Search This Blog

Saturday, November 10, 2018

1970 க்குப் பிறகு 60% மிருகங்கள் அழிந்துள்ளன..!"- அதிர்ச்சித் தரும் WWF அறிக்கை.

சுமார் 50 வருடகாலத்தில் மற்ற நாடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் அழிந்து இந்தியா, சீனா மற்றும் சுற்றியுள்ள சின்னஞ்சிறிய நாடுகளில் மட்டுமே மனிதர்கள் பிழைத்திருக்கும் நிலை வந்தால் என்ன ஒரு பதற்றமும், பயமும் இருக்கும். ஆனால், எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் அதுதான் நமது துணை இனங்களான மிருகங்களுக்குக் கடந்த 50 வருடங்களில் நடந்துள்ளது என்கிறது 2018 க்கான WWF (World Wide Fund for Nature) அமைப்பின் `Living Planet' ஆய்வறிக்கை. அதன்படி 1970-ம் ஆண்டுக்குப் பிறகு முதுகெலும்பு இனங்களில் சுமார் 60% மனித நடவடிக்கைகளாலும், ஆதிக்கத்தாலும் நடந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. இது பாலூட்டிகள், பறவைகள் என அனைத்தையும் உள்ளடக்கியது.
நாம் எந்த அளவு அழுத்தத்தை மிருகங்களுக்கும் இயற்கைக்கும் தந்துள்ளோம் என்பதை நினைவுபடுத்தும் அபாயமணி இது என்பதை அணிந்துரையில் கூறுகிறார் இதன் நிர்வாக இயக்குநர் மார்கோ லம்பர்டினி. மொத்தமாகப் பூமியில் நடந்துள்ள மாற்றத்தைக் கண்காணித்துள்ள இந்த 75 பக்க அறிக்கையைப் பார்வையிட்டதில் முக்கிய அச்சுறுத்தும் தகவல்களை மட்டும் இங்குப் பட்டியலிடுகிறேன்.
நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை சமீபத்தில் உலகம் மாறியுள்ளது, இயற்கை நமக்கு ஏன் தேவை, பல்லுயிர்களைக் காப்பது ஏன் மிகமுக்கியம் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது. தூய்மையான காற்று, நீர் தொடங்கி வணிகவளங்கள் வரை இயற்கைதான் நமக்கு வாழ்வளித்து வருகிறது. வருடம் 125 ட்ரில்லியன் டாலர்கள் வரை இயற்கையின் வழியாக மட்டும் நாம் வருமானம் ஈட்டுகிறோம். உலகமயமாக்கலுக்குப் பின் கடகடவென வளர்ந்துள்ள நாமும், நம் வணிகமும் இயற்கையை அப்படியே மறந்துவிட்டோம். கடைசி பனியுகத்துக்குப் பிறகு சுமார் 11,700 ஆண்டுகளாகச் சமநிலையில் இருக்கிறது பூமி. இது இன்னும் 50,000 ஆண்டுகள் தொடரும் என்பது கணிப்பு. ஆனால் நடந்துவரும் அதிவேக மாற்றங்களால் அவ்வளவு காலம் தொடர வாய்ப்பில்லை. இந்த யுகமே `Anthropocene' என்றுதான் அழைக்கப்படுகிறது. இதற்கு மனிதர்கள் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்திய காலம் என்று பொருள்.
1500 க்குப் பிறகு அழிந்த மிருக இனங்களில் 75% அதிகமானவற்றுக்கு மனித நடவடிக்கைகள்தாம் காரணமாக இருந்துள்ளனவாம். இதில் விவசாயத்துக்காக அழிக்கப்பட்ட காடுகளும் ஒரு முக்கியக் காரணம். இன்றும் வாழ்வினங்களுக்கு அதே வேட்டையாடுதல், அளவுக்கு அதிகமான மீன்பிடித்தல், காடுகளை அழித்தல் போன்ற நடவடிக்கைகள் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
நிலச் சீரழிவால் நிலம் சார்ந்த சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இது 300 கோடிக்கும் மேலான மனிதர்களையே நேரடியாகப் பாதிக்கிறது. தற்போது உலகில் வெறும் கால் பங்கு நிலம்தான் மனித பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் இருந்துவருகிறது. 2050-ம் ஆண்டை எட்டும்போது இது பத்தில் ஒரு பங்காகிவிடும். இந்த நிலச் சீரழிவால் மகரந்த சேவை செய்யும் தேனீக்கள், பூச்சிகள் தொடங்கி பெரிய மிருகங்கள் வரை பாதிப்புகளைச் சந்திக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைவது மிகவும் மோசமான நிலையைப் பூமியில் உண்டாக்கும். உலகின் 75% பயிர்கள் இந்த மகரந்தம் இல்லையென்றால் உயிர்பெறமுடியாது. இந்தப் பயிர்களும் மற்ற காய்கனிகளும்தாம் மனிதனின் முக்கிய உணவாக அன்று முதல் இன்றுவரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றம் தொடங்கி நகரமயமாக்கல் வரை நாம்தாம் இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கு பெரிய காரணமாக இருந்துவருகிறோம். இந்த மகரந்த சேவகர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டியது நமது கடமை.
பூமியில் மண்ணில் இருக்கும் வளங்களும் பெரும் அளவில் சுரண்டப்பட்டு வருகின்றன. உலகின் கால்வாசி உயிரினங்கள் நம் காலின் கீழ் தான் இருக்கின்றன. இதில் இருக்கும் நுண்ணுயிர்கள்தாம் மண்ணின் தன்மையை நிர்ணயிக்கின்றன. கிட்டத்தட்ட மனிதர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் மண்ணுக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருந்துகொண்டேதாம் இருக்கின்றன. மண்ணுக்கு மிகவும் ஆபத்தான சூழல் இருக்கும் பரப்புகளில் இந்தியாவும் இடம்பெறுகிறது.
Soil அறிக்கை:
இந்த வருடங்களில் அடுத்த மிகப்பெரிய பாதிப்புகளை கண்டது காடுகள்தாம். இதற்கென்றே `Living Forests' என்ற சிறப்பு ஆய்வறிக்கையை வெளியிடுகிறது WWF. கால்நடை பராமரிப்பு, அதிக அளவிலான வேளாண்மை, காட்டுத்தீ, சுரங்க வேலைகள், நீர் மின் நிலையங்கள், அதிக அளவில் வெட்டப்படும் மரங்கள் ஆகியவைதாம் காடுகளுக்கு முக்கியப் பாதிப்புகளுக்குக் காரணிகளாகப் பார்க்கப்படுகிறது. அதிக அழிவை 2010 தொடங்கி 2030 வரை சந்திக்கவுள்ள இடங்களும் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அமேசான் போன்ற முக்கியக் காடுகள் பெரும் அழிவைச் சந்திக்கின்றன.
Forest அறிக்கை:
நிலம் மட்டுமல்லாமல் நீர்நிலைகளும் மனித பாதிப்புகளிலிருந்து தப்பிக்கவில்லை. பவளப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள்தாம் மிகவும் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன. 20 கோடிக்கும் மேலான மக்கள் பவளப்பாறைகளை நம்பிதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அது அவர்களுக்கே தெரியாது. அவர்களை பெரும் அலைகளிலிருந்தும், புயல்களிலிருந்தும் பாதுகாப்பது அவைதாம். இப்போது இருக்கும் நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் பாதிக்குள் 90% பவளப்பாறைகள் காணாமல் போக வாய்ப்புண்டு. மேலும் வளர்த்துவரும் சாட்டிலைட், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக மீன்பிடித்தல் எந்த அளவு மீன் இனங்களை அழித்துவருகிறது எனவும் தெரியவந்துள்ளது. பிடிக்கப்படும் 1500 மீன் இனங்களில் 10 மட்டும்தான் மீண்டும் பிடிக்கப்படும் எண்ணிக்கையை அடைகிறது. இது மட்டுமல்லாமல் கடல்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக்தான். கோடிக்கணக்கான டன்களில் பிளாஸ்டிக் கடல்களில் வருடாவருடம் கொட்டப்படுகிறது. இவை மக்காமல் பல வருடங்கள் கடலிலையே தங்குகின்றன. இவை பலவும் உயிரினங்களின் உணவு சங்கிலிக்குள் நுழைந்துவிடுகின்றன. 90% கடல் பறவைகளின் வயிற்றில் ஏதேனும் பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இந்த நிலை வரும் வருடங்களில் இன்னும் மோசமடையும். கடல் என்றில்லாமல் நல்லநீர் நிலையங்களான நதிகளும், குளங்களும் கூட சமீபத்தில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பாதிப்புகள் அனைத்தும் உயிரினங்கள் அழியக் காரணமாக உள்ளன. முக்கியமாக `Neotropical' என அழைக்கப்படும் தென்அமெரிக்கா கண்டத்தில் கடந்த 50 வருடத்தில் எண்ணிக்கையில் உயிரினங்கள் கிட்டத்தட்ட 90% குறைந்துள்ளன. அடுத்து அதிக எண்ணிக்கை குறைந்துள்ளது இந்தியாவை உள்ளடக்கிய 'Indo-Pacific' பகுதியில்தான்.
இது பானையின் ஒரு சோற்றுப்பருக்கைதான். மேலும் பல பாதிப்புகள் இந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றமும், அழிவும் மனிதம் ஏற்படுத்தியதாகக் கூறுகிறது இவ்வறிக்கை. ஆனால் உண்மையில் மனிதம் என்றில்லாமல் நமது பேராசைகளும் அதைச் சுருண்டும் உலக வணிகமும்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறது ஒரு தரப்பு. அவர்கள் பெரும் வணிக முதலாளிகளிருந்து தான் மாற்றம் தொடங்கவேண்டும் என்கின்றனர். ஆனால் அதற்காக இதில் சாமானியனின் பங்கு இல்லவே இல்லை என்று மறுத்துவிடவும் முடியாது. நாம் தொடங்கிய இதை மாற்றுவதற்கான முயற்சி நம்மிடமும் தொடங்கவேண்டும். 
Source_Vikatan.

