Search This Blog

Showing posts with label World Cinema. Show all posts
Showing posts with label World Cinema. Show all posts

Thursday, December 10, 2020

Children of Heaven Movie Review

Synopsis

  • Ali takes his little sister Zahra's shoes to the shoemaker to be repaired, but loses them on the way home. The siblings decide to keep the predicament a secret from their parents, knowing that there is no money to buy a replacement pair and fearing that they will be punished. They devise a scheme to share Ali's sneakers: Zahra will wear them to school in the morning and hand them off to Ali at midday so he can attend afternoon classes. This uncomfortable arrangement leads to one adventure after another as they attempt to hide the plan from their parents and teachers, attend to their schoolwork and errands, and acquire a new pair of shoes for Zahra. Zahra sees the shoes on a schoolmate's feet, and follows her home, but the two soon become friends.

    Ali enters a high-profile children's footrace in the hope of receiving the third prize of a new pair of sneakers. He accidentally places first and wins another prize instead. The film ends with Zahra finding out that she will not get a new pair of shoes, but there is a quick shot of their father's bicycle at the end of the movie that shows what appears to be the red shoes Zahra had been focusing on earlier and another pair of white sneakers, presumably for Ali, whose old sneakers were torn from so much use. The film ends with the final shot showing blisters on Ali's feet. Some versions include an epilogue revealing that Ali eventually achieves the larger-scale success of having a racing career.


"Children of Heaven'' is very nearly a perfect movie for children, and of course that means adults will like it, too. It lacks the cynicism and smart-mouth attitudes of so much American entertainment for kids and glows with a kind of good-hearted purity. To see this movie is to be reminded of a time when the children in movies were children and not miniature stand-up comics.

The movie is from Iran. Immediately you think kids would not be interested in such a movie. It has subtitles. Good lord! Kids will have to read them! But its subtitles are easy for 8- or 9-year-olds, who can whisper them to their siblings, and maybe this is their perfect introduction to subtitles. As for Iran: The theme of this movie is so universal there is not a child who will not be wide-eyed with interest and suspense.

The film is about a boy who loses his sister's shoes. He takes them to the cobbler for repairs, and on the way home, when he stops to pick up vegetables for his mother, a blind trash collector accidentally carries them away. Of course, the boy, named Ali, is afraid to tell his parents. Of course, his sister, named Zahra, wants to know how she is supposed to go to school without shoes. The children feverishly write notes to each other, right under their parent's noses.

The answer is simple: Zahra will wear Ali's sneakers to school every morning, and then run home so that Ali can put them on for his school in the afternoon. But Zahra cannot always run fast enough, and Ali, who is a good student, gets in trouble for being late to class. And there is a heartbreaking scene where Zahra solemnly regards her own precious lost shoes, now on the feet of the ragpicker's daughter.

I submit that this situation is scarier and more absorbing for children than a movie about Godzilla or other manufactured entertainments. Even when you're a kid, you know you're not likely to be squished by a giant lizard, but losing something that has been entrusted to you? And getting in trouble at school? That's big time.

Majid Majidi's film has a wonderful scene where Ali and his father bicycle from the almost medieval streets and alleys of the old town to the high-rises and luxury homes where the rich people live. The father hopes for work as a gardener, but he is intimidated by the challenge of speaking into the intercoms on the gates of the wealthy. His son jumps in, with offers of pruning, weeding, spraying and trimming. It is a great triumph.

And then there is a footrace for the poor children of the quarter. The winner gets two weeks in a summer camp and other prizes. Ali doesn't care. He wants to place third, because the prize is a new pair of sneakers, which he can give to his sister. My guess is that the race and its outcome will be as exciting for many kids as anything they've seen at the movies.

"Children of Heaven'' is about a home without unhappiness. About a brother and sister who love one another, instead of fighting. About situations any child can identify with. In this film from Iran, I found a sweetness and innocence that shames the land of Mutant Turtles, Power Rangers and violent video games. Why do we teach our kids to see through things, before they even learn to see them?

Roger Ebert

Roger Ebert was the film critic of the Chicago Sun-Times from 1967 until his death in 2013. In 1975, he won the Pulitzer Prize for distinguished criticism.



