Search This Blog

Tuesday, April 10, 2012

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி?




உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.


உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு கொலஸ்ட்ரால்: கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது


. இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இதனை தன்னுள் கொண்டுள்ளன. உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல காரணிகள் உயர் அளவு கொலஸ்டிரால் ஏற்பட பங்களிக்கிறது, ஆனால் சில செயல்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.


* கொலஸ்டிரால் அளவு உங்கள் உடலில் உள்ள எச்டிஎல் கொலஸ்டிரால் அளவு (நல்ல கொலஸ்டிரால்) மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு (கெட்ட கொலஸ்டிரால்) களை பொறுத்துள்ளது. எல்டிஎல் கொலஸ்டிராலைவிட எச்டிஎல் கொலஸ்டிரால் உடலில் அதிகளவு இருப்பது உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்டிரால் அளவை பேண மிக முக்கியமாகும்.


* உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை கவணியுங்கள், குறிப்பாக ட்ரான்ஸ் பாட் (அன்சாச்சுரேட்டெட் பாட்) டினை தவிர்ப்பது நல்ல வழியாகும்.


* இதய இரத்தநாள பயிர்ச்சிகளை ஒழுங்காக செய்வது, உணவில் குறைந்த அளவு கொலஸ்டிராலினை எடுத்துக்கொள்வது மற்றும் புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேர்வதை அகற்றும் பிறவழிகளாகும்.


கொலஸ்டிரால் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் :


* வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.


* கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.


* பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.


* ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.


* தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.


* எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.


* அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது. * முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.


* அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.


* கொட்டை வகைகள்:


முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.


* வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது


* பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.


* ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் * எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.


* கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.


* டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.


* பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.


* வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.


* உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.


* இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். * நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.


* ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.


* வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது நல்லது


-நல்லது நாம் சாப்பிடும் உணவு வகையில் கொலஸ்டிராலின் அளவு :


* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)


* வெண்ணெய் -250 (mg /100gm)


* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)


* இறால் (Shrimp)-170 (mg /100gm)


* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)


* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)


* கோழியிறைச்சி-62 (mg /100gm)


* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)


* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)


* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)


* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)


* பிரெட்-1 (mg /100gm)


* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)


* சாக்லேட் பால்-90 (mg /100gm)


நாமும் இதைப்பின்பற்றினால் கொலஸ்டிரால் இல்லாத மனிதனாக வாழ முயற்சிக்கலாமே....

அந்நியமாயிற்று அனைத்துமே..!



 
Join Only-for-tamil

விழிகள் விண்மீன்களை 
வருடினாலும்
விரல்கள் என்னவோ - உன்
பெயரோடு விளையாடுகின்றன!



அர்த்தமானதாய்த் தெரிந்த
அந்த நேரங்கள் எல்லாம் - இன்று
அபத்தமாய்த் தெரிகின்றன!
அந்த நேரத்திற்கு அப்புறம்
அந்நியமாயிற்று அனைத்துமே..!



கல்லடிபட்டு பெயர்ந்த 
கால்விரல் நகத்தின் காயத்தில்
அருகம்புல் மாட்டிக்கொண்டது போன்ற
வலியாய் உன் நினைவுகள்!



நினைவுகளில் எத்தனையோ
சூழ்ந்திருக்கும்
சுகம் துக்கம் எல்லாம்
எப்படியொன்று சொல்லிட
முடிந்திடவில்லை!




எழுத நினைத்தவையெல்லாம்
மனசில் நிறைந்துள்ளது!
எழுத எழுத
சுகமும் துக்கமும்
உன்னைச் சார்ந்தவையாகவே
சுழல்கின்றன.....




மரத்துப்போகவைக்கும் - உன்
போக்கினில்
மெல்லிய உணர்வுகளும்
மெல்லச்சாகின்றன!



மழைத்தண்ணீர் இல்லாத
கருவேலமரமாய்
இதயமும்
வறண்ட நிலையில்...!!



எத்தனை வெறுமைகள்
என்னுள் வந்து சேர்ந்தாலும் - உன்
பேறுகளைக் கேட்டு
பெருமையடைகின்றேன்...



உனக்கென்று இருக்கும்
வார்த்தைக்கலைகள்
என்னிடம் சிதைந்தபடி
சிலந்தியாய்ப் பின்னியுள்ளன!




நினைப்பதும், நடப்பதும்
வேறாக இருந்தாலும்
நினைவுகள் எல்லாம்
வேராய் நீண்டுகிடக்கின்றன!




கனவுகளை இழந்துவிட்ட
கண்களுக்கும், இதயத்திற்கும்
காலங்கள் எப்படியிருந்தால் என்ன??!!

