Search This Blog

Saturday, December 31, 2011

தொகாநிலைத் தொடர்மொழி, தொகைநிலைத் தொடர்மொழி - ஒரு பார்வை



முன்னுரை 
                  தமிழ் இலக்கணிகள் தொகை இலக்கணத்திற்கு அளித்துள்ள முதன்மையைக் கருதினால் அதன் சிறப்பினை நாம் உணர முடியும். தொல்காப்பியர் தொகை இலக்கணம் பற்றி எச்சவியலிலும், நன்னூல் இலக்கண விளக்கம் பொதுவியலிலும், முத்துவீரியம் ஒழிபியலிலும், தொன்னூல் தொகை நிலைத் தொடர்மொழி பெயரியல் என்பதிலும், சுவாமிநாதம் எச்ச மரபிலும் கூறுகின்றன. வீரசோழியத்திலும் பிரயோக விவேகத்திலும் தனிப் படலங்கள் அமைந்துள்ளன. இது தொகைக்குரிய சிறப்பை உணர்த்துகின்றது.

தொகை
  மொழி என்பது ஒரே கருத்தைப் பலவேறு வகைகளில் சொல்லும் பண்பு கொண்டது. அக்கா ஒருவளும் தங்கை ஒருவளும் வரும் போது அக்காவும் தங்கையும் வந்தனர் எனக் கூறலாம். ஆனால் இவ்வாக்கியத்தை, அக்கா தங்கையர் வந்தனர் என்றும் கூறலாம். முன்னதில் விரிந்த நிலையில் உம் இடைச்சொற்கள் தொகாமல் உள்ளன. எனவே இவ்வாறு தொகாமல் வரும் அத்தொடரை தொகா நிலைத் தொடர் என்றும் தொக்கு வரும் நிலையைத் தொகை நிலை என்றும் குறிப்பிடலாம்[1] என்கிறார் முனைவர் ச.அகத்தியலிங்கம். மேலும் இரண்டாவதில்  உம்மைச் சொற்கள்  தொக்கு (மறைந்து) வருவதால் அத்தொடரைத் தொகை நிலைத்தொடர், அல்லது தொகை என்றும் அந்நிலையைத் தொகை நிலை என்றும்  குறிப்பிடுகிறார்.
  சொல் ஒன்றனோடு ஒன்று பொருட் பொருத்தமுறத்தொடர்வது தொடர்[2] என விளக்குகிறார் தனது நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலில் அ.கி.பரந்தாமனார்.  இரு சொற்கள் இருந்து நடுவில் எச்சொல்லும், பொருள் கொள்ளும்போது மறையாதிருந்தால் தொகா நிலைத் தொடர் எனப்படும். கவிதா உண்டாள் என்னும் இத்தொடரில் நடுவில் ஒன்றும் மறைந்திருக்கவில்லை. எனவே, இது தொகா நிலைத்தொடர் எனப்படுகிறது. ஆனல், பால் அருந்தினாள் என்னும் இத்தொடரில் பாலை அருந்தினாள் என்று பொருள்படுவதால்  உருபு மறைந்திருக்கிறது. ஆதலால், பால் அருந்தினாள் என்பதைத் தொகை நிலைத் தொடர் என்கிறோம்.
  தொகா நிலைத்தொடரில் இரு சொற்களின் நடுவில் ஒன்றும் மறைந்திருக்காது. தொகைநிலைத் தொடரில் ஏதாவது மறைந்திருக்கும். இரண்டும் தொடர்களாக இருப்பதால் வேறுபாடு காட்டும் பொருட்டுச் சுருக்கமாகத் தொகாநிலைத் தொடரைத் தொடர் என்றும் தொகைநிலைத் தொடரைத் தொகை என்றும் கூறுவர்[3]என்கிறார் அ.கி.பரந்தாமனார்.  



தொகைநிலைத் தொடர்கள்
      பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
   முதலிய பொருளின் அவற்றின் உருபிடை
   ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்தொரு
   மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல்(361)[4]
  பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் பெயர்ச் சொல்லும் சேரும் தொடரில் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை பண்பு, உவமை முதலியவற்றின் உருபுகளோ மறைந்து (தொக்கு) நிற்குமானால் அது தொகைநிலைத் தொடர் எனப்படும். இதனைத் தொகை என்றும் சுருக்கமாகக் கூறுவர். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, வினைச் சொல்லோடு வினைச் சொல் சேர்ந்து தொகைநிலைத் தொடர் அமைவதில்லை என்பதாகும்.
  வேற்றுமை வினைபண்பு உவமை உம்மை
   அன்மொழி என அத் தொகை ஆறு ஆகும் (362)[5]
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத்தொகை,அன்மொழித் தொகை என்பவையாகும். அன்மொழித் தொகையாவது வேற்றுமைத் தொகை, வினைத் தொகை,பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை ஆகிய ஐந்து தொகைநிலைத் தொடர்களுக்கும் புறத்தே அவையல்லாத பிறமொள் மறைந்து வருவதாகும்[6] என தமது பயன் தரும் இலக்கணம் என்ற நூலில் குறிப்பிடுகிறார் புலவர் செந்துறை முத்து.
  வேற்றுமைத் தொகை
     இரண்டு முதலாம் இடை ஆறு உருபும்
      வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே (363)[7]
இதில் இரு பிரிவுகள் உண்டு. ஒன்றில் வேற்றுமை உருபு  மட்டும் மறைந்து வருவது வேற்றுமைத் தொகை எனப்படும். மற்றொன்றில் உருபுடன் பயனும் சேர்ந்து வருவதால் உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.
     திருக்குறள் படிக்கிறாள்.
இத்தொடர் திருக்குறளைப் படிக்கிறாள் என விரிந்து நின்று பொருளை உணர்த்துகிறது. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள தொடரிலுள்ள இரு சொற்களுக்கும் இடையில் அப்பொருளைத் தரக்கூடிய  என்னும் வேற்றுமை உருபு வரவில்லை. அது தொக்கி (மறைந்து) நின்று பொருளை உணர்த்துகிறது.
     இவ்வாறு ஒரு தெடரில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் உணர்த்துவதை வேற்றுமைத் தொகை என்று கூறப்படும்.
     பால் அருந்தினான் – (ஐ) – இரண்டாம் வேற்றுமைத் தொகை
     தலை வணங்கினான் – (ஆல்) – மூன்றாம் வேற்றுமைத் தொகை
     பள்ளி சென்றாள் – (கு) – நான்காம் வேற்றுமைத் தொகை
     சிறை நீங்கினான் – (இன்) – ஐந்தாம் வேற்றுமைத் தொகை
     அழகன் நூல் – (அது) – ஆறாம் வேற்றுமைத் தொகை
     மலைவாழ்வோர் – (கண்) – ஏழாம் வேற்றுமைத் தொகை
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுயில்லாததால், அவற்றிற்குத் தொகையும் இல்லை எனப்படுகிறது.
உருபும் பயனும் உடன் தொக்க தொகை
           தேர்ப்பாகன்
           இத்தொடர் தேரை ஓட்டும் பாகன் என விரிந்து பொருளை உணர்த்துகிறது. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில்  என்னும் வேற்றுமை உருபும், ஓட்டும் என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன. இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும், அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.
     காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை (364) [8]
     தேர்ப்பாகன் – (தேரை ஓட்டும் பாகன்) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
     பொன்வளையல் – (பொன்னால் செய்த வளையல்) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க கொகை.
     தலைவலி மருந்து – (தலைவலிக்குத் தரும் மருந்து) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
     குழாய்த்தண்ணீர் – (குழாயிலிருந்து கிடைக்கும் தண்ணீர்) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
     காட்டுப் புலி – (காட்டின் கண் வாழும் புலி) ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. ஆனால் இன்றைய சூழலில் கண் என்கிற ஏழாம் வேற்றுமை பயனில் இல்லை. இன்றைய வழக்கில் காட்டில் வாழும் புலி என்றே ஐந்தாம் வேற்றுமை உருபான இல்பயன்படுத்தப்படுகிறது. இந்த இல் என்பது இன் னின் திரிபாகப் பிற்காலத்தில் புதிதாகப் புகுந்த ஓர் உருபாகும்[9]எனத் தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு என்ற நூலில் குறிப்பிடுகிறார் சு. பாலுசாமி.
வினைத்தொகை
     குடிநீர், விரிகடல்
     குடி, விரி என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே நீர், கடல் என்னும் பெயர்ச் சொற்களோடு சேர்ந்து பெயரெச்சங்களாயின. மேலும் இவை குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர் எனவும் விரிந்த கடல், விரிகின்ற கடல்,விரியும் கடல் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன. காலங்காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.
     இவ்வாறு காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகைஎனப்படும். காலம் கடந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும். இதில் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச் சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும் என்பதாகும்.
     மேலும் சில எடுத்துக் காட்டுகள் –
     கடிநாய், சுடுகாடு, கொல் களிறு, ஆடுகளம், ஓடு தளம்
பண்புத்தொகை
     செந்தாமரை – செம்மையாகிய தாமரை
     வட்டக்கல் – வட்டமான கல்
     இன்சொல் – இனிமையான சொல்
     இத்தொடர்களிலுள்ள செம்மை, வட்டம், இனிமை என்பன பண்புப் பெயர்கள். இவ்விரண்டிற்குமிடையில் ஆகிய,ஆன என்னும் பண்புருபுகள் தொக்கி வருகின்றன. அவற்றுடன் மை என்னும் பண்பின் விகுதியும் மறைந்து வந்துள்ளன.
     இவ்வாறு பண்புப் பெயருக்கும், அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையில் மை என்னும் பண்பு விகுதியும் , ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத் தொகை எனப்படும்.
     பண்புத் தொகையையும் வண்ணம், வடிவம், அளவு,சுவை ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து நிற்பர் இலக்கணிகள் [10] எனச் சுட்டுகிறார் முனைவர் ச. அகத்தியலிங்கம்.
     செங்கல் – நிறம்
     இத்தொடர் செம்மையாகிய கல் என விரிந்து பொருள் தருகிறது. இதிலுள்ள செம்மை பண்பு நிறத்தைக் குறிப்பதாகும். இதனை வண்ணப்பண்புத் தொகை என்பர்.
     வட்டத்தட்டு – வடிவம்
     இத்தொடர் வட்டமானதட்டு எனப் பொருள் தருகிறது. வட்டம் என்னும் பண்புப் பெயர் வடிவத்தைக் குறிப்பதால் இதனை வடிவப் பண்புத் தொகை எனக் கூறுவர்.
     முத்தமிழ் – எண்
     இத்தொடர் மும்மையாகிய தமிழ் என விரியும். மும்மை என்னும் பண்புப் பெயர் எண்ணிக்கையாகிய அளவைக் குறிப்பதாகும். எனவே இதனை அளவுப் பண்புத் தொகை என வழங்குவர்.
     உவர்நீர் – சுவை
     இத்தொடர் உவர்ப்பான நீர் எனப் பொருள் தருகிறது. உவர்ப்பு என்னும் பண்புப் பெயர் சுவையைக் குறித்தலால் இது சுவைப் பண்புத் தொகை எனப்படும்.
    

