Search This Blog

Saturday, December 31, 2011

How Mollusk Blood Could Cure Cancer


The incredible Mr. Limpet
Medicinal Shellfish A large protein in limpet hemolymph contains epitopes, which trigger an immune response in humans. Hal Beral/Corbis
The giant keyhole limpet’s hemolymph carries a protein that is the essential component of a new cancer vaccine. Keyhole limpet hemocyanin (KLH) carries oxygen in limpet blood. It is an unusually large protein—near virus size—and contains many epitopes, which trigger our body to produce antibodies. When doctors inject KLH into the human bloodstream, it provokes a powerful immune response. If markers for a certain cancer are attached to KLH, the immune system can be stimulated to attack them. Unlike some synthetic alternatives, KLH is nontoxic. Researchers use the protein in cancer vaccines to “break tolerance,” says Frank Oakes, the CEO of Stellar Biotechnologies, which grows limpets in a business park for aquaculture next to the Pacific Ocean in Port Hueneme, California. “Your body tolerates the cancer cell because the body believes it is a part of you,” he says.
Breaking tolerance can also be used to treat addiction. Down the coast from Stellar’s lot, in La Jolla, scientists at Scripps Research Institute used KLH to make a vaccine that cuts out the euphoric effects of a heroin high. In their experiment, researchers gave addicted rats a cocktail of heroin-like molecules attached to KLH. Like the cancer vaccine, the protein provoked an immune response to suppress the high. Later, given the option to self-administer heroin, most rats stopped using the drug. Human trials are under way for a similar KLH-based vaccine to treat addiction to nicotine and cocaine.
KLH is too big and complicated to synthesize, so giant keyhole limpets still offer the best, most stable supply of the protein. Before extraction, Stellar employees move the limpets to tanks indoors. Researchers use a syringe to extract the limpet’s blood and then isolate KLH using a centrifuge. It takes about 16 weeks before the mollusk has fully recuperated and is ready for its next extraction. Limpets can also be harvested in the wild, but they die during the extraction process. There aren’t enough limpets in the sea to keep up this method.
More than a dozen vaccines that use KLH are in clinical trials, and a treatment for bladder cancer is now approved for use in Europe and Asia. Stellar currently has the capacity to make between one and two kilograms of KLH a year. But if a KLH cancer vaccine is FDA-approved, Oakes says it “will increase demand by orders of magnitude.”

Are Superluminal Neutrinos Possible? Pions Don't Want to Decay Into Faster-Than-Light Neutrinos, Study Finds


The IceCube experiment in Antarctica provides an experimental check on Cowsik's theoretical calculations. According to Cowsik, neutrinos with extremely high energies should show up at IceCube only if superluminal neutrinos are an impossibility. Because IceCube is seeing high-energy neutrinos, there must be something wrong with the observation of superluminal neutrinos. (Credit: ICE.WISC.EDU / Pete Guest)                                                                           Science Daily  — When an international collaboration of physicists came up with a result that punched a hole in Einstein's theory of special relativity and couldn't find any mistakes in their work, they asked the world to take a second look at their experiment.

Online and in the Dec. 24 issue ofPhysical Review Letters, Cowsik and his collaborators put their finger on what appears to be an insurmountable problem with the experiment.Responding to the call was Ramanath Cowsik, PhD, professor of physics in Arts & Sciences and director of the McDonnell Center for the Space Sciences at Washington University in St. Louis.
The OPERA experiment, a collaboration between the CERN physics laboratory in Geneva, Switzerland, and the Laboratori Nazionali del Gran Sasso (LNGS) in Gran Sasso, Italy, timed particles called neutrinos traveling through Earth from the physics laboratory CERN to a detector in an underground laboratory in Gran Sasso, a distance of some 730 kilometers, or about 450 miles.
OPERA reported online and in Physics Letters B in September that the neutrinos arrived at Gran Sasso some 60 nanoseconds sooner than they would have arrived if they were traveling at the speed of light in a vacuum.
Neutrinos are thought to have a tiny, but nonzero, mass. According to the theory of special relativity, any particle that has mass may come close to but cannot quite reach the speed of light. So superluminal (faster than light) neutrinos should not exist.
The neutrinos in the experiment were created by slamming speeding protons into a stationary target, producing a pulse of pions -- unstable particles that were magnetically focused into a long tunnel where they decayed in flight into muons and neutrinos.
The muons were stopped at the end of the tunnel, but the neutrinos, which slip through matter like ghosts through walls, passed through the barrier and disappeared in the direction of Gran Sasso.
In their journal article, Cowsik and an international team of collaborators took a close look at the first step of this process. "We have investigated whether pion decays would produce superluminal neutrinos, assuming energy and momentum are conserved," he says.
The OPERA neutrinos had energies of about 17 gigaelectron volts. "They had a lot of energy but very little mass," Cowsik says, "so they should go very fast." The question is whether they went faster than the speed of light.
"We've shown in this paper that if the neutrino that comes out of a pion decay were going faster than the speed of light, the pion lifetime would get longer, and the neutrino would carry a smaller fraction of the energy shared by the neutrino and the muon," Cowsik says.
"What's more," he says, "these difficulties would only increase as the pion energy increases.
"So we are saying that in the present framework of physics, superluminal neutrinos would be difficult to produce," Cowsik explains.
In addition, he says, there's an experimental check on this theoretical conclusion. The creation of neutrinos at CERN is duplicated naturally when cosmic rays hit Earth's atmosphere.
A neutrino observatory called IceCube detects these neutrinos when they collide with other particles generating muons that leave trails of light flashes as they plow into the thick, clear ice of Antarctica.
"IceCube has seen neutrinos with energies 10,000 times higher than those the OPERA experiment is creating," Cowsik says.."Thus, the energies of their parent pions should be correspondingly high. Simple calculations, based on the conservation of energy and momentum, dictate that the lifetimes of those pions should be too long for them ever to decay into superluminal neutrinos.
"But the observation of high-energy neutrinos by IceCube indicates that these high-energy pions do decay according to the standard ideas of physics, generating neutrinos whose speed approaches that of light but never exceeds it.
Cowsik's objection to the OPERA results isn't the only one that has been raised.
Physicists Andrew G. Cohen and Sheldon L. Glashow published a paper in Physical Review Letters in October showing that superluminal neutrinos would rapidly radiate energy in the form of electron-positron pairs.
"We are saying that, given physics as we know it today, it should be hard to produce any neutrinos with superluminal velocities, and Cohen and Glashow are saying that even if you did, they'd quickly radiate away their energy and slow down," Cowsik says.
"I have very high regard for the OPERA experimenters," Cowsik adds. "They got faster-than-light speeds when they analyzed their data in March, but they struggled for months to eliminate possible errors in their experiment before publishing it.
"Not finding any mistakes," Cowsik says, "they had an ethical obligation to publish so that the community could help resolve the difficulty. That's the demanding code physicists live by," he says.

சிலப்பதிபார அடைக்கலக் காதையில் இடம்பெற்றுள்ள தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பியப் பண்புகள் - ஒரு பார்வை



முன்னுரை

இலக்கியங்கள் பல படைக்கப்பெற்றப் பிறகு இலக்கணம் தோன்றும். இது உலகப் பொது நியதி. காப்பியங்கள் பல தோன்றியப் பின்னரே காப்பிய நெறிகளை ஆராயும் இலக்கண நூல்கள் தோன்றின. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தை பனிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தண்டியலங்காரத்தின் காப்பியப் பண்புகளைக் கொண்டு ஆராய்ந்து நோக்கிய இலக்கிய ஆய்வாளர்கள், தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் அப்பண்புகள் உள்ளன என உரைக்கின்றனர்.

தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பியப் பண்புகள்

தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப் படுத்தி அவரால் எழுதப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்தியம்புகிறது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், காப்பியம் என இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித் தனியே எடுத்துரைக்கிறது.

பொதுவாக காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என இருவகையாக ஆய்வாளர்கள் பகுத்துக் கூறுவர். அவற்றுள் பெருங்காப்பியத்தின் பண்புகளைத் தண்டியலங்கார நூற்பா பின்வருமாறு எடுத்துச் சொல்கிறது.


பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு, வளநகர் ..........
(தண்டியலங்காரம், நூற்பா – 8 )

எனத் தொடங்கும் பெருங்காப்பிய இலக்கணத்தைத் தனது காப்பியத் திறன் என்ற நூலில் நான்காகப் பகுத்துக் கூறுகிறார் சோம. இளவரசு அவர்கள். அவை காப்பிய அமைப்பு, பொருள், வருணனை, நிகழ்ச்சி என வகைப் படுத்துகிறார்.

காப்பிய அமைப்பு
காவியத்தின் தொடக்கம் வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் என அமைதல் வேண்டும். சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பிரிவுகள் இருக்கவேண்டும். (பரிச்சேதம் எனும் பிரிவு தமிழில் இல்லை)
காப்பியப் பொருள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளும் அமையவேண்டும். இதில் ஒன்றோ பலவோ குறைந்தால் அது பெருங்காப்பியம் ஆகாது. அது சிறு காப்பியம் எனக் கருதப்படும். ஒப்பற்றத் தலைவன் ஒருவன் காப்பியத் தலைவனாக இருக்கவேண்டும்.

காப்பிய வருணனை
மலை, கடல், நாடு, நகர், அறுவகைப் பெரும் பொழுதுகள், அறுவகைச் சிறுபொழுதுகள், ஞாயிற்றின் தோற்றமும், திங்களின் தோற்றமும் வருணனைகளாக வருதல் வேண்டும்.

காப்பிய நிகழ்ச்சி
திருமணம், முடி சூட்டுதல், பொழில் விளையாட்டு, புனல் விளையாட்டு, மக்கட் பேறு, ஊடல், கூடல், அமைச்சரோடு ஆலோசனை, தூது, வெளிநாட்டுப் பயணம், படையெடுத்துச் செல்லல், போர், வெற்றி போன்றவை காப்பிய நிகழ்ச்சிகள் எனத் தண்டியலங்காரம் கூறுகிறது. மேலும் எண்வகை சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்பும் அமைதல் வேண்டும் எனவும் குறிக்கிறது. ஆனால் குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் போன்ற மக்கட் காப்பியங்களுக்கு இவை பொருந்தி வருமா என நோக்க வேண்டும் என்கிறார் சோம. இளவரசு.



சிலப்பதிகாரம்
தமிழ்ச் சோலையின் ஐம்பெரும் காப்பியங்களில் தலையாய நாடகக் காப்பியம் சிலப்பதிகாரம். சங்க இலக்கியங்களின் தாக்கங்களையும், பொதுமைப் பண்பு நலனையும், இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழின் சாரத்தையும் செழுமையுறக் கொண்டிருக்கும் சித்திரக்காவியம் சிலப்பதிகாரம்.

உலகமொழிகள் பலவற்றிலும் காப்பியங்கள் உண்டு. அவையாவும் பெரும்பாலும் மன்னர் குடும்பத்தினரையே தலைமக்களாய்க் கொண்டு படைக்கப்பட்டன. ஆனால் தமிழின் முதற்காப்பியமோ குடிமக்கள் காப்பியமாகத் திகழ்கின்றது. குடிமக்களில் ஒருவரான ஒரு பெண்ணிடம் நாடாளும் மன்னனன் தோற்றுப் போகிறான். முடி மன்னர்களுக்கு வரம் கொடுக்கும் பெண் தெய்வமாகக் குடிமகள் ஒருத்தி உயர்ந்து நிற்கிறாள் என்று காட்டும் சிலப்பதிகாரம் தனிச் சிறப்புமிக்கக் காப்பியமாகும்.

தமிழிலக்கியங்களில் தனித்துவமுடைய இக்காப்பியத்தைச் சேர நாட்டு சமணத் துறவியான இளங்கோவடிகள் இயற்றியுள்ளார். இச் சிலப்பதிகாரம் இளங்கோவடிகளாலேயே புனையப் பெற்றதற்கான காரணமும், கதைச் சுருக்கமும் அமைந்துள்ள பதிகச் செய்யுளை முதலில் பெற்று, மங்கல வாழ்த்துப் பாடல் முதலிய பத்துக் காதைகளைக் கொண்ட புகார்க் காண்டமும், அடைக்கலக் காதை முதலிய பதின்மூன்று காதைகளைக் கொண்ட மதுரைக் காண்டமும், குன்றக் குரவை முதலிய ஏழு காண்டங்களைக் கொண்ட வஞ்சிக் காண்டமும் கொண்டு, மூன்று காண்டங்களையும், முப்பது காதைகளையும் உள்ளடக்கியுள்ளது. இக் காப்பியம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பெற்றது என ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

அடைக்கலக் காதை
மாதவியைப் பிரிந்த கோவலன், வாழ்வைத் தேடி கண்ணகியுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறான். கோவலனும் கண்ணகியும் செல்லும் வழியில் கவுந்தியடிகள் எனும் சமணத் துறவியைச் சந்திக்கின்றனர். மூவரும் மதுரை நோக்கிச் செல்கின்றனர். வழியில் மாடலன் மறையோனின் சந்திப்பு நிகழ்கிறது. அதன் பின் மதுரை எல்லையில் மாதரி என்னும் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாகத் தருகின்றார் கவுந்தியடிகள்.

சிலப்பதிகாரத்தினை இளங்கோவடிகள் மூன்று காண்டங்களாகப் பிரித்திருந்தாலும், மதுரைக் காண்டமே சிலப்பதிகாரத்துக்கு உயிராக, கதையின் மையமாக அமைந்துள்ளது. இந்த மதுரைக் காண்டத்தில்தான் அடைக்கலக் காதையும் தன்னிகரில்லாத் தன்மையுடன் விளங்குகிறது.

அடைக்கலக் காதையில் பெருங்காப்பியப் பண்புகள்.
தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பியப் பண்புகள் சிலப்பதிகார அடைக்கலக் காதையில் இடம்பெற்றுள்ளன எனக் கூறப்படுவதைச் சான்றுகளுடன் இனி வரும் பகுதியில் காண்போம்.

வாழ்த்து
மதுரையில் தங்குவதற்கு இடம்பார்க்கச் சென்ற கோவலன் மதுரை நகரைச் சுற்றிப் பார்க்கிறான். பூம்புகார் நகரத்தில் காணாத அரிய காட்சிகளைக் காணுகிறான். கோவலன் மதுரை நகரின் சிறப்பை வாழ்த்துவதாக,
நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி.......
என அடைக்கலக்காதையின் முதற் பகுதியில் பாண்டிய மன்னர் சிறப்புகளையையும், மதுரையைப் பற்றியும் போற்றி வாழ்த்துகிறார் இளங்கோவடிகள். மதுரையை ஆண்ட பாண்டியர்கள் நல்லாட்சி செய்து வருவதால் பாண்டிய நாடு செங்கோலாலும், செல்வத்தாலும் சிறந்து விளங்குகிறது. மேலும் மதுரையைப் பற்றிக் கூறுகையில்,

பதி எழு அறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர்
மக்கள் மதுரையை விட்டு வெளியே குடிபோக நினைக்கவில்லை. பாண்டிய நகரையும் நாட்டையும் பெரிதும் போற்றி வாழ்ந்து வந்தனர் எனக் கோவலன் வாயிலாக குறிப்பிடுகிறார்.

பூம்புகாரைப் பற்றி இளங்கோவடிகள் கூறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய
பொதுஅறு சிறப்பிற் புகார்
புகார் என்ற சொல்லிற்கு,

பகைவர் வந்து புகார்.
வாழ வழி தேடி வேறு நாட்டிற்குச் சென்று புகார்.
பிற நாட்டிற் படையெடுத்துப் புகார்.
எனப் பல பொருள்படச் சன்றோர் நயம் கூறுவதுண்டு.

ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்காகப் பிற நாடு செல்வது அந்நாட்டிற்குச் சிறப்பில்லை. மதுரையும் அவ்வாறு பிற நாட்டிற்குத் தம் மக்கள் வாழ்வது கருதிச் செல்லாத சிறப்புடையது என்பதை அடைக்கலக் காதையின் முதற் பகுதியில் கோவலன் வாயிலாக விவரிக்கிறார் இளங்கோவடிகள்.

