Search This Blog

Tuesday, August 5, 2014

Hair-raising Eden Abandoned Places





























அடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு காலனி வீட்டில் குடியிருந்தேன். காலனியின் முதல் வீட்டில்MVVஇருந்த ஆறு வயதுப் பெண் குழந்தையன்று, Ô‘என்ன அங்கிள், எப்போ பார்த்தாலும் நீங்க உங்க பையனுக்கே பூந்தி, மிக்ஸர் வாங்கிட்டு வர்றீங்க..? எனக்கு ஏன் எதையும் வாங்கிட்டு வர மாட்டேங்குறீங்க?’Õ என்று கேட்டது. ஒரு நிமிஷம் சுள்ளென சாட்டையால் அடித்த மாதிரி இருந்தது. நிஜம்தானே..? நம் குழந்தைகள் மட்டும்தான் நம் கவனத்தில் இருக்கிறார்கள். நமது அண்டை வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது நம் நினைவில் இருப்பதில்லையே! 
பையனுக்கு வாங்கி வந்த ஸ்வீட்டை எவ்வளவோ முறை பங்கு போட்டு அந்தக் குழந்தைகளுக்கும் கொடுத் திருக்கிறோம். ஆனாலும், அந்தக் குழந்தையின் ஆசை இயல்பானதுதான் இல்லையா? அடுத்த வீட்டு மாமா தனக்கென ஏதாவது வாங்கி வர வேண்டும் என்று அந்தக் குழந்தை ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?
நம் வீட்டில் இருக்கும் அதே இட்லி & சட்னிதான் அடுத்த வீட்டிலும் கிடைக்கிறது என்றாலும், அந்த இட்லிக்கும் சட்னிக்கும் எப்படியோ தனி ருசி வந்துவிடுகிறது. சிறு வயதில் யார் வீட்டில் சாப்பிடச் சொன்னாலும் நான் சாப்பிட்டுவிடுவேன். ‘அடுத்த வீட்டில் சாப்பிடாதே!’ என்று அம்மா திட்டுவார்கள். அடுத்த வீட்டுக்கும் நமக்குமான உறவு வெறும் பேச்சு மட்டும்தானா? என் வகுப்புத் தோழர்களின் வீடுகளில் துவங்கி, யார் என்றே தெரியாத நபர்களின் வீடுகள் வரை நான் சாப்பிட்டிருக்கிறேன். அவர்களும் தயக்கமில்லாமல் சாப்பாடு போடுவார்கள். அல்லது தின்பண்டங்கள் தருவார்கள். நாம் சாப்பிடும் அழகை வேறு ரசிப்பார்கள். இந்தச் சுதந்திரம் சில நேரங்களில் எல்லை மீறி, நானே அந்த வீடுகளின் சமையல் அறைக்குப் போய், ‘அத்தை, முறுக்கு கொடு’ என்று உரிமையோடு கேட்டுச் சாப்பிடும் நிலைமைக்கு வளர்ந்திருக்கிறது.
அடுத்த வீட்டில் சாப்பிட்டேனா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டில் கையை நீட்டச் சொல்லி முகர்ந்து பார்ப் பார்கள். அப்படிக் கையில் வாசனை யைக் கண்டுபிடித்து விடுகிறார்கள் என்பதற்காகவே, வரும் வழியில் மணலில் கைகளை நன்றாகத் தேய்த்து புழுதியாக்கிவிடும் தந்திரம் கற்றிருந்தேன். ஆச்சர்யமான உண்மை என்னவென் றால், நான் அடுத்த வீட்டில் சாப்பிட்டு வருவதைப் போலவே எங்கள் வீட்டிலும் எப்போதும் ஒன்றிரண்டு சிறுவர் சிறுமிகள் வந்து சாப்பிட்டுப் போவார்கள். சிறு வயதில் எங்களது தெருவில் குடியிருந்தவர்களில் எனக்கு ரொம்பவும் விருப்பமானவராக சர்வேயர் அக்கா இருந்தாள். அவர்கள் வீட்டில் சிறு குழந்தைகள் இல்லை. கல்யாண வயதில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். அந்த மாமா ஒரு சர்வேயர் என்பதால், அக்காவும் சர்வேயர் அக்கா. அவளுக்கு வேலையே இருக்காது என்பது போல எப்போதும் வீட்டில் தாயம் ஆடிக் கொண்டும், சிறுவர்களை அழைத்து வைத்து பேசிக்கொண்டும் இருப்பாள். அக்காவின் ஊர் பந்தல்குடி. வாரம் ஒரு முறை தன் அம்மாவின் வீட்டுக்குப் போய்விடுவாள். ஊரிலிருந்து திரும்பி வரும்போது கருப்பட்டி மிட்டாய், பொரி உருண்டை, பால்கோவா என்று ஏதாவது கொண்டு வந்து கூப்பிட்டுக் கொடுப்பாள்.
சர்வேயர் அக்காவுக்குப் பையன் இல்லை என்பதால் சிறுவர்கள் மீது மிக வாஞ்சையாக இருப்பாள். நான் சாப்பிடும்போது தலையைத் தடவியபடி, ‘மெதுவா சாப்பிடுடா’ என்று சொல்வாள். சாப்பிட்டு முடித்து நாக்கில் சுவையடங்காது இன்னொரு பண்டத்துக்காக அவள் முகத்தைப் பார்க்கும்போது கேலியாக, ‘போதும்டா... தீர்ந்து போச்சு!’ என்று சொல்வாள். ஆனால், அவள் மடியில் இன்னொரு பொரி உருண்டை இருக்கும் என்பது எனக்கு நிச்சயம் தெரியும். ஒரேயரு முறை அக்கா ஊருக்குப் புறப்படும் நாளில், அவளோடு நானும் ஊருக்கு வருவேன் என்று முரண்டு பிடித்து தெருவில் விழுந்து அழுதேன். என்னைச் சமாதானம் செய்யமுடியாமல் அக்கா என்னை கூட்டிக் கொண்டு போவதற்குச் சம்மதித்தாள். இருவருமாக பஸ் ஏறி அவளது ஊரான பந்தல்குடிக்குப் போய்ச் சேர்ந்தபோது இரவாகியிருந்தது. அவர்கள் வீட்டில் யாவரும் உறங்கியிருந்தார்கள். 
எனக்கு வழியில் வயிறு பசிக்கத் துவங்கி இருந்தது. வீட்டில் போய்ச் சாப்பிடலாம் என்று அக்கா சொன்னதால், வழியில் கிடைத்த அதிரசத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவள் ஊரைப் பார்க்கும் ஆவலில் இருந்தேன். எங்கள் ஊரைப் போலவே அதுவும் சிறிய ஊர்தான். ஊர் இருட்டியிருந்தது. தெருவில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகள்கூட துவண்டு படுத்திருந்தன. தெரு விளக்கில்லாத கிராமம் என்பதால், சாக்கடைகளைத் தாண்டித் தாண்டி அவள் வீட்டுக்குச் சென்றோம். நான் நினைத்ததற்கு மாறாக, அந்த வீடு மிகச் சிறியதாக இருந்தது.
வீட்டில் வயதான நபர் ஒருவர் கயிற்றுக் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தார். சர்வேயர் அக்கா வந்த சத்தத்தைக் கேட்டு, பாட்டி ஒருத்தி சிம்னி விளக்கைத் தூண்டிவிட்டாள். என்னை அவர்கள் யார் என்று கூடக் கேட்கவில்லை. ரகசியமான குரலில் சர்வேயர் அக்கா, ‘‘சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று கேட்டாள். ‘கொஞ்சம் புளிச்ச கஞ்சி கிடந்தது. அதையும் கோழிக்கு ஊற்றி விட்டேன்’’ என்றாள் பாட்டி.
சமையல் செய்து தருவதற்கு நேரமில்லை என்பதால் அக்கா எங்கிருந்தோ ஒரு கொய்யாப் பழத்தைத் தேடி எடுத்து வந்து, ‘‘இதைச் சாப்பிட்டுப் படுத்துக் கொள், காலையில் உனக்கு பருப்புக் குழம்பு வைத்துத் தருகிறேன்’’ என்று சமாதானம் செய்து தின்னக் கொடுத்தாள். வீட்டின் வாசலில் பாயை விரித்தாள். அக்கா எதையும் சாப்பிடவில்லை. அவள் மௌனமாக வானத்தைப் பார்த்த படியே படுத்துக் கிடந்தாள்.
கொய்யாப்பழம் வயிற்றில் பசியை அதிகப்படுத்திவிட்டது போலும். தூக்கம் வராமல் புரண்டுகொண்டு கிடந்தேன். அக்கா உறங்கியிருந்தாள். தெருவில் நான் படுத்திருந்த இடத்துக்கு எதிரே ஒரு கழுதை கால்கள் கட்டப்பட்ட நிலையில் நின்றிருந்தது. அது நெடுநேரமாக இருளில் ஒரு சிலை போல நின்றிருந்தது.
நான் பசியில் இரவெல்லாம் புரண்டு கொண்டே இருந்தேன். காலையில் எழுந்தபோது அக்காவைக் காணவில்லை. அவள் காட்டு வேலைக்குப் போய்விட்டாள் என்று அங்கிருந்த பாட்டி சொன்னாள். நான் உதட்டைக் கடித்தபடி வாசலில் கிடந்த உரலில் உட்கார்ந்து கொண்டேன். சாப்பிடுவதற்கு சோளக்கஞ்சி கொண்டு வந்து தந்தாள் பாட்டி. அது எனக்குப் பிடிக்கவே இல்லை. ‘எனக்கு இட்லி வேண்டும்’ என்று சொல்லி அழுதேன். ‘இட்லிக்கு எங்க போறது?’ என்று சொல்லி, பாட்டி என் முன்னே கஞ்சியை வைத்துவிட்டுப் போய்விட்டாள். எனக்கு ஆத்திரமாக வந்தது. நேரமாக ஆக, பசியில் குடல் கவ்வத் துவங்கியது. வழியில்லாமல் கஞ்சியைக் குடித்தேன். பாட்டி வீட்டுக்கு வந்த ஒரு சிறுவன் என்னை விநோதமாகப் பார்த்தபடி நின்றான். கட்டிலில் படுத்துக் கிடந்தவர் இருமிக்கொண்டே இருந்தார். பகல் நீண்டு விரிந்திருந்தது.
