Search This Blog

Showing posts with label Leadership. Show all posts
Showing posts with label Leadership. Show all posts

Sunday, April 19, 2020

கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன்

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)
போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...
இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???
அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..
ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...
யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...
வேறு யாருமில்லை..
கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...
வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.
சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...
அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...
""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""
இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...
சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..
நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....
அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...
உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..
அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...
இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...
இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...
இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..
இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...
என்னாவது...???
ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்..
நம் சந்ததிக்கு.... ....
*படித்ததில் பிடித்தது*


வாழ்க எம்ஜியார் புகழ்

1987 டிசம்பர் மாதம் தன் மகள் திருமண உதவி கேட்டு நன்கு அறிமுகம் ஆன கழக தொண்டர் கணபதி என்பவர் தன் மகள் திருமண உதவி கேட்டு தலைவரிடம் அவர் இல்லத்தில் மனு ஒன்றை கொடுக்க.
தலைவர் அதை படித்து பரிசீலித்து அவரை மீண்டும் அழைத்து உன் மகள் திருமணத்தை 1988 ஜனவரி மாதம் பொங்கல் முடிந்து 18 ஆம் தேதி வைத்துக்கொள்...நானே வந்து நடத்தி வைக்கிறேன் என்று சொல்ல...
கணபதியின் கெட்ட நேரம் தலைவர் அந்த மாத இறுதியில் நம்மை விட்டு மறைய கணபதி நொறுங்கி போகிறார் மனதளவில். தலைவர் மறைவு ஒரு புறம் தன் மகள் நிலை குறித்து மறுபுறம்.
அடுத்த சிலநாட்கள் செல்ல முதல்வர் அன்னை ஜானகி எம்ஜியார் அவர்களிடம் இருந்து தொண்டன் கணபதிக்கு அழைப்பு வர.
அங்கே வீட்டுக்கு போன கணபதிக்கு.....நீங்கள் குறித்த படி உங்கள் மகள் திருமணம் ஜனவரி 18 இல் நடக்கட்டும் நான் அல்லது நம் குடும்பத்தில் ஒருவர் வந்து நடத்தி வைக்கிறோம் என்று சொல்ல.
தன் மகன் ராஜ ராஜன் உடன் தோட்டத்துக்கு வந்த கணபதிக்கு நடப்பது கனவா அல்லது நிஜமா என்று புரியாமல் அம்மா நீங்கள் எப்படி வர முடியும் தலைவர் இறந்து நாட்கள் ஆக வில்லையே என்று கேட்க...
அதை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் உங்கள் ஏற்பாடுகள் நடக்கட்டும்.....அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அவர் தன் கைப்பட எழுதிய ப்ரோக்ராம் டைரியில் .
ஜனவரி 1988....18 அன்று கணபதி வீட்டு திருமணம்....அவருக்கு செய்யவேண்டிய உதவிகள் பணம்..பட்டு புடவை..நகைகள் எல்லாம் பற்றியும் எழுதி வைத்து இருக்கிறார்...அதன் படி உங்கள் மகள் திருமணம் நடக்கும் என்று சொல்ல.
அதன் படி அவர் மகள் திருமணம் அருமையாக தலைவர் கொடுத்த சீதனங்கள் உடன் நடந்து முடிந்தது.
அன்னை ஜானகி அம்மா அவர்கள் கலந்து கொள்ள இயலாமல் தலைவர் குடும்பத்தில் ஒருவர் முன் நின்று அந்த திருமணம் நடந்து முடிந்தது.
இருக்கும் போது தொண்டனுக்கு உதவாத அரசியல்வாதிகள் கொட்டி கிடக்கும் இந்த நாட்டில் இறந்தும் அவருக்கு உதவ உயில் போல எழுதி வைத்து விட்டு சென்ற தலைவரை நினைத்து மகிழ்வதா....அதை மறைக்காமல் மறுக்காமல் அந்த சோக சூழலில் கூட அந்த தொண்டனுக்கு உதவிய அன்னை ஜானகி அவர்களை நினைத்து மகிழ்வதா. முடிவை உங்கள் வசமே விட்டு விடும்....
வாழ்க எம்ஜியார் புகழ்
நன்றி...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி

Tuesday, April 14, 2020

டாக்டர்.ஆபிரகாம் கோவூரின் சவால்கள்:

ஏப்ரல் 10, 1898 -ஆபிரகாம் கோவூர் என அழைக்கப்பட்ட பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல பரிமாணங்கள் கொண்ட டாக்டர் கோவூர் பிறந்த நாள்.
ஆழ் மனதில் பதியப்படும் நம்பிக்கைகள் ஒரு மனிதனை அவற்றின் பால் கட்டிப் போட்டு ஆட்டிப் படைக்கவல்லவை!
பேய் பிசாசு பில்லி சூனியம் என சில மனிதர்கள் நம்பும் மூட நம்பிக்கைகளால் அவர்களின் தன்னம்பிக்கை தகர்க்கப்பட பலவீனமான சிந்தனைகளுக்கு மனிதன் அடிமையாகி மடமைச் சிந்தனை, சொல் செயல் வடிவம் கொள்கின்றான்!
எதை நம்புகிறோமோ அதுவாகவே நாம் மாற எம் ஆழ் மனதின் ஆற்றல்கள் காரணமாகின்றன!
இதையே அறிவியலில் வைத்தியர் கோவூர் நிரூபித்தார்.
பலரை மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்டுக் காத்தார்!

இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சபையின் தலைவரான கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார்.
கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்த கோவூர், தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார்.
இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வு பெற்றார்.
கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் அவற்றின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கி இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.

