Search This Blog

Tuesday, June 6, 2017

Zones of Sedimentation Basin

Sedimentation basins have 4 zones
1. The Inlet zone,
2. The Settling zone,
3. The Sludge zone, and
4. The Outlet zone.
Each zone should provide a smooth transition between the zone before and the zone after.
 Zones in Rectangular Sedimentation Basin
Zones in Rectangular Sedimentation Basin
Each and every zone has its own unique purpose. All zones are in a rectangular sedimentation basin.
Zones in a Circular Sedimentation Basin
Zones in a Circular Sedimentation Basin
In a square or circular basin (clarifier), water typically enters the basin from the center rather than from one end and flows out to outlets located around the edges of the basin. But the four zones can still be found within the clarifier the above figure.
Inlet Zone
The two primary purposes of the inlet zone of a sedimentation basin are to distribute the water and to control the water’s velocity as it enters the basin. In addition, inlet devices act to prevent turbulence of the water. The incoming flow in a sedimentation basin must be evenly distributed across the width of the basin to prevent short-circuiting. Short-circuiting is a problematic circumstance in which water bypasses the normal flow path through the basin and reaches the outlet in less than the normal detention time. In addition to preventing short-circuiting, inlets control the velocity of the incoming flow. If the water velocity is greater than 0.15 m/ see, then floes in the water will break up due to agitation of the water. Breakup of floes in the sedimentation basin will make settling much less efficient.
Inlet arrangement for a rectangular basin
Inlet arrangement for a rectangular basin
The inlet of rectangular basin is shown in Fig. 13.9. The stilling wall, also known as a perforated baffle wall, spans the entire basin from top to bottom and from side to side. Water leaves the inlet and enters the settling zone of the sedimentation basin by flowing through the holes evenly spaced across the stilling wall.
The second type of inlet allows water to enter the basin by first flowing through the holes evenly spaced across the bottom of the channel and then by flowing under the baffle in front of the channel.
The combination of channel and baffle serves to evenly distribute the incoming water.
Settling Zone
After passing through the inlet zone, water enters the settling zone where water velocity is greatly reduced. This is where the bulk of settling occurs and this zone will make up the largest volume of the sedimentation basin. For optimal performance, the settling zone requires a slow, even flow of water. The settling zone may be simply a large area of open water.
Outlet Zone
The outlet zone controls the amount of water flowing out of the sedimentation basin. Like the inlet zone, the outlet zone is designed to prevent short-circuiting of water in the basin. In addition, a good outlet will ensure that only well-settled water leaves the basin and enters the filter. The outlet in the form of overflow weir can also be used to control the water level in the basin. The best quality water is usually found at the very top of the sedimentation basin, so outlets are usually designed to skim this water off the sedimentation basin.
 Outlet arrangemenfin rectangular basin
Outlet arrangemenfin rectangular basin
A typical outlet zone begins with a baffle in front of the effluent. This baffle prevents floating material from escaping the sedimentation basin and clogging the filters. After the baffle, the effluent structure, which usually consists of a launder, weirs, and effluent piping, is located.A typical effluent structure is shown the figure.
The primary component of the effluent structure is the effluent launder, a trough which collects the water flowing out of the sedimentation basin and directs it to the effluent piping. The sides of a launder typically have weirs attached. Weirs are walls preventing water from flowing uncontrolled into the launder. The weirs serve to skim the water evenly off the tank.
Finger weirs in rectangular basin
Finger weirs in rectangular basin
A weir usually has notches, holes, or slits along its length. These holes allow water to flow into the weir. The most common type is the V -shaped notch shown on the picture above which allows only the top few centimeters of water to flow out of the sedimentation basin. Conversely, the weir may have slits cut vertically along its length, an arrangement which allows for more variation of operational water level in the sedimentation basin.
Water flows over or through the holes in the weirs and into the launder. Then the launder channels the water to the outlet pipe. This pipe carries water away from the sedimentation basin and to the next step in the treatment process. The effluent structure may be located at the end of a rectangular sedimentation basin or around the edges of a circular clarifier. Alternatively, the effluent may consist of finger weirs an arrangement of launders which extend out into the settling basin as shown below.
Sludge Zone
The sludge zone is found across the bottom of the sedimentation basin where the sludge is collected temporarily . Velocity in this zone should be very slow to prevent resuspension of sludge.
A drain at the bottom of the basin allows the sludge to be easily removed from the tank. The tank bottom should slope toward the drains to further facilitate sludge removal. In some plants, sludge removal is achieved continuously using automated equipment. In other plants, sludge must be removed manually.
Thanks http://www.thewatertreatments.com

Water board Vacancy for Engineers


இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம்


இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம் அவர்களின் 92 வது பிறந்த நாள் இன்று 05.06.2017என் தமிழ் ஆசான் தமிழ் மீதான காதலை ஏற்படுத்தி வாசிப்பு அனுபவத்தையும் பழந்தமிழ் இ...லக்கியம் உலக இலக்கியம் எல்லாவற்றையும் நான் அறிய திறவுகோலாய் இப்போதும் எனக்குள் என் நினைவுகளில் சிம்மாசனமிட்டிருக்கும் இலக்கிய ஆளுமை.