Friday, November 9, 2018

Anxiety in Kids Is a Serious Problem

What Are Anxiety Disorders?

Anxiety disorders cause extreme fear and worry, and changes in a child's behaviour, sleep, eating, or mood.

What Are the Kinds of Anxiety Disorders?

Different anxiety disorders can affect kids and teens. They include:
Generalized anxiety disorder (GAD). GAD causes kids to worry almost every day — and over lots of things. Kids with GAD worry over things that most kids worry about, like homework, tests, or making mistakes.
But with GAD, kids worry more, and more often, about these things. Kids with GAD also worry over things parents might not expect would cause worry. For example, they might worry about recess, lunchtime, birthday parties, playtime with friends, or riding the school bus. Kids with GAD may also worry about war, weather, or the future. Or about loved ones, safety, illness, or getting hurt.
Having GAD can make it hard for kids to focus in school. Because with GAD, there is almost always a worry on a kid's mind. GAD makes it hard for kids to relax and have fun, eat well, or fall asleep at night. They may miss many days of school because worry makes them feel sick, afraid, or tired.
Some kids with GAD keep worries to themselves. Others talk about their worries with a parent or teacher. They might ask over and over whether something they worry about will happen. But it's hard for them to feel OK, no matter what a parent says.  
Separation anxiety disorder (SAD). It's normal for babies and very young kids to feel anxious the first times they are apart from their parent. But soon they get used to being with a grandparent, babysitter, or teacher. And they start to feel at home at daycare or school.
But when kids don't outgrow the fear of being apart from a parent, it's called separation anxiety disorder. Even as they get older, kids with SAD feel very anxious about being away from their parent or away from home. They may miss many days of school. They may say they feel too sick or upset to go. They may cling to a parent, cry, or refuse to go to school, sleepovers, playdates, or other activities without their parent. At home, they may have trouble falling asleep or sleeping alone. They may avoid being in a room at home if their parent isn't close by.
Social phobia (social anxiety disorder). With social phobia, kids to feel too afraid of what others will think or say. They are always afraid they might do or say something embarrassing. They worry they might sound or look weird. They don't like to be the center of attention. They don't want others to notice them, so they might avoid raising their hand in class. If they get called on in class, they may freeze or panic and can't answer. With social phobia, a class presentation or a group activity with classmates can cause extreme fear.
Social phobia can cause kids and teens to avoid school or friends. They may feel sick or tired before or during school. They may complain of other body sensations that go with anxiety too. For example, they may feel their heart racing or feel short of breath. They may feel jumpy and feel they can't sit still. They may feel their face get hot or blush. They may feel shaky or lightheaded.
Selective mutism (SM). This extreme form of social phobia causes kids to be so afraid they don't talk. Kids and teens with SM can talk. And they do talk at home or with their closest people. But they refuse to talk at all at school, with friends, or in other places where they have this fear.
Specific phobia. It's normal for young kids to feel scared of the dark, monsters, big animals, or loud noises like thunder or fireworks. Most of the time, when kids feel afraid, adults can help them feel safe and calm again. But a phobia is a more intense, more extreme, and longer lasting fear of a specific thing. With a phobia, a child dreads the thing they fear and tries to avoid it. If they are near what they fear, they feel terrified and are hard to comfort.
With a specific phobia, kids may have an extreme fear of things like animals, spiders, needles or shots, blood, throwing up, thunderstorms, people in costumes, or the dark. A phobia causes kids to avoid going places where they think they might see the thing they fear. For example, a kid with a phobia of dogs may not go to a friend's house, to a park, or to a party because dogs might be there.

