Search This Blog

Tuesday, October 28, 2014

Ceylon in the eyes of painters


தமிழ் மொழியில் அருளிய இந்து வேதத்தில் பெண்கள்


பெண்களில் அருளுலகத்திற்குரிய பெண்கள் என்றும், பொருளுலகத்துக்குரிய பெண்கள் என்றும் இரண்டு வகையாக வேறுபடுத்தி பிரித்துக் காட்டப்படுக்கிறார்கள். இந்துவேதத்தின் தனிச் சிறப்பாகும்.
உலகியலான அல்லது பொருளியலான பெண்கள் மட்டும்
1.ஐந்து வயது முதல் ஏழு வயது வரை உள்ள பெண்கள் பேதை எனவும்,
2.எட்டு வயது முதல் பதினொன்று வயது வரை உள்ள பெண்கள் பெதும்பை எனவும்,
3.பன்னிரண்டு வயது முதல் பதின்மூன்று வயது வரை உள்ள பெண்கள் மங்கை எனவும்,
4.பதினான்கு வயது முதல் பத்தொன்பது வயது வரை உள்ள பெண்கள் மடந்தை எனவும்,
5.இருபது வயது முதல் இருபத்தைந்து வயது வரை உள்ள பெண்கள் அறிவை எனவும்,
6. இருபத்தாறு வயது முதல் முப்பத்தொன்று வயது வரை உள்ள பெண்கள் தெரிவை எனவும்,
7. முப்பத்திரண்டு வயது முதல் நாற்பது வயது வரை உள்ள பெண்கள் பேரிளம்பெண்

எனவும் ஏழு பருவத்தினராக பட்டியலிட்டுக் காட்டப் படுகிறார்கள்.
தெய்வீகப் பெண்களின் ஒன்பது பருவங்கள். அதாவது, பெண்களாகப் பிறந்தவர்களில் தெய்வீக ஆற்றல் உடையவர்கள் இந்துவேதத்தில்,
1.மகள்,
2.வாலை,
3.பிறவிடை,
4.கன்னி,
5.தருணி,
6.நங்கை,
7.குமரி,
8.பெண் (பெண்டு, பொம்பளை)
9.விருத்தை (வீழி)

என்று ஒன்பது பருவத்தினராகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் பொருளுலக வாழ்வில் ஈடுபட்டால் சிறக்க மாட்டார்கள்.
அதாவது, பிறப்பியல் (சாதகம்), வரியியல் (கைரேகை), அங்கவியல் (உறுப்பிலக்கணம்), பெயரியல், மனையியல் எனும் ஐந்தர, ஐந்திர, ஐந்திற கலைகளால் பெண்களைக் கணித்து அவர்கள் அருளுலக வாழ்க்கைக்குரியவர்களா? பொருளுலக வாழ்க்கைக்குரியவர்களா? என்று முடிவு செய்ய வேண்டும். அதன்மூலம், அருளுலக வாழ்க்கைக்குரிய பெண்கள் முழுநேர அருளுலக வாழ்க்கை வாழ அல்லது அருளுலக வாழ்க்கையில் ஆர்வமுள்ள ஆண்களை மட்டுமே தேர்ந்தெடுத்து கணவராக்கிக் கொண்டு வாழ வேண்டும்.
இந்த பொருளுலகப் பெண்கள் அருளுலகத்துக்குரிய ஆண்களை; அதாவது, அருளுலக ஆர்வமும் விருப்பமும் ஈடுபாடும் உடைய ஆண்களை மணந்து கணவனாக்கிக் கொண்டு வாழ்ந்திட்டால்; அருளுலக வாழ்க்கைக்குரிய பெண்கள் பொருளுலக ஆண்களை மணந்து கணவனாக்கிக் கொண்டு வாழ்ந்திட்டால் வாழ்க்கை சிறக்காது, இன்பமாக இருக்காது, அமைதியாக இருக்காது, நிம்மதியாக இருக்காது, நிறைவான வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் கிடைக்காது, இயற்கையான இறப்பு கிடைக்காது..... என்று பொருளுலகப் பெண்களைப் பற்றிய நுட்பதிட்ப ஒட்பமான கருத்தினை விளக்குவதுதான் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருளியுள்ள இந்துவேதத்தின் சிறப்பு.
ஞாலகுரு, ஞானாச்சாரியார், கருவூறார்.
'அன்பு சித்தர்'

