Search This Blog

Sunday, September 23, 2012

யூதர்கள் வரலாறு

யூதர்கள் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த இனங்களில் இவர்களது இனமும் நிச்சயமாய் அடங்கும். ரத்தம் தோய்ந்த வரலாற்றை தமதாக்கி கொண்ட இனங்களில் இவர்களும் முக்கியம் வாய்ந்தவர்கள். யூதர்களை குறித்த வரலாற்றை முடிந்த அளவில் [என்னறிவுக்கு எட்டிய வரையில்] தருவதே இத்தொடர் கட்டுரையின் நோக்கம்.யூதர்கள் குறித்து அறியமுதல் அவர்களின் தொடக்கம் குறித்து ஆராய்வது தகும்.

பைபிள் காலத்துக்கு முந்தைய யூதர்கள்



தோற்றமும் பரம்பலும்


கிறிஸ்தவர்களுக்கு முதல் தோன்றிய யூதர்களின் தோற்றம் குறித்து நாம் அறிய யூதர்களின் வேதநூலான தோரா,கிறிஸ்தவர்களின் வேதநூலான பைபிள்,இஸ்லாமியர்களின் வேதநூலான குர்ஆன் போன்ற நூல்கள் உதவுகின்றன. இம்மூன்று நூல்களிலும் பொதுவாக சொல்லப்படும் யூதர்களின் தோற்றம் குறித்த கதையொன்றை சுருக்கமாக பார்க்கலாம்.

"ஆதாம் ஏவாளின் 19 ஆம் தலைமுறைப் பேரனாக பிறந்த ஆபிரஹாமின் மனைவி சாரா என்பவளுக்கு நீண்ட காலமாக பிள்ளைபேறு கிடைக்கவில்லை. இதனால் குழப்பமுற்ற சாரா தனது வேலைக்காரிகளில் ஒருத்தியான ஆகார் என்பவளை ஆபிரஹாமிர்க்கு இரண்டாம் தாரமாக மணம் முடித்து வைத்தாள். மணமான சிறிது நாட்களிலேயே ஆகார் கர்ப்பமாகி இஸ்மயீல் எனும் மகனை பெற்றெடுத்தாள் . சிறிது காலம் கழித்து சாராவிட்க்கும் ஈஸாக் எனும் மகன் கிமு 1712 ஆம் ஆண்டு பிறந்தான். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட வாரிசு பிரச்னை காரணமாக தன மகன் இஸ்மயிலை அழைத்துக்கொண்டு வேலைகாரப்பெண் ஆகார் வீட்டை விட்டு வெளியேறி பாரான் என்ற பாலை நிலத்தில் குடியேறி தன மகனுக்கு எகிப்து நாட்டை சேர்ந்த பெண்ணை மணம் செய்து வைத்தாள்.இதே நேரம் சாராவின் மகனான ஈசாக்கிட்க்கும் ரெபேக்காவிட்க்கும் திருமணம் நடக்கிறது. ஈஸாக்கை தொடர்ந்து வந்த அவன் சந்ததியினரே யூதர்கள் என்றும் இஸ்மயிலை தொடர்ந்து வந்த அவனது சந்ததியினர் அரேபியர்கள் என்றும் கூறப்படுகிறது" [ஆபிரஹாமின் வம்சத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் அத்தனை பேருக்கும் சுன்னத் எனப்படும் விருத்த சேனம் செய்து வைக்கப்பட்டதுடன் அது அவர்களின் மரபு . இம்மரபை யூதர்களும் இஸ்லாமியர்களும் இன்றுவரை கடைபிடிப்பது கவனிக்கத்தக்கது.]

