Search This Blog

Thursday, February 16, 2012

வாங்க சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..!




மனதுக்கு திறம், திடம் கொடுப்பது தான் மந்திரம். மந்திர ஜெபங்களை - இந்த காரிய பலிதம் வேண்டும் என்று மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டு, அதை மனதுக்குள் உருவேற்றும் போது - அது உங்கள் மனதை திடப் படுத்துகிறது.

அதன் பிறகு உங்கள் மனதில் ஏற்படும் ஒளியே - பல இன்னல்களை தகர்த்து , நீங்கள் விரும்பிய பாதையில் , உங்களை அழைத்துச் செல்கிறது.

கோபுரங்கள் கூம்பு வடிவத்தில் ஏன் அமைக்கப் பட்டு இருக்கின்றன? விண்ணில் விரவிக் கிடக்கும் நல் அலைகள் கோபுரத்தின் முக்கோண பரிமாண வடிவில் பட்டு , அங்கேயே சுழன்று கொண்டு இருக்கும்படி செய்வதற்காக , திட்டமிட்டே கோபுரங்கள் இந்த வடிவில் அமைக்கப் படுகின்றன. 

மனதின் சக்தி, ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்டது.அதே சமயம், அந்த மன சக்தியை ஒருநிலைப்படுத்திடவே மனிதனின் முன்னோர்கள், தெய்வீக சக்தியை பூமியில் சில குறிப்பிட்ட இடங்களில் குவியச்செய்து,அதன் மூலம் எல்லாமனிதர்களும் தத்தம் மனசக்தியை சமநிலைப் படுத்திட ஏற்பாடுகள் செய்திருந்தனர். 

அலைந்து திரியும் மனதுடன் ஒருவர் இருந்தாலும், சக்தி வாய்ந்த இந்த கோபுரங்கள் அமைக்கப் பெற்ற ஆலயத்தில் ஒருவர் நுழையும்போதே , அவரது மனது சாந்தியும், சந்தோசமும் பெறுவது அங்கு நிலவும் இந்த தெய்வீக கதிர் வீச்சினால்தான்.  

ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் குரு ஓரையில் சித்தர்கள், மகான்கள், துறவிகளின் ஜீவ சமாதிகள், சதுரகிரி மலைப்பகுதி,சதுரகிரியின் கோவில் சன்னதி, திரு அண்ணாமலையின் கோவில்பகுதி, திருவண்ணாமலையின் கிரிவலப்பாதை, அஷ்ட லிங்கங்களின் சன்னதிகளில் அமர்ந்து பின்வரும் மந்திரத்தை 90 நிமிடங்கள் ஜபித்துவரவேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான ஒவ்வொரு ஆலயமும், அற்புத சக்தி நிரம்பிய ஆலயங்களே. 
 
இதனால்,முற்பிறவி கர்மம்,நம் முன்னோர்கள் செய்த கர்மம்(பாவம்) தீரும். அப்படித் தீர்ந்தாலே, நாம் செல்வச் செழிப்பின் உச்சத்தை நோக்கி நகரத் துவங்குவோம். 

அதற்குமுன்பாக, இந்த மந்திரத்தை ஒரு சிவ பக்தர் / சிவாச்சாரியார் / சைவச்சித்தாந்த மாணவர் / உங்கள் ஆஸ்தான ஜோதிடர் / உங்களது ஆஸ்தான துறவி / உங்களது ஆசிரியர் என யாரையாவது இதை ஒருமுறை வாசிக்கச் சொல்லி அதை நீங்கள் கேட்டு, குரு உபதேசம் 
பெற்றிருத்தல் அவசியம்.

சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும்
விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.

ஓம் ஹ்ரீம் பரஞ்சோதி பரஞ்சோதி ஹம்ஸ ஹம்ஸ
வ்யோம வ்யோம ந்ருத்த பரப்ரகாசானந்த நாதாய
ஹ்ரீம் சிவானய நமஹ
 

ஐயா மிஸ்டிக் செல்வம் அவர்கள் பல ஆராய்ச்சிக்குப் பிறகு , தெரிவித்த சில நல்ல அறிவுரைகளை கீழே கொடுத்துள்ளேன். நம் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.
 
தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத்
துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்
அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும். 

கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.
 
பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
 
தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும். 

நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும் 
வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.

காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும்
மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.
 
கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.
 
கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும்
நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை. 

புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள், பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும். ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.
வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி, கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது. பணம், முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால், வாங்கியவர் வளமடைவார்.

கார்த்திகை,மகம்,உத்திரம்,சித்திரை,மூலம்,ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும் கூடாது.அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.

வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி, அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால் ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
======================================================

முருக பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அதி சூட்சும ஷண்முக மந்திரம் 
ஓம் நமோ பகவதே
சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

-இந்த மந்திரத்தை தினமும் முருகன் உருவப்படத்தின் முன்பு  11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும்.


Read more: http://www.livingextra.com/2011/12/blog-post_27.html#ixzz1mXTiiWjC

திருப்புறம்பியம் : ஒரு அதிசய விநாயகர் ஆலயம்...



ஞான முதல்வன் கணேசப்பெருமானின் தெய்வீக அலைகள் அற்புதமாக வெளிப்படும் ஆலயங்கள், நம் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. அவற்றில் ஒரு சிறப்புமிக்க ஆலயம் பற்றி, இன்று நாம் காணவிருக்கிறோம்.  

நவகிரகங்களில் - கேது பகவானின் மூலம் நமக்கு இன்னல்கள் ஏற்படாதிருக்க , விநாயகர் வழிபாடு நமக்கு மிகப் பெரிய வரப்ரசாதம். கேது தசை, கேது புக்தி நடப்பவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது , பிரசித்திபெற்ற இது போன்ற கணேச ஆலயங்களுக்கு சென்று வருவது நன்மை பயக்கும்.   

திருவலஞ்சுழி உங்களில் அநேகம் பேருக்கு தெரிந்து இருக்கலாம். வலம்புரி விநாயகர் அபரிமிதமான அருள் அலைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு , நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரும் அருளும் ஆலயம். இந்த ஊருக்கு வெகு அருகிலேயே உள்ளது இந்த திருப்புறம்பியம்.

ஒரு யுகத்திற்கும் இன்னொரு யுகத்திற்கும் இடையே ஏற்பட்டதொரு ஊழிப்பெருவெள்ளம் கட்டுக்கடங்காது போயிற்று. அப்போது வருணன்
கடலிலிருந்து கிடைத்த பொருள்களைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபட்டார். விநாயக வழிபாட்டிற்குப் பின்னர் பிரளயமும் ஒடுங்கியது. ஓம்  என்னும் பிரணவ மந்திரத்தால் ஏழு கடல்களையும், ஒரு கிணற்றுக்குள் அடக்கினார் என்று புராணம் கூறுகிறது. 

ஆகவே பிள்ளையாருக்கு "பிரளயம் காத்த விநாயகர்" என்ற பெயர் ஏற்பட்டது. விநாயகரின் சிலாவுருவத்தில் கடற்சங்கு, நத்தை, கிளிஞ்சல் ஆகியவை தெரியும்.சங்கு, சிப்பிகளாலேயே ஆன சிலை என்று கூறுகின்றனர். 

இந்த பிள்ளையாருக்குத் "தேன் குடிக்கும் பிள்ளையார்" என்ற பெயரும் உண்டு. இவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும். மற்ற நாட்களில் கிடையாது.விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம்  செய்யப்படும். இரவு 8-00 மணிக்கு மேல் தொடங்கி விடிய விடிய தேன் அபிஷேகம் செய்வார்கள். குடம் குடமாக ஊற்றப்படும் அவ்வளவு தேனையும், சிந்தாது சிதறாது பிள்ளையார் சிலை அப்படியே தன்னுள் உ
றிஞ்சிக்கொள்கிறது. 