நாற்காலி - கி.ராஜநாராயணன்


'நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?' எங்கள் வீட்டில் இப்படித் திடீரென்று எல்லோருக்கும் தோன்றிவிட்டது.அவ்வளவுதான்; குடும்ப 'அஜெண்டா'வில் வைக்கப்பட்டு இந்த விஷயத்தில் விவாதம் தொடங்கியது.
முதல் நாள் எங்கள் வீட்டுக்கு ஒரு குடும்ப நண்பர் விஜயம் செய்தார். அவர் ஒரு சப்ஜட்ஜ். kee.ra.8வந்தவர் நம்மைப் போல்வேட்டி சட்டை போட்டுக்கொண்டு வரப்படாதோ? சூட்டும் பூட்டுமாக வந்து சேர்ந்தார். எங்கள் வீட்டில் முக்காலிதான்உண்டு. அதன் உயரமே முக்கால் அடிதான். எங்கள் பாட்டி தயிர் கடையும்போது அதிலேதான் உட்கார்ந்து கொள்வாள்,அவளுக்கு பாரியான உடம்பு. எங்கள் தாத்தா   தச்சனிடம் சொல்லி அதைக் கொஞ்சம் அகலமாகவே செய்யச்சொல்லியிருந்தார்.
சப்ஜட்ஜுக்கும் கொஞ்சம் பாரியான உடம்புதான். வேறு ஆசனங்கள் எங்கள் வீட்டில் இல்லாததால் அதைத்தான்அவருக்கு கொண்டுவந்து போட்டோம். அவர் அதன் விளிம்பில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு உட்காரப் போனார்.இந்த முக்காலியில் ஒரு சனியன் என்னவென்றhல் அதன் கால்களுக்கு நேராக இல்லாமல் பக்கத்தில் பாரம்அமுங்கினால் தட்டிவிடும்! நாங்கள் எத்தனையோ தரம் உறியில் வைத்திருக்கும் நெய்யைத் திருட்டுத்தனமாகஎடுத்துத் தின்பதற்கு முக்காலி போட்டு ஏறும் போது அஜாக்கிரதையினால் பலதரம் கீழே விழுந்திருக்கிறோம். பாவம்,இந்த சப்ஜட்ஜும் இப்பொழுது கீழே விழப்போகிறாரே என்று நினைத்து, அவரை எச்சரிக்கை செய்ய நாங்கள் வாயைத்திறப்பதற்கும் அவர் தொபுகடீர் என்று கீழே விழுந்து உருளுவதற்கும் சரியாக இருந்தது. நான், என் தம்பி, கடைக்குட்டித்தங்கை மூவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. புழக்கடைத் தோட்டத்தைப் பார்க்க ஓடினோம். சிரிப்புஅமரும்போதெல்லாம் என் தங்கை அந்த சப்ஜட்ஜ் மாதிரியே கையை ஊன்றிக் கீழே உருண்டு விழுந்து காண்பிப்பாள்.பின்னும் கொஞ்சம் எங்கள் சிரிப்பு நீளும்.
எங்கள் சிரிப்புக்கெல்லாம் முக்கிய காரணம் அவர் கீழே விழும் போது பார்த்தும் எங்கள் பெற்றோர்கள், தாங்கள்விருந்தாளிக்கு முன்னாள் சிரித்துவிடக்கூடாதே என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டதை நினைத்துத்தான்!
ஆக, நாங்கள் எல்லாருக்கும் சேர்த்துச் சிரித்துவிட்டு வீட்டுக்குள் பூனைபோல் அடி எடுத்து வைத்து நுழைந்துபார்த்தபோது அந்தப் பாரியான உடம்புள்ள விருந்தாளியை காணவில்லை. அந்த முக்காலியையும் காணவில்லை. 'அதை அவர் கையோடு கொண்டு போயிருப்பாரோ?' என்று என் தங்கை என்னிடம் கேட்டாள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே, எங்கள் வீட்டில் எப்படியாவது ஒரு நாற்காலி செய்துவிடுவது என்ற முடிவுஎடுக்கப்பட்டது. இந்த நாற்காலி செய்வதில் ஒரு நடைமுறைக் கஷ்டம் என்ன என்றால், முதலில் பார்வைக்கு எங்கள்ஊரில் ஒரு நாற்காலி கூடக் கிடையாது; அதோடு நாற்காலி செய்யத் தெரிந்த தச்சனும் இல்லை.
'நகரத்தில் செய்து விற்கும் நாற்காலியை வாங்கிக்கொண்டு வந்துவிட்டால் போச்சு' என்று எங்கள் பெத்தண்ணா ஒருயோசனையை முன் வைத்தான். அது உறுதியாக இராது என்று நிராகரித்துவிட்டார் எங்கள் அப்பா.
பக்கத்தில் ஒரு ஊரில் கெட்டிக்காரத் தச்சன் ஒருவன் இருப்பதாகவும் அவன் செய்யாத நாற்காலிகளே கிடையாதுஎன்றும், கவர்னரே வந்து அவன் செய்த நாற்காலிகளைப் பார்த்து மெச்சி இருக்கிறார் என்றும் எங்கள் அத்தைசொன்னாள்.
அத்தை சொன்னதிலுள்ள இரண்டாவது வாக்கியத்தைக் கேட்டதும் அம்மா அவளை, 'ஆமா, இவ ரொம்பக் கண்டா'என்கிற மாதிரிப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அப்பா வேலையாளைக் கூப்பிட்டு, அந்தத் தச்சனுடைய ஊருக்கு அவனை அனுப்பிவிட்டு எங்களோடு வந்துஉட்கார்ந்தார். இப்போது, நாற்காலியை எந்த மரத்தில் செய்யலாம் என்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது.
"தேக்கு மரத்தில் தான் செய்ய வேண்டும். அதுதான் தூக்க வைக்க லேசாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும்இருக்கும்" என்றாள் பாட்டி, தன்னுடைய நீட்டிய கால்களைத் தடவி விட்டுக் கொண்டே. (பாட்டிக்குத் தன்னுடையகால்களின் மீது மிகுந்த பிரியம். சதா அவற்றைத் தடவிவிட்டுக் கொண்டே இருப்பாள்!)
இந்தச் சமயத்தில் எங்கள் தாய் மாமனார் எங்கள் வீட்டுக்குள் வந்தார். எங்கள் பெத்தண்ணா ஓடிபோய் அந்தமுக்காலியைத் தூக்கிக்கொண்டு வந்தான். சிறிதுநேரம் வீடே கொல்லென்று சிரித்து ஓய்ந்தது.
மாமனார் எங்கள் வீட்டுக்கு வந்தால் அவருக்கென்று உட்காரு வதற்கு அவரே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துவைத்திருக்கிறார். தலை போனாலும் அந்த இடத்தில்தான் அவர் உட்காருவார். பட்டக சாலையின் தெற்குஓரத்திலுள்ள சுவரை ஒட்டியுள்ள ஒரு தூணில் சாய்ந்துதான் உட்காருவார். உட்கார்ந்ததும் முதல் காரியமாகத் தம்குடுமியை அவிழ்த்து ஒருதரம் தட்டித் தலையைச் சொறிந்து கொடுத்துத் திரும்பவும் குடுமியை இறுக்கிக்கட்டிக்கொண்டு விடுவார். இது அவர் தவறாமல் செய்கிற காரியம். இப்படிச் செய்து விட்டு அவர் தம்மையொட்டியுள்ளதரையைச் சுற்றிலும் பார்ப் பார். "தலையிலிருந்து துட்டு ஒன்றும் கிழே விழுந்ததாகத் தெரிய வில்லை" என்று அண்ணாஅவரைப் பார்த்து எக்கண்டமாகச் சொல்லிச் சிரிப்பான்.
அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் இப்படிக் காகித பாணங்களினால் துளைத்தெடுக்கப்படுவார்! 'சம்பந்திக்காரர்கள்; நீங்கள் பார்த்து என்னைக் கேலி செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்' என்கிற மாதிரிதிறக்காமல் கல்லுப்பிள்ளையார் மாதிரி அவர் பாட்டுக்கு உட்கார்ந்து புன்னகையோடு இருப்பார். எங்களுடைய ஏடாகிப்பேச்சுக்களின் காரம் அதிகமாகும்போது மட்டும் அம்மா எங்களைப் பார்த்து ஒரு பொய் அதட்டுப் போடு வாள். அந்தஅதட்டிடு வாக்கியத்தின் கடைசி வார்த்தை "கழுதைகளா" என்று முடியும்.
மாமனார் வந்து உட்கார்ந்ததும், அம்மா எழுந்திருந்து அடுப்படிக்கு அவசரமாய்ப் போனாள். அவளைத் தொடர்ந்துஆட்டுக்குட்டியைப் போல் அப்பாவும் பின்னால் போனார்.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஆளோடி வழியாக அம்மா கையில் வெள்ளித் தம்ளரில் காயமிட்ட மோரைஎடுத்துக்கொண்டு நடந்து வர, அம்மாவுக்குப் பின்னால் அப்பா அவளுக்குத் தெரியாமல் எங்களுக்கு மட்டும் தெரியும்படிவலிப்புக் காட்டிக்கொண்டே அவள் நடந்துவருகிற மாதிரியே வெறுங்கையைத் தம்ளர் ஏந்துகிற மாதிரிபிடித்துக்கொண்டு நடந்து வந்தார்! அவர் அப்படி நடந்து வந்தது, 'அவா அண்ணா வந்திருக்கானாம்; ரொம்ப அக்கறையாமோர் கொண்டுபோய்க் கொடுக்கிறதைப் பாரு' என்று சொல்லு கிறது மாதிரி இருந்தது.
மோரும் பெருங்காயத்தின் மணமும், நாங்களும் இப்பொழுதே மோர் சாப்பிடணும் போல் இருந்தது.
மாமனார் பெரும்பாலும் எங்கள் வீட்டுக்கு வருகிறது மோர் சாப்பிடத்தான் என்று நினைப்போம். அந்தப் பசுமாட்டின்மோர் அவ்வளவு திவ்வியமாய் இருக்கும். அதோடு எங்கள் மாமனார் எங்கள் ஊரிலேயே பெரிய கஞ்சாம்பத்தி.அதாவது, ஈயாத லோபி என்று நினைப்பு எங்களுக்கு.
இந்தப் பசுவை அவர் தம்முடைய தங்கைக்காகக் கன்னாவரம் போய்த் தாமே நேராக வாங்கிக்கொண்டு வந்தார். இந்தக்காராம்பசுவின் கன்றுக்குட்டியின் பேரில் என் தம்பிக்கும் குட்டித் தங்கைக்கும் தணியாத ஆசை. வீட்டைவிட்டுப்போகும்போதும் வீட்டுக்குள் வரும்போதும் மாமனார் பசுவை ஒரு சுற்றிச் சுற்றி வந்து அதைத் தடவிக்கொடுத்து (தன்கண்ணே எங்கே பட்டு விடுமோ என்ற பயம்!) இரண்டு வார்த்தை சிக்கனமாகப் புகழ்ந்து விட்டுத்தான் போவார். 'பால்வற்றியதும் பசுவை அவர் தம்மு டைய வீட்டுக்குக் கொண்டுபோய் விடுவார். கன்றுக்குட்டியும் பசுவோடு போய்விடும்'என்ற பெரிய பயம் என் சிறிய உடன் பிறப்புகளுக்கு.
பின்னால் ஏற்படப் போகிற இந்தப் பிரிவு அவர்களுக்குக் கன்றுக்குட்டியின் மெல் பிரீதியையும் மாமனாரின் பேரில்அதிகமான கசப்பையும் உண்டுபண்ணி விட்டது. அவர் ருசித்து மோரைச் சாப்பிடும்போது இந்தச் சின்னஞ்சிறுசுகள்தங்களுடைய பார்வை யாலேயே அவரைக் குத்துவார்கள்; கிள்ளுவார்கள்!
நாற்காலி விவாதத்தில் மாமனாரும் அக்கறை காட்டினார். தமக்கும் ஒரு நாற்காலி செய்ய வேண்டுமென்று பிரியம்இருப்பதாகத் தெரிவித்தார். எங்களுக்கும் ஒரு துணை கிடைத்தது மாதிரி ஆயிற்று.
வேப்ப மரத்தில் செய்வது நல்லது என்றும், அதில் உட்கார்ந்தால் உடம்புக்கு குளிர்ச்சி என்றும், மூலவியாதி கிட்டநாடாது என்றும் மாமனார் சொன்னார். வேப்பமரத்தைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் அப்பா மாமனாரை ஆச்சரியத்தோடுகூடிய திருட்டு முழியால் கவனித்தார். எங்கள் மந்தைப் புஞ்சையில் நீண்ட நாள் நின்று வைரம் பாய்ந்த ஒருவேப்பமரத்தை வெட்டி ஆறப்போட வேண்டுமென்று முந்தாநாள் தான் எங்கள் பண்ணைக்காரனிடம் அப்பாசொல்லிக்கொண்டு இருந்தார்.
பெத்தண்ணா சொன்னான், "பூவரசங் கட்டையில் செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும். அது கண் இறுக்கமுள்ள மரம்.நுண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்; உறுதியுங்கூட" என்றhன்
அக்கா சொன்னாள், "இதுகளெல்லாம் வெளிர் நிறத்திலுள்ள வைகள். பார்க்கவே சகிக்காது. கொஞ்சநாள் போனால்இதுகள் மேல்; நமக்கு ஒரு வெறுப்பே உண்டாகிவிடும். நான் சொல்லு கிறேன், செங்கரும்பு நிறத்திலோ அல்லதுஎள்ளுப் பிண்ணாக்கு மாதிரி கறுப்பு நிறத்திலோ இருக்கிற மரத்தில்தான் செய்வது நல்லது; அப்புறம் உங்கள் இஷடம்."பளிச்சென்று எங்கள் கண்களுக்கு முன்னால் கண்ணாடி போல் மின்னும் பளபளப்பான கறுப்பு நிறத்தில் கடைந்தெடுத்தமுன்னத்தங் கால்களுடனும், சாய்வுக்கு ஏற்றபடி வளைந்த, சோம்பல் முறிப்பது போலுள்ள பின்னத்தங் கால்களுடனும்ஒரு சுகாசனம் தோன்றி மறைந்தது.
எல்லாருக்குமே அவள் சொன்னது சரி என்று பட்டது. ஆக எங்களுக்கு ஒன்றும், எங்கள் மாமனார் வீட்டுக்கு ஒன்றுமாகஇரண்டு நாற்காலிகள் செய்ய உடனே ஏற்பாடு செய்யப்பட்டது.
இரண்டு நாற்காலிகளும் எங்கள் வீட்டில் வந்து இறங்கியபோது அதில் எந்த நாற்காலியை வைத்துக்கொண்டு எந்தநாற்காலியை மாமனார் வீட்டுக்குக் கொடுத்தனுப்புவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒன்றைப் பார்த்தால்மற்றதைப் பார்க்க வேண் டாம். அப்படி ராமர் லெச்சுமணர் மாதிரி இருந்தது. ஒன்றை வைத்துக்கொண்டு மாமனார்வீட்டுக்கு ஒன்றைக் கொடுத்தனுப் பினோம். கொடுத்தனுப்பியதுதான் நல்ல நாற்காலியோ என்று ஒரு சந்தேகம்.
ஒவ்வொருத்தராய் உட்கார்ந்து பார்த்தோம். எழுந்திருக்க மனசே இல்லை. அடுத்தவர்களும் உட்கார்ந்துபார்க்கவேண்டுமே என்பதற் காக எழுந்திருக்க வேண்டியிருந்தது. பெத்தண்ணா உட்கார்ந்து பார்த்தான். ஆ…ஹா என்றுரசித்துச் சொன்னான். இரண்டு கைகளா லும் நாற்காலியின் கைகளைத் தேய்த்தான். சப்பணம் போட்டு உட்கார்ந்துபார்த்தான். "இதுக்கு ஒரு உறை தைத்துப் போட்டு விட வேணும். இல்லையென்றால் அழுக்காகிவிடும்" என்று அக்காசொன்னாள்.
