Search This Blog

Thursday, April 28, 2016

Safety Tips in Using an Excavator

Ground-moving projects pose a great danger to both pedestrians and the operators, thus the need for security precautions. A detailed understanding of how an excavator functions is the starting point to take the necessary precautions. 
necessary precautions. Note that safety begins with the individual operating the machine; thus, only a trained operator should operate an excavator.
Excavating specialists at Classic Hire give some safety tips that should be observed by operators who hire this valuable construction equipment in Perth.
GROUNDWORK CHECKS
Adequate Fuel
Just like any other machine, an excavator needs enough fuel to function smoothly. Low fuel levels may lead to an unexpected shutdown that could cause injuries or dangerously unstable situations. Visual inspection of the fuel levels before operating the excavator avoids such unfortunate predicaments.
Assessing the Ground
The site should be inspected for ditches, loose soil, and obstacles to avoid driving the excavator on unstable land. The operator should not position the excavator too close to the edge of the ditch to avoid tipping over. Additionally, workers around the site should vacate the area to avoid being trapped in the cave-in or tracks.
DURING THE OPERATION
Positioning the Truck
The rule of the thumb states that the loading vehicle should be on the left side of the excavator (allows a 25-degree swing) such that the truck bed headboard faces the rear side of the excavator. This way the operator has clear visibility of what he is doing.
Avoid Creating an Undercut
An undercut occurs when the driver digs the ground beneath the excavator’s tracks. Undercuts often cause cave-ins that could cause serious injuries or death. Additionally, the operator should not exceed the allowed load limits for the buckets. Overloaded buckets may cause instability as the excavator may tip over.
These are just a few safety tips operators should observe when operating an excavator. Regular training of drivers, signallers, and pedestrians is equally important.
THANKS 
http://biomechanism.com/

உனக்கும் எனக்கும்…. (சிறுகதை)


"ம் ...சொல்லு"
 
"என் பேர் கூட ஞாபகமில்லையா?"
 
"இதை கேக்கதான் இப்ப போன் பண்ணினயா?"
 
"போன் பண்ணினது தப்பு தான்... வெச்சுடறேன்" என்றவளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மனதை வருத்த
 
"சுமித்ரா..." என அவளை நிறுத்தினான்
 
தூக்கத்துல கூட சுமி மித்து மித்ரானு சொன்னதெல்லாம் மறந்தாச்சு, சுமித்ரானு நீட்டி மொழக்கணுமா என எரிச்சலில் குமைந்தாள்
 
"சொல்ல வந்தத சீக்கரம் சொல்லு. எனக்கு நெறைய வேலை இருக்கு"
 
"ஒரு நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியாத அளவுக்கு பிசியா?"
 
"இப்ப சண்டை போடத்தான் போன் பண்ணினயா? அதைதான் தினமும் வீட்ல செஞ்சுட்டு இருக்கமே" என்றான் எரிச்சலாய்
 
"என்கிட்டே பேசவே புடிக்கல, இல்லையா ராகவ்"
 
"நான் அப்படி சொல்லல"
 
"வார்த்தையா சொல்லணும்னு அவசியம் இல்ல"
 
"இப்ப எதுக்கு போன் பண்ணின...கெட் டு தி பாயிண்ட்" என்றான் பொறுமை இழந்தவனாய்
 
"எங்க ஆபீஸ்ல நாளைக்கி தீபாவளிக்கு ஏதோ பார்ட்டியாம்"
 
"ம்..."
 
"அதுல ஜோடி பொருத்தம் ப்ரோக்ராம் வெக்கராங்களாம்"
 
"அதை எதுக்கு என்கிட்டே சொல்ற" என்றான் எரிச்சலாய்
 
"நமக்கு கல்யாணம் ஆனதாச்சும் ஞாபகம் இருக்கா?" என்றாள் கோபமாய்
 
"நல்லாவே ஞாபகம் இருக்கு. அதோட, ரெண்டு மாசம் முன்னாடி டைவர்ஸ் அப்ளை பண்றது விசியமா லாயரை போய் பாத்தது கூட நல்லாவே ஞாபகம் இருக்கு"
 
"அது இன்னும் ஊருக்கு தெரியாதே"
 
"அதுக்காக...."
 