தான் கடவுளின் அவதாரம், அல்லது தெய்வீக ஆற்றல் உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிறுவுவதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.
Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, வெகு காலம் அதன் தலைவராக இருந்தார்.
அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர்.
ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும்.
அவை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக மின்னசோட்டா மெய்யறிவு நிலையம் (இப்போது இந்நிறுவனம் செயல்பாட்டில் இல்லை) கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது -- இத்தகைய பட்டங்களை முதலில் இருந்தே எதிர்த்து வந்த கோவூர், முனைவர் பட்டத்தைத் திருப்பி அனுப்பினார்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்முறைகள் மூலம், அவர்கள் திறமைகளை மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலட்ச சிறீலங்க ரூபாய் பரிசளிக்க அவர் தயாராக இருப்பதாக அறைகூவினார்.
தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். இறுதி வரையில் எவருமே அப்பரிசை வெல்லவில்லை.
டாக்டர்.கோவூரின் சவால்கள்:
முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.
ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.
கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.
நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.
மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.
தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.
பிரார்த்தனை, ஆத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.
யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.
யோக சக்தியால் ஐந்தே மணித்துளி ஐந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.
நீரில் நடந்து காட்டுக.
உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.
யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.
ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே
படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.
நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.
நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.
மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.
பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்து காட்டுக.
மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளைக் கண்டுபிடித்துக் காட்டுக.
வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.
ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.
எனக்கு சாவைக் கண்டு அச்சமில்லை; எனவே, என்னை புதைக்க வேண்டாம்” என்று தன் உயிலில் எழுதி வைத்த கோவூர், தன் கண்களை ஒரு கண் வங்கிக்குத் தானமாக அளித்தார்; தன் உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஆய்வுக்காகவும் தன் எலும்புக்கூடு தற்சுட்டன் கல்லூரியின் அறிவியல் ஆய்வகத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.
கோவூரின் நூல்களிலுள்ள நிகழ்வாய்வு (case study) உண்மை நிகழ்ச்சிகளை பல்வேறு நாடுகளில் பல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன.
அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, 'நம்பிக்கை' என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப் பட்டது.

Saturday, April 4, 2020

ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille 1897 - 1962)

காமத்தையும் காரத்தையும் ஒப்பிட்ட ஃப்ரெஞ்ச் தத்துவ அறிஞர் ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille 1897 - 1962).
சமூகவியல், தத்துவம், பொருளாதாரம், மானுடவியல், இலக்கியம் போன்ற பல துறைகளில் அறிஞராக விளங்கிய ஜார்ஜ் பத்தாயின் (1897 - 1962) முக்கியத்துவம் என்னவென்றால், அவரது சிந்தனை அவரது காலத்தை விட ஒரு நூற்றாண்டு முன்னால் இருந்தது. அதாவது, 2030இல் சொல்ல வேண்டியதை 1930-லேயே சொன்னார் பத்தாய். அதனால்தான் அவரை யாருக்கும் புரியாமல் போய் விட்டது. கருத்துச் சுதந்திரத்தை அதி தீவிரமாகப் பாராட்டக்கூடிய ஃப்ரான்ஸிலேயே ஜார்ஜ் பத்தாய் யாருக்குமே தெரியாத ரகசியப் பெயரில் எழுத வேண்டியிருந்தது. காரணம், அவர் புதினங்கள் ஒழுக்கக் கேடானவையாக (immoral) இருந்தன. 1940களில் எழுதப்பட்ட அவரது புத்தகங்கள் 1990களில்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் பத்தாயை தெரிதா, ஃபூக்கோ, ஜூலியா க்றிஸ்தவா, சூஸன் சொண்டாக் ஆகியோரின் துணை கொண்டு வாசித்தால்... இல்லை, அதெல்லாம் கூட வேண்டாம்; பத்தாயின் புனைகதைகளைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய கட்டுரைகளேதான் திறவுகோல். இவர் காலத்தில் வாழ்ந்த சக ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களையெல்லாம் விட ஏராளமாக எழுதினார் என்றாலும் உயிரோடு இருந்த போது யாரும் இவரை அங்கீகரிக்கவில்லை; சரியாக விவாதிக்கவும் இல்லை.  இவ்வளவுக்கும் உலகிலேயே அதிக அளவில் எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசம் ஃப்ரான்ஸ்.  ஒரு பாப் பாடகரைப் போல் உலகம் முழுவதும் அறியப்பட்ட எக்ஸிஸ்டென்ஷியலிச சூப்பர் ஸ்டாரான ஜான் பால் சார்த்தர் கூட ஜார்ஜ் பத்தாயை மட்டமாகவும் கிண்டலாகவும்தான் குறிப்பிட்டார்.  ”பத்தாய் ஒரு தத்துவவாதி அல்ல; அவர் ஒரு mystic.  இலக்கியம் என்பது மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்”  என்பது சார்த்தரின் நிலைப்பாடு.  இது கிட்டத்தட்ட மார்க்சீயவாதிகளின் நிலையை ஒத்தது.  ஆனால் பத்தாய் இதை ஸ்தாபன ரீதியான சித்தாந்தம் (Status quo) என்று ஒதுக்கித் தள்ளினார்.   சார்த்தருக்கும் பத்தாய்க்கும் நடந்த விவாதங்கள் Excremental Vs Existential என்று பேசப்பட்டது.

எல்லாவற்றையும் விட ஆச்சரியம், பத்தாயுமே தன்னை ஒரு ‘மிஸ்டிக்’ என்றே சொல்லிக் கொண்டார். அவர் எழுத்துகளில் அடிக்கடி ‘உள்ளார்ந்த அனுபவம்’ என்ற வார்த்தை தென்படுகிறது. பாலியல் அனுபவம் அப்படிப்பட்டதுதான் என்பது பத்தாயின் கருத்து. உதாரணமாக, பத்தாயின் மதாம் எத்வார்தா சிறுகதையை எடுத்துக் கொள்வோம். (இதையும் பத்தாய் யாருமே அறியாத ரகசியப் பெயரில்தான் எழுதினார்.) தெரிதா போன்றவர்களின் சிந்தனையில் பெரும் பாதிப்பை நிகழ்த்திய மற்றொரு ஃப்ரெஞ்ச் தத்துவவாதியும், இலக்கியக் கோட்பாட்டாளருமான Maurice Blanchot இந்தக் கதையைப் பற்றி, ’the most beautiful narrative of our time' என்று குறிப்பிடுகிறார். அதில் உள்ளார்ந்த அனுபவமும் பாலியல் அனுபவமும் ஒன்றாக இணையும் ஒரு காட்சியைப் பார்ப்போம்:
She was seated, she held one long leg stuck up in the air, to open her crack yet wider she used her fingers to draw the folds of skin apart . .. 'Why', I stammered in a subdued tone, 'why are you doing that?' 'You can see for yourself ', she said, 'I'm GOD'.

