Search This Blog

Monday, March 5, 2012

Health Benefits Of Lemon Juice ~~~~




Many of us have no idea on various health uses of lemon juice. This commonly available sour and juicy fruit can benefit us from losing weight to controlling blood pressure. If you like the sour taste of lemon juice, then you can simply have it. But many people will not prefer this extreme tartness, for them the best thing is to squeeze fresh lemon into a glass of water and then drink it. The top 10 health benefits of lemon juice are described here.

Lemon Juice for Digestion
The lemon juice has been very useful in solving various digestion related problems. First of all, when mixed with warm water, it can give relief from heartburn, nausea, bloating, belching and parasites. Regular intake of lemon juice can take care of constipation problem, by clearing the accumulated bowels. Lemon is also helpful for the liver as it helps the liver in producing more bile, which can in turn speed up the process of digestion.

Lemon Juice for Skin
Lemon is perhaps one of the best sources of vitamin C, which is very much beneficial for the skin. The lemon juice has the ability to fight with ageing symptoms like blackheads and wrinkles. If you can consume lemon juice or lemon water, in a regular basis, then you can see the difference in your own eyes. Lemon water also helps in removing any type of scars or dark patches over the skin.

Lemon Juice for Teeth
Lemon has also its good effect on the teeth. The freshly squeezed lemon juice can reduce the toothache and when massaged on gum, it cures all the wounds from the gums, in case you have any. The fresh lemon juice also takes care of problems like bad breath.

Lemon Juice for Throat
The antibacterial property of the fresh lemon juice works to fight with any kind of infection in the throat area, such as sore throat or tonsillitis. The best remedy for sore throat is to gurgle with fresh lemon juice mixed in warm water.

Lemon Juice for Weight Loss
This is one of the greatest uses of lemon juice as it works on the accumulated fat of your body. Regular intake of lemon juice and honey mixed with lukewarm water can do a magic to the shape of your body.

Lemon Juice for Blood Pressure
The high level of potassium content in the lemon juice benefits the people with high blood pressure. Actually, potassium works in the human body to control dizziness, nausea and high blood pressure, which can consequently reduce the risk of heart disease.

Lemon Juice for Respiratory Problems
Warm lemon water works to clear the chest congestion by loosening the accumulated cough in the respiratory track. So, patients of asthma or other respiratory diseases can enjoy great benefit by regularly consuming lemon juice.

Lemon Juice for Urinary Tract Infection
Being a diuretic in nature, lemon can also help in solving problems related to urinary tracts. In addition to this, the detoxifying property of lemon juice can helps the body to flush out all the toxins from the system. Both these benefits work together to keep the urinary tracts free from any type of infection.

Lemon Juice for Stress
Lemon has been much used as a relaxing agent. The soothing smell of lemon can work wonder to reduce stress, at the end of the day. A cool glass of lemon water can rejuvenate you after a hectic and tiring day. The vitamin C content of the lemon juice helps in increasing the immunity power of the body, which can ensure your health and fitness

20,000 வருடம் பழமையான தமிழ் இனம்!!!!!!



நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!PLS SHARE !!!!