New finding offers neurological support for Adam Smith's 'theories of morality'



The part of the brain we use when engaging in egalitarian behavior may also be linked to a larger sense of morality, researchers have found. Their conclusions, which offer scientific support for Adam Smith's theories of morality, are based on experimental research published in the latest issue of the Proceedings of the National Academy of Sciences.
The study, coming seven months after the start of the Occupy Wall Street Movement, which has been aimed at addressing income inequality, was conducted by researchers from: New York University's Wilf Family Department of Politics; the University of Toronto; the University of California, San Diego; the University of California, Davis; and the University of Nebraska, Lincoln.
Previous scholarship has established that two areas of the brain are active when we behave in an egalitarian manner—the ventromedial prefrontal cortex (vmPFC) and the insular cortex, which are two neurological regions previously shown to be related to social preferences such as altruism, reciprocity, fairness, and aversion to inequality. Less clear, however, is how these parts of the brain may also be connected to egalitarian behavior in a group setting.
To explore this possibility, the researchers conducted an experiment in which individuals played a game to gauge brain activity in decision-making. In the "random income game" participants in a group are randomly assigned a level of income and the group is assigned to one of three income distributions. Subjects are shown the income of all members of their group, including their own, on a computer screen. Individuals are then asked if they wish to pay a cost in order to increase or decrease the incomes of group members. Subjects are told they may keep the money they don't give away to the others shown on their screen, so there is a strong incentive not to part with any of the money already allocated to them. Nonetheless, the researchers found that the study's subjects frequently sought to reallocate resources so the money was more equally distributed among the group members.
During this period, the researchers gauged the subjects' neurological activity through functional magnetic resonance imaging (fMRI). As shown in previous studies, the researchers found significant activity in the brain's vmPFC and insular cortex.
But to get at a more detailed understanding of neurological activity during these behaviors, they also examined whether activations in these areas were associated with two additional measures of egalitarian preferences elicited outside of the fMRI. As part of a survey, subjects were asked their level of agreement or disagreement to six questions, which included: "Our society should do whatever is necessary to make sure that everyone has an equal opportunity to succeed" and "This country would be better off if we worried less about how equal people are." In addition, subjects completed a series of decision-making tasks asking them to split money with another anonymous person. The choices individuals make in this task are a measure of egalitarian behavior.
The researchers found that these two measures of egalitarian preferences were significantly associated with activations in the insular cortex, but not with the vmPFC.
This particular result is a potentially profound one as the insular cortex is also the part of the brain that processes the relationship of the individual with respect to her or his environment. In other words, egalitarian behavior may not exist in isolation, neurologically speaking, but, rather, be part of a larger process that stems from altruism and a sense of the larger social good.
Adam Smith, in The Theory of Moral Sentiments, expressed this perspective in his 18th-century essay.
"Adam Smith contended that moral sentiments like egalitarianism derived from a 'fellow-feeling' that would increase with our level of sympathy for others, predicting not merely aversion to inequity, but also our propensity to engage in egalitarian behaviors," the researchers wrote. "The evidence here supports such an interpretation—our results suggest that it is the brain mechanisms involved in experiencing the emotional and social states of self and others that appear to be driving egalitarian behaviors. This conclusion is consistent with a broader view of the insular cortex as a neural substrate that processes the relationship of the individual with respect to his or her environment."
Provided by New York University
"New finding offers neurological support for Adam Smith's 'theories of morality'." April 9th, 2012. http://medicalxpress.com/news/2012-04-neurological-adam-smith-theories-morality.html

இளநீரின் மருத்துவ குணம் !!!!!




கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.

இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.

இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.

முக்கனிகளின் மூன்றாம் கனி : " வாழை "





வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

வாழை வகையில் தென்னிந்தியாவை மிஞ்ச முடியாது. மலைப்பழம், ரஸ்தாளி, சிறுமலைப்பழம், பூவன், சர்க்கரை கதளி, செவ்வாழை, பச்சைப்பழம், பேயன் இப்படி.

வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தில் இதுவே சர்க்கரையாகி மிருதுத்தன்மையையும் நல்ல மணத்தையும் தருகிறது.

எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.

அந்தமான் சிறைச்சாலை பற்றிய தகவல் !!!!

பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்று தேசபக்தர்களை நாடுகடத்தியதாகும். நாடு கடத்தப்பட்ட அவர்கள் அந்தமானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். சிப்பாய்க்கலகம் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டம் 1857 ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பிரிட்டிஷ் அரசு அந்தமான் தீவிற்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டு விட்டனர். வனாந்தரக் காட்டில் அனாதையாக விடப்பட்டவர்கள் வனவிலங்குகளுக்கு இரையாவார்கள் என்றும், பழங்குடி மக்களால் கொல்லப்படுவார்கள் என்றும் எதிர்பார்த்தனர் ஆங்கிலேயர்கள்.