மதியத்தின்போது அக்கா வீட்டுக்கு வந்து சமையலை ஆரம்பித்தாள். பாவற்காயும் வத்தல்களும் கொண்ட சாப்பாடு. எனக்கு வாய் குமட்டியது. அக்கா ஒரு மண்டைவெல்லத்தைத் தொட்டுக்கொள்ளத் தந்தாள். இரண்டு நாட்களில் நான் அக்காவுடன் பத்து வார்த்தை பேச நேரமில்லாமல் போனது. அவளுக்கு இடிப்பது. முள் வெட்டுவது, தண்ணீர் தூக்குவது, திரிப்பது என ஓயாமல் வேலை இருந்துகொண்டே இருந்தது. எப்போது வீட்டுக்குப் போவோம் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஊருக்குப் புறப்படும்போது, அக்கா ஊர் வந்த இரவில் தான் கழற்றி வைத்த சேலையைத் திரும்ப கட்டிக்கொண்டாள். பஸ்ஸில் வரும்போது என் கையைப் பிடித்துக்கொண்டு, நடந்த எதையும் என் வீட்டில் சொல்லக் கூடாது என்றாள். நானும் தலையாட்டினேன். வழியில் அவள் வாங்கிக் கொடுத்த வெள்ளரிக்காயைக்கூடத் தின்னாமல் பையில் வைத்துவிட்டேன். 
ஊர் வந்து சேர்ந்து தெருவில் வரும்போதே அவளை விட்டுவிட்டு ஓட்டமாக என் வீட்டுக்கு ஓடினேன். எதற்கு என்று காரணமில்லாமல் அழத் துவங்கினேன். அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள். நான் எதையும் சொல்லவில்லை. ஆனால், அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மா, அக்கா வீட்டுக்குப் போய், ‘என்ன நடந்தது?’ என்று கேட்டு வந்தாள். ‘ரெண்டு நாளாகவே வீட்டு ஞாபகம் வந்து அழுதுகொண்டே இருந்தான்’ என்று அக்கா பொய் சொல்லி அனுப்பியிருந்தாள். 
அதன் பிறகு ஏனோ சர்வேயர் அக்கா வீட்டின் பக்கம் போனாலே, நிற்காமல் ஓடிவிடுவேன். அவள் தன் வீட்டுப் படியில் உட்கார்ந்தபடி என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவாள். நான் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. ஒரு நாள் அவர்கள் வீட்டைக் காலி செய்து போகும்போதுகூட அக்காவைப் பார்க்கப் போகவே இல்லை.
பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் தற்செயலாக ராமேஸ்வரத்தில் ஒரு சத்திரத்தில் அவளைப் பார்த்தேன். எனக்குப் வயது பதினாறு கடந்திருந்தது. மீசை அரும்ப வளர்ந்திருந்தேன். அவள் என் கைகளைப் பிடித்தபடி வாஞ்சையாக, ‘‘அக்கா மேல கோபமாடா... ஏன் பேசவே மாட்டேங்குறே?’’ என்று கேட்டாள். அவள் கையைப் பிடித்திருப்பது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. கையை உதற முயன்றேன். ‘‘பெரிய மனுசன் ஆகிட்டே இல்ல?’’ என்றபடி அவள் கண்கள் தானே கசிந்தன. ஆனால், அதை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பது போல சிரித்தபடியே சொன்னாள். 
‘‘என் பொண்ணுகள்ல ஒருத்தியைக் கட்டிக்கோ! உன்னை வீட்டோட மாப்பிள்ளையா வெச்சு விதவிதமா சாப்பாடு போடுறேன்டா!’’ என்றாள். அவள் கைப்பிடியில் இருந்து தப்பி பல வருடங்களாகியும், அந்த பந்தல்குடி எளிய வீட்டின் காட்சிகள் ஒரு தைல வண்ண ஓவியம் போல, அப்படியே மனதில் தன் நிறம் மங்காமல் ஒளிர்ந்துகொண்டு இருக்கிறது. நகரில் இப்போதும் பகலிரவாக மூடிக்கிடக்கும் அண்டை வீடுகளைக் காணும்போது என்னை அறியாமல் அக்காவின் நினைவு வந்துவிடுகிறது.
பிரியமானவர்களை எதிர்பாராத இடத்தில் சந்திக்கும் தருணம் மிக அபூர்வமானது. அது பேச்சற்று மௌனத்தில் கரைந்துவிடக் கூடியது. கேட்பதற்கும் சொல்வதற்கும் எவ்வளவோ இருந்தபோதும், காலம் அந்தச் சந்தர்ப்பத்தைத் தராமல் நிசப்தமாக்கிவிடுகிறது. அக்காவிடம் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. ஆனால், பேச்சு மனதிலிருந்து கிளைவிடவே இல்லை. 
அபூர்வமான தருணங்களில் ஒன்றாக இருந்த எதிர்பாராமையை எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது எம்.வி. வெங்கட்ராமின் ஏழை என்ற கதை. 
எம்.வி. வெங்கட்ராம் மிகச் சிறந்த சிறுகதையாசிரியர். அவரது கதையுலகம் நம்மைச் சுற்றிய மனிதர்களால் நிரம்பியது. சௌராஷ்டிர மக்களின் வாழ்க்கைப்பாடுகளை முக்கியக் களமாகக் கொண்டது. வாழ்வின் போராட்டங்களும், துளி சந்தோஷமும் கலந்தது.
இக்கதை கூட! ஒரு மழை நாளில், பத்து வருடங்களுக்குப் பிறகு ராஜு என்ற மனிதனைத் தேடி, அவனது காதலி கல்யாணி தனது மகன் கண்ணன் என்ற சிறுவனைக் கூட்டிக்கொண்டு வருகிறாள். வந்தவள், மழையில் நனைந்து போனதால் மாற்று உடை கேட்கிறாள். பிறகு சிறுவன் சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டும் என்கிறாள். வீட்டில் நீராகாரம் மட்டுமே இருக்கிறது. அதைச் சிறுவன் சாப்பிடுகிறான். அவள் இரண்டு நாட்களாகப் பட்டினிஎன்றும், தானே சமைத்துச் சாப்பிடாமல் வேறுஎங்கும் சாப்பிடுவதில்லை என்றும் சொல்கிறாள்.
அவளைப் பல வருடங்களுக்கு முன்பு ராஜு காதலித்தான். அவளும் விரும்பினாள். திருமணம்கூட ஏற்பாடாகியிருந்தது. ஆனால், திருமணத்தன்று கல்யாணி எங்கே என்று சொல்லிக் கொள்ளாமல் காணாமல் போய்விடுகிறாள். இத்தனை வருடமாக எங்கே போயிருந்தாள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறான் ராஜு. அவளோ மழை இரவில் அகல் விளக்கின் முன், பத்மாசனமிட்டு தியானம் செய்கிறாள். பிறகு, தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவனிடம் பயணத்துக்குக்காசு வாங்கிக்கொண்டு வீட்டைவிட்டுப் போய்விடுகிறாள். வாழ்வின் எதிர்பாராத தருணம் கூடிவந்து நிசப்தமாகக் கலைந்து போய்விடுகிறது. ஒரு மின்னல் வெட்டைப் போல இந்தச் சம்பவம் நடந்தேறிவிடுகிறது.
எதற்காக வந்தாள்? ஏன் இப்படிச் சாமியார் போல் இருக்கிறாள்? ஏன் இன்னும் இத்தனை பிடிவாதம்? எங்கே போகிறாள்? இப்படிக் கேள்விகள் மழையைப் போல முடிவற்றுப் பெய்துகொண்டே இருக்கின்றன. வாழ்க்கையில் நிறையக் கேள்விகள் பதிலற்று இருப்பதுதான் அதன் சுவாரஸ்யம் போலும்!
வெங்கட்ராமின் கதை ஓர் அபூர்வமான கணத்தை அப்படியே பதிவு செய்துள்ளது. பேசிக் கொள்ள முடியாத துக்கத்தைப் போல வலி தரும் விஷயம் உலகில் இல்லை என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
எப்போது பெய்யும் எப்போது நிற்கும் என்பது மழைக்கு மட்டும் இல்லை. வாழ்வின் அரிய கணங்களுக்கும் பொருந்துகிறது. ஒருவேளை எதிர்பாராமையின் பெயர்தான் மழையோ என்றும் தோன்றுகிறது!
சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறந்த கதாசிரியரான எம்.வி. வெங்கட்ராம், 1920&ம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தவர். பி.ஏ., பொருளாதாரம் படித்தவர். பட்டு ஜரிகை தொழில் செய்து வந்தவர்.16 வயதில் மணிக்கொடி இதழில் கதைகள் எழுதத் துவங்கி, இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டு இருந்தார். இருநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது நாவல்களில் வேள்வித் தீ, நித்ய கன்னி இரண்டும் மிக முக்கியமானவை. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் என்ற தலைப்பில் முப்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவரது “காதுகள்” தமிழ் நாவல் வரிசையில் தனித்துவமானது. சிறந்த மொழிபெயர்ப்பாளருமான வெங்கட்ராம், ஆங்கிலத்தில் இருந்து நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். தேனீ என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, திருலோக சீதாராம், தேனுகா, பொதிகைவெற்பன் என்று இவரது இலக்கிய நண்பர்களின் பட்டியல் மிக நீண்டது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன
நன்றி: கதாவிலாசம் , ஆனந்தவிகடன் பிரசுரம்.