ஒரு டன் தேன் அவ்வாறு உறிஞ்சப் படுவதாக கணித்திருக்கிறார்கள்.


கும்பகோணத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. 

இந்த விநாயகர் அமர்ந்து இருக்கும் ஆலய மூலவர் பெயர் : சாட்சி நாதேஸ்வரர் (சிவ பெருமான் )
அம்மன் பெயர் : கரும்பன்ன சொல்லம்மை 

ஒரு வணிகப் பெண்ணிற்காக, இவ்வூர் இறைவன் மதுரை சென்று, சாட்சி கூறினமையால், சாட்சி நாதர் எனப் பெற்றார். வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி (மதுரையிலுள்ளது.) சனகர் முதலிய நால்வருக்கு இறைவன், இத்தலத்தில் அறத்தை உணர்த்தினார்.  

இக் கோவில் பணிமகள் ஒருவரைக் கொன்று, அவ்வம்மையாருடைய அணிகலன்களை திருடிய ஓடம் விடுபவன், தானும் ஆற்றைக் கடப்பதற்குள், ஆற்றில் தவறி விழுந்து இறந்தான். இச்செய்தியைச் சுந்தரர், தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இக் கோவில் மதுரை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது. சோழர் கால கல்வெட்டுகள் பல இங்கு எடுக்கப்பட்டுள்ளன.

கும்பகோணம் செல்லும்போது , இந்த கோவிலையும் அவசியம் தரிசித்து வாருங்கள்.!


Read more: http://www.livingextra.com/2011/12/blog-post_15.html#ixzz1mXStW6pQ

மகத்தான மந்திரங்களின் - ஒலி / ஒளி கோப்பு ( Audio / Video file )


நீங்க கேட்டு , இல்லைன்னு சொல்ல முடியுமா? விளைவு இந்த பதிவு.
அனேகமாக வீட்டில் இருந்து பதிவுகளை பார்வையிடும் வாசகர்கள் இந்த பதிவை - Bookmark  this  page - செய்துகொண்டு - காலை எழுந்தவுடனோ , அல்லது இரவு தூங்க முன்போ , நீங்கள் தியானம் பண்ணும்போதோ  - ஒலிக்கவிடவும்.

மிருத்யுஞ்சய மந்திர ஜெபம் - தியானத்திற்கு உகந்தது.
மிருத்யுஞ்சய  ஸ்தோத்திரம் , ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரமும் - தீர்க்க முடியாத கொடிய வியாதிகளில் இருந்து , தீர்க்க வல்லது.
மேலும், ஸ்ரீ நரசிம்ஹா அஷ்டகம், ஸ்ரீ சுதர்ஷன அஷ்டகம்  - எதிரிகளை ஒடுக்கி , உங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி - நீங்கள் விரும்பியதை அடைய   செய்யும்.
ருண விமோசன மந்திரம் - கடன் தொல்லைகளில் இருந்து உங்களை தப்புவிக்க சக்தி அளிக்க வல்லது.

குழந்தைகளின் - கல்வித்தரம் மேம்பட - ஹயக்ரீவ மந்திர ஜெபம் உள்ளது.
உங்களை கோடீஸ்வரனாக்க சக்தி அளிக்கும் - மூன்று அற்புத மந்திர ஜெபம் , ஸ்ரீ குபேர மந்திரம் , மற்றும் ஆதி சங்கரர் அருளிய பொன்மழை பெய்ய வைக்கும் கனகதார ஸ்தோத்திரம் - ஆகிவையும் கீழே கொடுத்துள்ளோம்.....

வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்......

