Search This Blog

Monday, November 9, 2015

அவளிடத்தில் துளிர்த்திருக்கும் சின்னஞ்சிறிய சிறகுகளில்

அதற்குப் பிறகான
சந்திப்புக்களில்
தண்ணீர் வண்ணத்தில்
அவளிடத்தில் துளிர்த்திருக்கும்
சின்னஞ்சிறிய சிறகுகளில்
அவளுடன் பறந்து திரிய
அவனை அனுமதித்தாள்
அவளின் சிறகுகளில்
கட்டற்று விரிந்தது
அவனின் எல்லை
எல்லையற்று விரிவதெல்லாம்
ஒற்றைப்புள்ளியில்
மையம் கொள்ளவே
என்பதையறிந்த கணத்தில்
சாம்பல்வண்ணப்
பறத்தலின் வெளி
அடர்ந்து நீலமாகியது .

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ NILAVU ORU PENNAAKI...... from Film: Ulagam Sutrum Vaaliban (1973)...


நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீர் அலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு களமாக போர்தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழிவிழுந்த கன்னத்தில் 
தேன் சுவையை தான் குழைத்து கொடுப்பதெல்லாம் இவள்தானோ
பவளமென விரல்நகமும் பசும்தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கிவரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாகா வாய்மொழி தான் மலர்ந்தவளோ
செந்தழலின் ஒளிஎடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த பெண் உடலை என்னவென்பேன்
மடல் வாழை துடை இருக்க மச்சமொன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமையெல்லாம் முழுமைபெற்ற அழகியென்பேன்
நன்றி: வாலி

Newly identified chemical in eye drop could clear up cataracts


Identified as a "priority eye disease" by the World Health Organization, cataracts--caused when the lenses of the eyes lose their transparency--affect more than 20 million people worldwide. Although cataracts can be successfully removed with surgery, this approach is expensive, and most individuals blinded by severe cataracts in developing countries go untreated.
Reported in Science, the newly identified compound is the first that is soluble enough to potentially form the basis of a practical eye-drop medication for cataracts.

S.Janaki.and.K. J. Yesu Das


Raga Yaman : Eri Aali : DIY Raga Labs Launch

கடவுளிடம் ஒரு விவசாயி

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.
”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.
பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.
கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.
விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.
”மழையே பெய்” என்றான்.
பெய்தது.
நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.
ஈரமான நிலத்தை உழுதான்.
தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.
மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.
பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.
வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.
அறுவடைக் காலமும் வந்தது.
விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.
அதிர்ந்தான்.
உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.
அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.
”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.
“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.
கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.
மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.
போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.
எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.
தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.
வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.
பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.
இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.
பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.
பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

Sunday, November 8, 2015

The nature and dynamics of world religions: a life-history approach Nicolas Baumard, Coralie Chevallier

In contrast with tribal and archaic religions, world religions are characterized by a unique emphasis on extended prosociality, restricted sociosexuality, delayed gratification and the belief that these specific behaviours are sanctioned by some kind of supernatural justice. Here, we draw on recent advances in life history theory to explain this pattern of seemingly unrelated features. Life history theory examines how organisms adaptively allocate resources in the face of trade-offs between different life-goals (e.g. growth versus reproduction, exploitation versus exploration). In particular, recent studies have shown that individuals, including humans, adjust their life strategy to the environment through phenotypic plasticity: in a harsh environment, organisms tend to adopt a ‘fast' strategy, pursuing smaller but more certain benefits, while in more affluent environments, organisms tend to develop a ‘slow' strategy, aiming for larger but less certain benefits. Reviewing a range of recent research, we show that world religions are associated with a form of ‘slow' strategy. This framework explains both the promotion of ‘slow' behaviours such as altruism, self-regulation and monogamy in modern world religions, and the condemnation of ‘fast' behaviours such as selfishness, conspicuous sexuality and materialism. This ecological approach also explains the diffusion pattern of world religions: why they emerged late in human history (500–300 BCE), why they are currently in decline in the most affluent societies and why they persist in some places despite this overall decline.

