Search This Blog

Tuesday, March 12, 2013

திருப்பலி… முழுமையாய் அறிவோம்

திருப்பலி…
முழுமையாய் அறிவோம் 

திருப்பலியில் பங்கு பெரும் நாம் திருப்பலியை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் 

திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு (Structure of the Roman Rite of Mass) என்பது கத்தோலிக்க திருச்சபையில் அருட்சாதனமாகக் கொண்டாடப்படுகின்ற திருப்பலியின் பாகங்கள் ஒவ்வொன்றும் தமக்குள்ளும் பிற பாகங்களோடும் இசைவுறப் பொருந்தி அமைவதைக் குறிக்கும்.[2]
கத்தோலிக்க திருச்சபையில் பெரும்பாலோர் பின்பற்றுகின்ற "இலத்தீன் வழிபாட்டுமுறை" (Latin Rite) கடைப்பிடிக்கின்ற திருப்பலி அமைப்பு பற்றிய விதிகள் "உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொதுப் போதனை" என்னும் அதிகாரப்பூர்வ ஏட்டில் உள்ளன. அவற்றின் சுருக்கம் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையின் மையக் கொண்டாட்டமாக அமைகின்ற திருப்பலி இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:
இறைவாக்கு வழிபாடு
நற்கருணை வழிபாடு
என்று அழைக்கப்படுகின்றன. இவ்விரு பகுதிகளும் ஒரே ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியை உருவாக்கும் அளவுக்கு ஒன்றோடொன்று நெருங்கி இணைந்துள்ளன.
ஒருசில சடங்குகள் திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தொடக்கமாகவும், முடிவாகவும் அமைந்துள்ளன.
இவ்வாறு, திருப்பலிக் கொண்டாட்டத்தின் முதல் பகுதியாகிய இறைவாக்கு வழிபாட்டுக்கு முன்வரும் தொடக்கச் சடங்குகளில் உள்ளவை:
வருகை
வாழ்த்துரை
மன்னிப்பு வழிபாடு
"ஆண்டவரே இரக்கமாயிரும்"
"உன்னதங்களிலே"
சபை மன்றாட்டு.
ஒன்றாய்க் கூடியிருக்கும் கிறித்தவ நம்பிக்கைகொண்டோருக்குள் உள்ளரங்க ஒன்றிப்பை உருவாக்கி, அவர்களை வழிபடும் ஒரே குடும்பமாக்கி, சீரிய முறையில் இறைவனின் வார்த்தைக்குச் செவிசாய்க்கவும், தக்க வண்ணம் நற்கருணை வழிபாட்டைக் கொண்டாடவும் அவர்களைத் தயாரிப்பதே இச்சடங்குகளின் நோக்கம் ஆகும்.
வருகை
மக்கள் ஒன்றுகூடியபின் குரு பணியாளர்களோடு வரும்பொழுது, வருகைப் பாடல் தொடங்கப்படும். கொண்டாட்டத்தைத் தொடங்கவும், கூட்டத்தின் உள்ளரங்க ஒன்றிப்பை வளர்க்கவும், அவர்களுக்கு வழிபாட்டுக் காலத்து அல்லது நடைபெறும் விழாவின் மறையுண்மையை அறிமுகப்படுத்தவும், குருவும் பணியாளரும் வரும் பவனிக்குப் பின்னணியாக அமைவதும் இவ்வருகைப் பாடலின் நோக்கமாகும்.
பலிபீட வணக்கமும் மக்களுக்கு வாழ்த்தும்
பலிபீட முற்றத்திற்கு வந்ததும், குருவும் பணியாளர்களும் பீடத்துக்கு வணக்கம் செலுத்துவார்கள். மேலும், இவ்வணக்கத்தைக் குறிப்பிட, குருவும் திருத்தொண்டரும் பீடத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்வர்; வசதியானால் குரு பீடத்திற்குத் தூபம் காட்டுவார்.
வருகைப் பாடல் முடிந்ததும், குருவும் திருக்கூட்டத்தினர் அனைவரும் தம்மீது சிலுவை வரைந்து கொள்வர். பின்பு திருக்கூட்டத்தினரிடம் இறைவன் பிரசன்னமாயிருப்பதைக் குரு வாழ்த்துரையால் வெளிப்படுத்துவார். இவ்வாறு குரு வாழ்த்துவதாலும் அதற்கு மக்கள் பதில் அளிப்பதாலும் கூடியுள்ள திருச்சபையின் மறைபொருள் விளங்குகிறது.
மன்னிப்பு வழிபாடு
மக்களை வாழ்த்தியபின் குரு அல்லது வேறு தகுதியுடைய பணியாளர் அந்நாளின் திருப்பலியைப் பற்றி மக்களுக்கு மிகச் சுருக்கமாகத் தொடக்கவுரை ஆற்றலாம். அதன்பின், குரு மன்னிப்பு வழிபாட்டுக்கு அழைப்பு விடுப்பார்; திருக்கூட்டத்தினர் அனைவரும் சேர்ந்து பொதுப்பாவ அறிக்கையிடுவர்; குரு சொல்லும் பாவமன்னிப்பு செபத்தோடு இச்சடங்கு முடிவுறும்.
"ஆண்டவரே இரக்கமாயிரும்"
மன்னிப்பு வழிபாட்டிலேயே இடம்பெற்றிருந்தாலன்றி, "ஆண்டவரே இரக்கமாயிரும்" (பண்டைக் கிரேக்கம்: Kyrie eleison) என்னும் பாடம் இப்பொழுது தொடங்கும். இதில் கிறித்தவ மக்கள் ஆண்டவரைப் புகழ்ந்து, அவருடைய இரக்கத்தை இறைஞ்சுவார்கள். எனவே இப்பாடல் வழக்கமாக எல்லாராலும் பாடப்படும். அதாவது, மக்களும் பாடகர் குழுவுமாக அல்லது மக்களும் பாடகர் ஒருவருமாக இப்பாடலைப் பாடுவார்கள்.
ஆர்ப்பரிப்பு ஒவ்வொன்றும் வழக்கமாக இருமுறை எழுப்பப்பெறும்; எனினும் மொழி, இசை, சூழ்நிலை தன்மைக்கு ஏற்ப ஆர்ப்பரிப்பின் எண்ணிக்கையைக் கூட்டலாம் அல்லது ஆர்ப்பரிப்புக்கு முன் சிறு வசனத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். "ஆண்டவரே இரக்கமாயிரும்" பாடப்பெறாத பொழுது அது படிக்கப்படும்.
"உன்னதங்களிலே"


போர்த்துகல் நாட்டு பாத்திமா நகர் அன்னை மரியா திருத்தலத்தில் நிகழும் திருப்பலிக் கொண்டாட்டம். ஆண்டு: சூலை 2008
இப்புகழ்ச்சிப் பாடல் மிகப் பழமையானது, வணக்கத்துக்குரியது. தூய ஆவியால் ஒன்றுகூட்டப்பட்ட திருச்சபை இப்பாடலில் தந்தை இறைவனையும், செம்மறியையும் மகிமைப்படுத்தி, இரந்து மன்றாடுகிறது. இறைமக்கள் இப்பாடலைப் பாடுவர் அல்லது பாடகர் குழுவோடு சேர்ந்து மக்கள் மாறி மாறிப் பாடுவர் அல்லது பாடகர் குழு மட்டும் பாடும். பாடப்பெறாதபொழுது இதை அனைவரும் ஒன்றாகவோ மாறி மாறியோ படிக்கலாம்.
திருவருகைக் காலம், தவக் காலம் ஆகியவைகளுக்குப் புறம்பே வரும் ஞாயிற்றுக் கிழமைகள், பெருவிழாக்கள், விழாக்களிலும், இன்னும் அந்தந்த இடத்துச் சிறப்புக் கொண்டாட்ட நாள்களிலும் "உன்னதங்களிலே" பாடப்படும் அல்லது படிக்கப்பெறும்.
சபை மன்றாட்டு
அடுத்து, குரு மக்களைச் செபிக்க அழைக்கிறார். குருவோடு அனைவரும் சேர்ந்து சிறிது நேரம் மௌனமாயிருப்பர். அச்சமயம் இறைவன் திருமுன் தாங்கள் இருப்பதை உணர்ந்து தங்கள் தேவைகளை நினைத்து அவர்கள் செபிக்கலாம். பின் குரு சபை மன்றாட்டு எனப்படும் செபத்தைச் சொல்லுவார். இது நிகழும் கொண்டாட்டத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும். இம்மன்றாட்டு குருவின் சொற்களால் தூய ஆவியில் கிறிஸ்து வழியாகத் தந்தை இறைவனை நோக்கி செபிக்கப்படும்.
மக்கள் இம்மன்றாட்டோடு தங்களை ஒன்றுபடுத்தி, அதற்கு உடன்பாடு தெரிவித்து, ஆமென் என்னும் ஆர்ப்பரிப்பால் அதைத் தங்கள் செபமாக்கிக் கொள்வார்கள். ஆமென் என்னும் எபிரேயச் சொல் "ஆம்", "அப்படியே ஆகுக" என்னும் பொருளைத் தரும்.
திருப்பலியில் ஒரே ஒரு சபை மன்றாட்டுத்தான் சொல்லப்படும்; இந்த விதி காணிக்கைமீது மன்றாட்டு, நன்றி மன்றாட்டு ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
சபை மன்றாட்டு நீண்ட முடிவுரை கொண்டிருக்கும். அதாவது,
தந்தையிடம் செபம் சொல்லப்பட்டால்
“உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்”
என முடிவுறும்.
தந்தையிடம் சொல்லும் செபத்தின் முடிவில், திருமகனைக் குறிப்பிட்டிருந்தால்,
“உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர்வழியாக உம்மை மன்றாடுகிறோம்”
என முடிவுறும்.
திருமகனிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
காணிக்கைமீது மன்றாட்டு, நன்றி மன்றாட்டு என்னும் இரு செபங்களும் சுருக்கமான முடிவுரை கொண்டிருக்கும்; அதாவது,
தந்தையிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
தந்தையிடம் சொல்லும் செபத்தின் முடிவில் திருமகனைக் குறிப்பிட்டிருந்தால்,
“ என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாகவே உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
திருமகனிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாகவே உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
ஆ) அருள்வாக்கு வழிபாடு

அருள்வாக்கு வழிபாட்டின் சிறப்பான பகுதி திருநூலிலிருந்து தேர்ந்தெடுத்த வாசகங்களும், அவைகளுக்கு இடையில் வரும் திருப்பாடல்களுமாகும். மறையுரை, விசுவாச அறிக்கை, பொது மன்றாட்டு அல்லது விசுவாசிகள் மன்றாட்டு ஆகியவை இப்பகுதியை விளக்கி முடிவுக்குக் கொணர்கின்றன.
எவ்வாறெனில், மறையுரை விளக்கும் வாசகங்களினால் இறைவன் தம் மக்களோடு உரையாடி, அவர்களுக்கு மீட்பு-ஈடேற்றம் பற்றிய மறைபொருள் நிகழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆன்ம ஊட்டமளிக்கிறார். கிறிஸ்து தம் வாக்கினால் விசுவாசிகள் நடுவில் பிரசன்னமாயிருக்கிறார். அருள்வாக்கை மக்கள் பாடல்களால் தமதாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு ஊட்டம் பெற்று, பொது மன்றாட்டுப் பகுதியில் திருச்சபை அனைத்தின் தேவைகளுக்காகவும், அனைத்துலகின் மீட்புக்காகவும் மக்கள் மன்றாடுவார்கள்.
திருநூல் வாசகங்கள்
அருள்வாக்கு வழிபாட்டின்போது முழங்கப்படுகின்ற வாசகங்களினால் அருள்வாக்கு விருந்து மக்களுக்கு அளிக்கப்படுகிறது; திருநூலின் கருவூலமும் அவர்களுக்குத் திறக்கப்படுகிறது.
பாரம்பரியத்தின்படி வாசகங்களை வாசிக்கும் பணி திருக்கூட்டத்தில் தலைமை தாங்குவோருக்கன்று, பணியாளருக்கே உரியதாகும்; எனவே, வழக்கம்போலத் திருத்தொண்டர் அல்லது அவர் இல்லையெனில் மற்றொரு குரு நற்செய்தி வாசிப்பது முறையாகும். வாசகர் ஏனைய வாசகங்களை வாசிப்பர்.
திருத்தொண்டரோ வேறு குருவோ இல்லை என்றால் திருப்பலி நிறைவேற்றும் குருவே நற்செய்தியை வாசிப்பார்.
நற்செய்தி வாசகம் மிகுந்த வணக்கத்துடன் நடைபெறும். ஏனைய வாசகங்களைவிட நற்செய்தி வாசகத்துக்குத் தனிவணக்கம் செலுத்தப்படும். நற்செய்தியை அறிக்கையிட தனி அதிகாரம் பெற்ற பணியாளர் தேவை. தம் பணியை ஆற்றுமுன், அவர் ஆசி பெற்று அல்லது இறைவேண்டல் செய்து தம்மைத் தயாரித்துக் கொள்வார். கிறித்தவத் திருக்குழுவினரோ, நற்செய்தியில் கிறிஸ்து பிரசன்னமாயிருந்து தங்களோடு பேசுவதைக் கண்டுணர்ந்து அதைத் தங்கள் ஆர்ப்பரிப்புகளால் வெளிப்படுத்துவார்கள். நற்செய்தியை அவர்கள் நின்றுகொண்டு கவனமாய்க் கேட்பார்கள். மேலும் நற்செய்திப் புத்தகத்துக்கு வணக்கம் செலுத்த நடக்கும் சடங்கு முறைகளாலும் இது விளங்கும்.
வாசகங்களுக்கு இடையில் வரும் பாடல்கள்
முதல் வாசகத்தைத் தொடர்ந்து வருவது பதில் உரைச் சங்கீதம் அல்லது படிக்கீதம். இது அருள்வாக்கு வழிபாட்டின் முழுமைக்குரிய பகுதியாகும். வழக்கமாக வாசக நூலிலிருந்து சங்கீதம் எடுக்கப்பெறும். வாசக நூலில் அடங்கியுள்ள ஒவ்வொரு வாசகத்தோடும் ஒரு சங்கீதம் நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. எனவே, சங்கீதத்தைத் தேர்ந்தெடுப்பது வாசகத்தைப் பொறுத்திருக்கும்.
வாசக மேடையிலிருந்தோ, தகுந்த மற்றோர் இடத்திலிருந்தோ சங்கீதப் பாடகர் அல்லது சங்கீத முதல்வர் சங்கீத அடிகளைப் படிக்க, திருக்கூட்டமனைத்தும் அமர்ந்து கருத்தூன்றிக் கேட்டுக்கொண்டிருக்கும். சங்கீதம் நேரடியாக - அதாவது பல்லவியின்றிப் படிக்கப்பட்டால் அன்றி, வழக்கம்போலத் திருக்கூட்டம் பல்லவியை எடுத்துரைக்கும்.
திருவழிபாட்டுக் காலத்திற்கேற்ப இரண்டாம் வாசகத்துக்குப் பின் "அல்லேலூயா" (எபிரேயச் சொல்; பொருள்: "ஆண்டவரைப் போற்றுங்கள்") அல்லது மற்றொரு பாடல் இடம்பெறும். "அல்லேலூயா" தவக்காலத்துக்குப் புறம்பே எல்லாக் காலங்களிலும் பாடப்பெறும். இதை எல்லாரும் சேர்ந்தோ பாடகர் குழுவோ ஒரு பாடகரோ தொடங்கலாம். மற்றொரு பாடல் என்று மேலே குறிப்பிட்டது, வாசகப் புத்தகத்தில் அல்லது படிக்கீதப் புத்தகத்தில் கண்டுள்ளபடி, நற்செய்திக்கு முன்வரும் வசனமாகவோ மற்றொரு சங்கீதம் அல்லது நெடுங்கீதமாகவோ இருக்கும்.
நற்செய்திக்குமுன் ஒரு வாசகம் மட்டும் இருக்கும்போது, (1) "அல்லேலூயா" சொல்லவேண்டிய காலமாயின், அல்லேலூயா சங்கீதத்தைப் பயன்படுத்தலாம் அல்லது சங்கீதம், வசனம் ஆகியவையோடு அல்லேலூயா பயன்படுத்தலாம் அல்லது சங்கீதத்தை மட்டுமோ அல்லேலூயா மட்டுமோ பயன்படுத்தலாம்; (2) "அல்லேலூயா" சொல்லக்கூடாத காலமாயின், சங்கீதத்தையோ நற்செய்திக்கு முன்வரும் வசனத்தையோ பயன்படுத்தலாம்.
வாசகத்துக்குப் பின்வரும் சங்கீதம் பாடப்பெறாவிடில் படிக்கப்பெறும். "அல்லேலூயா" வசனமோ நற்செய்திக்கு முன்வரும் வசனமோ பாடப்பெறாவிடில் படிக்கப்பெறும். "அல்லேலூயா" வசனமோ நற்செய்திக்கு முன்வரும் வசனமோ பாடப்பெறாவிடில், அதை விட்டுவிடலாம்.
பாஸ்கா விழாவன்றும், தூய ஆவி விழாவன்றும் தொடர் பாடல்கள் சொல்லப்படும்; ஏனைய தொடர் பாடல்களை விரும்பினால் பயன்படுத்தலாம்.
மறையுரை
மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி. எனவே அது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மறையுரை கிறிஸ்தவ வாழ்வைப் பேணிவளர்க்க இன்றியமையாத ஒன்றாகும். திருநூல் வாசகங்களின் ஓர் அம்சத்தை அல்லது அன்றைய திருப்பலியின் பொதுப் பகுதியிலிருந்தோ சிறப்புப் பகுதியிலிருந்தோ தேர்ந்துகொண்ட ஒரு பாடத்தை விளக்குவதாக மறையுரை இருக்க வேண்டும். மறையுரை ஆற்றுகின்ற பணியாளர் (ஆயர், குரு, திருத்தொண்டர்) கொண்டாடப்பெறும் மறையுண்மைநிகழ்ச்சியையும் திருக்கூட்டத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கடன் திருநாள்களில் மக்கள் கூடிவந்து கொண்டாடும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை நிகழ்த்தப்பெற வேண்டும்; ஏனைய நாள்களிலும் சிறப்பாக, திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்காக் காலம் இவற்றின் வாரநாள்களிலும், மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்துகூடும் நாள்களிலும், நிகழ்ச்சிகளிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
வழக்கமாக, திருப்பலி நிறைவேற்றும் குருவே மறையுரை ஆற்றுவார்.
விசுவாச அறிக்கை
திருப்பலிக் கொண்டாட்டத்தில் இடம்பெறும் விசுவாசப் பிரமாணம் அல்லது விசுவாச அறிக்கை அல்லது (நம்பிக்கை அறிக்கையால்), (Creed) மக்கள் வாசகங்களிலும் மறையுரையில் கேட்டுணர்ந்த அருள்வாக்கிற்குப் பதிலளித்து உடன்பாடு தெரிவிக்க வாய்ப்பு தரப்படுகிறது. மேலும் நற்கருணை வழிபாட்டைத் தொடங்குமுன், மக்கள் விசுவாசப் போதனைகளை நினைவுகூர வாய்ப்புக் கிடைக்கிறது.
குருவும் மக்களும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெருவிழாக்களிலும் விசுவாச அறிக்கையிட வேண்டும். தவிர, தனிப்பட்ட சிறப்புக் கொண்டாட்டங்களிலும் விசுவாச அறிக்கையிடலாம்.
வழக்கம்போல் அதை எல்லாரும் சேர்ந்தோ மாறி மாறியோ பாடலாம்.
பொது மன்றாட்டு
பொது மன்றாட்டு அல்லது விசுவாசிகள் மன்றாட்டில் மக்கள் தங்கள் குருத்துவப் பணியைச் செயல்படுத்தி எல்லாருக்காகவும் மன்றாடுவார்கள். மக்கள் கூடியிருக்கும் திருப்பலிகளில் எல்லாம் வழக்கமாக இம்மன்றாட்டு நடைபெறுவது நல்லது; இவ்வாறு, புனித திருச்சபைக்காகவும், அதிகாரம் பெற்று மக்களை ஆள்வோர்க்காகவும், பல்வேறு தேவைகளால் வருந்துவோர்க்காகவும், மக்கள் அனைவருக்காகவும், அனைத்துலக ஈடேற்றத்திற்காகவும் வேண்டுதல் பொது மன்றாட்டில் நிகழும்.
பொது மன்றாட்டில், மன்றாட்டுகளின் வரிசை வழக்கமாகப் பின்வருமாறு அமையும்:
திருச்சபையின் தேவைகளுக்காக
நாட்டை ஆள்வோர்க்காகவும் அனைத்துலகின் நலனுக்காகவும்
எவ்வகை நெருக்கடியாலும் வருந்துவோர்க்காக
அந்தந்த இடத்து மக்கள் சமுதாயத்திற்காக.
எனினும் உறுதிப்பூசுதல், திருமணம், அடக்கச் சடங்கு போன்ற தனிப்பட்ட கொண்டாட்டங்களில் மன்றாட்டுகளின் வரிசை தனிச் சூழ்நிலைக்குத் தக்கவாறு அமையலாம்.
இம்மன்றாட்டுகளை நடத்துகிறவர் திருப்பலி நிறைவேற்றும் குரு. அவர் சில வார்த்தைகளில் கிறித்தவ மக்களைச் செபிக்கும்படி அழைப்பார். மன்றாட்டுகளுக்குப்பின் இறுதி செபத்தைச் சொல்லி முடிப்பார். திருத்தொண்டர் அல்லது பாடகர் அல்லது மற்றொருவர் கருத்துகளை அறிவிப்பது நல்லது. கருத்து தெரிவிக்கப்பட்டதும் கூட்டமனைத்தும் பொதுப் பதில் மொழியாலோ மௌன செபத்தாலோ வேண்டிக்கொள்வர்.
பொது மன்றாட்டோடு திருப்பலியின் முதல் பகுதியாகிய "அருள்வாக்கு வழிபாடு" நிறைவுறுகிறது. அதைத் தொடர்ந்து நிகழவிருக்கின்ற இரண்டாம் பகுதி "நற்கருணை வழிபாடு" என்று அழைக்கப்படுகிறது. அது தொடர்பான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன.
இ) நற்கருணை வழிபாடு

