் மனிதர்கள் மேல் இத்தகைய விமர்சனத்தையோ புனைவையோ சுமத்துவதில்லை. அவரைப் பொறுத்தவரை அவர் வாழ்ந்த அவர் எழுதிய சூழல் ஒரு வாழ்க்கை முறை. மற்ற வாழ்க்கை முறைகளைப் போலவே அங்கும் சில சந்தோஷங்களும் துயரங்களும் உள்ளன. அதற்கென சில நியாயங்களும் அநியாயங்களும் இருக்கின்றன. அதனளவில் அது நல்லதோ கெட்டதோ அல்ல. எதற்கும் அது மாற்றோ, முன்னுதாரணமோ இல்லை. அங்கு விடுதலையும் ஒடுக்குமுறையும் வேறு அர்த்தங்களில் நிலவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு இளம் படைப்பாளியைப் பற்றி எனக்குக் கடிதம் எழுதிய நண்பர் ஒருவர் அவர் ஜி. நாகராஜனைப் போல வாழ்ந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த இளைஞரின் வாழ்விற்குப் மரணத்திற்கும் அளிக்கப்பட்டிருந்த இந்த நற்சான்றிதழில் ஒட்டியிருந்த பெருமிதம் சங்கடம் தருவதாக இருந்தது. பாதுகாப்பிற்கும் உத்திரவாதத்திற்குமான சமூகத்தின் எல்லா வழிமுறைகளையும் தந்திரங்களையும் பின் பற்றுகிறவர்கள். அந்தப் பாதுகாப்புகள் இல்லாமல் போனவர்களை ஒன்று இலட்சிய புருஷர்களாக்குகிறார்கள் அல்லது தமது அழுகிப் போன நெறிமுறைகளின் பேரால் சீரழிந்தவர்களாக சித்தரிக்கின்றார்கள். இவையெல்லாம் மத்தியதர வர்க்கத்தினது இயலாமையின் வெளிப்பாடுகள். ஜி. நாகராஜனின் வாழ்வுப் படைப்பும் இந்த இயலாமைக்கு அப்பால் இருக்கின்றன. நாகராஜனின் படைப்புகளை அவரைப் பற்றிய பிம்பங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது.
இரண்டாவதாக ஜி. நாகராஜனின் படைப்புகளை அணுகக்கூடிய எந்த ஒரு வாசகனுக்கும் முதலில் தோன்றக்கூடிய மனப்பதிவு அவர் ஒரு துணிச்சலானக் கலைஞன் என்பதே. இந்த துணிச்சலுக்கு நாகராஜன் கொடுக்க வேண்டியிருந்த விலை சமூகத்திலிருந்து கொள்கையாலும் நடத்தையாலும் சுயபகீஷ்காரம் செய்து கொண்டதுதான். இருந்தும் குறத்திமுடுக்கின் முன்னுரையாக எழுதிய குறிப்பில் இவ்வாறு சொல்கிறார்.
தலைப்பு : என் வருத்தம். படைப்பாளிக்கு ஏன் சொல்லமுடியாத குறை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது? சொல்வதையே தொழிலாகக் கொண்டவனுக்கு சொல்ல முடியாததன் துக்கம் இயற்கையானதுதான். அவனைப் பொறுத்தவரை படைப்புச் சுதந்தரம் என்ற கோஷமே அர்த்தமற்றது படைப்பியக்கத்தின் உள்ளார்ந்த செயல்பாட்டை உணரும் கலைஞன் படைப்புச் சுதந்தரம் என்ற கோஷத்தை முழங்க கூசிப் போவான். ஏனெனில் அவனது வெளிப்பாடு அவனது படைப்புத்திறனால் ; அவனது படைப்புத்திறன் அவனது மொழியால் ; அவனது மொழி அவனது மன இயக்கத்தால் ; அவனது மன இயக்கம் அவனது அனுபவங்களால் ; அவனது அனுபவம் அவனது சூழலால்; அவனது சூழல் அவனது சமுத்திரத்தால் கட்டுண்டு கிடக்கிறது.