என் கையயைப் பிடித்து இந்த வழி போ என தடமிட்டு தந்த ஆசான் .
மண் மணம் செறிந்த எழுத்துக்களைத் தந்து ஈழத்து இலக்கியத்துக்கு செழுமை சேர்த்த படைப்பாளி.
சிறுகதை
நாவல்
நாடகம்
உரைச்சித்திரம்
கவிதை
உரை
என எல்லாம் கைவரப் பெற்ற புலமையாளன் .திருகோணமலை மாவட்டத்தில் இலக்கிய கலாநிதி பட்டம் பெற்ற ஒரே ஒரு படைப்பாளியாய் கொட்டியாரத்துக்கு பெருமை சேர்த்த இலக்கிய நாயகன்.
இவர் எழுத்துக்கள் பெரும்பாலானவற்றில் கொட்டியாரத்தின் அழகை தித்திக்க தித்திக்க தேன் சுவை சொட்ட எடுத்துச் சொல்லியிருப்பார்.மாவலியாள் இவர் எழுத்துக்களில் கரை புரண்டோடுவாள் கங்கையின் அலயடிப்பும் கொட்டியாரக் குடாக் கடலின் ஆர்ப்பரிப்பும் இவர் எழுத்தாணியில் நடமிடும்.
  1. இவரது தோணி சிறுகதை உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது.
    ''சந்தானாள் புரவியில்'' மூதூரின் பழைமையயயயும் கொட்டியாரக் குடாக் கடலின் அழகையும் பல சிறு கதைகளில் மூதூரின் கிராமங்கள் பலவற்றின் சிறப்புக்களையும் படம் பிடித்திருப்பார்.
  2. ''ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கிடக்கிறது'' எனும் நாவலில் ஆலங்கேணி எனும் அழகு தமிழ் கிராமத்தை அதன் பண்பாட்டை நம்முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.
  3. ''கிரவுஞ்சப் பறவைகள்'' எனும் வரலாற்றுப் புதினத்தின் மூலம் வரலாற்று நாவல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நமக்கு பாடமாக விட்டுச் சென்றுள்ளார்
  4. சேனையூர் மத்திய கல்லூரியில் சிறப்புறு தமிழ் ஆசானாய் பிரதிஅதிபராய் கடமையாற்றி எம் கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்.

Monday, June 5, 2017

உலகையே மிரளவைத்த இராஜேந்திர சோழனின் முதல் போரை பற்றி தெரியுமா.....???


காயா


~~~~~
மலைப்பாதைகளில் தந்திரக்காரனின் விரல்களென
அசைகின்றன பெரணிச்செடிகள்

நீரூற்றின் துளிகள்
கற்களைத் துளையிடும் இடத்தில்
நீராயுதம் என்ற சொல்லையும்
அதன் உக்கிர உருவத்தையும் மறைத்து வைக்கின்றன
எதிர்க்கையில் எனது உக்கிரம்
தீயையும் மறையச் செய்யும்
என்கின்றன துளிகள்

கரையெங்கும் விரிந்து கிடக்கும்
Rhodo dendron குறுமரப் பூக்களை
தேவகி என்றுதான் தொடுவேன்
காட்டுத்தீயை அணுகவிடாமல் தடுக்கும் இம்மரங்களை
பின் எப்படி வணங்குவது முத்தமிடுவது

ஏழிலைப் பாலை மரங்களில் பேய்கள் வசிப்பதாய்
சொல்லப்படுவதை நம்பமுடிந்ததில்லை இதுவரை
எல்லா மரங்களும் தன் அகத்தில் மூதாதையர்களை
ஒளித்து வைத்திருக்கின்றன
அங்கே அவர்கள் உறங்குகிறார்கள்
இம்மரத்தில் பலகைகள் செய்து படித்தார்கள் அமர்ந்தார்கள்
கடுங்காய்சலுக்கு மருந்தை கண்டறிந்தார்கள்
பின் எப்படி இதில் பேய் வசிக்கும்
பேய் எங்கும் இல்லை
மலைகளெங்கிலும் இல்லை

எல்லா பனிப்பொழிவையும் கடந்துவிட்ட
காயா மரத்தின் கருநீலப் பூக்கள்
தீட்டிய வாளெனப் பாயும் சிற்றோடையின் உக்கிரத்தை
நொடியில் மழுங்கச் செய்கின்றன

காயா மலர்கள் முல்லை நிலத் தெய்வத்தின் சொற்கள்
அப்பூக்களின் நிறம் தான் கடவுளின் தேகம்
மாயோன் மறுகும் மணிநீல மகரந்த ஊசிகள்
அகம் மொய்க்கும் திரு எனும் மந்திரம்
பூவெடுக்கும் எல்லாக் கிளைகளும்
இருள் விரட்டும் உடுக்கைகள்
காயா உதிர்வது காட்டில் தேவதைகளின் கும்மி
காயாவிடமிருந்து பெற்ற மொழி கசம்

இருளின் பேரகராதி இவள் தான்
பின் காயா தான் மையானாள்
எனக்குள் காளியானாள்
மனக் கசப்பின் குறியீடானாள்
விதையின்றித் தாயாகி விளைந்துகொண்டே இருக்கிறாள்

- தேன்மொழி தாஸ்
12.10.2016

Saturday, June 3, 2017

East-West Center Master Degree and PhD Fellowship in USA (Fully Funded)

The East-West Center Graduate Degree Fellowship provides master and doctoral funding for graduate students. So, are you planning in pursuing next degree soon? Check out this fellowship application now if you please.