Children of Heaven -சினிமா ஒரு பார்வை - கவிஜி
*******************************************************************
ஈரான் சினிமாக்கள் உலக சினிமாக்களில் தனி இடம் பிடித்திருப்பவை. ஈரான் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு....... இருக்கும் வரையறைக்குள்....... கதை சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதுவே பிறகு நேர்த்தியாகி விட்டிருக்கிறது. இப்படியும் படம் எடுக்க முடியுமா என்று நம் போன்ற நாடுகள் கற்றுக் கொள்ளும் உதாரணம் இந்த படம். ஈரானில் உள்ள குறிப்பிட்ட சில இயக்குனர்களில் 'மஜீத் மஜிதி' மிக முக்கியமானவர். வறுமையின் கோரப் பிடியில் பூத்திருக்கும் பூக்களை உதிர விடாமல் கூட்டிச் செல்லும் வாழ்க்கையைக் கொண்டு இந்தப் படத்தை செதுக்கியிருக்கிறார்.
"சில்ரன் ஆப் ஹெவன்" செருப்பைக் கொண்டும் இலக்கியம் படைக்க முடியும் என்று உலகத்துக்கு எடுத்துக் காட்டிய சினிமா.
றோஸ் நிற செருப்பை தைப்பதில்தான் படம் ஆரம்பிக்கிறது.
பின்னால் தூரத்தில் கடவுளின் கீதம் ஓதப்பட்டுக் கொண்டிருக்கிறது. தைத்த செருப்பை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கொஞ்சம் ரொட்டியும் வாங்கி செல்லும் நம் கதை நாயகன் அலிக்கு வயது எட்டிலிருந்து பத்து இருக்கலாம். உருளைக் கிழங்கு வாங்குவதற்காக சற்று முன் தைத்த செருப்பையும் வாங்கிய ரொட்டியையும் வெளியே இருக்கும் பழக்கூடை சந்தில் வைத்து விட்டு உள்ளே செல்கிறான். அந்த சமயத்தில் குப்பை எடுப்பவர் அவ்வழியே வந்து........எடுக்கும் குப்பையோடு குப்பையாக....... அந்த செருப்பையும் எடுத்து போய் விடுகிறார். உருளைக்கிழங்கு வாங்கி விட்டு வெளியே வரும் அலிக்கு செருப்பு காணாமல் போனது அதிர்ச்சியாகிறது.
"தங்கச்சியோடு செருப்பு......இங்கதான் வெச்சேன்...... காணோம்......" - எவ்ளோ சொல்லியும் கடைக்காரர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விரட்டி விடுகிறார்.
வீட்டில் இந்த விஷயம் தங்கைக்கு தெரிய வருகிறது. வார்த்தைகளற்ற மவுனத்தில் 'நான் எப்படி பள்ளிக்கு செல்வது...!' என்று அப்பா அம்மாவுக்கு தெரியக் கூடாது என்பதற்காக நோட்டில் எழுதிக் காட்டி கேட்கிறாள். சக்கரைத் துண்டு உடைக்கும் அப்பாவும்.... உடல் நோயாளியான அம்மாவும் வறுமையின் வரைபடத்துக்குள் பேசிக் கொண்டிருக்கும் பின்னணியில் இவர்கள் செருப்பு தொலைந்ததற்கும் அதற்கு மாற்று என்ன செய்ய வேண்டும் என்றும் எழுதி எழுதி பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே வீட்டில் இருக்கும் கஷ்டத்துக்கு இப்படி ஒரு விஷயம் நடந்தது அப்பாவுக்கு தெரிந்தால்... கதை முடிந்தது.
அடுத்த காட்சியில் தங்கை சாரா பள்ளி விட்டு வருவதற்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கிறான் அலி. அவள் வந்தால் தான் அவள் அணிந்திருக்கும் தன் ஷூவை வாங்கி தான் அணிந்து கொண்டு இரண்டாவது ஷிஃப்ட் அதாவது மதியத்துக்கு மேல் நடக்கும் தன் வகுப்புக்கு செல்ல முடியும். ஷூ இல்லாமல் போனால் பள்ளிக்குள் விட மாட்டார்கள்.
வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரையும் 'ஷூ போட்ருக்காங்களா' என்று டீச்சர் சோதனை செய்து கொண்டிருக்கையில்.....அண்ணனின் பழைய நைந்து போன ஷூவைப் போட்டுக் கொண்டு தயங்கி தயங்கி பம்மி நிற்கும் அந்த சிறுமியின் கால்களில் சிறுகுகள் முடங்கிக் கிடப்பதைக் காண்கிறோம். குடும்ப வறுமையின் தீவிரம் பிள்ளைகளின் மேல் விழுவதை உணர்த்தும் காட்சி இது.
'இந்த ஷூ ரெம்ப அழுக்கா இருக்கு... போட்டுட்டு போறதுக்கே கஷ்டமாருக்கு' என்று சொல்கிறாள் தங்கை சாரா. அலி ஷூவை சோப்பு போட்டு கழுவி துவைக்கிறான். பார்த்த மாத்திரத்தில் பொசுக்கென்று நீர் பூக்கும் புன்னகை அவளிடம் அப்போது பிறக்கிறது. துவைக்கையில்..... சோப்பு நுரையில் முட்டைகள் செய்து காற்றில் விட்டு.... ஒருவரோடு ஒருவர் விளையாடியபடி அவர்களின் காலம் புன்னகை சிந்துகிறது. அப்போதைக்கான ஆசுவாசத்தை பளிச்சென்று காயும் அந்த ஜோடி ஷூ தருவதாக இருக்க.....அடுத்த நாளிலிருந்து அவர்களின் உலகம் இரட்டைக் கால்களால் சுழல ஆரம்பிக்கிறது.