Saturday, November 7, 2015

Fluorite, Muscovite

Chemical Formula
Fluorite : CaF2
Muscovite : KAl2(AlSi3O10)(OH)2

Locality: Yaogangxian Mine, Yaogangxian W-Sn ore field, Yizhang Co., Chenzhou Prefecture, Hunan Province, China
Field of View: 25 mm

Photo Copyright © Ian Whitlock

தேசிய விருதுபெற்ற புகைபடம்! ஒரே கண் இரண்டு பார்வை!!


This is how to tell if someone is cheating on you


தீபாவளி ஸ்பெஷல்: மைசூர் பாகு


தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 1 கப்,
சர்க்கரை - 2 கப்,
நெய் - 3 கப்,
தண்ணீர் - 1 கப்.
செய்முறை :
* கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும்.
* அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்)
கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.
* அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும்.
* மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட
வேண்டும். அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.

நம்ப முடியவில்லை, இது ஓவியம் தான் என்பதை..


DNA in blood can track cancer development and response in real time

Over three years, researchers at the University of Cambridge took surgical tumor samples (biopsies) and blood samples from a patient with ER-positive and HER2-positive breast cancer that had already spread to other parts of her body.
They carefully studied small fragments of DNA from dying tumor cells that are shed into the blood, comparing them with DNA from the biopsy that was taken at the same point in time.
The results show that the DNA in the blood samples matched up with that from the biopsies, reflecting the same pattern and timing of genetic changes appearing as the cancer developed and responded to treatment.

கேத்தி ஏகர் கவிதை (ப்ளாரிடா நாவலிலிருந்து):

பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே
குளிராயிருக்கையில் பெண் ஈரமாகிறாள்
ஈரமாகும்போது பெண்  தளர்ந்துபோகிறாள்
பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே.

இப்பாடலின் கதையை நீ புரிந்துகொள்ளவேண்டுமா
தவறிப்போக விழையும் பெண்ணைப்பற்றியது இது
குண்டுப்பூனையைப்போல திருப்தியுறுபவள் அவள்
மல்லாக்கப் படுத்துக்கிடக்கும்போதுமட்டும்.

நல்லது, இப்பெண் ஒரு ஆணை நேசித்தாள்
துரதிர்ஷ்டசாலிகளான சிலபெண்களால் செய்யமுடிவதைப்போல.
அவனுக்குக் கொட்டைகளிருந்தன ஆனால் அவை அவன் மண்டைக்குள்
இச்சூடான பெண்ணை படுக்கைக்கு அழைத்துச்செல்ல மறுத்தான்.

பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே
குளிராயிருக்கையில் பெண் ஈரமாகிறாள்
ஈரமாகும்போது பெண்  தளர்ந்துபோகிறாள்
பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே.

அவளைக் காதலிக்கிறேன் என்றான்; சொன்னான்
அவள் தொடர்ந்து வாழ எதையும் தருவதாக.
விலங்கின் மென்மயிராடை வாங்கித்தருவதாக
முத்துகள் வாங்கித்தருவதாக.
ஆனால் அவள் யோனிக்கு ஒரு சுழலை அவன் தருவதாயில்லை
அவனைப் பெண்கள் பலர் தொடர்ந்துகொண்டிருக்க
இன்னும் எக்கச்சக்கப் பெண்களைப் புணர்ந்துகொண்டிருந்தான்.

ஆக அவனுக்காக இச்சோகப்பாடலை அவள் பாடினாள்
உலகம் எப்போதும் தவறாகவே இருப்பது பற்றி;
[பெரிய எழுத்துருவில்:]
செய்தால் இறப்பேன் செய்யாவிட்டால் இறப்பேன்
எழுதினால் இறப்பேன் எழுதாவிட்டால் இறப்பேன்
காதலில் விழுந்தால் இறப்பேன் விழாவிட்டால் இறப்பேன்

அவனுக்கு அவள் துச்சம், அவனுக்கு அக்கறையில்லை.
குளிர்காலக் காற்றின்முன் கத்தினாள் அவள்;
மணிக்கட்டுகளை அறுத்துக்கொண்டாள்; மொட்டையடித்துக்கொண்டாள்’
கிட்டத்தட்ட செத்துவிழும்வரை உணவை மறுத்தாள்.

