Search This Blog

Wednesday, May 4, 2011

Latest Space Photographs By US Geological Survey


http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
Lhttp://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/
http://groups.yahoo.com/group/believe_ur_eyes/

Rock Formation in Ireland

This unusual rock formation near the beaches of Ireland has astronished Geologists over centuries and intrigued environmentalists and nature lovers. Geologists over centuries have come up with a number of theories explaining this bizzare formation; but this remains one of the greatest natural mystries.

The actual reason is still unknown but most of them believe that these could be the result of a series of volcanic eruptions and earthquakes. But it's extremely difficult for a normal person to believe that the volcanic eruptions could give such an attractive shape to the solid stones.











மூளையைப் பாதிக்கும் 9 பழக்கங்கள்






 


 
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

Neeya Pesiyathu Thirumalai

Ye Nilave Mugavari HD

Nan Pogiren - Naanayam Song 2009 HQ

Aadukalam Ayyayo HQ video song- ayyayo nenju alayuthadi 1st on net.flv

Suthuthe Suthuthe Bhoomi [HD Quality]

PAIYA Video Song Adada Mazhaida High Quality

Thuli Thuli Mazhai - from Paiyaa

Ananda thandavam song

Madharasapattinam Pookal Pookum.avi

Un Perai Sollum _Angadi Theru_ _Full Song_.flv

Thenmerku Paruvakaatru Yedi Kallachi

Neeyum Nanum Nanachathu Nadakum - Mynaa Movie Song

Maina maina nenjukulle -Mynaa Movie Song

ஏனைய செய்தி ஒசாமா கொல்லப்பட்டதை நேரடியாக பார்த்த ஒபாமா


[ செவ்வாய்க்கிழமை, 03 மே 2011, 05:12.05 பி.ப GMT ] அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்தவாரு நேரடியாகப் பார்வையிட்டுள்ளார்.இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பங்கேற்ற அமெரிக்க கடற்படை அதிரடி வீரர் ஒருவரின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமெரா ஒன்றின் மூலம் இந்தக் காட்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. முதலில் பின்லேடனின் தலையில் சுடப்பட்டுள்ளது.
அதுவே அவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டது. இருந்தாலும் அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் அவரின் மார்பிலும் சுடப்பட்டுள்ளது.
தலைக்கவசத்தில் கமெரா பொருத்தப்பட்ட படை வீரரே இரண்டாவது தடவையாக பின்லேடனைச் சுட்டுள்ளார். எனவே பின்லேடன் சுடப்படுவதை ஒபாமா நேரடியாகக் காணக் கூடியதாகவும் இருந்தது.
செய்மதி வழியாகவே இந்தக் காட்சிகள் வெள்ளை மாளிகைக்கு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன. பின்லேடனை பாதுகாக்க அவரின் மனைவியருள் ஒருவர் மனிதக் கேடயமாகச் செயற்பட்டுள்ள போதிலும் அது முடியவில்லை.
அவரும் அமெரிக்கப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இந்தப் பெண் தவிர லேடனின் மகன் ஒருவர் உட்பட மூவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
பராக் ஒபாமா, உப ஜனாதிபதி ஜோய் பிடன், வெளியுறவுச் செயலாளர் ஹிலரி கிளின்டன் உட்பட முக்கியப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தக் காட்சிகளை வெள்ளை மாளிகையில் இருந்தவாரு நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
முதல் தரப் பயங்கரவாதத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதன் மூலம் உலகம் பாதுகாப்பான ஒரு இடமாக மாறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும் பயங்கரவாதத்தின் ஒரு அத்தியாயம் மட்டுமே முடிவுக்கு வந்துள்ளதாகவும், தமது தலைவர் கொல்லப்பட்டமைக்காக நிச்சயம் பயங்கரவாதிகள் பழிவாங்கக் கூடும் என்றும் அமெரிக்கப் புலனாய்வுப் பணிப்பாளர் உட்பட இராணுவ ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் பின்லேடன் என்பதை அவரின் பல மனைவியருள் ஒருவரும் ஊர்ஜிதம் செய்துள்ளார்.

Primary Perception, Plants wired to polygraph machine, Consciousness of ...

கோழியின் கொழுப்பில் விமான எரிபொருளை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை


தாவரங்களுக்கும் நுண்ணறிவு உண்டு என்று பல ஆய்வுகள் மூலம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.அமெரிக்காவில் கிளி பாக்ஸ்டர் என்பவர் தற்செயலாக தாவரங்களின் மர்மங்களை அறிந்து கொள்ள நேரிட்டது. ஒருசமயம் அவர் காவல் துறையினருக்கும், பாதுகாப்புப் பணிபுரிபவர்களுக்கும் பொய்களைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் குறித்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு விந்தை நிகழ்வை அவர் கண்டார். பொய்யைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் "பாலி கிராப்" என்னும் கருவி இணைக்கப்பட்ட தாவரத்தைப் பற்றி பாக்ஸ்டர் எண்ணியபோதெல்லாம் அந்தக் கருவியில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. அவருடைய எண்ணங்களை தாவரம் பெற்றுக் கொண்டு தனது உணர்ச்சிகளைக் கருவிக்கு அனுப்பியிருக்கிறது.
அவருடைய எண்ணங்களைத் தாவரம் நன்கு புரிந்து கொண்டு கருவி மூலமே சரியான முறையில் விளக்கமும் அளிக்க ஆரம்பித்தது. தாவரத்தின் உணர்ச்சியை அறிவதற்கு பாக்ஸ்டர் மற்றொரு சோதனையை நடத்தினார். அந்தத் தாவரத்தைக் கொளுத்தி விடலாம் என்று அவர் நினைத்த போதெல்லாம் கருவியில் உள்ள ஊசி நடுங்க ஆரம்பித்தது.
தாவரம் தனது பயத்தைத் தெரிவிப்பது போலத் தெரியும் அதன் உணர்ச்சியைக் கருவியின் ஊசியிலே காண முடிந்தது. ஆகவே எண்ணங்களைக் கண்டுபிடிக்கும் திறன் தாவரத்திடம் அமைந்திருந்ததை பாக்ஸ்டர் கண்டுபிடித்தார்.

London Sky: What is this? Is this an UFO? Or a cloud changing shape?

