Search This Blog

Friday, July 25, 2014

LATEST CANCER INFORMATION


from Johns Hopkins

AFTER YEARS OF TELLING PEOPLE CHEMOTHERAPY IS THE ONLY WAY TO TRY AND ELIMINATE CANCER, JOHNS HOPKINS IS FINALLY STARTING TO TELL YOU THERE IS AN ALTERNATIVE WAY …


1. Every person has cancer cells in the body. These cancer cells do not show up in the standard tests until they have multiplied to a few billion. When doctors tell cancer patients that there are no more cancer cells in their bodies after treatment, it just means the tests are unable to detect the cancer cells because they have not reached the detectable size.

2. Cancer cells occur between 6 to more than 10 times in a person's lifetime.

3. When the person's immune system is strong the cancer cells will be destroyed and prevented from multiplying and forming tumors.

4. When a person has cancer it indicates the person has multiple nutritional deficiencies. These could be due to genetic, environmental, food and lifestyle factors.

5. To overcome the multiple nutritional deficiencies, changing diet and including supplements will strengthen the immune system.

6. Chemotherapy involves poisoning the rapidly-growing cancer cells and also destroys rapidly-growing healthy cells in the bone marrow, gastro-intestinal tract etc, and can cause organ damage, like liver, kidneys, heart, lungs etc.

7. Radiation while destroying cancer cells also burns, scars and damages healthy cells, tissues and organs.

8. Initial treatment with chemotherapy and radiation will often reduce tumor size. However prolonged use of chemotherapy and radiation do not result in more tumor destruction.

9. When the body has too much toxic burden from chemotherapy and radiation the immune system is either compromised or destroyed, hence the person can succumb to various kinds of infections and complications.

10. Chemotherapy and radiation can cause cancer cells to mutate and become resistant and difficult to destroy. Surgery can also cause cancer cells to spread to other sites.


11. An effective way to battle cancer is to STARVE the cancer cells by not feeding it with foods it needs to multiple.

What cancer cells feed on:

a. Sugar is a cancer-feeder. By cutting off sugar it cuts off one important food supply to the cancer cells. Note: Sugar substitutes like NutraSweet, Equal, Spoonful, etc are made with Aspartame and it is harmful. A better natural substitute would be Manuka honey or molasses but only in very small amounts. Table salt has a chemical added to make it white in colour. Better alternative is Bragg's aminos or sea salt.


b. Milk causes the body to produce mucus, especially in the gastro-intestinal tract. Cancer feeds on mucus. By cutting off milk and substituting with unsweetened soy milk, cancer cells will starved.

c. Cancer cells thrive in an acid environment. A meat-based diet is acidic and it is best to eat fish, and a little chicken rather than beef or pork. Meat also contains livestock antibiotics, growth hormones and parasites, which are all harmful, especially to people with cancer.

d. A diet made of 80% fresh vegetables and juice, whole grains, seeds, nuts and a little fruits help put the body into an alkaline environment. About 20% can be from cooked food including beans. Fresh vegetable juices provide live enzymes that are easily absorbed and reach down to cellular levels within 15 minutes t o nourish and enhance growth of healthy cells.

To obtain live enzymes for building healthy cells try and drink fresh vegetable juice (most vegetables including bean sprouts) and eat some raw vegetables 2 or 3 times a day. Enzymes are destroyed at temperatures of 104 degrees F (40 degrees C).

e. Avoid coffee, tea, and chocolate, which have high caffeine. Green tea is a better alternative and has cancer-fighting properties. Water--best to drink purified water, or filtered, to avoid known toxins and heavy metals in tap water. Distilled water is acidic, avoid it.

12. Meat protein is difficult to digest and requires a lot of digestive enzymes. Undigested meat remaining in the intestines will become putrified and leads to more toxic buildup.

13. Cancer cell walls have a tough protein covering. By refraining from or eating less meat it frees more enzymes to attack the protein walls of cancer cells and allows the body's killer cells to destroy the cancer cells.

14. Some supplements build up the immune system (IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc.) to enable the body's own killer cells to destroy cancer cells. Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells.

15. Cancer is a disease of the mind, body, and spirit. A proactive and positive spirit will help the cancer warrior be a survivor.

Anger, unforgiving and bitterness put the body into a stressful and acidic environment. Learn to have a loving and forgiving spirit. Learn to relax and enjoy life.

16. Cancer cells cannot thrive in an oxygenated environment. Exercising daily, and deep breathing help to get more oxygen down to the cellular level. Oxygen therapy is another means employed to destroy cancer cells.

(PLEASE SHARE IT TO PEOPLE YOU CARE ABOUT)

Kathu Townlands Kathu Townlands site is between 700,000 and one million years old.

"The archaeologists' research on the Kathu Townlands site, one of the richest early prehistoric archaeological sites in South Africa, was published in the journal, PLOS ONE, on 24 July 2014.
It is estimated that the site is between 700,000 and one million years old."

Flakes and cores from Kathu Townlands, Beaumont Excavation. A: Large flake off the edge of the core consistent with biface shaping removal. B: Large flake with centripedal dorsal scars. C: Blade, note that there is some cortex (indicated by C in the sketch) and that scars are not parallel. D-F: Small flakes, note that F is off the edge of the core. G: Discoidal core with removals off both faces. Break on one edge (upper edge in right view). H: Discoidal core with one large flake removal. Note that on the right-hand face the working is unclear and it is possible that this is a natural surface. Credit: Steven James Walker & et al.

Read more at: http://phys.org/news

To react or not to react? Intrinsic stochasticity of human control in virtual stick balancing

To react or not to react? Intrinsic stochasticity of human control in virtual stick balancing
Arkady Zgonnikov, Ihor Lubashevsky, Shigeru Kanemoto, Toru Miyazawa and Takashi Suzuki
Abstract
Understanding how humans control unstable systems is central to many research problems, with applications ranging from quiet standing to aircraft landing. Increasingly, much evidence appears in favour of event-driven control hypothesis: human operators only start actively controlling the system when the discrepancy between the current and desired system states becomes large enough. The event-driven models based on the concept of threshold can explain many features of the experimentally observed dynamics. However, much still remains unclear about the dynamics of human-controlled systems, which likely indicates that humans use more intricate control mechanisms. This paper argues that control activation in humans may be not threshold-driven, but instead intrinsically stochastic, noise-driven. Specifically, we suggest that control activation stems from stochastic interplay between the operator's need to keep the controlled system near the goal state, on the one hand, and the tendency to postpone interrupting the system dynamics, on the other hand. We propose a model capturing this interplay and show that it matches the experimental data on human balancing of virtual overdamped stick. Our results illuminate that the noise-driven activation mechanism plays a crucial role at least in the considered task, and, hypothetically, in a broad range of human-controlled processes.

மாருதி ஓவியத்துக்கு மயங்காதோர் உண்டோ?







இவரை அறியாத தமிழர்கள் இருக்கவே முடியாது. முக்கியமாகப் பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கட்டாயம் அறிந்திருப்பார்கள் . நான் பிறக்கும் வரை பத்திரிக்கைகளும், புத்தகங்களுமாய்ப் படித்துக் குவித்துக் கொண்டிருந்த என் தாயார், நான் பிறந்ததும், நிறைவே அடையாத திகில் தொடராகிய என்னைப் படிப்பதில் மும்முரமாகிவிட்டார். அதனால், எங்கள் வீட்டில் பத்திரிக்கைகள் வாங்கும் வழக்கம் முற்றிலுமாக நின்றுப்போயிற்று. அண்டை வீட்டு அக்காக்கள், அம்மாக்கள் பலரும் குமுதம், ஆனந்தவிகடன், கண்மணி, ராணி முத்து என்று விதவிதமாகப் படிப்பார்கள். விளையாடப் போகும் போது, குவியலாய்க் கிடக்கும் இப்பத்திரிகைகளின் அட்டைப் படங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. குறிப்பாக, மிளிரும் கண்களும் அழகிய புன்னகையும் அலங்கரித்த பெண்டீரின் வண்ணமயமான ஓவியங்கள்! உள்ளே திறந்தால் கதைகளுக்கு ஏற்ப இன்னும் பல.