பல கைதிகள் செத்து மடிந்தனர். பல கைதிகள் இந்தோனேஷியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். எஞ்சியிருந்த கைதிகளை பார்வையிட அன்றைய கவர்னர் ஜெனரல் தனது மனைவியுடன் அந்தமானுக்குச் சென்றார். வெள்ளையர்கள் மீது கட்டுக்கடங்காத வெறுப்புடனிருந்த ‘காசிம்’ என்ற இஸ்லாமிய வீரர் ஜெர்னல் மீது பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றார்.


இந்த நிகழ்வே அந்தமான் தீவில் சிறைச்சாலை கட்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை கட்டுமானப்பணி 1896 ம் ஆண்டு தொடங்கி 1906 ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதில் 10 ஆயிரம் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். வகாபி இயக்கம், மாப்ளா இயக்கம், ராம்பா இயக்கம், கதார் புரட்சி போன்ற புரட்சிகர அமைப்புகளின் தலைவர்கள் இதில் முக்கியமானவர்கள்.

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் பல சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள். காற்றோட்டமோ, வெளிச்சமோ இல்லாத காரணத்தால் பல கைதிகள் மரணமடைந்தனர். இவ்வளவு சித்திரவதைகளுக்கும் சாட்சியான அந்த சிறைச்சாலை அந்தமானில் இன்றும் அப்படியே காட்சியளிக்கிறது



"இந்த விபரங்கள் நல்லாசிரியர்.உயர்திரு.சி.சக்திவேல் ஐயா அவர்களின் வரலாற்றில் அந்தமான் என்ற புத்தகத்தில் காணப்படுகிறது.நன்றி!"

மரம் வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற கைதிகளை, ஆதிவாசிகள் தாக்கினர். அதைத் தடுப்பதற்காக, துப்பாக்கியோடு காட்டுக்குள் புகுந்த சிறைக் காவலர்கள் ஆதிவாசிகளைத் தேடித் தேடிக் கொன்று குவித்தனர். அந்தமான் தீவில் இருந்து எவர் தப்ப முயன்றாலும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பெண்களுக்கான சிறைச்சாலையில் இருந்த கைதிகளை, ஜெயிலர்கள் ஆசைநாயகிகளாக்கிக்கொள்வதும், பெண் கைதிகளுக்காக மற்ற ஆண் கைதிகள் சண்டையிட்டு செத்துப்போவதும் தொடர்ச்சியானது. 18 முதல் 20 வயது வரையிலான இளைஞர்கள், பாய்ஸ் கேங் எனப்படும் தனிக் கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். பெண்கள் சிறைச்சாலையினுள் முறையான அனுமதிச் சீட்டு பெற்ற கைதிகள் பகலில் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.

ஆரம்ப காலத்தில், கொள்ளையரையும் கொலைகாரர்களையும் நாடு கடத்திய பிரிட்டிஷ் அரசு, சுதந்திர உணர்ச்சி தலை தூக்கத் தொடங்கியதும் அரசியல் தலைவர்களையும் நாடு கடத்தத் தொடங்கியது. குறிப்பாக, முதல் இந்திய சுதந்திர எழுச்சியை ஒடுக்கிய பிரிட்டிஷ் அரசு, அதில் தொடர்பு உடையவர்களைக் கைதுசெய்து அந்தமான் சிறைக்கு அனுப்பிவைத்தது.
இந்தியாவில் உருவான சுதந்திர வேட்கையை ஒடுக்குவதற்காக ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு அந்தமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 1901-ம் ஆண்டு, அந்தமானில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 592. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 635 பேர். 17 வயதில் இருந்து 40 வயது வரை உள்ளவர்கள் 7,264 பேர்.
 
1913-ம் ஆண்டு, அந்தமானுக்கு வந்த ரெஜினால்ட் க்ராட்டக், அந்தமான் சிறைச்சாலை குறித்து ஒரு விரிவான அறிக்கையை அனுப்பினார். அதில், இந்தச் சிறைச்சாலையை மூடிவிட வேண்​டும். அங்குள்ள கைதிகளை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதுதான் சரி​யானது. இல்லாவிட்டால் சாவு எண்ணிக்கை அதிகமாவதைத் தடுக்க முடியாது. ஒருவேளை, இதை மூட முடியாத சூழல் இருந்தால், சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளை நடத்​தும் முறையில் சீர்திருத்தங்களை உடனே ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால், 'இந்தியாவில் இருந்த சிறைத் துறை, அந்தமானுக்கு புதிய சிறை அதிகாரிகளை அனுப்புவதாலும் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வதாலும் எந்த நன்மையும் விளையப்போவது இல்லை. அது வீண் முயற்சி. அந்தமானில் உள்ள கைதிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருவது செலவு ஏற்படுத்தக்கூடியது’ என்று பதில் சொல்லிவிட்டது.

