Search This Blog

Monday, September 21, 2020

தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல

தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும். ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை. ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி, நிலம், பண்பாடு, பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன?

எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்?

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.
தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.
'துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே' என்கின்றது புறநானுற்று அறம்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பார் திருவள்ளுவர்.
இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.
தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.
ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது.
பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.
நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும்.
அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.
நன்றி - ஸ்டாலின் ஞானம்

நெடுமரங்கட்கு ஓர் அஞ்சலி


புற்களை விரும்பிக் கால்கள் பதிப்பீர்
குட்டைச் செடி களை உதைத்து மிதிப்பீர்
நிமிர்ந்த நெடுமரம் வணங்க மறுக்கும்
கொடுவாள் ஏந்தி வெட்டிச் சரிப்பீர்
விதைகளினின்றும் வேர்களினின்றும் மரங்கள் விளையும் விந்தை அறியா மூடர் நீவிர்
கையில் ஏந்திய ஆயுதங் கனத்து
இரும்பு நெகிழ்ந்து கயிறாய்த் திரிந்து
கையைப் பிணைத்துங் கழுத்தை நெரிக்கையில்
விழுந்த மரங்கள் வனமெனச் சூழும்
-பேராசிரியர் சிவசேகரம்
‘தேவி எழுந்தாள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

Saturday, September 12, 2020

பின்னணிப் பாடகி கே.ஜமுனாராணி

 



கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

தமிழில் பிரபலமான துள்ளிசைப் பாடகியர்களுள் இவரும் ஒருவர். பாடல் பதிவின் போதோ, மேடை நிகழ்ச்சிகளின் போதோ இவர் ஆடிக்கொண்டே பாடுவதில்லை என்பது சிறப்பு.

”திரைப்படங்களில் பின்னணிப் பாடுவதில் ஒரு புது வகையைச் செய்ய இவருக்கு வாய்ப்பு கிட்டியது. சாதாரணமாகப் பாடுவதோடு இல்லாமல், ஓரளவு பொப்பிசை எனப்படும் ஜனரஞ்சகமான பாடல்களைப் பாட இவருக்கு சந்தர்ப்பங்கள் கிட்டின. கேளிக்கை விடுதிகளில் நடனமாடும் நடன மாதுக்களுக்கும், கிராமிய, நாடோடிப் பாடல்களைப் பாட இவரது பொருத்தமாக இருந்திருக்கிறது ஜமுனாராணிக்கு”.
’ஆரம்பத்தில் இவர் பரதநாட்டியம் தான் கற்றுக்கொண்டார். இவரது தாயார் திரௌபதி அவர்கள் பெண்களையே கொண்டு அமைத்த வாத்தியக்குழுவில் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வீணையில் தேர்வில் சித்தி பெற்றிருக்கிறார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இவரது குரலைக் கேட்ட அவர் இவரைப் பாடச் சொல்லலாமே எனக் கூறியுள்ளார். அது முதல் தான் பாடுவது என ஆரம்பித்துள்ளார்.

”1952-இல் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘கல்யாணி’ என்ற படத்தில் பாட இவருக்கு சந்தர்ப்பம் அளித்தனர்”. ‘சக்ஸஸ்’ என்ற ஒரு பாட்டும், ‘ஒன் டூ த்ரீ’ என்ற ஒரு பாட்டும் அதில் இவர் பாடினார். இவ்விரண்டு பாடல்களுமே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன.
‘அநேகமாக வில்லி கதாபாத்திரங்கள் ஏற்றவர்களுக்காக ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். “குலேபகாவலி” படத்தில் இவர் பாடிய ’ஆசையும் என் நேசமும் இரத்தப் பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா’ என்ற பாடல் பலரையும் கவர்ந்தது. பழம்பெரும் நடிகைகள் எம்.என்.ராஜம், சூர்யகலா போன்ற நடிகையர்களுக்காக ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார் இவர்.
’விடுதி நடனங்கள்’ பாடல்களா ஜமுனாராணியை பாடச்சொல் என்று அழைப்பார்கள் 1960-களில். ‘மாலையிட்ட மங்கை’யில் மைனாவதிக்காக இவர் பாடிய செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாட்டும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
’அன்பு எங்கே’ படத்தில் ‘மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு’ என்ற பாட்டும் எல்லோரையும் கவர்ந்தது. இப்பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ’குமுதம்’ படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் இவர் இணைந்து பாடிய “மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா’ என்ற பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான பாடலாகும். இப்பாடல் காட்சியில் நடித்தவர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் பி.எஸ்.சரோஜா மற்றும் கள்ளபார்ட் நடராஜனும்.
கவியரசரின் பரிந்துரை
இப்படி பாடிப்பாடி இப்படித்தான் இவரால் பாடமுடியும் என்று ஒரு பெயர் இவருக்கு ஏற்பட்டுவிட்டது. சுந்தர்லால் நட்கர்னி ‘மகாதேவி’ என்ற ஒரு படத்தினை எடுத்தார். அதில் சாவித்திரி பாடவேண்டிய ஒரு பாட்டு. பாடல் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் சொன்னார் இந்தப் பாடலை ஜமுனாராணியைக் கொண்டு பாடச் செய்யலாம் குரல் நன்றாக இருக்கும் என்று. இசையமைப்பாளர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் முடியாது என்று மறுத்துவிட்டனர்.
உடனே கவிஞர் ஜமுனாவைப் பாடச் சொல்லுங்கள். பதிவு செய்த பிற்கு கேட்டுப்பார்ப்போம். நன்றாக வந்தால் நீங்கள் ஊதியத்தை அவருக்கு இரண்டு மடங்காக தரவேண்டும். நன்றாக வரவில்லையென்றால் இன்றைய செலவை நான் தந்துவிடுகிறேன் என்றார். இப்படி இவர்கள் பந்தயம் கட்டிக்கொண்டு இவரைப் பாட வைத்தார்கள். எல்லா தெய்வங்களையும் பிரார்த்தனை செய்துகொண்டு இவரும் பாடினார். “காமுகர் நெஞ்சில் நீதியில்லை” என்ற அந்தப் பாட்டு மிக நன்றாக அமைந்தது. இது இவரது வாழ்வில் நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ‘மன்னாதி மன்னனிலும்’, பாசமலரிலும் [பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்] பாட இவருக்கு வாய்ப்புக்கள் கொடுத்தனர் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்.
தற்போது இவருக்கு 77 வயதாகிறது. 1938-ஆன் ஆண்டு கே.வரதராஜுலு, கே.திரௌபதி தம்பதியரின் மகளாக ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.
தெலுங்கில் முதன்முதலாக 1946-ஆம் ஆண்டு ’தாசில்தார்’ என்ற படத்தில் பாடினார். தொடர்ந்து ‘தியாகய்யா” என்ற படத்தில் பாடிய பின்னர் பிரபலமானார். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ஏராளமான படங்களில் இவர் பாடியுள்ளார். இவர் மொத்தமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மொழியில் மட்டுமல்லாது சிங்களம், மலையாளம், கன்னடம் மற்றும் தாய் மொழியான தெலுங்கு மொழிகளிலும் பாடியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இளையராஜாவின் இசையில் நாயகன் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் இணைந்து நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது. அடுத்து ‘நீ தொடும் போது’ படத்தில் இளையராஜாவின் இசையில் பாடியவர் 1992-இல் சந்திரபோஸ் இசையில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாடலை ஜிக்கியுடன் இணைந்து பாடினார். இவர் தற்போது குடும்பத்தாருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இவர் பாடிய மேலும் சில அமுதகானங்கள்:
  1. அன்பு எங்கே படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பூவில் வண்டு போதை கொண்டு
  2. அதிசயத் திருடன் படத்தில் யாரென இனிமேல் கேட்காதே
  3. ஆசை படத்தில் ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட ராஜா
  4. இரு கோடுகள் படத்தில் சுசீலாவுடன் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
  5. இருமனம் கலந்தால் திருமணம் படத்தில் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து மலர்ந்திடும் இன்பம் வண்ணம் போலே…
  6. இரும்புத்திரை படத்தில் திருச்சி லோகநாதனுடன் இணைந்து நிக்கட்டுமா போக்கட்டுமா நெஞ்சத் தொறந்து காட்டட்டுமா
  7. உத்தம புத்திரன் படத்தில் ஏ.பி.கோமளா, ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி
  8. எங்க வீட்டுப் பெண் படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து எனக்கு நீதான் மாப்பிள்ள
  9. எங்கள் குல தேவி படத்தில் தனித்துப் பாடிய கண்ணாடி கிண்ணம் காண்பவர்
  10. எங்கள் செல்வி படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலெட்சுமியுடன் இணைந்து பாடிய என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்
  11. எங்கள் குடும்பம் பெரிசு படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து அதிமதுரா அனுராதா ஜீவிதமே…..
  12. கடவுளைக் கண்டேன் படத்தில் பி.சுசீலாவுடன் அண்ணா அண்ணா சுகம்தானா
  13. கடவுளைக் கண்டேன் படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் இணைந்து கொஞ்சம் தள்ளிக்கணும் அங்கே நிண்ணுக்கணும்…..
  14. கவிதா படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து மணக்கும் ரோஜா மை லேடி
  15. கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பார்க்க பார்க்க மயக்குதடி
  16. கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பறக்கும் பறவைகள் நீயே
  17. கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
  18. கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து உள்ளே இருக்கும் பொன்னம்மா
  19. கண் திறந்தது படத்தில் எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து இருக்கும் வரையில் ரசிக்கணும் இன்பமாக இருக்கணும்
  20. காட்டு ரோஜா படத்தில் தனித்துப் பாடிய என்னைப் பாரு பாரு பார்த்துக் கொண்டே இருக்கத்தோணும்
  21. 15.12.1982 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது. 1982-இல் கே.ஜமுனாராணி
Thanks https://antrukandamugam.wordpress.com/