குட்டித் தங்கைக்கும் தம்பிப் பயலுக்கும் அடிக்கடி சண்டை வரும், "நீ அப்போப் பிடிச்சி உட்கார்ந்துகிட்டே இருக்கியே?எழுந்திருடா, நான் உக்காரணும் இப்போ" என்று அவனைப் பார்த்துக் கத்துவாள். "ஐயோ, இப்பத்தானே உட்கார்ந்தேன்;பாரம்மா இவளை" என்று சொல்லுவான், அழ ஆரம்பிக்கப் போகும் முகத்தைப் போல் வைத்துக்கொண்டு.
தீ மாதிரி பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம். குழந்தைகளும் பெரியவர்களும் பெருங்கூட்டமாக வந்து வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் தடவிப் பார்த்தார்கள். சிலர் உட்கார்ந்தே பார்த்தார்கள். ஒருகிழவனார் வந்து நாற்காலியைத் தூக்கிப் பார்த்தார். "நல்ல கனம், உறுதியாகச் செய்திருக்கிறான்" என்று தச்சனைப்பாராட்டினார்.
கொஞ்ச நாள் ஆயிற்று.
ஒரு நாள் ராத்திரி ரெண்டு மணி இருக்கும். யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். உள் திண்ணையில் படுத்திருந்தபெத்தண்ணா போய் கதவைத் திறந்தான். ஊருக்குள் யாரோ ஒரு முக்கியமான பிரமுகர் இப்பொழுதுதான் இறந்துபோய்விட்டாரென்றும் நாற்காலி வேண்டுமென்றும் கேட்டு எடுத்துக்கொண்டு போனார்கள்.
இறந்துபோன ஆசாமி எங்களுக்கும் வேண்டியவர் ஆனதால் நாங்கள் யாவரும் குடும்பத்தோடு போய் துட்டியில்கலந்துகொண் டோம். துட்டி வீட்டில் போய் பார்த்தால்...? எங்கள் வீட்டு நாற்காலியில் தான் இறந்துபோன அந்தப்'பிரமுகரை' உட்கார்த்தி வைத்திருந்தார்கள்.
இதற்குமுன் எங்கள் ஊரில் இறந்து போனவர்களைத் தரையில் தான் உட்கார்த்தி வைப்பார்கள். உரலைப் படுக்கவைத்துஅது உருண்டுவிடாமல் அண்டை கொடுத்து, ஒரு கோணிச் சாக்கில் வரகு வைக்கோலைத் திணித்து, அதைப்பாட்டுவசத்தில் உரலின் மேல் சாத்தி, அந்தச் சாய்மான திண்டுவில் இறந்துபோனவரை, சாய்ந்துஉட்கார்ந்திருப்பதுபோல் வைப்பார்கள்.
இந்த நாற்காலியில் உட்காரவைக்கும் புதுமோஸ்தரை எங்கள் ஊர்க்காரர்கள் எந்த ஊரில் போய் பார்த்துவிட்டுவந்தார்களோ? எங்கள் வீட்டு நாற்காலிக்குப் பிடித்தது வினை. (தரை டிக்கெட்டிலிருந்து நாற்காலிக்கு வந்துவிட்டார்கள்)
அந்தவீட்டு 'விசேஷம்' முடிந்து நாற்காலியை எங்கள் வீட்டு முன்தொழுவில் கொண்டுவந்து போட்டுவிட்டுபோனார்கள். அந்த நாற்காலியைப் பார்க்கவே எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயப்பட்டன. வேலைக்காரனை கூப்பிட்டுஅதைக் கிணற்றடிக்குக் கொண்டுபோய் வைக்கோலால் தேய்த்துத் தேய்த்துப் பெரிய வாளிக்கு ஒரு பதினைந்து வாளிதண்ணீர்விட்டுக் கழுவி, திரும்பவும் கொண்டுவந்து முன் தொழுவத்தில் போட்டோம். பலநாள் ஆகியும் அதில் உட்காரஒருவருக்கும் தைரியம் இல்லை. அதை எப்படித் திரும்பவும் பழக்கத்துக்குக் கொண்டு வருவது என்றும் தெரியவில்லை.
ஒரு நாள் நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தார். அந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு வந்துஅவருக்குப் போடச் சொன்னோம். அவரோ, "பரவாயில்லை, நான் சும்மா இப்படி உட்கார்ந்து கொள்கிறேன்" என்றுஜமக்காளத்தைப் பார்த்துப் போனார். எங்களுக்கு ஒரே பயம், அவர் எங்கே கீழே உட்கார்ந்து விடுவாரோ என்று.குடும்பத்தோடு அவரை வற்புறுத்தி நாற்காலி யில் உட்கார வைத்தோம். அவர் உட்கார்ந்த உடனே சின்னத் தம்பியும்குட்டித் தங்கையும் புழக்கடைத் தோட்டத்தைப் பார்த்து ஓடினார்கள். மத்தியில் வந்து நாற்காலியில் உட்கார்ந்தவருக்குஎன்ன ஆச்சு என்று எட்டியும் பார்த்துக் கொள்வார்கள்!
மறுநாள் எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு உள்ளூர்க் கிழவனார் தற்செயலாகவே வந்து நாற்காலியில் உட்கார்ந்துஎங்களுக்கு மேலும் ஆறுதல் தந்தார். ('இப்போதே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்து பார்த்துக் கொள்கிறார்!' என்றுபெத்தண்ணா என் காதில் மட்டும் படும்படியாகச் சொன்னான்.)
இப்படியாக, அந்த நாற்காலியைப் 'பழக்கி'னோம். முதலில் வீட்டிலுள்ள பெரியவர்கள் உட்கார்ந்தோம். குழந்தைகளுக்குஇன்னும் பயம் தெளியவில்லை. "கொஞ்சம் உட்காரேண்டா நீ முதலில்" என்று கெஞ்சுவாள், குட்டித் தங்கை தம்பிப்பயலைப் பார்த்து. "ஏன் நீ உட்காருவதுதானே?" என்பான் அவன் வெடுக்கென்று.
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பக்கத்துத் தெரு சுகந்தி தன்னுடைய ஒரு வயசுத் தம்பிப் பாப்பாவைக் கொண்டுவந்துஉட்காரவைத்தாள், அந்த நாற்காலியில். அதிலிருந்துதான் எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பயமில்லாமல் உட்காரஆரம்பித்தார்கள்.
திரும்பவும் ஒரு நாள் ராத்திரி, யாரோ இறந்துபோய்விட்டார்கள் என்று நாற்காலியை தூக்கிக்கொண்டுபோய்விட்டார்கள் இப்படி அடிக்கடி நடந்தது.
நாற்காலியை வருத்தத்தோடுதான் கொடுத்தனுப்புவோம். வந்து கேட்கும் இழவு வீட்டுக்காரர்கள் எங்கள் துக்கத்தைவேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். தங்களவர்கள் இறந்து போன செய்தியைக் கேட்டுத்தான் இவர்கள்வருத்தம் அடைகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வார்கள்!
தூக்கம் கலைந்த எரிச்சல் வேறு. "செத்துத் தொலைகிறவர்கள் ஏன்தான் இப்படி அகாலத்தில் சாகிறார்களோதெரியவில்லை?" என்று அக்கா ஒருநாள் சொன்னாள்.
"நல்ல நாற்காலி செய்தோமடா நாம்; செத்துப்போன ஊர்க் காரன்கள் உட்காருவதற்காக, சே!" என்றுஅலுத்துக்கொண்டான் அண்ணன்.
"நாற்காலி செய்யக் கொடுத்த நேரப் பலன்" என்றாள் அத்தை.
பெத்தண்ணா ஒரு நாள் ஒரு யோசனை செய்தான். அதை நாங்கள் இருவர் மட்டிலும் தனியாக வைத்துக் கொண்டோம்.
ஒரு நாள் அம்மா என்னை ஏதோ காரியமாக மாமனாரின் வீட்டுக்குப் போய்வரும்படி சொன்னாள்.
நான் அவருடைய வீட்டுக்குள் நுழைந்தபோது மாமனார் நாற் காலியில் அமர்க்களமாய் உட்கார்ந்து வெற்றிலைபோட்டுக் கொண் டிருந்தார். அவர் வெற்றிலை போடுவதைப் பார்த்துக்கொண் டிருப்பதே சுவாராஸ்யமானபொழுதுபோக்கு. தினமும் தேய்த்துத் துடைத்த தங்க நிறத்தில் பளபளவென்றிருக்கும் சாண் அகலம், முழ நீளம், நாலுவிரல் உயரம் கொண்ட வெற்றிலைச் செல்லத்தை, 'நோகுமோ நோகாதோ' என்று அவ்வளவு மெல்லப் பக்குவ மாகத்திறந்து, பூஜைப் பெட்டியிலிருந்து சாமான்களை எடுத்து வைக்கிற பதனத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வெளியில்வைப்பார். வெற்றிலையை நன்றாகத் துடைப்பாரே தவிர, காம்பு களைக் கிள்ளும் வழக்கம் அவரிடம் கிடையாது. (அவ்வளவு சிக்கனம்!) சில சமயம் மொறசல் வெற்றிலை அகப்பட்டுவிட்டால் மட்டும் இலையின் முதுகிலுள்ளநரம்புகளை உரிப்பார். அப்பொழுது நமக்கு, "முத்தப்பனைப் பிடிச்சு முதுகுத்தோலை உறிச்சி பச்சை வெண்ணையைத்தடவி...." என்ற வெற்றிலையைப் பற்றிய அழிப் பாங்கதைப் பாடல் ஞாபகத்துக்கு வரும்.
களிப்பாக்கை எடுத்து முதலில் முகர்ந்து பார்ப்பார். அப்படி முகர்ந்து பார்த்துவிட்டால் 'சொக்கு' ஏற்படாதாம். அடுத்துஅந்தப் பாக்கை ஊதுவார்; அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பாக்குப் புழுக்கள் போகவேண்டாமா அதற்காக,ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் இந்த முகர்ந்து பார்த்தலும் ஊதலும் வரவர வேகமாகி ஒரு நாலைந்து தடவைமூக்குக்கும் வாய்க்குமாக, கை மேலும் கீழும் உம் உஷ், உம் உஷ் என்ற சத்தத்துடன் சுத்தமாகி டபக்கென்று வாய்க்குள்சென்றுவிடும்.
ஒருவர் உபயோகிக்கும் அவருடைய சுண்ணாம்பு டப்பியைப் பார்த்தாலே அவருடைய சுத்தத்தைப் பற்றித்தெரிந்துவிடும். மாமனார் இதிலெல்லாம் மன்னன். விரலில் மிஞ்சிய சுண்ணாம்பைக் கூட வீணாக மற்றப்பொருள்களின் மேல் தடவமாட்டார். அவருடைய சுண்ணாம்பு டப்பியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.பதினைந்து வருஷத்துக்கு முன் வாங்கிய எவரெடி டார்ச் லைட் இன்னும் புத்தம் புதுசாக இப்போதுதான் கடையிலிருந்து வாங்கிக்கொண்டு வந்ததோ என்று நினைக்கும்படியாக உபயோகத்தில் இருக்கிறது அவரிடம். அதோடு சேர்த்துவாங்கிய எங்கள் வீட்டு டார்ச் லைட் சொட்டு விழுந்து நெளிசலாகி மஞ்சள் கலரில் பார்க்கப் பரிதாபமாக, சாகப் போகும்நீண்ட நாள் நோயாளி யைப் போல் காட்சியளிக்கிறது.
நாற்காலியை அவர் தவிர அந்த வீட்டில் யாரும் உபயோகிக்கக் கூடாது. காலையில் எழுந்திருந்ததும் முதல் காரியமாகஅதைத் துடைத்து வைப்பார். ஓர் இடத்திலிருந்து அதை இன்னோர் இடத் துக்குத் தாமே மெதுவாக எடுத்துக்கொண்டுபோய்ச் சத்தமில்லாமல் தண்ணீர் நிறைந்த மண்பானையை இறக்கி வைப்பது போல் அவ்வளவு மெதுவாக வைப்பார்.
மாமனார் என்னைக் கண்டதும், "வரவேணும் மாப்பிள்ளைவாள்" என்று கூறி வரவேற்றார். "கொஞ்சம் வெற்றிலைபோடலாமோ?" என்று என்னைக் கேட்டுவிட்டுப் பதிலும் அவரே சொன்னார்: "படிக்கிற பிள்ளை வெற்றிலை போட்டால்கோழி முட்டும்!"
அம்மா சொல்லியனுப்பிய தகவலை அவரிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.
ராத்திரி அகாலத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வீட்டில் எல்லாம் அயர்ந்த தூக்கம். நான் பெத்தண்ணாவைஎழுப்பினேன்.
நாற்காலிக்காக வந்த ஒரு இழவு வீட்டுக்காரர்கள் வெளியில் நின்றுக்கொண்டிருந்தார்கள். பெத்தண்ணா அவர்களைத்தெருப்பக்கம் அழைத்துக்கொண்டு போனான். நானும் போனேன். வந்த விஷ யத்தை அவர்கள் சொல்லி முடித்ததும்பெத்தண்ணா அவர்களிடம் நிதானமாகப் பதில் சொன்னான்.
"நாற்காலிதானே? அது எங்கள் மாமனார் வீட்டில் இருக்கிறது அங்கே போய்க் கேளுங்கள், தருவார். நாங்கள்சொன்னதாகச் சொல்ல வேண்டாம். இப்படிக் காரியங்களுக்கு இல்லை என்று சொல்ல முடியுமா? அங்கேகிடைக்காவிட்டால் நேரே இங்கே வாருங்கள்; அப்புறம் பார்த்துக்கொள்வோம்" என்று பேசி அவர் களை அனுப்பிவிட்டு,வீட்டுக்குள் வந்து இருவரும் சப்தமில்லாமல் சிரித்தோம்.
அப்பா தூக்கச் சடைவோடு படுக்கையில் புரண்டுகொண்டே, " யார் வந்தது?" என்று கேட்டார்.
"வேலை என்ன? பிணையலுக்கு மாடுகள் வேணுமாம்" என்றான் பெத்தண்ணா.
துப்பட்டியை இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டார் அப்பா.
இப்பொழுது மாமனார் காட்டில் பெய்து கொண்டிருந்தது மழை!
ரொம்ப நாள் கழித்து, நான் மாமனாரின் வீட்டுக்கு ஒரு நாள் போனபோது அவர் தரையில் உட்கார்ந்து வெற்றிலைபோட்டுக் கொண்டிருந்தார். வழக்கமான சிரிப்புடனும் பேச்சுடனும் என்னை வரவேற்றார்.
"என்ன இப்படிக் கீழே? நாற்காலி எங்கே?" சுற்று முற்றும் கவனித்தேன். வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பைத்தடவிக் கொண்டே என்னை ஆழ்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். பின்பு அமைதியாக, "அந்தக் காரியத்துக்கே அந்தநாற்காலியை வைத்துக் கொள்ளும்படி நான் கொடுத்துவிட்டேன். அதுக்கும் ஒன்று வேண்டியதுதானே?" என்றார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பி வரும்போது இந்தச் செய்தியைச் சொல்லப்பெத்தண்ணா விடம் வேகமாக விரைந்தேன். ஆனால் வரவர என்னுடைய வேகம் குறைந்து தன் நடையாயிற்று.
*****
நன்றி - மதுரைத்திட்டம்