அமெரிக்காவில் ரூ.180 கோடி செலவில் மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் ராபின்ஸ் வில்லே என்ற இடத்தில் ‘சுவாமி நாராயண் மந்திர்’ என்ற மிகப்பெரிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை போசசன்வாசி அக்ஷார் புருசோத்தம் சுவாமி நாராயணன் சான்ஸ்தா என்பவர் கட்டியுள்ளார்.

இக்கோவில் 134 அடி நீளமும், 87 அடி அகலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு 108 தூண்களும், 3 கர்ப்ப கிரகங்களும் உள்ளன. கோவில் முழுவதும் இத்தாலி மார்பிள்களால் கட்டப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய இந்து கோவிலான இதன் கட்டுமான பணி முடிந்துவிட்டது. திறப்பு விழா வருகிற 10–ந்தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது.

The ten highest helipads on tall buildings


பாரதியார் வ.உ.சிதம்பரனார் மோதல்


பாரதியாருக்கும் வ.உ. சிதம்பரனாருக்கும் தமிழ்மொழி தொடர்பான ஒரு சிக்கல் - முரண்பாடு வந்தது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனாலும் அப்படி ஒரு மோதல் நடந்தது என்பது மட்டும் உண்மையே!
ஞானபாநு என்னும் ஓர் மாத இதழ் அதில் (1915 ஜூலை) சுப்பிரமணிய பாரதியார் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். சமஸ்கிருதம் உள்ளிட்ட சில மொழிகளில் க,ச,ட,த,ப எனும் எழுத்துக்களில் நான்கு வகை ஒலி உண்டு; தமிழை எடுத்துக் கொண் டால் அவ்வாறு இல்லை. க என்ற ஒரே ஒலியுடைய ஒரு எழுத்துத்தான் உண்டு. க,ச,ட,த,ப எழுத் துக்களும் அப்படியே தமிழில் ஒரே ஒலி உடையன. இது தமிழில் உள்ள ஒரு குறைபாடு என்றும், இதனைப் போக்கிட சில குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்றும் இதில் அரவிந்தரும் என்னோடு உடன்படுகிறார் என்றும் பாரதியார் ஞானபாநுவில் எழுதியிருந்தார்.
அதே இதழில் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நமது வ.உ.சிதம்பரனார் கட்டுரை ஒன்றினைத் தீட்டியிருந்தார்.
தெய்வ பாஷை என்றும், பூரண பாஷை என்றும், சொல்லப்படுகிற சமஸ்கிருத பாஷை எழுத்துக்களோடும், பல புதுமைகளையும், திருத்தங்களையும் கொண்டுள்ள பாஷை என்று சொல்லப்படுகின்ற வங்காளிப் பாஷை எழுத்துக்களோடும் ழ,ற,ன,தி.ஞீ. என்னும் எழுத்துக்களையாவது, அவற்றின் ஒலிகளைக் குறிக்கும் குறிகளையாவது சேர்ப்பதற்கு நமது நண்பர்கள் பாரதியார் அவர்களும், அரவிந்தர் அவர்களும் முயற்சித்து வெற்றி பெறுவார்கள் ஆயின் அவர்கள் நமது தமிழ் மக்களுக்கு ஒப்பற்ற வழிகாட்டிகள் ஆவார்கள். பின்னர் நம் தமிழ் மக்கள் அவர்களைப் பின்பற்றத் துணிவார்கள் என்று பளிச்சென்று பதில் அடி கொடுத்தார்.
இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? என்று மேலெழுந்தவாரியாகப் படிப்பவர்களுக்குத் தோன்றக் கூடும். நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் ஆரிய - திராவிட உணர்வு இதற்குள் இழையோடுகிறது.
சமஸ்கிருதத்தில் உள்ள ஒலி அமைப்புகளைத் தமிழில் திணிக்க வழி செய்ய வேண்டும் என்று கூறுகிற பாரதியார் யார்? அரவிந்தர் யார்? என்பதையும், அதற்கு மறுப்புக் கூறி எழுதியுள்ள வ.உ.சி.யார் என்பதையும் தெரிந்து கொண்டால் இதனுள் இழையும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார், சமஸ்கிருதம் - தமிழ் இவற்றிற்கிடையே நீண்ட காலமாக இருந்துவரும் மோதலின் நுணுக்கம் என்ன என்பது நுணுக்க மாகவே புரியும்.
சமஸ்கிருத சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இது ஒரு கூடுதல் தகவலாகும்.
குறிப்பு: தமிழில் உள்ள இந்த க,ச,ட,த,ப எனும் எழுத்துக்கள் இடத்துக் கேற்ப இயல்பாகவே ஒலியில் மாற்றம் ஏற்படு வதுதான் தமிழின் தனிச் சிறப்பாகும். குழந்தை என்று சொல்லும்போது எழும் குவின் ஒலிக்கும். தூங்கு என்பதில் வரும் குவுக்கும் ஒலி வேறுபடு வதை ஒரு முறை சொல் லிப் பாருங்கள் வேறுபாடு புரியும்.

இரகசிய குறியீடு ( Bar codes) நாம் எப்படி உருவாக்குவது?

நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கின்றோம்.
பெரும்பாலானவர்களிற்கு அந்தக் கோடுகள் எதற்க்காக அச்சிடப்பட்டுள்ளது என்றும் அந்த ரகசியக்குறியீட்டினுள் அப்படி என்னதான் இருக்கிறது என்றும் தெரிவதில்லை. இந்த ரகசியக்குறியீடுகள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் முழுமையாக ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம்.
விற்பனைப் பொதிகளில் அச்சிடப்படும் இந்த ரகசியக்குறியீடுகள் ஆங்கிலத்தில் Barcodes என அழைக்கப்படும். Barcode என்பது குறிப்பிட்ட பொருட்களின் மீது அதுபற்றிய சில தகவல்களைக் காண்பிக்கும் ஒரு குறியீடாகும்.இவ் Barcodes இனுள்ளே அது அச்சிடப்பட்டுள்ள உரிய பொருளிற்கான விலை, உற்பத்தி தேதி , காலாவதி தேதி , அப்பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இணையமுகவரி போன்ற தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.இவற்றை நம் வெறும் கண்ணினால் பார்த்து அறிய முடியாது.இவற்றை Barcode Scanner கள் மூலமாகவே வாசித்து அறிய முடியும்.
இந்த ரகசியக்குறியீட்டினை Barcode Scanner இற்கு முன்பாக பிடித்தால் போதும், இரகசியக்குறியீட்டிற்குள் ஒழிந்திருக்கும் இரகசிய விடயங்கள் அனைத்தையும் அறிந்துவிடலாம்.
ஆனால் தற்போது Barcode Scanner களைப் போலவே கையடக்கத் தொலைபேசிகளும் இந்த இரகசியக்குறியீடுகளை இனங்கண்டுகொள்ள பெரிதும் உதவுகின்றன.
குறித்த இரகசியக் குறியீட்டினை கையடக்கத் தொலைபேசியின் கமராவினால் Scan செய்து அதனுள் மறைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் அறிந்துவிடலாம்.இதற்காகவே பெரும்பாலான கையடக்கத் தொலைபேசிகளில் (Smart Phones) இவ் Barcode களை வாசிப்பதற்க்குரிய மென்பொருள் காணப்படுவது பயனுடையதொரு விடயமாகும்.மேலும் கையடக்கத் தொலைபேசியில் இவ்மென்பொருள் இல்லையென்றால் இணையத்திலிருந்து இலவசமாக Download செய்து நிறுவிக்கொள்ளலாம்.
இரகசியக் குறியீடுகளை வாசிப்பது பற்றி அறிந்து விட்டோம், அடுத்ததாக பார்க்கபோகும் விடயம் அனைவரிற்கும் நிச்சயமாகப் பிடிக்கும்.எமது அடிப்படை விபரங்களை (பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி, மேலும் பலவற்றை) புகுத்தி எமக்கென்று ஒரு இரகசியக் குறியீட்டினை உருவாக்கிக்கொள்ளலாம்.
Barcodes பல வகைப்படும், அவற்றுள் QR Code என்ற Barcode வகையே பாவனைக்கு இலகுவானதாகும்.
எனவே “QR Code Generator” என Google இல் Type செய்து தேடினால் இவ் Barcode இனை இலவசமாக உருவாக்கித்தருகின்ற பல இணையதளங்கள் உங்கள் முன் தோன்றும்.
அவற்றில் ஏதாவதொரு இணையதளத்திற்கு சென்று உங்கள் இரகசியக் குறியீட்டினுள் நீங்கள் உள்ளடக்க விரும்பும் விடயங்களை வழங்கினால் போதும், உடனே உங்களிற்குரிய இரகசியக் குறியீடு தயாராகிவிடும், அதனை நீங்கள் புகைப்படமாக Download செய்து அதனை அச்சிட்டு (Print எடுத்து) பெற்றுக்கொள்ளலாம்.
இவ் இரகசிய குறியீட்டினுள் அதிகபட்சமாக 250 சொற்கள் கொண்ட தகவல்களை உள்ளடக்க முடியும் என்பது பிரமிக்கத்தக்கவொரு விடயமாகும். இந்த Barcode 1948 இல் தான் முதன்முதலாக பயன்பாட்டிற்கு வந்தது. Barcode ஆனது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
வைத்தியசாலையில் நோயாளிகளின் மணிக்கட்டுப் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் Barcode இன் மூலம் குறித்த நோயாளியின் முழுத்தகவல்களையும் மருத்துவமனையில் பணியாற்றுபவர்களினால் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
வாடகை கார்கள், விமானப் பயணப்பெட்டி, அணுக்கருக் கழிவு, அஞ்சல் மற்றும் பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்களின் நகர்வைக் கண்காணிப்பதிலும் பயன்படுகிறது.
-இன்று ஒரு தகவல்

Errors in Thinking that Create Anxiety

1. All-or-nothing thinking: Looking at things in black-or-white categories, with no middle ground (“If I fall short of perfection, I’m a total failure.”)

2. Overgeneralization: Generalizing from a single negative experience, expecting it to hold true forever (“I didn’t get hired for the job. I’ll never get any job.”)

3. The mental filter: Focusing on the negatives while filtering out all the positives. Noticing the one thing that went wrong, rather than all the things that went right.

