Search This Blog

Tuesday, March 17, 2020

இயற்கைவழி வேளாண்மை



வேளாண்மையின் வரலாறு மிக நெடியது, கல்வெட்டுகளிலும், அகழ்வாய்வுகளிலும் ஐயாயிரம் ஆண்டுக்கும் குறைவில்லாமல் இருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியங்கள், பிற்காலஇலக்கியங்கள்வரை வேளாண்மை பற்றிய செய்திகள் நிரம்ப உள்ளன.

இந்த வேளாண்மை, இயற்கையின் போக்கில் மரபு வழியாக நடந்தது. இந்த மரபு வேளாண்மை அல்லது பாரம்பரிய வேளாண்மை வேதி உரங்கள் அல்லது ரசாயன உரங்களின் வருகைக்கு முன்பு நடந்தவை.

இன்றையஇயற்கை வழி வேளாண்மை' என்ற சொல்லாடல் கலப்பின விதைகள், வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டபசுமைப் புரட்சி' தொழில்நுட்ப முறைக்கு மாற்றான, அதே போன்றதொரு நுட்பமான வேளாண் தொழில்நுட்ப முறைகளைச் சுட்டும் சொல்லாக உள்ளது.

மசனோபு ஃப்யூகூவோகா (1913-2008) தத்துவ ஞானி மற்றும் விவசாயி். 1975ல் இவர் எழுதியவைக்கோல் புரட்சி (straw revolution)” என்ற நூல் பிரசுரமாகியது. இதில்எதுவும் செய்யாதேஎன்று விவரிக்கிறார். ஏதும் செய்யாதெ என்றால் முயற்சி ஏதும் செய்யக்கூடாது என்ற அர்த்தம் அன்று. பதிலாக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இடுபொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு ஃபுயூகோகாமுறை என்றும் பெயர் உண்டு். இயற்கைவழி வளத்தை வளர்ப்பு வேளாண்மை (fertility farming) , கரிம வேளாண்மை (organic farming), நீடித்த வேளாண்மை (sustainable agriculture), வேளாண்காடு வளர்ப்பு (agroforestry), சுற்றுச்சூழல் வேளாண்மை (ecoagriculture), வாழ்முறை (permaculture) ஆகியவற்றுடன் மிக்கத் தொடர்புடையது ஆனால் உயிராற்றல் (உயிரோட்ட/biodynamic agriculture) வேளாண்மையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் .

இந்த முறை ஒவ்வொரு சூழலிலும் ஒரு உயிரினம் சிக்கலாக இருந்து அந்தச் சூழ்நிலையை வடிவமைப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. இவர் விவசாயத்தை உணவு மற்றும் ஆன்மீக (அழகு) அணுகு முறை என இரு வேளாண்மையாகப் பார்க்கிறார். சாகுபடி மற்றும் மனித முழுமைதான் தன்னுடைய இறுதி இலக்கு என்று கூறுகிறார். இந்த முறையில் வெற்றியடைய உள்ளூர் நிலைமைகளைக் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். மேலும், இயற்கைவழி விவசாயம் ஒரு மூடிய அமைப்பு, மனித உள்ளீடுகள் இல்லாமல் இயற்கையை ஒட்டி இருக்க வேன்டும். ஃப்யூகூவோகாவின் கருத்துக்கள் நவீன வேளாண் தொழிற்சாலைகளுக்கு ஒரு சவாலாக இருந்தது. இயற்கைவழி விவசாயம், வழக்கமான கரிம வேளாண்மை(organic farming) மாறுபடுபதாகவும், கரிம வேளண்மை இயற்கையை பாதிபதாகவும் நினைக்கிறார். இவருடைய முறை நீர் மாசுபாடு தடுப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் மண் அரித்தழிப்பு தடுப்பு ஆகிய நன்மைகளுடன் போதுமான உணவும் கிடைக்கின்றன என அடித்துரைக்கிறார்.

இந்த ஆராய்ச்சிகளில் மண் வளம் கூடியுள்ளது, நீர்ச் செலவு குறைந்துள்ளது, மின்சாரம் போன்ற ஆற்றல் செலவினங்கள் குறைந்துள்ளன, பல இயற்கைப் பூச்சிகள் பெருகியுள்ளன, உயிரியல் பன்மயம் மிகுந்துள்ளது, நச்சுத்தன்மை குறைந்துள்ளது, பருவநிலைகளுக்குத் தாக்குப்பிடிக்கும் திறன் கூடியுள்ளது போன்றவை எல்லாமே தெரியவந்துள்ளது. இவற்றை எல்லாம்விட முக்கியமானது ஐந்து முதல் 20 சதவீதம்வரை விளைச்சல் அதிகமாகியுள்ளது.

