Search This Blog

Sunday, May 4, 2014

குழந்தை-டொனால்டு பார்தெல்மே

டொனால்டு பார்தெல்மே (1931 - 1989))                                             

தமிழில்: சி. மோகன்
அமெரிக்க எழுத்தாளர். பின்-நவீனத்துவப் புனைவுலகின் முக்கியப் படைப்பாளி. சிறுகதை - நாவலாசிரியர், எடிட்டர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர். சிறுகதைப் புனைவில் Donald_Barthelme_(author) அதிகபட்சப் பரிசோதனைகளை நிகழ்த்திக் காட்டியவர். எனினும், பல்வேறு மொழிகளில் அவருடைய கதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. நிறுவனங்கள் போற்றிப் பரிசளித்திருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் கெளரவப் பதவிகள் வழங்கியிருக்கின்றன. 'அர்த்தங்களை வலியுறுத்தும் மனோபாவத்திலிருந்து விடுபட நாம் கற்றுக் கொள்ள வேண்டும்' என்று கருதியவர்.
1931ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி பிலெடெல்ஃபியாவில் பிறந்தார். 1933ஆம் ஆண்டு இவர்கள் குடும்பம் ஹஸ்டனுக்குக் குடிமாறியது. பார்தெல்மே பள்ளிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டார்.
1949ல் ஹஸ்டன் பல்கலைக்கழகத்தில் இதழியலை மையப்பாடமாக ஏற்றுப் படித்தபோது, அப்பல்கலைக்கழக இதழின் எடிட்டராக அவருடைய 20ஆவது வயதில் நியமிக்கப்பட்டார். அன்று அது ஒரு சாதனை. பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே ஆர்மியில் சேர்க்கப்பட்டு கொரியாவில் சேவை செய்தார். அச்சமயம் ஆர்மி செய்தித்தாளின் செய்தியாளராகப் பணியாற்றினார்.
1962ல் நியூயார்க் சென்று முழுநேர எழுத்து வாழ்வை மேற்கொண்டார். 18 ஆண்டுகள் நியுயார்க்கில் வாழ்ந்த பார்தெல்மே 1980ல் மீண்டும் ஹஸ்டன் திரும்பி, ஹஸ்டன் பல்கலைக்கழக 'படைப்பாக்கச் செயல்திட்ட' இயக்குநராகப் பணியேற்றார்.
நான்கு முறை திருமணம் செய்துகொண்டவர். 1989ல் தன் 58ஆவது வயதில் தொண்டைப் புற்றுநோயால் மரணமடைந்தார்.)
இக்கதை 1987 ஆம் ஆண்ட எழுதப்பட்டதென அனுமானிக்க முடிகிறது -  மொழிபெயர்ப்பாளர் குறிப்பு.

குழந்தை செய்யத் தொடங்கிய முதல் தவறு, தன் புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழிக்க ஆரம்பித்ததுதான். அதனால், அவள் புத்தகத்திலிருந்து கிழிக்கும் ஒவ்வொரு பக்கத்திற்கும், பக்கத்திற்கு நான்கு மணி நேரமென அவள் தன் அறையில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் தனியாக இருக்க வேண்டுமென்று நாங்கள் ஒரு விதி செய்தோம். அவள் ஒரு நாளில் ஒரு பக்கம் கிழித்த ஆரம்ப கட்டத்தில் இவ்விதி - மூடிய அறையில் இருந்து எழும் அழுகையும் கதறலும் பதற்றம் தந்த போதிலும் - நன்றாகவே செயல்பட்டது. உன் தவறுக்கான தண்டனையை அல்லது தண்டனையின் ஒரு பகுதியையேனும் ஏற்றுக்கொள்ளவே வேண்டுமென நாங்கள் நியாயப்படுத்தினோம். ஆனால், பிறகு அவளின் பிடிமானம் வளர்சியடைந்த நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு பக்கங்களைக் கிழித்தெறிந்தாள். அதன் காரணமாக, மூடிய அறையில் தனியாக அவள் எட்டு மணி நேரம் இருக்க வேண்டி ஆயிற்று. அதற்கேற்ப தொல்லை எல்லோருக்கும் இரண்டு மடங்காகியது. எனினும், அவள் அவ்வாறு செய்வதை நிறுத்துவதாக இல்லை. அதன் பிறகு, நாட்கள் செல்லச் செல்ல, அவள் மூன்று அல்லது நான்கு பக்கங்களைக் கிழிக்கும் நாட்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அதன் காரணமாக, தொடர்ச்சியாக பதினாறு மணிநேரம் வரை அவள் தன் அறையில் தனியாக இருக்கும்படி ஆயிற்று. வேளா வேளைக்கு உணவு கொடுப்பதற்கு இது இடையூறாக இருந்ததால் என் மனைவி கவலைப்பட்டாள். ஆனால் நாம் ஒரு விதியை உருவாக்கினால் அதற்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டுமெனவும் பாரபட்சமோ தளர்வோ காட்டாமல் இருக்கவேண்டுமெனவும் நான் நினைத்தேன். இல்லையெனில் அவர்கள் தவறான கருத்து கொண்டு விடுவார்கள். அந்தச் சமயத்தில் அவள் பதினான்கு அல்லது பதினைந்து மாதங்கள் நிரம்பியவளாக இருந்தாள். அவ்வப்போது ஒரு மணி நேரம் போலக் கதறிய பின்பு அவள் தூங்கிவிடுவதென்னவோ உண்மைதான். அது கருணையின்பாற்பட்டது. அவள் அறை மிகவும் அழகானது. மரத்தினாலான அழகிய ஆடுகுதிரையும், நூறு பொம்மைகளும், பொதிக்கப்பட்ட மிருகங்களும் நிறைந்தது.
நேரத்தை பிரயோசனமாகப் பயன்படுத்தினால் புதிர் விளையாட்டு போன்று பல்வேறு காரியங்களை அந்த அறையில் செய்யலாம். துரதிருஷ்டவசமாக, நாங்கள் கதவைத் திறக்கும் சில சமயங்களில் மேலும் சில புத்தகங்களிலிருந்து மேலும் சில பக்கங்களை, அவள் உள்ளே இருக்கும்போது கிழித்திருப்பதை நாங்கள் கண்டோம். இந்தப் பக்கங்களையும் உரிய வகையில் கணக்கில் சேர்த்துக் கொண்டாக வேண்டும்.
குழந்தையின் பெயர் பார்ன் டான்சின். நாங்கள் எங்களுடையதிலிருந்து குழந்தைக்கு சிவப்பு, வெள்ளை மற்றும் நீல ஒயின் கொஞ்சம் கொடுத்தோம். மேலும் அவளுடன் சிரத்தையோடு பேசிப் பார்த்தோம். ஆனால், அது எவ்வித பயனும் அளிக்கவில்லை.
உண்மையான கெட்டிக்காரத்தனத்தை அவள் பெற்று விட்டாள் என்பதை நான் சொல்லியாக வேண்டும். வீட்டில் அவள் விளையாடிக்கொண்டிருக்கும்போது - தன் அறையிலிருந்து அவள் வெளி வந்திருக்கக்கூடிய அந்த அபூர்வமான தருணங்களில் - நீங்கள் அவளுக்கருகில் சென்றால், அங்கு அவளுக்கு முன் ஒரு புத்தகம் திறந்தபடி இருக்கும். நீங்கள் அதைப் பரிசோதித்தால் அது பார்ப்பதற்கு மிகச் சரியாகவே இருக்கும். அதன்பிறகு நீங்கள் உன்னிப்பாகக் பார்த்தால் சிறு முனை கிழிக்கப்பட்ட ஒரு பக்கத்தைக் காண்பீர்கள். இது, பட்டும் படாமலுமான சாதாரண பார்வையில் மிகச் சுலபமாகத் தெரிய வராது. ஆனால் அவள் என்ன செய்திருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். அவள் அந்தச் சிறு முனையைக் கிழித்து அப்படியே விழுங்கியிருப்பாள். அதனால், அவற்றையும் அவள் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் சேர்த்துக் கொண்டாயிற்று. உங்கள் திட்டத்தைத் தவிடு-பொடியாக்குவதற்கான தடைகளை ஏற்படுத்துவதற்காக எந்த ஒரு எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள். நாம் குழந்தையிடம் அதிகக் கண்டிப்போடு நடந்துகொள்வதால்தான் அவள் மிகவும் மெலிந்து கொண்டே போகிறாள் என்றாள் என் மனைவி. ஆனால் குழந்தை இஜவ்வுலகில் இ ஜன்னும் நீண்ட காலத்துக்கு வாழவிருக்கிறாள்; இந்த வாழ்க்கையை, ஏராளமான விதிகள் நிறைந்த இவ்வுலகில், அவள் பிறருடன் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும்; விதிமுறைகளுக்கேற்ப இயங்க உன்னால் கற்றுக்கொள்ள இ ஜயலாது போனால் நீ ஜஇவ்வுலகில் வெறுக்கப்பட்டு ஒரு குணவிலியென தனித்து விடப் படுவாய். சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவாய் என நான் குறிப்பிட்டேன். தன் அறையில் தொடர்ச்சியாக எண்பத்தெட்டு மணிநேரம் தனித்திருக்கச் செய்ததுதான் இருந்ததற்குள் மிக நீண்ட காலம். கதவின் கொக்கியை இரும்புக் கொண்டி கொண்டு என் மனைவி நீக்கித் திறந்தபோது அது முடிவுக்கு வந்தது. அப்போதும் அவள் இன்னும் பனிரெண்டு மணி நேரம் உள்ளிருந்திருக்க எங்களுக்குக் கடமைப்பட்டிருந்தாள். ஏனெனில், அவள் அப்போது இஜருபத்தைந்து பக்கங்களுக்காக உள்ளிருந்தாள். நான் மீண்டும் கொக்கியில் கதவை இணைத்தேன். மேலும், ஒரு பெரிய பூட்டு போட்டுப் பூட்டினேன். அதை ஒரு காந்தத் தகடு கொண்ட மட்டுமே ஒருவரால் திறக்க முடியும். அந்தக் காந்தத் தடை என்னிடமே வைத்துக்கொண்டேன்.
எனினும், எவ்வித முன்னேற்றமுமில்லை. குழந்தை, தன் அறையிலிருந்து, ஜருட்பொந்திலிருந்து வெளிவரும் ஒரு வெளவாலைப் போல் வருவாள். அருகிலிருக்கும் 'குட்நைட் மூன்' அல்லது வேறு ஏதோ ஒரு புத்தகத்தை நோக்கி விரைவாள். தன் கையால் முரட்டுத்தனமாக அதன் பக்கங்களைக் கிழிக்கத் தொடங்குவாள். பத்து நொடிகளில் 'குட்நைட் மூன்' இன் முப்பத்து நான்கு பக்கங்கள் தரையில் கிடக்கும். அவற்றோடு மேலட்டைகளும். நான் சற்றே கவலைப்படத் தொடங்கினேன். உரிய மணியளவை நான் அவள் பற்றுக் கணக்கில் சேர்த்தபோது, அதன் பிறகு 1992* வரை அவள் தன் அறையை விட்டு வெளிவரப் போவதில்லை என்பதை அறிய முடிந்தது. மேலும், அவள் மிகவும் வெளிறிக் காணப்பட்டாள். வாரக்கணக்கில் அவள் பூங்காவுக்குச் சென்றிருக்கவில்லை. ஏறத்தாழ ஒரு தார்மீகச் சிக்கல் எங்களுக்கு ஏற்பட்டு விட்டிருந்தது.
புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழிப்பது சரியானதே எனவும், அதைவிட, முன்னர் அவள் புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழித்துக் கொண்டிருந்ததும் சரியானதே எனவும் அறிவித்து இந்தப் பிரச்சனையை நான் தீர்த்தேன். பெற்றோராய் ஜஇருப்பதில் நிறைவளிக்கக் கூடிய விஷயங்களில் இஜதுவும் ஒன்று. ஏராளமான ஏற்பாடுகள் - ஒவ்வொன்றும் தங்கத்தைப் போல் சிறந்தது - உங்கள் கைவசமிருக்கின்றன. நானும் குழந்தையும் சந்தோஷமாக, தரையில் அருகருகே அமர்ந்து, புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழித்தோம். சிலசமயம் நாங்கள் தெருவிற்குச் சென்று காற்று விசைக் கண்ணாடித் தடுப்பானை - வெறுமனே கேளிக்கைக்காக - சேர்த்து நொறுக்கினோம்.

சிவாஜி..!


நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகைனயும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார்.

மகன் சம்பாஜியிடம், ‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து, அதைத் தானம் செய்வது வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’ என்றார்.

‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’ என்று மகன் கேட்க, ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’ என்றார் சிவாஜி.

‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா... அது முடியுமா?’’ என மீண்டும் மகன் சந்தேக‌த்துடன் கேள்வி எழுப்ப, ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ என்றார் சிவாஜி உறுதியோடு!

அதன்பின், சிறைகுப் பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.

பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட் போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்கைள அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌ க் கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.

‘‘மாபெரும் படை கொண்ட முகலாயர்கைள என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில்... ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.

பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார். சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தேவ, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை... துணிந்தவனுக்குத் தொல்வியில்லை’’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.

ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால், சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,

‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத் தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.

1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற அவரது தாரக மந்திரம்தான்.

கிட்னி கல் என்றால் என்ன?


சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்
இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidis m), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections) , , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்
யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது
அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.

சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.
கிட்னி கற்கள் யாருக்கு வரும்-
பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு
ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கிட்னி கல் - அறிகுறிகள்
சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.
நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.
அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.
சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட்,ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.

Ceramic screws are corrosion and heat resistant



Most screws are made of steel. But high temperatures or acidic environments take their toll on this otherwise stable material. The alternative is ceramic screws. Researchers can now accurately predict their stress resistance.

Using a screw test rig and simulations, researchers at IWM in Freiburg and their colleagues at the Fraunhofer Institute for Ceramic Technologies and Systems IKTS in Dresden and the Institute for Machine Tools and Factory Management IWF at the Technische Universität Berlin have devoted themselves to exactly this question. "We're testing different ceramic screws and examining how much stress they can really withstand," explains Koplin. The project is funded by the German Federal Ministry for Economic Affairs and Energy (BMWi) and the German Federation of Industrial Research Associations (AiF). Researchers are also optimizing the screw design. The challenge is that load capacity varies greatly even among ceramic screws of the same design; while one screw can tolerate a great deal, another breaks much sooner. The load on the screws is therefore limited by the stress that the weakest among them can withstand. The ceramic's composition is the deciding factor – if the tiny grains that make up the substance bond incorrectly during manufacture, small cracks develop which can later cause the material to fail.

Researchers have now optimized the manufacturing process so that such cracks no longer occur in any of the numerous process steps. "We were able to significantly reduce the range of the distribution curve and thus raise the stress resistance of the screws," says Koplin. He sees significant room for improvement in the last process step, in which the screws receive their thread, either via injection molding or sanding. Until that has been optimized, screw manufacturers can turn to the IWM and consult the project team about what design best suits which targeted screw load capacity value and what the ideal manufacturing process should look like.

The researchers have also used the test rig to test the stress resistance of ceramic screws manufactured in their own laboratories. Their load-bearing capacity exceeds that of their steel counterparts by between 30 and 35 percent. "This is a huge leap forward," says Koplin. "This would already be enough for many applications if the screw was a bit bigger."

Source: Phys Org
Posted by: Er_sanch.

Stephen Hawking Says A.I. Could Be Our 'Worst Mistake In History'

The world's most famous physicist is warning about the risks posed by machine superintelligence, saying that it could be the most significant thing to ever happen in human history — and possibly the last.
As we've discussed extensively here at io9, artificial superintelligence represents a potential existential threat to humanity, so it's good to see such a high profile scientist both understand the issue and do his part to get the word out. Stephen Hawking Says A.I. Could Be Our 'Worst Mistake In History'

New study warns of mental cost to cognitive enhancement.


Cognitive neuroscientists from the University of Oxford find that gains in cognition through transcranial electrical stimulation often leads to deficits in other parts of the brain.
The researchers found that the volunteers who had the parietal area involved in numerical cognition stimulated learned the new number system more quickly than those who got sham stimulation. However, "at the end of the weeklong study reaction times were slower when they had to put their newfound knowledge to use to solve a new task that they hadn't seen during the training sessions."
In other words, artificially stimulating one's brain may lead to a short-term enhancement but to a weaker consolidation of learning and poorer long-term results.Boosting Brain Power Comes At A Price

Having a tough time dealing with the negative people around you?


கண்கள் கலங்கியது .இந்த குரலை கேட்டவுடன்

கண்கள் கலங்கியது .இந்த குரலை கேட்டவுடன் ....இதுவரை நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில் நேத்து ஒளிபரப்பு நடந்த ஒரு விஷயம்தான் மிக மிக நல்ல விஷயம் . சிலர் பார்த்து இருப்பீர்கள் , பலர் பார்த்து இருக்க மாட்டீர்கள். கண் தெரியாத ஒரு சிறுவன் செந்தில்நாதன் மேடை ஏறிப் பாடினான் . மிக அருமையான குரல். சற்று மன நலம் பாதிக்கப்பட்டவன். சிறு வயதில் இவனது பெற்றோர்கள் இவனை கடற்கரையில் போட்டு விட்டு போய் விட்டார்கள். அப்புறம் ஒரு அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து இருக்கான் . ஒரு இடத்தில அவனால் நிற்கவே முடியல. ஆனா பாட ஆரம்பித்தால் அவ்வளவு இனிமையான குரல். அவனுடைய வீடியோ உங்கள் பார்வைக்கு . பார்க்கும் போதே அழுது விட்டேன். நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் உதவுங்கள் ...இந்த பதிவு மாற்று திறனாளிகளுக்கு சமர்பிக்கிறேன் ...கண்டிபாக பகிரவும் ..

Islam: What the West needs to know (full documentary)

சிக்கன் மஞ்சூரியன் ரெஸிபி

தேவையான பொருட்கள்
எலும்பு நீக்கிய கோழிக்கறி - 400 கிராம்
முட்டை – ஒன்று
கார்ன்ப்ளவர் - 6
மேசைக்கரண்டி மைதா – 1 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி இஞ்சி விழுது - 2 டீ ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு – கால் கப் பூண்டு குடை மிளகாய் - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 3 வெங்காயத்தாள் - 2 எண்ணெய் - 4 மேசைக்கரண்டி அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி வினிகர் - 2 மேசைக்கரண்டி மஞ்சூரியன்

செய்முறை

கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி கார்ன்ப்ளவர், ஒரு மேசைக்கரண்டி மைதா, சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதில் சிக்கனை சேர்ந்து நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு முன்று நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப் பொரித்து எடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத் தாளினையும் நீளவாக்கில் குறுக்காக வெட்டி வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள கார்ன் ப்ளவரை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கலந்து வேகவிட வேண்டும். அதில் வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். பின்னர் நறுக்கின குடை மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம். சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி. எளிதாக செய்யலாம். நீங்களும் செய்து பார்த்து அசத்துங்களேன்.

மூன்று முட்டையால் கிடைத்த நட்பு!.....குட்டிக்கதை


சூடான் நாட்டு அரசனுக்கு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு அனந்தா என்று பெயர் சூட்டினர்.
அரசனுக்கிருந்த குடிப்பழக்கம் காரணமாக மகன் பிறந்த சிறிது நாட்களிலேயே அவன் நோய் வாய்ப்பட்டு இறந்துபோனான்.
இளவரசன் அனந்தாவை ராணி நல்ல திறமையான வீரனாக வளர்த்து வந்தாள். இருப்பினும், அவள் தன் கணவனைப் போலவே தன் மகனும் தீய நண்பர்களுடன் சேர்ந்து குடி மற்றும் தீய பழக்கங்களைக் கற்றுக் கொண்டு விடக் கூடாது என்று கவனமாக இருந்தாள்.
அவள் ஒரு நாள் மகன் அனந்தாவை அழைத்து “மூன்று முட்டை மந்திரம்” ஒன்றைச் சொன்னார்.
இந்த மூன்று முட்டை மந்திரத்தைப் பயன்படுத்தித்தான் நட்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாள். அதாவது, யாரிடம் நட்பு கொள்ள விரும்புகின்றாயோ, அவர்களை அழைத்து மூன்று அவித்த முட்டைகளை விருந்தாகக் கொடுக்க வேண்டும். அவர்கள் அந்த முட்டையை எப்படி உண்கிறார்களோ அதன்படி அவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்றார்.
அனந்தாவுடன் மந்திரி ஒருவரின் மகன் நெருங்கி பழகினான். ஒன்றாக போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டனர். எனவே, அனந்தா ஒரு நாள் அவனை அழைத்து மூன்று முட்டைகளைக் கொடுத்தான்.
அவன் ஒரு முட்டையைச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு முட்டைகளை அனந்தாவிடமே திருப்பிக் கொடுத்தான்.
இதை அவன் அம்மாவிடம் தெரிவித்தான்.
உடனே அவள், “உன்னிடம் நல்ல பெயர் வாங்க, உனக்கு இரண்டு முட்டைகளைக் கொடுத்துள்ளான். இவன் நெருங்கிய நட்பு உனக்கு வேண்டாம்” என்றார்.
சில வாரங்கள் கழித்து, கணக்கு வழக்குகளைப் படிக்கும் போது வணிகர் மகன் ஒருவனின் நட்பு கிடைத்தது.
அனந்தா, அவனிடம் மூன்று முட்டைகளை கொடுத்தான்.
அவன் மூன்று முட்டைகளையும் வாங்கி முழுதாகச் சாப்பிட்டு விட்டான்.
இதைப் பற்றி அனந்தா தாயிடம் தெரிவித்தான்.
அவன் தாய், “மகனே, அவனுக்கு உன் மீது சுத்தமாக அக்கரை இல்லை. இவன் நட்பு வேண்டவே வேண்டாம்” என்றார்.
அடுத்து இன்னொரு மந்திரி மகனின் நட்பை விரும்பி அவனிடம் மூன்று முட்டைகளைக் கொடுத்தான் அனந்தா.
ஆனால் அவனோ, அந்த மூன்று முட்டையும் அவனிடமே திருப்பி அளித்தான்.
இதைத் தாயிடம் தெரிவித்த போது, “மகனே, அவன் உன்னை முழுமையாக மதிக்கவேயில்லை... அவன் நட்பை வேண்டாம் என்று ஒதுக்கி விடு” என்றாள்.
அனந்தா ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.
அவன் வேட்டையாடிவிட்டு அரண்மனை திரும்புவதற்குள் இருட்டி விட்டது. அதனால் காட்டிலே இருக்கும் விறகுவெட்டியின் வீட்டில் தங்க நேர்ந்தது. அங்கு விறகு வெட்டியின் மகன் விநோதன் இவன் வயதுடையவன். இருவரும் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
மறுநாள் அனந்தாவோடு விநோதனும் வேட்டையாடச் சென்றான்.
அனந்தா விநோதனை அரண்மனைக்கு அழைத்தான் .
அவனுக்கும் மூன்று முட்டைகளைத் தட்டில் வைத்தான்.
விநோதன் எழுந்து மேஜை மீது இருந்த கத்தியை எடுத்து ஒரு முட்டையை சரிபாதியாக வெட்டி இருவரும் ஒன்றரை ஒன்றரை முட்டையாகச் சாப்பிடலாம் என்றான்.
அனந்தா விநோதனின் செயலைத் தாயிடம் தெரிவித்தான்.
தாய் மகிழ்ந்தாள். பின்னர், “மகனே, அவன் விறகு வெட்டியின் மகனாக இருந்தாலும், உன்னைச் சமமாக நினைத்ததன் மூலம் உன்னை நண்பனாக ஏற்றுக் கொண்டுள்ளான். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவன் உன்னிடம் நட்பு பாராட்டுகிறான். இது தான் நட்பின் முக்கியத் தேவை. அவனுடைய நட்பை உடனடியாக ஏற்றுக் கொள்” என்றார்.
இளவரன் அனந்தாவுடன் விநோதனுக்கும் அனைத்துக் கல்வி, போர் முறைகளையும் கற்றுக் கொடுக்க ராணி உத்தரவிட்டாள். இருவரும் அனைத்திலும் தேர்ச்சி பெற்றனர். பின்னர் அனந்தா அரசனானான். விநோதன் அந்நாட்டின் அமைச்சராக நியமிக்கப்பட்டான். இருவரும் இணைந்து நாட்டில் நல்லாட்சி வழங்கினர்.

Sai Baba Bajan Song in Tamil

சமையலில் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை


 சமையலில் செய்ய செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.(வெங்காயத்தை முதலில் வதக்கி பிறகு அதன் கூட தக்காளியை சேர்த்து வதக்கவும்.இல்லையேல் வெங்காயம் சரியாக வதங்காது...)

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

....செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

விகடன் பொக்கிஷம் ஓவர் ஆக்‌ஷன்.. மெட்டுக்குப் பாட்டா..


"'தேவர்மகன்' ஷூட்டிங்... அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன்! சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்... கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், 'தத்ரூபமா அழணும்பா' என்றிருந்தார். 'ஷாட் ரெடி!' என்று குரல் கேட்டதுமே... 'ஐயோ! எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா... ஐயா!' என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. 'கட், கட்' என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்! என்னைப் பார்த்து, 'இங்க வாடா' என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். 'நீ ஒருத்தன் அழுதா போதுமா... மத்தவன் யாரும் அழ வேண்டாமா? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற? நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது! துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா!' என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு!"
- வடிவேலு (9.3.97)
"மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று கேட்டால், பாட்டுக்கு மெட்டு என்பது தான் சிறந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் அப்படித்தான் செய் தார்கள். 'புதிய பறவை'யில் ஒரு புதுமை. படத்தில் வரும் ஒரு சோகப் பாட்டுக்கு சிச்சுவேஷ னைச் சொல்லிவிட்டுப் போய்விட் டார் டைரக்டர். கண்ணதாசனால் எவ்வளவோ முயன்றும் பாடல் எழுத முடியவில்லை. 'நீங்கள் முதலில் மெட்டமையுங்கள். அதற்குப் பாட்டெழுதுகிறேன்' என்று எம்.எஸ்.வி-யைக் கேட் டார். அவராலும் மெட்டமைக்க முடியவில்லை. இறுதியில் நடிகர் திலகத்தை அழைத்து, 'இந்த சிச்சு வேஷனுக்கு ஒரு பாடல் வந்தால், நீங்கள் எப்படி நடிப்பீர்கள்?' என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் 'எங்கே நிம்மதி'!".
கவிஞர் வைரமுத்து (4.2.90)

Saturday, May 3, 2014

Egyptian axe, about 3600 years old.


Humayum's Tomb

This is the tomb of Humayun who died in 1556, and his widow Hamida Banu Begam commenced with the construction of his tomb in 1569, fourteen years after his death. This was the first distinct example of proper Mughal style, which was inspired by Persian architecture.

This is a favourite tourist spot in Delhi, India

 

Friday, May 2, 2014

உலகத்திலேயே மிகவும் சுத்தமான உப்பு ,THE PUREST FORM OF SALT IN THE WORLD:"HIMALAYAN PINK SALT"

உலகத்திலேயே மிகவும் சுத்தமான உப்பு Himalayan Pink உப்பு தான். இதற்குக் காரணம் இந்த உப்பு 250 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியின் ஆரம்ப காலத்தில், நிலம், நீர், காற்று என்பன அசுத்தமடையாமல் இருந்த காலத்திலிருந்த கடல்களிலுள்ள நீர் சூரியக் கதிர்களால் ஆவியாக்கப்பட்டு உருவாகப்பட்ட உப்பு இது. இமாலய மலைத் தொடர்கள் உருவாகும் போது அதில் அகப்பட்ட உப்புத் தளங்கள் மில்லியன் வருடங்களாக வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் உப்புப் பளிங்குகளாக மாறின. இவை இமாலய மலைத் தொடரில் மில்லியன் வருடங்களாக அகப்பட்டு இருப்பதால் இவற்றில் சுற்றுப்புற மாசு கிடையாது. அத்துடன் மனித உடலிலுள்ள 84 தாதுப் பொருட்கள் இந்த உப்பில் இருப்பதால் இவை இலகுவாக மனித உடம்போடு ஒத்துப் போகிறது. இந்தத் தாதுப் பொருட்களின் இரசாயன உருவம் இதை உடலால் இலகுவாக உறிஞ்சிக் கொள்ள உதவுகின்றன. இதனது சிவப்பு நிறக் கலப்பு கொண்ட நிறங்களுக்குக் காரணம் இதிலுள்ள இரும்பாகும். இப்போது ஆரோக்கியமான இயற்கைப் பொருள் என்பதில் இந்த உப்பு மிகவும் பிரபல்யமடைந்து வருகிறது
"HIMALAYAN PINK SALT"

Himalayan crystal salt originated from the evaporation of the primaeval sea, at a time when pollution did not exist and planet Earth was a pristine ecosystem. Throughout hundreds of millions of years of intense heat and pressure from shifting tectonic plates, the Himalayan mountains were formed and the salt became crystallized. Created under intense tectonic pressure, in an environment of zero exposure to toxins and impurities, this salt is free of bleaches, preservatives, and chemical additives. Himalayan pink salt, which is over 250 million years old, is considered to be the purest salt on earth. It contains the same 84 natural minerals and elements found in the human body, making it easily metabolized. Its minerals exist in a colloidal form, meaning that they are tiny enough for our cells to easily absorb. The salt crystals range in colour from sheer white, varying shades of pink, to deep reds, the result of high mineral and iron content. Himalayan pink salt is still extracted from mines by hand, according to long-standing tradition, and without the use of any mechanical devices or explosion techniques. After being hand-selected, the salt is then hand-crushed, hand-washed, and dried in the sun. Most of the commercial supply of Himalayan pink salt on the market today is currently coming from the mountainous regions of Pakistan.

வலி.....!

-     அகில்














மச்சக்கறி இல்லையென்றால் மயூரனுக்கு சாப்பாடு இறங்காது. செவ்வாய், வெள்ளி போறதே அவனுக்குப் பெரும்பாடாக இருக்கும். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சாமினி மரக்கறிச்சாதம் செய்து, ஊறுகாய்த் துண்டொன்றும் வைத்திருந்தாள். மதிய இடைவேளையின்போது வேண்டாவெறுப்பாக சாப்பிட்டுவிட்டு, வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தான்.

'இன்டைக்கு நல்ல பேச்சுத்தான் நடக்கப்போகுது' என்று நினைத்து வந்ததைப் போல வீட்டுக்கு வந்தபொழுது, புன்முறுவல் காட்டி வரவேற்ற சாமினி, அவன் கொண்டுவந்த சாப்பாட்டுப் பெட்டியைத் திறந்து பார்த்ததும் புறுபுறுக்கத் தொடங்கினாள்.

''என்னப்பா, கொண்டுபோன சாப்பாடு அப்பிடியே இருக்குது......''

''ம்.... மனுசர் சாப்பிடக் கூடிய சாப்பாட்டை வைச்சால் எல்லோ சந்தோசமாச் சாப்பிட'' என்றான் வெறுப்பு மண்டிய குரலில்.

''எந்த நாளும் மட்டனும், சிக்கனும் என்று சாப்பிட்டு நல்லா கொலஸ்ரோலை ஏத்தத்தான் உங்களுக்கு விருப்பம்..'' புறுபுறுத்தபடி லஞ்ச் பாக்ஸை 'சிங்'கில் போட்டு தண்ணீரைத் திறந்துவிட்டாள். சாமினியின் குடும்பம் வெஜிடேரியன் என்று மயூரனுக்கு கலியாணம் பேசும்போதே தெரியப்படுத்தி இருந்தார்கள். நல்ல வேளை வெளிநாட்டு தனிக்குடித்தன வாழ்க்கையில் அவன் நிறையவே சமைக்கக் கற்றுக்கொண்டிருந்தான். தனக்குத் தேவையான மச்சச் சாப்பாட்டை தானே சமைத்துக்கொள்ளுவான். சாமினி அவனுக்கு முட்டை மட்டும் அவித்துக்கொடுப்பாள். அவள் மச்சத்தைக் கையாலும் தொட்டதில்லை.

உடை மாற்றி, சற்று நேரம் சோபாவில் அமர்ந்து டீவியை ஓடவிட்டான். வன்கூவரில் நடந்த 'வின்டர்ஒலிம்பிக்' விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒலிபரப்பு நடந்துகொண்டிருந்தது. கனடா ஐந்து தங்கப்பதக்கங்களை வென்றிருந்தது.

'இன்றைக்கு ரஷ்யாவும் கனடாவும் ஹெக்கி விளையாடுவீனம். கட்டாயம் பார்க்கவேணும். ஹெக்கியில இந்த முறை கனடா 'வின்'பண்ண வேணும்' மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அகதியாய் வந்தபோது அடைக்களம் தந்த நாடல்லவா!

''என்னப்பா இப்பிடியே இருந்தால் சரியா....? எழும்பி வெளிக்கிடுங்க. இன்றைக்கு நந்தினியின்ர மகளுன்ட 'பேத்டே பார்டி' இருக்கெல்லோ.....?''

''ஓமப்பா அதை மறந்தே போயிற்றன். அங்கையாவது போனா மச்சம் சாப்பிடலாம் தானே'' என்றான் சாமினிக்கு கோபமூட்டுவதற்காகவே.
அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டுப் போனாள் சாமினி.

மயூரனுக்கு 'ஹைகொலஸ்டிரோல்' இருப்பதாக குடும்ப வைத்தியர் சொன்ன நாளில் இருந்து சாமினியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். செவ்வாயும், வெள்ளியும் வீட்டில் மச்சம் சமைக்க சாமினி அனுமதிப்பதில்லை. மற்றைய நாட்களில் எல்லாம் தனக்கு விரும்பியவாறு ஏதாவது இறைச்சி, ஹொட்டோக், பேகர் என்று வாய்க்கு ருசியாக சாப்பிட்டான். திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல அந்த உணவுப் பழக்கத்தையும் தானே விட்டாலொழிய தான் சொல்லி எதுவும் நடக்காது என்பதை உணர்ந்து மௌனியானாள் சாமினி.

வெள்ளிக்கிழமை மாலை நேரம் என்பதால், அவர்கள் பயணித்த உயர்வேகப்பாதை(Highway)அமைதியாகக் கிடந்தது. பனிகொட்டும் காலம் என்பதால் நேரத்திற்கே இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. தெருவின் இரு புறமும் பனித்துகள்கள் உறைந்துபோய் கல்லாகிக் கிடந்தன.

சதா வேலை வேலை என்று ஓடித்திரியும் வேகவாழ்க்கையின் மத்தியில் இப்படி மனைவியுடன் காரில் பயணிக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமான பொழுதுகள். வேலைப்பளு, கடன்பிரச்சனைகள், தாய் மண்ணின் நினைவுகள் எல்லாவற்றையும் சற்று ஒதுக்கிவிட்டு இருவரும்; எத்தனையோ விடயங்களை பகிர்ந்துகொண்டு, ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக்கொண்டு செல்வது உண்மையில் வாழ்க்கைப் பயணம் இப்படியே நீளக்கூடாதா என்று ஓரிரு சமயங்களில் அவன் நினைத்துக்கொள்வதுண்டு.

மயூரன்; காரை செலுத்திக்கொண்டுவர சாமினி சுற்றுமுற்றும் பார்த்து ரசித்துக்கொண்டே வருவாள். பனியில் நனைந்து நிற்கும் கிறிஸ்மஸ் மரங்கள், வரிசையாய் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் மின்கம்பங்கள், வானுயர்ந்த மாடங்களின் வடிவமைப்புக்கள், சதா வானத்தில் அங்குமிங்கும் பறந்து திரியும் விமானங்கள் என்று இவற்றையெல்லாம் ஒரு குழந்தையைப் போல அலுக்காமல் பார்த்து மகிழ்வாள் சாமினி.

திடீரென்று எதையோ ஒன்றைப் பார்த்தவளைப் போல சாமினி சத்தம் போட்டாள்.

''மயூ..... மயூ..... அங்க பாருங்க'' என்று அவள் சொல்ல, அவள் காட்டிய திசையில் மயூரன் பார்வையைச் செலுத்தினான்.

அவர்கள் பயணிக்கின்ற பாதையருகே ஒரு பெரிய 'ட்ரக்' ஒன்று வந்துகொண்டிருந்தது.

'ட்ரக்' என்றாலே சாமினிக்கு சரியான பயம். 'ட்ரக் வருகுது. கிட்டப் போகாதேங்கப்பா' என்பாள். பத்துப்பன்னிரண்டு சில்லுகள் கொண்ட பாரிய அதன் உருவத்திற்கு முன்னால் தங்களின் கார் அவளுக்கு பருந்தின் கால்களுக்கிடையில் இரையாகப்போகும் கோழிக்குஞ்சைப் போல உணருவாள்.

''தள்ளிப்போங்கப்பா... தள்ளிப்போங்க...'' என்று அந்த 'ட்ரக்' வண்டி தங்களை முந்திச் செல்லும் வரை செபம்போல் சொல்லிக்கொண்டே இருப்பாள். அவளது பயம் சிலவேளைகளில் மயூரனுக்கு சிரிப்பாக இருக்கும்.

'அங்க பார்த்தீங்களா.....? அதென்னப்பா அதுகள்...?' சாமினியின் கண்கள் கூர்மையுடன் அந்த 'ட்ரக்'கின் பின்புறப்பகுதியில் பதிந்திருந்தன. மயூரன் அப்பொழுதுதான் கவனித்தான். அந்த ட்ரக்கில் பன்றிக்குட்டிகள் அடைக்கப்பட்டிருந்தன.

அந்த வாகனம் முழுமையும் மூடப்பட்டு, பின்பகுதியிலும், பக்கங்களிலும் சில சிறிய துவாரங்கள் இடப்பட்டிருந்தன. அந்தத் துவாரங்களின் ஊடாக தமது மூக்கை வெளியே விட்டு தம்மை ஆசுவாசப்படுத்தின அந்தக் குட்டிகள். அவை ஒன்றையொன்று முட்டித்தள்ளியபடி துவாரத்தின் வழியே மூச்சுக்காற்றை இழுத்துக்கொண்டன. ட்ரக்கை மூன்று அடுக்குகளாகப் பிரித்து அவற்றை உள்ளே அடைத்திருப்பார்கள் போல் தோன்றியது. அவற்றின் தலை உயரத்தோடு ஒட்டியதாக இருந்த அந்தத் துவாரங்கள் மட்டும் திறந்திருந்தன.

''அங்க பாருங்க நல்ல சிவப்பு நிறத்தில பன்றிக்குட்டியள்'' என்றாள் சாமினி.

''நான் நினைக்கிறன் இதுகள் இப்பத்தான் ஒன்று, ஒன்ரரை மாதக் குட்டியாய் இருக்கும்.''

''இதுகளின்ட இறைச்சியைத் தான் 'பேக்கின்' செய்யுறதுக்கு எடுக்கிறது'' விளக்கம் கொடுத்தான் மயூரன்.

''ஐயோ! இவ்வளவு சின்னக் குட்டியளின்ர இறைச்சியைத்தான் நீங்க சாப்பிடுறனீங்களோ?'' என்றவள் மேலும் தொடர்ந்தாள்.

''சாக்காட்டத்தான் கொண்டுபோறாங்கள். அதுக்காக இப்பிடியா....? அதுகள் சுவாசிக்கக் கூட ஏலாமல் எவ்வளவு கஸ்டப்படுகுதுகள்.''

''உப்பிடி இறைச்சிக்கு என்று வளர்க்கிற ஆடு, மாடு, பன்றி எல்லாத்தையும் இவங்கள் நிலத்தில படுக்கக் கூட விடமாட்டங்களாம் என்ன மயூரன்?'' தான் யார் மூலமாகவோ அறிந்திருந்த விடயத்தை ஊர்ஜிதப்படுத்தும் நோக்கத்தோடு கேட்டாள் சாமினி. மயூரன் அதை ஏற்றுக்கொண்டு தலையசைக்கவும்,

''உயிர் என்டால் எல்லாம் உயிர்தானே. அதில மனுசர், மற்றதுகள் என்டு பிரிச்சுப் பார்க்கஏலாது. அதுகளும் தங்கட உயிரைக் காப்பத்த எவ்வளவு போராடுதுகள்'' என்றாள் சாமினி.

''என்ன கருமங்கள் இதுகள்''

ஒன்றையொன்ற நெரித்தபடி மூக்கை நீட்டி, 'மூசு, மூசென்று' காற்றைச் சுவாசித்தன. அவற்றைப் பார்க்க மயூரனுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

''பன்றியள் மட்டுமா? ஏன் நானும்; கூட இப்பிடித்தானே கனடாவுக்கு வந்தனான். பன்றியளோட பன்றியா......''

அவனது விழிகள் வீதியில் பதிந்திருந்தாலும், மனம் பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தது.

அகதியாக வெளிநாடு வந்த ஒவ்வொரு தமிழனுக்கும் கசப்பான கதைகள் பல இருக்கும். அந்த வகையில் அவனுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவம் ஒன்றை மீண்டும் இரைமீட்டுக்கொள்ள வேண்டியதாக இந்தச் சம்பவம் அமைந்துவிட்டது.

கனடாவுக்கு அகதியாக வெளிக்கிட்ட அவன், மெக்சிக்கோ வரை ஒரு பிரச்சனையும் இல்லாமல் வந்துவிட்டான். கனடாவுக்கு போவதென்றால் அமெரிக்காவுக்குப் போய் அங்கிருந்துதான் கனடாவுக்குப் போகவேண்டும். மெக்சிக்கோவுக்கு வந்து இரண்டு மாதங்கள் நின்றாகிவிட்டது. அவன் வந்த நேரமோ என்னவோ இலகுவாக அமெரிக்காவுக்கு போகின்ற கள்ளப் பாதைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. இந்த நிலையில்தான் இரண்டுநாட்கள் அவனை தனியே விட்டுவிட்டுப் போன ஏஜென்சிக்காரன் ஒருநாள் திடீரென்று வந்து கேட்டான், 'தம்பி அமெரிக்காவுக்குப் போறதுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு. பிரச்சினை இல்லாமல் போயிறலாம்....' என்று சொல்ல மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டினான். எப்பிடியாவது கனடாவுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்றிருந்தது அவனுக்கு.

உடுப்புக்களை மடித்து எடுப்பதற்குக் கூட நேரமில்லாமல் எல்லாவற்றையும் திரணையாகத் திரட்டி பைக்குள் அடைத்துக்கொண்டான். ஏஜென்சிக்காரன் தான் அழைத்துவந்த வாடகைக்காரில் மயூரனை ஏற்றிக்கொண்டான். எங்க போய் போவது, எப்படி போவது என்று எதுவுமே தெரியாத நிலையில் ஏதோ ஏஜென்சிக்காரன் சொல்கிறான் என்று ஏறிக்கொண்டான்.

கார் நகரத்தை விட்டு வெளியான பாதையொன்றில் போய்க்கொண்டிருந்தது. சிறிது நேர ஓட்டத்தின் பின் கார் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக்கின் பக்கத்தில் போய் நின்றது. பையை எடுத்துக்கொண்டு இறங்கிய அவனை ட்ரக்கின் முன்பகுதிக்கு அழைத்துச்சென்றான். சாரதியின் இருப்பிடத்திற்கு பின்புறமாக இருந்த சிறிய துவாரம் ஒன்றின் வழியாக உள்ளே இறங்கச்சொன்னான் அந்த 'ட்ரக்'கின் சாரதி.

''என்ன இது இந்த சின்ன துவாரத்திற்குள்ளால் நான் எப்படி உள்ளே போவது'' என்று தயங்கிய மயூரனை சாரதி அரைகுறை ஆங்கிலத்தில் துரிதப்படுத்தினான். அவன் சொன்னதுபோலவே முதலில் கால்களை உள்ளே நுளைத்து இறங்கினான். கால்கள் தரையில் பட்ட இடம் விழுவிழென்று வழுக்கியது. மெதுவாக தலையை உள்ளே எடுத்ததும் வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. இரண்டு தடவைகள் வாந்தியெடுத்தபின் தலையை நிமிர்த்தினான். அவன் வந்த பாதை மூடப்பட்டு விட்டது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. ஒருசில நிமிடங்களின் பின் அவனது கண்கள் இருளுக்குப் பழக்கமானது. வாகனத்தின்; அசைவிலிருந்து பயணம் தொடங்கிவிட்டதை உணர்ந்துகொண்டான்.

அப்பொழுதுதான் கவனித்தான். அவனைச் சூழ சிறியவையும், பெரியனவுமாக பன்றிகள் அடைக்கப்பட்டிருந்தன. புதிதாக வந்த இவனை நெருங்கி அவை மோப்பமிட்டன. மயூரன் பயத்துடன் ட்ரக்கோடு சாய்ந்துகொண்டான். நல்ல வேளையாக சிறுதடுப்புக் கம்பிகள் இடையே இருந்தமையால் அவற்றால் இவனை நெருங்க முடியவில்லை. அவை அந்த கம்பி இடைவெளிகளின் வழியாக தமது முகத்தை நீட்டி இவனை நெருங்க பயமும், அருவருப்புமாய் நன்றாக ட்ரக்குடன் ஒட்டிக்கொண்டான். சற்றைக்கெல்லாம் அவனுக்கு மூச்சு முட்டியது. பன்றிக்குட்டிகளின்; கழிவு நாற்றம் குடலைப் புறட்டியது. சில பன்றிகள் சிறுநீர் கழித்தன. அது இவன் முகத்தில் தெறித்தது. உடல் முழுவதும் ஏதோ பூச்சிகள் ஊர்வது போல் கசகசத்தது. அந்த சிறிய இடத்தை விட்டு ஒரு அடி கூட எடுத்துவைக்க இடமின்றி அந்த இடத்திலேயே அடைபட்டுக் கிடந்தான்.

'இப்படி நடக்கும் என்று நினைத்திருந்தால், செத்தாலும் பரவாயில்லை என்று சிலோனில் இருந்திருக்கலாம்' என்று ஒருகணம் அவன் நினைத்துப் பார்க்கக்கூட தவறவில்லை.

மெக்சிக்கோவில் அவன் ஏற்றப்பட்ட இடத்தில் இருந்து அமெரிக்காவுக்குப் போவதென்றால் குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் என்றாலும் எடுக்கும். அந்த இரண்டு மணித்தியாலமும் அவன் பட்ட அவஸ்தைக்கு அளவே இல்லை. நரகவேதனை. கையில் இருந்த காசை செலவு செய்ய விரும்பாமல் காலையில் எதுவும் அவன் சாப்பிடவில்லை. மதியம் சாப்பிடுவோம் என்று ஆயத்தமானபோதுதான் ஏஜென்சிக்காரன் வந்தான். உள்ளே புழுங்கிய வெப்பத்தில் நாவரண்டு தாகம் எடுத்தது. வாந்தி எடுத்ததில் தலைபாரமாகி, வயிற்றுக்குள் ஏதோவெல்லாம் செய்தது.

'இதுகளையெல்லாம் இறைச்சிக்குத் தானே கொண்டு போறாங்கள்' என்று நினைத்த மயூரனுக்கு தானும் அவற்றுடன் சேர்ந்து ஏதோ ஒரு கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுவது போல் தோன்றியது.

பசிமயக்கம் ஒரு புறம், மூச்சுத் திணறல் ஒருபுறமுமாக அரைகுறை மயக்கத்தில் இருந்த மயூரனை அந்த ட்ரக் சாரதி அமெரிக்காவில் பெயர் தெரியாத, சனசந்தடியே இல்லாத ஒரு இடத்தில் இறக்கி விட்டுப் போய்விட்டான். கடும் குளிரில் அரைமயக்கத்தில் கிடந்த அவனை அந்த வழியால் சென்ற அமெரிக்கப் பொலீஸ்காரர்கள் பிடித்துவிட்டனர். அவனுடைய நிலையைப் பார்த்து முதலில் அவனுக்குச் செய்யவேண்டிய முதலுதவிகளைச் செய்தனர். மயூரனுக்கு பயத்திலும், பயணத்தில் பட்ட அவஸ்தையிலும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அவனை ஏனைய கைதிகளுடன் வைத்திருக்க விரும்பாத காவல்துறையினர், அவனை ஒரு விடுதியில் சேர்த்தனர்.

காலையில் கண்விழித்த மயூரன், யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேறி தன் ஏஜென்சியுடன் தொடர்புகொண்டான். ஏஜென்சிக்காரன் சொன்னபடியே தன் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கனடாவுக்கு வந்துசேர்ந்தான்.

'என்னப்பா....? எங்க போறீங்க.....?' சாமினி சத்தமிடவும் சுயநினைவுக்கு வந்தான் மயூரன். 'எக்ஸிட்' எடுக்கவேண்டிய இடத்தைத் தாண்டி கார் போய்க்கொண்டிருந்தது.

'உச்'சுக்கொட்டினான் மயூரன். சாமினி பொறுமையை இழந்து புறுபுறுக்கத் தொடங்கினாள்.

'சரி.... சரி. இதில எக்ஸிட் எடுத்துப் போவம். இப்ப என்ன அவசரம்?' என்றபடி காரைத் திருப்பினான் மயூரன்.

அந்தக் கசப்பான நினைவுகளினாலோ என்னவோ மயூரனுக்கு குளிரிலும் வியர்த்துக்கொட்டியது. 'காஸ்பொட்'டில் இருந்து தண்ணீரை எடுத்து இரண்டு மிடறு குடித்துவிட்டு வைத்தான்.

'உங்கட கவலையீனத்தால இன்றைக்கு பிறந்தநாளுக்கு நேரத்துக்கு போக ஏலாமல் போயிட்டுது. அப்பிடி என்னப்பா யோசினை....?'

பெரிதாக ஒரு முறை மூச்சை எடுத்துவிட்ட மயூரன் 'நான் அகதியாக கனடாவுக்கு வந்த விதத்தை ஒருக்கா நினைச்சுப் பார்த்தன்.....'

சாமினியிடம் ஏற்கனவே பலதடவைகள் அந்தக் கதைகளையெல்லாம் மயூரன் சொல்லியிருக்கிறான்.

'சரி சரியப்பா. அதுகளையெல்லாம் விடுங்கோ....' என்று அவனுடைய தோளிலே அழுத்தி ஆசுவாசப்படுத்தினாள்.

அவர்கள் உள்ளே நுளையவும் கீர்த்தiனா கேக் வெட்டவும் சரியாக இருந்தது. சாமினியின் நெருங்கிய உறவு அவர்கள். மகளுக்கு 'கீ பேத்டே' பெரிதாகக் கொண்டாட வேண்டும் என்று மண்டபம் எடுத்து எல்லோருக்கும் சொல்லிச் செய்தார்கள்.

போட்டோ எடுத்துக்கொள்ள ஒரு பகுதியினர் முண்டியடிக்க, ஒரு பகுதியினர் சாப்பாட்டு லைனில் இணைந்துகொள்ள என்று வந்திருந்த கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சைவச்சாப்பாடு ஒரு இடத்திலும், மச்சச் சாப்பாடு எதிர் புறத்திலும் வைக்கப்பட்டிருந்தது.

''மயூ... உங்களுக்கு இன்டைக்கு நல்ல வெட்டுத்தான். நீங்க அந்தப் பக்கம் போங்க.'' என்று அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள் சாமினி.

மயூரன் கையில் 'பிளேட்'டும், முள்ளுக்கரண்டியும் எடுத்துக்கொண்டு வரிசையில் நகர்ந்தான். காற்றில் விதவிதமான உணவுகளின் வாசனை கலந்து வந்துகொண்டிருந்தது. மயூரனுக்கு உணவை நெருங்க நெருங்க வயிற்றை குமட்டத் தொடங்கியது. இடியப்பப் பிரட்டல், பிட்டு, ரொட்டி இவற்றுடன் 'சில்லிச் சிக்கன், மட்டன் கறி, தந்தூரி சிக்கன், மாட்டிறைச்சிப் பிரட்டல் என்பன வரிசையாய் ஆவிபறக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்தன.

'ஆறறிவு படைச்ச மனுசர் நாங்கள். உயிருக்கு ஆபத்து என்றதும் என்ன பாடுபட்டோ உயிரைக் கையில் பிடிச்சுக்கொண்டு, காடு மேடு கடல் எல்லாந்தாண்டி நாடு விட்டு நாடு வந்து சேர்ந்திட்டம். இந்த ஜீவராசிகள் இறைச்சிக்கு என்றே வளர்க்கப்படுறதுகள். சாமினி சொன்னதைப் போல தங்கட தேவைக்கு ஏத்தமாதரி அதுகளை நீட்டி நிமிர்ந்து படுக்கக் கூட விடாமல், சதை பிடிக்கிறதுக்கும், ஆரோக்கியமா இருக்கிறதுக்கும் என்று செயற்கையாக எத்தினையோ மருந்துகளைக் கொடுத்து அதுகளை வருத்தி வருத்தி வளர்த்து கடைசியில ஒன்று பார்க்க ஒன்ற – அடுத்தது நான் தான் என்ற மாதிரி மற்றது காத்திருக்க – மெசினுக்க தலையைக் குடுத்து சாக்காட்டுவான்கள். ஒரு மாட்டின்ட தலை அறுபடேக்க அந்த மாடு துடிக்கிற வேதனையும், அதுக்கு பின்னால நிற்கிற மாட்டுக்கு அடுத்ததாக எனக்கும் இது நடக்கப் போகிறது என்பதையும் உணர்ந்துகொள்ளும். சில மாடுகள் பரிதாபமாகக் கண்ணீர் கூட வடிக்குமாம். திமிரிக்கொண்டு ஓடியும், அவலமாய் கத்தி குரல் எழுப்பியும் தமது எதிர்ப்பைக் காட்டுமாம். அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இது எவ்வளவு பெரிய உயிர்க்கொலை.

சட்டென்று மயூரன் தன் கையில் இருந்த பிளேட்டை வைத்து விட்டு விலகினான்.

பத்து வருடங்களுக்கு முன் அந்த 'ட்ரக்'கில் நுகர்ந்த அதே அருவருக்கும் மணம் அவன் வயிற்றைக் குமட்டச் செய்தது. முகமெல்லாம் வியர்வையில் நனைந்தது. மெதுவாக வோஷ;ரூமுக்குள் சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

''என்னப்பா, சாப்பிட இல்லையா? என்ன ஒரு மாதிரி இருக்கிறியள்...?'' மயூரனைப் பார்த்ததும் அச்சமும் படபடப்புமாய் வினாவினாள் சாமினி. அவள் பிளேட் அரைவாசி ஏற்கனவே காலியாகியிருந்தது. பக்கத்தில் 'புரூட் சாலட்;' வேறு.

மயூரன் சாமினிக்கு எதிர்ப்புறமாக இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டான். சாமினியின் பதட்டத்தைப் பார்த்ததும் மயூரன் தன்னை திடப்படுத்திக்கொண்டான்.

''ஒன்றுமில்லை சாமினி. எனக்கு இன்றைக்கு ஏதோ சாப்பிட மூட் இல்லாமல் இருக்குது. பசிக்க இல்லை..... நீர் சாப்பிடும்....'' என்றான். மயூரனை சந்தேகமாய் பார்த்தபடி இரண்டு ஸ்பூன் சாப்பிட்டவள் அத்துடன் நிறுத்திக்கொண்டாள். 'புரூட் சாலட்டை' கைகளில் எடுத்துக் கிளறியபடி அவனை நெருங்கி அமர்ந்துகொண்டாள்.

''என்னப்பா... என்ன பிரச்சனை....?''

''ஒன்றுமில்லை. எனக்கு பழைய நினைவு வந்திட்டுது....'' சிறிது நேரம் மௌனமாய் இருந்த மயூரன் தொடர்ந்தான்.

''இனி நான் இந்த இறைச்சியள் ஒன்றும் சாப்பிடப்போறதில்லை. எனக்கு இந்த மச்சங்கள் ஒன்றும் இனிவேண்டாம்'' என்றான்.

அவன் குரலில் உறுதி தெரிந்தது. அவன் தாடைகள் இறுகிப்போய் இருந்தன. கண்கள் தீர்க்கமாய் சாமினியின் கண்கள் மீது நிலைத்திருந்தது.


முற்றும்

Types Of Stroke ::

Utterance of Appar Or Tirunavukkarasar

The rare jewel of the Brahmins is the Veda with its six angas (parts). The rare jewel of the Saivite is the Panchakshara.

Everything is the manifestation of Lord Siva. Siva is Narayana, Brahma, the four Vedas, the Holiest, the most Ancient, the Perfect. Though Siva is all these, He is none of these. He is without name, without birth, death or disease. He is at once the transcendent and the immanent.

Love of Lord Siva must be felt and manifested. Sing. Pray. Worship. Weep. Dance. Lord Siva is the music or melody in the song, the sweetness in the fruit, the thought in the mind, the lustre in the eyes. He is neither male, nor female. He is without dimensions.

Subdue the senses. Practise regular meditation. Practise the four-fold Saivite discipline. Develop dispassion (Vairagya). Transcend the three bodies. Unite the individual soul with the supreme soul or Lord Siva. You will attain eternal bliss and immortality. You can behold Lord Siva if you look for Him with the light of wisdom issuing forth from the wick of life, fed with the ghee of meditation in the lamp of the mind within the house of your body.

Plough with truth. Plant the seeds of desire for Self-knowledge. Irrigate the mind with the water of patience. Supervise your work by looking within or introspecting. Build the fence of Yama, Niyama, or right conduct or right living. You will soon attain Sivanandam or eternal bliss of Siva.

Regard your body as the temple of Lord Siva, your mind as the worshipper, Truth as purity which is necessary for worship, the jewel of the mind as the Lingam, love as the ghee, milk, etc. Perform Puja to Lord Siva thus. Lord Siva cannot be obtained without making the mind one-pointed and meditating on the Panchakshara.

Tirunavukkarasar was born in Tiruvamoor in Tirumunaipadi Nadu, in the 7th century. His sister Tilakavathiar became a mother for him when their parents died. Marulneekiar, even while young, realized the unreality of the world and engaged himself in all kinds of charitable works. One day, while he was worshipping the Lord and sang hymns, a celestial voice said: ‘From now on you will be known as Tiru Navukkarasar, Lord of Speech. Your glory will spread everywhere.’ Tirunavukkarasar became a staunch devotee of Lord Siva and lived in Him repeating the Panchakshara Mantra.

Tirunavukkarasar spent his days in worshipping and serving the Lord in various ways, to set an example even to saints that they should not relax their eternal spiritual vigilance, lest they should fall a prey to Maya, and to exhort them to lead the ideal life of a humble devotee for the guidance of others. He also visited many sacred shrines.