4. Diminishing the positive: Coming up with reasons why positive events don’t count (“I did well on the presentation, but that was just dumb luck.”)

5. Jumping to conclusions: Making negative interpretations without actual evidence. You act like a mind reader (“I can tell she secretly hates me.”) or a fortune teller (“I just know something terrible is going to happen.”)

6. Catastrophizing: Expecting the worst-case scenario to happen (“The pilot said we’re in for some turbulence. The plane’s going to crash!”)

7. Emotional reasoning: Believing that the way you feel reflects reality (“I feel frightened right now. That must mean I’m in real physical danger.”)

8. ‘Shoulds’ and ‘should-nots’: Holding yourself to a strict list of what you should and shouldn’t do and beating yourself up if you break any of the rule.

9. Labeling: Labeling yourself based on mistakes and perceived shortcomings (“I’m a failure; an idiot; a loser.”)

10. Personalization: Assuming responsibility for things that are outside your control (“It’s my fault my son got in an accident. I should have warned him to drive carefully in the rain.”)

குல தெய்வம் என்பது என்ன பிரிவு??


பிரும்மன் படைத்த உயிரினங்களைக் காக்க விஷ்ணுவும், சிவபெருமானும் பலவேறு அவதாரங்களையும், ரூபங்களையும் படைத்தார்கள் என்று கூறினேன் அல்லவா. அந்த உயிரினங்களைப் படைத்தப் பின் அவற்றை கோடிக்கணக்கான பல்வேறு பிரிவுகளாக பிரித்து உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு குணங்களுடன் படைப்புக் கொடுத்தார். அந்த பல்வேறு குனங்களுடம், பலவேறு இடங்களிலும் பரவிக் கிடந்த படைப்புக்களை பாதுகாக்க, வழிப்படுத்த வேண்டும் என்பதை முன்னரே பரமாத்மன் முடிவு செய்து இருந்ததினால்தான் விஷ்ணு மற்றும் சிவபெருமானின் மூல அவதாரங்கள் மூலம் கோடிக்கணக்கான துணை அவதாரங்களை படைக்க வழி செய்யப்பட்டு இருந்தது. அவர்களால் அப்படியாக படைக்கப்படும் ஒவ்வொரு அவதாரத்துக்கும் சில பொறுப்புக்களும் அதிகாரங்களும் தரப்பட்டது. அவர்கள் பிரும்மாவினால் படைக்கப்பட்டு கோடிக்கணக்கான பிரிவுகளில் இருந்த ஒவ்வொரு பிரிவையும் பாதுகாத்து வழிகாட்டும் பொறுப்புக்களைப் பெற்றது.
பிரும்மாவினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி ஒரு ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம். ஒவ்வொரு ஆத்மாவும் படைக்கப்பட்டவுடன் அதை நல்வழிப்படுத்தி பாதுகாக்க எந்தெந்த தேவதை அல்லது தெய்வங்களுக்கு அதிகாரம் தரப்பட்டு இருந்ததோ அந்த தெய்வங்களும், தேவதைகளும் அந்த ஆத்மாக்களை தம்முடன் இணைத்துக் கொண்டு விடுவதினால் அந்த அந்த தெய்வத்தையே காக்கும் கடவுளாக அந்த ஆத்மாவும் ஏற்றுக் கொண்டு விடுகிறது. அதுவே அந்த ஜீவனின் குல தெய்வமாகி விடுகிறது. அந்த ஜீவனை சார்ந்த அனைத்து ஜீவனுக்கும் வம்சாவளியாக அதே தெய்வமும், தேவதையும் குல தெய்வமாகி விடுகிறது. இப்படியாக அமைந்ததே குல தெய்வம் என்பது. அவரவர் தமது குல தெய்வத்தை வணங்க வேண்டும் என்று இதனால்தான் கூறப்படுகிறது.
ஒரு ஆத்மாவானது ஜனனம் எடுத்தப் பின் அவர்கள் தங்கி உள்ள இடங்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் உந்தப்பட்டு தமக்கு பாதுகாப்பைத் தர அவர்கள் மனதில் தோன்றும் தெய்வம், தேவதை அல்லது ஏதாவது ஒரு உருவத்தை மானசீகமாக வணங்கத் துவங்குவார்கள். இந்த செயலும் தெய்வ நிர்ணயித்தின்படியே நடைபெறத் துவங்குகிறது. அதுவே அவர்களது குல தெய்வமாகி விடும். இப்படியாக துவங்கும் அந்த குல தெய்வ வழிபாடு என்பது அவர்கள் குடும்பத்தில் துவங்கி அவர்கள் மூலம் அவர்களது வம்சத்தில் தொடரும்.
ஒரு வம்சம் என்பது எத்தனை ஆண்டுகள் அல்லது எத்தனை குடும்பத்தினர்வரை பொருந்தும்? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே ஒரு வம்ச கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் கூட 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். நம்மில் யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சந்ததியினர் யார் என்பது தெரியுமா? யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது. மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.
இப்படியாக மூன்று தெய்வங்களும் தமது சார்ப்பிலே லட்சக்கணக்கான அணுக்களைப் படைத்து தமது அவதார தூதர்களாக, தெய்வங்களாக, தேவதைகளாக கிங்கணர்களாக உலகெங்கும் அனுப்பி வைத்து உள்ளார்கள். அவை அனைத்தும் பல்வேறு ரூபங்களில் அங்காங்கே குடி கொண்டுள்ளன. அப்பொழுது அங்கு குடி கொள்ளும் தெய்வங்களையும், தேவதைகளையும் அந்தந்த இடங்களில் உள்ளவர்கள் ஆராதிக்கத் துவங்குவார்கள். அப்படி தம்மை ஆராதிக்கத் துவங்கும் வம்சத்தை அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் தமது பாதுகாப்பில் தத்து எடுத்துக் கொள்ளும்.
ஒருமுறை ஒரு தேவதையோ அல்லது தெய்வமோ ஒரு வம்சத்தினரை தத்து எடுத்துக் கொண்டு விட்டால் அதன்பின் அந்த வம்சத்தின் ஏழேழு தலை முறைக்கும் அவர்களே பாதுகாப்பாக இருந்தவாறு அந்த வம்சத்தினரின் குல தெய்வமாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அந்த வம்சத்தினரின் வீடுகளில் நடைபெறும் நல்லவை மற்றும் கெட்டவை என்ற அனைத்து அம்சங்களிலும் சடங்குகளுக்கும் அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் மட்டுமே பொறுப்பு ஏற்பார்கள். அந்த வம்சத்தை மற்ற தேவதையோ அல்லது தெய்வமோ ஏழேழு தலை முறை முடியும் வரை பாதுகாக்க முன்வராது. இதுவே அவற்றை படைத்த மூல தெய்வங்களின் சட்டமாகும்.
இப்படியாக நிர்ணயிக்கப்பட்ட தெய்வீக சட்டத்தை மீறி ஏழேழு தலை முறை முடியும்வரை ஏற்கனவே ஒரு தேவதை அல்லது தெய்வம் தத்து எடுத்துக் கொண்ட வம்சத்துக்கு வேறு தேவதை அல்லது தெய்வம் அடைக்கலம் கொடுக்க முன்வந்தால் அப்படி தடம் பிழன்று வேறு தெய்வ ஆராதனை செய்யும் வம்சத்தினரின் பிராத்தனைகளை அவற்றைப் படைத்த மூல தெய்வம் ஏற்காது. மாறாக அப்படிப்பட்ட வம்சத்தினர் ஏராளமான பிரச்சனைகளை தத்தம் வாழ்க்கையில் சந்தித்தபடி இருப்பார்கள். ஆகவே குல தெய்வம் என்பது தெய்வத்தின் ஒரு பிரிவே என்றாலும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தினர் வணங்கித் துதிப்பதற்காக, அவர்களது வம்சங்களைப் பாதுகாக்கவே படைக்கப்பட்டவை.
குல தெய்வங்களுக்கு சில குறிப்பிட்ட காரியங்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றை செய்தப் பின் அவர்கள் தாம் செய்ததையும், அவற்றுக்கான காரணங்களையும், முறையான வழிப்பாதை மூலம் அவரவர்களைப் படைத்தவர்கள் மூலம் பரப்பிரும்மனிடம் அனுப்பும். அங்குதான் ஒரு கம்பியூட்டர் போல அனைவரது கணக்குகளும் வைக்கப்பட்டு அடுத்தப் பிறவி நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகவே குலதெய்வ வழிபாடு என்பதும் இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால்தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது. மனிதர்கள் பெற்றுள்ள ஆறு அறிவும் இந்த ஆறு நிலைக் கடவுள் தத்துவத்தினாலேயே அமைந்து உள்ளது.
-N.R.Jayaraman-

USB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை பகிர்வது எப்படி – எந்த சாதனமும் இன்றி!

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.
இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என அல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்துந்து கொள்ளலாம்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்
Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
vir
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்.
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டும்.

Intelligence in humans is fundamentally social.

University of Illinois neuroscience professor Aron Barbey and his colleagues found that brain regions that contribute to social problem solving also play a role in general intelligence.Aron Barbey
Vietnam veterans who received penetrating head wounds during combat are helping to unlock some of the deepest mysteries of the brain. Scientists at the University of Illinois Urbana-Champaign studied 144 veterans who received penetrating head wounds from shrapnel or bullets, which damaged specific areas of the brain while leaving nearby regions intact. The researchers mapped each vet's brain with CT scans and then combined all of the scans to create a detailed map of the brain. They also administered a detailed battery of tests measuring social, emotional, and cognitive functioning. In a new study published in the journal Brain, the scientists showed that the regions implicated in social functioning had a significant overlap with the regions that were key to emotional and general intelligence. The researchers say that these results support the idea that intelligence in humans is fundamentally social.Vietnam veterans who received penetrating head wounds during combat are helping to unlock some of the deepest mysteries of the brain. Scientists at the University of Illinois Urbana-Champaign studied 144 veterans who received penetrating headwounds from shrapnel or bullets, which damaged specific areas of the brain while leaving nearby regions intact. The researchers mapped each vet's brain with CT scans and then combined all of the scans to create a detailed map of the brain. They also administered a detailed battery of tests measuring social, emotional, and cognitive functioning. In a new study published in the journal Brain, the scientists showed that the regions implicated in social functioning had a significant overlap with the regions that were key to emotional and general intelligence. The researchers say that these results support the idea that intelligence in humans is fundamentally social.