ஒரே ஜோடி ஷூவை வைத்துக் கொண்டு அண்ணனும் தங்கையும் காலையில் அவளும் மதியம் அவனுமாக மாற்றி மாற்றி போட்டுக் கொண்டு பள்ளி போகும் போது பார்த்த விழிகளில் பரிதவிக்கும் கண்ணீர் பொருள் சூழ்ந்து கொட்டும். ஒவ்வொரு நாளும் தாமதமாக பள்ளி நுழைந்து ஹெட்மாஸ்டர்க்கு பயந்து பயந்து வகுப்புக்குள் செல்லும் அவனை பின் தொடருதல் மிக மிக துயரமானது. அவன் கண்களில் எப்போதும் தயாராக இருக்கும் கண்ணீரின் சூடு தாங்கவே முடியாதது.
ஒரு நாள் ஹெட் மாஸ்டரிடம் மாட்டிக் கொள்கிறான்.
"போ..... போய் உங்க அப்பாவை கூட்டிட்டு வா" என்று ஹெட்மாஸ்டர் திட்டும் போது.....கண்களில் நீர் திரள "அவர் வேலைக்கு போய்ட்டார்..... " என்று சொல்வான். "நாளைக்கு கூட்டிட்டு வா" என்று மீண்டும் அவர் சொல்ல... "நாளைக்கும் அவர் வேலைக்கு போவார்" என்று சொல்வான். " சரி அம்மாவையாவது அழைத்து வா" என்கையில்..."அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை" என சொல்லி கண்ணீர் விடும் அவன் பாதங்களில் யாரிடமும் பகிர முடியாத சுமை ஒன்று எப்போதும் இருப்பதை அப்போதும் நாம் உணர்கிறோம்.
நாட்கள் நகர... ஒரு நாள்.... பள்ளி முடிந்ததும்...வேகமாக ஓடி வருகையில் தொள தொளவென இருப்பதால்...சாராவின் காலில் இருந்து ஒரு ஷூ படக்கென்று கழன்று ஓடும் சாக்கடையில் விழுந்து விடுகிறது. சாக்கடை நீர் ஓட..... அதில் ஷூ மிதந்து போய்க் கொண்டிருக்க.....அதை விரட்டிக் கொண்டே சாக்கடையின் இருபக்கமும் மாறி மாறி ஓடும் ஒற்றை ஷூ அணிந்த அந்த பிஞ்சுக் கால்கள் படும் பாடு... ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு அடி தரும் உலகத்தின் கோர பக்கங்களை பறை சாட்டுபவை. உலக பொருளாதாரம் ....... உலகமயமாக்கல்........ தாராளமயக்கொள்கை.....என்று ஒரு வெங்காயமும் வேலைக்காகாது. ஒரு செருப்பின் விலை தான் அந்த ஊரில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது......என்று உலக கதவுகளை எட்டி உதைத்து சொல்கிறது காட்சி. ஓடி ஓடி குனிந்து குனிந்து செருப்பை எப்படியாவது பிடித்து விட முயற்சிக்கும் சிறுமியின் முகத்தில் ஏறி இறங்கி தவிக்கும் பரிதவிப்பில் நிரம்பும் பெருமூச்சு.... சொல்லொணாத் துயரம். சொன்னாலும் துயரம்.
ஒரு வழியாக சாக்கடையில் கிடக்கும் குப்பைகளுக்குள் சிக்கி ஷூ ஓரிடத்தில் தேங்கி விட.......வழிப்போக்கர் ஒருவர் உதவியோடு.... சாக்கடை அள்ளுபவர் அலாக்காக தூக்கி கொடுப்பார். கடவுள் போல. ஆனால் உள்ளே பதபதைக்கும் அண்ணனின் காத்திருப்பு இன்னும் மூச்சு வாங்க ஓட வைக்கும். நம்மையும் கூட மூச்சு வாங்க பின் தொடர வைக்கும்.
இதற்கிடையில் சாரா பள்ளியில் யாராவது தன் செருப்பை திருடி விட்டார்களா என அவ்வப்போது ஒவ்வொரு காலாக பார்த்துக் கொண்டே இருக்கிறாள். மாய சுமையை மனதில் இருந்து இறக்கி வைக்க தேடும் பார்வையைக் கொண்டிருக்கும் அந்த தேடலின் நுட்பம். அதே போல அவர்களின் பள்ளியில் அவளையொத்த ஒரு ஜோடி கால்களில் அவளின் றோஸ் செருப்பு... ஒளிந்திருக்கிறது. அந்த சிறுமி இலந்தைப்பழம் மாதிரி ஒன்றை தின்றபடி நின்றிருப்பாள். அருகில் நின்று அவளையே அவளின் கால்களையே பார்த்துக் கொண்டிருக்கும் சாராவின் கண்களில் வழி தெரியாத துக்கத்தின் பாதை மறந்த பாதங்களை நாம் உணர்வோம். கோபம்... தடுமாற்றம்.. தவிப்பு... இயலாமை எல்லாம் கலந்து அவளைப் பின் தொடர்ந்து வீட்டையும் கண்டு பிடித்து விட்டு அடுத்த காட்சியில் தன் அண்ணனோடு வீ ட்டு வாசலில் நிற்பாள்.
ஓடி ஓடி விளையாடியபடியே நடக்கும் அவளை பரிதவிப்போடு ஓடி பின் தொடரும் சாரா - இந்த காட்சி தரும் தாக்கம் சினிமாக்களில் எப்போதேனும் நிகழும் அபூர்வம்.
வார்த்தைகளற்ற பாவனையில் இருவரும் மிக நெருக்கமான......தேவையான ஒரு உண்மையை விவரிக்கும் இடத்தில் ஒளிந்து நிற்கிறார்கள்.