What Are the Signs & Symptoms of Anxiety?

A parent or teacher may see signs that a child or teen is anxious. For example, a kid might cling, miss school, or cry. They might act scared or upset or refuse to talk or do things. Kids and teens with anxiety also feel symptoms that others can't see. It can make them feel afraid, worried, or nervous.
It can affect their body too. They might feel shaky, jittery, or short of breath. They may feel "butterflies" in their stomach, a hot face, clammy hands, dry mouth, or a racing heart.
These symptoms of anxiety are the result of the "fight or flight" response. This is the body's normal response to danger. It triggers the release of natural chemicals in the body. These chemicals prepare us to deal with a real danger. They affect heart rate, breathing, muscles, nerves, and digestion. This response is meant to protect us from danger. But with anxiety disorders, the "fight or flight" response is overactive. It happens even when there is no real danger.

What Causes Anxiety Disorders?

Several things play a role in causing the overactive "fight or flight" that happens with anxiety disorders. They include:
Genetics. A child who has a family member with an anxiety disorder is more likely to have one too. Kids may inherit genes that make them prone to anxiety.
Brain chemistry. Genes help direct the way brain chemicals (called neurotransmitters) work. If specific brain chemicals are in short supply, or not working well, it can cause anxiety.
Life situations. Things that happen in a child's life can be stressful and difficult to cope with. Loss, serious illness, a death of a loved one, violence, or abuse can lead some kids to become anxious.
Learned behaviours. Growing up in a family where others are fearful or anxious also can "teach" a child to be afraid too.

How Are Anxiety Disorders Diagnosed?

Anxiety disorders can be diagnosed by a trained therapist. They talk with you and your child, ask questions, and listen carefully. They'll ask how and when the child's anxiety and fears happen most. That helps them diagnose the specific anxiety disorder the child has.
A child or teen with symptoms of anxiety should also have a regular health checkup. This helps make sure no other health problem is causing the symptoms.

How Are Anxiety Disorders Treated?

Most often, anxiety disorders are treated with cognitive behavioral therapy (CBT). This is a type of talk therapy that helps families, kids, and teens learn to manage worry, fear, and anxiety.
CBT teaches kids that what they think and do affects how they feel. In CBT, kids learn that when they avoid what they fear, the fear stays strong. They learn that when they face a fear, the fear gets weak and goes away.
In CBT:
  • Parents learn how to best respond when a child is anxious. They learn how to help kids face fears.
  • Kids learn coping skills so they can face fear and worry less.
The therapist helps kids practice, and gives support and praise as they try. Over time, kids learn to face fears and feel better. They learn to get used to situations they're afraid of. They feel proud of what they've learned. And without so many worries, they can focus on other things — like school, activities, and fun. Sometimes, medicines are also used to help treat anxiety.

How Can I Help My Child?

If your child has an anxiety disorder, here are some ways you can help: 
  • Find a trained therapist and take your child to all the therapy appointments.
  • Talk often with the therapist, and ask how you can best help your child.
  • Help your child face fears. Ask the therapist how you can help your child practice at home. Praise your child for efforts to cope with fears and worry.
  • Help kids talk about feelings. Listen, and let them know you understand, love, and accept them. A caring relationship with you helps your child build inner strengths.
  • Encourage your child to take small steps forward. Don't let your child give up or avoid what they're afraid of. Help them take small positive steps forward.
  • Be patient. It takes a while for therapy to work and for kids to feel better.

Creative Stone Art


இலவசங்கள் - என் பார்வை.