Hier das heftige Feuergefecht um "Osama Bin Laden"

Is Osama Bin laden really Killed - Image is Photoshop Fraud

Shirdi Sai Baba Devotees Experiences - Part-1

பொன்மொழிகள்

திருமணத்திற்கு முன் காதல்...
  • நம்பிக்கை இழக்காதே. அவநம்பிக்கையானது அறிவு, ஒழுக்கம் ஆகியவைகளுக்கு வீழ்ச்சியாகும். - இக்பால்
  • துன்பம் இல்லாமல் வெற்றி இல்லை. முயற்சி இல்லாமல் பெருமை இல்லை. -பென்
  • அறிவோடு படிப்பவனே சிறந்த மேற்கோள்களைக் காட்டமுடியும். - லூயிசாமேரி
  • பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடமையின் முழு அடையாளம். - ஸிஸரோ
  • அஞ்சாதவனும், ஆசைப்படாதவனும் உண்மையான உயர்ந்த மனிதன். -ஹிஜிஸ்
  • அறிவுரை, தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் மருந்து போன்றது. - ஜோஷ்பிஸ்லிங்ஸ்
  • கவலையுடன் விருந்து உண்பதைக் காட்டிலும், ஒரு கவளம் அமைதியாக உண்பதே மேல். -ஈசாப்
  • தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாயில்களும் திறந்து வரவேற்பு அளிக்கும். -எமர்சன்
  • கடுமையான உழைப்பைத் தவிர, வெற்றிக்கு வேறு ரகசியம் ஏதுமில்லை. - டர்னர்
  • அறிவு காட்டும் வழியில் மட்டும் செல்லாதே. ஆன்மா கூறும் வழியில் செல். - டால்ஸ்டாய்
  • சோம்பேறித்தனத்தில் மூழ்கியிருக்கும் ஒருவனிடம் எப்போதும் ஏக்கம் குடி கொண்டிருக்கும். -கார்லைல்
  • மனிதனிடமுள்ள வற்றாத ஆசைகள்தாம் அவன் வாழவேண்டுமென வற்புறுத்துகின்றன. -காங்கிரி
  • அறியாமை ஒருவனுக்கு ஆசிர்வாதமானால், புத்திசாலியாய் இருப்பவன் முட்டாள் என்றாகிவிடுமே. -தாமஸ்கிரே
  • உண்மைகளைப் போற்றுங்கள். தவறுகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள் - வால்ட்டேயர்
  • தாமரையிலையிலே உருண்டோடும் பனித்துளி போன்றது மனித வாழ்க்கை. -தாகூர்
  • திருமணத்திற்கு முன் காதல் என்பது முடிவு பெறாத நூலுக்கு மிகச் சிறிய முகவுரை போன்றது. -தாமஸ்புல்லர்
  • ஏழையை உலகம் மதிப்பதில்லை. பணக்காரனைக் கண்டு பொறாமைப்படுகிறது. -ஹென்றி போர்டு
  • வலி உடலை வதைக்கிறது. விலை மனிதனை வதைக்கிறது. -பெஞ்சமின் பிராங்க்ளின்
  • சிறிய விசயங்களில் பொறுமை காட்டாவிட்டால், பெரிய காரியங்கள் கெட்டுப் போகும். - கன்பூஷியஸ்
  • ஆசையின் தாகம் முழுக்கத் தீர்வதுமில்லை. ஒருபோதும் தணிவதுமில்லை. -நிசரோ
  • வாழத்துடிக்கும் ஆசை முதியோர்க்கு இருப்பது போல் வேறு யாருக்கும் இருக்காது. -மேரிஸ்டோபீலப்
  • வறட்டுப் பிடிவாதம் உள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்டநஷ்டங்களே ஆசிரியர்கள் -ஷேக்ஸ்பியர்
  • நண்பனைப் பாராட்ட வேண்டியிருந்தால் பலர் முன்னிலையில் பாராட்டுங்கள். -நேரு
  • தவறு ஒன்றுதான் அரசாங்கத் தயவை வேண்டும். உண்மைக்கு அது வேண்டியதில்லை. -தாமஸ் ஜெபாஸன்
  • முயற்சியினால் கிடைக்கும் பயனே இன்பங்கள் அனைத்திலும் மிக இன்பமானது. -லாவனார்கூஸ்

வாழ்க்கை என்பது என்ன?

நாம் நம் செயல்களில் வாழ்கிறோம், ஆண்டுகளில் அன்று;
சிந்தனைகளில் வாழ்கிறோம்,மூச்சு விடுவதில் அன்று;
உணர்ச்சிகளில் வாழ்கிறோம், கடிகாரம் காட்டும் மணிகளில் அன்று;
நேரத்தை நாம் இதயத் துடிப்புகளைக் கொண்டு கணக்கிட வேண்டும்.
எவன் மிக அதிகமாகச் சிந்தனை செய்கிறானோ,  தலை சிறந்த செயல்களைச் செய்கிறானோ
அவனே அதிகமாக வாழ்பவனாவான்.

 

தோட்டக்காரன் தோட்டத்திற்குள் வந்ததும் மொட்டுக்கள் தமக்குள்ளேயே பின்வருமாறு
பேசிக்கொள்கின்றன."இன்று மலர்ந்த மலர்களைக் கொய்துவிட்டான்.நாளை
நமது முறை வரும்,அப்படியே நம்மையும் கொய்துவிடுவான்.மனித வாழ்க்கையும் இப்படியே.
 
மனிதனுடைய வாழ்க்கை செடியிலிருக்கும் இலைகளைப் போன்றதுதான்.

நாம் எப்போதும் வாழ்வதில்லை.வாழவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
 
கொஞ்சம் வேலை...கொஞ்சம் உறக்கம்... கொஞ்சம் காதல்...எல்லாம் முடிந்துவிடுகின்றன.

வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்தது அல்ல. நாம்தான் சிக்கல் நிறைந்தவர்களாக இருந்து வருகிறோம்.
 
வாழ்வில் வெகு முக்கியமாக கற்றுக் கொள்ளவேண்டிய விஷயம் எவ்வாறு வாழ்வது என்பதே.
 
நீயும் வாழ்;மற்றவர்களையும் வாழவிடு.ஏனெனில் பரஸ்பர
பொறுமையும் அனுசரிப்புமே வாழ்க்கையின் விதியாகும்.திருக்குர் ஆன்,பைபிள்,ஜெந்தவஸ்தா,
கீதை முதலானவை அனைத்திலிருந்தும் நான் கற்றுக் கொண்ட பாடம் இதுவேயாகும்.
 