இந்த நிலையில், அந்தமான் சிறைச்சாலையின் மோசமான அனுபவங்கள் குறித்து தகவல்கள் வெளியாகத் தொடங்கின. பத்திரிகைகள் அதை விமர்சனம் செய்ய ஆரம்பித்​தன. உள் துறை உறுப்பினரான வில்லியம் வின்சென்ட், அந்தமானைப்பார்வை​யிட்ட பிறகு, சிறைச்சாலையை மூடிவிடப்​போவதாக அறிவித்தார். ஆனால், அது நிறைவேற்றப்​படவில்லை. மாறாக, கைதிகளுக்கு கை, கால்களில் விலங்கு போடுவது, இருட்டறையில் நிர்வாணமாக அடைத்துவைப்பது போன்ற தண்டனைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. கைதிகள் படிப்பதற்கு நூலகம் அமைக்கப்பட்டது. அந்தமானில் இருந்து பெண் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டு தாயகம் அனுப்பிவைக்கப்பட்டனர். 1925-ம் ஆண்டு, அந்தமானின் நிலையை அறிவதற்காக வந்த அலெக்சாண்டர் முடிமான், அந்தமான் சிறைச்சாலை அவசியமான ஒன்று. அதை மூடுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறிவிட்டார். 1942-ம் ஆண்டு அந்தமானை, ஜப்பான் கைப்பற்றும் வரை அங்கிருந்த சிறைச்சாலை தொடர்ந்து செயல்பட்டே வந்தது.

இதில், 1896-ம் ஆண்டு புதிதாக செல்லுலார் ஜெயில் ஒன்றைக் கட்டுவது என முடிவு செய்து வேலை தொடங்கியது. கட்டுமானப் பணிகளை கைதிகளே செய்தனர். மெக்கலன் என்ற பொறியாளர், கட்டுமான நிர்வாகியாகப் பணியாற்றினார். பர்மாவில் இருந்து தேக்கும் செங்கல்லும் கொண்டுவரப்பட்டன. ஏழு இதழ் கொண்ட மலர் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தச் சிறைக்கூடம் தனித் தனி வளாகங்களைக்கொண்டது. இதில், 698 அறைகள் அமைக்கப்பட்டன.

1906-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சிறைச்​சாலையில்தான் சுதந்திரப் போராட்​டத்தின் முக்கியத் தலைவர்கள் பலர் அடைக்கப்பட்டு இருந்தனர். மூன்று தளங்களாக அமைந்த இந்தச் சிறைச்சாலையை கட்டுவதற்கு ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 352 ரூபாய் செலவு ஆனது. உறுதியான இரும்புக் கதவுகளையும் உயரமான சுவர்களையும் பெரிய எச்சரிக்கை மணி ஒன்றையும் உயர்ந்த காவல் கோபுரங்களையும்கொண்ட இந்தச் சிறைச்சாலை ஒரு தனி உலகம் போலவே இருந்தது. சிறைக்குள் கைதிகளை சுவரோடு சேர்த்து இணைப்பதற்காக நிறைய கொக்கிகள் மாட்டப்பட்டு இருந்தன. தூக்குப் போடுவதற்கு தனி வளாகம் இருந்தது. ஒட்டுமொத்த சிறைச்சாலைக்கும் சேர்த்து ஒரே சமையல் அறை மட்டும்தான் இருந்தது. இரவில், கைதிகள் தங்கள் அறைகளில் உணவை தட்டில் பெற்றுக்கொண்டு சாப்பிடுவார்கள்.

மல, மூத்திரம் கழிப்பதற்கு தார் பூசிய ஒரு மண் பாத்திரம் வழங்கப்படும். அதை தினமும் சுத்தம் செய்துகொள்ள வேண்டியது கைதிகளின் வேலை. ஜெயிலில் எண்ணெய் ஆட்டும் இயந்திரம் ஒன்றும் இருந்தது. முக்கியக் கைதிகளின் கை, கால்களில் விலங்கு போட்டு தனிமைச் சிறையில் அடைத்துவைத்தனர். அதன் காரணமாகவே, செல்லுலர் ஜெயில் என்ற பெயர் உருவானது. இந்தச் சிறைச்சாலையில்தான் வீரசாவர்கர், யோகேந்திர சிங் சுக்லா, ஜகதீஷ் சந்திரபால், நந்தகோபால், மௌல்வி அப்துல் ரகீம், பக்தேஸ்வர் தத் பரீந்திர குமார் கோஷ், உபேந்திரநாத் பானர்ஜி, பீரேந்திர சந்திர சென் போன்ற முக்கியப் போராளிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்தச் சிறையில் இருந்து 1868-ம் ஆண்டு மார்ச் மாதம் 238 கைதிகள் தப்பிச் செல்லத் திட்டமிட்டனர். இது நீண்ட நாள் கனவு. அதற்காக அவர்கள் சிறைச்சாலையை எப்படித் தாக்குவது. எப்படித் தப்பிச் செல்வது என்று விரிவாகத் திட்டம் தீட்டினர். தப்பிச் செல்ல உதவுவதற்கான படகுகள் கடலில் காத்திருந்தன. அதன்படி, 238 பேரும் சிறையில் இருந்த காவலர்களைத் தாக்கித் தப்பிச் சென்றனர். உடனே, அபாய மணி ஒலிக்கத் தொடங்கியது. சிறைக் காவலர்கள் அவர்களை விரட்டினர். கடலில் சிலர் பிடிபட்டனர். ஒரு மாத காலம் இந்தத் தேடுதல் வேட்டை நடந்தது. முடிவில், அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்களில், 87 பேருக்கு உடனே தூக்கு விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், சிறைச்சாலையின் இயல்பைப் பெரிதும் மாற்றி அமைத்தது. அதன் பிறகு, சிறை அதிகாரிகள் கைதிகளை மிக மோசமாக நடத்தத் தொடங்கினர்.