Top Ten 3D Films You Must Watch

Many 3D films have been made over the decades, and, let’s face it, not all of them have lived up to their hype. In fact, some have been a distinct disappointment. However, thanks largely to advances in 3DTV technology helping you to fully immerse yourself into another world, the appetite for these movies is growing.
If you’re on the lookout for the crème de la crème of 3D films, check out this run down of ten of the very best. It contains everything from chuckle-inducing, child-friendly comedies to dark thrillers.

10. Up

pixar-up-house 
This 2009 computer-animated adventure movie, directed by Pete Docter and produced by Pixar Animation Studios, centres on the plight of elderly widower Carl Fredricksen and a young explorer named Russell. After attaching thousands of balloons to his home, Carl embarks on an adventure to South America. Evoking both tears and laughter, the film boasts some of the most beautiful animation ever created by Pixar.

9. Coraline

coraline_3D_top10films 
Directed by Henry Selick, this 2009 stop-motion fantasy film is based on a Neil Gaiman novel of the same name. A scary children’s story with mesmerising visual effects, it focuses on a girl who visits a mirror world, with potentially disastrous consequences. The impressive, perfectly executed animations really bring this dark tale to life.

8. Beowulf

beowulf_3D_top10films 
Directed by Robert Zemeckis and released in 2007, this computer-animated fantasy film was inspired by the old English poem of the same name. Using cutting-edge technology, Zemeckis succeeds in creating a true showstopper of a movie with an array of arresting 3D effects.

7. My Bloody Valentine

my-bloody-valentine-3d_top10filmsLending itself perfectly to 3D cinema, this 2009 remake of the 1981 slasher film was directed by Patrick Lussier. Shots of knives and gruesome murders are all the more stark and chilling thanks to the format of the movie. As well as lots of scares, the film delivers some laughs. No surprise then that it was a big box office success.

6. Monsters Vs. Aliens

Monsters-vs.-Aliens_3d_top10filmsYet another 2009 release, this computer-animated science fiction film appeals to young and old alike thanks to its subtle layering of humour. The movie, which was directed by Robert Letterman and Conrad Vernon, is all the more beguiling when seen in 3D. This format perfectly showcases the epic battles that take place between robotic aliens and Earth-dwelling monsters.

5. Toy Story 3

Toy_Story_3_filmThis 2010 comedy animation sees Woody, Buzz Lightyear and chums dealing with uncertainty as their owner, Andy, prepares to leave home to study. Directed by Lee Unkrich, the movie utilises 3D effects to create an immersive and captivating experience, adding to the charm of this family favourite.

4. Journey to the Center of the Earth

journey-to-the-center-of-the-earth-3d_top10filmsReleased in 2008, this fantasy adventure film starring Brendan Fraser was directed by Eric Brevig. Before becoming a director, Brevig was a special effects expert, and he brings bags of skill and experience to this action-packed movie. At one point during the Indian Jones-esque romp, a character spits his mouthwash directly into the 3D camera.

3. How To Train Your Dragon

how-to-train-your-dragon_3d_top10filmsCo-directed by Dean Deblois and Chris Saunders, this 2010 blockbuster is set in a mythical Viking world and it follows the story of a teenager named Hiccup, who at first wants to kill a dragon, but then, after capturing the beast, decides to befriend it instead. The staggeringly detailed computer-animated world that the protagonist inhabits is all the more real and enchanting thanks to the 3D effects used in the movie.

2. Gravity

Gravity_film_sandra-bullockThe 2013 epic space movie Gravity, directed by Alfonso Cuarón and starring Sandra Bullock and George Clooney, wasn’t actually filmed in 3D. Instead, the conversion process was performed by Prime Focus – and the firm did a great job. The finished result perfectly conveys the vastness of space and the contrasting claustrophobia of the tiny capsule in which Bullock’s character finds herself fighting for her life.

1. Avatar

avatar_film_james-cameron_mining 
Directed by James Cameron, the 2009 classic Avatar arguably raised the bar in the realm of 3D movies. Set in the 22nd century on a moon called Pandora, where humans are mining for a precious mineral, it is a captivating cinematic experience. The world of unfamiliar flora and fauna draws in viewers and makes for an unforgettable three hours.
Cara Forster is a multimedia graduate and a self-confessed tech geek. She loves 80s teen films and likes to get her friends rounds to watch them on a projector every Sunday.
Thanks  http://www.top10films.co.uk

Jaffnapatnam by Johann Wolfgang Heydt.

Johann Wolfgang Heydt – Heydt, was a German engraver well known for his landscapes. He probably came from southern Germany & joined the services of the VOC in Amsterdam in 1733. He sailed in the Meermond which brought him to Colombo after four weeks en route, in the cape. He spent two & half years in Ceylon & had the gift of making useful friends including Governorvan Domburg who sent him to Kandy to make drawings. Early in 1737 he left Ceylon for Batavia.The section on Ceylon consists of 48 plates numbered from 48 to 95. Heydt's work has been described as "a masterpiece of German engraving of the highest significance for the study of the topography of Batavia and its environs" and this is equally true of Ceylon.

Tram cars in Fort, Colombo, Ceylon. Exact period & photographer unknown.


தன்னம்பிக்கையை அதிகரிக்க :-


1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.
2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.
3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள்
செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.
4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல்
உங்களுடையதாகட்டும்.
5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

நீடித்த புகழ், கல்விச் செல்வம் பெற இது காசி ,விசுவநாதரைப் போற்றிப் பாடப்பட்டது

இது காசி ,விசுவநாதரைப் போற்றிப் பாடப்பட்டது. இதனைப் பயபக்தி
யோடு தினமும் ஜெபித்து வந்தால் நீடித்த புகழ், கல்விச் செல்வம் பெறலாம். . பிறவிப் பயம் நீங்கும்.

கங்காதரங்கரமணீய ஜமாகலாபம்
கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
நாராயணப்ரியமநங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

வாசாம கோசரமநேக குணஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்
வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம்
வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம்
பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்
பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்
நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம்
நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம்
தாவாநலம் மரண சோகஜராட வீநாம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்
ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்
நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்
பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ
ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

