Search This Blog

Thursday, March 7, 2013

The Words


The Words (அமெரிக்க திரைப்படம்) – நான் சமீபத்தில் பார்த்து, மிகவும் ஈர்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம். ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட கதை. ரோரி ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே, கதைகள் எழுதிக் கொண்டிருப்பவன். மிகப் பெரிய நாவலாசிரியராக வர வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அவனுடைய காதலி டோரா. ரோரி எழுதிய கதைகள் நன்றாக இருந்தாலும், அதை நூலாக கொண்டு வர முடியவில்லை. யாருக்கும் தெரியாத ஆளாக இருப்பதால், பதிப்பாளர்கள் மறுத்து விடுகிறார்கள். இந்த நேரத்தில் ரோரிக்கும் டோராவிற்கும் திருமணம் நடைபெற்று, தேன் நிலவுக்காக அவர்கள் பாரிஸூக்குச் செல்கிறார்கள். அங்கு பழைய பொருட்கள் விற்கப்படும் ஒரு கடையில், ஒரு பழைய தோல் பையை விலைக்கு வாங்குகிறார்கள். பின்னர் அமெரிக்காவிற்கு திரும்பி வந்து விடுகிறார்கள். ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும்போது ரோரி அந்த பழைய தோல் பையைத் திறக்க, அதன் ஒரு உறைக்குள் பேனாவால் எழுதப்பட்ட ஒரு நாவல் இருக்கிறது. அதை வாசிக்கும் ரோரி ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விடுகிறான். ‘அடடா! என்ன எழுத்து!’ என்று வியக்கிறான். அந்த நாவலை அப்படியே டைப் செய்து தன் கம்ப்யூட்டரில் அவன் வைத்திருக்கிறான். அதை அவனுடைய மனைவி டோரா பார்க்கிறாள். அதை எழுதியது ரோரிதான் என்று நினைக்கும் அவள் அவனை பாராட்டுகிறாள். அவளின் தூண்டுதலைத் தொடர்ந்து, அது நூலாக ‘The Words’ என்ற பெயரில் வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. அந்த நூல் சம்பந்தமான ஒரு விழா நடக்கிறது. அதில் ரோரி வாசகர்களுடன் உரையாடுகிறான். விழா முடிவடைந்து, அவன் வெளியே வந்து காருக்குள் அமர, மழை பெய்யும் அந்த இரவு நேரத்தில் ஓரத்தில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு வயதான மனிதர். அவர்தான் – அந்த நாவலை எழுதிய உண்மையான எழுத்தாளர். சந்தோஷங்களும், கவலைகளும் நிறைந்த தன் வாழ்க்கையையே அவர் நாவலாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அந்த தோல் பைக்குள் அந்த கதை எப்படி வந்தது? நாவலை உண்மையாகவே எழுதியவர் வேறொருவர் இருக்க, பெயரையும் புகழையும் ரோரி வாங்கிக் கொண்டிருக்க… உண்மை வெளியுலகிற்கு தெரிந்ததா?
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முழுமையான ஈடுபாட்டுடன், படத்துடன் ஒன்றிப் போய் இருக்கச் செய்யும் மிகச் சிறப்பான திரைக்கதை.
வயதான மனிதராக வரும் ஜெரேமி அயன்ஸ், ரோரியாக வரும் ப்ராட்லி கூப்பர் – இருவரும் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஹாலிவுட்டிற்கு மதிப்பையும், மரியாதையையும் தேடித் தந்திருக்கும் ஒரு தரமான படம்!
The Words (அமெரிக்க திரைப்படம்) – நான் சமீபத்தில் பார்த்து, மிகவும் ஈர்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம். ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட கதை. ரோரி ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே, கதைகள் எழுதிக் கொண்டிருப்பவன். மிகப் பெரிய நாவலாசிரியராக வர வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அவனுடைய காதலி டோரா. ரோரி எழுதிய கதைகள் நன்றாக இருந்தாலும், அதை நூலாக கொண்டு வர முடியவில்லை. யாருக்கும் தெரியாத ஆளாக இருப்பதால், பதிப்பாளர்கள் மறுத்து விடுகிறார்கள். இந்த நேரத்தில் ரோரிக்கும் டோராவிற்கும் திருமணம் நடைபெற்று, தேன் நிலவுக்காக அவர்கள் பாரிஸூக்குச் செல்கிறார்கள். அங்கு பழைய பொருட்கள் விற்கப்படும் ஒரு கடையில், ஒரு பழைய தோல் பையை விலைக்கு வாங்குகிறார்கள். பின்னர் அமெரிக்காவிற்கு திரும்பி வந்து விடுகிறார்கள். ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும்போது ரோரி அந்த பழைய தோல் பையைத் திறக்க, அதன் ஒரு உறைக்குள் பேனாவால் எழுதப்பட்ட ஒரு நாவல் இருக்கிறது. அதை வாசிக்கும் ரோரி ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விடுகிறான். ‘அடடா! என்ன எழுத்து!’ என்று வியக்கிறான். அந்த நாவலை அப்படியே டைப் செய்து தன் கம்ப்யூட்டரில் அவன் வைத்திருக்கிறான். அதை அவனுடைய மனைவி டோரா பார்க்கிறாள். அதை எழுதியது ரோரிதான் என்று நினைக்கும் அவள் அவனை பாராட்டுகிறாள். அவளின் தூண்டுதலைத் தொடர்ந்து, அது நூலாக ‘The Words’ என்ற பெயரில் வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. அந்த நூல் சம்பந்தமான ஒரு விழா நடக்கிறது. அதில் ரோரி வாசகர்களுடன் உரையாடுகிறான். விழா முடிவடைந்து, அவன் வெளியே வந்து காருக்குள் அமர, மழை பெய்யும் அந்த இரவு நேரத்தில் ஓரத்தில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு வயதான மனிதர். அவர்தான் – அந்த நாவலை எழுதிய உண்மையான எழுத்தாளர். சந்தோஷங்களும், கவலைகளும் நிறைந்த தன் வாழ்க்கையையே அவர் நாவலாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அந்த தோல் பைக்குள் அந்த கதை எப்படி வந்தது?  நாவலை உண்மையாகவே எழுதியவர் வேறொருவர் இருக்க, பெயரையும் புகழையும் ரோரி வாங்கிக் கொண்டிருக்க… உண்மை வெளியுலகிற்கு தெரிந்ததா?
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முழுமையான ஈடுபாட்டுடன், படத்துடன் ஒன்றிப் போய் இருக்கச் செய்யும் மிகச் சிறப்பான திரைக்கதை.
வயதான மனிதராக வரும் ஜெரேமி அயன்ஸ், ரோரியாக வரும் ப்ராட்லி கூப்பர் – இருவரும் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஹாலிவுட்டிற்கு மதிப்பையும், மரியாதையையும் தேடித் தந்திருக்கும் ஒரு தரமான படம்!