Read more: http://bit.ly/1lSff6A

Monday, August 4, 2014

All-in-one energy system offers greener power for off–grid homes, farms and businesses:

An innovative 'trigeneration' system fuelled entirely by raw plant oils could have great potential for isolated homes and businesses operating outside grid systems both in the UK and abroad.

Developed by a consortium led by Newcastle University and funded by the Engineering and Physical Sciences Research Council (EPSRC) through the RCUK Energy Programme, the small-scale combined cooling, heat and power system has been designed to provide dependable electricity without the need for a mains connection.

Ideally suited for small-holdings and businesses, and particularly applications in the developing world, the waste heat that is produced by the system is used for cooling and heating in order to recover the maximum amount of energy.
At the same time, the team have incorporated advanced electrical storage into the system to make it even more efficient and more able to cope with the daily fluctuating demand for electricity.

The consortium also included researchers from University of Leeds, University of Ulster, and three Chinese universities

தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

லியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை. நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை என்பதும். 
FatherandSon2
என் மகனைப் பற்றி நானே புகழ்ந்து பேசினால், 'கலியாணம் ஆகாத பையன்; குறைத்துப் பேசினால் மார்க்கெட் ஆகுமா, என்று பெண்ணைப் பெற்றவர்கள் நினைக்கலாம். 'காக்காயின் பொன் குஞ்சு' என்று பரிகாசம் செய்கிறவர்களும் இருப்பார்கள். என் மகனை நான் இகழ்ந்தால் 'பிள்ளையைப் பெறத் தெரிந்ததே தவிர, வளர்க்க தெரியவில்லையே, ஐயா' என்று என்னையே சாடுவார்கள். ஆகையால், பொதுவாக, அவனைப் பற்றி என் அபிப்பிராயத்தைச் சொல்லிவிடுகிறேன். 

அவன் பெயர் சந்திரன்; என்னுடைய மூத்த மகன். வயது இருபத்திரெண்டு முடிந்துவிட்டது. சட்டப் பரீட்சையில் தேறி, பிராக்டீஸ் செய்யாமல் வீட்டோடு இருக்கிறான். என்னோடு வியாபாரத்தையும் நில புலங்களையும் கவனிக்கிறான். சட்டக் கல்லூரியில் சேரும்வரை வக்கீல் ஆக வேண்டும் என்று ஒரே ஆத்திரமும் ஆவலுமாக இருந்தான். கல்லூரியில் சேர்ந்ததும் அவனுக்குக் கதை எழுதும் பைத்தியம் பிடித்தது. படித்தபடியே கதைகளும் கட்டுரைகளும் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினான். (சில பல என்று கூடச் சொல்லலாம்) பத்திரிகைகளில் அவை வெளியாயின. வக்கீல் பட்டம் பெற்று வெளியே வந்ததும் அவனுக்கும் வக்கீல் தொழில் பிடிக்க வில்லை. பத்திரிகை நடத்துகிறேன் என்று என்னிடம் அனுமதி கேட்டான். அனுமதி கேட்பதென்ன, 'ஆரம்பிக்கட்டுமா?' என்று கேட்டான், ஆரம்பித்து விட்டான். அதுவும் ஒரு தொழில்தானே என்று நானும் பேசாமல் இருந்தேன். 

அவன் செய்யும் எந்தக் காரியத்திலும் நான் குறுக்கிடுவதில்லை. அவன் மேல் எனக்கு அத்தனை நம்பிக்கை. தவறு செய்யமாட்டான் என்று பத்திரிகை நடத்தப் பணம் கொடுத்தேன். 'ராகம்' என்ற அந்தப் பத்திரிகை அழகாகத்தான் இருந்தது. மற்ற பத்திரிகைகள் எல்லாம் அதை மரியாதையுடன் வரவேற்றன. அவை மலை உயரத்துக்கு என் மகனைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தியதைக் காண எனக்கு மிகவும் பெருமையாகத்தான் இருந்தது. 

ஆறு மாதங்கள் கழித்துக் கணக்குப் பார்த்தேன், ஆறுமாத இலக்கியத்தின் விலை ஐயாயிரம் ரூபாய் என்று கணக்கு காட்டியது. எனக்குப் 'பக்' கென்றது. 

அவனைக் கூப்பிட்டு, ''சந்திரா, பத்திரிகை நன்றாக நடக்கிறதா?'' என்று கேட்டேன். 

mv. venkatraman''இதோ பாருங்கள் அப்பா'' என்று அன்று தபாலில் வந்த இருபது, முப்பது கடிதங்களை என்னிடம் நீட்டினான் அவன். 

''அது சரி, கணக்குப் பார்த்தாயா?'' 

''அப்பா, பத்திரிகை ஒரு லட்சியம்; தொழில் அல்ல'' என்றான் அவன் உணர்ச்சியோடு. 

''லட்சியம் அல்ல என்று நான் சொன்னேனா? அதற்காகச் சொல்ல வரவில்லை. என் தகப்பனார் எனக்காக விட்டுப் போன சொத்து பல பூஜ்யங் களுக்கு இருக்கும். நேர் வழியிலோ குறுக்கு வழியிலோ கொஞ்சம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருக்கிறேன். 

கூடவே, புத்திர சம்பத்துக்கும் குறைவில்லை. உன் லட்சியத்தை மட்டும் கவனித்தால் மற்ற சத்புத்திரர் களின் லட்சியம் என்ன ஆகும்?'' 

''பத்திரிகையை நிறுத்திவிடு என்கிறீர்கள்; அது தானே? 'ராகத்'துக்கு மங்களம் பாடிவிட்டேன்; சரிதானே?'' 

''நீ கதை கட்டுரை எழுதிப் பத்திரிகைகளுக்கு எல்லாம் அனுப்பு. மார்க்கெட்டில் பெயர் உண்டாகிவிடும். பிறகு பத்திரிகை ஆரம்பம் செய், தொழில் எப்படி நடக்கிறது பார்,'' என்றேன் ஆறுதலுக்கு. 

''இலக்கியம் வேறே, தொழில் வேறே; இலக்கியம் தொழில் ஆக முடியாது; சரி, இதெல்லாம் உங்களுக்கு தெரியாது, 'ராகம்' முடிந்துவிட்டது.'' 

சொன்னபடியே செய்துவிட்டான் அவன். அவனுக்கு வருத்தமாக இருந்ததா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. என்னோடு வியாபாரத்தை கவனித்துக் கொண்டே பத்திரிகைகளுக்கு விஷயதானம் செய்து, பத்து இருபது என்று சம்பாதிக்கத் தொடங்கினான். 

மொத்தத்தில், என் அபிப்பிராயத்தில், என் பையன் நல்லவன். என் சொல்லைத் தட்டமாட்டான் என்பதில் மட்டும் நான் இப்படிச் சொல்லவில்லை. பள்ளியிலும் கல்லூரிகளிலும் ஏராளமாக மார்க்குகள் வாங்கித் தேறியதோடு, வருஷம் தவறாமல் நன்னடத்தைப் பரிசும் அவனுக்குத்தான் கிடைக்கும். சிகரெட், பொடி, புகையிலை வகையறா தெரியாது. சீட்டாட்டத்தில் ஜாதிப் பிரிவினை கூடத் தெரியாது. பெண்களுடன் சங்கோசம் இல்லாமல் பழகுவான். நானும் பயப்படாமல் பழகவிட்டேன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லையே? ஆனால் அவன் வேலியைத் தாண்டியது கிடையாது. அப்படிப் போனதாக அபவாதம் கூட இல்லை. படித்த பையனின் லட்சணம் ஒன்றும் அவனிடம் காணோமே என்று நான் கூட ஆச்சரியப்படுவது உண்டு. நான் கண்டிக்கும்படியாக அவன் ஒன்றும் செய்யவில்லையே என்று எனக்கு அவன்மேல் குறை; எனக்கு கண்டிக்கத் தெரியவில்லை என்று என்மேல் அவனுக்கு குறை! அவனும் நானும் பழகுவதைப் பார்த்தால், அப்பனும் பிள்ளையுமாகத் தோன்றாது. இரண்டு நண்பர் களாகத்தான் தோன்றும். 

இப்பேர்பட்ட பிள்ளை, கல்யாண விஷயத்தில் மட்டும் என்னிடம் மனம் விட்டுப் பேசாமல் மர்மமாக இருப்பதன் காரணம் எனக்கு பிடிபடவில்லை. அவன் பையன்; நாற்பது வயதில் கூட மணம் செய்து கொள்ளலாம். ஆனால் மகாலட்சுமி பெண்; அவனைக் கலியாணம் செய்து கொள்வதற்காகக் காத்திருக்கிறவள். அவளை ஊறுகாய் போட முடியுமா? 

மகனுக்கு என்னதான் சுதந்திரம் கொடுத்தாலும் தகப்பனின் உரிமையை மறந்துவிட முடிகிறதா? நாள் ஆக ஆக எனக்கும் பொறுமை போய்விட்டது. அவனைக் கண்டித்துக் கேட்டு விடுவது என்று முடிவு செய்து, அதற்கு ஒரு நாளும் குறித்துக் கேட்டேன். 

அன்று விடுமுறை நாள். காலையில் எனக்கு முன்னால் அவன் எங்கோ போய்விட்டான். மத்தியானம் சாப்பிட வரட்டும் என்று கோபமாக இருந்தேன்; ஆனால், இரவு ஏழு மணிக்கு, அதாவது நான் கோபித்துக் கொள்வதற்கு தயாராக இல்லாத ஒரு நேரத்தில் அவன் வந்து சேர்ந்தான். 

