Search This Blog

Saturday, April 4, 2020

நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு








நன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு



1. காஞ்சனை  :  புதுமைப்பித்தன்

2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்  :  புதுமைப்பித்தன்

3. செல்லம்மாள்  :  புதுமைப்பித்தன்

4. அழியாச்சுடர்  :மௌனி

5. பிரபஞ்ச கானம்  :  மௌனி

6. விடியுமா  :  கு..ரா

7. கனகாம்பரம்  :  கு..ரா

8. நட்சத்திர குழந்தைகள்  :பி. எஸ். ராமையா

9. ஞானப்பால்  :  பிச்சமூர்த்தி

10. பஞ்சத்து ஆண்டி  :  தி.ஜானகிராமன்

11. பாயசம்  :  தி.ஜானகிராமன்

12. ராஜா வந்திருக்கிறார்  :  கு. அழகிரிசாமி

13. அன்பளிப்பு  :  கு. அழகிரிசாமி

14. இருவர் கண்ட ஒரே கனவு கு. அழகிரிசாமி

15. கோமதி  :  கி. ராஜநாராயணன்

16. கன்னிமை  :  கி.ராஜநாராயணன்

17. கதவு. கி.ராஜநாராயணன்

18. பிரசாதம்  :சுந்தர ராமசாமி

19. ரத்னாபாயின் ஆங்கிலம்  :சுந்தர ராமசாமி

20. விகாசம்  :  சுந்தர ராமசாமி

21. பச்சை கனவு  :லா..ராமாமிருதம்

22. பாற்கடல்  :லா..ராமாமிருதம்

23. ஒரு ராத்தல் இறைச்சி  :  நகுலன்

24. புலிக்கலைஞன்  :அசோகமித்ரன்

25. காலமும் ஐந்து குழந்தைகளும்  :  அசோகமித்ரன்

26. பிரயாணம்  :  அசோகமித்ரன்

27. குருபீடம்  :  ஜெயகாந்தன்

28. முன்நிலவும் பின்பனியும்  :  ஜெயகாந்தன்

29. அக்னிபிரவேசம்  :ஜெயகாந்தன்

30. தாலியில் பூச்சூடியவர்கள்  :  பா.ஜெயபிரகாசம்

31. காடன் கண்டது  :  பிரமீள்

32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல்  :  ஆதவன்

33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்  :  ஆதவன்

34. பைத்தியக்கார பிள்ளை  :  எம்.வி. வெங்கட்ராம்

35. மகாராஜாவின் ரயில்வண்டி  :  . முத்துலிங்கம்

36. நீர்மை  :  .முத்துசாமி

37. அம்மா ஒரு கொலை செய்தாள்  :  அம்பை

38. காட்டிலே ஒரு மான்  :அம்பை

39. எஸ்தர்  :  வண்ணநிலவன்

40. மிருகம்  :  வண்ணநிலவன்

41. பலாப்பழம்  :  வண்ணநிலவன்

42. சாமியார் விற்கு போகிறார்  :  சம்பத்

43. புற்றில் உறையும் பாம்புகள்  :  ராஜேந்திரசோழன்

44. தனுமை  :  வண்ணதாசன்

45. நிலை  :  வண்ணதாசன்

46. நாயனம்  :  .மாதவன்

47. நகரம்  :சுஜாதா

48. பிலிமோஸ்தவ்  :சுஜாதா

49. தக்கையின் மீது நான்கு கண்கள்  :  சா.கந்தசாமி

50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர்  :  ஜி. நாகராஜன்

51. ஒடிய கால்கள்  :  ஜி.நாகராஜன்

52. தங்க ஒரு  :  கிருஷ்ணன் நம்பி

53. மருமகள்வாக்கு  :  கிருஷ்ணன் நம்பி

54. ரீதி  :  பூமணி

55. இந்நாட்டு மன்னர்  :  நாஞ்சில் நாடன்

56. அப்பாவின் வேஷ்டி  :  பிரபஞ்சன்

57. மரி எனும் ஆட்டுக்குட்டி  :  பிரபஞ்சன்

58. சோகவனம் : சோ.தர்மன்

59. இறகுகளும் பாறைகளும்  :மாலன்

60. ஒரு கப் காப்பி  :  இந்திரா பார்த்தசாரதி

61. முங்கில் குருத்து  :  திலீப்குமார்

62. கடிதம்  :  திலீப்குமார்

63. மறைந்து திரியும் கிழவன்  :  சுரேஷ்குமார இந்திரஜித்

64. சாசனம்  :  கந்தர்வன்

65. மேபல்  :தஞ்சை பிரகாஷ்

66. அரசனின் வருகை  :  உமா வரதராஜன்

67. நுகம்  :  எக்பர்ட் சச்சிதானந்தம்

68. முள்  :  சாரு நிவேதிதா

69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்  :  சுப்ரபாரதி மணியன்

70. வனம்மாள்  :அழகிய பெரியவன்

71. கனவுக்கதை  :  சார்வாகன்

72. ஆண்மை  :  எஸ்பொ.

73. நீக்கல்கள்  :  சாந்தன்

74. மூன்று நகரங்களின் கதை  :கலாமோகன்

75. அந்நியர்கள்  :  சூடாமணி

76. சித்தி  :  மா. அரங்கநாதன்.

77. புயல்  :  கோபி கிருஷ்ணன்

78. மதினிமார்கள் கதை  :  கோணங்கி

79. கறுப்பு ரயில்  :  கோணங்கி

80. வெயிலோடு போயி  :  தமிழ்செல்வன்

81. பத்மவியூகம்  :  ஜெயமோகன்

82. பாடலிபுத்திரம்  :  ஜெயமோகன்

83. ராஜன் மகள்  :  பா.வெங்கடேசன்

84. தாவரங்களின் உரையாடல்  :  எஸ்.ராமகிருஷ்ணன்

85. புலிக்கட்டம்  :  எஸ்.ராமகிருஷ்ணன்

86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும்  :வேல.ராமமூர்த்தி

87. ஒரு திருணையின் பூர்வீகம்  :சுயம்புலிங்கம்

88. விளிம்பின் காலம்  :  பாவண்ணன்.

