Search This Blog

Monday, June 6, 2016

உதடுகள் நனைக்கும் பொழுதுகள்

நீ பிரிந்து சென்றபோது முத்தங்களை
வழங்கத் தவறவிட்டது குறித்து ஆழ்ந்த வருத்தங்களை
உன் கோபச்சொற்களில் நிரப்பிவிட்டுப் போனாய்
கொடுக்கத் தவறியதால் உன் சிவந்த முகத்தின் அழகை
ரசித்ததை அறிந்திருக்கமாட்டாய்
என் மீதான ஆழ்ந்த காதலை
கொடுக்காத முத்தங்களின் வழியேதான் அனுபவிக்கிறேன்
இந்நேரம் உதடுகளால் உன் உதடுகளை நனைக்கும் பொழுதுகளை
கற்பனை செய்துகொண்டிருப்பாய்
அவ்வேளை உன் சொர்க்கத்திலிருக்கும்
இளம்கொடிகளால் ஆன ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்திருப்பாய்
என் ஆடைகளின் பொத்தான்களை மெள்ள அவிழ்த்து
என் மீது உன் உடலால் நீந்தி என் சிப்பிகளைத் திறந்து
ஒளிரும் முத்துக்களை சுகித்துக்கொண்டிருப்பாய்
தனித்திருக்கும் உன்னிடம் இல்லாத நான் இருந்துகொண்டிருப்பேன்
யாவும் கொடுத்தனுப்பாத முத்தங்களால்
நிகழ்த்துகொண்டிருப்பவை என்பதை அறிகிறாயா
எப்படியாவது தேற்ற முனைகிறபோது
உன் ரெளத்திரம் கடலைக் கவிழ்த்தாலும்
அணையாத நெருப்பாய் இருப்பதை அறிவேன்
பிரிவின் வலியில் நீ கரைந்து சொட்டுவதுபோல
கோடை வெயிலில் தகிக்கும் என்னுடலாய்
உருகிக் கரைந்து சொட்டுகிறேன்
நீயும் நானும் பார்த்தும் பேசாத இந்த நாட்களைச்
சபித்துக்கொண்டிருக்கிறேன்
உன் பார்வையில் உன் ஒரு சொல்லில்தான்
என் ஆயுட்காலம் நீள்கிறது…
IYYAPPA MADHAVAN

Sunday, June 5, 2016

Leadership (Bill Gates and a Tamilan)


முகம்மது அலி ; வாழ்க்கை வரலாறு


முகம்மது அலி (Muhammad Ali, இயற்பெயர்: காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர் (Cassius Marcellus Clay Jr.; சனவரி 17, 1942 - சூன் 3, 2016), ஓய்வுபெற்ற தலைசிறந்தஅமெரிக்க குத்துச்சண்டை வீரர் மற்றும் மூன்று முறைமிகுஎடை உலக வெற்றி வீரர். உலகிலயே தலைசிறந்த மிகுஎடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதப்படுபவர். ஆரம்ப காலங்களில், ரோமில் 1960-ஆம் ஆண்டு நடைபெற்ற 1960 ஒலிம்பிக்கு மெல்லிய மிகுஎடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தொழில் நெறிஞர் ஆனப்பின் தொடர் மிகுஎடை வெற்றிகள் மும்முறை பெற்ற ஒரே வீரர் ஆனார்.
1964-ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிக் கொண்டார். பின்பு 1975-ஆம் ஆண்டு சன்னி முசுலிமாக மாறினார். 1967-ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில்காமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்தார் மற்றும் வியட்நாம் போரிற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார் அலி. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் அவரது மேல்முறையீடு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவர் 2016ஆம் ஆண்டு சூன் 3ஆம் தேதி இயற்கை எய்தினார்



Excuse me Darwin sir


Saturday, June 4, 2016

NantHealth's cancer test became commercially available.


NantHealth has spent the last decade building an operating system that involves supercomputing to help oncologists decide how to use the information they gather.
The test can examine more than 20,000 genes — from a tumor as well as the patient — to help doctors take a more individualized approach to cancer treatment.
The test, called the GPS (short for "Genomic Proteomic Spectrometry") Cancer test, looks for protein biomarkers, which can give clues as to whether a person is resistant to a certain kind of cancer treatment, especially if it's the one that that patient would typically start on
"It frankly puts to bed the need for all other single tests,"
As use of NantHealth's cancer test picks up, Soon-Shiong said the plan is to see how things shift so that it's possible at a reasonable cost to make cancer treatment much less of a guessing game using much more quantitative information. Ideally, Soon-Shiong wants that to lead to personalized therapeutics that are tailored to a patient's exact cancer, making that person the "n of 1" in a trial with the intent to get the job done.
Cecile G. Tamura

Biotechnology is going through a rapidly advancing but ethically fraught period.




