Search This Blog

Tuesday, February 10, 2015

Pyramids Around the Worlds


Borobudur, Indonesia:

Until today, no one knows for sure when and why it was built, nor the reason for its complete abandonment hundreds of years ago. Some scholars believe that Borobudur is actually a giant textbook of Buddhism, as its base reliefs tell the story of the life of Buddha and the principles of his teachings. To “read,” a pilgrim must make his way through nine platforms and walk a distance of over 2 miles.
In the 19th century, Dutch occupiers of Indonesia found a massive ancient ruin deep in the jungles of Java. What they discovered was the complex of Borobudur, a gigantic structure built with nearly 2 million cubic feet (55,000 m³) of stones. The temple has nearly 2,700 relief panels and 504 Buddha statues.

Sunday, February 8, 2015

‪Study English - IELTS Preparation‬ DVD3 - P7 - The Speaking Test

பொதுவாக துறவு என்பது சாத்தியமானதுதானா?

யோகம், தியானம், கடவுள் பசி, தாகம், காமம்
இது ஒரு புறம் இருக்க, பொதுவாக துறவு என்பது சாத்தியமானதுதானா?
மனிதன் பிறந்ததே காமத்தில்தானே அப்படி இருக்க அதைத் துறவு எப்படி சாத்தியமாகும்?
இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டால், பிரம்மச்சாரிகளாக இருப்பது அரிதினும் அரிது என்கிறார்கள்.
உளவியலாளர்கள் பசி, தாகம், காமம் இவை மூன்றும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்கிறார்கள்.
பசியையும் தாகத்தையும் நாம் நினைத்துக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் பசியும் தாகமும் வந்தே தீரும். இதில் பசியையும் தாகத்தையும் அவசியம் என்ற கேட்டகிரியில் வைத்து விட்டு, காமத்தை மட்டும் சமூகம் ஒழுக்கக் கேட்டகிரியில் வைத்திருக்கிறது.
தண்ணீருக்கு உயிரில்லை. சாப்பாட்டுக்கும் அப்படித்தான். நாம் விரும்பும்போது சாப்பிடலாம். அவை இரண்டுமே அஃறிணைகள் என்பதால் நாம் சாப்பிடும் போது அவற்றால் மறுக்க முடியாது. ஆனால் ஆணும் பெண்ணும் அப்படி அல்ல. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது காமம் வருமானால், அதைத் தீர்த்துக் கொள்ள அந்தப் பெண் ஒப்புக்கொள்ள வேண்டும். அதைப்போலத்தான் பெண்ணுக்கும். மேற்குறிப்பிட்ட சாப்பாட்டைப் போலவோ தண்ணீரைப் போலவே இவர்கள் அஃறிணைகள் இல்லாமல் உயர்திணைகளாக இருப்பதால் விரும்பியபடி சாப்பிட முடியாது. மறுக்கவும் இடம் உண்டு. அதனால்தான் ஒழுக்கக் கோட்பாடுகள் வந்தன.
அது தவிர ஒரு ஆணுக்கு தன் பெயர் சொல்லும் வாரிசு தேவை. அவனது மனைவியானவள் தன் சவுகரியத்திற்கு எங்கு வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் கூடலாம் என சுதந்திரம் இருக்குமானால்....பிறக்கும் பிள்ளை இவனுடையதுதானா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
இந்தச் சிக்கல் நெடுநாட்களுக்கு முன்பு மனிதனுக்கு ஏற்பட்டு, தான் சேர்த்து வைத்த சொத்தை தொடர்ந்து தனது வாரிசே அனுபவிக்க வேண்டும் என நினைத்த ஆண், பெண்ணுக்கு கற்பு எனும் கருத்தாக்கத்தை போதித்தான்.
கற்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு என்று ஒருபுறம் சமூகம் அனைத்துக் கதவுகளையும் சாத்தி வைத்து மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருக்க இணையதளம், சினிமா, சின்னத்திரை, பத்திரிகை என அனைத்து ஊடகங்களும் கட்டுப்பாட்டை அவரவருக்கு முடிந்த வரையில் கொஞ்சம் கொஞ்சம் தளர்த்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கின்றன. கோயில் திருவிழாக்களில் நடக்கும் தெருக்கூத்து, கரகாட்டம், ஆடல் பாடல் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் காமம் இல்லாமல் இருப்பதில்லை. இவை எல்லாமே மனிதனை ஆசுவாசப்படுத்தும் முயற்சிகள்தான். அப்படி இருக்க சாமியார்கள் மட்டும் அவர் ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும் முற்றிலும் காமவயப்படாமலே இருந்து விட முடியுமா? இயேசு கிறிஸ்துவில் ஆரம்பித்து, நம்மூரைச் சேர்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், கிறிஸ்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் என அத்தனை பேருமே நமக்கு ஆச்சரியம் அளிக்கிறார்கள்.
புத்தனையாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் புத்தன் சித்தார்த்தனாக அரண்மனையில் இருக்கும் போது அத்தனை விளையாட்டுக்களையும் விளையாடி முடித்து விட்டு அதற்குப் பிறகுதான் துறவியாகிறான். சரி அந்த சந்தோஷம் சலித்து விட்டது. அடுத்து என்ன என்ற கேள்விக்குப் போய்விட்டார் போல என்றாவது நினைக்கலாம்.
ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு மனைவி உண்டு. விவேகானந்தர் போன்றவர்களெல்லாம் எப்படி? குறைந்த பட்சம் சுயஇன்பமாவது அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது மடை மாற்றம் என்று சொல்வார்கள் அதுவாவது நடந்திருக்க வேண்டும். ராமலிங்க அடிகளார் விஷயத்தில் அதுதான் நடந்தது. அவர் கடவுளை காதலியாகவோ காதலனாகவோ பாவித்து பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். அவருக்குள் இருந்த காம உணர்வை பக்தி உணர்வாக மாற்றும் முயற்சி அது.
ஆதிசங்கர பகவத் பாதர் எழுதிய நூல்களில் சௌந்தர்ய லஹரீயும் ஒன்று. இதன் தமிழ் அர்த்தம் “அழகு வெள்ளம்“ என்பதாகும். இந்த ஸ்தோத்திரப் பாடல்களில் பார்வதிதேவியின் அழகு வர்ணிக்கப் படுகிறது. அழகு என்பதை விட பார்வதி தேவியின் அங்கங்களை வர்ணித்துள்ளார் என்று சொல்வதே பொருத்தம்.
அமிர்தரஸம் நிறைந்த இரு மாணிக்கக் கும்பம் போன்ற மார்பகங்களில் அழகான இரத்தினங்கள் மின்னுகின்றது என்றெல்லாம் சங்கரரின் வர்ணனை போகிறது.
இன்னொரு பாடலில் தேவியின் தொப்புளை (உந்தி) ஸ்திரோ கங்காவர்த்த என்கிறார். அதாவது தேவியின் தொப்புள் கங்கையின் நீர்ச்சுழி போன்று உள்ளது என்கிறார்.
அபிராமிபட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் உள்ள பாடல் வரிகளில் பலவற்றை நாம் விளக்கி எழுத முடியாத நிலை. இடங்கொண்ட கொங்கை இணை கொண்டு விம்மி இளகி இறுகி.... என்று வரும் பாடலில் உள்ள கடைசிவரிகளை எப்படி எழுத முடியும். வாசகர்கள் அந்நூலை வாங்கிப் படித்தால் புரியும்
ஒரு பெண் கடவுளை ஒரு ஆண் பக்தர் (அதிலும் சங்கரர் ஒரு துறவி) இப்படி வர்ணிக்கிறார் என்றால் அதில் பக்தி இருக்கிறதா? காமம் இருக்கிறதா-?
.உன்னைத்தான் பாட வந்தேன்
வண்ணமயில் வேல்முருகா