ஜார்ஜ் பத்தாய் அவருடைய காலத்தில் அங்கீகரிக்கப்படாமல் போனதற்குக் காரணம், அவருடைய சிந்தனை, எழுத்து எல்லாமே அப்போது முற்றிலும் புதிதாக இருந்தது. உதாரணமாகச் சொன்னால், அவர் பச்சையான போர்னோ மொழியில் கதைகளை எழுதினார்.  அதற்கு அப்போது போர்னோ எழுத்து என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் கொடுக்கப்படவில்லை.  1928-இல் அவருடைய ”கண்ணின் கதை” என்ற நாவல் Lord Auch என்ற பெயரில் வெளிவந்தது.  பல ஆண்டுகளுக்கு அந்தப் பெயரில் எழுதியது யார் என்றே தெரியாமல் இருந்தது.  Auch என்ற வார்த்தை aux chiottes  என்ற பேச்சு வழக்கின் சுருக்கம்.  கிட்டத்தட்ட அதன் பொருள், நீ கக்கூஸுக்குத்தான் லாயக்கு.  ஆக, Lord Auch என்பதை கக்கூஸ் நாயகன் என்று மொழிபெயர்க்கலாம்.  போர்னோ மொழியில் எழுதப்பட்ட ”கண்ணின் கதை” ஒரு போர்னோ நாவலாகவே கருதப்பட்ட நிலையில் அந்த நாவலைப் பற்றி 1962-இல் ரொலான் பார்த் Metaphor of the Eye என்ற கட்டுரையை பத்தாயின் பத்திரிகையான Critique-இலேயே எழுதினார்.  அந்தக் கட்டுரைதான் முதல் முதலாக ”கண்ணின் கதை” என்பது போர்னோ நாவல் அல்ல; தத்துவார்த்தமாக விரியும் பல அர்த்தத் தளங்களைக் கொண்ட நாவல் என்பதை நிலைநாட்டியது.  அந்தக் கட்டுரையை ரொலான் பார்த் எழுதிய போது ஜார்ஜ் பத்தாய் உயிரோடு இல்லை என்ற முக்கியமான தகவலை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  அது மட்டும் அல்ல; பத்தாயின் மற்றொரு நாவலான My Mother  அவரது மரணத்துக்குப் பிறகே பிரசுரமாயிற்று.  ஈடிபஸ் காம்ப்ளக்ஸை அடிப்படையாகக் கொண்ட, வெளிப்படையான மொழியில் எழுதப்பட்ட நாவல் அது.  பத்தாய் 1935-இல் எழுதி முடித்த Blue Moon என்ற நாவலும் 1957-இல் தான் பிரசுரமாயிற்று.  இந்த நாவல் எப்படி இருக்கும் என்பதை இங்கே நான் விவரிப்பது கூட சாத்தியம் இல்லை.  ஆனால் பத்தாய் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லப்படுவது எப்படியென்றால், 1935-இல் அவர் எழுதியதெல்லாம் 1939-இலிருந்து ஐரோப்பிய நகரங்களில் நிகழத் துவங்கியது.  பாலியலும் மரணமும் ஒன்றுக்குள் ஒன்று சிக்கிக் கொள்ளும் தத்துவார்த்த முரண் பற்றிய நாவல் அது. 
1936-இல் பத்தாய் Acephale என்ற ரகசிய வாசகர் வட்டத்தைத் துவக்கினார்.  வட்டத்தின் சார்பில் அதே பெயரில் ஒரு பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது.  ஆஸிஃபால் என்ற கிரேக்க வார்த்தைக்கு  ”தலையற்ற” என்று பொருள்.   இதன் உறுப்பினர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வட்டம் பற்றிய செய்திகளை வெளியே சொல்லக் கூடாது என்பது முக்கியமான விதி.  ஆஸிஃபால் வாசகர் வட்டம் இரண்டாம் உலகப் போர் (1939)  துவங்கிய போது முடிவுக்கு வந்தது.  1936-39 நான்கு ஆண்டுகளில் ஐந்து இதழ்கள் வெளிவந்தன.  முதல் இதழ் எட்டு பக்கங்களைக் கொண்டிருந்தது.  இந்த வட்டத்தில் பல ரகசியமான விதிகள் கடைப்பிடிக்கப் பட்டன. உதாரணமாக, வட்ட உறுப்பினர்கள் யூத எதிர்ப்பாளர்களோடு பழகக் கூடாது; சந்தித்தால் கூட கை குலுக்கக் கூடாது.  தலையை வெட்டி தண்டனை கொடுப்பது சரியே.  ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது 16-ஆம் லூயியின் தலை வெட்டப்பட்டதை வட்டம் ஆதரித்தது.  அதேபோல் வட்டத்தில் தியான வகுப்புகளும் மற்ற தாந்த்ரீக செயல்முறைகளும் நடத்தப்பட்டன.  
பத்தாயை, அவருடைய பாலியல் எழுத்தை எப்படி மிஸ்டிஸிஸத்துக்குள் அடக்குவது? இரு உடல்களின் சேர்க்கையை அவர் ”ஒருமை” என்கிறார். ஈருடல், ஓருயிர் என்று சொல்வோம் அல்லவா, அதுதான் அவர் சொல்லும் மிஸ்டிக் அனுபவம். இதை அவர் மரணத்தோடு இணைக்கிறார். ஏனென்றால், மரணம்தான் சிருஷ்டியின் விதை. இலக்கியத்தைக் கூட பத்தாய் அப்படித்தான் வரையறுக்கிறார். 
Literature (fiction) took the place of what had formerly been the spiritual life; poetry (the disorder of words) that of real states of trance.
”ஆன்மிகம் இருந்த இடத்தை இலக்கியம் பிடித்துக் கொண்டது; கவிதை என்பது தியானத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டது.”
பத்தாயின் எழுத்தில் இருவித மரணங்கள் நிகழ்கின்றன. ஒன்று, பாத்திரங்களின் மரணம். இரண்டாவது, எழுத்தாளனின் மரணம். ஆம், பத்தாய் தன் ஒவ்வோர் எழுத்திலும் தன்னையே மறுதலித்துக் கொண்டு செல்கிறார். தன்னுடைய கதையாடலைத் தானே கலைத்துப் போடுகிறார். (நான் எழுதுவது புத்தகம் அல்ல; வாசகருக்கு அது ஒரு சவால்: பத்தாய்). தானே தன்னுடைய பிரதியில் இல்லாமல் போகிறார். அர்த்தத்துக்கு எதிரான எழுத்தை உருவாக்குகிறார். இப்படியாக எழுத்தின் அதிகாரத்தை நொறுக்கி விடுகிறார். இது பத்தாய் பற்றிய தெரிதாவின் ஒரு வாசிப்பு.