Scientists proposed a long-term project Thursday that involves creating DNA blueprints for making human beings, a prospect some observers find troubling.
The researchers said they have no intention of using these genomes -- huge collections of genetic material -- to make people. Instead, they said in interviews, human genomes would be used in lab experiment: inserted, for example, into cells or simplified versions of organs called organoids.
Plans for the project, which leaked last month, have already set off an ethical debate, because the ability to chemically fabricate the complete set of human chromosomes could theoretically allow the creation of babies without biological parents.
Some critics also objected to the secrecy surrounding a meeting to discuss the project at Harvard Medical School in May. The organizers said they avoided publicity so as to not jeopardize publication of the proposal in a peer reviewed scientific journal. The publication occurred on Thursday by the journal Science.
Whether the federal government will support the project is still unknown. Dr. Francis S. Collins, director of the National Institutes of Health, which is the main funder of medical research in the United States, had a tepid response Thursday

பாடும் நிலா பத்மபூஷண் டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தநாள்






1966 ஆம் ஆண்டு திரையுலகில் தன் குரல் தடம் பதித்து 2016 ஆம் ஆண்டில் தன் ஐம்பதாண்டுக் கலைச்சேவையைக் கடக்கும்

”எஸ்.பி.பாலசுப்ரமணியம்” அவர்கள் இன்று தனது 70 வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். மனித நேயத்திலும், தன்னடக்கத்திலும், சிறந்த பன்புகளிலும், திறமையிலும் உயர்ந்த இடத்தில் இருக்கும் அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இசைசேவையாற்ற ”லஷ்மன் ஸ்ருதி” இசைகுழுவின் சார்பாக வணங்கி வாழ்த்துகிறோம்.


 








• ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் எனப்படும் எஸ்,பி.பி அவர்கள் 4.6.1946 அன்று ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த கொணேட்டாம்பேட்டையில் பிறந்தவர். 

• எஸ்.பி,பாலசுப்பிரமணியம் எஸ் பி சாம்பமூர்த்தி மற்றும் சகுந்தலாம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர்.

• உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள்

• இவருடைய தந்தை ஹரிகதா கலைஞர் ஆவார். 

• பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிகதா வாசிக்கும் பொழுது கவனித்து, அதைக்கற்று, இசைக்கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும்.

• எஸ்.பி.பி பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்தபூரில் உள்ள ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி மாணவனாக சேர்ந்தார். டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

• 1964 ஆம் ஆண்டு அமெச்சூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னையை மையமாக்க் கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார்.
• எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• இளையராஜா, ஆர்.டி.பாஸ்கர் மற்றும் கங்கை அமரன் இவர்களோடு சேர்ந்து எஸ்.பி,பி இசை நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொண்டிருந்தார்.
• நாடகங்களில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 
• அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ்.பி.பிக்கு முதல் போட்டிப் பாடல் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய ”நிலவே என்னிடம் நெருங்காதே” என்ற பாடலாகும்.



















• வாய்ப்புக்காக இசையமைப்பாளர்களிடம் செல்லும்போதும் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்களையேதான் பாடிக்காட்டுவார்.

• எஸ்.பி.பி என்ற மூன்றெழுத்துக்களால் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்
• எஸ்.பி.பாலா என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அழைப்பார்கள்.
• பாலு என்று இசைத்துறை நண்பர்கள் அழைப்பார்கள்
• பாலுகாரு என்று ஆந்திர மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
• 1966 ல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து தன் திரைத்துறை வாழ்வை துவங்கியவர்
• . 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். 
• உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான, நாற்பதாயிரம் பாடல்களுக்கும் மேல் பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைக புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 
• திரைப்படப் பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். 
• இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் ”பத்மஸ்ரீ” விருதும் 2011 ஆம் ஆண்டில் ”பத்மபூஷண்” விருதும் வழங்கியது
• 1960 களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார்.
• இவர் தமிழில் முதலில் பாடியது ”சாந்தி நிலையம்” படத்தில் வரும் ”இயற்கையென்னும் இளையகன்னி” என்ற பாடலாகும். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா வெளிவந்தது 
• ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். 
• எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்று அவர் அடிக்கடி சொன்னாலும், ”சங்கராபரணம்” படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். 
• இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. 










• ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றிருக்கிறார். 
• 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். 
• எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். 
• பின்னணி பாடகி எஸ். பி. சைலஜா இவருக்கு இளைய தங்கை ஆவார் அவரும் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்
• எஸ்.பி.பி யின் மனைவி பெயர் சாவித்ரி, மகன் எஸ். பி. பி. சரண், மகள் பல்லவி, 
• எஸ்.பி.பி சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருபவர்.

• எஸ்.பி.பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ்.பி.கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா (1966), இத்திரைப்படத்தில் ஒரு பாடலைப்பாடினார்.
• அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் "நகரே அதே ஸ்வர்க" என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு பாடினார்.
• இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இயற்கையென்னும் இளையக்கன்னி பாடலைப் பாடினார்.தமிழில் இரண்டாவது பாடலாக எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த அடிமைப்பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலைப்பாடினார்.
• மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி.தேவராஜன் அவர்களால் கடல்பலம் என்ற திரைப்படத்தில் "ஈ கடலும் மறு கடலும்" பாடல் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
• இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.
• தமிழ் திரைப்பட உலகில் எம்.ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார்.
• இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.
• தென்னிந்திய திரையிசையில் வெற்றிக் கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.
• எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார்.
• சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது.
• இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே.வி.மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
• இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார்.








• இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.
• எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடகிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ் பி பி, எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன.
• 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சாகர சங்கமம் (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைந்ததனால் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது.
• 1988 ஆம் ஆண்டு ருத்ரவீணா (தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது.
• இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார் .
• 1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.பி.பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ஹம் ஆப்கே ஹே ஹான் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது இப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் எஸ்.பி.பி பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார்.
• எஸ் பி பி 1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் இசை அரங்கேற்ற படம் ரோஜா இதில் எஸ் பி பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.
• பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவயி (1995) இத்திரைப்படத்தில் உமண்டு குமண்டு பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.
• எஸ் பி பி 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர்ராஜா, கார்த்திக் ராஜா, ஆதித்யன், ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் போன்றோரின் இசையமைப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.
• இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்" விருது பெற்றுள்ளார்.
• எஸ்.பி.பி நடிகர் கமல்ஹாசனுக்கு தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
• கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ்.பி.பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
• குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான்கான், கே.பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஷ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
• நடிகர் கமலஹாசனுக்கு குரல் ஒன்றிய பின்னணி கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமய்யா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார்.
• பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
• தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.

பழநியாண்டவருக்கு அரோகரா..






ஆழிக்குமரன் ஆனந்தன்

எத்தனை பேர் அறிவோம் ஆழிக்குமரன் ஆனந்தனை. இந்தச் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்போம்.
ஆழிக்குமரன் ஆனந்தன் ஈழத்து நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன்.

1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.
குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை. இறப்பு ஆகஸ்து 6, 1984 ஆங்கிலக் கால்வாயில்.

Muscular Dystrophy இந்த தகவல் யாரேனும் சிலருக்கு உதவலாம் அகவே ஷேர் செய்யுங்கள்



A muscular dystrophy is a group of diseases that cause progressive weakness and loss of muscle mass. In muscular dystrophy, abnormal genes (mutations) interfere with the production of proteins needed to form healthy muscle.
There are many different kinds of muscular dystrophy. Symptoms of the most common variety begin in childhood, primarily in boys. Other types don't surface until adulthood.
Some people who have muscular dystrophy will eventually lose the ability to walk. Some may have trouble breathing or swallowing.
There is no cure for muscular dystrophy. But medications and therapy can help manage symptoms and slow the course of the disease.

    Symptoms

    By Mayo Clinic Staff
    The main sign of muscular dystrophy is progressive muscle weakness. Specific signs and symptoms begin at different ages and in different muscle groups, depending on the type of muscular dystrophy.

    Duchenne muscular dystrophy

    About half of people with muscular dystrophy have this variety. Although girls can be carriers and mildly affected, the disease typically affects boys.
    About one-third of boys with Duchenne muscular dystrophy don't have a family history of the disease, possibly because the gene involved may be subject to sudden abnormal change (spontaneous mutation).
    Signs and symptoms typically appear between the ages of 2 and 3, and may include:
    • Frequent falls
    • Difficulty getting up from a lying or sitting position
    • Trouble running and jumping
    • Waddling gait
    • Walking on the toes
    • Large calf muscles
    • Muscle pain and stiffness
    • Learning disabilities

    Becker muscular dystrophy

    Signs and symptoms are similar to those of Duchenne muscular dystrophy, but typically are milder and progress more slowly. Symptoms generally begin in the teens but may not occur until the mid-20s or even later.