உன்னைக் கண்டு மயங்கி விட்டேன்
என்ன சொல்லிப் பாடுவதோ
என்று சூலமங்கலம் சகோதரிகள் பாடுவதில் வெறும் பக்திமட்டும்தான் இருக்கிறதா என்பது யோசிக்க வேண்டிய விஷயமல்லவா? மீரா கண்ணன் மீது கொண்டது வெறும் பக்திதானா? அந்தப் பெண்ணுக்கு இயல்பாக இருந்த காதல் உணர்வை பக்தியாக வெளிப்படுத்தினாள் என்று சொல்லலாம்தானே? ஆண்டாளும் அப்படித்தான்.
அகம் புறம் என்று இரண்டு இலக்கிய வடிவங்கள் தமிழில் சொல்லப்படுகின்றன. பக்தி இலக்கியத்தில் புறம் போல பேசப்பட்ட அகம் உண்டு. அது அறம் போலப் பேசப்பட்ட அகம். கடவுள் மீது கொண்ட பக்தி எனும் அறம் என்று அதை நாம் சொல்லிக்கொண்டாலும், அதில் இருந்த உணர்வுகள் அக உணர்வுகளே.
ஆக காம உணர்வுகளையோ காதல் உணர்வுகளையோ முற்றிலும் ஒழித்துக்கட்டுவது என்பது முடியாத காரியம். உயிரினங்களின் தோற்றமே அதனால் வந்தது எனும் போது அதை ஒழித்துக்கட்டுவது என்பது இயற்கைக்கு மாறான விஷயமல்லவா? காம உணர்வை அடக்குபவர்களுக்கு மனநலச் சிக்கல்கள் நிறைய வரும். குடும்பங்களில் பல பெண்கள் சிடுமூஞ்சகளாக இருப்பதற்கு அவர்களது செக்ஸ் வாழ்வில் திருப்தி இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
காசிப் பக்கம் அகோரிகள் என்ற சாமியார்கள் 24 மணிநேரமும் கஞ்சா போதையில் இருப்பார்களாம். அவர்களுக்கு செக்ஸ் உணர்வு வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களது உடல் ஆரோக்கியமானது அல்ல. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் துறவிகளுக்கு எப்படி காம உணர்வு இல்லாமல் இருக்கும். அதை அடக்குவதற்கு அல்லது வெளியேற்றுவதற்கு பல்வேறு விதமான தியானம், யோகம் போன்ற தொழில் நுட்பங்கள் இருப்பதாகச் சொல்கின்றனர். அவர்களுக்கு ஒரு துளி விந்து கூட கனவில் கூட வெளிப்படாதாம். அவர்கள் அந்த சக்தியை சேமிக்கிறார்கள். அதை சிற்றின்ப நிலையில் இருந்து பேரின்ப நிலைக்கான சக்தியாக உருமாற்றுகிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
எதற்கு இவ்வளவு பிரயத்தனம்?
துறவிகளுக்கு அதிகாரம் கிடைக்கிறது. மனித சமூகம் தன்னை கடவுளாகப் பார்க்கிறது என்கிற எண்ணம் அவர்களது ஈகோவிற்கு தீனி போடுகிறது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி மனித குலத்திற்கு நல்ல விஷயங்களை சொன்ன துறவிகளும் உண்டு. புத்தன் தனக்கு கிடைத்த அதிகாரத்தை அன்பைப் போதிக்க பயன்படுத்தினான். வாழ்க்கை அநித்தியத்தை எடுத்துச் சொல்ல பயன்படுத்தினான். விவேகானந்தர், தன்னம்பிக்கையை வளர்க்க பயன்படுத்தினார். இயேசு கிறிஸ்து அன்பை எளிமையை தன்னடக்கத்தை போதிக்க பயன்படுத்தினார். அவர்களை தேடிச் சென்றவர்களும் சுயநலமில்லாதவர்களாக இருந்தனர். இப்போது அப்படி அல்ல. லௌகீக வாழ்க்கையில் உள்ள நெருக்கடி உலகமயம் காரணமாக மனிதனுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம், போட்டி மிகுந்த உலகம் தொடர்ச்சியாக தொடுக்கும் தாக்குதலில் முதல் இடத்திற்கு வரவேண்டுமே என்ற தீராத பயம், பதற்றம் போன்றவை மனிதனுக்கு மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. இந்த மன அழுத்தக்காரர்கள் ரிலாக்சேஷனுக்காக சாமியார்களை தேடிச் செல்கின்றனர்.
அவர்களிடம் ஏராளமான பணம் உண்டு. நிம்மதி இல்லை. பணத்தை கொடுத்து நிம்மதியை வாங்க தீர்மானிக்கின்றனர். பணத்தை வாங்கிக் கொண்டு நிம்மதியை கொடுப்பதற்கு நவீன சாமியார்கள் தயார். நித்யானந்தர் போன்றவர்களெல்லாம் அந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான்.
ஆரம்பத்தில் யோகம், தியானம், கடவுள் என்ற மட்டும் சொல்லிக்கொண்டிருந்த சாமியார்கள்தான் இருந்தார்கள். அதன்பிறகு சாமியார்களில் பெரும் படிப்பாளிகள் தோன்றி விட்டனர். எனக்குத் தெரிந்து ஓஷோதான் அதை ஆரம்பித்து வைத்தார். (ஆனால் ஓஷோ நேர்மையானவர். அவர் நான் செக்சுக்கு எதிரி என்றெல்லாம் சொல்லி ஊரை ஏமாற்றவில்லை. அது இயல்பு. அதன் உள்ளே சென்றுதான் அதைக்கடக்க வேண்டுமே தவிர, அதைத் தொடாமலேயே நான் அதைக் கடந்து விட்டேன் என்று சொல்லக் கூடாது என்றுதான் அவர் சொன்னார்) உளவியல், அரசியல், விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம் என்று சகல துறைகளையும் படிக்க ஆரம்பித்து விட்ட இந்த சாமியார்கள் அற்புதமான பேச்சாற்றலை உடையவர்களாகவும் இருக்கின்றனர்.
இவர்கள் கற்று வைத்திருக்கும் அத்தனை வித்தைகளும் கடவுள் எனும் கருத்தாக்கத்திற்கு சம்பந்தமில்லாதது. மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான வித்தைகள் அவை. இந்த வித்தைகள்தான் அவர்களை கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக்குகின்றன.
சர்க்கஸ் கலைஞர்கள் பல்வேறு வித்தைகள் கற்று வைத்துள்ளனர். அதுபோன்ற ஒரு வித்தையாகத்தான் நாம் பிரம்மச்சாரியத்தையும் பார்க்க வேண்டும். நம்மால் முடியாததை சில பயிற்சிகள் எடுத்து அவர்கள் செய்கின்றனர்.
இல்லறத்தை துறந்து 24 மணிநேரமும் வருடம் 365 நாட்களும் ஒரு நொடிப்பொழுது கூட காம எண்ணமே இல்லாமல் ஒருவரால் இருக்க முடிகிறது என்று சொன்னால் இருந்து விட்டுப்போகட்டுமே அதனால் என்ன என்ற எண்ணம் நமக்கு வரவேண்டும்.
ஆகா! அற்புதம்! எங்களால் கல்யாணம் இல்லாமல் இருக்க முடியவில்லை. ஆனால் இந்தத் துறவிகள் அத்தனை ஆசைகளையும் அடக்கிக் கொண்டு இருக்கிறார்களே என ஆச்சரியப்படாலாம். கைதட்டிப் பாராட்டலாம். அதற்கு மேல் அவர்களைக் கடவுள்களாக்கி கொண்டாடுவதிலும் அவர்களுக்கு அடிமையாவதிலும்தான் ஆபத்து இருக்கிறது.
அவர்கள் துறவிகளாக (உண்மையாகவோ போலியாகவோ) இருப்பதனால் காமத்தை வென்றவர்கள் நாங்கள் என்று கர்வத்தோடு சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். நம்மைப் போன்ற அப்பாவிகளுக்கு, “சே அந்தப்பாவத்தை தினந்தோறும் நாம் செய்து கொண்டிருக்கிறோமே. அற்புதமான அந்தத் துறவிகள் அந்தப் பாவக்கடலைத் தொடுவதே இல்லையே என்று குற்ற உணர்வு வந்து விடுகிறது. குற்றஉணர்வுக்கு ஆட்பட்ட மனிதர்களை கையாள்வது சுலபம். எப்படி ஒரு அற்புதமான ஏற்பாடு பாருங்கள். இயற்கையான ஒரு உணர்வை பாவம் என்று சொல்லி விடுவது? அதை மீற முடியாமல் தவிக்கும் மனிதர்களை அற்ப ஜீவிகளைப் போலப் பார்ப்பது. அதன் மூலம் அவர்களை அடிமைகளாக்கி வெற்றி கொள்வது. இதுதான் துறவானது காலம் காலமாக செய்து வைத்திருக்கும் ஏற்பாடு.
இந்த ஏற்பாடுதான் போப்பில் இருந்து ஆரம்பித்து நித்யானந்தர் வரையில் அனைத்து சாமியார்களுக்கும் அதிகாரத்தை கொடுக்கிறது. அந்த அதிகாரம் அவர்களுக்கு சகல சவுகரியங்களையும் வழங்குகிறது. எனவே நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