Sivarajah Ramanathan
தமிழக அரசுகளின் இலவசங்கள் பற்றி சர்கார் சினிமா நெகட்டிவ் ஆக பேசுவது ஒரு புறம் இருக்கட்டும். நானும் சில மாதங்கள் முன்பு வரை இந்த இலவசங்கள் பற்றி மிகக் கடுமையான எதிர் நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அது பற்றி தெளிவாக அறிய முற்பட்டேன். ஏராளமான தரவுகள், வாசிப்புகள், வாதங்கள், நேர்-எதிர் உரையாடல்கள்....பகுத்தறிந்த சீராய்வுக்கு பின் எனது புரிதல் எப்படி இருந்தது என்பதை இங்கே தந்துள்ளேன். இதை ஒரு myths & truths analysis என்றும் கூட சொல்லலாம். சற்றே நீளமான பதிவு.
Myth 1: இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்குகின்றன.
Truth: மேலோட்டமாக பார்த்தால் உண்மை போலத்தான் தோன்றும். ஆனால் நான் பேசிய அளவில் எந்த ஏழையும் அல்லது அடித்தட்டு பயனாளியும் அரசின் இலவசங்களை தங்கள் வாழ்வாதார தேவைகளுக்கான அடிப்படையாக நினைக்கவே இல்லை. அது ஒரு பரிசு. ஒரு தேவையை பூர்த்தி செய்யும் நல்ல பரிசு. அதன் மூலம் தன்னிடம் இல்லாத -வசதியானவர்களிடம் இருக்கும் ஒன்றை - பயன்படுத்தும், பயன் பெரும் திருப்தி. அவ்வளவே. இலவசங்களை வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை அடித்தட்டு மக்கள் இழக்கும் நிலையை தரவுகளும் காட்டவில்லை.அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இது ஒரு எதிர் சித்தாந்த கற்பிதம்.
Myth 2: இந்த இலவச திட்டங்கள் ஊழல் செய்வதற்கும் ஓட்டு வாங்குவதற்கும் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன.
Truth: நீதிக்கட்சியும், காமராசாரும் கூட இத்தகைய சமூக நலத்திட்டங்களின் முன்னோடிகள் தான். அவர்கள் ஊழல் விமர்சனத்துக்கு முற்றிலும் அப்பால் பட்டவர்கள். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய பிற்கால முதல்வர்களின் திட்டங்கள் பலவும் (பட்டியல் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன்) மிகவும் புதுமையான முன்னோடித் திட்டங்கள் என்றால் அது மிகையாகாது. அவற்றில் பல பல்வேறு மாநிலங்களுக்கும் ஏன் நாடுகளுக்கும் கூட முன்னுதாரணமாக அமைந்தன. இவற்றை வாக்கு அரசியலுக்கும் அவர்கள் பயன் படுத்திக் கொண்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதில் தவறு இருப்பதாக நான் மட்டுமல்ல உச்ச நீதி மன்றம் கூட நினைக்கவில்லை. தி.மு.க /அ .தி.மு.க காலங்களில் ஊழல் நடந்தது என்ற கோணத்தில் பார்த்தால் கூட மொத்த சமூகநல திட்டத்தில் ஊழல் என்ற ஒரு பகுதி தான் பிரச்சினையே தவிர இந்த சமூக நல திட்டங்கள் அல்ல. தலையில் பேன் இருக்கிறது என்பதற்காக தலையை வெட்டித்தள்ள முடியாது.
Myth 3: இலவசங்களால் பொதுமக்கள் யாருக்கும் பயன் இல்லை.
Truth: இது எதிர் சித்தாந்த பிரச்சாரகர்களால் கையில் காசுள்ளவர்களிடம் திணிக்கப்பட்ட எண்ணம். இவர்கள் வசதி இல்லாதவர்களின் அன்றாட வாழ்க்கையை அருகிலிருந்து ஒரு நாளும் பார்த்திருக்க மாட்டார்கள். மதிய உணவு, முட்டை, சைக்கிள், பஸ் பாஸ், நோட்டு, புத்தகம், லேப்டாப், மிக்சி, கிரைண்டர், டிவி, ஸ்கூட்டி, நிலம், கால்நடைகள், மின்சாரம், ரேசன் என ஒவ்வொன்றும் பெரும்பான்மையான பயனாளிகளின் வாழ்க்கை முறைகளில் பல மாற்றங்களை, நல்ல உணர்வுகளை கொண்டு வந்திருப்பதை அவர்களோடு பேசிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது எல்லா தரப்பு மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டையும் பொறுத்துள்ளது. தமிழ்நாடு பல ஆண்டுகளாக அணைத்து தட்டு மக்களையும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல முயன்றிருக்கிறது. இது ஒரு unique socio -economical innovation by Tamilnadu. இதுவே காலப்போக்கில் மகிழ்வான ஒரு சமூகத்தை கட்டமைக்க உதவும் அணுகுமுறையாகும். சமூகம் என்பது மனித உடல்களின் தொகுப்பல்ல அது மனங்களின் தொகுப்பு. வசதி வாய்ப்பு இல்லாத மனங்கள் இருக்கும் மனிதர்களை பார்த்து விரக்தியடையக் கூடாது. மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கும் முன் அவன் பசி தணிந்து கற்கும் மனநிலைக்கு வரவேண்டுமல்லவா? அதுதான் சமூகநலத்திட்டங்களின் (இலவசங்களின்) அடிப்படை.
Myth 4: பெரும்பாலாலானவர்கள் இலவசங்களை வாங்கி விலைக்கு விற்கவே செயதனர். அல்லது பரணில் போட்டனர்.
Truth: இது ஒரு சிறு சதவிகிதம் உண்மை. எல்லா சமுகநலத் திட்டங்களும் 100% நோக்கங்களை அடைவதில்லை. Critical Mass இலக்கு அடையப்பட்டிருக்கிறதா என்பது தான் முக்கியம். அந்த வகையில் விற்ற அல்லது வீணாக்கிய விகிதம் புறம் தள்ளத்தக்கதே. ஆயினும் பயனாளிகள் தகுதியை ஆராய்ந்து வழங்க நிர்வாக மேம்பாடு தேவை என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.
Myth 5: மக்களை பிச்சைக்காரர்கள் போல் கையேந்த வைத்தார்கள். பிற மாநில மக்களும் வெளிநாட்டவரும் பார்த்து சிரிக்கிறார்கள்.
Truth: இதுவும் ஒரு எதிர் சித்தாந்த அமைப்புகளால் ஊதிப் பெருக்கப்பட்ட பிரச்சாரம் தான். ஆங்காங்கே சில நலத்திட்ட வினியோகங்களின் போது மக்கள் முண்டியடித்து நெரிசலில் சண்டை போட்ட வீடியோக்களையும் செய்திகளையும் பார்த்திருப்போம். இது நிர்வாக குறைபாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை தானே தவிர குறிப்பிட்ட சமூக நலத் திட்ட அடிப்படைகள் பற்றிய பிரச்சினை அல்லவே. பிற மாநிலத்தவர் சிரிக்கும் முன் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் என்று பல தரவுகளையும் தங்கள் மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்து விட்டு சிரிக்கலாம். அதே வேளை இது போன்ற தரக்குறைவான விநியோக முறைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை. கொடுக்கும் முறைகள் கொச்சையாக இருக்கக் கூடாது. இவை பிச்சை இல்லை. காலங்காலமாக ஏமாற்றப்பட்ட மக்களுக்கான சிறு ஆறுதலும் இழப்பீடும் தான்.
Myth 6: இலவசங்கள் மட்டுமே கொடுத்து மாநிலத்தை முன்னேற விடாமல் செய்து விட்டார்கள்.
Truth: இதற்கான பதிலை மத்திய அரசும் மற்றும் பல மதிப்பு வாய்ந்த நடுநிலை நிறுவனங்களும் நடத்தும் ஆராய்ச்சி மற்றும் தரவுகளுக்கான இணைய தளங்கள் தெளிவாகத் தருகின்றன. சுருக்கமாக கூற வேண்டுமானால் பெரும்பாலான ஒப்பிடுகளில் தமிழகம் முதல் மூன்று இடங்களுக்குள் தான் இருக்கிறது. எனவே இலவசங்கள் என்று சொல்லப்படும் சமூக நலத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கின்றனவே தவிர மாநில வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
Myth 7: கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே இவற்றை கொடுத்து அடித்தட்டு மக்களுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டி விடுவார்கள்.
Truth: கட்சிக் காரர்களின் தலையீடு மற்றும் ஊழல் என்பது இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதுவும் குறிப்பிட்ட சிறு விகிதமாகவே இருக்ககைகூடும் என்பது நான் உரையாடிய சில கீழ்மட்ட கட்சிக்காரர்களின் கருதத்து. ஒவ்வொரு பகுதி கட்சி காரருக்கும் இந்த திட்டங்களின் சமூக நோக்கங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் பகுதி சார்ந்த அடித்தட்டு மக்களை திருப்தி செய்ய வேண்டும் என்பதுவும் இல்லா விட்டால் அது தேர்தலில் பாதிப்பை உருவாக்கும் என்பதுவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் அடித்தட்டு மக்கள் நடுத்தர மனிதர்களைப்போல் இது போன்ற விடயங்களில் ஒதுங்கிப் போகக்கூடியவர்கள் அல்ல. இந்த இடத்தில் நான் கட்சி காரர்களின் ஊழலை நியாயப்படுத்த முயற்சி செய்யவில்லை. அவர்களில் பெரும்பான்மை ஊழல் வாதிகள் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் நான் நிறுவ முயற்சிப்பது இந்த சமூக நலத் திட்டங்கள் கட்சிக் காரர்கள் கொள்ளை அடிப்பதற்கு மட்டுமே அல்ல என்பதை தான்.
ஆனால் இந்த "கட்சிக்காரர்களின் ஊழல்" என்ற பொதுவான உண்மை தான் பல்வேறு ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களையும் கேலி செய்வதற்கும் தூற்றுவதற்கும் முழு முதல் காரணமாக அமைகிறது. திராவிட கட்சிகள் ஜெயலலிதா காலம் வரை பல சமூகநலத் திட்ட சாதனைகளை செய்திருக்கின்றன. ஆனால் அண்மைக்காலங்களில் தமிழகத்தின் பல அளவீடுகள் இறங்குமுகத்தில் இருப்பதையும் ஊழல் பூதாகரமாக தெரிவதையும் மறுப்பதற்கில்லை. இந்திய அளவிலான ஒப்பீட்டு தரவுகளின் கூட எல்லா குறியீடுகளிலும் முன்னணி வரிசையில் நிற்கும் தமிழகம் ஊழல் மற்றும் வெளிப்படைத் தன்மையில் மட்டும் கடைசியில் நிற்கிறது.என்னைப்பொருத்த வரை இந்த ஊழல் பிரச்சனை ஒட்டு மொத்த சமூகமும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையில் செல்லும் போதும் தொழில்நுட்ப தீர்வுகள் அரசாட்சி நிர்வாகத்தில் (governance) அதிகளவில் ஈடுபடுத்தப் படும் போதும் இயல்பாகவே குறையக் கூடிய ஒன்று. அதற்கான உறுதியான செயல்பாடுகளும் கலாச்சார மாற்றங்களும் வர வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருதும் இல்லை. ஆனால் ஊழல் என்ற ஒரு பிரச்சினையை மட்டும் பிடித்துக்கொண்டு சமூக நலத்தையும் சமூக நீதியையும் வலுவிழக்க செய்யும் முயற்சிகளை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