பிறருக்காக வாழுகின்ற வாழ்க்கைதான் மிகச் சிறந்த வாழ்க்கை.

தனக்கென்று வாழ்பவன் விலங்கு. பாதி தனக்காகவும்,பாதி பிறருக்காகவும் வாழ்பவன் மனிதன்.
பிறருக்காகவே வாழ்பவன் தேவன்.
 
வாழ்க்கை என்பது அதி அற்புதமானது.நான் வாழ்ந்திருக்கிறேன்.

வாழ்க்கை என்பது சுமையல்ல;அது ஒரு வரம்.
ஏ.பி. ஜே. அப்துல் கலாம்

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2011 மே மாதம் முதல் 2012 நவம்பர் வரை



வரும்  மே மாதம் 16 ஆம் நாள் -  நவ கிரகங்களில் , அதிக வலிமை வாய்ந்த கிரகங்களாக கருதப்படும் - ராகு , கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. ராகு பகவான் - தனுசு ராசியிலிருந்து - விருச்சிகத்திற்கும், கேது பகவான் - மிதுன ராசியில் இருந்து - ரிஷபத்திற்கும் , பெயர்ச்சி ஆகிறார்கள். 

நமது ஜோதிட வாசகர்கள் அனைவரும் , தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். ராசி பலன்களை , மேலோட்டமாக படித்து விட்டு எந்த ஒரு முடிவுக்கும் வந்து விடாதீர்கள். நாள் இதழ்களிலும், இணையத்திலும், வரும் பலன்கள் அனைத்தும் - பொதுப்பலன்களே. 

 இது வரை , ஜென்ம ராகு , கேது இருந்த ராசிகளான - மிதுன , தனுசு ராசிக் காரர்களுக்கு - இது ஒரு பெரிய தலை வலி நீங்கிய -மன நிறைவை தரும். ஆனால், ரிஷப , விருச்சிக ராசிகளுக்கு - தலை குடைச்சல் ஆரம்பம் ஆகும். ஏற்கனவே சனி பார்வையிலும் விருச்சிக ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். 

பொதுவாக , 1 - 5 - 9 வீடுகளில் உள்ள கிரகங்களுக்கு - நன்மை பயக்க வைக்கும் இயல்பு இருந்தாலும், இந்த இரண்டு  கிரகங்களும், அள்ளிக் கொடுத்து , பின்பு  தலையை தட்டுவதில் - தயை , தாட்சண்யம் பார்க்காத கிரகங்கள் . எனவே , நாம் அடக்க ஒடுக்கமாக , முறைப்படி வழிபாடு செய்து வந்தால் - ராகு , ராஜ யோகம் அளிப்பார். நமது முந்தைய கட்டுரைகளில் - ராகு பகவான் இயல்புகள் பற்றி நீங்கள் படித்து உணர்ந்து இருப்பீர்கள். 

முதலில் , இவர்கள் இந்த வீடுகளில் இருந்தால் - நல்லது தானா ?  என்ற கேள்வி உங்களுக்கு வரும்.. பணம் அள்ளிக் கொடுத்தால் மட்டும் போதுமா ..? குணம்..?! இவர்கள் இருக்கும் வீடுகளுக்கு சேதாரம் அதிகம்  தான்.

கடகம் ,  விருச்சிகம் , மீனம் ராசிக் காரர்கள் - இந்த ஒன்றரை வருட வாய்ப்பை முறைப்படி பயன் படுத்தினால் - நீங்கள் - கோடீஸ்வரராவது திண்ணம். ஆட்டம் , போட்டு - துள்ளல் கூட இருந்தால் - மிக உயரத்தில் இருந்து கீழே விழ வாய்ப்பு அதிகம். 

அதனால் , ராகு - கேது உங்கள் ராசிக்கு இருக்கும் இடங்களைப் பொறுத்து -  ஜனன ஜாதகத்தில் - இரண்டு கிரகங்களும் அமர்ந்து இருக்கும் நிலை அறிந்து - பலன்கள் , எப்படி இருக்கும் என்று உணர்ந்து கொள்ளுங்கள். இந்த கட்டுரை படித்து முடிக்கும்போது , நமது ஜோதிட வாசகர்கள் - நீங்களே பலன் சொல்லக் கூடிய அளவுக்கு - உங்களுக்கு தேவையான தகவல்கள் , இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு , சந்தேகம் எனில் - கேட்டுக் கொள்ளுங்கள்..

விருச்சிக, ரிஷப ராசிக் காரர்களும் , பிறக்கும் போது - யார் , யாருக்கெல்லாம் - ஜனன ஜாதகத்தில் - ராகு , கேது - ரிஷப , விருச்சிகத்தில் அமரப் பெற்றவர்கள் அனைவரும் - முறைப்படி வழிபாடு செய்வது அவசியம்.

ராகு கால துர்கை வழிபாடும், விநாயகர் வழிபாடும் - உங்களை அவமான , அசிங்கங்களிலிருந்து கவசம் போல் பாது காக்கும். 

மொத்தத்தில் - இந்த ராகு , கேது பெயர்ச்சி - ஆறு ராசிக் காரர்களுக்கு - 
ஏதோ ஒரு விதத்தில் - பாதிப்பு ஏற்படுத்தும். வளர்ச்சி நிச்சயம் இருக்கும். ஆனால் அதை தக்க வைத்துக் கொள்வது - உங்கள் வழிபாடு மட்டுமே  . இல்லையேல்,  இப்போது இருக்கும்  நிலையை விட கொஞ்சம் மேலேறி - சறுக்க  வாய்ப்பு அதிகம். 
ரிஷபம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனம் - இந்த ஆறு ராசிகளும் - இந்த பெயர்ச்சியால் - சலனப் படும் ராசிகள். மீதி ஆறு ராசிக் காரர்களும், பெரிய அளவில் - மாற்றம் ஏற்படாது. இந்த பெயர்ச்சியால்  அலட்டிக் கொள்ள தேவை இல்லை .

சரி, இப்போது நமது வாசகர்கள் அனைவருக்கும் - ராகு, கேது பற்றிய மேலும் தகவல்களை அறிந்து கொள்ள கீழே கொடுத்துள்ளோம்.

நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள்.

இது விதி . ஆனால் என் அனுபவத்தில் - கேது ,  ராகு , செவ்வாய் , சனி , குரு , சூரியன், சுக்கிரன் , புதன், சந்திரன் ---- என்ற வரிசையிலே கிரகங்கள் - பலன் அளிப்பதை நான் உணர்கிறேன். தீய பலன்கள் அளிப்பதில் , இதுதான் வரிசை என்பது எனது அபிப்பிராயம். அதாவது கேது தசை இருப்பதிலேயே கொடுமையாக இருக்கிறது.. அதன் பின் ராகு .. பின் செவ்வாய்.. இப்படி... 
அதே நேரத்தில் - இவை நல்ல நிலைமையில் , அள்ளிக் கொடுக்கும் நிலையில் இருந்தால் ... பலன்கள் அபரிமிதமாக கிடைக்கின்றன.

ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசை யில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.  

சூரிய- சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (Anti Clock wise) நகரும். அதனால்தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தம ராசியான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும்.

மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப் பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் "வில் பவர்' -ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும்.

ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள். ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார் கள். 

ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம். அதேசமயம் 6-ல் ராகுவோ கேதுவோ வந்தால், 6-ஆம் இடம் என்பது ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம் என்பதால் அவற்றைக் கெடுக்கும். அதாவது எதிரி, விவகாரம், வைத்தியச் செலவு, கடன் ஆகியவற்றைக் கெடுப்பார். அதனால் ஜாதகருக்கு நன்மைகள் ஏற்படும். 

எனவே ராகு- கேதுவுக்கு 3, 6, 8, 11, 12-ஆம் இடங்கள் நற்பலன்களைத் தரக்கூடிய இடங்கள் என்றும்; மற்ற இடங்கள் அனுகூலம் இல்லை என்றும் கூறலாம். ராகுவும் கேதுவும் தாம் நின்ற ராசியில் இருந்து 3-ஆம் இடத்தையும் 7-ஆம் இடத்தையும் 11-ஆம் இடத்தையும் பார்க்கக்கூடும். பொதுவாக எல்லா கிரகங்களும் 7-ஆம் ராசியை (180- ஆவது டிகிரி) பார்க்கும். குருவுக்கு 5, 9-ஆம் பார்வையும் சனிக்கு 3, 10-ஆம் பார்வையும் செவ்வாய்க்கு 4, 8-ஆம் பார்வையும் விசேஷப் பார்வை என்பது போல, ராகுவுக்கும் கேதுவுக்கும் 3, 11-ஆம் பார்வை விசேஷப் பார்வை.

ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார் கோவிலும் ஆகும். ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ்வரம், பரமக்குடி அருகில் நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று பல ஸ்தலங்கள் உண்டு. 

கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருவானைக்காவல், பழூர் போன்ற ஸ்தலங்கள் உண்டு. ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளி யையும் துர்க்கையையும், கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.

புராணத்தில் ராகு- கேது

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்கள்.

திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்துகொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள். மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார் கள். அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்ப தாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சர்வேஸ்வரன் அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும் பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார். அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக்கூடாது என்பதற்காக, கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில் விஷம் தங்கிவிட்டது. அதனால் அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது. அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு. நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம் உண்டு.

பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும் தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.

அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டு மென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களை யும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.

யார் இந்த சொர்ணபானு? சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.

துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம். இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது பகவான் என்று பெயர் பெற்றார். மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.

இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர். இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப்படவில்லை.

இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனவோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்து விளங்குகின்றனவோ அந்தந்த ராசிநாதன் அல்லது கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் கூற வேண்டும். உதாரணமாக, ராகு மீனத்தில் நின்றிருப்பின் குருவின் பலனையே வழங்கும். கும்ப ராசியிலாவது அல்லது சனி கிரகத்துட னாவது சேர்ந்திருக்கும்போது சனி கிரகம் வழங்கக்கூடிய பலன் களையே வழங்குமென்று கூற வேண்டும். சனியைப் போல் ராகு பலன் தரும் என்றும்; செவ்வாயைப் போல் கேது பலன் தரும் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. அனுபவத்தில் இதுவும் ஓரளவுக்கு உண்மை யென்றே தோன்றுகிறது. சனி வழங்கக்கூடிய பலன்களை ராகுவும் செவ்வாய் வழங்க வேண்டிய பலன்களைக் கேதுவும் ஜாதகருக்கு அளிக்கின்றன. இது அனுபவ உண்மை.

ராகு- மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் வலுப்பெறுகிறது என்று சில நூல்கள் கூறுகின்றன. கேதுவுக்கென பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. இந்த இரு கோள் களுக்கும் இடையே ஆறு ராசிகள் அல்லது 180 பாகை வித்தியாசம் இருப்பதால், ராகுவுக்குக் கூறப்பட்ட ராசிகளுக்கு நேர் எதிர் ராசிகளாகிய துலாம், விருச்சிகம் ஆகியவற்றிலும் மற்றும் கூறப்படாத ராசிகளிலும் கேதுவுக்கு வலு அதிகம் என்று கொள்ளலாம். அவ்வாறே மத்திய ரேகைக்கு வட பாகத்தில் உள்ள ராசிகளாகிய மகரம் முதல் மிதுனம் வரை ராகு பலமுள்ளதாகவும்; தென் பாகத்தில் உள்ள கடகம் முதல் தனுசு வரையில் உள்ள ஆறு ராசிகளில் கேது பலமுடையதாகவும் இருக்கும் என்பதும் ஜோதிட ஆராய்ச்சி.