1908 elegance ...


Apparently illiterate farmers can do wonders in the field of technology and research.


Farmer Siddappa G Hullajogi from Karnataka never went to a school but designed a windmill to generate power. "I use the electricity from windmill in my fields and my house," he said.
The farmer first thought of alternative power when the electricity office refused to provide electricity to his village as it was far from the nearest powered village. His ideas came from windmills installed near his fields by private power companies.
Siddappa used waste materials to design the windmill. He fabricated blades using tin sheets, and he used wood and copper wires to make a propeller.
The windmill operates a borewell to irrigate Siddappa’s farm. It is also used to power bulbs in the homes of the farmer and his brother. “The windmill generates power to light up 10 bulbs of 60 watts and two TV sets in my home and my brother’s,” says Siddappa.
Image Courtesy: colorsmagazine. com

View near Point de Galle, Ceylon By Henry Salt (1780-1827) & Engraver Daniell Havell (1785-1826)


Henry Salt (1780-1827) - artist, traveller, diplomat and collector of antiquities, was born at Lichfield, Staffordshire, England 14 June 1780. He was destined to be a portrait- painter, and on leaving school was taught drawing by Glover, the watercolour-painter of Lichfield. In 1797 he went to London and became a pupil of Joseph Farington, R.A., and (in 1800) of John Hoppner, R.A. The turning point in his career was 3 June 1802, when Salt left London for an eastern tour with George, viscount Valentia (afterwards Lord Mountnorris), whom he accompanied as secretary and draughtsman.
He visited the Cape, India, Sri Lanka, and (in 1805) Abyssinia, returning to England on 26 Oct. 1806. He made many drawings, some of which served to illustrate Lord Valentia's Voyages and Travels to India, published in 1809. The present image is from "Twenty-four Views taken in St. Helena, the Cape, India, Ceylon, The Red Sea, Abyssinia & Egypt" published 1 May 1809 by William Miller Albemarle Street, May 1.st 1809 displayed in Foreign & Commonwealth Office, Whitehall, London, UK, with hand-coloured aquatints by D. Havell and J. Bluck from Salt's own drawings. The originals of all these drawings were retained by Lord Valentia, who also retained the ownership of the copper plates after Salt's death. The format and style of presentation of the plates is similar to Thomas and William Daniell's great work, Oriental Scenery (1795- 1808), and displays great artistry by both Salt and his engravers.