பண்பை விளக்கும் மொழிதொக் கனவும்
      ஒரு பொருட்கு இருபெயர் வந்தவும் குணத்தொகை(365)[11] என்கிறார் நன்னூலார்.
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
     தமிழ்மொழி
     இத்தொடர் தமிழாகிய மொழி என விரிகிறது. மொழி என்பது அனைத்து மொழிகளையும் சுட்டும் பொதுப் பெயராகும். தமிழ் என்பது பல மொழிகளுள் ஒன்றாகிய தமிழைக் குறிப்பாகச் சுட்டுவதால் சிறப்புப் பெயராகும். இவ்விரு சொற்களுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளது.
     இவ்வாறு சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று, இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கு வருவது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.
உவமைத் தொகை
     உவம உருபுஇலது உவமைத் தொகையே (366) [12]
முத்துப் பல்
     இத்தொடர் முத்துப் போன்ற பல் எனப் பொருள் தருகிறது. முத்து – உவமை; பல் உவமிக்கப்படும் பொருள் (உவமேயம்). இவ்விரண்டிற்கும் இடையே போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
     இவ்வாறு உவமைக்கும் பொருளுக்கும் இடையில் போல்,, போன்ற, நிகர, அன்ன என்னும் உவம உருபுகளுள் ஒன்று தொக்கு நிற்க வரும் தொடர் உவமைத் தொகை எனப்படும்.
     மேலும் சில எடுத்துக் காட்டுகள் –
(மதிமுகம், மலரடி, தேன்மொழி, கமலக்கண்,கயல்விழி)
கவிதைகளிலும், திரையிசைப் பாடல்களிலும் இந்த உவமைத் தொகை இன்றளவும் நிரம்பவே பயனில் உள்ளது எனலாம். குழந்தையும் தெய்வமும் எனும் திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசனின் வரிகளில்,
     அன்புள்ள மான்விழியே
      ஆசையில் ஒரு கடிதம் எனவும்,
ரோஜா எனும் திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில்,
     புது வெள்ளைமழை இங்கு பொழிகின்றதே எனவும் உவமைத் தொகைகள் கையாளப்பட்டுள்ளதை அறியலாம்.    
     இந்த உவம உருபுகளை நன்னூலார் இப்படிக் கூறுகிறார்.
போலப் புரைய ஒப்ப உறழ
       மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
       நேர நிகர அன்ன இன்ன
       என்பவும் பிறவும் உவமத்து உருபே (367) [13]
உம்மைத் தொகை
     அண்ணன் தம்பி
     ஆடு மாடு
     தாய் தந்தை
     இத்தொடர்கள் முறையே அண்ணனும் தம்பியும்,ஆடும் மாடும், தாயும் தந்தையும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. ஆனால் சொற்களுக்கு இடையிலோ அல்லது இறுதியிலோ உம் என்னும் இடைச் சொல் இல்லை. அது தொடரின் இடையிலும் இறுதியிலும் மறைந்து நின்று பொருளை உணர்த்துகின்றது.
     இவ்வாறு இரு சொற்களுக்கிடையிலும் இறுதியிலும்உம் என்னும் இடைச்சொல் தொக்கு வருவது உம்மைத் தொகை எனப்படும். உம்மைத் தொகை எண்ணல், எடுத்தல்,முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.
     வெற்றிலைபாக்கு – வெற்றிலையும் பாக்கும் (எண்ணல் உம்மைத் தொகை)
     மூன்று கிலோ, நூறு கிராம் – மூன்று கிலோவும் நூறு கிராமும் (எடுத்தல் உம்மைத் தொகை)
     இரண்டே கால் லிட்டர் – இரண்டு லிட்டரும் கால் லிட்டரும் (முகத்தல் உம்மைத் தொகை)
     ஐந்தடி, நான்கு அங்குலம் – ஐந்து அடியும் நான்கு அங்குலமும் ( நீட்டல் உம்மைத் தொகை)
இதனையே நன்னூலார்,
     எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
      எனும் நான்கு அளவையும் உம் இலது அத்தொகை(368) [14]
என்கிறார்.
அன்மொழித் தொகை
     ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி(369)[15] 
பூங்குழல் வந்தாள்
     இத்தொடரில் முதலில் உள்ள பூங்குழல் என்னும் சொல் பூவை அணிந்த கூந்தல் என்னும் பொருளைத் தரும் இரண்டாம் வேற்றுமை உருபும், பயனும் உடன் தொக்க தொகையாகும். இத்தொடர் வந்தாள் என்னும் வினைச் சொல்லைத் தழுவி நிற்பதால், பூவை அணிந்த கூந்தலை உடைய பெண் வந்தாள் எனப் பொருள் பெறப்படுகிறது.உடைய பெண் என்பது இத்தொடரில் இல்லாத மொழியாகும். இவ்வாறு வேற்றுமைத் தொகையை அடுத்து அல்லாத மொழி தொக்கு நிற்பதால் இத்தொடர் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
     இவ்வாறு ஐந்து வகையான (வேற்றுமை, வினை,பண்பு, உவமை, உம்மை) தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கு நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை எனப்படும். (குறிப்பு – அன்மொழி; அல்லாத மொழி – வேற்றுமை உருபுகள், பண்பு,உவம உருபுகள், உம் என்னும் இடைச் சொல் என்ற இவை அல்லாத வேறு மொழிகள் என்பது இதன் பொருள்)
     பொற்கொடி நடந்தாள் – பொன்னால் ஆகிய கொடியின் தன்மை கொண்ட பெண் நடந்தாள். மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும்.
     சுடுகதிர் எழுந்தான் – சுடுகதிர் – வினைத் தொகை. சுடுகின்ற கதிரை உடைய சூரியன் எழுந்தான். வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
     இன்மொழி சொன்னான் – இன்மொழி – பண்புத் தொகை. இனிய மொழி பேசும் ஆண் சொன்னான். பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
     தேன்மொழி நகைத்தாள் – தேன்மொழி – உவமைத் தொகை. தேன் போன்ற மொழி உடையாள். உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
     உயிர்மெய் எழுத்து – உயிர்மெய் – உம்மைத்தொகை. உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த எழுத்து. உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
தொகா நிலைத் தொடர்
            மழை பெய்தது.
     மயில் ஆடியது.
     முதல் தொடரில் மழை என்னும் எழுவாயும்பெய்தது எனும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறு சொல் வேண்டாது பொருள் உணர்த்துகின்றன.
     அதே போன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும்,பயனிலையும் தொடர்ந்து நின்று மயில் ஆடியது என்னும் பொருளைத் தருகின்றன.
     இவ்வாறு ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருந்து, அவற்றின் இடையில் எந்தச் சொல்லோ உருபோ மறையாது, பொருளை உணர்த்துவது தொகா நிலைத் தொடர் எனப்படும்.
     முற்றுஈ ரெச்சம் எழுவாய் விளிப் பொருள்
      ஆறுருபும் இடை உரி அடுக்கிவை தொகாநிலை (374)[16]
     இத்தொகா நிலைத் தொடர் எழுவாய்த் தொடர்,விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர்,வினையெச்சத் தொடர், வேற்றுமைத் தொகா நிலைத்தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர்,அடுக்குத் தொடர் என ஒன்பது வகைப்படும்.
     கந்தன் எழுதினான் – இதில் கந்தன் என்னும் எழுவாயைத் தொடர்ந்நு எழுதினான் என்னும் பயனிலை அமைந்துள்ளது. இதனை எழுவாய்த் தொடர் என்பர்.
     மழையே வா! – இத்தொடர் மழையை விளிப்பதால் (அழைப்பதால்) விளித்தொடர் எனப்படும்.
     வந்தார் அமைச்சர் – இதில் வினை முற்று முதலில் நின்று பெயரைத் தொடர்கிறது. இதற்கு வினை முற்றுத் தொடர் என்பது பெயர்.
     தெரிந்த இடம் – இதில் தெரிந்த எனும் எச்சவினை இடம் என்னும் பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளதால் இது பெயரெச்சத் தொடர் எனப்படும்.
     கூடி மகிழ்ந்தனர் – இத்தொடரில் கூடி என்னும் எச்சவினை மகிழ்ந்தனர் என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது. இதனை வினையெச்சத் தொடர் என்பர்.
     பாடத்தைப் படித்தான் – இத்தொடரில்  என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக நின்று பொருளை உணர்த்துகிறது. இது வேற்றுமைத் தொகா நிலைத் தொடர் எனப்படும்.
     மற்றொன்று - மற்று + ஒன்று – இதில் மற்று என்னும் இடைசொல்லை அடுத்து ஒன்று என்னும்    சொல் நின்று பொருள் தருவதால் இதனை இடைச்சொல் என்பர்.
     கடிமணம் – கடி என்பது உரிச்சொல், இதைத் தொடர்ந்து மணம் எனும் சொல் வந்துள்ளது. இது உரிச்சொல் தொடர் எனப்படும்.
     பாம்பு! பாம்பு! பாம்பு! – ஒரே சொல் அச்சத்தின் காரணமாகப் பலமுறை அடுக்கி வந்துள்ளது. இது அடுக்குத் தொடர் என வழங்கப்படும்.