ஜோதிடத்தில் ராகு- கேது தன்மை

கிரகத்தன்மை ராகு கேது

1. நிறம் கருப்பு சிவப்பு

2. குணம் குரூரம் குரூரம்

3. மலர் மந்தாரை செவ்வல்லி

4. ரத்தினம் கோமேதகம் வைடூரியம்

5. சமித்து அறுகு தர்ப்பை

6. தேசம் பர்ப்பரா தேசம் அந்தர்வேதி

7. தேவதை பத்ரகாளி, துர்க்கை இந்திரன்,

சித்திரகுப்தன், விநாயகர்

8. ப்ரத்தியதி தேவதை ஸர்பம் நான்முகன்

9. திசை தென்மேற்கு வடமேற்கு

10. வடிவம் முச்சில் (முறம்) கொடி வடிவம்

11. வாகனம் ஆடு சிங்கம்

12. தானியம் உளுந்து கொள்ளு

13. உலோகம் கருங்கல் துருக்கல்

14. காலம் ராகுகாலம் எமகண்டம்

15. கிழமை சனிக்கிழமை செவ்வாய்க்கிழமை

16. பிணி பித்தம் பித்தம்

17. சுவை புளிப்பு புளிப்பு

18. நட்பு கிரகங்கள் சனி, சுக்கிரன் சனி, சுக்கிரன்

19. பகை கிரகங்கள் சூரியன், சந்திரன், சூரியன், சந்திரன்,

செவ்வாய் செவ்வாய்

20. சம கிரகங்கள் புதன், குரு புதன், குரு

21 காரகம் பிதாமகன் (பாட்டனார்) மாதாமகி(பாட்டி)

22. தேக உறுப்பு முழங்கால் உள்ளங்கால்

23. நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, அசுவதி, மகம், மூலம் சதயம்

24. தசை வருடம் 18 ஆண்டுகள் 7 ஆண்டுகள்

25. மனைவி சிம்ஹிகை சித்ரலேகா

26. உப கிரகம் வியதீபாதன் தூமகேது

27. உருவம் அசுரத்தலை, ஐந்து பாம்புத் தலை,

பாம்பு உடல் அசுர உடல்

ஸ்தோத்திரங்கள்

ராகு ஸ்தோத்திரம்

அர்த்தகாயம் மஹாவீர்யம்

சந்த்ராதித்ய விமர்தனம்

ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம்

தம் ராகும் ப்ரணமாம் யஹம்

ராகு காயத்ரி

ஓம் நகத்வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ ராகு ப்ரசோதயாத்


ராகு துதி

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்

போகும் அக்காலம் உந்தன் புனர்ப்பினால் சிரமே யற்றுப்

பாகு சேர் மொழியாள் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற

ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!



கேது ஸ்தோத்திரம்

பலாச புஸ்ப ஸங்காசம்

தாரகா கிரஹ மஸ்தகம்

ரௌத்ரம் ரௌத்ராத் மகம்

கோரம் தம் கேதும் ப்ரணமாம் யஹம்
 


கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேது ப்ரசோதயாத்


கேது துதி

பொன்னையன் உரத்திற் கொண்டோன் புலவர் தம் பொருட்டால் ஆழி

தன்னையே கடைந்து முன்னம் தன்னமுது அளிக்கலுற்ற

பின்னை நின் கரவாலுண்ட பெட்பினிற் சிரம் பெற்றுய்ந்தாய்

என்னையாள் கேது தேவே எம்மை இனி ரட்சிப்பாயே!

Read more: http://www.livingextra.com/2011/05/2011-2012.html#ixzz1LLpC51no

முட்டையை அவிக்கும் அளவிற்கு மொபைல் போனில் கதிர் வீச்சு வீரியமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முட்டையை அவிக்கும் அளவிற்கு மொபைல் போனில் கதிர் வீச்சு வீரியமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மொபைல் மூலம் முட்டைகளை அவித்துக் காட்டி இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆனால் அதே நேரத்தில் அவை எந்த அளவு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. மொபைல் போன்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு எந்த அளவுக்கு வீரியமானவை என்பதை இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சோதனை மூலம் செய்து காட்டியுள்ளனர். மொபைல் போன்களிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சு, முட்டைகளையே வேக வைக்க கூடியது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

இதற்காக அவர்கள் ஒரு சிறிய மைக்ரோவேவ் கருவியை உருவாக்கி உள்ளனர். ஒரு மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனை அழைத்து அவற்றை பேசக்கூடிய நிலையில் வைத்தனர். அதே நேரத்தில் அவற்றுடன் ஒரு டேப் ரிகார்டரை இணைத்து இரு போன்களுக்கு இடையே உரையாடல் நடப்பதாக காண்பித்து இரு போன்களும் தொடர்ந்து பேசும் நிலையில் இருக்கச் செய்தனர். 15 நிமிடத்தில் போன்களுடன் இணைக்கப்பட்டிருந்த மைக்ரோவேவ் கருவியில் வைக்கப்பட்டிருந்த முட்டை சூடேற ஆரம்பித்தது. 40வது நிமிடத்தில் முட்டையின் வெப்பம் கடுமையாகியது. 65வது நிமிடத்தில் முட்டை முழுவதுமாக வெந்து காணப்பட்டது.

இந்த அளவுக்கு நீண்ட நேரம் எவரும் பேச வாய்ப்பு இல்லை என்றாலும் அவ்வாறு பேசினால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதையே இந்த சோதனை விளக்குகிறது. காதின் அருகில் இருக்கும் மூளைப் பகுதியை இந்த கதிர் வீச்சு எந்த அளவு பாதிக்கும் என்பதையும் இதன் மூலம் உணரலாம். 2 நிமிடம் தொடர்ந்து மொபைல் போனில் பேசினாலே அதிலிருந்து வரும் கதிர்வீச்சு, மூளையைப் பாதுகாக்கும் பகுதியில் ஊடுருவி விடும் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

எனவே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிரியமானவர்களிடம் தொடர்ந்து பேசும் மொபைல் பிரியர்கள் சற்று யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முடிந்தவரை சாதாரண போன்களை பயன்படுத்த வேண்டும் மொபைல் போனைத் தவிர்க்க முடியாதவர்கள், இயர் போனைப் பயன்படுத்துவது சற்று பாதுகாப்பானதாக இருக்கும் என்பதே இவர்களது அறிவுரை.

Tuesday, May 3, 2011

எது வேண்டும் சொல் மனமே - 90/10 கொள்கை

நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும் .
அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது?
உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை.
எப்படி?
மேற்கொண்டு படியுங்கள் .