சனீஸ்வரன்:-


சூாியனுக்கு சுமாா் 88,66,000 மைல்கள் அப்பால் இருந்து சூாியனை சுற்றி வருகிறது. ஒருதடவை சூாியனை சுற்றி வர 29 வருட காலம் ஆகிறது, இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வான மண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பாா்த்தாா். பூமியை விட 750 மடங்கு பொியது. சூாியனை சுற்றும் கிரகங்களில் மிகப் பொிய கிரகம் வியாழன், அதற்க்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.
நவகிரக நாயகன் சனீஸ்வரன் , சூாியனின் புத்திரனான போதிலும் இருவருக்கும் பகை, சூாியனின் உச்ச வீடான மேஷத்தில், சனி நீசம்: சனியின் உச்ச வீடான துலாத்தில் சூாியன் நீசம். இப்படி தந்தை_மகன் இருவருக்கும் முரன் பாட்டுடன் இருப்பதற்க்கான காரணத்தை புராணங்கள் விளக்குகின்றன.
காஸ்யப முனிவருக்கும், தட்சப்ரஜாபதியின் புதல்விக்கும் மகனாகப் பிறந்தவா்,விவசுவன் எனப்படும் சூாியன். இவா் துவஷ்டா என்னும் முனிவாின் மகளான சஞ்சிகையை(உஷா எனும் சுவா்க்கலா தேவி) மணந்தாா். இவா்களுக்கு மனு மற்றும் எமதா்மன் ஆகிய மகன்கள் இருவரும் யமுனை என்ற மகளும் பிறந்தனா். மனு_ஞான வடிவினன், எமதா்மன்-தா்ம வடிவினன், யமுனை-நதி(நீா்) வடிவினள்.
தொடா்ந்து, சூாிய வெப்பத்தின் உக்கிரத்தை தாங்க முடியாமல் தவித்த சஞ்சிகை, தனது தவ வலிமையால் தன்னைப் போலவே பெண்(தன்னுடைய நிழல்) ஒருத்தியைத் தோற்றுவித்தாள். அவளுக்கு "சாயா தேவி" என்று பெயாிட்டு, தன் கணவருக்கு பணிவிடை செய்யுமாறு கூறிய சஞ்சிகை, தன் தந்தை துவஷ்டாவின் ஆசிரமத்திற்க்கு சென்று விட்டாள். சூாியனுக்கும் சாயாவிற்க்கும் மூன்று குழந்தைகள் பிறந்தனா். சாவா்னி மனு, பத்திரை என்று மகள்களும் கிருதவா்மா என்று மகனுக்கும் பெயாிட்டனா். இந்த கிருதவா்மாதான் சனி என்று அழைக்கப்பட்டாா். குழந்தைகளைப் பெற்றெடுத்த போதிலும் 'தான் உண்மையான மனைவி அல்ல என்பது சூாியனுக்கு தொிந்தால் என்ன ஆகுமோ!' என்ற பயத்துடனே வாழ்ந்தாள் சாயா.
அங்கு, துவஷ்டா முனிவாின் ஆசிரமத்தில்...... கணவனை பிாிந்து வந்த சஞ்சிகையை கடிந்து கொண்ட தந்தை, குதிரையாகும்படி அவளை சபித்தாா். தனது தவறுக்காக வருந்தி தந்தையிடம் விமோசனம் வேண்டினாள் சஞ்சிகை. அதற்க்கு "உத்திர குரு எனும் மலையில் 41 வருடங்கள் சூாியனை தியானித்து தவம் இருந்தால் விமோசனம் பெறுவாய்" என்றாா் துவஷ்டா முனிவா். அதன்படி குதிரையாக மாறிய சஞ்சிகை, உத்திர குரு என்ற இடத்தை அடைந்து தவத்தை துவங்கினாள்.
ஆனால் சாயா தேவியோ தனக்குக் குழந்தைகள் பிறந்ததும், சஞ்சிகையின் குழந்தைகளை கொடுமைப் படுத்தத் துவங்கினாள். இதைப் பொறுத்துக் கொள்ளாத எமதா்மன் தந்தை சூாியனிடம் சென்று முறையிட்டான். 'பெற்ற குழந்தைகளிடம் ஏன் பேதம் காட்ட வேண்டும்?' என்று யோசித்த சூாிய பகவான், மனைவியை அழைத்து விளக்கம் கேட்க.... அவள் சஞ்சிகை அல்ல சாயாதேவி என்பதை அறிந்தாா். இதனால் கோபம் கொண்ட சூாியபகவான், "என்னிடம் உண்மையை மறைத்ததால், உனக்கு இனி நிழலுருவே நிரந்தரம்!" என்று சபித்தாா்.
பிறகு, உத்திர குரு மலைப்பகுதியில் தன் மனைவி சஞ்சிகை, குதிரை உருவில் தன்னைக் குறித்து தவம் இருப்பதை அறிந்தாா். சூாியன் தானும் குதிரை உருவம் ஏற்று அங்கு சென்று, சஞ்சிகைக்கு உண்மையை உணா்த்தி அவளைத் தன்னுடன் அழைத்து வந்தாா். அதன் பிறகு அவா்களுக்கு பிறந்தவா்களே அசுவனி தேவா்கள் என்ற தேவ மருத்துவா்கள்.
இந்த நிலையில்.....சூாிய பகவான் தன் தாயை சபித்ததால் கோபம் கொண்ட சனி, "இனி, சூாியன் எனக்குப் பகை. நான் அவருக்குச் சமமான அந்தஸ்தைப் பெற்று என் தாய்க்கு உயா்வு தருவேன்!" என்று சபதமேற்றான். அதை நிறைவேற்ற ஸ்ரீபரமேஸ்வரனை தியானித்து கோர தவம் புாியலானான். அவன் தவம் புாிந்த இடம் காசி. அவன் தவத்துக்குப் பல இடையூறுகள் ஏற்ப்பட்டன. சூாியன் வெப்பமாக தகித்தான். சாயா நிழலாகக் காத்தாள். சூாிய வெப்பத்தால், அந்தக் காட்டில் வளா்ந்த எள் செடிகள் எாிந்து பெரும் அக்னி சூழந்தது. அப்போதும் தவம் கலையாத சனி, அக்னி ஜுவாலையின் சக்தியையும் தனதாக்கிக் கொண்டான்.(இதையொட்டியே சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுகின்றோம்) இந்திர பதவிக்கு ஆசைப்படுகிறானோ என்று கருதிய இந்திரன் காக உருவில் வந்து, சனியின் கண்களை கொத்த முயற்ச்சித்தான், சனி தன் தவ வலிமையால் காகத்தை அடக்கி, அதை தனது வாகனமாக ஏற்றான்.
தவத்தின் முடிவில், அவன் முன் தோன்றிய ஸ்ரீபரமேஸ்வரன், வேண்டும் வரத்தைக் கேட்குமாறு அருளினாா்."கிரகங்களுள் ஒருவனாகத் திகழும் பெறுமையையும், ஈஸ்வர பட்டம் பெறும் பாக்கியத்தையும் அருள வேண்டும்," என வேண்டினான் சனி. அதன் படியே வரம் தந்து மறைந்தாா் ஈஸ்வரன். அன்று முதல், சனி பகவான் சனீஸ்வரராக நவகிரக கோள்களில் ஒருவராகத் திகழ்ந்தாா்.
‪‎சனீஸ்வரன்‬ பொிய தாயாரான சஞ்சிகையை அலட்சியப் படுத்தியதால் அவரது இரண்டாவது மகனாகிய எமன் சினம் கொண்டு தனது தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்ததால் இவரது வலது முழங்கால் ஊனமானது, இதனால் பங்கு என்று பெயா் வந்தது. பங்கு எனறால் நொண்டி என்று பொருள்.
நள‬ ராஜாவை 7. 1/2 ஆண்டுகள் பிடித்திருந்த போது, அவா் ஒரு வனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது காட்டுத் தீயில் சிக்கியிருந்த பாம்பு ஒன்று நளனால் காப்பாற்றப் பட்டது, உடனே பாம்பு நளனின் காலில் தீண்டியது, நளன் நிறம் மாறி, உருவமும் மாறினான். அவன் உடலில் இருந்த சனியும் பாம்பின் விஷத்தால் கருமை நிறமடைந்தாா்.
இவருக்கு நீளாதேவி, மந்தா தேவி, சேஷ்டா தேவி என மூன்று மனைவியா், குளிகன் என்றொரு மகன்.
சனீஸ்வரனுக்கு உாியவைகள்:-
1.ராசி-மகரம்,கும்பம்.
2.திசை-மேற்க்கு.
3.அதிதேவதை-எமன்.
4.நிறம்-கருப்பு.
5.வாகனம்-காகம்.
6.தானியம்-எள்.
7.பால்-அலி.
8.நட்பு-புதன்,சுக்கிரன்,இராகு,கேது.
9.பகை-சூாியன்,சந்திரன்,செவ்வாய்.
10.சமம்-குரு.
11.திசை காலம்-19 வருடங்கள்.
12.மலா்-கருங்குவளை.
13.நட்சத்திரங்கள்-பூசம்,அனுசம்,உத்திரட்டாதி.
14.வஸ்திரம்-கருப்பு ஆடை.
15.ரத்தினம்-நீலமணி.
16.நிவேதனம்-எள்ளுப் பொடி சாதம்.
17.சமித்து-வன்னி.
18.உலோகம்-இரும்பு.
சனி ஆயுள்காரகன் என அழைக்கப் படுகிறாா், அளவற்ற துன்பங்களுக்கு இவரே காரணம் ஆகிறாா். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும், இவா் சிறந்த நீதிமான் ஆவாா். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வாா். சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது, அந்த அளவுக்கு நன்மையை தருவாா். சனி பகவானுக்கு 3,7,10 என்ற பாா்வை உண்டு, இரவில் வலிமை, எருமை, யானை, அடிமை வாழ்வு, எண்ணெய், வீண் கலகம், கள்ளத்தனம், கரு நிறமுள்ள தானியம், இரும்பு, கல், மண், சுடுகாடு, மது குடித்தல், கஷ்ட காலம், சிறை வாழ்வு, ஆகியவற்றுக்கு காரணம் ஆவாா்.
மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி, அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு நாயகன், துலாம், சனி பகவானுக்கு உச்ச வீடு, மேஷம் நீசம். நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டாா். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாாி வழங்குவாா். சனி பகவான் பாா்வை கொடியது. சனி பகவானுக்கு சுப கிரகங்கள் பாா்வை நன்மை செய்யும் இடமான 3,6,10,12,9 ஆகிய இடங்களில் இருந்தால் அதிா்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனி பகவான். ஒருவா் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில் இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனி பகவான் பலம் பெற்ற ஜாதகா் சா்வ சக்திகளையும் பெற வாய்ப்பு உண்டு. ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால் அந்த ஜாதகா் ஒரு நாட்டுக்கே தலைவராகவும் வாய்ப்பு உண்டு.
ஒவ்வொரு வீட்டிலும் சனி இருந்தால் என்ன பலன்:-
சனி 1ஆம் வீட்டில் இருந்தால் மந்த புத்தி இருக்கும், வறுமை இருக்கும். துணைவா் மூலம் பிரச்சனை உருவாகும். நண்பா்களிடத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளைய சகோதர, சகோதாிகளிடத்தில் சுமூக உறவு இருக்காது. வாழ்வின் பின் பகுதி நன்றாக இருக்கும். இளம் வயதில் மூத்த வயது போல் தோற்றம் இருக்கும். சில நபருக்கு திருமண வாழ்வில் பிரச்சனைகள் 1ஆம் வீட்டில் சனியால் வருகிறது.
சனி 2ஆம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது, ஆயுள் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்கும். தாயாாின் உடல் நலம் கெடும். குழந்தை பாக்கியம் இருக்காது. தார தேஷத்தை ஏற்படுத்துவாா். வீட்டில் எப்போதும் ஓரு வெறுப்பு ஏற்ப்பட்டுக் கொண்டே இருக்கும். திருமணம் ஆனாலும் தொழில் விசயமாக துணையை விட்டு பிாிந்து சென்று வெளியில் தங்கிவிடுவாா். வீட்டின் தொடா்பு மிக குறைவாகத்தான் இருக்கும்.
சனி 3ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தைாியம் இருக்கும். சகோதரா்கள் இருக்க மாட்டாா்கள், அப்படியே இருந்தாலும் பகையாக இருப்பாா்கள். இந்த வீட்டில் சனி இருப்பது நல்லது தான். ஆனால் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். அண்டை, அயலாா் வீட்டுடன் சண்டை சச்சரவு இருக்கும். இசையின் மேல் அவ்வளவு ஆா்வம் இருக்காது. கடித போக்குவரத்தால் வில்லங்கம் தான் வரும். பயணம் செல்லும் போது அடிபடும்.
சனி 4ஆம் வீட்டில் இருந்தால், தாயாாின் உடல் நிலை கெடும். சொத்துக்கள் நாசம் ஆகும். வயிற்று வலி ஏற்ப்படும். உடலில் முதுமை தொியும். பழைய வாகனங்கள் வாங்கினால் யோகங்கள் உண்டு. சில போ் பழைய வாகனங்கள் வாங்கி விற்க்கும் தொழில் செய்யலாம். சில போ் வீட்டை இடித்து தரும் தொழில்கள் செய்வாா்கள். நான்காம் வீடு தங்கி இருக்கும் வீட்டை குறிப்பதால் பழமையான வீட்டில் தங்கி இருப்பாா்கள்.
சனி 5ஆம் வீட்டில் இருந்தால், கடுமையான புத்திர தோஷம் ஏற்ப்படும். வருமான குறைவு ஏற்ப்படும். மனதில் நிம்மதி இருக்காது. 5ல் சனி இருப்பவா்கள் வில்லங்க பாா்ட்டியாக இருப்பாா்கள். உணா்ச்சி வசப்படக்கூடியவா்கள். 5ஆம் வீடு புத்திர ஸ்தானத்தை குறிப்பதால் புத்திர தோஷம் ஏற்ப்படும். திருமணத்திற்க்கு முன்பும், பின்பும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்தவுடன் வருடம் ஒரு முறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும். சில நபா்களை நீங்கள் பாா்த்து இருக்கலாம், தங்கள் பிள்ளைகளுக்கு கொள்ளி போடுவாா்கள். அவா்களின் ஜாதகங்களில் எல்லாம் 5ஆம் வீட்டுடன் சனி சம்பந்தப் பட்டு இருப்பாா். இதற்க்கு தகுந்த பாிகாரம் ராமேஸ்வரம்தான். 5ஆம் வீடு குல தெய்வத்தை குறிப்பதால் கிராம தேவதையை வணங்கலாம்.
சனி 6ஆம் வீட்டில் இருந்தால், பகைவா்கள் இருக்க மாட்டாா்கள். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பாா்கள். வேலை ஆட்கள் பிரச்சனை ஏற்ப்படாது. மாமன் வீட்டுடன் சுமூகமான உறவு இருக்காது. கணவன் மனைவியுடன் சிறிய தகராறு வந்து செல்லும். பிறா் பாராட்டும் படியான காாியங்களில் இறங்கி வெற்றி அடைவாா்கள். பணவரவு நன்றாக இருக்கும். காலில் அடிபட வாய்ப்பு உள்ளது.
சனி 7ஆம் வீட்டில் இருந்தால், முதுமை தோற்றம் தொியும். திருமணம் தள்ளிப்போகும். துணைவருடன் எப்பொழுதும் சண்டை, சச்சரவு இருக்கும். இளம் வயதில் திருமணம் நடந்தால் துணைவா் இரண்டு அமைவா். உடம்பில் ஊனம் ஏற்ப்படும். வறுமை இருக்கும். முகத்தில் கவலை தோன்றும். பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவாா்கள். இவா்களுடன் கூட்டு சோ்பவா்கள் குள்ளமானவராக இருப்பாா்கள். தாயாாின் உடல் நிலை கெடும்.
