Search This Blog

Showing posts with label HISTORY. Show all posts
Showing posts with label HISTORY. Show all posts

Wednesday, June 9, 2021

திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புதம் (ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு)








முருகப் பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். மூல மூர்த்தி செந்தில் வேலவன் எனும் திருநாமம் கொண்டு அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். அளவிட முடியாத தெய்வ சானித்தியம் நிறைந்த இத்தலத்தை எண்ணற்ற அருளாளர்கள் பல்வேறு காலகட்டத்தில் போற்றிப் பரவி வந்துள்ளனர்.
1649 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் படையினர் செந்தூர் திருக்கோயிலைக் கைப்பற்றினர். அச்சமயம் மதுரையைத் தலைநகராகக் கொண்டு அப்பகுதியை ஆண்டு வந்தவர் திருமலை நாயக்கர் எனும் மன்னர். செந்தூர் வடிவேலனிடம் அபரிமிதமான பக்தி கொண்டிருந்த இவர் பெரும் படையுடன் சென்று டச்சுப் படையினரைப் எதிர்த்தார். எனினும் அம்முயற்சி கைகூடவில்லை.
திருக்கோயில் நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், ஷண்முகர் - நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் (தங்க விக்கிரகங்கள் எனக் கருதி) எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். செல்லும் வழியில் உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் மிகக் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் கதறிப் பதறிச் செய்வதறியாது திகைத்தனர். உற்சவ மூர்த்தங்களை உருக்க முனைந்ததாலேயே இந்த இக்கட்டான சூழல் உருவானது என்று ஏக மனதாக முடிவெடுத்து, அவற்றினை அக்கணமே கடலில் சேர்ப்பித்து விட்டனர்.
என்ன வியப்பு! சில கணங்களிலேயே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது. டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இவ்வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. செந்தூர் இறைவனான வள்ளி மணாளனின் திருவுளக் குறிப்பை யாரே அறியவல்லார்! அப்பெருமானின் அனுமதி இன்றி அணுவும் அசையக் கூடுமோ!
இந்நிகழ்வு நடந்தேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், செந்தூர் திருக்கோயிலில் உற்சவ மூர்த்திகளைச் செய்விக்கும் பணி மீண்டும் தொடங்கப் பெற்றது. அச்சமயம் வடமலையப்பர் எனும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றியருளினார்; உற்சவ மூர்த்திகள் கடலில் புதையுண்டு இருக்கும் இடத்தைத் தெரிவித்தருளி, அடையாளமாக எலுமிச்சை மிதக்குமென்றும், வானில் கருடப் பறவை தோன்றுமென்றும் அருளிச் செய்தார்.
திருவருளின் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர் கடலில் மூர்த்திகளைத் தேடும் பணியைத் துவக்கினார். குறிப்பிட்ட இடத்தில் குமரக் கடவுளின் திருக்குறிப்பின் படி, நீரில் எலுமிச்சை மிதக்கவும், வானில் கருடப் பறவை தோன்றவும் கண்டு பெருமகிழ்வு எய்தினார். அவ்விடத்தில் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று உற்சவ மூர்த்திகளை வெளிக் கொணர்ந்தனர்.
செந்தூர் வாழ் மக்கள் ஸ்ரீஷண்முகப் பெருமானையும், ஸ்ரீநடராஜ மூர்த்தியையும் திருக்கோயிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்வித்து மகிழ்ந்தனர். தங்கள் வாழ்வோடும் ஆன்மாவோடும் கலந்து விட்ட ஸ்ரீஷண்முகக் கடவுளைப் போற்றித் துதித்துப் பிறவிப் பயன் எய்தினர்.

Tiruchendur Murugan Temple

Sunday, May 16, 2021

 




The Bhand Deval Jain temple is built in the north of the eleventh century. The temple is in the Mahakoshal area of Arang. The temple is built in Bhumija architecture. The bottom of this temple has detailed ornaments. It has a sole that supports a pedestal on the wall and two rows of statues. The temple layout plan is a star-shaped one known as the stalette. The temple grows up to five floors, considered an unusual feature. The temple's face is on the west side. The temple is in harsh condition. In the past, a pavilion and a porch probably existed as part of the temple. The damaged front of the temple tower has been plastered without any decoration and also white. The northeast and southeast faces of the Temple Tower, all that were diluted, have been repainted in brick and mortar, but seriously. However, the overall view of the tower is still pleasant. Once upon a time, this temple was used as a survey marking station. As there was a tendency for the upper half of the tower to structurally explode by its borders, a metal strap bracing has been wounded around the tower in the middle section to give it stability. The top of the tower has a similar strap wound round. A large number of paintings have been engraved on the exterior and interior faces of the temple. The bigger images are engraved in two lines. Above the lines of bigger images, a line of carving small images is drawn. Inscription panels, flowers, and a line of highly decorated depictions of a royal march of horses, animals and people based on large images. The exterior faces of the temple are decorated with carved paintings.