கோபம், என் இயற்கைக்குப் பொருந்தாத ஓர் உணர்ச்சி. கோபம் வந்தால் முகம் கடுமையாக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். முகத்தை 'உர்' ரென்று வைத்துக் கொண்டிருந்த சமயத்தில் எல்லாம் அவன் வரவில்லை. அவன் வந்தபோது நான் குருமூர்த்தியோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தேன். அவன் என் கடைசிப் பையன். வயது மூன்று இன்னும் பூர்த்தி ஆகவில்லை. 

இருபதில் ஒரு பையன், மூன்றில் ஒரு பையன்; இதில் என்ன வெட்கம்? இரண்டிற்கும் இடையில் எத்தனை என்பதை என் வாயால் சொல்ல மாட்டேன். குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை கொஞ்சம் உண்டு. நானும் அவளும் கட்டுப் பாடாகத்தான் இருந்தோம். நாங்கள் மனிதர்கள் தானே? கட்டுப்பாடு செய்துகொண்ட ஒரே காரணத்தால் அதை மீறிவிட்டோம். பிறகு டாக்டரைப் பார்த்து அவள் நாலைந்து இஞ்செக்ஷன்கள் செய்து கொண்டோள்; ஏதோ மாத்திரைகள் கூட அவள் சாப்பிட்டதாக ஞாபகம். கட்டுப்பாடு, டாக்டர், இஞ்செக்ஷன், மாத்திரை எல்லாவற்றையும் ஏமாற்றிவிட்டுப் பிறந்த குழந்தை குருமூர்த்தி. 

'சுத்த பிண்டம்; கல்லைப் போட்டாலும் கலைக்க முடியாது, ஸார்' என்று பிறகு சொன்னார் ஜோஷியர். சுத்த பிண்டம் என்பதாலோ என்னவோ வீட்டில் உள்ள எல்லோரையும் குழந்தைகள் ஆக்கிவிட்டு, குருமூர்த்தி பெரியவன் ஆகிவிட்டான். 

சந்திரன் இரவு வீடு திரும்பிய சமயம் குருமூர்த்தி பென்சிலும் நோட்டுமாக எழுதிக் கொண்டிருந்தான்; நான் செலவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். 

''என்னடா எழுதினே?'' 

''மஞ்சள் ஓரணா,'' என்றான் குருமூர்த்தி. 

''எழுது, சந்தனம் ஓரணா'' 

''ஆயிட்டுது,'' 

''பழம் ரெண்டனா'' 

''எழுதிட்டேன்'' 

''எல்லாம் என்ன ஆச்சு?'' 

''ரெண்டனா'' 

முட்டை முட்டையாகக் கிறுக்கி, அவன் கணக்கு எழுதுவதைப் பார்த்து சந்திரன் சிரித்தபோதுதான் அவன் வந்ததை நான் கவனித்தேன். உடனே, கோபம் வந்தது. குருமூர்த்தியை அப்படியே விட்டு விட்டு எழுந்து நாற்காலியில் உட்கார்ந்தேன். 

''ஆசிரியர் வந்தாயிற்றா? காலையிலிருந்து எங்கே மறைந்துவிட்டீர்கள்?'' என்றேன், என் குரலில் கொஞ்சம் கடுமை இருந்ததை நானே கண்டேன். 

அவன் அதை லட்சியம் செய்ததாகத் தெரிய வில்லை. 

''ஏன் அப்பா, ஏதாவது அவசர ஜோலி இருந்ததா? மகாலட்சுமி வீட்டுக்குப் போனேன். ரகுராமன் வந்தார். மகாலட்சுமி அங்கேயே சாப்பிடச் சொல்லிவிட்டாள். பேசிக் கொண்டே இருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.'' 

மகாலட்சுமியின் பெயரைக் கேட்டதும் நான் வரவழைத்த கோபம் எங்கோ போய்விட்டது. 

''உனக்கு என்ன வயது தெரியுமா?'' 

''இருபத்திரண்டு'' என்றான் அவன் சிரித்தபடி. 

''இவ்வளவு வயசாகியும் இந்த குருமூர்த்திக்கு இருக்கிற தெளிவு கூட உன்னிடம் காணோமே? வீட்டுக்கு வந்ததும் செலவுக் கணக்கு கேட்கிறான். நீ'' 

''நான்தான் பத்திரிகையை எப்போதோ நிறுத்தி விட்டேனே'' 

''அதை நான் சொல்லவில்லை. எந்த விஷயத்திலும் ஒரு தெளிவு வேண்டும் என்கிறேன். வயது வந்த ஒரு பையனும் ஒரு பெண்ணும் நாள் முழுவதும் கதை பேசி அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை யாராவது கண்டால் என்ன நினைப்பார்கள்?'' 

''பிறத்தியார் ஒன்று சொல்வார்கள் என்பதற்காக நமக்குப் பிடித்ததைச் செய்யாமல் இருக்க முடியுமா அப்பா?'' 

''அப்படியானால் மகாலட்சுமி உன் மனசுக்குப் பிடிக்கிறாள் என்று சொல்லு'' 

''பிடிக்காமல் என்ன அப்பா?'' 

''அப்படியானால் முகூர்த்தத்துக்கு நாள் பார்க்க லாமா?'' 

''யாருக்கு?'' 

''என்னடா அது? மகாலட்சுமிக்குத்தான்'' 

''மகாலட்சுமிக்கா? என்னிடம் கூட சொல்லாமல் வரன் பார்த்துவிட்டீர்களா?'' 

''என்ன அது, என்ன அது, வரன் பார்த்து விட்டீர்களாவா! என்னடா, புதுசாய் பேசுகிறாய்? உனக்காகவே பிறந்து வளருகிறாள், வேறு வரன் எதுக்காகத் தேடுவது?'' 

''வேண்டாம்'' 

''அதுதானே பார்த்தேன்; வருகிற பங்குனியில் நாள் பார்த்துவிடட்டுமா?'' 

''வேண்டாம் என்றேனே அப்பா?'' 

''எப்போது வேண்டாம் என்றாய்? நாள் பார்க்காமல் சீர்திருத்த மணம் செய்து கொள்ளப் போகிறாயா? இதற்காகத்தான் ஆகட்டும், ஆகட்டும் என்றாயா? எனக்கு என்னடா இதில்? மகாலட்சுமியும் சரி என்றால் எனக்கு சம்மதம். இதைச் சொல்லவா இவ்வளவு தயங்கினாய்?'' 

''அது இல்லை அப்பா, மகாலட்சுமியை வேண்டாம் என்றேன்.'' 

''ஆரம்பித்து விட்டாயே! என்ன விளையாட்டு இது? இரண்டு பேரும் சேர்ந்து கும்மாளம் அடிக்கிறீர்கள். கலியாணப் பேச்சில் மகாலட்சுமியைப் பற்றி விளையாடாதே, சொல்லிவிட்டேன்.'' 

''நிஜமாகத்தான் சொல்லுகிறேன்'' 

''ஏன், கறுப்பாயிருக்கிறாள் என்பதாலா?'' 

''அதுக்காக இல்லை'' 

''ஒண்ணரைக் கண் என்றா?'' 

''வந்து அப்பா'' 

''சதா நாட்டியம் ஆடுகிறாளே, அதனாலா?'' 

''நான் சொல்ல வந்தது''
 ''அவள் ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள் என்று தானே சொல்லப் போகிறாய்?'' 

''நீங்கள் இப்படிப் பேசிக் கொண்டே போனால் நான் எப்போது பேசுவது?'' 

''மனசுக்குப் பிடிக்கிறது என்று கலியாணம் வேண்டாம் என்றால் என்னடா அர்த்தம்? போடா, போடா, கலியாணம் என்றால் இவ்வளவு வெட்கமா? போ, போ நாள் வைத்து விட்டுச் சொல்லி விடுகிறேன்.'' 

''இரண்டு நாள் தவணை கொடுங்கள் அப்பா. முடிவாகச் சொல்லிவிடுகிறேன்'' 

''நல்ல பிள்ளை! உனக்கு இவ்வளவு தூரம் இடம் கொடுத்துப் பழகியது பிசகு என்று கூட தோன்றுகிறது.'' 

''அப்பா, பிறகு உங்களுக்குத் தெரியும்'' 

''எனக்கு ஒன்றும் தெரியாது. உனக்கு எல்லாம் தெரியும். அப்படித்தானே? வக்கீலுக்குப் படித்து, பத்திரிகை நடத்திவிட்டால்'' 

''அப்பா, ஒரு நியூஸ். நாளைக்கு ரகுராமனும் மகாலட்சுமியும் இங்கே சாப்பிட வருகிறார்கள். நீங்களும் நானும் கடைக்குப் போக வேண்டாம்.'' 

''யார் இந்த ரகுராமன்?'' 

''அவர் ஒரு கவி; ரொம்ப நல்லவர்'' 

''கதாசிரியனாலேயே வீடு இவ்வளவு அமளிப் படுகிறது; கவி நல்லவராம். என்ன வயசு அவருக்கு? மகாலட்சுமியோடு அவருக்கு என்ன வேலை?'' 

''அவருக்கா? ஐம்பது, ஐம்பத்திரண்டு இருக்கும்'' 

''சரி, இரண்டு நாளில் உன் சம்மதத்தைச் சொல்லிவிட வேண்டும்'' 

அவன் அங்கே இருந்தால்தானே நான் பேச முடியும்? 

எனக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருந்தது. மகாலட்சுமியை மணப்பதற்கு, தவணை சொல்லும் பையனைப் பற்றி என்ன சொல்லுவது? 

மகாலட்சுமியை நான் சாதாரணப் பெண் என்று சொல்ல மாட்டேன். நல்ல சிவப்பு; களையான முகம்; எஸ்.எஸ்.எல்.ஸி. வரை படிப்பு; சிறந்த சங்கீத ஞானம்; பாடுவதற்கு இனிமையான குரல்; நாட்டியமாடத் தெரியாது; தமிழிலும் ஸமஸ்கிருதத்திலும் நல்ல பண்டித்தியம்; பெட்டி போல் அடக்கமான பெண், வீட்டு வேலைகளிலும் கெட்டிக்காரி; பெண்ணா அவள்? வரதட்சிணை நான் எதிர்பார்க்கவில்லை. மகாலட்சுமி என் வீட்டுக்கு வந்தாலே போதும் என்பது என் ஆசை. 