கள்ளத்தோணி (பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன்)



ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது.
அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல இவரது படைப்புகளில் கண்டிக் கலவரம் 1915, தலித்தின் குறிப்புகள் வரிசையில் இந்த கள்ளத்தோணி நான் வாசித்த மூன்றாவது நூலாக இணைகின்றது.
மலையகத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்கள் என்று இலங்கைக் கரையை அடைந்தனரோ அன்று தொடக்கம் இன்று வரை அவர்களிற்கு இழைக்கப்பட்டுவரும் சமூக அநீதிகளை இந்நூலில் பிரதானமாக கோடிட்டுக் காட்டியுள்ள நூலாசிரியர் அவற்றிற்கான நீதியையும் வேண்டி வலியுறுத்தி நிற்கின்றார். இதற்குப் பக்கபலமாக இறுதி அத்தியாயங்களில் தான் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் எழுதத் துணிந்தமை "எண்ணித் துணிக கருமம்....." எனும் குறள் வரிகளிற்கேற்ப ஆசிரியர் தனது கருத்தில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துரைக்கின்றது.
வலிமை மிக்கவன் தனது எதிரி தன்னைப் பற்றி ஏதாவது உரைக்கும்பொழுது தனது எதிரியை பழிவாங்குவதாக எண்ணி அவனது வலிமை குறைந்த அயலவனை பழிவாங்குவது போல் இலங்கையில் மலையகத் தமிழர்களிற்கெதிராக 1939ல் நாவலப்பிட்டியில் ஏற்பட்ட முதலாவது இனக்கலவரத்தையும் அதன்நீட்சியாக தொடர்ந்து வந்த அரசுகள் ஏற்படுத்திய சட்டங்கள், ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் வரை பல விடயங்களை சுட்டிக்காட்டி அவற்றால் ஏதுமறியா அப்பாவி மக்கள் வஞ்சிக்கப்பட்ட விதத்தையும் வலியுடன் வெளிக்காட்டியுள்ளார்.
தேசங்கள் என்றும் தமது நலன்களுக்கே முன்னுரிமை வழங்கும் எனும் உண்மையை 'கச்சத்தீவு' இலங்கைக்கு வழங்கப்பட்ட வரலாற்றினூடாக இந்நூல் அழகாக வெளிக்காட்டியுள்ளது, வடக்கு கிழக்கை ஆதாரமாகக் கொண்ட மக்களும் வரலாற்றிலிருந்து எதிர்கால நகர்வு தொடர்பான பாடங்களைக் கற்க வேண்டுமென்பதனை இது வலியுறுத்துகின்றது.
இதற்கப்பால், தலைமுறை தலைமுறையாக உரிமைகள் மறுக்கப்பட்டு, இழக்கப்பட்டு,வாய்ப்புகளின்றி, தேசங்களாலும் தேசிய இனங்களாலும் பந்தாடப்பட்ட மக்கள் தங்களை ஏன் மலையகத் தமிழர் என ஓர் தனித்தன்மையுள்ள இனமாகக் காட்ட வேண்டிய அவசியமேற்பட்டதையும் அதற்கான காரணங்களையும் வெளிக்கொணரும் இந்நூல் வரலாற்றை கற்கத் தூண்டுபவர்களிற்கும் வரலாற்றினூடே பாடங்களை கற்க வேண்டிய அவசியமுள்ளவர்களிற்கும் ஓர் பிரதான உசாத்துணையாகவே உள்ளது என்றால் மிகையல்ல.
வரலாற்றில் மலையகத்தை தளமாகக் கொண்ட தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மறைக்கப்படக்கூடாதவை மட்டுமல்ல அது மன்னிக்கப்பட முடியாதவையுமாகும்.
குறிப்பு :- அனைவருக்கும் பயனுள்ள இந்நூலை இலங்கையிலுள்ள பல புத்தக நிலையங்களில் வாங்குவதற்குரிய வசதிகள் உள்ளன. அனைத்து விடயங்களையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ள இந்நூலின் ஓர் பிரதியை தனிப்பட்ட வகையில் கொள்வனவு செய்வதன் மூலம் எம்மவரை நாமே ஊக்குவிக்க முதற்காரணியாக அமைவோம்.
Sarawanan Komathi Nadarasa
Thanks