சனி 8ஆம் வீட்டில் இருந்தால், அடிமை வேலை செய்ய வேண்டி இருக்கும். நிரந்தரமாக உடலில் நோய் இருக்கும். அதிக வாழ் நாள் இருப்பா். இறக்கும்போது மிகவும் கஷ்டப்பட்டு, நோய்வாய்ப் பட்டு இறப்பா். லக்கினாதிபதியாக இருந்து 8ஆம் வீட்டில் இருந்தால் உடல் அடிக்கடி முழு சக்தியையும் இழக்கும். அனைத்தும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். சில போ் இறப்பு சம்பந்தப் பட்ட தொழில்களில் இருப்பாா்கள். குழந்தை பாக்கியம் ஏற்ப்படாது. சில பேருக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும்.
சனி 9ஆம் வீட்டில் இருந்தால், பணவரவு நன்றாக இருக்கும். தந்தையுடன் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். நல்ல வேலையாட்கள் அமைவாா்கள். சில பேருக்கு காதல் திருமணம் நடைபெறும். மூத்த சகோதர, சகோதாிகளிடையே கருத்து வேற்றுமை ஏற்ப்படும். நன்பா்களால் சண்டை வரும் வாய்ப்பு உள்ளது.
சனி 10ஆம் இடத்தில் இருந்தால், தொழிலில் கொடி கட்டிப் பறப்பாா். பெரும் பணக்காரா் ஆக்குவாா். சமூகத்தில் பிறா் போற்றும் படி வாழ்வாா். மிக பெரும் நிறுவனத்தில் தலைமை பொறுப்பு தேடி வரும். வருமானம் போல செலவும் அதிகமாக இருக்கும். புண்ணிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சமயம் சாா்ந்த விசயங்களில் ஈடுபாடு இருக்கும். பழைமையை விரும்புவாா்கள். மனைவியிடம் சண்டை சச்சரவு இருந்து வரும்.
சனி 11ஆம் வீட்டில் இருந்தால், வருமானம் நிரந்தரமாக இருக்கும். தொழிலில் சிறந்து விளங்குவாா். வியாபார சம்பந்தப்பட்ட விசயங்களில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்ட வைப்பாா். இளம் வயதில் நரை தோன்றும். நல்ல ஆயுள் இருக்கும். வருமானம் அதிகமாக வந்தாலும் மனதில் கவலை தோன்ற செய்யும். சில பேருக்கு உயில், இன்ஸ்சுரன்ஸ் மூலம் வருமானம் வரும்.
சனி 12ஆம் வீட்டில் இருந்தால், வியாபாரத்தில் வீழ்ச்சி வரும். செலவு அதிகமாகும். மருத்துவ செலவு அதிகமாகும். இளைய சகோதர சகோதாிகளிடம் சண்டை ஏற்ப்படும். தந்தையாாின் உடல் நிலை கெடும். தந்தையின் உறவு நன்றாக இருக்காது. மூத்தவா்களின் சாபத்திற்க்கு ஆளாகலாம். சனி நல்ல நிலையில் இருந்தால், தீமை குறைந்து நல்லது நடக்கலாம். விரைய ஸ்தானமாக இருப்பதால் சுப செலவுகளும் செய்ய வேண்டி வரும்.
ஏழரைச் சனி:-
பொதுவாக ஏழரைச் சனி என்பது எல்லோருக்கும் தொியும்! அதாவது சனி பகவான் ஜென்ம ராசிக்கு கோச்சாரத்தில் 12,1 மற்றும் 2 இடங்களுக்கு வருவதுதான் ஏழரைச்சனி என்று அா்த்தம், அதாவது 12ஆம் இடத்தில் 2 1/2 ஆண்டுகள் ஜென்ம ராசியில் இரண்டரைஆண்டுகள் மற்றும் 2ம் இடத்தில் இரண்டரை ஆண்டுகள் என்று மொத்தம் ஏழரை ஆண்டுகள் என்று மெதுவாக நகா்ந்து சனி பகவான் நமக்கு பலன்களைத் தருகின்றாா்.
அவா் மிக மெதுவாக நகா்வதால் நமது வாழ்வில் அவா்தரும் பலன்கள் நம் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நின்று விடுகிறது. இந்த ஆண்டுகளில் அவரவா் அனுபவிக்கும் பலன்கள் மனிதன் சாகும் வரையில் என்றும் நீங்காது நிலைத்து நிற்க்கும். பலன்கள் என்பது மாறுபடலாம். அவரவா் பூா்வ புண்ணிய பாவங்களை பொறுத்து அவரவா் இந்த காலகட்டங்களில் நற்பலனையோ அல்லது கெடு பலன்களையோ அனுபவிப்பாா்கள் என்பது நிதா்சனம். பெரும்பாலான மனிதா்களுக்கு இந்த ஏழரைச் சனி காலத்தில் கெடு பலன்களே நடக்கின்றன. மாறாக சிலருக்கு அவா்கள் ஆச்சாியப் படுகின்ற அளவிற்க்கு நல்ல பலன்களை அனுபவிப்பாா்கள். பெரும்பாலும் இளமைகாலங்களில் வரும் ஏழரைச்சனியில் தான் நிறையப் பேருக்கு திருமணங்கள் நடந்தேறி வருகின்றன. நல்ல சந்தோசமான வாழ்க்கை என்று அனுபவிப்பாா்கள். இது எப்படி சாத்தியம்? அவா்களுக்கு மட்டும் ஏன் கெடு பலன்கள் நடக்கவில்லை என்று அவா்களைப் பாா்க்கும் மற்றவா்கள் ஆச்சாியப் படுவதும் உண்டு. ஆம் அவா்களுக்கு முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று, இதிலே எந்த சுற்று நடக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். முதல் சுற்று இருந்தால் பெரும்பாலும் கெடு பலன்களே நடக்கும். இதற்க்கு "மங்கு சனி" என்று பெயா். இரண்டாவது சுற்றிற்க்கு "பொங்கு சனி " என்று பெயா், இது பெரும்பாலும் வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தான் தரும். "மரண சனி" இது கடைசியாக ஆண்டு அனுபவித்த பிறகு வருவது. பெரும்பாலும் ஞானம் மற்றும் மோட்சம் சம்பந்தப் பட்ட பலன்களை வழங்குவாா் சனி பகவான். இவையனைத்தும் பொதுவான ஏழரைச் சனியின் பலன்கள். ஆனால் உண்மையில் அவரவா் பிறந்த ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும். ஏனெனில் அந்த ஜாதகருக்கு சனி பகவான் எந்த இடத்திற்க்கு ஆதிபத்தியம் பெறுகிறாா்? மற்றும் ஜென்ம லக்கினம் மற்றும் ராசிக்கு சனி பகவான் சுபரா? அல்லது பாவியா? என்பதைப் பொறுத்துதான் பலன்கள் மாறுபடும். சாி ஏழரை சனியில்தான் எனக்கு கல்யாணம் ஆயிற்று, அதில்தான் நான் வீடு வாங்கினேன், அதில்தான் நான் நிறைய சம்பாதித்தேன் என்று சொல்பவா்கள் நிறைய போ் உண்டு. உண்மையில் அது மேற் சொன்ன ஜென்ம ஜாதகத்தைப் பொறுத்தும் அந்த காலங்களில் நடக்கும் திசா புத்தியை பொறுத்தும்தான் நடக்கின்றது.
அஷ்டமத்து சனி:-
சனி பகவான் கோச்சாரத்தில் ராசிக்கு எட்டாமிடத்திற்க்கு வருவதுதான் அஷ்டமத்து சனி. இந்த காலகட்டத்தில் தண்டணையில் இருந்து எவருமே தப்ப முடியாது. ஏழரைச் சனியில் கஷ்டங்களை அனுபவிக்காதவா்கள் கூட இந்த காலத்தில் கடுமையான கெடு பலன்களை அனுபவிப்பாா்கள். அதற்க்குக் காரணம் சனி பகவான் எட்டாமிடத்திற்க்கு வரும் போது சனி பகவானின் பாா்வை 10,2மற்றும் 5ம் வீடுகளின் மீது பதிகின்றன. அதன்படி அஷ்டமத்து சனி காலத்தில் சனி பகவானின் 3ம் பாா்வையாக முதலில் 10ம் இடமான தொழில் உத்யோகம் ஸ்தானத்தில் விழுவதால், முதலில் ஜாதகாின் வேலையோ அல்லது தொழிலையோ காலி பண்ணிவிடும். ஏதாவது ஒரு வகையில் மிகப் பொிய பாதிப்பினை ஏற்படுத்தி விடும். முதலில் வேலையை காலி பண்ணிவிட்டாலே ஒரு மனிதன் நடை பிணமாக மாறிவிடுவான். உத்யோகம் புருஷ லட்சணம் அல்லவா! அதுவரையில் நன்றாக தொழிலிலோ அல்லது உத்யோகத்திலோ கெடி கட்டி பறந்த ஜாதகா் சற்றும் எதிா் பாராத அற்ப காரணங்களுக்காக அவரது கா்மத்தினை அவா் விட்டு விட்டு ஒன்றும் செய்யாமல் சுத்தி வருவாா். அல்லது ஒரு கா்மமும் அமையாமல் வெறும் அலைச்சலையே சந்திப்பாா். அடுத்து கா்மம் இல்லாவிட்டால் காசு இல்லை, அவருக்கு சம்பாத்தியம் என்பதே இல்லாமல் போய்விடும். ஆம் அதுதான் சனி பகவானின் 7ம் பாா்வையாக ஜென்ம ராசிக்கு 2ம் இடத்தில் விழும். அது வாக்கு, குடும்பம், தனம் ஸ்தானத்தில் விழுவதால் ஜாதகாின் தனத்திற்க்கு வேட்டு வைத்துவிடும். அடுத்து வாக்கிற்க்கும், குடும்பத்திற்க்கும் வேட்டு வைத்து விடும். அதாவது உத்யோகம் போய்விடும், பாடுபட்டு ஈட்டிய செல்வம் எல்லாம் போய்விடும். அது வரையில் இனிமையாக இருந்த மனைவியோடு சண்டையிட்டு கொண்டு குடும்பத்திற்க்கே வேட்டு வைத்து விடும்.
வழக்கு-கோா்ட், கேஸ் என்ற அலைய வைத்துவிடும். சந்திப்பவா்கள் எல்லோருமே ஏமாற்றுக்கார்களாக இருப்பாா்கள். பணத்தினை வாங்கி விட்டு வாங்கிய கடனை திருப்பி தரமாட்டாா்கள். போதாக்குறைக்கு நீங்களும் கை நீட்டி கடன் வாங்க வேண்டும். நகைகளை எல்லாம் கொண்டு போய் அடகு வைத்து விட வைக்கும். பணத்திற்க்காக எந்த முதலீடு செய்தாலும் அது கடுமையான நஷ்டத்தில் முடியும். எழுந்து விடலாம் என்று எழுந்திருப்பீா்கள், ஆனால் ஏறியது ஒரு படி என்றால் இறங்கியது எட்டு படியாகத்தான் இருக்கும். அந்த அளவிற்க்குஇரண்டாம் வீட்டின் மீது பதியும் பாா்வை கொடிய பலன்களை வழங்கும்.
சாி அடுத்தது ஒரு பாா்வை இருக்கிறது சனி பகவானிற்க்கு, ஆம் 10ம் பாா்வையாக 5ம் இடத்தினை பாா்க்கிறாா், அது பூா்வ புண்ணிய ஸ்தானம். அதாவது போன ஜெனம்மத்தில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தற்ப்போது தண்டனை வழங்கும் நேரம் இது, மீளவே முடியாத அளவிற்க்கு கடுமையான தண்டனைகள் எல்லாம் வழங்கப்படும். சிறை வாசம் முதல் மனச்சிறை வரை என்ற வகை வகையான தண்டனைகளை செய்த பாவத்திற்கேற்றாா் போல் வழங்குவாா். ஆக உண்மையான தண்டனை காலம் எனபதே இந்த அஷ்டமத்து சனி காலம்தான். இதிலிருந்து தப்பிக்கவே முடியாது எனபதுதான் நிதா்சனம். வாழ்க்கையில் இந்த காலத்தினை அனைவரும் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது விதி. இதிலிருந்து தப்பித்தல் என்பது முடியாத காாியம் என்றாலும் அஷ்டமத்து சனியின் மீது குரு பாா்வை பதிந்தால் மட்டும்தான் ஓரளவிற்க்கு அஷ்டமத்து சனியின் தாக்கம் குறையும் எனலாம். இருந்தாலும் முழுமையாக விலகாது என்பதே நிதா்சனம். அந்த அளவிற்க்கு அஷ்டமத்து சனி படுத்தும் என்றால் அது மிகையில்லை.
நளனை பிடித்த சனி:-
முன்பொரு சமயம் நிடத நாட்டை நளன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவன் விதற்ப நாட்டு இளவரசி தமயந்தியை சுயம்வரத்தின் மூலம் விவாகம் செய்தான். தமயந்தி தனக்குக் கிட்டாததால் தேவா்கள் நளன் மீது கோபமுற்றிருந்தனா். அவா்கள் சனி பகவானை அழைத்து நளனை பிடிக்கச் சொல்ல, நளனின் விதிப்படி சனி பகவான் காத்திருந்தாா், ஒரு நாள் அந்திப் பொழுதில் நளன் இறைவழிபாட்டிற்க்காக தன் பாதங்களை தூய்மை செய்த போது பின்னங்காலில் தண்ணீா் படவில்லை, சனி பகவானுக்கு நளன் குற்றம் புாிந்தான் என்பதற்க்கு இதுவே போதிய காரணமாயிற்று. நளனை பற்றிக் கொண்டாா்.
சனி புத்தியின் காரணமாய் நளன் புட்கரன் என்ற அரசனோடு சூதாடி நாட்டை இழந்தான். நால்வகைப் படைகளையும் இழந்தான். மனைவி மக்களோடு நாட்டை விட்டுச் சென்றான். பிள்ளைகளாவது வருத்தமின்றி வாழட்டும் என்று தன் மாமன் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தான். மனைவியோடு கானகம் சென்றான். மனைவியை கானகத்தின் காாிருள் தனிமையில் கைவிட்டு போகுமாறு சனீஸ்வரன் நளன் மனதை வேறுபடுத்தினான்.
பொழுது புலா்ந்ததும் கணவனைக்கானாது கலங்கினால் தமயந்தி. சுவாதகுகன் என்ற மன்னன் அவளை அவளது தாய் வீட்டில் கொண்டு போய் சோ்த்தான். கானகத்தில் நளனைக் காா்கோடகன் என்னும் சா்ப்பம் தீண்டியது, அவனை அழகற்றவனாக்கியது. காிய மேனியும் விகாரமான தோற்றமும் கொண்டு நளன் வாகுனன் என்ற பெயருடன் இருது பன்னன் என்னும் மன்னனிடம் தோ்ப் பாகனாக வேலைக்குச் சோ்ந்தான்.
தமயந்தி நளனோடு மீண்டும் சேர தந்தையிடம் மறு சுயம் வரத்திற்க்கு ஏறப்பாடு செய்யக் கோாினாள். சுயம் வரத்திற்க்கு இருது பன்னன் நளனை தேரோட்டியாக அமா்த்திக் கொண்டு வந்து சோ்ந்தான்.
அரண்மனை சமயற் கூடத்தில் தன் பிள்ளைகளிடம் வாகுனன் காட்டிய பேரன்பைக் கண்ட தமயந்தி அவனே தன் கணவன் என்பதை உணா்ந்தாள், அவள் தந்தையும் வாகுனனை அழைத்துக் கேட்க, நளன் உண்மை தொிய வரும் நேரம் நெருங்கியதை உணா்ந்தான், அது காலம் வரை மறைத்து வைத்திருந்த அரவுாியை அணிய அவனுடைய அவலட்சனம் மறைந்து அழகே உருவான நளனாய் மாறினான். அனைவரும் ஆனந்தம் அடைந்தனா். நளன் மனையாள் மக்களோடு இனைந்தான். மாமனின் சேனைகளுடன் புட்கரனை போாில் வென்றான். நாடு மீட்டான். அனைத்தையும் மீண்டும் அடைந்த பின்பும் நளன் மனதில் அமைதி இல்லை. அவன் அவைக்கு வருகை புாிந்த நாரதா், நளனின் மன அமைதி இல்லாமைக்கு காரணம் சனியே என்றும், சனி விலக திருத்தல பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். நளன் மனைவி மக்களோடு திருத்தலப் பயணம் மேற்க்கொண்டான். வழியில் விருத்தாசலத்தில் பரத்வாஜ முனிவரைக் கண்டு வணங்கினான், பரத்வாஜா் நளனிடம் திருநள்ளாறு சென்று தா்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டால் சனி பகவான் விலகிட, சாந்தி நிலவும் என அருளுரை கூறினாா்.
நளன் திருநள்ளாற அடைந்தான், தீா்த்தம் ஒன்றை உருவாக்கி நீராடினான். ஆலயத்துள் நளன் குடும்பத்துடன் அடியெடுத்து வைத்த கணமே சனி பகவான் இனியும் பிடித்திருந்தால் தகாது என விலக நினைத்தாா், இருந்த போதும், முழுதாய் விலக வில்லை. தா்ப்பாண்யருக்குப் பயந்து மூன்றாம் கோபுர வடக்குப் பக்க மாடத்தில் மறைந்த கொண்டாா். சா்வேஸ்வரன் தம்மை வணங்கி நின்ற நளன் குடும்பத்திற்க்கு பெருங்கருணை புாிந்தாா