    Other types of muscular dystrophy

    Some types of muscular dystrophy are defined by a specific feature or by where in the body symptoms first begin. Examples include:
    • Myotonic. Also known as Steinert's disease, this form is characterized by an inability to relax muscles at will following contractions. Myotonic muscular dystrophy is the most common form of adult-onset muscular dystrophy. Facial and neck muscles are usually the first to be affected.
    • Facioscapulohumeral (FSHD). Muscle weakness typically begins in the face and shoulders. The shoulder blades might stick out like wings when a person with FSHD raises his or her arms. Onset usually occurs in the teenage years but may begin in childhood or as late as age 40.
    • Congenital. This type affects boys and girls and is apparent at birth or before age 2. Some forms progress slowly and cause only mild disability, while others progress rapidly and cause severe impairment.
    • Limb-girdle. Hip and shoulder muscles are usually the first affected. People with this type of muscular dystrophy may have difficulty lifting the front part of the foot and so may trip frequently. Onset usually begins in childhood or the teenage years.

    When to see a doctor

    Seek medical advice if you notice signs of muscle weakness — such as increased clumsiness and falling — in yourself or your child.

Wednesday, June 1, 2016

“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம்.

’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-

கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்)RFIDRFID உதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:
ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:
தமிழா-மியான்மர்
சபா சந்தகன் – மலேசியா
கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா
கடாலன் – ஸ்பெயின்
நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்
சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ
திங் வெளிர்- ஐஸ்லாந்து
கோமுட்டி-ஆப்ரிக்கா

இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.
இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!
பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.
Tamil bell Found in New ZealandTamil bell Found in New Zealand
நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்கhttp://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும்.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.
இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது.
கலிங்க பாலு அவர்கள் எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இப்போது தான் ஒரு நிறுவனம் நிறுவி அவருடைய ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார். இது பற்றிய ஆர்வமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம். அவருடைய இமெயில் முகவரி -kalingatamil@yahoo.co.in

நான் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் என்னை வருத்தப் பட வைத்த விஷயம், அரங்கம் நிறைய தமிழ் ஆர்வலர்கள் குழுமியிருந்தனர். ஆனால் பெரும்பாலும் நரைமுடிகளையே காண முடிந்த்து. மொத்தமே 10 இளைஞர்களே என் கண்ணில் பட்டனர். அதிலும் மூவர் ஒலி ஒளி அமைப்பாளர்கள்.
நண்பர்களே நான் அந்நிகழ்ச்சி முடிந்ததும் அதன் ஒருங்கினைப்பாளர்களிடமும் கலிங்க பாலுவிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடிய போது Facebookகில் நம் சங்கத்தை பற்றியும் நம்முடைய தமிழார்வத்தை பற்றியும் விளக்கி நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வதாக சொன்னேன். அதற்கு அவர்கள் சந்தோஷப் பட்டு ஒரே ஒரு உதவி மட்டுமே கேட்டனர். இளைஞர்களிடம் அதுவும் குறிப்பாக தமிழில் பேசுவதையே இழுக்காக கருதும் இளைஞர்களிடம் இந்த தகவல்களை கொண்டு செல்ல உதவ வேண்டும் என்றார்கள்.
நம்மால் முடிந்தவரை இந்த தகவலை பகிர்ந்து நம்முடைய வரலாற்றை பலருக்கு கொண்டு செல்லுவோம்.
நன்றி.
வினோதன்.

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில்
போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?
தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள்
நிறைய.
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!
மத்திய
தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை
அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்
மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில்
ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.
உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,
கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்
மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.
கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.
சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்
பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்
அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.
போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்
உண்மை!
கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்
தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ்
கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட
வழித்தடமும் ஒன்றுதான்!
ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க
இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும்
ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம்
தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.
விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம்
உண்டு. தான் பிறந்த
இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.
தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு.

சம்மணமிட்டு சாப்பிட சொல்வது ஏன்?




தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது.

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை
போல் ஆகிவிட்டது.

விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என
ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான்
கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப்
பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம்
தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட,
சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச்
செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு
அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

The Spoiler Paradox