அமிர்த கரைசல்


பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்துவிட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.

பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.

அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

சுக்கு அஸ்திரா

சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

ஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.

கனஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.

நீம் அஸ்திரா

நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

மீன் அமினோ அமிலம்

மீன் அமிலம்தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்துநன்கு பிசைந்துஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியேமீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது

விளைச்சல் அதிகரிப்பு

எடுத்துக்காட்டாக, மஞ்சள் பயிரில் 51.5 சதவீதம் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது, மக்காச் சோளத்தில் 22.8 சதவீதம், நெல்லில் 2 சதவீதம் என்று பல பயிர்களிலும் விளைச்சல் அதிகரிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதைவிட இந்த ஆராய்ச்சிகளில் பல உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி இதழ்களில் வெளிவந்துள்ள முடிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆராய்ச்சிகள் குறிப்பிட்ட ஒரு வழிமுறையை மட்டும் பின்பற்றிச் செய்யப் படவில்லை, உயிரித்துணைமப் பண்ணையம், உயிர்ம வேளாண்மை, இயற்கை வேளாண்மை என்ற பல சிந்தனைப் பள்ளிகளில் இருந்தும் நுட்பங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம் பொதுப்படையாக ரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத வேளாண் முறைகளைப் பின்பற்றும்போது ஏற்படும் விளைவுகள் பற்றியே ஆராய்ச்சிகள் பெரிதும் உள்ளன.

புதிய செய்திகள்

அதுமட்டுமல்லாது, இயற்கை வேளாண்மை என்பது வெறும் பாரம்பரிய வேளாண்மைதான் என்ற பார்வையில் இருந்து மாறி இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுடனும், இன்றைய அறிவியல் அணுகுமுறையுடனும் கூடியதாகவே இயற்கைவழி வேளாண்மை உள்ளது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

உழவர்கள் செய்து பார்க்க வாய்ப்பு இல்லாத, அதேநேரம் மிகவும் பயன் தரக்கூடிய, எந்த இயற்கை வேளாண்மை இடுபொருளை இட்டால், என்ன விளைவு கிடைக்கும் என்பது போன்ற நுட்பமான செய்திகளையும் இந்த ஆய்வுத் தாள்கள் அளிக்கின்றன. இது நம்முடைய உழவர் பெருமக்களுக்கும் பயன்படும்.

மக்களுக்கான ஆராய்ச்சி

பயிர்ச் சுழற்சி, பயறு வகைத் தாவரங்களைப் பயன்படுத்துதல் (Legume crops), வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்துவது, மட்கிய தொழுவுரப் பயன்பாடு, மூடாக்கு, உயிர் உரங்கள், உயிரியல் நுண்ணுயிர் பயன்பாடு என்று மரபு முறைகளும், ஒரு சில புதிய நுட்பங்களும் இந்த ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், இன்றைக்கு மிகவும் முன்னேறியுள்ள பல இயற்கை நுட்பங்கள் இந்த ஆராய்ச்சிகளில் இல்லை. அப்படியிருந்தும்கூட விளைச்சல் தொடங்கிப் பல்வேறு கூறுகளில் வியக்கத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளது ஆச்சரியகரமானதுதான்.

சத்தியமங்கலத்தில் ஓர் ‘இயற்கை வேளாண் பள்ளி’

இயற்க்கை விவசாயத்தில் ஆா்வமமுள்ள நட்புகள்…இயற்க்கை விவசாயி ”சுந்தரராமன்” அய்யாவை சந்தியுங்கள்…உங்கள் கனவு நனவாகுவது வெகுதொலைவில் இல்லை…!!! நானும் இவரை சந்தித்து இயற்க்கை விவசாயம்…இயற்க்கை உரங்கள் தாயாரிப்பது பற்றி நிறைய விசயங்கள் மிகவும் எளிமையான முறையில் புாியவைத்து இயற்க்கை விவசாயம் தங்க முட்டையிடும் வாத்து என்று புாியவைத்தாா்…

