Search This Blog

Wednesday, November 19, 2014

அன்பளிப்பு - கு. அழகிரிசாமி

மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதானே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும் போது மணி இரண்டிருக்கும். எவ்வளவு காலதாமதமாகித் தூங்கப் போனாலும், தூக்கம் வருவதற்கு மேற்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது எனக்கு ஆகும். எனவே இரண்டரைக்குத்தான் தூங்க ஆரம்பித்திருப்பேன். சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, முதுகில் நாலைந்து கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட, அவற்றால் ஏற்பட்ட ஓசை  மிகப் பெரியதாக இருந்தது. தூக்கம் கலைந்து கண் விழிப்பதற்குள், வலதுபுஜத்தில் எறும்பு கடிப்பதுபோல இருந்தது.
“தூங்குமூஞ்சி மாமா!....” ku ar.sized
“மணி ஏழரையாகிவிட்டது....”
“எழுந்திருக்கிறீர்களா, பலமாகக் கிள்ளவா”
“முகத்தில் ஜலத்தைக் கொண்டுவந்து தெளித்துவிடுவோம். இன்னும் இரண்டு நிமிஷத்துக்குள்  எழுந்துவிட வேண்டும்”...
இப்படியே பல குரல்கள் பேசிக் கொண்டிருந்தன. பேச்சின் நடுவே இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ‘சிரிடா சிரி’ என்று சிரித்தார்கள். கண் விழித்துவிட்டேன்.
“யார் அது? உம்! இதோ வருகிறேன். தூக்கத்திலே வந்து....” என்று அதட்டிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தேன். ஒரு பையனைத் தவிர, அதாவது சாரங்கராஜனைத் தவிர, மற்ற எல்லாக் குழந்தைகளும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
”கடிகாரத்தைப் பாருங்கோ மாமா! மணி எட்டு ஆகப் போகிறது! இன்னும் தூங்கு மூஞ்சி மாதிரி தூங்கிக் கொண்டு....” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் சித்ரா. “அது இருக்கட்டும், விடிந்ததும் எங்கே இப்படிப் பட்டாள ‘மார்ச்’ பண்ண ஆரம்பித்துவிட்டது?” என்று கேட்டேன்.
“இரவில் வெகு நேரம் கண் விழித்தால் உடம்புக்குக் கெடுதல் என்று எங்கள் பாடப் புத்தகத்தில் போட்டிருக்கிறது, மாமா” என்றான், இதுவரையில் மௌனமாக இருந்த சாரங்கராஜன்.
”நான் படித்த பாடப் புத்தகத்திலும் அப்படித்தான் போட்டிருந்தது! என்ன செய்வது?” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் சிறுவன் சாரங்கனிடம் அவ்விதம் சொல்லாமல், “நாளை முதல் சீக்கிரமாகவே தூங்கி விடுகிறேன். கண் விழிக்கவில்லை” என்றேன். அவனுக்குப் பரம சந்தோஷம்... அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டதற்காக..
மறு நிமிஷத்தில், எல்லோருமாகச் சேர்ந்து ஒருமிக்க, “என்ன புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
“ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை!”
“பொய், பொய், சும்மா சொல்கிறீர்கள்!”
”நிஜமாக, ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை”
“நேற்று புத்தகம் கொண்டு வருவதாகச் சொன்னீர்களே!”
“நேற்றுச் சொன்னேன்...”
“அப்புறம் ஏன் கொண்டு வரவில்லை?”
”புத்தகங்கள் ஒன்றும் வரவில்லை. வந்திருந்தால் தான் கொண்டு வந்திருப்பேனே.”
”பிருந்தா! மாமா பொய் சொல்கிறார்; கொண்டு வந்து எங்கேயாவது ஒளித்து வைத்திருப்பார். வாருங்கள், தேடிப் பார்க்கலாம்” என்றாள் சித்ரா.
அவ்வளவுதான், என்னுடைய அறை முழுவதும் திமிலோகப் பட்டது. ஒரே களேபரம். சித்ரா மேஜையைத் திறந்து உள்ளே கிடக்கும் பெரிய காகிதங்களையும், துண்டுக் காகிதங்களையும், கடிதங்களையும் எடுத்து வெளியே எறிந்தாள். துழாவித் துழாவிப் பார்த்தாள். மேஜையில் புத்தகம் எதுவும் இல்லாது போகவே, அதிலிருந்து சாவிக்கொத்தை எடுத்துப் பெட்டியைத் திறந்து தேட ஆரம்பித்துவிட்டாள்.
பிருந்தாவும், சுந்தரராஜனும் பீரோவைத் திறந்து புத்தகங்களை எடுத்துக் கண்டபடி கீழே போட்டார்கள்.
சின்னஞ் சிறு குழந்தையான கீதா கீழே உட்கார்ந்து, இறைந்து கிடக்கும் ஆங்கிலப் புத்தகங்களை அர்த்தமில்லாமல் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
சித்ரா பெட்டியில் உள்ள சலவைத் துணிகளை எடுத்து வெளியே போட்டாள். என்னுடைய பழைய டைரிகள், எனக்கு வந்த பழைய கடிதங்கள், இரண்டொரு புத்தகங்கள் - எல்லாம் ஒரே குப்பையாக வந்து வெளியே விழுந்தன.
பீரோவைச் சோதனை போட்ட பிருந்தாவும் சுந்தரராஜனும் ஜன்னல்களில் அடுக்கியிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட்டார்கள்.
சாரங்கன் ஒருவன் தான் என்னோடு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் எப்பொழுதுமே குறும்பு பண்ணமாட்டான்; விளையாட மாட்டான். மற்றக் குழந்தைகள் எல்லோரும் ஒரு விதம்; அவன் ஒருவிதம். என்னிடத்தில் பயபக்தியோடு நடந்து கொள்ளும் சிறுவன் அவன் ஒருவன் தான்.
ஜன்னலில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாக வந்து விழும் போது, ஒரே சந்தடியும் இரைச்சலுமாய்ப் போய் விடவே, சமையற் கட்டிலிருந்து என் தாயார் ஓடிவந்தாள். வந்து பார்த்தால் எல்லாம் ஒரே கந்தர் கோளமாகக் கிடந்தது.
“என்னடா இது, இந்தக் குழந்தைகள் இப்படி அமர்க்களம் பண்ணுகிறார்கள், நீ பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாயே” என்று என்னைப் பார்த்துக் கோபித்துக் கொண்டாள்.
“நீ வீட்டுக்குள் போ அம்மா. இது எங்கள் விவகாரம். நீ எதற்கு வேலையைப் போட்டுவிட்டு இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாய்?” சொல்லிவிட்டுச் சிரித்தேன்.
”இவ்வளவு வயதாகியும் இன்னும் குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடிக் கொண்டிருப்பது ரொம்ப அழகாகத்தான் இருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே அம்மா உள்ளே போய்விட்டாள். பாதி தூரம் போனதும் அங்கே நின்ற வாக்கிலேயே, “ஏண்டா நீ எப்போது ஸ்நானம் பண்ணப் போகிறாய்?” என்று இரைந்து கேட்டாள்.
“இரண்டு நிமிஷத்திலேயே வந்து விடுகிறேன்” என்று அம்மாவுக்குப் பதில் குரல் கொடுத்துவிட்டு இந்தப் பக்கம் திரும்பும்போது, ஜன்னலிலிருந்து பத்துப் பதினாறு கனமான புத்தகங்கள் ‘தட தட’ வென்று அருவி மாதிரி கீழே விழுந்தன. ஒரு பழைய தமிழ் அகராதி அட்டை வேறு புத்தகம் வேறாகப் போய் விழுந்தது. குப்புற விழுந்த சில புத்தகங்கள் மீது சில கனமான புத்தகங்கள் அமுக்கவே கீழே அகப்பட்ட புத்தகங்கள் வளைந்து, ஒடிந்து, உருக்குலைந்து விட்டன. புத்தகங்கள் ஒரே மொத்தமாகக் கீழே விழுந்துவிட்டதைக் கண்டு எல்லாக் குழந்தைகளும் பயந்ஹ்டு விட்டார்கள். கீழே விழுந்து கிடக்கும் புத்தகங்களையும் என்னையும் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். கீழே விழுந்தவை மொத்தம் அறுபது புத்தகங்களாவது இருக்கும். குழந்தைகளின் முகத்தில் பயத்தின் சாயல் படர ஆரம்பித்துவிட்டது. நான் என்ன சொல்லப் போகிறேனோ என்று எதிர்பார்த்துக் கொண்டு கண்ணிமைக்காமல் என் முகத்தையே பார்த்தார்கள். மற்றக் குழந்தைகளின் பயத்தைப் பார்த்த ஐந்து வயது நிரம்பாத கீதாவும் பயந்து போய் என்னைப் பார்த்தாள். நான் வேண்டுமென்றே மௌனமாக இருந்தேன். புத்தகங்களையும் குழந்தைகளையும் வெறித்த பார்வையோடு பார்த்தேன். மௌனம் நீடித்தது. ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷம், மூன்று நிமிஷம்... குழந்தைகளுக்கு என் மௌனம் சித்திரவதையாக இருந்தது. ஒவ்வொரு குழந்தையும் மூச்சுப் பேச்சிழந்துவிட்டது. சித்ராவின் முகத்தில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. பயம் அறியாத சித்ராவே பயந்து விட்டாள். என்னை ஒட்டி உட்கார்ந்து இருந்த சாரங்கன் நாலு அங்குலம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். என்னைத் தொடவே அவனுக்குப் பயமாகி விட்டது. அவனுடைய சலனத்தால் தூண்டப்பெற்று, “நான் வீட்டுக்குப் போகிறேன்” என்று கிளம்பிவிட்டாள் பிருந்தா.
”பிருந்தா! இங்கே வா” என்று யாதொரு உணர்ச்சிப் பிரதிபலிப்பும் இல்லாமல் சொன்னேன்.
நான் சொன்னபடி அவள் உள்ளே வந்தாள். இதற்கு மேல் குழந்தைகளை பயமுறுத்த நான் விரும்பவில்லை.
எழுந்து நின்றேன். என் அறையின் மற்றொரு ஜன்னல் பக்கம் சென்றேன். அங்குள்ள புத்தகங்களில் கை வைத்தேன். என் ஒவ்வொரு அசைவையும் குழந்தைகளின் கண்கள் சர்வ ஜாக்கிரதையுடன் கவனித்துக் கொண்டிருந்தன. புத்தகங்களின் நடுவில் பெரிய புத்தகங்களுக்குக் கீழே இருந்த பதின்மூன்று கதைப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு திரும்பினேன். கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டு, “தோற்றுப் போய்விட்டீர்களா? நீங்கள் தேடு தேடு என்று தேடினீர்களே, புத்தகங்கள் உங்களுக்குத் தட்டுப்பட்டதா? வாருங்கள், வாருங்கள்” என்று ஒரே உற்சாகத்துடன் சொன்னேன். குழந்தைகளுக்கு உயிர் வந்துவிட்டது. என்னைப் பார்த்து ஓடோடியும் வந்தன. சாரங்கன் என் பக்கம் நெருங்கி உட்கார்ந்தான். என் இடது கையில் சாய்ந்தும் உட்கார்ந்து கொண்டான். சித்ராவுக்கு ஏனோ என் மேல் கோபம் வந்துவிட்டது. வெகுநேரம் மௌனமாக இருந்து அவர்களைப் பயத்தில் ஆழ்த்தி வைத்ததை எண்ணிக் கோபப் பட்டாளோ? அல்லது தான் பயந்ததற்காக வெட்கப்பட்டு, தான் பயப்படவில்லை என்பதாகக் காட்டிக்கொள்ளுவதற்கும், அதன் மூலம் வெட்கத்தை மறைப்பதற்குமாகக் கோபப்பட்டாளோ? ‘விறு விறு’ என்று கட்டிலில் ஏறினாள். எனக்குப் பின்புறமாக வந்து, “பொய்தானே சொன்னீர்கள், புத்தகங்கள் கொண்டு வரவில்லை என்று? உம், இனிமேல் பொய் சொல்லாதீர்கள், சொல்லவில்லை என்று சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு, “சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று எச்சரித்துக் கொண்டே முதுகில் தன் பலங்கொண்ட மட்டும் அடித்தாள்.
“ஐயோ! ஐயோ! பொய் சொல்லவில்லை. இனிமேல் பொய் சொல்லவில்லை!” என்று வேதனையோடு சொல்கிறவன் மாதிரி சொன்னேன். குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள்.
சுந்தரராஜன் வந்து, “சாரங்கா, அந்தப் பக்கம் நகர்ந்துக்கடா” என்று சொல்லி அவனைத் தள்ளிவிட்டு எனக்கும் அவனுக்கும் நடுவில் வந்து உட்கார்ந்தான். என் கையிலுள்ள அத்தனை புத்தகங்களையும் ‘வெடுக்’கென்று பிடுங்கிக் கொண்டு ‘விறுவிறு’ என்று ஒவ்வொன்றின் பெயரையும் உரக்க வாசித்தான். கடைசிப் புத்தகத்தின் பெயரை வாசித்ததும் ‘பளிச்’ சென்று எழுந்து “இத்தனையும் எனக்குத்தான்” என்று சொல்லிக் கொண்டே வெளியே கிளம்பிவிட்டான்.
குழந்தைகள் உடனே அழுவதற்கு ஆயத்தமாகி விட்டன. அப்பொழுது மௌனமாக இருந்தவன் சாரங்கன்தான்.
“சுந்தர்! இதோ பார். இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஓடினால் அப்புறம் உனக்குப் புத்தகங்களே கொண்டு வர மாட்டேன்” என்றேன்.
அவன் ‘கடகட’வென்று சிரித்துக் கொண்டே, “பாவம். மாமா பயந்து விட்டார்!” என்று கூறிக் கொண்டு உள்ளே வந்தான்.
புத்தகங்களை என் கையில் வாங்கி ஏழு புத்தகங்களில், “என் பிரியமுள்ள சித்ராவுக்கு அன்பளிப்பு” என்று எழுதி என் கையெழுத்தையும் போட்டுச் சித்ராவிடம் கொடுத்தேன். மீதியுள்ள ஆறு புத்தகங்களிலும், ”என் பிரியமுள்ள சுந்தரராஜனுக்கு அன்பளிப்பு” என்று எழுதி அவ்விதமாகவே கையெழுத்திட்டுச் சுந்தரராஜனிடம் கொடுத்தேன்.
பிருந்தாவும் தேவகியும் “எனக்கு?” என்று ஏககாலத்தில் கேட்டனர்.