வருபொருள் உரைத்தல்
வருபொருள் உரைத்தல் என்பது அல்லது சொல்லப்படும் பொருளை உணர்த்துதல் என்பது காப்பியப் பண்புகளில் ஒன்றாக விளங்குகிறது. அடுத்து வரப்போகிறக் காதையில் கோவலனுக்கு ஏதோ தீயது நடக்கவிருக்கிறது என்பதை வைகறையில் அவன் கண்ட கனவை மாடல மறையோனிடம் கோவலன் கூறுவதாகக் கனாஉத்தி மூலம்,
கோவலன் கூறும்........கடிதீங்கு உறும் என... என்ற வரிகளின் வாயிலாக இளங்கோவடிகள் உணர்த்துகிறார்.

அடைக்கலக் காதையில் மாடலன் மறையோன் வாயிலாகக் கோவலனின் பெருமைகளைக் கூற வைத்திருப்பது காப்பிய உத்தியாகும். அடுத்து வரும் கொலைக்களக் காதையில் கோவலன் ஊழ்வினையின் காரணமாகக் கொலை செய்யப்படவிருப்பதால், இத்தகைய நன்மையைச் செய்தவன் இறக்கப்போகிறானே என்ற இரக்க உணர்வை நம்மிடையே ஏற்படுத்துகிறார் இளங்கோவடிகள் அடுத்து வரும் வரிகளின் மூலம்.
................................ இல்லோர் செம்மல்
இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல்...

தன்னிகர் இல்லாத்தலைவன்
ஒப்பற்றத் தலைவன் ஒருவன் காப்பியத் தலைவனாக இருத்தல் வேண்டும் என்ற பண்பிற்கேற்ப, கோவலனின் சிறப்புகளை இந்த அடைக்கலக் காதையில் மாடலன் மறையோன் மூலம் எடுத்தியம்புகிறார் இளங்கோவடிகள்.

ஞான நன்னெறி நல்வரம்பு ஆயோன்..........
கடக்களிறு அடக்கிய கருணை மறவ.

மதங்கொண்ட யானை மறையோன் ஒருவரைத் தாக்கிய போது, கோவலன் யானை மீதேறி அவனை விடுவித்து, யானையை அடக்கி வீர மறவனாக வெற்றி வாகை சூடினான் என மாடலன் மறையோன் வாயிலாகக் கூற வைத்திருக்கிறார் காப்பிய ஆசிரியர்.

பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக.....
நல்வழிப் படுத்த செல்லாச் செலவு.

கணவனால் ஒதுக்கப்பட்ட பார்ப்பனியின் பாவ புண்ணியங்களைப் போக்கி, அவள் துன்பத்தை நீக்கி, அவளை அவள் கணவனுடன் சேர்த்து வைத்து, அவர்களின் இல்வாழ்வுக்கு கைப்பொருள் தந்து உதவுகின்றான் செல்லாச் செல்வன் கோவலன்.

பத்தினி ஒருத்தி படிற்றுஉரை எய்த
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்

ஒருவன் பத்தினி பெண் மீது வேண்டுமென்றே பழி சுமத்தி பொய் சொன்னதால் பூதம் அவன் உயிரைப் பறிக்க வந்த போது, அவன் தாயின் அலறல் கேட்டு வந்த கோவலன், ‘என்னுயிர் எடுத்து இவனுயிர் விட்டு விடு’ என்கிறான். அதற்குப் பூதம், ‘தீய உயிரை விட்டு விட்டு நல்லுயிர் எடுப்பது அறமாகாது’ என்று மறுத்துவிட்டது. மகனை இழந்து வருந்திய தாய்க்கும் சுற்றத்தாருக்கும், அவர்கள் தொடர்புடைய உறவினர்களுக்கும், தன் உறவினர்களுக்கு உதவுவது போல் உதவி, பல்லாண்டுகளாகப் பாதுகாத்து வந்தான் இல்லோர் செம்மல் கோவலன்.

மாடலன் மறையோன் வாயிலாகக் கோவலனின் வீரம், கொடை மனம், இரக்கக் குணம், அற உணர்வு என அவனின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இளங்கோவடிகள் மேலும் கோவலனை கருணை மறவன், செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் என புகழுரைத்து அடைக்கலக் காதையின் தன்னிகர் இல்லாத் தலைவனாகச் சித்தரிக்கின்றார்.

தன்னிகர் இல்லாத் தலைவி
சிலப்பதிகாரத்தின் தலைமைப்பாத்திரங்களில் மிகுதியாகப் பங்கு கொள்வது கண்ணகியின் பாத்திரமே.

மண்மகள் மீது நடந்தேயறியாத இவளது ‘வண்ணச்சீரடி’ கல்லம் முள்ளும் நீரும் கடந்து செல்கிறது.

யாருக்காக?
அவளுக்காகவா?
இல்லை.
கணவனின் வாழ்வு மலர வேண்டுமென்பதற்காக மட்டுமே.
நடந்தே அறியாதவள். இவ்வளவு தொலைவு நடந்து வந்த பிறகும் அவள் வருத்தப்படுகிறாளாம்.
அவளின் துயரத்திற்காகவா?
இல்லை.
கணவன் படும் துயரத்திற்காக.

கடுங்கதிர் வெம்மையின் காதலன் தனக்கு
நடுங்கு துயர் எய்தி நாப்புலர வாடித்
தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி..

கண்ணகி படும் துயரை இவ்வாறு ஒரு பெண்ணே வெளிப்படுத்தியிருப்பது அவளின் சிறப்பை உணரவைக்கிறது.

வானம் பொய்யாது வளம்பிழைப்பு அறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்தநாடு

என்பது அடிகள் வாக்கு.

கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்

எனத் துறவியான கவுந்தியடிகளைச் சொல்ல வைத்துள்ளார் இளங்கோவடிகள்.
அருகனைத் தவிர மற்றவர்களைப் போற்றாத கவுந்தியடிகளே கண்ணகியைப் போற்றுவது கண்ணகியை அடைக்கலக் காதையிலும் தன்னிகர் இல்லாத் தலைவியாகச் சித்தரிக்கிறது.

மக்கட்பேறு
மாடலன் மறையோன் கோவலனிடம் மாதவிக்குக் குழந்தையாக மணிமேகலை பிறத்தலும், அக்குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா நடைபெறுதலும் எனக் கூறுவது மக்கட்பேறு என்ற காப்பியப் பண்பு அடைக்கலக்காதையில் விவரிக்கப்படுவது அறியவருகிறது.

மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுதும் என்று....



புனல் விளையாட்டு
மாடலன் மறையோன் அகத்திய முனிவன் வாழ்ந்த பொதிகை மலையை வலம் வந்து, குமரியாற்றில் நீராடித் தன் வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கிறான் என வரும் காட்சி, பெருங்காப்பியப் பண்பான புனல் விளையாட்டை தன்னகத்தே அடைக்கலக் காதை கொண்டுள்ளது என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து
தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழில் ஆங்கண்...

ஞாயிற்றின் தோற்றம்
பெருங்காப்பியப் பண்புகளில் ஒன்றான ஞாயிறைப் பற்றியக் குறிப்புகள் மூன்று இடங்களில் இளங்கோவடிகளால் அடைக்கலக் காதையில் கையாளப்பட்டுள்ளன.

காதலி தன்னோடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுகென..

மாடலன் மறையோன் நகர்புறத்தே இருக்கும் இந்தப் புறஞ்சேரி துறவிகளுக்கே உரியது என்றும், கண்ணகியைக் கூட்டிக்கொண்டு கதிரவன் மறைவதற்குள் மதுரை அகநகர் செல்க என்று கோவலனுக்குச் சொல்லுகின்ற இடம் வருகிறது.

மாதரி என்ற இடையர் குலப் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாகத் தருவதற்கு முன்பாக கண்ணகியின் பெருமைகளை மாதரியிடம் கூறும் போது,

வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு..

நா வற்றிப் போய் தான் வாடிய போதும், கடுமையான வெப்பத்தினால் நடக்க முடியாமல் தன் கணவன் உடம்பு வருந்தியதென மிகத் துயர் உற்றாள் என்கிறார் கவுந்தியடிகள்.