தொகை – தமிழ் இலக்கணிகளின் சிந்தனை
தொகு என்ற சொல்லின் அடையாகத் தொகைஎன்ற சொல் உருப்பெற்றது; அது உணர்த்தும் பொருள் அடிப்படையில் தொகைக்கோட்பாடு உரைக்கப்பெற்றது. இக்கோட்பாட்டைத் தொல்காப்பியர் முதலான இலக்கண ஆசிரியர்கள் எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பது இனிச் சிந்திக்க வேண்டியது [17] என்கிறார் சு. பாலுசாமி. மேலும் தொக்கு வருவது தொகை என்றால் உருபு தொக வருதல் தொகையா? பொருள் தொக வருவது தொகையா? என வினா எழுப்புகிறது என்கிறார்.
வேற்றுமைத் தொகை குறித்துக் கூறும் தொல்காப்பியர்,
வேற்றுமைத் தொகையே வேற்றுமையியலஎன்று சுட்டுகிறார். இவ்வாறு சுட்டுவதைக் கருத்தில் கொண்டால் பொருளும் உருபும் தொக்கி வருவதையே தொல்காப்பியர் தொகையெனக் குறித்தார் எனலாம்.
நன்னூலார், இரண்டு முதலா யிடையாறுருபும்எனக் கூறுவது உருபாகிய புறநிலைக்கு முதலிடம் தந்து கூறுவதாகும். பிற்கால இலக்கண நூல்கள் இக்கொள்கையைப் பின்பற்றுகின்றன.
தொக்கு வருவது தொகை என்பதோடு மட்டுமன்றி தொகுத்துக் கூறுவது தொகை என்றும் கூறலாம். யானை கொன்றது, யானை கொல்லும் என்ற தொகை விரிகளைக் கொன்ற யானை,கொல்லும் யானை என வகையாக்கிக் கொல்யானை எனத் தொகையாயிற்று என்று சொல்லலாம் என தமது தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு என்ற நூலில் கூறுகிறார் சு. பாலுசாமி.
தொகையின் வகையினை எல்லா இலக்கண ஆசிரியர்களும் ஆறு என்றே கொள்கின்றனர். இவ்வாறனுள், வேற்றுமைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை என்ற நான்கே தமக்கென உருபு உடையன. வினைத் தொகைக்கும், அன்மொழித் தொகைக்கும் உருபு இல்லை. உருபு இல்லாத இவ்விரண்டும் தொகை என்று கூறப்படுவதால் உருபு தொகுதல் என்னும் இலக்கணம் தவறுபடுகிறது [18] எனக் கூறுகிறார். 
முடிவுரை
          எந்த ஒரு மொழிக்கும் அரணாக அமைவது அம்மொழிக்கு அமைந்த இலக்கணமாகும். தமிழ் மொழியின் முதல் இலக்கணமாகிய தொல்காப்பியம் முதன்மையாகத் திகழ்வதால் தமிழ் அன்றும் இன்றும் என்றும் செம்மையான இலக்கணங்களைப் பெற்று எக்காலமும் இளமையுடன் திகழ்கிறது. தமிழுக்கு வரம்பான இலக்கண நூல்கள் இருப்பதால் அது நெகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் பரவ இயலவில்லை. அதே நேரத்தில் இலக்கண நூல்களின் பிடிப்பால் தமிழின் கட்டமைப்பு எளிதில் சீர்குலையும் வாய்ப்பில்லை.
                                          


துணை நூல்கள்
1.       நன்னூல் சொல்லதிகாரம், தமிழண்ணல்,இரண்டாம் பதிப்பு 2008, தமிழ்மொழிப் பயிலகம்,மதுரை.
2.       நன்னூல் சொல்லதிகாரம், சோம. இளவரசு,மூன்றாம் பதிப்பு, மணிவாசகர் பதிப்பகம்,சென்னை.
3.       நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, அ.கி.பரந்தாமனார். மறுபதிப்பு 2007, பாரி நிலையம், சென்னை.
4.       தமிழ்மொழி அமைப்பியல்ச. அகத்தியலிங்கம்,முதற்பதிப்பு 2002, மெய்யப்பன் தமிழாய்வகம்,சிதம்பரம்.
5.       தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு, சு. பாலுசாமி,2007, திருக்குறள் பதிப்பகம், சென்னை.
6.       பயன் தரும் இலக்கணம், புலவர் செந்துறை முத்து,1995, விசாலம், சென்னை.


    
               




  
              


[1] சு.அகத்தியலிங்கம், தமிழ்மொழி அமைப்பியல், பக். 105
[2] அ.கி.பரந்தாமனார்,நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, பக். 119
[3] அ.கி.பரந்தாமனார், நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, பக். 119
[4] சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 83
[5]  சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 83

[6] செந்துறை முத்து, பயன் தரும் இலக்கணம், பக். 45
[7] தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 175
[8]  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக்.176
[9] சு. பாலுசாமி, தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு, பக். 50
[10]  ச. அகத்தியலிங்கம், தமிழ் மொழி அமைப்பியல், பக். 111
[11]  சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 85
[12]  சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 86


[13]  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 178 - 179
[14]  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 178 – 179
[15]  சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 88


[16]  சோம.இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 92
[17]  சு. பாலுசமி, தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு, பக். 70
[18]  சு. பாலுசமி, தொல்காப்பிய வேற்றுமைக் கோட்பாடு, பக். 72

கவிதைக் கலை



ஒரு கவிதை இருக்க வேண்டும்
உணர முடிவதாய்
உருண்டு திரண்ட பழம் போல
மௌனமாய் பேச்சற்று

புராதனப் பதக்கங்கள்
கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்
பாசி வளர்ந்து படிந்தகைப்பகுதிகளால்
தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்போல
மௌனமாய் ஒரு கவிதை
வார்த்தையற்றிருக்க வேண்டும்

பறவைகளின் பறத்தல் போல
நிலா உயர்வதைப் போல்
காலத்தினுள் கவிதை
இயக்கமில்லாதிருக்க வேண்டும்

இரவு பின்னலிட்ட மரங்களை
குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக
நிலாவிடுவிப்பது போல

பனிக்காலத்து இலைகளின்
பின்புறமிருந்து நிலா
ஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல
ஒரு கவிதை
காலத்தினுள் சலனமில்லாதிருக்க வேண்டும்

நிலா உயர்வது போல்
ஒரு கவிதை சமானமாய் இருக்க வேண்டும்
நிஜத்திற்கு இணையாய் அல்ல
எல்லாத் துயரத்திற்கும்ஒரு வெற்று வாசலைப் போல

மேப்பிள் மர இலையைப் போல
காதலுக்கு தலைசாயும் புற்கள்
மற்றும்
கடலுக்கு மேலாக
இரணடு வெளிச்சங்களைப் போல
ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது

இருக்க வேண்டும்
கவிதையாக.-

---ஆர்க்கிபால்ட் மேக்லீஷ் [Archibald Macleish] (அமெரிக்கா)Archibald MacLeish 

பேஸ்புக்கின் Chat messanger மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு




சமூக தளங்களில் முதல் இடத்தில் இருப்பது பேஸ்புக் இணையதளம். உலகம் முழுவதும் 800 மில்லியன் வாசகர்களை கொண்ட மிகப்பெரிய சமூக இணையதளம்.
இந்த தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது. இப்பொழுது இந்த நிறுவனம் புதிய Chat messanger இலவச மென்பொருள் ஒன்றை வெளிட்டுள்ளது.
Chat messanger மென்பொருள் மூலம் பேஸ்புக் தளத்திற்கு செல்லாமலே கணணியில் இருந்தே வாசகர்களிடம் அரட்டை அடிக்கலாம், உங்கள் நண்பர்கள் புதிதாக பகிர்ந்த பதிவுகளை காணலாம் மற்றும் உடனுக்குடன் notifications காணலாம்.
இந்த மென்பொருளை விண்டோஸ் 7 கணணிகளில் மட்டுமே நிறுவ முடியும். இதற்க்கு முன்னர் மூன்றாம் தர மென்பொருளே chat செய்ய இருந்தது. இப்பொழுது பேஸ்புக் நிறுவனமே இந்த மென்பொருளை வெளியிட்டது.
இதற்கு முதலில் இந்த Facebook Messenger லிங்கில் கிளிக் செய்து பேஸ்புக் தளத்திற்கு சென்று அங்கு உள்ள one-time setup என்ற லிங்கை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
மென்பொருள் தரவிறக்கம் ஆகி முடிந்ததும் உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவியவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
அதில் Login என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு விண்டோ வரும், அதில் Keep me Logged in என்ற பட்டனை அழுத்தவும்.
அவ்வளவு தான் உங்கள் நண்பர்களில் ஓன்லைனில் இருப்பவர்களை இந்த மென்பொருள் காட்டும். அதில் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம் மற்றும் ஒரே விண்டோவில் பல பேருடன் அரட்டை அடிக்கும் வசதியும் இதில் உள்ளது.

அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்


இரைப்பையும், சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம்.
செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.
குடல் புண் தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
செய்ய வேண்டியவைகள்: குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், அதிக தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம்.
யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும்.
முறையாக இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும். வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும். மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது.
குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடும்.