1930-ம் ஆண்டு, தங்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. முறையான உணவு, குடிநீர் வழங்கப்படுவது இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்து, மகாவீர் சிங் என்ற லாகூர் சதி வழக்கைச் சேர்ந்த கைதி


உண்ணாவிரதம் தொடங்கினார். அவர், பகத்சிங்கின் நண்பர். கட்டாயப்படுத்தி உணவை அவர் வாயில் திணித்தனர் சிறை அதிகாரிகள். ஆனாலும், அவர் சாப்பிட மறுத்து பட்டினிகிடந்து சிறையிலேயே இறந்தார். அந்தச் சம்பவம், இந்திய அரசியலை உலுக்கியது. கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தாகூரும் காந்தியும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

கைதிகளுக்கு தினமும் ஆறு அவுன்ஸ் அரிசி, ஐந்து அவுன்ஸ் பருப்பு, ஒரு கிராம் உப்பு, ஒரு கிராம் எண்ணெய், எட்டு அவுன்ஸ் காய்கறிகள் வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், ஒரு சிரட்டைக் கஞ்சி மட்டுமே கைதிகளுக்கு வழங்கப்பட்டது. அதில், உப்புகூட போட்டிருக்க மாட்டார்கள். அத்துடன், வேகவைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பருப்புத் தண்ணீர் வழங்குவார்கள். சில நாட்கள், கஞ்சியில் வேண்டுமென்றே மண்ணெண்ணெய் கலந்துவிட்டிருப்பார்கள். அதனால், கைதிகள் பட்டினி கிடக்க நேரிடும். வாரம் ஒரு முறை கைதிகளுக்குத் தயிர் வழங்கப்படும். ஆனால், அதில் பாதியை சிறை அதிகாரிகள் தங்களது வீட்டுக்குக் கொண்டுபோய்விடுவார்கள்.

அரிசி சாப்பிடாதவர்களுக்கு கோதுமை ரொட்டி வழங்கப்படும். ரொட்டியில் கரப்பான் பூச்சி செத்துக்கிடப்பது வழக்கமான ஒன்று. சாப்பிடும் வேளையில், யாராவது ஒரு கைதி வரிசையில் இருந்து நகர்ந்துவிட்டால், அவன் உடனே தண்டிக்கப்படுவான். அவனது உணவு பறிமுதல் செய்யப்படும். பாதி சாப்பிடுவதற்குள் நேரம் முடிந்துவிட்டது என்று எழுந்து போகச்சொல்லி உத்தரவிடுவார் சிறை அதிகாரி.

தப்பியோடிப் பிடிபட்ட கைதிகளுக்கு வேகவைத்த எலிக் கறியும் மணல் கலந்த காட்டுக் கீரையின் சாறும், குப்பையில் வளரும் செடிகளின் இலையை அவித்து அதில் மூத்திரம் பெய்து தருவதும் வாடிக்கை. கைதிகள் குளிப்பதற்கு மூன்று குவளை கடல் தண்ணீர் வழங்கப்படும், அந்தத் தண்ணீரிலேயே உடையையும் துவைத்து குளித்தும்கொள்ள வேண்டும். குளிக்கும் இடத்தில் கூட ஒரு காவலர் நின்று, எப்படிக் குளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டபடியே இருப்பார்.

காகிதம், பேப்பர், பேனா, பென்சில் போன்றவற்றை வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது. புத்தககத்தைத் திருடிப் படித்த குற்றத்துக்காக ஒரு கைதி நான்கு நாட்கள் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. சிறைக்குள், கைதிகளில் சிலர் அதிகாரிகளின் ஒற்றர்களாக செயல்படுவது உண்டு. அரசியல் கைதிகளுக்கு D என்ற முத்திரை அளிக்கப்படுவது வழக்கம். நோயுற்ற கைதிகளுக்கு உடனே சிகிச்சை அளிக்க மாட்டார்கள். அவர்கள், மருத்துவரிடம் செல்வதற்கு தனி அனுமதி பெற வேண்டும். இரவில் நோயுற்றால் விடியும் வரை அவர் வலியோடு போராடவே வேண்டும். இப்படி சொல்லித் தீராத கொடுமைகளின் விளைநிலமாக இருந்திருக்கிறது அந்தமான் சிறைச்சாலை.