Thanks, Indian Contents

Saturday, May 15, 2021

பூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து பழமையான சிவாலயம்



 தயவுசெய்து அனைத்து சைவர்களும், பகிருங்கள் பாதுகாக்க படவேண்டிய நமது அடையாளங்கள்!

பூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து பழமையான சிவாலயம். இன்று அழியும் தருவாயில் உள்ளது தயவு செய்து பொறுப்புள்ள பெரியவர்கள் இந்து கலாச்சார அமைச்சினை சேர்ந்தவர்கள் தயவு செய்து எமது வரலாற்று சின்னங்களை அழியாது பாதுகாத்து எமது வருங்கால சந்ததியிடம் ஒப்படையுங்கள்!

Wednesday, April 21, 2021

The theater at Petra archaeological site

Petra: the ancient city carved out of red sandstone rocks‌ in Jordan. Stunning architecture in a dramatic natural setting, combining Hellenistic elements with traditional Nabataean rock-hewn tombs and temples. Rich history spanning from prehistoric times to 12th century, and then disappearing from people's memory until it was rediscovered in the 19th century. UNESCO World Heritage Site and one of the New 7 Wonders of the World.

பெட்ரா என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது. Wikipedia

Monday, December 14, 2020

Indus Valley Civilization and consumption of milk, meat of animals

The Indus Valley Civilization (IVC) was a Bronze Age civilization in the northwestern regions of South Asia, lasting from 3300 BCE to 1300 BCE, and in its mature form from 2600 BCE to 1900 BCE.


 "An analysis of ceramic lipid residues from rural and urban sites of the Indus Civilization in northwest India provides chemical evidence for milk, meat of animals like pigs, cattle, buffalo, sheep and goat, and possible mixtures of products and/or plant consumption."


The people of the Indus Valley Civilization in northwest India were predominantly meat eaters, a study has revealed.
They consumed the meat of pigs, cattle, buffalo and sheep, along with dairy products, said the study published in Journal of Archaeological Science.
“High proportions of cattle bones were also found, which may suggest a “cultural preference for beef consumption” across Indus populations, the study, titled, Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India, said.
The research offers insights into the food patterns of ancient South Asia by using lipid residue analysis to investigate the kinds of food items that were used in ceramic vessels by people of the Indus Valley Civilisation settlements in northwest India. The region of study now lies in Haryana and Uttar Pradesh.
It was led by Akshyeta Suryanarayan as part of her PhD at the University of Cambridge.

Tuesday, November 10, 2020

African warrior women


Portrait of the most famous African warrior women, The Dahomey Amazon Warriors circa 1890's. They remain the only documented frontline female troops in modern warfare history. A sub-saharan band of female terminators who left their European colonisers shaking in their boots.

Wednesday, November 4, 2020

பாண்டியப் பேரரசில் நகர வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள்


கி.மு 580-ம் ஆண்டில் பயன்படுத்திய சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவுநீர்போக்கி"பைப் லைன்"(Pipe line)! மற்றும்இரண்டடுக்கு கழிவு போக்கி!! ஒன்று மூடி வைக்கப்பட்டுள்ளது!!! மற்றொன்று திறந்த வடிகால்.....மேலும்,விரிவான படங்கள் கீழடியில் இருந்து கிடைப் பெற்றுள்ளன!!!!
உலகில், இன்றைய கால கட்டத்தில் கூட சிறந்த கழிவு நீர் போக்கிகளை அமைத்து செயல்படுத்தமுடியாமல் இருக்கும் சூழ்நிலையில்,மனிதன் நாடோடியாக திரிந்த காலத்தில் 2,600 வருடங்களுக்கு முன்னால் அறிவியலையும் மிஞ்சும் திட்டமிட்ட நகர அமைப்பு வாழ்க்கை முறையை என்னவென்று சொல்வது....
இன்று,உலகமே கீழடியில் தமிழர்களி்ன் நகர வாழக்கை அமைப்பை பார்த்து வியந்து அதிசயித்து நிற்கிறது....
கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ?