Where: University of Hawai‘i at Mānoa, Hawaii
Nationality: This application are available for applicants from Asia, the Pacific, and the United States only
Award for the scholarship: the scholarship will cover the cost of tuition and fees, books, housing in an East-West Center dormitory, and funding toward meals, health insurance, and incidental expenses.
Applicants from Asia, the Pacific, and the United States
  • Be able to attend a full-time graduate degree in the University
  • Have graduated a four years bachelor program abroad
  • Applicant must have a minimum grade point average of 3.0 (4.0=A scale) 
  • How to apply: you ought to apply for both the University of Hawai‘i and East-West Center. For more information regarding applying, please go to
    Deadline: 1 November 2017
    Click here to go to official website

    Tuesday, May 30, 2017

    பெண்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும்?



    • சுகப்பிரசவத்தின் போது, பெண்கள் 500 மி.லி ரத்தம் வரை இழக்க நேரிடும். அதுவே சிசேரியன் பிரசவத்தின் போது, 1000 மி.லி ரத்தம் வரை இழக்க நேரிடுகிறது.
    • பெண்களின் இயல்பான நிலையில் இருக்கும் கர்ப்பப்பை 3 இன்ச் நீளமும், 2 இன்ச் அகலமும், 30 கிராம் அளவிற்கு குறைவான எடையுடனும் இருக்கும் சிறிய உறுப்பாகும்.
    • கருவுறாத முட்டை கருப்பை சுவர் செல்களுடன் சேர்ந்து வெளியேறும் நிகழ்வே மாதவிடாய். இந்த சுழற்சி 10 நாட்கள் அல்லது அதற்கு மேலும் கூட தொடர்ச்சியாக நிகழ்கிறது.
    • சீரற்ற மாதவிடாய் பிரச்சனையால், திடீரென உடல் எடை உயர்வு போன்ற உணர்வு, தூக்கமின்மை போன்ற பல உடல், மனநலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
    • பெண்கள் குழந்தை பெற்ற பின் அவர்கள் உடலின் ஹார்மோன் அளவுகள் திடீரென குறையும். இதனால் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) என்ற மனநலப் பிரச்சனைகள் 15 சதவீத பெண்களை பாதிக்கிறது.
    • மெனோபாஸூக்கு பின் எஸ்ட்ரோஜென் ஹார்மோன் இழப்பு காரணமாக 20% பெண்கள் எலும்பு அடர்த்தியை இழக்க நேரிடுகிறது.
    • ஒரு பெண் குழந்தை, தன் தாயின் கர்ப்பத்தில் சிசுவாக வளரும் போதே அதன் வாழ்நாளுக்கான கருமுட்டைகள் உருவாகியிருக்கும்.
    • மாதவிடாய்க்கு பின் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் இழப்பால், மாரடைப்பு ஆபத்து பெண்களுக்கு அதிகமாகின்றது.
    • கருமுட்டை என்பது சரும செல்லை விட 4 மடங்கு பெரியது ரத்த சிவப்பணுவை விட 26 மடங்கு பெரியது. விந்தணுவை விட 16 மடங்கு பெரியது.
    • கருவில் 7 மில்லியன் கருமுட்டைகளுடன் வளரும் பெண் குழந்தை பிறக்கும் போதே 2 மில்லியன் கருமுட்டைகளுடன் பிறக்கும். பூப்படையும் போது, 4 லட்சம் கருமுட்டைகள் மீதமிருக்கும். அதன் வாழ்நாளில் 500 கருமுட்டைகள் வரை வெளிப்படும்.
    • ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் தோராயமாக 3.500 நாட்களை மாதவிடாயுடன் கழிப்பதுடன், 81% பெண்கள் மாதவிடாய் நாட்களில் அடிவயிறு வலியால் துன்புறுகிறார்கள்.
    • மாதவிடாய் நாட்களுக்கு முன் நடைபெறும் ஹார்மோன் ஏற்ற, இறக்க மாறுபாடுகளால் 30% பெண்கள் மூட் ஸ்விங்ஸ் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
    • பெண்களின் கர்ப்பப்பை, கர்ப்பகாலத்தின் ஒன்பதாவது மாதத்தில் ஏறக்குறைய 40 செ.மீ அளவுக்கு நீளமாக இருப்பதுடன், குழந்தையின் நஞ்சுக்கொடி 5 கிலோ எடையைச் சுமந்திருக்கும்.