சரி போய் கேக்கலாம் என்பது போல...வீட்டை நோக்கி இரண்டடி எடுத்து வைக்க.... அதே நேரம் வீட்டின் கதவு திறக்கப்பட.... வேகமாய் பின்னால் ஓடி வந்து மறுபடியும் ஒளிந்து கொண்டு பார்க்கிறார்கள். அந்த சிறுமி விளையாடியபடியே வெளியே வர அவளைத் தொடர்ந்து கண்ணில்லாத அவளின் அப்பா வெளியே வந்து அவளைத் தூக்கி கொஞ்சுகிறார். கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இப்போது வீட்டுக்குள் இருந்து அந்த சிறுமியின் அம்மா வருகிறாள். விற்பனைக்கான தொங்கும் பெட்டியை கண்ணில்லாத கணவன் கழுத்தில் மாட்டி விட்டு வழி அனுப்பிகிறாள். சிறுமி கண்ணில்லாத தன் அப்பாவை கை பிடித்து கூட்டிக்கொண்டு செல்கிறாள். கண்கள் நடுங்க பார்த்துக் கொண்டிருக்கும் இவர்கள்...அவர்கள் நம்மை விட ஏழைகள் என்று புரிந்து கொள்கிறார்கள். அர்த்தத்தோடு அவர்களைப் பார்த்துக் கொண்டே பேசமுடியாத ஈரான் வீதி வளைவுகளில்.....அண்ணனும் தங்கையும் உயர்ந்த மனிதர்களாக வீடு திரும்புகிறார்கள். அதே கடவுள் கீதம் பின்னால் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும். மானுட நேயத்தின் மிகப்பெரிய காட்சியை மிக எளிமையாக நகர விட்டிருப்பார் இயக்குனர். அங்கே நிலவும் மௌனங்களில் உலகில் உள்ள அத்தனை அணுகுண்டுகளும் செயல் இழந்த மாதிரி இருந்தது.
அதன் பிறகு அண்ணனும் தங்கையும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். காலையில் அவளும்... மதியத்தில் அவனும்.... நீண்டு கொண்டே செல்லும் அவர்களின் முடிவுறாத பாதையில் ஓடி ஓடியே நாட்களை கடத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும்....ஓட்டங்களின் உவமை தான் அவர்களுக்கு.
இந்த சமயத்தில்...சிறுவர்களுக்கான ஓட்ட பந்தய போட்டி ஒன்று நடக்க இருப்பது தெரிந்து அதில் கலந்து கொள்ள போவதைப் பற்றி தங்கையிடம் கால்கள் மலர சொல்கிறான். காரணம் இரண்டாவது பரிசு ஒரு ஜோடி ஷூ.
"ஒரு வேளை முதலாவதாக வந்து விட்டால் என்ன செய்வது...?" என்று கேட்கிறாள் தங்கை.
"அவர்களிடம் முதல் பரிசை கொடுத்து இரண்டாம் பரிசை வாங்கி கொள்ளலாம்... " என்று சொல்லும் களங்கமற்ற முகத்தில்... கண்களின் ஒட்டத்தைக் காண முடியும். அங்கிருந்தே அவன் பாதங்கள் ஓட ஆரம்பித்து விட்டதை உணர முடியும். அதன் பிறகு போட்டியில் கலந்து கொண்டு ஓட ஆரம்பிக்கிறான். அவன் ஓடிக் கொண்டிருக்கும் அந்த பத்து நிமிடங்கள்....... அவன் காலடி சத்தங்களின் செய்வதறியாத ஒலி....... நம் இதயத்துக்குள்....... மிக மிக வலிமை வாய்ந்த சத்தமாக பிரபஞ்சத்தின் மீது பட்டு பட்டு எதிரொலிக்கும். கால்களே செருப்பாக இருக்கும் எத்தனையோ பாத சுவடுகளின் துயர தூரங்களை அவன் மூச்சிரைக்க கடந்து கொண்டிருப்பான்.
"தினமும் லேட்.....பழைய பிஞ்சு போன ஷூ....... அழுக்கான ஷூ...... இனி இதை நான் போட மாட்டேன்...." என்று தங்கை சொல்வது காதில் கேட்கிறது. வியர்த்து ஒழுகும் அண்ணன்..... உடல் இரைக்க.......தப் தப்.......தப் தப்...... தப் தப் என்று ஓடிக் கொண்டே இருக்கிறான். ஓடுகிறான். தனக்கு முன்னால் ஒருவனைத்தான் விட வேண்டும். இரண்டாம் இடத்தை தக்க வைத்தபடியே ஓட வேண்டும். அந்த கணக்கில் அவன் முன்னும் பின்னும் பார்த்து பார்த்து ஓடுவது நம்மை ஓடாமலும்
மூச்சிரைக்க செய்யும். எல்லாரும் முதல் இடத்துக்கு ஓடிக் கொண்டிருக்க...... இரண்டாம் இடத்துக்கு ஓடிக் கொண்டிருக்கும் அவனை காலம் மிக உணர்வு பூர்வமாக பார்த்துக் கொண்டிருக்கும்.
செருப்பு சொன்ன பாடத்தில் உணர்வுகளில் பூத்துக் கிடந்த கொப்புளங்கள்.........உலக வறுமையை செருப்பால் அடித்தே சொன்னது. ஒரு பிஞ்சுக் கால்கள் இன்னொரு பிஞ்சுக் கால்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.
இறுதியில்.... ஓடிக் களைத்து பிய்ந்து நைந்து போன ஷூவை கழற்றி விட்டு புண்ணாகி கொப்பளித்து விட்ட கால்களை நீர்த்தொட்டிக்குள் இறக்குகிறான் அலி. நீரின் மிதமிதப்பில் ஆசுவாசம் தேடுகின்றன அந்த பாதங்கள். சில நொடி அமைதிக்கு பின் உள்ளிருந்து நீந்திக் கொண்டே வரும் தங்க மீன்கள் அவன் கால்களை முத்தமிட ஆரம்பிக்கின்றன. செருப்புக்கு ஓடிய கால்களுக்கு அந்த மீன்களின் குறுகுறுப்பு பேரமைதியை வர வைக்கிறது. செய்வதறியாது.... அந்த தொட்டியின் அருகே அவன் அமர்ந்திருக்கும் காட்சி கால சித்திரமாக மாறி விடுகிறது.
ஆனால் தூரத்தில் எங்கோ அவனின் காலடி சத்தங்கள் மட்டும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
Film: Children of Heaven
Director: Majid Majidi
Language: Persian
Year: 1997 ‧ Drama/Family
கவிஜி