இன்றும், அந்தச் சிறைச்சாலையில் உள்ள மரத்தின் இலைகள், இறந்துபோன சுதந்திரப் போராட்ட வீரர்கள் மனம் உருகப் பாடிய பாடல்களை மறக்க முடியாமல் நினைவுகொள்வதைப்போல அசைந்தபடியே இருக்கின்றன. கடந்த காலத்தின் சாட்சியாக கடல் அமைதியாக அந்தமானைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறை வலி மிகுந்த கடந்த காலத்தின் நினைவுகளின் ஈரம் படாமல் அந்தமானை பொழுதுபோக்குக்கான சுற்றுலாத் தலமாகக் கொண்டாடிவருகிறது. அவர்களின் இந்த சுதந்திரம் எத்தனையோ பேரின் ரத்தம் சிந்திப் பெற்றது என்பதை எப்போது உணர்வார்கள் என்ற ஆதங்கம் மேலிடவே செய்கிறது
 
 

Benefits Of Custard Apple Health Tips(சீதாப்பழத்தில் இத்தனை விஷயமா !!!! (நோனா பழம் ))


Benefits Of Custard Apple Health Tips

Custard Apple is known as a Seethaphal can be a exotic fruit tree that grows up easily.It was initially culivated in West Indies. Its organic name is ‘ANNONA SQUAMOSA’. It’s very famous in India. The pulp of this fruit is blended with milk for making custard. Because it delivers the taste of custard it can be called ‘Custard Apple‘. The fruit contains a peculiar aroma. Custard Apple can be used for making Jams, Jellies and sherbets.
Custard Apple
The plant is propagated by grafting together with from your seeds. Custard Apple Grafted plants generate fruits through the first year by itself. The plant usually flowers between March and July. The fruits must be plucked before they’re ripe and stored for ripening.
Custard apple encourages digestion and it is used as a treatment for vomiting, diarrhoea, dysentry and vertigo. The unripe fruit is dried and powdered and it is usedas a treatment for treating lice. The fruit is reduced in calorie content and possesses minerals like iron, phosphorous, calcium and riboflavin.
The plant is actually a evergreen shrub and grows to just around 6 mts. The plant bears flowers within the senior branches as well as the fruits produce within the mature branches and they are usually round. The flesh is white and creamy having a sugary taste. The seeds are black in color having a shine. The seeds are usually not consumed for they’re slightly poisonous.

Video



சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:
சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

ஆப்ரஹாம் லிங்கன்



ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?




சோழர் காலம்

தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.


சான்றுகள்

கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில்தான் எந்தவொரு சமூகம் அல்லது அரசாட்சியின் வரலாற்றையும் எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டு, தொல்பொருள், மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் முற்கால சோழர்கள் பற்றி சிறந்த சான்றுகளாக உள்ளன.


கல்வெட்டுகள்

சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை மற்றும் சோழர்கால அரசியல், பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதிக்ககப்பட்டுள்ளன. தஞ்சை பெதிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஜ்வரர் ஆலயத்தில் கல் வெட்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல முக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.

மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சி முறையைப் பற்றி திருவந்திபுரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. குடவோலை முறை, கிராம நிர்வாகம், வரி வசூல் முறை, நில வருவாய் முறை ஆகியவை குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. சில கல்வெட்டுகளில் மெய்கீர்த்திகள் எனப்படும் மன்னர்களின் வெற்றி வரலாறுகளும் காணப்படுகின்றன.

அன்பில் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டுகள், கரந்தை செப்பேடுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள் ஆகியன சோழர்களைப் பற்றிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கின்றன. சைவ மதம் அங்கு சிறப்புடன் இருந்தது குறித்து தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர்களின் சமகால அரசர்களான சேரர், பாண்டியன், இராஷ்டிர கூடர், கங்கா ஆகியோர் வெளியிட்ட கல்வெட்டுகளும் சோழர்களின் சிறப்புகள் பற்றிக் கூறுகின்றன.


நினைவுச் சின்னங்கள்:

சோழர்கால வரலாற்றை அறிந்துகொள்ள நினைவுச் சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாய் பயன்படுகின்றன. நினைவுச் சின்னங்கள் ஆலயங்களின் பகுதிகளாக உள்ளன. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராபுரத்திலுள்ள ஐராவதீஸ்வரர் ஆலயம், திருபுனவத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயம் சோழர்காலத்தின் முக்கிய நினைவுச் சின்னங்கள் ஆகும்.