89. காசி  :  பாதசாரி

90. சிறுமி கொண்டு வந்த மலர்  :  விமாலதித்த மாமல்லன்

91. மூன்று பெர்நார்கள்  :  பிரேம் ரமேஷ்

92. மரப்பாச்சி  :  உமா மகேஸ்வரி

93. வேட்டை  :  யூமா வாசுகி

94. நீர்விளையாட்டு  :  பெருமாள் முருகன்

95. அழகர்சாமியின் குதிரை  :  பாஸ்கர் சக்தி

96. கண்ணியத்தின் காவலர்கள்  :  திசேரா

97. ஹார்மோனியம்  :  செழியன்

98. தம்பி  :  கௌதம சித்தார்த்தன்

99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா

100. பூனைகள் இல்லாத வீடு  :  சந்திரா
http://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_07.html

ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus complex) நவீன தீர்வு ?

காமத்தின் மூலம் உளவியல் என்ற கொள்கையை முன்வைத்தவர் உளவியலின் தந்தை என்று கருதப்படும் சிக்மண்ட் ஃபிராய்ட் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர்களில் ஒருவர். கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஐன்ஸ்டீன் போன்றோருக்கு இணையாக வைத்துப் போற்றப்படுபவர். குழந்தைமை, ஆளுமை, நினைவாற்றல், பாலியல், சிகிச்சை முறை போன்ற சொற்களுக்குப் புதிய அர்த்தங்களை உருவாக்கிக் காட்டியவர்.’காமத்தின் மூலம் கடவுள்’ என்ற கோட்பாட்டை ஓஷோ முன் வைப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னமே ‘காமத்தின் மூலம் உளவியல்’ என்ற கோட்பாட்டை முன் வைத்தவர். 

ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர். ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல; உளம் சார்ந்த பிரச்சினை களே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார். அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.
ஒரு பிறந்த குழந்தைக்கும் இந்த உலகத்துக்கும் இடையே இருக்கும் முதல் தொடர்பு தாயின் மார்பகம் மட்டுமே. குழந்தையின் தாய் என்பது தாயின் மாபகம்தான். பின்னர்தான் அது தனது தாயின் முகம், உடல், தாயின் வாசனை போன்ற இதர அம்சங்களை உணர்ந்து கொள்கிறது. தாயின் மேல் காதல் கொள்கிறது. இந்தக் காதலை ஃபிராய்ட் ‘ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’ (Oedipus complex) என்று அழைக்கிறார்.
ஒரு குழந்தையின் மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான காலத்தை இந்த ஈடிபஸ் சிக்கலுக்கான காலக்கட்டமாக சிக்மண்ட் ஃபிராய்ட் வரையறுக்கிறார். ஓர் ஆண்குழந்தை தனது பால்ய பருவத்தை வெற்றிகரமாகக் கடந்து செல்ல வேண்டுமானால் அது ஈடிபஸ் சிக்கல் பருவத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்பது ஃபிராய்டியக் கோட்பாடு.
ஃபிராய்டுக்குப் பின் வந்த இன்னொரு முக்கியமான உளவியலாளரான லக்கான் ஃபிராய்டின் கோட்பாட்டை அனுமானமாக்கிக் காட்டினார். ஆனாலும், ஃபிராய்டின் ஈடிபஸ் சிக்கல் என்ற கோட்பாட்டை அவர் மறுக்கவில்லை.
ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்பது மனநோய். கிரேக்க வீரன் ஈடிபஸ். பிறக்கும் போதே தந்தையைக் கொன்று தாயை மணப்பான் என்னும் சாபத்துடன் பிறக்கிறான். பயத்தில் அவனை மலையிலிருந்து தள்ளிவிடுகின்றனர். பழங்குடியின மக்களிடம் வளரும் அவன் இந்த ரகசியத்தை அறிந்து நாடு நோக்கி செல்கிறான். வழியில் வழிப்போக்கனிடம் யார் வழிவிடுவது என்று சண்டை மூள்கிறது. சண்டை பெரிதாக வழிப்போக்கனை கொன்றுவிடுகிறான். வழிப்போக்கனாக வந்தவன் நாயகன் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் அரசன். அரசனற்ற நாட்டிற்கு பதவியேற்க சில மாயப்புதிர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அதை விடுவித்து விதவையான ராணியை மணக்கிறான். அவர்களுக்கு குழந்தைகளும் பிறக்கின்றன. இறந்த அரசன் யாரென அறிய முற்படும் போது வெகு நாட்களுக்கு முன் தான் கொன்ற வழிப்போக்கனே அரசன் என்றறிகிறான். இதை ராணியும் அறியும் போது தான் ஈடிபஸிற்கு தான் தந்தையை கொன்று தாயை மணந்து கொண்டதையும் அறிந்து கொள்கிறான். அவள் சாபம் பலித்ததையறிந்து தற்கொலை செய்து கொள்கிறாள். ஈடிபஸ் தன் கண்களை குருடாக்கிக் கொள்கிறான். இதைத் தான் சிக்மண்ட் ஃப்ராய்டு காம்ப்ளக்ஸாக மாற்றுகிறார். தாயின் மீது மகனுக்கும் தந்தையின் மீது மகளுக்கும் காமம் சார்ந்த ஈர்ப்பு இருந்தே வருகிறது. இது தவறில்லையா என்னும் குற்றவுணர்ச்சி எங்கு தோன்றுகிறதோ அங்கு தான் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் ஆரம்பத்தினை கொள்கிறது. இதற்கு முடிவு இல்லையா எனும் போது கல்வியாலும் பிரக்ஞையை மேம்படுத்தி சமூகக் கட்டுபாடுகளுடன் தனிமனிதனை மாற்றும்போதும் அவனுடைய சுயமும் இச்சைகளும் கலாச்சார மீறல்களை மீறாமல் இருக்கும் என்கிறார்.
இதை டி.எச்.லாரன்ஸ் தன்னுடைய "SONS AND LOVERS" நாவலில் ஊடுபாவலாக சென்று தர்க்கங்களையும் தீர்வுகளையும் கொடுக்கிறார்

