Search This Blog

Thursday, May 5, 2011

Second Biggest Electrical Power Plant on Earth

The Second Biggest Electrical Power Plant on Earth is in Brazil/Paraguay
ITAIPUSecond Largest power plant on the Earth- 12600 MW of Hydropower




Total view of the ITAIPU power plant
Left part shows overflow (spillway), the power station is located in the middle.




At the bottom of the 196 m tall dam , the white tubes are containing the inlets for the 18 turbines (715 MW each).




On top of the 7.6 km dam, a 12 800 000 m³ of concrete was used for the project ITAIPU.




The lake created by ITAPU dam. Its area reaches 1 350 km2, its length 170 km and its average width 7 km.

  

One 715 MW electrical generator
The diameter of the rotor is almost 16 m, and the rotating mass




Inside the ITAIPU Powerhouse
Dimensions: length: 986 m, maximum height: 112 m and width: 99m.
The red line on the floor indicates the border of Brazil and Paraguay .






The control center of the 18 generators
Left half of it (in Brazil ) controls the 60 Hz units, right half (in Paraguay ) controls the 50 Hz units.



A 18 kV to 525 kV transformator for 825 MVA
To increase the voltage of the generators, transformers with a capacity of 825 MVA and 768 MVA(for 50 and 60 Hz respectively) were specified.



Power switches for high voltages
Power switches at the "Left Bank Substation" (FURNAS).





The AC-DC rectifier
The FURNAS rectifier substation is accomplished by four lines of of 500 kV.
Output DC voltages are symmetrical ± 500 000 Volt SC.



Electricity (AC) leaving ITAPU to Sao Paulo
6 300 MW of electrical power generated by the 60 Hz units is transported by an 891 km AC transmission system, formed by three lines of 750 kV.



"Peanuts"- a word often used from so called "economic experts" and representatives when it comes to Renewable Energies.
"Not sufficient", "unreliable", "not feasible", are common bias.

ITAIPU shows they are wrong! Having more power than 10 nuclear power stations it supplies the second largest city on the planet with zero-emission electricity since 1984, still being extended until 1991. 26% of the electrical power consumption of Brazil and 78% of Paraguay are supplied by ITAIPU.

Located at the Brazilian-Paraguayan border and not far from the Argentinian border, the first step of the initiation was already in 1966 when the Ministers of Foreign Affairs of Brazil and Paraguay signed a joint statement known as the "Act of Ygazu". By this a study and evaluation of the hydraulic resources of the Parana river (owned jointly by Brazil and Paraguay ) followed.

On April, 26, 1973, the two governments of the states signed a treaty "for the development of the hydroelectric resources of the Parana River " and founded "ITAIPU Binacional" (cooperation with the legal, administrative and financial capacities and technical responsibility to plan, set up and operate the plant) in May, 17, 1974.

The construction work started in 1975, reaching its peak in 1978 with 30 000 people at work. Monthly on-site concrete production reached 338 000 m³. In total, 15 times the mass of concrete used for the "Eurotunnel" was supplied. The height of the dam reaches 196 m, its length 7.76 km. The lake created by this is 170 km long and contains 29 billion tons of water.

Unit 1 started to operate in December 1983. Electrical grid connection to Paraguay was established in March 1984, Brazil was connected 5 months later. In March 1991 the last unit ( No.18) was put into operation.

The water intake of one single 715 MW Francis-turbine is 700 m³/s, its weighted efficiency is 93.8%.

Each year ITAPU generates 75 TWh of electricity and avoids 67.5 million tons of carbon dioxide emissions - compared to coal power plants.
The final cost of ITAIPU amounts to US$ 20 billion, 50% of this value are direct investments and balance financial charges.

If whole area of the lake - at nominal level - would be covered by solar modules the power of the would be 135 000 MW p, which would produce 230 TWh a year. For the same yearly output as ITAIPU a solar PV-plant would cost US$ 132 billion 
 

Powerhouse (18 units including erection bays) - (m)
Length
968
Width
99
Height
112
Roof level
148
Generator hall floor level
108
Spacing between units
34
01 - El 40 - Foundation of the dam
02 - El 92,4 - Access to turbine pit
03 - El 98,5 - Unit auxiliary service - Pure water system
04 - El 98,5 - Excitation system, access to generator housing and speed governo
05 - El 108 - Step-up transformers
06 - El 108 - Generator hall floor and local control rooms
07 - El 122 - Ventilation system
08 - El 127,6 - Cable gallery
09 - El 128,2 - GIS - SF6
10 - El 133,2 - Principal panels of AC auxiliary service and diesel generator hall
11 - El 144 - Dam auxiliary service
12 - El 214 - Gate hydraulic pump group

 
Rolling track of gantry crane
Rolling track (m)
Span
10,00
Total length
857,6
Rail-top elevation
225
Penstocks
Quantity
18
Weight each penstock (t)
883
Internal diameter (m)
10,5
Developed length (m)
142,2
Rated flow (m³ / s)
690
Water Intake Trashracks
Quantity
18
Rack panels per intake
Trashrack Cleaning Machine
Quantity
Jib crane capacity (kN)
200
Vertical lift of rake (m)
61,5
Rake capacity (m³ / kN)
2/2,5
Service Gates (Fixed wheel type)
Quantity
18
Span (m)
8,2
Total height (m)
19,3
Sill beam elevation (m)
177,6
Maximum flow through gate (m³/s)
750
Stop-logs
Sill beam elevation (m)
Span (m)
Height (m)
Quantity
Gantry cranes
Quantity
Capacity (kN)
1.100/400
Max. hoisting speed 50/60 Hz (m/min.)
4,6/5,5
Min. hoisting speed 50/60 Hz (m/min.)
1,7/2,0
Rated travel speed 50/60 Hz (m/min.)
25/30

 
Generator
Quantity
Frequency
Rated power
Rated voltage (kV)
Number of poles
Moment of inertia - GD2 (t.m²)
Power factor
Heaviest component - rotor (t)
Weight of each unit 50 / 60 Hz (t)


 
Turbine
Quantity
Type
Rated power (MW)
Design speed - 50 / 60 Hz (rpm)
Net design head (m)
Rated flow (m³/s)
Heaviest component - rotor (t)
Weight of each unit (t)