    Monday, May 29, 2017

    How Most Antimatter Forms in Milky Way


    A team of international astrophysicists led by ANU has shown how most of the antimatter in the Milky Way forms.
    Antimatter is material composed of the antiparticle partners of ordinary matter -- when antimatter meets with matter, they quickly annihilate each other to form a burst of energy in the form of gamma-rays.
    Scientists have known since the early 1970s that the inner parts of the Milky Way galaxy are a strong source of gamma-rays, indicating the existence of antimatter, but there had been no settled view on where the antimatter came from.
    ANU researcher Dr Roland Crocker said the team had shown that the cause was a series of weak supernova explosions over millions of years, each created by the convergence of two white dwarfs which are ultra-compact remnants of stars no larger than two suns.
    "Our research provides new insight into a part of the Milky Way where we find some of the oldest stars in our galaxy," said Dr Crocker from the ANU Research School of Astronomy and Astrophysics.
    Dr Crocker said the team had ruled out the supermassive black hole at the centre of the Milky Way and the still-mysterious dark matter as being the sources of the antimatter.
    He said the antimatter came from a system where two white dwarfs form a binary system and collide with each other. The smaller of the binary stars loses mass to the larger star and ends its life as a helium white dwarf, while the larger star ends as a carbon-oxygen white dwarf.
    "The binary system is granted one final moment of extreme drama: as the white dwarfs orbit each other, the system loses energy to gravitational waves causing them to spiral closer and closer to each other," Dr Crocker said.
    He said once they became too close the carbon-oxygen white dwarf ripped apart the companion star whose helium quickly formed a dense shell covering the bigger star, quickly leading to a thermonuclear supernova that was the source of the antimatter.
    Story Source:
    Materials provided by Australian National University.
    Image : Artist's concept of the Milky Way Galaxy. GLAST will provide detailed information on where stars are forming.
    Credit: NASA JPL
    Cecile G. Tamura

    Sunday, May 28, 2017

    Incredible Earthquake Proof, Trapezoids Of Ancient Peru.


    An Ancient Civilization of Peru that were without doubt, one of the most advanced Ancient masters of st...one cutting.
    Without the use of modern technology, the Inca were able to cut large blocks of stone and fashion them into incredible, architectural masterpieces that are still unsurpassed to this day.
    An amazing trapezoid shape, that occurs constantly throughout the Ancient culture, constructed into doors, windows, walls, and even enormous temples and fortresses.
    This Incredible Ancient Empire found that the Andes mountain range was a seismic earthquake zone, and it is highly likely that the Ancient Inca discovered, or were taught, that trapezoid giant stones, provided the most stability in times of potential forthcoming, cataclysmic events.

    வித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான ஜோதிட சாஸ்திர யோகங்கள்

    ரொம்பவும் மோசமான வாழ்க்கை வாழ்பவர்களுக்குக்கூட ஏதாவது ஒருவகையான யோகம் நிச்சயம் இருந்தே தீரும். அது அவரது ஆயுளில் எப்போது வேலை செய்கிறது என்பதை அறிந்துகொண்டு செயல்பட்டால், நல்லவிதமான பலன்களை அடையலாம். ஜோதிட சாஸ்திரத்தில் 144 வகையான யோகங்கள் இருக்கின்றன. இவற்றுள் ஏதெனும் ஒன்று, ஒரு மனிதனின் ஜாதகத்தில் நிச்சயம் இருந்தே தீரும். வித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான யோகங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.
    கஜகேசரியோகம்
    ஜாதகத்தில் சந்திரனுக்கு 1,4, 7 மற்றும் 10 ஆம் இடத்தில் குரு அமையப் பெற்றால், இதை கஜகேசரி யோகம் அல்லது குரு சந்திர யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் கூடத்தில் முதன்மையானவனாகத் திகழ்வார்கள். எப்படிப்பட்ட இடர்பாட்டிலும் இருந்து தப்பித்து விடுவார்கள்.
    கிரகமாலிகா யோகம்
    ராகு, கேது நீங்கலாக ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் தொடர்ச்சியாய் நிற்குமானால், அது கிரகமாலிகா யோகம். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும்.வித்யாதரன்
    கேதார யோகம்
    ஜாதகக் கட்டத்தில் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானம் அல்லாத ஏதேனும் நான்கு வீடுகளில் (ஸ்தானங்களில்) எல்லா கிரகங்களும் பரவலாக நிற்பதால் இந்த யோகம் உண்டாகிறது. இதை ‘சங்க யோகம்‘ என்றும் ‘கேதார யோகம்‘ என்றும் கூறுவார்கள். அரசியல் செல்வாக்குப் பெருகும்.
    காமிய யோகம்
    லக்னாதிபதி சுபருடன்கூடி பலம் பெற்றிருக்க, 2 ஆம் இடத்தில் குரு, 4 ஆம் இடத்தில் சுக்கிரன், 7 ஆம் இடத்தில் சந்திரன், 11 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கும் அமைப்பை, 'காமிய யோகம்' என்பார்கள். பொன், பொருள், பூமி ஆகியவற்றைப் பெற்று யோகமாக வாழ்வார்கள். விரும்பியவர்களையே மணந்துகொள்வார்கள்.