Monday, May 4, 2020

The Grand Budapest Hotel Film



This is not surprising news, but The Grand Budapest Hotel director Wes Anderson’s highest-grossing film as well as the first to get him an Academy Award nomination. It combines many different aspects of his different films and brings them together into one incredible movie. The film is all about a hotel lobby boy, played by Tony Revolori, who starts a job at the Grand Budapest Hotel. Throughout the duration of the film, you are taken on an unpredictable roller coaster through Wes Anderson’s brain.




Ralph Fiennes is a phenomenon as M. Gustave. his interactions with every cast member and especially newcomer Tony Revolori are fantastic. The later holds his own weight beyond belief and the entire film is an amazing adventure with James Bond-style chases, a large murder mystery, the best-placed cussing and of course the sensational cinematography. The sets, models, angles and even the most nondescript characters come to life each on their own and together as a symphony of beauty. It's freaking brilliant; The Grand Budapest Hotel.

Sunday, May 3, 2020

Eternal Sunshine Of The Spotless Mind Movie

Film director Michel Gondry came together with screenwriter Charlie Kaufman in 2004 and created the masterpiece that we know to be Eternal Sunshine of the Spotless Mind. The main characters in the film are Jim Carrey and Kate Winslet, which should say everything you need to know about how great the film really is. Joel Barish and Clementine, Carrey and Winslet’s characters, are involved in a romantic relationship that starts to go South, so they each get a procedure to erase each other from their minds. As expected, this isn’t as simple as they thought.