சில ஓவியங்களில் இருக்கும் முகங்களை நான் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அவை அவ்வளவு உயிரோட்டம் மிக்கனவாய் இருந்தன. கருவண்டுக் கண்கள் உயிர்பெற்று உருளாதோ என்று ஏங்கும் அளவுக்கு உண்மையாய்த் தோன்றும். வனப்பான கன்னங்களும் இதழ்களும்...ரம்பையும் திலோத்தமையும் இப்படித்தான் இருப்பார்கள் போலும் என்றே எண்ண வைக்கும். இப்படி ஈர்த்த பெரும்பாலான ஓவியங்களில் பொதுவாக ஒன்று காணப்பட்டது. அது அவ்வோவியங்களின் அழகோடு போட்டியிடும், முத்துமுத்தான எழுத்துக்களில் அமைந்த ‘மாருதி’ என்னும் கையொப்பம்! 



சரி, நானே இப்படியெல்லாம் ரசித்தேன் என்றால்,பருவ வயதில் இருந்த ஆண்பிள்ளைகள் பாவம் எப்படியெல்லாம் அந்த முகங்களைக் காதலியாகக் கற்பனைச் செய்து தவித்தனரோ! ஹி ஹி! 

எனது கல்லூரிக் காலத்தில், நடிகை ஸ்ரீதேவியின் சாயலில் அமைந்த ஓவியம் ஒன்றை பழையப் பேப்பர் கடையில் கிடந்த ஒரு பத்திரிக்கையில் கண்டேன். அவள் இரட்டைப் பின்னல் இட்டு, சுருளும் கற்றை மயிர் காதருகில் கொஞ்ச, பச்சைத் தாவணியில் இருந்தாள். கண்கள் அவள் மேலிருந்து கொஞ்சமும் அகல மறுத்தன. கடைக்காரரிடம், அட்டையை மட்டும் கிழித்துக்கொள்ளட்டும்மா என்று கேட்டேன். அவரோ, அதை ஒரு முறைப் பார்த்துவிட்டு, ‘அநியாயத்துக்கு அழகா இருக்குல்லமா?’ என்று சொல்லி பத்திரிகையோடு எடுத்துக்கொள்ளும்படி நீட்டினார். எத்துனையோ வருடங்கள் அது என்னுடன் இருந்தது. இன்றும் வீட்டில் எங்கோ இருக்கத்தான் வேண்டும். அதிலும் ‘மாருதி’ என்னும் கையெழுத்து இருந்தது. 

மாருதி ஆணா, பெண்ணா, வயதென்ன என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. Nanda Kumarஎன்னும் ‘பேஸ்புக்’ நண்பர் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த முகத்தைக் கண்டதுமே அது மாருதியின் கைவண்ணம் என்று மனம் சொல்லிற்று. அதே கையொப்பம் அதிலும் அலங்காரமாக! ‘ஓவியர் மாருதி’ என்று கூகிளில் தேடினேன். அவருடைய இணையத்தளம் கிடைத்தது. அங்கே போன எனக்கு அழகான ஆச்சரியங்கள் பல காத்திருந்தன...வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் அவரது ஓவியங்கள் பலவற்றைக் கண்டத்தில் பெரு மகிழ்ச்சி. அவற்றுள் சில வெறும் ஓவியங்கள் தான், புகைப்படங்கள் அல்ல என்று ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருக்கின்றன. அத்தகைய சிலவற்றை இங்கே ஏற்றியுள்ளேன். மேலும் பல அவரது தளத்தில் உள்ளன. வாழ்க அவரது தூரிகையும் கைகளும்!