அவளிடம் அவன் ஓடிவரவில்லை, மனிதர்களும் அவர்களின்
தேவைகளும் அவனுக்கு நோய் ஏற்படுத்துகிறதென்றான்.
தனித்து அமர்ந்திருக்க மட்டுமே அவனுக்குப் பிடித்திருந்தது
தன் கிராமத்துவீட்டில் அவன் தொலைபேசிக்கருகே.

பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே
குளிராயிருக்கையில் பெண் ஈரமாகிறாள்
ஈரமாகும்போது பெண்  தளர்ந்துபோகிறாள்
பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே.

ஆகவே கேளுங்கள் பெண்களே, உணர்ச்சியுறும் காதலிக்கும்
ஆணைத் தேடச் செய்யமுடிந்ததைச் செய்யுங்கள்.
தரமுடிந்ததையெல்லாம் அவனுக்குத் தாருங்கள்.
இன்னும்கூடத் தாருங்கள் நீங்கள் வாழவேண்டி.  

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி :


திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.
ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.
அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இலை விபூதியின் மகத்துவம் ;
அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார். 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"
பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."
ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?
விபூதியின் வரலாறு
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.
இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.
இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.
ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.
கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.
அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.
விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.
"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.
"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.
விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."
என்று பாடுகிறார். நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.

Natural Health Tips ::


Best Food For Eyes ::

You've probably heard that carrots and other orange-colored fruits and vegetables promote eye health and protect vision, and it's true: Beta-carotene, a type of vitamin A that gives these foods their orange hue, helps the retina and other parts of the eye to function smoothly.

But eating your way to good eyesight isn't only about beta-carotene. Though their connection to vision isn't as well-known, several other vitamins and minerals are essential for healthy eyes.


ஏங்குகிற மனதுக்குத் தெரியும்

இதைவிடக் கூடுதலாய்
ஒரு சொல்
இதைவிடக் கூடுதலாய்
கொஞ்சம் கவனம்
இதைவிடவும் கூடுதலாய் 
அணைப்பு என
ஏங்குகிற மனதுக்குத் தெரியும்
இதுவே போதும் எனவும்.
Courtesy : Painting -anup giri

முன்பெல்லாம் 
பலமுறை அவன்பெயரை 
எதிரொலித்த மலை 
இன்று மௌனமாக இருக்கிறது 

காற்றில் அசைகிற
இலைகளில் அறிகிறாள்
யாரோ பின்தொடர்வதை

திரும்பிப்பார்க்க எண்ணம்
வருவது அவனாக இருக்கலாம்
ஒருவேளை
அவனாக இல்லாவிட்டால்
தவித்துப் போகும் தன்னை
எப்படிச் சமன்செய்வது

முன் நகரவும் விரும்பாமல்
திரும்பவும் இயலாத
நிலையிலிருக்கும் அவளை
அவன் நினைவினால்
தொடர்வதை உணர்கிறாள்
உடலெங்கும்
தளிரிலை துளிர்த்து.



மழைக்காலத்தைப் போலவே
ஒவ்வொரு பருவமும்
அவளுக்குள்
இளம் இறகுகளை துளிர்த்து
அவளது முதிர் இறகுகளை 
உதிர்க்கவும் செய்கிறது

இம்முறை
காற்று உணர்த்திய ஈரத்தில்
நிலைகொள்ளா அந்தரங்கத்துடன்
பன்னீர் பூக்களின் வாசத்தை
அவளிடம் பூக்கச்செய்திருந்த
அவனுக்குப்
பறத்தலின் வெளியைப் பரிசளித்தாள்

மழை தொடங்கிவிட்டது.
Sakthi Jothi

Friday, November 6, 2015

Transport weapons of mass destruction Concept OOOOOh what man!