முளைஇள வெண்பல் முதிக்குறை நங்கையோடு
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர்..........

அறிவில் சிறந்து விளங்கும் பெண்ணான கண்ணகியை அடைக்கலமாகப் பெற்றுக்கொண்டு மேற்கே கதிரவன் மறைகின்ற மாலை நேரத்தல் மாதரி தன் இருப்பிடம் நோக்கிப் புறப்படுகிறாள் என வரும் காட்சியில் ஞாயிற்றைப் பற்றியக் குறிப்புகள் வருகின்றன.

நாற்பொருள் பயத்தல்
அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு வகை உறுதிப்பொருள்களை பயப்பதாக அமையவேண்டும் என பெருங்காப்பியப்பண்புகள் கூறுகின்றன. கண்ணகியை மாதரியிடம் அடைக்கலமாகக் கொடுப்பதற்கு முன்பாக,

தவமுடையோர் தருகின்ற அடைக்கலக் பொருள் மிகச் சிறிதாயினும் பின்பு அது மிகப் பெரியப் பேரின்பத்தைக் கொடுக்கும்..
என்று கூறும் கவுந்தியடிகள், அதற்கு விளக்கமாக உத்திரகௌத்தன் என்னும் அரசனின் மகனைப்பற்றியும், இல்லற வாழ்வில் அறம் புரிந்த சாயலன் மற்றும் அவன் மனைவி பற்றியும் கூறுகின்றார்.

சாயலனின் மனைவி தன் வினைகள் நீங்க வேண்டும் என்பதற்காக ஒரு தவ முனிவனுக்கு உணவளிக்க முனைகிறாள். பிறரால் துன்புறுத்தப்பட்டு பசியோடு அவள் வீடடினில் நுழைகிறது ஒரு கருங்குரங்கு. முனிவனின் பாதத்தை வணங்கி, அவன் உண்ட பின் மீதமிருந்த உணவை உண்டு, முனிவன் கை கழுவிய நீரையும் அருந்திப் பெரும்பசி தீர்த்தது. அம்முனிவனும் சாயலனின் மனைவியிடம், உன் பிள்ளைகளோடு இக்குரங்கையும் ஒரே நிலையில் வைத்துப் பாதுகாக்கவும் என அடைக்கலமாகக் கொடுத்தான். அவளும் விருப்பத்தோடு வளர்த்து வந்த அக் குரங்கு இறந்துவிடவே, குரங்கிற்காக ஒதுக்கப்பட்டப் பொருளை அதனுடைய தீய பிறப்பு அறுக எனத் தானம் செய்தாள்.

காதற் குரங்கு கடைநாள் எய்தவும்
தானம் செய்வழி அதற்கொரு கூறு
தீதுஅறுக என்றே செய்தனள்.....

அத்தானத்தின் பயனாக மறுபிறவியில் அக்குரங்கு உத்தமகௌத்தன் எனும் அரசனுக்கு அழகும் அறிவும் ஒருங்கே பொருந்திய மகனாகப் பிறக்கிறது. முப்பதிரண்டு ஆண்டுகால அரசாட்சியில் பல வகையானத் தானங்களைச் செய்து தெய்வ வடிவம் பெறுகிறான். முற்பிறப்பில் கருங்குரங்காய் இருந்த தான் சாயலன் மனைவி செய்தத் தானத்தால் இத்தெய்வ வடிவம் பெற்றேன் என்பதை உலகம் அறிவதற்காகத் தன் தெய்வ வடிவில் ஒரு பாகத்துக் கையைக் கருக்குரங்கின் கையாகக் கொள்கிறான்.

தானம் செய்தும் தனக்கு அடைக்கலமாகத் தந்தப் பொருளை இகழாது போற்றித் தங்களின் மக்களோடு மக்களாக ஒன்றாக வளர்த்து வந்ததால், சாயலனும் அவன் மனைவியும் குறையாத இன்பத்தைத் தரும் வீடு பேறு பெற்றார்கள் எனக் கவுந்தியடிகள் உரைக்கின்றார்.

பெருங்காப்பியப் பண்பான நாற்பொருள் பயத்தல் அடைக்கலக் காதையில், கோவலனின் சிறப்புகளை மாடலன் மறையோன் கூறும் இடத்தும், அடைக்கலம் தருவதும், அதைப் பேணுவதும் என கவுந்தியடிகள் மாதரியிடம் கூறும் இடத்தும் நமக்கு விரிவாக விளக்கப்படுகிறது.

கிளைக் கதைகள்
பெருங்காப்பியப் பண்பான கிளைக் கதைகள் அமைதல் என்பனவும் அடைக்கலக் காதையில் கூறப்பட்டுள்ளன எனபதனை நாம் முன்பே பார்த்த கோவலனின் சிறப்புகளில் மாடலன் சொல்லும் மூன்று கதைகளும், அடைக்லப் பொருள் குறித்து கவுந்தியடிகள் சொல்லும் குரங்குக் கை வானவனின் புராணக் கதையும் உறுதிப்படுத்துகின்றன.

நாடகக் காப்பியம்
சிலப்பதிகாரம் தலைசிறந்த நாடகக் காப்பியம் என்று அறுதியிட்டுத் துணிந்து கூறுகிறார் வ.சுப. மாணிக்கம் அவர்கள் . கதை மாந்தர்களின் வாழ்க்கைச் செயல்கள் பல காலங்களில், பல ஆண்டுகளில் நிகழ்வன. ஆனால் நாடக ஆசிரியன் நடந்த கால அளவை எவ்வளவு குறுக்கமுடியுமோ அந்த அளவுக்குக் குறுக்கி, சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பவைப் போலக் காட்டுவான். இத்தன்மையை சிலப்பதிகாரத்திலும் பயன்படுத்தியுள்ளார் இளங்கோவடிகள்.

மாதவியைத் துறந்த கோவலன் வீடு வந்த அன்றே கண்ணகியைக் கூட்டிக் கொண்டு பொழுது புலர்வதன் முன் மதுரை செல்கிறான். கவுந்தியடிகளின் சந்திப்பு, மாடலன் மறையோன் வருகை, புறஞ்சேரியில் இருக்கக்கூடாது மதுரை நகருக்குச் செல்க என மாடலன் கோவலனுக்குச் சொல்லி விட்டு விடைபெறுதலும், மாதரியின் வருகையும், கண்ணகியை அடைக்கலம் பெறுவதும் என அடைக்கலக் காதையும் நாடகப் பண்போடு விறுவிறுப்பாகப் படைக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.

முடிவுரை
உலகத்தின் சிறந்த மொழிகளில் ஒன்றாகிய இலத்தீன் மொழி கண்ட காப்பியம் ‘ஏனத்’. கிரேக்க மொழி கண்ட காப்பியம் ‘ஏதிசி’. அகிலப் புகழ்ப்பெற்ற ஷேக்ஸ்பியரின் ‘மாக்பெத்’. இவ்விலக்கியங்களுக்கு மேலாகப் பெரிதும் பேசப்படுவது, உன்னதமானக் காப்பியம் எனப் புவியோரின் புகழைச் சூடியது மில்டனின் ‘இழந்த சொர்க்கம்’ ஆகும். ஆனால் பத்தாயிரம் வரிகளுக்கு மேம்பட்ட இக்காப்பியத்திற்கு,

.. சிறந்தவொரு காப்பியம் என்பதற்கு அளவு முக்கியமல்ல
என்பது கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டலின் கூற்றாகும். அந்த வகையில் ஏறத்தாழ ஐயாயிரம் அடிகளைக் கொண்ட சிலப்பதிகாரம், அதன் உள்ளடக்கத்தால், உரைத்திருக்கும், உணர்த்தியிருக்கும் பொருள் சிறப்புகளால் உலகளாவிய நிலையில் ஒரு பெருங்காப்பியமென்றே பெருமிதத்துடன் நாம் கூறுவதற்கு அடைக்கலக் காதையிலும் பல பெருங்காப்பியப் பண்புகள் நிறைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.