சுரங்கத்தில் வேலைப்பார்க்கும் குடும்பம் வால்டர் மோரலுடையது. அவருடைய மனைவி கெர்ட்ரூட் கப்பார்ட். அவர்களுடைய குழந்தைகள் வில்லியம், ஆன்னி, பால். கணவர் சுரங்கத் தொழிலுக்கு செல்வதால் அங்கிருந்த களைப்பினை போக்க நிச்சயம் மதுவினை உட்கொண்டாக வேண்டும். ஆனால் அது அதிகமாகும் தருணங்களில் அதுவே மனைவின் வதைபடுதலுக்கு காரணமாகிவிடுகிறது. இதனால் முழுதும் நொந்த மனைவியிடம் கணவன்பால் இருந்த காதல் காணாமலாகிறது. இதை அவளே உணரும் போது என்னிடம் இருக்கும் காதலை யாருக்கேனும் நான் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமே என ஏங்குகிறாள். மூத்த மகன் வில்லியமிடம் பாசத்தை பொழிகிறாள். வில்லியம் வேலை கிடைத்து நாட்டிங்காம்ஷைரிலிருந்து லண்டன் சென்றுவிடுகிறான். அங்கு அவன் காதல் வயப்பட்டு ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறான். பின் நிமோனியா காய்ச்சலில் இறந்தும்விடுகிறான். இதற்கு பின் தான் நாவல் தன்னுடைய தீவிரத் தன்மையை எய்துகிறது.
காதலை வெளிக்காட்ட இருந்த வடிகாலான வில்லியம் இறந்தவுடன் அவளுடைய கவனம் முழுக்க பாலிடம் செல்கிறது. இது பாலினை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது என்பதே நாவலின் மீதக்கதையாகிறது. கப்பார்ட்டின் குணமும் எண்ணமும் அவளை வசீகரம் மிக்கவளாக அதே நேரம் சமூகத்தின் பார்வையில் வன்மம் நிறைந்தவளாக மாற்றிவிடுகிறது. சிறந்த உதாரணம் எனில் வில்லியம் தான் காதலிக்கும் பெண்ணின் புகைப்படத்தை அனுப்புகிறான். அவள் எல்லாவற்றிலிருந்தும் குறைகளை தேடியெடுத்து குமுறிக் கொண்டே இருக்கிறாள். இது பின்னர் பாலிடமும் நீள்கிறது. தன்னுடைய அன்பை பங்கெடுக்க யாரேனும் வந்துவிடுவார்களோ என்னும் எண்ணமே நாவல் முழுக்க அவளை உருவாக்கிக் கொண்டு வருகிறது.

அதே நேரம் பாலின் வாழ்க்கை காதலுக்கான இடமே இல்லாமல் வறண்டு இருக்கிறது. அங்கு இருக்கும் ஒரே சோலையாக அவனுடைய அம்மா இருக்கிறாள். மிரியம் மற்றும் க்ளாரா என இரண்டு பேர் அவனுடைய வாழ்க்கையில் வருகிறார்கள். இதில் க்ளாரா ஏற்கனவே மணமாகி விவாகரத்து இல்லாமல் பிரிந்து இருப்பவள். இருவருக்கும் அவன் மீது காதல் இருக்கிறது. ஆனால் பாலிடம் இருக்கும் நிலையற்ற தன்மை அவன் மீதான வெறுப்பை அவர்களுக்குள் கொடுக்கிறது.

பாலிற்கு ஒருக்கணம் தேவையெனவும் மறுக்கணம் இவ்வுலகம் தாயால் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்குமே எனவும் இரு எல்லைக்கு இடையில் ஊசலாட வைக்கிறது. மிரியமிடம் நேரடியாகவே சொல்கிறான் நான் மணமே செய்து கொள்ள போவதில்லை. அம்மாவுடன் இருந்தால் அதுவே போதும் என. அவனுடைய முட்டுக்கட்டையாக தாயின் அன்பே நாவல் முழுக்க இருக்கிறது.

ஈடிபஸின் பிரச்சினையில் தாய் யார் என்பது மகனுக்கு தெரியாமல் மாயத்தன்மையில் இருக்கிறது. இங்கோ என்ன பிரச்சினை ஏன் நிகழ்கிறது என எல்லாமே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அப்படியிருக்கையில் ஏதேனும் ஒரு இருத்தல் காணாமல் போனால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியுமல்லவா ? இது நாவலில் நிகழும் தர்க்கமாக மாறுகிறது. சிறைப்பட்ட வாழ்க்கை தான் காதலுடன் இருப்பதா என்னும் கேள்வியையும் சுமந்துகொண்டு செல்கிறான். என்ன ஆகிறது என்பதை மனதிலிருந்து சிறிதும் நீங்காத வண்ணம் சொல்லி நாவலினை முடிக்கிறார்.