https://minnambalam.com/
சாரு நிவேதிதா



Thursday, April 2, 2020

தமிழ் சினிமாவின் இலக்கணம் மகேந்திரன்

தமிழ்த் திரையின் உயிர்த் துடிப்பு கொண்ட இயக்குநர் மகேந்திரன் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. சினிமா ஒரு தவம் என்றோ அதற்காகவே காத்துக்கிடந்தவர் என்றோ அவரைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர் சினிமாவுக்கு வந்தது அவரே சொல்லியிருப்பதுபோல் ஒரு விபத்துதான். ஆனால், சினிமாவுக்கு வந்த பின்னர் அவர் படைத்த சினிமாக்களில் சிலதாம் அவரைக் காலாகாலத்துக்கும் சாகாவரம் பெற்றவராக்கியிருக்கின்றன.
https://www.hindutamil.in/
கோதைமலர் பூம்பாதம் வாவென்றதோ....
உங்களுடன் ஓரிருமுறை பேச வாய்த்தது மகேந்திரன் சார், இறுதியாக தொலைபேசியது உங்களின் ஓர் பிறந்த நாளில் . வாழ்த்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது உங்கள் பள்ளிக்கரணை வீட்டிற்கு ‘அவசியம் வாங்க’ என்ற அழைப்போடு உரையாடலை நிறைவு செய்தோம் . இன்று மெட்டி ஒலிக் காற்றோடு கேட்டபடி அசைபோடுகிறேன்.கைஸெ கஹூன் பாடல் பார்க்கவேண்டும் அதில் அந்த பெண்களின் உதடு விலகாத புன்னகை மலர்வதை காண வேண்டும் . ஜானி பார்க்க வேண்டும்.இருவருக்குமான அந்த காதலைச் சொல்லும் தருணத்தில் அப்டித்தான் பேசுவேன் என்ற வசனத்தை மீண்டும் ஒருமுறை கேட்க வேண்டும். . 

உதிரிப்பூக்களில் சினிமாவிற்கு போகலாம் என்று விஜயன் சொன்னதும் அஸ்வினி வெளியே வந்து வானம் பார்க்கும் காட்சியை ரசிக்க வேண்டும் .

முள்ளும் மலரும் அந்த கையிழந்தபிறகு அணைக்க வரும் ஷோபா அழும் போது ஒன்னுமில்லம்மா என்று ரஜினி சொல்லும் காட்சிக்கு நெகிழாமலிருக்க வேண்டும்.

அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா பாடல் இம்முறையாவது ஊர் நினைப்பை தூண்டிவிடாமல் பாதியில் அணைக்காமலிருக்க வேண்டும்.

மெட்டி ஒலிக்காற்றோடு பாடலில் புத்தரின் காதில் பூச்சுட்டி விளையாடும் அந்த இளங்குமரிகளில் இறந்து போன அக்காவின் நினைப்பு மேலெழுந்து விடக்கூடாது. பாலப்பட்டி நதிக்கரையில் எடுக்கப்பட்டதாம் உதிரிப்பூக்கள் இறுதிக் காட்சி ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும் .
பூட்டாத பூட்டுகள் ,நண்டு இரண்டும் என்னுள் நிகழ்த்தியவை குறித்துப் பேச மீண்டும் எங்கே போய் தேவ்ராஜ் அண்ணனைத் தேடுவேன் நான் .ஜானியில் வரும் தோழி சகலத்திற்கும் சாட்சியாய் இருப்பது எப்படி என்று யோசித்துக் கிடந்த நாட்கள் பல உண்டு. உங்கள் படத்தில் வரும் சரத் பாபு, உங்கள் படங்களில் வரும் வெண்ணிற ஆடை ராமமூர்த்திக்கு ஒரு பிரத்யேக முகம் வைத்திருந்தீர்கள் இல்லையா சார் . உங்கள் படங்களில் வரும் தாய் உங்கள் படங்களில் வரும் தங்கைகள் .. எனக்கும் நிஜத்திலும் சற்றுக் கூடக் குறைவான நலன்களுடன் வாய்த்தார்கள் சார். நான் தான் முள்ளும் மலரும் படத்தில் ஜானியாகவும் ஜானி படத்தில் முள்ளும் மலரும் படத்தில் வரும் ஷோபாவின் காதலனாகவும் அசந்தர்ப்பமாக வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருப்தியாக இருக்கிறேன் . ஆமாம் ,பெரிதும் அர்த்தச் சுமையற்ற கணங்களால் ஆன பல நிகழ்வுகள் தான் பின்னாளில் கோர்த்துப் பார்க்கும் போது வாழ்வாக எஞ்சி நிற்கிறது . Piece of Art,Small Act of love யாருக்கோ தூண்டலாக ஒரு கணநேர உந்தமாக மாறும் பொழுதை எந்த மனசால் தீர்மானிக்க முடியும் எந்த கலைஞனால் அறுதியிட முடியும் .உங்கள் கதைகளில் வரும் சம்பவங்கள் யாவும் “ நேர்பவை” திட்டமிடலுக்கெதிரான வாழ்வின் அபத்தங்கள். இயல்புகள் என்று நம்புகிறவை எப்படி வாழ்வோட்டத்தில் திரிந்து போகின்றன என்று பேச முயன்றவை.இந்த உலகம் கேளிக்கைக்காரர்களுக்கானது போல் தோன்றினாலும் மெய்யான கலைதான் எளிய அன்பை நம்பும் மனிதர்களின் சாவை ஒத்தி வைக்கிறது.நானும் சாவை ஒத்தி வைக்கும் சிறு கீற்றை உங்களிடமிருந்து பெற்றிருக்கிறேன் . நன்றி அலெக்ஸாண்டர் சார். உங்களுடைய ராஜ்ஜியத்தில் சூரியனும் நிலவும் உதித்தும் மறைந்தும் உயிர்வளர்ப்பார்கள் .
நேச மித்ரன்

Wednesday, March 18, 2020

Why the ignorant think they’re experts(The Dunning-Kruger effect)

“The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool,” wrote Shakespeare in As You Like It. Little did he know, but this line perfectly encapsulates the spirit of the Dunning-Kruger effect.