மோனாலிசா ஓவியத்தில் மறைந்துள்ள மர்மங்கள்.

மோனாலிசா ஓவியத்தில் மறைந்துள்ள மர்மங்கள்.

உலகத்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது இந்த ஓவியம் உள்ளது. இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் பெயர் தான் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci). இந்த ஓவியத்தின் இரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது. 

மேலும் அதிகம் விற்பனையாகியுள்ள, இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது. அவற்றில் எழுந்த சிலவற்றைப் பார்ப்போமா!!! மோனாலிசா யார்? வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசா, ப்னோரென்டைன் எனப்வரின் மனைவி. இவரது உண்மையான பெயர் லிசா டெல் ஜியோண்டா. ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை புன்னகையின் இரகசியம் புன்னகையின் இரகசியம் ,monalisa smile secrets,monalsa punnakai நிறைய மக்கள் மோனாலிசாவின் புன்னகையில் நிறைய மர்மங்களை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. எனவே தான், இவரது இந்த புன்னகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசா கர்ப்பிணியா? மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு, உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைக்கின்றனர். உண்மையிலேயே லிசா டெல் ஜியோண்டா, இந்த ஓவியம் வரையும் போது தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார். மோனாலிசா ஒரு ஆணா? சில ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு ஆண் என்று நிரூபித்துள்ளனர். ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது என்பதாலேயே தான். 