இக்கதை பொதுவாக மேற் கூறப்பட்ட மூன்று நூல்களிலும் கூறப்பட்டவை.. இனி ஈஸாக்கின் சந்ததியை குறித்து சிறிது சுருக்கமாக நோக்கலாம். ஈசாக்கிட்க்கும் , ரெபேக்காவிட்க்கும் பிறந்த மூத்த மகன் ஏசா, அடுத்த மகன் யாக்கோபு இதன் பிறகு யாக்கோபுவின் மகனான ஜோசப் எகிப்து மன்னனின் கீழ் முக்கியமான பதவியிலிருந்த போது தன் சகோதரர்களையும் தந்தையையும் அழைத்து தன்னுடன் தங்க வைத்து கொண்டான். இவ்வாறு எகிப்தில் குடியமர்ந்த யாக்கோபுவின் சந்ததியினர் காலப்போக்கில் எகிப்தியர்களை விட பல்கி பெருகியதுடன் இஸ்ரவேலர்கள் என்று அழைக்கபட்டனர். [யாக்கோபு இஸ்ரயேல் என்றும் அழைக்கபட்டான்]. பெருகிப்போன இஸ்ரவேலர்களை கண்டு பயந்த எகிப்தியர்களும் எகிப்திய மன்னனும் அவர்களுக்கு பல துன்பங்களை விளைவித்தனர்.


அவர்களை மீட்டெடுத்து எகிப்தை விட்டு அழைத்து வந்த மோசஸ் அவர்களின் தலைவராயும் ஆனார் வரும் வழியில் சீனாய் பாலை நிலத்தில் தங்கியிருந்த போது தான் இவர்களின் மதக் கொள்கைகளும் ,தோரா எனப்படும் யூதர்களின் வேத நூலும் பிறந்தன.

------------------------------------------------------------

இஸ்ரேலில் ஜோஷுவா தலைமையில் யூதர்கள் முதல் நுழைவு



தொடர்ந்து மோசஸ் தன் நம்பிக்கைக்கு உரிய தளபதி ஜோஷுவா விடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தபின் சீனாய் பகுதிகளிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர்கள் எரிக்கோ எனப்பட்ட சுற்று மதில்களால் சூழப்பட்ட இன்றைய இஸ்ரேலை அடைந்தனர். அவர்கள் உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சுவர்களை தகர்த்து உள்நுழைந்த அவர்கள் சகலரையும் கொன்று [ஒரு தேவதாசியின் குடும்பம் விதிவிலக்கு] ஜோஷுவா தலைமையில் கிமு 1272 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கேயே வாழத்தொடங்கினர்.


மன்னராட்சியின் ஆரம்பம்


இவ்வாறு இஸ்ரேலில் வாழத்தொடங்கி பல ஆண்டுகளின் பின்னர் தமக்கென்று ஒரு மன்னர் இலாத காரணத்தினால் சீலோ எனும் இடத்திலிருந்த ஆலய நிர்வாகியான சாமுவேலிடம் தமக்கு மன்னர் வேண்டும் என முறையிட்ட மக்களின் வேண்டுதலுக்கு இணங்க பெயர் குழுக்கள் முறை மூலம் தெரியபட்டவனே யூதர்களின் முதல் மன்னனான சவுல் இவனின் பின்னர் தாவிதும் அவனுக்கு அடுத்து சாலமோனும் மன்னரானார்கள்.


இவனது காலத்தில் தான் சாலமோன்தேவாலயம் கட்டப்பட்டது.அதன் பின்னர் ரெஹோபோம் ஆட்சிக்கு வந்தான் இவனது திறமையின்மையால் இஸ்ரேல் இரண்டாக பிரிந்ததுடன் வட பகுதியை பத்து பழங்குடியினத்தவர் சேர்ந்து தனி ஆட்சி புரிய ஆரம்பித்தனர் இது ஜிதேயா எனப்பட்டது. தெற்கு பகுதி இஸ்ரேலாகவே நீடித்தது இதன் பின்னர் இஸ்ரேலை கைப்பற்றிய பாபிலோனியர்கள் அதாவது கிரேக்கர்கள் அண்ணளவாக 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்தனர். இதன் போது இடிக்கப்பட்ட சாலமோன் தேவாலயம் இவர்கள் காலத்திலேயே மீண்டும் இரண்டாம் முறையாய் கட்டப்பட்டது.





