Search This Blog

Tuesday, October 27, 2015

வெயிலும் மழையும்

வெயிலும் மழையும்
கலந்து பொழிகையிலெல்லாம்
நினைவுக்குள் மொக்கவிழ்க்கிற
ஒரு மழை நாளின்
வெதுவெதுப்பும் 
வெயிலாடும் சிறு பூவும்
இப்போதும் சிலிர்க்கச் செய்கிறது
மரங்கள் அடர்ந்த மலைச்சரிவில்
பொழிந்த
குறிப்பிட்ட அந்த மழை
அப்படியிருந்தது
வெயிலோடு மினுங்கும்படி
பூவொன்றை மலர்த்தும்படி
இன்று
அப்படியான மழை இல்லை
வெயிலும் இல்லை
என்றபோதும்
மழை நனைத்த வெயில்
நினைவுக்குள் இதழ் விரிக்கிறது
வாசமாகவோ வலியாகவோ
பதிந்திருப்பவைகளுக்கு
பருவங்கள் ஏதும் இல்லையென
மீண்டும் உணர்கிறேன்.
Sakthi Jothi

No comments:

Post a Comment