thanks

Eeranila Dakshinamurthy

Wednesday, July 23, 2014

வெருட்டி- உமா வரதராஜன்












































மிகுதியைக் காண வெண்திரைகள் இல்லாமற் போன அரங்குகளில் கரிபடிந்த சுவர்கள் மட்டும் மிஞ்சியிருந்தன. சுற்றி வர ஆளுயர முட்பற்றைகள் காவல் காத்து நின்றன. அவ்வப்போது வழிப்போக்கர்கள் உள்ளே போய் ஒன்றுக்கிருந்து விட்டு வந்தனர். சினிமாப் படப்போஸ்டர்கள் அருகி வந்த நகரத்தில் மாட்டுச் சாணம் மலை போல் உயர்ந்து வர, அதை அகற்ற வழி தேடி மாநகர சுகாதார அதிகாரிகள் வீதிகள் தோறும் அலைந்து திரிந்தனர். சாணமடிப்பதிலும், சேறு பூசுவதிலும் வல்லமை பெற்ற பலரும் சினிமா போஸ்டர்கள் இல்லாத சலிப்பில் இலக்கியப் பத்திரிகைகளின் பக்கம் சென்று விட்டதாகத் தகவல் அறிந்தனர்.
ஏறத்தாழ இதே காலகட்டத்தில் அகில உலகப் புகழ் பெற்ற ஜேம்ஸ்பொண்டும், தன் வாழ்வின் இன்னொரு தீரச் செயலாக இலக்கியப் பத்திரிகையொன்றை நடாத்திக் கொண்டிருந்தான். கடலின் சுறாக்களோடு போராடி, சுழியோடி அடியில் புதையுண்டு கிடக்கும் கப்பல்களைக் கண்டு பிடித்தவன் அவன். கொட்டும் மழையில் ஆகாய வெளியில் விமானங்களுக்கிடையே பாய்ச்சல் நிகழ்த்திய சாகஸக்காரன் அவன். பனிமலைச் சறுக்கலில் சூரன், கூடுவிட்டுக் கூடு பாயும் அவனுடைய வித்தையும், 'குதிரை'ச் சவாரியும் பேர் பெற்றவை. எனினும் பத்திரிகையொன்றை நடத்துவதிலேயே, தன் காற்சிரங்கைச் சுட்டுவிரலால் லேசாகத் தடவுவதற்கொப்பான பேரின்பத்தை அவன் பெற்றான்.
தன் பூர்வீகத்தை மறவாத ஜேம்ஸ்பொண்ட் தனது பத்திரிகையில் 'க்ரைமி'ற்கு முன்னுரிமை அளித்தான். இசைத்தட்டுக் களஞ்சியத்தினுள் காணாமற் போன ஸப்த நந்தனப் பிரியா ராகத்தை மீட்டெடுத்தமை, ஆலையடி மண்ணுக்குள் புதையுண்டு போன கிட்டிப்புள்ளைத் தேடியெடுத்தமை, பேராசிரியர் சுகுமாரனின் உண்மை முகத்தைக் கண்டு பிடித்தமை சம்பந்தமாக அவன் எழுதிய கட்டுரைகள் அவனுடைய துப்புத்துலக்கும் திறனுக்கு சான்றுகளாக விளங்குகின்றன எனப் பல இலக்கிய விமர்சகர்களும் நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார்கள்.
பனையோலைச் சுவடிகளால் வேயப்பட்ட சொற்கொல்லன் பட்டறையில் ஜேம்ஸ்பொண்டின் அலுவலகம் இயங்கியது. எழுத்தாணி ஏந்திய காவற்காரர்கள் வாசலில் நின்றனர். சொற்களை எடையிட்டுப் பார்க்க ஒரு தராசும் கொஞ்சம் மஞ்சாடிக் கொட்டைகளும், உராய்ந்து பார்க்க ஓர் அண்டா நிறைய நெருப்புத் தண்ணியும் இருந்தன.
சொற்கொல்லன் பட்டறையின் பின் புறத்தில் சமையற்கட்டு, சமையற்காரர்களாக இருந்த ஜேம்ஸ்பொண்டின் சகபாடிகள் ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர்ந்த ஏனைய நாட்களில் சமூகப் பிரக்ஞை சூப் தயாரித்தார்கள். விடுமுறை நாட்களில் அகவயம்-புறவயம் சுண்டல். விசேஷ பண்டிகைக் காலங்களில் போராட்டப் பாயாசம் அல்லது புகலிட ஐஸகிரீம். சமையற்கட்டில் இருக்கும் தடியன் ஒருவன் சதா இறைச்சி வெட்டிக் கொண்டும் இடையிடையே கவிதைகள் எழுதியவாறுமிருந்தான். இரண்டிலுமே ரத்தம் வந்து கொண்டிருந்தது.
சொற்கொல்லன் பட்டறைக் கூடத்தின் சாய்வு நாற்காலியொன்றில் போர்வை போர்த்திய ஒரு முதியவர் இருப்பார். வேலைக்கு நடுவே சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்ட நாவிதனை எதிர்பார்த்திருக்கும் சலூன் கோலமென முதற் பார்வைக்கு அவர் தெரிவார். ஆனால் அவர் போர்த்திருந்தது ஒரு பொன்னாடை. கீறல் விழுந்த இசைத்தட்டுகளும், ஒரு லொறி கொள்ளக்கூடிய பெருங்காய டப்பாக்களும் இவரிடம் நிறைய இருந்தமைக்காக தொல் பொருள் ஆராய்ச்சி அமைச்சு அண்மையில் அவருக்குப் பொன்னாடையொன்றைப் போர்த்தியிருந்தது. அதைப் பிரிய மனமில்லாத காதலாலும், கூதலாலும் பொன்னாடையுடனேயே அவரது அந்திமகாலம் சொற்கொல்லன் பட்டறையில் கழிந்து கொண்டிருந்தது. மயிர் மழிக்கப்பட்ட பூனைக்குட்டியொன்று செல்லப்பிராணியாய் அங்கே உலாவித் திரிந்தது. கொல்லைப்புறத்தில் நின்ற கூரிய கொம்புகளைக் கொண்ட எருமைகள் அவ்வப் போது மேடைகளுக்குச் சென்று புத்தகங்களைத் துவைத்து, மிதித்து, புழுதி கிளப்பி விட்டுத் திரும்பி வந்தன.
ஜேம்ஸ்பொண்ட் தற்போது முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான். கட்டபொம்மன் குரலில் பேசும் வியாபாரியான எழுத்தாளன் எவளையெல்லாம், எவ்வாறெல்லாம். எப்போதெல்லாம் தழுவுகின்றான் என்பதைத் தனது பத்திரிகையின் அடுத்த இதழில் விபரிக்க அவன் விரும்பியிருந்தான். இதற்காக அவன் பட்டபாடு கொஞ்ஞநஞ்சமல்ல. 'வியாபாரி எழுத்தாளர்களைக் கொல்வது எப்படி' என்ற நூலெதையும் மணிமேகலைப் பிரசுரம் இன்னும் வெளியிடாத காரணத்தால் ஜேம்ஸ்பொண்ட் வாலிவதைபடலம், சூரபத்மன் வதைபடலம் ஆகியவற்றைப் படிக்கலானான். நாடான் கடைகளின் பழைய பேப்பர் கட்டுகளை அறிவுப் பசியின் காரணமாகத் தின்று தீர்த்தான். ஏடுகளைத் தலையில் சுமந்து மழையிலும், வெயிலிலும் அலைந்து திரிந்தான். பனையோலைச் சுவடிகளைப் பாயாகவும், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பேரகராதிகளைத் தலையணையாகவும் போட்டும் படுக்கப் பழகிக் கொண்டான். தன் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றி இராப்பகலாய் எரியவிட்டான். வியாபாரி எழுத்தாளன் தன் கதைகளில் பயன்படுத்தும் அத்தனை சொற்களும் தமிழகராதியிலே இருக்கின்ற இரகசியத்தை இவ்வாறுதான் அவன் கண்டுபிடித்தான். தெலுங்கரான ஸ்ரீ பலிவாட கந்தாராவின் ஆவியைப் பழங்காகித மணம் வீசும் நூலகமொன்றில் ஜேம்ஸ்பொண்ட் சந்திக்க நேர்ந்தது இந்நாட்களில்தான்.
'வணக்கம்'
'யாரது?' என்றது பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஸ்ரீபலிவாட காந்தாராவின் ஆவி.
'நான்தான் ஜேம்ஸ்பொண்ட். துப்பறியும் பத்திரிகையாளன். சங்கீதம், நடனம், விளையாட்டு, நாடகம், சினிமா, கதை, கவிதை, ஓவியம் எனப் பல துறை தெரிந்த சகல கலாவல்லவன்............'
'சமையல், தையல், சோதிடம்?'
'அடுத்து வரும் இதழ்களில் அவற்றைப் பற்றியும் நான் எழுதப்போகின்றேன். அது சரி, பிக்காஸோவின் ஓவியக்கலை சுயமான ஒன்று என நீங்கள் நினைக்கின்றீர்களா? ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் தியாகையர் நாட்டம் கொள்ளாதது ஏன் தெரியுமா?' என எடுத்த எடுப்பில் திடீரென ஜேம்ஸ்பொண்ட் கேட்ட போது 'ஐயா நீங்கள் மகா மேதாவிதான்' எனக்கூறிவிட்டுக் கழன்று கொள்ள முயன்றது ஸ்ரீபலி வாடகாந்தாராவின் ஆவி. ஆனால் ஜேம்ஸ்பொண்ட் விடுவதாக இல்லை.
'ஒரு சின்னக்கேள்வி. நீங்கள் எலியைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?'
'அது கீரியைப் பற்றியது. எலியைப் பற்றிச் சிலவரிகள் அதில் வரும்...'