படைப்பியக்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு நேர் வரிசையில் நிகழாமல் இருக்கலாம். நான் சொல்ல விழும்புவது என்னவென்றால் படைப்பியக்கம் சுதந்தரம் பற்றிய பிரக்ஞையை அல்ல சுதந்தரமின்மை பற்றிய பிரக்ஞையே கொண்டு வருகிறது என்பதுதான். படைப்பாளியின் உள்ளார்ந்த வெளி எப்போதும் அவனுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது என்றால் அவனது புறவெளி வேறு வகையான நிர்ப்பந்தங்களை உண்டாக்குகிறது. கலையையோ இலக்கியத்தையோ அதற்குரிய தர்க்க நியாயங்களுடன் உணர்ந்து கொள்ளப் பக்குவப் பெறாத இந்தப் புறவெளி படைப்பாளியின் குரல் வளையில் நேரடியாக கத்தியை வைக்கிறது. உதாரணமாக வேசிகளைப் பற்றி கதை எழுதுகிற ஒருவனிடம், வேசிகளிடம் போய் விட்டு வந்த ஒருவனிடம் என்ன மொழியில் உரையாட முடியுமோ அதே மொழியில்தான் நமது சூழல் பேசுகிறது. அத்தகைய கதை ஓன்றை எழுதிய என் நண்பன் ஒருவனிடம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளி ஒருவர் `பி.மி.க்ஷி. பரிசோதனை செய்து கொண்டீர்களா’ என்று கேட்டார். ஒருவன் தன்னுடைய மனஇயக்கம் மற்றும் அனுபவங்களுக்கும் அவனது படைப்புகளுக்குமாக இடைவெளியை எந்த அளவிற்கு குறைக்கிறானோ அல்லது வரையறுக்கப்பட்ட அனுபவ எல்லைகளை எந்த அளவு மீறிச்செல்கிறானோ அந்த அளவு அவனது இருத்தல் அபாயங்களுக்குள்ளாகிறது. தமிழ் இலக்கியவாதிகள் பலர் இந்த அபாயத்தை எதிர்கொள்ள முடியாமல் தம் ஆமையோடுகளுக்குள் வசித்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இந்தப் புறநெருக்கடியினை எதிர்கொள்ள திறன் மிகுந்த கலைஞன் தன் அனுபவங்களை வெவ்வேறு தளமாற்றங்களுக்குக் கொண்டு செல்கிறான். புதிய படைப்பு மொழியையும் வடிவத்தையும் உருவாக்குகிறான்.
வாழ்வின் அறியப்படாத பிரதேசங்களை நோக்கி பயணம் செய்ய விரும்பும் ஒரு இளம் படைப்பாளிக்கு ஜி. நாகராஜனின் படைப்புகள் அளிக்கும் திறப்பும் உத்வேகவும் அளப்பரியவை. வாழ்வை நிழலும் புகையுமில்லாமல் எதிர்கொள்வதற்கு ஜி. நாகராஜனின் எழுத்துக்கள் வெளிச்சம் தருகின்றன. வெளிப்பாட்டிற்கான அகவெளியையும் புறவெளியையும் எப்படி விஸ்தரிப்பது என்ற பிரச்சனையை எதிர்கொள்ளும் விதத்தில் எனக்குப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