Wednesday, February 4, 2015

சித்திர எழுத்துக்கள்

வேலூர் மாவட்டம் குடியேற்றம் (குடியாத்தம்) தாலுக்கா பேரணாம்பட்டு அருகில் சாத்கர் என்ற ஊருக்கு வடக்கு புறமாக காட்டுக்குன்று பகுதியில் சுமார் 4 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றால் “ஜெரடான் கல்” என்று அழைக்கப்படும் இடம் பாறைகள் நிறைந்த பகுதி.
50 அடி உயரத்தில் 15 அடி உயரம், 10 அடி அகலம் உடைய பாறை உள்ளது. அதில் 3 அடியிலிருந்து 8 அடி உயரம் வரை பரவலாக 40-க்கும் மேற்பட்ட சித்திர எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. இதற்கு கீழ் வற்றாத நீர் நிலை உள்ளது. அங்கிருந்து 200 அடி தூரத்தில் வற்றாத நீர் ஓடை செல்லுகிறது. பரந்த இடவசதி உள்ளது.
சித்திர எழுத்துக்கள்
அங்கிருந்து கால்நடையாக நடந்து சென்றால் தரைபகுதியிலிருந்து 175 அடி உயரத்தில் சரிவான பகுதியில் “யானைகுண்டு” என்று அழைக்கப்படும் மிகப்பெரிய பாறை உள்ளது. அந்தப்பாறை 125 அடி நீளம், 35 அடி உயரம் உள்ளது. அந்தப் பாறையின் அடிப்பகுதியிலிருந்து 3 அடி முதல் 8 அடி உயரம் வரை சுமார் 125 சதுர பரப்பில் பாறை சமன் செய்து ஏறக்குறைய 100 சித்திர எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் சில எழுத்துக்கள் சிதைவடைந்து உள்ளன. அதன் அருகில் 15அடி தூரத்தில் வற்றாத நீர் நிலை உள்ளது. யானை குண்டுக்கு அடுத்த 50 அடி தூரத்தில் பல நூற்றுக்கணக்கான பலகை கற்களால் ஆன 8அடி உயரம், 20 அடி நீளம் கல் திட்டு உள்ளது. பாறையின் சரிவுபகுதியை மேடாக்கி போக்குவரத்திற்கு பயன்படுத்தி உள்ளனர். தீட்டப்பட்ட எழுத்துக்களுக்கு மத்தியில் மயில் உருவமும் ஐந்து (அ) ஆறு மனித உருவங்களும் தீட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு பகுதியில் இரண்டு வரிகளில் உள்ள எழுத்தை நான் உணவு, உ.உணவு என்று படித்தேன். பரவலாக இதன் மத்தியில் பெரும் கற்படைச் சார்ந்த சட்டி, பானை, கறுப்பு, சிவப்பு நிறம் உடைய மண் பாண்டங்களிலும் பொறித்து இருப்பது போன்ற குறியீடுகள் இதில் நிறைந்து காணப்படுகிறது.
ஆரியர் வட இந்தியாவை கைப்பற்றிய பிறகு சிந்துவெளி திராவிட இனமக்கள் தென்னிந்திய பகுதியில் குடியேறி நிலை கொண்ட பிறகு இச்சித்திர எழுத்துக்கள் தீட்டி இருக்கவேண்டும். இதன் காலம் கி.மு.1500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. சிந்து சமவெளி மக்கள் மனிதர், புச்சி, மிருகங்கள், இலைகள், சக்கரங்கள் போன்றவற்றிலிருந்து உயிர்மெய் எழுத்துக்களை கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து அதை பயன்படுத்தி இருக்கிறார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்
யானை குண்டு
சிந்து சமவெளி சித்திர எழுத்துக்களைப் பற்றி மதிவாணன் ஆய்வு செய்து இந்தியா முழுவதும் எழுத்துக்களை பற்றி புத்தகம் வெளியிட்டுள்ளர். அவருடைய புத்தகத்தில் இல்லாத சில சித்திர எழுத்துக்களும் மயிலும் யானை குண்டு பகுதியில் உள்ளன.
கற்கால் ஆயுதம்
யானை குண்டு தெய்வ வழிப்பாட்டு தலமாகவும், குடியிருப்பு பகுதியாகவும் இருந்து இருக்கவேண்டும். இந்த எழுத்துக்கள் தீட்ட சுண்ணாம்பு, கரி, இனம் புரியாக கலவை கொண்டு வெண்மை நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதி பெரும் ஆய்வுக்குரியது. இரும்பாலான ஈட்டிகள் இரண்டும், பழைய கற்கால ஆயுதங்கள், இடை கற்கால ஆயுதங்கள், புதிய கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மனிதர்கள் கைகளால் இணைந்து மல்யுத்தம் செய்வது போலவும் உள்ளனர். மனிதன் ஒருவன் தன் இரண்டு கைகளால் சூலாயுதம் போன்ற ஆயுதத்தை வைத்து இரண்டு கால்களையும் விரித்து போருக்கு தயார் நிலையில் இருப்பதை போலவும் சித்தரிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு கைகளிலும்
ஒரு மனிதன் நின்ற நிலையில் தன் இரண்டு கைகளிலும் ஆயுதத்துடன் நிற்பதை போலவும் காணப்படுகிறது.
ஒரு மனிதன் நின்ற நிலையில் உடற்பயிற்சிக்கு (தயார் நிலையில்) மவுன நிலையில் இருப்பதை போலவும் உள்ளது. மேலும் இரண்டு கைகளும் சரிசமமான நிலையிலும் காலகள் இரண்டும் ஒன்று சேர்ந்து இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்றும் இருபுறமும் விரித்த நிலையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
குரங்கு குண்டு
யானை குண்டிலிருந்து கரடு முரடான பகுதியை நோக்கி கிழக்கு புறமாக சுமார் 4 கி.மீட்டர் கால் நடையாக சென்றால் பூங்குளம் என்ற ஊருக்கு மேற்கு புறத்தில் குன்றின் அடிவாரத்தில் குரங்கு குண்டு என்ரு அழைக்கப்படும் இரண்டு பிளவுபட்ட பாறையில் இடது புறத்தில் பாறையின் அடிவாரத்தில் 3 அடி முதல் 15 வரை பரவலாக 14 எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் சில எழுத்துக்கள் சிதைந்து உள்ளன. பாறையின் உயரம் சுமார் 45 அடி உள்ளது. உட்புறத்தில் குகை ஒன்று உள்ளது. எழுத்துக்கள் அமைந்து இருக்கும் இடத்திற்கு இடது புறமாக 7 அடி உயரம் உடைய கல்குண்டு உள்ளது. அதில் மதுரையை ஆண்ட மருதநாயகம் என்கிற யூசுப்கான் என்று தெலுங்கு கல்வெட்டு உள்ளது. கல்வெட்டின் நீளம் 51 அங்குல நீளம் 3 அடியிலிருந்து 13 அங்குல அகலமுடையது. யூசுப்கான் ஆட்சி புரிந்த ஐந்தாவது ஆண்டில் ஆங்கிலேயர்கள் அவரை தூக்கிலிட்டு கொன்ற பிறகு உடலின் ஒரு பகுதியை இந்தப்பகுதியில் அடைக்கலம் செய்யப்பட்ட பிறகு கல்வெட்டை பொறித்து இருக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் தெய்வ வழிபாடு, உடலின் ஒரு பகுதியை இந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு பலியிடல் நடந்து இருப்பதாக பூங்குளம் மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த பகுதியை ஆராய்ச்சி செய்தால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரலாம்.
வேலூர் மாவட்டத்தில் சிந்து சமவெளி சித்திர எழுத்துக்கள் பற்றி சிவநாதபுரம், பெத்தூர், ஆலங்காயம், இரத்தினகிரி, சின்ன பாலப்பாக்கம், பையனபள்ளி, அப்புக்கல் ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அப்புக்கல் என்ற இடத்திலுள்ள சித்திர எழுத்துக்கள் கல் உடைத்து அழிந்துவிட்டது.
ஆர். சுந்தரம்
மேற்கண்ட சித்திர எழுத்துக்கள் பற்றி தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மைய உறுப்பினர் ஆர். சுந்தரம் நேரில் சென்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார். இவர் குடியேற்றம் நெல்லூர்பேட்டையை சேர்ந்தவர்.