The Sword of Devotion




Hanuman meditating“Or I think that maybe she was taken to Ravana's home and is crying very softly there like a caged myna. How can that wife of Rama, who is born in Janaka's family and has a slender waist and eyes like lotus petals, come under Ravana's control? Whether Janaka’s daughter is spoiled, lost, or dead, it is not possible for me to tell Rama, for she is His dear wife.” (Hanuman, Valmiki Ramayana, Sundara Kand, 13.15-17)
athavā nihitā manye rāvaṇasya niveśane ||
nūnam lālapyate mandam panjarasthā iva śārikā |
janakasya kule jātā rāma patnī sumadhyamā ||
katham utpala patra akṣī rāvaṇasya vaśam vrajet |
vinaṣṭā vā pranaṣṭā vā mṛtā vā janaka ātmajā ||
rāmasya priya bhāryasya na nivedayitum kṣamam |
“Do this; do that. Take care of this responsibility; make sure not to forget to do that. What happens if I fail in this task, how will I survive? What if this particular event doesn’t go my way, will I be able to handle the loss? Will others around me be able to deal with the sudden turn of events?” In a realm governed by illusion, man is enveloped by a fearing attitude, knowing full well that everything he is accustomed to having in his surrounding environment can be taken away within seconds. Rather than accept his position that is insignificant in comparison to the larger forces operating in nature, man’s tendency is to try to get a handle on everything by asserting even more control over events. But pretty soon, the possible outcomes can become too much for the mind to handle. Even the dearest servants of the Supreme Lord are not immune to being overwhelmed within the mind, but because their consciousness is focused in the right area, they are eventually able to figure out the proper course of action, to see to it that the situation ends well.
“Is it possible for consciousness to be directed towards an improper place?” Certainly it is, and this shouldn’t be that difficult to understand. If I have a major project due in a class I am enrolled in, my focus of attention should be on the completion of that task. To meet that objective, I have to do preparation work, research, and the actual implementation, followed by a thorough review. This must all be done within the time constraints allotted for the task. The organization, time management, and steadiness of mind are of paramount importance.
dog taking napNow, instead of focusing on the project, let’s say that my consciousness were to drift towards other engagements, things that would help lengthen my procrastination. The nap is the most appealing outlet in such situations. When we fall asleep at night, there is some pressure to wake up at a certain time in the morning. If, after lying in bed for a few hours, we still haven’t fallen asleep, the mind starts to worry. “If I don’t fall asleep right now, at this very instant, I’m going to be tired when I wake up in the morning. Then I won’t be able to do anything properly throughout the day.” The nap, on the other hand, is by definition meant to be an escape from pressure. The nap is an unscheduled period of rest, where there is no set time for falling asleep or waking up. Now, imagine if you have something very pressing that needs to get done. In this situation, the escape that is the nap will be enjoyed even more.
If my consciousness is focused on sleep when it needs to be fixed on the project due in my class, obviously the chances of completing the task on time and in a proper manner will be reduced. Similarly, in the struggle for existence, if the mind remains wrapped around tasks which have been previously completed many times successfully, the bigger picture, the ultimate goal in life, will remain far, far away. On the other hand, when keeping the mind fixed on the Supreme Person, the object of energy from which all energy manifestations emanate, even a temporary setback in a prioritized engagement can be beneficial.
How does this work exactly? For starters, we know from our past experiences that we made it through difficult tasks, jobs that we worried about throughout the implementation. We can take something as simple as graduating from high school to be reminded. For those who passed high school, there were many years of courses and homework assignments to complete. Surely there was pressure felt in the periods of time preceding many of these tasks, yet somehow we made it through just fine. We worried about what might happen if we didn’t succeed, but eventually success was found anyway.
graduationSince the mind is so forgetful, the individual doesn’t remember that he has completed so many difficult tasks previously. Therefore worry tends to crop up over and over again. How do we solve the problem? How do we find peace and satisfaction in life without worrying about the important jobs that need to get done? Moreover, how do we keep the mind from dwelling on the worst possible outcomes? Rather than eliminate the negative thoughts, the assertive approach proves to be more fruitful. Keep the mind attached on the supreme loveable object and His interests, and this will provide insulation from the negative thoughts that have a harmful influence.
Those things in life we view as negative can only be labeled as such if they produce an unfavorable outcome. For instance, the scorching hot rays of the sun in summer can cause sunburn which leaves the skin irritated for weeks on end. But if we just take a little bit of the sun’s rays and make sure to protect ourselves at other times, the rays that were previously negative turn out to be harmless. On a more abstract level, if our negative thoughts can be tossed aside in favor of a positive engagement, one that leads to the best resting place, or param dhama, then even the temporary turmoil caused by the reappearance of those impure thoughts turns out to be a blessing.
This was the case with Shri Hanuman, the most faithful Vanara warrior and dear servant of Lord Rama. Hanuman has a strange appearance; he has the form of a monkey with extraordinary abilities. When it comes to devotional service, or bhakti-yoga, it is understandable if someone hereditarily predisposed to religious life would make devotion their primary engagement. For instance, seeing someone born into a family with a rich tradition of spiritual life take to devotional life, regularly chanting the holy names of the Lord, “Hare Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama, Hare Hare”, is not that surprising. What other occupation did we expect them to go into? Did we really think they’d become football players, heads of state, or business moguls?
Lord Rama holding His bowBut when someone who you wouldn’t think would take to religious life becomes a dear servant of the Lord, the effects are far reaching. In the Treta Yuga, the second time period of creation, the forest dwellers were monkey-like, but they also had many human capabilities. Since they lived in the forest, they were still considered less civilized, not cultured enough to get a formal education. Shri Ramachandra, the Supreme Personality of Godhead appearing on earth during that time in the guise of a warrior prince, bestows His mercy to all. To avoid this being mistaken for a lofty promise, Rama backs up His supreme position and divine mercy by showering His blessings on every single man, woman, child and creature roaming the earth.
The sun is God’s direct representative, and it shines its light on all the creation. As the spiritual sun, Lord Rama is meant to be worshiped by everyone. Rather than gift the entire world endless amounts of sense gratification, which would do them no good, Rama brings with Him the opportunity for service. Who is granted enrollment? Obviously those who are the most eager would get the highly coveted positions. In all the three worlds, within every inch of space, you could search through and through and you would never find anyone more eager to serve God than Hanuman. To meet his enthusiasm for devotion to Rama, there needed to be a difficult task. That was taken care of by the Rakshasa king Ravana, who through a backhanded plot took Sita away from Rama’s side while the couple was residing in the forest of Dandaka.
The Vanaras of Kishkindha, headed by Sugriva, were tasked with finding Sita’s whereabouts. Hanuman, being their most capable warrior, was the one who made it to Ravana’s island kingdom of Lanka. Unfortunately, Hanuman was there all alone. None of the other monkeys, as powerful as they were, could make the giant leap across the ocean separating Lanka from the mainland. Though he had a daunting task ahead of him, Hanuman is never faint of heart. So many obstacles were thrown his way, and yet he managed to maneuver around each one of them, finally making it to the insides of the city.
Shri Hanuman worshiping RamaAfter searching here, there and everywhere, Hanuman still could not find Sita. He found Ravana, his palace, and the beautiful queens living inside of it. Despite this, he still had yet to ever see Sita. Understandably, Hanuman succumbed to some doubts; some mental demons started to appear. He began to contemplate the worst, that Sita might not be alive anymore. He thought of the different ways that she might have been killed, almost testing his resolve to see if he could handle thinking of such horrible occurrences.
In the above referenced verses from the Ramayana, Hanuman is wondering whether Sita has been placed in a cage somewhere and is crying the whole time. Then he wonders how Sita could ever fall under the sway of Ravana, for she is forever devoted to Rama. Next, Hanuman’s mind jumps through the possibilities of how and what to tell Rama. If Sita were dead, Hanuman could never bring that news to Rama. If he had failed to find Sita, the news would be equally as disturbing. Yet if he didn’t say anything, even that was sinful. What to do?
Mind you, at the time Hanuman had already faced so many difficult obstacles and pushed passed each of them. In this respect he had no reason to worry, as the mission was so important that Rama would ensure his success. Nevertheless, he loves Sita and Rama so much that it pains him greatly to even think of failing them. As mentioned previously, if consciousness is situated in the right place, even temporary bouts of mental turmoil can turn out to be a blessing. Hanuman can never divorce himself from Rama and His interests. Therefore he was able to successfully defeat his mental demons and forge ahead, continuing his search. He would eventually find Sita, and the triumphant reunion of the divine couple would occur soon after. Just as Hanuman succeeded by keeping Shri Rama at the forefront of his consciousness, anyone who regularly remembers and honors Shri Hanuman while performing their devotional service, which is man’s ideal occupation, will be able to slash every unwanted desire that should happen to arise. Hanuman gives those who love him the sword of devotion, which can cut through even the thickest covering of doubt.
In Closing:
“Maybe after to Lanka Sita bringing,
She in Ravana’s home like caged bird singing.
Of Ravana how could she ever come under control,
For Sita from Janaka, who of piety has firm hold.
If she is lost, dead or spoiled, whatever the case,
Never I can tell Rama, He of moon-like face.”
Thus Hanuman by his mind greatly troubled,
But with sword of devotion commitment redoubled.
That sweet and chaste lady he would find,
Glory of Rama’s servants the world he would remind.

the vegetable orchestra

                Worldwide one of a kind, the Vegetable Orchestra performs on instruments made of fresh vegetables. The utilization of various ever refined vegetable instruments creates a musically and aesthetically unique sound universe.

http://www.vegetableorchestra.org

----- december 4th, 2007:
wow, were are really amazed about the flood of comments in the last hours. so thank you all for your kind and unkind comments. we really appreciated that! sorry that we can not answer all... it's just too much!

just one word to all the people who are concerned about people dying of starvation:
we are concerned too. but not doing this project does change nothing. it doesn't make the world a better place.
if you are really concerned about the distribution of wealth then do something about it! read books about the real cause of hunger. talk with your friends and family about it. change your own life and try to change politics. buy and support the right things. it is not people using vegetables differently than usual that make the world a bad place. it's all of us wanting too much. our own car, a new cellphone, a bigger house with air condition, more money...
sending the vegetables to africa does not help. on the contrary it destroys the markets there, so people can not sell their own produce, because the imported one is too cheap. 

and by the way: people have used vegetables for music for centuries. also in africa.

----- december 5th, 2007:
sorry, we had to disable commenting temporarily. it's way too much to handle at the moment. thank you all nevertheless!