    கார்முக யோகம்
    லக்னத்தில் ஜீவனாதிபதியும் 10 ஆம் இடத்தில் லக்னாதிபதியும் இருந்து லக்னாதிபதிக்கு 7 ஆம் இடத்தில் குரு நின்று இருவரையும் பார்க்கும் அமைப்பை கார்முக யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள், கல்வி, கேள்வி, ஞானம், உள்ளவர்கள். இந்த யோகம் 27 வயது முதல் எட்டு ஆண்டுகள் நடைபெறும்.
    கான யோகம்
    ஜாதகக் கட்டத்தில் 9 ஆம் இடத்துக்குரிய பாக்யஸ்தானதிபதி மூன்றிலிருந்து அவரை குரு பார்க்கும் அமைப்புக்குக் கான யோகம் என்று பெயர். இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருப்பார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகமிருக்கும். 16 வயதுக்கு மேல் மூன்று ஆண்டுகள் இந்த யோகம் நடக்கும்.
    கேதாரி யோகம்
    குரு, சந்திரன், சுக்கிரன் மூவரும் இரண்டிலிருக்க, அவர்கள் பாக்கியஸ்தானாதிபதி பார்க்க அமையப்பட்ட ஜாதகம் கேதாரி யோகம். இந்த யோகம் 52 வயதுக்குமேல் 7 வருடம் வரை நடந்து ஜாதகரை பிரபலமானவராக மாற்றும்.
    கௌரி யோகம்
    ஜீவனமான பத்தாமிடத்தில் (தொழில்ஸ்தானத்தில்) இருப்பவன் உச்சமாகி, அவனோடு லக்னாதிபதியும் இருக்கும் அமைப்புக்கு கௌரி யோகம் என்று பெயர். நற்குணம், பொன், பொருள் சேர்க்கையுடன் பெருமையுடன் வாழ்வார்கள். இந்த யோகம் 36 வயதுக்குமேல் 12 வருடம் வரை நடக்கும்.
    சகரயோகம்
    லக்னத்தில் சுபக்கிரகம் இருப்பதோ அல்லது பார்ப்பதாகவோ இருந்து, பஞ்சமாதிபதி பலத்துடன் நின்றால், அறிவாற்றல் மிக்கவராவார். வாழ்க்கையும் மகிழ்ச்சியுடன் காணப்படும்.
    சமுத்திர யோகம்
    இரண்டாமிடம் முதற்கொண்டு ஒரு வீடு விட்டு மறு வீடுகளில் கிரகமிருந்தால் சமுத்திர யோகமாகும். பொன், பொருள் கொண்டு அதிகாரியாகவும் இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியும், புத்திர புத்திரிகளும் உண்டு. ஏழு, ஒன்பதுக்குரியவர்கள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் சமுத்திர யோகமே. 53 வயது முதல் தொடங்கி யோகம் தரும் அமைப்பு இது.
    சரிதாம யோகம்
    ஏழு ஒன்பதுக்குரியவர்கள் பரிவர்த்தனை பெற்றிருக்க, இவர்களில் ஒருவருடன் சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி கூடியிருந்தால் சரிதாம யோகமாகும். அநேக வளங்களுடன் மேலான வாழ்க்கை வாழ்வர். இது முப்பது வயதுக்குமேல் அறுபதுவயதுவரை கூட நடக்கும்.
    சடமகுடா யோகம்

    லக்னத்தில் உச்ச கிரகம் இருக்க மூன்றில் பாக்யாதிபதி இருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்த்தால் சடமகுடா யோகமாகும். இது 14 வயது முதல் தொடங்கி நடைபெறும்.
    சல யோகம்
    லக்னத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருக்க, லக்னாதிபதி கேந்திர ஸ்தானத்திலிருக்க (1,4,7,10) லக்னாதிபதியை குரு பார்வையிட, அது சல யோகமாகும். ஜாதகரின் 17 வயதில் இந்த யோகம் தொடங்கும். இதிலிருந்து ஜாதகர் கல்வியில் மேன்மை பெற்று சகல சம்பத்துகளையும் பெற்றுத் திகழ்வார்..
    சாமர யோகம்
    லக்னத்தில் சுபக்கிரகம் இருப்பதோ அல்லது லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருப்பதோ சாமர யோகமாகும். இதனால் செல்வப் பெருக்கு. செல்வாக்கு. கௌரவம் இருக்கும்.
    சங்க யோகம்
    இரண்டுக்குரிய தனாதிபதி செவ்வாயைப் பார்க்க குரு, சந்திரன் இருவரும் ஏழுக்கு ஏழாக இருந்து ஒருவரை மற்றவர் பார்த்தாலும் சங்க யோகமாகும். மூன்றுக்குரியவன் 4க்குரிய உச்ச கிரகத்துடன்கூடி இருந்தாலும் இந்த யோகமாகும். வாக்கு வன்மையும், அறிவையும், வாகன யோகத்தையும் தந்து சிறப்பு தரக்கூடியது.