SHIRDI SAI ASHTOTHRAM

Rabies ::



Rabies is a viral disease of the Central Nervous System that spreads through the bite of an infected warm-blooded animal. It is also known as 'Hydrophobia'. Transmission can also occur through saliva touching an open wound or mucous membranes.
Facts
1. About 60,000 people die annually of rabies, mostly in Asia and Africa.
2. In the U.S., one to three people die from rabies yearly.
3. Animal vaccinations and postexposure prophylaxis protocols have nearly eradicated rabies in the U.S.
4. More than 15 million people worldwide receive postexposure vaccination to prevent rabies every year.

Causes
✿ Rabies is caused by the rabies virus (lyssavirus Type-1).
✿ The virus infects the brain and ultimately leads to death.
✿ After being bitten by a rabid animal, the virus is deposited in the muscle and subcutaneous tissue.
Mode of Transmission
- Animal bite i.e. Dogs, cats, monkeys, cows, goat, sheep, horses.
- Licks (on abraded skin or abraded unabraded mucosa)
- Aerosols (Rabies infected bats)
- Person to person (rare but possible)
- Organ transplantation.
Incubation Period
✔ It depends on the site of the bite, severity of the bite, number of wounds, amount of virus injected.
✔ Commonly 3-8 weeks (minimum 9 days).



Symptoms can occur as fast as within the first week of the infection.
The early symptoms of rabies are very generalized, including weakness, fever, and headaches. Without a history of potential exposure to a rabid animal, these symptoms would not raise the suspicion of rabies as they are very similar to the common flu or other viral syndromes.
The disease can then take two forms:
  1. With paralytic rabies (approximately 20% of cases), the patient's muscles slowly get paralyzed (usually starting at the bite site), is the less common form and ends incoma and death.
  2. With furious rabies (about 80% of cases), the patient exhibits the classic symptoms of rabies, such as
    • anxiety and confusion (The patient is often overly active.);
    • encephalitis, causing hallucinations, confusion, and coma;
    • hypersalivation;
    • hydrophobia (fear and avoidance of water);
    • difficulty swallowing.
Once the clinical signs of rabies occur, the disease is nearly always fatal.

How do physicians diagnose rabies?

In animals, rabies is diagnosed by detecting the virus in any affected part of the brain. This requires that the animal be euthanized. Testing a suspected animal will help avoid extensive testing in human contact (if the test is negative) and unnecessary treatments.
In humans, rabies is diagnosed by testing saliva, blood samples, spinal fluid, and skin samples. Multiple tests may be necessary. The tests rely on detecting proteins on the surface of the rabies virus, the detection of the genetic material of the virus, or demonstrating an antibody (immune) response to the virus.

What is the treatment for rabies?

Treatment is recommended if a healthcare professional thinks someone was exposed to a potentially rabid animal.
If the animal is a pet or farm animal that has no symptoms, the animal can be isolated and observed for 10 days. Wild animals that can be captured can be killed and tested for the virus. If the animal can't be found, it is best to consult the local health department.
The general pathway to determine postexposure prophylaxis (protective treatment) for rabies requires the following information:
  • Bite: Did a bite occur, and where is the location of the bite? (Any skin penetration is considered a bite; although bites to the face and hands carry the highest risk, all bites need to be considered for prophylaxis.)
  • Non-bite incident: Did the saliva touch an open wound or a mucous membrane?
  • Animal risk factors: No cases of rabies infection have been reported in the U.S. from fully vaccinated domestic dogs or cats.
  • Bats: Any contact with a bat that leads to a potential scratch, bite, or mucous membrane exposure to saliva needs to be evaluated. If prolonged exposure to a bat is discovered (sleeping in a room where a bat is found), postexposure prophylaxis needs to be considered.
As rabies is a fatal disease, it is often best to start the series of shots until further information is available.
A series of injections is given. The first is a rabies immune globulin that helps to prevent the virus from infecting the individual. Part of this immunization is given near the animal bite.
This is followed by four injections over the next two weeks. These are rabies vaccines to help the body fight the virus.

மன அழுத்தம் நீக்கும் மருதாணி..!


மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது யாரும் அதிகமாக மருதாணியை பயன்படுத்துவதில்லை. ரெடிமேடாக செய்த மெகந்தியை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர்
இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
மருதோன்றி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மருதோன்றியின் மருத்துவப் பயன்களை பல மேல்நாட்டு மருத்துவர்கள் சோதனை செய்து கண்டறிந்தனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் மருதோன்றியை பயன்படுத்தி நலம்பெறச் செய்துள்ளனர் நம் சித்தர்கள். டாக்டர் எமர்சன் மருதாணி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும் என்று கண்டறிதுள்ளனர்.
டாக்டர் எய்ன்சிலிக் மருதோன்றியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர். வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு என்று டாக்டர் ஹொன்னி பெர்க்கர் கூறுகிறார்.
கை, கால் அரிப்பு
கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.
நகச்சுத்தி
நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின. ஆனால் தற்காலத்தில் நகப் பாலீஷ் என்ற பெயரில் பல வந்துள்ளன. இவை இரசாயனம் கலந்தவை. இவற்றால் மருத்துவப் பயன்கள் ஏதும் கிடையாது. ஆனால் மருதோன்றி அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது.
நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது.
நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.
மேக நோய்கள் நீங்க
பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது.
சுளுக்கு நீங்க
மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.
நல்ல தூக்கம் பெற
மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.
மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. எனவே முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல டிசைன்களில் மருதாணி இட்டுக்கொள்கின்றனர்.

வாழ்வில்'ஆயில் குறையுங்கள் ஆயுள் குறையாது


''சூரிய காந்தி எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து ஓரளவு இருப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொதுவாக கொழுப்பு... நிறைவுற்றக் கொழுப்பு அமிலம்(Saturated fatty acid), ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Monounsaturated fatty acid) பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Polyunsaturated fatty acid) என மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன. சூரிய காந்தி எண்ணெயில் நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் குறைந்த அளவும், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் மிதமானஅளவும், பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகமாகவும் இருக்கின்றன.
நிறைவுற்ற கொழுப்பு அமிலம் அதிகமாகும்போது, அது கொழுப்பாக மாறி உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும்.
ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம்தான் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலம். இது ரத்தம் உறைவதைத் தடுக்கும். உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்'' என்கிறார் உணவியல் நிபுணர் சோபியா.
கொழுப்பு அமிலங்கள் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது பற்றி சொல்கிறார் உணவியல் நிபுணர் சுபாஷிணி.
100 கிராம் சூரிய காந்தி எண்ணெயில், நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் - 9.1%, ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 25.1%, பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 66.2% இருக்கவேண்டும். பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 30% தேவை.
25 கிராம் எண்ணெயில்...
நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் - 7%
ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 15%
பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 8% இருக்கவேண்டும்.
ஆனால், நமக்கு, சூரிய காந்தி எண்ணெயைப் பொருத்தவரை, நாள் ஒன்றுக்கு 5 கிராம் எண்ணெயே போதுமானது. அதாவது ஒன்று முதல் 2 டீஸ்பூன் மட்டுமே பயன்படுத்தவேண்டும். (1 டீஸ்பூன் என்பது 4 கிராம்). நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், கடலை எண்ணெய் (அ) தவிட்டு எண்ணெய் 2 டீஸ்பூன் என நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 டீஸ்பூன் எண்ணெய் தேவை.
இந்த அளவில் சூரிய காந்தி எண்ணெயைப் பயன்படுத்தினால்... எப்போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்'' என்றார்.

ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்!

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் எண்ணம் இருக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் :
அறிகுறி 1 :
எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.
அறிகுறி 2 :
எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.
அறிகுறி 3 :
எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 4 :
ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.
அறிகுறி 5 :
ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.
அறிகுறி 6 :
நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 7 :
எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.
அறிகுறி 8 :
ஒருவரால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 9 :
சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.
அறிகுறி 10 :
ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்