இயேசுவின் காலத்திலேயே ரோமின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது ஜிதேயா. இப்படியே ரோமின் ஆட்சியில் ஜிதேயாவின் காலம் நடந்த காலம் தான் கிபி 66 ஆம் ஆண்டு. ஜிதேயாவின் கவர்னராயிருந்த ஆக்ரிப்பா-1 என்பவர் ரோமானியர்கள் போன்று மன்னனை வழிபடும் முறையை யூதர்களால் மேற்கொள்ள முடியாது என்றும் யூதர்களை அவர்களின் மதத்தை தொடர்ந்து பின்பற்ற அனுமதிக்கும் படியும் ரோமானிய மன்னனிடம் கேட்டதிட்க்கு இணங்க அவனும் அனுமதித்தான். ஆனால் எவ்வளவு காலம் தான் தொடர்ந்து அந்நியனின் ஆட்சியில் தங்களின் புனிதநகரான ஜெருசலேமை விட்டு வைக்க விரும்புவார்கள் யூதர்கள் விளைவு ரோமானியர்களுக்கு எதிரான புரட்சி படையான ஸிலாட்[ZEALOTS] என்ற ஒரு போராடும் அமைப்பை உருவாக்கிவிட்டார்கள். பிறகென்ன ரோமானியர்கள் எதிர்பார்க்காத ஒரு நாளில் தம் போரை ஆரம்பித்து ஜெருசலேமை கைப்பற்றியும் விட்டார்கள். ரோமானியப் பேரரசா..??? யூதர்களா....???? ரோமானியப் பேரரசுதானே...... பிறகென்ன டைட்டஸ்[TITUS] என்பவன் கடல் என ரோமானிய படையை திரட்டி ஜெருசலேம் மீது பாய்ந்து விட்டான் பிறகென்ன கண்கண்ட இடமெல்லாம் யூதர்களின் இரத்தம் தான். ஸிலாட்டா...?? தாங்குமா ரோமானியர்களின் பெரும் படையின் முன்னால் அவ்வியக்கத்திலிருந்த அனைவரையும் விண்ணுலகிட்க்கு இலவசமாகவே அனுப்பிவிட்டனர் ரோமானியர்கள். அது மட்டுமா எங்கள் மன்னரையா வழிபட மறுத்தீர்கள் அதற்க்கு காரணமானது இந்த சாலமன் தேவாலயம் தானே..??? இஜேசுவின் தீர்க்க தரிசனம் பலித்தது "சாலமன் தேவாலயம் இடிக்கப்படும்................" முடிவு தெரிந்ததுதான் சாலமன் தேவாலயம் சுற்று சுவர்களுடன் கிபி 70 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.



ஆம் அதன் பின்னர் எஞ்சியது ஒரே ஒரு சுவர் மட்டும் தான் இன்றுவரை யூதர்கள் அந்த சுவரை தான் வணங்கி வருகிறார்கள் (படத்தில் ) என்றாவது ஒரு தேவதூதர் வருவார் சாலமன் தேவாலயத்தை மீண்டும் கட்டிக்கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன்........ கிறிஸ்தவர்கள், ரோமானியர்கள்... இரண்டு எதிரிகளையும் எப்படி சமாளிப்பது...........??? இதோ வழி மீண்டும் ஸிலாட் புரட்சிப் படையை அமைத்து விடலாம் சிந்தித்த யூதர்கள் ரகசியமாக செயற்படவும் ஆரம்பித்துவிட்டார்கள்........ பலஸ்தீனத்திட்க்கு [பாலஸ்தீன் என்று பின்னாளில் அழைக்கப்பட்டது பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பின் ஒரு பகுதிதான் இஸ்ரேல் ஆக்கப்பட்டது.] வெளியே இருந்த யூதர்களும் புரட்சிப் படையை அமைக்க உதவினார்கள். "நாம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட இனம் ஜெருசலேம் கடவுள் எங்களுக்கு அளித்த புனித பூமி.........." இவை தான் யூதர்களின் மனதில் கனற்று கொண்டிருந்தன . விளைவு தெரிந்ததுதான்.... ஆங்காங்கே யூதர்களுக்கும் ரோமானியர்களுக்கும் சிறு சிறு கலவரங்கள் நடந்து கொண்டே இருந்தன.