Bank of Single-Phase Transformers
50 Hz 9 + 2 Reserve Units
60 Hz 9 + 2 Reserve Units
Rated Power of Each Bank
50 / 60 Hz (MVA) 825/768
Impulse Level (Phase/Neutral)
High Voltage (kV) 1.550/110
Low Voltage (kV) 125
Type of connection - Y
Weight of each transformer (kg)
217 x 103 (50 Hz)
189 x 103 (60 Hz)
Cooling forced oil and water
SF6 Gas Insulated Substation
Maximum Rated Voltage (kV)
Rated Current (A)
4.000
Rated Break Current (kA)
63
Quantity of Circuit Breakers
52
Length of Enclosed Busbars Isolated by SF6 Gas (m)
7.500
SF6 Pressure in the Circuit Breakers (kPa)
620
Quantity of Isolation Switches
124
Quantity of Current Transformers
396
Quantity of Potential Transformers
24
Quantity of Surge Arresters
126
Mass of SF6 Gas (kg) 108 x 103

SCADA - Supervisory Control and Data Acquisition
The SCADA System, is a means of supervision and control based on computers. The general purpose of this System is to provide the Plant Operators with detailed and automatic information in a centralized form - at present being distributed over more that 1,500 panels in the diverse galleries along the length of the power plant - and organized in real time (that is, at the instant of occurrence) concerning the electrical, mechanical, thermal and hydraulic conditions of the equipment and the installations. This will permit the operators in the Central Control Room to exercise a permanent analysis of the situation and facilitate taking the correct and appropriate decisions within the time limits necessary to maintain the generation of energy.
Its operation is based on the installation of electronic devices in the diverse units of equipment in the Power Plant (generators, turbines, transformers, etc.) for the automatic acquisition of operational information. This information will be transferred to a central computer, where it will be processed by specific software. When the software identifies abnormal conditions, the Operators will be instantly informed by signals on the computer monitors. The required corrective actions or commands can be taken through these same computers.
The SCADA System is scheduled to be installed by the middle of 2002 and will provide the Operators with supervision over approximately 18,000 points, significantly improving the operating conditions of the Plant and permitting, in many cases, the prevention of disconnections, as well as allowing greater speed of recovery from the operational problems that may occur.


 





Interesting Facts about Sri-Lankan Rs.1000 Note

Interesting Facts about Sri-Lankan Rs.1000 Note



   

Astonishing Fact  Behind the 1000 Rupee Note


How many of us know that the elephant  printed with a man wearing a
cap near it,  appearing on the 1,000/- rupees notes, has an  astonishing
story behind it?


Can anyone  imagine that the elephant and the man wearing a  cap near it
are from the eastern province  and the man is a Muslim? Yes, they are
from  the eastern province. The man is Umar Lebbai  Panicker from Eravur
in the Batticaloa  district and the tusker in the note was caught  in
1925 in the Eravur forest and reared by  him.

It is said Umar Lebbai Panicker  presented this tusker to Dalada
Maligawa and  within a short period it escaped from there and  went in
search of him to Eravur. He brought  it back again and handed over to
the Dalada  Maligawa.

His Excellency President late  J.R. Jayawardene in order to honour the
long  services of the tusker had declared it as a  national asset in
1984. This tusker named as  Raja adored the Esala Perehera processions  
in Kandy and thus became national fame and  honoured nationally.

After this, the  government in power then, decided to honour the  person
presented this elephant to Dalada  Maligawa by printing the picture of
him with  the tusker nearby, on the notes of rupees 1000/-  and the
village Eravur was thus honoured by  this action.

The tusker Raja that served  in Dalada Maligawa and brought fame and  
honour not only for itself but also to the  person presented it to
Dalada Maligawa and  the village Eravur finally died on July 15, 1988  
after serving 50 years in the Maligawa.  

"Panicker "is a name given to people who  catch elephants in the
forest, rear them and  sell to people involved in business,              
transporting or carrying very heavy  materials and things. Their
decedents are  still identified as "Panicker Thaththi" or  "Panicker
Kathara"in Eravur. There is a road  in Eravur known as 'Panicker Veedy'
named  after their name.  

Natural Remedy to open heart veins

No need now for any Angiogram or Bypass !!  


Natural therapy for opening the veins of the heart.


Please pass it to your colleagues or friends.


For Heart Vein opening:


Lemon juice             01 cup
Ginger juice             01 cup
Garlic  juice             01 cup
Apple vinegar           01 cup


Mix all above and boil on low heat, approximately half  hour, when it becomes 3 cups, take off stove and let cool. After cooling, mix 3 cups of natural honey and keep it in bottle.
Every morning before breakfast use one Table spoon regularly. Your blockage of Vein's will open.
No need now for any Angiography or Bypass...
Please pass on this to your real well wishers...
Wishing you a healthy life..

Prof. Dr. S. Vikineswary
Biotech Division
Institute of Biological Sciences
University of Malaya
50603 Kuala Lumpur
Malaysia

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

சோற்றுக் கற்றாழை


Join Only-for-tamil
இது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை .


சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது


வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை. குமரி


தாவரப்பெயர்- AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.



சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.


இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும்.


தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், ஏழு முறை கழுவுவது. அதை சுத்தி செய்யும் முறையாக சித்தர்களால் கூறப்படுகிறது .


சிறந்த மலச்சிக்கல் போக்கி.


ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும்.


கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது.


இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும்.
முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது.


அழகு சாதன பொருள்களின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.
சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.


எப்பொழுதும் வாடாத  வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.


கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.


தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.


இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.


முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.


ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.


இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.


கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.


நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.


உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.


வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.


மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க்' உதவும். இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.


மனித உடலில் மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம் அளிக்கிறது.

 சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை .அழகுதரும் மூலிகை . 

கீதை காட்டும் பாதை. -முனைவர். சி. சேதுராமன்.

கீதை காட்டும் பாதை.
-முனைவர். சி. சேதுராமன்.

பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு கூறாக அமைந்துள்ளது. பாண்டவர் -கௌரவர்களிடையே மூண்ட பெரும் போர்க்களத்தின் நடுவில் இறைவன் கண்ணனால் அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கப்பட்ட நூல் பகவத்கீதையாகும். இம்மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்றும் கூறுவர். போர்க்களத்தினூடே மனதை ஒருநிலைப்படுத்தக் கூறப்பட்ட யோகமுறைகளே பகவத்கீதையாகும்.
பகவத்கீதையின் சிறப்பு
"அமிர்த சாத்திரம்" - அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாத்திரமாகிய பகவத்கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சிலர் கருதுகின்றனர்.
இவ்வுலகில் அனைவரும் மன உளைச்சலுடன் வாழ்கின்றனர். அல்லது அச்சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இம்மன உளைச்சல் பல்வேறு விதமான நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. மனிதன் இம்மன உளைச்சலால் பல துன்பங்களுக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆளாகின்றான். இத்தகைய துன்பங்களில் இருந்து அவன் விடுபட்டு மன அமைதியுடன் வாழ வேண்டும். இத்தகைய மன அமைதியுடன் வாழும் வாழ்க்கையைப் பற்றியே பகவத்கீதை எடுத்துரைக்கின்றது.
உடலும் உள்ளமும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்குகின்றன. உளத்திற்கு ஊறு நேரிட்டால் அது உடலைப் பாதிக்கின்றது. உளம் அமைதி அடைந்தால் உடல் நலம் பெறுகின்றது. அத்தகைய உள அமைதியை நல்கும் உன்னத நூலாகப் பகவத்கீதை இருக்கின்றது. போர்க்களம் என்பது இவ்வுலக வாழ்க்கை. அதில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள் அனைத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகள். போராட்டம் நிறைந்த வாழ்வில் மனம் தடுமாற்றம் அடையாது வாழ்வதே உண்மையான வாழ்க்கை; அதுவே யோக வாழ்வு. இத்தகைய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்று கூறும் வாழ்வியல் சாஸ்திரமாக பகவத்கீதை அமைந்திலங்குகிறது.
பகவத் கீதை தரும் யோகம் பற்றிய விளக்கம்
பகவத்கீதை மனம் இறைவனுடன் இணையும் வழியை எடுத்துரைக்கின்றது. இறைவனுடன் உயிரானது இணைகின்ற நெறிகளை யோகமாகக் கூறுகிறது. யோகமாவது சமத்துவம் ஆகும். இதனை,மத்வம் யோக உச்யதே என்று பகவத்கீதை மொழிகிறது. அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி என்பது இதன் நுவல் பொருளாகும்.
நீ ஒரு பொருளுடன் உறவாடும் போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.யோகத குரு கர்மாணி’’ என்று பகவத்கீதையில் கடவுள் கூறுகிறார்.யோகத்தில் நின்று தொழில்களைச் செய்” என்பது இதன் விளக்கமாகும்.
யோகநெறியில் வாழ்பவன் யோகி ஆவான். யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவு போல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதை காண்கிறான்.
பகவத் கீதை தர்ம சாத்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோட்ச சாஸ்திரம். மனிதன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது. அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோட்ச மார்க்கத்துக்கு விரோதமென்று பலர் கருதலாயினர். அவர்களைத் தெளிவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத்தொழில் செய்’’, “தொழில் செய்’’ என்று போதிக்கின்றார். இதனால், அதனை வெறுமனே, தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.
இங்கு தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது. பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி - இது தான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இதுதான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலும் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு.சம்சயாத்மா விநச்யதி”, “ஐயமுற்றோன் அழிவான்என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.
ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக.” இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். இந்த விஷயத்தைப் பகவத்கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீண்டும் மீண்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக் கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.
நமக்கே துன்பங்கள் நம்மை மீறி எய்தும்போது நாம் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நன்மையையும் தீமையையும் நிகராகக் கருதவேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகுமல்லாது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும் தீராத சயரோகத்தில் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையும் தெரியாமல் புத்தி மண்ணாய் விட வேண்டுமென்பது அவ்வுபதேசத்தின் கருத்தன்று. ஏனென்றால், சாதாரண புத்தியிருக்கும் வரை ஒருவன் காதலின்பத்துக்கும் சயரோகத் துன்பத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை உணராதிருத்தல் சாத்தியமன்று. ஆத்ம ஞானமெய்தியதால் ஒருவன் சாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு. சயரோகம் நேரும்போது சாமன்ய மனிதன் மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும் அந்நோயை வலிதாகவும் கருதி, ஆசையிழந்து நாளடைவில் மேன்மேலும் தன்னை அந்த நோய்க்கிரையாக்கிக் கொண்டு, சயரோகி என்று தனக்கொரு பட்டம் சூட்டிக்கொண்டு வருந்திு மடிவது போல் ஞானி செய்யமாட்டான். ஞானி அத்தகைய நோய், ஏதேனும் பூர்வ கர்ம வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித் தன் ஞானத் தீயால் எரித்துத் தள்ளிவிடுவான்.
ஞானயோகம்
ஞானக் நிர்வ கர்மாணி பமத் குருதே” - ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அக வாயிலாவேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோமாதலின். ஆனால், அதிலிருந்து இது ஞான சாத்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது. ‘‘முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே,தமாத் யுத்ய வ பாரத-ஆதலால், பாரதா, போர் செய், என்ற பல்லவி வந்து கொண்டேயிருக்கின்றதன்றோ? என்று கூறிச் சிலர் மறுக்கலாம். அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதனை, இங்கு மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது நலம் பயப்பதாகும்.
துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன்- ஜீவாத்மா. கிருஷ்ணன் பரமாத்மா. இதுவே உண்மை. இங்ஙனம் வாழ்க்கையை நலமுடன் அனைவரும் மேற்கொள்ளக் குறியீடுகளைக் கொண்டு இறைவன் கிருஷ்ணன் விளக்கிச் செல்கிறார்.
கண்ணனை நோக்கி அர்ஜுனன் சொல்லுகிறான்;