மேஜிக் மேதைகள்


சுமார் இருபது அடி நீளமுள்ள தடிமனான கயிறு அது. அதனை கையில் ஏந்தியிருந்த அந்த மாயவித்தைக்காரர் கண்களை மூடி தன் தலையை குனிந்திருந்தார். அவரது உதடுகள் ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தபடி இருந்தன. கூட்டம் அசுவாரசியமாக சலசலத்துக் கொண்டிருந்தது. மாயவித்தைக்காரர் கயிறைக் காற்றில் சுழற்ற ஆரம்பித்தார். வேகமாகச் சுழற்றியபடியே கயிறை வான் நோக்கி வீசினார். கூட்டத்தின் பார்வை மேல்நோக்கி உயர்ந்தது. மீண்டும் கீழிறங்கவில்லை. கயிறும்தான். வானுக்கும் நிலத்துக்கும் பாலமாக கம்புபோல விறைத்து நின்றது.
'ஏ பையா! ஏறு அதிலே!
அந்தச் சிறுவன் கூட்டத்தினரைப் பார்த்து கைகளை சந்தோஷமாக அசைத்தான். விறைத்து நின்று கொண்டிருந்த கயிறைப் பற்றினான். வாலில்லா குரங்குபோல சடசடவென கயிறில் ஏறினான். கயிறு வளையவோ, நெளியவோ, சுருண்டு விழவோ இல்லை. கயிறின் உச்சியை அடைந்தான்.பறக்கும் விமானம் ஒன்று மேகத்துக்குள் மறைவதுபோல, காணாமல் போனான். கூட்டம் வாய்பிளந்தது.
மாயவித்தைக்காரர் பி.எஸ். வீரப்பாவின் ஜெராக்ஸ் சிரிப்பு ஒன்றை சிரிக்க, யாருக்கும் பதிலுக்குச் சிரிக்கத் தோன்றவில்லை. அவர், வாள் ஒன்றைத் தன் பற்களால் கவ்வியபடி, கயிற்றைப் பிடித்தார். விறுவிறுவென மேலே ஏறினார். உச்சியை அடைந்தார். வாளைக் கையில் எடுத்தார். சூரிய ஒளிபட்டு வாளின் முனை பளபளத்தது. கூட்டத்தினர் கண்கள் கூச வான்நோக்கி மெளனமாக 'ஆ' உச்சரித்துக் கொண்டிருந்தனர்.
மாயவித்தைக்காரர் தன் வாளை காற்றை வெட்டுவதாக சில முறை குறுக்கும் நெடுக்கமாக வீசினார். ஒரு சில நொடிகள் கடந்திருக்கும். மேலே ஏறிச் சென்று மாயமாகிப் போன சிறுவனின் உடல் பல துண்டுகளாகத் தரையில் விழுந்தது. கூட்டம் அதிர்ந்து சில அடிகள் விலகி நின்றது. சிலர் மயங்கிக் கூட விழுந்தனர். மாயவித்தைக்காரர், ரத்தம் சொட்டும் வாளைத் தன் பற்களால் கவ்வியப்படி சரசரவென கீழே இறங்கினார். கண்களால் கயிற்றுக்கு கட்டளை இட்டார். அது பெட்டி பாம்புபோல சுருண்டு விழுந்தது..
மீண்டும் அந்த வில்ல சிரிப்பு. அடேய் படுபாவி கொலைகார என்று சிலர் மாயவித்தைக்காரரை மனத்துக்குள் சபிக்க ஆரம்பித்திருந்தனர். அவரோ தன் வாளை உறைக்குள் சொருகிவிட்டு ஒரு கம்பளத்தை எடுத்து உதறி தரையில் விரித்தார். சிதறிக் கிடந்த அந்தச் சிறுவனின் உடல் துண்டுகளை அந்த கம்பளத்தில் ஓர் ஒழுங்குப்படி அடுக்கினார். அந்த கம்பளத்தை சுருட்டினார். மீண்டும் கண்களை மூடி ஏதோ மந்திரத்தை முணுமுணுக்க ஆரம்பித்தார். அடுத்து நிகழவிருப்பது அதிசயமா அல்லது மீண்டும் அதிர்ச்சிதானா? கூட்டத்தினரின் கணகள் விரிந்து கிடந்தன.
கம்பள மூட்டை அசைந்தது. படாரென கம்பளத்துக்குள் இருந்து அந்தச் சிறுவன், முழுமையான உடலுடன் எந்தவிதக் காயமும் இன்றி பழையபடி சிரித்துக்கொண்டு எழுந்து நின்றான். கூட்டத்தினரை நோக்கி கையை அசைத்தான். எழுந்த ஆரவார ஒலியை மாயவித்தைக்காரர் பெருமிதத்துடன் எதிர்கொண்டார்.
இந்த வித்தை இந்தியாவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் நடத்தப்பட்டதுதான். இந்த மாயவித்தையை உருவாக்கியது யார், எந்த காலகட்டத்திலிருந்து அரங்கேற்றப்படுகிறது என்ற வரலாறு தெரியவில்லை ஆனால் இந்தியாவுக்கு வந்த மார்க்கோ போலோ, இபின் பதூத்தா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் இந்த கயிறு வித்தை குறித்து வியந்து எழுதி வைத்திருக்கிறார்கள். மகுடி ஊதினால் சுருண்டு கிடக்கும் கயிறு, பாம்பை போல படமெடுத்து எழுத்து அப்படியே வானை நோக்கி உயரமாக வளரும் வித்தை குறித்தும் வியந்திருக்கிறார்கள். உயிரை விட்டு உடல் மாற்றுவது உள்ளிட்ட பல அதிசயங்களை நிகழ்த்திய மாயவித்தைக்காரர்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றனர் என்ற வாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன..
நன்றி-முகில்