“சித்ராவிடமும் சுந்தரிடமும் வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள். இதுவரையிலும் நீங்கள் மற்றப் புத்தகங்களை எப்படி வாங்கிப் படித்தீர்களோ, அப்படியே இப்பொழுதும் வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள்” என்றேன்.
அந்த இரண்டு பெண்களும் நான் சொன்னதை ஆட்சேபமின்றி ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.
“மத்தியானத்துக்குள் இந்த ஏழு புத்தகங்களையும் படித்து விடுவேன். படித்து முடித்த பிறகு வருகிறேன், மாமா” என்று கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டாள் சித்ரா. அவளைத் தொடர்ந்து, சாரங்கனைத் தவிர எல்லோரும் எழுந்து தத்தம் வீடுகளுக்குக் கிளம்பினார்கள். சாரங்கன் இரண்டொரு தடவை என் முகத்தையே ஏறிட்டுப் பார்த்தான். அவன் ஒன்றும் பேசவில்லை. அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிவிக்கும் சலனமும் முகத்தில் இல்லை. அப்பொழுது அவன் அவ்வாறு பார்த்ததற்கு ஒரு முக்கியத்துவமோ, ஒரு அர்த்தமோ இருந்ததாக நான் கருதவும் இல்லை. நான் எழுந்து குப்பையாகக் கிடக்கும் புத்தகங்களையும் துணிமணிகளையும் எடுத்து அவையவை இருக்கவேண்டிய இடத்தில் வைக்க ஆரம்பித்தேன். சுருண்டு நசுங்கிக் கிடந்த புத்தகங்களை நிமிர்த்துச் சரி பண்ணினேன். அவற்றின்மீது பெரிய புத்தகங்களைப் பாரமாகத் தூக்கி வைத்தேன். இந்த வேலைகளைச் செய்யும்போது சாரங்கன் நான் எதிர்பாராமலே எனக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.
“எந்த வகுப்பு பாஸ் பண்ணினால் இந்தப் புத்தகத்தைக் கஷ்டமில்லாமல் படிக்கலாம்?” என்று ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான் சாரங்கன். அவன் குரலில், மூச்சைத் திணற வைக்கும் சங்கோஜம் நிறைந்திருந்தது. அது மட்டுமின்ரி, பயந்தவனைப் போல, முயற்சியில் தோல்வியடைந்து புண்பட்டவனைப் போல, அவன் பேசினான்.
“சாரங்கா! நீ கெட்டிக்காரப் பையன், உன் வயதில் நான் இவ்வளவு கெட்டிக்காரனாக இருந்ததில்லை. அதனால் நீ எஸ். எஸ். எல். ஸி  வகுப்புக்கு வந்ததும் இந்தப் புத்தகத்தைச் சிரமமில்லாமல் படித்துப் புரிந்து கொள்ளலாம் என்று பரிவோடு சொன்னேன்.
அவன் கையில் வைத்துக் கொண்டிருந்தது வால்ட் விட்மனின் கவித் தொகுதி.
"அப்படியானால் இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது” என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பிறகு கையிலுள்ள புத்தகத்தை ஜன்னலில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.
என் தாயார் கோபமாக என்னென்னவோ சொல்லிக் கொண்டு அங்கே வந்தாள். “ஏண்டா, நான் எத்தனை தட்வை உனக்குச் சொல்லுகிறது? வெந்நீர் ஆறி அலர்ந்து ஜில்லிட்டுப் போய்விட்டது” என்று சொல்லிவிட்டு “இந்தப் பொல்லாத குட்டிகளை இப்படி அமர்க்களம் பண்ண விடலாமா? என்ன பிரியமோ இது? ஊரார் குழந்தைகளுக்கு இத்தனை சலுகை காட்டுகிறவர்களை நான் பார்த்ததே இல்லை.... நீ ஸ்நானம் பண்ணப் போடா, நான் எடுத்து வைக்கிறேன்” என்று வந்தாள் அம்மா.
“அம்மா! உனக்குப் புத்தகங்களை இனம் பிரித்து அடுக்கத் தெரியாது. நீ போ, நான் ஒரு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன்.”
”இன்றைக்கு அடுக்கி வைக்கவேண்டியது; நாளைக்கு அவர்கள் வந்து குப்பையாக்க வேண்டியது; அப்புறம் பழையபடியும் அடுக்கி வைக்க வேண்டியது. உனக்கு வேறு வேலை என்ன?” என்று சொல்லிவிட்டு அவள் சமையற் கூடத்துக்குச் சென்றுவிட்டாள்.
நானும் வெகு சீக்கிரத்திலேயே ஸ்நானம் பண்ணக் கிளம்பிவிட்டேன். அப்பொழுது என்னோடு நடுக்கூடம் வரையில் நடந்து வந்தான் சாரங்கன். அப்புறம் பளிச்சென்று மறு பக்கமாகத் திரும்பி, “போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
“அம்மா! குழந்தைகளை இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறாயே! அதுகள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்!” என்று சொலிவிட்டு ஸ்நான அறைக்குள் சென்றேன். நான் சொன்னது புகை மூட்டிய அடுப்பங் கரையில் திக்குமுக்காடும் அம்மாவுக்குக் கேட்டதோ என்னவோ?
***
ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷந்தான். மாம்பலத்துக்கு வீடு மாற்றிவந்ததை என் பாக்கியம் என்றே நான் கருதினேன். இங்கே வந்திராவிட்டால் இந்தப் பொக்கிஷங்களை நான் சந்தித்திருக்க முடியுமா? இங்கு வந்து நான்கு வருஷங்களாகின்றன. வீட்டில் நானும் என் தாயாருந்தான். ஒரு பெரிய வீட்டில் ஒரு பகுதியிலே தான் எங்கள் குடித்தனம். வந்து ஆறு மாதங்களாகும் வரையில் இந்தக் குழந்தைகளின் நட்பு எனக்கு ஏற்படவே இல்லை. ஒரு நாள் திடீரென்று இரண்டு குழந்தைகள் சுந்தரராஜனும் சித்ராவும் வந்தார்கள். அன்று வநதது போலவே தினமும் வந்தார்கள். சில நாட்களுக்குள் சம்பிரதாய மரியாதைகள், நாசூக்குகள் எல்லாம் மறைந்தன. உண்மையான மனப்பாசம் கொள்ளத் தொடங்கினோம். ஒன்றாக உட்கார்ந்து கதைகள் படிப்பது, பத்திரிகைகள் வாசிப்பது, கதைகள் சொல்லுவது, செஸ் விளையாடுவது - இப்படிப் பொழுது போக்கினோம். நான் வேலை செய்யும் பத்திரிகாலயத்துக்கு மதிப்புரைக்கு வரும் புத்தகங்கள் சிலவற்றாஇ எடுத்து, விமர்சனம் எழுதும்படி தலைமையாசிரியர் என்னிடம் கொடுப்பார். அப்படி மதிப்புரைக்காக வந்த புத்தகங்கள் என்னிடம் ஏராளமாக இருந்தன. குழந்தைகளுக்கு அவை நல் விருந்தாக இருந்தன. ஒரே ஆவலோடு ஒரு சில தினங்களுக்குள் அத்தனை புத்தகங்களையும் சுந்தரராஜனும் சித்ராவும் படித்துத் தீர்த்துவிட்டார்கள். அவர்களுடைய புத்தகத் தேவையை என் மதிப்புரைப் புத்தகங்களைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை. இதனால் அவ்வப்போது சில குழந்தைப் புத்தகங்களை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். அதனால், அவர்கள் தினந்தோறும் நான் காரியாலயம் போகும்போது, “இன்று ஞாபகமாகப் புத்தகங்கள் கொண்டு வரவேண்டும்” என்று சொல்லியனுப்புவார்கள். சாயங்காலத்தில் வெறுங்கையோடு வீடு திரும்பினால் ஒரே கலாட்டாதான்.
சுந்தரராஜனும் சித்ராவும் நான் குடியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக் குழந்தைகள்; பணக்காரக் குழந்தைகள். குழந்தை என்று சொன்னாலும் சுந்தரராஜனுக்குப் பதின்மூன்று வயது; சித்ராவுக்கு ஒன்பது வயது. இந்த இருவரின் புத்திசாலித்தனம், களை நிறைந்த தோற்றம்,  எல்லாவற்றையும் விடச் சீரிய மனப்பாங்கு - எல்லாம் சேர்ந்து என்னை வசீகரித்தன; என்னை ஆட்கொண்டு விட்டன. அவர்கள் மேல் நான் வைத்திருந்த அன்பு இம்மட்டு அம்மட்டு என்றில்லை. தினந்தோறும் அவர்களுக்குப் புதியதொரு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்றெல்லாம் என் மனம் துடித்துக் கொண்டிருக்கும். இவர்களுடைய நட்பு தொடங்கி சில வாரங்கள் ஆவதற்குள்ளாக மற்றக் குழந்தைகளின் பரிச்சயமும் எனக்கு ஏற்பட்டது. பிருந்தா, தேவகி, கீதா, சாரங்கராஜன் ஆகியவர்களும் வர ஆரம்பித்தார்கள். பிருந்தாவும் தேவகியும் சித்ராவுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சமவயதுக் குழந்தைகள். கீதா, தேவகியின் தங்கை. சாரங்கராஜன் சுந்தரராஜனுடைய பள்ளித் தோழன். எல்லோருடைய வீடுகளும் ஒன்றையடுத்து ஒன்றாக இருந்தன. இவர்களில் சாரங்கனுடைய வீட்டார் தான் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள். மற்றக் குழந்தைகள் சொந்த வீடு உள்ள பணக்காரக் குழந்தைகள்.
எல்லோரிடத்திலும் நான் ஒன்று போலவே அன்பாக இருந்தேன். சுந்தரராஜனும் சித்ராவும் எனக்கு முதலில் பரிச்சயமானவர்கள் என்பதற்காகவோ என்னவோ அவர்களிடத்தில் எனக்கு ஒரு அலாதிப் பிரியம் இருந்தது. ஆனால் வெளிப்படையான பேச்சிலும் நடவடிக்கைகளிலும் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் நான் வித்தியாசம் காட்டி நடந்து கொள்ளவில்லை. உள்ளன்பிலும் வேற்றுமை காட்டவில்லை. முன்னால் சொன்னதுபோல ஏதோ ஒரு அலாதிப் பிரியம் சித்ராவிடமும் அவளது அண்ணனிடமும் ஏற்பட்டிருந்தது. ஆனால் குழந்தைகளோ என்னை ஒரே மாதிரி நேசித்தன. அவர்களுடைய பிரியத்தில் வேற்றுமை இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனக்காகவே இந்த உலகத்தில் பிறந்த நண்பன் என்று என்னை நினைத்தது. ஒவ்வொன்றும் ஒரு மகத்தான நம்பிக்கையாக, ஒரு பெரிய ஆறுதலாக, ஒரு நல்ல வழிகாட்டியாக என்னைக் கருதியது. எந்த விதத்திலும் தனக்குச் சமதையான ஜீவன் என்று என்னைக் கருதியது. குழந்தைகள் என்னைப் பெரிய மனித பீடத்தில் தூக்கி வைக்காமல், நட்பு முறையில் கைகோத்துக் கொள்ள வந்தார்கள். இவர்கள் என்னோடு விளையாடினார்கள்; என்னோடு சண்டை போட்டார்கள்; என்னை அடித்தார்கள்; என்னைக் கண்டித்தார்கள்; என்னை மன்னித்தார்கள்; என்னை நேசித்தார்கள்.
உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம். மாம்பலத்தில் எனக்கு இவர்கள்தான் நண்பர்கள். குழந்தைகளுடன் இம்மாதிரிப் பழகுவதும் இம்மாதிரி விளையாடுவதும் அம்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஐம்பது வயதுத் தாயாருக்குத் தன் மகனை மனைவி மக்களுடன் குடித்தனம் செய்யும் தகப்பனாகக் காணத்தான் பிடிக்குமே தவிர, குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிக் கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பதைக் காணப் பிடிக்குமா?
பதின்மூன்று புத்தகங்களை எடுத்துக் கொடுத்த அந்தத் தினம், அந்த ஞாயிற்றுக்கிழமை கழிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். பிருந்தா ஜுரத்தோடு படுத்துவிட்டாள். அவளுடைய பெற்றோர்களை எனக்கு நேரில் தெரியாது. அதனால் அவளைப் போய்ப்பார்த்துவிட்டு வர எனக்கு சங்கோஜமாக இருந்தது. ஆனால் மற்றக் குழந்தைகளிடத்தில், “பிருந்தாவின் உடம்பு எப்படி இருக்கிறது?” என்று தினமும் விசாரித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் அதற்கு எப்படிப் பதில் சொல்லும்! ஜுரம் அதிகமாக இருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்று அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. “பிருந்தா எப்போது பார்த்தாலும் படுத்துக் கொண்டே இருக்கிறாள்” என்று மட்டும் தெரிவித்தார்கள்.
ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும். வீட்டு முற்றத்தில் ஈஸிச்சேரைப் போட்டுக் காற்றாட நிலா வெளிச்சத்தில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்த பிருந்தாவின் வீட்டு வேலைக்காரனை அழைத்து, “பிருந்தாவின் உடம்பு எப்படி இருக்கிறது? ஜுரம் குறைந்திருக்கிறதா” என்று கேட்டேன்.
”இல்லை ஸார், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. எதுவும் சாப்பிடுவதில்லை. இந்த நான்கு நாட்களில் குழந்தை துரும்பாக மெலிந்து போய்விட்டது. தூக்கத்தில் உங்களை நினைத்துத்தான் என்னென்னவோ புலம்பிக் கொண்டிருக்கிறாள்” என்றான் வேலைக்காரன்.