Teerthayatra - Sri Shirdi Saibaba Temple in Balaji Nagar(Hyderabad) - Pa...

படிதத்ததில் பிடித்தது - காமம் ஒரு பார்வை





கற்பு
ஒவ்வொரு மனங்களிலும்
வெவ்வேறு புனைவுகள்

போலிப் பார்வைகளினால்
திரையிடப்பட்டு
மணம் திரிந்து நிற்கிறது

கற்பு..கற்பு..கற்பு
அப்படி என்றால் என்ன?
ஏன் அது பெண்களுக்கு மட்டும்
முன்னிலைப் படுத்தப்படுகிறது?

அண்மையில் 'யாவரும் கேளீர்'என்ற இணையப் பக்கத்தில் பார்வையில் பட்ட ஒரு கட்டுரையை படியெடுத்து போட்டிருக்கிறேன்.

காமம் ஒரு பார்வை

கற்பு என்றால் என்ன என நண்பன் கேட்ட பொழுது நான் சொன்ன ஒற்றை வரி பதில் நினைவிற்கு வருகிறது. ‘பெண்ணின் பிறப்புறுப்பு சம்பந்தப்பட்டது அல்ல’ .
நான் இதைச் சொன்னதைத் தொடர்ந்து, ஒரு மிக நீண்ட விவாதம் நடந்தது. கல்வியில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களானாலும் சரி, கல்வியறிவே இல்லாதவர்களானாலும் சரி, இந்த விசயத்தில் அல்லது ‘மேட்டரில்’ தங்கள் கருத்தாக இத்தனை காலங்கள் தங்கள் மேல் திணிக்கப்பட்டதையேத்தான் வெகு இயல்பாக தங்கள் கருத்தாக எடுத்துக்கொண்டு விட்டார்களோ/டோமோ என பேசிப் பார்க்கும்பொழுது தோன்றுகிறது.


கற்பு என்ற உடன், அது பெண் சம்பந்தப்பட்டது மட்டுமே என்பதான கருத்தில் இருந்து வெளியே வர இன்னும் காத்திருக்கிறோம். அரை நூற்றாண்டாவது ஆகும் என்றும் தோன்றுகிறது..

கற்பு துவங்கும் புள்ளி காமம். அதுகுறித்து வெளிப்படையாக ஏதேனும் கருத்து சொல்ல வேண்டும் என்றால் கட்சியில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கற்புக்கான விவாதங்களே இப்படி எனில், அதன் ஆதார உணர்வான ‘காமம்’ குறித்துப் பேசுவதற்கான ஆரோக்கியமான சூழல் உள்ளதா போன்ற கேள்விக்கே இடமில்லாதவாறு இருக்கிறது. கத்திமேல் நடக்கும் சமாச்சாரம். ‘கலாச்சார சீரழிவு’ என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு மிக செளகரியமாக வருடங்களைப் பின்னிழுத்துக் கொண்டிருக்கிறோம். பள்ளிகளில் செக்ஸ் கல்வி வேண்டுமா வேண்டாமா என்று பேசிக்கொண்டே இருக்கிறோம்.

ஒன்று சுதந்திரத்தின் வானம்
இல்லை மரணத்தின் பள்ளம்

என்று வைரமுத்து, காட்டு விலங்குகள் வாழ்க்கை குறித்து சொல்லி இருப்பது இங்கே இந்த காமம் குறித்தும் பொருந்துகிறதோ என்று தோன்றுகிறது. ஒன்று, நிறைய உறவுகள் திகட்டத் திகட்டப் பேச்சு என்று காமத்தின் அதீத சுவை. அல்லது பிறன்மனை நோக்கல் பெரும்பாவம் என்ற ஸ்டாண்ட். இரண்டுக்கும் இடையில் சொற்ப சுக சுய சல்லாபம் என வானம்-பள்ளம் கதைதான்.

ஆண் பெண் உடல்மொழி குறித்துப் பேசும் சூழ்நிலை பற்றி இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சங்கப்பாடல்களில் போகிற போக்கில் காமம் குறித்து வெகு இயல்பாகவும் வெளிப்படையாகவும் பேசப்பட்டு வந்திருக்கிறது.

காமம் என்றால் விருப்பம் என்ற ஒரு அர்த்தத்தில்,

“காமம் செப்பாது கண்டது மொழிமோ...” என்பதில் துவங்கி, காமம் என்பது விருப்பம் தானே என்ற வியப்பையும் தருகிறது.(வண்டே உன் விருப்பம் என்பதை தவிர்த்து, நீ கண்டதை மட்டும் சொல்-காமம் செப்பாது கண்டது மொழிமோ.).

கபிலர் ஒரு பாட்டை இப்படி முடிக்கிறார்.

சிறுகோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறுது, காமமோ பெரிதே.

மிகச் சிறிய காம்பு தாங்கி நிற்கும் பெரிய பலாப்பழம் போல,இவளின் உயிர் வலிமையற்றுச் சிறியது. ஆனால் இவள் காமம் மிகப்பெரிது.

என்ற உவமையால் தலைவனை விரைந்து, தலைவியை வரைந்து கொள்க என அழைக்கும் பாடல் ஒரு வகை அது.

காமம் என்ற வார்த்தையை காதல் என்றும் ஒப்பிட்டு நோக்குகிறது பெரும்பான்மை விளக்கப் புத்தகங்கள். அது நாகரீகம் கருதும் வேலை என்றேப்படுகிறது. இதோ,

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

என்ற அற்புதப் பாடலின் அர்த்தம் அதி அற்புதம். காதல் தாண்டிய ஒன்று. அல்குல் வரை பாய்ந்த பாடல். கன்றுக்குட்டிக்கும் கிடைக்காமல், கறந்தவனும் பாத்திரத்தில் வைத்துக்கொள்ளாமல் தரையில் கொட்டிவிடப்பட்ட பாலைப்போல, மாந்தளிர் போன்ற என் மேனியானது கெடுகிறது. அவருக்கும் பயன்படவில்லை. என்று போகிறது அப்பாடல். அதில், திதலை அல்குல்- அதீதம்.

அதற்கடுத்த இப்பாடலைப் பாருங்கள். விளக்கம் ஏதும் தேவையற்று, வார்த்தைகளிலேயே முற்றும் விளங்குகிறது.

முட்டு வேன்கொல்?தாக்கு வேன் கொல்?
ஒரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
‘ஆஅ! ஒல்! எனக் கூவு வேன்கொல்?
அலமரல் அசைவளி அலைப்பஎன்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

ஒளவையார் எழுதிய பாடல். காம நோயால் வருந்தும் தலைவி வெளிப்படுத்தும் மெய்ப்பாடு, படும்பாடு பெரும்பாடு என்பதை உணர்த்தும் பாடல்.

இவை இப்படி என்றால், தலைவன் தன் நிலை கூறுதல் இன்னும் ஆழ அழகு.

இடிக்கும் கேளிர் என்ற பாடலில்,

ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய், நோன்றுகொளற்கு அரிதே

என்கிறான் வெள்ளி வீதியார் வாயிலாக. அற்புத உவமைகளுள் முதன்மை இதுவே எனப்படுகிறது.

கைகள் இரண்டும் இல்லாத, வாய்பேச முடியாத ஒருவனின் கண்முன், வெயில்பாறைமீது வெண்ணெய் உருகினால், அவனால் அதை எடுத்துக் காக்கவும் முடியாது, பிறரிடம் சொல்லவும் முடியாது. (வாயால் சாப்பிட்டுவிடலாமே என்று சமயோஜிதம் தோன்றுபவர்களுக்கு: கவனிக்க, ஞாயிறு காயும் வெவ்அறை..சூடான பாறை), என மனதில் மருகும் நிலையை கூறிச்செல்லும் அற்புதப்பாடல்.

காமம் களித்துக் கழித்ததை தலைவன் உவகையோடு வெளிப்படுத்தும் ஓர் அற்புதப் பாடல் ..

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறுஇதழ்க் குவளையோடு இடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.

தழுவிக்கொள்ள இனிமைதரும் தலைவியாம். காந்தள் கண்கள், பசுமை முதிர்ந்த முல்லையின் செவ்விப்பூக்கள், குவளைமலர்களுடன் இடையிடையே இணைத்துக்கட்டிய அழகிய மாலைபோல நறுமணம் உடையவளாம். ஹும்ம்ம்.

இயற்கைப்புணர்சிற்கடுத்து, இடந்தலைப்பாடு பொருட்டு தலைவன் கூற்றாக ஆந்தையாரின் பாடல்.

இதோ இன்னுமோர் அற்புதம்.

என்னவளின் மெல்லிய மார்பை ஒரே ஒரு நாள் ஐம்புலனும் சேர்த்துக் கூடப்பெற்றால் போதும். அதன் பின் அரை நாள் வாழ்க்கையைக் கூட விரும்பமாட்டேன். அதுவே போதும்..எனும் பொருளில்,

கேளிர் வாழியோ கேளிர்! நாளும் என்
நெஞ்சுபிணிக் கொண்ட அம்சில் ஓதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் ஆகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே..

நக்கீரர் பாடல் இது. ஆம்.

தளிர்மேனித் தலைவி தன் மேனியின் ஏற்படும் மாற்றங்களாக காமத்தை காரணம் கூறும் இப்பாடலும்

கைவளை நெகிழ்தலும் மெய்பசப்பு ஊர்தலும்
மைபடும் சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழி, அது காமமோ பெரிதே..

வாம்.

கடைசிக் காலத்துக் காமம் என்பதையும் பதிந்தே போயிருக்கிறது குறுந்தொகை. சமீபத்தில் ஆந்திர கவர்னர் திவாரியின் லீலைகள் காட்சிகளாக அரங்கேறியதும் எல்லோரும் அனிச்சையாக சொன்ன வார்த்தைகள்- “இந்த வயசுல என்ன பண்ணமுடியும்? அநியாயம்ய்யா”..அந்தக் காட்சிகளை குறுந்தொகை இப்படி முன்பே படிமபப்படுத்திவிட்டது.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

எவ்வளவு உண்மை. முதிய பசு புல்லை முழுவதும் தின்ன இயலாது. வாயால் தடவி அதிலே இன்பம் காணும். காம இன்பமும் முற்றாக அனுபவித்துத் தீராது. தினமும் புதியதான விருந்தாகும் எனும் பொருளில் மிளைக்கந்தன் என்ற புலவர் பாடிய குறிஞ்சிப்பாடல். ஆச்சர்யம் என்னவெனில் இதே புலவர் பாடிய மற்றுமொரு பாடல்,

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணுங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகுமென்று ஆள்மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.