கிபி 73 ஆம் ஆண்டு மஸதா[MASADA] என்ற இடத்தில் யூதர்கள் இருந்த இடத்தில் ரோமானியர்கள் மேற்கொண்ட கொடூரமான போர் யூதர்களின் வரலாற்றை மேலும் ரத்தமாக்கி விட்டது........ கண்ட இடமெல்லாம் யூதர்களின் பிணம் தான்...... யூதர்களா...???? யார் அவர்கள்...?? என்று பின்னால் வரலாற்றை கேட்க வைப்பது தான் ஒரே நோக்கம் போலிருந்ததாம் அந்த தாக்குதல்...... பெண்கள் பலாத்காரப் படுத்தப் பட்டார்கள்.....பின் கொல்லப்பட்டார்கள் ......ஆண்கள் எம்மாத்திரம் அவர்கள் முதலிலேயே விண்ணுலகம் விஜயம் செய்துவிட்டனர்....... குழந்தைகளின் தலைகளை சீவியதன் மூலம் தான் தங்கள் வாள்களை கூர்மை படுத்திக் கொண்டார்கள். யூதர்கள் வாழ்ந்ததிட்க்கு அவர்கள் வளர்த்த கால்நடைகள் சாட்சியாய் அமைந்து விடக் கூடாதல்லவா..??? கால்நடைகளும் மரணித்தன. அவ்வளவுதான் மஸதா முடிவுற்றது. ஆனால் யூதர்கள் ரோமானியர்களின் விளையடுப் பொருள்தானே........... ஆம் ஜெருசலேம் தான் யூதர்களின் புனித பூமியாயிற்றே........... அங்கிருந்தே அவர்களை அகற்றி விட்டால்.......... பிறகென்ன சிந்தனை செயற்பாடுதான். புனித பூமியிலிருந்து அதன் சொந்தக்காரர்கள் விரட்டப் பட்டார்கள் மறுத்த யூதர்கள் கொல்லப்பட்டார்கள் . யூதர்களின் பிணம் கூட ஜெருசலேமில் இருக்கவில்லை. யூதர்கள் ஓடினார்கள் ஜெருசலேமை சுற்றியுள்ள கடற்கரையோரக் கிராமங்களில் வாழ்ந்த அராபியர்களிடம் தஞ்சம் புகுந்தார்கள்;



பாதை மாறுகிறது.......


இனியும் ரோமானியர்களுடன் மோதினால் அழிவே எஞ்சும் என்றறிந்துவிட்டனர் யூதர்கள். பாதையை மாற்றி விடுவோம் .... ஆம் போராட்ட பாதையிலிருந்து அறிவியல் பாதை.... தீர்மானித்து விட்டார்கள் . அழிந்து செல்லும் தங்கள் இனப் பெருமையை தக்க வைக்க அது ஓன்று தான் வழி எவ்வளவு புனிதமான இனத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்.....அறிவியல் நோக்கிய பயணம் ஆரம்பமாகிவிட்டது. இதற்க்கு வித்திட்டவர் ஜோஹனன் வென்சகாய்[JOHANAN BENZAKKAI] என்னும் யூதத் துறவி. ரோமானிய மன்னனிடம் சென்று யூதர்கள் நாங்கள் எம் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டி கல்வி புகட்ட விரும்புகிறோம் அதற்கு தங்களால் எதுவித இடையூறும் வரக்கூடாது என கூற மன்னனும் சம்மதித்து விட்டான். பிறகென்ன கல்வி புரட்சி ஆரம்பமாயிற்று தோரா எனும் வேதநூலிலிருந்து.......ரபி[RABI] என்றழைக்கப் பட்ட யூதக் கல்வியியலாளர்கள் தங்கள் கடமையை செவ்வனே ஆரம்பித்து விட்டனர். கிபி 70 தொடக்கம் கிபி 115 வரை யூதர்கள் வசித்த எந்த ஒரு பிரதேசத்திலும் புரட்சிகள் பெரிதாக வெடிக்கவில்லை. 

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது.
 உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. 
அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.

ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்செயலாக வந்ததா? அல்லது ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்த திறமையை மனித முயற்சியால் சிருஷ்டி பண்ணிக் கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகள் எனது 2 ஆம் ஆண்டில் அதாவது 1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப வர இருந்தபோது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.
எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.
suran

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட உதவி செய்வேன். அப்போது அவளிடம், “இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?” என்று கேட்பேன். “ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?” என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.
கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை  (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.
மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு  நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.
மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்..
உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.
suran
சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.
இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? உலகின் மிகப் பெரிய சிகரெட் தயாரிப்பாளர்……..யார் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.
முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்ளுகிரார்கள்.
என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் -  ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு  கட்டாயம்
இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.
முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை  படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்..
suran

யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம்  சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும்  மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.
உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள்.
போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.
வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு  முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்;  10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.
இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற லீவாய்ஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு  மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம்.
இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை  (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை  தற்செயல் என்று சொல்லலாமா?
நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடை பெறுகின்றன.
யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக் கடனைப் பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.
2005 இல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். 
இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது. 
ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான். 
சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.
இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். 
 எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள்.
 பலன்? 
suran
லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.
சற்று சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆய்வறிக்கையில் நான் இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.
நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க முடியுமா?