'Oldest' Quran ( Koran) fragments found in Birmingham University

Carbon dating suggests that the Quran, or at least portions of it, may actually be older than the Prophet Muhammad himself.
If the findings are proved true, it could rewrite early Islamic history and shed doubt on the "heavenly" origins of the holy text.
Scholars now believe that a copy Quran held by the Birmingham Library was actually written sometime between A.D. 545 and 568, while the Prophet Muhammad was believed to have been born in A.D. 570 and to have died in 632. The copy of the widely used holy text held by the library is known for being one of the oldest in the world.
Scholars came to this conclusion after researchers carbon dated a small piece of parchment from the Islamic holy book. The carbon dating, which is considered to be extremely accurate, suggests that the Quran may have actually been written before Muhammad was alive, or during the early years of his childhood.
The Quran held by the Birmingham Library is believed to be the oldest known copy in the world. It should be noted, however, that the documents held at the library are not a complete copy of the holy text, instead containing text only for suras (chapters) 18 to 20.
If the carbon dating analysis proves to be accurate, it would raise serious questions as to the origin of the Islamic holy book. It should be noted, however, that the dating was conducted only on the parchment, rather than the ink, so it is possible that the Quran was simply written on old paper.
The Quran was not officially written down until 653 AD, under the orders of the Caliph Uthman, though it is believed that partial written scripts of the Quran were in circulation beforehand. Before the Quran was inked onto paper it was passed along orally, with some devout believers choosing to memorize the entire text by heart.
Some scholars believe, however, that Muhammad did not receive the Quran from heaven, as he claimed during his lifetime, but instead collected texts and scripts that fit his political agenda.


Read more: http://www.businessinsider.com/

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குரான் உலகில் மிகவும் பழமையானது என்றும் முகமது நபிகள் காலத்துக்கு முன்பாகவே எழுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பெர்மிங்கம்(Birmingham) பகுதியில் பழமையான குரானின் படிமங்கள் கடந்த மாதம் கிடைத்தன.
இந்த படிமங்கள் விலங்குகளின் தோல்களில் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த படிமங்களின் காலத்தை கணக்கிட்ட ஆக்ஸ்வோர்ட் பல்கலைக்கழகத்தின் வல்லுனர்கள், இது தான் உலகிலேயே பழமையாக குரான் என்று தெரிவித்துள்ளனர்.
முகமது நபிகளின் காலம் கிபி 570-632 என்றும் குரான் கிபி 610-632ஆம் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது.
ஆனால் விலங்குகளின் தோலில் எழுதப்பட்டிருந்த இந்த குரான் கிபி 568- 645 காலகட்டத்தை சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.
மேலும் இதில் முகமது நபிகள் பற்றிய குறிப்புகள் இருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கெயித் ஸ்மால் என்ற ஆராய்ச்சியாளர் கூறியதாவது, முன்பு இருந்த வாசகங்களையே முகமது நபிகள் மக்களுக்கு கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய குரானின் உள்ள எழுத்துகளே இதில் இடம்பெற்றுள்ளதாகவும் சில எழுத்துகள் மட்டுமே மாற்றம் அடைந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் இந்த முடிவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, August 27, 2015