”என்னை நினைத்துப் புலம்புகிறாளா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“ஆமாம் ஸார். நேற்று ராத்திரிகூட ‘மாமா புத்தகம்’, ‘மாமா புத்தகம்’ என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள்” என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இந்த குழந்தையைப் போய்ப் பார்க்காமல் இருந்ததற்காக மிகவும் வருத்தப்பட்டேன். என் சங்கோஜத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மறுநாள் காலையில் அவசியம் போய்ப் பார்த்து விட்டு வரவேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டேன். “போய்வா” என்று வேலைக்காரனை அனுப்பிவிட்டு, தனியாகப் படுத்து என்னென்னவோ யோசித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது. அவ்வளவுதான், உடனே எழுந்து வீட்டுக்குள்போய் சட்டையை மாட்டிக் கொண்டு ‘விறு விறு’ என்று பிருந்தாவின் வீட்டுக்குச் சென்றேன். அவளுடைய பெற்றோர்கள் என்னை உள்ளே வரும்படி சொன்னார்கள். பிருந்தா படுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். அவள் கண்களை வெறுமனே மூடிக் கொண்டிருந்தாள்.
”பிருந்தா!” என்றேன்.
கண் விழித்து என்னைப் பார்த்தாள். அப்போது அவளுடைய முகத்தில் யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. அப்புறம் ஒருமுறை கண்களை மூடித் திறந்து என்னை நன்றாக உற்றுப் பார்த்தாள். ஒரு நிமிஷம் இப்படியே பார்த்துவிட்டு, திடீரென்று ‘மாமா!’ என்று உரக்கக் கூவினாள்; அப்படியே எழுந்து உட்கார்ந்து விட்டாள்.
“பிருந்தா! படுத்துக்கொள் அம்மா” என்று சொன்னேன்.
அவள் கேட்கவில்லை. எழுந்து என் பக்கம் வந்தாள். என்னைக் கட்டிக் கொண்டு, என் தோள் மீது முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவளுடைய உ டம்பு அனலாகச் சுட்டது. அவளைத் தட்டிக்கொடுத்து, படுக்கையில் கொண்டு போய்ப் படுக்க வைத்தேன்.
“எந்நேரமும் உங்கள் நினைப்புத்தான்” என்றாள் பிருந்தாவின் தாயார்.
என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. வாய் அடைத்துவிட்டது. மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணி நேரம் அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்து விட்டு, வீட்டுக்கு வருவதற்காகப் புறப்பட்டு விட்டேன்.
”போகவேண்டாம் இங்கேயே இருங்கள் மாமா!” என்று பிடிவாதம் பிடித்தாள், பிருந்தா. அப்புறம் அவளைப் பலவிதமாகச் சமாதானப்படுத்தி, “நாளைக் காலையில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அவ்விதமே மறுநாள் காலையில் சென்றேன். வெகு நேரம் அங்கேயே இருந்தேன். அவள் ஜுரத்தினால் கஷ்டப்படுகிறவள் மாதிரியே இல்லை. என்னோரு பேசிக்கொண்டு தான் இருந்தாள். ஆபிசுக்கு நேரமாகி விட்டதென்று அவளிடம் கூறிவிட்டு வெளியே எழுந்து வந்தேன். தெருவோடு வந்து கொண்டிருக்கும்போது சாரங்கன் தன் வீட்டு ஜன்னல் வழியாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த வாக்கிலேயே, “மாமா” என்று கூபிட்டான். நான் திரும்பிப் பார்ப்பதற்குள்ளாகத் தெருவுக்கு ஓடி வந்து விட்டான்.
”எங்கள் வீட்டுக்கும் வாருங்கள்” என்று கையைப் பிடித்து இழுத்தான்.
“உங்கள் வீட்டிற்கு எதற்கு?”
”பிருந்தா வீட்டுக்கு மட்டும்...”
“பிருந்தாவுக்கு ஜுரம். அதனால் போய்ப் பார்த்து விட்டு வந்தேன்.”
“ஊஹூம், எங்கள் வீட்டுக்கும் வரவேண்டும். ஆமாம்.”
“சாரங்கா! இன்னொரு நாளைக்கு வருகிறேன். கையைவிடு. எனக்கு ஆபிசுக்கு நேரமாகி விட்டது.”
நான் சொன்னபடியே கையை விட்டுவிட்டான். தன் இடது கையில் வைத்திருந்த இரண்டு நெல்லிக் காய்களில் ஒன்றை எடுத்து “இந்தாருங்கள்” என்று எனக்குக் கொடுத்தான். நான் சிரித்து விட்டேன். “வேண்டாம், நீயே வைத்துக்கொள்” என்றேன். அவனோ கட்டாயப்படுத்தி என்னிடம் கொடுத்தான். நான் என்ன சொல்லியும் கேட்கவில்லை. அந்த நெல்லிக்காயை வாங்கிக் கொள்ளாவிட்டால் அவன் என் சிநேகிதத்தையே உதறித் தள்ளி விடுவான் போல் இருந்தது. அதனால் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டேன். அவனுக்கு அப்பொழுது சொல்ல முடியாத ஆனந்தம்.
நான் புறப்படும்போது, “எப்போது எங்கள் வீட்டுக்கு வருவீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே என்னைத் தொடர்ந்து நடந்து வந்தான்.
“அடுத்த ஞாயிற்றுக்கிழமை” என்று பேச்சுக்குச் சொல்லி வைத்தேன்.
“கட்டாயம் வர வேண்டும்”
“சரி”
அவன் வீட்டுக்குப் போய்விட்டான்.
அதற்குப் பிறகு நான் பிருந்தாவின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ”ஞாயிற்றுக்கிழமை வர வேண்டும்; கட்டாயம் வர வேண்டும்” என்று எனக்கு ஞாபகமூட்டிக் கொண்டே இருந்தான்.
பிருந்தாவுக்கு மூன்று நாட்களில் ஜுரம் குணமாகி விட்டது ஓர் ஆச்சரியமாகவே இருந்தது. நான் தினமும் அவள் வீட்டுக்குப் போய் வந்தது தான் அவளுக்கு மருந்தாக இருந்தது என்று அவளுடைய தகப்பனார் என்னிடம் கூறினார். நான் போய் வந்ததன் காரணமாக ஒரு குழந்தையின் நோய் குணமாகிவிட்டது என்று அவர் சொன்னதைக் கேட்க எனக்கு எப்படியோ இருந்தது.  “எப்படியாவது உடம்பு குணமாயிற்றே, அது போதும்” என்றேன். அப்புறம், அவர் சொன்னது ஒரு வேளை உண்மையாக இருக்கலாமோ என்றுகூட எனக்குத் தோன்றியது.
சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு விடுமுறை. பிருந்தா உட்பட எல்லாக் குழந்தைகளும் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். புது வருஷம் பிறந்து இரண்டு மூன்று தினங்களே ஆகியிருந்தன. நான் வாக்களித்தபடி சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் இரண்டு டைரிகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். அவற்றில் வழக்கம் போல “அன்பளிப்பு” என்று எழுதி அந்த இருவர் கையிலும் கொடுத்தேன். மற்றக் குழந்தைகள் தமக்கு டைரி வேண்டுமென்று என்னிடம் கேட்கவில்லை. நான் எத்தனை புத்தகங்கள் கொண்டு வந்தாலும், என்ன பரிசு கொடுத்தாலும் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் தான் கொடுப்பேன் என்று ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவர்கள் இருவர்தான் இப்படிப்பட்ட அன்பளிப்புக்குத் தகுதியானவர்கள், அவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம் என்று எல்லாக் குழந்தைகளும் ஒப்புக்கொண்ட பாவனையில் பேசாமல் இருந்தன. முதல் நட்பு என்ற காரணத்தினால்தானோ என்னவோ, ஒரு அலாதிப் பிரியத்துடன் அவர்களுக்கு மட்டும் நான் புத்தகங்களைக் கொடுப்பது வழக்கமாகி விட்டது. இந்த நெடுநாளைய வழக்கம் மற்றக் குழந்தைகளுக்குப் பழகியும் போய்விட்டது.
டைரிகளை வாங்கிக்கொண்டு அந்த இருவரும் சாப்பிடப் போய் விட்டார்கள். அவர்கள் போனபிறகு மற்றவர்களும் புறப்பட்டார்கள். ஆனால் அன்று சாரங்கன் மட்டும் போகவில்லை. எல்லோரும் போன பிறகும் கூட அவன் உட்கார்ந்து கொண்டுதான் இருந்தான். என்னிடத்தில் அந்தரங்கமாக, “மாமா! நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வருவீர்களா? நாளைக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை” என்றான்.
”சரி சாரங்கா, எத்தனை தடவை சொல்லுகிறது? ஒரு தடவை சொன்னால் ஞாபகமிருக்காதா?” என்றேன்.
அவன் எழுந்து, வால்ட் விட்மனின் கவித் தொகுதியைக் கையில் எடுத்தான்.
“இந்தப் புத்தகத்தை எனக்குத் தருவீர்களா?” என்று கெஞ்சுதலாகக் கேட்டான். எனக்கு அது வேடிக்கையாக இருந்தது. சிரித்துக் கொண்டே, “இந்தப் புத்தகம் உனக்கு எதற்கு? அது உனக்கு இப்பொழுது புரியாது. நான் அன்றைக்கே சொல்லவில்லையா? நீ எஸ்.எஸ்.எல்.ஸி வகுப்புக்கு வந்ததும் கேள்; தருகிறேன்” என்றேன்.
நான் சொன்னதை அவன் கேட்கவில்லை. பதின்மூன்று வயதுப் பையன் ஐந்து வயதுக் குழந்தையைப் போல முரண்டு பண்ணிக்கொண்டு, அந்தப் புத்தகத்தை அவசியம் கொடுத்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.
”சாரங்கா! உனக்குப் புரியாது. சொன்னால் கேள்” என்று சொன்னேன். அப்புறம் அவன் கையிலிருந்து புத்தகத்தை வாங்கி ஜன்னலில் கொண்டு போய் வைத்தேன்.
சாரங்கனின் முகம் ஏமாற்றத்தினால் வெளிறிப்போய் விட்டது. வறண்ட பார்வையோடு என்னைப் பார்த்தான். ஒன்றுமே சொல்லாமல் எழுந்து வாசல் பக்கம் போனான். சரி, வீட்டுக்குப் போகிறான் என்று நினைத்து, நான் என் வேலையைக் கவனிக்கலானேன். இரண்டு நிமிஷ நேரத்துக்குப் பிறகு, திடீரென்று ஒரு அழுகைக் குரல் கேட்டது. அழுதது சாரங்கன்தான். “சாரங்கா! ஏன் அழுகிறாய்? சேச்சே, அழாதே ராஜா” என்று சொல்லிக்கொண்டே அவன் பக்கத்தில் எழுந்து சென்றேன். ஆனால், நான் போகும் வரையில் அவன் அங்கே நிற்கவில்லை, அழுகையை நிறுத்தினான். என்னைத் திரும்பிப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அவனுடைய வயிறு அசாதாரணமாக குழிந்து புடைத்தது. அப்பொழுது முகம் ரத்தம் போலச் சிவந்துவிட்டது. இதெல்லாம் எதற்கென்றே எனக்குப் புரியவில்லை. அவன் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தேன். என்னைப் பார்க்கவே அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் போய் கையை எட்டிப் பிடிப்பதற்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.
“சாரங்கா!.... சாரங்கா!”
அவன் ஓடியே விட்டான். அன்று அவன் நடந்து கொண்ட விதம் எனக்கு ஒரு புதிராக இருந்தது. எப்பொழுதும் அவன் பிடிவாதம் பண்ணமாட்டான். என்னிடத்தில் பேசுவதற்கே கூசுவான். அப்படிப்பட்ட பையன் எதற்காகப் பிடிவாதம் பிடித்தான்? எதற்காக அப்படி அழுதான்? எதற்காகத்தான் அழுதானோ? அவனைப் பின் தொடர்ந்து சென்று, அழுத காரணத்தைக் கேட்காவிட்டால் என் நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. ஆனால், அவன் வீட்டுக்குப் போகவும் என்னால் இயலவில்லை. அவனுடைய பெற்றோர்கள், பிற பெற்றோர்களைப் போலவே எனக்குப் பரிச்சயமில்லாதவர்கள்.
பாவம்! ஏங்கி ஏங்கி அழுதான், அவமானப்பட்டவன் போல் அழுதான். பிற்பகலில் குழந்தைகள் என் அறைக்கு வந்தால், அவர்களை அனுப்பி அவனை அழைத்துவர வேண்டுமென்று தீர்மானித்தேன். மூன்று மணிக்கெல்லாம் முதல் ஆளாக சுந்தரராஜன் வந்து சேர்ந்தான். அவனைச் சாரங்கனிடம் அனுப்பி வைத்தேன். சாரங்கன் தூங்கிக் கொண்டிருப்பதாக சுந்தரராஜன் என்னிடம் வந்து தெரிவித்தான். அதற்குப் பிறகு அவனை வரவழைக்கும் முயற்சியை நிறுத்தினேன். மறுநாள் காலையில் அவன் வந்தால்  பார்க்கிறது. இல்லையென்றால் நானே அவன் வீட்டுக்குப் போவது இதே தீர்மானத்துடன் மற்றக் குழந்தைகளுடன் அன்றைய மாலைப் பொழுதைப் போக்கினேன்.
இரவில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்ட பிறகு தான் என் மனம் மிகமிகக் கஷ்டப்பட்டது. பக்கத்தில் யாருமில்லாத அந்தத் தனிமையில் மனத்துயரம் பெரிதாகிக் கொண்டே இருந்தது. உள்ளத்தில் எத்தனையோ துயரம் படிந்த சிந்தனைகள்; ‘ஏன் அழுதான்? நான் அவனை ஒன்றும் சொல்லவில்லையே! எல்லாக் குழந்தைகளையும் போலவே அவனையும் என் கண்ணுக்குக் கண்ணாக வைத்துக் கொண்டிருக்கிறேன். வால்ட் விட்மன் கவித் தொகுதியைக் கேட்டான், அது அவனுக்குப் புரியாது என்று வாங்கி வைத்துவிட்டேன், இதற்காகவா அவன் அழுதிருப்பான்? அவன் விபரம் தெரிந்த பையன். எப்போதும் நான் சொல்வதை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்பவன். அப்படிப்பட்ட பையன் புத்தகத்தை நான் திருப்பி வாங்கிக்கொண்டதற்காக இப்படி அழுதிருக்க முடியாது. நான் திரும்பி வாங்கிக் கொண்ட காரியம், விம்மிவிம்மி அழத்தக்க மன வேதனையைத் தர நியாயமில்லை! சாரங்கா! எதற்காக அழுதாய்? எதற்காக அழுதாயடா”
ஞாயிற்றுக் கிழமை.