    அர்த்த சந்திர யோகம்
    ஒன்பது கிரகங்களும் வரிசையாக ஏழு வீடுகளில் இருந்தால் அர்த்தச் சந்திர யோகமாகும். அழகிய தோற்றம், கவர்ச்சி, வாழ்க்கையில் வசதி, முன்னேற்றம், உயர்பதவி, அரசியல் செல்வாக்கு கிட்டும். இதனை வீணை யோகம் என்றும் சொல்வர்.
    ஆதியந்த யோகம்
    லக்னாதிபதி திரிகோணமான 1, 5, 9 ஆகிய இடங்களிலோ அல்லது ஜீவன ஸ்தானமான பத்திலோ இருக்க, செவ்வாய் உச்சம் பெற்று மகரத்தில் இருக்க, 10க்குரியவன் 7ல் இருப்பது ஆதியந்த யோகமாகும். இதனால் உயரமான இடத்தில் பெரிய மாளிகை கட்டி தன் இனத்தாருக்குத் தலைவனாக பெருமையுடன் வாழ்வர்.
    அனபா யோகம்
    சனிக்கும், சுக்கிரனுக்கும் மத்தியில் சந்திரன் நிற்பது அனபா யோகம். இப்படிப்பட்ட யோக அமைப்பு இருந்தால், ஆரோக்யம் வசதி. மதிப்பு, கௌரவம், அதிகாரம் இவை சேரும். சந்திரனுக்கு முன்னால் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகமுண்டு.
    அமோக யோகம்
    நான்கு சுபர்களும் கேந்திரமிருந்தாலோ அல்லது ஆட்சி பெற்றிருந்தாலோ அமோக யோகமாகும். எல்லா வகை அதிர்ஷ்டமும் உயர்ந்த வாழ்க்கையும் அமையும்.
    உபஜெய யோகம்
    உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய சுபக்கிரகம் நிற்பது உபஜெய யோகமாகம். இதை வசுமதி யோகம் என்பார்கள். முன்னேற்றமும் செல்வமும் இவர்களைத் தேடி தானே வரும்.
    உபசரி யோகம்
    சூரியனுக்கு இருபுறமும் சுபக்கிரகங்கள் இருப்பது, உபசரி யோகமாகும். பலரும் மதிக்கும் நிலைக்கு உயரவைத்து பெருமைப்படுத்தும்.
    எக்காள யோகம்
    நான்காமிடத்துக்கும் பத்தாமிடத்துக்கும் உரிய அதிபதிகள் கேந்திரத்தில் நின்று, அவர்களை லக்னாதிபதியை பார்ப்பது யோகமாகும். லக்னம் இரண்டு ஆகிய இடங்களில் பாவர் இருக்க 9ல் குரு, 10ல் சூரியன் நின்றாலும் எக்காள யோகமே. இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். மற்றவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.நாளுக்கு நாள் செல்வம் பெருகும்.
    கலாநிதி யோகம்
    3க்கும் 11க்கும் உரியவர்கள்கூடி ஏழிலும், ஏழுக்குரியவன் 12லும் 12க்குரிய விரயாதிபதி குருவுடன் கூடி பாக்கியத்திலும் நிற்பது கலாநிதி யோகமாகும். இதன் பலன் 16வயதுக்குமேல் எட்டு வருடம் வரை உயர் நிலையைத் தரும்.
    காகள யோகம்
    லக்னாதிபதி இருந்த வீட்டுக்குரியவனும் சந்திரன் இருக்கும் வீட்டுக்குரியவனும் உச்சமாகி, சந்திரனுக்கு கேந்திர ஸ்தானம் பெற்று வருவது காகள யோகமாகும். 28 வயதுக்கு மேல் இந்த யோகம் நன்மை செய்யும்.
     
    சரணாகதியோகம்

    ஜோதிட சாஸ்திரத்தில் பலவகையான யோக அமைப்புகள் இருந்தாலும் 144 வகையான யோகங்களைத்தான் முக்கியமான யோகங்களாகச் சொல்வார்கள்.

    அவற்றில் வித்தியாசமான சில யோக அமைப்புகளைப் பார்த்தோம். ஆனால், எந்த யோகமும் ஒருவருக்கு வேலை செய்யாமல் போனாலும் இறைவனிடம் நீயே சரண் என சரணாகதி அடைந்தால் போதும். அவர் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் நம்மை விடுவித்துக் காப்பார்.

    Saturday, May 27, 2017

    ஆண்கள் பற்றி சாமுத்திரிகா லட்சணம் கூறுவதை தெரிந்துக் கொள்வோம்.



    தலை
    ஆண்களின் தலையானது உயர்ந்தோ அல்லது பருத்தோ இருந்தால், அதிக செல்வம் இருக்குமாம்.
    தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் அது தரித்திரமாம். தலையின் பின்பகுதி புடைத்திருப்பின், அவர்கள் அறிவாளியாக இருப்பார்களாம்.