Thursday, April 30, 2020

ரிஷி கபூர் இன்று இயற்கை எய்தினார்.



1970ஆம் ஆண்டு மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், பாபி திரைப்படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் சேர்ந்து நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு கடந்த 2000 ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் வெற்றிகளைக் குவித்தார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறியப்படுகிறார்.புகழ்பெற்ற இயக்குநர் தயாரிப்பாளர் ராஜ்கபூரின் மகனான இவர் ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் கலைஞர் ஆவார்.
2018-ஆம் ஆண்டு ரிஷிகபூர் கேன்சரால் பாதிக்கப்பட்டார்  அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த பெற்று வந்த அவர், 2019-ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். அதன்பிறகு இந்தியாவில் மிக கவனமாக அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு வந்தது. பிப்ரவரி மாதம் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக டெல்லியில்  இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார்.

பாலிவுட் சினிமாவில் 80களின் மிகப்பெரும் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர். இந்தியில் பாபி, கர்ஸ், அமர் அக்பர் ஆண்டனி போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர். இவரது மகன் ரன்பீர் கபூர் தற்போது மிக பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வருகிறார்.

Wednesday, April 29, 2020

இர்பான் கான் Irrfan Khan (Actor)



உண்மையான உலக நாயக நடிகனாய் உயர்ந்த ஆளுமை. பொலிவூட் நடிகரான இர்பான் கான், 1988ஆம் ஆண்டு வெளிவந்த சலாம் பாம்பே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் வில்லன் குணச்சித்திர வேடம் என்று அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இந்திய சினிமா பிரித்தானிய சினிமா,அமரிக்க சினிமா என தன் நடிப்பால் உலகம் முழுவதும் அறியப் பட்ட இர்பான்.
சிலம் டோக் மில்லியனர்,லைவ் ஒவ் பைய்,த லஞ் பொக்ஸ், த அமேசின் ஸ்பைடர் மான்,ஜுரசிக் வேல்ட் என புகழ் பெற்ற படங்களில் நடித்து உலக திரைப்பட ரசிகர்களால் பாராட்டுப் பெற்ற இந்திய நடிகன் .
இயல்பான தன் நடிப்பால் நம் மனங்களை கவர்ந்து தன் உடல் மொழியால் அசையும் படிமங்களால் ஒன்றித்த நடிப்பு .
டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற அனுபவ முத்திரையும் முதிர்ந்த நடிப்பு மொழியும் இர்பானுக்கு கை வந்த கலையாய் எல்லாத் திரைப்படங்களிலும் வெளிப் பட்டு நின்றமை இங்கு மனங் கொள்ளத்தக்கது.
உன் நடிப்பால் உலகை கொள்ளை கொண்டாய் என் நடிக தோழனே போய் வா
கலைத்துவ அஞ்சலி உனக்கு
இர்பானின் இறுதிப்பயணம் ... வாழ்க்கை எத்தனை அற்பமானது. காலம் மிக குரூரமானது.

மலையாள சினிமா

யதார்த்தமான கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத நடிப்பும், நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின.வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன்.




பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா.
கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார்.
“சாம் மோகன்லால்தான் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்.
இதை நான் வெளியே சொல்லமுடியாது.
சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்வார்” என்று.
பிரமாதமான நடிகர் பட்டாளம் அவர்களிடம் உண்டு.
மோகன்லால், நெடுமுடி வேணு, கொடியேற்றம் கோபி, (இப்பொழுது இல்லை) ஜெகதி ஸ்ரீ குமார், திலகன், இன்னசெண்ட், மம்முட்டி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன்,(இப்பொழுது இல்லை) அடூர் பங்கஜம், பிலோமினா (இப்பொழுது இல்லை) கவியூர் பொன்னம்மா, முரளி,(இப்பொழுது இல்லை) சுகுமாரி, மாலா அரவிந்தன், கொச்சின் ஹனிபா, சலீம் குமார், கே.பி.யே.சி லலிதா, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் , ஊர்வசி, வேணு நாகவள்ளி, ஜலஜா, சங்கராடி,(இப்பொழுது இல்லை) சீனிவாசன், ஜெயராம், கார்த்திகா, திக்குருச்சி, ஜனார்த்தனன், முகேஷ், சி.ஏ.பால் என சிறந்த நடிகர்கள் அவர்களிடம் உண்டு.

கரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு.
சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன்.
தேசாடனம் இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம்.
ஒருபாடு படங்கள்.