Myth 8: கஞ்சிக்கே வழி இல்லாதவர்களுக்கு மிக்சியும் டிவி யும் ம் எதற்கு?
Truth: இந்த மனப்பான்மை அதீத வலது சாரி அல்லது உயர்சாதி ஆணவச் சிந்தனையே தவிர வேறென்றும் இல்லை. எனக்கு தெரிந்த சில பெரும் பணக்காரர்கள் சில தனிப்பட்ட விவாதங்களில் என்னிடமே இப்படி விவாதம் செய்ததை கவனிதிருக்கிறேன். கீழ் மட்டத்தில் உள்ளவர்களும் உயர்ந்து மேலே வரவேண்டும் என்பதுவும் அவர்களது அன்றாட வாழ்க்கையும் குறைந்த பட்ச செழுமையுடன் அமைய வேண்டும் என்பதுவும் தான் சமூக நீதியின் முதல் படி. அவர்களை நீண்ட கால அடிப்படையில் உயர்த்தி தற்சார்பு அடைய வைப்பது கல்வி மற்றும் வேலையில் இட ஒதுக்கீடு. அதை பயன்படுத்த ஏதுவாய் இலவச நோட்டு, புத்தகங்கள், மதிய உணவு, பள்ளி செல்ல சைக்கிள், தொழில்நுட்பம் பயில லேப்டாப்.
இது போக வசதி மறுக்கப்பட்டவர்கள் வளமாய் உணர வீட்டுக்கு தேவையான இன்ன பிற இலவச பொருட்களும் சேவைகளும் தரப்படுகின்றன. முதலில் பசிக்கு சோறு. பின்னர் சோற்றுக்கு வழி. இதெல்லாம் என்ன சித்தாந்தம் என்று கேட்டால் தமிழ் நாட்டு சமத்துவ சித்தாநத்தம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.. இடதா வலதா என்று ஆராய்ந்தால் இரண்டும் உண்டு எது எங்கு தேவையோ அது அங்கே.