The Dunning-Kruger effect is a type of cognitive bias in which people believe that they are smarter and more capable than they really are. Essentially, low ability people do not possess the skills needed to recognize their own incompetence. The combination of poor self-awareness and low cognitive ability leads them to overestimate their own capabilities.

The term lends a scientific name and explanation to a problem that many people immediately recognize—that fools are blind to their own foolishness. As Charles Darwin wrote in his book The Descent of Man, "Ignorance more frequently begets confidence than does knowledge."

An Overview of the Dunning-Kruger Effect
This phenomenon is something you have likely experienced in real life, perhaps around the dinner table at a holiday family gathering. Throughout the course of the meal, a member of your extended family begins spouting off on a topic at length, boldly proclaiming that he is correct and that everyone else's opinion is stupid, uninformed, and just plain wrong. It maybe plainly evident to everyone in the room that this person has no idea what he is talking about, yet he prattles on, blithely oblivious to his own ignorance.

The effect is named after researchers David Dunning and Justin Kruger, the two social psychologists who first described it. In their original study on this psychological phenomenon, they performed a series of four investigations.

People who scored in the lowest percentiles on tests of grammar, humour, and logic also tended to dramatically overestimate how well they had performed (their actual test scores placed them in the 12th percentile, but they estimated that their performance placed them in the 62nd percentile).

The Research
In one experiment, for example, Dunning and Kruger asked their 65 participants to rate how funny different jokes were. Some of the participants were exceptionally poor at determining what other people would find funny—yet these same subjects described themselves as excellent judges of humour.

Incompetent people, the researchers found, are not only poor performers, but they are also unable to accurately assess and recognize the quality of their own work. This is the reason why students who earn failing scores on exams sometimes feel that they deserved a much higher score. They overestimate their own knowledge and ability and are incapable of seeing the poorness of their performance.

Low performers are unable to recognize the skill and competence levels of other people, which is part of the reason why they consistently view themselves as better, more capable, and more knowledgeable than others.

"In many cases, incompetence does not leave people disoriented, perplexed, or cautious," wrote David Dunning in an article for Pacific Standard. "Instead, the incompetent are often blessed with an inappropriate confidence, buoyed by something that feels to them like knowledge."

This effect can have a profound impact on what people believe, the decisions they make, and the actions they take. In one study, Dunning and Ehrlinger found that women performed equally to men on a science quiz, and yet women underestimated their performance because they believed they had less scientific reasoning ability than men. The researchers also found that as a result of this belief, these women were more likely to refuse to enter a science competition.

Dunning and his colleagues have also performed experiments in which they ask respondents if they are familiar with a variety of terms related to subjects including politics, biology, physics, and geography. Along with genuine subject-relevant concepts, they interjected completely made-up terms.

In one such study, approximately 90 per cent of respondents claimed that they had at least some knowledge of the made-up terms. Consistent with other findings related to the Dunning-Kruger effect, the more familiar participants claimed that they were with a topic, the more likely they were to also claim they were familiar with the meaningless terms. As Dunning has suggested, the very trouble with ignorance is that it can feel just like expertise.

Causes of the Dunning-Kruger Effect
So what explains this psychological effect? Are some people simply too dense, to be blunt, to know how dim-witted they are? Dunning and Kruger suggests that this phenomenon stems from what they refer to as a "dual burden." People are not only incompetent; their incompetence robs them of the mental ability to realize just how inept they are.

Incompetent people tend to:

Overestimate their own skill levels
Fail to recognize the genuine skill and expertise of other people
Fail to recognize their own mistakes and lack of skill
Dunning has pointed out that the very knowledge and skills necessary to be good at a task are the exact same qualities that a person needs to recognize that they are not good at that task. So if a person lacks those abilities, they remain not only bad at that task but ignorant to their own inability.

An Inability to Recognize Lack of Skill and Mistakes
Dunning suggests that deficits in skill and expertise create a two-pronged problem. First, these deficits cause people to perform poorly in the domain in which they are incompetent. Secondly, their erroneous and deficient knowledge makes them unable to recognize their mistakes.
The Dunning-Kruger effect is as follows: "People with low skill levels draw wrong conclusions and make wrong decisions, but are unable to make mistakes because of their low skill levels".

This means: a lack of understanding of mistakes made leads to a belief in one's own correctness and, consequently, to increased confidence in one's own decisions and in oneself, as well as to an awareness of one's own superiority.

Thus, the Dunning-Kruger effect is a psychological paradox that we all often face in life: less competent people see themselves as professionals, while more competent people tend to doubt themselves and their abilities. The lower the skill level, the higher the self-confidence.
At beginning of their research, Dunning and Kruger called Charles Darwin's famous statement:
"Ignorance breeds confidence more often than knowledge" and Bertrand Russell: "It is one of the unfortunate things of our time that those who are confident are stupid, and those who have imagination or understanding are full of doubt and indecision

A Lack of Metacognition
The Dunning-Kruger effect is also related to difficulties with metacognition, or the ability to step back and look at one's own behaviour and abilities from outside of oneself. People can often only evaluate themselves from their own limited and highly subjective point of view. From this limited perspective, they seem highly skilled, knowledgeable, and superior to others. Because of this, people sometimes struggle to have a more realistic view of their abilities.

A Little Knowledge Can Lead to Overconfidence

Another contributing factor is that sometimes a tiny bit of knowledge on a subject can lead people to mistakenly believe that they know everything about it. As the old saying goes, a little bit of knowledge can be a dangerous thing. A person might have the slimmest bit of awareness about a subject, yet thanks to the Dunning-Kruger effect, believe that he or she is an expert.

Other factors that can contribute to the effect include our use of heuristics, mental shortcuts that allow us to make decisions quickly, and our tendency to seek out patterns even where none exist. Our minds are primed to try to make sense of the disparate array of information we deal with on a daily basis. As we try to cut through the confusion and interpret our own abilities and performance within our individual worlds, it is perhaps not surprising that we sometimes fail so completely to accurately judge how well we do.