தொங்கும் தூண் கொண்ட கோட்டை :

வரலாற்றுப் பெருமையின் மௌன சாட்சியாக நிற்கிறது தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டை. ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த கடையெழு வள்ளல்களுள் ஒருவரான அதியமான்தான் இந்தக் கோட்டையை நிர்மாணித்தவர். வரலாற்றுச் சிறப்பு மிக்க தர்மபுரி மாவட்டம் சங்க காலத்தில் தகடூர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது. தகடூரை ஆண்ட அதியமான் மாபெரும் போர்வீரர். அதியமானின் சிறப்பைப் பாடி புலவர்கள் பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். இப்படி வந்த புலவர்களில் ஒருவர்தான் ஔவையார்.
தர்மபுரிதான் அதியமானின் தலைநகரமாக விளங்கியுள்ளது. மன்னர் அதியமானின் தலைமையிடமாக அதியமான் கோட்டை செயல்பட்டுள்ளது. தர்மபுரியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் எனத் தொல்லியலாளர்களும் வரலாற்றறிஞர்களும் தெரிவிக்கிறார்கள். இப்போது சில பகுதிகள் பழுதடைந்த நிலையில் உள்ள இந்தக் கோட்டை நீள்வட்ட வடிவத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது இந்தக் கோட்டையிலிருந்து பழைய நாணயங்கள் முதலானவை வெளியுலகிற்குத் தெரியவருகின்றனவாம். அதியமான் கோட்டைதான் தகடூர் நகரின் நுழைவாயிலாக இருந்திருக்க வேண்டும் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதியமான் கோட்டையின் நுழைவாயில் மிகப் பெரியதாக இருந்துள்ளது. கோட்டை மதிலில் எதிரிகள் ஏற முடியாதபடி மதிலின் வெளிப்புறச் சுவரில் கடுகு எண்ணெய்யைப் பூசியுள்ளார்கள். இந்தக் குறிப்புகள் எல்லாம் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கோட்டைப் பகுதியில் உள்ள முக்கியக் கோவில் சோமேஸ்வரர் கோயில். இந்தக் கோயில் வெளிப்புறக் கல்சுவரில் யானை உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதுதான் அதியமானின் முத்திரை எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கோவில் தவிர, பைரவர், அங்காளம்மன், நரசிம்மர், காளியம்மன் ஆகிய கோவில்களும் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளன. இந்தக் கோட்டையில் படைவீரர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. கோட்டையின் மண்டபங்களில் மேற்புறச் சுவரில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கவனமின்றி சில ஓவியங்கள் மீது சுண்ணாம்பு பூசி அழிக்கப்பட்டுவிட்டன. இந்த ஓவியங்களில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்கள் தாம் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ஓவியங்கள் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்றறிஞர்கள் சொல்கிறார்கள்.
அதியமான் கோட்டையிலுள்ள மகா மண்டபத்தின் தொங்கும் கல்தூண்கள் கட்டடக் கலையின் அதிசயத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் இரண்டு டன்கள் எடை கொண்டவை. இவை தரையைத் தொட்டு நிற்கவில்லை. இந்தக் கோட்டை பழங்காலச் சின்னமாக இருப்பதால் அதியமான் கோட்டம் என்னும் பெயரில் இந்தக் கோட்டையைத் தமிழக அரசு பாதுகாக்கிறது. இந்தக் கோட்டத்தில் அதியமான், ஔவையார் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
-நன்றி தி இந்து

இந்த "மெஸேஜ்" இதுவரை ஏன் பரவவில்லை அல்லது பரப்பப்படவில்லை?