உண்மையாகவே நமக்கு நடக்கும் சம்பவங்களில் 10% நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக:
ஓடிக்கொண்டிருக்கும் நம் வாகனம் திடீரெனப் பழுதாகி நின்றுவிடாமலிருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
தாமதமாகச் சென்றடையும் விமானத்தாலும், ரயிலாலும், பேருந்தாலும் நம் பயணத்திட்டங்கள் அனைத்துமே சில நேரங்களில் தாறுமாறாகக் குழம்பி விடுகின்றன. அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா ?
நாம் ஓட்டிச் செல்லும் வாகனத்தைச் சட்டத்தை மீறி முந்திச் செல்லுகிறார் மற்றொரு ஓட்டுனர். அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
இந்த 10% இல் நமக்கு எந்த ஆளுமையும் கிடையாது . இதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது . இது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.
மீதியிருக்கும் 90% முற்றிலும் மாறுபட்டது . அந்த 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம்.

எப்படி?
நடக்கும் சம்பவத்தை நாம் எதிர்கொள்ளும் விதத்தில், அந்த மீதி 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம் .
டிராபிக் சிக்னலின் சிவப்பு விளக்கை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதனை எதிர் கொள்ளும் விதத்தை நம்மால் மாற்றியமைக்க இயலும்.
இதன் மூலம் நீங்கள் மற்றவர்களால் முட்டாளாக்கப்படுவதைத் தவிர்த்து விடவும் முடியும்.
சம்பவங்களை எதிர்கொள்ளும் விதத்தை நம்மால் தீர்மானிக்க முடியும்; கட்டுப்படுத்த முடியும்.

இதோ ஓர் உதாரணம்:
காலைச் சிற்றுண்டியைக் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் அருமை மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேனீர் உங்கள் மீது கொட்ட, அலுவலகம் செல்ல அணிந்திருந்த உங்களது சட்டை பாழ். நடந்த இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த ஆளுமையும் இல்லை. இப்படி நடக்காமலிருக்க உங்களால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிக்கப் போவது, இதனை எதிர் கொள்ள நீங்கள் எடுக்கப் போகும் முடிவுதான்.
நீங்கள் சபிப்பீர்கள். தேனீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக அருமை மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்பீர்கள்/ கண்டிப்பீர்கள்...
மகள் அழத் தொடங்குவாள்....அடுத்ததாக, தேனீக் கோப்பையை மேஜையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் கோபம் மனைவி மீது திரும்பும் .
அதனைத் தொடர்ந்து மனவியுடன் ஒரு சிறிய வாய்ச் சண்டை. கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு சட்டையை அணிந்து வருகிறீர்கள்.

மாடியிலிருந்து கீழே வந்ததும் நீங்கள் காணும் காட்சி:
உங்கள் அருமை மகள் அழுது கொண்டே சிற்றுண்டியை முடித்து, பள்ளி செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். சற்று முன்னர் நடந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள் உங்கள் மகள் . மனைவியும் உடனடியாக அவருடைய அலுவலகத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். இன்று மகளைப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்கள் தலையில். காரில் மகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு விரைகிறீர்கள். மகளைப் பள்ளியில் கொண்டு சேர்த்த பின்னர்தான் நீங்கள் உங்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியும் .
அலுவலகத்திற்குத் தாமதமாகி விட்டதால் சாலையின் வேக விதியை மீறி விரைவாகச் செல்கிறீர்கள்.
பதினைந்து நிமிட தாமதம்; அதற்கும் மேல் சாலையின் வேக விதியை மீறியதற்காக ரூபாய் 300 அபராதம் .
அப்பாடா என்று மகளைப் பள்ளியில் இறக்கிவிட, " போய் வருகிறேன்" என்று கூடச் சொல்லாமல் அவள் பள்ளி வளாகத்திற்குள் ஓடிவிட்டாள் . அதிலொரு சிறிய மனச்சஞ்சலம் உங்களுக்கு .

இருபது நிமிட தாமதத்திற்குப் பின் அலுவலகத்தில் அடியெடுத்து வைக்கும் போதுதான் நினைவு வருகிறது, " ஆகா! அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டோமே " என்று. உங்களின் அன்றைய தினத்தின் தொடக்கமே சற்றுக் கடுமையானதாகிவிட்டது. மேலும் அது அவ்வாறே தொடர்கிறது. எப்போது வீடு சென்றடைவோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது .
மாலையில் வீடு வந்தடைந்தவுடன் மனைவி, மகளின் நெருக்கத்தில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.

ஏன்?

காரணம், காலையில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான்.
இந்த நாள் இப்படி இனிமையில்லாத நாளானதன் காரணம்தான் என்ன?
அ) அந்த ஒரு கோப்பைத் தேனீரா ?
ஆ) தங்களின் அருமை மகளா?
இ) அபராதம் விதித்த அந்தப் போக்குவரத்துக் காவலரா?
ஈ) நீங்கள்தான் காரணமா ?

சரியான விடை: " ஈ". ஆமாம் நீங்களேதான் ஐயா !

அந்தத் தேனீர் சிந்தியதற்கு நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாளி அல்ல. அது உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. ஆனால் தேனீர் சிந்திய அடுத்த ஐந்து வினாடிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம் . நீங்கள் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் ?
இதோ இப்படி:
தேனீர் உங்கள் மீது கொட்டுகிறது.
அருமை மகள் அழப் போகிறாள்.
நீங்கள் மிக அன்பான குரலில், " பரவாயில்லை, அடுத்த முறை கவனமாக நடந்துகொள் அருமை மகளே !" என்று அவளைச் சமாதானப் படுத்துகிறீர்கள். உங்கள் மேல் சிந்திய தேனீரை முகம் கோணாமல் புன்முறுவலுடன் ஒரு டவலால் துடைத்தபடி மாடிக்கு விரைகிறீர்கள். மாடியிலிருந்து புதிய சட்டையையும் அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு நிதானமாக இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள் அங்கே, உங்களை நோக்கிக் கையசைத்து விடை பெற்றவாறே அருமை மகள் பள்ளிப் பேருந்தில் ஏறுவதைக் கண்டு மகிழ்கிறீர்கள் !

வழக்கத்தை விட ஐந்து நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் முகமன்களைப் பரிமாறி அன்றைய வேலைகளைத் திட்டமிடுகிறீர்கள் . நீங்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரிவதைக் கண்டு மேலதிகாரி பாராட்டுகிறார். மேலதிகாரியின் பாராட்டு கிடைத்த சந்தோஷத்தோடு மாலை வீடு வருகின்றீர்கள். மனைவியும் மகளும் வாசலில் மகிழ்ச்சியுடன் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைக் காண்கின்றீர்கள் . உங்கள் மனதில் மேலும் சந்தோஷம் களைகட்டுகின்றது!