Your Three Voices


Ego: This voice is not “bad” it only becomes a problem when it is becomes overly critical. This voice is the voice of your desires, appetites, goals and hopes. It does not control your body but uses anxiety to spur your will into action. It is your taskmaster that spurs you on when you need it. Sometimes though it goes overboard and leaves you feeling anxious and dissatisfied by never allowing you to feel satisfaction when one goal is completed. It often just gives you another goal or picks apart your actions.
Will: This voice controls your actions. It controls your body. No other voice does this. Here is an example: You need to be at class at 10:00 am. You are tired. Your alarm rings at 6:30. Ego says “get up”. Will says “not yet” and pushes the snooze button. Your alarm buzzes at 7:00. Now ego amps up the pressure and you feel anxiety again ego says “get up” and “you are going to be late”. Despite the anxiety you press snooze again. Ego says “GET UP. YOU ARE GOING TO FAIL THIS CLASS” and the anxiety is amped up to greater heights. Yet for all of this ego cannot make you get up. It must act on your will and it does this by the use of fear as a lash. Finally you get up because the act of getting up is less of a pain than the pain of fear.
Watcher: This voice is quiet. It never compels you or tells you what to do. It never competes with ego nor does it force will. It is just a guiding voice. The voice of intuition. The voice of conscience. The inner voice of wisdom. It just says quietly “this is the right thing to do”. It is your moral compass and it always points true. Often you ignore it. Sometimes you don’t even hear it over the noise and clamor of your mind but it is always there. Guiding you. You have only to listen.
Samsaran

ORIGIN OF THE FLOOD MYTH


Most cultures around the world possess a mythology which describes the origins and customs of its people. They stories typically include the emergence of gods, the creation of humans, and the establishment of codes and laws.
These myths often establish models of behaviour, explaining how to live a spiritual and enriching life. This is typically exemplified by a hero’s journey, whereby their survival and ascension depends on the way in which they conduct themselves.
One myth which perfectly epitomises this heroic journey is that of a culture hero who manages to survive a great flood. It is a tale that can be found all around the world, from Sub-Saharan Africa to the island of Hawaii. What makes this myth so compelling is that the plot is almost identical the world over.
Typically it includes a sky god becoming angry with his human creations who have become troublesome and wicked. As an act of punishment, he sends a great flood upon his people, wiping out nearly all life on earth.
Typically, another friendly god selects one mortal, or a group of humans for survival. He sees great virtue in them, and tells them to make a boat, take refuge in a cave, or to hold onto a tree. Very often, the survivors end up on top of a mountain, where the flood waters were unable reach.
These culture hero/s then go on to repopulate the earth (e.g. Noah from the old testament, Gilgamesh from Babylon, Manu from Hinduism, Loralola and Kalola from the Andaman islands, etc).
But just how old is this myth? Some claim it was based on the following events:
The Burckle Impact:- a meteorite may have struck the Indian ocean around 5000 years ago, flooding the lands of Africa, India and the Middle East.
The Black Sea Deluge:- As the last Ice Age came to an end, masses of ice-water from glaciers began to flood into the Black Sea, displacing all the people who lived around its shores.
The Younger Dryas Impact:- A series of meteorites struck the Earth 13,000 years ago, causing a huge swell of flood water to consume the lands. The majority of these impacts hit the Americas, killing off much of the mega-fauna that once roamed its lands.
All these theories offer evidence of a catastrophic flood. However, they all fail to explain how the same flood myth can be found in several Stone Age cultures that have lived, isolated and undisturbed from Eurasia and the Americas for tens of thousands of years.
Two prime examples are Australia and the Andaman islands, which were curt off from the rest of the world for millennia. Genetic testing has proved these indigenous people are the direct decedents of humanities first migration out of Africa, which took place 60,000 – 90,000 years ago.
Isolated from the rest of the world, they had avoided the advent of agriculture, metal smithing and writing. Yet when their myths were studied, they provided stories about an angry god sending a great flood upon the world, whereby only a few people survived to help repopulate the Earth.
What this tells us is that the flood Myth is ancient, and dates back at least to the Middle Palaeolithic era. It is possible this story can be traced back further, to Africa, where humanities journey first began. A story that defines all people, of all races, that is as old as humanity itself.