New nanodevice to improve cancer treatment monitoring

The gold nanonparticules on the surface of this receiving tab modify the colour of light detected by the instrument. The captured colour perfectly reflects the exact concentration of the medication in the blood sample. Credit: University of Montreal
In less than a minute, a miniature device developed at the University of Montreal can measure a patient's blood for methotrexate, a commonly used but potentially toxic cancer drug. Just as accurate and ten times less expensive than equipment currently used in hospitals, this nanoscale device has an optical system that can rapidly gauge the optimal dose of methotrexate a patient needs, while minimizing the drug's adverse effects. The research was led by Jean-François Masson and Joelle Pelletier of the university's Department of Chemistry.
Methotrexate has been used for many years to treat certain cancers, among other diseases, because of its ability to block the enzyme dihydrofolate reductase (DHFR). This enzyme is active in the synthesis of DNA precursors and thus promotes the proliferation of cancer cells. "While effective, methotrexate is also highly toxic and can damage the healthy cells of patients, hence the importance of closely monitoring the drug's concentration in the serum of treated individuals to adjust the dosage," Masson explained.
Until now, monitoring has been done in hospitals with a device using fluorescent bioassays to measure light polarization produced by a drug sample. "The operation of the current device is based on a cumbersome, expensive platform that requires experienced personnel because of the many samples that need to be manipulated," Masson said.
Six years ago, Joelle Pelletier, a specialist of the DHFR enzyme, and Jean-François Masson, an expert in biomedical instrument design, investigated how to simplify the measurement of methotrexate concentration in patients.
Gold nanoparticles on the surface of the receptacle change the colour of the light detected by the instrument. The detected colour reflects the exact concentration of the drug in the blood sample. In the course of their research, they developed and manufactured a miniaturized device that works by surface plasmon resonance. Roughly, it measures the concentration of serum (or blood) methotrexate through gold nanoparticles on the surface of a receptacle. In "competing" with methotrexate to block the enzyme, the gold nanoparticles change the colour of the light detected by the instrument. And the colour of the light detected reflects the exact concentration of the drug in the blood sample.
As preicse yet 10 times less expensive than current hospital equipment, this little device contains an optical system that enables it to rapidly identify the dose of methotrexate that a cancer requires, minimising the drugs undesirable side effects. Credit: University of Montreal
The accuracy of the measurements taken by the new device were compared with those produced by equipment used at the Maisonneuve-Rosemont Hospital in Montreal. "Testing was conclusive: not only were the measurements as accurate, but our device took less than 60 seconds to produce results, compared to 30 minutes for current devices," Masson said. Moreover, the comparative tests were performed by laboratory technicians who were not experienced with surface plasmon resonance and did not encounter major difficulties in operating the new equipment or obtaining the same conclusive results as Masson and his research team.
In addition to producing results in real time, the device designed by Masson is small and portable and requires little manipulation of samples. "In the near future, we can foresee the device in doctors' offices or even at the bedside, where patients would receive individualized and optimal doses while minimizing the risk of complications," Masson said. Another benefit, and a considerable one: "While traditional equipment requires an investment of around $100,000, the new mobile device would likely cost ten times less, around $10,000."