Ludwig Prandtl,

It's the birthday of Ludwig Prandtl, who was born in 1875 in Freising, Germany. Prandtl studied engineering at the Technical University of Munich. After graduating, he joined an engineering company, where he worked as a mechanical engineer. A project to design a pump changed his career. He became interested in fluid dynamics and, in 1901, became a professor of the subject at the University of Hanover. Prandtl's investigations into fluid flow around objects revolutionized the field and proved important in the new field of aviation. Among his most significant discoveries was the existence of a boundary layer between an object's surface and the uniformly moving fluid above it.

Hindu Thought outside Bharata

Banteay Srei Temple Angkor : Banteay Srei is a Khmer temple dedicated to the ancient Hindu God Shiva which was constructed in the 10th century and consecrated about 962. Following the destruction of Angkor by the Siamese armies this Temple was left to be covered in forest until it was rediscovered in 1914. We now know the history of the monuments from the original stone stela which was discovered in 1936.
It is located 25 kilometers north east of Angkor Thom. It is the fourth most interesting set of monuments after Angkor Wat, Angkor Thom and the Bayon and Preah Khan. The trip by road vehicle also offers a good view of Cambodian countryside.
The name ''Banteay Srei in Khmer means '' Citadel of Women ''. Originally it was called a Shiva Temple ''Great Lord of the Threefold World''. The name, Citadel of Women, today has no significance save it may refer to the numerous bas relief carvings of Devatas throughout the monuments.
Shiva seated on the summit of Mount Kailasa, his abode. His consort Uma sits on his lap and clings anxiously to his torso. Other beings are also present on the slopes of the mountain, arranged in a strict hierarchy of three tiers from top to bottom. In the top tier sit bearded wise men and ascetics, in the middle tier mythological figures with the heads of animals and the bodies of humans, and in the bottom tier large animals, including a number of lions. In the middle of the scene stands the ten-headed demon king Ravana. He is shaking the mountain in its very foundations as the animals flee from his presence and as the wise men and mythological beings discuss the situation or pray. According to the legend, Shiva stopped Ravana from shaking the mountain by using his toe to press down on the mountain and to trap Ravana underneath for 1000 years.

Ganesha suprabhatham - Vinayakam Vighneswaram

Tuesday, February 3, 2015

நான் யார்...நான் யார்?