நவீனம் செய்ய வேண்டிய எல்லா விஷயங்களையும் இந்நாவல் செய்கிறது. ஈடிபஸின் பிரச்சினையை வெளிப்படையாக்கி தாயின் பார்வையில் அதை நியாயமாக்க முற்பட்டால் அதுவே லாரன்சின் நாவலாக மாறுகிறது. முடிக்கும் போது எல்லாவித கலாச்சாரத்திற்குள்ளிருந்தும் வெளியே நிற்கும் ஒரு கருவையே இந்நாவல் பேசுகிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ளலாம். அவர் நியாயப்படுத்துவதை நம்மால் எதிர்க்கவும் முடிவதில்லை என்பதில் தான் நாவல் தன் வெற்றியை கொள்கிறது.
Thanks www.kimupakkangal.com/,siruva.blogspot.com,www.aanthaireporter.com

ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille 1897 - 1962)

காமத்தையும் காரத்தையும் ஒப்பிட்ட ஃப்ரெஞ்ச் தத்துவ அறிஞர் ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille 1897 - 1962).
சமூகவியல், தத்துவம், பொருளாதாரம், மானுடவியல், இலக்கியம் போன்ற பல துறைகளில் அறிஞராக விளங்கிய ஜார்ஜ் பத்தாயின் (1897 - 1962) முக்கியத்துவம் என்னவென்றால், அவரது சிந்தனை அவரது காலத்தை விட ஒரு நூற்றாண்டு முன்னால் இருந்தது. அதாவது, 2030இல் சொல்ல வேண்டியதை 1930-லேயே சொன்னார் பத்தாய். அதனால்தான் அவரை யாருக்கும் புரியாமல் போய் விட்டது. கருத்துச் சுதந்திரத்தை அதி தீவிரமாகப் பாராட்டக்கூடிய ஃப்ரான்ஸிலேயே ஜார்ஜ் பத்தாய் யாருக்குமே தெரியாத ரகசியப் பெயரில் எழுத வேண்டியிருந்தது. காரணம், அவர் புதினங்கள் ஒழுக்கக் கேடானவையாக (immoral) இருந்தன. 1940களில் எழுதப்பட்ட அவரது புத்தகங்கள் 1990களில்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் பத்தாயை தெரிதா, ஃபூக்கோ, ஜூலியா க்றிஸ்தவா, சூஸன் சொண்டாக் ஆகியோரின் துணை கொண்டு வாசித்தால்... இல்லை, அதெல்லாம் கூட வேண்டாம்; பத்தாயின் புனைகதைகளைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய கட்டுரைகளேதான் திறவுகோல். இவர் காலத்தில் வாழ்ந்த சக ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களையெல்லாம் விட ஏராளமாக எழுதினார் என்றாலும் உயிரோடு இருந்த போது யாரும் இவரை அங்கீகரிக்கவில்லை; சரியாக விவாதிக்கவும் இல்லை.  இவ்வளவுக்கும் உலகிலேயே அதிக அளவில் எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசம் ஃப்ரான்ஸ்.  ஒரு பாப் பாடகரைப் போல் உலகம் முழுவதும் அறியப்பட்ட எக்ஸிஸ்டென்ஷியலிச சூப்பர் ஸ்டாரான ஜான் பால் சார்த்தர் கூட ஜார்ஜ் பத்தாயை மட்டமாகவும் கிண்டலாகவும்தான் குறிப்பிட்டார்.  ”பத்தாய் ஒரு தத்துவவாதி அல்ல; அவர் ஒரு mystic.  இலக்கியம் என்பது மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்”  என்பது சார்த்தரின் நிலைப்பாடு.  இது கிட்டத்தட்ட மார்க்சீயவாதிகளின் நிலையை ஒத்தது.  ஆனால் பத்தாய் இதை ஸ்தாபன ரீதியான சித்தாந்தம் (Status quo) என்று ஒதுக்கித் தள்ளினார்.   சார்த்தருக்கும் பத்தாய்க்கும் நடந்த விவாதங்கள் Excremental Vs Existential என்று பேசப்பட்டது.

எல்லாவற்றையும் விட ஆச்சரியம், பத்தாயுமே தன்னை ஒரு ‘மிஸ்டிக்’ என்றே சொல்லிக் கொண்டார். அவர் எழுத்துகளில் அடிக்கடி ‘உள்ளார்ந்த அனுபவம்’ என்ற வார்த்தை தென்படுகிறது. பாலியல் அனுபவம் அப்படிப்பட்டதுதான் என்பது பத்தாயின் கருத்து. உதாரணமாக, பத்தாயின் மதாம் எத்வார்தா சிறுகதையை எடுத்துக் கொள்வோம். (இதையும் பத்தாய் யாருமே அறியாத ரகசியப் பெயரில்தான் எழுதினார்.) தெரிதா போன்றவர்களின் சிந்தனையில் பெரும் பாதிப்பை நிகழ்த்திய மற்றொரு ஃப்ரெஞ்ச் தத்துவவாதியும், இலக்கியக் கோட்பாட்டாளருமான Maurice Blanchot இந்தக் கதையைப் பற்றி, ’the most beautiful narrative of our time' என்று குறிப்பிடுகிறார். அதில் உள்ளார்ந்த அனுபவமும் பாலியல் அனுபவமும் ஒன்றாக இணையும் ஒரு காட்சியைப் பார்ப்போம்:
She was seated, she held one long leg stuck up in the air, to open her crack yet wider she used her fingers to draw the folds of skin apart . .. 'Why', I stammered in a subdued tone, 'why are you doing that?' 'You can see for yourself ', she said, 'I'm GOD'.