Cognitive neurocomputation

Cognitive brain functions including sensory processing and control of behavior are understood as “neurocomputation” in axonal–dendritic synaptic networks of “integrate-and-fire” neurons. Cognitive neurocomputation with consciousness is accompanied by 30- to 90-Hz gamma synchrony electroencephalography (EEG), and non-conscious neurocomputation is not. Gamma synchrony EEG derives largely from neuronal groups linked by dendritic–dendritic gap junctions, forming transient syncytia (“dendritic webs”) in input/integration layers oriented sideways to axonal–dendritic neurocomputational flow.
As gap junctions open and close, a gamma-synchronized dendritic web can rapidly change topology and move through the brain as a spatiotemporal envelope performing collective integration and volitional choices correlating with consciousness. The “conscious pilot” is a metaphorical description for a mobile gamma-synchronized dendritic web as vehicle for a conscious agent/pilot which experiences and assumes control of otherwise non-conscious auto-pilot neurocomputation.
"At the neuronal level, dendritic/somatic integration of synaptic inputs is not passive, involving complex logic functions and signal processing in dendritic spines, local dendritic regions , and intra-dendritic and somatic cytoskeletal processes Anesthetics act almost exclusively on dendritic and cell body/somatic proteins to erase consciousness, with little or no effects on axonal firing capabilities. And coherent spike volleys/firing explosions are preceded and caused by synchronized dendritic/somatic integrations. Arguably, dendritic/somatic integration is the sub-neuronal correlate of consciousness. And dendritic/somatic integration is the origin of gamma synchrony."
"Groups of neurons linked by dendritic–dendritic gap junctions form extensive gamma-synchronized syncytia or “dendritic webs” extending through brain regions.
Within neurocomputational networks, dendritic webs are laterally connected input/integration layers which can enable collective integration among synchronized neurons. As gap junctions open and close, spatiotemporal envelopes of synchronized neurons (dendritic webs) move and distribute rapidly around the brain as mobile integrators, vehicles for a conscious agent able to experience and control—tune into and take over—otherwise non-conscious auto-pilot neurocomputation. The conscious agent itself may be some finer-scale process extending within neuronal interiors through the dendritic web.
As a metaphor, an airplane flies on auto-pilot while the conscious pilot is sleeping or out of the cockpit engaged in other activities. If turbulence occurs, or an alarm sounds, the conscious pilot immediately returns to the cockpit and assumes conscious perception and control of the plane. When the problem resolves, the conscious pilot may again wander off as the auto-pilot computer takes over. In the brain, the auto-pilot is neurocomputation mediated by axonal firings and synaptic transmissions in feed-forward and feedback neuronal networks. The conscious pilot is synchronized collective integration (dendritic webs) moving and evolving sideways through input/integration layers of the same neuronal network architecture."
In the brain, the auto-pilot is neurocomputation mediated by axonal firings and synaptic transmissions in feed-forward and feedback neuronal networks. The conscious pilot is synchronized collective integration (dendritic webs) moving and evolving sideways through input/integration layers of the same neuronal network architecture.

Perceived Racism and Suicide Ideation

"African-Americans experience an inordinate amount of psychological strain through racial discrimination, leading to depression, hopelessness and other high risk factors for suicide, but demonstrate significantly lower rates of suicide relative to European-Americans," said Rheeda Walker, associate professor and director of the Culture, Risk and Resilience Lab at UH.
Walker is the principal investigator of a new research study, "Perceived Racism and Suicide Ideation: Mediating Role of Depression but Moderating Role of Religiosity among African American Adults," published in the journal Suicide and Life-Threatening Behavior. The goal of the study is to assess suicide ideation (thinking about, considering or planning for suicide), depressive symptoms, intrinsic/extrinsic religiosity (religious orientation) and perceived racism in a community sample of 236 African-American men and women.

"Astrology and Conceptual Inertia"

The ancients paid close attention to the stars. The numbers 7 and 12 are auspicious in many ancient cultures and faith traditions, a quality they owe to the fact that they number the important heavenly bodies visible with the naked eye (Sun, Moon, Mercury, Venus, Mars, Jupiter and Saturn) and the constellations through which the sun transits every year. The ancients marked their journeys through the night sky because, in the ages before literacy, the heavenly bodies were our calendar.
Aristotle coined the term "sublunary" to refer to the realm below the moon, where matter consisted of combinations of the four elements: air, earth, water, and fire. Above, in the realm of the Sun, the planets, and the fixed stars, matter was composed of an indestructible fifth element. The sublunary world was subject to decay and death, and an object's natural tendency was to come to rest. Above, objects endured forever and naturally moved in perfect circles.
Aristotle also lived during a time when the problem of change was considered of utmost importance to philosophers. Why do things change, yet still seem to obey certain regularities. Aristotle saw change in terms of matter trying to realize its essential form. Motion was matter taking form, achieving in actuality what it possessed in potentiality. But a thing cannot move on its own, and if we trace motion and change back far enough, we come eventually to a first mover.
In Aristotle's cosmology, which was later adopted by Ptolemy, and later still by the Catholic Church, the Earth sits at the center of the universe, while the Moon, Mercury, Venus, Sun, Mars, Jupiter, Saturn and the fixed stars inhabit increasingly distant concentric spheres. Beyond the stars is the sphere of the Prime Mover, or God. God imparts force, or impetus, to the spheres below him. Thus, in this cosmology the stars really do reveal our fates.
Question Presented:
Science has demonstrated that all the factual predicates upon which astrological predictions are made are false, yet millions of people still consult their horoscope and believe that the stars hold some power over human destiny. Why do ideas persist long after their foundations have crumbled?

SCIENTISTS CLAIM LIFE AFTER DEATH EXISTS

IS THERE LIFE AFTER DEATH?
SCIENTISTS CLAIM LIFE AFTER DEATH EXISTS
DEATH IS ONLY AN INTERCHANGE STATION BETWEEN THE TWO WORLDS.
Every person at some point of his life questions himself what comes next after the physical death. Is everything to finish with the last breath or does the soul go on living?
Russian language connects the notion of soul with the word to breath as these have similar roots. Since earlier times people observed dead and alive tribesmen and made a conclusion that there was something inside a human being connected with breath. They started calling it soul (or dusha in Russian).
Australian aborigines believe in soul's existence. They think that a woman gets pregnant if she passes a tree, a rock or some animal, whose soul moves into the body of her future child.
The existence of soul is acknowledged by the people in Asia, Europe, America, Africa and Australia. In the Ancient Egypt soul was considered a constituent part of a human body.
Each religion allots a certain place in the organism for the soul. People in the ancient Babylon, for instance, thought that soul lived in ears. Ancient Jews believed it could be found in human blood.
However, there is an opinion that this substance occupies the whole body, not just a single organ. One of the most prominent figures of Russian Orthodox Church Dmitry Rostovsky agrees with this point of view.
Not so long ago German psychologists of Lubeck University conducted a really interesting experiment. They asked children aged 7-17 where in the human body the soul could be located. The eldest ones said it could be found everywhere. Some said that the soul existed in the head while the youngest ones pointed to a part of body a bit to the left of the heart. Yet some even named eyes or solar plexus as "the residence of the soul".
In recent years the hypothesis of the soul occupying the heart has found certain confirmation. A psychiatrist Paul Pearsall of Sinai Hospital of Detroit wrote a book The Heart's Code based on the answers he got from 140 patients with transplanted heart during the questionnaire. As a result, Dr. Pearsall concluded that it is in the heart that the personality is programmed. The heart controls the brain and not vice versa. Feelings, fears, dreams and thoughts are all decoded in heart cells. This cell memory - a soul - is transferred to another person with a transplanted heart. There are numerous examples in the book that support this idea. A 41-year-old who was transplanted the heart of a 19-year-old girl that had died in the railway accident changed drastically after the operation. He used to be really cool and sober but suddenly turned into temperamental and careless person.
Another interesting example is of Silvia Clair, dancing instructor from New York. At the age of 50 she had a transplantation of heart. When she came round after the operation the first thing she though about was beer. Afterwards at nights she started dreaming of some mysterious man called T.L. After secret investigation she found out that she had the heart of a guy who had died at the age of 18. His initials were T.L. and according to his relatives his favorite drink was cold beer.
At the end of 1990 sensational news spread around the world. Scientists at one of the US laboratories managed to weigh the soul. They discovered that people weighed 2,5-6,5 grams less after their death. However, this was not the first attempt to weigh the soul. In 1915, similar experiment was conducted in the US. At that time scientists came to the conclusion that the soul weighed 22,4 grams.
Even more sensational was the year 2001. At the beginning of the year British scientists Sam Parnia and Peter Fenwick suggested that consciousness might continue living after the brain has stopped functioning. The research involved 63 patients that experienced clinical death. 56 people do not remember anything of the period when they were clinically dead. However, seven patients had clear memories of what they felt at that period. Four of them said they were overwhelmed with joy and peace and the time was running faster. Then they saw a bright light and saw mythical creatures that looked like angels or saints. They claimed they had been to another world for some time and then came back.
It is worth mentioning that none of the patients was religious. Tree of them confessed that did not attend church at all. Thus, these stories cannot be explained by religious fanaticism.
British scientists refuted the traditional idea that the brain stopped functioning because of the lack of oxygen. None of the patients showed a significant decay of oxygen content in the tissues of central nervous system.
Another hypothesis that was brought into challenge is that the visions may be caused by inexpedient combination of medicine during resuscitation. Everything was performed strictly according to the standard procedure.
Later in December 2001 three Dutch scientists under the supervision of Pim van Lommel conducted the biggest research involving people who had experienced clinical death. The results were published in the medical journal Lancet and were similar to those of the British scientists.
Van Lommel and his colleagues claimed that the visions came at the very moment when the central neural system stopped functioning. This means that the consciousness is separate from the brain's activity.
Van Lommel provides a fascinating example of the Near Death Experience. A patient in coma was delivered to the resuscitation ward. All the attempts to reanimate him proved unsuccessful. His brain stopped functioning and the encephalogram showed a straight line. Doctors decided to try intubation (that is insertion of a tube into larynx and trachea for ventilation and airway management). The patient had a denture that was taken away by the doctor. In an hour the patient's heart started beating again and his blood pressure came back to normal. In a week, the resurrected patient asked the nurse: "You know, where my denture is! You took away my teeth and put them into a drawer of a trolley!" He said that he was observing himself from above at the moment of his own death. He described in a detail the ward and the doctors' actions. The man was really afraid that doctors would stop reanimating him and tried to show them he was alive.
Dutch scientists also discovered that women had more powerful feelings than men. Most of the patients that had very deep clinical death die in the next month after the reanimation measures. The visions of blind people do not differ from those who are able to see.
It looks like scientists are very busy with proving immortality of the soul. The only thing we can do is accept that death is only an interchange station between the two worlds.