நேற்று பிற்பகலில் அவன் வராமல் இருந்து விட்டதால் இன்றும் வரமாட்டான் என்றே எண்ணியிருந்தேன். சப்தரிஷி மண்டலம் போன்ற எங்கள் கூட்டத்தில் இந்த ஒரு நக்ஷத்திரம் மறைந்து நிற்பதை மற்றக் குழந்தைகள் பொருட்படுத்தவில்லை. அத்துடன் அவர்கள் கவலைப்படுவதற்கும் இங்கே என்ன இருக்கிறது? ஒருநாள் பிற்பகலில் அவன் வராமல் இருந்தது அவர்களுக்கு ஒரு பிரிவாகத் தோன்ற நியாயமில்லை. எனக்கும் மற்றச் சமயங்களில் இது கவனத்தைக் கவரத்தக்க விஷயமாக இல்லாமல், சகஜமான காரியமாக இருந்திருக்கும். ஆனால், அவன் நேற்று எந்த நிலையில் என்னைப் பிரிந்து சென்றான். எந்த நிலையில் என்னை விட்டுவிட்டுச் சென்றான் என்ற விபரங்கள் எனக்கல்லவா தெரியும்?
காலை பத்து மணி இருக்கும். ஞாயிற்றுக்கிழமையானதால் சாப்பாட்டைப் பகல் ஒரு மணிக்கு ஒத்திப் போட்டுவிட்டு, காலையில் பலகாரம் பண்ணி நானும் என் தாயாரும் சாப்பிட்டோம். அப்புறம் நான் என் அறைக்கு வந்து ஏதாவது படிக்கலாம் என்று உட்கார்ந்தேன். மனம் என்னவோ அந்த வால்ட் விட்மனின் கவித் தொகுதியைத் தான் படிக்க விரும்பியது. அதைக் கையில் எடுத்து விரித்ததும் என் கண்களுக்குக் கவிதா வாசகங்கள் தென்படவில்லை; சாரங்கன் தான் காட்சியளித்தான்; அவனுடைய கண்ணீரும் ஏக்கமும்தான் காட்சியளித்தன. இது சோதனையாக இருக்கிறதே! அவனாவது இங்கு வரக்கூடாதா? அல்லது வேறு குழந்தைகளாவது வரக் கூடாதா என்று மறுகிக்கொண்டு கிடந்தேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு பிருந்தா வந்தாள். பாக்கிய தேவதை என ஒரு தெய்வ மகள் உண்மையிலேயே இருந்து, ஒரு தரித்திரனின் வீட்டில் அடியெடுத்து வைத்தது போல இருந்தது பிருந்தாவின் வரவு.
”வா பிருந்தா! பிருந்தா என்ற பெயரை மாற்றி ‘பிரியதர்சினி’ என்று பெயர் வைத்தால் உனக்குப் பொருத்தமாக இருக்கும் பிருந்தா!” என்றேன்.
என் பரவசம் அவள் உள்ளத்தைத் தொடவில்லை. என் சொற்கள் அவள் செவிக்கு எட்டவும் இல்லை.
”சுந்தரராஜனும் சித்ராவும் சினிமாவுக்குப் போய் விட்டார்கள்” என்று காரண காரியமில்லாமல் சொன்னாள் பிருந்தா.
“சாரங்கன்?” என்று ஆவலோடு கேட்டேன்.
”நான் பார்க்கவில்லை” என்று சொல்லிவிட்டாள்.
மேற்கொண்டு நான் சாரங்கனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கும்போது, பிருந்தாவின் வீட்டு வேலைக்காரன் வந்து, “அம்மா கூப்பிடுகிறார்கள்” என்று சொல்லி அவளை அழைத்தான். பிருந்தா உடனே, “போய் வருகிறேன்” என்று சொல்லிக் கிளம்பிவிட்டாள். அவள் போன பிறகு பழையபடியும் அந்தக் கவித் தொகுதியை எடுத்து விரித்தேன். அப்போது பிருந்தா வெகுவேகமாக ஓடிவந்தாள். வந்து, “சாரங்கன் வருகிறான்” என்று சொல்லிவிட்டு அந்த க்ஷணத்திலேயே தன் வீட்டை நோக்கி ஓடிவிட்டாள்.
என் இதயம் ‘படபட’வென்று அடித்துக்கொண்டது. அதிவேகமாக வால்ட் விட்மனின் புத்தகத்தை மறைத்து வைத்து விட்டேன். அதைப் பார்த்தால் சாரங்கனுக்குப் பழையபடியும் அழுகை வந்துவிடுமோ என்று எனக்குப் பயம்.
சாரங்கன் வந்துவிட்டான்.
“சாரங்கா....”
“உம்.”
“ஏன் நீ இவ்வளவு நேர வரையிலும் வரவில்லை? நேற்றும் வரவில்லை?”
அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை, அவன் முகத்தில் துயரமோ, வேறு விதமான ஆழ்ந்த உணர்ச்சிகளோ பிரதிபலிக்கவில்லை. ஒரே சந்தோஷமாகத்தான் இருந்தான். இது மகிழ்ச்சிக்குரிய மாறுதல்தான் என்று நான் நினைத்துக் கொண்டேன்.
“எங்கள் வீட்டுக்குப் போவோமா?”
”உங்கள் வீட்டுக்கா?”
“ஆம். நீங்கள் வருவதாக அன்றே சொல்ல வில்லையா?”
“சும்மா வேடிக்கைக்குச் சொன்னேன், சாரங்கா! உங்கள் வீட்டுக்கு எதற்கு?”
“எதற்கோ? நீங்கள் வாருங்கள்” என்று இரண்டு கைகளாலும் என் கையைப் பிடித்து இழுத்தான்.
அவனுடைய வேண்டுகோள் எனக்கு ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. அன்று பிருந்தாவின் வீட்டிலிருந்து வரும்போது அவனுடைய கட்டாயத்தைப் பார்த்து, “ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்” என்று சொல்லி வைத்தேன். அந்த விஷயத்தை அவன் இவ்வளவு தூரம் வற்புறுத்துவான் என்று தெரிந்திருந்தால் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன். இந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்காக வேற்றார் வீட்டுக்குப் போவது எப்படி? போவதற்குக் காரணமும் வேண்டுமே! பிருந்தா வீட்டுக்குப் போனதற்காவது அவளுடைய தேக சௌக்கியம் காரணமாக இருந்தது. இங்கே போவது எதற்காக? இவனுடைய அப்பாவை வீதியிலும் பஸ் ஸ்டாண்டிலும் ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு தடவைகூட நாங்கள் பேசிக் கொண்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று எவ்வித சைகை ஜாடையின் மூலமாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியிருக்க அங்கு நான் எப்படிப் போவது?
சாரங்கன் மிகவும் அதிகமாக வற்புறுத்தத் தொடங்கினான். அவசரப்படவும் ஆரம்பித்தான். எனக்கு அது ஒரு தொந்தரவாகவே ஆகிவிட்டது. ’இத்தனை நாளும் இவன் வாய்மூடி மௌனியாக இருந்தது போதும், இன்று பாடாய்ப் படுத்துவதும் போதும்’ என்று சலித்துக் கொண்டேன்.
“வாருங்கள் மாமா. சொல்லிவிட்டு மாட்டேன் என்கிறீர்களே?” என்று கெஞ்சினான்.
“சாரங்கா! நீ சிறு பிள்ளை. உன் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் வருவது எப்படி? இந்த நாசூக்கு எல்லாம் உனக்குப் புரியாது. என்னை விட்டுவிடு” என்று பொறுமையிழந்து சொன்னேன்.
“ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள்?” என்று என் முகத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு ஏக்கத்துடன் கேட்டான்.
“அங்கே எதற்கு?”
“அதென்னமோ, கட்டாயம் வரத்தான் வேண்டும்.”
நான் கோபப்பட்டவன் போல் நடித்து, “என்னால் வரமுடியாது. எனக்கு அவசரமான வேலை இருக்கிறது. இன்னொரு நாளைக்கு வேண்டுமானால் பார்த்துக் கொள்வோம்” என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டேன். ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடுபவன்போல் மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தேன்.
சாரங்கன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
ஒரு நிமிஷம் கழிந்திருக்கும். அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். நான் பார்த்த மாத்திரத்தில் அவனும் ஒரு முறை பெருமூச்சு விட்டுக்கொண்டு “வரமாட்டீர்களா” என்று தடுமாறும் குரலில் கேட்டான்.
அவனுடைய இந்தக் கடைசி முயற்சியைத் தகர்த்து விட்டால், பழையபடியும் அழ ஆரம்பித்து விடுவான் என்பதற்குரிய அடையாளம் அவன் முகத்தில் தென்பட்டது. சாரங்கனைத் திரும்பத் திரும்ப அழ வைத்துப் பார்க்க எனக்கு இஷ்டமில்லை. ‘தங்கமான பையனை ஏன் இப்படிக் கஷ்டத்துக்கு ஆளாக்க வேண்டும்? போய்விட்டுத் தான் வருவோமே! நம்மை வரவேண்டாமென்றா சொல்லப் போகிறார்கள்? அப்படியிருக்க ஒரு முறை போய் வருவதில் என்ன நஷ்டம்?” என்று அதிசீக்கிரமாக யோசித்து முடிவு கட்டினேன். அவன் கண்ணீர் சொரிவதற்குள் என் சம்மதத்தை தெரிவித்துவிட்டேன்.
“சாரங்கா! வா! உன் வீட்டுக்கே போகலாம்”
இருவரும் கைகோத்துக்கொண்டே சென்றோம். அவன் வீட்டுக்கு முன்னால் போனதும், என் கையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே வேகமாக ஓடினான். அப்புறம் வெளியில் வந்து வாசல் பக்கத்திலுள்ள அறையைத் திறந்து, “வாருங்கள், வாருங்கள்” என்று படபடப்பாக இரைந்து சொன்னான். என்னுடைய தயக்கத்தையும், என்னுடைய சங்கோஜத்தையும் அளவிட்டுச் சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் அந்த அறைக்குள் சென்றேன். அறையின் சூழ்நிலையைக் கொண்டே சாரங்கனின் பெற்றோர்கள் ஏழைகள் என்று எளிதில் தீர்மானிக்க முடிந்தது. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் கிடந்த அவனுடைய சரித்திரப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். சாரங்கன் வீட்டுக்குள்ளே ஓடிவிட்டான். அப்போது வெளியிலிருந்து வந்த அவனுடைய தகப்பனார், அறைக்குள் எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்து “வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார். “என்ன விசேஷம்?” என்று என்னை அவர் விசாரிக்காமல் விட்டது எனக்கு ராஜமரியாதை செய்தது போல் இருந்தது.
சாரங்கன் திரும்பி வரும்போது, ஒரு தட்டில் உப்புமாவும், ஒரு டம்ளரில் காபியுமாக வந்து சேர்ந்தான். நான் திடுக்கிட்டு விட்டேன்; என் சுவாசம் அப்படியே நின்று விட்டது.
“ஐயோ! இதெல்லாம் எதற்கு? நான் இப்போதுதானே சாப்பிட்டேன்?”
சந்தோஷப் படபடப்பில் ஒன்றுமே சொல்லாமல் வந்து அவன் என் வலது கையைப் பிடித்து இழுத்து உப்புமாத்தட்டில் கொண்டு போய் வைத்தான். சாரங்கன் ரொம்பவும் சிறுபிள்ளையாக இருக்கிறான். இனிமேல் இவனிடம் கொஞ்சம் கண்டிப்பாகத்தான் நடந்து கொள்ளவேண்டும். இன்று மட்டும் ஏதோ கசப்பு மருந்தைச் சாப்பிடுவோம். வேறு வழியில்லை என்று எண்ணிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன். சிறு பையன் பேச்சைக் கேட்டு விருந்தாட வந்த என்னைப் பற்றி அவனுடைய பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்ற பயம் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு அதிர்ச்சி கொடுத்த வண்ணமாக இருந்தது.
ஒருவழியாகச் சாப்பிட்டு முடிந்தது. தட்டையும் டம்ளரையும் உள்ளே கொண்டுபோய் வைக்கப் போனான் சாரங்கன்.
’இந்தப் பையனுக்கு எதற்கு என் மேல் இவ்வளவு அன்பு? இவன் அன்பு என்னைத் திணற அடிக்கிறதே! இது தாங்கமுடியாத அன்பு! தாங்க முடியாத பேதைமை! இரண்டும் சேர்ந்து என்னை குரங்காட்டம் ஆட்டுகின்றன. ஆனால் இவனைக் கோபிக்கக் கூடாது. இவன் இப்போது எனக்குக் கொடுக்கும் தொந்தரவே இவனுடைய அன்பை அளந்து காட்டுகிறது. ஏதோ ஒரு நாள் என்னைக் கஷ்டப்படுத்துவதனாலவது, இவன் திருப்தியடையட்டும். என்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும், திருப்தியும் கொள்ள முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக் கூடாது. தடுக்க முயலுவது அமானுஷிகம்’ என்று எண்ணித் தேற்றிக்கொண்டேன்.
சாரங்கன் வெளியே வந்தான். மேஜையைத் திறந்து ஒரு பவுண்டன் பேனாவை எடுத்தான். என் முகத்துக்கு எதிரில் நிற்காமல் என் முதுகுப் புறமாக வந்து நின்று கொண்டான். அங்கே நின்ற வாக்கிலேயே, நான் கையில் வைத்திருந்த சரித்திரப் புத்தகத்தை மெதுவாகப் பிடித்து இழுத்துத் தூரத்தில் வைத்தான். தூங்கும் குழந்தையின் கையிலிருக்கும் கிலுகிலுப்பையை எவ்வளவு ஜாக்கிரதையாகத் தனியே எடுத்து அப்புறப்படுத்துகிறோமோ, அது போல அதை அப்புறப்படுத்தினான். பிறகு அவன் வலது கையால் தன் கால் சட்டையின் பையில் கையை விட்டு எதையோ எடுப்பதுபோல் எனக்கு ஜாடையாகத் தெரிந்தது. அதை என் முன்பாக மேஜைமேல் வைத்தான்.
அது ஒரு டைரி. நான் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்த டைரிகளைப் போன்ற ஒரு டைரி. அதே கம்பெனியில் செய்தது. அதே நிறமுடையது. அப்புறம் பேனாவை என் கையில் கொடுத்து “எழுதுங்கள்” என்றான்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன எழுத?” என்று கேட்டேன்.
“என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு” என்று எழுதுங்கள்.”
****
சக்தி அக்-நவ 1951

ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமிபாய்

** ஜான்சி ராணி லட்சுமிபாய் - பிறந்த நாள் (நவம்பர் 19) **
*

ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து… 
நவம்பர் 19, 1835 ஆம் ஆண்டு வாரணாசியில் பிராமணக் குடும்பத்தில் மௌரியபந்தர் - பகீரதிபாய் என்ற தம்பதிக்கு பிறந்தவர் ஜான்சிராணி
*. இயற்பெயர் மணிகர்ணிகா. மனு என்று அழைக்கப்பட்டார். 4 வயதில் தாயை இழந்தார். தந்தை, பித்தூர் பேஷ்வாவிடம் பணிபுரிந்தார். பேஷ்வா இவரைத் தன் சொந்த மகள்போலவே வளர்த்தார். படிக்கும் வயதிலேயே குதிரை ஏற்றம், கத்திச் சண்டை மற்றும் தற்காப்புப் பயிற்சிகளைப் பயின்றார்.
* 1842-ல் ஜான்சி மன்னர் கங்காதர ராவுடன் திருமணம் நடைபெற்றதும் ‘ஜான்சி ராணி லட்சுமிபாய்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இவர்களுக்குப் பிறந்த குழந்தை 4 மாதங்களில் இறந்ததால் வேறொரு குழந்தையைத் தத்தெடுத்தனர். ஆனாலும், மகனை இழந்த சோகத்தில் ராஜா இறந்தார். அதன் பிறகு, நாட்டை ஆளத் தொடங்கினார் லட்சுமிபாய். பெண்களுக்கு போர்ப் பயிற்சி அளித்து, தனது ராணுவத்தில் பெண்கள் படையை உருவாக்கினார். அண்டை நாடுகள் மீது படையெடுத்து வென்றார்.
* ஆங்கிலேயரின் அவகாசியிலிக் கொள்கைப்படி நேரடி வாரிசு இல்லாத அரசுகள் ஆங்கில ஆட்சியின் கீழ் வந்துவிடும். ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு ஜான்சியை விட்டு வெளியேறுமாறு ஆங்கில அரசு ஆணையிட்டது. லட்சுமிபாய் ஒப்புக்கொள்ளவில்லை.
* கிழக்கிந்தியத் தலைவர்களைக் கொன்றதாக லட்சுமிபாய் மீது குற்றம் சாட்டி ஜான்சி மீது படையெடுத்தது ஆங்கிலப் படை. இறுதியில் ஜான்சி நகரைக் கைப்பற்றினர். ஆண் வேடத்தில் இருந்த லட்சுமிபாய், தன் மகனுடன் மதில் மேலிருந்து பாய்ந்து தப்பினார்.
* தன் படைகளை மீண்டும் திரட்டி தாந்தியா தோபேயின் படைகளுடன் இணைந்துகொண்டார். இருவரும் இணைந்து குவாலியர் கோட்டையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயப் படை குவாலியரைத் தாக்கியது.
* அவர் சளைக்காமல் போரிட்டார். போர் ஒரு வாரம் நீடித்தது. ஆங்கிலேயரின் அதிநவீன போர்க் கருவிகளை எதிர்கொள்ள முடியாமல் அந்த போரில் கொல்லப்பட்டார். வீர மரணம் அடைந்தபோது லட்சுமிபாய்க்கு வயது 29.
* அவர் ஏற்கெனவே கூறியபடி படைவீரர் ராமச்சந்திரா என்பவர் குவாலியர் அருகே புல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு லட்சுமிபாய் உடலை தகனம் செய்தார். தன் உடல்கூட ஆங்கிலேயருக்குக் கிடைக்கக் கூடாது என்பது அந்த இளம் வீராங்கனையின் விருப்பம்.
* அவரது வீரதீரச் செயல்களைப் பற்றிய பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டார் கதைகள், நாடகங்கள் பல மொழிகளிலும் உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளிலும் கதைகள் எழுதப்பட்டுள்ளன. திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்களும் வந்துள்ளன.
* ஆங்கிலேயருக்கு எதிராக தான் உருவாக்கிய மகளிர் படைக்கு ‘ஜான்சி ராணி படை’ என்று பெயரிட்டார் நேதாஜி.
* அமரத்துவம் பெற்ற வீராங்கனையாக என்றென்றும் இவரது பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது. இவரது வீர வரலாறு அடுத்தடுத்து வந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்தது. 
 

**
தொகுப்பு : ராஜலட்சுமி சிவலிங்கம்
** ஜான்சி ராணி லட்சுமிபாய் - பிறந்த நாள் (நவம்பர் 19) **

*
ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

* வாரணாசியில் பிறந் தவர். இயற்பெயர் மணிகர்ணிகா. மனு என்று அழைக்கப்பட்டார். 4 வயதில் தாயை இழந்தார். தந்தை, பித்தூர் பேஷ்வாவிடம் பணிபுரிந்தார். பேஷ்வா இவரைத் தன் சொந்த மகள்போலவே வளர்த்தார். படிக்கும் வயதிலேயே குதிரை ஏற்றம், கத்திச் சண்டை மற்றும் தற்காப்புப் பயிற்சிகளைப் பயின்றார்.

* 1842-ல் ஜான்சி மன்னர் கங்காதர ராவுடன் திருமணம் நடைபெற்றதும் ‘ஜான்சி ராணி லட்சுமிபாய்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இவர்களுக்குப் பிறந்த குழந்தை 4 மாதங்களில் இறந்ததால் வேறொரு குழந்தையைத் தத்தெடுத்தனர். ஆனாலும், மகனை இழந்த சோகத்தில் ராஜா இறந்தார். அதன் பிறகு, நாட்டை ஆளத் தொடங்கினார் லட்சுமிபாய். பெண்களுக்கு போர்ப் பயிற்சி அளித்து, தனது ராணுவத்தில் பெண்கள் படையை உருவாக்கினார். அண்டை நாடுகள் மீது படையெடுத்து வென்றார்.

* ஆங்கிலேயரின் அவகாசியிலிக் கொள்கைப்படி நேரடி வாரிசு இல்லாத அரசுகள் ஆங்கில ஆட்சியின் கீழ் வந்துவிடும். ரூ.60 ஆயிரம் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு ஜான்சியை விட்டு வெளியேறுமாறு ஆங்கில அரசு ஆணையிட்டது. லட்சுமிபாய் ஒப்புக்கொள்ளவில்லை.

* கிழக்கிந்தியத் தலைவர்களைக் கொன்றதாக லட்சுமிபாய் மீது குற்றம் சாட்டி ஜான்சி மீது படையெடுத்தது ஆங்கிலப் படை. இறுதியில் ஜான்சி நகரைக் கைப்பற்றினர். ஆண் வேடத்தில் இருந்த லட்சுமிபாய், தன் மகனுடன் மதில் மேலிருந்து பாய்ந்து தப்பினார்.

* தன் படைகளை மீண்டும் திரட்டி தாந்தியா தோபேயின் படைகளுடன் இணைந்துகொண்டார். இருவரும் இணைந்து குவாலியர் கோட்டையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயப் படை குவாலியரைத் தாக்கியது.

* அவர் சளைக்காமல் போரிட்டார். போர் ஒரு வாரம் நீடித்தது. ஆங்கிலேயரின் அதிநவீன போர்க் கருவிகளை எதிர்கொள்ள முடியாமல் அந்த போரில் கொல்லப்பட்டார். வீர மரணம் அடைந்தபோது லட்சுமிபாய்க்கு வயது 29.

* அவர் ஏற்கெனவே கூறியபடி படைவீரர் ராமச்சந்திரா என்பவர் குவாலியர் அருகே புல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு லட்சுமிபாய் உடலை தகனம் செய்தார். தன் உடல்கூட ஆங்கிலேயருக்குக் கிடைக்கக் கூடாது என்பது அந்த இளம் வீராங்கனையின் விருப்பம்.

* அவரது வீரதீரச் செயல்களைப் பற்றிய பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டார் கதைகள், நாடகங்கள் பல மொழிகளிலும் உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளிலும் கதைகள் எழுதப்பட்டுள்ளன. திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்களும் வந்துள்ளன.

* ஆங்கிலேயருக்கு எதிராக தான் உருவாக்கிய மகளிர் படைக்கு ‘ஜான்சி ராணி படை’ என்று பெயரிட்டார் நேதாஜி.

* அமரத்துவம் பெற்ற வீராங்கனையாக என்றென்றும் இவரது பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது. இவரது வீர வரலாறு அடுத்தடுத்து வந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்தது. 

**
தொகுப்பு : ராஜலட்சுமி சிவலிங்கம்

Communicative rhythms in brain and behaviour


Rachel Smith, Tamara Rathcke, Fred Cummins, Katie Overy and Sophie Scott
What is rhythm? An immediate answer to this question appears simple and might be linked with everyday examples of rhythmic events or behaviours like dancing, listening to a heartbeat or rocking a baby to sleep. However, a unified scientific definition of rhythm remains elusive. For decades, research programmes concerning rhythm and rhythmic organization have developed largely independently in areas such as music and poetry, language and language disorders, and behaviour and cognition more generally, and in this process have identified many other everyday phenomena, including nodding one's head to words, selectively attending to particular moments in time, and finishing the sentences of one's dialogue partner, that can be interpreted as cases of rhythmic behaviour. Most recently, the rhythmic nature of neural oscillations has received much attention, contributing an additional perspective to the notion of rhythm in communication systems. We believe that at this stage, it is essential to start a cross-disciplinary conversation around the unified theme of rhythm. The aim of this theme issue is to provide the vocabulary for the conversation, and to update the common ground across disciplines with understanding of fundamental concepts, current issues and methodologies, in the hope that this will help a new, more integrative view of rhythmic, human perception and action to emerge.

மூன்று தமிழ் சங்கங்களிலும் ஈழத்தவர்களின் பங்களிப்பு ,,,,,,,,

தமிழ் வளர்க்க முற்காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்ததா என்பதற்கு முதலில் சான்றுகளையும் வாத பிரதிவாதங்களையும் அறிஞர்கள் கருத்துகளையும் பார்ப்போம்.பின்னர் சங்கங்கள் பற்றிய விபரங்களை தொகுப்போம்.முடிவில் அதில் ஈழத்தவர் பங்குபற்றினார்களா என்பதை தெளிவுபடுத்துவோம்.

கி பி 8 நூற்றாண்டில் இறையனார் களவியல் உரையில் தான் மூன்று சங்கங்கள் பற்றிய விபரங்கள் முதலில் தெரியவருகின்றது.பிற்கால ஆய்வாளர்கள் மூன்று சங்கம் இருந்தன என்று பலர் ஏற்றுகொள்கின்றார்கள்.சிலர் முதல் இரண்டு சங்கள் இருந்தது என்பதை ஏற்றுகொள்ள சான்றுகள் போதாமல் இருந்தாலும் மூன்றாவது ஒரு சங்கம் இருந்தது என்று கூறுகின்றார்கள்.இவ்வாறு கூறுபவர்களில் டாக்டர் எஸ். கிருட்டினசாமி அய்யங்கார், கே.ஏ. நீலகண்ட சாத்திரியார், இரா. இராகவ ஐயங்கார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகியோர் முக்கியமானவர்கள். சிலர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது என்பது முழுதும் கற்பனை கதைகட்டல் என்கின்றார்கள்.அவர்களில் கே.என். சிவராச பிள்ளையும், பி.தி. சீனிவாசய்யங்காரும் குறிப்பிடத்தக்கவர்கள்.இதில் வாத பிரதிவாதங்களாக முன்வைக்கும் கருத்துக்களின்படி எல்லோர் கருத்திலும் நியாயம் இருக்கிறது.ஆனால் முடிவில் சங்கம் இருந்ததை ஏற்றுகொள்ள வேண்டியே இருக்கிறது.