தாயார் பாதம்.......ஜெயமோகன்




ராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்தது, அனேகமாக ’ஹிமகிரிதனயே ஹேமலதே’. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன் நிறுத்திவிட்டு ‘சரி, விடுங்க’ என்று சிரித்தார். ’இல்ல, நான் சிலசமயம் நினைக்கறதுண்டு, உங்க விரலை சும்மா ஒரு கிராமபோனிலே கனெக்ட் பண்ணி விட்டா அது நல்ல சுத்த சங்கீதமா கொட்டுமேன்னு…’. ‘தெரியறது. வெரலிலே சங்கீதம் இருக்கு, நாக்கிலே இல்லேங்கிறீங்க’ பாலசுப்ரமணியன் மீண்டும் புன்னகை செய்தார்.
’நான் சாந்திமுகூர்த்தம் அன்னிக்கு சாரதா கிட்டே முதல்ல என்ன கேட்டேன் தெரியுமோ’ என்றார் ராமன். ‘ஒரு பாட்டு பாடறேன், கேக்கறியான்னு. சரின்னா. அதோட சரி. அதுக்குமேலே பாடறேன்னு சொன்னா ஒருமாதிரி முகத்தைக் காட்டுவா பாருங்க. எவ்ளோ பெரிய மேதைக்கும் தொண்டை அடைச்சுண்டுரும்’ ராமன் சிரிக்க பாலசுப்ரமணியன் சேர்ந்துகொண்டார்.
‘ஆனா நான் சின்ன வயசிலே பாடுவேன்’ என்றார் ராமன் ‘மறுபடியும் ஸ்மைல் பண்றேள். பாடத்தெரியாதவ எல்லாரும் அப்டித்தான் சொல்லுவா,என்ன?’ என்றார். ‘என்னதான் சிரிப்போ அப்டி…அதைப்பாக்கறச்ச பயம்மா இருக்கு. எங்க அரசியல் கிரசியலுக்கு போயி டெல்லிக்குவந்து ஒக்காந்துண்டுவீங்களோன்னு…’ பாலசுப்ரமணியன் அதற்கு வாய்விட்டு சிரித்தார். கடல்காற்றில் அவரது முன்மயிர் பறந்தது. அவரது நீளமான கல்கத்தா ஜிப்பாவும் வேட்டியும் படபடக்க அவர் பறக்கத்துடிப்பதுபோல தோன்றியது. ராமன் பின்னால் எழுந்து பறந்த தன் மேல்துண்டை இழுத்து அக்குளில் செருகிக்கொண்டார்.
மதியநேரம் காந்திமண்டபத்தில் சில வடநாட்டு காதல் ஜோடிகளைத்தவிர எவருமில்லை. ராமன் சற்று எம்பி கைப்பிடிச்சுவரில் கடலுக்கு பக்கவாட்டை காட்டியதுபோல அமர்ந்து சுவரில் சாய்ந்து காலை மேலே தூக்கி வைத்துக்கொண்டார். பாலசுப்ரமணியன் சுவரைப்பற்றியபடி நின்று கீழே பார்த்தார். கடல் கண்கூசும் வெளிச்சமாக அலையடித்துக்கொண்டிருந்தது. சூரிய பரப்பில் தெரியும் புள்ளிகள் போல நாலைந்து பெரிய மீன்பிடிப்படகுகள் சென்றுகொண்டிருந்தன.
‘அந்த பாறையிலயா விவேகானந்த மண்டபம் வரப்போறது?’ என்றார் ராமன் கைகளை நெற்றிமேல் வைத்து ஒளியில் மிதந்து அலைபாய்வதுபோல தெரிந்த இரட்டைப்பாறைகளை நோக்கியபடி. ‘ஆமா… அந்தப்பக்கம் இருக்கிற உயரமான பாறையிலே.. சாங்ஷன் ஆயிட்டுதுன்னு கேள்விப்பட்டேன். இங்க காந்தி மண்டபம் வந்ததே நேக்கு பிடிக்கலை. கட்டிண்டே இருக்காங்க. கடற்கரைன்னா அது ஏன் கடற்கரையா இருக்கக்கூடாது? ஏன் அதை யாருமே யோசிக்கிறதில்லை’
‘ஏன் நல்லாத்தானே கட்டியிருக்கா?’ என்றார் ராமன். ’அங்க ஒரு கோயில் இருந்தா நல்லாத்தான் இருக்கும். நீங்க கல்கத்தா போகணும். பேலூர் மடத்திலே விவேகானந்தர் இருந்த ரூமுக்குபோறச்ச நான் கண்ணுலே தண்ணி விட்டுட்டேன். என்ன ஒரு மனுஷர். அந்த மொகமிருக்கே…. அதிலே தெரியற கம்பீரத்துக்கு அவரு உலகத்துக்கே ராஜாவா இருந்தாலும் பத்தாது..’ ராமன் சொன்னார். ‘இப்ப அந்தப் பாறையிலே என்ன இருக்கு?’
’அங்கயா? அதில ஒரு சின்ன கோயில் மாதிரி ஒண்ணு இருக்கு. வருஷத்துக்கு நாலுவாட்டி அம்மன் கோயிலிலே இருந்து போயி பூஜைசெய்வாங்க’ ‘என்ன மூர்த்தி?’ ‘மூர்த்தின்னு ஒண்ணும் இல்லே. பாறையிலே காலடித்தடம் மாதிரி ஒண்ணு இருக்கு. சும்மா ஓவல் சைஸிலே ஒண்ணரைசாண் நீளத்திலே ஒரு சின்ன பள்ளம். அது கன்யாகுமரி தேவி சுசீந்திரம் தாணுமாலயனை கல்யாணம்பண்ணிக்கணும்னு ஒத்தைக்காலிலே நின்னதோட தடம்னு நம்பறாங்க. அங்க போயி பொங்கல் போட்டு படைச்சு கும்பிட்டுட்டு வருவாங்க. பௌர்ணமி தோறும் படகிலே போயி வெளக்கு வைக்கிறதுண்டு’
’அப்டியா?’ என்றார் ராமன் ஆவலாக ‘போய்ப்பாக்க முடியுமா? ‘போகலாம்’ என்று பாலசுப்ரமணியன் இழுத்தார்.’கட்டுமரத்திலே போகணும். உங்களுக்கு அதெல்லாம் சரிப்படாது’ . ’கொமட்டும் இல்ல?’ என்று உடனே அந்த யோசனையை கைவிட்டார் ராமன் ’கேக்கவே நல்லா இருக்கு. ஒரு கன்னிப்பொண்ணு ஒத்தக்காலிலே யுகயுகமா தபஸ் பண்றா… அவளோட தபஸோட சின்னமா அந்த காலடித்தடம் மட்டும் அங்கியே பதிஞ்சிருக்கு’ ’அதுமாதிரி எல்லா பாறைகளிலேயும் விதவிதமா தடங்கள் இருக்கு. பாறையிலே உள்ள சாஃப்டான மெட்டீரியல்ஸ் மழையிலயும் காத்திலயும் கரைஞ்சு போறதனால வர்ர தடம்..’என்றார் பாலசுப்ரமணியன்
ராமன் அதைக் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. பின்னர் ‘எதுக்கு அப்டி ஒரு தவம் பண்ணினா? வெறும் ஒரு புருஷனுக்காகவா? காலாகாலமா அவன் பொறந்து வந்து அவளை கட்டிண்டுதானே இருக்கான். அப்றம் எதுக்கு தவம்?’ அவர் உள்ளூர சமன் குலைந்து விட்டதை பாலசுப்ரமணியன் உணர்ந்தார். ‘ஏன் பாலு, எதுக்கு ஒத்தைக்காலிலே நிக்கணும்?’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அதானே கஷ்டம்…’ என்றார். ‘இல்ல அவளோட மத்தக்காலு அந்தரத்திலே நின்னுட்டிருந்தது. நடராஜனோட எடுத்த பொற்பாதத்தை விட இதுதான் உக்கிரமா இருக்கு. காத்தில தூக்கி நிக்கிற ஒத்தைக்கால். எங்கியும் அதை வைக்க எடமில்லாதது மாதிரி…அத எங்கியாவது செலையா செஞ்சிருக்காங்களா?’
‘இல்லேன்னு நினைக்கறேன்’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன்‘நடராஜரோட ஒத்தைக்கால் திரும்ப தரையிலே பட்டுதுன்னா ஒரு ஊழி முடிஞ்சு அண்டசராசரங்களும் அழிஞ்சிரும்னு கதை…. அம்பாளோட எடுத்தபாதம் பட்டா என்ன ஆகும்?’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல? ‘ என்றார் ராமன். தனக்குள் ஆழ்ந்து கடலையும் பாறையையும் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னையறியாமலேயே ‘ஹிமகிரி தனயே’ என்று முனகி தன்னுணர்வு கொண்டு ‘மன்னிச்சுக்கங்கோ. தெரியாம வந்துடுத்து’ என்றார். பின்பு ‘நேரா கழுகுமலைக்கு போலாமா, வரேளா? சுப்பு அண்ணா அங்க பாடறார். வர்ரியாடான்னு காயிதம் போட்டிருக்கர்’ என்றார். ‘பாத்துட்டு சொல்றேன்’ என்றார் பாலசுப்ரமணியன்
‘சுப்பு அண்ணா எனக்கு குருவழியிலே நெருக்கம் தெரியுமோ? நெருக்கம்னா ஒண்ணுவிட்டு ரெண்டுவிட்டு அப்டி பலது விட்டு ஒரு சொந்தம்னு வைங்கோ. அதாவது அவரோட குருவோட குரு என்னோட தாத்தாவுக்கு குரு. அவரு பேரு விளாக்குடி கிட்டாவய்யர். மகாஞானின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அவரு தியாகையர் கிட்டயே சங்கீதம் கத்துண்டவர்னு சொல்வா. அதைப்பத்தி தெரியலை. மன்னார்குடி திருவையாறு திருவாரூர் பக்கம் எல்லா குருபரம்ரையையும் நேரா கொண்டுபோயி அங்க இணைச்சுக்கிடறதுண்டு’
‘அப்டியா?’என்றார் பாலசுப்ரமணியன் பொதுவாக. பேச்சை இசையை நோக்கிக் கொண்டுசெல்வது அவருக்கு அப்போது உகக்கவில்லை. ஆனால் பிறரது பேச்சை தடுக்கவோ திருப்பவோ கூடியவர் அல்ல அவர். ‘தாத்தாபேரு சேஷய்யர். அவர்தான் எனக்கு முதல் குருன்னு சொல்லணும். அவரு பெரிய கடல். சங்கீதஞானசாகரம்னே அவருக்கு பட்டப்பேரு இருந்தது. அப்பல்லாம் சங்கீதவித்வான்களுக்கு பெரிசா ஒண்ணும் பணம் கெடைக்காது. மடத்திலே கூப்பிட்டு இந்தாடான்னு ஏதவது குடுத்தா உண்டு. ஆனா சிருங்கேரி வரை போய்வர்ர செலவே டபுள் ஆயிடும். மத்தபடி எங்கயும் கதாகாலட்சேபம்தான். அதுல இருக்கிறவாளுக்குத்தான் துட்டு. வருஷத்திலே எரநூறு கதை வரை நடத்தறவா உண்டு. தெரியுமே எங்கப்பாகூட கதாகாலட்சேபம்தான் பண்ணிண்டிருந்தர்…’
‘ஆனா எங்க தாத்தா சங்கீத வித்வானா மட்டும்தான் இருந்தர். கையிலே கொஞ்சம் நெலமிருந்தது. குடியானவங்க ஒழுங்கா குத்தகை அளந்தகாலம்ங்கிறதனால பஞ்சமில்லை. ஒண்ணையும்பத்தி கவலைப்படாம காவேரியிலே மூணுவேளை குளிச்சுட்டு சந்தியாவந்தனம் சாதகம்னு பண்றது, கோயிலிலே கொஞ்சநேரம் சாயங்காலம் அவருகேக்க அவரே பாடிக்கறதுன்னு நெறைவா இருந்தார். எப்பவாச்சும் தஞ்சாவூர் கும்மோணம்னு கச்சேரிக்கு கூப்பிடுவா. வில்வண்டியிலே கூட்டிண்டுபோய்ட்டு கொண்டாந்து விட்டிருவா. பெரும்பாலும் ஒரு சால்வை. ரொம்ப பெரிய எடம்னா ஒருபவுன்ல ஒரு தங்கக் காசு… அடுத்த கச்சேரி வரை அதைப்பத்தியே பேசிண்டிருப்பர். அங்க இப்டி பாடினேன் , இப்டி எடுத்தேன்னு திருப்பித்திருப்பி பாடிக்காட்டுவர்.
’அவர நான் பாக்கறச்ச அவருக்கு எழுபது தாண்டியிருக்கும். அவரோட ஏழு குழந்தைகளிலே எங்கப்பாதான் கடைக்குட்டி. அப்பா பொறக்கறச்ச தாத்தாவுக்கு நாப்பத்தெட்டு வயசாம். என்னோட ஞாபகத்திலே எப்பவும் அவரு திண்ணையிலே ஜமக்காளத்தை போட்டு சாய்ஞ்சு ஒக்காந்திண்டிருப்பர். பக்கத்திலே கூஜாலே ஜலம், பெரிய தாம்பாளத்திலே தளிர்வெத்தலை, இன்னொரு சம்புடத்திலே சீவல். கிளிமாதரி ஒரு பச்சைநெறமான மரச்செப்புலே கலர் சுண்ணாம்பு. புகையில வைக்கறதுக்கு ஒரு தகரடப்பா. பக்கத்திலே எப்பவும் தம்பூரா வச்சிருப்பர். எந்நேரமும் அவர் பக்கத்திலே ஒத்தர் ஒக்காந்திண்டிருக்கிற மாதிரி தம்புரா இருக்கும். சின்னவயசிலே மாநிறமா ஒரு சின்னப்பொண்ணு அவர் பக்கத்திலே இருந்துண்டிருக்கிற மாதிரின்னு நினைச்சுக்குவேன்
பாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார். ‘சிரிக்கவேணாம். நெஜம்மாவே தம்புரா வெக்கப்பட்டுண்டு அதிகம் பேசாத பொண்ணு மாதிரித்தான் இருக்கும். அவரு எந்நேரமும் அதிலே சுதிபாத்தூண்டே இருப்பர். சரியா அமைஞ்சதும் அதோட சேந்து மெல்ல பாடுவார். பாட்டு எப்பவுமே அவருக்காகத்தான். இப்ப சொன்னேளே, சங்கீதம் உடம்பிலே இருக்கு, கனெக்‌ஷன் குடுத்திடலாம்னு. அது அவருதான். அப்பல்லாம் கிராமத்து அக்ரஹாரம் சத்தமே இல்லாம இருக்கும். ரேடியோ பிளேட்டு ஒண்ணும் வரலை. அக்ரஹாரதுக்குக்கு நடுவிலேயே ஒரு ஓடை போகும். காவேரித்தண்ணி. அந்த சத்தம் எப்பவும் கேட்டுண்டே இருக்கும். அந்த சுருதிய தம்புராவிலே பிடிப்பர். அதிலே சேந்து பாடுவர். மத்தியான்னம் மாமரத்திலே குயில் வந்து ஒக்காந்துண்டு பாடும். அந்த நாதத்தோட சுருதிய பிடிப்பார். வெளியே கேக்கிற எல்லா சத்தமும் அவருக்கு சங்கீதம்தான். அவருக்குள்ள ஓடீண்டே இருக்கிற சங்கீதத்தோட எல்லாமே இணைஞ்சிரும், ஊர்த்தண்ணியெல்லாம் காவேரியா போய்சேந்துக்கற மாதிரி. சரி, காவேரிதானே ஊருக்குள்ளே தண்ணியாகவும் வந்துண்டிருக்கு…’
‘ஊருக்குள்ளே அவருக்கு புண்ணியாத்மான்னுதான் பேரு. குழந்தை பிறந்தா தூக்கிண்டு வந்திருவா. ‘அண்ணா உங்க கையாலே தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கோ’ன்னு நிப்பாங்க. அவரும் குழந்தையை மடியிலே வாங்கி வச்சுண்டு ’ராரா தேவாதி தேவா’ன்னு ஒரு நாலுவரி பாடி திருப்பி குடுப்பர். குழந்தையோட தாயார்காரி நின்னாள்னா கண்ணிலே ஜலம் விட்டு முந்தானையாலே முகத்த பொத்திண்டுடுவா. போன ஜென்மத்திலே சரஸ்வதிக்கு குடம்குடமா தேனபிஷேகம் பண்ணியிருக்கார்னு சொல்லுவா. ஆனா இந்த ஜென்மத்திலே தொடர்ச்சியா அறுபது எழுபது வருஷம் சரஸ்வதிக்கு தேனபிஷேகம் பண்ணியிருக்கார். கும்மோணத்திலே வேதநாராயணப்பெருமாள் கோயில்னு ஒண்ணு இருக்கு. அங்க பிரம்மனுக்கு சரஸ்வதி காயத்ரியோட தனி சன்னிதி உண்டு. வருஷா வருஷம் ஆவணி மாசம் அவரோட பொறந்தநாள் அன்னிக்கு வண்டிகட்டிண்டு அங்கபோய் தேவிக்கு தேனபிஷேகம் பண்ணிண்டு வருவார். அவருக்கு ரொம்ப முடியாமப் போனப்ப எங்க அப்பா போய் செஞ்சார். பாட்டி தவறின வருஷம் மட்டும்தான் செய்யலை
’எண்பதுவயசு வரை இருந்தர். ஒரு நோய்நொடி ஈளை இளைப்பு கெடையாது. குரலிலே கொஞ்சம் கார்வையும் நடுக்கமும் வந்ததேஒழிய அழகு குறையலை. கூன் கெடையாது. ஒத்தைநாடி ஒடம்பு. முடியில்லாத மார்பிலயும் விலாவிலயும் எலும்பு தெரியும். வயத்திலே நரம்பு சுருண்டு கெடக்கும். கடைசி வரைக்கும் சட்டை போட்டது கெடையாது. மாநிறமா இருப்பார். கண்ணு ரெண்டும் பெரிசா கோபுரச்செலைகளிலே இருக்குமே அது மாதிரி பிதுங்கி வெளியே விழுறாப்ல இருக்கும். பேசற வழக்கமே கெடையாதுன்னாலும் அவரோட மனசு கண்ணுலே தெரிஞ்சுண்டே இருக்கும். கடைசியிலே தூக்கம் ரொம்ப கம்மியாயிடுத்து. நடு ராத்திரியிலே எழுந்து ஒக்காந்துண்டு மெதுவா தம்புராவ சுதிசேத்து பாடுவார். கேட்டுதா கேக்கலையான்னு ஒரு சங்கீதம். எங்கேயோ கொண்டுபோயிடும். சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம். அந்தபாட்டைக் கேக்கறதுக்குன்னே பக்கத்தாத்திலே எல்லாம் ராத்திரி கண்முழிச்சு தூங்காம கிடப்பாங்களாம்
‘அவருக்கு கடைசியிலே கொஞ்சம் கண் தடுமாற்றமாயிடுத்து. காவேரிக்கு நானே காலம்பற கைபுடிச்சு கூட்டிட்டு போகணும். மத்தியான்னமும் சாயங்காலமும் வீட்டு முன்னாடியிலே ஓடையிலே குளிச்சுக்குவர். ஆனால் நியமநிஷ்டைகள் ஆசாரங்கள் ஒண்ணிலேயும் ஒரு குறையும் இல்லை. எல்லாம் அவருக்கு நினைச்ச மாதிரி நடக்கணும். நடக்காட்டி ஒண்ணும் சொல்ல மாட்டார். பேச்சை நிப்பாட்டிட்டு தம்பூராவ தூக்கிண்டுடுவர். அப்றம் அப்பா அம்மா எல்லாரும் வந்து கன்னத்திலே போட்டுண்டு கண்ணீர்விட்டு கெஞ்சின பிறகுதான் இறங்கி வருவர். எங்க அம்மாதான் எல்லாம் பாத்து செய்யணும். அம்மாவும் தெய்வத்துக்கு பண்றமாதிரி செய்வா.
’ஆமா, பாட்டி இருந்தள்’ என்றார் ராமன். ‘அவளை நான் சரியா பாத்த ஞாபகமே இல்லை. தாத்தாவ விட பதிமூணு வயசு கம்மி அவளுக்கு. ஆனா பாத்தா எம்பது தொண்ணூறு அதுக்கும் மேலேன்னு தோணிடும். என் சின்னவயசு ஞாபகத்திலே வத்திப்போன பசு மாதரி அவ சித்திரம் இருக்கு. முதுகு நல்லா ஒடிஞ்சு வளைஞ்சு இடுப்புக்கு மேலே உடம்பு பூமிக்கு சமாந்தரமா இருக்கும். பசுவேதான். கைய முன்னங்கால்னு வச்சுக்கிட்டோம்னா அவ நடக்கிறது பசு நடக்கிறது மாதிரியே இருக்கும். கண்ணும் மொகமும் தரையப்பாத்துண்டிருக்கும். தலயிலே கொஞ்சம் வெள்ள முடி. அத கொட்டைப்பாக்கு சைசுக்கு கட்டி வச்சிருப்பள். ஜாக்கெட் போடறதில்லை. எப்பவும் ஏதாவது ஒரு மொலை வெளியே தொங்கி கிழட்டு மாடோட அகிடு மாதரி ஆடிண்டிருக்கும். மெலிஞ்சு வத்தி ஒரு பத்துவயசு குட்டி அளவுக்குத்தான் இருப்பா. சாப்பிடுறது ரொம்ப குறைவு. காலம்பற ஒரு இட்லி. மத்தியான்னம் இன்னொரு இட்லி. சாயங்காலம் ஒரு பிடி சோறு. அதையும் உக்காந்து சாப்பிட மாட்டா. சின்ன சம்புடத்திலே போட்டு கையிலே குடுத்திடணும். அத அங்க இங்க வச்சிடுவா. எடுத்து எடுத்து குடுக்கணும். அதுக்கு நல்லது பொரி வாங்கி அவ மடியிலேயெ கட்டி விட்டுடறதுன்னு பிறகு எங்கம்மா கண்டுபிடிச்சள். அதான் சாப்பாடு…
’அவ ஒக்காந்து நான் பாத்ததே கெடையாது. எப்பவும் வீடு முழுக்க அலைஞ்சுகிட்டேதான் இருப்பள். வீட்டை விட்டு வெளியே போகமாட்டா. முற்றத்துக்கும் திண்ணைக்கும்கூட வரமாட்டா. கடைசி இருபது வருஷத்திலே புத்தி பேதலிச்சு போச்சு. எங்கப்பாவுக்கு கல்யாணமாகி மாட்டுப்பொண்ணு வர்ரப்பல்லாம்கூட நல்லாத்தான் இருந்திருக்கா. பொதுவா பேசறவ இல்ல. எல்லாத்துக்கும் ஒரு மௌனம். எங்கப்பா ஞாபகத்திலேயே அவங்கம்மா பேசி கேட்டது ரொம்ப கம்மி. வீட்டுக்குள்ள பல்லிப்பேச்சு கேட்டாத்தான் உண்டுன்னு அப்பா சொல்வர். வெறிபுடிச்சாப்ல வீட்டுவேலை செய்றதுதான் அவளோட ஒலகம். வெடிகாலைலே எந்திரிச்சு கைவெளிச்சம் வர்ரதுக்குள்ள அத்தனை பாத்திரங்களையும் கழுவி வீட்ட கூட்டிப்பெருக்கி கழுவி குளிச்சிட்டு தாத்தாவோட பூஜைக்கான ஏற்பாடுகளை செஞ்சு முடிக்கணும்.. வேலைதவிர ஒண்ணுமே தெரியாது
’எங்கம்மா வந்ததும் அதே சிக்கல்தான். வீட்டுலே ஒரு வேலை மிச்சமிருக்காது. மாட்டுப்பொண்ணு வேலைபாத்தாத்தானே நல்லா இருக்கும். ஆனா பாட்டிக்கு செஞ்சு தீக்கறதுக்கே வேலை பத்தாது.அம்மா பாட்டி பின்னாடியே அலையறதுதான் மிச்சம். அம்மாவுக்கு மூத்த அக்கா பிறந்தப்ப எல்லாத்தையும் பாத்து செஞ்சதே பாட்டிதான். அம்மா சும்மா படுத்திருந்தா போரும். ஆனா அப்பதான் சிக்கல் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சுது. குழந்தையோட அழுக்குத்துணிகளை போட்டு கழுவு கழுவுன்னு கழுவ ஆரம்பிச்சா. அப்றம் வீட்டுக்குள்ள குழந்தையோட அழுக்கு கெடந்தா ஒடனே மொத்த வீட்டையும் துடைச்சு கழுவறது. என்ன இதுன்னு ஆரம்பத்திலே தோணியிருக்கு. அவ்ளவொண்ணும் ஆசாரமான ஆளும் இல்லை. கேட்டா சரியான பதில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமா கூடிட்டே போச்சு.
’ஆறுமாசத்திலே தெரிஞ்சுடுத்து என்னவோ பிரச்சினைன்னு. அப்ப வீட்டிலே இன்னும் ஒரு தங்கச்சி கல்யாணத்துக்கு இருந்தா. இதைப்பத்தி பேசப்போய் அதுவேற வம்பாயிடும்னு அப்டியே விட்டாச்சு. அப்றம் அப்டியே பழகிப்போச்சு. மடத்துக்கு காரியஸ்தரா அப்ப நாணாவய்யர்னு ஒருத்தர் இருந்தார். தாத்தாவோட லௌகீகமெல்லாம் அவருதான் பாத்துக்கறது. ‘சரிடா, எல்லாரும் மண்ணுல ரெண்டுகாலையும் வச்சுண்டிருக்கா. அவ ஒரு கால தூக்கிட்டா. விடு.வயசு வேற ஆயாச்சு. இனிமே கொண்டுபோய் என்ன பண்றது. வேற ஒரு பிரச்சினையும் இல்லையே. அவபாட்டுக்கு இருக்கா’ன்னு சொல்லிட்டர்.
’அவ சித்தம்போக்குல இருப்பா. வெடிகாலை நாலுநாலரைக்கே எந்திரிச்சு குளிக்க ஆரம்பிப்பா. மூணுமணிநேரமாகும் குளிச்சு துவைச்சு வர்ரதுக்கு. வந்ததும் வீட்ட கூட்டி பெருக்கி துடைக்கிறது. ஒரு இண்டு இடுக்கு விடமாட்டா. சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது குளிக்கிறது. ராத்திரி வீட்டுக்குள்ள சுத்தி வர்ரான்னு காமிரா உள்ளிலேயே படுக்கைய போட்டு அடைச்சிடறது. உள்ளயும் சுத்தம் பண்ற சத்தம் கேட்டுண்டே இருக்கும்…
‘தாத்தா அப்டி ஒரு ஜென்மம் வீட்டுக்குள்ள இருக்கிறதே தெரியாதேங்கிற மாதிரி இருப்பர். ஒரே ஒருவாட்டி அக்காவுக்கு ஒரு வரன் வந்து அதைப்பத்தி பேசறப்ப இப்டி பாட்டியப்பத்தி பேச்சு வந்தது. ‘ஒவ்வொருத்தரும் அவஅவா வாழ்க்கைய கட்டுச்சோறு மாதரி கட்டிண்டுதாண்டா வர்ரா…ஒண்ணும் பண்ணமுடியாது. பிராப்தம்’ னு மட்டும் சொன்னார். பாட்டியும் ரேழி தாண்டறதில்லை. அவங்க ரெண்டுபேரும் கடைசியா எப்ப சந்திச்சுகிட்டாங்கன்னே தெரியலை. ஒருநாளைக்கு காலம்பற அம்மா காமிரா உள்ள திறந்தா சுவர் மூலையிலே சுவரோட ஒட்டி முதுகைகாட்டிண்டு ஒக்காந்திருக்கா. உள்ள போய் என்ன அத்தைன்னு தொட்டதுமே தெரிஞ்சுடுத்து. நானும் ஓடிப்போய் பாத்தேன். அப்டி ஒத்தர் செத்துப்போய் ஒக்காந்திட்டிருக்கிறதைப்பத்தி கேள்விப்பட்டதே இல்லை. சப்பரத்துக்கு வளைச்ச மூங்கில் மாதரி கூன்முதுகு மட்டும்தான் தெரியறது. கைகால் தலை எல்லாமே முன்பக்கம் சுவர் மூலைக்குள்ள இருக்கு.