உங்கள் அனைவருக்கும் வர விருக்கும் புத்தாண்டு - நோய் நொடியற்று , பொருளாதார வளமுடன் , மகிழ்வு நிறைந்த குடும்பமும் , சுற்றமும் , நட்பும் பெற்று மகத்தான ஆண்டாக அமைய , அந்த பரம்பொருள் நம் அனைவரையும் ஆசீர்வதிக்க , மனமார வேண்டுகிறேன்....!









Sri Mantra Rajapada Stotram -



Sri Narasimha Ashtakam 















Read more: http://www.livingextra.com/2011/12/audio-video-file.html#ixzz1mXS0mpgt

திருப்பம் தரும் தைப் பூச வழிபாடு





 
பூமியில் உயிர்கள் உருவாவதற்கு வெப்பமும், குளிச்சியும் தான். எங்கு வெப்பத்துடன் குளிர்ச்சி இருக்கிறதோ அங்கு உயிர் அணுக்கள் உருவாகிறது. அந்த வெப்பத்தை `அக்னி' யாக கொடுத்து வருபவர் `சூரியன்', குளிர்ச்சியை `நீர்' சக்தியாக கொடுத்து வருபவர் சந்திரன். மனிதன் உருவாவவதற்கு அப்பாவும், அம்மாவும் தான் காரணம் என்று நமக்கு தெரிந்தாலும், அப்பா-`அக்னி' வடிவமான சூரியனின் ஆதிக்கமும், அம்மா `நீர்' வடிவமான சந்திரனின் ஆதிக்கம் இரண்டும் இணைகின்ற போது `ஜீவன்' உருவாகிறது.
 
மனிதனுக்கு அப்பா, அம்மா போன்று தான், பூமிக்கு அப்பாவாக சூரியனும், அம்மாவாக சந்திரனும் இருந்து `அக்னி'யையும் நீரையும் கொடுத்து வெப்பத்தையும், குளிச்சியையும் பருவ கால மாற்றத்திற்கு ஏற்றபடி கொடுத்து, காய், கனி, களையும் உணவு, மற்றும் கனிமங்களையும், புழு, பூச்சி, பறவை, மிருகங்கள், மனி தர்கள் என்று பல ஆயிரம் ஜீவராசிகளை உருவா வதற்கு காரணமாக இருப்பவர்கள், சூரியனும், சந்திரனுமே. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை நமது பல `வேத' சாஸ்திரங்களில் ஆராய்ச்சி செய்து எழுதி வைத்து உள்ளார்கள்.
 
பூமியில் உயிரினங்கள் வாழுவதற்கு சூரியனும், சந்திரனும் தான் என்று உணர்ந்தவர்கள், இதையும் அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். இந்த உலகத்துக்கு உயிர்களை உற்பத்தி செய்கின்ற சக்தியாக `ஜீவனாக' இருக்கின்ற சூரியனுக்கு `ஜீவன்' என்றே பெயர் வைத்தார்கள். அது நாளடைவில் பல காலத்திற்கு பிறகு மருவி, மருவி, `சிவன்' என்று ஆனது.
 
`சிவன்' தான் இந்த உலகத்தின் `ஆதி' ஆவார். இதனால் தான் சூரியனுக்கு `ஆதி` என்ற பெயரும் உண்டு. `ஆதிமூலம்' என்ற பெயரும் சிவனையே குறிக்கும். `அப்பா'விடமுள்ள `ஜீவசக்தி'யை `அம்மா' வாங்கி கொண்டு பாதுகாத்து, வளர்த்து முழு ஜீவனாக கொடுப்பது போலத்தான் `சூரியனிலிருந்து வரும் `சக்தி'யை முழுமையாக பெற்று, பூமியின் `மின்' காந்த ரசாயன சக்தியுடன் கலந்து நம்மை `மதி'யுடன் அறிவுடன் இயங்க செய்வது `மதி' என்ற சந்திரனே.
 