ஏமாந்துவிட்டோம்

சுந்தரராமன்
பூச்சிகளைப் பற்றிய சுந்தரராமன் அறிவு விரிவானது. பூச்சிக் கொல்லிகளைப் பற்றிய அறிவோ அதைவிட அகலமானது. “ஏன் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது’ என்று டார்வின், லமார் போன்ற அறிஞர்களைக் குறிப்பிட்டு விளக்குகிறார். இவருக்கு இயற்கை வேளாண்மை பற்றிய புரிதல் வருவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் சத்தியமங்கலம் நாகராசன் என்னும் மார்க்சிய அறிஞர். அவரை தனது குரு என்று கூறும் சுந்தரராமன் ‘பசுமைப் புரட்சியின் தொடக்கக் காலத்திலேயே, அதை எதிர்த்தவர் எஸ்.என்., அதைப் புரிந்துகொள்ளாமல் நாம் ஏமாந்துவிட்டோம்’ என்கிறார்.
பொதுவாக வேளாண்மையில் இருப்பவர்கள் தங்களுடைய அடுத்த தலைமுறையை வேளாண்மையை விட்டு வேறு துறைகளுக்கு அனுப்பவே விருப்புகிறார்கள். இவர் அதற்கு மாறாக, முதுகலைப் பட்டம் பெற்ற தன்னுடைய மகனை அவருடைய விருப்பத்துடனேயே வேளாண்மைக்குள் இறக்கியுள்ளார். இயற்கைவழி வேளாண்மைப் பரப்புரைக் கூட்டங்களுக்கு இவர் போய்விடுவதால் இவருடைய துணைவியும், மகனுமே பண்ணையை மேலாண்மை செய்கிறார்கள்.

விவசாயி சுந்தரராமன் தொடர்புக்கு: 09842724778

Albert Einstein and the Dutch astronomer Willem de Sitter in 1932, discussing cosmology:

Cecile G. Tamura
The Einstein–de Sitter universe


In 1917, both Einstein and de Sitter proposed a new interpretation of the universe as a whole: the structure of the universe could be described in terms of relativistic field equations.
Their contributions marked the beginning of the modern scientific comprehension of the origin and evolution of the universe.


The Einstein-DeSitter model is a matter-dominated Friedmann model with zero curvature (k = 0).
This model corresponds to a Minkowski universe (zero curvature), in which the universe will continue to expand forever with just the right amount of energy to escape to infinity.
It is analogous to launching a rocket. If the rocket is given insufficient energy, it will be pulled back by the Earth.
However, if its energy exceeds a certain critical velocity (escape velocity), it will continue into space with ever-increasing speed.
If it has exactly the escape velocity, it will proceed to escape the Earth with a velocity going to zero as the rocket approaches spatial infinity.
The Einstein-DeSitter model corresponds to the universe having exactly the right escape velocity provided by the Big-Bang to escape the pull of gravity due to the matter in the universe.
Image © Wide World Photos, New York.

Friday, March 13, 2020

ஜப்பான் ஒழித்த சாதி Burakumin Japan's untouchables


100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது...
கீழ் சாதியனர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் 'புராக்குமீன்' (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
Japan has a reputation for being a homogeneous, mostly harmonious society. There are few foreigners, linguistic differences are rare and on the surface, class distinctions are largely absent. But, as Mike Sunda discovered, there is one, often hidden, exception: Japan's untouchables. 

Burakumin, meaning "hamlet people", dates back to the feudal era. It originally referred to the segregated communities made up of labourers working in occupations that were considered impure or tainted by death, such as executioners, butchers and undertakers.

The lowest of these outcasts, known as Eta, meaning "abundance of filth", could be killed with impunity by members of the Samurai if they had committed a crime. As recently as the mid-19th Century a magistrate is recorded as declaring that "an Eta is worth one-seventh of an ordinary person".
In the corner of a pristine room tucked away in Tokyo's Shibaura meat market is a table topped with a stack of crudely composed hate mail - evidence of prejudice that dates back to medieval times.
Slaughtermen, undertakers, those working with leather and in other "unclean" professions such as sanitation have long been marginalised in Japan. That prejudice continues to this day and especially for those working in the Shibaura abattoir.
Never mind that the men here are dicing up some of the most expensive and highly prized animals on the planet. This is where Japan's world-famous Wagyu beef is prepared - prime steaks shot through with ribbons of fat, that can set you back eye-watering prices.