காமம் ஒன்றும் நோயோ வருந்தத்தக்கதோ அல்ல. குளகு எனும் தழையுணவை தின்ற உடன் யானைக்கு மதம் பிடிப்பது போல சுற்றும். அதுபோலத் தனக்கு பிடித்தமான துணையை, தான் காணவேண்டியவரைக் கண்டவுடன் ,வெளிப்படும் உணர்வு காமம்..அவ்வளவே..

என்று சொல்லிப்போய்விட்டார். அவ்வளவேதான்.

எங்கோ ஆரம்பித்த கட்டுரை முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது..காமம் போலவே...

நன்றி நர்ஸிம்.

கும்பகர்ணனின் பண்புநலன் - இலக்கியப் பகரல்



முன்னுரை

நுண்கலைகள் பலவற்றிலும் தலை சிறந்தது கவிதை. கவிதைகளால் இயற்றப்பட்ட நூல்களில் தலைசிறந்தது கம்பராமாயணம். வால்மீகி எழுதிய வடமொழிக் காப்பியத்தின் கதையை எடுத்துத் தள்ளுவன தள்ளிக் கொள்வன கொண்டு, உருக்கொடுத்து உணர்ச்சியூட்டி ஒப்பற்ற உயர் பேரிலக்கியமாக வடித்துள்ளப் பெருமை கவிச்சக்கரவர்த்தி கம்பனையே சாரும். இப்பெருமையை உணர்த்தவே,

‘வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு’


என இயற்கையோடு கம்பனையும் சேர்த்துப் பாடினார் கவிமணி. கம்பராமாயணம் இலியாது, ஏனீது, துறக்க, நீக்கம், மகாபாரதம் முதலானவற்றை வெல்லும் சிறப்புடையது என்பதுமன்றி தனக்கு முதல் நூலான வால்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும் என்கிறார் பன்மொழிக் காப்பியங்களைக் கற்ற வ.வே.சு.ஐயர்.

கம்பனின் காவிய மாளிகையில் தந்தையின் ஆண்மையும், தாயின் பேறும், கற்பின் வீரமும், மனைவியின் மங்கலமாட்சியும், மக்கட் பாசமும், நட்பின் பொலிவும், உடன் பிறப்பின் உயர்க்கொள்கையும் சிறப்புற்று விளங்கும். இத்தகைய சிறப்புமிக்க கம்பன் பாடல்களில் தென்படும் கும்பகர்ணனின் பண்புநலனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யுத்தக் காண்டத்தில் வருகின்ற கும்பகர்ணன் வதைப்படலத்தில்தான் கும்பகர்ணனின் கதாபாத்திரம் கம்பனின் புனையாற்றலால் உயரியப் பண்புள்ள கதாபாத்திரமாக வானுயர உயர்ந்து நிற்கிறது.

கும்பகர்ணன் ஓர் அறிமுகம்

காவிய உலகின் கதைச்சக்கரத்தில் மனிதப் பண்பு களிமண். அதை வைத்துக் கவிஞன் சுழற்றுதலால் பாத்திரம் என்னும் மட்பாண்டம் உருவாகிறது . கம்பனால் புனையப்பெற்றக் காப்பியத்தின் கதாபாத்திரங்களில் மிக உயர்ந்தக் கதாபாத்திரம் கும்பகர்ணன். கம்பராமாயணத்தில் கம்பனின் கைண்ணத்தில் மென்மேலும் தமிழ் மணம் வீசும் மண்வாசனையுடன் மெருகூட்டப்பட்டிருக்கிறது இக்கதாபாத்திரம். கம்பர் காப்பியம் கதையால் தழுவலாயினும், மொழியாலும் நடையாலும் பண்பாலும் உணர்ச்சியாலும் அன்பாலும் தமிழ் மண்ணில் பிறந்த நிலக்காப்பியம் எனக் குறிக்கின்றார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்கள். எனவே அரக்கக் குலமாகச் சித்தரிக்கப்பட்டாலும் தமிழர்களின் வாழ்வியல் தத்துவங்களின் அடிப்படையில் அறக்கோட்பாடுகளுக்குக் கட்டுண்ட ஒரு கொள்கைப் பிடிப்புள்ள உன்னதக் கதாபாத்திரமாக கும்பகர்ணனை கம்பர் படைத்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. கம்பராமாயணத்தின் துணைப் பாத்திரமான கும்பகர்ணன் இராவணனுக்குத் தம்பியாகவும், வீடணனுக்கு மூத்தவனாகவும் வருகிறான்.

கும்பகர்ணன் வதைப்படலம்

இராமனோடு முதல் நாள் போர் புரிந்து மீண்ட இராவணன் இராமனை வெல்லும் திறம் உடையவன் கும்பகர்ணனே எனக் கருதி அவனைத் துயிலெழுப்ப வீரர்களை அனுப்புகிறான். எழுந்து வந்த கும்பகர்ணனை இராவணன் போருக்குச் செல்ல ஏவுகின்றான். அச்சமயம் கும்பகர்ணன் கூறும் ஆற்றல் வாய்ந்த அறிவுரை விழலுக்கு இறைத்த நீராகின்றது. இவன் பேச்சைப் புறக்கணித்து இராவணன் சினந்தபோது, அண்ணனிடம் பிழை பொறுக்குமாறு வேண்டிப் போருக்குப் புறப்படுகிறான்.
போருக்கு வந்த கும்பகர்ணனைத் துணைவர்களின் அலோசனைப்படி வீடணனை அனுப்பி அறஞ்சார்ந்த தன் அணிக்கு வருமாறு இராமன் அழைக்கச் செய்கிறான். ஆனால் இராவணனைப் பிரிந்து இராமனுடன் அணி சேர்வது தனக்கு அறமாகாது என மறுத்து தன் தம்பி வீடணனை வாழ்த்தி அனுப்புகிறான்.

இனி வரும் பகுதிகளில் மேலே கூறப்பட்டுள்ள கதையோட்டத்தை ஒட்டிய கும்பகர்ணனின் பண்புநலனை சில பாடல்கள் மூலம் ஆராய்வோம்.

உருவச்சிறப்பு

கம்பனின் ஈடு இணையற்ற படைப்புகளில் அனுமனைப் போல் கும்பகர்ணனும் ஒரு சிறந்த படைப்பாவான். அவனின் உடலமைப்புப் பல மலைகள் ஒன்றிணைந்தது போல் இருக்கும் எனப் போற்றப்படுவதுண்டு.

‘.....................................
கோயில் எய்தினான் குன்றன கொள்கையான்’

எனும் கம்பனின் இலக்கிய நயமும் பொருள் நயமும் கொண்ட வரிகள், கும்பகர்ணனின் குன்று போன்ற மாபெரும் தோற்றத்தை நம் முன்னே விரிக்கின்றது.

‘.............பொம்மென்று இரைத்தெழ....’

என வரும் வரிகள் அண்ணன் அழைத்தான் என்றவுடன் மலை போன்றத் தோற்றம் உடையவனான கும்பகர்ணன் ‘பொம் பொம்’ என்று மாபெரும் இரைச்சல் ஓசையுடன் அண்ணனைக் காண வரும்போது கும்பகர்ணனின் உடல் வனப்பை உணர்த்துகிறது.

அண்ணனைக் கண்டவுடன் கும்பகர்ணன் நிலத்தில் விழுந்து வணங்குவது ஒரு மலையே கீழே விழுந்து படுத்தது போல் இருக்கிறது என கம்பர் வர்ணிப்பதும், வலிமையும் பெருமையும் உடைய தன் தம்பியை இராவணன் ஒரு குன்று மற்றொரு குன்றைத் தழுவுவதைப் போன்று தழுவுகிறான் என கம்பர் உருவகப்படுத்துவதும் கும்பகர்ணனின் உருவச்சிறப்பை நம் கண்முன்னே முன்னிறுத்துகின்றது.

பகைவனும் வியக்கும் தோற்றமுடையவன் கும்பகர்ணன் என அவன் உருவச்சிறப்பை இராமனின் கூற்றின் மூலம் மறுஉறுதிப்படுத்துகிறார் கம்பர்.

‘தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நாள்பல கழியுமால்..........’

கும்பகர்ணனைக் கண்ட இராமன் அவன் உருவத்தைப் பார்த்து,

‘இவனது ஒரு தோளோடு இன்னொரு தோளையும் பார்க்க வேண்டுமாயின் பல நாள் ஆகுமே, பூமியின் நடுவே நிற்கும் மேரு மலைக்கு கால் முளைத்து வந்தது போல இருக்கிறதே’ என வியக்கின்றான். இப்படியாகக் கும்பகர்ணனின் உருவச்சிறப்பைப் பல இடங்களில் நேரிடையாகவும், மற்றக் கதாபாத்திரங்களின் கூற்றாகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார் கம்பர். கும்பகர்ணன் வதைப்படலத்துக்கு முன்பாகவே, அனுமன், சூர்ப்பணகை போன்ற கதாபாத்திரங்களின் மூலம் கும்பகர்ணனை அறிமுகப்படுத்தியுள்ளார் கம்பர்.