எம் முன்னோர்களின் வரலாறுகளை பார்க்கும் பொழுது அவர்கள் அறிவு பூர்வமாக எம்மை விட பலமடங்கு அறிவாளிகள் என்பது உண்மையான விடயம்.விமானங்களில் பயணம் செய்தார்கள் என்பது போன்ற விடயங்களை கற்பனை என்றவர்களும் இன்றைய நிலையில் ஏற்றுகொள்ள முன்வருகின்றார்கள். உலகில் மத்திய தென் அமேரிக்கா நாடுகளிலும் எகிப்திலும் இருக்கும் 200 வரையான பிரமிட்டுக்களை 4000/4700 ஆண்குகளுக்கு முன் கட்டினார்கள்.அவ்வாறான உறுதியான கட்டிடங்களை இன்றைய எமது நவீன வசதிகளை கொண்டு கட்டமுடியாமலே இருக்கிறது.எம் முன்னோர்கள் அவ்வாறு வாழ்வியலில் பல சாதனைகளை செய்து இருக்கின்றார்கள் என்பது ஆராச்சியாளர்கள் நாளுக்கு நாள் கொண்டுவரும் புராதன தகவல்களில் இருந்து அறியமுடிகின்றது.ஞாபக சக்தியிலும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலிலும் அவர்கள் எம்மை விட பல மடங்கு மேன்மையானவர்கள்.அவர்கள் எமக்காக பல முன் ஏற்பாடுகளை வாழ்வில் செய்து எமக்கு வாழ வழிகாட்டியவர்கள் சங்கம் வைத்து தாய் மொழியையும் வளர்த்து இருப்பார்கள் என்பதை தமிழ் உலகம் ஏற்றுகொள்கின்றது.

சங்கங்கள் ஏன் 3 ஒன்றாக தொடர்சியாக இருக்கவில்லை என்ற கேள்வி யாருக்காவது வருமாயின் அதற்கு முக்கியமான காரணமாக பலரும் வைக்கும் தரவு முதல் 2 சங்கங்களின் அழிவுக்கும் கடல் அழிவு ஒன்றுதான்.கடை சங்க அழிவுக்கு காரணம் களப்பிரர்களின் வருகையும் தமிழத்தின் வீழ்சியும்.அதற்கு பின்னர் பல்லவர்காலத்தில் தொடங்கிய வளர்சி இன்றுவரை தொடர்ந்தாலும் மேற்கு நாட்டவர்கள் வருகையால் பிற மொழிகளின் பாதிப்பால் இன்று ஒரு இக்கட்டான நிலையில் தான் தமிழ் மொழி இருக்கிறது.

கி பி 250/300 அளவில் மூன்றாம் சங்கம் களப்பிரர்கள் தமிழகத்தை கைப்பற்ற முடிவுக்கு வருகிறது என்று பார்த்தால் அதற்கு முதல் மொத்தமாக 9990 ஆண்டுகள் தமிழ் வளர்த்தார்கள் என்று பார்த்தால் முதல் சங்கம் அண்ணளவாக கி மு 9690 அளவில் ஆரம்பித்து இருக்கின்றார்கள்.9990 ஆண்டுகள் என்பது இறையனார் கி பி 8ம் நூற்றாண்டு கணிப்பு ஆனால் கடைசங்க புலவர் நக்கீரனார் கணிப்பின் படி முதல் சங்கம் தொடங்கியது. கி மு 9000 ஆண்டளவில் அத்திலாந்து சமுத்திரம் என்ற நூல் எழுதிய மேலைத்தேச ஆய்வாளர் முதல் மிக பெரிய கடல் அழிவு ஏற்பட்டது என்று குறிப்பிட்ட காலம் கி மு 9583 ஆண்டாகும். இந்த கடல் கோளின் பின்னரே முதல் சங்கம் உருவாகி இருக்க வேண்டும்.இந்த கடல் அழிவில் குமரிக்கண்ட பகுதிகள் அழிந்தது என்றாலும் இரண்டாவது கடல் கோளில் தான் தென் மதுரை அழிந்தது என்று வரலாற்றில் வருகின்றது அந்த இரண்டாவது கடல் கோள் நடந்த காலம் கி மு 6087 முதல் சங்கம் 4440 வரிடம் நடந்தது என்ற இறையனார் கருத்து இங்கு பிழைக்கின்றது. அந்த கணக்கு சரியாக வரவேண்டும் என்றால் முதல் சங்கம் கி மு 10 527 இல் தொடங்கி இருக்க வேண்டும்.முதல் கடல் அழிவு நடந்த காலம் கி மு 9583 ,,ஆனால் கந்த புராண வரலாறு நடந்த காலம் என்று ஈழத்து புலவர்கள் கணித்துள்ள காலம் கி மு 9000 ஆகும்.முதல் சங்கத்தில் முருகன் ,அகத்தியர் ,சிவன் ,நாகராஜன் என்போரை புலவர்களாக குறிப்பிடபட்டு உள்ளதால் அகத்தியர் ஈழம் வந்து முருகனுடன் தமிழ் கற்று அங்கிருந்து பொதிகை மலை சென்றார் என்று ஒரு புராண வரலாற்றில் வருகின்றது.எனவே கடை சங்க புலவர்களில் ஒருவரான நக்கீரர் குறிப்பிட்ட கி மு 9000 என்ற காலபகுதி முதல் சங்கம் தொடங்கியகாலமாக இருக்கும்.கிமு 9583 இல் பெரும் கடல் அழிவுகளை சந்தித்து மீள் இணைந்த மக்கள் வளர்சி பெற்று வர சில நூற்றாண்டுகள் தேவைபட்டு இருக்கும்.வரலாற்றில் சூரன் காலத்துக்கு பின்னரும் ஒரு சிறு கடல் கோள் வருகின்றது.

இந்த கடல் கோளிலும் முருகன் புரிந்த போர் அனர்தியிலும் தான் வீர மகேந்திரம் அழிந்தது.சூரன் காலம் கி மு 9583/9000 இடைப்பட்ட காலமாக கருதலாம்.பண்டிதமணி கணபதிப்பிள்ளை
பண்டிதமணி சின்னத்தம்பி போன்ற அறிஞர்கள் சூரன்காலத்தை கி மு 9000 முற்பட்டது என்று உறுதிபடுத்துகின்றார்கள். அதனால் அண்ணளவாக கி மு 9000 என்பது சரியானதாக இருக்கும்.முதல் சங்க காலம் 4440 என்பது அடுத்த கடல் அழிவு கி மு 6087 ஏற்பட்டதால் மிகைபடுத்த பட்டதாக இருக்கலாம் முதல் சங்க புலவர்கள் தொகை 4449 என்று கூறுகின்றார்கள் இது ஆய்வுக்கு உரியவிடயம்.அந்த காலத்தில் வாழ்ந்த ஒன்றிணைந்த தமிழர்களின் தொகை 80 கோடி என்று சில புராண தரவுகள் கூறுவதால் புலவர்கள் எண்ணிகை அந்தளவு இருக்கலாம்.(9000...6087)2913 ஆண்டுகள் 89 அரசர்கள் ஆண்டார்கள் என்பது ஏற்றுகொண்டாலும் இவர்கள் பாண்டியர்கள் என்பது ஒரு புகழ் மாலை சூடும் முற்றிலும் பொய்யான கூற்று என்று நான் கூறுகின்றேன்.

அதற்கு ஆதாரமாக தென் மதுரை என்பது இன்றைய இந்தியர்கள் கற்பனை பண்ணும் மதுரைக்கு கீழே பக்கத்தில் இல்லை. தென் மதுரை என்று ஆய்வு செய்த வரைபடம் காட்டும் இடம் ஆய்வாளர்கள் பட விளக்கத்தோடு உறுதிப்படுத்தும் இடம் ஆபிரிக்க மடகஸ்காருக்கும் அவுஸ்ரெலியாவுக்கும் அண்ணளவாக நடுவிலும் இலங்கையின் அம்பாந்தோட்டைக்கு நேர் தெற்கு பக்கமாக அதே சமதூரத்தில் மடகஸ்கார் அவுஸ்ரேலிய நேர்கோட்டை 90 பாகையில் வெட்டி சந்திக்கும் இடத்தில் இருக்கிறது.எனவே இன்றைய மதுரையை கி ,மு 500 பிற்பட்ட காலத்தில் பாண்டியன் ஆண்டான் என்பதை வைத்து கி மு 6087 ம் ஆண்டுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதாவது கி மு 9000 ஆண்டு ஆரம்பிக்கபட்ட தென் மதுரை சங்கத்தை பாண்டியன் காய்கின வழுதி முதல் கடுங்கோன் வரை ஆரம்பிக்க வைத்து பாதுகாத்தார்கள் என்பது வெறும் பொய் புகழ் மாலையே தவிர உண்மை இல்லை. மூவேந்தர் ஆட்சி தொடங்கி முதலில் சேரர்கள் ஆள்வதாக வரும் காலம் கி மு 500/600 காலப்பகுதிதான்.அதற்கு முதல் மூவேந்தர் பற்றிய செய்திகள் சேர சோழ பாண்டியர் என்ற பெயரில் எங்கும் உறுதிபடுத்த தக்கவகையில் இல்லை என்பதே உண்மையாகும்.அதற்கு முற்பட்ட காலத்தில் இவர்கள் நாக வம்சமாகவோ சூரிய வம்சமாகவோ ,சந்திர (குரு)வம்சமாகவோ ,யது வம்சமாகவோ இருந்தார்கள் என்பதே உண்மை.எனவே முதல் சங்கத்தை கி மு 9000 ஆண்டுகளுக்கு முன்னம் பாண்டியன் ஆரம்பித்தான் பாதுகாத்தான் என்பது முழு பொய்யான விடயம்.எனவே இந்த கருத்தை திரும்ப திரும்ப அவர் கூறினார் இவர் கூறினார் என்று எழுதுபவர்கள் மறுபடியும் எழுதுவதற்கு முன்னம் சிந்திக்கவும்.

முதல் சங்கத்தை உருவாக்கியவர்கள் அகத்தியனார், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள். குன்றெறிந்த முருகவேள், முரிஞ்சியூர் முடிநாகராயர், நீதியின் கிழவன், என இவர்களை குறிப்பிடுகின்றார்கள். இதில் போதிய அளவு உண்மை இருக்கிறது.பொதிகை மலையில் வாழ்ந்தவர் அகத்தியர் என்ற கருத்து இருக்கிறது. பொதிகை மலை நான் மேலே குறிப்பிட்ட தென் மதுரைக்கு பக்கத்தில் தான் இருந்திருகின்றது என புவியியல் வரைபடத்தில் உள்ளது.அகத்தியர் முருகனிடம் வந்து கதிர்காமத்தில் தமிழ் கற்றது, இராவணனுடன் இசை போட்டியில் வென்றது என வரலாறுகள் இருக்கிறது.அகத்தியர் தவ முனிவராக இருந்ததால் பல காலம் சிரஞ்சீவியாக வாழ்ந்து இருக்கலாம். இமய மலையில் தவ வலிமையால் இன்றும் முனிவர்கள் சில நூற்றாண்டுகளை தாண்டியும் வாழ்கின்றார்கள் என்பது இதற்கு ஆதாரம்.(பதினெண் சித்தர்களில் பிற்காலத்தில் போகருக்கு முன் இருந்த அகத்தியர் இவர் இல்லை சித்த அகத்தியரும் போகரும் சீனர்கள்.அவர்கள் ஏன் வந்தார்கள்,ஏன் தமிழை கற்றார்கள் ,அகத்தியர் பெயரை பாவித்தார்கள் என்பன புரியாத புதிர்.வைத்திய முறைகள் பல நல்ல தமிழ் குறிப்புக்கள் முன்வைத்ததால் தமிழர்களுக்கு பயன்பட்டார்கள் என்பது உண்மை. அவர்கள் சீனர்களுக்கு எம்மை விட அதிகம் இங்கு வந்ததால் பயன்பட்டு இருப்பார்கள் என்பதும் திண்ணம் )அடுத்து சிவனையும் முருகனையும் முடி நாக அரசனையும் நீதியின் கிழவன் என்பவர் தட்ஷன் மாமனார் மனுவாக இருக்கலாம்.சிவன் தென்னாட்டில் வாழ்ந்தவர் என்பது மாணிக்கவாசகர் போன்றவர்கள் கூற்று.முருகன் கதிர்காமத்திலும் ஆறுபடை வீட்டிலும் இருந்தவர் என்பது பல புராண கூற்று.நாக ராஜன் நாகலோகத்தை அந்த காலத்தில் ஆண்டவராக இருக்கலாம். மனு தட்ஷனின் மனைவி பிரசூதி தந்தையாக வருபவர் இவர் நீதி சாஸ்திரங்களை வகுத்தவர்.இவர்கள் அனைவரும் வாழ்ந்த காலத்தை ,இடத்தை முதல் சங்கம் உருவாகிய காலத்தை நோக்குகையில் ஏற்றுகொள்ளதக்க விடயமாகும்.முதல் சங்க காலத்தில் எழுந்த நூல்களாக பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை ஆகியவற்றை குறிப்பிட்டு உள்ளார்கள் இவை எதுவும் பிற்காலத்தவருக்கு கிடைக்கவில்லை.இவற்றை எழுதுவதற்கு இலக்கண நூலாக பாவிக்கபட்டது அகத்தியம் என்று கூறப்படுகின்றது.

முதல் சங்கத்தை உருவாக்கியவர்கள் குமரி கண்ட தமிழர்கள்.அவர்கள் வம்சாவழியினர் இன்று உலகெங்கும் வேறு வேறு இனங்களாக கூட பிரிந்து வாழ்கின்றார்கள். ஒரு பகுதியினர் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் இன்னும் தமிழர்களாக வாழ்கின்றார்கள் என்பதுதான் உண்மையாகும்.அதலால் எனது இந்த தலைப்பின் படி முதல் தமிழ் சங்கத்தில் இணைந்த குமரி கண்டத்தில் வாழ்ந்த ஈழத்தவர்களும் பிரிந்து சென்று இன்று ஆபிரிக்க நாடுகளில் வாழ்பவர்களும் மத்திய தென் அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்களும் பங்கு பெற்றார்கள் என்று கூறலாம்.இதற்கு வரலாறு எழுதும் பாதையில் தனித்தே இந்தியர்கள் உரிமை கோர முடியாது.