'அது போதும்...... அது போதும் எனக்கு.....' என்று எலிவாலைப் பிடித்துவிட்ட குதூகலத்துடன் துள்ளிக் குதித்தான் ஜேம்ஸ்பொண்ட்.
'என்ன நடந்தது?'
'வியாபாரி எழுத்தாளன் ஒருவன் வசமாக மாட்டிக் கொண்டான். அவனும் எலியைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறான்.'
'அதனால்....?'
'அந்த எலிதான் இந்த எலி. இந்த எலிதான் அந்த எலி. காவேரிதான் சிங்காரி, சிங்காரிதான் காவேரி....' என்று பாடத் தொடங்கினான் ஜேம்ஸ்பொண்ட்.
'உலகின் அத்தனை எலிகளுக்குமாக ஓர் பண்ணையை நான் நடத்துவதாக உங்களுக்கு யார் சொன்னது?' என்று ஸ்ரீபலிவாடகாந்தாராவின் ஆவி எரிச்சலுடன் வினவியது
'விண்வெளியில் விமானங்கள் முட்டுவது சாத்தியமா? யானைகள் வரும் தமிழ்ப் படங்கள் எல்லாம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பல்லவா?' என்றான் ஜேம்ஸ்பொண்ட்.
ஸ்ரீபலிவாட காந்தாராவின் ஆவிக்கு முதற் தடவையாக இப்போது பயம் வந்தது. துர்க்குணம் கொண்ட சாத்தானொன்று தன்னை ஏதோ சோதனை செய்து பார்ப்பதாகத் தோன்றியது. அதற்கு மேலும் தாங்காது என்று மிரண்டு அது புத்தக அலுமாரிகளில் விழுந்தடித்துக்கொண்டு ஓடியது.
'எலி...எலி...எலி...' என்றுகத்திக்கொண்டே ஜேம்ஸ்பொண்ட் பின் தொடர்ந்து ஓடினான். நூலகத்தில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அனைவரும் அச்சத்தில் கால்களை உயர்த்தித் தூக்கிக் கொண்டனர்.
மாதநாவல் சுவாரஸ்யம் குலைந்து போன எரிச்சலில் 'சைலன்ஸ்...சைலன்ஸ்...' என்று கத்தினாள் நூலகப் பொறுப்பாளர்.
'எலிகள் அங்கேயல்லவா இருக்கின்றன என்று கூறிய அவள் புத்தக அலுமாரிகளைச் சுட்டிக் காட்டினாள். ...அது அசோகமித்திரன் எலி. அது அம்பையின் எலி. அது மலர்மன்னனின் எலி. அது இன்குலாப்பின் எலி...' என்றாள் அவள்.
'இல்லை எனக்கு ஸ்ரீபாலிவாடகாந்தாராவின் எலிதான் வேண்டும்' என்று முனகியவாறு சொற்கொல்லன் பட்டறையை வந்தடைந்தான் ஜேம்ஸ்பொண்ட்.
அன்றிரவு அவனால் தூங்கமுடியவில்லை. நாகத்தின் விஷம் தோய்ந்த மூச்சுக்கள் அறையெங்கும் பரவியிருந்தன. கனவுமற்ற, நினைவுமற்ற ஓர் அந்தரிப்பில் அவன் பாலை நிலத்தில் அலைந்துகொண்டிருந்தான். படிக்கட்டில் அனாதையாக அழுது கொண்டு நிற்கும் அவனுக்கு அம்மை தருகின்றாள் ஞானப்பால். உறிஞ்சுகின்றான். உறிஞ்சுகின்றான் மூர்;க்கம் கொண்டு உறிஞ்சுகின்றான் அவன். அம்மை கலகலவென்று நகைக்கின்றாள். அப்பால் நிற்கும் தோடுடைய செவியன் மர்மப் புன்னகை புரிகின்றான். ஞானப்பால் திகட்டிப் போய் கடைவாய் வழியே வழிகின்றது. பாலின் நிறம் மெது மெதுவாய் நீலமாகிறது. விஷம் உடலெங்கும் பரவி ரத்தம் நீலமாய் ஓடுகிறது. புத்தகங்கள் திடீர் திடீர் எனத் தீப் பற்றி எரிகின்றன. கூவும் குயில்களின் சிறகுகளெனப் பக்கங்கள் மெல்ல மெல்லக் கருகி மடிகின்றன. புத்தகங்களின் புகை வளையங்கள் சுற்றிச் சுற்றி வந்து அவன் குரல்வளையை இறுக்குகின்றன. காளி சூலாயுதம் ஏந்தியவாறு அவனைத் துரத்துகின்றாள். ஜேம்ஸ்பொண்ட் சைக்கிளில் ஏறித் தப்பி ஓடுகின்றான்.
'ஏய் அது எனது சைக்கிள்...' என்று கத்துகின்றான் பின்னாலிருந்து வியாபாரி எழுத்தாளன்.
காலையில் முதல் வேலையாக டொக்டரைப் பார்க்கச் சென்றான் ஜேம்ஸ்பொண்ட். இரவு முழுவதும் தூங்காததில் கண்கள் கலங்கிய குட்டைபோலிருந்தது. 'எல்லாமே மங்கலாகத் தெரிகிறதா?' என அவனைப் பரிசோதித்த வைத்தியர் கேட்டார்.
'இல்லை டொக்டர், பார்க்குமிடமெல்லாம் ஒரே தழுவலாகத் தெரிகின்றன. பதினோராம் நூற்றாண்டு காஜுராஹோ கோயில் சிற்பங்களையும் மிஞ்சிய நெருக்கமான தழுவல்கள். கம்பனைக் கண்ணதாசன் தழுவிக் கொண்டு நிற்கிறார். தாகூரைக் கலாப்ரியாவும், ஷpயாம் பெனகலை மகேந்திரனும் தழுவியபடி நிற்கிறார்கள். கண்களை மூடினால் உமையொருபாகன் எப்போதும் தாண்டவமாடுகின்றான். என்ன அதிசயம் டொக்டர். என் கனவுகளில் பச்சை வயல்கள் இல்லை. நதிகள் இல்லை. குயில்களோ, கிளிகளோ அழகிய பெண்களோ இல்லை. எப்போதும் என் கனவுகளில் குச்சிகள் தீர்ந்த தீப்பெட்டிகளும், அண்டங்காகங்களும், வான்கோழிகளும், மண் புழுக்களுந்தான்..........'
'த்சோ!' என்று அனுதாபப்பட்டார் டொக்டர்.
'எல்லா நூல்களையும் படிக்க எனக்கு ஆர்வம். ஆனால் நான்கைந்து பந்திகளைக் கூடத் தாண்ட முடிவதில்லை. படிக்கின்ற வாசகங்களை எல்லாம் ஏற்கனவே சந்தித்து விட்டதைப் போன்ற உணர்வு மனதைப் பிறாண்டிக் கொண்டேயிருக்கின்றது. மேய்ச்சல் நிலத்தை சரியாகப் பயன்படுத்தாத ஆட்டின் நிலைமையில் நான் இருக்கிறேன் டொக்டர்'
'உங்கள் நோய் என்னவென்று ஓரளவு புரிகின்றது. மனதிற்குள் ஓர் இமயமலையை உண்டாக்கி அதன் உச்சியில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். உங்களை யாரும் கவனிக்கவிலலை என்பதால் புழுங்குகின்றீர்கள். நூறு பேர் கவனிப்பார்கள் என்றால் ஆடைகளைக் களைந்தெறிந்து விட்டு ஓடக்கூட தயார். ஆனால் உங்கள் உடல் வனப்பு அதற்கு இசைவாக இல்லையே என்ற எரிச்சல்'.
ஜேம்ஸ்பொண்ட் மௌனமாக இருந்தான். டொக்டர் தொடர்ந்தார்.
'எல்லோரிலும் உங்களுக்கு அவநம்பிக்கை. மனைவியை, சகோதரியைப் பார்க்கும் போதெல்லாம் கூட இவள் சோரம் போன ஒருத்தியாக இருப்பாளோ என்ற சந்தேகம் உங்கள் மனதை வதைக்கின்றது தெருவில் போகும் குடும்பப் பெண்களைப் பார்த்து 'அடீ வேசி' என்று கூக்குரலிடலாம் போல் உங்களுக்குத் தோன்றுகிறது. உங்கள் மனதின் சுவர்களில் பல கறையான் புற்றுகள்.'
'போதும் டொக்டர் போதும். என் நோய் பற்றிய விபரங்கள் போதும். அது தீர என்ன வழி? அதைச் சொல்லுங்கள்'.
'மிகவும் எளிது. உங்கள் அதிமேதாவி வேஷத்தைக் கலைத்து விடுங்கள். துப்பறியும் திறனை ஒரு பக்கம் வைத்துவிட்டு தியானம் செய்யப் பழகுங்கள், பரஸ்பரம் அன்பு செலுத்தப் பழகுங்கள். நான் எழுதித் தரும் நூல்களை சாப்பாட்டிற்கு முன்பும், சாப்பாட்டுக்குப் பின்பும் படியுங்கள். இரவில் தூங்கப்போகும் முன்னர் இதில் எழுதித் தரும் இசை நாடாக்களைக் கேட்டுப் பாருங்கள். இதற்கும் சரியாகவில்லை என்றால் மூளைமாற்று சத்திரசிகிச்சை ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்' என்ற டொக்டர் தாளொன்றில் சில பெயர்களைக் கிறுக்கித் தந்தார்.
தளர்ந்த நடையுடன் தன் அறைக்குள் நுழைந்த ஜேம்ஸ்பொண்ட் கதவைத் தாளிட்டுக் கொண்டான். அன்று தாளிடப்பட்ட கதவுகள் இன்று வரை திறக்கப்படவில்லை. பல நூல்களையும், இசை நாடாக்களையும் அவன் அங்கிருந்து கேட்டுக் கொண்டிருப்பதாக சிலர் சொன்னார்கள். அவன் உள்ளேயிருந்து மீள்பாய்ச்சலுக்கு தயாராவதாக சகபாடிகள் தெரிவித்தனர். அவனை இடையூறு செய்யக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் 'அதிமேதாவித்தனம் உள்ளே உறங்குகிறது' என்ற அறிவிப்புப் பலகையை கதவில் அவர்கள் மாட்டி விட்டு வெளியே காவலிருந்தார்கள்.