**
1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.
2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன.
3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம். கடைச்சங்கத்தின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கே பலர் பல்வேறு குறுக்கு வழக்குகளோடு வருவர். சான்றெங்கே, ஆதாரம் எங்கே என்று நிற்பர். இப்போது கிமு ஆறாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் தெளிந்த சான்றுகளாகிவிட்டன.
4. ஆதன், சாத்தன் ஆகிய பெயர்கள் நம் இலக்கண உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன.
ஆதனின் தந்தை ஆந்தை எனப்படுவார். சாத்தனின் தந்தை சாத்தந்தை எனப்படுவார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தையே பிசிர் ஆந்தையார் எனப்பட்டார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் யாராயினும் ஆதன் என்ற பெயர் வைக்கும் பழக்கம் தொல் தமிழரிடையே பரந்திருந்தது என்பது வெள்ளிடைமலை. ஆதன் என்பதற்கு உயிர் என்று பொருள். உயிரன்.
5. ஒடிய மாநிலம் புவனேசுவரம் உதயகிரிக் குகைகளின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ள காரவேலனின் கல்வெட்டு பதின்மூன்று நூற்றாண்டுகளாய் நிலவிய சேர சோழ பாண்டியர்களின் கூட்டாட்சி வலிமையைக் கூறுகிறது. “தமிர தேக சங்காத்தம்” என்பது அக்கல்வெட்டினில் உள்ள தொடர். ஒடிய மன்னன் காரவேலன் அசோகருக்குப் பிறகு அப்பகுதியினை ஆண்டவன். கிமு இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். “அக்கல்வெட்டினில் இருப்பது பதின்மூன்று நூற்றாண்டுகள் இல்லை, வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கவேண்டும்” என்ற வழக்கும் ஓடியது. கீழடியில் பெருந்தமிழர் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கும் நிலைமையைக் காண்கையில் காரவேலன் கல்வெட்டு கூறுவது பதின்மூன்று நூற்றாண்டுகளாகவே இருக்க வேண்டும்.
6. வைகை ஆறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பேராறாக நிறைந்து ஓடியிருக்க வேண்டும். அதன் கரைவெளி எங்கும் பாண்டியப் பேரரசில் பெருவாழ்வு வாழ்ந்த குடிகளின் தடயங்களைக் கண்டெடுத்திருக்கிறோம்.
7. எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமுறை நிலவியிருக்க வேண்டும். மொழித்தோற்றத்தின் இளமைக் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும். அனைத்தையும் கொண்டு கூட்டிப் பார்க்கையில் தமிழ் மொழியின் தொன்மையைப் பகரும் சான்றுகள் பல பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியவை என்பது தெளிவாக நம் கண்ணுக்கே தெரிகிறது.
8. கீழடியில் தங்க அணிகள் கிடைத்திருக்கின்றன. தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட மணிகள் கிடைத்திருக்கின்றன. மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்தல் என்னும் தொழில்நுட்பம் சிறப்படைந்திருக்கிறது. இருப்புப் பொருள்களும் பல்வேறு மாழைப் பொருள்களும் (உலோகம்) பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. தனிப்பான்மையான குடிவாழ்வின் தன்னிகரற்ற வரலாற்று வளர்ச்சி நிலைகள் இவை.
9. இன்றைய நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றினைப் பார்ப்பது தவறு. சாதிகள், பழக்கவழக்கங்கள், என இன்று நாம் பற்றிப் பழகியிருக்கும் சிறு கண்களைக்கொண்டு பழைமையில் தேடுவது நன்றன்று. ஒற்றை நிலையில் ஒரு நிலத்தின் வரலாறும் அமையாது. காலப்போக்கில் அது பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நம் வரலாறெங்கும் அவ்வாறே நிகழ்ந்தது.
எது எப்படியாயினும் அன்றைக்கும் இன்றைக்கும் இக்குடிவாழ்வின் பற்றுதலாக இருப்பது ஒன்றேயொன்று. அதுதான் முன்னைப் பழையதும் பின்னைப் புதியதுமான தமிழ்மொழி !