அடுத்து இரண்டாம் சங்கம்
முதல் சங்கம் கி மு 9583 லும் அழிவுகளை சந்தித்து இருந்த தென்மதுரை கி மு 6087 லும் வந்த கடல் அழிவால் முழுமையாக அழிவடைந்து இல்லாமல் போக அதில் தப்பியவர்கள் வம்சத்தில் வந்தவர்கள் இரண்டாம் சங்கத்தை கபாட புரத்தில் ஆரம்பித்தார்கள். இரண்டாம் சங்கம் 3700 வருடங்களாக நிலைத்தது.இந்த சங்கமும் கி மு 2387 இடையில் வந்த கடல் அழிவால் அழிந்தது என்று கருதப்படுகின்றது. (கி மு 6087 இல் இருந்து 3700 வருடங்களை கழித்து பார்க்க கி மு 2387 வருகின்றது ஆனால் கடல் அழித்து உடனடியாக சங்கம் தொடங்கி இருக்க வாய்ப்பு இருக்குமா என்பது சிந்திக்க வேண்டிய விடயம். மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து அழிவுகளில் இருந்து தங்கள் கட்டமைப்புக்களை மீளமைத்து கொள்ள கொஞ்ச காலம் எடுத்திருக்கும் என்பது யதாத்தமானது)எனவே 3700 வருடங்கள் 3700 புலவர்கள் இந்த சங்கத்தை வழிநடத்தினார்கள்.59 அரசர்கள் பாதுக்காத்தார்கள் என்ற கூற்றுக்கள் ஏற்றுகொள்ள கடினமானவை.3700 வருடங்கள் 59 அரசர்கள் ஆண்டார்கள் என்றால் ஒருவர் 62 வருடங்களுக்கு மேல் ஆண்டு இருக்க வேண்டும் இது உண்மை நிலைக்கு புறம்பானது .இந்த அரசர்களும் பாண்டியர்கள் என்பது உண்மைக்கு புறம்பான கூற்று.எனவே கி மு 6087 க்கும் கிமு 2387 இடையில் இடைச்சங்கம் நிலவியது என்பதை மட்டும் ஏற்றுகொள்ளலாம் நடை பெற்ற காலம் புலவர்கள் எண்ணிக்கை பாதுகாத்த அரசர்கள் எண்ணிக்கை என்பது வேறுபடலாம் .இந்த சங்கம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொதுவான ஒரு இடத்தில் இலங்கை வடமேற்கு பகுதியில் தென் இந்தியாவின் தென் கிழக்கு பகுதியில் இருந்து இருக்கலாம் என்று கி மு2387 இல் வந்த கடல் அழிவு தாக்கிய பகுதிகளின் எடுகோளை வரலாறுகளை வைத்து ஊகிக்க மட்டுமே முடிகின்றது. பூகோள ரீதியான கபாட புரத்தின் வரைபடம் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.இந்த சங்கத்திலும் தென் இந்தியர்களும் ஈழத்தவர்களும் புலவர்களாக இருந்து தமிழை வளர்த்தார்கள் என்று கூறலாம்.

இரண்டாம் தமிழ் சங்கத்தை தொடங்கியவர்களாக தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை போன்றவர்கள் கருதப்படுகின்றார்கள்.இந்த காலத்தில் பாடப்பட்ட நூலகாக கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் என்பன கருதப்படுகின்றன.

அடுத்து மூன்றாவது தமிழ் சங்கம்
இந்த சங்கம் கி மு 2387 இல் ஏற்பட்ட கடல் கோளில் கபாட புரம் மூழ்கிய பின்னர் அண்ணளவாக 800 வருடங்களின் பின்னர் தான் அறிவு சார் பெரியோர்கள் ஒன்று கூடி உருவாக்கி இருக்கின்றார்கள். அதாவது கிமு 1550 இல் உருவான இந்த சங்கம் 1850 ஆண்டுகள் கி பி 300 வரை நடந்ததாக கூறுகின்றார்கள். சில ஆய்வாளர்கள் கருத்துப்படி கி மு 200/300 தொடக்கம் கி பி 250/300 வரையான காலம் என்கின்றார்கள். இந்த காலத்தில் மதுரையை பாண்டியர்கள் ஆண்டார்கள் என்ற கூற்று சரியானது இந்த காலத்தில் பாண்டியர்கள் ஆதரவு சங்கத்துக்கு இருந்தது என்பதை ஏற்றுகொள்ளலாம்.சில புலவர்களின் பாடல்களும் வேறு சில சான்றுகளும் அதை உறுதி படுத்துகின்றன.முன்னைய சங்கங்களோடு ஒப்பிடும் பொழுது மூன்றாவது சங்கத்தில் புலவர்கள் குறைவாகவே இருந்து இருக்கின்றார்கள்.எனவே இந்த சங்கத்தின் இறுதி 500/600 வருடங்கள் இந்த சங்கத்தை பாண்டியர்கள் பாதுகாத்தார்கள் புலவர்களை இணைத்து தமிழ் வளர்த்தார்கள் என்ற கருத்தை தாராளமாக ஏற்றுகொள்ளலாம். அந்த காலத்தில் மூவேந்தர் அரசாண்ட காலம்.அதை விடுத்து 9990 வருடங்கள் பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என்பது அதீத கற்பனை அவர்களுக்கு கீர்த்தி உண்டாக்க கூறப்பட்ட புகழ்மாலை.

மூன்றாம் தமிழ்சங்கத்தை தொடக்கியவர்களாக சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திரு மாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதன் இளநாகனார், கணக்காயர் மகனார் நக்கீரனார் போன்றவர்கள் கருதப்படுகின்றார்கள்.இந்த காலத்தில் பாடப்பட்ட நூல்களாக, நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என தொடங்கி ஐம்பெரும் காப்பியங்களும் இதிகாசங்களும் இந்தகாலத்தில் தான் எழுத்துருவம் பெற்றன.மூன்றாம் சங்ககாலத்தில் ஈழத்து பூதத்து தேவனார் என்று ஈழத்து புலவர் இருந்தார் என்று பல சான்றுகள் இருக்கின்றன.

கி மு 200/300 காலத்தில் ஈழத்தின் வடக்கு ,வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட ஒரு கடல் கோளால் மணி பல்லவம் என்று கூறப்படும் யாழ் தீவுகள் அடங்கிய யாழ் குடாநாட்டு பகுதி பெரும் சேதத்துக்கு உள்ளானது. இந்த கடல் அழிவால் தான் யாழ் தீவுகளும் மன்னார் முனை தீவும் உருவாகி இருக்க வாய்ப்புள்ளது.இந்த கடல் அழிவால் பெரும் தொகையான மக்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தார்கள்.இவர்கள் இந்தியாவின் தொண்டை மண்டலத்தில் இணைந்து வாழ்ந்தார்கள்.இதை கிரேக்க ஆய்வாளர் தொலமி தனது குறிப்பில் நாகர்கள் கோர மண்டலத்தில் வாழ்ந்தார்கள் என்று கூறுகின்றார்.கோர மண்டலம் என்று அவர் குறிப்பிட்டது சோழ மண்டலம் என்று அறிஞர்கள் இன்று கூறுகின்றார்கள்.தொண்டை மண்டலத்தை கடல் அழிவால் நாகர்கள் இடம் பெயர்ந்த காலத்தில் ஆண்டவர்கள் சோழர்கள் என்பது சரியானது.

இடம் பெயர்ந்த ஈழ மக்கள் சிறிது காலத்தின் பின்னர் மணி பல்லவதுக்குள் உட்புகுந்த கடல் நீர் வற்றி மணல் திடல்களாக பொலிவிழந்து மணற்றி என்ற பெயரை பெற்று இருந்த காலத்தில் தங்கள் தாயகமான மணிபல்லவத்துக்கு ஒரு பகுதியினர் திரும்பி வந்து சென்று வளப்படுத்தி வாழதொடங்கினார்கள்.நாகர்கள் மீள் வருகையை யாழ்பாடி கவிவீரராகவர் வரலாற்றோடு பல வரலாற்று ஆசிரியர்கள் தொடர்புபடுத்தி இருந்தார்கள் (இதை தான் கடை சங்க காலத்தில் யாழ்பாணம் மணற்றி என்று அழைக்கபட்டது என்று இலக்கியங்களில் வருகின்றது )ஏனையவர்கள் தொண்டை மண்டலத்தில் அவர்களுக்கு அந்த காலத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்ததால் அங்கேயே வாழ தொடங்கினார்கள்.

மணிபல்லவத்தில் இருந்து வந்தவர்கள் நாகரி எழுத்தை எழுதும் திறமை உடையவர்கள்.இவர்கள் வந்த காலத்தில் தமிழத்தில் நாகரி எழுத்தில் எழுதப்பட்ட பல நூல்கள் உருவாகின. அவை ஈழத்து புலவர்களின் கையெழுத்தால் உருவானதா என்ற சந்தேகம் எழுகின்றது.பொதுவாக யோசித்துபாருங்கள்.அதுவரை செவி வழியில் பேணப்பட்டு வந்த தொல்காப்பிய செய்யுள்கள் ,இராமாயணம், மகாபாரதம்,என்பன மூலபிரதி நாகரி எழுத்து வடிவில் இருப்பதால் தான் இன்று அது வடமொழி ஆளர்கள் எழுதியது என்கின்றார்கள்.நாகரி எழுத்துதான் தமிழர்களின் புராதன எழுத்துவடிவம் என்பதை அக்காலத்தவர் நன்றாக அறிவார்கள்.இன்று எம்மவர்கள் எழுத்து இல்லாத சமஸ்கிருதத்துக்கு கடன் கொடுத்துவிட்டு அது எமது எழுத்து இல்லை என்று வாதாடி மறுக்கின்றார்கள்.ஈழத்தவர்கள் கடல் அழிவால் தென்னிந்தியா வந்து 200 வருடங்களின் பின்னர் தான் திருக்குறள் கூட எழுதப்பட்டது.திருவள்ளுவர் வள்ளுவர் குலம் என்பதில் இருந்து அவர் வம்சம் புராதன நாகவம்சம் என்பது தெளிவாகின்றது.அவருக்கு பல காலத்தால் முந்தியவர்கள் தாய் தந்தையர் பெயர்களை வரலாறுகளில் எழுதும் தென்னிந்திய எழுத்தாளர்களுக்கு அவரது தாய் தந்தையரை தெரியவில்லை அல்லது தெரிந்தும் மறைத்து வந்து இருக்கின்றார்கள்.இதனால் அவரும் ஈழத்தவரா என்ற சந்தேகம் வருகின்றது.இல்லை அவர் இந்தியர் தான் என்று நிருபிக்க முடியுமானால் அவர் உண்மை வரலாற்றை வெளியில் கொண்டுவாருங்கள்.திருவள்ளுவருக்கு தென்னிந்தியர் கடல் நடுவில் தான் தெய்வ புலவருக்கு பெரிய சிலை அமைத்து இருக்கின்றார்கள். இதுவும் கடல் கடந்து வந்தவர் வழி வந்தவர் என்ற சிறப்பை அடக்கி இருக்குமா என்பதும் சிந்திக்க தக்க விடயம்.

தென்னிந்திய மற்றும் ஈழத்து புலவர்களோடு இயங்கிய மூன்றாம் சங்கம் அதாவது கடை சங்கம் கி மு 250/300 களப்பிரர்கள் தென்னிந்தியாவுக்குள் புகுந்த பொழுது அழிவுகளை சந்தித்தது. அவர்கள் புலவர்களை தாக்கினார்கள் தென்னிந்தியர்கள் வழிபாட்டு முறைகளில் பல இடைஞ்சல்களை புகுத்தினார்கள், இதனால் தான் தென்னிந்திய வரலாற்றில் களப்பிரர்கள் காலம் இருண்ட காலமாக கருதப்படுகின்றது.இந்த களப்பிரர்களை 300 வருடங்களுக்கு மேலாக செய்த கடும் சண்டைகளுக்கு பின்னர் முழுமையாக அழித்து கி பி 575 இல் சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் காப்பாற்றியவர்கள்.ஈழத்தில் இருந்து தென்னிந்தியா சென்று தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த மணி பல்லவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பல்லவர்கள் ஈழத்தவர் என்பதை ஈழத்தின் சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான முதலியார் இராசநாயகம் அவர்கள் தனது யாழ்பாண சரித்திரம் என்ற நூலில் ஏற்கனவே தெளிவாக கூறி இருக்கின்றார்.

பல்லவர்கள் முழுமையான தமிழகத்தை கைப்பற்றி கோவில்களை கட்டினார்கள் சிற்பகலை ஓவியக்கலை கட்டிட கலை என்பனவற்றோடு பக்தி இலக்கியங்களையும் வளர்த்தார்கள்.களப்பிரர் காலத்தில் சைவத்துக்கு இடையூறாக தோன்றிய காளாமுகர்கள் கபாலிகர்களை மற்றும் பல இடைஞ்சலான சமயங்களை அகற்றி .சைவ சமயத்தை ஒளிபெற செய்தார்கள். தங்கள் தாய் தெய்வ வழிபாட்டை தமிழகத்தில் மேன்மைபடுத்தினார்கள் இவர்கள் காலத்தில் தோன்றிய கிபி788/820ஆதி சங்கரர் தோன்றி சக்தி வழிபாட்டை முழு இந்தியாவிலும் மீண்டும் புத்துயிர் பெற செய்தார்.பல நூல்கள் எழுதினார்.பல்லவர் கால இறுதியில் தான் நாம் இன்று பயன்படுத்தும் தமிழ் நெடுங்கணக்கு எழுத்துவடிவம் உருவாக்கம் பெற்றது.அதற்கு முன் நாகரி எழுத்தில் தான் வரலாறுகளை எழுதி வந்தார்கள்.பல்லவர்கள் இறுதி காலத்தில் தான் தமிழை ஆதரித்தார்கள் என்று பலர் அறியாமல் எழுதி வருகின்றார்கள். அதற்கு காரணம் அவர்கள் தமிழை எழுத தமிழர்கள் கண்டுபிடித்த நாகரி எழுத்தை பலகாலமாக பயன்படுத்தினார்கள் என்பதால் முன்வைக்கப்படும் பொய் குற்றசாட்டு.தமிழையும் தமிழர்களையும் வையகத்துள் நீடூழி வாழ வைத்தவர்கள் பல்லவர்கள்.