    நெற்றி
    உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷ்டம் உண்டாகும்.
    நெற்றியில் ரேகை இல்லாமல் இருந்தால், அவர்களின் ஆயுள் குறையும். நெற்றியில் அதிக வியர்வை ஏற்பட்டால், அது அதிர்ஷடமாம்.
    கண்கள்
    ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால், அவர்கள் உலகை ஆள்வார்கள். கோழி போன்று முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின், அது அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.
    மூக்கு
    உயரமாக நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின், அது தரித்திரமாம்.
    வாய்
    அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர்.
    அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காண்பவர்களாக இருப்பார்கள்.
    உதடு
    உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷ்டம் நிலைத்திருக்கும். கழுத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்குமாம். தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு.
    தோள்கள் தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் முடி அதிகம் இருந்தால் நினைத்த காரியம் நடக்காது.
    நாக்கு
    நீளமான நாக்கு இருப்பின் அவர்கள் சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின், அவர்கள் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷ்டமாம்.
    காது
    காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின், அது அதிர்ஷ்டமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் அது துரதிர்ஷ்டமாம்.
    கைகள்
    நீளமான, சீரான பருமன் உடைய கைகளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்பக் கூடாது.
    கைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பின், அவர்கள் பாவிகளாக இருப்பார்களாம்.
    கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின், அவர்கள் செல்வந்தன் ஆவான். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு.
    மார்பு
    ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் எடுப்பாகவும் இருப்பின், அவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள். அதுவே ஆணின் மார்பகங்களில் அதிக முடி இருப்பின், அவர்களுக்கு பாலுணர்வு அதிகமாக இருக்குமாம்.
    கால்கள்
    கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவார்கள். கால்கள் குட்டையாக இருப்பின், அது தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால், நன்மைகள் பெருகும்.
    கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின், அவர்கள் அதிக புகழுடன் வாழ்வார்கள். ஆனால் பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகி இருந்தாலும், அதிக வறுமை வாட்டுமாம்.

    சாமுத்திரிகா லட்சணம் படி ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம் இருக்கும் என்று கூறுகிறது. 

    வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்!


    கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.
    கணக்கதிகாரப் பாடல் : 50
    ...
    “விட்ட மதனை விரைவா யிரட்டித்து
    மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்
    ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்
    தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “
    விளக்கம்:
    விட்டம்தனை விரைவா யிரட்டித்து = விட்டத்தின் இரு மடங்கு = 2r + 2r = 4r (விட்டம் = 2r ); மட்டு நாண் மாதவனில் மாறியே = 4 ஆல் பெருக்கு; எட்டதனில் ஏற்றியே = 8 ஆல் பெருக்கு; செப்பியடி = 20 ஆல் வகு.
    வட்டத்தின் சுற்றளவு = ( 4r x 4 x 8 ) / 20 = 32 / 5 r = 2 ( 16/5) r = 2 π r
    இங்கு π = 16 / 5 = 3.2 ( இது ஓரளவுக்குத் துல்லியமான தோராயமே ) இன்று நாம் பயன்படுத்தும் வட்டத்தின் சுற்றளவு = 2 π r என்ற சூத்திரத்தை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர் என்று அறியும் போது உண்மையில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

    பஞ்ச நந்திகள்


    போக நந்தி:
    ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். போகநந்தி எனப்படும் அபூர்வ நந்தி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது.
    ...
    பிரம்ம நந்தி:
    பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். பிரம்ம நந்தி எனப்படும் இது சுதைச் சிற்பமாக பிராகார மண்டபத்தில் உள்ளது.
    ஆன்ம நந்தி:
    பிரதோஷ கால பூஜையேற்கும் நந்திதான் ஆன்ம நந்தி. இது கொடிமரம் அருகே இருக்கும். எல்லா ஆன்மாக்களிலும் இறைவன் இருப்பதால், அந்த ஆன்மாக்களின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது.
    மால்விடை:
    மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.
    தரும நந்தி:
    இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழி முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக்கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி.

    பொன்னுருக்கல்


    திருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள்... மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.
    மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண்டு), தேசிக்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சளில் பிள்ளையார், சாம்பிராணியும் தட்டும், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.
    திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் நாணயத்தையும் வைத்துக்கொண்டு வந்து பூஜையறையில் வைக்கவேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கியபின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலைமேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்கவேண்டும்.
    பின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மணமகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடுப்பர். இதே நாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத்தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்யவேண்டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊற்றியபின் பலகாரம் சுடலாம். (இந்த நாளில் இருந்து திருமண நாள்வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்.)