இந்த ஆசைக்கு மற்றோர் அடிப்படையான காரணமும் உண்டு. நானும் அவள் தகப்பனாரும் அடி வயது முதல் சினேகிதர்கள். எங்கள் இருவருடைய குடும்பங்களும் மிகவும் நெருங்கிப் பழகி வந்தன. தெய்வத்தின் தயவில், இரண்டு குடும்பங்களுக்கும் 'இல்லை' என்று ஏங்கும்படியான நிலைமை இல்லை. இந்த அமைதியில் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் மகாலட்சுமியின் தந்தை திடீரென்று மாரடைப்பு என்று வியாஜம்-தலை¨யைக் கீழே போட்டுவிட்டார். உயிர் பிரியும் தறுவாயில்-தம் குடும்பத்தை சம்ரட்சிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டார். அவருடைய மனைவி உள்பட அந்தக் குடும்பம் பூராவுமே என்னைக் கலந்து கொள்ளாமல் ஒன்றும் செய்வதில்லை. மகாலட்சுமி நான் சொல்வதற்கு மாறாக ஒரு வார்த்தை பேச மாட்டாள். 

அவள் தகப்பனார் உயிரோடு இருந்தபோதே இரு குடும்பங்களுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் ஏற்பட வேண்டும் என்கிற ஆவல் அவருக்கும் எனக்கும் இருந்தது. அதற்கு ஏற்பச் சந்திரனும் மகாலட்சுமியும் ஒற்றுமையாகப் பழகுவதைக் கண்டபோது நாங்கள் அவர்களை எதிர்காலத் தம்பதிகள் ஆக்கத் திட்டமிட்டோம். 'இவனுக்கு அவள்; இவளுக்கு அவன்' என்று முடிச்சு போட்டிருந்தோம். 

இப்போது, இந்நிலையில் சந்திரன் அவளை மணப்பதற்கு சால்ஜாப்பு சொல்லி வந்ததோடு, தவணையும் கேட்பதன் மர்மம் எனக்கு புரியவில்லை. 

'சிறிது காலம் போனால் சரியாகிவிடுவான். இருவரும் ஒற்றுமையாகத்தானே இருக்கிறார்கள்? எதற்காகவோ தயங்குகிறான், பின்னால் ஒப்புக் கொண்டுவிடுவான்' என்று சமாதானம் செய்து கொண்டு படுத்தேன். 

காலையில் மகாலட்சுமியின் முகத்தில் கண் விழித்தேன். 

''வா அம்மா'' என்று வெளியில் வந்தபோது சந்திரனோடு ஓர் இளையவன் பேசிக் கொண்டிருப்பதை கண்டேன். 

''அப்பா, நான் சொன்னேனே; இவர்தான் ரகுராமன்...'' 

''இவரா? ஐம்பது வயது என்றாயே, இருபது இருபத்திரண்டுதான் இருக்கும்போல்...'' 

''வேடிக்கையாகச் சொன்னேன்!'' 

ரகுராமன் கவியாகத் தோன்றவில்லை. மிகவும் அடக்கமாக இருந்தான்; அழகாய் பேசினான். 

அன்று, நாள் போன போக்கே எனக்குப் புரியவில்லை. அந்த மூன்று யுவர்களுடைய பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. கம்பர், இளங்கோ, வால்மீகி, காளிதாசன் முதலிய கவிகள் எல்லோரும் அவர்களுடைய பேச்சில் தாராளமாய்க் கலந்து கொண்டார்கள். மூவருடைய பேச்சிலும், என்னைக் கவர்ந்தது மகாலட்சுமியின் பேச்சுதான். அவளை மருமகளாக அடைந்ததும், தொழிலைச் சந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்து கொண்டே அவளிடம் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். வயதுக்கு மீறித்தான் அவளுக்கு ஞானம் இருந்தது. 

மாலையில் முதலில் மகாலட்சுமி விடை பெற்றுக் கொண்டாள். பிறகு ரகுராமன் கிளம்பினான். இருவரும் போனபின் சந்திரன் என்னைச் சூழ்ந்து கொண்டான். 

''அப்பா, ரகுராமன் எப்படி?'' என்றான். 

''எப்படி என்றால்?'' 

''அவனைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?'' 

''ஏதாவது சிபாரிசுக் கடிதம் வேண்டுமோ?'' 

''காலேஜ் லெக்சரர் வேலை போதும் அவனுக்கு. ரகு நல்ல பையனா, கெட்ட பையனா?'' 

''என்ன கேள்வி இது? உன்னைவிட நல்ல பையன் தான்'' என்றேன், அவனுக்கு உறுத்தட்டும் என்பதற்காக. 

''அப்படிச் சொல்லுங்க அப்பா!'' என்று அவன் சந்தோஷமாய்க் குதித்தான். 

''இது என்ன அற்ப சந்தோஷம்?'' 

''ரகுராமனுக்குக் கலியாணம் ஆகவில்லை. வயது என் வயதுதான். சுமாராக சொத்து சுதந்திரம் இருக்கிறது. பெரிய குடும்பம் இல்லை; காலேஜில் லெக்சரர். ஒரு சின்ன கெட்ட பழக்கம் கூட இல்லை. எல்லா விவரங்களையும் தீர்க்கமாக விசாரித்து விட்டேன்.'' 

''நம்மிடம் அவனுக்குக் கொடுக்கிற வயசில் பெண் இல்லையே'' என்றேன் சிரித்துக்கொண்டே. 

''இருக்கிறதே!'' 

''பத்மாவுக்குப் பத்து வயதுதானேடா? அழகுதான் போ! சின்னக்குழந்தையை...'' 

''பத்மா இல்லை அப்பா, மகாலட்சுமியைச் சொன்னேன்!'' 

''நான் அப்போதுதான் முதன் முறையாக அதிர்ச்சி எனப்படும் உணர்ச்சிக்கு வசப்பட்டேன். சில நிமிஷங்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

''என்னடா சொல்லுகிறாய்'' 

''அப்பா, ஆத்திரப்படக்கூடாது.'' 

''எனக்கு ஆத்திரப்படத் தெரியவில்லை என்று தானே நீ என்னை இப்படி ஹிம்சிக்கிறாய்? மகாலட்சுமியை நான் மருமகளாக அடைய.'' 

''கொஞ்சம் பொறுங்கள். உங்கள் வார்த்தையை நான் எப்போதாவது தட்டியது உண்டா? நான் சொல்வதில் தப்பு இருந்தால் சொல்லுங்கள், ஒப்புக் கொள்கிறேன்.'' 

''என்னடா சொல்லப் போகிறாய்? இப்படி எல்லாம் பழகிவிட்டு, இது என்ன முடிவடா திடீரென்று? 

''அப்பா மகாலட்சுமி நீங்கள் சொல்வதுபோல், மகாலட்சுமி மட்டும் அல்ல, ஸரஸ்வதியும்கூட வயது வந்த பிறகும் நான் அவளுடன் இவ்வளவு அதிகமாய்ப் பழகினேன் என்றால்... அதற்குக் காரணத்தைச் சொல்லவே எனக்கு வெட்கமாயிருக்கிறது.'' 

அவன் முகம் சுண்டுவதைக் கவனித்தேன். அதை ஒருபோதும் என்னால் சகிக்க முடியாது. என்னுடைய வருத்தத்தை மறைத்துக்கொண்டு அவனுக்கு ஆறுதலாகப் பேசினேன். 

''சும்மாச் சொல்லு; என்னிடம் சொல்லுவதற்குமா வெட்கம்?'' 

மகாலட்சுமி படித்தவள் என்று மட்டும் நீங்கள் நினைக்கிறீர்கள். எனக்கு அவள் அப்படித் தோன்றவில்லை. எனக்கு அவள் ஒரு பிறவி மேதையாகத் தோன்றுகிறாள். இல்லாவிட்டால், இந்த வயதில் அவளுக்கு இவ்வளவு ஞானம் இருக்க நியாயம் இல்லை. நான் சட்டம் படித்தேன்; பத்திரிகை நடத்தினேன். ரொம்பத் தெரிந்தவன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவளுக்குத் தமிழிலும் ஸமஸ்கிருதத்திலும் உள்ள புலமையைக் கண்டு... எனக்கு மலைப்புத் தட்டுகிறது. அப்பா, சொல்ல வெட்கமாக இருக்கிறது; சொல்லா விட்டால் உங்களுக்கு வருத்தமாயிருக்கும்; அதனால் சொல்லுகிறேன். நான் அவளை அடிக்கடி பார்க்கப்போவது அவளிடம் ஏதாவது கற்கலாம் என்றுதான். அவளுக்கு முன்னால் நான் சின்னக் குழந்தையாக, மாணவனாக மாறிவிடுகிறேன்; அவளை நான் மனைவியாக நினைப்பது எப்படி? அந்த நினைப்பே எனக்கு கூச்சம் உண்டாக்குகிறது. என்னை விட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்வதுபோல் என்று தோன்றுகிறது! அப்படிச் செய்யலாமா அப்பா? அவளுக்கு எற்ற புருஷன் ரகுராமன். அவளுடைய அறிவுக்கு ஈடு கொடுக்க அவனால்தான் முடியும்... எனக்கு ஏன் நீங்கள் ஸமஸ்கிருதம் சொல்லித் தரவில்லை?'' 

''தமிழையாவது நீ ஒழுங்காய்ப் படித்திருக்கலாமே?'' 

''சரி, அப்பா; ரகுவைப்பற்றி யோசித்து முடிவு சொல்லுங்கள்.'' 