ஜார்ஜ் பத்தாய் அவருடைய காலத்தில் அங்கீகரிக்கப்படாமல் போனதற்குக் காரணம், அவருடைய சிந்தனை, எழுத்து எல்லாமே அப்போது முற்றிலும் புதிதாக இருந்தது. உதாரணமாகச் சொன்னால், அவர் பச்சையான போர்னோ மொழியில் கதைகளை எழுதினார்.  அதற்கு அப்போது போர்னோ எழுத்து என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் கொடுக்கப்படவில்லை.  1928-இல் அவருடைய ”கண்ணின் கதை” என்ற நாவல் Lord Auch என்ற பெயரில் வெளிவந்தது.  பல ஆண்டுகளுக்கு அந்தப் பெயரில் எழுதியது யார் என்றே தெரியாமல் இருந்தது.  Auch என்ற வார்த்தை aux chiottes  என்ற பேச்சு வழக்கின் சுருக்கம்.  கிட்டத்தட்ட அதன் பொருள், நீ கக்கூஸுக்குத்தான் லாயக்கு.  ஆக, Lord Auch என்பதை கக்கூஸ் நாயகன் என்று மொழிபெயர்க்கலாம்.  போர்னோ மொழியில் எழுதப்பட்ட ”கண்ணின் கதை” ஒரு போர்னோ நாவலாகவே கருதப்பட்ட நிலையில் அந்த நாவலைப் பற்றி 1962-இல் ரொலான் பார்த் Metaphor of the Eye என்ற கட்டுரையை பத்தாயின் பத்திரிகையான Critique-இலேயே எழுதினார்.  அந்தக் கட்டுரைதான் முதல் முதலாக ”கண்ணின் கதை” என்பது போர்னோ நாவல் அல்ல; தத்துவார்த்தமாக விரியும் பல அர்த்தத் தளங்களைக் கொண்ட நாவல் என்பதை நிலைநாட்டியது.  அந்தக் கட்டுரையை ரொலான் பார்த் எழுதிய போது ஜார்ஜ் பத்தாய் உயிரோடு இல்லை என்ற முக்கியமான தகவலை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  அது மட்டும் அல்ல; பத்தாயின் மற்றொரு நாவலான My Mother  அவரது மரணத்துக்குப் பிறகே பிரசுரமாயிற்று.  ஈடிபஸ் காம்ப்ளக்ஸை அடிப்படையாகக் கொண்ட, வெளிப்படையான மொழியில் எழுதப்பட்ட நாவல் அது.  பத்தாய் 1935-இல் எழுதி முடித்த Blue Moon என்ற நாவலும் 1957-இல் தான் பிரசுரமாயிற்று.  இந்த நாவல் எப்படி இருக்கும் என்பதை இங்கே நான் விவரிப்பது கூட சாத்தியம் இல்லை.  ஆனால் பத்தாய் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லப்படுவது எப்படியென்றால், 1935-இல் அவர் எழுதியதெல்லாம் 1939-இலிருந்து ஐரோப்பிய நகரங்களில் நிகழத் துவங்கியது.  பாலியலும் மரணமும் ஒன்றுக்குள் ஒன்று சிக்கிக் கொள்ளும் தத்துவார்த்த முரண் பற்றிய நாவல் அது. 
1936-இல் பத்தாய் Acephale என்ற ரகசிய வாசகர் வட்டத்தைத் துவக்கினார்.  வட்டத்தின் சார்பில் அதே பெயரில் ஒரு பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது.  ஆஸிஃபால் என்ற கிரேக்க வார்த்தைக்கு  ”தலையற்ற” என்று பொருள்.   இதன் உறுப்பினர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வட்டம் பற்றிய செய்திகளை வெளியே சொல்லக் கூடாது என்பது முக்கியமான விதி.  ஆஸிஃபால் வாசகர் வட்டம் இரண்டாம் உலகப் போர் (1939)  துவங்கிய போது முடிவுக்கு வந்தது.  1936-39 நான்கு ஆண்டுகளில் ஐந்து இதழ்கள் வெளிவந்தன.  முதல் இதழ் எட்டு பக்கங்களைக் கொண்டிருந்தது.  இந்த வட்டத்தில் பல ரகசியமான விதிகள் கடைப்பிடிக்கப் பட்டன. உதாரணமாக, வட்ட உறுப்பினர்கள் யூத எதிர்ப்பாளர்களோடு பழகக் கூடாது; சந்தித்தால் கூட கை குலுக்கக் கூடாது.  தலையை வெட்டி தண்டனை கொடுப்பது சரியே.  ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது 16-ஆம் லூயியின் தலை வெட்டப்பட்டதை வட்டம் ஆதரித்தது.  அதேபோல் வட்டத்தில் தியான வகுப்புகளும் மற்ற தாந்த்ரீக செயல்முறைகளும் நடத்தப்பட்டன.  
பத்தாயை, அவருடைய பாலியல் எழுத்தை எப்படி மிஸ்டிஸிஸத்துக்குள் அடக்குவது? இரு உடல்களின் சேர்க்கையை அவர் ”ஒருமை” என்கிறார். ஈருடல், ஓருயிர் என்று சொல்வோம் அல்லவா, அதுதான் அவர் சொல்லும் மிஸ்டிக் அனுபவம். இதை அவர் மரணத்தோடு இணைக்கிறார். ஏனென்றால், மரணம்தான் சிருஷ்டியின் விதை. இலக்கியத்தைக் கூட பத்தாய் அப்படித்தான் வரையறுக்கிறார். 
Literature (fiction) took the place of what had formerly been the spiritual life; poetry (the disorder of words) that of real states of trance.
”ஆன்மிகம் இருந்த இடத்தை இலக்கியம் பிடித்துக் கொண்டது; கவிதை என்பது தியானத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டது.”
பத்தாயின் எழுத்தில் இருவித மரணங்கள் நிகழ்கின்றன. ஒன்று, பாத்திரங்களின் மரணம். இரண்டாவது, எழுத்தாளனின் மரணம். ஆம், பத்தாய் தன் ஒவ்வோர் எழுத்திலும் தன்னையே மறுதலித்துக் கொண்டு செல்கிறார். தன்னுடைய கதையாடலைத் தானே கலைத்துப் போடுகிறார். (நான் எழுதுவது புத்தகம் அல்ல; வாசகருக்கு அது ஒரு சவால்: பத்தாய்). தானே தன்னுடைய பிரதியில் இல்லாமல் போகிறார். அர்த்தத்துக்கு எதிரான எழுத்தை உருவாக்குகிறார். இப்படியாக எழுத்தின் அதிகாரத்தை நொறுக்கி விடுகிறார். இது பத்தாய் பற்றிய தெரிதாவின் ஒரு வாசிப்பு.


https://minnambalam.com/
சாரு நிவேதிதா



விரல்களும் முத்திரை மருத்துவமும்

 


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.