80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம்.
துல்லியமான middile cinema உருவாகியிருந்தது.
ஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், பிளஸ்ஸி போன்ற நல்ல இயக்குனர்களும்,

எம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.
மரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்கு பரிச்சயமே.
திலகனுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு.
கோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன்.
லோகிதாசை ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.
அவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன்.
பழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு நெருக்கமே.

20 வருட கால மலையாள சினிமாவை பார்ப்பவன் என்ற தகுதியில் சொல்கிறேன்.
அதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்ததையும் சேர்த்துக் கொண்டால் 25 வருடம்.
(கறுப்பு வெள்ளை மலையாள சினிமாவை நான் இதில் சேர்க்கவில்லை.)
நன்றி: M Boopathy Raja அவர்களின் பதிவு.

 சாம்ராஜ்
நன்றி: சாம்ராஜ்,  http://www.kaattchi.blogspot.com/

1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு

இத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை.
மாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள்.
மலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது.
தமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.

வலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள்.
அவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான்.

பொள்ளாச்சி கவுண்டராக
உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார்.
பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு,
மோகன்லால் அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி
“வேண்டாம் மோனே தினேஷா”
என மாரில் ஏறி மிதிப்பார்.

பொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா?
(கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்)

தென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார்.
அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்களிடம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார்.
இப்போது வயதாகி விட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.
மற்றொரு ’தேவரை’ மலையாளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷநாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார்.
மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி kl வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள்.
நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம் போதவில்லை.

கேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது.
அங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள்.
அவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும்
”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள்.
(இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.)
கேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா…..?
சிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது.
கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.)
இதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு.
தமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள்.
கேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள்.
திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு.
இன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள்வாங்கவில்லை.
கேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”.
வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள்.
(ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.) இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது.
தமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா
அவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.

அரசியல், முல்லை பெரியாறு அணை, தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள்.
அவர்கள் கதாநாயகர்களாகநடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது. எம்.ஜி.ஆர்,நம்பியார்,பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன்(முதல் மரியாதை), ரகுமான், கரண், வினித், ஜெயராம், அஜித்,பரத்,நரேன்,அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா
மேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும்.
நடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை.
தமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர்.
தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு.
எம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது.
அவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது.
இதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே.
கமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே.
மீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள்.
இவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும்,
கனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு.
தமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை.

பழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம் படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி.
எனக்குத் தெரிந்து மலையாளப்படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான்.
81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ)
அதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார்.
அதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை.
கமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகனாக விடைபெற்றார்.
அதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை.

ஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த்,படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத்திரையில் தென்படுவதுண்டு.
பெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான்.
பாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள்.

இளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார்.
இளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை.
அவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
அந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள்.
பழசிராஜா படத்திற்கான மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.

அப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள்.
ராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என.

இந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை.
பிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள்.
உதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள்.
பாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே.
ரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்).
அந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே.
இதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.

பூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே.
பாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர்.

பிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே.
அவரும் முடிந்தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார்.
முடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது.
சமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.

ராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை.
மின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர பிறமொழிக் காரர்களும், மலையாளிகளுமே.
கஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம்.
அடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”.
இதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை.
ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது.
சரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…?

ஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர்.
முடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.

சமீபத்தில் நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது.
மம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார்.
முக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது.
சொல்லாதது இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே.
எத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.

அஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள்.
திரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார்.
இன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருப்பவர்.
எனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள்.
தீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.

இதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார்.
என்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா.
இவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது.
வாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே.
விண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக்.
அவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.

சரி கேரளத்துக்குத் திரும்புவோம்.
சேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது.
பாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில்.

”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது.
ஏறக்குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது.
சேர மன்னர்களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே.
அந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’ நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.

இந்தப் பாண்டிகளின் தலைநகரில்தான் மலையாள் நடிக, நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர்.
மோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன்.
மம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது.
ஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது.
ஏ.வி.எம்,லும், பிரசாத்திலும் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலகலமாய் ஓணம் கொண்டாடுகிறது. தமிழர்களோடுதான் ’வாழ்கின்றனர்’.
ஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார்.
ஒரு தமிழ் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார்.
அன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள் என்று.

தமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன.
காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர,
"பாவம் இந்தப் பாண்டிகள்" என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள்.

கேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட செய்ய முடியாது.
திரையரங்கம் சூறையாடப்படும்.
ஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.

தமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம்.
தமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே.
உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள்.
எந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார்.
மூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள்.
வெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.

நல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு.
கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே.
இன்றைக்கும் பேசப்படும் பாத்திரம்தானே அது.
மணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம்,
”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.

தமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு.
அது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம்.
ஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர்’ விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில் ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும்,
’சொப்பன சுந்தரிகளும்’
’அடிமாடு’களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்பான்மை இங்குண்டு.
அந்தப் பாவத்தில் பாதிதான் நமக்கு பங்கு.
(மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள்.
நடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்).
கேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக்கூடியவர்கள்.
வாதிடக்கூடியவர்கள்.
அதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.

கெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு.
”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.

1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது.
(முழுமையான பட்டியல் வெகு நீளமானது)

1. நாடோடிக் காற்று-
மோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்

2. நியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986
3. யுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987
4. இது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983
5. சித்ரம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989
6. நம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990
7. முகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987
8. வந்தனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991
9. மிதுனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
10. விஷ்ணு – மம்முட்டி - - 1993
11. கிலுக்கம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
12. பிங்காமி - மோகன்லால் – சிபிமலயில் – 1997
13. மழவில் காவடி – ஜெயராம் – 1990
14. காவடியாட்டம் – ஜெயராம் – 1990
15. ஐட்டம் –மோகன்லால் - 1985
16. மணிசித்ரதாழ் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994
17. வெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008
18. நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006
19. தாழ்வாரம் – பரதன் – 1987
20. அச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005
21. மிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000
22. காருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998
23. சேக்ஸ்பியர் M.A இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008
24. பிளாக் – மம்முட்டி – 2004
25. கருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006
26. காழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004
27. தன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005
28. பளிங்கு - மம்முட்டி – பிளஸ்ஸி – 2006
29. கல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007
30. பிரம்மரம் - மோகன்லால் – பிளஸ்ஸி – 2009
31. பாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003
32. ஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999
33. நரன் – மோகன்லால் – 2005
34. தென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002
35. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு –       2001
36. ரச தந்திரம் – மோகன்லால், கோபி - சத்யன் அந்திக்காடு – 2005
37. ஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005
38. புலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002
39. மலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003
40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000
41. டிரீம்ஸ் – சுரேஷ் கோபி - 1998
42. மேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000
43. இன்னலே – சுரேஷ் கோபி – 1999
44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006
45. பெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001
46.ஏகேஜி – 2007
47. மேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998
48. பகல் பூரம் – முகேஷ் – 2000
49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992
50. யாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு - 2003
இந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும்.
மலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.
எம் ஜி யார் குறித்த மலையாளிகளின் பெருமிதம் தனியே ஆராய்பட வேண்டியது.
மோகன்லால் எம் ஜி யாரின் திவிர ரசிகராக வாமனபுர பஸ் ரூட் என்ற படத்தில் நடித்தார் .
தமிழுக்கு ஒருபொழுதும் வரமாட்டேன் என்றவர் மருதூர் கோபால ராமச்சந்தர் பாத்திரம் என்றவுடன் "இருவர்” ல் நடிக்க தமிழுக்கு வந்து விட்டார்.

M.G.R ன் விரிவாக்கம் அதுவே..
அவர் ராமசந்திரன் அல்ல ராம்சந்தர் தன்னை தமிழ்படுத்திக் கொள்ளும் விதமாக சந்திரன்.
அப்பொழுது அவர் பூசிய தமிழ் அரிதாரம் 1987ல் மரிக்கும் வரை கலையவே இல்லை இன்னும்.
1972ல் பெரியார் மலையாள எதிர்ப்பு இயக்கம் அறிவித்த போது M.G.R அவரைச் சந்திக்கிறார்.
சந்திப்பின் விளைவு பெரியார் போராட்டத்தைக் கைவிடுகிறார்
…….M.N.நம்பியாரின் முழுப்பெயர் நமக்கு யாருக்காவது தெரியுமா(மஞ்சேரி நாரயண நம்பியார்)
ரகுவரன் இறந்தபொழுது தினத்தந்தி அவரை தமிழர் என்றே குறிப்பிட்டது.
சூர்யா டீவி ரகுவரனின் பாரம்பரிய வீடு இருக்கும் பாலக்காடு காஞ்சரக்காட்டில் கேமிராவோடு காத்திருந்தது.
நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை.
நம் வரலாற்றில் நாம் நிச்சயமாய் அடுத்த தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்தது இல்லை .
மற்றவர்களே நுற்றாண்டுகளாய் நம்மை வஞ்சிக்கின்றனர்.
எல்லோர் கையிலும் நம் ரத்தம் படிந்திருக்கிறது.
சேகுவாரா தேசமே நம்மை வஞ்சிக்கும் பொழுது சேட்டன்களின் தேசத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் நாம்?.
நாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே.

நன்றி: M Boopathy Raja அவர்களின் பதிவு.