நாணயங்கள்:

சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும், வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சினனமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பபடுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். சோழ அரசர்களின் காலங்களை வரிசைப்படுத்தவும், சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்துகொள்ளவும் இந்நாணயங்கள் பெரிதும் பயன்படுகின்றன.


இலக்கியம்:

சங்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் பற்றி, அறிந்துகொள்ள இலக்கியங்கள் சிறந்த சான்றுகளாக உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணம் சைவ பக்தர்களைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார். ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஒட்டக்சுத்தரின் மூன்று உலாக்கள், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் சோழர்கள் பற்றி பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன. வீர சோழியம், வநசோழ சரிதம், ஸதல புராணம், சோழ வம்ச சரிதம் ஆகிய இலக்கியங்கள் முற்கால சோழ அரசர்கள் பற்றி அறிய உதவும் சறந்த இலக்கியச் சான்றுகளாக உள்ளன.


அயல்நாட்டு சான்றுகள்:

சோழ அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையயே இருந்த உறவுகள் பற்றி இலங்கை இலக்கியமான மகாவம்சம் கூறுகின்றது. மேலும் இந்நூல் இலங்கையில் சோழர் ஆட்சி குறித்தும் கூறுகின்றது. ஐரோப்பிய பயணி மார்க்கோ போலோ, அயல்நாட்டு எழுத்தாளர் மெகஸ்தனிஸ் ஆகியோர் சோழர்களைப் பற்றி பல சுவையான தகவல்களைக் கூறுகின்றனர். அல்பெரூணி எனும் முகமதிய வரலாற்றாசிரியரும் சோழர்கள் பற்றி எழுதியுள்ளார்.


பிற்கால சோழ அரச குலம்:

பிற்கால சோழ அரச மரபை உருவாக்கியவர் விஜயாலயன் என்ற அரசர் ஆவார். இவர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி கி.மு. 850 ல் அதை சோழ நாட்டின் தலைநகராக்கினார். பல்வல மன்னர் அபராஜிதனை தோற்கடித்து அவரது இராஜ்ஜியத்துடன் இணைத்துக்கொண்டார். சிவ பக்தரான இவர் பல இடங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்.


முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:

உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் பற்றி நிறைய தகவல்களைத் தருகின்றன. இவர் ஆதித்யனின் மகனாவார். இவர் டிதன் இந்தியாவின் பல பகுதிகளை வென்று தனது நாட்டுடன் இணைந்து தமது பேரரசின் எல்லையை வடக்கே நெல்லூர் வரை விரிவுபடுத்தினார். பாண்டிய மன்னரைத் தோற்கடித்து வெற்றிகரமாக மதுரையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியை போற்றும் விதமாக இவருக்கு ‘மதுரை கொண்டான்’ என்ற பட்டடம் வழங்கப்ப்டடது. அத்துடன் மேலும் இலங்கை மற்றும் பாண்டிய அரசர்களின் கூட்டு ராணுவத்தைத் தோற்கடித்ததால் இவர் ‘மதுரையும் ஈழமும் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றார்.


இவர் ஒரு சிவபக்தர். இவர் சிதம்பத்தில் உள்ள நடராஜர் ஆலயத்திற்கு பொன்னால் கூரை வேய்ந்தார். எனவே இவர் ‘பொன்வேய்ந்தசோழன்” என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் கிராம நிர்வாகம் சிறப்புற்று காணப்பட்டது. பராந்தகனுக்குப் பிறகு கண்டராதித்தியன். அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் அரசாண்டனர்.


முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014

இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். திருவலாங்காடு செப்பேடுகள் இராஜராஜன் பற்றி கூறுகின்றன. இவர் சோழர் குலத்தின் மிக வலிமை மிக்க மன்னராவார். முதலாம் இராஸராஸ சோழனின் சிறப்புகள் சோழ நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றன. இவர் காலத்தில் பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டன. இராஜராஜனிடம் வலிமை மிக்க ராணுவம் இருந்தது. இவர் சேரரின் ராணுவத்தை திருவனந்தபுரத்தில் தோற்கடித்தார். இவர் கொல்லத்தை சார்ந்த பாஸ்கர ரவி எ்னற மன்னனையும் தோற்கடித்து, ‘காந்தளூர் சாலை கலமருதளிய’ என்ற பட்டம் பெற்றார். இவர் அமரபுஜங்கன என்ற பாண்டிய மன்னனை வென்றார். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனு ராதபுரத்தையும் இலங்கையின் வட பகுதியையும் இவர் கைப்பற்றினார். இவர் புலனருவா நகரத்தைப் புதிய தலைநகராக்கி அங்கு பல கோவில்களைக் கட்டினார். இவர் சேர, பாண்டிய, இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று