Pragash Sinnarajah

கள்ளத்தோணி புத்தகத்தை இவ்வாரம் கொழும்பு BMICH இல் புத்தக விற்பனை மற்றும் கண்காட்சியில் வாங்கி, ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.
முன்னர் நான் அறிந்திராத விபரங்களும் இதில் இருந்தன. குறிப்பாக, 'ப்ரஸ்கேர்டில்' பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
83 கலவரங்களைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்ந்து, அதனால் தமது அடையாளங்களைத் தொலைத்து விட்டவர்களில் சிலரைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.
இதிலுள்ள 23 கட்டுரைகளும் முக்கியமானவை.
என்னை மிகவும் திருப்திப்படுத்திய மிகச் சமீபத்திய வாசிப்பு இது.

Pathmanathan Mahadevah

Sunday, August 9, 2020

ஸ்ரீ ருத்ரத்தில் மஹிமை

:


ஜாபாலோபனிஷத்தில் எதை ஜெபித்தால் மோக்ஷம் அடையலாம் என்ற கேள்விக்கு ருத்ரம் ஜெபித்தால் மோக்ஷம் அடையலாம் என்ற பதில் காணப்படுகிறது.

ருத்ரம் கேட்பது எத்தனை சிறந்ததோ ருத்ரத்தின் உயர்வைக் கேட்பது கூட அதே அளவு சிறப்பு வாய்ந்தது. அதனைக் கூறிக் கொண்டிருந்தால் பரமேஸ்வரன் ஆனந்தமடைவான்.

கர்ம காண்டத்திற்கும் ஞான காண்டதிற்கும் பயன்படுவதற்கு ஏற்றாற்போல் வேதத்திற்கு ஹிருதயமாக ருத்ரத்தை வைத்துள்ளார்கள்.

* "யஜுஷாம் ஸாரம்" என்பதால் ருத்ரம் யஜுர் வேதத்தின் ஸாரமாகும்.

* சாதாதப ஸ்மிருதியில்

"மத்யபானம் செய்தாலும் குருதாரகமனம் ஸ்வர்ணஸ்தேயம் ப்ரஹ்மஹத்யை இவற்றையெல்லாம் செய்தாலும் விபூதி தாரணம் கொண்டு ருத்ரத்தை ஜபம் செய்கிறவன் ஸமஸ்த பாவங்களிருந்து விடுபடுகிறான்"

* அத்ரி ஸ்மிருதியில்

மஹாபாபங்களை செய்தவனும் ருத்ர பாராயணம் மிக சிறந்தது என்று அறிந்து பதினொரு முறை ஜபிப்பதால் அந்த பாபங்களில் இருந்து விடுபடுகிறான் இதில் ஐயமில்லை

*யாக்ஞவல்ய ஸ்மிருதி

ஸுரபானம் செய்தவனும் ஸ்வர்ணஸ்தேயம் செய்தவனும் தண்ணீரில் இருந்து கொண்டு ருத்ரமும் புருஷ சூக்தமும் ஜபிப்பதால் எல்லா பாபங்களில் இருந்து விடுபடுகிறான்

* சத ருத்ரேண இதி’ என்று. ‘சத ருத்ரம் ஜபம் செய்தால் சித்தம் சுத்தமாகி மோட்சம் கிட்டும்’ என்கிறார்.

* வேதம் முழுவதும் ஒரு தடவை ஜபம் செய்வதால் அந்த பகலிலேயே சுத்தி அடைவான் ஆனால் ருத்ரத்தை ஜபிப்பதால் அந்த க்ஷணமே சுத்தியடைந்துவிடுவான்.

* மஹாபாரதத்தில் "வேதேசாஸ்ய விஞ்ஞான சதருத்ரீய முத்தமம்" மற்ற வேத பகுதிகளை விட ருத்ரம் உத்தமானது

அநுஸாசனிக பருவத்தில் காலையில் எழுந்து சுத்தமாக இருந்து அஞ்சலி பந்தத்துடன் ருத்ரத்தை ஜபிக்கின்றவன் அடைய முடியாது ஒன்றுமில்லை

* அவிமுக்தம் மம க்ஷேத்ரம் மந்நாம பரமம் சுபம்
சதருத்ரீய ஜாபித்வம் ததா சன்யாச முத்தமம்!’
அவிமுக்தத் தலத்தில் மரணமடைந்தவன், சன்னியாசம் ஏற்றுக் கொண்டவன், சத ருத்ரீயம் ஜபம் செய்பவன் – இவர்கள் மோட்சத்தை அடைவார்கள்’ என்று கூறப்படுகிறது. சத ருத்ரீயத்தின் பெருமை எவ்வளவு உயர்ந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது.

* யார் சத ருத்ரீயத்தை நிரந்தரம் அனுஷ்டானம் செய்வாரோ அவருக்கு ருத்ர க்ரந்தி பேதனம் நிகழ்ந்து கைவல்யத்தை அடைவார். சத ருத்ரீய ஜபம் சகல பாவங்களையும் பஸ்மம் செய்ய வல்லது என்பது பராசர புராணம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள விஷயம்.

* ததோ பூத ப்ரேத பிசாச பத்த ப்ரஹ்ம ராக்ஷச யக்ஷ யமதூத சாகினீ டாகினீ சர்வ ஸ்வாபத தஸ்கர ஜ்வராத் யுபத்ரவாத்!’ என்று மஹா ந்யாசத்தில் கூறப்பட்டுள்ளது.

* சத ருத்ரீய சன்யஸ்து’ – சத ருத்ரீயம் மட்டும் படிக்க வேண்டுமாம். பிரணவத்திற்கு எத்தனை முக்கியத்துவமோ சத ருத்ரீயத்திற்கும் அத்தனை முக்கியத்துவம் கூறப்படுகிறது.

* ஆயிரம் பிராயச்சித்த கர்மாக்களை விட ஒரு ருத்ர அத்யாயம் எத்தனையோ உயர்ந்தது. பிராயஸ்சித்த செயல்களால் செய்த பாவம் தீருமே தவிர, மீண்டும் பாவம் செய்ய வேண்டுமென்ற குணம் மாறாது. ருத்ர அத்யாயம் அதைச் செய்யக் கூடியது.