சூரியனிடமிருந்து வரும் `ஒளி`க்கதிர்களை பெற்று பூமிக்கு கொடுக்கும் அளவுகளில் தினமும் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த அளவுகளுக்கு பெயர் தான் `திதி' ஆகும். முழுமையாக சூரியனின் `சக்தி'யை சந்திரன் பெறும் நாள் தான் `பௌர்ணமி' ஆகும். சந்திரனுக்கு சூரியனின் சக்தியே கிடைக்காத நாள் தான் `அமாவாசை' ஆகும். கிரகணம் `சக்தி' குறைந்த நாட்கள் ஆகும்.
 
இந்த நாட்களில் முக்கியமான சக்தி வாய்ந்த புதிய மருந்து எதையும் மனிதனின் உடலில் செலுத்துதல், ஆபரேசன் செய்தல் போன்றவற்றை தள்ளி  வைத்து சொல்வது நல்லது என்று தற்போது `விஞ்ஞானி'கள் கூறி வருகிறார்கள். இதை எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது வேதங்களில், `மறை' களில் புராணங்களில், மந்திர, தந்திர, பூஜைகளில் எழுதப்பட்டு உள்ளது.
 
`பவுர்ணமி' அன்று சூரியனின் சக்தியும், சந்திரனின் சக்தியும் பூமிக்கு வருவதால் தான் பூமியில் எல்லாவற்றிலும் மாறுதல் வருகின்றது என்பதை நமது முன்னோர்கள் அனுபவித்து உணர்ந்தார்கள். இதனால் தான் இந்த `பவுர்ணமி' தினத்தன்று `ஈல்லரன்', `ஈஸ்வரி', அதாவது சிவன்-பார்வதியாக பல பெயர்களில் காட்சி கொடுக்கும் கோவில்களில் சிறப்பாக கோவில் விழாக்கள் நடந்து வருகிறது.
 
இந்த செய்தி ஆதி புரராணங்களிலும் இருந்து வருகிறது. சிவன்-பார்வதியின் மகனாக `முருகன்' கோவில்களிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 62 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது என்றும், இதில் 32 ஆயிரம் கோவில்கள் தினசரி பூஜை வழிபாட்டில் உள்ளது என்றும், மற்றும் பல புராதன கோவில்கள் பராமரிப்பு இல்லாத நிலையில் இருந்து வருகிறது என்றும் ஆன்மீக ஆய்வாளர்கள் எழுதி வருகிறார்கள்.
 
இது நமது தமிழ்நாட்டுக்கு மட்டுமே கிடைத்த பெரிய பாக்கியம் ஆகும். பவுர்ணமி அன்று இரவில் வரும் மின் கதிர் வீச்சு மனிதனின் உடலில் படும் போது, அதாவது ஆண்- பெண்களின் உடல் மீது படும் போது `சிவன்' சக்தியும் `அம்மன்' சக்தியும் முழுமையாக படுகிறது. இதனால் ஆண்-பெண் இருவரது உடலிலும் மின்காந்த உணர்ச்சியினால் `வெப்பம்' ஏற்பட்டு இருவரின் நாளமில்லா சுரப்பிகளும் சமமாக சுரக்கின்றன.
 
ஏறத்தாழ `27' வகையான மின்காந்த ரசாயன `என்சைம் அயனி'கள் `27'நட்சத்திரங்களாக பரிமளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சக்திகள் ஆண்-பெண் உடல் எங்கும் உட்புகுகிறது. இதனால் உடலில் உள்ள `செல்'கள், திசுக்கள் மீது மின்காந்த ரசாயன கிரியைகளை `27' என்சைம்களும் உண்டாக்கி ஒரு மாதத்திற்கு தேவையான உடல் சக்தியையும் அழகையும், ஆண்-பெண் இருபாலருக்கும் கிடைக்க செய்கிறது.
 