4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .

9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.
10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும். 

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.
http://maruththuvam.blogspot.com/


புரிந்து கொள்ளலுக்காக தயாராதல்


கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஒரு சேர வீட்டிலிருந்து என்பது சிம்ம சொப்பனமாகதொரு விஷயம். இதனை அழகான, அர்த்தபூர்வமான முறையில் பயன்படுத்துவோம்.
1. ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் நிலை நிறுத்தி திறந்த மனதுடன் செயல்படுவோம்.
2. வீட்டில் உள்ள வேலைகளை அனைவரும் சேர்ந்து பகிர்ந்து செய்வோம்.
3. ஒன்றாக அமர்ந்து உணவை உட்கொள்வோம், இவ்வேளையில் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் நடைமுறையையும் தினமும் சிறிதளவேனும் நடைமுறைப்படுத்துவோம்.
( பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உரிய ஆலோசனைகள் தொடரும் பதிவுகளில்)
4. செய்திகளைப் பார்ப்பதாயினும் ஏன் திரைப்படம் பார்ப்பதாயினும் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பாருங்கள். இதனால் தேவையற்ற விடயங்கள் தவிர்க்கப்படும் அனைவரின் ரசனைகளும் உணரப்படும்
5. தாய், தந்தையர் இருவரும் சேர்ந்து குழந்தைகளின் எதிர்காலம் பற்றி அவர்களுடன் பேசி உரிய வழிகாட்டல்கைளயும் ஆலோசனைகளின் அவர்களின் ஆசிரியர்களை அணுகி திட்டமிடுங்கள்.
(ஆசிரியர்கள் இதற்கு உதவிட முடியும்)
வளமான எதிர்காலத்திற்கான ஒவ்வொருவரின் வகிபாகம் பற்றி வரையறுத்துக் கொள்ள முடியும்
6. அனைவரும் ஒன்றாக இறை வழிபாடு, ஓதல்களை மேற் கொள்ள முடியும் இதனால் அனைவரின் வணக்கங்களும் ஒழுங்கமைக்கப்படும்.
7.வீட்டில் உள்ள அனைவருக்கும் ஓய்வு நேரமொன்று கிடைக்கும் அனைவரும் இணைந்து செயல்படுவதால், மனம் விட்டு பேசுங்கள், பிடித்த, பிடிக்காத விடயங்கள், சங்கடங்கள், ஆசைகள், கனவுகள், இயலுமைகள், இயலாமைகள் பற்றி.
இதனால் தனியாள் திறமைகளை கண்டு கொள்ள முடியும். அதற்கு உதவிட முடியும். அனைவரும் ஓர் பொழுது போக்கை அடையாளப்படுத்தலாம். தொலைக்காட்சி, தொலைபேசியை விடுத்து, புத்தகம் வாசித்து, அதனைப் பகிர்ந்து கொள்ளல், எழுதுதல், சித்திரம் வரைதல், புகைப்படம் எடுத்தல், தையல், கைவினை, தோட்டம் செய்தல், போன்றவை.
8. குழந்தைகளின் கற்றல் விடயங்களை ஒழுங்கமைக்கலாம், அவர்களின் சிறப்புத் தேர்ச்சி, குறைபாடுகள் பற்றி கலந்துரையாடி நிவர்த்தி செய்ய உதவி செய்ய முடியும்.
மேலும் கற்பதற்கானதொரு சரியான இடம் / அறையினை அவர்களின் விருப்பப் படி அமைத்துக் கொடுக்கலாம்.
9.பின்னர் அனைவரும் ஒன்றாய் உறங்க செல்வதன் மூலம் வீண் தொடர்பாடல், நேர வீண் விரயம் போன்றவற்றை தடுக்கலாம்.
இது சரியான சந்தர்ப்பம், அனைவரும் வீட்டில் ஓய்வாக இருக்கின்ற பொழுதை தன்னிறைவான குடும்பத்தினுடாக நாட்டைக் கட்டியெழுப்புவோம் பற்றி சிந்திப்போம்.
பொறுமையாகவும் நிதானமாகவும் செயற்படுவோம்
Mrs.Rifka Rafeek SLAS