துணை நூல்கள்
1. இலக்கிய மரபு, மு.வரதராசன், மறுபதிப்பு 2006, பாரி நிலையம், சென்னை.
2. காப்பியத் திறன், சோம. இளவரசு, முதற் பதிப்பு 1987, மணிவாசகர் நூலகம், சென்னை.
3. காப்பியப் பார்வை, வ.சுப. மாணிக்கனார், முதற் பதிப்பு 2010, ராமையா பதிப்பகம், சென்னை.
4. காப்பியத் துளிகள், க. இராஜசேகரன், முதற் பதிப்பு 2008, சீதை பதிப்பகம், சென்னை.
5. சிலப்பதிகாரத்தில் மெய்ப்பாடுகள், இரா. சந்திரமோகன், ப. சரவணன், முதற் பதிப்பு 2007, ராமையா பதிப்பகம், சென்னை.
6. தமிழ் இலக்கியச் சிகரங்கள் ஐம்பது, ப. இளவழகன், முதற் பதிப்பு 2008, நர்மதா பதிப்பகம், சென்னை.
7. சிம் கையேடு

வழு, வழாநிலை, வழுஅமைதி பற்றி நன்னூலார் கூறும் செய்திகள் - ஒரு பார்வை



முன்னுரை 
                  ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் அம்மொழியின் இலக்கண அமைப்புகளே முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. தொல்காப்பியரின் தூர நோக்குச் சிந்தனையின் வழியில், நன்னூலாரின் நன்னூல் இலக்கண விளக்கம் வழு, வழா, வழுஅமைதி என்ற மூன்றையும் கூறி, காலந்தோறும் தமிழ் வாழ வழி வகுத்துத் தந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

வழாநிலை
       நான் நாளை வருவேன்.
நான் என்பது தன்மை பெயர். நாளை என்பது எதிர்காலம் காட்டும். இவைகளுக்கு ஏற்ற வினைமுற்றுவருவேன் என்பதாகும். இவ்வாறு இலக்கணமுறை வழுவாமல் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
இலக்கணப் பிழை இன்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். (வழாநிலை – இலக்கணப் பிழையற்ற முறை)
எ.கா – குயில் கூவும்.
       நாய் குரைக்கும்.


வழு
  நான் நாளை வந்தேன்.    
  நாளை என்னும் எதிர்காலத்தைக் குறிக்கும் சொல்லோடு வந்தேன் என்னும் இறந்த கால வினைமுற்றுச் சேர்த்துக் கூறுவது இலக்கணப் பிழையாகும்.
  இலக்கண முறைக்கு மாறாகப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். (வழு – குற்றம்)
  எ. கா. –
       அம்மா வந்தது.
       அவள் வந்தான்.
வழுவமைதி
  திணையே பால்இடம் பொழுது வினாஇறை
  மரபாம் ஏழும் மயங்கினாம் வழுவே (375<!--[if !supportFootnotes]-->[1]<!--[endif]-->
  இலக்கண நெறிப்படியும், அன்று தொட்டு வழங்கும் முறைப்படியும் அமையாது, பிறழ்ந்தும் மாறியும் திணை,பால், இடம், பொழுது, வினா, இறை (விடை), மரபு முதலியன ஒன்றிற்கொன்று மயங்கியும் மாறி வருவது வழுவாகும். அவ்வழுக்கள் உவப்பு, உயர்வு, சிறப்பு போன்ற காரணங்களால் தக்கதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மொழியில் வழங்கப்படும். அதனையே வழுவமைதி என்பர் இலக்கண வல்லார்கள்.
தாய் தன் குழந்தையை, என் கண்ணே, கண்மணியேஎனக் கொஞ்சுவது அன்பின் காரணமாக வந்த வழுவமைதி ஆகும்.
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->அவன் வந்தது – உயர்திணை அஃறிணையில் முடிந்தது. (திணை வழு)
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->அவன் வந்தாள் – பால் வழு
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->நான் வந்தாய் – இட வழு
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->நாளை வந்தான் – கால வழு
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->பால் கறக்கின்ற பசு சினையா? – வினா வழு
<!--[if !supportLists]-->6.       <!--[endif]-->லிட்டல் இந்தியாவிற்கு வழி கேட்டால், நான் சாப்பிட்டுவிட்டேன் என்பது விடை வழு
<!--[if !supportLists]-->7.       <!--[endif]-->   பூனைக்குட்டியை,பூனைக் கன்று என்பது மரபு வழு

ஐயம் திணைபால் அவ்வப் பொதுவினும்
மெய்தெரி பொருள் மேல் அன்மையும் விளம்புப (376) <!--[if !supportFootnotes]-->[2]<!--[endif]-->
திணை பால்களில் ஐயம் ஏற்படும் பொழுது அவ்வவற்றின் பொதுச் சொல்லாலும், துணிந்த பொருளல்லாத பிறிதொன்றின் மேல் அன்மை சேர்த்தும் கூறுதல் வேண்டும். (எதிர்மறையில் கூறுதல்)
மரமோ, மனிதனோ, அங்கு நிற்கும் உருவம். உருவம் என்பது பொதுச்சொல். இதைத்தவிர்த்து மரமோ மனிதனோ அங்கு நிற்பவன், நிற்பது என்றால் இலக்கணப் பிழையாகிவிடும்.
பாலில் ஆணோ பெண்ணோ என ஐயம் இருந்தால்,
ஆணோ பெண்ணோ அங்கே தோன்றுகின்றவர் எனப் பொதுச் சொல்லால் வினவியும் வினா வழு ஏற்படாமல் தவிர்த்தல் வேண்டும்.
    திணை வழுவமைதி
    உயர்திணை தொடர்ந்த பொருள்முதல் ஆறும்
    அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின (377) <!--[if !supportFootnotes]-->[3]<!--[endif]-->
    உயர்திணை எழுவாயாக முதலில் வர, அதைத் தொடர்ந்து அஃறிணைப் பொருள்களான ( பொருள், இடம்,காலம், சினை, குணம், தொழில் ) ஆறும், அவ்வுயர்திணை முடிபையே பெறும்.
     எ.கா 
     1. முருகன் அருள் உடையான் (பொருள்)
     2. முருகன் மலை உடையான் (இடம்)
     3. முருகன் கார்த்திகை நாளினன் (காலம்)
     4. முருகன் முகம் ஆறுடையான் (சினை)
     5. முருகன் குடிமைச் சிறப்பினன் (குணம்)
     6. முருகன் போர் கடியன் (தொழில் – முருகன் போர் கடிது என்றால் முருகனது போர் கடிது என்று பொருள்படும். முருகன் என்பதே எழுவாயானால், கடியன் என்றே முடிக்க வேண்டும்.)
     திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்
     மிகவினும் இழிபினும் ஒருமுடி பினவே (378) <!--[if !supportFootnotes]-->[4]<!--[endif]-->
     திணைகளும், பால்களும், வெவ்வேறு செயல்களுக்குரிய பல பொருள்களும் ஒன்றோடொன்று கலந்து ஒரு தொடராக வருமாயின், அவை சிறப்பின் காரணமாகவும், மிகுதியின் காரணமாகவும், இழிவின் காரணமாகவும் ஒரு முடிவைப் பெறும்.
சிறப்பு –
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
 திங்களும் சான்றோரும் ஒப்பர்
     இங்கு உயர்திணையும் அஃறிணையும் கலந்து சிறப்பினால் ஒப்பர் என்னும் உயர்திணையின் முடிபைப் பெற்றது. சான்றோர் திங்களைப் போல மறுத்தாங்காமை இங்கே சிறப்பு.
மிகுதி –
பார்ப்பார், தவம் செய்வார், பிணிப்பட்டார், மூத்தார்,பசு, பெண்டிர் இவர்களுக்கு வழிவிட்டு உதவ வேண்டும் – எனும் கருத்தமைந்த பாடலில் பெரும்பாலும் உயர்திணையே வந்துள்ள மிகுதியால் இவர்களுக்கு என்னும் முடிபு வந்துள்ளது.
இழிவு –
     மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா
இருதிணையும் கலந்து, இழிவின் காரணமாக விடா என்ற அஃறிணை முடிபைக் கொண்டன.


உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும்
இழிப்பினும் பால்திணை இழுக்கினும் இயல்பே (379) <!--[if !supportFootnotes]-->[5]<!--[endif]-->
     மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, சினம், எள்ளல் போன்ற காரணங்களுக்காகப் பாலும் திணையும் வழுவி (தவறி) வரினும் அது இயல்பேயாகும்.
பால் –
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->தன் மகனைஎன்னம்மா, வந்தாயா எனக் கொஞ்சும் போது ஆண்பால் பெண்பாலாவது மகிழ்ச்சியினால் சொல்வதால் தவறன்று.
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->கம்பர் இராமகதை பாடினார் என்பது, மதிப்புப் பன்மை. ஒருமையை உயர்வினால் பன்மையில் சொல்வது.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->அம்மையே அப்பா – என்று ஆண்டவனை அன்னை எனவும் கூறுவது சிறப்பினாலாகும்.
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->‘எனைத்துணையராயினும் என்னாம், தினைத் துணையும் தேரான் பிறனின் புகல் – எனும் குறளில் (144) எனைத்துணையர் என்ற பலர்பால்,சினத்தின் காரணமாகத் தேரான் என ஒருமையில் முடிந்தது.
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->எதற்கும் அஞ்சி நடுங்கும் ஆணை, இவனொரு பெண்பிள்ளைஎன்பது இழிப்பினால் ஆண்பாலைப் பெண்பாலாகக் கூறுவது.
திணை –
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->ஒரு பசுவைஎன்னம்மை வந்தாள் என்பது உவப்பினால் (மகிழ்ச்சி) அஃறிணை உயர்திணையாயிற்று.
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->‘செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கு – உயர்வினால் அஃறிணை உயர்திணையாயிற்று. தூது சென்று,உயிர் தந்தமைக்கு கிளிக்கு உயர்வு.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->‘தம் பொருள் என்பதம் மக்கள் – சிறப்பினால் உயர்திணை அஃறிணையாயிற்று.
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->‘ஏவவும் செய்கலான் தான்தேரான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய் – என்பது சீற்றத்தால் உயர்திணை அஃறிணையானது. தேரானை நோய் என்றது அஃறிணை.
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->‘நாயினும் கெட்ட நன்றியில்லான் – இழிப்பினால் நன்றியில்லானை நாய் என அஃறிணையாய்க் கூறப்பட்டது.
உயர்திணை அஃறிணையாகவும், அஃறிணை உயர்திணையாகவும் மயங்கி வருவது திணை வழுவாகும். ஆண்பால் பெண்பாலாகவும், பெண்பால் ஆண்பாலாகவும்,ஒருமைப் பால் பன்மைப்பாலாகவும், பன்மைப்பால் ஒருமைப் பாலாகவும், பலர்பால் பிறபாலாகவும் மயங்கி வருதல் பால் வழுவாகும். மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, சினம், இழிவு ஆகிய காரணங்களால் இம்மயக்கம் ஏற்படக்கூடும்.
பால் இட வழுவமைதி
     ஒருமையிற் பன்மையும், பன்மையிற் ஒருமையும்
     ஓரிடம் பிறரிடம் தழுவலும் உளவே (380) <!--[if !supportFootnotes]-->[6]<!--[endif]-->
     தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களுக்குரிய சொல் தம்முள் மாறி வழங்குவது இடவழுவாகும். அவ்வாறு மாறி வழங்குவது குற்றமன்று என்று அவற்றை ஏற்றுக்கொள்வது இடவழுவமைதியாகும்.
     இருநோக்கு இவளுன்கண் உள்ளது வருநோக்கு
      நோய்நோக்குகொன் றந்தோய் மருந்து – இக்குறளில் இருநோக்கு என்பதற்கு ஏற்ப உள்ளன என்று இருக்க வேண்டியது உள்ளது என இருக்கிறது.
     அடிகள் எப்பொழுது வந்தனரோ?’
     நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்?’
முன்னிலையில் படர்க்கை வருதல் வழுவமைதியாகக் கொள்ளப்படுகிறது.
     தமிழ்மாறன் நீதி தவறுவானா?’
 ஐயாவிடமிருந்து தப்ப முடியுமா?’
முன்னிலையைப் படர்க்கையாக்கிக் கூறுதல்.
இடம் வழுவாமல் காத்தல்
     தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை
     எழுவாய் இரண்டும் எஞ்சிய ஏற்கும் (381) <!--[if !supportFootnotes]-->[7]<!--[endif]-->
     தரல், வரல், கொடை, செலல் என்னும் இந்நான்கு சொற்களையும் படர்க்கை ஏற்கும். முதலிலுள்ள தரல், வரல் என்னும் இரண்டையும் தன்மை முன்னிலைகள் ஏற்கும்.
எ.கா –
படர்க்கை
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->அவனுக்குத் தந்தான்
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->அவனிடத்து வந்தான்
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->அவனுக்குக் கொடுத்தான்
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->அவனிடத்துச் சென்றான்
தன்மை
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->எனக்குத் தந்தான்
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->என்னிடத்து வந்தான்
முன்னிலை
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->உனக்குத் தந்தான்
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->உன்னிடத்து வந்தான்
எனக்குக் கொடுத்தான், நின்பால் வந்தான் என்பன போல் வரும் சொற்களை வழுவமைதியாகக் கொள்ளல் வேண்டும்.
காலம்
     இறப்பு எதிர்வு நிகழ்வு எனக் காலம் மூன்றே (382) <!--[if !supportFootnotes]-->[8]<!--[endif]-->
வினைச்சொல் காலம்காட்டும் எனக் கூறப்பட்டது. அவை இறந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் என மூன்று வகைப்படும். சென்றான், செல்வான், செல்கின்றான் – இவை முறையே இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்பனவாகும்.
கால வழுவமைதி
     முக் காலத்தினும் ஒத்தியல் பொருளைச்
     செப்புவர் நிகழும் காலந் தானே (383) <!--[if !supportFootnotes]-->[9]<!--[endif]-->
மூன்று காலங்களிலும் தமது தொழில் இடையறாது ஒரு தன்மையாய் நிகழும் பொருள்களை நிகழ்காலத்தால் கூறுவர்.
மலை நிற்கின்றது.
தெய்வம் இருக்கின்றது.
இறைவன் கொடுக்கின்றார்.
மலைக்கு நிற்றலும், தெய்வத்திற்கு இருத்தலும்,இறைவனுக்கு கொடுத்தலும் முக்காலத்திற்கும் உள்ள தன்மையாகும்.
     விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும்
     பிறழவும் பெறூஉம்முக் காலமும் ஏற்புழி (384) <!--[if !supportFootnotes]-->[10]<!--[endif]-->
விரைவு, மிகுதி, தெளிவு ஆகியவை காரணமாக ஒரு காலத்திற்குரிய சொல்லை வேறொரு காலத்திற்குரிய சொல்லாகக் கொள்வது காலவழுவமைதியாகும்.
     நல்லது செய்யின் சுவர்க்கம் புக்கான்
இவ்வாக்கியத்தில் தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாகக் கூறப்பட்ட கால வழுவமைதி.
     கட்டுரையை எழுதிவிட்டாயா? என்னும் ஆசிரியரின் கேள்விக்கு இன்னும் அதனை எழுதத் தொடங்காத மாணவன் அல்லது எழுதிக்கொண்டிருக்கும் மாணவன்,முடித்து விட்டேன் என்பது விரைவின் காரணமாக நிகழ்தலின் வழுவமைதியாகக் கொள்ளப்படும்.
அறுவகை வினா
     அறிவு அறியாமை ஐயுறல் கொளல்கொடை
     ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார் (385) <!--[if !supportFootnotes]-->[11]<!--[endif]-->  
     ஒன்றைப்பற்றி தாம் அறிந்து கொள்வதற்காகவே ஒருவரை ஒருவர் வினவுகின்றோம். இவ்வாறு வினவும் வினாக்கள் அறுவகைப்படும்.
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->அறிவினா – தாம் அறிந்துள்ள ஒன்றை மற்றவரும் அறிந்துள்ளனரா என அறிய வினவும் வினா. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?’
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->அறியா வினா – தான் அறியாத ஒன்றை மற்றவரிடம் வினவி அறிந்து கொள்ளுவதற்கான வினவும் வினா. மாணவன் ஆசிரியரை நோக்கி, ஐயா, இச்செய்யுளின் பொருள் யாது?’ என வினவுவது.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->ஐய வினா – தனக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தை அகற்றிக் கொள்ளும் நோக்கில் கேட்கப்படும் வினா ஐய வினா. இதனைச் செய்தவர் இராமனா? இலக்குமணணா?’
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->கொளல் வினா ஒன்றினை மற்றவரிடம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வினவும் வினா கொளல் வினா. வணிகரே,பருப்பு உள்ளதா? என்று வினவுதல். பருப்பு இருப்பின் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கேட்கப்பட்ட வினா.
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->கொடை வினா – ஒன்றை மற்றவருக்குக் கொடுக்கும் பொருட்டு வினவும் வினா கொடை வினா. செல்வந்தர் இரவலரை நோக்கி, அணிய ஆடை உள்ளதோ?’ எனக் கேட்டல். ஆடையைக் கொடுக்கும் பொருட்டுக் கேட்கப்படும் வினா.
<!--[if !supportLists]-->6.       <!--[endif]-->ஏவல் வினா – ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுவதற்காக வினவும் வினா.தம்பி கடைக்குச் சென்று பழங்கள் வாங்கி வருவாயாஇது பழங்கள் வாங்கி வருமாறு கேட்கப் பட்டதால் ஏவல் வினா ஆகும்.
எண்வகை விடை
     வினவப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் முறை எட்டு வகையில் அமைந்துள்ளன.
     சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
     உற்ற துரைத்தல் உறுவது கூறல்
     இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
     நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப (386) <!--[if !supportFootnotes]-->[12]<!--[endif]-->
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->சுட்டு விடை – வினவும் வினாவிற்குச் சுட்டி விடையளிப்பது சுட்டு வினா. கடற்கரைக்குச் செல்லும்வழி யாது? எனும் வினாவுக்கு, இது என்பது விடையாயின் சுட்டு விடை ஆகும்.
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->மறை விடை – வினவும் வினாவிற்கு எதிர்மறைப் பொருளில் விடையிருப்பின் மறை விடை எனப்படும். நீ நீந்துவாயா?’ இவ்வினாவிற்கு நீந்த மாட்டேன் என்று விடையளித்தால் மறை விடை ஆகும்.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->நேர் விடை – வினவும் வினாவிற்கு உடன்பாட்டுப் பொருளில் விடையளித்தால் நேர் விடை எனப்படும். நீ நாளை பள்ளி செல்வாயா?’ இவ்வினாவிற்குச் செல்வேன் என்று விடையளித்தால் நேர் விடை ஆகும்.
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->ஏவல் விடை – வினவப்படும் வினாவிற்கு வினாவியவரையே ஏவுதல் ஏவல் விடை எனப்படும். கடைக்குச் செல்வாயா?’.இவ்வினாவிற்கு நீயே செல் என்று விடையளித்தால் ஏவல் விடை ஆகும்.
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->வினா எதிர் வினாதல் – வினவும் வினாவிற்கு விடையாக வினாவாகவே கூறுதல் வினா எதிர் வினாதல் விடை எனப்படும். நீ தேர்வுக்குப் படித்தாயா?’ இவ்வினாவிற்கு, படிக்காமல் இருப்பேனா?’ என்று வினவுவது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.
<!--[if !supportLists]-->6.       <!--[endif]-->உற்றது உரைத்தல் விடை – வினவும் வினாவிற்குத் தனக்கு உற்றதை விடையாகக் கூறுதல். நீ சொற்பொழிவாற்றுவாயா?’இவ்வினாவிற்குத் தொண்டை வலிக்கிறது என்று தனக்கு நேர்ந்ததைக் கூறுவது.
<!--[if !supportLists]-->7.       <!--[endif]-->உறுவது கூறல் விடை – வினவும் வினாவிற்குத் தனக்கு நிகழப்போவதை விடையாகக் கூறுவது. நீ இதனைச் சாப்பிடுவாயா?’ என்ற வினாவிற்கு வயிறு வலிக்கும்என்று கூறுதல்.
<!--[if !supportLists]-->8.       <!--[endif]-->இனமொழி விடை – வினவும் வினாவிற்கு இனமான வேறொன்றை விடையாகக் கூறுதல். நீ பாடுவாயா?’இவ்வினாவிற்கு நான் ஆடுவேன் என்று கூறுதல் பாடலுக்கு இனமான ஆடலைக் குறிப்பிட்டமையால் இன மொழி எனப்படும்.
வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல் (387) <!--[if !supportFootnotes]-->[13]<!--[endif]-->
     வினவும் போதும் விடை கூறும் போதும் சினையை முதலோடும், முதலைச் சினையோடும் மயங்கும்படி கலந்து கூறக் கூடாது.
     தாய்மொழி சிறந்ததோ? பிறமொழி சிறந்ததோ? எனும் வினாவிற்குத் தாய்மொழியே பிறமொழியினும் சிறந்தது என விடையிருக்க வேண்டும். முதலுக்கு முதலே விடையாதல் இது.
     தமிழ்ச்சொல் இனிதோ? பிறமொழி இனிதோ? என வினவின், பிறசொல்லினும் தமிழ்ச்சொல்லே இனிது எனல் வேண்டும். சினைக்கு சினையே விடையாதல் இது. இவ்வாறல்லாமல் பிறசொல்லினும் தாய்மொழி இனிது எனக் கலந்து கூறல் தெளிவுதராது வழுவாகிவிடும்.
மரபு
     நம் முன்னோர் எப்பொருளை எச்சொல்லால் எம்முறையில் வழங்கினாரோ, அப்பொருளை அச்சொல்லால் அம்முறைப்படியே நாமும் வழங்குவது மரபு ஆகும்.
    

எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
     செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே  (388) <!--[if !supportFootnotes]-->[14]<!--[endif]-->
     ஆனால் ஏதேனும் ஒரு காரணம் பற்றி மரபு மாறி வழங்குதல் ஏற்றுக் கொள்ளப்படுமாயின் அது மரபு வழுவமைதி எனப்படும்.
     கத்தும் குயிலோசை என்றன் காதில் விழவேண்டும்
     குயில் கூவும் என்பது மரபு. அதற்கு மாறாக, கத்தும்என்று கூறியது மரபு வழுவாவினும் பெருங் கவிஞர் பாடினார் என்னும் காரணம் நோக்கி மரபு வழுவமைதி ஆயிற்று.
மரபு வழுவமைதி
     சிறப்புப் பெயர், இயற்பெயர் ஆகியவற்றை முன்பின்னாக இலக்கண மரபுக்கு மாறாகக் கூறுவது மரபு வழுவமைதியாகும்.
     கேளாளதைக் கேட்பது போலவும், சொல்லாததைச் சொல்வது போலவும், நடவாததை நடப்பது போலவும்,செய்யாததைச் செய்வது போலவும் அஃறிணையிடத்தில் கூறுவது மரபு வழுவமைதியாகும்.
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->சோழன் கரிகாலன் என்பதை கரிகாற் சோழன் என மாற்றிக் கூறுவது மரபு வழுவமைதி. இதில் சோழன் என்பது சிறப்புப் பெயர், கரிகாலன் என்பது இயற் பெயர். முன் பின்னாக மாற்றிக் கூறியதால் மரபு வழுவமைதி.
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->‘கடலே, நீ இரவெல்லாம் துயின்றிலை’, துயிலாதக் கடலை துயிலுவதாகச் சொல்லுவது மரபு வழுவமைதி.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->‘இவ்வழி கோலாலம்பூருக்குப் போகும்’, போகாத வழியைப் போவதாகக் கூறுவது மரபு வழுவமைதியாகும்.