"நாமளும் அந்த ப்ரோக்ராம்ல..."
 
"உனக்கென்ன பைத்தியமா சுமித்ரா" என இடைமறித்தான்
 
"நீங்க தானே டைவர்ஸ் பைனல் ஆகற வரை யாருக்கும் சொல்ல வேண்டாம்னு..."
 
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்"
 
"எல்லா கபில்சும் கண்டிப்பா பார்டிசிபேட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க"
 
"இங்க பாரு..."
 
"எனக்கும் ஒண்ணும் நாம ஜோடியா கொஞ்சிட்டு நிக்கணும்னு ஆசையில்ல, வேற வழி இல்லாம தான், எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. ப்ளீஸ் ராகவ்...இந்த ஒரு வாட்டி எனக்காக ப்ளீஸ். "
 
ஒரு கணம் மௌனம் காத்தவன், அதற்கு மேல் மறுக்க மனமின்றி "ஒகே" என அழைப்பை துண்டித்தான்
________________________________
 
அலுவலக சகாக்கள் எல்லாரும் தங்கள் கணவன் அல்லது மனைவியுடன் அமர்ந்து கேள்வி பதில் ரிகர்சலில் மூழ்கி இருக்க, சுமித்ராவும் ராகவ்'ம் மட்டும் மௌனமாய் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தனர்
 
"ஹெலோ மிஸ்டர் ராகவ், எப்படி இருக்கீங்க?" என கை குலுக்கினார் சுமித்ராவின் மேனேஜர் சத்யன்
 
"பைன் சார், நீங்க எப்படி இருக்கீங்க?" என சம்பிரதாயமாய் வினவினான் ராகவ்
 
"பைன் பைன்... என்ன சுமித்ரா ஆல் ப்ரிபேர்ட் போல இருக்கே. டென்ஷன் இல்லாம அமைதியா இருக்கீங்க ரெண்டு பேரும்" என கேலியாய் வினவ, ஒன்றும் பேசாமல் சிரித்து மழுப்பினாள் சுமித்ரா
 
"குட் ஈவினிங் எவ்ரிபடி. வெல்கம் டு அவர் திவாளி செலப்ரேசன்" என ரிசப்சனிஸ்ட் ராதிகா மேடையேறி வரவேற்பை துவங்க
 
"ஏன் ராதிகா உனக்கு தமிழ் தெரியாதா?" என கூட்டத்தில் சக ஊழியர் ஒருவர் கேலி செய்ய
 
"ஒகே கார்த்திக் டமில்லேயே கண்டினியு பண்றேன்"
 
"அம்மா தாயே இப்படி தமிழை கொல்றதுக்கு பதிலா நீ ஆங்கிலத்துலையே சொல்லு" என அதற்கும் கேலி தொடர்ந்தது
 
ஒருவழியாய் ஆரம்ப சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி தொடங்கியது. முதல் இரண்டு சுற்றில் ஜெய்த்து இரண்டு தம்பதிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் சுமித்ரா ராகவ் தம்பதியும் இருந்தனர்
 
சக ஊழியர்களின் கேலியும் ஆர்ப்பட்டமும் சுமித்ராவை நெளியச் செய்தது. இன்னும் சில மாதங்களில் விவாகரத்து செய்தியை சொல்லும் போது என்ன நினைப்பார்கள் என யோசித்தாள்
 
அவளே ஆச்சிர்யப்படும் விதமாய் இருவரும் ஒரே போன்ற பதிலை கூறி இருந்தனர். இத்தனை புரிதல் இருந்தும் ஏன் இன்று விவாகரத்து வரை சென்றது என வருந்தினாள். ஒருவேளை அதீத புரிதல் தான் தங்களுக்குள்ளான பிரச்சனைக்கு காரணமோ என தோன்றியது சுமித்ராவுக்கு
 