அறிவியல் உலகில் DNA கண்டுபிடிப்பு ஓர் மைல்கல். அது ஏராளமான அறிவியல் தகவல்களை, முக்கிய மாக மனித இனத்துக்கு தேவையானவற்றை, மனிதனின் நோய்க்காரணிகளையும் ,அது தீர்ப்பதற்கான வழிகளையும் சொல்கிறது. இரண்டு நாளைய்க்கு முன்னர் நிகழ்ந்த கண்டுப்பிடிப்பு அதைவிட அருமையான ஒரு விஷயத்தை கூறியுள்ளது. அமெரிக்க எடின்பரோ பலகலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டி.என். ஏ கடிகாரம், இயற்கையின் ஓர் அற்புதமான புதிரை அவிழ்த்துவிட்டதாக கூறுகின்றனர்.
பொறந்தபோது..!
உலகில் பொதுவாக உலவி வரும் பழமொழி:"உலகத்தில் பிறந்த மனிதன் ஒரு நாள் இறக்கப் போவது உறுதி.அது எந்த நாள் என்று தெரியாததுதான்..இயற்கையின் விந்தை.. புதிர்" என்று சொல்லிக் கொண்டு இருந்தனர். இன்று அந்த புதிரின் முடிச்சு லேசாக தளர்ந்துள்ளது... அது என்ன தெரியுமா? அதுதான் நாம் எப்போது இறப்போம் என்பதை நிரணயிப்பதை
சக்கைப்போடு போடு ராஜா..!
டி.என்.ஏ என்பது ஒருவரின் மரபணு மற்றும் பரம்பரை பற்றிய தகவல்கள . இதனை பரம்பரையின் ஜாதகம் என்று சொல்லலாமா? இது ஒருவரின் அனைத்து உடலியல் மற்றும் பரம்பரை விஷயங்களை அப்படியே பிட்டு பிட்டு வைக்கிறது. யார் ஏமாற்றினாலும், டி.என். ஏ ஏமாற்றாது.டி.என். ஏ மூலம், குழந்தையின் தந்தை யார், தாத்தா பாட்டி யார். அவர்களுக்கு என்ன வியாதி இருந்தது என்ற உண்மைகளும் கூட கண்டுபிடிக்கப்படுகின்றன நண்பரே. உதாரணமாக, மதுரைக்கு அருகிலுள்ள கிராமத்தில்,இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதரின் பரம்பரையின் வேர்.என்பது, அதான்பா அவரின் கொள்ளு, எள்ளு..பாட்டிக்கு முன்னர்தான். சுமார் 70,000ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க காடுகளிலிருந்து புறப்பட்டு, கடற்கரையோரமாகவே நடந்து ..(அப்பெல்லாம் பேருந்து, தொடர்வண்டி, விமானம் என்று நினைக்க் முடியுமா?) மனித இனத்திலிருந்து பிரிந்து வந்த ஒருவர் இங்கு வந்து தன பரம்பரையை விருத்தி செய்து கொண்டிருக்கிறார் என்ற உண்மை அறியப்பட்டது. . அவரிடம் உள்ள மரபணு “M130″DNA. என்பதையும் இது தொடர்பாக ஆய்வு செய்த மரபணு பேராசிரியர் முனைவர். பிச்சையப்பன் கண்டுபிடித்துள்ளார்.
உன் காட்டுல மழை..!
அது போலவே இன்றும் ஒரு வியத்தகு கண்டுபிடிப்பு நிகழ்நதுள்ளது.டி.என்.ஏ விலுள்ள உயிரியல் கடிகாரம், மனிதர்கள் எவ்வளவு காலம் வாழ்வார்கள். குறிப்பாக ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்வான் என்பதையும் துல்லியமாக சொல்லிவிடும் வல்லமை இந்த டி.என். ஏ உயிரியல் கடிகாரத்திடம் உள்ளதாக எடின்பரோ பலகலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சோசியம் பாக்கலையோ..ஜோசியம்..!
டி.என். ஏ விடம், நம் வாழ்நாளில் ,காலப் போக்கில் ஏற்பட்டுள்ள வேதி மாற்றம் மூலம், இவை எவ்வளவு காலத்தில் ஏறப்பட்டுள்ளன. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழும் என்பதையும் அறிய் முடியும் என்கின்றனர். இந்த அற்புதமான அரிய கண்டுபிடிப்பை, இவர்கள் 2015 ஜனவரி 30 ம் நாள் வெளியிட்டுள்ளனர்(Genome Biology, 2015; 16 (1) DOI: 10.1186/s13059-015-0584-6). பொதுவாக மக்களின் உயிரியல் வயது.அவர்களின் உண்மை வயதை விட அதிகமாக இருந்தால், அவர்கள் விரைவில் இறப்பை தழுவுவதாகவும், இரண்டும் சமமாக இருந்தால், அப்படி நிகழ்வதில்லை என்றும் அறியப்பட்டுள்ளது.
சும்மா வருமா.. முடிவு...!
ஆராய்ச்சியாளர்கள், சுமார் 5,000 மக்களிடம், தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆய்வு செய்த்ததின் அடிப்படையில் , அதன் விளைவாக சில் உண்மைகள் தெரிய வந்துள்ளன.மனிதர்களின் உண்மை வயதையும், ஆய்வாளர்கள் முன்கூட்டியே இது தொடர்பாய் கணித்த வயதையும் ஒப்பிடும்போது சில முக்கியமான ஒப்பீடுகளை அறிந்தனர். மேலும் ஒருவரின் உயிரியல் சார்ந்த வயது என்பது,அவரது இரத்த சோதனையிலிருந்து கூட அறிய முடியுமாம். இது எப்படி இருக்கு? நமது இரத்தம். நாம் எவ்ளோ.. நாள் வாழப்போகிறோம் என்ற பரம ரகசியத்தை சொல்லுமா.?.நமக்கு மட்டும் ரகசிய பரிமாற்றம்தான்.சொல்லுமாம்..? தயவு தாட்சண்யமின்ற சொல்லும் என்று சவால் விட்டு சொல்கின்றன.ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வுகள்.
இறக்கும் நாள் அறியவோ..!/யார் உன்னை இயக்கவோ..
எடின்பரோ மற்றும் ஆஸ்திரேலியா பல்கலைக் கழகங்கள். இணைந்து ஒருதகவலை வெளியிடுகின்றன. சோதனையில் பங்கேற்றவர்களை தொடர்ந்து கண்காணித்தனர். ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த அற்புதமான தகவல் :வேகமாக காலச் சக்கரத்தை இயக்கம், உயிரியல் கடிகாரம், வேகமாக சுழலும்போது, இறப்பு சீக்கிரம் வருகிறது என்பதற்கும் இணைப்பு பாலம் உண்டு, அதுபோல, புகைபிடித்தல், சரிக்கரை வியாதி மற்றும் இதய வியாதிகள் மூலமும் வாழ்நாள் குறைவது தெரிய வந்துள்ளது.எடின்பரோ ஆய்வாளர்கள், ஆஸ்திரேலியா, அமிரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவை செய்த ஆய்வுகள் மூலமும், டி.என். ஏ வின் வேதிமாற்றம், குறிப்பாக மெதிலேஷன்(methylation) மூலம் ஒருவரின் வாழ்நாளை கூறமுடியும்.என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். . இந்த சிறு மாற்றம், டி.என். ஏ அமைப்பில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவராது. ஆ னால் முக்கியமாக, உயிரியல் செயல்பாடுகள் எப்படி தூண்டப்படுகின்றன. எப்படி மரபணுக்களின் செயபாட்டை எப்படி நிறுத்துகின்றன.. துவங்குகின்றன என்ற சூட்சும சிக்னலின் இயக்கத்தை (ON & off technique) இதில் அறிய வைக்கின்றன.என்பதெல்லாம் இதில் அத்துப்படி. மெதிலேஷன் மாற்றம் என்பது, நிறைய மரபணுக்களில் மாற்றம் செய்கிறது.ஒரு முறை ஏற்பட்ட மாற்றம், ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே நடக்கிறது.
காலத்தை வென்றவன் நீ..!
எடின்பரோ பல்கலைக் கழக பேராசிரயர், வயதாவதின் காரணி தேடும் துறையின், முனைவர் ரிக்கொர்டர் மரியோனி (Dr Riccardo Marioni) சொல்வதாவது: நிறைய ஆய்வுகள் செய்ததின் மூலம் நாங்கள் அறிந்து கொண்டது. அனைத்து ஆய்வுகளும் ஒரே முடிவைத்தான் தருகின்றன. .உயிரியல் கடிகாரத்துக்கும், அதன் வாழ்நாளுக்கும், இறப்புக்கும் தொடர்பான நோய்க்காரணிகளுக்கும் நேரடி தொடர்பு உண்டென்று அறியப்பட்டுள்ளது. ஆனால் இதில் எந்த இடத்தில் மனிதனின் வாழ் நாள், மரபணு காரணிகள, எப்படி உயிரியல் வயதுடன் இணைந்து தூண்டுதல் செய்கின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரியவில்லை.இதனால் ஏற்படும் புதிய கண்டுபிடிப்பு என்பது மனிதனின் நீண்ட ஆயுளையும்,உடல்நலம் மிக்க நீண்ட வாழ்வியலையும் நீட்டிக்கும் என்பது மட்டும் உறுதி..என தெளிவாகத் தெரிகிறது. ஆனால் வயதாவதை அறிய ஒரு புது யுக்தி கிடைத்துள்ளது என்பது போற்றிக் கொண்டாடக்கூடிய மிகப் பெரிய கண்டுபிடிப்புதான்.இதில் மனித குலம் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