வித்தியாசங்களைப் பார்த்தீர்களா?

இரண்டு விதமான தொடர் நிகழ்ச்சிகள்! இரண்டும் ஒரே மாதிரித் தொடங்கின. வெவ்வேறு விதமாக முடிந்தன .

ஏன்?

காரணம், நிகழ்வுகளை நீங்கள் எதிர்கொண்ட விதம்தான்.
நடந்து முடிந்த சம்பவத்தின் முதல் 10% நிகழ்வினைக் கட்டுப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ உங்களால் முடியாது .
ஆனால் அதனைத் தொடர்ந்த மீதி 90% நிகழ்வினைத் தீர்மானித்தது , நீங்கள்தான். அதாவது, நீங்கள் அந்த முதல் 10% சம்பவத்தை எதிர் கொண்ட விதம்தான். இந்த 90/10 கொள்கையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்:

யாராவது உங்களைத் தாழ்வாகப் பேசினால் ஈரத்தை முழுதும் உள்வாங்கும் பஞ்சுபோல ஆகி விடாதீர்கள் .
அவர்களின் வார்த்தைகள் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓடட்டும். உங்களுக்கு எதிரான எந்த வார்த்தையும் உங்களைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சரியானபடி அதனை எதிர் கொண்டால் உங்களின் நாள் இனிய நாளாக அமையும்.
தவறான எதிர்கொள்ளலால் நீங்கள், நல்ல ஒரு நண்பரை இழக்கலாம் ; உங்களின் வேலையை இழக்கலாம் ; மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம்.

உங்கள் வாகனத்தை ஒருவர், சாலை விதிகளை மீறி தவறான ரீதியில் முந்திச் சென்றால் நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?
பொறுமையை இழந்து கடுகடுப்பாகி விடுவீர்களா?
உங்கள் வாகனத்தின் ஸ்டீரிங்கை கோபத்தால் குத்துவீர்களா? ( ஒரு நண்பர் குத்தியதில் ஸ்டீரிங் கழன்று விட்டது!) திட்டித் தீர்ப்பீர்களா ?
உங்களின் ரத்த அழுத்தம் எகிறுகிறதா?
முந்திச் சென்றவரின் வாகனத்தின் மீது மோத முயல்வீர்களா?
பத்து வினாடி தாமதமாகச் சென்று சேர்ந்தால் யாராவது உங்களைக் குற்றம் கூறப் போகிறார்களா?
உங்களின் நிதானமான வாகன ஓட்டத்தை மற்றவர்கள் கெடுக்க ஏன் அனுமதிக்க வேண்டும்?.

90/10 கொள்கையை நினை விற் கொண்டு, அது பற்றிய சஞ்சலத்திலிருந்து விடுபடுங்கள்

உங்களை வேலையிலிருந்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அதனால் ஏன் சஞ்சலமடைய வேண்டும்? ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும்?.
மன வேதனைக்காகச் செலவிடும் சக்தியை வேலை தேடுவதற்காகச் செலவிடுங்கள் . கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .

விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது .
அதன் காரணமாக அன்றைக்குச் செயல்படுத்த வகுத்திருந்த உங்கள் திட்டங்களெல்லாம் பாழாகப் போய் விடுகின்றன.
அதற்காக விமானப் பணிப்பெண் மீது ஏன் எரிந்து விழ வேண்டும்?. விமானம் புறப்படுவதற்கும் பணிப்பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அந்தத் தாமத நேரத்தைப் புத்தகம் படிப்பதிலோ, அருகிலிருக்கும் பயணியுடன் நல்ல கருத்துகளைப் பரிமாறுவதிலோ செலவிடுங்கள்.
நாமே ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.

90/10 கொள்கை பற்றி இப்போது தெளிவாகப் புரிந்திருக்குமே!
இந்தக் கொள்கைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பாருங்கள்.
அதன் பின் விளைவுகள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வியப்பாக இருக்கும்!
இதனைப் பயன்படுத்துவதால் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை.
90/10 கொள்கையின் விளைவுகள் வியப்பானவை !

மிகச் சிலர்தான் இக்கொள்கை பற்றி அறிந்து, அதனை உபயோகித்துப் பார்க்கிறார்கள்.
கோடிக்கணக்கானோர் தேவையில்லாத மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும், பிரச்சனைகளாலும், மனவேதனைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
நாம் அனைவரும் 90/10 கொள்கையைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும் .
அது உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும்.
நம் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ்வோமாக!

ஆங்கில மூலம்: ஸ்டீபன் கோவே.
தமிழாக்கம் யார் என்று தெரியவில்லை,
 தமிழ் தாயகத்திற்காக
ஜெ. ஸ்டாலின் 

Creative Quotations from William Shakespeare for Apr 23

The Shakespeare Enigma

RSC : Biography of William Shakespeare

Shakespeare sketch - A Small Rewrite

Shakespeare's Romeo and Juliet (1954) part 13 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 12 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 10 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 9 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 8 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 7 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 6 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 5 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 4 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 3 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 2 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 1 of 13

பொன்மொழிகள்.