myth 9: நல்ல அரசாங்கம் என்பது இந்த பொருட்களை எல்லாம் எல்லாம் வாங்க அந்த ஏழைகளுக்கு வேலை தான் தரவேண்டும். நேரடியாக இலவச பொருட்களை அல்ல.
Truth: இது பற்றி ஏற்கனவே மேலே பேசியாகி விட்டது. சில தீர்வுகள் நீண்ட கால அடிப்படையிலானவை. சில குறுகிய கால தீர்வுகள். தமிழகத்தின் சமூக பொருளாதார வழிமுறையானது தண்டவாளம் போன்றது. ஒரு கம்பி சமூக நீதி மற்றொன்று சமூக நலத் திட்டங்கள். இது மிகவும் தனித்தன்மையானது. இந்திய தேசம் பின்பற்றினால் வல்லரசாகலாம்.
Myth 10: இலவசங்கள் தான் திராவிட அரசியலின் கண்டுபிடிப்பு.
Truth: முதலில் நீதிக் கட்சி, பின்பு காங்கிரஸ் ஆட்சியில் காமராசர், அதன் பின்பு வரிசையாக வந்த திராவிட கட்சிகள் என எல்லோரும் வேறு வேறு கோணத்தில் தொட்டது தான் இந்த சமூக நலத் திட்டங்கள். அவற்றில் பெரும்பான்மையான வெற்றித் திட்டங்கள் திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் வந்ததாலும் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்த திட்டங்களும் ஒரு காரணமாக இருந்ததாலும் திராவிடத்துக்கு எதிரானவர்கள் திராவிடம் என்றால் "கடவுள் மறுப்பு" என்று எப்படி திரித்தார்களோ அதேபோல் திராவிட ஆட்சி என்றால் "கேவலப்படுத்தும் இலவசம்" என்றும் திரித்தார்கள். இந்த இரண்டு திரிப்புகளையும் சமன் படுத்தினால் அவற்றில் ஊடுருவி நிற்கும் ஆழமான உண்மை என்பது "சமத்துவதை நோக்கிய பயணம்" என்பதாகத் தான் இருக்கும்.எனவே எனது முடிவானது திராவிடதின் கண்டுபிடிப்பு சமத்துவ சமூகம் என்பது தானே தவிர மற்றவை எல்லாம் திரிபு மயக்கங்களே.
முடிவுரை:
நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போல முன்னர் மேம்போக்கான பார்வைகளின் காரணமாக திரிபுகளை நம்பி,ஊடுருவி நிற்கும் விழுமியங்களை பார்க்க தவறி விட்டேன். பகுத்து அறிய சற்றே நேரத்தை செலவிட்ட போது ஒரு சரியான புரிதல் எனக்குள் உருவானது. அதைத்தான் இங்கே தொகுதிருக்கிறேன்.

நான் திராவிடக் கட்சிகளுக்கோ சார்பாகவோ அல்லது தேசிய கட்சிகளுக்கு எதிராகவோ இதை எழுதவில்லை. எனது நோக்கம் தமிழ்நாட்டிற்க்கென ஒரு தனித்தன்மையான சமூக-பொருளியல் பாதை ஏறத்தாழ நூறு ஆண்டுகளாக உருவாக்கப் பட்டிருக்கிறது. அதில் ஊழல் என்பது சில இடங்களில் இருக்கும் மேடு பள்ளம். அதை சீர் செய்வது ஒரு வேலை தான் என்றாலும் சாத்தியமே. ஆனால் தமிழகத்தில் வளர்ச்சிப்பாதையே இல்லை, இனிமேல் தான் உருவாக்க வேண்டும் என்று தத்தமது சித்தாந்த மண்வெட்டிகளுடனும் பெரும் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்களுடனும் வருபவர்களை பார்த்தால் சிரிப்பாகவும் அவர்களை நம்பும் நம் சொந்த மக்களைப் பார்த்தால் வேதனையாகவும் இருக்கிறது.
அதே வேளை மாற்றம் எதுவும் தேவை இல்லை என்ற வாதத்தையும் நான் வைக்க விரும்பவில்லை. தற்கால மனிதர்களின் வாழ்வில் வரும் midlife crisis போல் தமிழக அரசியலிலும் ஒரு ageing crisis தற்போது உருவாகியுள்ளதை மறுக்க முடியாது. திராவிடம் என்ற கருத்தியல் சார்ந்த அரசியல் சற்றே ஒரு flatness நிலையை அடைந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அது மாபெரும் ஆளுமைகளின் மறைவினால் இருக்கலாம், மாற்று சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அது ஊழலாக இருக்கலாம், தலைமைக்கான வெற்றிடமாக இருக்கலாம், முற்றிலும் புதுமையான ஆளுமைக்கான எதிர்பார்ப்பாக இருக்கலாம். இவை அனைத்தும் சேர்ந்ததாகவும் இருக்கலாம். அல்லது வெறும் மாயையாகக் கூட இருக்கலாம். இதுபற்றிய பொதுமக்களின் மனநிலையை வரும் தேர்தல்கள் தான் சொல்லமுடியும். ஆனால் நண்பர் ஆழி செந்தில்நாதன் சொல்வது போல் ஒரு post dravidianism தளம் தேவைப்படுகிறது என்பது காலத்தின் கட்டாயம் என்றே தோன்றுகிறது. மிக வலுவான அடித்தளம் தந்த திராவிட சமூக-அரசியல்-பொருளாதார தளத்தில் காலூன்றி காலத்தை வெல்லும் கட்டிடங்களை உருவாக்கும் சிற்பிகள் ஒருங்கிணைய வேண்டிய காலம் இது - தேர்தல் அரசியலைத் தாண்டி.
-----------------------------------------------------------------------
Suresh Sambandam, Aazhi Senthil Nathan, Ravishankar Ayyakkannu, Narain Rajagopalan, Balasubramanian AJ ஆகியோர்களின் ஆழமான தொடர்ந்த பகிர்வுகளுக்கு நன்றிகள். இந்த பதிவில் தண்டவாளம் பற்றிய உதாரண விளக்கத்துக்கு Govi Lenin அவர்களுக்கு நன்றி.

Sunday, November 4, 2018

சிதம்பர ரகசியம்...




பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator. எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே...ன

Women’s empowerment to Vote

The women’s suffrage movement was a decades-long fight to win the right to vote for women in the United States. It took activists and reformers nearly 100 years to win that right, and the campaign was not easy: Disagreements over strategy threatened to cripple the movement more than once. But on August 26, 1920, the 19th Amendment to the Constitution was finally ratified, enfranchising all American women and declaring for the first time that they, like men, deserve all the rights and responsibilities of citizenship.