சொல்லிவிட்டு எங்கோ வெளியில் போனான் அவன். இந்தப் பிள்ளையைப்பற்றி நான் என்ன சொல்வது? அழகு இல்லை, படிப்பு இல்லை. ஆரோக்கியம் இல்லை, வரதட்சிணை இல்லை என்பதுபோன்ற காரணம் காட்டிப் பெண்ணை நிராகரிப்பது உலகு வழக்கு. தனக்குக் கல்வி குறைவு என்று சொல்லிப் பெண் வேண்டாம் என்று சொல்கிறான் என் பிள்ளை. 'என்னைவிட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதுபோல், என்று அவன் சொன்ன பிறகு அவளையே மணம் புரியும்படி அவனை நான் எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்? 

இரவு சுமார் பத்து மணிக்கு அவன் மறுபடியும் என்னிடம் வந்தான். 

''என்மேல் கோபமா அப்பா?'' 

''உன்மேல் எனக்கு எப்போது கோபம் வந்தது? நீ சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. நீ சொல்வது போலவே செய்யலாம். மகாலட்சுமியின் அபிப்பிராயம் தெரியாமல் என்ன செய்வது?'' 

''அவளையும் ஜாடையாகக் கேட்டேன். நீங்கள் பார்த்து முடிவு செய்தால் சரி என்கிறாள்.'' 

''அட பாவி! அவள் சம்மதமும் வாங்கிவிட்டாயா?'' 

சிறிது நேரம் அவன் மெளனமாக உட்கார்ந்திருந்தான். 

''உனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லப்போகிறாயா, அடுத்தபடி?'' என்றேன் அவன் தயங்குவதைக் கண்டு. 

''என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டது இவ்வளவுதானா? அப்படியெல்லாம் நான் சொல் வேனா அப்பா? உங்கள் இஷ்டத்துக்கு நீங்கள் பார்த்து ஒரு பெண் முடிவு செய்யுங்கள்.'' 

''அப்புறம் ஆடுபோல் ஒரு பெண் வாங்கி மாடு போல் ஒரு பையனை விற்றார் எங்கள் அப்பா என்று கதை எழுதுவதற்கா?'' 

''கலியாண விஷயம் எனக்கு என்ன தெரியும்? உங்கள் திருப்திக்குச் செய்யும் முடிவு என் நன்மைக்குத் தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.'' 

குடும்பத்துக்கு ஏற்றவள் என்று எனக்குத் தோன்றிய ஒரு பெண்ணை நான் அவனுக்காகத் தேர்ந் தெடுத்தேன். பெண்ணின் பெயர் ஸரஸா; மகாலட்சுமி போல் அழகோ, கல்வியோ, ஞானமோ இல்லா விட்டாலும வீட்டுக்கு ஒளியாக விளங்குவாள் என்று எனக்குத் தோன்றியது. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சந்திரன் நான் தேர்ந்தெடுத்த பெண்ணை பார்ப்பதற்குக்கூட வரவில்லை. 

இருஜோடி விவாகங்கள் விமரிசையாக நடந்தன. இருஜோடித் தம்பதிகளும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.

ஸ்ரீசனீஸ்வர பகவான்

ஸ்ரீசனீஸ்வர பகவான் மகிமை சனி பகவானை மனம் உருக வேண்டி அருளை பெறுவோம்
நவகிரக தேவதைகளுள் கருணைக் கடலாய் விளங்கும் தெய்வமே சனீஸ்வர மூர்த்தியாவார். ஆனால், நடைமுறையில் சனி என்ற வார்த்தையைக் கேட்டால் இடியுண்ட நாகத்தைப் போல மக்கள் நடு நடுங்கிப் போவதையே பெரும்பாலும் காண்கிறோம். இதற்குக் காரணம் சனி பகவானைப் பற்றிய தெய்வீக உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாததே ஆகும்.
வேதம் எப்படி சனீஸ்வரரைத் துதிக்கிறது ?
ஊனமுற்ற காலுடன் சூரிய மூர்த்தியின் மைந்தனாய் இருக்கும், மெதுவாகச் செல்லக் கூடிய சனீஸ்வர பகவானைத் துதிப்பதாக இந்தத் துதி அமைந்துள்ளது. நவகிரக தேவதைகளுள் மிகவும் மெதுவாக செல்லக் கூடியவராய் இருப்பதால் அவரை இவ்வாறு அழைக்கிறோம்.
சனி பகவானின் வேகம் குறைந்த இயக்கத்தால் மக்களுக்கு விளையும் பலன்கள் ஏராளம். உதாரணமாக, ஒரு அலுவலக உத்தியோகத்தில் இருப்பவர் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை வங்கியில் போட்டு வைக்கிறார். அவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும்போது கணிசமான ஒரு தொகை அவருக்குக் கிடைக்கிறது. இந்தத் தொகையை வைத்துத்தான் அவர் மீதமுள்ள ஆயுட்காலத்தைக் கழித்தாக வேண்டும்.
அவரிடம் உள்ள சேமிப்புப் பணம் மெதுவாக செலவழிந்தால்தான் அவர் தன்னுடைய இறுதிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியும். மருத்துவச் செலவு, குழந்தைகள் மேற்படிப்பு, கல்யாணம் போன்ற காரணங்களால் அவருடைய சேமிப்பு வேகமாகக் கரைந்து விட்டால் அவர் மீதமுள்ள காலத்தை எப்படிக் கழிக்க முடியும்? அப்போது வேதனைதானே மிஞ்சும். இவ்வாறு ஒருவரிடம் உள்ள செல்வம் நிரந்தரமாக தங்கி, மெதுவாக செலவழிக்க உதவுபவரே சனீஸ்வர மூர்த்தியாவார்.
மற்றோர் உதாரணம். ஒருவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. அதனால் மூச்சிரைப்பும், இதயத் துடிப்பும் அதிகமாகவும் வேகமாகவும் இருக்கும். இந்நிலையில் அவர் ஆரோக்கியமாகத் திகழ வேண்டுமானால் அவருடைய இதயத் துடிப்பும், இரத்த ஓட்ட வேகமும் குறைந்தால்தானே நலம்? அதற்கு அனுகிரகம் புரியக் கூடியவரே சனி பகவான்.
அதேபோல ஒருவர் எப்போதும் உற்சாகத்துடன் படபடப்பாக நாள் முழுவதும் இருந்தாலும் இரவு நெருங்கும்போது அவருடைய உடல், மன இயக்கங்கள் குறைந்தால்தான் ஆழ்ந்த தூக்கம் கிட்டும். உடல் உறுப்புகள் அமைதி கொண்டால்தான் உடலுக்கு வேண்டிய ஓய்வு கிடைக்கும், ஆரோக்கியம் வளம் பெறும். இத்தகைய அமைதிக்கு வழிவகுப்பதே சனி பகவானின் மந்த சக்திகள் ஆகும்.

Contemporary interior Design in Australia







Nanostructured metal-oxide catalyst efficiently converts carbon dioxide to methanol

Nano structured metal-oxide catalyst efficiently converts carbon dioxide to methanol, a key commodity for chemicals and fuels

Scientists at the U.S. Department of Energy's (DOE) Brookhaven National Laboratory have discovered a new catalytic system for converting carbon dioxide (CO2) to methanol-a key commodity used to create a wide range of industrial chemicals and fuels. With significantly higher activity than other catalysts now in use, the new system could make it easier to get normally unreactive CO2 to participate in these reactions.


"Developing an effective catalyst for synthesizing methanol from CO2 could greatly expand the use of this abundant gas as an economical feedstock," said Brookhaven chemist Jose Rodriguez, who led the research. It's even possible to imagine a future in which such catalysts help mitigate the accumulation of this greenhouse gas, by capturing CO2 emitted from methanol-powered combustion engines and fuel cells, and recycling it to synthesize new fuel.
That future, of course, will be determined by a variety of factors, including economics. "Our basic research studies are focused on the science-the discovery of how such catalysts work, and the use of this knowledge to improve their activity and selectivity," Rodriguez emphasized.
The research team, which included scientists from Brookhaven, the University of Seville in Spain, and Central University of Venezuela, describes their results in the August 1, 2014, issue of the journal Science.

New tools for discovery

Because CO2 is normally such a reluctant participant in chemical reactions, interacting weakly with most catalysts, it's also rather difficult to study. These studies required the use of newly developed in-situ (or on-site, meaning under reaction conditions) imaging and chemical "fingerprinting" techniques. These techniques allowed the scientists to peer into the dynamic evolution of a variety of catalysts as they operated in real time. The scientists also used computational modeling at the University of Seville and the Barcelona Supercomputing Center to provide a molecular description of the methanol synthesis mechanism.

The team was particularly interested in exploring a catalyst composed of copper and ceria (cerium-oxide) nanoparticles, sometimes also mixed with titania. The scientists' previous studies with such metal-oxide nanoparticle catalysts have demonstrated their exceptional reactivity in a variety of reactions. In those studies, the interfaces of the two types of nanoparticles turned out to be critical to the reactivity of the catalysts, with highly reactive sites forming at regions where the two phases meet.

To explore the reactivity of such dual particle catalytic systems in converting CO2 to methanol, the scientists used spectroscopic techniques to investigate the interaction of CO2 with plain copper, plain cerium-oxide, and cerium-oxide/copper surfaces at a range of reaction temperatures and pressures. Chemical fingerprinting was combined with computational modeling to reveal the most probable progression of intermediates as the reaction from CO2 to methanol proceeded.

These studies revealed that the metal component of the catalysts alone could not carry out all the chemical steps necessary for the production of methanol. The most effective binding and activation of CO2 occurred at the interfaces between metal and oxide nanoparticles in the cerium-oxide/copper catalytic system.
"The key active sites for the chemical transformations involved atoms from the metal [copper] and oxide [ceria or ceria/titania] phases," said Jesus Graciani, a chemist from the University of Seville and first author on the paper. The resulting catalyst converts CO2 to methanol more than a thousand times faster than plain copper particles, and almost 90 times faster than a common copper/zinc-oxide catalyst currently in industrial use.

This study illustrates the substantial benefits that can be obtained by properly tuning the properties of a metal-oxide interface in catalysts for methanol synthesis.

அடுப்பும் - விறகும் நெருப்பும்- புகையும் ஓவியனின் அற்புத படைப்பு.