3D-printed robotic hand wins 2015 UK James Dyson Award


A 3D-printed bionic hand designed byprosthetics startup Open Bionics is the recipient of the 2015 UK James Dyson Award for design engineering innovation.
The Open Bionics hand is designed to be cheaper and faster to produce than many of the prosthetics currently available for amputees, which can cost between £3,000 and £60,000.
Taking just 40 hours to 3D-print, the robotic hand is built from custom pieces designed to fit amputees' limbs precisely.
Wearers can be fitted with the bionic hand less than two days after being scanned – a stark contrast with many other options which can take weeks or months.
The hand is printed in four lightweight parts, made from flexible plastic material that makes it more resistant to damage incurred by falls or through daily use.
Electromyographic sensors – which detect muscle movement – are attached to the skin and used to control the hand by flexing their muscles, wearers can choose whether to open and close the hand or grip objects.
The hand's "smart" fingers have also been designed to sense when they are in contact with an object to prevent wearers from accidentally crushing objects they're holding.
The designer intends to add new components that will further replicate the structure of a biological hand by mimicking bones and ligaments.
Open Bionics intends to make the hands available for purchase by the second half of 2016 for less than £1,000. The hand will also be open source to encourage users to customise and share their own designs.

The Great Dictator


Written, produced, scored, directed and also starring (in a dual role no less) by the great Charles Chaplin, The Great Dictator is a 1940 political satire and a clear transitional film between his most famous earlier silent comedies and his later films which contained more overt social commentary.
The film follows the story of a Jewish barber (Chaplin) in the fictional nation of Tomania. During WWI the barber saves the life of pilot Schultz (Reginald Gardiner) but loses his memory in the process as the result of a concussion. Twenty years later, the barber escapes hospital (still not having recovered his memory) and instinctively heads back to his old shop in the ghetto, not aware of the fact that the country is now in the hands of dictator Adenoid Hynkel (Chaplin) under whose command the Jews are being prosecuted and who looks like a spitting image of the barber. After a slapstick altercation with some of Hynkel's goons, the barber and Schultz, now a high-ranking officer in Hynkel's army who objects against the treatment of the Jewish people by the regime, are jailed. The two manage to escape and try to make it to the border but when Hynkel, dressed in regular gear during a duck hunt, is mistakenly arrested instead of the barber, the barber is forced to take his Hynkel's place during a huge rally, leading to perhaps one of the most famous speeches ever delivered in cinema.
An incredible work of prescient satire, The Great Dictator was Charles Chaplin's first venture into talkies (although it still contains various lengthy silent sequences) and one of the first movies to take on Nazi Germany, Hitler and Mussolini head on. Chaplin later stated that had he known the extent of the horrors which would be occurring under the Nazi regime (the film was written even before Germany invaded Poland), he would not have made the movie so we might consider ourselves lucky. Chaplin shines in his double role (and kills particularly it as Hynkel) whilst Paulette Goddard plays the love interest and Jack Oakie goes completely over the top as Italian fascist leader Napolini (ie Mussolini). Highlights include Hynkel playing with a huge air filled globe and the film's final speech, pleading for peace, tolerance and compassion. The Great Dictator was nominated for five Academy Awards, including Best Film, Actor and Screenplay, and won Chaplin a Best Actor Award from the New York Film Critics Circle Awards, which he refused to accept. A genuine masterpiece.