Mohana Somasundram 

What are the Solfeggio frequencies?


Solfeggio frequencies make up the ancient 6-tone scale thought to have been used in sacred music, including the beautiful and well known Gregorian Chants. The chants and their special tones were believed to impart spiritual blessings when sung in harmony. Each Solfeggio tone is comprised of a frequency required to balance your energy and keep your body, mind and spirit in perfect harmony.
The main six Solfeggio frequencies are:
396 Hz – Liberating Guilt and Fear
417 Hz – Undoing Situations and Facilitating Change
528 Hz – Transformation and Miracles (DNA Repair)
639 Hz – Connecting/Relationships
741 Hz – Expression/Solutions
852 Hz – Returning to Spiritual Order

தமிழ்சினிமாவும் பெண் உதவி இயக்குநர்களும்

தமிழ்சினிமாவில் ஏன் பெண் உதவி இயக்குநர்கள் அதிகமில்லை என்ற கேள்வியை, பலர் என்னிடம் எழுப்புகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தான், பெண் உதவி இயக்குநர் என்றால், ஏதோ "நடிகையின் எடுபிடி" என்று நினைக்கிறார்கள்.
நடிகைகளும் அவர்கள் தொழில்களுக்கான சவால்களைச் சந்திப்பவர்கள் என்று புரிந்து கொண்டால், இத்தகைய பொத்தாம்பொதுவான விமர்சனம் எழாது. 'நடிகையின் எடுபிடி' என்பது சினிமாவைப் புரிந்துகொள்ளாத, ஒரு பிற்போக்குத்தனமான சிந்தனை.
நடைமுறை இது இல்லை என்பதை, ஒரு சினிமாவிலேனும் வேலை பார்த்து தான் புரிந்துகொள்ளமுடியும் போல.
பொதுவாகவே, சினிமாவிற்கு வெளியே இருந்து சினிமாவின் பார்வையாளராக இருந்து மட்டுமே புரிந்து கொள்ளும் மனோபாவமே இது.
நான் அறிந்த இயக்குநர் ஒருவர், தன்னுடன் வேலை செய்ய பெண் உதவி இயக்குநர்கள் தாம் வேண்டும் என்பார்.
'இயக்குநர்' வேலைக்கான துல்லியத்தையும், அதன் அபரிமிதமான வேலைகளின் தேவைகளையும் பெண் உதவி இயக்குநர் அளவுக்குப் புரிந்து கொண்டு வேலைசெய்ய பெண் உதவி இயக்குநர்களால் தான் முடியும் என்பார்.
மும்பையில் ஹிந்தி சினிமாவில் பணிபுரியும் பெண்உதவி இயக்குநர்கள் பலருடன் பணிபுரிந்திருக்கிறேன். அங்கு, இந்த நிலைமை இல்லை. அங்கு சினிமா என்பது மிகவும் தொழில்முறை வேலையாகப்பார்க்கப்படுகிறது. பெண் / ஆண் என்ற பேதம் இல்லை.
'உதவி இயக்குநர் வேலை', ஓர் அன்றாட வேலை. எண்ணங்களுக்கும் நடைமுறைக்கும் இடையே நெருக்கடிகளைக் கொடுக்கும் வேலை.
ஆனால், பெண் உதவி இயக்குநர்கள், நவீன தொழில்நுட்பத்தையும் தம் படைப்பாற்றலையும் கைக்கொண்டு இந்த வேலையை மிகவும் லாவகமாகச் செய்து முடிக்க முடிப்பதாக இன்னோர் இயக்குநர் தனிப்பட்ட உரையாடலில் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
நாளுக்கு நாள் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருக்கிறது, சினிமா. அதன் அதிநவீன தொழில்நுட்பத்தையும், மொழியையும், கலைவடிவத்தையும் ஒருங்கிணைந்து கையாள, 'தயாரிப்பு மனநிலையும்', 'தயார் மனநிலையும்' வேண்டும்.
படத்திற்கான முன் தயாரிப்பு, படப்பதிவு, படப்பதிவுக்குப் பின்பான தொகுப்பு வேலைகள் எனத் தொடர்ந்து அதி நவீனச்சவால்களைப் பெண்கள் எளிதாகக் கையாண்டாலும், பெண் உதவி இயக்குநர்களுக்குக் கிடைப்பதென்னவோ அவப்பெயர்.
தமிழ்சினிமா குறித்து, குடும்பங்களிலும் ஊடகங்களில்உம் பொதுச்சமூகத்திலும் நல்லெண்ணமே கிடையாது. சினிமா என்றாலே ஏதோ இழிவான தொழிலாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்தும் பிற மொழிகளில் இருந்தும் தமிழ்சினிமாவில் வேலை செய்யும் பெண்கள், நல்ல முறையில் வேலை செய்து தம்மை பலப்படுத்திக்கொள்வதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை.
நடிப்புத்தொழிலுக்கும், தொழில்நுட்பத்துறைக்கும், இயக்கத்திற்கும் நான் மேற்குறிப்பிடுபவை ஒரு சேரப் பொருந்தும்.
நடிப்பு, இயக்கம், தொழில்நுட்பம் என எந்த வகையிலும், சினிமாவிற்குள் பெண்களை வரவிடாத கருத்துகளை உதிர்த்தவண்ணமே, சினிமாவில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புவது எந்த வகையில் நியாயம்.
சினிமாவை எல்லோரும் தொடர்ந்து திட்டித்தீர்ப்பதற்கு, அப்படித் திட்டுவதில் உள்ளார்ந்த குதூகலத்தை அனுபவிப்பதற்கு வேண்டுமானால் இது உதவலாம்.
தழிழ்சினிமாவில் முற்போக்கான, கலைவடிவ மாற்றத்தைக் கொண்டுவர இது ஒருபொழுதும் உதவாது.