Pancham Shani: The Reason for Financial Losses By Acharya Shashikant


 
In economic matters, Shani Sade Saati and Dhaiya of Saturn are not considered good. During both periods, the possibilities for income loss and expenditure rise are high. Besides this, there is another position of Saturn which extremely influences the economic status of the native, i.e. Pancham Shani.
Pancham Shani occurs when Saturn transits through the 5th house from Moon in the birth chart. Generally, this house gives high education, children and love affairs. Still, through the studies conducted by astrologers, we find that when Saturn transits through the 5th house from the Moon, its effects can be even worse on the economic status of the native than the effects of the Shani Sade ssati or dhaiya of Saturn.
Due to the placement of Saturn’s transit in the 5th house, the native may get engaged in the wrong circumstances, where he may take wrong decisions and lose self-confidence. Therefore, in this situation, he may find it difficult to succeed in his work.
Saturn in the 5th house causes problems for native in education and with their children. This house is also known as the house of past karma. Saturn in this house indicates the wrong deeds that the person may have done in past births.
The reason why Saturn is not considered good in economic matters when it transits through the 5th house, is that in the 5th house Saturn has the 3rd aspect on the 7th house which is the house of “Partnership Ventures”. As a result, the chances of benefic effects reduce, the partnership venture may not produce positive results and the possibilities to be cheated by the business partners also increase.
As Saturn is a malefic planet it causes loss in business, and is a reason for delayed marriage. It also give rise to conflicts in the married life of the native. The aspect of Saturn on this house have malefic effects.
When the seventh aspect of Saturn is on the 11th house it causes a fall in the income of the native and problems in the professional sphere. Saturn through the 11th house can also predict the future rewards and achievements in the native’s business life.
Saturn also affects the relations of the native with his elder brothers. He may not get the just fruit for his hard work and get disappointed. As a result, he loses interest in his work which becomes the main reason for his doom, in that situation his faith on god helps him a lot.
In the 5th house Saturn aspects the 2nd house with its 10th aspect. The 2nd house is known as the house of money and family. Saturn reduces the auspiciousness of the house and results in losses and conflicts in the family. Thus, when Saturn’s transit is through this house the possibilities to reap economic benefits remain a dream for the person for almost 2 1/2 years.
It is also known that until the completion of 2 1/2 years, he may take heavy loans which make the situation worse. However, just as the period of Shani Sade saati or Shani Dhaiya in some cases can give benefic results, similarly, Pancham Shani can also be benefic. But to expect benefit from Saturn alone is just like trying to find stars in the day.

A Basic Knowledge About The Sim Card



Sim Cards Are Of 4 Types..Named
As Below
H1
H2
H3
H4
H ka Matlab Nai Malum
H1= U Will Get Noraml Network On
This Sim
H2= U Will Get Better Network On
This Sim Means Strong
H3= U Will Get More Better
Network On This Sim Means
Stronger
H4= Normal, Better, More Better Is
Nothing In Front OF This Sim
Agr Tum Aise Area Me Ho Jaha
Tower Na Ho Bt Paas K Tower Ka
Weak Signal Ho Than Also You Will
Get Some Bar Of Network On H4
Sim
Means You Will Get The Strongest
NetWork On This Sim
Basicaly H4 Sim Ginechune LogoKo
Milta Hai
like
Corporate Sim
Army Peoples
Etc
Bt Some Comapny Also Provide
This To Normal People Also
Why Comapany Doesn't
ProvideThis Sim To all User
Because This Sim eat More
bandwidth
So How To Know That Wich Type
Of Ur Sim is??
Just Chk Its Back Side

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விருது


வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்தை ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விருதுக்காக அனுப்பி வைக்க இந்திய அரசு முடிவு செய்தது. விழா நடந்த எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்கு சிவாஜி அவர்கள் சென்றார்கள். அவருடன் பி.ஆர். பந்துலு, பத்மினி ஆகியோரும் சென்று கலந்துக் கொண்டனர். சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த நடன கலைஞர், சிறந்த கதை என்று பல விருதுகள் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக மேடைக்கு சிவாஜி கணேசன் சென்றபோது எல்லோரும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ந்து கைதட்டி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்.