மும்முடி சோழன்” என்ற பட்டம் பெற்றார். இவர் மைசூர் பகுதியில் உள்ள கங்கபடி, தடிகை பாடி, நொளம்ப்பாடி ஆகியவற்றை வென்றார். இவர் விளிங்ஞம் என்ற பகுதியை வென்று ‘திக் விஜயம்’ நடத்தினார். மாலத் தீவுகள், கலிங்கம் ஆகியவற்றையும் வென்றார். இவருக்கு ‘அருண்மொழி’, ‘இராஜகேசரி’ போன்ற பட்டங்கள் உண்டு. இராஜராஜ சோழனுக்கு அவரது மகன் பட்டத்து இளவரசான ராஜேந்திரன் ஆட்சி மற்றும் போர்ப்பணிகளில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

இராஜராஜ சோழன் ஒரு சிறந்த நிர்வாகி, தமது ஆட்சி காலத்தில் இவர் நில அளவை முறையை அறிமுகப்படுத்தினார். இவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உள்ளாட்சி நிர்வாக முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். இவர் தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார். இவர் புத்த மதத்தையும் சைவ சமயத்தையும் ஆதரித்தார். நாகப்பட்டினத்தில் புத்தஆலயம் கட்டட அனுமதி அளித்ததோடு ஆனைமங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.


முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1002 – கி.பி.1044:

முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறினார். முதலாம் இராஜேந்திரனைப் பற்றி திருவாலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் ஆகியன பல தகவல்களைக் கூறுகின்றன. இவர் ஒரு சிறந்த நிர்வாகியும், போர் வீரரும் ஆவார். இவரின் தந்தையாருடைய இராணுவ தீரச்செயல்களிலும் சிறந்த நிர்வாகத்திலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவர் பதிவ ஏற்றவுடன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி இலங்கையில் சோழர் ஆட்சியை நிலை நிறுத்தினார். இவர் தனக்கு உதவ தன் மகன் இராஜாதி ராஜனை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.

தனது ஆட்சியின் போது இவர் பல சிவ ஆலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினார். இவர் வங்காள அரசன் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்து கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். இந்நீர், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழ கங்கம் என்ற நீர்பாசன ஏரியில் சேர்க்கப்பட்டடது. இந்த வெற்றியைப் போற்றும் விதமான இராஜேந்திர சோழனுக்கு ‘கங்கை கொண்டான்” என்ற சிறப்புப்பட்டம் சூட்டப்பட்டது.


இவர் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழப்புரத்திற்கு மாற்றினார். இவர் இலங்கையை கைப்பற்றினார். பின்னர் சேர பாண்டிய அரசர்களை வெற்றிக்கொண்டார். சாளுக்கிய குல அரசன் இரண்டாம் ஜெயசிம்மனோடு இவர் போரி்ட்டார். கலிங்கத்து அரசனையும் இவர் வெற்றிகொண்டார். இவர் ஒரு வேதக்கல்லூரியை நிறுவினார். முதலாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன், அதிராஜேந்திரன் ஆகிய அரசர்கள் சில வருடங்கள் சோழ நாட்டை ஆட்சி செய்தனர்.



முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:

சோழர் வரலாற்றில் குலோத்துங்கசோழன் மிகப்பெரிய திருப்புனையை ஏற்படுத்தினார். குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம், இராணுவ வெற்றிகள் பற்றி விளக்குகின்றன. இவர் சேர பாண்டிய மன்னர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மேற்கு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தியனுடன் இவர் போரிட்டார். குலோத்துங்கன் காலத்தில் சோழப்பேரரசு மிகவும் பரந்து காணப்பட்டது. வினயாதித்யாவிடம் இருந்து வெங்கியின் ஆட்சியைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழனை சீனா போன்ற தூர கிழக்கு நாடுகள் நன்கு அறிந்திருந்தன. இவர் சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பினார். இவர் இலங்கையின் வட பகுதியில் தன் ஆதிக்கத்தை இழந்தார். ஆனால் தென் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். இவர் கலிங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சோழப்பேரரசின் பொருளாதார நிலையை முன்னேற்றமடைய செய்தார். பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி முறையான நில அளவை முறையினை இவர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.

மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட பல விதமான வரிகளை நீக்கி, வரி சுமையில் இருந்து மக்களை மீட்டடதால் இவருக்கு ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நிர்வாக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சோழப் பேரரசு இவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. இவரது ஆட்சியில் உள்நாட்டு அமைதியும் சிறந்த நிர்வாகமும் சோழமக்களுக்கு கிடைத்தன.


சோழ அரசர்களில் மிகவும் சிறந்த அரசராக முதலாம் குலோத்துங்கன் கருதப்படுகிறார். அவருக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.