நீ வாயு; நீ சந்திரன்; நீ வருணன்; நீ அனைத்திற்கும் பிதா; பிதாமகன்” (கீதை 11-ஆம் அத்தியாயம், 39-ஆம் சுலோகம் )
கண்ணன் சொல்லுகிறான்;
 “மறுபடியும், பெருந்தோளுடையாய், எனது பரம வசனத்தைக் கேட்பாய். என் அன்புக்குரிய நினக்கு நலத்தைக் கருதி அதனைச் சொல்லுகிறேன்.’’ (கீதை 10-ஆம் அத்தியாயம், முதல் சுலோகம்)
நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான்’’ - (கீதை 10- ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)
எனவே, கீதையில் கேட்பான் சொல்வான் என்ற இரு திறத்தினரும், கிருஷ்ணன் பரமாத்மா என்பதை வற்புறுத்துகிறார்கள். கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத்திலே அர்ஜுனன் ஜீவாத்மா என்பதும் துரியோதனாதியர் காமக் குரோதிகளென்பதும் சாத்திரப் பயிற்சியும் காவியப் பயிற்சியும் உடையோரால் எளிதில் ஊகித்துக் கொள்ள இயலும்.
இயற்கை விதிப்படி வாழ்வதே யோகம்
கடவுளை வழிபாடு செய்வது எங்ஙனமென்பதை, கிருஷ்ணன் சொல்லுகிறார்
நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்’’ (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)
எந்த உயிரகளுக்கும் துன்பம் செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த உயிரையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார், எந்த உயிரையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருதத்தகார். மாமிச உணவை உண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார்.அரிம் பரமோ தர்ம’’ -கொல்லாமையே முக்கிய தர்மம் என்பது. ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.
இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர்common sense என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும். சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் மனிதர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில்,நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும் என்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.
நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கை இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது. நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் .ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துக் கொண்டுமிருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக் கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.
கர்ம யோகம்
கீதையிலே பகவான் சொல்லுகிறான் -அர்ச்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனிச் செய்யவேண்டியதென மிஞ்சி நிற்கும் செய்கையொன்றும் எனக்குக் கிடையாது, அடையத் தக்கது, ஆனால், என்னால் அடையப் படாதது, எனவொரு பேதமில்லை எனினும், நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன்ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் -நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும். அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண பூதனாகும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்து கொண்டேயிருக்கிறேன்’’ என்று கூறுகிறார். செயல் செய்வதே யோகமாகும். அது கர்ம யோகமாகும். கர்மயோகம் செய்பவன் கர்ம யோகியாவான். கடவுளும் கர்ம யோகியாவர்.
கடவுள் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது.
எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமாகிய உயிர்களும், மரம், செடி, கொடிகளாகிய உயிர்ப் பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக் கொண்டு, அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை எண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய் நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வதும் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத் தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால்,கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடும் நன்றே’’ என்று முன்னோர் குறிப்பிட்டபடி, கடும்புலி வாழும் காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிகமாக நடமாக்கூடிய மனிதரும் இருக்கக் கூடுமென்பது மெய்யே. ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது.
பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இஃதே பகவத்கீதையில் உபதேசிக்கிற கொள்கை. பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். மனித சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.
பாவம் புண்ணியம்
தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும். ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.
இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை ஸ்ரீ கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலையன்று. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச் சிகரத்தையடுத்ததொரு முழையிலே கடவுளைக் காணமாட்டான். கடவுள் எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலைச் சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்.அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் 'ஏன்? ஏன்?' என்ற தென்னே பராபரமே?” என்று தாயுமானவர் பாடியுள்ளார்.
இவ்வுலகத்தில் மனிதர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை, கடமைகளைத் துறந்து விட்டுச் சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம். அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று கருதலாம். இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்து விட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து உயிர் வாழ வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. நனவின்பத்தைத் துறக்கவில்லை. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின்பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.
உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லாப் பெரியவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.
கீதை கூறக்கூடிய யோகம் மனிதன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்குரிய வாழ்வியல் யோகமாகும். இயற்கை விதியை மீறாது தனது கடமைகளைச் செய்து, அனைத்துயிர்கள் மீதும் அன்பு செலுத்தி வாழ்பவன் யோகியாவான். அவன் கர்மங்களைச் செய்கின்ற போது கர்மாயோகி என்றழைக்கப்படுகின்றான். கடமையாகிய யோகத்தைச் செய்து கீதை காட்டிய வழியில் வாழ்ந்தால் யோகநிலையில் உயர்நிலையை மனிதன் அடைவது திண்ணம். கடமையைச் செய்வோம்! யோக நெறி வாழ்வோம்.