30.07.1996
மூன்றாவது மனிதன்

எய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பிதுக்கிட புதிய வழி -BBC

எய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பிதுக்கிட புதிய வழி -BBC
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எய்ட்ஸ் நோயை ஒழிப்பது சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சியில் நம்பிக்கையூட்டும் ஒரு புதிய முன்னேற்றம் கிடைத்துள்ளது.
ஒரு நோயாளியின் உடலில் பதுங்கியிருக்கும் ஹெச் ஐ வி கிருமியை வலுக்கட்டாயமாக வெளியே வரவைப்பதற்கு வழிகண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஹெச் ஐ வி கிருமி ஒரு நபரின் மரபணுத் தொகுதியுடைய அங்கமாகவே ஆகிவிடுகிறது.பல ஆண்டுகள் அவரது உடலில் ஒன்றும் செய்யாமல் பதுங்கி இருந்துவிட்டு பிற்பாடு அது தலைதூக்குகின்ற ஒரு தன்மை இருக்கிறது. ஹெச் ஐ வி கிருமியை முழுமையாக அழிக்க முடியாததற்கு அதனுடைய இந்த தன்மையும் ஒரு காரணம்.
ஹெச் ஐ வி கிருமி மரபணுக்களில் ஒளிந்துகொண்டிருந்தவர்கள் ஆறு பேருக்கு, வீரியம் குறைவான கீமோதெரெபி கொடுத்தபோது அவர்களது உடலில் ஹெச் ஐ வி கிருமி விழித்துக்கொள்வதை அவதானிக்க முடிந்தது என்று இவ்வருடத்தின் உலக எய்ட்ஸ் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு ஊக்கமளிக்கும் ஒரு ஆரம்பம் என்றாலும், இதனைப் பயன்படுத்தி ஹெச் ஐ வி கிருமியை அழிக்க வழிதேட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எய்ட்ஸ் நோயாளிகள் நோய்ப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவல்ல அண்டி வைரல் மருந்துகளை உட்கொள்ளும்போது, அவர்களது இரத்தத்தில் ஹெச் ஐ வி கிருமிகளின் எண்ணிக்கை, கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு குறைந்து போய்விடுகிறது. எனவே அவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் ஹெச் ஐ வி கிருமியானது அந்நபருடைய மரபணுக்குள் சென்று தனது மரபணுவை புகுத்திக்கொள்கிறது என்பதே பிரச்சினை.
மருந்துகளாலோ, அந்நபருடைய நோய் எதிர்ப்பு தொகுதியாலோ அடைய முடியாத ஒரு இடத்தில்போய் இக்கிருமி பதுங்கிக்கொள்கிறது என்று சொல்லலாம்.
அப்படிப் பதுங்கிக்கொள்ளும் கிருமி, மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், வெளியில் வந்து தனது வேலையைக் காட்டும்.
தற்போது புற்றுநோயாளர்களுக்கு கொடுக்கப்படும் கீமோதெரெபி சிகிச்சை மருந்தான ரோமிடெப்ஸினை சில எய்ட்ஸ் நோயாளிகளிடம் கொடுத்தபோது, பதுங்கியிருந்த ஹெச் ஐ வி கிருமிகள் மீண்டும் அவர்களின் இரத்தத்தில் தென்பட்டன.
இந்த மருந்து கொடுப்பதால் பதுங்கியுள்ள ஹெச் ஐ வி மொத்தமும் வெளிவந்துவிடுமா, அப்படி வெளியான கிருமியை அடியோடு அழிப்பது எப்படி என்பதையெல்லாம் தொடர்ந்து ஆராய வேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Wonderful Little Girl speak about Islamic Concept


Star Fish






Ram


பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது

பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீசக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு (16) நித்தியையாக மகா திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன.
ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூசைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று விசேடமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது. கிரங்களின் அதிர்வு பெற்ற நாள் பௌர்ணமி நாளாகும். ஏழு கிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது ( ஞாயிறு திங்கள் என்று எந்த நாளில் பௌர்ணமி வருகிறதோ ) அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பௌர்ணமியில் தேவி ‘ஸ்ரீசந்திரிகா’ என்ற பெயர் கொண்டு பிரகாசித்து அருள்பாலிக்கிறார். துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறும். துர்க்கையென்றால் துக்கங்களை அழிப்பவள் ஆகும்.
ஒவ்வொரு கிழமைநாட்களிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் கீழே தருகிறோம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்னை செய்யவேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூசை செய்பவரை எந்த நோயும் அணுகாது.
திங்கட்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு ஒரேஞ் (Orange ) நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும். கிரக தோசங்கள், பில்லி, சூனியம் தீரும்.
புதன்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து, பால்பாயாசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிட்டும்.
வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். சுண்டல், தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். வேலையில்லாதவர்களிற்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களிற்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும்.
வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும்.
சனிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தன்று அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன் தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும். நவக்கிரக தோசம் நீங்கும். கடன் தீரும். நோயில்லா வாழ்வு கிட்டும்.
பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூசை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோசங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

நல்ல நேரம் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…….


சுபம் செய்யும் அன்றைய நாள் கரிநாளாக இருக்கக்கூடாது.
திதியில் அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்க்க வேண்டும்.
யோகம் மரணயோக வேளையாக இல்லாமல் சித்த, அமிர்த யோகமாக இருக்கவேண்டும்.
ஓரைகளில் சூரியன், செவ்வாய், சனி ஓரை இல்லாமல் பிற ஓரைகள் வரவேண்டும்.
பஞ்சகங்களில் பொதுவாக அக்கினிஸ சோர, ரோக பஞ்சகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
முக்கியமாகக் கீழ்க்கண்ட பஞ்சகங்களில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியவை
அக்கினி, சோர, ரோக பஞ்சகங்கள்
திருமணம், சீமந்தம், புதுமனை கோல, குடிபோக.
மிருத்யு பஞ்சகம்
பங்குத் தொழில், லிமிடெட் கம்பெனி போன்ற தொழில்கள் ஆரம்பிக்கக் கூடாது.
அக்னி பஞ்சகம்
பஞ்சு, பெட்ரோல் பொருள்கள், நூல், துணி வகைகள் மற்றும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் தொடங்கக்கூடாது.
இராஜ பஞ்சகம்
அரசு வங்கி மற்றும் பொது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி நடத்தும் தொழில் தொடங்கக் கூடாது.
நிஷ் பஞ்சகங்கள் மிக்க சுபம்.
இராகு காலம், எமகண்டம் நேரங்கள் இருக்கக் கூடாது.
கெளரி பஞ்சாங்கத்தில் ரோக, சோர விஷ காலங்கள் இருக்கக் கூடாது.
முக்கியமாக அந்த நட்சத்திரக்காரருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டிர தினமாக இருக்கக்கூடாது.
மேற்கண்டவற்றை அந்தந்த தேதி மற்றும் ஊர்களின் உதய நேரத்தை அனுசரித்து கணித்துக் கொள்ளவும்.

Schizophrenia's genetic 'skyline' rising as genetic code linked to illness grows

The largest genomic dragnet of any psychiatric disorder to date has unmasked 108 chromosomal sites harboring inherited variations in the genetic code linked to schizophrenia, 83 of which had not been previously reported. By contrast, the 'skyline' of such suspect variants associated with the disorder contained only 5 significant peaks in 2011. Researchers combined data from all available schizophrenia genetic samples to boost statistical power high enough to detect subtle effects on risk.

>>"While the suspect variation identified so far only explains only about 3.5% of the risk for schizophrenia, these results warrant exploring whether using such data to calculate an individual's risk for developing the disorder might someday be useful in screening for preventive interventions," .... "Even based on these early predictors, people who score in the top 10% of risk may be up to 20-fold more prone to developing schizophrenia."
>>The newfound genomic signals are not simply random sites of variation... They converge around pathways underlying the workings of processes involved in the disorder, eg communication between brain cells, learning and memory, cellular ion channels, immune function and a key medication target.
>>There was an association confirmed with variation in the gene that codes for a receptor for dopamine: target for antipsychotic medications used to treat schizophrenia. Yet evidence from the study supports the view that most variants appear to exert their effects via the turning on and off of genes rather than through coding for proteins.
>>The study found a notable overlap between protein-related functions of some linked common variants and rare variants associated with schizophrenia in other studies incl genes in communication between neurons via the chemical messenger glutamate, learning and memory, and the machinery controlling the influx of calcium into cells.
"The overlap strongly suggests that common and rare variant studies are complementary rather than antagonistic, and that mechanistic studies driven by rare genetic variation will be informative for schizophrenia,"
>>Findings confirm that it's possible to develop risk profile scores based on schizophrenia-associated variants that may be useful in research - but, for now, aren't sensitive or specific enough to be used clinically as a predictive test, say the researchers.

Tuesday, July 22, 2014

Sri Shirdi Saibaba Mahathyam Full Movie || Vijayachander, Chandra Mohan,...