Starting in 1910, some states in the West began to extend the vote to women for the first time in almost 20 years. Idaho and Utah had given women the right to vote at the end of the 19th century.
Still, southern and eastern states resisted. In 1916, NAWSA president Carrie Chapman Catt unveiled what she called a “Winning Plan” to get the vote at last: a blitz campaign that mobilized state and local suffrage organizations all over the country, with special focus on those recalcitrant regions.
Meanwhile, a splinter group called the National Women’s Party focused on more radical, militant tactics—hunger strikes and White House pickets, for instance—aimed at winning dramatic publicity for their cause.
World War I slowed the suffragists’ campaign but helped them advance their argument nonetheless: Women’s work on behalf of the war effort, activists pointed out, proved that they were just as patriotic and deserving of citizenship as men.
Finally, on August 26, 1920, the 19th Amendment to the Constitution was ratified. And on November 2 of that year, more than 8 million women across the United States voted in elections for the first time.


Glory in darkness

Marco Aurélio Ribeiro - Escritor
In this wide-angle image we see a dark cloud of cosmic dust, illuminated by the bright light of young stars. This dense cloud is actually a stellar formation region called Lupus 3, where extremely hot stars are born from masses of gas and dust that are collapsing. This image was created from data obtained with the light rail screening telescope and with the mpg / eso telescope of 2,2 meters, with the most detailed image of this region obtained today.
THE STELLAR FORMATION REGION LUPUS 3 is located in the constellation scorpion, only 600 Light-years away from earth. It is part of a larger complex called lupus clouds, which remove its name from the adjacent constellation of the wolf. The clouds reminiscent of smoke rippling against a background of millions of stars, however the object is effectively a dark nebula.
Nebulae are huge amounts of gas and dust between the stars, some extending over hundreds of light years. Although many nebulae are completely illuminated by the intense light emitted by hot stars, dark nebulae involve the light of celestial objects within them. They are also known as absorption nebulae, since they consist of dense, cold dust particles that absorb and disperse the light passing through the cloud.
Famous Dark Nebulae include the coal bag nebula and the great fissure, which are large enough to be seen with the naked eye, presenting particularly dark against the brightness of the milky way.
Lupus 3 presents an irregular form, like a misshapen snake that roams the sky. In this image it appears as a region of contrasts, with thick dark rails placed against the intense brightness of the bright blue stars located in the center. Like Most Dark Nebulae, Lupus 3 is an active star formation region composed mainly of protostars and very young stars. Nearby disturbances may cause denser lumps of the nebula to fall under its own gravity, becoming warm and with high pressure during the process. Eventually, the extreme conditions of these collapsing nuclei form protostars.
The two bright stars in the center of the image suffered this process. At the beginning of their lives, the light they emitted was virtually all blocked by the thick veil of their host nebula, being visible only with infrared or radio telescopes. However, as they grew more warm and bright, their intense light and strong stellar winds swept the gas and dust from the surrounding area, thus allowing their glorious emergence of dark motherhood, and shining now intensely.
Understanding Nebulae is crucial for understanding star formation processes - effectively, it is thought that the sun formed in a stellar formation region very similar to Lupus 3, more than 4 billion years ago. Being one of the nearest stellar maternity wards, Lupus 3 has been the subject of many studies; in 2013 the mpg / eso telescope of 2,2 meters, installed at the eso's La Silla Observatory in Chile, captured an image Minor of its dark columns similar to smoke and its bright stars (Eso1303).

Sun temple , Modhera

There are some stunning ancient structures out there, and in our journey to uncover them all we take you to the ancient Temple of the Sun in Modhera. The ancient temple—dedicated to the solar deity Surya—is located at the Modhera village of Mehsana district, Gujarat, India. It’s one of those majestic ancient laces you simply have to visit.
The temple is a Monument of National Importance and is maintained by the Archeological Survey of India.
This fascinating ancient structure was built by Bhima I of the Solanki dynasty in 1026.

The Fastest Ship In The Universe


Wednesday, October 31, 2018

முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் எழுதிய தமிழ்ப் படைப்புகள்

முனைவர் மு. இளங்கோவன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்ஆய்வாளர் ஆவார். தமிழ்நாட்டில்அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்ககங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சி. முருகேசனார், மு. அசோதை அம்மாள்.

 எழுதிய தமிழ்ப் படைப்புகள்
* மணல்மேட்டு மழலைகள்
* இலக்கியம் அன்றும் இன்றும்
* வாய்மொழிப்பாடல்கள்
* பழையன புகுதலும்
* அரங்கேறும் சிலம்புகள்
* பாரதிதாசன் பரம்பரை
* பொன்னி பாரதிதாசன் பரம்பரை
* பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.)
* நாட்டுப்புறவியல் (வயல்வெளிப் பதிப்பகம்,2006)
* அயலகத் தமிழறிஞர்கள் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
* இணையம் கற்போம் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
* பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு
* செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்
* கட்டுரைக் களஞ்சியம்
* அச்சக ஆற்றுப்படை
* மாணவராற்றுப்படை
* பனசைக் குயில் கூவுகிறது
* விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்(ப.ஆ)
* மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்