இறுதி இராவுணவின்போது கிறிஸ்து பாஸ்காப் பலியையும் திருவிருந்தையும் ஏற்படுத்தினார். இதனால், குரு ஆண்டவராகிய கிறிஸ்துவின் பதிலாளியாயிருந்து, ஆண்டவரே நிறைவேற்றித் தம் நினைவாகச் செய்யும்படி சீடரிடம் கையளித்ததையே நிறைவேற்றுவதால் திருச்சபையில் சிலுவைப்பலி தொடர்ந்து பிரசன்னமாகிறது.
கிறிஸ்து அப்பத்தையும் கிண்ணத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அப்பத்தைப் பிட்டு தம் சீடருக்கு அளித்து,
“ இதை வாங்கி உண்ணுங்கள்: இது என் உடல்; இதை வாங்கிப் பருகுங்கள்: இது என் இரத்தமுள்ள கிண்ணம். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ”
என்றார். எனவே திருச்சபை கிறிஸ்துவின் இவ்வாக்குகளுக்கும் செயல்களுக்கும் ஏற்ற பகுதிகளை அமைத்து, நற்கருணை வழிபாடு அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளது. எவ்வாறெனில்:
காணிக்கைகளைத் தாரிக்கும் பகுதியில், அப்பமும் தண்ணீர் கலந்த இரசமும் பீடத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. கிறிஸ்துவும் இதே பொருள்களைத்தான் பயன்படுத்தினார்.
நற்கருணை மன்றாட்டில் மீட்புப்பணி அனைத்தையும் நினைவுகூர்ந்து இறைவனுக்கு மக்கள் நன்றிசெலுத்துகின்றனர். காணிக்கைகள் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன.
ஒரே அப்பத்தைப் பகிர்தல் விசுவாசிகளின் ஒற்றுமைக்கு அடையாளம். கிறிஸ்துவின் கைகளிலிருந்து திருத்தூதர்கள் பெற்றுக்கொண்டதுபோலவே, கிறிஸ்தவ மக்களும் நற்கருணை உட்கொள்ளும்போது ஆண்டவருடைய உடலையும் இரத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
காணிக்கைகளைத் தயார் செய்தல்
நற்கருணை வழிபாட்டின் தொடக்கத்தில் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறப்போகும் காணிக்கைகள் பலிபீடத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன.
முதன்முதலாக, நற்கருணை வழிபாடு அனைத்திற்கும் மையமாக இருக்கும் பலிபீடம், அதாவது ஆண்டவரின் உணவு மேசைமீது திருமேனித்துகில் விரித்து, கிண்ணத்துணி, கிண்ணம், திருப்பலிப் புத்தகம் ஆகியவற்றைக் கொண்டுவந்து வைத்து அது தயார் செய்யப்படும்.
பின், காணிக்கைகள் கொண்டுவரப்படுகின்றன. கிறித்தவ மக்கள் அப்பத்தையும் இரசத்தையும் காணிக்கையாக அளிப்பது பாராட்டுக்குரியது. குருவோ திருத்தொண்டரோ வசதியான இடத்தில் நின்று இக்காணிக்கைகளைப் பெற்றுக்கொள்வர். பின்னர் இக்காணிக்கைகள் பீடத்தின்மீது வைக்கப்படும்.
முற்காலத்தில் நடந்ததுபோல், இன்று கிறித்தவ மக்கள் தங்கள் வீட்டிலிருந்து திருவழிபாட்டுக்கான அப்ப இரசத்தைக் கொண்டுவருவதில்லை. என்றாலும் காணிக்கைகளைக் கொண்டுவரும் சடங்கு இன்னும் ஆன்மிகப் பொருளும் ஆற்றலும் கொண்டுள்ளது.
தவிர, ஏழைகளுக்கென்றும் கோவில் பராமரிப்புக்கென்றும் கிறித்தவ மக்கள் கொண்டுவந்த அல்லது கோவிலில் காணிக்கையாகக் கொடுத்த காசையும் மற்ற கொடைகளையும் ஏற்றுக்கொள்ளலாம். இவைகளைப் பலிபீடத்திற்குப் புறம்பே தகுந்த இடத்தில் வைக்கலாம்.
காணிக்கைப் பவனியின்போது காணிக்கைப் பாடல் பாடப்பெறும். காணிக்கைகளைப் பீடத்தின்மீது வைக்கும்வரை இப்பாடல் தொடரும். இப்பாடலைப் பற்றிய விதிகள் வருகைப்பாடலைப் பற்றியவைகளைப் போன்றவை (காண்க: திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு#வருகை). காணிக்கைப் பாடல் பாடப்படாதபோது அது விடப்படும்.
பீடத்தின்மீது வைக்கப்பெற்ற காணிக்கைகளுக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டலாம். இச்சடங்கு திருச்சபையின் காணிக்கையும் மன்றாட்டும் இறைவன் திருமுன் தூபம்போல் எழுவதைக் குறிக்கும் (காண்க: திருப்பாடல்கள் 141:2). காணிக்கைகளுக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டியபின்னர் திருத்தொண்டரோ மற்றொரு பணியாளரோ குருவுக்கும் மக்களுக்கும் தூபம் காட்டலாம்.
அடுத்து, குரு கைகளைக் கழுவுவார். இச்சடங்கு அகத்தூய்மை பெறக் குரு கொண்டிருக்கும் ஆவலை வெளிப்படுத்தும்.
காணிக்கைகளைச் சடங்குமுறைப்படி பீடத்தின்மீது வைத்தபின், குரு மக்களைத் தம்மோடு சேர்ந்து செபிக்க அழைத்து, "காணிக்கைமீது மன்றாட்டு" என்னும் செபத்தைச் சொல்லுவார். இவ்வாறு காணிக்கைகளைத் தயார்செய்தல் என்னும் பகுதி முடிந்து, நற்கருணை மன்றாட்டுக்கு இறைமக்கள் தயாராகின்றனர்.
நற்கருணை மன்றாட்டு
இப்பொழுது தொடங்கும் நற்கருணை மன்றாட்டு நன்றிசெலுத்தி அர்ச்சிக்கும் இறைவேண்டல் ஆகும். இதுவே திருப்பலிக் கொண்டாட்டம் அனைத்திற்கும் மையமும் சிகரமும் ஆகும். மக்கள் தங்கள் உள்ளங்களைப் பக்திப் பற்றுதலுடனும் நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி குரு அழைக்கின்றார். அவர்களைத் தம்முடன் இறைவேண்டலில் இணைத்து, முழுச் சமூகத்தின் பெயராலும் அவர் இயேசு கிறிஸ்து வழியாக விண்ணகத் தந்தையாம் இறைவனை நோக்கி மன்றாடுகிறார். வழிபடும் கூட்டத்தினர் அனைவரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து, இறைவனின் மாபெரும் செயல்களை நினைவுகூர்ந்து அறிக்கையிட்டுப் பலி ஒப்புக்கொடுப்பதே இம்மன்றாட்டின் கருத்து ஆகும்.
நற்கருணை மன்றாட்டின் பல்வேறு பகுதிகளைப் பின்வருமாறு பிரிக்கலாம்:
1) நன்றி செலுத்துதல் (இது குறிப்பாக தொடக்கவுரையில் விளங்கும்): இதில், புனித மக்கள் அனைவரின் சார்பாகக் குரு தந்தையாம் இறைவனை மகிமைப்படுத்தி, அவர் நிறைவேற்றிய மீட்புப் பணியனைத்தையும் நினைந்து நன்றிசெலுத்துவார் அல்லது திருவழிபாட்டுக் காலம், விழா, நாள் ஆகியவற்றிற்குப் பொருத்தமான அம்மீட்புப் பணியின் ஒரு குறிப்பிட்ட சிறப்பினை நினைந்து நன்றிசெலுத்துவார்.
2) ஆர்ப்பரித்தல்: திருக்கூட்டம் அனைத்தும் விண்ணவர்களோடு சேர்ந்து "தூயவர்" என்னும் பாடலைப் பாடும் அல்லது அதைச் செபிக்கும். நற்கருணை மன்றாட்டில் ஒரு பகுதியாக அமைந்த இந்த ஆர்ப்பரிப்பைக் குருவோடு சேர்ந்து மக்கள் அனைவரும் எழுப்புவர்.
3) தூய ஆவியின் வருகைக்காக மன்றாடுதல்: மக்களால் அர்ப்பணிக்கப்பட்ட கொடைகள் புனிதம் பெற வேண்டும், அதாவது கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவேண்டும் என்றும், நற்கருணைப் பந்தியில் அமரப்போகிறவர்களின் மீட்புக்கு இப்பலிப்பொருள் பயன்படவேண்டும் என்றும் திருச்சபை தெய்வீக ஆற்றலைத் தனிவகையில் இறைஞ்சுகிறது.
4) நற்கருணையை ஏற்படுத்திய வரலாறும் வசீகரமும்: கிறிஸ்து இறுதி இராவுணவின்போது அப்ப இரச குணங்களுள் தம் உடலையும் இரத்தத்தையும் ஒப்புக்கொடுத்து, அவைகளைத் திருத்தூதர் உண்ண உணவாகவும் பருகப் பானமாகவும் அவர்களுக்கு அளித்தார். இம்மறைபொருள் நிகழ்ச்சியை நீடித்திருக்கச் செய்யவேண்டும் என்னும் கட்டளையையும் அவர்களுக்குக் கொடுத்துச் சென்றார். இவ்வாறு இறுதி இராவுணவின்போது கிறிஸ்து ஏற்படுத்திய பலி இங்கு கிறிஸ்துவின் வாக்குகளாலும் செயல்களாலும் நிறைவேறுகிறது.
5) நினைவுகூர்தல்: ஆண்டவராகிய கிறிஸ்துவின் கட்டளையைத் திருத்தூதர்கள் வழியாகப் பெற்றுகொண்ட திருச்சபை அதை நிறைவேற்றி, கிறிஸ்துவை, சிறப்பாக அவர்தம் புனிதமிக்க பாடுகளையும் மாட்சிமிக்க உயிர்த்தெழுதலையும் விண்ணேற்றத்தையும் நினைவுகூருகின்றது.
6) ஒப்புக்கொடுத்தல்: மேற்குறிப்பிட்டவாறு நினைவுகூரும்போது திருச்சபை - சிறப்பாக வழிபாடு நடத்த ஓரிடத்தில் கூடிவருகின்ற திருச்சபை - தூய ஆவியால் விண்ணகத் தந்தைக்கு மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுக்கிறது. இந்நேரத்தில் கிறிஸ்தவ மக்கள் மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுப்பதோடு அமையாது, தங்களையே ஒப்புக்கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இறுதியில் இறைவனே எல்லாருக்கும் எல்லாமாய் இருக்குமாறு கிறிஸ்துவை இடைநிலையாளராகக் கொண்டு, இறைவனோடும் தங்களுக்குள்ளும் ஒருமைப்பாட்டை நாளுக்குநாள் வளர்த்து நிறைவு எய்தவேண்டுமென்றும் திருச்சபை விரும்புகிறது.
7) வேண்டுதல்கள்: விண்ணக, மண்ணகத் திருச்சபை அனைத்தும் கூடி நற்கருணைப்பலி கொண்டாடுகிறது என்றும், கிறிஸ்துவின் உடலாலும் இரத்தத்தாலும் கிடைத்த ஈடேற்றத்திலும் மீட்பிலும் பங்குகொள்ளுமாறு அழைக்கப்பெற்ற திருச்சபைக்காகவும், அதன் உறுப்பினரான வாழ்வோர், இறந்தோர் அனைவருக்காகவும் நற்கருணைப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்றும் இவ்வேண்டுதல்கள் வெளிப்படுத்துகின்றன.
8) இறுதிச் சிறப்புப் புகழுரை: இறைவனைப் போற்றி மகிமைப்படுத்தும் இப்புகழ்ச்சி உரை மக்களின் "ஆமென்" என்னும் ஆர்ப்பரிப்பால் உறுதிசெய்யப்பட்டு நிறைவுறுகிறது.
அனைவரும் பக்தியுடனும் அமைதியுடனும் கவனமாகக் கேட்டு, சடங்கில் குறிப்பிட்ட ஆர்ப்பரிப்புகள் வழியாகப் பங்குகொள்ளவேண்டும் என நற்கருணை மன்றாட்டின் அமைப்பு வலியுறுத்துகிறது.
திருவிருந்துச் சடங்கு
நற்கருணைக் கொண்டாட்டம் பாஸ்கா விருந்தை உண்பதாகும். எனவே, ஆண்டவரின் கட்டளைப்படி, தகுதியுள்ள விசுவாசிகள் அவருடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்பத்தைப் பகிர்தலும் விசுவாசிகளை நற்கருணைப் பந்திக்கு நேரடியாக அழைத்துச் செல்கின்ற மற்ற தயாரிப்புச் சடங்குகளும் இதையே நோக்கமாகக் கொண்டுள்ளன:
1) ஆண்டவரின் வேண்டல்: இச்செபத்தில் அன்றாட உணவுக்காக மன்றாடுகிறோம். அது கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை உணவையும் குறிக்கும். மேலும், இந்த மன்றாட்டில் பாவ மன்னிப்புக்காக வேண்டுதல் செய்யப்படுகிறது. ஏனெனில் புனிதமானவை புனிதமானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இறைவேண்டல் செய்ய குரு அழைப்பு விடுப்பார். விசுவாசிகள் அனைவரும் அவரோடு சேர்ந்து இம்மன்றாட்டைச் சொல்லுவர். இதன் வழக்கமான தமிழ் வடிவம் இதோ:
“ பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக,
உம்முடைய இராச்சியம் வருக,
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தரும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல்,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
”
இதே மன்றாட்டு தற்காலத் தமிழ் வடிவத்தில் கீழ்வருமாறு அமையும்:
“ விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.”
பின்பு குரு மட்டும் "ஆண்டவரே தீமைகள் அனைத்தினின்றும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலைபெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாயிருப்போமாக. நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்னும் வேண்டலைத் தொடர்ந்து சொல்வார்.
மக்கள், "ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே" என்னும் புகழுரை கூறி முடிப்பார்கள். இச்சேர்க்கை இயேசு கற்பித்த இறைவேண்டலின் இறுதி மன்றாட்டை விரிவுபடுத்தி, தீமைகள் அனைத்தினின்றும் விசுவாசிகள் குடும்பத்திற்கு விடுதலை வேண்டுகிறது.
இந்த இறைவேண்டலுக்கு அழைப்பு, மன்றாட்டு, அதன் பிற்சேர்க்கை, சேர்க்கையின் முடிவாக மக்கள் சொல்லும் புகழுரை ஆகிய அனைத்தையும் பாடலாம் அல்லது தெளிவான குரலில் சொல்ல வேண்டும்.
2) சமாதானச் சடங்கு: இயேசு கற்பித்த இறைவேண்டல் பகுதியைத் தொடர்ந்து சமாதானச் சடங்கு நிகழும். ஒரே அப்பத்தில் பங்குகொள்ளுமுன், விசுவாசிகள் திருச்சபைக்காகவும் மனித குடும்பம் அனைத்துக்காகவும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் இறைஞ்சி மன்றாடுவார்கள். தமக்குள்ளும் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
இவ்வாறு ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும் முறையை மக்களின் பழக்க வழக்கங்களுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப, ஆயர் குழுக்கள் வரையறுக்கும்.
3) அப்பத்தைப் பகிர்தல்: இறுதி இராவுணவின்போது கிறிஸ்து இவ்வாறு செய்தார். எனவே திருத்தூதர்கள் காலத்தில் நற்கருணைக் கொண்டாட்டம் முழுவதும் "அப்பப் பகிர்வு" எனப் பெயர் பெற்றது. இச்சடங்கு நற்கருணை வழங்கப் பயன்படுகிறது. மேலும் கிறிஸ்துவே உயிர்தரும் ஒரே அப்பமாயிருக்க, திருவிருந்தில் பங்குகொள்ளும் நாம் பலராயினும் ஒரே உடலாக மாறுகிறோம் என்பதையும் உணர்த்துகிறது (காண்க: 1 கொரிந்தியர் 10:17).
4) கலத்தல்: குரு அப்பத்தின் ஒரு சிறு பகுதியைத் திருக்கிண்ணத்தில் இடுகிறார்.
5) உலகின் பாவம் போக்கும் செம்மறி: அப்பத்தைப் பகிர்ந்து கலத்தல் நடக்கும்போது, பாடகர் குழுவால், அல்லது மக்கள் பதிலளிக்க, பாடகர் ஒருவரால் இம்மன்றாட்டு பாடப்படும் அல்லது சொல்லப்படும். அப்பப் பகிர்வு முடியும்வரை தேவைக்கு ஏற்ப இம்மன்றாட்டை மீண்டும் மீண்டும் சொல்லலாம். இறுதியாக "எங்களுக்கு அமைதி அருளும்" என்று முடிவுறும்.
6) நற்கருணை உட்கொள்ளுதல்: கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் பயனுள்ள வகையில் உண்டு பருகக் குரு அமைதியாகச் செபித்துத் தம்மைத் தயாரிப்பார். அப்பொழுது இறைமக்களும் தங்களைத் தயாரிப்பார்கள்.
அடுத்து நற்கருணை அப்பத்தைக் குரு விசுவாசிகளுக்குக் காண்பித்து, அவர்களைக் கிறிஸ்துவின் திருப்பந்திக்கு அழைப்பார். விசுவாசிகளோடு சேர்ந்து நற்செய்திச் சொற்களைப் பயன்படுத்தி, தாழ்ச்சி முயற்சி செய்வார்.
அதே திருப்பலியில் வசீகரம் செய்யப்பெற்ற அப்பத்திலிருந்து விசுவாசிகள் திருவுடலைப் பெற்றுக்கொள்வதும், அனுமதிக்கப்பட்ட பொழுதெல்லாம் திருக்கிண்ணத்தில் பங்குகொள்வதும் மிக விரும்பத்தக்கனவாகும். இவ்வாறு நடைபெறும் திருப்பலியில் பங்கேற்பதே திருவிருந்தாம் என அருட்சாதன முறையில் மிகச் சிறப்பாக விளங்கும்.
குருவும் மக்களும் நற்கருணை உட்கொள்ளும்போது திருவிருந்துப் பாடல் பாடப்படும். ஒரே குரலாக எழும் இப்பாடல் நற்கருணை உட்கொள்வோரின் ஆன்மிக ஒற்றுமையைக் காட்டுகிறது; உள்ளத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது; நற்கருணை உட்கொள்ளப் பவனியாகச் செல்பவர்களைச் சகோதர அன்பில் இணைக்கிறது. குரு நற்கருணை உட்கொள்ளும் போது திருவிருந்துப் பாடல் தொடங்கி, தேவைக்கு ஏற்ப விசுவாசி?