Tuesday, November 3, 2020

சிங்களப் பண்பாட்டிலிருந்து புத்தகம்


“சிங்களப் பண்பாட்டிலிருந்து…” புத்தகத்தை வாசித்து முடித்தேன்…
அதிலுள்ள 13 கட்டுரைகளிலும் முன்பு அறியாத பல விடயங்கள் இருந்தன… பல்கலைக்கழகங்களின் சமூகவியல் மற்றும் மானுடவியல் பீடங்கள் முன்னெடுக்க வேண்டிய ஆய்வுகளுக்கான தொடக்கங்கள் இதில் உள்ளன… சிங்களவரின் பண்பாடு, வரலாறு பற்றி இப்புத்தகம் பேசினாலும், தமிழரின் பண்பாட்டையும் வரலாற்றையும் அது தொட்டுச் செல்வது தவிர்க்க முடியாததே… கன்னித்தன்மையைப் பரிசோதித்தல் இலங்கைத் தமிழரிடையேயும் காணப்பட்டதாக வாசித்த ஞாபகமொன்று உள்ளது… வோல்ரர் லத்துவாஹெட்டி அவர்களது பேட்டி வெளிவந்த சமயத்தில் அதன் முக்கியத்துவம் எனக்கு அவ்வளவாகப் புரியவிலலை… ஆனால், இப்போது புரிகிறது…  ‘பெயருக்குள் ஒளிந்திருக்கும் சாதி’ என்பது சிங்களவருக்கு மாத்திரம் உரியதல்லவே! (இன்னும் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்குப் பின்னர், இதை ஆராய்ந்துதான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்! ஆயினும், பிற்நத இடத்தை வைத்துச் சாதியைக் கண்டுபிடிப்பது இலங்கைத் தமிழரிடையே, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரிடையே இன்றும் உள்ள வழக்கம்!) போர்த்துக்கேய, டச்சு மற்றும் ஆங்கிலேயப் பெயர்கள் சிங்களப் பெயர்களாகவே மாறி, இன்றும் அவ்வாறே நிலைத்து நிற்கின்றன. “கூரே” என்ற பெயரைப் பற்றித் தேடிப் பார்த்தேன்; காணக்கிடைக்கவில்லை!
“தொன் டேவிட் ஹேவவித்தாரண”வைப்பற்றி (வேறு யாருமல்ல… அநகாரிக தர்மபாலதான்!) வாசித்தபோது ஆறுமுக நாவலரைப்பற்றிய எண்ணங்கள் தவிர்க்க முடியாதவை… (ஆறுமுக நாவலர் வள்ளலாருக்கு எதிராக வழக்கு வைத்ததாகவும் தகவலொன்று உண்டு!).
சரவணனின் முயற்சிகள் காத்திரமானவையும் பாராட்டுக்குரியவையும்… தொடரட்டும் அவர் பணி! Pathmanathan Mahadevah

Thursday, October 29, 2020

அழிவடைந்து கொண்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் திருகோணமலை


திருகோணமலை திருமங்கலாய் காட்டுப் பகுதியில் அழிவடைந்து கொண்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் - பாதுகாக்க முன்வாருங்கள்!
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் -
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும், அம்மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது.