Who Is Affected by the Dunning-Kruger Effect?
So who is affected by the Dunning-Kruger effect? Unfortunately, we all are. This is because no matter how informed or experienced we are, everyone has areas in which they are uninformed and incompetent. You might be smart and skilled in many areas, but no one is an expert at everything.

The reality is that everyone is susceptible to this phenomenon, and most of us experience it with surprising regularity. People who are genuine experts in one area may mistakenly believe that their intelligence and knowledge carry over into other areas in which they are less familiar. A brilliant scientist, for example, might be a very poor writer. For scientists to recognise their lack of skill, they need to possess a good working knowledge of things such as grammar and composition. Because those are lacking, the scientist in this example cannot also recognize their own poor performance.

The Dunning-Kruger effect is not synonymous with low IQ. As awareness of the term has increased, its misapplication as a synonym for "stupid" has also grown. It is, after all, easy to judge others and believe that such things simply do not apply to you.

So if the incompetent tend to think they are experts, what do genuine experts think of their own abilities? Dunning and Kruger found that those at the high end of the competence spectrum held more realistic views of their knowledge and capabilities. However, these experts tended to underestimate their abilities relative to how others did.

Essentially, these top-scoring individuals know that they are better than the average, but they are not convinced of how superior their performance is compared to others. The problem, in this case, is not that experts don't know how well-informed they are; they tend to believe that everyone else is also knowledgeable.

Is There Any Way to Overcome the Dunning-Kruger Effect?
So is there anything that can minimize this phenomenon? Is there a point at which the incompetent actually recognize their own ineptitude? "We are all engines of misbelief," Dunning has suggested. While we are all prone to experiencing the Dunning-Kruger effect, learning more about how the mind works and the mistakes we are all susceptible to might be one step toward correcting such patterns.

Dunning and Kruger suggest that as experience with a subject increases, confidence typically declines to more realistic levels. As people learn more about the topic of interest, they recognise their lack of knowledge and ability. Then as people gain more information and become experts on a topic, their confidence levels begin to improve again.

So what can you do to gain a more realistic assessment of your abilities in a particular area if you are not sure you can trust your self-assessment?

Keep learning and practising. Instead of assuming you know all there is to know about a subject, keep digging deeper. Once you gain greater knowledge of a topic, you will more likely recognize how much there is still to learn. This can combat the tendency to assume you’re an expert, even if you're not.
Ask other people how you're doing. Another effective strategy involves asking others for constructive criticism. While it can sometimes be difficult to hear, such feedback can provide valuable insights into how others perceive your abilities.
Question what you know. Even as you learn more and get feedback, it can be easy to only pay attention to things that confirm what you think you already know. This is another type of psychological bias known as confirmation bias. To minimize this tendency, keep challenging your beliefs and expectations. Seek out information that challenges your ideas.

அவமானங்கள்தான் வாழ்க்கையின் ஆசான்

அவமானங்கள்தான் வாழ்க்கையின் ஆசான். அவமானம் கத்துக்கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கத்துக்கொடுக்காது.அவமானங்களைத் தன்மானத்தோடு எதிர்கொள்வதே வெகுமானம்தான் .


அவமானங்களே ஒரு மனிதனை வெற்றியின் அரியாசனத்தில் அமர்த்தும். அவமானம் என்பது ஒரு மனிதனுக்கு தூண்டுகோள்தான். 
மனிதனின் மனம் அவமானங்களை கண்டால் முதலில் துவண்டாலும், வைராக்கியம் மனதில் உருவாகும். 
அதுவே முயற்சியில் வேகத்தை கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்.
ஒருவனது அவமானங்கள்தான் அவனை கடினமாக உழைக்க வைக்கிறது. 
ஒருவனது அவமானங்கள்தான் கடுமையாய் முன்னேற வேண்டும் என்கின்ற வெறியை தூண்டுகிறது. 
ஒருவனது அவமானம்தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம் கூட இல்லாமல் யாரும் உயர்ந்துவிட முடியாது.
அவமானப் படுத்துகிறவர்களை நாம் அவமானப்படுத்தினாலோ அல்லது அவர்கள்மீது ஆத்திரமடைந்தாலோ அவமானப்பட்டதாகக் காட்டிக் கொண்டாலோ அவமானப்படுத்தியவனைப் பொருட்படுத்தியதாகிவிடும். அதற்காகத்தானே அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்களை நாம் உதாசீனப்படுத்துவது தான் நல்லது. நாம் ஆத்திரமடையும்போது உள்ளத்தளவு மட்டுமல்ல உடலளவும் பாதிக்கப்படுகிறோம்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஆப்ரகாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் பேச எழுகிறார். அப்போது உறுப்பினர் ஒருவர் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக எழுந்து “நான் அணிந்திருக்கும் செருப்பை உங்களுடைய தந்தையார் தான் தைத்துத் தந்தார்; நன்றாக இருக்கிறது. அதற்கு நன்றி” என்றதும் தன்னை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் என்று இழிவுபடுத்தியதாகக் கருதி ஆத்திரப்படாமல் “மகிழ்ச்சி. அந்த செருப்பில் ஏதாவது பழுது ஏற்பட்டால் கொண்டு வாருங்கள்… நான் திருத்தித் தைத்துத் தருகிறேன். எனக்கும் செருப்புத் தைக்கும் தொழில் தெரியும்” என்று கூறினாராம். சராசரி மனிதர்கள் சினந்து சிவப்பார்கள். சரித்திரம் படைப்போர் எதற்கும் சலனப்பட மாட்டார்கள்.அவமானப் படுகிறவர்கள்தான் அதிகமாக வெற்றியாளர்கள் ஆகிறார்கள். அவமானங்களை உடைத்தெறிய வேண்டுமொனால் அவமானப்படுத்தியவனிடம் மோதிக் கொண்டிருப்பதைவிடத் தாம் பெறுகிற வெற்றிகளால் அவர்களை வெட்கித் தலைகுனியச் செய்யவேண்டும். சார்லி சாப்ளின் படாத அவமானங்களா? அவரது தோற்றம் கேலிக்குரியதாக இருந்திருக்கிறது அவரது வறுமை அவரை அவமானப் படுத்தியிருக்கிறது. அவற்றை உடைத்தெறிந்து உயர்ந்தார்.சிவாஜிகணேசன் வானொலி குரல் தேர்வுக்குச் சென்றபோது தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் பின்னாளில் அவர் 'சிம்மக்குரலோன்'. அதுபோல அமிதாப்பச்சன் நடிக்கவந்த நேரம் நிராகரிக்கப்பட்டவர். பின்னாளில் அவர் சூப்பர் ஸ்டார்.