கொள்கைச்சிறப்பு

‘குன்றன்ன கொள்கையான்’

என்பது கும்பகர்ணனின் உருவச்சிறப்புக்குப் பொருள் தருவது எனப் பார்த்தோம். ஆனல் அதே சொல்லாடல், குன்று போல் உயர்ந்தக் கொள்கை உடையவன் எனவும் பொருள் தரும். இராவணன் சீதையைச் சிறையெடுத்தது தவறு என்பதை இராவணனிடம் துணிந்து சொன்னதாலும், இனிமேல் மீண்டும் போய்க் கூறப்போவதாலும் கும்பகர்ணன் ‘குன்றன்ன கொள்கையான்’ எனச் சிறப்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கும்பகர்ணன் அறநெஞ்சினன் ஆவான். அதன் வழி நிற்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அறத்தை உணர்தல், அதன்படி நிற்க விரும்புதல் என்ற இரு துறைகளிலும் ஒரே நிலையில் நின்றவர்கள் கும்பகர்ணனும் வீடணனும். அதை நிலை நிறுத்த முடியாதச் சூழலில் அதனோடு வீழ்ந்து இறக்கத் துணிந்தான் கும்பகர்ணன். வீடணன் அதை விட்டுவிட்டு அறவழியில் நிற்கும் இராமனோடு சேர்ந்துவிட்டான். உணர்வு என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை வெளிப்படுத்துவதில் மட்டுமே மனிதன் வேறுபட்டு நிற்கின்றான் என்பதற்கு கும்பகர்ணன் நல்ல உதாரணம்.

‘…………….இரங்கலை என்றும் உள்ளாய் ‘

செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரை விடத் தயாரான கும்பகர்ணன் அதே போல் வீடணன் செய்யத் தவறியது தவறு என நினைக்கவில்லை.

‘ தர்மாத்மாவான நீ நாளை உலகத்திற்குத் தலைவனாகப் போகிறவன். நீ செய்தது உன்னைப் பொருத்த வரை சரியே. அதே போல் இங்கு நின்று போரிட்டு உயிரை விடுதலே எனக்குப் பெருமை’,
எனத் தம்பியிடம் உளம் உருகிக் கூறுவது கும்பகர்ணனின் உயர்ந்தப் பண்பினுக்கும் கொள்கைச் சிறப்பினுக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.

கற்புடைச் சானகியை விடுவித்தாலன்றி வெஞ்சமர் விளைந்தே தீரும் எனவும், வெஞ்சமரில் வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் அழிந்தே தீரும் எனவும் அஞ்சாது இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான் கும்பகர்ணன் .

‘............இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியைப்
புல்லலாம் என்பது........’

மிகவம் வெளிப்படையாக, இராமனை வெல்லலாம், சீதையைத் தழுவலாம் என்பதெல்லாம் முடியாத ஒன்று என எடுத்துரைக்கிறான். சீதையை விட்டு விடுமாறும், இராமன் சரணம் தொழுமாறும் வேண்டுகோள் விடுத்து, வீடணனை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறும் அறநெறியில் வாழ இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான். அவன் நெஞ்சின் ஆழத்திலிருந்து எழும் இக்கூற்றுகள் யாவும் மனித நேயப் பண்புகளைச் சித்தரிப்பதாக அமைந்துள்ளன.

‘………………………..
திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே’

கடுமையான விஷமான அந்தக் கற்புக்கரசியை நீ இன்னம் விட்டு விடவில்லையா? இது விதியின் செயல்தான் எனக் கூறுவது கும்பகர்ணனை விதியின் மேல் நம்பிக்கைக் கொண்டவனாகக் காட்டுகிறது. மேலும் இன்னொரு கட்டத்தில்,

‘வென்று இவன் வருவன் என்று உரைத்தி லேன் விதி
நின்றது பிடற்பிடித்து உந்த நின்றது.....’

என்பதும் விதியின்பால் அவன் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது.

‘நான் போரிற்குச் சென்று வென்று வருவேன் என்று சொல்லமாட்டேன். விதி வென்றது. என் பிடரியைப் பிடித்துப் போருக்குத் தள்ளி நிற்கிறது. நான் போரில் இறப்பேன். அப்படி நான் இறந்த பின்னாவது சீதையை விட்டு விடு அண்ணா...’ எனக் கல்லையும் கரைக்கும் வண்ணம் உரைக்கின்றான்.

இறப்பது உறுதி என்றறிந்த பின்னும் போருக்குப் புறப்பட்டதும்,

‘நான் இறந்த பின்னாவது அவளை விட்டு விட்டு நன்றாக இரு’

எனக் கூறுவதும் அவனுடைய கொள்கையின் சிறப்பினையும், அறநெஞ்சினையும், பண்பின் உயரத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

வீடணன் கும்பகர்ணனை இராமனின் பக்கம் வந்து விடுமாறு உள்ளம் தழைக்க எதிர்ப்பார்ப்புடன் வேண்டுகோள் விடுக்க, பாசமுள்ள தம்பிக்கு பாசமுள்ள அண்ணன் பதிலுரைக்கிறான் இப்படி.

‘நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்குகோலம் செய்துவிட்டாற்கு உயிர்கொடாது அங்குப் போகேன்.......’

நீரில் வரைந்த கோலம் போன்ற குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்தப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த அண்ணனுக்காக தன் உயிரைத் தராமல் இராமன் பக்கம் போகமாட்டேன் எனக் கூறும் கும்பகர்ணனின் நெஞ்சுரம் அவனை உயர்ந்த கொள்கைவாதியாகவும் இராவணனுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் குறிக்கோளாக அமைத்துக் கொண்டவன் எனவும் காட்டுகிறது.
நீர்க்கோல வாழ்வு எனக் கும்பகர்ணன் கூறுவது இந்த வாழ்வின் நிலையாமையை எடுத்துரைக்கிறது. இதனையை வள்ளுவரும்,

‘நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை’

என்கிறார். அதாவது நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானது என்பதாகும்.

‘…………………………………
புலையுறு மரணம் எய்தல் எனக்கிது புகழ தேயால்’

இராவணன் பக்கம் நின்று இழிவான மரணத்தை அடைந்தாலும், அதுவும் எனக்கு ஒரு வகையில் புகழே எனக் கும்பகர்ணன் கூறுவதும் அவனின் பண்புநலனுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இன்றளவும் சான்றோர்களால் சிறந்த பண்பாளனாக, அறநெஞ்சினனாக, பாசமுள்ளத் தம்பியாக, பாசமுள்ள அண்ணனாக, இராமனே வியந்த வீரனாகப் போற்றப்படுவதும் அவனின் தனிச்சிறப்புகளேயாகும்.

அண்ணனின் நலனில் அக்கறையோடு அறிவுரை சொல்லவும் கும்பகர்ணன் தயங்கவில்லை. அறிவுரைகள் பலன் தராத போது வீடணன் போல் இராமன் பக்கம் போய் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் கும்பகர்ணன் முனையவில்லை. கடைசிவரை அண்ணன் பக்கமே நின்று உயிர் பிரியும் நேரத்திலும் தன்னிலைக்கு வருந்தாமல் அண்ணனுக்கு நேரப் போகும் அழிவுக்கு வருந்திய கும்பகர்ணனின் கொள்கைச் சிறப்பிற்கு நிகராக, அன்புக்கு நிகராக நாம் எதைச் சொல்ல முடியும். கும்பகர்ணனின் கதாபாத்திரம் சமத்துவ அன்புக்கும், மனித நேய உணர்வுகளுக்கும் ஒர் உரைகல்லாகும்.

வீரச்சிறப்பு

இராமனோடு முதற் போர் புரிந்து தோல்வியுற்ற இராவணன் இராமனை வெல்லும் திறம் உடையவன் கும்பகர்ணனே எனக் கருதி அவனைப் போருக்குப் போகச் சொல்வது, இராவணனை விட கும்பகர்ணன் வீரத்தில் சிறந்தவன் என்பதை நமக்கு உணர்த்துகிறது. பகைவனின் உண்மையான வீரத்தை நன்கறிந்தவனாலேதான் அவனுக்கெதிராகச் சிறப்பாகப் போரிட முடியும். இராமனின் வீர ஆற்றலை நன்குணர்ந்தவன் கும்பகர்ணனே ஆவான். இதை அறிந்திருந்த இராவணன்,

‘…………………………….
ஏனை உற்றனர் நீயவர் இன்னுயிர்
போன கத்தொழில் முற்றுதி போயென்றாள்’

‘வானரப் படைகளும் மானிடர் இருவரும் இலங்கையை முற்றுகையிட்டுள்ளனர். முதல் நாள் போரில் வென்றும் விட்டார்கள். நீ அவர் இன்னுயிர் உண்கின்றச் செயலை இன்று போர்க்களம் போய் முடிப்பாய்’ என்கிறான். இதன் வாயிலாகக் கும்பகர்ணனின் வீரப் பண்பினை கம்பர் நேரிடையாகச் சொல்லாமல் இராவணனின் மூலமாக எடுத்தியம்புகிறார்.

‘என்னைவென்று உளர்எனில் இலங்கை காவல
உன்னைவென்று உயர்தல் உண்மை......’

என்னை அவர்கள் வென்றுவிட்டார்கள் என்றால், உன்னையும் வென்று விடுவது நடக்கத்தான் போகிறது எனக் கும்பகர்ணன் உரைப்பது அவனை இராவணனை விடச் சிறந்த வீரனாக நமக்கு அடையாளம் காட்டுகிறது.

‘பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டுநீ இருந்து தேம்புதல்.......’

எனத் தொடங்கும் பாடல் வரிகள், கும்பகர்ணனைச் சிறந்த போர்த்தலைவனாகவும், ராஜதந்திரியாகவும் நமக்குக் காட்டுகிறது. வரிசை வரிசையாகப் படைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பி அவை அழிவதைக் காட்டிலும், நமது வலிமை முழுவதையும் ஒரு சேரப் பகைவர் மேல் செலுத்தி வெற்றிக்கு முயல்வதே சிறந்தது எனப் போர் ஆலோசனை வழங்கும் பண்பினையும் காணலாம்.

உள்ளச்சிறப்பு

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்தவன், நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு வருந்துவதில் கும்பகர்ணனின் பண்பும் யதார்த்த அறிவும் அறநெஞ்சமும் வெளிப்படுகிறது.