திருப்பலியில் பங்கு பெரும் நாம் திருப்பலியை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும்

திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு (Structure of the Roman Rite of Mass) என்பது கத்தோலிக்க திருச்சபையில் அருட்சாதனமாகக் கொண்டாடப்படுகின்ற திருப்பலியின் பாகங்கள் ஒவ்வொன்றும் தமக்குள்ளும் பிற பாகங்களோடும் இசைவுறப் பொருந்தி அமைவதைக் குறிக்கும்.[2]
கத்தோலிக்க திருச்சபையில் பெரும்பாலோர் பின்பற்றுகின்ற "இலத்தீன் வழிபாட்டுமுறை" (Latin Rite) கடைப்பிடிக்கின்ற திருப்பலி அமைப்பு பற்றிய விதிகள் "உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொதுப் போதனை" என்னும் அதிகாரப்பூர்வ ஏட்டில் உள்ளன. அவற்றின் சுருக்கம் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையின் மையக் கொண்டாட்டமாக அமைகின்ற திருப்பலி இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:
இறைவாக்கு வழிபாடு
நற்கருணை வழிபாடு
என்று அழைக்கப்படுகின்றன. இவ்விரு பகுதிகளும் ஒரே ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியை உருவாக்கும் அளவுக்கு ஒன்றோடொன்று நெருங்கி இணைந்துள்ளன.
ஒருசில சடங்குகள் திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தொடக்கமாகவும், முடிவாகவும் அமைந்துள்ளன.
இவ்வாறு, திருப்பலிக் கொண்டாட்டத்தின் முதல் பகுதியாகிய இறைவாக்கு வழிபாட்டுக்கு முன்வரும் தொடக்கச் சடங்குகளில் உள்ளவை:
வருகை
வாழ்த்துரை
மன்னிப்பு வழிபாடு
"ஆண்டவரே இரக்கமாயிரும்"
"உன்னதங்களிலே"
சபை மன்றாட்டு.
ஒன்றாய்க் கூடியிருக்கும் கிறித்தவ நம்பிக்கைகொண்டோருக்குள் உள்ளரங்க ஒன்றிப்பை உருவாக்கி, அவர்களை வழிபடும் ஒரே குடும்பமாக்கி, சீரிய முறையில் இறைவனின் வார்த்தைக்குச் செவிசாய்க்கவும், தக்க வண்ணம் நற்கருணை வழிபாட்டைக் கொண்டாடவும் அவர்களைத் தயாரிப்பதே இச்சடங்குகளின் நோக்கம் ஆகும்.
வருகை
மக்கள் ஒன்றுகூடியபின் குரு பணியாளர்களோடு வரும்பொழுது, வருகைப் பாடல் தொடங்கப்படும். கொண்டாட்டத்தைத் தொடங்கவும், கூட்டத்தின் உள்ளரங்க ஒன்றிப்பை வளர்க்கவும், அவர்களுக்கு வழிபாட்டுக் காலத்து அல்லது நடைபெறும் விழாவின் மறையுண்மையை அறிமுகப்படுத்தவும், குருவும் பணியாளரும் வரும் பவனிக்குப் பின்னணியாக அமைவதும் இவ்வருகைப் பாடலின் நோக்கமாகும்.
பலிபீட வணக்கமும் மக்களுக்கு வாழ்த்தும்
பலிபீட முற்றத்திற்கு வந்ததும், குருவும் பணியாளர்களும் பீடத்துக்கு வணக்கம் செலுத்துவார்கள். மேலும், இவ்வணக்கத்தைக் குறிப்பிட, குருவும் திருத்தொண்டரும் பீடத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்வர்; வசதியானால் குரு பீடத்திற்குத் தூபம் காட்டுவார்.
வருகைப் பாடல் முடிந்ததும், குருவும் திருக்கூட்டத்தினர் அனைவரும் தம்மீது சிலுவை வரைந்து கொள்வர். பின்பு திருக்கூட்டத்தினரிடம் இறைவன் பிரசன்னமாயிருப்பதைக் குரு வாழ்த்துரையால் வெளிப்படுத்துவார். இவ்வாறு குரு வாழ்த்துவதாலும் அதற்கு மக்கள் பதில் அளிப்பதாலும் கூடியுள்ள திருச்சபையின் மறைபொருள் விளங்குகிறது.
மன்னிப்பு வழிபாடு
மக்களை வாழ்த்தியபின் குரு அல்லது வேறு தகுதியுடைய பணியாளர் அந்நாளின் திருப்பலியைப் பற்றி மக்களுக்கு மிகச் சுருக்கமாகத் தொடக்கவுரை ஆற்றலாம். அதன்பின், குரு மன்னிப்பு வழிபாட்டுக்கு அழைப்பு விடுப்பார்; திருக்கூட்டத்தினர் அனைவரும் சேர்ந்து பொதுப்பாவ அறிக்கையிடுவர்; குரு சொல்லும் பாவமன்னிப்பு செபத்தோடு இச்சடங்கு முடிவுறும்.
"ஆண்டவரே இரக்கமாயிரும்"
மன்னிப்பு வழிபாட்டிலேயே இடம்பெற்றிருந்தாலன்றி, "ஆண்டவரே இரக்கமாயிரும்" (பண்டைக் கிரேக்கம்: Kyrie eleison) என்னும் பாடம் இப்பொழுது தொடங்கும். இதில் கிறித்தவ மக்கள் ஆண்டவரைப் புகழ்ந்து, அவருடைய இரக்கத்தை இறைஞ்சுவார்கள். எனவே இப்பாடல் வழக்கமாக எல்லாராலும் பாடப்படும். அதாவது, மக்களும் பாடகர் குழுவுமாக அல்லது மக்களும் பாடகர் ஒருவருமாக இப்பாடலைப் பாடுவார்கள்.
ஆர்ப்பரிப்பு ஒவ்வொன்றும் வழக்கமாக இருமுறை எழுப்பப்பெறும்; எனினும் மொழி, இசை, சூழ்நிலை தன்மைக்கு ஏற்ப ஆர்ப்பரிப்பின் எண்ணிக்கையைக் கூட்டலாம் அல்லது ஆர்ப்பரிப்புக்கு முன் சிறு வசனத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். "ஆண்டவரே இரக்கமாயிரும்" பாடப்பெறாத பொழுது அது படிக்கப்படும்.
"உன்னதங்களிலே"


போர்த்துகல் நாட்டு பாத்திமா நகர் அன்னை மரியா திருத்தலத்தில் நிகழும் திருப்பலிக் கொண்டாட்டம். ஆண்டு: சூலை 2008
இப்புகழ்ச்சிப் பாடல் மிகப் பழமையானது, வணக்கத்துக்குரியது. தூய ஆவியால் ஒன்றுகூட்டப்பட்ட திருச்சபை இப்பாடலில் தந்தை இறைவனையும், செம்மறியையும் மகிமைப்படுத்தி, இரந்து மன்றாடுகிறது. இறைமக்கள் இப்பாடலைப் பாடுவர் அல்லது பாடகர் குழுவோடு சேர்ந்து மக்கள் மாறி மாறிப் பாடுவர் அல்லது பாடகர் குழு மட்டும் பாடும். பாடப்பெறாதபொழுது இதை அனைவரும் ஒன்றாகவோ மாறி மாறியோ படிக்கலாம்.
திருவருகைக் காலம், தவக் காலம் ஆகியவைகளுக்குப் புறம்பே வரும் ஞாயிற்றுக் கிழமைகள், பெருவிழாக்கள், விழாக்களிலும், இன்னும் அந்தந்த இடத்துச் சிறப்புக் கொண்டாட்ட நாள்களிலும் "உன்னதங்களிலே" பாடப்படும் அல்லது படிக்கப்பெறும்.
சபை மன்றாட்டு
அடுத்து, குரு மக்களைச் செபிக்க அழைக்கிறார். குருவோடு அனைவரும் சேர்ந்து சிறிது நேரம் மௌனமாயிருப்பர். அச்சமயம் இறைவன் திருமுன் தாங்கள் இருப்பதை உணர்ந்து தங்கள் தேவைகளை நினைத்து அவர்கள் செபிக்கலாம். பின் குரு சபை மன்றாட்டு எனப்படும் செபத்தைச் சொல்லுவார். இது நிகழும் கொண்டாட்டத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும். இம்மன்றாட்டு குருவின் சொற்களால் தூய ஆவியில் கிறிஸ்து வழியாகத் தந்தை இறைவனை நோக்கி செபிக்கப்படும்.
மக்கள் இம்மன்றாட்டோடு தங்களை ஒன்றுபடுத்தி, அதற்கு உடன்பாடு தெரிவித்து, ஆமென் என்னும் ஆர்ப்பரிப்பால் அதைத் தங்கள் செபமாக்கிக் கொள்வார்கள். ஆமென் என்னும் எபிரேயச் சொல் "ஆம்", "அப்படியே ஆகுக" என்னும் பொருளைத் தரும்.
திருப்பலியில் ஒரே ஒரு சபை மன்றாட்டுத்தான் சொல்லப்படும்; இந்த விதி காணிக்கைமீது மன்றாட்டு, நன்றி மன்றாட்டு ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
சபை மன்றாட்டு நீண்ட முடிவுரை கொண்டிருக்கும். அதாவது,
தந்தையிடம் செபம் சொல்லப்பட்டால்
“உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்”
என முடிவுறும்.
தந்தையிடம் சொல்லும் செபத்தின் முடிவில், திருமகனைக் குறிப்பிட்டிருந்தால்,
“உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர்வழியாக உம்மை மன்றாடுகிறோம்”
என முடிவுறும்.
திருமகனிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
காணிக்கைமீது மன்றாட்டு, நன்றி மன்றாட்டு என்னும் இரு செபங்களும் சுருக்கமான முடிவுரை கொண்டிருக்கும்; அதாவது,
தந்தையிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
தந்தையிடம் சொல்லும் செபத்தின் முடிவில் திருமகனைக் குறிப்பிட்டிருந்தால்,
“ என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாகவே உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
திருமகனிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாகவே உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
ஆ) அருள்வாக்கு வழிபாடு