வாத்சாயனார் சொன்ன ரகசியம்.

வாத்சாயனார் சொன்ன ரகசியம்.
                                   
                                                               -நெல்லை விவேகநந்தா.
எங்கோ ஓர் பயணத்தில் எதிர்பாராதவிதமாய் அவனை சட்டென்று பார்க்கிறது ஒரு இளம்பெண்ணின் பார்வை. காந்தம் இழுத்த இரும்பாய் சொர்க்கத்தில் மிதக்கிறான் அவன். ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவற்றுக்கு முழுமையான விளக்கத்தை அங்கே அவன் உணர்கிறான்.
எல்லா ஆண்களுக்குமா இது போன்ற காந்த விழிப் பெண்களின் கடைக்கண் பார்வை கிடைக்கிறது? அந்த ஒரு பார்வை கிடைக்காமல் போனவர்கள், "அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள்.
கடலின் ஆழத்தைக் கூட கண்டுவிடலாம். ஆனால், ஒரு பெண்ணின் மன ஆழத்தை காண முடியாது என்று கவிதைகள் தீட்டிய கவிஞர்கள் பலர். காமசூத்ரா படைத்த வாத்சாயனாரும் அதை ஆமோதிக்கிறார் என்றாலும், எந்த வகை பெண்கள் ஆண்களை பார்த்த மாத்திரத்தில் மயங்குகிறார்கள் என்பதையும் ஒரு பட்டியலே இடுகிறார்.
அவர் சொல்வதை பார்ப்போமா?
"உங்களை ஒரு பெண் உற்று உற்றுப் பார்க்கிறாளா? அவளே, வலிய வந்து பழகுகிறாளா? அப்படியென்றால், அவள் நிச்சயம் உங்களிடம் மயங்குவாள். மேலும்,
  • வஞ்சக நோக்கம் கொண்டவள்
  • அடிக்கடி வீட்டு வாசலுக்கு வந்து நிற்பவள்
  • அடுத்தவர்களுக்காக தூது செல்பவள்
  • தெருவில் வருவோர், போவோரை வேடிக்கை பார்ப்பவள்
  • தாலி கட்டிய கணவனிடம் இருந்து விலகி வாழ்பவள்
  • தனது பிறந்த குலத்தைப் பற்றி முழுமையாக அறியாதவள்
  • செக்சில் அதிக ஆர்வம் கொண்டவள்
  • வீட்டைத் தவிர மற்ற வெளியிடங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவள்
  • எந்தவித கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக திரிபவள்
  • தகுதி இல்லாதவனை திருமணம் செய்து கொண்டவள்
  • வயதான கணவனை மணந்து கொண்டவள்
  • இளம் வயதில் கணவனை இழந்தவள்
  • ஆண்மைத்தன்மை இல்லாதவனை திருமணம் செய்தவள் 
- இவர்கள், தங்களுக்கு பிடித்த பிற ஆண்களிடம் எளிதில் மயங்கி விடுவார்கள்" என்கிறார் வாத்சாயனார்.
இதே போன்று, பெண்களை எளிதில் மயக்கும் ஆண்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது பற்றியும் அவர் தனது காமசூத்ராவில் கூறியிருக்கிறார்.
சில ஆண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள். நல்ல அறிவு பெற்றிருப்பதோடு நிறைய படிக்கவும் செய்திருப்பார்கள். ஆனால், "ஒரு கேர்ள் ப்ரண்ட் கிடைத்துவிட மாட்டாளா?" என்று ஏங்குவார்கள்.
இன்னும் சில ஆண்களுக்கு படிப்பு என்பதே வேப்பங்காயாக கசக்கும். பொது அறிவுக் கேள்விகளை கேட்டால் தேமே என்று விழிப்பார்கள். ஆனால், ஒன்றுக்கு இரண்டு, மூன்று கேர்ள் ப்ரண்ட்களை மயக்கி வைத்திருப்பார்கள்.
இவர்களுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாகிறது? எல்லாம் அவர்களது குணாதிசயம்தான் என்கிறார் வாத்சாயனார்.
பல பெண்களை எளிதில் தன் வலையில் வீழ்த்திவிடும் ஒரு ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான்? அதுபற்றி வாத்சாயனார் கூறுவதை பார்ப்போமா?
  • பெண்களை சந்தோஷப்படுத்தும் செயல்களை தாராளமாக செய்வான்.
  • விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் ஆரவாரமான மகிழ்ச்சியுடன் திளைப்பான்.
  • எந்த விழா என்றாலும் பரிசும், கையுமாக வந்து ஆஜராகிவிடுவான்.
  • பிற ஆண்களுக்காக தூது செல்வான்.
  • சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவனைவிட அழகானவனாகவும், அறிவானவனாகவும் இருப்பான்.
  • அவளது பாய் ப்ரண்டுடன் தொடர்பு கொண்டிருப்பான்.
  • அவளது ரகசியத்தை அறிந்தவனாக இருப்பான்.
  • இளம் வயதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தோழனாக இருந்திருப்பான்.
  • செக்ஸ் பற்றி நிறையவே அறிந்திருப்பான்.
  • உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுவான்.
  • அடிக்கடி பெண்கள் பார்வையில் படும்படி இருப்பான்.
  • முதலாளி என்ற அந்தஸ்திலும் இருப்பான்.
  • தாராள மனப்பான்மை நிறையவே இருக்கும்.
  • மனதை கவரும் கதை சொல்வதில் இவனுக்கு நிகர் இவனே!
  • துணிச்சல் அதிகம் இருக்கும்
- இப்படிப்பட்ட ஆண்கள் எளிதில் பெண்களை மயக்கி விடுவார்கள் என்கிறார் வாத்சாயனார்.

பூரண ஆயுள் என்றால் எவ்வளவு?

பூரண ஆயுள் என்றால் எவ்வளவு?
  • ஈரான், ஈராக் நாடுகளின் பழைய பெயர்கள் முறையே பெர்ஷியா, மெஸபடோமியா.
  • இருட்டைப் பார்த்து பயப்படுவதை டாக்டர்கள் அக்ளூவோபோபியா (achluophobia) என்று சொல்வார்கள்.
  • முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.
  • உலகில் மிக நீளமான பாலம் சைனாவில் உள்ளது. இது 43.4 கி.மீ நீளம் கொண்டது.
  • உலகிலேயே மிக நீளமான நதி நைல் நதி. இது 7088 கி.மீ தொலைவு கொண்டது.
  • மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
  • லினஸ் பாலிங் (Linus Pauling) என்பவர் வேதியியலுக்கான நோபல் பரிசை 1954 ஆம் ஆண்டிலும், சமாதானத்திற்கான நோபல் பரிசை 1964 ஆம் ஆண்டிலும் பெற்றார்.  
  • அட்லாண்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.
  • அமெரிக்க ஜனாதிபதிகளில் 15 வது ஜனதிபதியான ஜேம்ஸ் பக்னான் (James Buchanon) என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்.
  • மகாத்மதா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாபிரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
  • பாப்புவா நியூ கினியா (Papua New Guinea) எனும் நாட்டில் அரசு மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டாலும் இங்கு 715க்கும் அதிகமான மொழிகள் பேச்சு வழக்கத்தில் உள்ளன.
  • கைரேகையை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி
  • மனிதனின் கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
  • ஐ.நா- வின் அலுவலக மொழிகளான சீனம், ஆங்கிலம், ருசிய, பிரன்ச், ஸ்பானிஷ் ஆகியவற்றுடன் தற்போது அரபு, ஹிந்தி மொழிகளும் சேர்ந்துள்ளன.
  • பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
  • ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
-தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

முட்டையிட்டுப் பாலூட்டும் உயிரினம்

முட்டையிட்டுப் பாலூட்டும் உயிரினம்



சிறிய வவ்வால்
ஆஸ்திரேலியன் ஈஸ்ட் கோஸ்ட் பிரீடெய்ல் மைக்ரோபேட் எனப்படும் வவ்வால் இனம்தான் உலகின் மிகச் சிறிய வவ்வால் இனம். மூன்று செண்டி மீட்டர் நீளமும், எட்டு கிராம் எடையும் கொண்ட இந்த வவ்வால் இனத்தின் பிடித்த உணவு புழுக்களே. இவை பறக்கும் போது மோத் என்கிற வண்ணத்துப் பூச்சி போலிருப்பதால் இதை மோத் என்றும் சிலர் அழைக்கின்றனர்.

பெரிய முட்டையிடும் பறவை

பறவை இனங்களில் மிகப்பெரிய முட்டையிடுவது நெருப்புக் கோழிதான். இதன் முட்டையின் அளவு 7 x 6 அங்குலம். 1400 கிராம் வரை எடையிருக்கும். கிவி பறவை நெருப்புக் கோழிக்கு அடுத்தபடியாக பெரிய முட்டையிடக் கூடியது. மிகச் சிறிய முட்டையிடும் பறவை ஹம்மிங் பேர்ட்.