திருமணமான இந்த இரண்டு வருடத்தில் சந்தோசமாய் இருந்த நாட்களை விட இருவரும் சண்டை போட்ட நாட்கள் தானே அதிகம் என வேதனை தோன்றியது. தினம் தினம் இப்படி வேண்டாமல் சேர்ந்து வாழ்வதை விட பிரிவதே மேல் என முதல் கூறியது சுமித்ரா தான்
 
அவள் சொன்னதற்கு ராகவ் மறுப்பேதும் கூறவில்லை. அவள் சொல்லவே காத்திருந்தது போல் மறுநாளே வக்கீலை பார்க்க அழைத்து சென்றான். அதன் பின் ஒரே வீட்டில் இரு துருவங்களாய் இருந்தனர் இருவரும்
 
அவன் கேட்டு கொண்ட ஒரே விசியம், பெற்றோர் உட்பட யாருக்கும் எல்லாம் முடியும் வரை இதை பற்றி சொல்ல வேண்டாம் என்பது மட்டும் தான். இப்போதிருந்தே எல்லோருக்கும் விளக்கம் சொல்ல விருப்பமில்லை என அதற்கு காரணமும் சொன்னான்
 
"மிஸ்டர் அண்ட் மிசஸ் கார்த்திக் பைனல் ரௌன்ட்ல ரெண்டு கேள்வில ஒரு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பத்துக்கு அஞ்சு மார்க் வாங்கி இருக்காங்க. கன்க்ராட்ஸ் உங்களுக்கு" என்ற நிகழ்ச்சி நடத்தும் பெண்ணின் வாணியின் அறிவிப்பில் தன் நினைவில் இருந்து மீண்டாள் சுமித்ரா
 
"இனி, மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். ராகவ் சார், சுமித்ராகிட்ட ரெண்டு கேள்விக்கு பதில் வாங்கி வெச்சு இருக்கோம். ரெண்டு கேள்விக்கும் சுமித்ரா சொன்ன அதே பதில நீங்களும் சொன்னா கார்த்திக் ஜோடிய பீட் பண்ணிடலாம். அதோட.... இன்னைக்கு சூப்பர் ஜோடி பட்டமும் உங்களுக்கு தான். வாங்கிடுவீங்களா?" என கேள்வியாய் நிறுத்த, ராகவ் மௌனமாய் சுமித்ராவை பார்த்தான்
 
அவனின் குற்றம் சாட்டும் பார்வையை சந்தித்தவளுக்கு கண்ணில் நீர் கோர்த்தது. அதை மறைக்க குனிந்து கொண்டாள்
 
அதை வேறு விதமாய் புரிந்து கொண்ட வாணி "ஆஹா...இத்தன கூட்டத்துல பத்தடி தள்ளி உக்காந்துட்டு இருக்கும் போதே கண்ணுலேயே ரொமேன்ஸ் நடக்குதா...ஹே" என கேலி செய்ய, மற்றவர்களும் ஆரவாரம் செய்தனர்
 
உண்மை காரணம் புரிந்த ராகவ் மட்டும் மௌன புன்னகையில் வேதனையை மறைத்தான்
 
"ஒகே மிஸ்டர் ராகவ், உங்களுக்கான முதல் கேள்வி. சுமித்ராவுக்கு ரெம்ப பிடிச்ச அப்புறம் பிடிக்காத ஒருத்தர் பேர் சொல்லுங்க. உங்களுக்கு டென் செகண்ட்ஸ் டைம்"
 
ஒரு கணம் கூட யோசிக்காமல் "ரெண்டுமே நான் தான்" என்றான்
 
"ஆர் யு ஸூர் மிஸ்டர் ராகவ். அதெப்படி உங்க மனைவிக்கு பிடிக்காத லிஸ்ட்ல நீங்க இருக்க முடியும். சுமித்ரா இந்த பதில் தான் சொல்லி இருப்பாங்கனு நினைக்கறீங்களா?"
 
