Search This Blog

Wednesday, November 20, 2013

Arth-அர்த் (இந்தி திரைப்படம்)

Arth-அர்த்
(இந்தி திரைப்படம்)

1982 ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மாறுபட்ட திரைப்படங்களை ரசிப்பவர்களின் பாராட்டைப் பெரிய அளவில் பெற்ற படம். படத்தின் இயக்குநர் மகேஷ் பட். அவர் இயக்கும் படம் என்றாலே, மாறுபட்ட கதைக் கரு இருக்கும், புதுமையான கோணத்தில் கதை கூறப்பட்டிருக்கும் என்று பொதுவாக கூறுவார்கள். அது உண்மைதான் என்பதற்கு `அர்த்’ படமும் எடுத்துக்காட்டாக நிற்கிறது.
மகேஷ் பட்டிற்கும், முன்பு பிரபல இந்தி நடிகையாக இருந்த பர்வீன் பாபிக்குமிடையே ஒரு வகையான உறவு இருந்தது. அது இந்தி படவுலகைச் சேர்ந்த எல்லோருக்கும் தெரியும். அந்த உறவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதே `அர்த்’ என்று அந்தக் காலகட்டத்தில் விமர்சகர்கள் குறிப்பிடுவார்கள்.
இரண்டு பெண்களையும் ஒரு ஆணையும் சுற்றி பின்னப்பட்ட கதையே `அர்த்’.

No comments:

Post a Comment