ராஜநாகம்

பாம்புகளில் மிகவும் பயங்கரமானது ராஜநாகம்தான். இது இருக்கும் இடத்தில் வேறு குட்டிப் பாம்புகள் எதுவும் வசிக்க முடியாது. அவற்றைப் பிடித்து விழுங்கிவிடும். பெண் ராஜநாகம் இலைகளைப் பரப்பி அதன் மீது முட்டையிட்டு அடை காக்கும். அப்படி அடைகாக்கும் சூழ்நிலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை வேறு உயிரினத்தை அப்பகுதிக்குள் நுழைய விடாது. ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை பொறிக்கும். அவை பிறக்கும் போதே விசத்தன்மையுடன்தான் பிறக்கின்றன. நன்றாக வளர்ந்த ராஜநாகத்தின் விசம் எடுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட அளவு குதிரையின் உடலுக்குள் செலுத்தப்படுவதன் மூலம் குதிரைகள் ஆண்டிபயாடீஸ் எனும் எதிர்ப்பு சக்தியைத் தன்னுள் உருவாக்கிக் கொள்ளும். பின்னர் அந்த குதிரைகளிடமிருந்து சிறிதளவு பிளாஸ்மா எடுத்து விசமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.

பாண்டா கரடி

சீனாவின் தென்கிழக்கு மாகாணமான சிசூயானில் உள்ள மூங்கில் காடுகளில்தான் பாண்டா இனக் கரடிகள் வாழ்ந்து வந்தன. பாண்டா இனக் கரடிகளின் முக்கிய உணவு மூங்கில்தான். இங்கு மூங்கில் காடுகள் அழிந்து வருவதால் உணவில்லாமல் பாண்டா இனக்கரடிகளும் அழிந்து கொண்டிருக்கின்றன. தற்போது இவற்றை பாதுகாக்க சீனா அதற்கென ஒரு ஆய்வு மையம் அமைத்து அங்கு அவைகளை வளர்த்து வருகின்றன.

முட்டையிட்டு பாலூட்டும் உயிரினம்

முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துப் பின் பாலூட்டும் இரண்டு அபூர்வ உயிரினங்களில் ஒன்று பிளாடிபஸ். இது வாத்து போன்ற மூக்கும், பீவர் பிராணியின் உடல் வால் அமைப்பின் கலவையான பிளாடிபஸ் 12 முதல் 18 அடி நீளம் வரி வலரும். நீர் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் பிளாடிபஸ்ஸின் விருப்பமான உணவு பூச்சிகளும் சிறு மீன்களும்தான்.

கோலா கரடி

கோலா கரடிகள் யூகலிப்டஸ் மர இலைகளின் நீர்ச்சத்தை எடுத்துக் கொள்வதால் அவற்றிற்குத் தாகம் எடுப்பதில்லை. அதனால் அவை நீரும் அருந்துவதில்லை. கங்காரு தன் குட்டிகளைச் சுமப்பது போல் கோலா கரடியும் வயிற்றுப் பையுள்ள ஒரு பிராணி. பிறந்த ஏழு மாதத்திற்குக் கோலா கரடிகள் தன் குட்டிகளை வயிற்றிலேயே சுமக்கின்றன.

காட் மீன்

அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் காட் எனும் மீன் இனம் உள்ளது. இந்த மீன் இனம் ஒரு தடவைக்கு சுமார் அறுபது லட்சம் முட்டைகள் வரை இடுமென்றாலும் முட்டை பொறிந்து மீன் குஞ்சாகி உயிர் வாழ்வது நான்கு அல்லது ஐந்துதான். மீன் இடும் அத்தனை முட்டைகளும் மீன்களானால் அட்லாண்டிக் சமுத்திரமே மீன் மயமாகி கடல் நீர் நிலத்தில் புகுந்துவிடும்.

கடற்குதிரை

கடலில் வாழும் உயிரினங்களில் கடற்குதிரைகள் மட்டுமே நிற்கும் போது தன் வாலையே பற்றிக் கொண்டு நிற்கின்றன. ஆண் கடற்குதிரைகளுக்குத் தனியாக அதன் வயிற்றில் ஒரு பை உண்டு. அதன் மூலம் பெண் கடற்குதிரைகள் இடும் முட்டையை இந்த ஆண் கடற்குதிரைகள் அடைகாக்கின்றன. கடற்குதிரைகள் நீண்ட நாக்கை ஒரு ஸ்ட்ரா போல் பயன்படுத்தி கடல் நீரை உறிஞ்சுகின்றன. இப்படி உறிஞ்சும் கடல்நீரிலுள்ள மெல்லிய நுண்செடிகள் உயிரினங்களை மட்டுமே உட்கொண்டு விட்டு கடல்நீரைத் துப்பி விடுகின்றன.

வெட்டுக்கிளி

பாம்புகள் தங்கள் மேல்தோலை உரித்து புதுத் தோலை உருவாக்கிக் கொள்வது போல் வெட்டுக்கிளிகள் தங்கள் உடல் கூட்டை அடிக்கடி உடைத்துக் கொள்ளும். அவைகள் தங்கள் உடல் கூட்டை உடைத்துக் கொண்டால்தான் அவைகளால் வளர முடியும். அவைகளின் பழைய கூடுகள் உடைந்தவுடன் புதிய கூடுகள் வளர ஆரம்பித்து விடும். பழைய கூட்டினால் எந்தப் பயனுமில்லாததால் அவற்றை உதறி விடும்.
-தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

கண்ணதாசனின் நகைச்சுவைகள்

 கண்ணதாசனின் நகைச்சுவைகள்

"நன்கொடை என்பது என்ன?"
"வாங்குகிறவனை நன்றாக ஆக்குவது. கொடுப்பவனை None  ஆக ஆக்குவது."
*********
"ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட முடிவதில்லை"
"ஏன்?"
"ஓட்டுப் போடும் வயது இன்னும் வரவில்லை"
*********
"கலியுகத்தில் கண்ணன் என்னென்ன நட்க்குமென்று சொன்னபோது மற்றுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறான்"

"அதுவென்ன மற்றுமொரு கருத்து?"

"நடிகையின் பாட்டி அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்"
*********
"காந்தியைப் போல் எல்லோரும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?"

"கடலை வியாபாரம் நன்றாக நடக்கும்."
*********
"பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலுள்ள பலரை விசாரித்ததில்..."

"எப்படி பைத்தியமானார்கள்?"