Kutti Revathi

Top 10 New Sai Baba Full Songs || Achyutam Keshavam || Om Sai Namo Namah...

Monday, February 2, 2015

Research Shows Intelligent People Stay Up Late, Do More Drugs, And Have More Sex

By Steven Bancarz|  What is the mark of an intelligent mind in our day and age?  When we think of intelligent people, we may have been conditioned to envision them in a library somewhere studying.  We associate intelligence with social reservation and good behaviour.
But what if the opposite were true?  What if the ones who are most intelligent are engaging in behaviours grandma and grandpa wouldn’t approve of?  Times have changed, and people who have a higher intelligence aren’t always interested in studying and following the rules.
This may sound a bit shocking, but a series of studies have come out showing that intelligent people stay up later, do more drugs, and have more sex. The people in our society who have the highest IQs are noctural and enjoy indulging in drugs and sex more often than people with a lower IQ.
Here is a list of the three studies that should completely change the way we think about intelligence and behaviour:


1) Intelligent People Are Night Owls

In a study published in Personality and Individual Differences, researchers proposed the hypothesis that people who are of high intelligence will be drawn to evolutionarily novel behaviours.  Novel behaviours (new behaviours) are thought to be evolutionary advantageous because they expand our problem solving ability and provide us with new knowledge we can use to improve our lives.  It’s kind of like nature’s way of pushing itself to evolve and create something new.
They found that intelligent people are not only more likely to be liberal and free thinkers, they are also more likely to have different circadian rhythms (sleep cycles).
The study found that people with high childhood and adulthood IQs went to bed about half an hour later each night than people of normal intelligence, and 30 minutes later than people of lower intellectual ability.  They also wake up later by about the same margains as well.  This was true of both weekends and weekdays.
As the study concludes:
Survey of ethnographies of traditional societies suggests that nocturnal activities were probably rare in the ancestral environment, so the Hypothesis would predict that more intelligent individuals are more likely to be nocturnal than less intelligent individuals. The analysis of the National Longitudinal Study of Adolescent Health (Add Health) confirms the prediction.

The correlation from the study was very clear.  The higher the IQ, the later they tend to stay up.  And these results were concluded from a sample of over 20,000 people. If you or your children have a habit of staying up late and can’t seem to break it, that could actually be a good thing.  Instead of trying to force yourself to go to bed “on time”, use that time to do something creative.

2) Intelligent People Do More Drugs

Intelligent people aren’t just night owls, they also seem to be more into experimenting with drugs.  Sounds crazy right?  It didn’t make sense at first to me either.  Some of the least intelligent people I have ever met smoke and drink way too much.  But on average, if you have a higher IQ, you are more likely to experiment with drugs.
A National Child Development study reported on in Psychology Today, people who have high IQs both in childhood and adulthood are much more likely to experiment with psychoactive drugs than people with low IQs.  Why? Because psychoactive drugs are evolutionarily novel and different from the general behaviour of our ancestors.
According this study which was published in the UK in 2010:
Net of sex, religion, religiosity, marital status, number of children, education, earnings, depression, satisfaction with life, social class at birth, mother’s education, and father’s education, British children who are more intelligent before the age of 16 are more likely to consume psychoactive drugs at age 42 than less intelligent children.
…there is a clear monotonic association between childhood general intelligence and adult consumption of psychoactive drugs. “Very bright” individuals (with IQs above 125) are roughly three-tenths of a standard deviation more likely to consume psychoactive drugs than “very dull” individuals (with IQs below 75).

Another study published in 2011 in the Journal of Epidemiology and Community Health found that people who scored high in intelligent tests as children were much more likely to experiment with illegal drugs in their adulthood, especially cannabis.  Another study published in 2012 came upon the exact same discovery that intelligent children were more likely to use cannabis, amphetamines, and magic mushrooms later in life.

3) Intelligent People Have More Sex

Artwork by Mark Henson
Additionally, researchers in the UK  found that students studying at universities such as Oxford and Cambridge spent more money on sex toys than at other universities. “The correlation probably has something to do with the open-mindedness that comes with intelligence,” says Annalisa Rose, 23, who works at LoveHoney, a high-end sex shop in Williamsburg, Brooklyn.
“I think that the ability to engage in an open sex life comes with the abilities of introspection and logical thought, and those require some level of intelligence. If we’re talking about an open sex life that comes from an emotionally healthy place, sexual morals are mostly made up anyway and intelligent people can rationalize past them…High-achievers aim for excellence in all areas of their life, so it makes sense that achieving sexual happiness is one of their goals.”
This is quite the significant sociological finding.  Students studying at the worlds most elite universities also spend the most money on sex toys.  It also appears that the more prestigious the university, the more students have sex.  These findings which were reported on The Telegraph have sparked speculation that high intelligence might be correlated with an increased sex drive.
Here is a list the top 5 Universities that spend the most amount of money on sex toys per year:
1) Cambridge £9,793
2) Oxford £9,689
3) Manchester £5,441
4) Lancaster £4,103
5) York £3,751

What does this all mean?

Correlation does not imply causation.  This does not mean that staying up late, doing drugs, and experimenting with sex toys makes you more intelligent.  But it seems to be the case that people who naturally have a higher degree of intelligence partake in these activities naturally because they are drawn to them.  Maybe it is because of their openmindedness, their desire to expand their mind and their experience, or a biological urge to experiment with something novel.
Chances are, a lot of people reading this tend to stay up late and indulge in life’s pleasures.  This is not necessarily a bad thing, and it may even be a natural consequence of having an above average IQ.  These three studies completely shatter everything we would expect to be true about people of high intelligence.  It seems to be the intellectuals that are having the most fun.  I think it’s time we let go of old stereotypes.
Sources: Listed within the article
About the Author: My name is Steven Bancarz, and I am the creator of ‘Spirit Science and Metaphysics’.  Thank you for reading this article!
 Artwork: The sexual artwork in 3rd section is called “Spiritual Genesis” by artist Mark Henson. To view more of his work, click here.
- See more at: http://www.spiritscienceandmetaphysics.com/research-shows-intelligent-people-stay-up-late-do-more-drugs-and-have-more-sex/#sthash.bOzEXvGI.dpuf