இந்த படத்தின் மூலம் எகிப்து மக்களிடம் இருந்து தனக்கு கிடைத்த மரியாதை மதிப்பும் அன்பும் சிவாஜி தொடர்ந்து தக்க வைத்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக சென்னை வந்த எகிப்து அதிபர் நாசருக்கு வரவேற்ப்பு வழங்கும் அளவிற்கு அவர் அந்த மக்களிடையே புகழ் பெற்று விளங்கினார்.

சென்னை வந்த எகிப்து அதிபர் நாசருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!!!

VERY RARE PICTURE Swami Vivekanand on Dias at First Religions Parliament, Chicago, 1893

Wide Sai Mantra

Friday, September 21, 2012

Another RARE pic of SUBASH sir!!!!!

பழந்தமிழரின் கடல் மேலாண்மை”




சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ்ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரி...
ன் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன்.

தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம். ’கலிங்கா பாலு’ என்னும்கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-

கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்) RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம்கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின்பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:
தமிழா- மியான்மர்
சபா சந்தகன் – மலேசியா
கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா
கடாலன் – ஸ்பெயின்
நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்
சோழா, தமிழி பாஸ் – மெக்சிகோ
திங் வெளிர்- ஐஸ்லாந்து
கோமுட்டி- ஆப்ரிக்கா
இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும்பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.

இன்னொரு சுவாரஸ்யிமானவிஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தைதமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில்நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!! பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.

Tamil bell Found in New Zealand
நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ்எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/wiki/Tamil_bell
 
சொடுக்கவும்.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.

இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது. கலிங்க பாலு அவர்கள் எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இப்போது தான் ஒரு நிறுவனம் நிறுவி அவருடைய ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார். இது பற்றிய ஆர்வமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம். அவருடைய இமெயில் முகவரி - kalingatamil@yahoo.co.in
நான் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் என்னை வருத்தப் பட வைத்த விஷயம், அரங்கம்நிறைய தமிழ் ஆர்வலர்கள் குழுமியிருந்தனர். ஆனால் பெரும்பாலும் நரைமுடிகளையே காண முடிந்த்து. மொத்தமே 10 இளைஞர்களே என் கண்ணில் பட்டனர். அதிலும் மூவர் ஒலி ஒளிஅமைப்பாளர்கள்.

நண்பர்களே நான் அந்நிகழ்ச்சி முடிந்ததும் அதன் ஒருங்கினைப்பாளர்களிடமும் கலிங்க பாலுவிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடிய போது Facebookகில் நம் சங்கத்தை பற்றியும் நம்முடைய தமிழார்வத்தை பற்றியும் விளக்கி நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வதாக சொன்னேன். அதற்கு அவர்கள் சந்தோஷப் பட்டு ஒரே ஒரு உதவி மட்டுமே கேட்டனர். இளைஞர்களிடம் அதுவும்குறிப்பாக தமிழில் பேசுவதையே இழுக்காக கருதும் இளைஞர்களிடம்இந்த தகவல்களை கொண்டு செல்ல உதவ வேண்டும் என்றார்கள்.
நம்மால் முடிந்தவரை இந்த தகவலை பகிர்ந்து நம்முடைய வரலாற்றை பலருக்கு கொண்டு செல்லுவோம்.
 —

அருகம்புல் சாறின் மருத்துவ குணம்!!



தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

1.நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

3.வயிற்றுப் புண் குணமாகும்.

4.இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

5.நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

6.சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

7.நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

8.மலச்சிக்கல் நீங்கும்.

9.புற்று நோய்க்கு நல்ல மருந்து.

10.உடல் இளைக்க உதவும்

11.இரவில் நல்ல தூக்கம் வரும்.

12.பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

13.மூட்டு வலி நீங்கும்.

14.கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

15.நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும்.
இதன் ஆங்கில பெயர் Cynodon doctylon ஆகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து.

உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.

சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்