"சினிமா நடிகைகளை மேக்கப்பில்லாமல் பார்த்ததினால்"

மருத்துவ நகைச்சுவைகள்

மருத்துவ நகைச்சுவைகள்
                                                                                               - தேனி.எஸ்.மாரியப்பன்.

திருப்தியாக சாகலாம்!
நோயாளியிடம் டாக்டர், "உங்கள் நோயை முழுமையாகக் குணப்படுத்தி விட்டேன்" என்றார்.
"இனி ஆபத்து இல்லையா டாக்டர், நான் பிழைத்துக் கொள்வேனா?" என்றார் நோயாளி.
"நிச்சயமாகச் சொல்ல முடியாது. சாவதற்கு முன்பு நோய் குணமாகி விட்டது. செத்தாலும் திருப்தியாகச் சாகலாம். அவ்வளவுதான்" என்றார் டாக்டர்.
மாத்திரை உங்களுக்குத்தான்
ஒரு பெண் தன் கணவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாள். ஒரு வாரம் தங்கி தன் கணவனைக் கவனித்து வந்தாள். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்தது. டாக்டர் அந்தப் பெண்ணை அழைத்து இப்படிச் சொன்னார்.
"உங்கள் கணவருக்கு மிகவும் ஓய்வு தேவை. இந்த தூக்க மாத்திரையைப் பயன்படுத்துங்கள்." என்றார்.
அவள், "மாத்திரையை எப்போது கொடுக்க வேண்டும்?" என்று டாக்டரைக் கேட்டாள்.
அதற்கு டாக்டர், "இந்தத் தூக்க மாத்திரை அவருக்கில்லை, உங்களுக்குத்தான். உங்கள் கணவர் நல்ல ஓய்வு எடுக்கவும் விரைவில் குணமாகவும் இதுதான் ஒரே வழி" என்றார்.
டாக்டருக்குத் தெரியாதா?
ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள். சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, "இறந்து விட்டான்" என்று சொன்னார்.
அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, "டாக்டர்... நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்றான்.
அருகிலிருந்த அவனுடைய மனைவி, "பேசாமல் இருங்க... டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது" என்றாள்.
விசிட்டிங் பீஸ் எவ்வளவு?
ஒருவன் நடுராத்திரியில் சென்று டாக்டர் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். 
டாக்டர் எழுந்து "என்ன வேண்டும்?" என்று கேட்கிறார்.
வந்தவனோ ஒரு முகவரியைக் காட்டி, "இந்த இடத்திற்கு வர வேண்டும் மிகவும் அவசரம்" என்கிறான்.
டாக்டரும் காரை எடுத்துக் கொண்டு அந்த ஆளுடன் குறிப்பிட்ட ஊருக்குச் செல்கிறார்.
ஊர் வந்ததும் டாக்டரை அழைத்து வந்தவன் காரிலிருந்து இறங்கினான். டாக்டரைப் பார்த்து, "உங்களது விசிட்டிங் பீஸ் எவ்வளவு?" என்றான்.
டாக்டர்,"ஐம்பது ரூபாய்" என்றார்.
உடனே அவன் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு, "மிகவும் நன்றி டாக்டர். அங்கேயிருந்து இங்கே வர டாக்ஸிக்காரன் நூறு ரூபாய் கேட்டான்" என்றான்..

காந்திஜியின் நகைச்சுவை

காந்திஜியின் நகைச்சுவை
                                                                                               - தேனி.எஸ்.மாரியப்பன்.
ஒலிபெருக்கிக்காரரின் குடை
காந்தியடிகள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் நனைந்து கொண்டே காந்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் குடையை விரித்து காந்தியின் தலைக்கு மேலே பிடித்தார். இதைக் கண்ட காந்தி, "மக்கள் எல்லாம் நனையும் போது எனக்கு மட்டும் எதற்குக் குடை?" என்று கேட்டார்.
குடை பிடிப்பவரோ காந்தியின் சொல்லைக் கேட்கவில்லை. தொடர்ந்து குடையைப் பிடித்துக் கொண்டே இருந்தார். 
உடனே காந்தி கூட்டத்தினரைப் பார்த்து சிரித்துக் கொண்டே , "இவர் குடை பிடிப்பதைப் பார்த்தால் ஒலிபெருக்கிக்குச் சொந்தக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் ஒலிபெருக்கி நனையாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்." என்றார்.
இதைக் கேட்ட கூட்டத்தினர் அனைவரும் பலமாகச் சிரித்தனர்.
எனக்குப் பயன்படக் கூடியது.
காந்திஜி லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆங்கிலேயர் ஒருவரும் அதே கப்பலில் பயணம் செய்தார்.
பயணத்தின் போது காந்திஜியை அவர் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டு வந்தார் அவர். காந்தியடிகளோ இதைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. வெறுத்துப் போன ஆசாமி, காந்தியை நக்கலடித்து சில கவிதைகளை எழுதினார். அதை காந்தியிடம் கொடுத்து,"படித்துப் பாருங்கள்" என்றார்.
கவிதைகளைப் படித்து ஆசாமியின் நக்கலைப் புரிந்து கொண்டார். ஆனாலும் அது குறித்து கவலைப்படவில்லை.
மறுநாள் காலை அந்த ஆசாமி காந்தியடிகளைப் பார்க்க வந்தார். காந்திஜியிடம் ,"என் கவிதைகள் எப்படி? பயனுள்ளதாக இருந்திருக்குமே?" என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார்.
காந்தியடிகள் சிரித்துக் கொண்டே "ஓ..! தாங்கள் கொடுத்த கவிதைகளை ஒன்று விடாமல் படித்தேன். அதில் எஅன்க்குப் பயன்படக்கூடிய அம்சத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்." என்று கூறி அந்தக் காகிதத்தில் குத்தியிருந்த குண்டூசியை எடுத்துக் காட்டினார். நீங்கள் கொடுத்ததில் இதுதான் எனக்குப் பயன்படக் கூடியது."என்றார்.
அந்த ஆங்கிலேயரின் முகத்தில் ஈயாடவில்லை.
நீர்வீழ்ச்சியை விட பெரியது.