Major incidents

In the mid-1970s, Buraku rights groups uncovered a 330-page handwritten list of Burakumin names and community locations being sold to employers under the radar. Executives were, in turn, using the information in order to screen job applicants. The event caused a major scandal in Japan, as companies including Toyota, Nissan, Honda and Daihatsu were found to have purchased the book, along with thousands of individuals. Publication and sale of the book have since been banned.
In 2001, future Prime Minster Taro Aso reportedly said: ‘We are not going to let someone from the Buraku become the prime minister, are we?’ in a closed meeting when discussing the political future of Hiromu Nonaka, then the second-highest figure in Japanese government and a contender to succeed the then-Prime Minister Yoshirō Mori. Nonaka withdrew his bid for the lead soon after the remark.
In 2009, there was yet another incident when Google Earth incorporated historical maps of Tokyo and Osaka that specified the location of Buraku villages in feudal times, once again highlighting the ongoing issue of ancestry and profiling of Burakumin members.
இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் "சேரி" களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர்... அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது..அவர்களுக்கு செருப்பு, தோல், சாக்கடை கழுவுதல் சார்ந்த தொழில்கள் மட்டுமே தரப்பட்டது...
1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் இரண்டு அணு குண்டுகளால் படு தோல்வியடைந்த பிறகு குறைவான மக்கள் தொகையில், பொருளாதாரமற்ற சூழ்நிலையில் திக்கு முக்காடியது...இனி ஜப்பான் அவ்வளவு தான், சரித்திரத்தின் பக்கங்களில் காணாமல் போய்விடும் என்று உலகம் உச்சுக்கொட்டியது..
காலங்காலமாக ஆண்ட பரம்பரையாக இருந்து, நாட்டை உலகப்போரில் சீர்குலைத்ததற்கு மன்னர் "ஹிரோஹிட்டோ' (Hirohito) பொதுமன்னிப்பு கேட்டு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி கொண்டார்... அவருக்கு பதில் போர்களில் பெரும் பங்கு வகித்த அவரது மந்திரி 'டோஜோ' (Tojo) போர் வெறியை தூண்டியதற்காக தூக்கிலிடப்பட்டார்...(அப்பவும் மன்னர்களே தப்பினர் அவரின் எடுபுடிகளான மந்திரிகள் மாட்டிக்கொண்டனர்)
பின்னர் வந்த மக்களாட்சி முறை ஜப்பானிய மக்கள் மத்தியிலுள்ள சாதி பிரிவினைகளை முதலில் ஒழித்தது...ஜப்பான் வளர வேண்டுமென்றால் அனைவருமே 'ஜப்பானியர்' என்ற சொல்லை தவிர 'நான் சாமுராய் இனம், என்‌ பரம்பரை வீரப்பரம்பரை, நான் அவன் நான் இவன்' போன்ற வீண் பெருமைக்கு இனி இடமில்லை என்று திட்டவட்டமாக நின்றது..
.புராகுமின் சமூகத்தில் பிறந்தவரும், அச்சமூகத் தலைவரும், புராகுமின் விடுதலை லீக் (BLL) எனும் இயக்கத்தின் தலைவரும் ஆன
ஜீச்ஹிரோ மதுமோட்டா (Jiichiro Matumoto 1887-1966) எனும் அரசியல் தலைவர் புராகுமின் சமூகத் தந்தை எனப் போற்றப்படுகிறார்
பொது மக்களின் வேலை நேரத்தை அதிகரித்தது..விடுமுறைகளை குறைத்தது...புராக்குமீன்களை ஊருக்குள் அழைத்தது...ஊரார் அனைவருக்கும் ஒரே கல்வியை தந்தது...சாதிய புனைப்பெயர்களை அழித்தது...உலக நாடுகளின் பண உதவியுடன் ஜப்பானியர் அனைவருமே தம் தம் திறமையை வைத்து ஏற்றுமதி தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் தந்தது...அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொழில் ரீதியாக கைகோர்த்து நின்றது... முதலாளித்துவமாக வெளியே தெரிந்தாலும் உள்ளே சிறந்த சோசலிச கொள்கை கொண்ட நாடாக பரிணமித்தது...
"ஜப்பானிய நாட்டில் தயாரிக்கப்பட்டது"(Made in Japan) என்றால் அதன் தரமே உலக நாடுகளின் தரத்தை விட உயர்ந்த தரமாக இருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் விட்டு கொடுக்கவில்லை...நாடு மெல்ல மெல்ல முன்னேறியது...இத்துபோன பழைய பெருமைகள் பேசி, எங்கள் சாதி, எங்கள் பரம்பரை, எங்கள் இனம் என்று முட்டுகட்டையாக கூவிய சில பழமைவாதிகளை ஈவிரக்கமின்றி கைதி செய்து கடுமையாகக் தண்டித்தது...ஆன்மீகத்தை விட அறிவியல் சார் நாத்திகத்தையே முதல் கொள்கையாக பாவித்தது...
கலப்பு சாதி திருமணங்களை வலு கட்டாயமாக்கியது..சம்பந்தி வீட்டார் என்ன சாதி? நம் மேனேஜர் என்ன சாதி? சக பணியாளர் என்ன சாதி? எதிர் வீட்டுக்காரன் என்ன சாதி ? என்று மோப்பம் பிடிப்பதை அரசாங்கம் தண்டனை குற்றமாகவே மாற்றியது...சாதியை பற்றி பேசினாலே கடும் தண்டனை என்பதால் வெறும் 30 ஆண்டுகளில் கடை சாதியான புராக்குமீன்
இரத்தமும் ஆண்ட சாதியான சாமூராய் இரத்தமும் அனைத்து ஜப்பானியர் உடலிலும் ஓடியது..