எனவே ஈழத்தமிழர்கள் மூன்று தமிழ் சங்கங்களில் மட்டும் அல்ல இன்றைய தமிழின் வளர்சிக்கும் அடிக்கல் நாட்டிவைத்து தாய் மொழியையும் தாய் நிலங்களையும் காப்பாற்றியவர்கள் இன்று ஈழத்தில் அவர்களை காப்பாற்றுவதற்கு உலகத்தின் உதவியை நாடி நிற்கின்றார்கள்.இது காலத்தின் கொடுமை.,,,,,,,,,நன்றி வணக்கம் ,,சிவமேனகை ,

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்

 ஆச்சர்யங்கள் பின்வருமாறு.பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.(6) திருமந்திரத்தில் " திருமூலர்"மானுடராக்கை வடிவு சிவலிங்கம்மானுடராக்கை வடிவு சிதம்பரம்மானுடராக்கை வடிவு சதாசிவம்மானுடராக்கை வடிவு திருக்கூத்தேஎன்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றேகூறிவிட்டது

கான்சர் பற்றிய முக்கிய கட்டுரை

நீண்டகாலமாக புற்றுநோய்க்கு(CANCER) கீமொதெரபீ(CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.
2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.
3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritionaldeficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.
5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது
7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள்,திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது
8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.
9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்புசக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.
10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள்மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.
11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.
13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனதுசக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.
14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப்பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்றசெல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)
15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான,ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal)பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவுசிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில்வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும்உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

ஸ்ரீரங்கம் கோவில் புகைப்படம் எடுக்கப்பட்ட காலம் 1860.


The terrifying Aghori sadhus


AGHORI
The Aghoris are one of the principal Indian traditions and the most extreme and fascinating form of the Tantra. Dattatreya, a divinity that includes the Trimurti Brahma, Vishnu andShiva, are considered to be the founder of this school.

The sanscrit term Aghora is the combination among two words and has various meanings: A is a negation; Ghora is the obscurity of the ignorance, but it also means intense, deep;Aghora therefore means Light, absence of obscurity, awareness, but it also symbolizes a style of life where a person of the Aghori tradition doesn't have intense or deep feelings, it doesn't make difference among the various feelings, seems to be indifferent to the various stories of the life.

It is said that Aghoris drink liqueurs, smoke ganja, eat meat (in some rites also human meat); they use a human skull as a bowl, they wander among the funeral pyres, meditate at night and don't have any sex inhibition. This path seems to be detached completely from hinduist philosophies and it deceives the true nature of this little known reality in the indian sadhus (ascetics) panorama. The ritual practices of the Aghori are symbols of their non-dualistic beliefsThe corpse upon which they meditate is a symbol of their own bodyand transcendence of the lower self and realization of the Supreme Self.

They are also known for their knowledge of magic arts; many people believe they owns magic powers and it is not difficult to hear histories of miraculous recoveries. Among the people, the word Aghori always arouses a mixture between respect and suspect; anyway they also have many devotees among the various religion present in India. Together with an Aghori you can easily found hindus, sicks, muslims, jains, Christians or other.

In reality when we are together with these sadhus seems to be in front of a mystical crazy person, The Fool of the tarots, all the rational thoughts seem to fade away for leaving place to an intense spiritual experience, over every duality.

The death's theme, so recurrent among the Aghoris, constantly remembers us our mortality but it is also a challenge to transcend the duality between life and death. Breaking every mental scheme, going over every taboo makes aware of the illusion of this world and becomes a path toward the liberation (moksha), the realization of the itself with the absolute one. Also the conventional Hindu distinction among pure and impure for the Aghoris is an illusion.
The most feared and the most respected clan of sadhus or ascetics of India , the Aghori sadhus are notorious for their uncommon and grisly rituals they perform as a part and parcel of their religious routine, enough to arouse curiosity and awe among the public. Before going to facts lets know who the are.



WHO ARE AGHORI?

Aghori is a peculiar clan of of sadhus or ascetics of India. The Aghoras is said to have been over 1000 years old, the first Aghora sadhu being Keenaram. They inhibit the city of Varanasi (Banaras), alongside the banks of the river Ganga, where the most revered temple of Kasi Vishwanath stand proudly. Aghoris are devotees of Shiva manifested as Bhairava, who seek moksha from the cycle of reincarnation. This freedom is a realization of the self’s identity with the absolute.
So, below is the list of odd and amazing facts about the lives of these Aghori Sadhus, a sect of people who revere and relish what we usually dread – Death.
  • Profanity is the route to Nirvana:
For Dhuniwale Bhaba (as the locals call him) cursing in an utterly profane manner for virtually no reason. And is the only way he claims that can lead him to Nirvana or ultimate enlightenment. An incident reveals that when a man approached the baba seeking blessings regarding his daughter’s wedding, the baba cursed the man using utter obscenities and that his daughter would rot in hell. After three days the man was reported to have approached the baba again with some sweets stating that the baba’s blessings solved his problem. The Dhuniwale Bhaba is also notorious for throwing faeces on people who demand his blessings and the most awful yet unbelievable fact is that the people are very contended with his ‘prasad’ and some even take it home.
  • The nasty appetite:
All over India and among other curious westerners, the Aghori are well known for their extremely revolting appetite. Their food habits include whatever a civilized human being will not eat at any cost, such as rotten foods, foods from dump site, animal faeces, animal urine and putrefying human corpses which are most often eaten in a cup made of human skull. But they seem to have their own reasons for their nasty appetite. Consumption of excreta is said to kill ego and derail the human perception of beauty, which is essential for a man to lead his life as an Aghora.

  • Tailanga Swami:
Here comes another baba who did the unimaginable again. This baba is hailed as very powerful by the people of the locality. Records say that he was slapped and driven out of the Kasi Viswanath temple by a priest when he was worshipping and performing a puja on the sculpture of Lord Shiva using his own excreta. History says that Lord Shiva himself appeared in the dream of the local king of Benaras and complained about the insult meted out to Tailanga Swami, and also revealed that the swami was an incarnation of his holiness himself. The priest was also found dead mysteriously, later.
  • Legitimate Cannibalism:
In spite of Varanasi being a densely populated city, Cannibalism is openly practiced by the Aghoras in Varanasi without any public upheaval as they usually do not kill humans for their necrophagic needs, but only consume corpses from cremating grounds. Corpses are eaten raw and at times they are roasted over open flame. After eating a certain quantity of flesh, they start meditating sitting atop a corpse which is continued all night. If cannibalism amidst a populated city is not awkward enough, move on to the next item in the list.
  • A Creepy sense of fashion:
Aghoras are known for their spooky sense of fashion. They move about in the city with nothing more on their bodies except a skimpy jute loin cloth and at times, nude. Being nude, in their terms is complete renunciation from the material world and its attachments. Most often, they smear their bodies with ash from human cremated remains to cover their nakedness. Talking about accessories, Human skulls are worn as jewelry around their necks. Some Aghoras(or Aghori) are also reported to roam around with the femur (thigh bone) of cremated people as a Aghoran symbol. (May be as a walking stick). They never cut their hair, letting it to fall to their knees, making Agoras to be easily spotted anywhere amidst a hell of a crowd.
  • Mysterious medicines:
To the surprise and awe of the scientists all over the world, The Aghoras claim they have medicines that can treat some of the most stubborn diseases such as Cancer and even AIDS. You guessed right. These medicines called ‘human oils’ come from burning the human body collected from the burning pyre. The babas claim that these medicines are very effective on curing the above mentioned diseases but are not used in modern medicine due to ethical considerations. However, the authenticity of their claim has never been tried and tested yet by the scientific community.
  • Tantric powers and Black magic:
The healing powers of Aghori Sadhus are said to come from their expertise in Black magic. What they say about these practices is that they never use their powers for harmful deeds. instead they absorb the diseases that plague the victims who visit them into their bodies and eliminate the diseases by burning them using Black magic. Certain Aghori who intensely practice Black magic say the more they please Lord Shiva and goddess Kali, the more they gain powers of control over the environment and the forces of nature. But they never do it, as they adore and respect Mother Nature.
  • The ‘left way’ to reach god:
It may seem a pun, but actually it isn’t. While the whole world follows the right way to reach god, these sadhus proudly assert that they follow the ‘left way’ to reach god which is far quicker than the former. According to them, true godliness lies in seeking the ‘purity in the filthiest’. One of those sadhus says they are true Aghoras if they were able to concentrate on god while performing the most perverted acts such as necrophilia, necrophagy and Coprophagy. To mention, the right ways to reach god include veganism, sanctity and abstinence from lust according to Hinduism.
Also Read: Why People through coin in river?
  • Mantras, Tantras and Marijuana:
No Aghora would ever abstain himself from smoking Marijuana because they believe it is marijuana that helps them concentrate on religious mantras and the strenuous yogic practices they perform by routine. In spite of being under the effect of marijuana all the time they appear very sober and calm. When asked by curious visitors that whether they consume weed for pleasure, they abruptly deny the assertion. The delusion and hallucinations provided by weeds are taken as religious ecstasies and heightened spiritual experiences.
  • The ‘Five M’ Concept:
And finally, The Agoras are cool enough to compile their beliefs into a 5M protocol. The five M concept has many other different versions , but the Aghoric version of the 5M concept or Dakshinakara has its own translation of the original.
Madya – Wine (which means a heavenly fluid which drips from the glands of human brain.)
Mamsa – Meat (swallowing the tongue)
Matsya- fish (twin-fish an ‘8’ shaped structure which forms a part of the backbone)
Mudra- parched grain (positions of Kundalini yoga, followed by Aghori ascetics)
Maithuna- Sexual intercourse. (should be learnt from a Sriguru)

Exactly 25 years ago in Czechoslovakia "Velvet revolution"

Exactly 25 years ago in Czechoslovakia, a peaceful protest known as the "Velvet revolution" finally forced the communist regime out of the country.

Three years child will make you crazy with his captivating talent on drums


Tuesday, November 18, 2014

Che Guevara's vist to Ceylon






Child Abuse in India: 5 shocking facts revealed by the UNICEF

CHILD ABUSE
Child Abuse in India: 5 shocking facts revealed by the UNICEF
Since ages, Indian families have been known for their patriarchal joint families who took care of their children with utmost care and concern. Especially known for staying together, no one ever considered the least possibility of child abuse. No one thought about the probability of a senior member from the family, sexually assaulting or raping a kid inside the walls of the same home.
While the Constitution of India guarantees many rights to children, neither are they used for a child’s benefit nor is the child considered as an individual who has his or her own thought process.


1. Major abuse reported between the age group of 5 to 11 years
Every second child reported facing emotional abuse. Until now, it was unknown that small children were the victims to sexual abuses in the family itself. Children being dependent on an elder person for their requirement were never considered as individuals who could talk for themselves. Their needs and desires to do or not do a particular thing were considered as childish behaviour, hence elders just neglected them which resulted to be the root cause of the problem.
2. Boys, as compared to girls are equally at risk of abuse
“You have a daughter, her safety is of utmost importance. Boys can take care of themselves”
These are some of the common statements that you hear from the society. Although girls and boys are at an equal risk of being abused, the latter is left outside at his own expense. Women’s rape cases being reported more and discussed more in media, issues of men are usually sidelines. The topic being a sensitive one everyone likes discussing a rape case which has been blown up by the media. The UNICEF report says that out of 69% children who are physically abused in family situations in 13 sample states, 54.68% were boys. Equal percentage of both boys and girls faced reported facing emotional abuse.
3. Persons in trust and authority are major abusers, mostly parents
Out of the children physically / sexually abused in family situations, 88.6% were physically abused by parents. 83% of cases reported parents were their emotional abusers.
Indians known for their families being closely knit and having extended family, everyone in the family was believed to be taking care and showering love to the kids in the family. Senior family members were given immense respect which usually led to their taking undue advantage. Nobody ever suspected them or considered them to do such a brutal act, which usually resulted.
4. 48.4% girls wished they were boys
In a country where birth of a baby girl is not a day for celebration, this alarming figure should not scare the crowd. The cultural preference to boys in Indian families as they are believed to take ahead the family’s heritage, it is common for a girl to think that she should have been born as a girl and not a boy. Everything from a girl’s clothes, looks, behaviour gets easily judged, while boys do not have to go through the scrutiny.
With all the love and fondness being enjoyed by boys at large, girls automatically consider themselves to be inferior to men. In these situations, it is very likely for a girl to wish to be a boy rather than live under constant pressure.
5. Most children reported the issue to no one
Fear is one of the major cause of this problem. After passing through horrific sexual, physical or emotional abuse, children are not really sure how to explain the details to their parents. Emotionally weak from inside after being victims to these horrendous acts, children usually keep quiet and don't reveal anything even to their trusted people. Often children do not know how to explain the act while they know it was a shameful one.
The report says that considering the alarming data, it is of national importance that the issue should be given greater priority. Although there are laws and policies to make the world a better place for children, nothing credible has emerged out of it. There should be a larger movement to ensure the safety of children in the country.
Please SHARE this if you LIKE it so that others may read and benefit. Thank you.
Dr. Sanjay Chugh
Senior Consultant Psychiatrist
S-132, Greater Kailash Part 2, New Delhi - 110048 (INDIA)
www.drchugh.com www.rtms.co.in www.tdcs.co.in https://www.facebook.com/drsanjaychughsclinic
Email Ids: doc@drchugh.com ; drchugh@gmail.com
Tel.: +91-9811079401 / +91-11-41436012 / +91-11-41436013
Fax : +91-11-29219820