சம கால இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் புதுப் பொலிவுடன் காணப்படுகின்றன. அவற்றுள் கணிசமான ஆலயங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் சுதேச மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர், பழைய ஆலயங்கள் இருந்த இடங்களில் அல்லது பழைய ஆலயங்களின் பெயரை நினைவுபடுத்தி புதிய இடங்களில் கட்டப்பட்டவையாக உள்ளன. போர்த்ததுக்கேயர் ஆட்சிக்கு முன்னர் இம்மாகாணங்களில் இருந்த ஆலயங்கள் பற்றி இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுகள் மற்றும் ஐரோப்பியர் கால ஆவணங்கள் என்பவற்றில் பல வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஆயினும் தற்காலத்தில் அவ்வாலயங்கள் இருந்த ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வாலயங்களின் அழிபாடுகளை அடையாளம் காணமுடிகின்றன. ஆயினும் அவ்வழிபாடுகளை வைத்து அவ்வாலயங்களின் கட்டிட அமைப்பையோ, கலை மரபையோ, வழிபாட்டிலிருந்த தெய்வங்கள் பற்றியோ அறிய முடியவில்லை.
இதற்கு இம்மாகாணங்களின் கரையோரங்களில் ஆதிக்கம் செலுத்திய போர்த்துக்கேயரும். பின்வந்த ஒல்லாந்தரும் சுதேச மதங்களுக்கு எதிராகக் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் இவ்வாலயங்கள் அழிக்கப்பட்டதே காரணமாகும். அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களின் கட்டிடப் பாகங்களைக் கொண்டே அவர்களின் ஆட்சிக் காலக் கோட்டைகள், கிறிஸ்தவ ஆலயங்கள், நிர்வாகக் கட்டிடங்கள் என்பன கட்டப்பட்டன. இந்த உண்மையை அவர்களின் ஆட்சி ஆவணங்களே உறுதி செய்கின்றன. இதை தற்போது யாழ்ப்பாணக் கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வில் கிடைத்து வரும் இந்து ஆலயங்களுக்கு உரிய கட்டிடப் பாகங்கள் மேலும் உறுதி செய்கின்றன.
இருந்த போதிலும் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சியில் அவர்களின் ஆதிக்கம் பெரும்பாலும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை அண்டிய மாகாணங்களில் ஏற்பட்டிருந்ததனால் அவர்களின் கலையழிவுக் கொள்கையில் இருந்து மாகாணங்களின் உட்பகுதியில் இருந்த ஆலயங்கள் தப்பித்திருக்க இடமுண்டு. அவற்றில் ஒன்றாகவே திருமங்கலாய்ச் சிவன் ஆலயத்தைப் பார்க்கின்றேன். இவ்வாலயம் திருகோணமலை மாவட்டத்தில் கிளிவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட திருமங்கலாய் என்ற வரலாற்றுப் பழமைவாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் பற்றி திருகோணமலை தலபுராணங்களில் ஒன்றான திருகரைசை புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் தற்போது இவ்வாலயம் கிளிவெட்டியின் பிரதான வீதியில் இருந்து ஏறத்தாழ பத்து கிலோ மீற்றர் தொலைவில் மீன்சார வேலி போடப்பட்ட அடர்ந்த காட்டின் மத்தியில் காணப்படுகின்றது.
இவ்விடத்திற்குச் செல்லும் பாதையில் பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னர் யானைகளின் நடமாட்டத்தை எதிர்கொள்வது சாதாரண நிகழ்வாகவே இருக்கின்றது. இவற்றின் காரணமாகவே இதுவரை தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் இவ்வாலயத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதில் தயக்கம் காட்டி வந்துள்ளனர் எனலாம். இந்நிலையில் திருமங்கலாய் பிரதேசத்தில் வாழ்ந்த மூதாதையினரின் வழித்தோன்றல்களாக தற்போது கிளிவெட்டியில் வாழ்ந்து வரும் திரு. வி. முத்துலிங்கம், திரு. கே. குலேந்திரராசா, திரு. கே. மாணிக்கராசா முதலியோர் இவ்வாலயத்தை ஆய்வு செய்வதற்கு எமக்கு வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதமும், உதவிகளும் அவ்வாலயத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு தூண்டுதலாக அமைந்தது.
இந்த ஆய்வில் எமது பல்கலைக்கழக தொல்லியல் இறுதி வருட மாணவர்களுடன் மத்திய கலாசார நிதிய யாழ்ப்பாண செயல்திட்ட முகாமையாளர் திரு. லஸ்மன் சந்தன மைத்திரிபால மற்றும் யாழ்ப்பாண பிராந்திய தொல்லியற் திணைக்கள அதிகாரிகளான திரு. மணிமாறன், திரு. கபிலன் ஆகியோர் பல சிரமங்களுக்கு மத்தியில் எம்முடன் இணைந்து பல நாட்களாக ஆய்வில் பங்கெடுத்தமை மாணவர்களுக்குப் புதிய ஆய்வு அனுபவத்தைக் கொடுத்தது. தற்போது இவ்வாலயத்தின் பெரும்பகுதி முற்றாக அழிவடைந்து அதன் அழிபாடுகள் ஆங்காங்கே கற்குவியல்களாகக் காணப்படுகின்றன. ஆயினும் அவ்வாலயத்தின் கட்டிட அமைப்பையும், அதன் கலை மரபையும், ஆலயம் தோன்றி வளர்ந்த காலத்தையும் உறுதிப்படுத்தக் கூடிய நம்பகரமான ஆதாரங்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றன.