* ருத்ரத்தை யக்ஞம் போன்ற செயல்களிலும், உபாசனைகளிலும் ஏன் பயன்படுத்துகிறோம்? ‘இஷ்டப் ப்ராப்தி. அனிஷ்ட பரிஹாரம்’ ஏற்படுவதற்காக. அதாவது விரும்பியவை கிடைப்பதற்கும், விருப்பமில்லாதவை விலகுவதற்கும்

* நிரந்தரம் சிவனை பூஜிப்பவர்களைப் பார்த்து வியாதிகளும் பாவங்களும் உபத்திரவங்களும் பூத பிரேத பிசாசுகளும் விலகி நின்று பயம் கொள்ளும். ‘சர்வே ஜ்வலந்தம் பஸ்யந்து’ – அவற்றுக்கு இவர்கள் அக்னி ஜ்வாலை போல் தென்படுவார்களாம்

* சிவனை தியானித்து சத ருத்ரீயம் படித்தால் பூமியிலுள்ள அனைத்து செல்வத்தையும் சிவனுக்கு அர்ப்பணித்த புண்ணியம் கிடைக்கும். ஒரு முறை ருத்ரம் ஜபம் செய்தால் பூமியிலுள்ள சகல பொருட்களாலும் சிவனை பூஜித்த பலன் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்.

इडा देवहूर्मनुर्यज्ञनीर्बृहस्पतिरुक्थामदानि
शसिषद्विश्वेदेवाः सूक्तवाचः पृथिवीमातर्मा
मा हिसीर्मधु मनिष्ये मधु जनिष्ये मधु वक्ष्यामि
मधु वदिष्यामि मधुमतीं देवेभ्यो वाचमुद्यास
शुश्रूषेण्यां मनुष्येभ्यस्तं मा देवा अवन्तु
शोभायै पितरोऽनुमदन्तु ॥

The three stages that people go through in a time of crisis:

Cecile G. Tamura

Emergency, Regression, and Recovery.

In this chaotic year, many brands and businesses are relying on adrenaline only. Organizations can only run on those fumes for so long. Adrenaline-based speed can lead to burnout.

In the beginning, when the emergency becomes clear, team energy rises, and performance goes up. Almost all of us have unknown reserves. As the executives’ experiences reflect, this reaction feels full of purpose, and much gets done. Leaders tend to become the best version of themselves in this phase, and teams instinctively pull together and become highly productive. Few people question the leaders’ authority, and groups work in hectic but harmonious ways. The urgency created by the shock paves the way for rapid decision-making and turbocharges teams’ bias for action.

Then the second phase hits a regression phase, where people get tired, lose their sense of purpose, start fighting about the small stuff, and forget to do basic things like eat or drink — or they eat and drink too much.

The concept of regression comes from developmental psychology and describes how people roll back to a less mature stage when faced with pressure. Regression is one of the mind’s ways to defend itself from confusion and insecurity by retreating to an emotional comfort zone.

From combat psychology in particular, we know that regression is the most dangerous phase for teams. Soldiers' most stressful events don’t involve dangerous missions that require courage and action. They actually involve waiting: being in the middle of nowhere on a post, repairing equipment and handling administrative tasks, and being unable to use their particular skills. It turns out that boredom, lack of new experiences, and monotony can be much more stressful than combat.

For a leader, a crisis can be both the finest hour and the darkest day. Teams will remember their actions and decisions — good and bad — for years. So, as you navigate the waves of the crisis, remember that each phase requires a different approach. Sometimes the phases don’t come in a neat sequence, so think of them as currents and counter-currents speeding up or hindering your team’s progress.

Yes, you can succeed at first by leading from the front line. But after the first few weeks of emergency, take a step back and ensure your team gets through the inevitable regression phase. This phase is uncomfortable but also beneficial because the conflicts in the group can raise the most challenging questions, bring forth new answers, and reset expectations to more realistic levels. Only then can you start charting the road to recovery and emerge from the crisis as a stronger team and company.

அபூர்வ நக்ஷத்திரங்கள் பற்றிய முழு ரகசியங்கள்.

 நக்ஷசத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் சந்திரன் எந்த இடத்தில் நிற்கின்றானோ அந்த இடத்தை நக்ஷ்சத்திரம் எனக்குறிப்பிடுவது வழக்கம்.
நட்சத்திர மண்டலம் 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது,அவைகளே 27 நட்சத்திரங்களாகும். 27 நட்சத்திரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நட்சத்திர பெயர்கள்
***********************

1.அஸ்வினி 2. பரணி 3.கிருத்திகை 4.ரோஹிணி 5.மிருகசீரிடம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம்

10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்தம் 14.சித்திரை 15.ஸ்வாதி 16.விசாகம் 17. அனுசம் 18. கேட்டை

19.மூலம் 20.பூராடம் 21.உத்திராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27. ரேவதி

நட்சத்திர வடிவம்
*******************

அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - யோனி, அடுப்பு,
முக்கோணம்
கிருத்திகை - கத்தி, கற்றை, வாள்,
தீஜ்வாலை
ரோஹிணி - தேர், வண்டி, கோயில்,
ஆலமரம், ஊற்றால், சகடம்
மிருகசீரிடம் - மான் தலை,
தேங்கைக்கண்
திருவாதிரை - மனித தலை, வைரம்,
கண்ணீர்துளி
புனர்பூசம் - வில்
பூசம் - புடலம்பூ, அம்புக்கூடு,
பசுவின்மடி
ஆயில்யம் - சர்ப்பம்,அம்மி
மகம் - வீடு,பல்லக்கு,நுகம்
பூரம் - கட்டில்கால், கண்கள்,
அத்திமரம், சதுரம், மெத்தை
உத்திரம் - கட்டில்கால், கம்பு, குச்சி,
மெத்தை
ஹஸ்தம் - கை
சித்திரை - முத்து,புலிக்கண்
ஸ்வாதி - பவளம்,தீபம்
விசாகம் - முறம், தோரணம், குயவன் சக்கரம்
அனுசம் - குடை, முடப்பனை,
தாமரை, வில்வளசல்
கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டி
மூலம் - அங்குசம்,சிங்கத்தின்
வால், பொற்காளம்,
யானையின் துதிக்கை
பூராடம் - கட்டில்கால்
உத்திராடம் - கட்டில்கால்
திருவோணம் - முழக்கோல், மூன்று.
பாதச்சுவடு,அம்பு
அவிட்டம் - மிருதங்கம்,உடுக்கை
சதயம் - பூங்கொத்து,
மூலிகைகொத்து
பூரட்டாதி - கட்டில்கால்
உத்திரட்டாதி - கட்டில்கால்
ரேவதி - மீன்,படகு