"விருப்பு வெறுப்பு ரெண்டுமே நமக்கு புடிச்சவங்க மேல தானே காட்ட முடியும். சோ, ரெண்டுமே அவளுக்கு நான் தான். இதான் அவளோட பதிலா இருந்துருக்கும்" என்றான் சர்வநிச்சியமாய். அவன் முகத்தை பார்க்கும் தைரியம் இன்றி குனிந்தே இருந்தாள் சுமித்ரா
 
"ஆடியன்ஸ்... இந்த ஏன்சர் சரியா தப்பானு ஒரு பிரேக் முடிஞ்சு பாக்கலாமா?" என வேண்டுமென்றே வாணி சீண்ட
 
"ஏய்..." என மற்றவர்கள் மிரட்ட "கரெக்ட் ஏன்சர்" என அறிவித்தாள் வாணி. கூட்டத்தில் கை தட்டல் எழுந்தது
 
"ஒகே பைனல் கொஸ்டின். சூப்பர் ஜோடி நீங்களா இல்ல கார்த்திக் ஜோடியானு தீர்மானிக்க போற கேள்வி. கேக்கலாமா?" என வாணி நிறுத்த
 
"இந்த கொசு தொல்ல தாங்க முடியல சாமி. கேள்வியை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?" என சக ஊழியர் ஒருவர் பொங்கி எழ
 
"கூல் மிஸ்டர் மூர்த்தி. இதோ நானே கேட்டுடறேன். மிஸ்டர் ராகவ், சும்மா ஜாலிக்கு தான், தப்பா எடுத்துக்க வேண்டாம். சுமித்ராகிட்ட தீவாளிக்கு நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேனு நீங்க சொல்றீங்கனு வெச்சுப்போம், அதுக்கு அவங்க மௌன ராகம் ரேவதி மாதிரி, எனக்கு விவாகரத்து வேணும்னு கேட்டா என்ன செய்வீங்க? டென் செகண்ட்ஸ் கவுன்ட் டௌன் ஸ்டார்ட்ஸ் நொவ்"
 
ஒரு கணம் மௌனமாய் சுமித்ராவை பார்த்தவன் "வாங்கி தருவேன். அவ கேட்ட விவாகரத்த வாங்கி தருவேன்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்
 
இந்த பதிலை எதிர்பாராத அதிர்ச்சி கூட்டத்தில் இருந்தவர்கள் முகத்தில் தெரிந்தது. சுமித்ரா "உன் புத்தி தெரிந்தது தானே" என்பது போல் கோபமாய் கணவனை பார்த்தாள். நிகழ்ச்சியை நடத்திய வாணி கூட ஒரு கணம் பேச மறந்து விழித்தாள்
 
"ராகவ் சார், சுமித்ரா என்ன பதில் சொல்லி இருக்காங்கனு எனக்கும் இன்னும் தெரியாது. இந்த கவர்ல தான் அந்த பதில் இருக்கு. ஆனா, என்னால இதை கேக்காம இருக்க முடியல. உங்க பதில் சினிமாத்தனமா இருக்குனு உங்களுக்கே தோணலையா?" என்றாள் வாணி
 
அவன் என்ன விளக்கம் சொல்ல போகிறான் என்பதை கேட்க அங்கு நிசப்தம் நிலவியது
 
"சினிமாத்தனமா இருக்கா இல்லையானு எனக்கு தெரியாதுங்க. என்னோட இருக்க புடிக்காம தான என் மனைவி விவாகரத்து கேக்கறா. நான் அவள அவ்ளோ கஷ்டபடுத்தி இருக்கேன்னு தானே அர்த்தம். நாம நேசிக்கறவங்க கஷ்டப்படரத பாக்கறது ரெம்ப வேதனை, நாமளே அதுக்கு காரணமா இருக்கறது இன்னும் கொடுமைங்க. அதான் விருப்பமில்லாத வாழ்க்கைல இருந்து அவள விடுவிக்க தயார்னு சொன்னேன், அது எனக்கு உயிர் போற வேதனைனே தெரிஞ்சும்" என ராகவ் கூறி முடித்ததும், கார்த்திக் ஜோடி உட்பட எல்லாரும் எழுந்து நின்று கை தட்டினர்
 