Friday, April 3, 2020

பாலியலும் தமிழ்ப்புனைவும்: பிராய்டில் இருந்து கலகம் வரை

பாலியலை காத்திரமாக நேரடியாக பேச பொதுவெளியில் தடை உள்ளது. அதனால் வெகுஜன இதழ் கதைகளில் பாலியல் வேறுவிதமாக எழுதப்பட்டது. மிகையாக குற்றவுணர்வு தோன்ற சற்று வக்கிரமான சித்திரங்களுடன். ஆனால் சிற்றிதழ்களில் பாலியல் எழுத அபாரமான சுதந்திரம் இருந்தது. பாலியல் கதைகள் எழுதினவர்கள் உடனடியாக கவனிக்கப்பட்டார்கள்
அவை பொதுவாக மூன்று வகை. 
கிளர்ச்சி பாலியல் எழுத்து. 
உளவியல் பாலியல். 
அரசியல் பாலியல். 
இந்த மூன்று வகையுமே முக்கியம் தான்.
கிளர்ச்சி பாலியல் எழுத்தின் சமகால உதாரணம் வா.மு.கோமு, ஜே.பி சாணக்யா ஆகியோர். இருவருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. கோமுவின் சித்தரிப்புகள் பெண் காமம் பற்றின ஆணின் பகற்கனவுகள். ஏற்கனவே பாலகுமாரன், புஷ்பா தங்கதுரை போன்றவர்கள் ஒரு ஒழுக்கமனதுக்குள் இருந்து எழுதியவற்றை அநேகமாய் அதே மொழியில் ஆனால் ஒழுக்க நெருக்கடி இன்றி அரை சிட்டிகை எதார்த்தமும் சேர்த்து எழுதுவது கோமுவின் பாணி. அவரை தீவிர இலக்கிய-வணிக இலக்கியத்துக்கு இடையேயான பாலியல் பாலம் எனலாம். ஜே.பி சாணக்யா ஒருவகையில் கோணங்கி, எஸ்.ராவின் மரபின் தொடர்ச்சி. குறியீட்டு/உருவக மொழியில் பாலியல் உறவுகள் பற்றி பேசுபவர். ஆனால் நமது பாலியல் கதை மரபை உடைத்து காமப் பிறழ்வை சுவாரஸ்யமான நடையில் எழுதியவர் சாரு நிவேதிதா. ஒருபால் உறவு, சுயமைதுனம், taboo காமம் ஆகியவை அவரது களம். பரவசமான நடையில் எழுதப்பட்ட உன்னத சங்கீதம் தமிழின் கிளர்ச்சியான பாலியல் எழுத்தின் சிறந்த உதாரணம். சாருவை நாம் தி.ஜானகிராமனுடன் ஒப்பிடலாம்.
தி.ஜானகிராமன் இரண்டாவது வகை பாலியல் எழுத்தாளர். Taboo தான் அவரது முக்கிய களம். ஆனாலும் நிகழாமல் அடக்கி வைக்கப்பட்ட காமம். இதனால் மிக கற்பனை சாத்தியம் கொண்டதாக தி.ஜாவின் புனைவுகள் விளங்குகின்றன. 
வயதில் மூத்த யமுனாவை பாபு மோகிக்கும் கதை மோகமுள். 
மகன் அம்மாவை காமுறும் கதை அம்மா வந்தாள். தி.ஜா சாரு, கோமு, சாணக்யா அளவுக்கு சர்ர்சைகளை உருவாக்கவில்லை. அதற்கு இரு காரணங்கள். ஒன்று அவர் ஒரு இலக்கிய காமத்தை எழுதினார். நிஜ வாழ்வில் இருந்து சற்றே விலகிய நாடகீயமான காமம் ஆ.மாதவனும் இந்த ராஜபாட்டையில் தான் சென்றார். உதாரணமாய் “முலைகளை வெறித்தான் என்பதை “கழுத்துக்கு கீழ் மேடிட்ட பகுதியில் பார்வையை ஓட்டினான் என எழுதுவது. இரண்டாவது சொற்றொடர் தான் அதிக கிளர்ச்சி தருவது என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அது நம்மை அதிர்ச்சியுற வைக்காது. தி.ஜாவும் ஆ.மாதவனும் பிராய்டின் உளப்பகுப்பிவியலால் கவரப்பட்டவர்கள். வெளிப்படாமல் மனதுக்குள் தேங்கிய காமமே மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் செலுத்துகிறது என்றார் பிராயிட். ஆக “அம்மா வந்தாளில் அம்மா தன் பாலியல் குற்றவுணர்வில் இருந்து விடுபட மகனை வேதபாடசாலையில் பயிற்றுவிக்க அனுப்புகிறாள். மகனுக்கு அம்மா மீது உள்ள மோகத்தில் இருந்து விடுபட வேண்டும்  அதற்கு அவன் வேதம் படிக்காமல் அம்மாவுக்கு நிகரான மற்றொரு பெண்ணை அணுகி காதலிக்கிறான்.
ஆனால் ஆ.மாதவனை விட தி.ஜாவில் வாசிப்பு சுதந்திரம் அதிகம். சமீபமாக வெளிவந்த பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி மற்றொரு குறிப்புணர்த்தும் taboo கதை. சாரு “மோகமுள்ளுக்கான ஒரு எதிர்வினைக்கதை எழுதி உள்ளார். “முள் என்றொரு சிறுகதை. அதில் கதைசொல்லி தன் அத்தை உடனான காமத்தை வெளிப்படையான லகுவான மொழியில் பேசுகிறான். தி.ஜாவில் இருந்து சாரு மற்றும் கோமுவரை உள்ள தூரம் வாசலுக்கும் படுக்கைக்கும் இடையே இருப்பது தான். இன்றுள்ள “மலர்மஞ்சத்தை அடைய நமக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்துள்ளன. அதே வேளையில் நிகழ்ந்து முடியும் காமத்திற்கு இலக்கியமதிப்பு குறைவு என்ற நகைமுரணையும் சொல்லியாக வேண்டும்.
இன்றைய பாலியலுக்கும் நேற்றைய பாலியலுக்கும் மற்றொரு முக்கிய வித்தியாசம் உள்ளது. அது அரசியல்.