கருங்கற்களையும், செங்கட்டிகளையும் கொண்டு கட்டப்பட்ட இவ்வாலயத்தின் கர்ப்பக்கிரகமும் அதன் மேலமைந்த விமானமும் முற்றாக அழிவடைந்து, அதன் கட்டிடப் பாகங்கள் ஆங்காங்கே சிதறுண்டு காணப்படுகின்றன. கர்ப்பக்கிரகம் இருந்த இடம் பிற்காலத்தில் புதையல் எடுப்போரால் தோண்டப்பட்டு அவ்விடம் தற்போது ஒரு குழியாகக் காணப்படுகின்றது. கர்ப்பக்கிரகத்திற்கு முன்னால் அழிவடைந்து காணப்படும் அந்தராளத்தில் ஆலய காலப் பொருட்கள் சிலவற்றுடன் பிற்காலத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்ட சிவலிங்கமும் காணப்படுகின்றது. அந்தராளத்திற்கு முன்னால் மகா மண்டபமும். பலிபீடமும் இருந்தமைக்கான அத்திபாரங்களும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட அலங்காரத் தன்மை கொண்ட பல கருங்கற் தூண்களும் காணப்படுகின்றன.
இம்மகாமண்டத்திற்கு வலப் பக்கமாக பயன்படுத்தப்படாத நிலையில் கருங்கற்களான மாடங்கள், தெய்வச் சிலைகள் வைப்பதற்குப் பயன்படுத்திய பீடங்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன. மகா மண்டபத்தின் இடப் பக்கமாக ஆலயத்தில் பயன்படுத்தியிருந்த கோமுகிகள், சந்தனம் அரைக்கும் கற்கள், கபோத வடிவிலமைந்த அரைவட்டத் தூண்கள் காணப்படுகின்றன. மகா மண்டபத்திற்கு மிக அருகில் கருங்கற்களைக் கொண்டு சற்சதுர வடிவில் ஆழமாகக் கட்டப்பட்ட ஆலயத்தின் தீர்த்தக் கிணறு காணப்படுகிறது. மேலும் இவ்வாலயத்தைச் சுற்றி சுற்று மதில்களும் அவற்றிடையே துணைக் கோவில்களும் (பரிவாரத் தெய்வங்கள்) இருந்திருக்கலாம் என்பதை அவற்றிற்குரிய அத்திவாரங்களும் பரவலாகக் காணப்படும் செங்கட்டிகளும், கருங்கற்களும் உறுதிப்படுத்துகின்றன.
இந்த ஆய்வின் போது கட்டிட அழிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து தமிழ்க் கல்வெட்டுக்கள் இவ்வாலய வரலாற்றுடன். கிழக்கிலங்கை வரலாறு பற்றிய ஆய்விலும் அதிக முக்கியத்துவம் வாய்ததாகக் காணப்படுகின்றது. எமக்குத் தெரிந்தவரை வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த ஆலயங்களுடன் அவ்வாலயங்களின் வரலாறு கூறும் கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அந்த இரண்டு அம்சங்களும் முதன் முறையாகத் திருமங்கலாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் எழுத்தமைதியைக் கொண்டு அவை வேறுபட்ட காலங்களில், வேறுபட்ட நோக்கங்களுக்காக பொறிக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது. அவற்றுள் கி.பி. 10 ஆம், கி.பி. 11 ஆம் நூற்றாண்டுக்குரிய மூன்று கல்வெட்டுக்கள் ஆலய நிர்வாக ஒழுங்குகள் பற்றியும், அவ்வாலயத்திற்கு சிற்றம்பலம் உடையார், திருவெண்ணைக்கூற்றன், திருவரங்கம் முதலான அதிகாரிகள், சமூகப் பெரியவர்கள் வழங்கிய தானங்கள் (காசு) பற்றியும் கூறுகின்றன. கி.பி. 15 ஆம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டுக்குரிய ஏனைய இரு கல்வெட்டுக்களும் இவ்வாலயத்திற்கு பசுக்கள் தானமாக வழங்கப்பட்ட செய்திகளைக் கூறுகின்றன.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கங்குவேலி என்ற இடத்தில் திருமங்கலாய் ஆலயத்திற்குரிய மணி ஒன்று காணப்படுகின்றது. இது திருமங்கலாய் ஆலயத்தில் இருந்து பிற்காலத்தில் கங்குவேலிக்கு எடுத்துச் செல்லப்பட்ட மணியாகும். ஆவ்வாலய மணியில் திருமங்கலாய் கோவிலுக்கு அவ்வூரில் வசித்த (திருமங்கலாயில் வசித்த) “பத்திபெட்டி மகன் பத்தன் யுடைய உபையம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சாசனத்தின் எழுத்தமைதி கொண்டு இதன் காலம் கி.பி.17 ஆம் நூற்றாண்டிற்கு உரியதெனக் கூறலாம்.