நட்சத்திரப்பெயர்களுக்குரிய தமிழ் அர்த்த்ம்.
************************************************

அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - தாங்கிப்பிடிப்பது
கிருத்திகை - வெட்டுவது
ரோஹிணி - சிவப்பானது
மிருகசீரிடம் - மான் தலை
திருவாதிரை - ஈரமானது
புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி
பூசம் - வளம் பெருக்குவது
ஆயில்யம் - தழுவிக்கொள்வது
மகம் - மகத்தானது
பூரம் - பாராட்ட த்தகுந்தது
உத்திரம் - சிறப்பானது
ஹஸ்தம் - கை
சித்திரை - ஒளி வீசுவது
ஸ்வாதி - சுதந்தரமானது
விசாகம் - பிளவுபட்டது
அனுசம் - வெற்றி
கேட்டை - மூத்தது
மூலம் - வேர்
பூராடம் - முந்தைய வெற்றி
உத்திராடம் - பிந்தைய வெற்றி
திருவோணம் - படிப்பறிவு உடையது,
காது
அவிட்டம் - பணக்காரன்
சதயம் - நூறு மருத்துவர்கள்
பூரட்டாதி - முன் மங்கள பாதம்
உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்
ரேவதி - செல்வம் மிகுந்தது

நட்சத்திர அதிபதிகள்.
************************

அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கிருத்திகை - சூரியன்
ரோஹிணி - சந்திரன்
மிருகசீரிடம் - செவ்வாய்
திருவாதிரை - ராஹு
புனர்பூசம் - குரு
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
ஸ்வாதி - ராஹு
விசாகம் - குரு
அனுசம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராஹு
பூரட்டாதி - குரு
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்
*****************************

அஸ்வினி - சரம்
பரணி - ஸ்திரம்
கிருத்திகை - உபயம்
ரோஹிணி - சரம்
மிருகசீரிடம் - ஸ்திரம்
திருவாதிரை - உபயம்
புனர்பூசம் - சரம்
பூசம் - ஸ்திரம்
ஆயில்யம் - உபயம்
மகம் - சரம்
பூரம் - ஸ்திரம்
உத்திரம் - உபயம்
ஹஸ்தம் - சரம்
சித்திரை - ஸ்திரம்
ஸ்வாதி - உபயம்
விசாகம் - சரம்
அனுசம் - ஸ்திரம்
கேட்டை - உபயம்
மூலம் - சரம்
பூராடம் - ஸ்திரம்
உத்திராடம் - உபயம்
திருவோணம் - சரம்
அவிட்டம் - ஸ்திரம்
சதயம் - உபயம்
பூரட்டாதி - சரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்
ரேவதி - உபயம்

மூலாதி நட்சத்திரப்பிரிவுகள்
*******************************

அஸ்வினி - தாது
பரணி - மூலம்
கிருத்திகை - ஜீவன்
ரோஹிணி - தாது
மிருகசீரிடம் - மூலம்
திருவாதிரை - ஜீவன்
புனர்பூசம் - தாது
பூசம் - மூலம்
ஆயில்யம் - ஜீவன்
மகம் - தாது
பூரம் - மூலம்
உத்திரம் - ஜீவன்
ஹஸ்தம் - தாது
சித்திரை - மூலம்
ஸ்வாதி - ஜீவன்
விசாகம் - தாது
அனுசம் - மூலம்
கேட்டை - ஜீவன்
மூலம் - தாது
பூராடம் - மூலம்
உத்திராடம் - ஜீவன்
திருவோணம் - தாது
அவிட்டம் - மூலம்
சதயம் - ஜீவன்
பூரட்டாதி - தாது
உத்திரட்டாதி - மூலம்
ரேவதி - ஜீவன்

பிரம்மாதி நட்சத்திரப்பிரிவுகள்
**********************************

அஸ்வினி - பிரம்மா
பரணி - சிவன்
கிருத்திகை - விஷ்ணு
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சிவன்
திருவாதிரை - விஷ்ணு
புனர்பூசம் - பிரம்மா
பூசம் - சிவன்
ஆயில்யம் - விஷ்ணு
மகம் - பிரம்மா
பூரம் - சிவன்
உத்திரம் - விஷ்ணு
ஹஸ்தம் - பிரம்மா
சித்திரை - சிவன்
ஸ்வாதி - விஷ்ணு
விசாகம் - பிரம்மா
அனுசம் - சிவன்
கேட்டை - விஷ்ணு
மூலம் - பிரம்மா
பூராடம் - சிவன்
உத்திராடம் - விஷ்ணு
திருவோணம் - பிரம்மா
அவிட்டம் - சிவன்
சதயம் - விஷ்ணு
பூரட்டாதி - பிரம்மா
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி - விஷ்ணு

நட்சத்திர திரிதோஷம்
*************************

அஸ்வினி - வாதம்
பரணி - பித்தம்
கிருத்திகை - கபம்
ரோஹிணி - கபம்
மிருகசீரிடம் - பித்தம்
திருவாதிரை - வாதம்
புனர்பூசம் - வாதம்
பூசம் - பித்தம்
ஆயில்யம் - கபம்
மகம் - கபம்
பூரம் - பித்தம்
உத்திரம் - வாதம்
ஹஸ்தம் - வாதம்
சித்திரை - பித்தம்
ஸ்வாதி - கபம்
விசாகம் - கபம்
அனுசம் - பித்தம்
கேட்டை - வாதம்
மூலம் - வாதம்
பூராடம் - பித்தம்
உத்திராடம் - கபம்
திருவோணம் - கபம்
அவிட்டம் - பித்தம்
சதயம் - வாதம்
பூரட்டாதி - வாதம்
உத்திரட்டாதி - பித்தம்
ரேவதி - கபம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்
************************************

அஸ்வினி - தர்மம்
பரணி - ஆர்த்தம்
கிருத்திகை - காமம்
ரோஹிணி - மோட்சம்
மிருகசீரிடம் - மோட்சம்
திருவாதிரை - காமம்
புனர்பூசம் - ஆர்த்தம்
பூசம் - தர்மம்
ஆயில்யம் - தர்மம்
மகம் - ஆர்த்தம்
பூரம் - காமம்
உத்திரம் - மோட்சம்
ஹஸ்தம் - மோட்சம்
சித்திரை - காமம்
ஸ்வாதி - ஆர்த்தம்
விசாகம் - தர்மம்
அனுசம் - தர்மம்
கேட்டை - ஆர்த்தம்
மூலம் - காமம்
பூராடம் - மோட்சம்
உத்திராடம் - மோட்சம்
அபிஜித் - காமம்
திருவோணம் - ஆர்த்தம்
அவிட்டம் - தர்மம்
சதயம் - தர்மம்
பூரட்டாதி - ஆர்த்தம்
உத்திரட்டாதி - காமம்
ரேவதி - மோட்சம்