வருங்காலத்தில் பெரிய மனிதனாக...
ஏற்ற குறிக்கோள் எது?
ஒவ்வொருவனும் தான் பெரிய கல்விமானாகவும், பெரும் புகழ் பெற்ற சீமானாகவும் விளங்க வேண்டுமென்று விரும்புவது இயற்கை. ஆனால், அவ்விதம் விரும்புகிறானே தவிர, அதற்கு வேண்டிய வழிகளைத் தேடப் பாடுபடுவதே கிடையாது. அவ்வாறு விரும்புகின்றவன் வாழ்க்கையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்க, எவரும் அறியத்தக்கனவும், மேற்கொள்ளத்தக்கனவுமாகிய கொள்கைகள் சில உள்ளன என்பதையும் உணர வேண்டும். தன் அறிவு, ஆற்றல்களுக்கும் ஏற்ற ஒரு குறிக்கோளை ஒவ்வொருவனும் ஆராய்ந்து எடுத்தல் வேண்டும்.
-ராக்பெல்லர்.
செயலாகும் எண்ணங்கள்
ஒரு செயலை உன்னால் செய்ய முடியுமென்று நீ திட்டமாய் எண்ணுவாயானால் அது எவ்வளவு துன்பம் நிரம்பியதாயிருப்பினும் அதை நீ செய்தே முடிப்பாய். ஆனால் அதற்கு மாறாக இவ்வுலகத்தில் மிக எளியதாயிருக்கக் கூடிய செயலையும் உன்னால் செய்ய முடியாது என்று எண்ணுவாயின் அதை உன்னால் ஒருக்காலும் செய்ய முடியாது. சிறு குப்பை மேடுகள் கூட உனக்குக் கடக்க முடியாத பெரும் மலைகளாகத் தோற்றாமளிக்கும்.
-எமலிகோ.
இல்லாத சக்தி
கடற்கரையில் உடைந்து கிடக்கும் மரக்கலங்கள் போன்று காலமென்னும் அலைகளால் சிதறடிக்கப்பட்ட மனிதர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் சிறந்த திறமைசாலிகளாகத்தாம் இருந்தார்கள். ஆயினும் துணிவும், தன்னம்பிக்கையும் ஒரு முடிவுக்கு வரும் சக்தியும் இல்லாததனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
-பாஸ்டர்.
திடமான நம்பிக்கை
வருங்காலத்தில் பெரிய மனிதனாகக் கூடிய இன்றையச் சிறியவன், தன் மனதில் இப்பொழுதிலிருந்தே ஆயிரக்கணக்கான் இன்னல்கள் ஏற்படினும் அவ்ற்றை எதிர்த்து நிற்பதோடு மட்டுமில்லாது ஆயிரக்கணக்கான தோல்விகள் ஏற்படினும் வென்றே தீருவது என்ற திடமான நம்பிக்கை கொள்ள வேண்டும்.
-தியோடர் ரூஸ்வெல்ட்.
தைரியத்தைக் கைவிடாதே
ஒரு போதும் எடுத்த காரியத்தைக் கைவிடாதே! எத்தனையோ சந்தர்ப்பங்களும் மாறுதல்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவை தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். பெரிய நெருக்கடிகளுக்கிடையேதான் இறைவன் வெற்றி பெறுவதற்கான வழியையும் வகுக்கின்றான். ஆனால் நீங்கள் மட்டும் மனம் தளராதீர்கள்! ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதீர்கள்! ஏனெனில் துன்பமும் இன்பமும் சேர்ந்து வருவதே உலக இயல்பு என்பதை உணர்ந்து எவன், தைரியத்தை இழக்காதிருக்கிறானோ அவனே பெரும் அறிவாளியாவான். எல்லா முதுமொழிகளிலும் மிகவும் முக்கியமானது எதுவென்றால் ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதே எனும் எச்சரிக்கைதான்.
-கவிஞர் ஹோம்ஸ்.
 தொகுப்பு: தாமரைச்செல்வி.

நபிகள் நாயகம் (ஸல்) பொன்மொழிகள்


  • சோதனைகளும் துன்பங்களும் எந்த அளவுக்குக் கடினமாக இருக்கின்றனவோ அதற்குப் பரிகாரமாக அந்த அளவுக்கு வெகுமதி கிடைக்கிறது. மேலும் எந்த அளவுக்கு சோதனைகள் நடக்கின்றனவோ அந்த அளவுக்கு இறைவனுடைய கருணையும் ஏற்படும்.
  • உதவி தேடுபவர்களும் பல்வீனர்களே! உதவி தேடப்படுபவர்களும் பலவீனர்களே!
  • அல்லாவின் கரம் நிரம்பியுள்ளது. வாரி வழங்குவதால் அது வற்றிப்போய் விடுவதில்லை. இரவும் பகலும் மழை மேகத்தைப் போல் அது தன் அருள் மழையைப் பொழிந்து கொண்டே இருக்கிறது. வானங்களையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் வழங்கியவை அவனது கரத்தில் உள்ள செல்வத்தை வற்றச் செய்து விடவில்லை என்பதைப் பார்த்தீர்களா?
  • பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
  • இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
  • மனிதனை இறைவன் சோதிக்கும் போது அவனுக்கு நன்மையை வழங்கினால் நல்லவன் என்கிறான். அவனது வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால் இறைவன் தன்னை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறுகிறான்.
  • உங்கள் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் யார் தவ்று செய்திருந்தாலும் நீதியின்பால் நில்லுங்கள். அவர்களுக்காகப் பிறரையும் நீதியிலிருந்து நழுவும்படி வலியுறுத்தாதீர்கள்.
  • உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுங்கள். பிற மனிதர்கள் உங்களிடம் பேச வந்தால் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள்.

எம்.ஜி.ஆர். சொன்ன பொன்மொழிகள்


  • நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது. 
  • எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.
  • மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.
  • சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.
  • சாதி, மத, இன,  மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும்.
  • ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.
  • எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
  • ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
  • உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் தத்துதவத்தை நிலைநாட்டுவீர்.
  • நம்மைப் பெற்ற தாய் தந்தையரிடம் மட்டும் எந்தப் பொய்யும் சொல்லக் கூடாது. மற்றவர்களிடம் சொல்லலாமா என்றால் சில சமயங்களில் அந்த நிலை ஏற்படும்.
  • விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப் போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்து விடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது.
  • வாழ்வின் சுவை எதையும் அறியாதிருக்கிற, லட்சக்கணக்கான நலிந்தோருக்காக, வருங்காலத் தலைமுறைக்காக இப்போதே இன்றே ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு எல்லோரிடமும் இருக்க வேண்டும்.
  • முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் சக்திகளை நமது ஒற்றுமையாலும், உழைப்பாலும் முறியடிக்க அனைத்துப் பிரிவினரையும் அழைக்கிறேன். வறுமைக்கும், அறியாமைக்கும், சமூகத் தீமைகளுக்கும், பிளவு மனப்பான்மைகளுக்கும் எதிராக நாம் தொடங்கியுள்ள ஆக்கவழி, அறவழி புனிதப் போரின் வெற்றிக்கு நம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள உத்வேகம் பெறுவோம்.
  • இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்கு பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
  • சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன் கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம்? வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.

பொன்மொழிகள்

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்
  • ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.
  • அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.
  • புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.
  • ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.
  • சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.
  • மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.
  • ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.
  • ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?
  • ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.