அருள்வாக்கு வழிபாட்டின் சிறப்பான பகுதி திருநூலிலிருந்து தேர்ந்தெடுத்த வாசகங்களும், அவைகளுக்கு இடையில் வரும் திருப்பாடல்களுமாகும். மறையுரை, விசுவாச அறிக்கை, பொது மன்றாட்டு அல்லது விசுவாசிகள் மன்றாட்டு ஆகியவை இப்பகுதியை விளக்கி முடிவுக்குக் கொணர்கின்றன.
எவ்வாறெனில், மறையுரை விளக்கும் வாசகங்களினால் இறைவன் தம் மக்களோடு உரையாடி, அவர்களுக்கு மீட்பு-ஈடேற்றம் பற்றிய மறைபொருள் நிகழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆன்ம ஊட்டமளிக்கிறார். கிறிஸ்து தம் வாக்கினால் விசுவாசிகள் நடுவில் பிரசன்னமாயிருக்கிறார். அருள்வாக்கை மக்கள் பாடல்களால் தமதாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு ஊட்டம் பெற்று, பொது மன்றாட்டுப் பகுதியில் திருச்சபை அனைத்தின் தேவைகளுக்காகவும், அனைத்துலகின் மீட்புக்காகவும் மக்கள் மன்றாடுவார்கள்.
திருநூல் வாசகங்கள்
அருள்வாக்கு வழிபாட்டின்போது முழங்கப்படுகின்ற வாசகங்களினால் அருள்வாக்கு விருந்து மக்களுக்கு அளிக்கப்படுகிறது; திருநூலின் கருவூலமும் அவர்களுக்குத் திறக்கப்படுகிறது.
பாரம்பரியத்தின்படி வாசகங்களை வாசிக்கும் பணி திருக்கூட்டத்தில் தலைமை தாங்குவோருக்கன்று, பணியாளருக்கே உரியதாகும்; எனவே, வழக்கம்போலத் திருத்தொண்டர் அல்லது அவர் இல்லையெனில் மற்றொரு குரு நற்செய்தி வாசிப்பது முறையாகும். வாசகர் ஏனைய வாசகங்களை வாசிப்பர்.
திருத்தொண்டரோ வேறு குருவோ இல்லை என்றால் திருப்பலி நிறைவேற்றும் குருவே நற்செய்தியை வாசிப்பார்.
நற்செய்தி வாசகம் மிகுந்த வணக்கத்துடன் நடைபெறும். ஏனைய வாசகங்களைவிட நற்செய்தி வாசகத்துக்குத் தனிவணக்கம் செலுத்தப்படும். நற்செய்தியை அறிக்கையிட தனி அதிகாரம் பெற்ற பணியாளர் தேவை. தம் பணியை ஆற்றுமுன், அவர் ஆசி பெற்று அல்லது இறைவேண்டல் செய்து தம்மைத் தயாரித்துக் கொள்வார். கிறித்தவத் திருக்குழுவினரோ, நற்செய்தியில் கிறிஸ்து பிரசன்னமாயிருந்து தங்களோடு பேசுவதைக் கண்டுணர்ந்து அதைத் தங்கள் ஆர்ப்பரிப்புகளால் வெளிப்படுத்துவார்கள். நற்செய்தியை அவர்கள் நின்றுகொண்டு கவனமாய்க் கேட்பார்கள். மேலும் நற்செய்திப் புத்தகத்துக்கு வணக்கம் செலுத்த நடக்கும் சடங்கு முறைகளாலும் இது விளங்கும்.
வாசகங்களுக்கு இடையில் வரும் பாடல்கள்
முதல் வாசகத்தைத் தொடர்ந்து வருவது பதில் உரைச் சங்கீதம் அல்லது படிக்கீதம். இது அருள்வாக்கு வழிபாட்டின் முழுமைக்குரிய பகுதியாகும். வழக்கமாக வாசக நூலிலிருந்து சங்கீதம் எடுக்கப்பெறும். வாசக நூலில் அடங்கியுள்ள ஒவ்வொரு வாசகத்தோடும் ஒரு சங்கீதம் நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. எனவே, சங்கீதத்தைத் தேர்ந்தெடுப்பது வாசகத்தைப் பொறுத்திருக்கும்.
வாசக மேடையிலிருந்தோ, தகுந்த மற்றோர் இடத்திலிருந்தோ சங்கீதப் பாடகர் அல்லது சங்கீத முதல்வர் சங்கீத அடிகளைப் படிக்க, திருக்கூட்டமனைத்தும் அமர்ந்து கருத்தூன்றிக் கேட்டுக்கொண்டிருக்கும். சங்கீதம் நேரடியாக - அதாவது பல்லவியின்றிப் படிக்கப்பட்டால் அன்றி, வழக்கம்போலத் திருக்கூட்டம் பல்லவியை எடுத்துரைக்கும்.
திருவழிபாட்டுக் காலத்திற்கேற்ப இரண்டாம் வாசகத்துக்குப் பின் "அல்லேலூயா" (எபிரேயச் சொல்; பொருள்: "ஆண்டவரைப் போற்றுங்கள்") அல்லது மற்றொரு பாடல் இடம்பெறும். "அல்லேலூயா" தவக்காலத்துக்குப் புறம்பே எல்லாக் காலங்களிலும் பாடப்பெறும். இதை எல்லாரும் சேர்ந்தோ பாடகர் குழுவோ ஒரு பாடகரோ தொடங்கலாம். மற்றொரு பாடல் என்று மேலே குறிப்பிட்டது, வாசகப் புத்தகத்தில் அல்லது படிக்கீதப் புத்தகத்தில் கண்டுள்ளபடி, நற்செய்திக்கு முன்வரும் வசனமாகவோ மற்றொரு சங்கீதம் அல்லது நெடுங்கீதமாகவோ இருக்கும்.
நற்செய்திக்குமுன் ஒரு வாசகம் மட்டும் இருக்கும்போது, (1) "அல்லேலூயா" சொல்லவேண்டிய காலமாயின், அல்லேலூயா சங்கீதத்தைப் பயன்படுத்தலாம் அல்லது சங்கீதம், வசனம் ஆகியவையோடு அல்லேலூயா பயன்படுத்தலாம் அல்லது சங்கீதத்தை மட்டுமோ அல்லேலூயா மட்டுமோ பயன்படுத்தலாம்; (2) "அல்லேலூயா" சொல்லக்கூடாத காலமாயின், சங்கீதத்தையோ நற்செய்திக்கு முன்வரும் வசனத்தையோ பயன்படுத்தலாம்.
வாசகத்துக்குப் பின்வரும் சங்கீதம் பாடப்பெறாவிடில் படிக்கப்பெறும். "அல்லேலூயா" வசனமோ நற்செய்திக்கு முன்வரும் வசனமோ பாடப்பெறாவிடில் படிக்கப்பெறும். "அல்லேலூயா" வசனமோ நற்செய்திக்கு முன்வரும் வசனமோ பாடப்பெறாவிடில், அதை விட்டுவிடலாம்.
பாஸ்கா விழாவன்றும், தூய ஆவி விழாவன்றும் தொடர் பாடல்கள் சொல்லப்படும்; ஏனைய தொடர் பாடல்களை விரும்பினால் பயன்படுத்தலாம்.
மறையுரை
மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி. எனவே அது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மறையுரை கிறிஸ்தவ வாழ்வைப் பேணிவளர்க்க இன்றியமையாத ஒன்றாகும். திருநூல் வாசகங்களின் ஓர் அம்சத்தை அல்லது அன்றைய திருப்பலியின் பொதுப் பகுதியிலிருந்தோ சிறப்புப் பகுதியிலிருந்தோ தேர்ந்துகொண்ட ஒரு பாடத்தை விளக்குவதாக மறையுரை இருக்க வேண்டும். மறையுரை ஆற்றுகின்ற பணியாளர் (ஆயர், குரு, திருத்தொண்டர்) கொண்டாடப்பெறும் மறையுண்மைநிகழ்ச்சியையும் திருக்கூட்டத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கடன் திருநாள்களில் மக்கள் கூடிவந்து கொண்டாடும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை நிகழ்த்தப்பெற வேண்டும்; ஏனைய நாள்களிலும் சிறப்பாக, திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்காக் காலம் இவற்றின் வாரநாள்களிலும், மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்துகூடும் நாள்களிலும், நிகழ்ச்சிகளிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
வழக்கமாக, திருப்பலி நிறைவேற்றும் குருவே மறையுரை ஆற்றுவார்.
விசுவாச அறிக்கை
திருப்பலிக் கொண்டாட்டத்தில் இடம்பெறும் விசுவாசப் பிரமாணம் அல்லது விசுவாச அறிக்கை அல்லது (நம்பிக்கை அறிக்கையால்), (Creed) மக்கள் வாசகங்களிலும் மறையுரையில் கேட்டுணர்ந்த அருள்வாக்கிற்குப் பதிலளித்து உடன்பாடு தெரிவிக்க வாய்ப்பு தரப்படுகிறது. மேலும் நற்கருணை வழிபாட்டைத் தொடங்குமுன், மக்கள் விசுவாசப் போதனைகளை நினைவுகூர வாய்ப்புக் கிடைக்கிறது.
குருவும் மக்களும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெருவிழாக்களிலும் விசுவாச அறிக்கையிட வேண்டும். தவிர, தனிப்பட்ட சிறப்புக் கொண்டாட்டங்களிலும் விசுவாச அறிக்கையிடலாம்.
வழக்கம்போல் அதை எல்லாரும் சேர்ந்தோ மாறி மாறியோ பாடலாம்.
பொது மன்றாட்டு
பொது மன்றாட்டு அல்லது விசுவாசிகள் மன்றாட்டில் மக்கள் தங்கள் குருத்துவப் பணியைச் செயல்படுத்தி எல்லாருக்காகவும் மன்றாடுவார்கள். மக்கள் கூடியிருக்கும் திருப்பலிகளில் எல்லாம் வழக்கமாக இம்மன்றாட்டு நடைபெறுவது நல்லது; இவ்வாறு, புனித திருச்சபைக்காகவும், அதிகாரம் பெற்று மக்களை ஆள்வோர்க்காகவும், பல்வேறு தேவைகளால் வருந்துவோர்க்காகவும், மக்கள் அனைவருக்காகவும், அனைத்துலக ஈடேற்றத்திற்காகவும் வேண்டுதல் பொது மன்றாட்டில் நிகழும்.
பொது மன்றாட்டில், மன்றாட்டுகளின் வரிசை வழக்கமாகப் பின்வருமாறு அமையும்:
திருச்சபையின் தேவைகளுக்காக
நாட்டை ஆள்வோர்க்காகவும் அனைத்துலகின் நலனுக்காகவும்
எவ்வகை நெருக்கடியாலும் வருந்துவோர்க்காக
அந்தந்த இடத்து மக்கள் சமுதாயத்திற்காக.
எனினும் உறுதிப்பூசுதல், திருமணம், அடக்கச் சடங்கு போன்ற தனிப்பட்ட கொண்டாட்டங்களில் மன்றாட்டுகளின் வரிசை தனிச் சூழ்நிலைக்குத் தக்கவாறு அமையலாம்.
இம்மன்றாட்டுகளை நடத்துகிறவர் திருப்பலி நிறைவேற்றும் குரு. அவர் சில வார்த்தைகளில் கிறித்தவ மக்களைச் செபிக்கும்படி அழைப்பார். மன்றாட்டுகளுக்குப்பின் இறுதி செபத்தைச் சொல்லி முடிப்பார். திருத்தொண்டர் அல்லது பாடகர் அல்லது மற்றொருவர் கருத்துகளை அறிவிப்பது நல்லது. கருத்து தெரிவிக்கப்பட்டதும் கூட்டமனைத்தும் பொதுப் பதில் மொழியாலோ மௌன செபத்தாலோ வேண்டிக்கொள்வர்.
பொது மன்றாட்டோடு திருப்பலியின் முதல் பகுதியாகிய "அருள்வாக்கு வழிபாடு" நிறைவுறுகிறது. அதைத் தொடர்ந்து நிகழவிருக்கின்ற இரண்டாம் பகுதி "நற்கருணை வழிபாடு" என்று அழைக்கப்படுகிறது. அது தொடர்பான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன.
இ) நற்கருணை வழிபாடு