செயப்படுபொருளைக் கருத்தாவாக்கிக் கூறும் மரபு
     பேருந்து ஓடிற்று.
     முள் குத்தியது.
     மையுண்ட கண்.
ஒருபொருட் பன்மொழி
     உயந்தோங்கு மலை.
     உயர்ந்து, ஓங்கு என்னும் இரு சொற்களும் ஏறக்குறைய ஒரே பொருளைத் தந்து, மிக உயர்ந்த மலைஎன்னும் பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு ஒரு பொருள் தரும் இரண்டு சொற்கள் சேர்ந்து வருவது ஒரு பொருட்பன்மொழி எனப்படும்.
     வெங்கொடும்பசி – வெம்மை + கொடுமை + பசி
     இதில் வெம்மை, கொடுமை எனும் இரு சொற்களும் ஒரே பொருளைத் தருகின்றன. இவ்வாறு செவிக்குச் சொல்லின்பம் தோன்ற நிற்றல், அல்லது பசிக் கொடுமையின் மிகுதியை உணர்த்தல் ஆகிய சிறப்பினால் ஒரே பொருள் தரும் இரு சொற்கள் சேர்ந்து வந்ததால் இது ஒரு பொருட் பன்மொழியாகும்.
அடைமொழி
                ஒரு பொருளைச் சிறப்பிக்க அடுத்து வரும் மொழிஅடைமொழி எனப்படும். அதாவது, நாம் ஒரு பெயரையோ அல்லது வினையையோ சிறப்பிக்க அல்லது இகழ நேரும் போது, பெயருக்கு முன்னும் வினைக்கு முன்னும் சில சொற்களைச் சேர்த்து எழுதுகின்றோம். அச்சொற்கள் பெயரையோ அல்லது வினையையோ அடுத்து நிற்பதால்அடைமொழி எனப்படும்.
     இவ்வடைமொழி பொருள், இடம், காலம், சினை,குணம், தொழில் என்னும் ஆறினையும் உணர்த்தி வரும். இனம் உள்ள அடைமொழி, இனம் இல்லா அடைமொழி என இரு வகைப்படும். இதை நன்னூலின், பொருள் முதல்...எனத் தொடங்கும் 401 ஆவது நூற்பா விளக்குகிறது.
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->பொருள் – பால் குடம்,நெய்க்குடம் (இனமுள்ளவை) உப்பளம் (இனமில்லாதது)
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->இடம் – குள நெல்,வயல் நெல் (இனமுள்ளவை) ஊர்மன்று (இனமில்லாதது)
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->காலம் – தைப்பிறை,மாசிப்பிறை (இனமுள்ளவை) அரும்பு (இனமில்லாதது)
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->சினை – பூ மரம், காய் மரம் (இனமுள்ளவை) இலை மரம் (இனமில்லாதது)
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->குணம் – செந்தாமரை,வெண்டாமரை (இனமுள்ளவை) வெண்திங்கள் (இனமில்லாதது)
<!--[if !supportLists]-->6.       <!--[endif]-->தொழில் – ஊன்றுகோல், ஊதுகோல் (இனமுள்ளவை) தோய்தயிர் (இனமில்லாதது)
அடைமொழி இனத்தைச் சுட்டுவதோடன்றி இனமல்லாததையும் சுட்டும்.
     சிங்கப்பூர் குழு வெற்றி பெற்றது’               
 எனின் அதனுடன் எதிர்த்தாடிய குழு தோல்வியுற்றது என்பது செய்தியாகப் பெறப்படும்.
அடைமொழி சினை முதலோடு வருதல்
     அடைமொழி ஒரு சினைப்பொருளோடு சேர்ந்து வருதலும் உண்டு. முதற் பொருளோடு சேர்ந்து விடுதலும் உண்டு.
     வேற்கை முருகன் – இதில் வேல் என்பது அடைமொழி, கை என்பது சினை (உறுப்பு). அடைமொழி சினையோடு சேர்ந்து வந்துது. வேல் என்னும் அடைமொழி,கை என்னும் சினையைச் சிறப்பிக்கச் சேர்ந்து வந்துள்ளது.
     சிறு பொன்வண்டு – இதில் சிறு என்னும் அடைமொழியும் பொன் என்னும் அடைமொழியும் முதற் பொருளைச் (வண்டை) சிறப்பிக்கச் சேர்ந்து வந்துள்ளன. இது,ஈரடை மொழி முதலோடு வருதல் என்று சொல்லப்படும்.
இரட்டைக் கிளவி
     மரக்கிளை சடசட என முறிந்து.
     இத்தொடரில் சடசட என்பது ஒலியை உணர்த்துகிறது.சட என்பது இரண்டு முறை வந்துள்ளது. சட என்று மட்டும் தனியாகச் சொன்னால் பொருள் தராது. சட சட என வந்தால்தான் பொருள் தரும். இச்சொல் இரட்டைக் கிளவி எனப்படும்.



அடுக்குத் தொடர்
     புலவர்கள் மன்னனை வாழ்க வாழ்க என வாழ்த்தினர்.
     இத்தொடரில் வாழ்க என்னும் சொல் மீண்டும் வந்துள்ளது. வாழ்க எனத் தனியாகச் சொன்னாலும் பொருள் தரும். இவ்வாறு ஒரு சொல் விரைவு, வெகுளி, தெளிவு,அச்சம், உவகை முதலியனக் காரணமாக, இரண்டு அல்லது மூன்று முறை அடுக்கி  வருவது அடுக்குத் தொடர் எனப்படும்.
மேலும் சில வழுவமைதிகள்  
தம்பால் இல்லது.. எனத் தொடங்கும் 406 ஆவது நூற்பா, தம்மிடத்து இல்லாத பொருளை இல்லை எனக் கூறாமல், அதற்கு இனமாகத் தம்மிடம் உள்ள பொருளைக் கூறுதல் ஆகும்.
     பயறுண்டோ வணிகரே, என்பார்க்கு உழுந்துண்டு,உழுந்தும் துவரையும் உண்டு என்று அதன் இனத்தையும் கூறி, உள்ள அளவையும் கூறுதல்.
குறிப்பினால் பொருள் அறியப்படும் சொற்களும் வழக்கில் உண்டு.
அவர் தங்கத்தட்டில் சாப்பிடுபவர். (செல்வநிலை வெளிப்படுதல்)
மேலும் உருவகத்திலும் உவமையிலும் வரும் சொற்கள் உயர்திணை அஃறிணை மயங்கியும், சினை முதல் மயங்கியும் வருதலும் உண்டு. அவற்றை இடத்திற்கேற்பப் பேணிக் கொள்ளுதல் கடனாகும்.
 

முடிவுரை
          எந்த ஒரு மொழிக்கும் அரணாக அமைவது அம்மொழிக்கு அமைந்த இலக்கணமாகும். நம் தமிழ் மொழியின் இலக்கணம் தூர நோக்குச் சிந்தனையுடையதாகும். தொல்காப்பியர் காலத்து முன் இருந்து இன்றைய நவீன இலக்கியக் காலம் வரை எக்காலமும் வாழக்கூடிய மொழி தமிழ் மொழி. நன்னூலார் விளக்கிய வழுவமைதி, தமிழ் காலம்  தோறும் வாழ வழி வகுத்துள்ளது என்றால்அது மிகையாகாது. 

துணை நூல்கள்
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->நன்னூல் சொல்லதிகாரம், தமிழண்ணல், இரண்டாம் பதிப்பு 2008, தமிழ்மொழிப் பயிலகம், மதுரை.
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->நன்னூல் சொல்லதிகாரம், சோம. இளவரசு, மூன்றாம் பதிப்பு,மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->சிம் கேயேடு.          
            
<!--[if !supportFootnotes]-->
<!--[endif]--> 
<!--[if !supportFootnotes]-->[1]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 187
<!--[if !supportFootnotes]-->[2]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 188
<!--[if !supportFootnotes]-->[3]<!--[endif]-->  இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 95
<!--[if !supportFootnotes]-->[4]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 190
<!--[if !supportFootnotes]-->[5]<!--[endif]-->  இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 97
<!--[if !supportFootnotes]-->[6]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 193
<!--[if !supportFootnotes]-->[7]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 194
<!--[if !supportFootnotes]-->[8]<!--[endif]-->  இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 100
<!--[if !supportFootnotes]-->[9]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 195
<!--[if !supportFootnotes]-->[10]<!--[endif]-->  இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 100
<!--[if !supportFootnotes]-->[11]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 196
<!--[if !supportFootnotes]-->[12]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 196
<!--[if !supportFootnotes]-->[13]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 197
<!--[if !supportFootnotes]-->[14]<!--[endif]--><!--[if !supportFootnotes]-->[14]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 198