"வாவ்... உங்க சுமித்ராவும் நீங்க விவாகரத்து குடுக்க சம்மதிப்பீங்கனு தான் பதில சொல்லி இருக்காங்க. இன்னைக்கி சூப்பர் ஜோடி பட்டம் வாங்கி இருக்கறது மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். கிவ் தெம் எ பிக் ரவுண்டு ஆப் அப்ளாஸ்" என வாணி கூறவும் "ஹே..." என கூக்குரலுடன் மகிழ்ந்தனர் அனைவரும்
 
ஆனால் சம்மந்தப்பட்ட இருவர் மட்டும் மனதிற்குள் அழுதனர். ராகவ் சொன்ன பதிலில் உடைந்து போய் இருந்தாள் சுமித்ரா. அவன் விவாகரத்துக்கு சரி என்றதும் கோபம் கொண்டேனே, அவன் மனம் எப்படி வேதனைபட்டிருக்கும் என உணர்ந்ததும் அவன் கண்களை சந்திக்கும் தைரியம் இன்றி வாழ்த்து சொன்ன தோழிகளை எதிர்கொள்ளும் சாக்கில் அவனை தவிர்த்தாள் சுமித்ரா
 
போட்டியில் ஜெய்த்து இருந்தாலும் வாழ்வில் தோற்றுவிட்டோமே என வேதனையில் இருந்தான் ராகவ்
 
"ஒகே ஒகே... சைலன்ஸ்" என எல்லாரையும் அமைதிபடுத்திய வாணி
 
"எல்லாருக்கும் ஹேப்பி தீபாவளி. ராகவ் அண்ட் சுமித்ராவுக்கு சூப்பர் தீபாவளி, ஏன்னா நீங்க இந்த போட்டில ஜெய்ச்சதுக்கு உங்களுக்கு கொடைக்கானல் ரிசார்ட்ல நாலு நாள் தங்கரதுக்கான கிப்ட் வவுச்சர். ரெண்டு பெரும் ஜோடியா வந்து நம்ம மேனேஜர் சார்கிட்ட உங்க பரிசை வாங்கிக்கோங்க"
 
இருவரும் பரிசை பெற்றுகொண்டு மேடையை விட்டு இறங்க செல்ல "வெயிட் வெயிட்...அதுக்குள்ள ஓடினா எப்படி?" என பிடித்து நிறுத்தினாள் வாணி
 
"ஒகே மிஸ்டர் ராகவ். இப்ப உங்க சுமித்ராகிட்ட என்ன என்னமோ சொல்லணும்னு உங்க மனசுல ஓடிட்டு இருக்கும். அது எல்லாத்தையும் சொல்லணும்னு நாங்க எதிர்பாக்க முடியாது. ஆனா ஒரு ரெண்டு டயலாக் ஆச்சும் சொன்னாதான் நீங்க இங்கிருந்து போக முடியும். நான் சொல்றது சரி தானே?" என மற்றவர்களை பார்த்து வாணி கேட்க "ஆமா ஆமா" என பதில் வந்தது
 
காதலுடன் மனைவியை கண்ணோடு கண் பார்த்தவன் "ஐ லவ் யு மித்து" என்றான் ராகவ், வேறு எந்த வார்த்தையும் இப்போதைய தன் மனநிலையை உணர்த்தி விடாது என்பதை உணர்ந்தவன் போல்
 
அதை கேட்டதும் இத்தனை பேர் மத்தியில் இருக்கிறோம் என்பதை கூட மறந்தவளாய் கண்ணீருக்கு அணை போட இயலாமல் திணறினாள். வேகமாய் அவள் அருகே சென்ற ராகவ் அவளை தன் அணைப்பில் சேர்த்து கொண்டான். "அயம் சாரி அயம் சாரி" என அரற்றினாள் சுமித்ரா
 
"தப்பு என் மேலயும் தான் மித்து. வேலை வேலைனு உன்கூட சரியா டைம் ஸ்பென்ட் பண்ணாம அதான் நமக்குள்ள பெரிய கேப்பை உருவாக்கிடுச்சு... சாரி'ம்மா" என்றவனின் அணைப்பு மேலும் இறுகியது
 