‘ஆனதோ வெஞ்சமர் அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்து இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே’

சீதையின் துக்கம் இன்னும் தீரவில்லையா? வானமும் பூமியும் வளர்ந்து நின்ற உலகளாவிய புகழ் அண்ணனின் இச்செய்கையால் போய் விட்டதே, என வருந்தும் பண்பாளனாகவும் அறநெஞ்சினனாகவும் வருகிறான் கும்பகர்ணன்.

‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்’

என்கிறது கலித்தொகை. பாடு என்பது தன்மை. பிறர் தன்மை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகுதலே பண்பாகும் . இது கலித்தொகை என்ற சங்க நூல் காட்டும் பண்புக்கான இலக்கணம். பாடறிந்து ஒழுகும் பண்பு நமக்கு வேண்டும். இல்லையேல் நமக்குத்தான் அவமானம் வந்து சேரும்.

வீடணன் கும்பகர்ணனிடம் தன்னைப் போலவே இராமனிடம் வந்து சேர்ந்து கொள்ள வேண்டுகிறான். கும்பகர்ணன் வீடணின் கூற்றை மறுக்கிறான்.

‘இராவணன் தீமை செய்கிறான். நான் தடுக்க முயல்கிறேன். முடியவில்லையென்றால் அவனுக்கு முன் சாகவே விரும்புகிறேன்’ என்கிறான்.

‘...............
திருத்தாம் ஆகில் நன்றே
திருந்துதல் தீராதாயின்
..................
ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்கு உரியதம்மா’

என்பது கும்பகர்ணனின் பேச்சாக, பண்பின் பிம்பமாக கம்பன் தருவது.

இராவணன் தீமையைத் திருத்தி அறிவுரை தந்தான் கும்பகர்ணன். இராவணன் இசையவில்லை.
என்ன செய்கிறான் கும்பகர்ணன்?
தீமைக்கு உடன்படாமல் போரில் சாவதற்காக வருகிறான். செத்தாலாவது அண்ணன் திருந்துவான் என நினைக்கிறான். தன் சொந்த இயல்பை இழக்காமல் அண்ணன் செய்யும் தீங்கையும் சுட்டி விட்டு இறப்பு நிச்சயம் எனத் தெரிந்தும் போர்க்களத்தில் தன் அண்ணனுக்காக நிற்பது அவனின் உளப்பண்பை மிக அழகாக உணர்த்துகிறது.

‘ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்கு உரியதம்மா’

எனும் வரிகள் மூலம் கும்பகர்ணனின் கதாபாத்திரம் மகாபாரதத்தில் செஞ்சோற்றுக் கடனுக்காகத் துரியோதனன் பக்கம் நின்ற கர்ணனின் கதாபாத்திரத்துக்கு ஒப்பானதாகும் என உரைக்கப்படுகிறது.

‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா...கர்ணா....’

என்றப் பாடல் வரிகள் கர்ணனின் கதாபாத்திரத்தை நமக்கு உணர்த்தும்.

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு’

எனத் திருவள்ளுவர் கூறும் செய்ந்நன்றியறிதல் பண்பானது கும்பகர்ணனின் பண்புகளில் மிளிரக் காண்கிறோம்.

வீடணன் வழியே உணர்த்தப்படும் சிறப்புகள்


மேரு மலையே கால் முளைத்து நடந்து வருவதுபோல் இருந்த கும்பகர்ணனின் தோற்றத்தைக் கண்டு வியந்த இராமன், ‘போருக்கு வந்த வீரனாக என்னால் நினைக்கமுடியவில்லை. இவன் யாரோ? என வினவுகிறான். வீடணனும், கும்பகர்ணனும் தன்னைப் போல் இராவணனுக்கு நல்ல உபதேசங்கள் சொன்னதையும், இராவணன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்ததையும், இப்போது இராவணனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் உதவிக்கு ஓடி வந்திருப்பதையும் தெரிவிக்கின்றான்.

‘காரியல் காலன் அன்ன கழற்கும்ப கர்ணன் என்னும்
கூரிய சூலத் தான்.........’

கும்பகர்ணன் கருமை நிறம் வாய்ந்த எமனுக்கு ஈடானவன் என்றும் கூர்மையான சூலப்படைக்குச் சொந்தக்காரன் என்றும் கூறுகிறான்.

‘காலன் ஆருயிர்க் காலனால்
காலின் மேல்நிமிர் காலினான்
மாலி னார்கெட வாகையே
சூல மேகொடு சூடினான்’

கும்பகர்ணன் எமன் உயிரைப் பறிப்பதில் இன்னொரு எமன் போன்றவனாவான். காற்றைக் காட்டிலும் வேகமாக செல்லும் கால்கள் உடையவனாவான். இந்திரனைத் தோற்கடித்து வெற்றிமாலையைத் தன் சூலப்படையால் சூடியவனாவான்.

‘…………………………
தானு யர்ந்த தவத்தினான்
வானு யர்ந்த வரத்தினான்’

மேலும் அவன் உடல் வலிமை மிக்கவன், மனஉறுதி மிக்கவன், தவத்தினால் மேம்பட்டவன், அத்தவத்தால் பல வரங்களைப் பெற்றவன் எனவும் வீடணன் கும்பகர்ணனின் பண்பு, வீரம் போன்றத் தன்மைகளை விவரிக்கின்றான்.

‘நன்று இது அன்று நமக்கு எனா
ஒன்று நீதி உணர்த்தினான்
இன்று காலன் முன் எய்தினான்....’

பிறர் மனையைக் கவர்ந்து வைத்திருப்பது அறமுடையோர் செயலல்ல என்ற உயரிய நீதியை இராவணனுக்கு எடுத்துச் சொன்னவன் கும்பகர்ணன். ஆயினும் இவன் பேச்சை இராவணன் கேட்காததால், இன்று இறப்பு நிச்சயம் எனத் தெரிந்தும் எமன் முன் வந்து நிற்கின்றான் என வீடணன் மூலம் கும்பகர்ணனின் பண்புநலன்களையும், சிறப்புகளையும் நமக்கு நயமுடன் எடுத்தியம்புகிறார் கம்பர்.


முடிவுரை

கம்பன் படைத்த காப்பியமான கம்பராமாயணத்தில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் ஆழ்கடல் முத்துக்களாக இருப்பினும் அவற்றில் நல்முத்துக்களான ஒரு சில பாத்திரங்கள் மக்கள் முன் பொதுத் தன்மையுடன் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இராமனின் கதாபாத்திரத்தைத் தெய்வத்துக்கு ஒப்புவித்தவர்கள் கும்பகர்ணன் போன்ற துணைப் பாத்திரங்களை மனித அளவில் கூட ஒப்புவமை காட்டாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான் இங்கு வருந்தத்தக்கதாக இருக்கிறது. மனிதநேயப் பண்புகளில் தலை சிறந்து விளங்கிய கும்பகர்ணன் இன்று வெறும் தூக்கத்திற்கு மட்டுமே முன்னுதாரணமாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும் வருந்தக்கூடிய ஒன்றாகும்.

‘கும்பகர்ணச் சகோதரனே
நிம்மதியின் நாயகனே
தூங்குகின்ற கலையதனை
எங்களுக்கும் போதிப்பாய்....’ – பெ. கருணாகரன்

அண்மையில் படித்த ஒரு புது கவிதை இது. மனித வாழ்வின் உன்னதப் பண்புகளின் களஞ்சியமாக வாழ்ந்த கும்பகர்ணனிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது வெறும் தூக்கத்தை மட்டும்தானா?
குன்றன்ன கொள்கையுடையான், அறநெஞ்சினன், பகைவரின் ஆற்றல் உணர்ந்த மாவீரன், செய்ந்நன்றி மறவாதவன், உடன் பிறப்பின் உயர் கொள்கையுடையான் என இன்னும் எவ்வளவோ சிறப்புகளால் போற்றத்தக்க பண்புநலன்களைக் கொண்டவன் கும்பகர்ணன். கும்பகர்ணனைப் பற்றி மக்கள் அறிய ஆரம்பித்து விட்டால் இராமனுக்கு அவ்வளவு மதிப்பு இராது. இராமன் அப்படி இருப்பது அவனது பாத்திரத்துக்குத் தேவையானது. மனம் என்பது நிமிடத்துக்கு நிமிடம் மாறக்கூடியதுதான். கும்பகர்ணன் நினைத்திருந்தால் வீடணைப் போல இராமன் பக்கம் போயிருக்கலாம். இலங்கை வேந்தனாக ஆகியிருக்லாம். ஆனால் அவன் போகவில்லை. இராவணனுக்காக வாழ்வதையே தன் வாழ்வின் நெறியாகக் கொண்டு அவனுக்காகவே தன் உயிரையும் விருப்பப்பட்டு இழக்கிறான். கம்பராமாயணத்தில் கும்பகர்ணனின் கதாபாத்திரம் தன் பண்புநலனால் தலைநிமிர்ந்து நிற்கிறது. எதிர்காலச் சமூகம் கும்பகர்ணனின் பண்புநலன்களுக்காக அவனைப் போற்றும்.


துணை நூல்கள்
1. தமிழ் வீரம், டாக்டர் மு. அப்துல் கறீம், முதற் பதிப்பு 1994, வானதி பதிப்பகம், சென்னை.
2. கம்பர், மூதறிஞர்வ.சுப. மாணிக்கம், மறுபதிப்பு 1994, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. ஆய்வுக்கோவை, இலக்கியவியல், முதற்பதிப்பு 2004, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தமிழாய்வுத்துறை, பிக்ஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
4. காப்பிய இலக்கியமும் நீதி இலக்கியமும், டாக்டர் பாலவராயன் & டாக்டர் தமிழண்ணல், சிம் பல்கலைக்கழகம், TLL005/SG/REVISED/08, சிங்கப்பூர்.
5. வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் பாக்யமேரி, முதற்பதிப்பு 2008, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
6. குளம்பொலி ஞானங்கள், பெ. கருணாகரன், முதற்பதிப்பு 2009, குன்றம் பதிப்பகம், சென்னை.
7. தன்னம்பிக்கை, இரா. சண்முகவடிவேல், இணையக்கட்டுரை, 09 - 2002