காமமும் வன்முறையும் நமக்குள் உறைந்துள்ள பண்புகள். அவை நம் தீமையை வெளிப்படுத்துகின்றன என்று இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்கள் நம்பினார்கள். உதாரணமாக புதுமைப்பித்தனின் “காஞ்சனையில் காமம் ஒரு மோகினிப் பேயின் வடிவில் வெளிப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜெயமோகன் தம்புரானும் தம்புராட்டிகளும் தோன்றும் காமப் பேய்க் கதைகள் (நிழல்வெளிக் கதைகள்) எழுதினார். தீமை கொடியது என்பதால் இந்த வகை கதைகளில் காமத்துடனான மனப்போராட்டம் பிரதானமாகிறது. ஜெயமோகன் காமத்தை தூயமிருக நிலையாக (ஊமைச்செந்நாய்), உளவியல் சிடுக்கின் விடுபலாக (பின்தொடரும் நிழலின் குரல்) சித்தரிப்பவர். அவரது பாத்திரங்கள் காமத்தின் உச்சத்தை எட்டியதும் ஏமாற்றமும் வெறுப்பும் அடைகின்றனர் (நாகம், காடு)
ஜி.நாகராஜன் விபச்சாரிகளை முன்வைத்து பல கதைகள் எழுதினார். ஆனால் அவரது விபச்சாரிகள் அபலைகள். ஒரு ஆண் தோன்றி தன்னை காப்பாற்றக் கூடும் என்று ஏங்கும் காமக் கைதிகள். இவர்கள் ஆணின் பார்வையில் படைக்கப்பட்ட கற்பனாவாத பாத்திரங்கள் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. ஜி.நாகராஜன் பாலியலை கையாண்ட விதம் பிரத்யேகமானது.
அவரது பாத்திரங்களுக்கு கட்டற்ற காமம் லட்சியம். ஏன்? ஜி.நாவுக்கு காமம் என்பது காமம் அல்ல. மரபில் இருந்து விடுதலை. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்திரமயமாக்கம், உலகப்போர், அறிவியல் வளர்ச்சி ஆகிய காரணங்களால் மரபான விழுமியங்கள் மீது மனிதன் நம்பிக்கை இழந்தான். பரஸ்பர அன்பும் காதலும் அப்படியான ஒரு விழுமியம். ஜி.நாவின் நாயகன் காதலை மறுத்து காமத்தை மட்டும் ஏற்கிறான். அதன் எதிர்விளைவுகளை சந்திக்கிறான். இந்த மரபு vs காமம் மோதலை லா.ச.ரா தனது “அன்புள்ள ஸ்நேகிதனுக்கு கதையில் சித்தரித்திருக்கிறார்.
ஆனால் கலாச்சார அரசியல், அதிகார அரசியல், பெண்ணியம் போன்ற சமகால கருத்தாக்கங்கள் காமத்தை ஒரு அரசியல்/தத்துவப் பிரச்சனையாக்கின. சுருக்கமாக காமம் ஒரு கலகம் ஆகியது. சமூகம் காமத்தைக் கொண்டு மனிதனின் மீது அதிகாரம் செலுத்துகிறது. காமத்தை நேரடியாக எழுத்தில் சந்திப்பது இந்த அதிகாரத்துக்கு எதிரான ஒரு கலகம். ஆக இன்றைய எழுத்தில் ஒருவன் சுயமைதுனம் அல்லது ஆசனப்புணர்ச்சியில் ஈடுபட்டால் அது பீறிடும் காமத்தால் மட்டுமல்ல, சமூக அடக்குமுறையை எதிர்க்க; பொதுப்போக்கோடு உடன்படாத தனது அடையாளத்தை வலியுறுத்த. இவர்களுக்கான முன்னோடிக் கதைகளை எண்பதுகளில் எழுதியவர்கள் ராஜேந்திர சோழன், ஜெயகாந்தன் போன்றோர். பிராயிடிய காமத்துக்கும் இன்றைய அரசியல் காமத்துக்கும் இடையில் உள்ள புள்ளி இவர்கள்.
குழந்தைகள் மீதான காமம்? சுஜாதாவின் சங்கிலிகதையில் ஜெஞ்சுலட்சுமி என்ற லட்சணமான சின்ன குழந்தை ரயிலில் வருகிறது. பிரயாணிகள் அதை வாங்கி ஆளாளுக்கு ‘பச்சக் பச்சக் என்று முத்துகிறார்கள். சுஜாதா எழுதுகிறார் “பேருக்கு பேர் கொடுத்த எல்லா முத்தங்களிலும் களங்கமில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை
கவிதையில் கடந்த பத்துவருடங்களில் எழுத வந்த பெண் கவிஞர்கள் அனைவருமே அநேகமாக பாலியல் அரசியல் கவிதைகள் எழுதினார்கள். பெண்மொழி என்ற சொல்லாடல் பிரபலமாகியது. சரி “ஆண்மொழி என்றால் என்ன? “திமிறிப் புடைத்து எழுந்தது காமம் என்ற சாதாரண வாக்கியத்தில் உள்ளது ஒரு ஆண்குறி விரைப்பு பற்றின உருவகம் தான் அது. இப்படி தமிழ் முழுக்க கறைப்பட்டுள்ளதால் அதனை பெண்மொழியாக்கி சலவை செய்வது இவர்களின் நோக்கம் சுகிர்தராணி குறிப்பிடத்தக்கவர். சுவாரஸ்யமாக, பிரமிளை தவிர நமது ஆண்கவிஞர்கள் மிக அரிதாகவே பாலியல் தொனிக்கும் வரிகளை (ஆடையின் இரவினுள் உதயத்தை தேடும் பருவ இருள்) எழுதினர். பெண்ணிய கவிஞர்கள் தங்களது லட்சியம் “இரவினுள் உதயத்தை (லிங்கத்தை) தேடுவது அல்ல என்று உறுதியாக மறுக்கிறார்கள். 1960இல் இருந்து இன்று நாம் பாலியல் கவிதையில் வந்துள்ள புள்ளியை பிரமிள் vs பெண்ணியம் என்று சுருக்கலாம்.

http://thiruttusavi.blogspot.com/2011/12/blog-post_8695.html