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இயற்கை வேளாண் விஞ்ஞானி பேரறிஞர் நம்மாழ்வார் இயற்கைக்கு எதிரான , ரசாயன உரங்கள் பூச்சிகொல்லிகள் பயன்பாடு குறித்தும் பன்னாட்டு நிறுவனங்களின் நயவஞ்சக சதிகளையும் அதற்க்கு துணைபோகும் அரசையும் குறித்து தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பல்வேறு நோய்களுக்கு ஆளாகி சம்பாத்யத்தின் பெரும்பகுதி மருத்துவருக்கும் மருந்திற்க்கும் செலவாகும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். நம்மாழ்வார் ஏற்படுத்திய விழிப்புணர்வின் தாக்கம்தான் இதுபோன்ற திரைப்படங்களாக வருகின்றது சினிமாக்காரன் சொன்னால்தான் வாயைப்பிளந்துகொண்டு கேட்டு உணர்ச்சிவசப்பட்டு விழிக்கும் கேடுகெட்ட சமூகமாக இன்னமும் உள்ளது தமிழ் சமூகம் .

ஆதிச்சநல்லூர் 'முதுமக்கள் தாழி'

ஆதிச்சநல்லூர் 'முதுமக்கள் தாழி' மீதான கிறக்கம் சொல்லில் முடியாதது. பெருங்கற்கால மக்கள், முட்டை வடிவிலான கருப்பை போன்ற இந்த ஈமத்தாழிகளில் தாம் அடக்கம் செய்யப்பட்டால் மீண்டும் பெண்ணின் கருப்பையிலேயே வந்து பிறப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதன் வாய்ப்பகுதியில் இருக்கும் கயிறு போன்ற டிசைன், தாயுடன் சிசுவை இணைக்கும் தொப்புள் கொடியைக் குறிப்பிடுகின்றதாம். மனிதன் மண்ணில் விதைக்கப்படுவதாய்ச் சொல்லும் மானுடவியல் மரபு அறிவு. மண்ணில் மனிதனின் தொடர்ச்சிக்கு ஒரு கற்பனை ஊக்கியாய் இருக்கிறது, இத்தாழி.

தொல்லியல் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் - கோ.ஜெயக்குமார்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம்பிடித்த ஊர். இவ்வூர் தாமிரபரணியாற்றின் தென்கரையில், திருநெல்வேலி திருச்செந்தூர்ச் சாலையில் திருவைகுண்டத்துக்கு முன்னர், பொன்னன் குறிச்சி பேருந்து நிறுத்தத்தையடுத்து அமைந்துள்ளது. இவ்வூருக்கு ஆதிச்சநல்லூர் என்ற பெயர் எப்போது எப்படி ஏற்பட்டதென உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆயினும், இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆதிச்சநாடாழ்வான் என்ற பட்டப்பெயர் உடைய நிலைமைக்கார நாடார் குடும்பத்தவர் இருந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழித்தேரி எள்ளுவிளையிலுள்ள கி.பி. 1639ஆம் ஆண்டுக் கல்வெட்டு, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் மடத்து அச்சம்பாடு தேவபிச்சை நாடார் தோட்டத்திலுள்ள கி.பி. 1645ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஆகியவற்றில் ‘ஆதிச்ச நாடாவான்' என்ற பட்டப் பெயர் கொண்டோர் இடம்பெறுகின்றனர். குறிப்பாக, மடத்து அச்சம்பாடு கல்வெட்டின்மூலம் அச்சன்பாடு என்ற அவ்வூரைத் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலுக்கு மானியமாகக் கொடுத்தோருள் ஆதிச்ச நாடாவார்களும் அடங்குவர் எனத் தெரியவருகிறது. எனவே அவர்களுடைய பெயர்த் தொடர்பு இவ்வூருக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு. கடந்த 2004–ம் ஆண்டில் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் அனைத்து இந்தியா மற்றும் கிழக்காசிய மொழிகளின் எழுத்துகளுக்கு தமிழ் எழுத்து வடிவங்களே மூலமாக இருந்துள்ளது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்து ஏறத்தாழ 11 ஆண்டுகள் ஆகியும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் இது குறித்த இறுதி அறிக்கையை வெளியிடவில்லை.
ஆதிச்சநல்லுரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துகளுடன் கூடிய முதுமக்கள் தாழி ஆய்வுக்காக மைசூர் தொல்பொருள் மையத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு அது காணாமல் போய்விட்டதாகவும் தெரியவந்து உள்ளது.