இறுதி இராவுணவின்போது கிறிஸ்து பாஸ்காப் பலியையும் திருவிருந்தையும் ஏற்படுத்தினார். இதனால், குரு ஆண்டவராகிய கிறிஸ்துவின் பதிலாளியாயிருந்து, ஆண்டவரே நிறைவேற்றித் தம் நினைவாகச் செய்யும்படி சீடரிடம் கையளித்ததையே நிறைவேற்றுவதால் திருச்சபையில் சிலுவைப்பலி தொடர்ந்து பிரசன்னமாகிறது.
கிறிஸ்து அப்பத்தையும் கிண்ணத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அப்பத்தைப் பிட்டு தம் சீடருக்கு அளித்து,
“ இதை வாங்கி உண்ணுங்கள்: இது என் உடல்; இதை வாங்கிப் பருகுங்கள்: இது என் இரத்தமுள்ள கிண்ணம். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ”
என்றார். எனவே திருச்சபை கிறிஸ்துவின் இவ்வாக்குகளுக்கும் செயல்களுக்கும் ஏற்ற பகுதிகளை அமைத்து, நற்கருணை வழிபாடு அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளது. எவ்வாறெனில்:
காணிக்கைகளைத் தாரிக்கும் பகுதியில், அப்பமும் தண்ணீர் கலந்த இரசமும் பீடத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. கிறிஸ்துவும் இதே பொருள்களைத்தான் பயன்படுத்தினார்.
நற்கருணை மன்றாட்டில் மீட்புப்பணி அனைத்தையும் நினைவுகூர்ந்து இறைவனுக்கு மக்கள் நன்றிசெலுத்துகின்றனர். காணிக்கைகள் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன.
ஒரே அப்பத்தைப் பகிர்தல் விசுவாசிகளின் ஒற்றுமைக்கு அடையாளம். கிறிஸ்துவின் கைகளிலிருந்து திருத்தூதர்கள் பெற்றுக்கொண்டதுபோலவே, கிறிஸ்தவ மக்களும் நற்கருணை உட்கொள்ளும்போது ஆண்டவருடைய உடலையும் இரத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
காணிக்கைகளைத் தயார் செய்தல்
நற்கருணை வழிபாட்டின் தொடக்கத்தில் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறப்போகும் காணிக்கைகள் பலிபீடத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன.
முதன்முதலாக, நற்கருணை வழிபாடு அனைத்திற்கும் மையமாக இருக்கும் பலிபீடம், அதாவது ஆண்டவரின் உணவு மேசைமீது திருமேனித்துகில் விரித்து, கிண்ணத்துணி, கிண்ணம், திருப்பலிப் புத்தகம் ஆகியவற்றைக் கொண்டுவந்து வைத்து அது தயார் செய்யப்படும்.
பின், காணிக்கைகள் கொண்டுவரப்படுகின்றன. கிறித்தவ மக்கள் அப்பத்தையும் இரசத்தையும் காணிக்கையாக அளிப்பது பாராட்டுக்குரியது. குருவோ திருத்தொண்டரோ வசதியான இடத்தில் நின்று இக்காணிக்கைகளைப் பெற்றுக்கொள்வர். பின்னர் இக்காணிக்கைகள் பீடத்தின்மீது வைக்கப்படும்.
முற்காலத்தில் நடந்ததுபோல், இன்று கிறித்தவ மக்கள் தங்கள் வீட்டிலிருந்து திருவழிபாட்டுக்கான அப்ப இரசத்தைக் கொண்டுவருவதில்லை. என்றாலும் காணிக்கைகளைக் கொண்டுவரும் சடங்கு இன்னும் ஆன்மிகப் பொருளும் ஆற்றலும் கொண்டுள்ளது.
தவிர, ஏழைகளுக்கென்றும் கோவில் பராமரிப்புக்கென்றும் கிறித்தவ மக்கள் கொண்டுவந்த அல்லது கோவிலில் காணிக்கையாகக் கொடுத்த காசையும் மற்ற கொடைகளையும் ஏற்றுக்கொள்ளலாம். இவைகளைப் பலிபீடத்திற்குப் புறம்பே தகுந்த இடத்தில் வைக்கலாம்.
காணிக்கைப் பவனியின்போது காணிக்கைப் பாடல் பாடப்பெறும். காணிக்கைகளைப் பீடத்தின்மீது வைக்கும்வரை இப்பாடல் தொடரும். இப்பாடலைப் பற்றிய விதிகள் வருகைப்பாடலைப் பற்றியவைகளைப் போன்றவை (காண்க: திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு#வருகை). காணிக்கைப் பாடல் பாடப்படாதபோது அது விடப்படும்.
பீடத்தின்மீது வைக்கப்பெற்ற காணிக்கைகளுக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டலாம். இச்சடங்கு திருச்சபையின் காணிக்கையும் மன்றாட்டும் இறைவன் திருமுன் தூபம்போல் எழுவதைக் குறிக்கும் (காண்க: திருப்பாடல்கள் 141:2). காணிக்கைகளுக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டியபின்னர் திருத்தொண்டரோ மற்றொரு பணியாளரோ குருவுக்கும் மக்களுக்கும் தூபம் காட்டலாம்.
அடுத்து, குரு கைகளைக் கழுவுவார். இச்சடங்கு அகத்தூய்மை பெறக் குரு கொண்டிருக்கும் ஆவலை வெளிப்படுத்தும்.
காணிக்கைகளைச் சடங்குமுறைப்படி பீடத்தின்மீது வைத்தபின், குரு மக்களைத் தம்மோடு சேர்ந்து செபிக்க அழைத்து, "காணிக்கைமீது மன்றாட்டு" என்னும் செபத்தைச் சொல்லுவார். இவ்வாறு காணிக்கைகளைத் தயார்செய்தல் என்னும் பகுதி முடிந்து, நற்கருணை மன்றாட்டுக்கு இறைமக்கள் தயாராகின்றனர்.
நற்கருணை மன்றாட்டு
இப்பொழுது தொடங்கும் நற்கருணை மன்றாட்டு நன்றிசெலுத்தி அர்ச்சிக்கும் இறைவேண்டல் ஆகும். இதுவே திருப்பலிக் கொண்டாட்டம் அனைத்திற்கும் மையமும் சிகரமும் ஆகும். மக்கள் தங்கள் உள்ளங்களைப் பக்திப் பற்றுதலுடனும் நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி குரு அழைக்கின்றார். அவர்களைத் தம்முடன் இறைவேண்டலில் இணைத்து, முழுச் சமூகத்தின் பெயராலும் அவர் இயேசு கிறிஸ்து வழியாக விண்ணகத் தந்தையாம் இறைவனை நோக்கி மன்றாடுகிறார். வழிபடும் கூட்டத்தினர் அனைவரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து, இறைவனின் மாபெரும் செயல்களை நினைவுகூர்ந்து அறிக்கையிட்டுப் பலி ஒப்புக்கொடுப்பதே இம்மன்றாட்டின் கருத்து ஆகும்.
நற்கருணை மன்றாட்டின் பல்வேறு பகுதிகளைப் பின்வருமாறு பிரிக்கலாம்:
1) நன்றி செலுத்துதல் (இது குறிப்பாக தொடக்கவுரையில் விளங்கும்): இதில், புனித மக்கள் அனைவரின் சார்பாகக் குரு தந்தையாம் இறைவனை மகிமைப்படுத்தி, அவர் நிறைவேற்றிய மீட்புப் பணியனைத்தையும் நினைந்து நன்றிசெலுத்துவார் அல்லது திருவழிபாட்டுக் காலம், விழா, நாள் ஆகியவற்றிற்குப் பொருத்தமான அம்மீட்புப் பணியின் ஒரு குறிப்பிட்ட சிறப்பினை நினைந்து நன்றிசெலுத்துவார்.
2) ஆர்ப்பரித்தல்: திருக்கூட்டம் அனைத்தும் விண்ணவர்களோடு சேர்ந்து "தூயவர்" என்னும் பாடலைப் பாடும் அல்லது அதைச் செபிக்கும். நற்கருணை மன்றாட்டில் ஒரு பகுதியாக அமைந்த இந்த ஆர்ப்பரிப்பைக் குருவோடு சேர்ந்து மக்கள் அனைவரும் எழுப்புவர்.
3) தூய ஆவியின் வருகைக்காக மன்றாடுதல்: மக்களால் அர்ப்பணிக்கப்பட்ட கொடைகள் புனிதம் பெற வேண்டும், அதாவது கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவேண்டும் என்றும், நற்கருணைப் பந்தியில் அமரப்போகிறவர்களின் மீட்புக்கு இப்பலிப்பொருள் பயன்படவேண்டும் என்றும் திருச்சபை தெய்வீக ஆற்றலைத் தனிவகையில் இறைஞ்சுகிறது.
4) நற்கருணையை ஏற்படுத்திய வரலாறும் வசீகரமும்: கிறிஸ்து இறுதி இராவுணவின்போது அப்ப இரச குணங்களுள் தம் உடலையும் இரத்தத்தையும் ஒப்புக்கொடுத்து, அவைகளைத் திருத்தூதர் உண்ண உணவாகவும் பருகப் பானமாகவும் அவர்களுக்கு அளித்தார். இம்மறைபொருள் நிகழ்ச்சியை நீடித்திருக்கச் செய்யவேண்டும் என்னும் கட்டளையையும் அவர்களுக்குக் கொடுத்துச் சென்றார். இவ்வாறு இறுதி இராவுணவின்போது கிறிஸ்து ஏற்படுத்திய பலி இங்கு கிறிஸ்துவின் வாக்குகளாலும் செயல்களாலும் நிறைவேறுகிறது.
5) நினைவுகூர்தல்: ஆண்டவராகிய கிறிஸ்துவின் கட்டளையைத் திருத்தூதர்கள் வழியாகப் பெற்றுகொண்ட திருச்சபை அதை நிறைவேற்றி, கிறிஸ்துவை, சிறப்பாக அவர்தம் புனிதமிக்க பாடுகளையும் மாட்சிமிக்க உயிர்த்தெழுதலையும் விண்ணேற்றத்தையும் நினைவுகூருகின்றது.
6) ஒப்புக்கொடுத்தல்: மேற்குறிப்பிட்டவாறு நினைவுகூரும்போது திருச்சபை - சிறப்பாக வழிபாடு நடத்த ஓரிடத்தில் கூடிவருகின்ற திருச்சபை - தூய ஆவியால் விண்ணகத் தந்தைக்கு மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுக்கிறது. இந்நேரத்தில் கிறிஸ்தவ மக்கள் மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுப்பதோடு அமையாது, தங்களையே ஒப்புக்கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இறுதியில் இறைவனே எல்லாருக்கும் எல்லாமாய் இருக்குமாறு கிறிஸ்துவை இடைநிலையாளராகக் கொண்டு, இறைவனோடும் தங்களுக்குள்ளும் ஒருமைப்பாட்டை நாளுக்குநாள் வளர்த்து நிறைவு எய்தவேண்டுமென்றும் திருச்சபை விரும்புகிறது.
7) வேண்டுதல்கள்: விண்ணக, மண்ணகத் திருச்சபை அனைத்தும் கூடி நற்கருணைப்பலி கொண்டாடுகிறது என்றும், கிறிஸ்துவின் உடலாலும் இரத்தத்தாலும் கிடைத்த ஈடேற்றத்திலும் மீட்பிலும் பங்குகொள்ளுமாறு அழைக்கப்பெற்ற திருச்சபைக்காகவும், அதன் உறுப்பினரான வாழ்வோர், இறந்தோர் அனைவருக்காகவும் நற்கருணைப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்றும் இவ்வேண்டுதல்கள் வெளிப்படுத்துகின்றன.
8) இறுதிச் சிறப்புப் புகழுரை: இறைவனைப் போற்றி மகிமைப்படுத்தும் இப்புகழ்ச்சி உரை மக்களின் "ஆமென்" என்னும் ஆர்ப்பரிப்பால் உறுதிசெய்யப்பட்டு நிறைவுறுகிறது.
அனைவரும் பக்தியுடனும் அமைதியுடனும் கவனமாகக் கேட்டு, சடங்கில் குறிப்பிட்ட ஆர்ப்பரிப்புகள் வழியாகப் பங்குகொள்ளவேண்டும் என நற்கருணை மன்றாட்டின் அமைப்பு வலியுறுத்துகிறது.
திருவிருந்துச் சடங்கு
நற்கருணைக் கொண்டாட்டம் பாஸ்கா விருந்தை உண்பதாகும். எனவே, ஆண்டவரின் கட்டளைப்படி, தகுதியுள்ள விசுவாசிகள் அவருடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்பத்தைப் பகிர்தலும் விசுவாசிகளை நற்கருணைப் பந்திக்கு நேரடியாக அழைத்துச் செல்கின்ற மற்ற தயாரிப்புச் சடங்குகளும் இதையே நோக்கமாகக் கொண்டுள்ளன:
1) ஆண்டவரின் வேண்டல்: இச்செபத்தில் அன்றாட உணவுக்காக மன்றாடுகிறோம். அது கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை உணவையும் குறிக்கும். மேலும், இந்த மன்றாட்டில் பாவ மன்னிப்புக்காக வேண்டுதல் செய்யப்படுகிறது. ஏனெனில் புனிதமானவை புனிதமானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இறைவேண்டல் செய்ய குரு அழைப்பு விடுப்பார். விசுவாசிகள் அனைவரும் அவரோடு சேர்ந்து இம்மன்றாட்டைச் சொல்லுவர். இதன் வழக்கமான தமிழ் வடிவம் இதோ:
“ பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக,
உம்முடைய இராச்சியம் வருக,
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தரும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல்,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

இதே மன்றாட்டு தற்காலத் தமிழ் வடிவத்தில் கீழ்வருமாறு அமையும்:
“ விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.”
பின்பு குரு மட்டும் "ஆண்டவரே தீமைகள் அனைத்தினின்றும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலைபெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாயிருப்போமாக. நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்னும் வேண்டலைத் தொடர்ந்து சொல்வார்.
மக்கள், "ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே" என்னும் புகழுரை கூறி முடிப்பார்கள். இச்சேர்க்கை இயேசு கற்பித்த இறைவேண்டலின் இறுதி மன்றாட்டை விரிவுபடுத்தி, தீமைகள் அனைத்தினின்றும் விசுவாசிகள் குடும்பத்திற்கு விடுதலை வேண்டுகிறது.
இந்த இறைவேண்டலுக்கு அழைப்பு, மன்றாட்டு, அதன் பிற்சேர்க்கை, சேர்க்கையின் முடிவாக மக்கள் சொல்லும் புகழுரை ஆகிய அனைத்தையும் பாடலாம் அல்லது தெளிவான குரலில் சொல்ல வேண்டும்.
2) சமாதானச் சடங்கு: இயேசு கற்பித்த இறைவேண்டல் பகுதியைத் தொடர்ந்து சமாதானச் சடங்கு நிகழும். ஒரே அப்பத்தில் பங்குகொள்ளுமுன், விசுவாசிகள் திருச்சபைக்காகவும் மனித குடும்பம் அனைத்துக்காகவும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் இறைஞ்சி மன்றாடுவார்கள். தமக்குள்ளும் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
இவ்வாறு ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும் முறையை மக்களின் பழக்க வழக்கங்களுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப, ஆயர் குழுக்கள் வரையறுக்கும்.
3) அப்பத்தைப் பகிர்தல்: இறுதி இராவுணவின்போது கிறிஸ்து இவ்வாறு செய்தார். எனவே திருத்தூதர்கள் காலத்தில் நற்கருணைக் கொண்டாட்டம் முழுவதும் "அப்பப் பகிர்வு" எனப் பெயர் பெற்றது. இச்சடங்கு நற்கருணை வழங்கப் பயன்படுகிறது. மேலும் கிறிஸ்துவே உயிர்தரும் ஒரே அப்பமாயிருக்க, திருவிருந்தில் பங்குகொள்ளும் நாம் பலராயினும் ஒரே உடலாக மாறுகிறோம் என்பதையும் உணர்த்துகிறது (காண்க: 1 கொரிந்தியர் 10:17).
4) கலத்தல்: குரு அப்பத்தின் ஒரு சிறு பகுதியைத் திருக்கிண்ணத்தில் இடுகிறார்.
5) உலகின் பாவம் போக்கும் செம்மறி: அப்பத்தைப் பகிர்ந்து கலத்தல் நடக்கும்போது, பாடகர் குழுவால், அல்லது மக்கள் பதிலளிக்க, பாடகர் ஒருவரால் இம்மன்றாட்டு பாடப்படும் அல்லது சொல்லப்படும். அப்பப் பகிர்வு முடியும்வரை தேவைக்கு ஏற்ப இம்மன்றாட்டை மீண்டும் மீண்டும் சொல்லலாம். இறுதியாக "எங்களுக்கு அமைதி அருளும்" என்று முடிவுறும்.
6) நற்கருணை உட்கொள்ளுதல்: கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் பயனுள்ள வகையில் உண்டு பருகக் குரு அமைதியாகச் செபித்துத் தம்மைத் தயாரிப்பார். அப்பொழுது இறைமக்களும் தங்களைத் தயாரிப்பார்கள்.
அடுத்து நற்கருணை அப்பத்தைக் குரு விசுவாசிகளுக்குக் காண்பித்து, அவர்களைக் கிறிஸ்துவின் திருப்பந்திக்கு அழைப்பார். விசுவாசிகளோடு சேர்ந்து நற்செய்திச் சொற்களைப் பயன்படுத்தி, தாழ்ச்சி முயற்சி செய்வார்.
அதே திருப்பலியில் வசீகரம் செய்யப்பெற்ற அப்பத்திலிருந்து விசுவாசிகள் திருவுடலைப் பெற்றுக்கொள்வதும், அனுமதிக்கப்பட்ட பொழுதெல்லாம் திருக்கிண்ணத்தில் பங்குகொள்வதும் மிக விரும்பத்தக்கனவாகும். இவ்வாறு நடைபெறும் திருப்பலியில் பங்கேற்பதே திருவிருந்தாம் என அருட்சாதன முறையில் மிகச் சிறப்பாக விளங்கும்.
குருவும் மக்களும் நற்கருணை உட்கொள்ளும்போது திருவிருந்துப் பாடல் பாடப்படும். ஒரே குரலாக எழும் இப்பாடல் நற்கருணை உட்கொள்வோரின் ஆன்மிக ஒற்றுமையைக் காட்டுகிறது; உள்ளத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது; நற்கருணை உட்கொள்ளப் பவனியாகச் செல்பவர்களைச் சகோதர அன்பில் இணைக்கிறது. குரு நற்கருணை உட்கொள்ளும் போது திருவிருந்துப் பாடல் தொடங்கி, தேவைக்கு ஏற்ப விசுவாசி?

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!



*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet.

THE SUCCESS INDICATOR

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை !



காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது

Friday, March 8, 2013

உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ? கவலையே விடுங்க கிழே உள்ள குறிப்புகளை படிங்கள் !!



சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.
அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!




A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .

இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு அப்புறமா A \C ஐ
ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

மூட்டைப் பூச்சி

அம்மாடியோவ் ... மூட்டைப் பூச்சி இருக்கா என்று கேட்டுக் கொண்டு தான் நண்பர்கள் ரூமின் இருக்கையில் உட்காரும் அளவுக்கு ஆகிப் போனது.
வளைகுடா, மற்றும் இதர வெளிநாடுகளில் வாழும் பேச்சிலர்ஸ் முதல் ஃபேமிலி மெம்பர்ஸ் வரை மூட்டைப் பூச்சி தொல்லையினை அனுபவித்திருப்-பீர்கள்/பார்கள். அதை ஒழிக்கு ம் முறையினை

பேச்சுப் பராக்கில் தெரிந்து கொள்ளலாமா? சரி வாங்க...