Dhammika Chaminda Weerasinghe's Photography

























கள்ளிச்சொட்டு - உமா வரதராஜன் -


இருக்கின்ற அழகையும் கெடுத்துக் கொண்ட ஒப்பனை கூடிய கல்யாணப் பெண்ணாக நடுவே கோயில். சூழ நின்ற விருட்சங்களுடன் நிலாக்காலத்தில் இனி என்றைக்குமே பேசாது என்பது போல நின்றது அது, கோயிலை வளைத்துக் கடை வீதி, கரிமண் கிளறிக் கிளறி நடைபோடும் ஜனங்கள். ஒவ்வொரு கடையிலும் தேனடையை மொய்க்கும் ஈக்களாகிக் குழுமி நிற்கும் ஜனங்கள். எறும்புகளாகி முட்டியும், மோதியும் விலகிப் போகும் ஜனங்கள். ஜனங்கள். ஜனங்கள்.
எதிர்வெயிலை வாங்கி தம் முகம் நோக்கித் துப்பியெறிகின்றன அலுமினியப் பாத்திரங்கள். மெல்லிய கைகளைப் பற்றி வளையல் அணிவிப்பதில் காலத்தைக் கரைக்கிறார்கள் காப்புக்கடைப் பையன்கள். இந்த உச்சக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்டு விட்டனர் கச்சான் கொட்டை விற்பவர்களும், கடலை வண்டிக்காரர்களும். சப்த சங்கீதத்துடன் தேநீர்க்கடைகள். புல்லாங்குழல் ஊதியபடி கிருஷ;ணன். தியானத்தில் இருக்கிறார் புத்தர். கண்ணாடிகளில் கிழவனாகிக் கொண்டிருக்கும் நான். 'அம்மா எனக்கு வேணும்' என்று கைகால்களை உதறி அடம் பிடிக்கிறது பொம்மைக் கடைமுன்னே நிற்கும் குழந்தை. தலைகளில் 'பலூன் கொம்புகள்' முளைத்த வியாபாரிகள் வாய்களால் வினோத ஒலி எழுப்புகிறார்கள். புறா முக்கலுடன் ஐஸ்கிரீம் வண்டிகள், கிணற்றடி மூலையில் கணேசனின் அப்பா கரும்பு விற்கிறார்.
கோயிலின் பின்புறம் தீக்குழி. அடுக்கப்பட்ட விறகுகளை விழுங்கியபடி நெருப்பு மோகினி சுழன்று சுழன்று ஆட்டம் போடுகிறது. அதன் தாபமும் தகிப்பும் எங்கும் பரவும் தீக்குழியைச் சுற்றிச் சில மனிதர்கள் நிற்கிறனர். நெருப்பில் உதித்தவர் போன்றும் நெருப்புடன் வாழ்பவராயும் அவர்கள் தோற்றம் காட்டினர். விறகுகளை விழுங்கி செந்தழலாகி ஒளிர்கிறது நெருப்பு. மட்டையினால் அடித்தடித்து எரிதழலின் உயரத்தை மண்ணோக்கிச்சரிப்பார்கள் அந்த மனிதர்கள். கால் நடைகளை விழுங்கி அசைய இயலாமல் படுத்துக்கிடக்கும் மலைப்பாம்பை நினைவு சொல்லும் அந்தியிலே இந்தத் தீக்குழி. அந்தியில் ஊர் எல்லைக் கடலில் நீராடி, மஞ்சள் பூசி, சங்கு, உடுக்கை, பாறை மேளங்களுடன் வருவார்கள் தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலி கொலுவினர். அவர்கள் நெருப்பில் நடப்பார்கள். மறுகரை அடைவார்கள்.
ஜனநெரிசலில் தள்ளுண்டு நான் நடந்தேன். மரங்களின் கண்ணீர்த்துளிகளென சருகுகள் பரவிக் கிடக்கின்றன. சருகுகள் நொறுங்க நொறுங்க மென்மேலும் முன்னேறுகின்றன என் பாதங்கள். செக்குமாட்டுத் தனத்துடன் இலக்கற்ற ஒரு பயணம்.
ஆயிரமாயிரம் அண்டங்காகங்கள் ஒலிபெருக்கியில் கூடியிருந்தன. அவை பாரதம் பாடி வில்லிபுத்தூராழ்வார் மீது எச்சங்கள் இட்டன. 'இன்னும் சொற்ப நேரத்தில்' என்று அடிக்கடி ஒலித்தன. குழந்தைகளைத் தொலைத்தவர்களை வந்து கையேற்கும்படி வேண்டின. முடிச்சு மாறிகள் பற்றி எச்சரித்தன. பெண்களின் பாகங்களுக்கு யாதொரு சேதமும் விளைவிக்க வேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டன.
அம்பாக்குழலை சிறுவர்கள் போட்டிக்கு ஊதுகிறார்கள். சர்பத் கடைகளின் பலவர்ணப் போத்தல்களிலும் கரண்டிகள் ஓடியோடி ஒலி எழுப்புகின்றன. குழந்தைகள் வீரிட்டழுகின்றன. அம்மாக்கள் அடிக்கப் போவதாகப் பாசாங்கு செய்கிறார்கள். கையிலும் இடுப்பிலும் குழந்தைகள் தொங்கப் புருஷமரங்கள் முழிக்கின்றன. எங்கும் நாரசம். மரம் விட்டு நீங்கி என் செவிகளில் இறங்குகின்றன மரங்கொத்திப் பறவையின் அலகுகள். ஒரு தொகைப் பாதங்கள் எற்றிக் கிளம்பும் புழுதியிலும், குளோரின் நெடியிலும் மீறிய மூத்திரவாடையிலும் மூச்சுத் தினறுகிறது.
திடீரெனப் பரபரப்புடன் ஜனங்கள் விலகி நின்று வழிவிடுகின்றார்கள். எனக்கல்ல. துப்பாக்கிகள் ஏந்திய கூட்டம் ஒன்று பின்னால் வருகின்றது. பத்துக் கட்டளைகளில் வரும் மோசேயிற்கும், கூட்டத்திற்கும் கிடைத்ததைப் போல ஜனக்கடலில் இவர்களுக்கும் தனிப்பாதை தோன்றித் திறந்திருந்தது. முட்டல் மோதல் எதுவுமின்றி அவர்கள் முன்னேறலாம். ஆயுதந்தாங்கிகளின் முன்னால் எப்போதும் திறபட்டுக் கிடக்கின்றன வழிகள். கோயிலின் மூலஸ்தானம் வரை, கடலின் தொங்கல் தொடுவானம் வரை, ஏன் தாயின் கருவறை வரை கூட அவர்களால் சென்றுவர முடிகிறது.
என் தோளைப் பற்றிப் பிடிக்கிறது ஒரு கரம். திரும்பிப் பார்த்தேன். துப்பாக்கியுடன் ஒருவன் நின்றான். ஏதாவதொரு கானகத்தில் தொலைந்து போயிருக்கும் அவனது முகத்தின் புன்சிரிப்பு.
'என்னை அடையாளம் தெரிகிறதா?' என்று கேட்டான் அவன். மண்புழுவாகி வேர்களின் நுனிகளைக் கண்டறியும் குழப்பத்தில் தவிக்கின்ற என் முகம் அவனுக்கு வியப்பூட்டவில்லை. நான் இருட்குகையில் ஓவியங்ளைக் கண்டறியத் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
என்னைக் கரையேற்றி விடும் பரிவுடன் சாந்தமான குரலில் அவன் சொன்னான். 'நான் உன்னுடைய நண்பன்;.'
'அப்படியா?' என்றேன்.
வௌ;வேறு பராயங்களில் வௌ;வேறு நண்பர்கள் என் வாழ்வின் சாலையில். வண்ணத்துப் பூச்சியாய் ஞாபகம் அலைக்கழிக்கின்றது. என் அத்தனை சக்திகளையும் ஒன்று திரட்டித் துரத்திக் கொண்டிருக்கிறேன்.
'நீ குழம்பிப் போயிருக்கிறாய்....வா! பேசிக்கொண்டே போகலாம்' என அவன் அழைத்தான். நீட்டிய அவன் கைகளை உதறமுடியாமல், மிட்டாய் தந்த சந்நியாசி பின்னால் இழுபடும் சிறுவனாகப் போய்க் கொண்டிருந்தேன். யானை இழுத்துச் செல்லும் மரக்குற்றி போல் என் உடல் தோன்றிற்று.