Oba Thurule - Ayomi Perera

Was it our ability to ask that made our species unique? What’s your opinion?

In the past five decades, gorillas, orangutans, chimpanzees and bonobos were shown capable of learning sign language (Blake, 2004; Gibson, 2011). An important cognitive distinction between the language used by humans and the language used by other apes is with the ability to ask questions. This was first noted by (Premack & Premack, 1984) who reported that, although their chimpanzee, Sarah, showed no difficulty answering questions or repeating questions before answering them, she never used the question signs for inquiring about her own environment. Jordania (2006), in his review of the literature, noted that other signing apes did not utilize questions and that their initiation of conversations was limited to commands (e.g., “me more eat”) and observational statements(e.g., “bird there”). This absence of a questioning mind is in direct contrast to human toddlers and children, who are renown for their incessant use of questions. My interpretation of this human-ape distinction is that during human evolution, we transitioned from the display of curiosity toward items that are present in our environment (i.e., observational statements) to curiosity toward items that are absent in our environment (i.e., WH questions). Developing curiosity about out of sight events and objects could thus explain the rapid migration of humans across the globe. Furthermore, this curiosity toward the unknown is the driving force behind scientific exploration and technological development. One could hence argue that it is the ability to ask that separates us from other animals and makes the human species unique.

Improve Eyesight ::

EYE EXERCISES
1. Blink your eyes as fast as you can for some time.
2. Close the eyes tightly for some time and then open. Do this for 5 times.
3. Roll your eyes in clockwise as well as anticlockwise direction for 5 times.
4. While walking on the road or when you are in an open space, look as far as possible.
5. Look at an advertisement or some written material from a far place and try to read it by focusing your eyes.
FOOD THAT IS GOOD FOR EYE
1. Carrot
2. Eggs
3. Milk
4. Apricots
5. Berries
6. Black Currants
7. Cold-water Fish
8. Collard Greens
9. Grapefruits
10. Grapes
11. Lemons
12. Spinach
13. Fish Oils
HARMFUL FOR YOUR EYES
1. Foods and additives containing Monosodium Glutamate (MSG)
2. Looking directly into the sun for some time.
3. Drugs which are harmful to the eyes
4. Cell phone games may also be harmful.

Wednesday, November 4, 2015

சிலம்புக்கலையின் சிகரம் இன்று சரிந்தது


-----------------------------------------------------------------
சிலம்புக்கலையை கட்டிக்காத்து வந்த செ.சுகுணசேகரம் இன்றுகாலமானார். கட்டைபறிச்சான் கிராமத்தில் 42 வருடங்களாக தனது வீட்டுச் சூழலில் இலவசமாக சிலம்புக்கலையை பயிற்றுவித்து வந்த சுகுணசேகரம் இன்று (04.11.2015) சுகயீனம் காரணமாக காலமானார். 1946ம் ஆண்டு நான்கு சகோதரர்களுடன் பிறந்த இவர் சிலம்புக்கலையின் மீதுள்ள ஈர்ப்பினால் இந்தியாவைச்சேர்ந்த ஒருவரிடம் இக்கலையை முறைப்படி பயின்று பல இன்னல்களுக்கு மத்தியிலும் 1973ம் ஆண்டில் இருந்து இக்கலையை பயிற்றுவித்து பலரை இக்கலையில் மிளிர வைத்தார். சிலம்பு மாத்திரமன்றி கராத்தேயிலும் இவர் கைதேர்ந்தவராவார்.

எமது சமூகத்தால் கவனிக்கப்படாத கலைஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர் எனினும் இவருடைய நேர்காணலை கடந்த வருடம் வீரகேசரி பத்திரிகை பிரசுரித்தது இதன் பின்னர் இவருக்கு கலாபூசனம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சரியான நேரத்தில் சரியான நபரை கௌரவித்தோம் என்ற பெருமையுடன் இவருடைய ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.