விளைவு...??
இந்தியா இன்னமும் 100 ஆண்டுகளில் வளரமுடியாத சமூக வளர்ச்சியை பெற்று இன்று ஜப்பான் நாம் எட்ட முடியாத தூரத்தில் உயர்ந்து நிற்கிறது‌..
"புராக்குமீன்" என்ற வெறுப்பை ஒரு கடந்தகால கனவாக ஜப்பான் மக்களிடம் மறக்கடித்து சாதி பிரிவினைகளை வென்று உலக நாடுகளில் சிறந்த மக்கள் மேம்பாடான முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது‌ ......
இந்தியா..??

காய்கறி கவிதை / திருக்குறள் !


தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில்
எக்காலும் நோயில்லை காண் .

எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர்
எலும்புக்கு வலு சேர்க்குமே .

வெங்காய மில்லாச் சாம்பார் எஞ்ஞான்றும்
தங்காதே நாவில் ருசி .

பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே
புடலங்காய் போற்றிச் சுவை .

தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய்
முள்ளங்கி மூன்றினை த்தான்.

வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும்
தொண்டையில் இறங்காது காண் .

வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும்
வாழாதார் என்பது வழக்கு .

கத்திரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம்
இத்தரையில் பித்தருக்குச் சமமெனக்கொள் .

பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில்
புகழோடு வாழ்வார் அவர் .

காய்கறியை உண்ணாதார் வாழ்க்கை எப்போதும்
நோய்நொடியில் வீழ்ந்து கெடும்.

முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் வேறெல்லாம்
வெறுங்கையில் முழம் போடுவர் .

காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள
கரிசலாங் கண்ணியைச் சேர் .

இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில்
கரும்பைப் போய் விரும்பிச்சுவை .

உரிக்க உரிக்கத் தோல்தான் வெங்காயமென்றாலும்
செரிக்குமோ உரிக்காவிடில்.

பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும்
பலனது வேண்டுமெனில்

பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார்
சோகத்தில் சேர்ந்து விழும்.

வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில்
ஒரு துண்டு சேர்த்துச்சமை .

வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய்
தாழ்வேனெவே எண்ணு பவர்.

கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள்
தேரை வாழ்ந்த கதை .

பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும்
பீட்ரூட்டை உணவில் சமை.

கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம்
சத்தே என சரியாய் உணர் .
கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர்
சொறி பிடித்தோடுவார் காண் .

பொன்னிற மேனி வேண்டுமெனில் நீயந்த
பொன்னாங் கண்ணியைச் சேர் .

கண் இருந்தும் குருடரே காசினியில்
காய் கறியை உண்ணாதவர் .

படித்து ரசித்தது...