’அப்பா போய் சோழியன கூட்டிண்டு வந்தார். அவனும் தொணைக்கு இன்னொருத்தனுமா வந்து தூக்கி போட்டாங்க. பொணத்த மல்லாக்க போட முடியலை. கூனும் வளைவும் அப்டியே இருக்கு. பக்கவாட்டிலே போட்டப்ப ஏதோ கைக்குழந்தை வெரல் சூப்பிண்டு தூங்கற மாதிரித்தான் இருந்தது. குளிப்பாட்டறப்ப அம்மா பாத்திருக்காள். கை வெரலிலே தேள்கொட்டிருக்கு. குழிக்குள்ள கைய விட்டுண்டிருக்கா. நல்ல பெரிய கருந்தேள். சின்ன ஒடம்பானதனால வெஷத்தை தாங்கலை. ஜன்னி மாதரி வந்து ஒதட்டை கடிச்சு கிழிச்சுண்டிருக்கா..
’தாத்தாகிட்ட விஷயத்தைச் சொன்னப்ப தம்புராவ கீழ வச்சார். புரியாத மாதிரி கொஞ்சநேரம் பாத்தார். ‘தாசரதே’ன்னு முனகிண்டு மறுபடியும் தம்பூராவ எடுத்துண்டார். வாசலிலெ கீத்துப்பந்தல் போட்டு ஊரெல்லாம் கூடி அழுது ஒரே ரகளை. அந்த சத்தம் எதுக்கும் சம்பந்தமில்லாதவர் மாதரி அவர் தம்பூராவ மீட்டி கண்ணமூடி அவருக்குள்ள இருக்கிற சங்கீதத்த கேட்டுண்டு லயிச்சுபோய் ஒககந்திருந்தர். எடுக்கிறச்ச மூத்த அத்தை வந்து ‘அப்பா வந்து ஒரு பார்வை பாத்துடுங்கோ’ன்னார். ஒண்ணும் பேசாம தம்பூராவ வச்சுட்டு எந்திரிச்சு வந்தர். வாசலை தாண்டி கூடத்துக்கு வந்து கீழே கிடக்கிறவளை ஒரு வாட்டி பாத்துட்டு அப்டியே திரும்பி போய்ட்டர். நேரா போய் தம்பூராவ எடுத்துண்டு ஒக்காந்துட்டர். அப்றம் காவேரிக்கரைக்கு கெளம்பறச்சதான் அவர எழுப்பினாங்க’
‘பாட்டிக்கு சங்கீதம் தெரியும்னு கேள்விப்பட்டிருக்கேன். எங்க தாத்தோவோட அப்பா சுப்பையர் , அவரும் பெரிய வித்வான். வர்ணம் பாடுறதிலே அவர் காலத்திலே அவர்தான் பெரிய ஆள்னு கெட்டிருக்கேன். அவருக்கு தஞ்சாவூர் அரண்மனையிலே இருந்து தானமா குடுத்ததுதான் கையிலே இருந்த நெலமெல்லாம். அவர்தான் எங்க தாத்தாவோட மொதல் குரு. அவர் ஒருதடவை ஒரு நெல விஷயமா பத்தூர் போயிருக்கார். பத்தூர்னா கொரடாச்சேரி பக்கத்திலே இருக்கு. அங்க ஒரு பழைய கோயில் ஒண்ணு இருந்து அழிஞ்சு போச்சு. கோயில் அழிஞ்ச்சாலும் அக்ரஹாரம் அழியலை. ஆனா தரித்திரம்புடிச்ச அக்ரஹாரம். தாத்தா அக்ரஹாரம் வழியா வண்டியிலே வர்ரச்ச ஒரு பாட்டு கேட்டிருக்கு. அந்த வீட்டு முன்னாடி வண்டிய நிப்பாட்டி விசாரிச்சிருக்கார். அது எங்க பாட்டியோட வீடு. பாட்டிக்கு அப்ப ஆறு வயசு. அவதான் பாடிண்டிருந்தது.
‘மத்த விஷயங்களை எல்லாம் கேட்டுண்டு அங்கியே இவதான் என் மாட்டுப்பொண்ணுன்னு வாக்கு குடுத்திட்டார். பொண்ணையே பாக்கலை. ’பொண்ணை பாருங்கோ’ன்னதுக்கு ’இந்த குரலுக்கும் இந்த வித்யைக்கும் இவ எப்டி இருந்தா என்னய்யா? சாட்சாத் சரஸ்வதியைன்னா நான் என் வீட்டுக்கு கூட்டிண்டு போகப்போறேன்’ன்னு சொல்லியிருக்கார். அஞ்சுபவுன் எதிர்ஜாமீன் பண்றதா அவரும் வாக்கு குடுத்தர். கல்யாணம் அவராத்திலேயே நடந்திருக்கு. ஆனா பொண்ணுக்கு ஏழு எட்டு வயசானதுக்கு அப்றமும் சொன்ன பவுனைபோட்டு புக்காத்துக்கு அனுப்ப அவாளாலே முடியலை. அப்பல்லாம் பஞ்ச காலம். வயத்தக் கழுவறதே பெரிய விஷயம். ஏதோ நம்பிக்கையிலே சொல்லிட்டார். முடியலை. அப்டியே வீட்டுலேயே வச்சிருந்தர்.
’தாத்தாவோட அப்பா நாலஞ்சுவாட்டி ஆளு சொல்லி அனுப்பியிருக்கார். சரியா பதில் இல்லை. ‘சரிடா, உனக்கு இந்த பொண்ணு இல்லை. உன் ஜாதகத்திலே வேற எழுதியிருக்குபோல’ன்னு சொல்லிட்டு வண்டி கட்டி நேரா பத்தூர் போய் எறங்கியிருக்கார். சம்பந்தி அய்யர் எங்கியோ வாழை எலை நறுக்க போனவர் ஓடிவந்து கைய கூப்பிண்டு பேசாம நிக்கிறார். இவரு ‘அவ்ளவுதான் ஓய். அதை சொல்லிண்டு போகத்தான் வந்தேன்’ன்னு சொல்லிட்டு திருப்பி வண்டியிலே ஏறி ஒக்காந்துட்டர். அப்ப பாத்தா பின்னாடியே கையிலே ஒரு சின்ன மூட்டையோட பாட்டி வந்து நிக்கிறா. ஒண்ணுமே சொல்லலை, கண்ணு ரெண்டும் வரைஞ்சு வச்சதுமாதிரி இருக்கு. இவரு பாத்தார். ‘சரி ஏறுடீ கோந்தே’னு தூக்கி ஒக்கார வச்சு கொண்டாந்துட்டர்
’ஆனா கடைசி வரைக்கும் பத்தூர் ஆட்கள வீட்டுப்பக்கமே வர விடலை. சீர் செனத்தி ஒண்ணையுமே வாங்கிக்க மாட்டேன்னுட்டர். பிரசவத்துக்கும் சாவுக்கும் ஒண்ணுக்கும் வரப்படாதுன்னுன்னு பிடிவாதமா சொல்லிட்டர். பலபேரு வந்து சமரசம் பேசியிருக்கா. ‘போனா போகட்டும், திரும்பி வரவேணாம்’னு திட்டவட்டமா சொல்லிட்டர். பாட்டியோட அப்பா வந்து தெருவிலே தென்னை மரத்தடியிலே நிக்கிறார். ‘கூட்டிண்டு போனா அப்டியே போயிரும் ஓய்’ நு தாத்தாவோட அப்பா சொல்லிட்டார். ‘இல்லே, எங்க இருந்தாலும் புள்ளைகுட்டிகளோட நெறைஞ்சு இருக்கட்டும். ஏழையோட ஆசீர்வாதம் எப்பவும் அவ பின்னாலே நெழலு மாதிரி இருக்கும்’னு சொல்லிட்டு அழுதிண்டே போனார். அதோட சரி. பிறகு பாட்டிக்கும் பத்தூருக்கும் சம்பந்தமே இல்லாம ஆச்சு. முப்பது வருசத்திலே பத்தூர் அக்ரஹாரமே அழிஞ்சுபோச்சு
’பாட்டி பாடி கேட்டதே இல்லைன்னு எங்கப்பா சொல்வார். ஏன்னு தெரியலை. எங்க தாத்தாவுக்கு ஒரு கொணம் உண்டு. அவர் மத்தவா பாடி கேக்கமாட்டார். அவரே பாடிக்குவர். ’நெறைஞ்ச குளம்டா, அதுக்கு எதுக்கு ஓடைத்தண்ணி’ன்னு எங்கப்பா சொல்வர். அதனாலகூட இருக்கலாம். எனக்கு எங்க தாத்தா ரெண்டுவயசிலே பாட்டு சொல்லி வைக்க ஆரம்பிச்சார். அவருக்கு சிஷ்யர்களுன்னு எங்கப்பா உட்பட எம்பது தொண்ணூறு பேரு உண்டு. ஒத்தர்கூட வீணாப்போகலை. சிலர் பெரிய வித்வான்களா ஆகி வைரக்கடுக்கனும் தோடாவுமா வந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி போவா. சங்கீதமே வராம போனது நான் மட்டும்தான். சங்கீதம் மனசு முழுக்க இருக்கு. சொன்னேளே, கைவெரல் நுனி வரை வழியறது…ஆனா நாக்கிலே வராது. ‘தேவீ, என்னம்மா இது’ன்னு தாத்தா மார்பிலே கைய வச்சுண்டு ஏங்குவார். சரின்னு வயலின் கத்துக்க வச்சார். புல்லாங்குழல் கத்துக்க வச்சார். ஒண்ணுமே சரியா வரலை. அப்றம் கைவிட்டுட்டர்.
’எனக்கு என்ன ஆச்சுன்னு இப்பவும் சொல்ல தெரியலை. ரொம்பநாளைக்கு அப்றம் ஒண்ணு தோணித்து, தாத்தா கத்துக்குடுக்காம இருந்தா வந்திருக்குமோன்னு. அவர் சொல்லிக்குடுக்கிறப்ப உள்ளுக்குள்ள ஒரு நாக்கு மடங்கிடுது. வெளிநாக்கை பேச வைக்கிற மனசோட நாக்கு அது. வெளிநாக்கு கிடந்து அலைபாயும். மனநாக்கு மடங்கி ஒட்டி நடுங்கிண்டிருக்கும். அதான். இப்பகூட நான் பாடிடுவேன். ஆனா ரெண்டு நாக்கும் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்துக்காது.
ஏன்னே தெரியலை. ஆனா ஒரு சம்பவம். அப்பா சொல்லி அம்மா எங்கிட்ட ஒருவாட்டி ரகசியமா சொன்னது. அதையெல்லாம் பிள்ளைகள்ட்ட சொல்லக்கூடாதுன்னுதான் நேக்கு இப்ப படறது. அந்த நெனைப்பு எங்கியோ உறுத்திட்டிருக்கலாம், தெரியலை. எங்க தாத்தாவோட அப்பா மூணுவருஷம் பக்கம் தளர்ந்து படுக்கையிலே கிடந்துதான் செத்தார். கடைசியிலே மலமூத்திரமெல்லாம் படுக்கையிலேதான். தாத்தாவுக்கு அவர் அப்பா மட்டுமில்ல குருவும் கூட. அதனால அவர் அப்டி பாத்துக்கிட்டார். பாட்டியும் கைக்குழந்தைய பாத்துக்கிடற மாதிரி கவனிச்சுகிட்டா.
ஒருநாள் தாத்தாவோட அப்பா என்னமோ முனகறது மாதிரி சத்தம் கேட்டிருக்கு. தாத்தா உள்ள போய் பாத்திருக்கார். படுக்கையிலேயே கமுகுப்பாளைய வளைச்சு தெச்சு பெட்பான் மாதிரி வச்சிருந்தாங்க. அதிலேயே ரெண்டும் போய் அதிலேயே படுத்திருக்கார். கண்ணு நிறைஞ்சு ரெண்டு மைக்குப்பி மாதிரி இருக்கு.தாத்தா ‘அடியே’ன்னு ஒரு சத்தம் போட்டிருக்கார். சமையல் உள்ளிலே வேலையா இருந்த பாட்டி ஓடி வந்திருக்கா. அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்.
ரொம்ப பின்னாடிதான் எழுத வந்தேன் பாலு. சங்கீதம் உசத்திதான். பரிசுத்தமானதுதான். இலக்கியம் அந்த அளவுக்கு சுத்தம் இல்லை. இதிலே அழுக்கும் குப்பையும் எல்லாம் இருக்கு. பிடுங்கி எடுத்த நாத்து மாதரி வேரில சேறோட இருக்கு. ஆடிக்காவேரி மாதரி குப்பையும் கூளமுமா இருக்கு…அதனால இது இன்னும்கொஞ்சம் கடவுள்கிட்ட போய்டறது…தெரியலை. உளறுறேனா என்னன்னு உன்னைமாதிரி மூளை உள்ளவங்கதான் சொல்லணும். நான் எழுதின முதல்கதையெ பாட்டியப்பத்தித்தான்.
‘வாசிச்சமாதிரி இருக்கு..’ என்றார் பாலு. ‘இல்லே, நீங்க வாசிச்சது ரொம்ப பின்னாடி விகடன்ல எழுதினது. இந்தக்கதை அந்தக்காலத்திலே திரிலோகசீதாராம் நடத்தின பத்திரிகையிலே வந்தது. குபராகூட அதிலே நெறைய எழுதியிருக்கார்’ ராமன் புன்னகை செய்தார். ‘அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்’ என்றார்.