எங்கள் வீட்டில் கொஞ்ச நாளா மூட்டை பூச்சி இருக்குப்பா, என்ன செய்வதுனே தெரியலைப்பா, ரெம்ப கவலையா இருக்குப்பா, தூங்கவே பயமா இருக்குப்பா, தயவு செய்து உங்கள் ஆலோசனை தாருங்கள்ப்பா, மிகவும் கவலையாக உள்ளது...ரேணுகாதேவி.



சுவரும் தரையும் சேரும் ஓரங்களில் பரவலாக மூக்குப்பொடி தூவினால்மூட்டைப்பூச்சி தொல்லை குறையும். - திருமதி கோமு



ஹாய் ரேணு, மூட்டை பூச்சால் நானும் ரொம்ப அவதி பட்டுள் ளோம். முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். அதனை பிடித்து தண்ணீரில் போட்டு விடுங்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். பிறகு. வீட்டில் எதாவது மரசாமான்கள் இருந்தால் உடனே எடுத்து வெயிலில் காய வைய்யுங்கள். மரசாமான்களில் பிடித்தால் விடவே விடாது. பிறகு மூட்டை பூச்சி இருக்கும் இடங்கள்ல் மண்ணெண்ணையை ஒரு துணியில் எடுத்து தெயுங்கள் இப்படி தினமும் செய்தால்,அனைத்தும் அழிந்துவிடும். - பிரியதர்சினி



மூட்டை பூச்சி போகணும்னா கடைகளில் மூட்டை பூச்சி மருந்து வாங்கி இரவில் அடிங்க ... கண்டிப்பாக மூட்டை பூச்சி எல்லாம் செத்து போய் விடும்..லக்ஷ்மி மாசானம்



மூட்டை பூச்சி மருந்து ரொம்ப ஆபத்தானது..அதை அடித்தால் 24 மணிநேரமாவது வீட்டிலிருந்து வெளியே போய் விட வேண்டும்.. ஆனால் அதை தவிற எனக்கு தெரிந்து வேற வழியில்லை..நல்ல எல்லா சாமானை யும் பெரிய கவர் போட்டு காற்று புகாமல் ஒட்டி விட்டு மருந்தடியுங்கள்..



கிச்சனில் உள்ள உணவுப் பொருட் களை எங்காவது பக்கத்து வீட்டிலாவது மாற்றி விட்டு மருந்தடிப்பது நல்லது..குடிக்கும் தண்ணீரை கூட முடிந்தால் வெளியில் வைத்து விடலாம்..சின்ன குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். பழைய மரசாமான்கள் அதிகம் வீட்டில் வைக்க வேண்டாம் தூக்கி போட்டு விடுங்கள்..கார்பெட் இருந்தால் அதையும் எடுத்து விடுங்கள். - தளிகா



"அறுசுவை"யில் படித்ததில் பிடித்தது

• எம் அப்துல் காதர்



நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவைகளை மோப்பம் பிடித்து இவை நம்மைத் தேடி வருகின்றன.



மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள்.



1) இதற்கு ஹெவி டியூடி பெஸ்ட் கன்ட்ரோல் செய்ய வேண்டும். விஷத்தன்மை அதிகம் ஆதலால் ஆபத்தானது.எச்சரிக்கையாகக் கையாளனும்.



2) இரண்டு நாள் விஷத் தன்மை முறிவு ஏற்படும்வரை வெளியில் தங்க வேண்டும்.



3) முதலில் வீட்டில் உள்ள துணிகளை எல்லாம் நன்கு மூட்டை கட்டி வைத்து வெளியில் வைக்கவும். அல்லது சுடுதண்ணீரில் துவைத்து எடுக்கவும்.



4) PEST கண்ட்ரோல் செய்த பின்னர் 24 மணிநேரமாவது யாரும் அறையை பயன்படுத்தக் கூடாது.



5) அடுத்த நாள் வேற ஆளை விட்டு மருந்தை எடுத்து களைந்து விட்டு ஜன்னலெல்லாம் திறந்து வைத்து விட்டு வர வும்..பிறகு ஒரு நாள் கழித்து போய் சுத்தம் செய்யவும்..



6) சமையலறையில் உள்ள எல்லா பாத்திரங்களையும் கழுவி எடுத்து வைக்கவும்..



வேறு மற்றும் பாதுகாப்பான முறை



கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.



நன்றி : கொங்கு தென்றல்

----

மூட்டைப் பூச்சியின் வரலாறு!!



மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன



வகைகள்



பொதுவான மூட்டைப்பூச்சி வகையான (Cimex lectularius) மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்ப மண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை. மற்றொரு வகை (Cimex hemipterus) வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்க கூடியவை.



மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணக்கூடிய வகை(Leptocimex boueti) வௌவால்களை யும் மனிதனையும் தாக்குபவை. Cimex pilosellus மற்றும் Cimex pipistrella என்ற இரண்டு வகையானவை பொதுவாக வௌவால்களை அதிகமாக தாக்க கூடியவை. வட அமெரிக்காவில் வாழும் (Haematosiphon inodora) வகை மூட்டைப்பூச்சிகள் பொதுவாக பறவைகளைத் தாக்குபவை.



உடலமைப்பு



வளர்ந்த மூட்டைப்பூச்சி சிவந்த அரக்கு நிறத்தில் தட்டையாக, முட்டை வடிவத்தில் இறக்கையில்லா உடலமைப்பினை கொண்டது. மிக நுண்ணிய முடிகளை உடல் முழுதும் கொண்டிருக்கும். 4-5 மிமீ வரை நீளம் வரை வளரும். புதிதாய் முட்டை பொரித்த மூட்டைப் பூச்சிகள் வெளிறிய நிறத்தில் ஒளிபுகும் வண்ணம் தோலைக்கொண்டதாக இருக்கும். மூட்டைப்பூச்சிகளை மனிதக்கண்களால் காணமுடியாது என்ற தவறானதொரு நம்பிக்கை உண்டு



உண்ணும் முறைகள்



பொதுவாக மற்ற உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் தான் மனித இரத்தத்தைக் குடிக்க முயல்கின்றன. மனதனின் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவை இவற்றை மனிதனிடம் ஈர்க்கின்றன.



இப்பூச்சிகள் இரதத்தை உறிவதற்கு மனிதனின் சதையில் இரண்டு குழல்களை செலுத்துகின்றன. ஒரு குழல் மூலம் தனது உமிழ்நீரை செலுத்திட, அதில் வலியை மறக்கடிக்கச் செய்யும் இரசாயனங்கள் இருப்பதால், அவை கடிக்கும் வலியினை மனிதன் உணருவதில்லை. ஏறத்தாழ ஐந்து நிமடத்திற்கு இரத்ததை உறிஞ்சிய பின், அவை தமது இருப்பிடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றன.



மனிதனுக்கு ஏற்படக் கூடிய உடல்நலக் கேடுகள்



இவை கடிப்பதால், மனிதன் தோலில் அரிப்புகளும், ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தொடர்பான வியாதிகளும் ஏற்பட வாய்ப்புண்டு



இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டி.டி.டி(D.D.T) மருந்து உபயோகத்தின் மூலமாக முற்றிலுமாக அழிக்கப் பட்டிருந்த மூட்டைப் பூச்சிகள் மீண்டும் நியூயார்க் போன்ற நகரங்களை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளன. கரப்பான் பூக்கிகளுக்கும் எலிகளுக்கும் பழக்கப்பட்ட நியூயார்க் நகர மக்கள், இப்போது மூட்டைப் பூச்சிகளைப் பற்றி ஆரம்பப் பாடம் படிக்கிறார்கள்.



மூட்டைப் பூச்சிகளைப் பற்றி தகவலை மக்களுக்கு அளிக்க ஒரு இணையதளத்தையும் உருவாக்கி உள்ளது நியூயார்க் மாநகரம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆதிக்கம் இங்கு எழுபத்தியொரு சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது. நியூயார்க்கின் இப்போதைய பெயர் மூட்டைப் பூசசிகளின் தலைநகரம் இந்த நகரம் 500,000.00 டாலர் தொகையை மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்கும், மக்களிடையே விழிப்புணர்வப் பரப்பவும் செலவிட்டிருகிறது.



பகல் முழுவதும் ஒளிந்து இருக்கும மூட்டைப் பூச்சிகள் இரவில் வெளிவருகின்றன. இரத்தைதைக் குடித்து வாழும் இந்தப் பூச்சிகளைக் முற்றிலுமாக அழிப்பது ஒருகடினமான செயல். ஒருவர் கடிபடும் உணர்ச்சியோ கடியின் வலியோ தெரியாத்தனால் இவை உடனடியாக் கொல்லப்படுவதில்லை. படுக்கையின் ஓரங்களில் கரும்புள்ளிக் குவியலாக இருக்கும் மூட்டைப் பூச்சிகள் தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ஒரு வலி போக்கும் திரவத்தை நம் உடலுக்குள் செலுத்துகின்றன. அதனால் அவைக் கடிப்பது யாருக்கும் தெரிவதில்லை.



ஆனால் சிறிது நேரத்திலோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் கழித்தோ உடலில் தடிப்புக்களும் அரிப்பும் இருக்கும். மூட்டைப் பூச்சிகள் பதுங்க இடம் தேடி அலைந்து கொண்டு இருப்பதால் அவை எல்லா மூலை முடுக்குகளிலும் ஒளிந்து கொள்கின்றன. பகலில் இவை கண்களுக்குத் தெரிவதில்லை.



நமது பெட்டிகளுக்குள்ளும் உடைகளுக்குள்ளும் ஏறிப் பதுங்கிக் கொள்ளும் இந்த அருவருப்பான பூச்சி அதிக அளவிற்கு அதிவேகமாகப் பரவ காரணம் சுற்றுப்புற தூய்மையின்மை என்றுக் கூற முடியாது.மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு இங்கே மக்களிடம் இல்லாதது தான். கிட்ட்த்தட்ட ஒரு தலைமுறைக்கு மூட்டைப் பூச்சி என்ற ஒரு பூச்சி இருப்பதே அமெரிக்கர் களுக்குத் தெரியாது.



ஒரு பெண் மூட்டைப் பூச்சி ஒரு முறைக்கு ஐநூறு முட்டைகள் இருக்கிறது. வழவழப்பானச் சின்ன சின்ன முட்டைகள் எதிலும் ஒட்டிக் கொள்ளும்.அதனால் மூட்டைப் பூச்சிகளின் குடியேற்றம் ஒரு இட்த்திலிருந்து இன்னோரு இட்த்திற்கு எளிதாகிறது. மேலும் இரத்த்த்தை மட்டும் குடித்து வாழும் இந்த பூச்சி இனங்களால் ஒரு வருடம் இரத்தமில்லாமல் வாழ முடியும்.இந்தப் பூச்சி இனங்கள் மனிதர்கள் மட்டுமில்லாமல் எலி, வெளவ்வால் அணில் போன்ற கொறித்துத் தின்னும் பிராணிகள் மூலமாகவும் பரவலாம். டி.டி.டி(D.D.T) பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருப்பதாலும் மூட்டைப் பூச்சிகள் பெருக ஆரம்பித்து இருக்கின்றன.



இந்தியக் கட்டங்களைப் போல் சிமெண்ட்டாலும் செங்கலாலும் கட்டப்படாமல் மரத்துகள்களால் செய்யப்பட்ட மர அட்டைகளால் கட்டப்படும் அமெரிக்கக் கட்டிடங்களிலிருந்து மூட்டைப் பூச்சிகளை வெளியேற்றுவது மிக க் கடினமாக உள்ளது. நம் நாட்டைப் போல கட்டிடங்களைக் கழுவி விட முடியாது.



வெளிப்புற அட்டைச்சுவருக்கும் உட்புற அட்டைச் சுவருக்கும் நடுவில் குளிர் வரமால் தடுக்க வைக்கும் செயற்க்கைப் பஞ்சுகளும் தரையில் போடப்படும் கார்பெட் என்ற கம்பளங்களும் மூட்டைப் பூச்சிகள் பதுங்கிக் கொள்ளவும் ஒரே கட்ட்டிட்த்தின் ஒரு மூலையிலிருந்து இன்னோரு மூலைக்கு மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்து செல்லவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இயந்திரத்தாலேயே துவைத்துக் காய வைக்கும் பழக்கத்தால் மூட்டைப் பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள் அமெரிக்க மக்கள்.



குழந்தைகளின் தலையில் பேன் இருந்தாலே பள்ளிக்கு வரக்கூடாது என்ற எழுதாதச் சட்டம் கொண்ட அமெரிக்க சமுதாயத்தில் இந்த கடுகளவுப் பூச்சிகள் பரபரப்பை உருவாக்கியுள்ளன. செய்தி நிறுவனங்களுக்கு அன்றாட ருசிகரத் தகவல்களைத் தீனி போடுவது மட்டுமல்லாமல் ஒரு பிரபலாமன பொழுது போக்கு அம்சமாக மூட்டைப் பூச்சிகள் அவதாரம் எடுத்துள்ளன.



மூட்டைப் பூச்சிகளினால் பரவக் கூடிய நோய்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகளும் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வது பற்றிய ஆராய்ச்சிகளும் நடந்து வருகினறன.



மூட்டைப் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத மக்கள் அதிவீரியமுள்ள பூச்சிக் கொல்லிகளைப் வீட்டுக்குள் பயன் படுத்தி குழந்தைகளுக்கும், செல்லப் பிராணிகளுகும் கேடு விளைவிக்க வாய்ப்புக்கள் அதிகரித்து வருகிறது. மனிதனின் கண்கள் மற்றும் தொண்டையை எரிச்சல் படுத்தும் இரசாயனப் பொருட்களும், மனித நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கும் மருந்துகளும் பொது மக்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஐம்பது ஆண்டுகளாக மூட்டைப் பூச்சிகளை மறந்திருந்த அமெரிக்க சமுதாயம் செப்ட்ம்பர் மாதம் சிக்காகோ நகரில் மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நட்த்துகிறது. பூச்சியின அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்து இந்தக் கருத்தரங்கில் குவிந்திருகின்றனர்.



மூட்டை பூச்சியை அழிக்க சில சுலபமான வழிகள்



114.8ºF அல்லது 46ºC க்கு அதிகமான வெப்ப நிலையில் மூட்டைப் பூச்சிகள் இறந்து போவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அதிக அளவு வெப்பத்தை சுமார் ஏழு நிமிடங்களுக்கு கட்டடங் களின் எல்லா அறைகளிலும், இடுக்குகளிலும் செலுத்தி மூட்டைப் பூச்சிகளைக் கொல்லும் முறை சில இடங்களில் செயல்படுத்தப் படுகிறது. சுற்றுச்புற சூழ்நிலைக்கும் சுற்றி வாழ் உயிரின்ங்களுக்கும் தீங்கு விழைவிக்காத இந்த முறை ஒருவரின் வங்கித் தொகைக்கு ஒரு வேட்டு வைக்கிறது.



இன்னோரு கல்லூரி ஆராய்ச்சியில் பாட்டிலில் போடப்பட்ட திடப்படுத்தப்பட்ட கார்பன்டை ஆக்ஸைட்() மூட்டைப் பூச்சிகளை கவர்ந்திழுப்பதோடு அவற்றைப் பிடிக்கும் ஒரு பொறியாகவும் பயன் படுத்த முடியும் என்று தெரிகிறது.



Electric Steamer



The Electric Power Steamer kills bed bugs contact. Bed bugs are particularly succeptible to heat, which is why steaming can be a very effective way to kill bed bug and mite infestations in your home in tight and hard to reach places.



முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். .மாஸ்கிங் டேப் கொண்டு ஒட்டி பிடிக்கும்



நன்றி : நாளைய சமுதாயம்
அம்மாடியோவ் ... மூட்டைப் பூச்சி இருக்கா என்று கேட்டுக் கொண்டு தான் நண்பர்கள் ரூமின் இருக்கையில் உட்காரும் அளவுக்கு ஆகிப் போனது.
வளைகுடா, மற்றும் இதர வெளிநாடுகளில் வாழும் பேச்சிலர்ஸ் முதல் ஃபேமிலி மெம்பர்ஸ் வரை மூட்டைப் பூச்சி தொல்லையினை அனுபவித்திருப்-பீர்கள்/பார்கள். அதை ஒழிக்கு ம் முறையினை

பேச்சுப் பராக்கில் தெரிந்து கொள்ளலாமா? சரி வாங்க...



எங்கள் வீட்டில் கொஞ்ச நாளா மூட்டை பூச்சி இருக்குப்பா, என்ன செய்வதுனே தெரியலைப்பா, ரெம்ப கவலையா இருக்குப்பா, தூங்கவே பயமா இருக்குப்பா, தயவு செய்து உங்கள் ஆலோசனை தாருங்கள்ப்பா, மிகவும் கவலையாக உள்ளது...ரேணுகாதேவி.