    Thursday, May 25, 2017

    குறியியல்-அறிமுகம்

    (மொழிபெயர்ப்பு) Mubeen Sadhika

    குறிப்பான் மற்றும் குறிப்பீடு என்ற சொற்களின் தேர்வு மூலம் 'ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துக் காட்டும் வேறுபாட்டை'ச் சுட்டிக்காட்ட முடிகிறது என சசூர் குறிப்பிட்டார்(சசூர் 1983,67; சசூர் 1974, 67). இத்துடனும், குறியின் வரைபடத்தில் இருக்கும் கிடைக்கோட்டுடனும், சசூர் ஒலியும் சிந்தனையும்(அல்லது குறிப்பானும் குறிப்பீடும்) ஒரு தாளின் இரு பக்கங்கள் போல் பிரிக்க முடியாதவை என்று சசூர் வலியறுத்தினார்(சசூர் 1983, 111; சசூர் 1974, 113). அவை மூளையில்... 'நெருங்கிய தொடர்பை' 'ஒரு தொடர்புச் சங்கிலிபோல்' கொண்டிருக்கின்றன-'ஒன்று மற்றொன்றைத் தூண்டுவதாக' உள்ளன என்றார்(சசூர் 1983, 66; சசூர் 1974, 66).

    இந்தக் கூறுகள் முழுமையாகச் சுதந்திரமானவை என்றும் ஒன்று மற்றொன்றுக்கு முந்தி இருப்பதில்லை என்றும் சசூர் விளக்குகிறார்(சில்வர்மேன் 1983, 103). வாய்மொழிப் பேச்சில் ஒரு குறி உணர்வற்ற ஒலியாகவோ அல்லது ஒலியற்ற உணர்வாகவோ இருக்கமுடியாது. அவர் இரு அம்புக்குறிகளை அவற்றின் பரிமாற்றத்தைக் குறிக்கப் பயன்படுத்தினார். வரம்பும் எதிர் அம்பும் குறிப்பானும் குறிப்பீடும் ஆய்வு நோக்கங்களில் தெளிவாக விளக்கப்படுவதைக் குறிக்கின்றன.
    பின் அமைப்பியல் கோட்பாட்டாளர்கள் சசூரிய குறி மாதிரியில் உள்ள கிடைக்கோடான வரம்பைத் தெளிவான பிளவாக-குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள பிளவாகக் காட்டுவதாக விமர்சித்தார்கள்; அவர்கள் அதை மங்க வைத்து அல்லது அழித்து குறி அல்லது அமைப்பியல் உறவின் புதிய வடிவத்தை உருவாக்க விரும்பினார்கள். சில கோட்பாட்டாளர்கள், 'குறிப்பான் எப்போதும் குறிப்பீட்டிலிருந்து தனித்திருக்கும்...அது தனக்குரிய சுயச்சார்பைக் கொண்டிருக்கிறது' என்றும் விவாதித்தார்கள்(லெக்ட், 1994, 68), இந்தக் குறிப்பு குறியின் இடுகுறித் தன்மை பற்றியதாக இருக்கிறது. அதைப் பின்னர் விவாதிக்கலாம்.

    பொதுப்புத்தியின் படி குறிப்பீடு முன்பே இருப்பது போலவும் குறிப்பானுக்கு முன்பே இருப்பது போலவும் தோன்றுகிறது:'உணர்வை பார்த்துக்கொள்ளவேண்டும்,' என்றார் லூயிஸ் கரோல், 'ஒலிகள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும்(ஆலிஸின் விந்தை உலகத்தில் சாதனைகள், இயல் 9) என்றும் கூறுகிறார். இருந்தாலும், சசூருக்குப் பிந்தைய கோட்பாட்டாளார்கள் குறிப்பானுக்கு உள்ளார்ந்த முக்கியத்துவம் தரும் மாதிரியாக சசூரின் மாதிரியைப் பார்த்தது பொதுபுத்தியின் நிலைப்பாட்டுக்கு நேரெதிராக இருந்தது.
    லூயி ஹெல்ம்ஸ்லெவ், 'வெளிப்பாடு' மற்றும் 'உள்ளடக்கம்' என்ற சொற்களைக் குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் முறையே பயன்படுத்தினார்(ஹெல்ம்ஸ்லெவ் 1961, 47எஃப்எஃப்). குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள வேறுபாடு சில சமயங்களில் 'வடிவம் மற்றும் உள்ளடக்கம்' என்ற பிரபலமான இரட்டையுடன் இணையாக்கப்படும். அது போன்ற கட்டமைப்பில் குறியின் வடிவமாகக் குறிப்பானும் உள்ளடக்கமாகக் குறிப்பீடும் பார்க்கப்படுகிறது.
    இருந்தாலும், வடிவம் என்பதற்குரிய உருவகமான 'பாத்திரம்' என்பது சிக்கலைத் தரும், ஏனெனில் பொருள் என்பதற்கு நிகராக உள்ளடக்கம் இருப்பதால் அதனை ஆதரிப்பதாக இருக்கும். இது 'விளக்கம் தருவதற்கு முனைந்தச் செயல்பாடிலில்லாமல்' பொருளைப் 'பிரித்தறிய' உதவும் என்றும் அதனால் வடிவம் பொருளாம்சம் தருவதல்ல என்றும் அர்த்தம் கொள்ளப்படக்கூடும்(சாண்ட்லர் 1995 104-6).