ஞானச் செருக்கு…………தீபம் நா. பார்த்தசாரதி




     சமூக சீர்திருத்த வாதியும் பிரமுகருமான சுகவனம் அந்த விஷயத்தில் மிகவும் குரூரமான கொள்கைப் பிடிவாதம் உள்ளவராக இருந்தார். வயது முதிர்ந்தும் பிடிவாதத்தைத் தளரவிடவில்லை அவர்.

     எவ்வளவு வேண்டியவர்கள் வீட்டுத் திருமணமாயிருந்தாலும் வரதட்சிணை, சீர்செனத்தி என்று பெண்ணைப் பெற்றவர்களைக் கசக்கி பிழியும் கல்யாணங்களுக்கு அவர் போவதில்லை. அப்படி ஒரு விரதம் வைத்திருந்தார். சம்பந்தப்பட்டவர்களே நேரில் வந்து பத்திரிகை கொடுத்து அழைத்தாலும் அத்தகைய திருமணங்களை மதித்துப் போகாமல் புறக்கணித்தார். பெண்ணுரிமை இயக்கத்துக்காக கடந்த முப்பது ஆண்டுகளாக அலுக்காமல் சலிக்காமல் போராடி வந்தார் அவர். இந்தப் போராட்டம் அவரை வெகுஜன விரோதியாக்கி இருந்தது.
     "பத்தாயிரம், இருபதாயிரம் என்று விலை கொடுத்து வரதட்சிணைக்கு மாப்பிள்ளை தேடுவது என்பது சந்தையில் காளைமாடு பிடிப்பது போல அநாகரிகமாக நடந்து வருகிறது. இது சாஸ்திரங்களின் படியும் சரி அல்ல, மனிதாபிமானப்படியும் சரியல்ல. பெண்ணடிமைத்தனத்தின் அடையாளங்களில் முதன்மையானது வரதட்சிணை" என்று அவர் முழங்கிய மகாநாடுகளும் கூட்டங்களும் கணக்கில் அடங்காதவை. வரதட்சிணை வாங்கிய கல்யாணத்தில் மறியல் செய்து ஜெயிலுக்குக் கூடப் போய்விட்டு வந்தார்.

     இப்படி அவரும் அவரைப் போன்ற சமூக சீர்த்திருத்த வாதிகளும் எவ்வளவோ கரடியாகக் கத்தியும் நாடு திருந்திவிடவில்லை. பழக்கங்கள் மாறிவிடவில்லை. அதுதான் அவரைக் கூடச் சற்றே விரக்தியடைய வைத்தது.