இதை தான் `சிவபுராணத்தில்' சிவதாண்டவம் என்று எழுதி உள்ளார்கள். இதை அறிந்த நமது முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் `பவுர்ணமி'யில் நமது உடலில் மின்காந்த சக்தி வருவதற்காகத் தான் `பவுர்ணமி' நாளில் பாட்டும், பரதமும், கோவில் பூஜை வழிபாடுகளையும் வைத்து, `பவுர்ணமி' இரவில் மக்கள் தூங்காமல் இருப்பதற்கு வழி காட்டினார்கள். இன்றும் பல சிறிய கிராமங்களில் மாதாமாதம் `பவுர்ணமி' பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது.
 
பவுர்ணமி பூஜை `ஒன்பது' மாதம் முழுமையான மனஈடுபாட்டோடு செய்து வருகின்றவர்களுக்கு சக ஐஸ்வரியங்களும் கிடைத்து வருகிறது. `சிவன்' `சக்தி' `முருகன்' ஆகிய 3 தெய்வங்களும் பூமியில் வந்து இறங்கி தங்களை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை எல்லாம் அள்ளி வழங்கி வருகிறார்கள். மிகவும் முக்கியமாக கடல், நதி, ஆறு, மலை அருகில் உள்ள கோவில்களில் பவுர்ணமி பூஜை செய்து வருபவர்களுக்கு கேட்கும் வரம் நடந்து வருகிறது.
 
பெரியவர்கள் பூஜைகள் செய்வது கடமை ஆக்கப்பட்டு உள்ளது. இன்றும் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி கிராமங்களில் சிறுவர்-சிறுமியர்கள், தங்களது வீடுகளில் இருந்து இரவு சாப்பாட்டை எடுத்து வந்து, பவுர்ணமி இரவில் ஓர் மைதானத்தில் `கூட்டாஞ்சோறு' சாப்பிடுவதை காணலாம். இதன் நோக்கம் பவுர்ணமி சக்தி மூளை வழியாக சென்று அவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தையும், தெளிவையும், ஞாபக சக்தியையும் கொடுப்பதற்காகத்தான்.
 
இப்படி `கூட்டாஞ் சோறு' சாப்பிடும் மாணவ-மாணவிகள் படிப்பில் உயர்ந் தவர்களாக இருப்பதை காணமுடிகிறது. குழந்தை பாக்கியம் தாமதம் ஆகி விடும் தம்பதிகள், `பவுர்ணமி' பூஜையில் கலந்து கொண்டு, பவுர்ணமியின் ஒளி முழுமையாக படும்படி இரவில் பூஜைகள் மூல மாகவோ, தியானம் மூலமாகவோ, கோவிலை வலம் சுற்றி வருவதன் மூலமாகவோ தங்களை ஈடுபடுத்திக் கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து வருகிறது.
 
உத்தியோகத்தில், வியாபாரத்தில் செய்தொழிலில், கைதொழிலில் நிம்மதி இல்லாத நிலையில் கடனுன் போராடி வருபவர்களுக்கு கடன் தொல்லையில் இருந்து படிப்படியாக விடுதலை கிடைத்து வருகிறது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே பிரச்சினை, பிரிவினை என்று வாழ்ந்து வருபவர்களுக்கு மகிழ்ச்சியும், சந்தோசமும் கிடைத்து வருகிறது.
 
பூஜை முறை.........
 
திருமணம் ஆக மாங்கல்ய பாக்கியம் கிடைக்கிறது. எனக்கு தெரிந்து பல பிரசித்தி பெற்ற கோவில் இருக்கும் ஊர்களில் எல்லாம் பவுர்ணமி பூஜை வழிபாட்டை மக்கள் செய்து பயன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு பவுர்ணமியிலும் நள்ளிரவு 12 மணிக்கு திருவான்மியூரில் உள்ள `பாம்பன்' சுவாமி மடத்தில் தொடர்ந்து பவுர்ணமி பூஜை முருகன் பூஜையாக ஒரு பெரியவர் மூலம் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
 
அங்கு தற்போது கிட்டத்தட்ட 10 ஆயிரம் மக்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு பயன்பெற்று வருவதை பார்க்க முடிகிறது. இத்தகைய பவுர்ணமி பூஜையில் ஒவ்வொரு பூஜைக்கும் தனிததன்மை உண்டு. அதிலும் குறிப்பாக `தை' மாத பவுர்ணமிக்கு தனி சக்தி உண்டு என்று பூஜை சாஸ்திரங்கள் கூறுகிறது. ஏன் என்றால் இந்த மாதத்தில் இருந்து தான் `சூரியன்' தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்கிறார்.
 