ஆகவே மேற்கூறப்பட்ட கல்வெட்டுகள், ஆலய மணிச் சாசனம் என்பவற்றை ஆதாரங்களாகக் கொண்டு இவ்வாலயம் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஏறத்தாழ 17 ஆம் நூற்றாண்டுவரை அழிவடையாத நிலையில் இப்பிரதேச மக்களால் வழிபடப்பட்டு வந்துள்ளமை தெரிய வருகின்றது. இவ்வாலயம் இலங்கைத் தமிழர் குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் பின்வரும் அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகின்றதை அவதானிக்க முடிகின்றது.
1.இவ்வாலயம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து திராவிடக் கட்டிடக்கலை மரபில் தோன்றி வளர்ந்ததற்குப் பின்புலமாக திருமங்கலாய்ப் பிரதேசத்தின் தொன்மையான, செறிவான தமிழ்க் குடியிருப்புக்கள் இருந்துள்ளமை தெரிகின்றது. இந்த உண்மையை எமது ஆய்வின் போது இப்பிரதேசத்தில் ஆங்காங்கே பிற தேவைகளுக்காக வெட்டப்பட்டிருந்த ஆழமான குழிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மட்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், சுடுமண் உருவங்கள் முதலான சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
2.தமிழகத்தில் பல்லவர் ஆட்சியில் தோன்றிய பக்தி இயக்கத்தின் செல்வாக்கால் சமகால இலங்கையிலும் கற்களைப் பயன்படுத்தி திராவிடக் கலைமரபில் ஆலயங்கள் அமைக்கும் மரபு தோன்றி வளர்ந்ததைக் காணமுடிகின்றது. அவற்றுள் சோழ ஆட்சியின் தலைநகராக இருந்த பொலநறுவையில் கட்டப்பட்ட இரண்டாம் சிவதேவாலயமே இலங்கையில் இதுவரை ஓரளவு முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தால் முந்திய திராவிடக் கலைமரபில் கட்டப்பட்ட ஆலயம் எனக் கூறப்படுகின்றது. ஆனால் பொலநறுவை இராசதானி கால வரலாற்றில் எந்த இடத்திலும் சொல்லப்படாத திருமங்கலாய் சிவன் ஆலயம் அதன் கட்டிட அமைப்பிலும். கலைமரபிலும் சற்று மேலோங்கிக் காணப்படுவதன் முக்கியத்துவம் எதிர்காலத்தில் விரிவாக ஆராயபட வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.
3.சோழர் ஆட்சியிலும் சோழர் ஆட்சிக்குப் பின்னரும் பொலநறுவைக்கு அப்பால் வடக்கு – கிழக்கு இலங்கையிலேயே சோழ ஆட்சியாளர், தமிழ் அதிகாரிகள், தமிழ் வணிக கணங்கள் முதலியோரால் கட்டப்பட்ட ஆலயங்கள் பற்றிப் பல தமிழ்க் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஆயினும் அக்கல்வெட்டுக்கள் கூறும் ஆலயங்கள் எந்த இடங்களில் இருந்துள்ளன என்பது பெரும்பாலும் இதுவரை அடையாளம் காணப்படாமலே உள்ளன. ஆனால் திருமங்கலாய் ஆலயம் பற்றிய கல்வெட்டுக்களுடன், ஆலய அமைப்பையும்,  அதன் கலை மரபையும் அறியக்கூடிய அரிய பல ஆதாரங்கள் முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் கிழக்கிலங்கை இந்துக்களின் வரலாறு, பண்பாடு பற்றிய எதிர்கால ஆய்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.
4.இலங்கையில் அநுராதபுர இராசதானியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில பௌத்த ஆலயங்களே தற்காலத்திலும் வழிபாட்டிற்குரிய ஆலயங்களாகக் காணப்படுகின்றன. ஆனால் அநுராதபுரத்திலும், இலங்கையின் ஏனைய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான ஆதிகால, இடைக்கால ஆலயங்கள் இலங்கையின் மரபுரிமைச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பிற்காலத்தில் அவை சுற்றுலாத் துறையின் முக்கிய மரபுரிமை மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன. ஆனால் திருமங்கலாய் சிவன் ஆலயம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 1964 ஆம் ஆண்டு வரை அங்கு வாழ்ந்த மக்களின் பிரதான வழிபாட்டு ஆலயமாகவே இருந்துள்ளது. இந்த உண்மையை அவ்வாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களும், ஆலய மணியில் பொறிக்கப்பட்டிருக்கும் சாசனமும், அங்கு பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களின் நில உரிமைப் பத்திரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