     "தன் பெண்ணுக்கு வரதட்சிணை கொடுத்து, ரிஸ்ட் வாட்சிலிருந்து பாத்திரம் பண்டம் வரை சகலமும் வாங்கிக் கொடுத்துச் சிரமப்பட்ட ஒரு தாயோ தந்தையோ, அதை மனத்தில் வைத்துக் கொண்டு தன் பிள்ளைக்கு மணமகளாக வருகிற பெண்ணிடம் கருணையாக நடந்து கொள்வதில்லை. அந்தப் பெண்ணணயும் அவளுடைய பெற்றோரையும் கசக்கிப் பிழியவே தயாராயிருக்கிறார்கள். இதை எல்லாம் தவிர்க்க ஒரே வழி படித்த பெண்ணே துணிந்து முன் வந்து 'வரதட்சிணை வாங்கிக் கொள்ளும் எந்த மணமகனையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்' என்று மறுப்பதுதான். இப்படி மறுக்கத் துணியாமல் பெண் ஆணுக்குப் பணிந்து பயந்து போகிறவரை சமூகத்தில் எந்த மாறுதலும் ஏற்படப் போவதில்லை. நாம் எதிர்பார்க்கிற பெண்ணுரிமையும் கிடைக்கப் போவதில்லை" என்று அவர் கூறிய யோசனையை யாரும் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. உலகம் எப்போதும் போலத்தான் நடந்து கொண்டிருந்தது.

     "சுகவனத்துக்கென்ன? பிள்ளையா? குட்டியா? ஒன்றும் இல்லை. அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்" என்று அவருக்குக் குழந்தை குட்டிகள் இல்லாததால்தான் அவர் இப்படி எல்லாம் மேடைகளில் முழங்குவதாகச் சிலர் பேசிக் கொண்டார்கள். யார் என்ன பேசினாலும், எப்படிக் கிண்டல் செய்தாலும் பெண்ணுரிமை இயக்கத்திலும், வரதட்சிணை ஒழிப்பு இயக்கத்திலும் அவருடைய தீவிரம் குறையவே இல்லை. வயது முதிர்ந்த பின்னும் அவரைப் பொறுத்த வரை இளமையின் வேகத்துடனேயே செயற்பட்டுக் கொண்டிருந்தார் அவர். அவ்வப்போது சிறு சலிப்பு ஏற்படுவது மட்டும் தவிர்க்க முடியாததாயிருந்தது.

     ஒரு சமயம் பக்கத்து வீட்டில் குடியிருந்த சிவன்கோயில் குருக்களின் பெண் குழந்தையான சிறுமி காமு, தெருவில் பாண்டி விளையாடினாள். அப்போது பாண்டி விளையாட்டுக்கான கட்டங்களையும், கோடுகளையும் ஒரு பையன் காலால் அழித்தான். அவனை நோக்கி ஆத்திரத்தோடு, "உங்க மாதிரி திமிர் பிடிச்ச ஆம்பளைக் கடங்காரங்களோட கொட்டத்தை ஒடுக்கறேன் பாரு!" என்று அவள் பதில் சொன்னதற்காக அவளைப் பாராட்டித் திண்ணையிலிருந்தே கரகோஷம் செய்து சாக்லேட் வாங்கிக் கொடுத்திருந்தார், சுகவனம். பெண்ணுரிமை இயக்கத்தில் அவருக்கு இருந்த வெறி காரணமாக, யார் ஆண்களைத் திட்டினாலும், ஆண்களின் கொடுமையைப் புரிந்து கொண்டு திட்டினாலும், புரியாமலே திட்டினாலும் அவர்களுக்கு அவருடைய பாராட்டுக் கிடைத்தது; பரிசும் கூடக் கிடைத்தது.

     "மாமா, இப்ப நீங்க எதுக்காகக் கைதட்டினீங்க? எதுக்காக என்னைக் கூப்பிட்டுச் சாக்லேட் வாங்கித் தர்றீங்க?" என்று அன்றைக்கு அந்த அறியாப் பருவத்துச் சிறுமி காமு கேட்ட போது, "உனக்கு அதெல்லாம் இப்பப் புரியாது அம்மா! உன் மாதிரி ஒவ்வொரு பொண்ணும் நெனைவு தெரிந்து வயசு வந்த பின்பும் அந்த மாதிரி தைரியமாக ஒவ்வொரு ஆம்பளைக் கடங்காரனின் கொட்டத்தையும் ஒடுக்கறதுன்னு துணிஞ்சிட்டீங்கன்னா, அன்னியிலேருந்து பெண்குலம் உருப்பட ஆரம்பிச்சுடும்" என்று பதில் சொல்லியிருந்தார் அவர்.


     பல வருஷங்களுக்கு முன்பு நடந்தது இது. ஆண்களையும் அவர்கள் கொடுமைகளையும் அஞ்சாமல் எதிர்க்கும் பெண்கள் உருவாக வேண்டும் என்பது சுகவனத்தின் ஆசை. நாடு முழுவதும் ஓடியாடி நகரங்களில் சிற்றூர்களிலும், சமயம் வாய்த்த போதெல்லாம் இந்தக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தார் சுகவனம். பெண்கள் மகாநாடுகளைக் கூட்டித் தீர்மானம் போட்டார். என்ன பிரசாரம் செய்தும் பயன் இல்லை. அவருடைய மனைவியே அவரைக் கேலி செய்தாள்.

     "உங்களுக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம்? யார் எப்படி வேணும்னாலும் போயிட்டுப் போகட்டும். குடுக்கிறவா குடுக்கிறா. வாங்கிக்கிறவா வாங்கிக்கிறா. நீங்க பிரசாரம் பண்ணி யாரும் எதையும் விட்டுட்டதாகத் தெரியலியே!"

     "நான் அதைப் பத்திக் கவலைப்படலே. நாடு பூரா என்னுடைய நல்ல கருத்துக்களை விதைக்கிறேன். எங்கேயாவது ஒரு சின்ன விதை தப்பித் தவறி முளைக்காமலியா போயிடப் போறது?"     "எப்பிடி முளைக்கும்? நீங்க முளைக்கும்னு சொப்பனம் கண்டுண்டு திண்ணையிலே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். உங்க சொந்தத் தம்பியே நீங்க புலம்பறதைக் காதுலே போட்டுக்கலியே! அவரோட மூத்த புள்ளை கல்யாணத்துக்கு இருபத்தையாயிரம் கையிலே, வைரத்தோடு, வெள்ளிப்பாத்திரம், முப்பதுசவரன் நகை, புள்ளைக்கு ஸ்கூட்டர்னு பொண் வீட்டாரைக் கொள்ளையடிச்சார். போன மாசந்தான் நடந்தது. உங்க தங்கை அடுத்த மாசம் தான் பெண்ணுக்குக் கலியாணம் பண்ணப் போறா. பொண் பி.காம். படிச்சுப் பாங்க்லே ஆபீஸரா இருக்கா. மாசம் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கறா. ஆனாலும் உங்க தங்கை அவளுக்குக் கைநிறைய வரதட்சிணையைக் கொடுத்துத்தான் மாப்பிள்ளையைத் தேடப் போறா. உங்க உபதேசங்களை உங்களோட சொந்தத் தம்பி தங்கைகளே கேட்டுக்கத் தயாராயில்லாதபோது ஊராரா கேட்கப் போறா?"

     அவள் சொன்னவை எல்லாம் உண்மைதான். மனைவியை மறுத்துப் பேச அவரிடம் எந்த வாதமும் இல்லை.

     "நீங்க சொல்ற லட்சியங்களை நீங்களே கடைப்பிடிச்சு மத்தவாளுக்கு முன்மாதிரியா நடந்து காமிக்கலாம்னா உங்களுக்கு பகவான் குழந்தை குட்டிகளையே குடுக்கலை."

     மனைவி இதையும் சிரித்துக் கொண்டேதான் சாதாரணமாகச் சொன்னாள். ஆனாலும் அவருக்கு இது உறைத்தது. ஆசார்ய சுவாமிகளிடம் போய் ஆசி பெற்றுத் திருமணம் செய்யும் பெரிய மனிதர்கள் கூட அவருடைய உபதேசங்களான, 'வரதட்சிணை கூடாது, ஆடம்பரங்கள், ஜானவாசம் எல்லாம் வேண்டாம்' என்ற அறிவுரைகளைப் பொருட்படுத்துவதில்லை. வரவரக் கல்யாணம் என்ற புனித உறவு ஒரு வியாபாரம் போல ஆகிவிட்டது. ஆண், பணத்தின் துணையோடு ஒரு பெண்ணைத் தேடிப் போனால் அது பாவமாகவும், குற்றமாகவும் கருதப்படுகிறது. சமூகப் பழிக்கும் இழிவுக்கும் கூட ஆளாகிறது. ஆனால் ஒரு பெண் எத்தனை அழகியாயிருந்தாலும் அவளுடைய பெற்றோர் அநியாய விலை கொடுத்துத்தான் அவளுக்குக் கணவனைத் தேட வேண்டியிருக்கிறது. அதை யாரும் பாவமாகவோ குற்றமாகவோ கருதுவதில்லை. சமூகமும் பழிப்பதில்லை.

     நினைக்க நினைக்க அவர் மனம் குமுறியது. நாட்டில் ஒரு படித்த பெண்ணாவது இதை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்த மாட்டேனென்கிறாளே! சுயமரியாதையுள்ள, மானமுள்ள, ரோஷமுள்ள,
ஒரு புதுமைப் பெண் கூட இன்னும் இங்கே பிறக்கவே இல்லையா? ஒரு புருஷனின் துணைக்காகவும் சுகத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் பெண் கொள்ளை விலை கொடுப்பது அவளுக்கே உறைக்கவில்லையா?