சுவரும் தரையும் சேரும் ஓரங்களில் பரவலாக மூக்குப்பொடி தூவினால்மூட்டைப்பூச்சி தொல்லை குறையும். - திருமதி கோமு



ஹாய் ரேணு, மூட்டை பூச்சால் நானும் ரொம்ப அவதி பட்டுள் ளோம். முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். அதனை பிடித்து தண்ணீரில் போட்டு விடுங்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். பிறகு. வீட்டில் எதாவது மரசாமான்கள் இருந்தால் உடனே எடுத்து வெயிலில் காய வைய்யுங்கள். மரசாமான்களில் பிடித்தால் விடவே விடாது. பிறகு மூட்டை பூச்சி இருக்கும் இடங்கள்ல் மண்ணெண்ணையை ஒரு துணியில் எடுத்து தெயுங்கள் இப்படி தினமும் செய்தால்,அனைத்தும் அழிந்துவிடும். - பிரியதர்சினி



மூட்டை பூச்சி போகணும்னா கடைகளில் மூட்டை பூச்சி மருந்து வாங்கி இரவில் அடிங்க ... கண்டிப்பாக மூட்டை பூச்சி எல்லாம் செத்து போய் விடும்..லக்ஷ்மி மாசானம்



மூட்டை பூச்சி மருந்து ரொம்ப ஆபத்தானது..அதை அடித்தால் 24 மணிநேரமாவது வீட்டிலிருந்து வெளியே போய் விட வேண்டும்.. ஆனால் அதை தவிற எனக்கு தெரிந்து வேற வழியில்லை..நல்ல எல்லா சாமானை யும் பெரிய கவர் போட்டு காற்று புகாமல் ஒட்டி விட்டு மருந்தடியுங்கள்..



கிச்சனில் உள்ள உணவுப் பொருட் களை எங்காவது பக்கத்து வீட்டிலாவது மாற்றி விட்டு மருந்தடிப்பது நல்லது..குடிக்கும் தண்ணீரை கூட முடிந்தால் வெளியில் வைத்து விடலாம்..சின்ன குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். பழைய மரசாமான்கள் அதிகம் வீட்டில் வைக்க வேண்டாம் தூக்கி போட்டு விடுங்கள்..கார்பெட் இருந்தால் அதையும் எடுத்து விடுங்கள். - தளிகா



"அறுசுவை"யில் படித்ததில் பிடித்தது

• எம் அப்துல் காதர்



நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவைகளை மோப்பம் பிடித்து இவை நம்மைத் தேடி வருகின்றன.



மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள்.



1) இதற்கு ஹெவி டியூடி பெஸ்ட் கன்ட்ரோல் செய்ய வேண்டும். விஷத்தன்மை அதிகம் ஆதலால் ஆபத்தானது.எச்சரிக்கையாகக் கையாளனும்.



2) இரண்டு நாள் விஷத் தன்மை முறிவு ஏற்படும்வரை வெளியில் தங்க வேண்டும்.



3) முதலில் வீட்டில் உள்ள துணிகளை எல்லாம் நன்கு மூட்டை கட்டி வைத்து வெளியில் வைக்கவும். அல்லது சுடுதண்ணீரில் துவைத்து எடுக்கவும்.



4) PEST கண்ட்ரோல் செய்த பின்னர் 24 மணிநேரமாவது யாரும் அறையை பயன்படுத்தக் கூடாது.



5) அடுத்த நாள் வேற ஆளை விட்டு மருந்தை எடுத்து களைந்து விட்டு ஜன்னலெல்லாம் திறந்து வைத்து விட்டு வர வும்..பிறகு ஒரு நாள் கழித்து போய் சுத்தம் செய்யவும்..



6) சமையலறையில் உள்ள எல்லா பாத்திரங்களையும் கழுவி எடுத்து வைக்கவும்..



வேறு மற்றும் பாதுகாப்பான முறை



கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.



நன்றி : கொங்கு தென்றல்

----

மூட்டைப் பூச்சியின் வரலாறு!!



மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன



வகைகள்



பொதுவான மூட்டைப்பூச்சி வகையான (Cimex lectularius) மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்ப மண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை. மற்றொரு வகை (Cimex hemipterus) வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்க கூடியவை.



மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணக்கூடிய வகை(Leptocimex boueti) வௌவால்களை யும் மனிதனையும் தாக்குபவை. Cimex pilosellus மற்றும் Cimex pipistrella என்ற இரண்டு வகையானவை பொதுவாக வௌவால்களை அதிகமாக தாக்க கூடியவை. வட அமெரிக்காவில் வாழும் (Haematosiphon inodora) வகை மூட்டைப்பூச்சிகள் பொதுவாக பறவைகளைத் தாக்குபவை.



உடலமைப்பு



வளர்ந்த மூட்டைப்பூச்சி சிவந்த அரக்கு நிறத்தில் தட்டையாக, முட்டை வடிவத்தில் இறக்கையில்லா உடலமைப்பினை கொண்டது. மிக நுண்ணிய முடிகளை உடல் முழுதும் கொண்டிருக்கும். 4-5 மிமீ வரை நீளம் வரை வளரும். புதிதாய் முட்டை பொரித்த மூட்டைப் பூச்சிகள் வெளிறிய நிறத்தில் ஒளிபுகும் வண்ணம் தோலைக்கொண்டதாக இருக்கும். மூட்டைப்பூச்சிகளை மனிதக்கண்களால் காணமுடியாது என்ற தவறானதொரு நம்பிக்கை உண்டு



உண்ணும் முறைகள்



பொதுவாக மற்ற உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் தான் மனித இரத்தத்தைக் குடிக்க முயல்கின்றன. மனதனின் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவை இவற்றை மனிதனிடம் ஈர்க்கின்றன.



இப்பூச்சிகள் இரதத்தை உறிவதற்கு மனிதனின் சதையில் இரண்டு குழல்களை செலுத்துகின்றன. ஒரு குழல் மூலம் தனது உமிழ்நீரை செலுத்திட, அதில் வலியை மறக்கடிக்கச் செய்யும் இரசாயனங்கள் இருப்பதால், அவை கடிக்கும் வலியினை மனிதன் உணருவதில்லை. ஏறத்தாழ ஐந்து நிமடத்திற்கு இரத்ததை உறிஞ்சிய பின், அவை தமது இருப்பிடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றன.



மனிதனுக்கு ஏற்படக் கூடிய உடல்நலக் கேடுகள்



இவை கடிப்பதால், மனிதன் தோலில் அரிப்புகளும், ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தொடர்பான வியாதிகளும் ஏற்பட வாய்ப்புண்டு



இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டி.டி.டி(D.D.T) மருந்து உபயோகத்தின் மூலமாக முற்றிலுமாக அழிக்கப் பட்டிருந்த மூட்டைப் பூச்சிகள் மீண்டும் நியூயார்க் போன்ற நகரங்களை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளன. கரப்பான் பூக்கிகளுக்கும் எலிகளுக்கும் பழக்கப்பட்ட நியூயார்க் நகர மக்கள், இப்போது மூட்டைப் பூச்சிகளைப் பற்றி ஆரம்பப் பாடம் படிக்கிறார்கள்.



மூட்டைப் பூச்சிகளைப் பற்றி தகவலை மக்களுக்கு அளிக்க ஒரு இணையதளத்தையும் உருவாக்கி உள்ளது நியூயார்க் மாநகரம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆதிக்கம் இங்கு எழுபத்தியொரு சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது. நியூயார்க்கின் இப்போதைய பெயர் மூட்டைப் பூசசிகளின் தலைநகரம் இந்த நகரம் 500,000.00 டாலர் தொகையை மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்கும், மக்களிடையே விழிப்புணர்வப் பரப்பவும் செலவிட்டிருகிறது.



பகல் முழுவதும் ஒளிந்து இருக்கும மூட்டைப் பூச்சிகள் இரவில் வெளிவருகின்றன. இரத்தைதைக் குடித்து வாழும் இந்தப் பூச்சிகளைக் முற்றிலுமாக அழிப்பது ஒருகடினமான செயல். ஒருவர் கடிபடும் உணர்ச்சியோ கடியின் வலியோ தெரியாத்தனால் இவை உடனடியாக் கொல்லப்படுவதில்லை. படுக்கையின் ஓரங்களில் கரும்புள்ளிக் குவியலாக இருக்கும் மூட்டைப் பூச்சிகள் தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ஒரு வலி போக்கும் திரவத்தை நம் உடலுக்குள் செலுத்துகின்றன. அதனால் அவைக் கடிப்பது யாருக்கும் தெரிவதில்லை.



ஆனால் சிறிது நேரத்திலோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் கழித்தோ உடலில் தடிப்புக்களும் அரிப்பும் இருக்கும். மூட்டைப் பூச்சிகள் பதுங்க இடம் தேடி அலைந்து கொண்டு இருப்பதால் அவை எல்லா மூலை முடுக்குகளிலும் ஒளிந்து கொள்கின்றன. பகலில் இவை கண்களுக்குத் தெரிவதில்லை.



நமது பெட்டிகளுக்குள்ளும் உடைகளுக்குள்ளும் ஏறிப் பதுங்கிக் கொள்ளும் இந்த அருவருப்பான பூச்சி அதிக அளவிற்கு அதிவேகமாகப் பரவ காரணம் சுற்றுப்புற தூய்மையின்மை என்றுக் கூற முடியாது.மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு இங்கே மக்களிடம் இல்லாதது தான். கிட்ட்த்தட்ட ஒரு தலைமுறைக்கு மூட்டைப் பூச்சி என்ற ஒரு பூச்சி இருப்பதே அமெரிக்கர் களுக்குத் தெரியாது.



ஒரு பெண் மூட்டைப் பூச்சி ஒரு முறைக்கு ஐநூறு முட்டைகள் இருக்கிறது. வழவழப்பானச் சின்ன சின்ன முட்டைகள் எதிலும் ஒட்டிக் கொள்ளும்.அதனால் மூட்டைப் பூச்சிகளின் குடியேற்றம் ஒரு இட்த்திலிருந்து இன்னோரு இட்த்திற்கு எளிதாகிறது. மேலும் இரத்த்த்தை மட்டும் குடித்து வாழும் இந்த பூச்சி இனங்களால் ஒரு வருடம் இரத்தமில்லாமல் வாழ முடியும்.இந்தப் பூச்சி இனங்கள் மனிதர்கள் மட்டுமில்லாமல் எலி, வெளவ்வால் அணில் போன்ற கொறித்துத் தின்னும் பிராணிகள் மூலமாகவும் பரவலாம். டி.டி.டி(D.D.T) பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருப்பதாலும் மூட்டைப் பூச்சிகள் பெருக ஆரம்பித்து இருக்கின்றன.



இந்தியக் கட்டங்களைப் போல் சிமெண்ட்டாலும் செங்கலாலும் கட்டப்படாமல் மரத்துகள்களால் செய்யப்பட்ட மர அட்டைகளால் கட்டப்படும் அமெரிக்கக் கட்டிடங்களிலிருந்து மூட்டைப் பூச்சிகளை வெளியேற்றுவது மிக க் கடினமாக உள்ளது. நம் நாட்டைப் போல கட்டிடங்களைக் கழுவி விட முடியாது.



வெளிப்புற அட்டைச்சுவருக்கும் உட்புற அட்டைச் சுவருக்கும் நடுவில் குளிர் வரமால் தடுக்க வைக்கும் செயற்க்கைப் பஞ்சுகளும் தரையில் போடப்படும் கார்பெட் என்ற கம்பளங்களும் மூட்டைப் பூச்சிகள் பதுங்கிக் கொள்ளவும் ஒரே கட்ட்டிட்த்தின் ஒரு மூலையிலிருந்து இன்னோரு மூலைக்கு மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்து செல்லவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இயந்திரத்தாலேயே துவைத்துக் காய வைக்கும் பழக்கத்தால் மூட்டைப் பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள் அமெரிக்க மக்கள்.



குழந்தைகளின் தலையில் பேன் இருந்தாலே பள்ளிக்கு வரக்கூடாது என்ற எழுதாதச் சட்டம் கொண்ட அமெரிக்க சமுதாயத்தில் இந்த கடுகளவுப் பூச்சிகள் பரபரப்பை உருவாக்கியுள்ளன. செய்தி நிறுவனங்களுக்கு அன்றாட ருசிகரத் தகவல்களைத் தீனி போடுவது மட்டுமல்லாமல் ஒரு பிரபலாமன பொழுது போக்கு அம்சமாக மூட்டைப் பூச்சிகள் அவதாரம் எடுத்துள்ளன.



மூட்டைப் பூச்சிகளினால் பரவக் கூடிய நோய்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகளும் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வது பற்றிய ஆராய்ச்சிகளும் நடந்து வருகினறன.



மூட்டைப் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத மக்கள் அதிவீரியமுள்ள பூச்சிக் கொல்லிகளைப் வீட்டுக்குள் பயன் படுத்தி குழந்தைகளுக்கும், செல்லப் பிராணிகளுகும் கேடு விளைவிக்க வாய்ப்புக்கள் அதிகரித்து வருகிறது. மனிதனின் கண்கள் மற்றும் தொண்டையை எரிச்சல் படுத்தும் இரசாயனப் பொருட்களும், மனித நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கும் மருந்துகளும் பொது மக்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஐம்பது ஆண்டுகளாக மூட்டைப் பூச்சிகளை மறந்திருந்த அமெரிக்க சமுதாயம் செப்ட்ம்பர் மாதம் சிக்காகோ நகரில் மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நட்த்துகிறது. பூச்சியின அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்து இந்தக் கருத்தரங்கில் குவிந்திருகின்றனர்.



மூட்டை பூச்சியை அழிக்க சில சுலபமான வழிகள்



114.8ºF அல்லது 46ºC க்கு அதிகமான வெப்ப நிலையில் மூட்டைப் பூச்சிகள் இறந்து போவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அதிக அளவு வெப்பத்தை சுமார் ஏழு நிமிடங்களுக்கு கட்டடங் களின் எல்லா அறைகளிலும், இடுக்குகளிலும் செலுத்தி மூட்டைப் பூச்சிகளைக் கொல்லும் முறை சில இடங்களில் செயல்படுத்தப் படுகிறது. சுற்றுச்புற சூழ்நிலைக்கும் சுற்றி வாழ் உயிரின்ங்களுக்கும் தீங்கு விழைவிக்காத இந்த முறை ஒருவரின் வங்கித் தொகைக்கு ஒரு வேட்டு வைக்கிறது.



இன்னோரு கல்லூரி ஆராய்ச்சியில் பாட்டிலில் போடப்பட்ட திடப்படுத்தப்பட்ட கார்பன்டை ஆக்ஸைட்() மூட்டைப் பூச்சிகளை கவர்ந்திழுப்பதோடு அவற்றைப் பிடிக்கும் ஒரு பொறியாகவும் பயன் படுத்த முடியும் என்று தெரிகிறது.



Electric Steamer



The Electric Power Steamer kills bed bugs contact. Bed bugs are particularly succeptible to heat, which is why steaming can be a very effective way to kill bed bug and mite infestations in your home in tight and hard to reach places.



முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். .மாஸ்கிங் டேப் கொண்டு ஒட்டி பிடிக்கும்



நன்றி : நாளைய சமுதாயம்

APARTMENT BUILDING SPLITS IN TWO, FALLS SIDEWISE






An impressive achievement of industrial civilization is the wonderfully skillful demolition of a high rise building in which the exploded building drops straight down as though along a plummet line and all the falling rubble is contained within the perimeter of the former structure, causing no damage or disruption to the surrounding area. Here is a demolition that went wrong. It happened in the city of Liuzhou, China. Instead of collapsing straight down, the 22 story apartment building splits into two halves, with one half falling to the ground sidewise (fortunately not causing a disaster or taking any lives) and the other half remaining standing on an angle that makes it look like the Leaning Apartment Tower of China.

An Interesting History of 1752



Here is an interesting historical fact that you probably didn't know, (I sure didn't). Just have a look at the calendar for the month of September 1752.

(If you think I'm joking, you may search it on Google and see it for yourself.)
...
In case you haven't noticed, 11 days are simply missing from the month.

Here's the explanation: This was the month during which England shifted from the Roman Julian Calendar to the Gregorian Calendar.

A Julian year was 11 days longer than a Gregorian year. So, the King of England ordered 11 days to be wiped off the face of that particular month. (A King could order anything, couldn't he?
good morning.

An Interesting History of 1752

Here is an interesting historical fact that you probably didn't know, (I sure didn't). Just have a look at the calendar for the month of September 1752.

(If you think I'm joking, you may search it on Google and see it for yourself.)
... 
In case you haven't noticed, 11 days are simply missing from the month.