என்பக்கமாக முகத்தைத் திருப்பி அவன் 'இன்னமும் என்னைக் கண்டு பிடிக்கவில்லை போல?' என்றான் கிண்டலாக.
நான் மௌனங் கொண்டிருந்த போதிலும் என் முழு முயற்சியும் அதிலேயே இருந்தது. கொஞ்சங் கொஞ்சமாகத் தெரிகிறது. அந்த கண்கள், இடது கோடித் தெற்றுப்பல், நெற்றித் தழும்பு....பனிப்புகார் மெல்ல மெல்ல விலகுகிறது. ஒட்டடை தட்டியாயிற்று. அவன் யாரென்று தெரிந்து விட்டது. இடியுண்ட கட்டிடத்தின் கற்குவியல்களுக்குள் இருந்து தலை நீட்டி மேலெழுந்து வருகிறது ஒரு சர்ப்பம். 'கொல் கொதாவில் சிலுவையில் அறைபட்டவன் மூன்றாம் நாள் முழித்தெழுகிறான். சாம்பலிலிருந்து உயிர்த்தெழுகிறது இதோ ஃபீனிக்ஸ் பறவை.... தீம்தரிகிட....தீம்தரிகிட....
செத்துப் போனவன் ஜனசமுத்திரத்தின் நடுவே என்னைக் கூட்டிச்செல்கிறான். மரணம் ஒரு புத்தகத்தின் கடைசிப்பக்கமா? இல்லையேல் இன்னொரு புத்தகத்தின் முதற்பக்கமா? கடலில் முடிந்ததாக சொல்லப்பட்டவன் தரையில் நடக்கிறான். சப்பாத்துக்கால்களால் சருகுகளை நொறுக்கிக் செல்கிறான். பயமும் பரவசமும் என்;னைச் சூழ்ந்து கொண்டன. அவன் தோளை உரிமையுடன் பற்றினேன்.
'நீ செத்துப் போனதாகச் சொன்னார்கள் படுபாவிகள்.....' அவன் தீட்சண்யமான கண்களால் என்னைப் பார்த்தான்.
'எனக்கு சாவில்லை' என்றான்.
மலை அருவியின் மூர்க்கத்தனத்துடன் எனக்குள் வார்த்தைகள் இருந்தன. வெகு வாஞ்சையுடன் அவனை உற்று நோக்கினேன். அப்போது அது நிகழ்ந்தது. துப்பாக்கி வேட்டுச் சத்தம் ஒன்று. தொடர்ந்து பல வேட்டுகள். நிலமும், காதுகளும் பிளப்பது போல ஒரு வெடியோசை. அதிர்வுடன் ஒரு முறை குலுங்கிற்று பூமி. எங்கும் புகை. ஒரே இரைச்சல். கூக்குரலிட்டு ஜனங்கள் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தனர். என் பக்கத்pல் நின்ற துப்பாக்கி நண்பன் 'ஏதோ சிக்கல்' என்று சொன்னான். அவன் முகம் கொடூரமாக மாறியிருந்தது.
கடல் கொந்தளித்து ஊர் நோக்கி வருகின்ற இரைச்சல். ஆளை ஆள் முண்டித்தள்ளி ஏறிமிதித்து ஓடுகின்றனர். நண்பன் துப்பாக்கியுடன் உஷhர் நிலையில் நின்றான். மழையில் நனைந்து கொடுகும் ஆட்டைப் போல மரமொன்றின் மறைவில் நான் நின்றுகொண்டேன். பயத்தில் என் உதடுகள் உலர்ந்திருந்தன. கை கால்களின் நடுக்கத்தை மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
'பயம் வேண்டாம்' என்றான் துப்பாக்கி நண்பன்.
ஒவ்வொரு வகையான துப்பாக்கிக்கும் ஒவ்வொரு வகையான குரல் இருந்தது. துப்பாக்கிகளின் உரையாடல் முடிவற்று நீண்டு கொண்டே சென்றது. ஓய்கிறது என எண்ணும் போது மறுபடியும் எங்கிருந்தோ குண்டொன்று வெடிக்கிறது.
'இப்போது மண்ணில் நீங்கள் குப்புறப்படுத்துக் கொள்வது பாதுகாப்பானது' என்றான் துப்பாக்கி நண்பன்.
ஆபத்து நம்மிலிருந்து நகர்கிறத, அல்லது ஆபத்தை நோக்கி நாம் நகர்கின்றோமா என்ற புரியாமையின் தத்தளிப்புடன் நான் மண்ணில் கிடந்தேன். ஒரு சடலம் எந்தவொரு ஆட்சேபணையையும் எழுப்பாது என்ற நம்பிக்கையுடனும், உயிர் தப்பவேண்டுமென்ற வெறியுடனும் என்னை மிதித்தபடி ஆட்கள் ஓடிக்கொண்டிருந்தனர்.
'என்ன நடக்கிறது' என்று ஈனஸ்வரமான குரலில் என் நண்பனைக் கேட்டேன். தோட்டாக்கள் தீர்ந்து போயிருக்கலாம். அவனுடைய முகம் கலவரமடைந்திருந்தது.
'பின் வாங்க வேண்டிய தருணம் இது' என்றான் என் நண்பன். மரணம் நாலுகால் பாய்ச்சலில் என்னை நோக்கி வந்து கொண்டிருப்பது உறைக்க சட்டென்று எழுந்தேன். நண்பன் முதலிலும் நான் அவனைப் பின் தொடர்ந்தும் ஓடினோம்.
விஷப்பூண்டை விழுங்கி ஆற்றங்கரையில் ஆங்காங்கே சரிந்த மாடுகளின் பிணங்களைப் போல அநாதை சைக்கிள்கள், பாத்திரங்கள், பனையோலைப் பெட்டிகள், ரப்பர் பொம்மைகள்.... தடை தாண்டி ஓட்டக்காரன் ஆகியிருந்தேன். மலைப்பாம்பு படுப்பது போல் எதிரே ஆலமரவேர். இடறிக் குப்புற விழுந்தேன். மண் தட்டக் கூட நேரமற்று நோவுடன் மறுபடியும் ஓடினேன். என் நண்பனின் முதுகுபுப்புறம் வெகு தொலைவில் தெரிந்தது. மலைகளின் வாய்க்குள் போகும் இறுதிக் கணத்துச் சூரியன் போல அது மெல்ல மெல்ல நழுவிச் சென்றது. வலிகளையெல்லாம் மூட்டை கட்டியெறிந்து வட்டு சக மனிதர்களை முந்தும் வெறியுடன் ஓடிக் கொண்டிருந்தேன். ஏதேனும் ஒரு குண்டு தாக்கிவிடலாம் என்ற முதுகுப்புறத்தின் குறுகுறுப்புடன் ஓடினேன்.
நகரத்துப் பேய்களாக ஜீப்வண்டிகள் ஊளையிட்டு அலைகின்றன. தாறுமாறாய் ஓடும் வாகனங்களின் ஹோர்ன் ஒலி மதங்கொண்ட யானைகளாய்ப் பிளிறுகின்றன. என் முன்னால் ஓடிக்கொண்டிருந்த கன்றுக் குட்டி கால் பிசகி, தெருவில் 'அம்பா' என்ற சத்தத்துடன் விழுகிறது. தாய்ப்பசுக்கள் பதில் குரலுடன் அலைகின்றன. ஒவ்வொரு மரத்திற்கும் காகங்கள் கரைந்து கரைந்து சேதிகள் சொல்கின்றன. ரத்தச் சொட்டுகளைத் தெருவில் சிந்தியபடி, சிவப்பொளி சுழன்றடிக்க, ஒலியெழுப்பியவாறு வாகனம் ஒன்று விரைந்து செல்கிறது. நீட்டிய பல சோடிக்கால்கள் வாகனத்தின் வெளியே தெரிகின்றன. மரணத்தின் கொடூரப்பற்களும், விஷநகங்;களும் என்னைக் குறி வைக்கின்றன. நான் தப்பித்தாக வேண்டும். கால்களில் உயிரை இறக்கி, பாய்ந்து பாய்ந்து ஓடினேன்.
வெறிச்சோடிய தெரு அச்சமூட்டியது. தொலைவில் கரும்புகை பூதமாய் எழுகிறது. கிரஹணம் கவிந்தது என் கிராமத்தின் மீது. குருNஷத்திரத்தின் பதினான்காம் நாளில். நான் வந்து நிற்கிறேன். ஜயத்ரதனின் தலை கொய்யப்படுவதற்காகப் பகலை இருளாக்கி நாடகமாடுகிறான் கிருஷ;ணபகவான். 'என் தலை எனக்கு வேண்டும்'. குருட்டு நம்பிக்கையுடன் ஓடுகிறேன். தெருவின் வீடுகள் எல்லாம் சப்தமிழந்து பேதலித்துப் போயிருந்தன. மௌனிகளாய், செவிடுகளாய், குருடுகளாய் நின்றன வீடுகள் எல்லாம். வானில் இராட்சதப் பறவை கெக்கலிப்புடன் சிறகடிக்கிறது. திக்கொன்றாய் அலையும் குஞ்சுகளைக் கர்வத்துடன் அது வேவு பார்க்கிறது.