நட்சத்திர தேவதைகள்
*************************

அஸ்வினி - அஸ்வினி குமாரர்
பரணி - யமன்
கிருத்திகை - அக்னி
ரோஹிணி - பிரஜாபதி
மிருகசீரிடம் - சோமன்
திருவாதிரை - ருத்ரன்
புனர்பூசம் - அதிதி
பூசம் - பிரஹஸ்பதி
ஆயில்யம் - அஹி
மகம் - பித்ருக்கள்
பூரம் - பகன்
உத்திரம் - ஆர்யமான்
ஹஸ்தம் - அர்க்கன்/சாவித்ரி
சித்திரை - விஸ்வகர்மா
ஸ்வாதி - வாயு
விசாகம் - சக்ராக்னி
அனுசம் - மித்ரன்
கேட்டை - இந்திரன்
மூலம் - நைருதி
பூராடம் - அபா
உத்திராடம் - விஸ்வதேவன்
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வாசுதேவன்
சதயம் - வருணன்
பூரட்டாதி - அஜைகபாதன்
உத்திரட்டாதி - அஹிர்புத்தன்யன்
ரேவதி - பூசன்

நட்சத்திர ரிஷிகள்
*********************

அஸ்வினி - காத்யாயனா
பரணி - ரிஷிபத்தன்யா
கிருத்திகை - அக்னிவேஷா
ரோஹிணி - அனுரோஹி
மிருகசீரிடம் - ஸ்வேதயி
திருவாதிரை - பார்கவா
புனர்பூசம் - வாத்ஸாயனா
பூசம் - பரத்வாஜா
ஆயில்யம் - ஜடுகர்ணா
மகம் - வ்யாக்ரபாதா
பூரம் - பராசரா
உத்திரம் - உபசிவா
ஹஸ்தம் - மாண்டவ்யா
சித்திரை - கௌதமா
ஸ்வாதி - கௌண்டின்யா
விசாகம் - கபி
அனுசம் - மைத்ரேயா
கேட்டை - கௌசிகா
மூலம் - குட்சா
பூராடம் - ஹரிதா
உத்திராடம் - கஸ்யபா
அபிஜித் - சௌனகா
திருவோணம் - அத்ரி
அவிட்டம் - கர்கா
சதயம் - தாக்ஷாயணா
பூரட்டாதி - வத்ஸா
உத்திரட்டாதி - அகஸ்தியா
ரேவதி - சந்தாயணா

நட்சத்திர கோத்திரங்கள்
***************************

அஸ்வினி - அகஸ்தியா
பரணி - வஷிஷ்டா
கிருத்திகை - அத்ரி
ரோஹிணி - ஆங்கீரஸா
மிருகசீரிடம் - புலஸ்தியா
திருவாதிரை - புலஹா
புனர்பூசம் - க்ரது
பூசம் - அகஸ்தியா
ஆயில்யம் - வஷிஷ்டா
மகம் - அத்ரி
பூரம் - ஆங்கீரஸா
உத்திரம் - புலஸ்தியா
ஹஸ்தம் - புலஹா
சித்திரை - க்ரது
ஸ்வாதி - அகஸ்தியா
விசாகம் - வஷிஷ்டா
அனுசம் - அத்ரி
கேட்டை - ஆங்கீரஸா
மூலம் - புலஸ்தியா
பூராடம் - புலஹா
உத்திராடம் - க்ரது
அபிஜித் - அகஸ்தியா
திருவோணம் - வஷிஷ்டா
அவிட்டம் - அத்ரி
சதயம் - ஆங்கீரஸா
பூரட்டாதி - புலஸ்தியா
உத்திரட்டாதி - புலஹா
ரேவதி - க்ரது

அந்தரங்க பஹிரங்க நட்சத்திரங்கள்.
****************************************

அஸ்வினி - பஹிரங்கம்
பரணி - பஹிரங்கம்
கிருத்திகை - அந்தரங்கம்
ரோஹிணி - அந்தரங்கம்
மிருகசீரிடம் - அந்தரங்கம்
திருவாதிரை - அந்தரங்கம்
புனர்பூசம் - பஹிரங்கம்
பூசம் - பஹிரங்கம்
ஆயில்யம் - பஹிரங்கம்
மகம் - அந்தரங்கம்
பூரம் - அந்தரங்கம்
உத்திரம் - அந்தரங்கம்
ஹஸ்தம் - அந்தரங்கம்
சித்திரை - பஹிரங்கம்
ஸ்வாதி - பஹிரங்கம்
விசாகம் - பஹிரங்கம்
அனுசம் - அந்தரங்கம்
கேட்டை - அந்தரங்கம்
மூலம் - அந்தரங்கம்
பூராடம் - அந்தரங்கம்
உத்திராடம் - பஹிரங்கம்
திருவோணம் - பஹிரங்கம்
அவிட்டம் - அந்தரங்கம்
சதயம் - அந்தரங்கம்
பூரட்டாதி - அந்தரங்கம்
உத்திரட்டாதி - அந்தரங்கம்
ரேவதி - பஹிரங்கம்

நட்சத்திரங்களூம் தானங்களும்
**********************************

அஸ்வினி - பொன் தானம்
பரணி - எள் தானம்
கிருத்திகை - அன்ன தானம்
ரோஹிணி - பால் தானம்
மிருகசீரிடம் - கோதானம்
திருவாதிரை - எள் தானம்
புனர்பூசம் - அன்ன தானம்
பூசம் - சந்தன தானம்
ஆயில்யம் - காளைமாடு தானம்
மகம் - எள் தானம்
பூரம் - பொன் தானம்
உத்திரம் - எள் தானம்
ஹஸ்தம் - வாகன தானம்
சித்திரை - வஸ்திர தானம்
ஸ்வாதி - பணம் தானம்
விசாகம் - அன்ன தானம்
அனுசம் - வஸ்திர தானம்
கேட்டை - கோ தானம்
மூலம் - எருமை தானம்
பூராடம் - அன்ன தானம்
உத்திராடம் - நெய் தானம்
திருவோணம் - வஸ்திர தானம்
அவிட்டம் - வஸ்திர தானம்
சதயம் - சந்தன தானம்
பூரட்டாதி - பொன் தானம்
உத்திரட்டாதி - வெள்ளாடு தானம்
ரேவதி - பொன் தானம்