மேலும் சில ஆய்வாளர்கள் மோனாலிசாவின் ஓவியத்தை ஆராய்ந்ததில், இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது என்று சொல்கிறது. டா வின்சி தான் மோனாலிசா! dsavinci,monalisa,மோனாலிசா ஓவியமானது, டா வின்சி ஒருசில ஆராய்ச்சியாளர்கள், மோனாலிசா ஓவியமானது, டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஓவியத்தை நன்கு ஆராய்ந்ததில், டா வின்சிக்கும், ஓவியத்திற்கும் உள்ள ஒற்றுமை நன்கு புலப்படுவதாகவும் கூறுகின்றனர். 

ஆமோன் மற்றும் எலிசா: ஆண் மற்றும் பெண் சில வரலாற்று ஆசிரியர்கள், மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை என்று கூறியுள்ளனர். ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது என்று கூறுகின்றனர். ஏன் புருவமில்லை? மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது. எனவே இது ஒரு பெரும் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கோல்டன் டிரையாங்கிள் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு சிறந்த சமச்சீர் என்ற அடிப்படையில் இருப்பதாக நம்புகின்றனர். ஏனெனில் இந்த ஓவியத்தின் முன் நின்று அதனைப் பார்த்தால், அந்த ஓவியம் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும். இதனைப் பற்றி விரிவாக டான் ப்ரௌன் அவரது நாவலில் தெளிவாக கூறியுள்ளார்.


உலகத்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது இந்த ஓவியம் உள்ளது. இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் பெயர் தான் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci). இந்த ஓவியத்தின் இரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது.

மேலும் அதிகம் விற்பனையாகியுள்ள, இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது. அவற்றில் எழுந்த சிலவற்றைப் பார்ப்போமா!!! மோனாலிசா யார்? வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசா, ப்னோரென்டைன் எனப்வரின் மனைவி. இவரது உண்மையான பெயர் லிசா டெல் ஜியோண்டா. ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை புன்னகையின் இரகசியம் புன்னகையின் இரகசியம் ,monalisa smile secrets,monalsa punnakai நிறைய மக்கள் மோனாலிசாவின் புன்னகையில் நிறைய மர்மங்களை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. எனவே தான், இவரது இந்த புன்னகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசா கர்ப்பிணியா? மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு, உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைக்கின்றனர். உண்மையிலேயே லிசா டெல் ஜியோண்டா, இந்த ஓவியம் வரையும் போது தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார். மோனாலிசா ஒரு ஆணா? சில ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு ஆண் என்று நிரூபித்துள்ளனர். ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது என்பதாலேயே தான்.

மேலும் சில ஆய்வாளர்கள் மோனாலிசாவின் ஓவியத்தை ஆராய்ந்ததில், இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது என்று சொல்கிறது. டா வின்சி தான் மோனாலிசா! dsavinci,monalisa,மோனாலிசா ஓவியமானது, டா வின்சி ஒருசில ஆராய்ச்சியாளர்கள், மோனாலிசா ஓவியமானது, டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஓவியத்தை நன்கு ஆராய்ந்ததில், டா வின்சிக்கும், ஓவியத்திற்கும் உள்ள ஒற்றுமை நன்கு புலப்படுவதாகவும் கூறுகின்றனர்.

ஆமோன் மற்றும் எலிசா: ஆண் மற்றும் பெண் சில வரலாற்று ஆசிரியர்கள், மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை என்று கூறியுள்ளனர். ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது என்று கூறுகின்றனர். ஏன் புருவமில்லை? மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது. எனவே இது ஒரு பெரும் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கோல்டன் டிரையாங்கிள் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு சிறந்த சமச்சீர் என்ற அடிப்படையில் இருப்பதாக நம்புகின்றனர். ஏனெனில் இந்த ஓவியத்தின் முன் நின்று அதனைப் பார்த்தால், அந்த ஓவியம் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும். இதனைப் பற்றி விரிவாக டான் ப்ரௌன் அவரது நாவலில் தெளிவாக கூறியுள்ளார்.

எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...!

எச்சரிக்கை...!

C.F.L .பல்புகள் உடைந்தால்...! 


சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .


Via; Mass Boss...


சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .