Search This Blog

Tuesday, March 25, 2014

The role of glutamate in the morphological and physiological development of dendritic spines

Decoding the individual finger movements from single-trial functional magnetic resonance imaging recordings of human brain activity
The role of glutamate in the morphological and physiological development of dendritic spines
Chronic metformin treatment improves post-stroke functional recovery in mice subjected to experimental stroke. This recovery occurred in parallel with enhanced.
Task-related preparatory modulations multiply with acoustic processing in monkey's auditory cortex
Attenuation of urokinase activity during experimental ischaemia protects the cerebral barrier from damage through the regulation of matrix metalloproteinase-2 and
IMM-H004 prevents toxicity induced by delayed treatment of tPA in a rat model of focal cerebral ischemia involving PKA-and PI3K-dependent Akt activation
Diverse subthreshold cross-modal sensory interactions in the thalamic reticular nucleus: implications for new pathways of cross-modal attentional gating function
Interneuron firing precedes sequential activation of neuronal ensembles in hippocampal slices
Neuronal firing sequences during behavioural tasks are precisely reactivated in the cortex. In this study, we monitored ongoing spatiotemporal firing.
Prenatal inhibition of the kynurenine pathway leads to structural changes in the hippocampus of adult rat offspring
Chemosensory cues affect amygdaloid neurogenesis and alter behaviours in the socially monogamous prairie vole
Different forms of locomotion in the spinal lamprey

Lord Subrahmanya's six faces represent the following

The Hero of the Skanda Purana is Lord Skanda Himself, known otherwise as Lord Subrahmanya. He is depicted with six faces and twelve hands. His Svarupa is Jyotirmaya. (Form of light, I suppose) On the Earth plane, every human being is an outcome of the five elements and the spirit within him. When the Lord took human form, He was accordingly depicted similarly. Hence the spirit, signified by the sparks from Siva, appeared as a human personality whose body comprised the five elements and who is the Lord of them. But to distinguish Him from ordinary human beings, the author thought it better to bestow six faces and twelve hands for the Divine-man.

These six faces represent the following:

(i) Five, one element each: Ether, air, fire, water and earth. The sixth face represents the Spirit that bestows LIFE to the beings formed by the five elements.

(ii) The Sanskrit word Bhagavan means one possessing the six godly attributes.

And each face of Lord Skanda personifies one of such functions or attributes of the Almighty.

(iii) In the Tamil scriptures, a clear account of the functions of the six faces of the Lord is given. One face is shining to remove ignorance and bestow Knowledge; another fulfils the desires of devotees and attends to their needs; a third face bestows strength and inspiration for the performance of rituals and sacrifices; a fourth brings out the inner secrets and helps the seekers of knowledge by revealing those secrets to them; a fifth face has the purpose of protecting the virtuous and punishing the wicked; and the sixth face stands for that function of the Lord that ignites Love and bestows happiness amongst the Jivas.

சத்துப்பட்டியல்: மாங்கனி :-

'பழங்களின் அரசன்' என்ற சிறப்பு மாங்கனிக்கு உண்டு. முக்கனிகளில் முதன்மை இடம் மாங்கனிக்குத்தான். சுவை மற்றும் சத்துக்களிலும் 'மா'வுக்கு முன்னணி இடம் உண்டு. அதிலுள்ள சத்துப்பட்டியலை அறிந்து கொள்வோம்... 

மாம்பழத்தின் தாயகம் இந்தியாதான். இமயமலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மட்டும் கிடைக்கும் 'சீசன்' பழ வகையைச் சேர்ந்தது மா. அனகார்டியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.

வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவங்களில் பல்வேறு அளவுகளில் மாங்கனி விளைகிறது. மஞ்சள், இளஞ்சிவப்பு-மஞ்சள், இளஞ்சிவப்பு-பச்சை நிறங்களில் கனிகள் விளையும். குடற்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், ரத்தப்புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படும் ஆற்றல் மாங்கனிக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'வைட்டமின் ஏ' மாங்கனியில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் மாங்கனியில் 765 மில்லிகிராம் அளவு 'வைட்டமின் ஏ' உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படும். கண்பார்வைக்கு உகந்த வைட்டமினாகும். புதிதாக பறித்த மாங்கனியில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கும். 100 கிராம் மாம்பழத்தில் 156 மில்லிகள் கிராம் பொட்டாசியம் இருக்கிறது.

2 மில்லிகிராம் சோடியமும் உள்ளது. இவை உடலும், உடற்செல்களும் வளவளப்புத் தன்மையுடன் இருக்க அவசியமானதாகும். மேலும் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். 'வைட்டமின் பி-6', 'வைட்டமின் சி', 'வைட்டமின் இ' நிறைய அளவில் உள்ளது. வைட்டமின் சி, உடலை நோய்த் தொற்றுக்கு எதிராக காக்கும்.

தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களையும் அகற்றும். 'வைட்டமின் பி-6', மூளைக்கு அவசியமான அமினோ அமிலம் சுரக்க துணைபுரியும். ரத்த செல்களை பாதிப்பதும், முடக்குவாதத்தை தூண்டுவதுமான ஹோமோசிஸ்டின் எனும் அமினோ அமிலத்தை கட்டுப்படுத்துவதிலும் பங்கெடுக்கிறது. தாமிர தாது நிறைய உள்ளது.

இது பல்வேறு நொதிகள் செயல்பட துணைக்காரணியாக விளங்கும். ரத்த சிவப்பμக்கள் உற்பத்தியிலும் இது பங்கு வகிக்கிறது. உடனடியாக ஜீரணம் ஆகும் நார்ச்சத்து நிறைய உள்ளது. மற்றும் பல புளோவனாய்டுகளும், தாது உப்புக்களும் குறைந்த அளவில் உள்ளன.

சாப்பிடும் முறை..........

* மாங்கனியை அப்படியே கடித்து சாப்பிடலாம்.

* மாங்கனித் துண்டுகள் பழச் சாலட்டுகளில் முக்கிய இடம் பிடிக்கிறது.

* ஐஸ்கட்டிகளுடன் சேர்க்கப்பட்ட மாங்கனிச் சாறு உலகம் முழுவதும் பிரபலமான ஜூஸ் வகையாகும்.

* மாங்கனிச் சாற்றை பாலுடன் சேர்த்து 'மாங்கோ மில்க் ஷேக்' ஆக சுவைக்கப்படுகிறது.

* ஜாம், ஐஸ் கிரீம் மற்றும் உணவு உற்பத்தி துறையில் மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது.

* ஆசிய நாடுகளில் மாங்காய் ஊறுகாய், சட்னி பிரபலமாகும்.

* பழுக்காத மாங்காய், குழம்புகளிலும் சேர்க்கப்படுகிறது.

The Major Differences Between Successful And Unsuccessful People

postcard

1. Successful people embrace change. Unsuccessful people fear it. “Embracing change is one of the hardest things a person can do,” Kerpen says. With the world moving fast and technology accelerating at a rapid speed, it’s imperative that we embrace these changes and adapt, rather than fear them, deny then, or hide from them, he says. Successful people are able to do just that. 
2. Successful people talk about ideas. Unsuccessful people talk about people. Instead of gossiping about people — which gets you nowhere — successful people discuss ideas. “Sharing ideas with others will only make them better,” Kerpen says.
3. Successful people accept responsibility for their failures. Unsuccessful people blame others. Truly successful leaders and businesspeople experience both ups and downs in their lives and careers. But they always accept responsibility for their failures. Kerpen says blaming others solves nothing. “It just puts other people down and absolutely no good comes from it.” 
4. Successful people give others all the credit for their victories. Unsuccessful people take all the credit from others. Letting people have their moments to shine motives them to work harder, and, consequently, makes you look better as a leader or teammate. 
5. Successful people want others to succeed. Unsuccessful people secretly hope others fail. “When you’re in an organization with a group of people, in order to be successful, you all have to be successful,” Kerpen explains. That’s why the most successful people don’t wish for their demise; they want to see their co-workers succeed and grow. 
Other major differences: successful people exude joy, share data and information, read every day, and continuously learn, while unsuccessful people exude anger, hoard data and information, watch TV every day, and fly by the seat of their pants.


Read more: http://www.businessinsider.com/differences-between-successful-and-unsuccessful-people-2014-3#ixzz2wx3pPsq2

NEW CANCER TREATMENT

SBB rare old selection Bhuvana Oru Kelvikuri - Raja Enbar (+playlist)

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்திருகின்றீர்களா ……… இதோ


சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

- கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.

- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.

- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்
உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது.

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.

வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது.

President Obama, on the fourth anniversary of the Affordable Care Act.

"Over the past four years, over three million young Americans have been able to stay on their family plans. And over the past five and a half months alone, more than five million Americans have signed up to buy private health insurance plans on HealthCare.gov—plans that can no longer discriminate against preexisting conditions or charge you more just because you’re a woman or a cancer survivor—and millions more have enrolled in Medicaid." —

Monday, March 24, 2014

Lymphocyte (pink) getting activated by a dendritic cell (blue).

Lymphocyte (pink) getting activated by a dendritic cell (blue).

Dendritic cells are immune cells and form part of the mammal immune system. They are present in those tissues which are in contact with the environment: The skin and the lining of nose, lungs, stomach and intestines. They have long spiky arms, called dendrites, whence the name.

Dendritic cells constantly sample the surroundings for viruses and bacteria. Once they have captured such an invader, they cut its proteins into small pieces and present those fragments at their cell surface using MHC molecules. 

They then travel through the blood stream to the spleen or through the lymphatic system to a lymph node. Here they act as antigen presenting cells: They activate helper T-cells and killer T-cells as well as B-cells by presenting them with the pieces of the invader. Depending on the type of invader, this results in an immune response involving antibodies or killer cells.

Every helper T-cell is specific to one particular antigen. Only dendritic cells are able to activate a helper T-cell which has never encountered its antigen before.

Image by Olivier SchwartzDendritic cells are immune cells and form part of the mammal immune system. They are present in those tissues which are in contact with the environment: The skin and the lining of nose, lungs, stomach and intestines. They have long spiky arms, called dendrites, whence the name.

Dendritic cells constantly sample the surroundings for viruses and bacteria. Once they have captured such an invader, they cut its proteins into small pieces and present those fragments at their cell surface using MHC molecules.

They then travel through the blood stream to the spleen or through the lymphatic system to a lymph node. Here they act as antigen presenting cells: They activate helper T-cells and killer T-cells as well as B-cells by presenting them with the pieces of the invader. Depending on the type of invader, this results in an immune response involving antibodies or killer cells.

Every helper T-cell is specific to one particular antigen. Only dendritic cells are able to activate a helper T-cell which has never encountered its antigen before.

Image by Olivier Schwartz

VEDIC FIRE ALTAR ~ MORE THAN 4000 YEARS OLD

VEDIC FIRE ALTAR ~ MORE THAN 4000 YEARS OLD .. @ deep in Chattisgarh - Orissa border forest

Without knowledge of mathematics it was not possible to calculate the dimensions and to make this structures ...and the white men told us we were primitive .

Although the requirement of mathematics at this time was clearly not for its own sake, but for the purposes of religion and astronomy, it is important not to ignore the secular use of the texts, i.e. by the craftsmen who were building the altars. Similarly with the earlier Harappan peoples it seems likely that (at least) basic mathematics will have grown to become used by large numbers of the population. Regardless of the fact that at this time mathematics remained for practical uses, some significant work in the fields of geometry and arithmetic were developed during the Vedic period.

It is in Vedic works that we also first find the term "ganita" which literally means "the science of calculation". It is basically the Indian equivalent of the word mathematics and the term occurs throughout Vedic texts and in all later Indian literature with mathematical content.

Sunday, March 23, 2014

ஜி.டி.நாயுடு

தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு.
பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம்
இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து
சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை
விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை.
மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை
ஐம்பதுகளில் உருவாக்கினார்.

ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த
வேளாண் விஞ்ஞானி அவர். இந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா,
அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாக
சொன்னார். கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக சிறந்த பொறியியல்
கல்லூரிகள், ஐந்து வருட காலத்தில் உருவாக்கும் திறன் மிகுந்த மாணவர்களை,
ஒரே வருடத்தில் உருவாக்கிக் காண்பிப்பதாகச் சொல்லி சில சாதித்தும்
காட்டினார்.

எஞ்ஜின் ஒடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க vibrator tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார். பழச்சாறு பிழிந்து எடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு, பல்வேறு பூட்டுகளை (ஆயிரக்கணக்கான பூட்டுகள்) திறக்கும் மாஸ்டர் கீ முதலியவை இவரின் பிற கண்டுபிடிப்புகள். இன்றைக்கு நாம் பேருந்துகளில் பார்க்கும் டிக்கெட் அச்சடிக்கும் இயந்திரத்தை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே தன்னுடைய பேருந்துகளில் அமல்படுத்தியவர் அவர்.

இந்தியாவில் முதல் மின்சார மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இவராலே தொடங்கப்பட்டது. கோவையில் தேர்தலில் தோற்றதால் அவர் கண்டுபிடித்துக் கொடுத்தது தில்லு முல்லு செய்யமுடியாத மின்சார ஒட்டுப்பதிவு இயந்திரம். எழுபது ரூபாயில் ரேடியோ என அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நின்றுபோனது. நாட்டுக்கு பல நல்ல கண்டுபிடிப்புகளை ஒப்புவிக்க தயாராக இருந்த அவரை அரசு தொடர்ந்து தொல்லைப்படுத்தியது. பழைய இரும்பில் இருந்து தயாரித்த பேருந்துகளுக்கும் வரி போட்டது. ரொம்பவும் தொல்லை அதிகமாகிப்போக மனைவியை விவாகரத்து செய்து வருமான வரி கொடுப்பதில் இருந்து தப்பித்தார் அவர்.

அவரின் பட்டறையில் ஒரு செருப்பும், கீழ்கண்ட வாசகம் தொங்கிக்கொண்டே இருக்குமாம். ‘அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் போனால் 25 ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்’. அவர் சொன்ன வரிகளை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ளலாம் :

21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலைசெய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்து தொழில் செய். குறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டு, பிறகு உன்னுடைய படிப்பு, ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய்'

- பூ.கொ.சரவணன்

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் ஜி.டி.நாயுடு அவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.

அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.

மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.

எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார். மேலும் தமிழக தலைவர்கள் முன்னிலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கண்டுபிடிப்புக்களை உடைத்து நொறுக்கினார்.

தமிழகத்தின் நலன் பன்னெடுங்காலமாக மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு இவரை விட வேறு சாட்சி தேவையில்லை

1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.

## அதியச மனிதர் என்று அழைக்கப்பட்ட மாமனிதர்
பிறந்தநாள் மார்ச் 23 . அம் மாமேதையை
நினைவு கூர்வோம் !

மார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் இன்று..

தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு.
பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம்
இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து
சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை
விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை.
மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை
ஐம்பதுகளில் உருவாக்கினார்.

ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த
வேளாண் விஞ்ஞானி அவர். இந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா,
அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாக
சொன்னார். கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக சிறந்த பொறியியல்
கல்லூரிகள், ஐந்து வருட காலத்தில் உருவாக்கும் திறன் மிகுந்த மாணவர்களை,
ஒரே வருடத்தில் உருவாக்கிக் காண்பிப்பதாகச் சொல்லி சில சாதித்தும்
காட்டினார்.

எஞ்ஜின் ஒடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க vibrator tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார். பழச்சாறு பிழிந்து எடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு, பல்வேறு பூட்டுகளை (ஆயிரக்கணக்கான பூட்டுகள்) திறக்கும் மாஸ்டர் கீ முதலியவை இவரின் பிற கண்டுபிடிப்புகள். இன்றைக்கு நாம் பேருந்துகளில் பார்க்கும் டிக்கெட் அச்சடிக்கும் இயந்திரத்தை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே தன்னுடைய பேருந்துகளில் அமல்படுத்தியவர் அவர்.

இந்தியாவில் முதல் மின்சார மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இவராலே தொடங்கப்பட்டது. கோவையில் தேர்தலில் தோற்றதால் அவர் கண்டுபிடித்துக் கொடுத்தது தில்லு முல்லு செய்யமுடியாத மின்சார ஒட்டுப்பதிவு இயந்திரம். எழுபது ரூபாயில் ரேடியோ என அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நின்றுபோனது. நாட்டுக்கு பல நல்ல கண்டுபிடிப்புகளை ஒப்புவிக்க தயாராக இருந்த அவரை அரசு தொடர்ந்து தொல்லைப்படுத்தியது. பழைய இரும்பில் இருந்து தயாரித்த பேருந்துகளுக்கும் வரி போட்டது. ரொம்பவும் தொல்லை அதிகமாகிப்போக மனைவியை விவாகரத்து செய்து வருமான வரி கொடுப்பதில் இருந்து தப்பித்தார் அவர்.

அவரின் பட்டறையில் ஒரு செருப்பும், கீழ்கண்ட வாசகம் தொங்கிக்கொண்டே இருக்குமாம். ‘அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் போனால் 25 ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்’. அவர் சொன்ன வரிகளை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ளலாம் :

21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலைசெய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்து தொழில் செய். குறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டு, பிறகு உன்னுடைய படிப்பு, ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய்'

- பூ.கொ.சரவணன்

KFC Chicken கேஎஃப்சி சிக்கன் ரெசிபி

 KFC Chicken

பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.
சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மாவிற்கு...
மைதா - 1 1/2 கப்
முட்டை - 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
பிரட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!
Sunday Special - KFC Chicken

பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.
சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மாவிற்கு...
மைதா - 1 1/2 கப்
முட்டை - 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
பிரட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!

ஆடாத மனமும் உண்டோ -Aadaatha manamum undo



படம் : மன்னாதி மன்னன்

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் : TMS , M L வசந்தகுமாரி

ஆடாத மனமும் உண்டோ
Music….
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ

நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ

வாடாத மலர் போலும் விழி பார்வையில்
கை வளையோசை தரும் இன்ப இசை கார்வையில்
வாடாத மலர் போலும் விழி பார்வையில்
கை வளையோசை தரும் இன்ப இசை கார்வையில்

ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கொண்ட உமைக்
கண்டும் இப்பூமியில்
ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கொண்ட உமைக்
கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ

இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும்
குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே
பசும் தங்கம் உமது எழில் அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே
முல்லைப்பூவில் ஆடும் கரு வண்டாகவே
முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே
அன்பை நாடி உந்தன்
அருகில் வந்து நின்றேன்
இன்பம் என்னும் பொருளை இங்கு கண்டேன்
தன்னை மறந்து
உள்ளம் கனிந்து
இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்
தேனாறு பாய்ந்தோடும் கலைச்செல்வமே
தரும் திகட்டாத ஆனந்த நிலை தன்னிலே

ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ

நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?

னுஷனுக்கு கெட்ட நேரம் வரப்போகுதுன்னா அதை சில அறிகுறிகள் வெச்சி தெரிஞ்சிக்கலாம். ‘கேடு வரும் பின்னே மதி கெட்டுவிடும் முன்னே’ அப்படின்னு பொதுவா சொல்வாங்க.
சனிபெயர்ச்சி அல்லது ஜோதிட ரீதியாக நேரம் சரியில்லை என்றாலும் கீழ்கண்ட அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் தென்பட ஆரம்பிக்கும். நவக்கிரகங்கள் நம்மை ஆட்டிபடைத்து தீய பலன்களையோ நல்ல பலன்களையோ தருவது எப்படித் தெரியுமா? நம் மனதில் தோன்றும் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி தான். எண்ணம் மாறினாலே எல்லாமே மாறிவிடுமே!
“கிரகங்களின் பெயர்ச்சிப்படி தான் எண்ணங்கள் மாறுகிறது அதன்படி தான் எல்லாம் நடக்கிறது என்றால் நான் எப்படி பொறுப்பாக முடியும்?”னு சொல்லி தப்பிக்க முடியாது. அதை எதிர்த்து போராடவேண்டும். நல்ல விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். நல்லவர்களின் நட்பை வலிய சென்று பிடித்துக்கொள்ளவேண்டும். (இது பற்றி விரிவா அப்புறம் சொல்றேன்.) அப்போ கிரகங்களின் தாக்கம் நல்லதே ஏற்படுத்தும்.
சரி…. முதல்ல கெட்ட நேரம் வரப்போவதற்கான அறிகுறிகள் எவை எவை என்பதை பார்ப்போம்….
1) நல்லவர்களுடன் கருத்து வேறுபாடு
நமக்கு கெட்ட நேரம் வரப்போவதற்கான முதல் அறிகுறி இது. நம்மோட ஈகோவினாலோ அல்லது கர்வத்தினாலோ நல்லவர்களை நாம் பிரிந்துவிடுவோம். “அவங்க மேல தான் தப்பு. என் மேல இல்லை” என்று மனம் அதற்கு நொண்டிச் சமாதானம் சொல்லி நம்மை அமைதிபடுத்திவிடும். ஏனெனில் கெட்டநேரம் வரும்போது மனம் சாத்தான் சொல்றதை தானே கேட்கும்?
“கேடு வரும் பின்னே…. மதி கெட்டுவிடும் முன்னே” அப்படின்னு இதைத் தான் சொன்னங்க. So , நல்லவங்க நட்பை இழக்குறீங்கன்னா உங்களுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆகப்போகுதுன்னு அர்த்தம்.
2) நல்லவர்களின் ஆலோசனையை புறக்கணிப்பது
நம் மீது உண்மையான அன்பும் அக்கறையையும் வைத்திருப்பவர்கள் நமக்கு கூறும் ஆலோசனையையோ அல்லது அறிவுரையையோ ஏற்க மறுத்து புறக்கணிப்பது. அது கூட பரவாயில்லை. சிலர் அவ்வாறு நல்லது கூறுபவர்களை பற்றி அவதூறு கூற ஆரம்பித்துவிடுவார்கள். அது தான் உச்சகட்ட கொடுமை.
“அழ அழ சொல்லுவார் தன் மனுஷார்; சிரிக்க சிரிக்க சொல்லுவார் பிறத்தியார்” அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு.
அதோட அர்த்தம் என்ன தெரியுமா? நமக்கு வேண்டியவங்க நம்ம மேல உண்மையான அன்பும் அக்கறையும் இருக்குறவங்க நமக்கு அறிவுரை சொல்லும்போது இப்படியெல்லாம் நம்மளை சொல்றாங்களே அப்படின்னு அழுகை அழுகையா வருமாம். ஆனா அதையே மத்தவங்க கேலியும் கிண்டலுமா சொல்லுவாங்களாம்.
3) தவறானவர்களுடன் ஏற்படும் தொடர்பு
வீண் அரட்டையில் நேரத்தை செலவழிப்பவர்கள், தற்பெருமைவாதிகள், வாழ்க்கையில் எவ்வித லட்சியமும் இன்றி சுற்றிக்கொண்டிருப்பவர்கள், தாய் தந்தையரை மதிக்காதவர்கள், வெளிவேஷத்துக்காக அப்படி நடிப்பவர்கள், குடிகாரர்கள், வக்கிரப்புத்திகாரர்கள் இவர்களின் நட்பு நம்மை தேடி வரும். அவர்களுடன் பேசுவதையும் பழகுவதையும் ஆனந்தமாக மனம் கருதத் துவங்கும்.
ஆனா இதெல்லாம் தப்புன்னு மனசுக்கு தெரியாது. ஏன்னா.. நல்லவங்க யாரு? கெட்டவங்க யாரு?ன்னு பகுத்து பார்க்குற சக்தியை மனசு இழந்துடும். நல்லவங்க மேல ஏதோதோ காரணத்தை சொல்லி பழியை சுமத்தி அவங்களை விரட்டிவிட்டுட்டு, நம் அறிவுக்கும் தகுதிக்கும் குலத்துக்கும் சிறிதும் பொருத்தமற்றவர்களின் நட்பை கொண்டாடி மகிழ்வோம்.
ஆனா இதெல்லாம் தப்புன்னு மனசுக்கு தெரியாது. ஏன்னா.. நல்லவங்க யாரு? கெட்டவங்க யாரு?ன்னு பகுத்து பார்க்குற சக்தியை மனசு இழந்துடும். நல்லவங்க மேல ஏதோதோ காரணத்தை சொல்லி பழியை சுமத்தி அவங்களை விரட்டிவிட்டுட்டு, நம் அறிவுக்கும் தகுதிக்கும் குலத்துக்கும் சிறிதும் பொருத்தமற்றவர்களின் நட்பை கொண்டாடி மகிழ்வோம்.
4) தகுதியற்றவர்களிடம் கிடைக்கும் ஏச்சும் பேச்சும்
ஒரு சிலர் தங்களுக்கு கெட்ட நேரம் வந்து தாங்கள் அழிந்துகொண்டிருப்பதை கூட தெரிந்துகொள்ளாத நிலையில் இருப்பார்கள். தங்கள் அறிவுக்கும் தகுதிக்கும் திறமைக்கும் சிறிதும் பொருத்தமற்றவர்களிடமெல்லாம் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் பெற்றுக்கொண்டு வாழ்ந்து வருவார்கள். அவர்களால் இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருப்பது கூட தெரியாமல் வாழ்ந்து வருவார்கள். (இதைத் தான் விதி வலியதுன்னு சொல்றாங்களோ?)
5) எதற்கெடுத்தாலும் கோபம்
எதற்கு எடுத்தாலும் கோபமும் எரிச்சலும் வரும். ஒரே ஒரு விஷயத்தை மனசுல வெச்சிகோங்க. இயலாமை எங்கே இருக்கோ அங்கே தான் கோபம் இருக்கும். இயலாமை எங்கே இருக்கும்? சந்தர்ப்பங்களை கோட்டை விட்டவர்களிடம்!
6) பெற்றோரை கடிந்துகொள்வது
அப்பா அம்மா, கூடப் பொறந்தவங்க, நல்லது சொன்னா.. கோபப்பட்டு அவங்க கூட வாக்குவாதத்துல இறங்குறது, சண்டை போடுறது அவங்களை திட்டுறது…. இதெல்லாம் ‘கெட்ட நேரம் வரப்போது’ என்பதற்கான பெரிய அறிகுறி தான். நாம் செய்றது தான் கரெக்ட் அப்படின்னு இந்த நேரங்கள்ல தோணும்..
7) குறுக்கு வழியில் முன்னேறும் ஆர்வம்
கெட்ட நேரம் வந்தாச்சு என்பதற்கு முக்கிய அறிகுறி இது. உழைப்பின் மீது நம்பிக்கை அகன்று குறுக்கு வழிகளின் மீது நம்பிக்கை பிறக்கும். இந்த உலகில் பலரின் அழிவுகளுக்கும் இதுவே காரணம். குறுக்கு வழியில் வாழ்க்கையில் வெற்றி பெற துடிப்பது.
தன்னுடைய உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்பியோ அல்லது தவறானவர்கள் கூறும் வார்த்தைகளை நம்பியோ செயலாற்ற முனைவது,  பேரழிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். சிலர் அடுத்தவர்களை அழித்து அந்த இடத்தில் தான் கோட்டை கட்டவேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி கட்டினால் அது உங்கள் நிச்சயம் கோட்டையாக இருக்கமுடியாது. உங்கள் சமாதியாகவே இருக்கும்.
8) தீய விஷயங்களில் நாட்டம்
மனம் தீய விஷயங்களில் நாட்டம் செலுத்த துவங்கும். அதாவது சான்றோர்கள் தீயவை என்று ஒதுக்கிவைத்த விஷயங்களின் மீது மனம் நாட்டம் செலுத்த துவக்கிவிடும். உதாரணத்துக்கு குடி, விலைமகளிர் தொடர்பு, சூது, களியாட்டம், பெருந்தீனி இவைகளை மனம் லயித்து செய்யும். “ஆஹா.. இதுவன்றோ வாழ்க்கை. இத்தனை நாள் அனுபவிக்காம விட்டுட்டோமே…!” என்று கூட மனம் குதூகலிக்கும்.
உன்னை பலவீனப்படுத்தும் எதையும் உன் கால் விரலால் கூட தீண்டாதே என்று கூறுகிறார் விவகானந்தர். வள்ளுவரோ, ஒரு படி மேல போய் இதெல்லாம் நெருப்புன்னு நினைச்சி ஒதுக்கிடு அப்படிங்கறார்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். (குறள் 202)
9) கடவுள் பக்தி, ஆன்மிகம் போன்ற நல்ல விஷயங்களில் நாட்டம் குறைவது
இதுல ரெண்டு மூணு பிரிவு இருக்கு.
முதல் பிரிவு
(அ) சாத்தான் வரப்போகிற மனசுல கடவுளுக்கு எங்கே இடம் இருக்கப்போகுது? அதர்மவாதிகளின் வாதங்களை கேட்டு கேட்டு ஆன்மிகம், ஆலய தரிசனம், விரதங்கள், போன்ற விஷயங்களில் நாட்டம் குறைந்துவிடும். இது போன்ற விஷயங்களின் அருமையை எடுத்து கூறுபவர்களிடம் கூட எடக்கு மடக்காக பேசுவார்கள். அவர்களை புறக்கணிப்பார்கள்.
இரண்டாம் பிரிவு
(ஆ) சில பேருக்கு ஒரேயடியா கடவுள் மற்றும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் குறையவில்லை என்றாலும் மனம் இங்கும் அங்கும் தடுமாறும்.
பாதி மனதை தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா….
என்று கண்ணதாசன் பாடிய பாடலின் நிலை தான் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் சற்று மனவுறுதியுடன் செயல்பட்டால் ஜெயித்துவிடலாம்.
மூன்றாம் பிரிவு
(இ) இன்னும் சில பேருக்கு கடவுள், பக்தி, ஆன்மிகம் போன்ற விஷயங்களில் ஆர்வம் என்பது சிறிதும் குறையாது. கோவில், குளம், அது இதுன்னு போய்கிட்டு தான் இருப்பாங்க. சாமி கும்பிட்டுக்கிட்டும் இருப்பாங்க. ஆனா இந்த பக்கம் பார்த்தீங்கன்னா அதுக்கு நேர்மாறானவர்களுடனும் தொடர்பு வெச்சிருப்பாங்க.
அதாவது படிக்கிறது இராமாயணம்… பழகுறது பெருமாள் கோவில் இடிக்கிறவங்களோட என்பது தான் இவர்கள் பாலிசி. நூறு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வர்ற புண்ணியத்தை இந்த பக்கம் ஒரு பாவியை பார்த்துட்டு தொலைச்சிடுவாங்க.
“நல்லோர் தரிசனம் பாப விமோசனம்” என்பது பெரியோர் வாக்கு.
நல்லவங்களை பார்த்தாகூட புண்ணியம் தான் என்று சொன்ன பெரியோர்கள் தீயோர்கள் நிழல் நம்ம மேல பட்டா கூட கொடியது அப்படின்னு சொல்லியிருக்காங்கன்னு தெரியுமா?
10) தீயோர்கள் என்பவர்கள் யார் யார்?
கீழ்கண்ட குணங்களை கொண்டிருப்பவர்களே தீயோர். இந்த குணங்கள்ல ஒன்னு இருந்தா கூட போதும் ஒருத்தன் தான் அழியுறதுக்கும் கெட்டுபோறதுக்கும் கூட இருக்குறவங்களையும் சேர்த்து அழிக்கிறதுக்கும்.
1. தற்பெருமை கொள்ளுதல்.
2. பிறரை கொடுமை செய்தல்.
3. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல்.
4. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
5. பொய் பேசுதல்
6. கெட்ட சொற்களைப் பேசுதல்
7. நல்லவர்களைப் போல் நடித்தல்
8. புறம் பேசுதல்
9. பாரபட்சமாக நடத்துதல்
10. வாக்குறுதியை மீறல்
11. பொய் சாட்சி கூறுதல்
12. அற்ப ஆதாயத்துக்காக பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல்
13. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
14. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
15. குறை கூறுதல்
16. வதந்தி பரப்புதல்
17. கோள் சொல்லுதல்
18. பொறாமைப்படுதல்
19. பெண்களைத் தீய நோக்குடன் பார்த்தல்
இந்த குணங்கள் இருக்குறவங்க கிட்டே பழகிக்கிட்டு இருக்கீங்களா? முதல்ல அதை கட் பண்ணுங்க. உங்க நல்ல நேரம் அந்த நொடியே ஆரம்பமாயிடும்.
அல்லது இந்த குணங்களெல்லாம் (ஒரு சில இருந்தாக்கூட) உங்க கிட்டே இருக்கா? இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடலே… இருந்தா மாத்திக்கோங்க.
திருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது!
நல்ல நேரம் வரப்போறதுக்கான அறிகுறிகள் என்ன என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்!
- See more at: http://rightmantra.com/?p=2412#sthash.aDa6i2sG.Wz92Za9n.dpuf

கிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் !

Beautiful Story..



The incredibly sad photo below is of Nico, a 6 year old defeated deaf Dogo Argentino who was in a Los Angeles animal shelter in the summer of 2009. Nico was broken. Defeated. Done. He had given up and lost all hope, as so many shelter animals do.

When the photograph hit the internet, it broke the heart of everyone who saw it. Thankfully some hearts were broken in a good way. People felt motivated to do something. They wanted to change the ending of Nico's story.

People started sharing Nico's photo and his story. And since the internet world is a really small place, word spread like wildfire. Soon Nico was pulled from the LA shelter, even though he was labeled "dangerous" and was believed to have been used for dog fighting.

He was placed with a wonderful foster mom who taught him how to be a pet. She showed him, probably for the first time in his life, what it was like to be loved.

Nico's life hasn't been without challenges. But he's worlds away from where he was just 3 short years ago. He's living the kind of life every dog deserves, with a family that adores him.

Share this beautiful story because it takes only one tiny spark to start a great forest fire. YOU can be that spark! YOU can put into motion the events that will change a shelter dog's life.

First hard disk

Sri vishnu sahasranamam importance shirdi sai baba leela by prashant...

White Lady Speaks Jaffna Tamil - யாழ்ப்பாணத் தமிழ் பேசும் ஜேர்மனியப் பெண்

இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு செயற்கை இதயம் ரெடி:

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செயற்கை உறுப்புகளைப் பொருத்தும் முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் உச்சகட்ட வளர்ச்சியாக, இதயம் செயலிழந்து, இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு மாற்று இதயம் கிடைக்கும் வரை உயிரைப் 'பிடித்து' வைக்க செயற்கை இதயத்தைப் பொருத்தும் அறுவை சிகிச்சையும் தற்போது பிரசித்தமாகி வருகிறது. சமீபத்தில் பிரான்சில் 'கார்மட்' எனும் உயிரி மருந்தியல் துறை நிறுவனம் புதிய செயற்கை இதயத்தை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளது.
மாரடைப்பு வந்தவரின் இதயத்தில் எல்லா தமனி ரத்தக் குழாய்களும் அடைபட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் போனால், அவருக்குச் செயற்கை இதயத்தைப் பொருத்தலாம். இதயத்தின் கீழறைகள் இரண்டும் மிகவும் பாதிக்கப்பட்டு, மகா தமனிக்குள்ளும், நுரையீரல் தமனிக்குள்ளும் ரத்தத்தைச் செலுத்த முடியாத அளவுக்கு இதயம் செயலிழந்து போனாலும் இதைப் பொருத்தலாம். இதய இடைச் சுவர்களில் துளை விழுந்து அல்லது இதயத்தில் உள்ள எல்லா வால்வுகளும் பழுதடைந்து, இதயம் பலூன்போல் விரிந்துவிட்டால் செயற்கை இதயம் பயன்படும்.
இப்படிப் பலருக்கும் பயன் தருகின்ற செயற்கை இதயத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள்தான் இதில் முன்னோடிகள். இந்த மையத்தைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவர் 1982ல் வடிவமைத்த 'ஜார்விக் & 7' (Jarvik 7) எனும் செயற்கை இதயம், மருத்துவ உலகில் மிகவும் பிரபலம்.
இது பாலியுரேத்தேன் எனும் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டது. ஒரு நெல்லிக்காய் அளவு பேட்டரியில் இயங்குகின்ற 'ஜார்விக் &7' கருவியை நோயாளி யின் பழுதடைந்த இதயத்தோடு பொருத்தி விடுகிறார்கள். இதில் 2 பலூன்கள் இதயத்தை ஒட்டி யிருக்கும். ஒரு சிறிய குழாய் மூலம் பலூனுக்குள் காற்று செல்கிறது. அக்காற்று தருகின்ற அழுத்தத்தில் பலூன்கள் விரிந்து சுருங்கும்போது இதயமும் இயங்குகிறது. பேட்டரி சார்ஜ் குறைந்துபோன காரை 4 பேர் பின்பக்கத்திலிருந்து தள்ளிவிட்டு நகரச் செய்வதைப் போலத்தான் இதுவும்.
இதைப் பயன்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்தன. இதன் பேட்டரி இணைந்த கருவி ஒரு பெரிய கேமரா அளவிற்கு இருக்கும். இதை இடுப்பில் எந்நேரமும் சுமந்து கொண்டிருப்பது நோயாளிகளுக்குச் சிரமத்தைத் தந்தது. இது காற்றைச் செலுத்தும்போது ரத்தம் உறைந்து போனது. இது தருகின்ற காற்றழுத்தம் நுரையீரல்களின் செயல்பாட்டைத் தடுத்தது. இதன் செயற்கை வேதிப்பொருள்களை உடல் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இது அதிகபட்சமாக 6 மாதங்களே செயல்பட்டது. ஆகையால், இதைவிட சிறந்த கருவியைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முடுக்கிவிடப்பட்டனர்.
இதன் பலனாக போனிக்ஸ்&7 (Phoenix 7), அபியோகோர் (AbioCor), சின்கார்டியா (SynCardia) என்று பல செயற்கை இதயங்கள் செயலுக்கு வந்தன. இவை டைட்டானியம் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. இதயத்தின் வெளிப்பக்கத்திலிருந்து 'ஜார்விக்&7' இயங்கியது என்றால், இவை நோயாளியின் இதயத்துக்குள்ளேயே பொருத்தப்பட்டு செயல்பட்டன. பழுதடைந்து போன இதயத்தின் இரண்டு கீழறைகளையும் 4 வால்வுகளையும் அகற்றி விட்டு, அந்த இடத்தில் இக்கருவி ஒன்றை இணைத்து விட்டனர். இவற்றில் 2010ல் சிட்னி& செய்ன்ட் வின்சென்ட் மருத்துவமனையில், 50 வயது முதியவர் ஆஞ்சலோ தைகோனோ என்பவருக்குப் பொருத்தப்பட்ட சின்கார்டியா செயற்கை இதயம் மட்டும் 4 வருடங்களுக்குச் செயல்பட்டது. இதுவும் காற்றழுத்தம் மூலம் இதயத்தை இயங்கவைத்த காரணத்தால்... இதிலும் ரத்த உறைவு மற்றும் நுரையீரல்களில் காற்றழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டன.
இன்னும் மேம்படுத்தப்பட்ட கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இப்போது 'கார்மட்' எனும் செயற்கை இதயம் மூலம் பலன் கிடைத்துள்ளது. இதை உருவாக்கிய டாக்டர் அலென் கார்ப்பென்டியர் கூறுகையில், “எங்கள் நிறுவன ஆராய்ச்சியாளர்கள்தான் இக்கருவியைக் கண்டுபிடித்தார்கள் என்றாலும், டென்மார்க்கைச் சேர்ந்த ஐரோப்பிய ஏரோநாடிக் டிஃபன்ஸ் மற்றும் ஸ்பேஸ் நிறுவனம் இதை மேம்படுத்திக் கொடுத்தது. பாரீஸில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவ மனையில் இதயம் செயலிழந்த 75 வயது முதியவருக்கு இது பொருத்தப்பட்டது. டாக்டர் கிறிஸ்டியன் லேட்டர்மெளலி இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார்.
இது லித்தியம் பேட்டரி மூலம் இயங்குகிறது. பேட்டரியை இடுப்பில் அணிந்துகொள்ள வேண்டும். இது, சில உயிரிப்பொருள்களுடன் பசுவின் திசுக்களும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், இயற்கை இதயத்துக்கு நிகராக இது கருதப்படுகிறது. ஆகவே, இதை உடல் எளிதாக ஏற்றுக்கொண்டது. இயற்கை இதயத்திலிருந்து செயற்கை இதயத்துக்கு ரத்தம் வருகின்ற இடம் பிளாஸ்டிக் இழைகளால் தயாரிக்கப்படாமல், பசுவின் திசுக்களால் தயாரிக்கப்பட்டதாலும், காற்றுக்குப் பதிலாக ஹைட்ராலிக் திரவத்தின் அழுத்தம் கொண்டு இது இயக்கப்படுவதாலும் ரத்தம் உறைந்து கட்டியாவது தடுக்கப்பட்டுள்ளது. இதில் சென்சார் மற்றும் கணினி தொழில்நுட்பமும் இணைந்துள்ளதால், காய்ச்சல், அயர்ச்சி, மகிழ்ச்சி போன்ற நோயாளியின் உடல், மன மாறுதல்களுக்கு ஏற்ப தன் இயக்க சக்தியை மாற்றிக் கொள்ளும் திறனும் இதற்கு உண்டு. இதன் எடை 900 கிராம். இது 5 ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கும்” என்கிறார்.
'கார்மட்' இதயம், அறிவியல் கண்டுபிடிப்பில் ஓர் அரிய வரம்!
via தினகரன்