     இவ்வளவு அவமானமும், பணப் பேரமும், தாழ்வும் ஏற்பட்டும் குனிந்த தலை நிமிராமல் இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு எப்படியாவது புக்ககத்தில் நுழைந்து விடத் தயாராயிருக்கும் பெண்கள் உள்ளவரை இந்நாட்டில் பெண்ணுரிமையாவது வெங்காயமாவது!

     பெரிய நகரங்களில் பெண்ணுரிமை மகாநாடு என்று போட்டுப் பந்தல் நிறையப் படித்த பெண்களைக் கூடச் செய்து, அவர்களின் உற்சாகமான கரகோஷத்துக்கிடையே முப்பது வருஷமாகத் தாம் முழங்கிய முழக்கங்கள் ஒரு பயனும் அளிக்கவில்லையே என்று எண்ணியபோது சுவனத்துக்குத் தம்மேலேயே வெறுப்பாயிருந்தது; கோபம் கோபமாக வந்தது.
     "நிமிர்ந்த நன்னடை          நேர்கொண்ட பார்வையும்     நிலத்தில் யார்க்கும்          அஞ்சாத நெறிகளும்     திமிர்ந்த ஞானச்           செருக்கும் இருப்பதால்     செம்மை மாதர்          திரும்புவதில்லையாம்"

என்று பாடிய மகாகவி பாரதியின் புதுமைப் பெண் ஒருத்தியை இந்த இருபதாம் நூற்றாண்டில் தமது எழுபதாவது வயதில் கூட அவரால் எங்கும் காணமுடியவில்லை. மிகவும் ஏமாற்றமாயிருந்தது அவருக்கு. முதுமையும் மனத்தளர்ச்சியும் அவரைப் படுக்கையில் தள்ளிவிட்டன. கூட்டங்களுக்குப் போவது குறைந்தது. பெண் விடுதலை, பெண்ணுரிமை பற்றி முழங்கி வந்த அவர், தமது கொள்கைகளில் எந்தத் தவறும் இல்லை என்று இன்னும் திடமாக நம்பினாலும் நாட்டில் அந்தச் சிந்தனைகள் அறவே முளைக்க மறுப்பதை எண்ணி வெதும்பினார். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் துடுக்குத்தனம் நிறைந்த பேதைச் சிறுமியாயிருந்த போது, 'உங்க மாதிரி ஆம்பிளைக் கடங்காரங்களோட கொட்டத்தை ஒடுக்கறேன் பாருடா!' என்று ஒரு பையனைப் பார்த்துச் சவால் விட்ட பக்கத்து வீட்டுக் குருக்களின் பெண்ணுக்கு இப்போது கல்யாண வயது. காமு படித்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தாள். மாதச் சம்பளம் அறுநூறு வந்தது. ஆனாலும் அவளுக்குத் திருமணம் முடியவில்லை. கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் ரூபாய் வரை தேவைப்பட்டது. பாவம்! குருக்கள் அவ்வளவு தொகைக்கு எங்கே போவார்? சிரமப்பட்டார்; திணறினார்.

     அதை எல்லாம் விட வேடிக்கை, படித்துப் பட்டம் பெற்றும் தங்கள் பையனுக்கு வேலை கிடைக்காததால் பெண் வேலை பார்க்கிறாள், பையன் வேலை கிடைக்காமல் சும்மாயிருக்கிறான் என்று கேவலமாகப் பேசுவார்கள். ஆகவே கல்யாணத்துக்கு முன்னால் பெண் வேலையிலிருந்து விலகி விட வேண்டும் என்று குருக்களிடம் நிபந்தனை போட்டிருக்கிறார் ஒரு தந்தை. அது ஒன்று மட்டும் நிபந்தனை அல்ல. கையில் ரொக்கம் பத்தாயிரம், இருபது சவரன் நகை, வைரத்தோடு, பாத்திரம் பண்டங்கள் என்று செலவுள்ள பெரிய பட்டியல் வேறு!

     படித்து வேலை பார்க்கத் துப்பில்லாத பையனுக்காக இவ்வளவு சீர் செனத்திகளும் பண்ணி, ஏற்கெனவே தான் பார்த்துக் கொண்டிருக்கிற வேலையையும் விட்டுவிட்டுத் திண்டாடக் காமு தயாராயில்லை. அந்த ஏற்பாடு பிடிக்காததால் கல்யாணம் தட்டிப் போயிற்று. சில பையன்கள் சம்பாதிக்கிற, வேலை பார்க்கிற பெண் தான் வேண்டுமென்று வந்தார்கள். ஆனால் பெண் சம்பாதிக்கிறாள் என்பதற்காக வரதட்சிணை, இருபது சவரன் வகையறாக் கோரிக்கைகளில் எதையும் அவர்கள் குறைத்துக் கொள்ளத் தயாராயில்லை.

     இந்த விவரங்களை எல்லாம் மனைவி மூலந்தான் அறிந்து கொண்டார் சுகவனம். அவரைப் பொறுத்த வரை வெளி நடமாட்டமே இல்லாமற் போயிற்று. படுக்கையோடு படுக்கையாகக் கிடக்கும் நோயாளியாகி விட்டார் அவர்.

     இப்படிப் பக்கத்து வீட்டுக்குச் சுமார் ஆறு மாத காலத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் வந்து பார்த்துத் தட்டிப் போயிற்று. 'காமுவுக்கு ராசியில்லை' என்று கெட்ட பேர் வேறு உண்டாகி விட்டது. படித்த பெண்ணாகிய காமுவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. தடியன் தடியனாக ஆண் பிள்ளைகள் பெற்றோர், சகோதர சகோதரிகளுடன் வந்து இனிப்பு காரம், காபி சாப்பிட்டுவிட்டுத் தாறுமாறாகக் கேள்வி கேட்டுவிட்டுப் பாட்டுப் பாடச்சொல்லி ரசித்துவிட்டுப் போவது ஒரு நடைமுறையாகிவிட்டது.

     கண்காட்சியில் விற்பனைக்கு ஊதுவத்திக் கடை வைப்பது போல் இந்தியப் பெண்கள் ஆகிவிட்டார்களே! எவன் வேண்டுமானாலும் வந்து மோந்து பார்த்துப் பேரம் கூடப் பேசிவிட்டு வாங்காமலே போய் விட வசதி இருந்தது. காமு உள்ளூற மனம் குமுறினாள்; கொதித்தாள்.

     பதின்மூன்றாவது ஆளாக அன்று இன்னொரு பிள்ளை பார்க்க வரப்போவதாகக் குருக்கள் சொல்லியிருந்தார். அலுவலகத்தில் அரை நாள் லீவு போட்டு விட்டுப் பிற்பகலிலேயே வீடு வந்துவிட்டாள் காமு. தாய் காமுவைச் சிங்காரித்தாள். பெண் பார்க்கும் நாடக விழாவுக்குத் தயாராக்கினாள். இனிப்பு காரம், காபி எல்லாம் தயாராயின.

     பிளட் பிரஷர், பலவீனம், அசதி எல்லாமாகச் சேர்ந்து அன்று சுகவனத்தை மிகவும் தளரச் செய்திருந்தன. அடித்துப் போட்டது போல் படுக்கையில் கிடந்தார். வீட்டுக்கு வெளியே நடமாட்டம் இல்லாது போய் மாதக் கணக்காகி விட்டது.
     மாலை ஏழு மணி இருக்கலாம். படுக்கையருகே யாரோ விசும்பி விசும்பி அழும் ஒலி கேட்டுச் சுகவனம் கண் விழித்தார்.

     நன்றாக அலங்கரித்த கோலத்தில் பக்கத்து வீட்டுக் குருக்களின் மகள் காமு கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்தாள்.

     "மாமா, நீங்கதான் என்னைக் காப்பாத்தணும். அப்பா என்னை அடிக்க வரா..."

     "ஏன்? நீ என்ன தப்புப் பண்ணினே?"

     "ஒரு தப்பும் பண்ணலே மாமா! இன்னிக்குச் சாயங்காலம் என்னை ஒருத்தன் பொண் பார்க்க வந்தான். அவனோட அப்பா அம்மாவும் கூட வந்திருந்தா. எல்லாம் முடிஞ்சு வரதட்சிணை பேரம் பேசறப்போ ஒரு ஸ்கூட்டர் கண்டிப்பா வாங்கித் தரணும்னு அந்தப் பையனே வற்புறுத்தினான்.

     "இப்ப உடனே முடியாது. கலியாணம் ஆகட்டும். ஆடிக்கு அழைக்கறப்ப ஸ்கூட்டர் விஷயம் கவனிக்கிறேன்னு அப்பா பணிவாக் கெஞ்சிப் பார்த்தார்.

     "அவன் கேட்கலே. இப்பவே வாங்கியாகணும்னு பிடிவாதம் புடிச்சான். இந்தக் கல்யாணத்தையே, அப்பா பரம்பரை பரம்பரையா ஆண்டு அநுபவிச்ச வீட்டை விலைக்கு வித்துத்தான் பண்ணப் போறார். அதுலே ஸ்கூட்டரும் சேர்ந்ததுன்னா அவராலே தாங்க முடியாது. என்னோட போகலே. இன்னம் எனக்கு ரெண்டு தங்கைகள் வேற இருக்கா, எங்க வீட்டிலே.

     "நிலைப்படி ஓரமா நின்னு இந்தப் பேரத்தைக் கவனிச்சிண்டிருந்த எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. நானும் எவ்வளவோ அடக்கிப் பார்த்தேன். முடியலை. திடீர்னு முன்னாலே போய் நின்னு, 'அப்படீன்னா நீ ஸ்கூட்டரையே தாலி கட்டிக் கல்யாணம் பண்ணிக்கோடா! எனக்குத் தாலி கட்ட வேண்டாம். போடா வெளியிலே!" என்று கூப்பாடு போட்டு அவங்களை எல்லாம் துரத்திட்டேன்.