This is what happens when you go 84,000 miles without an oil change.


Tuesday, November 3, 2015

Anatomy and Physiology of the Central Nervous System: The Brain

Brain Inflammation Linked to Schizophrenia Risk

Immune cells in the brain (microglia) are more active in individuals with schizophrenia and those at very high risk for the disorder, according to new study.
...
Interestingly bipolar disorder, which is in some mysterious way related to schizophrenia, is often treated with lithium. Lithium is neuroprotective in part by boosting BCL 2, a mitochondrial anti-apoptotic protein that helps reduce inflammation. Yesterday I noted some abstracts regarding a news release Frank posted on the protective effects of N acetyl cysteine + minocycline post traumatic rain injury. Minocycline also boosts BCL-2. Frank, I was hoping to find data indicating minocycline increased nitric oxide expression and so compensated for the vasospasm that occurs in TBI. Data is confusing, may be that in non-pathological states it increases nitric oxide but in pathological states decreases it. It definitely impacts on nitrogenic pathways.
Much more importantly we need to recognise that microglia in particular play a fundamental role in emotional regulation. We haven't crossed that bridge yet but the foundations are currently being prepared.

சாதி மீறிய காதல் என்றால் மயானம் தான் முடிவு! MASAAAN


 இரு காதல் உறவுகளுக்கு இடையே இருக்கும் சாதியச் சமன்பாடுகளைச் சொல்லும் படம். ஆதிக்கசாதிக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் இடையே உலவும் காதல் உறவுகளை இந்திய சினிமா அவ்வளவாகப் பொருட்படுத்தியதில்லை.
அப்படியே அவர்களின் கதைகளைச் சொல்ல முனைந்தாலும், 'ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் இன்னொரு குறிப்பிட்ட சாதிக்கும் இடையே' என்று பத்திரிகையாளர்களைப் போலவே, இலை மறை காய் மறையாக, கடந்து செல்லும் தயக்கமும் அச்சமும் குழப்பமும் எப்பொழுதும் கதையில் தொங்கலாக இருக்கும். இந்திய சினிமாவின் பிதாமகன்கள் என்று சொல்லப்பட்ட சத்யஜித்ரே போன்றவர்கள் கூட, திரைக்கதையில் சாதியை ஓர் உட்பொருளாக வைத்துச்சொல்லும் அக்கறைகள் கொண்டாரில்லை.

அப்படியே சொன்னாலும் அவை, ஆதிக்கசாதியினர் மீது பரிவு கொண்ட, சாய்வு கொண்ட கதைகளாகிப் போயின. கெளதம் கோஷ், 'அந்தர்ஜாலி யாத்ரா' என்ற படத்தில், பார்ப்பன ஆணுக்கு இருக்கும் பலதாரப் பெண் வாய்ப்புகளை எள்ளிநகையாடியிருப்பார். அதன் உட்பொருளாய், 'இந்துமதக்கட்டுமானம்' எவ்வளவு சப்பைக்கட்டுகள் நிறைந்தது என்பதையும் திரைக்கதையின் கலைவடிவம் திரியாமல் சொல்லியிருப்பார்.
FANDRY, COURT மற்றும் TITLI போன்ற படங்கள் வரிசையில் MASAAAN திரைப்படமும் இந்திய சாதியமுறையின் இக்கட்டுகளை நேர்மை தவறாமல், மிகவும் கவனமாகச் சொல்கிறது. ஆயிரம் ஆயிரம் காதல் கதைகளைச் சினிமா வழியாகச் சொல்ல முயன்றாலும் பின்னணியில் இருக்கும் சாதிய வன்மங்களை எல்லாம் சொல்லும் வாய்ப்பை சினிமா எடுத்துக்கொள்வதில்லை.
MASAAAN படத்தில், காதல் உறவில் ஈடுபடும் ஆதிக்க சாதியினர், ஒன்று சாதிய அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கின்றனர் அல்லது, கொல்லப்படுகின்றனர். காதல் உறவில் நம்பிக்கை கொண்ட தாழ்த்தப்பட்டவர்களோ, எல்லாவற்றிற்கும் சாட்சியாய் மரண விளிம்பிற்குத் தள்ளப்பட்டு ஆணிஅறைந்தாற்போல அங்கேயே இருத்திவைக்கப்படுகின்றனர்.
ஆனால், கதையின் முடிவில் எந்த மாற்றமுமில்லை. ஆதிக்கசாதிக்காதலர்களை பெற்றவர்களே கொன்றுவிடுவர். தாழ்த்தப்பட்ட காதலர்களையும் ஆதிக்கசாதியினரே கொல்வர். சாதியப்பிரமிடின் பின்னால் இருக்கும் மனித வன்மங்களை எந்த சமரசமும் இன்றி கலைவடிவம் பரவலாக பல திரைப்படங்கள் வழியாக முன்னேற்றிக் கொடுக்கையில் தான் இந்திய சினிமா சரியான வழியில் பயணிக்கும் என்று சொல்லலாம்.
ஆதிக்கசாதிக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் இடையே காதல் உறவு என்றால் அது மயானத்தை நோக்கியே அழைத்துச்செல்லும் என்ற யதார்த்தம் சொல்லும் படம்.