மறக்கக்கூடாது

அவமதித்தவர்களை மறந்துவிட வேண்டும். ஆனால் அவமானங்களை மறக்கக்கூடாது. அதை அடுத்தடுத்த தளங்களுக்கான வெற்றிப் பயணத்தின் பாதையாக்கிக் கொள்ளவேண்டும்.வந்தனா சைனி என்ற சிந்தனையாளர் “அவமானங்களை மறவாதீர் உங்கள் வெற்றிக்கான விதைகள் அவற்றில் உள்ளன” என்பார்.அவமானங்களில் வெற்றிக்கான விதைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். அதற்காக வெற்றிபெற வேண்டுமானால் அவமானப்பட வேண்டும் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. “நான் வெற்றியாளனாக வேண்டும். தயவு செய்து யாராவது வந்து கொஞ்சம் அவமானப்படுத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது. அவமானங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் நம் அறிவுரையே தவிர அவமானங்களைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்பது அல்ல.
தாங்கி கொள்ளுங்கள்

அவமானத்தைத் தாங்கிக் கொள்வதோடு நின்றுவிட வேண்டும். அதற்காகப் பழிவாங்கும் எண்ணம் வளர்த்துக் கொள்வது நல்லதல்ல. நேரம் வரும் வரைக் காத்திருந்து அவமானப்படுத்தியவரை அவமானப்படுத்த நினைப்பது கேவலமானது. அதுவரை அந்தக் குப்பையை மனத்தில் வைத்துக்கொள்வதும் தீதானது.நாம் அவமானப் படுத்தப்பட்டபோது எப்படி உணர்ந்தோமோ அப்படித்தானே நம்மால் அவமானப் படுத்தப்பட்டவர்களும் உணர்வார்கள் என எண்ணவேண்டும்.ஆறுதல் பெறுவற்காகவோ ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதற்காகவோ நமக்கு நேர்ந்த அவமானத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது கூடாது. அப்படிச் செய்வதின் மூலம் நமது அவமானத்திற்குப் பிரமாதமான விளம்பரத்தை நாமே தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதோடு, மீண்டும் நம்மை நாமே அவமானம் செய்து கொள்கிறோம். அவமானங்களை மறந்துவிடுவதோடு, அவமதிப்பவர்களை மன்னித்து விடுங்கள்.அவமானங்களைத் தவிர்த்துக் கொண்டும் தாங்கிக் கொண்டும் அடுத்தடுத்த வெற்றிப் பயணங்களுக்கு ஆயத்தமாகுங்கள். அவமானம் உங்களுக்கு ஒரு வெகுமானமாகும்.- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்எழுத்தாளர், சென்னை94441 07879
Thanks https://www.dinamalar.com/

Monday, February 10, 2020

முல்லை யேசுதாசன் (சாமி) எழுத்தாளரும் திரைப்பட நடிகரும்

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மறைந்து விட்டார். அதிர்ச்சியளிக்கும் சேதியிது. எந்த நிலையிலும் சோராத மனிதர். பொருளாதார நெருக்கடி, இராணுவ நெருக்கடி, குடும்பச் சூழலின் நெருக்கடி என தொடர் நெருக்கடிகளால் எப்போதும் சுற்றி வளைக்கப்பட்ட வாழ்க்கை முல்லை யேசுதாசனுடையது. ஆனாலும் அவர் எதற்கும் துவண்டு போனதில்லை. எந்தச் சுமையையும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. எப்போதும் கலகலப்பையே எல்லாவற்றுக்குமான ஆயுதமாக வைத்திருந்தார் யேசு. இதனால் எல்லோரையும் சமனிலையில் நோக்கிப் பழகிய பிறவியாக இருந்தார். வஞ்சகம், சூது அறியாத மனிசர் என்று சொல்வார்களல்லவா.. அது அப்படியே சாமிக்குப் பொருந்தும். ஊர்ச்சனங்கள் தொடக்கம் போராளிகள் வரையில் “சாமி“ என்றும் “சாமி அண்ணை” என்றுட“ அன்பாக அழைத்துக் கொண்டாடியவரை இனி நாம் காணவே முடியாது.