காந்தியடிகள் ஒருமுறை கர்நாடக மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் காந்திஜியிடம், "ஜோக் நீர் வீழ்ச்சியைப் பார்க்க வருகிறீர்களா?" என்று கேட்டனர்.
அந்த அன்பர்களிம் அழைப்பைத் தட்டிக் கழிக்க விரும்பாத காந்தியடிகள்,"நீங்கள் மழையைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? நன்கு கவனித்திருக்கிறீர்களா? வானத்திலிருந்து வருகிறது. வானிலுள்ள கருமேகங்களிலிருந்து வருகிறது. நீர்வீழ்ச்சி மலையிலிருந்து அல்லவா விழுகிறது. மலையை விட உயர்ந்த இடத்திலிருந்து வருகிறது மழை. அதற்கு இணை அதுவேதான். அதற்கு அடுத்தல்லவா நீர் வீழ்ச்சி எல்லாம்..."என்று அவர்களைச் சிரிக்க வைத்தார். சிந்திக்கவும் வைத்தார்.

ஆன்மீகவாதிகள் நகைச்சுவை

 ஆன்மீகவாதிகள் நகைச்சுவை
-டி.எஸ்.பத்மநாபன்.
பேயைப் பார்த்ததில்லை.
சுவாமி சின்மயானந்தா ஒருமுறை சென்னையில் கீத ஞான யக்ஞம் நடத்துவதற்குச் சரியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார்.
அந்தணர்கள் வசமிருந்த பலகோவில்கள் அவருக்கு இடம் கொடுக்க மறுத்தன. அப்போது அவரது சீடர் அவரிடம் ஓடி வந்தார். "ஒரு இசுலாம் இனத்தவர் தனது இடத்தைக் கொடுக்கிறேன்" என்று சொல்கிறார், "ஆனால்" என்று தயங்கியவாறே, "அந்த இடம் பேய் இருக்கும் இடமாம்" என்று சொன்னார்.
சுவாமி உடனே," அதனாலென்ன, நான் இன்னும் பேயைப் பார்த்ததே இல்லை. ஒரு நல்ல சந்தர்ப்பம்" என்றார்.
யாருக்கு யார் தரிசனம்?

ரமண மகரிஷி ஒருமுறை வழக்கம்போல அருணாச்சல மலையை வலம் வந்து கொண்டிருந்தார்.
அவரிடம் பற்றுதல் கொண்ட ஒருவர் அவர் பின்னாலேயே வேகமாக ஓடிவந்து ரமண மகரிஷியின் முன்னால் நின்று, "நான் உங்கள் தரிசனத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இன்று நீங்கள் தரிசனம் கொடுத்துவிட்டீர்கள்"என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.
ரமண மகரிஷி உடனே, " நான் எங்கே தரிசனம் கொடுத்தேன்? நீங்கள்தானே என் முன்னால் வந்து நின்று எனக்கு தரிசனம் கொடுத்தீர்கள்" என்று சொன்னார்.
ஆசிக்கு எவ்வளவு தூரம்?
ஒருமுறை அமெரிக்க பக்தர்கள் சிலர் ரமண மகரிஷியைத் தரிசிக்கச் சென்றார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் பின் வரிசையில் இருந்தார்கள்.
அவர்கள் மகரிஷியிடம் அவரது அருளைப் பெற முன்னால் வந்து அமரலாமா? என்று கேட்டார்கள்.

மகரிஷி, " நீங்கள் முன்னால் வந்து அமர்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் எனது அருள் தூரத்தைப் பொருத்தது அல்ல, நீங்கள் பக்கத்தில் இருந்தாலும் தூரத்தில் இருந்தாலும் என் ஆசி இருக்கும்." என்று சொன்னார்.
அருள் கிடைக்கக் கோர்ட்டுக்குப் போகலாமோ?
சில பக்தர்கள் மகரிஷியை அவர்கள் தலைமேல் அவரது கையை வைத்து ஆசீர்வதித்தால் பூரண அருள் கிடைக்கும்' என்று சொன்னார்கள்.
மகரிஷி உடனே," இது என்ன வேடிக்கையாய் இருக்கிறது- இன்னும் கொஞ்சம் போனால் என்னை அருள் தரச் சொல்லி பத்திரத்தில் எழுதி வாங்குவீர்கள் போலிருக்கிறது- அப்படி அருள் கிடைக்காவிட்டால் கோர்ட்டுக்குக் கூட என்னை இழுப்பீர்களோ என்னவோ" என்றார்.
நல்ல டாக்டரைப் பார்க்க...
சுவாமி தயானந்த சரஸ்வதி ஒருமுறை இந்தக் கதையைச் சொன்னார்.
சாகப் போகும் நிலையிலிருந்த மூன்று பேரிடம் டாக்டர் "அவர்களுடைய கடைசி ஆசை என்ன?" என்று கேட்டார்.
அதற்கு முதலாமவன் சொன்னான், "தான் பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் மன்னிப்புக் கேட்க விரும்புவதாக"
இரண்டாவதாக இருந்தவர் "தன்னுடைய குடும்பத்தவர்க்ள் அனைவரையும் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.
மூன்றாவது ஆளோ நான் வேறு ஒரு நல்ல டாக்டரைப் பார்க்க விரும்புகிறேன்" என்று சொன்னார்.
கீதையைக் கேட்க ஒருவர்
படித்த பண்டிதர் ஒருவர் காஞ்சிபரமாச்சாரியாரிடம் தான் கீதையைக் கரைத்துக் குடித்திருப்பதாக பீற்றிக் கொண்டிருந்தார்.
சுவாமிகள் அவரிடம் அங்குள்ள கோவில் ஒன்றில் அவரால் பத்துநாட்கள் கீதை உபன்னியாசம் செய்ய முடியுமா? என்று கேட்டார். அந்தப்

பண்டிதரும் சம்மதிக்க உபன்னியாசம் நடந்தது. முதல் நாள் நல்ல கூட்டம் வந்தது.
இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என்று நாள் செல்லச் செல்லக் கூட்டமும் குறைந்து கொண்டே வந்தது.
அவர் பரமாச்சாரியாரிடம் ," என்ன ஊர் இது? முதல் நாள் 50பேர் வந்தார்கள். இரண்டாம் நாள் 25 பேர். பிறகோ இரண்டே பேர்தான் வந்தார்கள்- யாருக்குமே கீதையைக் கேட்க ஆசையில்லை போலிருக்கிறது" என்று அலுத்துக் கொண்டார்.
பரமாச்சாரியார் ஒரு புன்முறுவலுடன், " ஏன் வருத்தப் படுகிறீர்கள்? கண்ணன்

கீதையைச் சொன்ன போது அதைக் கேட்க ஒரே ஒருவர்தானே இருந்தார்" என்று சொன்னார்.