Poly Level Awesome!!


Monday, November 2, 2015

Bad food shrinks your brain


We know what junk food does to our weight, skin and energy levels, but now researchers have found it also shrinks our brain. A team from Deakin and the Australian National universities used magnetic resonance imaging to measure the hippocampi – the two parts of the brain used for learning and memory – in people aged 60 – 64. Those who regularly ate junk food had a smaller left hippocampi than people who ingested nutrient – dense foods, such as vegies, fruits and fish. “As the hippocampus is critical to learning and memory, this study underscores the importance of good nutrition for children, adolescents and adults”, study author associate professor Felice Jacka says.
Source: Body & Soul – 25 Oct. 2015

World's First Self Sustaining Portable Home


Rural Tamil kids Painting


Sunday, November 1, 2015

கோவன் மூடு டாஸ்மாக்கை மூடு பாடல் - Anti Tasmac Song

The Ished tree of ancient Egypt is a fantastic mystery.

Appearance: Several species of trees were considered sacred in Egyptian mythology. The names of all of them were written with the same hieroglyphic determinative. In Egyptian art, trees were usually depicted by this sign by simply being placed into the larger representational context. It was been suggested that the tree shown in the glyph is the Maerua crasifolia which is found in throughout Africa, tropical Arabia, and Palestine, but is disappearing from Egypt.
Meaning: Several types of trees appeared in Egyptian mythology. The sycamore was particularly important. Two of them, called the "sycamores of turquoise" stood at the eastern gate of heaven from which the sun emerged each morning. These sycamores were especially associated with the goddesses Nut, Hathor and Isis, each of whom were called "Lady of the Sycamore". Nut and Hathor were often shown to reach out from the tree to offer the deceased food and water. Sometimes the tree was anthropomorphized, having arms itself which offer the sustenance to the dead. In the example shown at right, the deceased is suckled by such a tree.
The ished tree, probably the Persea tree, had a particular solar meaning. It too was associated with the rising sun and it was protected from Apepby the great cat of Heliopolis. This cat was one of the forms of Re. A sacred ished was grown in Heliopolis as early as the Old Kingdom. Later, an ished was grown in Memphis and Edfu. During the 18th Dynasty a popular motif depicting the divine ished inscribed by the gods with the name of the king and the years of his reign.
The willow tree was also sacred in Egypt as it was the tree that was said to have grown up around Osiris' leaden coffin in Byblos. Several towns had tombs that were said to hold part of Osiris' dismembered body. All of these had willow groves associated with them. It was said that the god'sba rested within these groves.
Other various species of trees were believed to be sacred to individual deities. For example, the tamarisk tree was sacred to Wepwawet, the acacia was sacred to Horus, and as mentioned earlier the sycamore was sacred to Re and the willow was sacred to Osiris.