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வந்த யேசுதாசன் 1980 களில் ஈரோஸ் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். அந்த நாட்களிலேயே வாசிப்பில் சாமிக்கு மிகுந்த ஆர்வம். பின்னர் சில ஆண்டுகாலம் யேசுதாசன் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கே வாழந்தார். ஆனாலும் அந்த வாழ்க்கை அவருக்குத் தோதுப்படவில்லை. அங்கிருந்து திரும்பி முல்லைத்தீவுக்கே வந்தார். ஆனால், முல்லைத்தீவு அவரை வரவேற்கும் நிலையில் இருக்கவில்லை. அது இராணுவத்திடம் பறிபோயிருந்தது. அல்லது இராணுவப் பிடியிலிருந்தது. இதனால் யேசுதாசனின் குடும்பம் இடம்பெயர்ந்து வேறு இடத்திலிருந்தது.
இந்தக் காலப்பகுதியில் அவர் சுயதொழிலில் ஈடுபட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் திரைப்பட முயற்சிகளில் ஆர்வத்தோடு இயங்கத் தொடங்கினார். அநேகமாக இது 1990 க்குப் பிறகு. அப்பொழுது மட்டக்களப்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வந்திருந்த கணேஸ் மாமா என்ற திரைக்கலைஞருடன் ஏற்பட்ட உறவின் விளைவாக கணேஸ் மாமாவின் தம்பியார் பொ. தாசனுடன் யேசுதாசனுக்கு அறிமுகம் உண்டானது. இதன் பயனாக பொ.தாசனின் படங்களில் வேலை செய்யத் தொடங்கினார் யேசுதாசன்.
விளைவாக விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழகத்துடனும் திரைத்துறையோடும் நிதர்சனத்துடனும் யேசுதாசனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. பிறகு நிதர்சனத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் ஒருவராகினார். அப்பொழுது ஏனைய இயக்குநர்களான ஞானரதன், ந. கேசவராஜன் போன்றோருடனும் பின்பு இளைய இயக்குநர்கள், போராளிக் கலைஞர்கள் போன்றோரோடும் யேசுதாசன் இணைந்து செயற்பட்டார்.
இந்தக் காலகட்டத்தில் ஏராளமான குறும்படங்கள், முழு நீளப்படங்கள் போன்றவற்றில் முல்லை யேசுதாசன் நடித்தும் பிற பங்களிப்புகளைச் செய்தும் வந்தார். 10 க்கு மேற்பட்ட குறும்படங்களைத் தனியாகவே இயக்கினார் யேசு. உதிரிப்பூக்கள் மகேந்திரன். ஜான் போன்ற இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். முக்கியமாக ஆணிவேர், 1996 போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவர்களுடைய நெறிப்படுத்தலில் நடித்தவர் யேசு. திரைக்கதை உருவாக்கத்திலும் சேர்ந்தியங்கினார்.
யேசுதாசன் எழுத்தாளரும் கூட. ஏராளம் கதைகளை எழுதியிருக்கிறார். யேசுதாசனின் சிறுகதைகள் நீலமாகி வரும் கடல் என்ற தலைப்பில் ஒரு தொகுதியாக வெளியாகியுள்ளன. யேசுதாசனுக்குப் பெரும் உதவியாகவும் தூண்டலாகவும் இருந்தவர் சேரலாதன். நிதர்சனம், திரைப்பட உருவாக்கப்பிரிவுப் பொறுப்பாளராக சேரலாதன் இருந்த காலத்திலும் சரி, கலை பண்பாட்டுக்கழகத்தின் துணைப்பொறுப்பாளராக இருந்த போதும் சரி யேசுதாசனுக்கும் சேரலாதனுக்குமிடையில் ஆழமான அன்பும் நெருக்கமுமிருந்தது. இதன் விளைவாக யேசுதாசன் பல படங்களில் பங்களிக்க வாய்த்தது. யேசுதாசனின் சிறுகதைகளை நூலாக்குவதற்கான முயற்சியையும் சேரலாதனே எடுத்திருந்தார். நான் அதை வெளியிட்டிருந்தேன். இது விடியல் பதிப்பகத்தின் மூலமாக தமிழகத்தில் இரண்டாவது பதிப்பைக் கண்டுள்ளது. அதையும் தமிழகத்திலிருந்து கொண்டு வந்து யேசுதாசனின் கைகளில் கொடுத்திருந்தேன். பின்னாளில் எழுதிய கதைகளைச் சேர்த்து ஒரு தொகுதியாக்கலாம் என்று பேசியிருந்தோம். பேசிய காலத்தில் அதைச் செய்திருக்கலாம். யார் கண்டது, இப்படி இவ்வளவு விரைவாக யேசுதாசன் நம்மிடமிருந்து விடைபெறுவார். தனனுடைய இயக்கத்தை நிறுத்திக் கொள்வார் என்று.
சுனிமிப் பேரலை, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம், போர்க்கள வாழ்க்கை, அபாயமான படப்பிடிப்புச் சூழல் என மிகமிகச் சவாலான இடங்களிலும் காலங்களிலும் வாழ்ந்து வென்ற யேசுதாசன் மிகச் சாதாரண மாரடைப்பிற்குத் தோற்று விட்டார். யாருமே இப்படியொரு சாவு வந்து சாமியை அழைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தளவுக்கு மிகமிகத் துடிப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் யேசு. இறப்பதற்கு முதல் நாள் கூட பதுளைக்குப் போய் தொலைக்காட்சித் தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்பைச் செய்து விடடே வந்திருந்தார். பஞ்சி அலுப்பு, நோய் நொடி என்று சோர்ந்ததில்லை இந்த யேசுபிரான்.
படகு திருத்துநர் (கடற் கலங்களைச் செம்மை பார்க்கும்) தொழிலைச் செய்து வந்தாலும் சாமியின் அடையாளம் எப்போதும் ஒரு கலைஞர் என்பதுவாகவே இருந்தது. அதுவே அவரை மிகப் பெரிய பரப்பில் அறிமுகப்படுத்தியது. அதுவே எல்லோராலும் சாமியை நினைவு கூர வைக்கிறது.
இறுதி யுத்தத்தின்போது அவருக்கு வலது கரமாக இருந்த அவருடைய புதல்வன் ஜூயினை இழந்த போதும் தளராமல் தாக்குப் பிடித்துக் கொண்டு இயங்கிய சாமி இப்போது நிரந்தர ஓய்வில் வீழ்ந்து விட்டார் என்பது எவ்வளவு கொடுமையானது.
எனக்கு சாமியின் அடையாளங்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்ததொரு கடலோடியாக அவர் இருந்ததும் எழுதியதுமே முதன்மையாகத் தெரிகிறது. சாமியின் அடையாளப் பரப்பு பெரியது. ஒன்றென்று வரையறுக்க முடியாதது. ப்ரியம் முதலாவது. நெருக்கம் இரண்டாவது. விசுவாசம் மூன்றாவது. சோர்வினமை நான்காவது. எளிமை ஐந்தாவது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இதனால்தான் சாமி எல்லோராலும் நேசிக்கப்பட்டார். கொண்டாடப்படுகிறார்.
யுத்தத்திற்குப் பிறகு சில காலம் மறுபடியும் படகு திருத்தும் வேலைகளைச் செய்து வந்த யேசுவை காலம் புதிய திசையில் நகர்த்தியது. யாழ்ப்பாணத்தில் இயங்கிய தொலைக்காட்சிகள் சாமியை வரவேற்றன. இதனால் தொலைக்காட்சிகளில் வேலை செய்யத் தொடங்கினார். இறுதியில் Capital தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

யேசுதாசனை அறிந்தவர்கள் ஏராம்பேர். அத்தனை பேருக்கும் இது பேரிழப்பு. பெருந்துயர்.
யேசுதாசனுக்கு அஞ்சலிகள்.

Karunakaran Sivarasa