Here's the explanation: This was the month during which England shifted from the Roman Julian Calendar to the Gregorian Calendar.

A Julian year was 11 days longer than a Gregorian year. So, the King of England ordered 11 days to be wiped off the face of that particular month. (A King could order anything, couldn't he?

Thursday, March 7, 2013

The Words


The Words (அமெரிக்க திரைப்படம்) – நான் சமீபத்தில் பார்த்து, மிகவும் ஈர்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம். ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட கதை. ரோரி ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே, கதைகள் எழுதிக் கொண்டிருப்பவன். மிகப் பெரிய நாவலாசிரியராக வர வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அவனுடைய காதலி டோரா. ரோரி எழுதிய கதைகள் நன்றாக இருந்தாலும், அதை நூலாக கொண்டு வர முடியவில்லை. யாருக்கும் தெரியாத ஆளாக இருப்பதால், பதிப்பாளர்கள் மறுத்து விடுகிறார்கள். இந்த நேரத்தில் ரோரிக்கும் டோராவிற்கும் திருமணம் நடைபெற்று, தேன் நிலவுக்காக அவர்கள் பாரிஸூக்குச் செல்கிறார்கள். அங்கு பழைய பொருட்கள் விற்கப்படும் ஒரு கடையில், ஒரு பழைய தோல் பையை விலைக்கு வாங்குகிறார்கள். பின்னர் அமெரிக்காவிற்கு திரும்பி வந்து விடுகிறார்கள். ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும்போது ரோரி அந்த பழைய தோல் பையைத் திறக்க, அதன் ஒரு உறைக்குள் பேனாவால் எழுதப்பட்ட ஒரு நாவல் இருக்கிறது. அதை வாசிக்கும் ரோரி ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விடுகிறான். ‘அடடா! என்ன எழுத்து!’ என்று வியக்கிறான். அந்த நாவலை அப்படியே டைப் செய்து தன் கம்ப்யூட்டரில் அவன் வைத்திருக்கிறான். அதை அவனுடைய மனைவி டோரா பார்க்கிறாள். அதை எழுதியது ரோரிதான் என்று நினைக்கும் அவள் அவனை பாராட்டுகிறாள். அவளின் தூண்டுதலைத் தொடர்ந்து, அது நூலாக ‘The Words’ என்ற பெயரில் வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. அந்த நூல் சம்பந்தமான ஒரு விழா நடக்கிறது. அதில் ரோரி வாசகர்களுடன் உரையாடுகிறான். விழா முடிவடைந்து, அவன் வெளியே வந்து காருக்குள் அமர, மழை பெய்யும் அந்த இரவு நேரத்தில் ஓரத்தில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு வயதான மனிதர். அவர்தான் – அந்த நாவலை எழுதிய உண்மையான எழுத்தாளர். சந்தோஷங்களும், கவலைகளும் நிறைந்த தன் வாழ்க்கையையே அவர் நாவலாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அந்த தோல் பைக்குள் அந்த கதை எப்படி வந்தது? நாவலை உண்மையாகவே எழுதியவர் வேறொருவர் இருக்க, பெயரையும் புகழையும் ரோரி வாங்கிக் கொண்டிருக்க… உண்மை வெளியுலகிற்கு தெரிந்ததா?
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முழுமையான ஈடுபாட்டுடன், படத்துடன் ஒன்றிப் போய் இருக்கச் செய்யும் மிகச் சிறப்பான திரைக்கதை.
வயதான மனிதராக வரும் ஜெரேமி அயன்ஸ், ரோரியாக வரும் ப்ராட்லி கூப்பர் – இருவரும் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஹாலிவுட்டிற்கு மதிப்பையும், மரியாதையையும் தேடித் தந்திருக்கும் ஒரு தரமான படம்!
The Words (அமெரிக்க திரைப்படம்) – நான் சமீபத்தில் பார்த்து, மிகவும் ஈர்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம். ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட கதை. ரோரி ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே, கதைகள் எழுதிக் கொண்டிருப்பவன். மிகப் பெரிய நாவலாசிரியராக வர வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அவனுடைய காதலி டோரா. ரோரி எழுதிய கதைகள் நன்றாக இருந்தாலும், அதை நூலாக கொண்டு வர முடியவில்லை. யாருக்கும் தெரியாத ஆளாக இருப்பதால், பதிப்பாளர்கள் மறுத்து விடுகிறார்கள். இந்த நேரத்தில் ரோரிக்கும் டோராவிற்கும் திருமணம் நடைபெற்று, தேன் நிலவுக்காக அவர்கள் பாரிஸூக்குச் செல்கிறார்கள். அங்கு பழைய பொருட்கள் விற்கப்படும் ஒரு கடையில், ஒரு பழைய தோல் பையை விலைக்கு வாங்குகிறார்கள். பின்னர் அமெரிக்காவிற்கு திரும்பி வந்து விடுகிறார்கள். ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும்போது ரோரி அந்த பழைய தோல் பையைத் திறக்க, அதன் ஒரு உறைக்குள் பேனாவால் எழுதப்பட்ட ஒரு நாவல் இருக்கிறது. அதை வாசிக்கும் ரோரி ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விடுகிறான். ‘அடடா! என்ன எழுத்து!’ என்று வியக்கிறான். அந்த நாவலை அப்படியே டைப் செய்து தன் கம்ப்யூட்டரில் அவன் வைத்திருக்கிறான். அதை அவனுடைய மனைவி டோரா பார்க்கிறாள். அதை எழுதியது ரோரிதான் என்று நினைக்கும் அவள் அவனை பாராட்டுகிறாள். அவளின் தூண்டுதலைத் தொடர்ந்து, அது நூலாக ‘The Words’ என்ற பெயரில் வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. அந்த நூல் சம்பந்தமான ஒரு விழா நடக்கிறது. அதில் ரோரி வாசகர்களுடன் உரையாடுகிறான். விழா முடிவடைந்து, அவன் வெளியே வந்து காருக்குள் அமர, மழை பெய்யும் அந்த இரவு நேரத்தில் ஓரத்தில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு வயதான மனிதர். அவர்தான் – அந்த நாவலை எழுதிய உண்மையான எழுத்தாளர். சந்தோஷங்களும், கவலைகளும் நிறைந்த தன் வாழ்க்கையையே அவர் நாவலாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அந்த தோல் பைக்குள் அந்த கதை எப்படி வந்தது?  நாவலை உண்மையாகவே எழுதியவர் வேறொருவர் இருக்க, பெயரையும் புகழையும் ரோரி வாங்கிக் கொண்டிருக்க… உண்மை வெளியுலகிற்கு தெரிந்ததா?
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முழுமையான ஈடுபாட்டுடன், படத்துடன் ஒன்றிப் போய் இருக்கச் செய்யும் மிகச் சிறப்பான திரைக்கதை.
வயதான மனிதராக வரும் ஜெரேமி அயன்ஸ், ரோரியாக வரும் ப்ராட்லி கூப்பர் – இருவரும் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஹாலிவுட்டிற்கு மதிப்பையும், மரியாதையையும் தேடித் தந்திருக்கும் ஒரு தரமான படம்!

மோனாலிசா ஓவியத்தில் மறைந்துள்ள மர்மங்கள்.

மோனாலிசா ஓவியத்தில் மறைந்துள்ள மர்மங்கள்.

உலகத்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது இந்த ஓவியம் உள்ளது. இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் பெயர் தான் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci). இந்த ஓவியத்தின் இரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது. 

மேலும் அதிகம் விற்பனையாகியுள்ள, இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது. அவற்றில் எழுந்த சிலவற்றைப் பார்ப்போமா!!! மோனாலிசா யார்? வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசா, ப்னோரென்டைன் எனப்வரின் மனைவி. இவரது உண்மையான பெயர் லிசா டெல் ஜியோண்டா. ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை புன்னகையின் இரகசியம் புன்னகையின் இரகசியம் ,monalisa smile secrets,monalsa punnakai நிறைய மக்கள் மோனாலிசாவின் புன்னகையில் நிறைய மர்மங்களை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. எனவே தான், இவரது இந்த புன்னகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசா கர்ப்பிணியா? மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு, உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைக்கின்றனர். உண்மையிலேயே லிசா டெல் ஜியோண்டா, இந்த ஓவியம் வரையும் போது தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார். மோனாலிசா ஒரு ஆணா? சில ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு ஆண் என்று நிரூபித்துள்ளனர். ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது என்பதாலேயே தான். 

மேலும் சில ஆய்வாளர்கள் மோனாலிசாவின் ஓவியத்தை ஆராய்ந்ததில், இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது என்று சொல்கிறது. டா வின்சி தான் மோனாலிசா! dsavinci,monalisa,மோனாலிசா ஓவியமானது, டா வின்சி ஒருசில ஆராய்ச்சியாளர்கள், மோனாலிசா ஓவியமானது, டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஓவியத்தை நன்கு ஆராய்ந்ததில், டா வின்சிக்கும், ஓவியத்திற்கும் உள்ள ஒற்றுமை நன்கு புலப்படுவதாகவும் கூறுகின்றனர். 

ஆமோன் மற்றும் எலிசா: ஆண் மற்றும் பெண் சில வரலாற்று ஆசிரியர்கள், மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை என்று கூறியுள்ளனர். ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது என்று கூறுகின்றனர். ஏன் புருவமில்லை? மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது. எனவே இது ஒரு பெரும் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கோல்டன் டிரையாங்கிள் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு சிறந்த சமச்சீர் என்ற அடிப்படையில் இருப்பதாக நம்புகின்றனர். ஏனெனில் இந்த ஓவியத்தின் முன் நின்று அதனைப் பார்த்தால், அந்த ஓவியம் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும். இதனைப் பற்றி விரிவாக டான் ப்ரௌன் அவரது நாவலில் தெளிவாக கூறியுள்ளார்.


உலகத்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது இந்த ஓவியம் உள்ளது. இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் பெயர் தான் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci). இந்த ஓவியத்தின் இரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது.

மேலும் அதிகம் விற்பனையாகியுள்ள, இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது. அவற்றில் எழுந்த சிலவற்றைப் பார்ப்போமா!!! மோனாலிசா யார்? வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசா, ப்னோரென்டைன் எனப்வரின் மனைவி. இவரது உண்மையான பெயர் லிசா டெல் ஜியோண்டா. ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை புன்னகையின் இரகசியம் புன்னகையின் இரகசியம் ,monalisa smile secrets,monalsa punnakai நிறைய மக்கள் மோனாலிசாவின் புன்னகையில் நிறைய மர்மங்களை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. எனவே தான், இவரது இந்த புன்னகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசா கர்ப்பிணியா? மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு, உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைக்கின்றனர். உண்மையிலேயே லிசா டெல் ஜியோண்டா, இந்த ஓவியம் வரையும் போது தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார். மோனாலிசா ஒரு ஆணா? சில ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு ஆண் என்று நிரூபித்துள்ளனர். ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது என்பதாலேயே தான்.

மேலும் சில ஆய்வாளர்கள் மோனாலிசாவின் ஓவியத்தை ஆராய்ந்ததில், இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது என்று சொல்கிறது. டா வின்சி தான் மோனாலிசா! dsavinci,monalisa,மோனாலிசா ஓவியமானது, டா வின்சி ஒருசில ஆராய்ச்சியாளர்கள், மோனாலிசா ஓவியமானது, டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஓவியத்தை நன்கு ஆராய்ந்ததில், டா வின்சிக்கும், ஓவியத்திற்கும் உள்ள ஒற்றுமை நன்கு புலப்படுவதாகவும் கூறுகின்றனர்.

ஆமோன் மற்றும் எலிசா: ஆண் மற்றும் பெண் சில வரலாற்று ஆசிரியர்கள், மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை என்று கூறியுள்ளனர். ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது என்று கூறுகின்றனர். ஏன் புருவமில்லை? மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது. எனவே இது ஒரு பெரும் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கோல்டன் டிரையாங்கிள் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு சிறந்த சமச்சீர் என்ற அடிப்படையில் இருப்பதாக நம்புகின்றனர். ஏனெனில் இந்த ஓவியத்தின் முன் நின்று அதனைப் பார்த்தால், அந்த ஓவியம் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும். இதனைப் பற்றி விரிவாக டான் ப்ரௌன் அவரது நாவலில் தெளிவாக கூறியுள்ளார்.

எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...!

எச்சரிக்கை...!

C.F.L .பல்புகள் உடைந்தால்...! 


சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .


Via; Mass Boss...


சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .

கட்டிய வீட்டை வாங்கும்போது, கவனிக்க வேண்டியவை..!



* தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750-800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600-650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.

* எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.

ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30-35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

* அடுக்குமாடி குடியிருப்பு களில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.

* காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.

* தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு!

* வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

சொந்தமாக வீடு கட்டும்போது, கவனிக்க வேண்டியவை..!

* செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

* கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10-15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாககூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும்.

நன்றி - a2ztamilnadu.com

எக்ஸாம் டைம் டிப்ஸ் - அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்





பரீட்சை சமயங்களில் குழந்தைகளுடன் கூடிய வரை அமைதியாக பேசுங்கள். அவர்களை தேவையில்லாமல் எதற்காகவும் கடிந்து கொள்ள வேண்டாம்.



படிக்கலை படிக்க மாட்டான் போன்ற நெகட்டிவ் வார்த்தைகளை சொல்லாதீர்கள். கூடவே இருந்து சப்போர்ட் செய்ய முடியாத பெற்றோர்கள் மாரல் சப்போர்ட்டாக அவ்வப்போது போனில் என்ன படிக்கிறான் என்று அன்பாக விசாரிக்கலாம். நம்முடைய ஆபிஸ் டென்ஷனையும் கோபங்களையும் ஒரு நாளும் குழந்தைகள் மீது சுமத்தக் கூடாது.


ஸ்பைஸி உணவுகளைத் தவிர்த்து, நல்ல சத்தான உணவை மிதமாகத் தரவும். பழங்கள் காய்கறிகள் அவர்கள் டயட்டில் தினமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். எப்பவும் புத்தகங்களுடம் மட்டும் இருக்காமல் அவ்வப்போது ரிலாக்ஸ் செய்யச் சொல்லலாம்.

படித்தவற்றை ரிவைஸ் செய்ய சிறு குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு அதை படிக்கலாம்.

கடைசி நிமிடம் படிப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். முடிந்தவரை எல்லாவற்றையும் முன்னரே படித்துவிடுவதுதான் நல்லது. எந்த சப்ஜெக்ட் வீக் எது சூப்பர் என்று கவனம் செலுத்த வேண்டிய பாடங்களை ப்ராயரடைஸ் செய்து கொள்ளவும்.


பரிட்சை எழுத‌ பேனா மை ஜெல் பேனா என்று இரண்டு அல்லது மூன்று எடுத்துத் தரவும். ஸ்கூல் பேகில் எல்லாம் எடுத்துவைக்கப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்து அனுப்ப வேண்டும்.


பரிட்சை எழுதும் முன் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இறை நம்பிக்கையே இல்லாதவர்களாக இருந்தாலும் கூட கண் மூடி அமைதியாக ஒரு நிமிடம் தியானம் செய்ய சொல்லுங்கள்.


டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப முக்கியம். தெரிந்த கேள்விகளை முதலில் எழுதிவிட்டு, தெரியாத விடையோ அவுட் ஆஃப் சிலபஸ் கேள்விகள் வந்தால் கூட அதை விட்டுவிடாமல் எழுதச் சொல்லுங்கள். அதற்கு நிச்சயம் மார்க் இருக்கும்.


அந்த நாளைய பரிட்சையை சரியாக எழுதவில்லை என்றாலும், மனம் தளர்ந்துவிடாமல் அடுத்த நாள் பரிட்சைக்கு தயார் படுத்த சொல்லுங்கள். 

இதெல்லாம் அவங்க டிபார்ட்மென்ட் என்று சொல்லும் அப்பாக்களின் கவனத்துக்கு - நீங்கள் செய்ய வேண்டிய ஆகச் சிறந்த உதவி அம்மாக்களை எனக்கு இன்னிகு மஷ்ரூம் ப்ரை சாப்பிடணும் போல இருக்கு, அது வேண்டும் இது வேண்டும் என்று டிஸ்டர்ப் செய்யாதீர்கள்.

அன்பும் அக்கறையும் கூடுதல் கவனிப்பு மட்டுமே நம் குழந்தைகளுக்குத் தேவை. அதுவே அவர்களின் மனதுக்கு உற்சாக டானிக். 

ஆல் தி பெஸ் குட்டீஸ். கலக்குங்க....