பிரத்யேக நேர்காணல் பின்வருமாறு:-
கேள்வி : உங்களுடைய பூர்வீகம் பற்றி கூற முடியுமா?
பதில்      : என்னுடைய பூர்வீகம் தமிழகத்திலுள்ள அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம். அங்கு எனது பள்ளிப் படிப்பை முடித்து, திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியமும், அதே கல்லூரியிலேயே பிறகு முதுகலைப் பட்டமும் பெற்றேன். அதன் பிறகு திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றேன்.
கேள்வி : கல்லூரி நாட்களில் நீங்கள் எழுதிய நூல்கள் யாவை?
பதில்      : எனது கல்லூரி நாட்களில் நான் இலக்கியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். சிறுவயது முதலே தமிழின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த காரணத்தால் ஒவ்வொரு நாளும் மரபுக்கவிதைகள் எழுதும் சூழலை உருவாக்கிக்கொள்வேன்.என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் யாப்பிலக்கணம் பயிற்றுவித்தார்.ஆர்வமுடன் கற்றதால் இயல்பாகப் பாடல் எழுதிய வண்ணம் இருப்பேன். அப்படி ஒரு இலக்கிய சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த போது தான் எனது மாணவராற்றுப்படை உருவானது. அதன் பின்பு  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வின் போது ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் எனது படைப்பு நூல் வடிவம் பெற்றது.
கேள்வி :  ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பு எப்படி உருவானது?
பதில்      : அதற்கு ஒரு காரணம் உண்டு. புரட்சிக்கவி பாரதியாரின் மீதுள்ள பற்று காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டு அவரைப் போலவே கவிதைகள் எழுதியவர் தான் கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன். ஆனால் பாரதிதாசனுக்குப் பிறகு யார்? என்ற கேள்வி என்னுள் எழுந்ததின் விளைவு தான் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற நூல் வெளியிடக் காரணமாக அமைந்தது.
கேள்வி :  தமிழ் மொழியில் உங்கள் பங்களிப்பு?
பதில்      : சங்க நூல்களிலும், நாட்டுப்புறவியல் துறையிலும், தமிழ் இணையத் துறையிலும் கொண்ட ஈடுபாடு காரணமாக, அவைகளை பல தமிழறிஞர்கள் மூலமாக முறையாக படித்து அறிந்து கொண்டேன். அதோடு நான் கற்றுத் தெரிந்து கொண்ட அத்தகைய செவி வழிக் கல்வியை தமிழறிஞர்கள் குரல்களிலேயே ஆவணப்படுத்தியும் வைத்துள்ளேன். ஐம்பெருங்காப்பியங்கள், அகநானூறு, புறநானூறு, ஆற்றுப்படைகள் உள்ளிட்ட பல நூல்களை மின்புத்தகங்களாக உருமாற்றுவதில் எனது பங்களிப்பு உள்ளது.
மேலும் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றிய ஆய்வுக்காக பல ஊர்களுக்கு பயணம் செய்து அங்கு வாழும் பாமர மக்களுடன் பழகி, அவர்களிடமிருந்து பல நாட்டுப்புறப் பாடல்களைக் கற்று அவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளேன். இத்தகைய நாட்டுப்புறப் பாடல்கள் நமது தமிழர்களின் கலாச்சாரமாக இருந்தது  நம் எதிர்கால சந்ததியினருக்கும் தெரியும் வகையில் அவற்றை சேகரித்துள்ளேன்.
அதோடு பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவது குறித்து பல வகுப்புகள் நடத்திவருகிறேன். இதன் மூலம் பல மாணவர்கள் பயனடைந்து தற்போது இணையத்தில் எழுதத் தொடங்கியுள்ளார்கள்.
இதுவரை 19 நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளேன். இணையத்தில் 1000 பதிவுகளுக்கும் மேல் தமிழ் மொழியைப் பற்றிய என்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கேள்வி :  பணியாற்றிய இடங்கள் ?
பதில்      : எனது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்து விட்டு, இப்பொழுது புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகின்றேன். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, குவைத் நாடுகளுக்கு ஆய்வுரை வழங்கவும் அவ்வப்போது பயணம் செய்து வருகிறேன்.
கேள்வி :  தமிழ் மொழியில் உங்களது அடுத்த கட்ட பணி?
பதில்      : தமிழ் இலக்கண, இலக்கியம் சார்ந்த பேச்சுக்களை பதிவு செய்வது. உலக அளவில் சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்றவற்றை கொண்டு சேர்க்கும் வகையில் அதை MP3 வடிவில் பதிவு செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
கேள்வி : இதுவரை வாங்கிய விருதுகள்?
பதில்       : கடந்த 2011 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் கையால் இளம் அறிஞருக்கான ‘செம்மொழி’ விருது பெற்றேன்.
(பரபரப்பாக நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு இடையே செல்லியலுக்காக நேரம் ஒதுக்கி நேர்காணல் அளித்ததற்கு நன்றி! உங்களது பணி மேலும் சிறக்க செல்லியல் சார்பாக வாழ்த்துக்கள்!)
-பீனிக்ஸ்தாசன்

Tuesday, October 30, 2018

Hand Crushing Machine 15th century Catholic Church

This insane, diabolical hand crushing machine was actually used by members of the Catholic Church back in the 15th century to punish those with “greedy hands.” And here we thought it was “idle hands that did the devil’s work”... hate to see what the church would do to a pair of those! Sadly, this contraption isn’t even the tip of the iceberg when it comes to torture devices. Human beings of all cultures and religions have always found the most horrific ways to inflict punishment on others. Thankfully this disturbing little number has been long retired!
thanks
http://www.appbbs.com/unexploredworlds/home/2018/08/the-catholic-church-used-a-hand-crushing-machine-in-the-15th-century-to-punish-those-with-greedy-hands

Church of Saint Mary of Gesu (Baroque, 16-18 centuries). Palermo. Sicily. Italy.

History
Interior of the church.
The Jesuits arrived in Palermo in 1549, and by the late 16th century began building a church adjacent to their mother house (Casa Professa) using a design by the Jesuit architect Giovanni Tristano. The original design called for a single nave with large transepts and several side chapels, but it was changed by the early 17th century, to a more grandiose layout typical of Jesuit architecture. Natale Masuccioremoved the chapels' dividing walls to add two side naves to the central one. The church was consecrated in 1636.
The interior decoration included marble bas-reliefs on the tribuna depicting the Adoration of the Shepherds (1710–14) and Adoration of the Magi (1719–21), by Gioacchino Vitagliano, after designs attributed to Giacomo Serpotta - both reliefs survive. A fresco of the Adoration of the Magi was also added to the walls of the second side-chapel to the right by Antonino Grano in the 1720s. The church also contains a relief of the Glory of St Luke by Ignazio Marabitti.
In 1892, cavaliere Salvatore Di Pietro, former rector of the Casa Professa, philanthropist, prefect of studies at the seminary, and member of the Theological College, of the Academy of sciences, letters and arts and of the Accademia di storia patria, convinced in 1888 the minister of public education, Paolo Boselli, to decree the church a national monument.
In 1943, during the Second World War, a bomb collapsed the church's dome, destroying most of the surrounding walls and most of the wall paintings in the chancel and transepts. These frescoes were replaced during two years' restoration work, after which the church reopened on 24 February 2009 with a solemn mass presided over by Paolo Romeo, archbishop of Palermo, and attended by several Jesuits and civil and military officials.