மக்களுக்கு அறுவடை மூலம் உணவு தானியங்களை கொடுக்கும் கால உத்ராஅயனம் புண்ணிய காலம் ஆகும் வருகின்ற 6.2.2012 அன்று இரவு `தை' மாத பவுர்ணமி ஆகும். மேலும் ஓர் சிறப்பு, அன்றுதான் முருகப்பெருமானின் `தைப்பூச' திருவிழாவும் ஆகும். இதனால் இயற்கையாகவே இந்தமாத வழிபாட்டில் உள்ள அனைவரும் தைப்பூச திருவிழாவின் காரணமாக பவுர்ணமியின் மின்காந்த அணுக்கள் நம்மீது படும்படியான சூழ்நிலை, கிரகநிலை அமைந்துள்ளது.
 
 ஒரு விழாவில் அந்த விழா பற்றிய செய்தியை நாமே அறியாமல் கலந்து கொள்வதற்கும், அந்த `விழா' பற்றிய அனைத்து செய்திகளையும் அறிந்து, தெரிந்து, கலந்து கொள்ளும் போது, நமது மனம் அதில் முழுமையான ஈடுபாட்டுடன் சிவன், அம்மன், முருகன் மீது எல்லையில்லாத பக்தி பெருக்குடனும் கலந்து கொள்ளும் போது, தெய்வ சக்தியின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
 
குழந்தை பாக்கியம் பெற........
 
மேலும் ஒரு முக்கிய செய்தி, `தை' மாத `பவுர்ணமி'க்கு மட்டும் ஏன் சிறப்பு என்றால், அசுப கிரகங்கள் ஆன, ராகு-கேது இருவரும் `நான்கு' வேதங்களையும், `மகர' ராசி, `கடக' ராசி என்ற கடல் ராசியில் தான் மறைத்து வைத்து அறிந்து கொண்டார்கள் என்பதால். இந்த மை மாத `பவுர்ணமி'யில் கலந்து கொண்டவர்களுக்கு நான்கு வேதமும் அருள் பாலிக்கும் என்பது ஐதீகம்.
 
குழந்தை பாக்கியம் கிடைக்க, கடன் தொல்லையில் இருந்து படிப்படியாக விடுபட `பவுர்ணமி' பூஜை நேரத்தில் இரவில், நமது வீட்டு வாசல்களிலும், வீட்டின் மொட்டை மாடிகளிலும், வீட்டை சுற்றியும் விளக்கு ஏற்றி ஈஸ்வரன், ஈஸ்வர, முருக காய்திரி மந்திரங்களை வானத்தை பார்த்து தியான நிலையில் இருந்து கூறி வருவது நல்லது.
 
ஆன்மீகத்தில் விருப்பம் உள்ளோர் வெட்டவெளி வானத்தை நோக்கி, பவுர்ணமியை பார்த்துபடி, இறைவனின் மந்திரங்களை மனதில் கூறியபடி தியானத்தில் இருந்து வர, சிவனின் அருள், முருகனின் அருள் கிடைக்கும். சிவன், அம்மன், முருகன், கோவிலை நோக்கி நடந்து போக, கோவிலை கிரிவலம் வர தற்போது இருந்து வரும் அத்தனை பிரச்சினைகளில் இருந்தும் படிப்படியாக நிம்மதி கிடைக்கும்.
நன்றி :  `ஜோதிட ஆசான்' கீழஈரால் பண்டிதர் பச்சைராஜென்.