இவ்வாலயத்தின் பழமையையும், அதன் வரலாற்றுப் பெறுமதியையும் எமது ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட சக்தி தொலைக்காட்சி நிறுவனம் இவ்வாலயத்தை ஆவணப்படுத்த முன்வந்தது. இதற்காக அரச திணைக்கள அனுமதியுடன் அன்றைய சக்தி தொலைக்காட்சி முகாமையாளரான திருமதி. உமாச்சந்திரா பிரகாஷ் தலைமையில், சக்தி அலைவரிசை பிரதானி ஆர்.பி. அபர்ணாசுதன் வழிகாட்டலில் சக்தி வானொலி முகாமையாளர் திரு. ஞா. கணாதீபன் மற்றும் குழுவினரை திருமங்கலாய்க்கு அனுப்பி வைத்தது. அவர்கள் ஏழு மையில் தூரம் கால் நடையாகவும்,  உழவு இயந்திரத்திலும் அச்சத்துடன் காட்டு வழியாகப் பயணம் செய்து திருமங்கலாய் சிவன் ஆலயத்தில் காணப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஆவணப்படுத்தினர். இவ்வரிய பணியால் ஆய்வில் ஈடுபட்ட எமக்கும்,  அங்கு கூடியிருந்த மக்களுக்கும், தனது காலத்திலேயே இவ்வாலயத்தை மீளுருவாக்கம் செய்திட வேண்டும் என அயராது உழைத்து வரும் திரு. வி. முத்துலிங்கத்திற்கும் பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் ஏற்படுத்தி இருந்தது.
இவ்வாலயத்தை ஆவணப்படுத்திய சக்தி ஊடக நிறுவனம் அது பற்றிய செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற போது இவ்வாலயம் பற்றி மேலும் அறிய வேண்டும், நேரில் பார்வையிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதை உணர்ந்து கொண்ட நாம் இவ்வாலயத்தை மீளுருவாக்கம் செய்து பாதுகாக்கும் நோக்கில் திருமதி. உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களுடன் இணைந்து பல முயற்சியகளில் ஈடுபட்டோம். அதற்காக ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், அமைச்சின் அதிகாரிகள், கௌரவ இராஜங்க கல்வி அமைச்சர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலியோரின் உதவிகளை நாடினோம். இலங்கைத் தொல்லியற் திணைக்களம் தனது அதிகாரிகளை அனுப்பி இவ்வாலயத்தின் பழமையை உறுதிப்படுத்திக் கொண்டது. மத்திய கலாசார நிதியம் ஆலயத்தை மீள்புனரமைப்புச் செய்வதைப் பரிசீலிப்பதாகப் பதில் அனுப்பியது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது கோரிக்கைகளைச் சாதகமாகப் பரிசீலிக்க முன்வந்த அதிகாரிகளும் பதவி மாற்றம் செய்யப்பட்டதால் தற்போது எல்லா முயற்சிகளையும் நாம் ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு நாட்டின் தற்போதைய நிலையும் சாதகமாகக் காணப்படவில்லை.
இருப்பினும் விலைமதிக்க முடியாத எமது மரபுரிமைச் சின்னம் ஒன்று எம் கண்முன்னே மண்ணுக்குள் மறைந்து போவதை வேடிக்கை பார்க்கும் நிலையும் இல்லை என்றே நம்புகின்றோம். ஏனெனில் கடந்த முப்பது ஆண்டு கால அனர்த்தத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிய போது தமது இருப்பிடங்களைக் காட்டிலும் தமது வழிபாட்டு ஆலயங்களை மீளுருவாக்கம் செய்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த பெருமைக்குரியவர்கள். இது மதத்தின் மீது எமது மக்களுக்கு உள்ள அதித நம்பிக்கையைக் காட்டுகின்றது.
ஆனால் திருமங்கலாய் சிவன் ஆலயம் ஒரு வழிபாட்டு ஆலயமாக மட்டும் பார்க்க முடியவில்லை. பலதரப்பட்ட மக்களின் பார்வையில் இவ்வாலயம் இலங்கையில் உள்ள தேசிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாக நோக்கப்படலாம். ஆனால் இந்து மக்களைப் பொறுத்தவரை இவ்வாலயம் அவர்களின் எதிர்காலச் சந்ததியினரிடம் கையளிக்கப்பட வேண்டிய நம்பிக்கை நாற்று. அதற்கும் அப்பால் இலங்கையில் இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை அடையாளப்படுத்தும் விலை மதிக்க முடியாத மரபுரிமையின் அடையாளம். இம்மரபுரிமைச் சின்னங்களுக்குப் பின்னால் தமிழ் மக்களின் வரலாறும். பண்பாடும் பொதிந்து காணப்படுகின்றது.
ஆகவே இவ்வாலயத்தை மீட்டெடுத்து, மீளுருவாக்கம் செய்து, பாதுகாக்க அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து உழைக்க முன்வர வேண்டும். இப்பணி அரசியல், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இந்த உண்மையை உரியவர்களிடம் கொண்டு செல்வதற்கு எமது தகவல் தொடர்புச் சாதனங்கள் தமது பணியை தொடர்ந்தும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எப்போதும் எமக்குண்டு.

Wednesday, October 28, 2020

பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம்

பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும்?மேரி லீட்ச் எழுதிய "சிலோனில் ஏழு ஆண்டுகள்"என்ற இப் புத்தகம் 1890ஆம்ஆண்டில்வெளியிடப்பட்டது!அதில்,அன்றைய யாழ்ப்பாணத்தை படம் பிடித்து காட்டியிருந்தது!