அவனின் இறுகிய அணைப்பில் அவள் அழுகை மேலும் கூடியது. "ஹ்ம்ம்... அழுதா இந்த மூஞ்சிய பாக்க சகிக்கலயே. அப்ப மறுபடி டைவர்ஸ் பத்தி யோசிக்க வேண்டியது தான்" என்றவன் சீண்ட, அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அழுகையை நிறுத்தி அவனை முறைத்தாள் சுமித்ரா
 
"ம்... இந்த மூஞ்சி ஒகே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என மேலும் சீண்ட, மீண்டும் அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் சிரித்தாள்
 
நல்ல வேளையாய் மற்றவர்களின் கேலியான ரகளையில் யாருக்கும் இவர்களின் பேச்சு கேட்கவில்லை. கேலி பேச்சு தொடர அப்போது தான் சுற்றுபுறத்தை உணர்ந்தவர்களாய் வேகமாய் மேடையை விட்டு இறங்கினர் இருவரும்
 
"ஹேப்பி தீபாவளி" என்ற குரல் மட்டுமே எங்கும் ஒலித்தது
 
(முற்றும்)
புவனா கோவிந்த் 

Wednesday, April 27, 2016

மறைந்து கிடக்கும் தமிழ் மருத்துவம்!


நமது தமிழ் மருத்துவக் குறிப்புகள் பல செய்யுள் வடிவில் பலராலும் அறியப்படாமல் புதைந்து கிடக்கின்றன. தொழுநோய் அல்லது தோல்நோய் உள்ளவர்கள் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள "முசிறி'
என்ற சிற்றூரில் அமைந்துள்ள கோயில் குளத்தில் குளித்தால் அந்நோய் நீங்கிவிடும் என்கின்றனர்.
÷"சாக்கடல்' நீருக்கு (உப்புத்தன்மை அதிகமாக உள்ள கடல் நீர்) தொழுநோயைக் குணப்படுத்தும் மகத்துவம் உண்டு என்று கூறுவர். அதனால் அக்குளத்து நீரும் உப்புத்தன்மை மிகுந்ததாக இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.
÷இதன் உண்மையை அறிந்துகொள்வதற்காக அவ்வூருக்குச் சென்று, அங்குள்ள குளத்து நீரை அருந்தியபோது உப்புத்தன்மை இருப்பதாகத் தோன்றவில்லை; இனிமையுடையதாகவே இருந்தது. மேலும் அக்கோயிலில் பணி செய்யும் ஒருவரிடம் அக்கோயில் பற்றிய வரலாறு குறித்து கேட்டபோது, அவர் கூறிய வரலாறு இது:
÷"காஞ்சிபுரத்தில் சிற்றரசனாக இருந்தவன் முசுகுந்தன். அவனை ஏழரை நாட்டுச் சனி பிடித்துவிட்டது. தசரதன் வம்சத்தில் வந்த அவனுக்குத் தோல்நோயும் ஏற்பட்டுவிட, மருத்துவர்களால் குணப்படுத்த முடியாமல் போய்விட்டது. ஒரு
சிலர் அவனிடம் இராமேசுவரம் கடலில் நீராடினால் நோய் நீங்கும் எனக் கூறியுள்ளனர். அவ்வரசனும் அமைச்சர் உள்ளிட்ட சிலரோடும் இராமேசுவரத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். பயணம் கிளம்பியவர்கள் வழியில் தண்ணீர் கிடைக்காமல் இன்னலுற்றுள்ளனர். இச்சிற்றரசன் சிவபக்தனாக இருந்ததால் அவனது நோயைக் குணப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தொழு நோய் கொண்ட ஒரு நாயுருக் கொண்டு அவனுடனேயே வந்துள்ளார்.
÷ நீரின்றித் தவித்த அவர்களுக்கு இக்குளத்து நீர் பெரிதும் மகிழ்ச்சியைத்தர, ஓரிரு நாள் இங்கு தங்கிச் செல்லலாம் என முடிவெடுத்துள்ளனர். அவர்களோடு வந்த நாய் நோயின் கடுமையைத் தாங்க முடியாமல் அக்குளத்து நீரில் குதித்து நீந்தியுள்ளது. அன்று மாலையே நாயின் உடலிலிருந்த நோயின் கடுமை சற்று தணிந்ததுபோல் அரசன் உள்ளிட்டோருக்குத் தெரிந்துள்ளது.
÷அவர்கள் தொடர்ந்து அந்த நாயைக் கவனித்துவர, ஒருவாரம் அக்குளத்தில் குளித்த நாய் முழுமையாகக் குணம் பெற்றுள்ளது. உடனே முசுகுந்தனும் அக்குளத்தில் குளித்து, நோய் நீங்கப் பெற்றுள்ளான். இவ்விடத்தில் ஏதோ "சக்தி' உள்ளது என அறிந்த அவன், சோழ மன்னனின் அனுமதியுடன் இக்கோயிலைக் கட்டியுள்ளான். தன்னோடு வந்தவர்களை அங்கேயே தங்கவைத்து, "முசிறி' என்ற இவ்வூரை உருவாக்கிவிட்டு காஞ்சிபுரம் திரும்பிச் சென்றுள்ளான். அப்பரம்பரையில் வந்தவர்களே "முசுகுந்த வேளாளர்' என அழைக்கப்படுகின்றனர். இது தொடர்பான செப்பேடுகள் முன்பு இக்கோயிலில் இருந்தன; தற்போது அவை எங்குள்ளன என்று தெரியவில்லை'' என்றார் அந்தப் பணியாளர். மேலும், முசுகுந்தன் நாயோடு வருவது போல் செதுக்கப்பட்டிருந்த சிலை ஒன்றையும் சுட்டிக் காட்டினார்.
÷அவரது வரலாற்றில் விடை கிடைக்காததால், அக்குளக்கரையில் இருந்த ஒரு மரத்தைச் சுட்டிக்காட்டி "இது என்ன மரம்?' என்றபோது, "இது அழிஞ்சில் மரம்'. ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் அழிஞ்சில் மரக்காடுகள் இருந்தன' என்று கூறினார்.
÷பல்வேறு மரம் / செடிகளின் மருத்துவ குணத்தைக் குறிப்பிடும் நூலொன்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. அந்நூலின் பெயர் "பதார்த்தகுண விளக்கம்' என்பதாகும். இந்நூல் தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலைய வெளியீடாக வந்துள்ளது. மரம் / செடிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்தி, அந்தந்த மரம் / செடிகள் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் என்பவை செய்யுள்களாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில், அழிஞ்சில் மரத்து மருத்துவ குணங்கள் இரண்டு பாடல்களில் சுட்டப்பெற்றிருந்தன. அப்பாடல்கள் வருமாறு:

"அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்த்து
மொழிஞ்சபித் தத்தை யுயர்த்தும் - விழுஞ்சீழாங்
குட்டமெனு நோயகற்றும் உறுமருந் தெய்திடில
திட்டமென வறிந்து தேர்!'

"பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
செல்லாக் கிரந்திரணம் சேர்நோய்க - ளெல்லாமும்
அங்கோலங் காணில் அரந்தைசெய் நோய்களெல்லாம்
பொங்கோல மிட்டோடிப் போம்.'

இவ்விரு பாடல்களும் அழிஞ்சில் மரம் தொழுநோய், தோல் நோய் ஆகிய இரண்டிற்கும் மருந்தாவதைக் குறிப்பிடுகின்றன. ஆக, முசுகுந்தன் இவ்வூருக்கு வந்த காலத்தில் அழிஞ்சில் மர இலைகள் குளத்து நீரில் உதிர்ந்து, அழுகிக் கிடந்து, அந்நீர் நோய் தீர்க்கும் மூலிகை நீராக மாறியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
÷செய்யுள்களாக இருப்பவற்றையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையினர் புறந்தள்ளுகின்றனர். ஆனால், இந்நூலில் உள்ள குறிப்புகளைக்கொண்டே பல்வேறு முனைவர்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் அளவுக்கு தமிழ் மருத்துவம் தொடர்பான அரிய தகவல்கள் இந்நூலில் பொதிந்து - மறைந்து கிடக்கின்றன.

-முனைவர் அ.செல்வராசு