தெருவில் தனியாக ஓடும் அபாயத்தை உணர்ந்தேன். பக்கத்து வளவொன்றினுள் நுழைவதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை. உறைந்து போன மெழுகைப் போன்ற வீடொன்று உள்ளே இருந்தது. மதில்களினாலும், தாறுமாறாக வளர்ந்த செடிகொடி மரங்களாலும் அடக்கியாளப்பட்ட வீடாக அது இருந்தது. சிறை மீட்டெடுக்க வரும் ராஜகுமாரனை எதிர் நோக்கியதான மௌனமான துயரத்துடனும் நீர்த்தடங்கள் மறையாத, பாசி படிந்த சுவர்களுடனும் அது காத்திருந்தது.
முற்றத்தில் ஒன்றையொன்று துரத்தியபடி ஓடுகின்றன கீரிப் பிள்ளைகள், கூரை முகட்டின் புறாக்கள் முக்குகின்றன. சிள்வண்டுகள் விட்டு விட்டொலிக்கின்றன. சுழிநிறைந்த ஆறு பற்றிய அச்சம் எடுத்துவைக்கின்ற என் ஒவ்வொரு காலடியிலும். அங்கிருந்த விருட்சங்களின் நீண்ட கிளைகள் என்னை வளைத்துப் பிடித்து, முறுக்கி, எலும்புகளை நொறுக்கிவிடுமோ என்ற அச்சத்திலும், பெயர் தெரியாத ஏதேனும் பறவை ஒன்று விருட்டெனப் பறந்து வந்து தன் கூரிய அலகினால் என் கண்ணைக் கொத்தித் தட்டிச் சென்று விடுமோ என்ற பயத்தினூடும் நான் தயங்கித் தயங்கி நடந்தேன். சங்கிலிக் கட்டுகளில் பின்புறம் கிடக்கின்ற நாய்களுக்குத்தான் எத்தனை ஆவேசம். என் சதைகளைப் பிய்த்தெறியும் குரூரம் கண்களிலே மின்ன, முன்னங்கால்களால் மண்ணை விறாண்டி விறாண்டி மூர்க்கத்தனத்துடன் குரைக்கின்றன அவை. 'கடவுளே, சங்கிலிக் கண்கள் தெறித்துவிடக்கூடாது'
பலநூறு வருடங்களுக்கு முன்னால் சாத்தப்பட்ட ஜன்னலொன்று பெருமுயற்சியுடன் திறபடுவதைப் போன்ற சத்தம். நான் அண்ணாந்து பார்த்தேன். இருட்குகையில் ஒளிரும் மெழுகுவர்த்தி ஏந்தித் தோன்றுகிறாள் ஒருத்தி. முகலாய காலத்து மூடுபல்லக்கின் திரை விலகத் தெரியும் ஒரு பெண்ணின் சோகம் கவிந்த முகம். நாய்களை அவள் அதட்டுகிறாள். இஷ;டமற்று முனகல்களுடன் அடங்குகின்றன நாய்கள். என் பக்கம் அவள் பார்வை திரும்புகிறது.
'நான்.... நான்...' என்னைப் பற்றித் தட்டுத் தடுமாறலுடன் சொல்ல ஆரம்பித்தேன்..........
'தெரியும்..... தெரியும்.....' என்று இடைமறித்த அந்த சாளரத்து முகம் மறைந்து போனது. வாசற்கதவின் தாள்பாள் உட்புறமாக அகற்றப்படும் ஓசை சிறிது நேரத்தில் கேட்டது. வாசல் நிலையில் தலைதட்டும் உயரத்துடன் அவள் நின்றிருந்தாள். முதுமையின் படிகளில் அவள் கால் வைத்திருந்தாள். வீட்டின் மௌன ஓலம் அவள் முகத்திலும் இருந்தது. வாவென்று கூடச் சொல்லாமல் சாவி கொடுத்த பொம்மை போல் மறுபடியும் வீட்டுப்படிகளில் அவள் ஏறத் தொடங்கினாள். மேகங்களைக் கையால் பிடிக்கப் போவது போல் அவள் போய்க் கொண்டேயிருந்தாள். நான் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். முடிவிடம் தென்படாமல் படிகள்..........படிகள்.....படிகள்........
படிகளில் ஏறி ஏறி என் மூச்சு வாங்கியது. என் உடலை எங்கேனும் சாய்க்கா விட்டால் தாங்காது போலிருந்தது. களைப்பினால் தளர்ந்து போயிருந்தேன். ஒவ்வொரு படிகளிலும் என் முன்னால் அவள் ஏறிச் செல்கையில் அவளுடைய கூந்தலை நான் மிதித்து விடக்கூடாதேயென அஞ்சினேன். முடியப்படாத கூந்தலின் பின்னால் ஒளிந்திருக்கலாம் ஏதேனும் சபதம். ரோமர் இலக்கங்கள் கொண்ட, என்றோ நின்று போன சுவர் மணிக்கூடு ஒட்டடையுடன் தொங்குகிறது. என்னைத் திரும்பிப் பாராமல், பேசிய படி சென்றாள் அவள்.
'இது பாதுகாப்பான இடம் என்றா இங்கு நுழைந்தாய்?'
'....................................'
'என்னை உனக்குத் தெரியாதல்லவா?'
'தெரியாது'
'நான்தான் ரோசலீன் '
'உன் அம்மாவின் பள்ளிக்கூடத்து சினேகிதி'
அம்மா எதுவும் தானாகச் சொன்னதில்லை. அம்மாவின் பால்யகால நினைவுகள் கறையான் தின்ற ஒரு புத்தகம். அங்கிருந்து எனக்குக் கிடைத்ததெல்லாம் ஓரிருவரிகள். தெருவில் சிந்திய தானியமணிகளை அவசர அவசரமாகக் கைப்பற்றிய காகம் போல அவளுடைய சம்பாஷணைகளில் நான் பொறுக்கியவை சொற்பம். ஆனால் ரோசலீன் பற்றி அங்கு எதுவுமிருந்ததில்லை.
'வீட்டில் வேறு யாருமில்லையா?' என்று நான் கேட்டேன்.
'இதோ.... இந்த சுவர்களில் இருக்கிறார்கள்' கருகிப்போன மலர் மாலைகளுடன் தொங்கும் புகைப்படங்கள். அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
'போனார்கள்..... ஒன்றன் பின் ஒன்றாகப் போனார்கள். திரும்பி வரவில்லை.'
'இங்கே தனியாகவா இருக்கிறீர்கள்? உங்களுக்கு அப்படி இருப்பது பயமாயில்லையா?'
அவள் நடை நின்றது. திரும்பி என்னைப் பார்த்தாள். 'பயமா? எலும்புகளால் கட்டப்பட்ட வீடு இது. ரத்தத்தினால் வர்ணம் பூசப்பட்டது இந்த வீடு. இன்னும் என்ன நடக்க வேண்டும் பயப்பட?'
நாய்கள் மறுபடியும் குரைக்கின்ற ஓசை. வெளியே தத்தம் வல்லமை கூறி வானத்தையும் எச்சரிக்கின்ற துப்பாக்கிகள். அவள் பரபரப்படைந்தாள். ஒரு படி கீழே இறங்கி என் கைகளை ஆதரவுடன் அவள் பற்றினாள். நெருக்கத்தில் மதுவாடை வீசியது. கண்களில் நீர் தேங்கியிருந்தது.
'சிறகடியில் வைத்திருந்து வைத்திருந்து என் குஞ்சுகளை ஒவ்வொன்றாய்ப் பறிகொடுத்தேன். எனக்கு வந்த கதி உன் அம்மாவுக்கும் வேண்டாம்...... ஓடித்தப்பு........'
அவன் படிகளின் வழியாய் இறங்கி மறுபடியும் ஓடத் தொடங்கினான்.

வீரகேசரி
16.05.1993
இந்தியா டுடேஏப்ரல் 1993