     "'காரியத்தைக் கெடுத்திட்டியேடீ பாவி! நான் கடனோ உடனோ வாங்கி ஸ்கூட்டரைக் குடுத்துட்டுப் போறேன். நீ ஏண்டி குறுக்கே வந்து பேசினே?' என்று அப்பா கையை ஓங்கிண்டு என்னைத் துரத்தறார். நீங்களே சொல்லுங்கோ நான் செஞ்சது தப்பா மாமா?"

     "ஒரு தப்பும் நீ பண்ணலே, குழந்தை. நீ பண்ணினது தான் சரி. உன்னை, இதுக்காக மனப்பூர்வமாப் பாராட்டறேன். இந்தா, இதை வச்சுக்கோ" என்று படுக்கைக்கு அருகே ஸ்டூலில் இருந்த பழக் கூடையிலிருந்து ஆப்பிள் ஒன்றை எடுத்துக் காமுவிடம் கொடுத்தார் சுகவனம்.

     அவள் பல வருடங்களுக்கு முன்னால் பேதைப் பருவத்துச் சிறுமியாகத் தெருவில் பாண்டி விளையாடும் போது, 'உன்னை மாதிரி ஆம்பிளைக் கடங்காரங்களோட கொட்டத்தை ஒடுக்கறேனா இல்லையா பாரு!' என்று ஒரு பையனிடம் சவால் விட்ட போது கரகோஷம் செய்து சாக்லேட் வாங்கியளித்து அவளைப் பாராட்டிய அதே உற்சாகத்தோடு இப்போது படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார் சீர்திருத்தவாதி சுகவனம்.

Giant fleas fed on dinosaurs


CHINESE ACADEMY OF SCIENCES   
HUANG_Diying_nonistock_-_ancient_flea
Giant fleas from the Middle Jurassic of Daohugou, China.
Image: HUANG Diying
Professor HUANG Diying from Nanjing Institute of Geology and Palaeontology, Chinese Academy of Sciences and his colleagues make an important progress in Palaeoentomology recently. A paper entitled “Diverse transitional giant fleas from the Mesozoic era of China” has been published online in Nature on the 29th, February.

Fleas, including circa 2500 recent species or subspecies, are one of the dramatically specialized group of insect lineages, with reduction of wings, laterally-flattened body, and small size (usually 1-3 mm long). Fleas are ectoparasiticinsects specialized for feeding on the blood of mammals (including human beings) or birds. Fleas are difficult preserved as fossils like other ectoparasitic insects. Definitive fossil evidence of fleas has been largely confined to Cenozoic amber, and they are of extant forms. Therefore, the evidence suggesting the origin and early evolution of fleas has been lacking. Hitherto, only one record of fossil flea Tarwinia has been described from the Late Cretaceous of Australia (ca. 120 Ma). However, its affinity remains highly controversy.

In recent years, HUANG Diying has found several giant flea from the Middle Jurassic Daohugou biota (ca. 165 Ma) at Ningcheng Couty, Inner Mongolia and and the Early Cretaceous Jehol biota (ca. 125 Ma) at Beipiao City, Liaoning Province of China, which provides new insights into the origin and early evolution of fleas and the adaption of hosts. This finding traced back the earliest occurrence of fleas (Order Siphonaptera) at least for 40 million years.

These Mesozoic fleas are of great body sizes, approximately15 mm in length, and some longer than 20 mm. As the extant fleas, the ancient females are larger than males. For example, a flea species from Daohougou is 14 mm for female and only 8 mm for male. They are wingless insects, but more or less dorso-ventrally flattened, their antennae are short and compact with more antennal segments (16-19 segments) than extant ones (11 segments); they have a very long piercing siphonate mouthparts, elongate legs armed with various ctenidia, but its hind legs are not jumping type as in Recent fleas, abdomen covered numerous posteriorly-directed setae; male genitalia large and exposed.

New Mesozoic fleas with very long piercing mouthparts suggest a resemblance to some Mesozoic siphonate mecopteran, which supports the hypothesis that fleas are derived from Mecoptera.

By contrast the Tarwinia, the new Middle Jurassic and Early Cretaceous fleas armed with various ctenidia on legs and numerous posteriorly-directed setae on abdomen, indicating an adaption to hosts with hairs or furs. From the same period, a number of mammals have been described, but they are normally of small body size. If they are hosts for ancient fleas, the fleas should have been hidden in their nests. Nevertheless, the long siphon of fleas is obviously able to pierce the skin of feathered dinosaurs, so this is also a possibility. In addition, a peculiar insect from the Early Cretaceous of Russia, Saurophthirus, was suggested as an ectoparasitic insect for pterosaur. We suggest it is also a specialized flea. The above evidence indicates Mesozoic fleas have already display obvious specialization for adapting to different hosts.

This research was financially supported by National Natural Science Foundation of China, Ministry of Science and Technology of PRC, Chinese Academy of Sciences, and State Key Laboratory of Palaeobiology and Stratigraphy.

References: Huang, D., Engel, M. S., Cai, C., Wu, H. & Nel, A. Nature http://dx.doi.org/10.1038/nature10839 (2012).
Editor's Note: Original news release can be found here.

Top 10 Worst Female Health Habits


From workouts to healthy diets, many of us make an effort to look after ourselves. However, we could be compromising our health on a daily basis without even knowing it. It includes everything, from carrying heavy handbags to wearing crippling heels. In order to improve the health, we have listed 10 worst female habits that you should try to break...

1. Wearing heels


More and more of us are opting to wear heels on a daily basis, and this could be bad news for our health. High heels affect our posture, put pressure on joints, and can lead to a 
range of conditions including arthritis, hammer toes, back pain and tendon injuries � and that's before you take into account any heel-related accidents! To minimize damage, limit your heels to 1.5 inches for daily wear, and wear insoles to help reduce the pressure on joints.

2. Carrying a heavy handbag


With the rising number of gadgets and accessories the majority 
of women haul around, many of us are carrying around several pounds of weight on our shoulders every day. As a result, lots of us are also putting our long term health at risk. While you may not feel the effects right now, lugging around a heavy handbag can lead to serious back problems and neck pain as well as poor posture. Don't wait until the damage is done � do your health a favour and try clearing out all non-essential items and switching to a smaller bag.

3. Sleeping in makeup


Most of us have succumbed to the temptation to sleep in our post-party makeup at some point. However, leaving makeup on overnight � along with the dirt and oil that naturally accumulates on skin throughout the day �is a quick route to clogged pores, congested skin and spots. Sleeping with mascara and eye makeup on can also affect your health by causing eye irritation, bloodshot eyes or even infection.

4. Matching men drink for drink

From networking drinks to 
first dates and social events, there are many instances when women may feel compelled to keep up with the drinking habits of the opposite sex. However, women not only tend to weigh less than men but they have less body water to dilute the alcohol, which means they tend to get more drunk more quickly. To minimize the risks of alcohol on your health, try to keep within the recommended guidelines for alcohol consumption and alternate alcohol with soft drinks.

5. Wearing the wrong size clothes


It is thought that more than 70 per cent of 
women are wearing the wrong bra size. However, wearing a badly fitted bra can not only affect the look of your clothes, but research suggests it can cause a range of health problems including back, neck and breast pain, breathing difficulties, poor posture, skin irritation, circulation problems and even irritable bowel syndrome. Rather than guessing your size, make sure you get measured to ensure you are getting the support you need.

6. Worrying and harbouring regrets


Stress is damaging to both our physical and 
mental health, and women are twice as likely as men to suffer from stress-related disorders, as well as having higher rates of depression and anxiety. While it is thought there may be biological reasons for this, worrying about the future and dwelling on regrets can also add to our problems, with research suggesting that women are more than twice as likely as men to harbour regrets over lost loves and broken relationships.

7. Obsessing over appearance


While both genders suffer from body insecurity, many women tend to overly obsess over their 
idea of the perfect� body. Research findings published in the journal Obstetrics & Gynecology found that 16 per cent of the normal or underweight women studied believed themselves to be overweight, while a studycommissioned by Dove found that 90 per of women wanted to change at least one aspect of their appearance. Body insecurity not only affects our mental health, but it can also lead to physical damage caused by extreme diets, yo-yo dieting, eating disorders and cosmetic surgery.

8. Emotional eating


While comfort eating affects both genders, research has suggested that men are more likely to reinforce positive emotions with food, while women comfort eat when they're sad. Women are also more likely to satisfy their cravings with sweet, high calorie foods. Rather than letting your waistline suffer next time you're feeling blue, try distracting yourself from cravings by doing something you enjoy, or boost your endorphins and health with an 
uplifting workout.

9. Not getting enough sleep


Not only can lack of sleep make us look and feel at our worst, but insufficient shut-eye can also lead to increased accidents, calorie consumption and heart disease risk. Unluckily for women, statistics suggest that sleep problems affect more women than men, while a study by the University of Michigan found that women are more than twice as likely to give up sleep to care for others. Unfortunately, sleep has been found to affect women's blood pressure and mood more than men's, making it imperative that you do your best to get a good night's sleep.

10. Putting themselves last

Not only are women more likely to compromise their sleeping habits to care for children and others, they are also prone to putting their own wants and needs at the bottom of a hectic to-do list of chores and obligations. To avoid running yourself into the ground, learn to sometimes say no to those requests and commitments that are less than essential, and make sure you set aside some me� time each week to do something enjoyable just for you.