நட்சத்திர வீதி
****************

அஸ்வினி - நாக வீதி
பரணி - நாக வீதி
கிருத்திகை - நாக வீதி
ரோஹிணி - கஜ வீதி
மிருகசீரிடம் - கஜ வீதி
திருவாதிரை - கஜ வீதி
புனர்பூசம் - ஐராவத வீதி
பூசம் - ஐராவத வீதி
ஆயில்யம் - ஐராவத வீதி
மகம் - ஆர்ஷப வீதி
பூரம் - ஆர்ஷப வீதி
உத்திரம் - ஆர்ஷப வீதி
ஹஸ்தம் - கோ வீதி
சித்திரை - கோ வீதி
ஸ்வாதி - கோ வீதி
விசாகம் - ஜாரத்கவீ வீதி
அனுசம் - ஜாரத்கவீ வீதி
கேட்டை - ஜாரத்கவீ வீதி
மூலம் - அஜ வீதி
பூராடம் - அஜ வீதி
உத்திராடம் - அஜ வீதி
திருவோணம் - மிருக வீதி
அவிட்டம் - மிருக வீதி
சதயம் - மிருக வீதி
பூரட்டாதி - வைஷ்வானரீ வீதி
உத்திரட்டாதி - வைஷ்வானரீ வீதி
ரேவதி - வைஷ்வானரீ வீதி

நட்சத்திர வீதி(வேறு)
************************

அஸ்வினி - பசு வீதி
பரணி - நாக வீதி
கிருத்திகை - நாக வீதி
ரோஹிணி - யானை வீதி
மிருகசீரிடம் - யானை வீதி
திருவாதிரை - யானை வீதி
புனர்பூசம் - ஐராவத வீதி
பூசம் - ஐராவத வீதி
ஆயில்யம் - ஐராவத வீதி
மகம் - வ்ரிஷப வீதி
பூரம் - வ்ரிஷப வீதி
உத்திரம் - வ்ரிஷப வீதி
ஹஸ்தம் - ஆடு வீதி
சித்திரை - ஆடு வீதி
ஸ்வாதி - நாக வீதி
விசாகம் - ஆடு வீதி
அனுசம் - மான் வீதி
கேட்டை - மான் வீதி
மூலம் - மான் வீதி
பூராடம் - தகன வீதி
உத்திராடம் - தகன வீதி
திருவோணம் - கன்றுகுட்டி வீதி
அவிட்டம் - கன்றுகுட்டி வீதி
சதயம் - கன்றுகுட்டி வீதி
பூரட்டாதி - பசு வீதி
உத்திரட்டாதி - தகன வீதி
ரேவதி - பசு வீதி

நட்சத்திரங்களும் லோஹபாதங்களும்
*****************************************


அஸ்வினி - ஸ்வர்ண பாதம்
பரணி - ஸ்வர்ண பாதம்
கிருத்திகை - இரும்பு பாதம்
ரோஹிணி - இரும்பு பாதம்
மிருகசீரிடம் - இரும்பு பாதம்
திருவாதிரை - வெள்ளி பாதம்
புனர்பூசம் - வெள்ளி பாதம்
பூசம் - வெள்ளி பாதம்
ஆயில்யம் - வெள்ளி பாதம்
மகம் - வெள்ளி பாதம்
பூரம் - வெள்ளி பாதம்
உத்திரம் - வெள்ளி பாதம்
ஹஸ்தம் - வெள்ளி பாதம்
சித்திரை - வெள்ளி பாதம்
ஸ்வாதி - வெள்ளி பாதம்
விசாகம் - வெள்ளி பாதம்
அனுசம் - வெள்ளி பாதம்
கேட்டை - தாமிர பாதம்
மூலம் - தாமிர பாதம்
பூராடம் - தாமிர பாதம்
உத்திராடம் - தாமிர பாதம்
திருவோணம் - தாமிர பாதம்
அவிட்டம் - தாமிர பாதம்
சதயம் - தாமிர பாதம்
பூரட்டாதி - தாமிர பாதம்
உத்திரட்டாதி - தாமிர பாதம்
ரேவதி - ஸ்வர்ண பாதம்

நட்சத்திர குணம்
*******************

அஸ்வினி - க்ஷிப்ரம்/லகு
பரணி - உக்கிரம்/குரூரம்
கிருத்திகை - மிஸ்ரம்/சாதாரணம்
ரோஹிணி - ஸ்திரம்/துருவம்
மிருகசீரிடம் - மிருது/மைத்ரம்
திருவாதிரை - தாருணம்/தீக்ஷணம்
புனர்பூசம் - சரம்/சலனம்
பூசம் - க்ஷிப்ரம்/லகு
ஆயில்யம் - தாருணம்/தீக்ஷணம்
மகம் - உக்கிரம்/குரூரம்
பூரம் - உக்கிரம்/குரூரம்
உத்திரம் - ஸ்திரம்/துருவம்
ஹஸ்தம் - க்ஷிப்ரம்/லகு
சித்திரை - மிருது/மைத்ரம்
ஸ்வாதி - சரம்/சலனம்
விசாகம் - மிஸ்ரம்/சாதாரணம்
அனுசம் - மிருது/மைத்ரம்
கேட்டை - தீக்ஷணம்/தாருணம்
மூலம் - தீக்ஷணம்/தாருணம்
பூராடம் - உக்கிரம்/குரூரம்
உத்திராடம் - ஸ்திரம்/துருவம்
திருவோணம் - சரம்/சலனம்
அவிட்டம் - சரம்/சலனம்
சதயம் - சரம்/சலனம்
பூரட்டாதி - உக்கிரம்/குரூரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்/துருவம்
ரேவதி - மிருது/மைத்ரம்

(க்ஷிப்ரம்-துரிதமானது) (உக்கிரம்,குரூரம்-கொடியது)
(சரம், சலனம்-அசைகின்றது)
(ஸ்திரம்,துருவம்- அசையாதது) (தாருணம்-கொடூரமானது) (லகு-கனமில்லாதது,சிறியது)
(தீக்ஷணம்-கூர்மையானது)

நட்சத்திர கணம்
******************

அஸ்வினி - தேவம்
பரணி - மனுசம்
கிருத்திகை - ராக்ஷசம்
ரோஹிணி - மனுசம்
மிருகசீரிடம் - தேவம்
திருவாதிரை - மனுசம்
புனர்பூசம் - தேவம்
பூசம் - தேவம்
ஆயில்யம் - ராக்ஷசம்
மகம் - ராக்ஷசம்
பூரம் - மனுசம்
உத்திரம் - மனுசம்
ஹஸ்தம் - தேவம்
சித்திரை - ராக்ஷசம்
ஸ்வாதி - தேவம்
விசாகம் - ராக்ஷசம்
அனுசம் - தேவம்
கேட்டை - ராக்ஷசம்
மூலம் - ராக்ஷசம்
பூராடம் - மனுசம்
உத்திராடம் - மனுசம்
திருவோணம் - தேவம்
அவிட்டம் - ராக்ஷசம்
சதயம் - ராக்ஷசம்
பூரட்டாதி - மனுசம்
உத்திரட்டாதி - மனுசம்
ரேவதி - தேவம்

தேவம்- அழகு, ஈகைகுணம், விவேகம், நல்லொழுக்கம், அல்ப போஜனம், பேரறிவு

மனுசம்- அபிமானம், செல்வமுடைமை, கிருபை, அதிகாரம், பந்துக்களை பாதுகாத்தல்

ராக்ஷசம்- பராக்கிரமம், அதிமோகம், கலகப்பிரியம், துக்கம், தீயசெயல், பயங்கர வடிவம்

தாமசாதி நட்சத்திர குணங்கள்
**********************************

அஸ்வினி - தாமசம்
பரணி - ராஜசம்
கிருத்திகை - ராஜசம்
ரோஹிணி - ராஜசம்
மிருகசீரிடம் - தாமசம்
திருவாதிரை - தாமசம்
புனர்பூசம் - சாத்வீகம்
பூசம் - தாமசம்
ஆயில்யம் - தாமசம்
மகம் - தாமசம்
பூரம் - ராஜசம்
உத்திரம் - ராஜசம்
ஹஸ்தம் - ராஜசம்
சித்திரை - தாமசம்
ஸ்வாதி - தாமசம்
விசாகம் - சாத்வீகம்
அனுசம் - தாமசம்
கேட்டை - சாத்வீகம்
மூலம் - தாமசம்
பூராடம் - ராஜசம்
உத்திராடம் - ராஜசம்
திருவோணம் - ராஜசம்
அவிட்டம் - தாமசம்
சதயம் - தாமசம்
பூரட்டாதி - சாத்வீகம்
உத்திரட்டாதி - தாமசம்
ரேவதி - சாத்வீகம்

சாத்வீகம்-நுட்பமான புத்தி, ஞானம், தெய்வபக்தி, குருபக்தி, தீய செயல்களில் ஈடுபடாதிருத்தல்

ராஜசம்- உயிர்கள் மீது இரக்கம், நல்லறிவு, இனிமையான பேச்சு,
கல்வியில் தேர்ச்சி, இன்பசுகம், பரோபகாரம், யாருக்கும் தீங்கு நினையாமை, தான தர்மம் செய்வதில் விருப்பம், நடுநிலையோடு செயல்படுதல்

தாமசம்- அதிக தூக்கம், பொய் பேசுதல், நிதானமின்மை, சோம்பேறித்தனம், பாவசிந்தை, முன்யோசனை இல்லாமை

நட்சத்திர யோனி
*******************

அஸ்வினி - ஆண் குதிரை
பரணி - பெண் யானை
கிருத்திகை - பெண் ஆடு
ரோஹிணி - ஆண் நாகம்
மிருகசீரிடம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்திரம் - ஆண் எருது
ஹஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
ஸ்வாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுசம் - பெண் மான்
கேட்டை - ஆண் மான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - பெண் கீரி
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பெண் பசு
ரேவதி - பெண் யானை

நட்சத்திர கோத்திரங்கள்(வேறு)
***********************************

அஸ்வினி - மரீசா
பரணி - மரீசா
கிருத்திகை - மரீசா
ரோஹிணி - மரீசா
மிருகசீரிடம் - அத்ரி
திருவாதிரை - அத்ரி
புனர்பூசம் - அத்ரி
பூசம் - அத்ரி
ஆயில்யம் - வஷிஷ்டா
மகம் - வஷிஷ்டா
பூரம் - வஷிஷ்டா
உத்திரம் - வஷிஷ்டா
ஹஸ்தம் - ஆங்கீரஸா
சித்திரை - ஆங்கீரஸா
ஸ்வாதி - ஆங்கீரஸா
விசாகம் - ஆங்கீரஸா
அனுசம் - புலஸ்தியா
கேட்டை - புலஸ்தியா
மூலம் - புலஸ்தியா
பூராடம் - புலஸ்தியா
உத்திராடம் - புலஹா
திருவோணம் - புலஹா
அவிட்டம் - புலஹா
சதயம் - க்ரது
பூரட்டாதி - க்ரது
உத்திரட்டாதி - க்ரது
ரேவதி - க்ரது

நட்சத்திர திசைகள்
**********************

அஸ்வினி - கிழக்கு
பரணி - கிழக்கு
கிருத்திகை - கிழக்கு
ரோஹிணி - கிழக்கு
மிருகசீரிடம் - கிழக்கு
திருவாதிரை - தென்கிழக்கு
புனர்பூசம் - தென்கிழக்கு
பூசம் - தென்கிழக்கு
ஆயில்யம் - தெற்கு
மகம் - தெற்கு
பூரம் - தெற்கு
உத்திரம் - தெற்கு
ஹஸ்தம் - தென்மேற்கு
சித்திரை - தென்மேற்கு
ஸ்வாதி - மேற்கு
விசாகம் - மேற்கு
அனுசம் - மேற்கு
கேட்டை - மேற்கு
மூலம் - வடமேற்கு
பூராடம் - வடமேற்கு
உத்திராடம் - வடக்கு
திருவோணம் - வடக்கு
அவிட்டம் - வடக்கு
சதயம் - வடக்கு
பூரட்டாதி - வடக்கு
உத்திரட்டாதி - வடக்கு
ரேவதி - வடக்கு

நட்சத்திர திசைகள்(வேறு)
*****************************

அஸ்வினி - கிழக்கு
பரணி - தென்கிழக்கு
கிருத்திகை - தெற்கு
ரோஹிணி - தென்மேற்கு
மிருகசீரிடம் - மேற்கு
திருவாதிரை - வடமேற்கு
புனர்பூசம் - வடக்கு
பூசம் - வடகிழக்கு
ஆயில்யம் - கிழக்கு
மகம் - தென்கிழக்கு
பூரம் - தெற்கு
உத்திரம் - தென்மேற்கு
ஹஸ்தம் - மேற்கு
சித்திரை - வடமேற்கு
ஸ்வாதி - வடக்கு
விசாகம் - வடகிழக்கு
அனுசம் - கிழக்கு
கேட்டை - தென்கிழக்கு
மூலம் - தெற்கு
பூராடம் - தென்மேற்கு
உத்திராடம் - மேற்கு
திருவோணம் - வடமேற்கு
அவிட்டம் - வடக்கு
சதயம் - வடகிழக்கு
பூரட்டாதி - கிழக்கு
உத்திரட்டாதி - தென்கிழக்கு
ரேவதி - தெற்கு

நட்சத்திரங்களும் வணங்க வேண்டிய தேவதைகளும்.
************************************************************

அஸ்வினி - அஸ்வினி தேவதைகள்
பரணி - சிவன்
கிருத்திகை - சுப்பிரமணியன்
ரோஹிணி - ஸ்ரீக்ருஷ்ணன்
மிருகசீரிடம் - நாக தேவதைகள்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - ஸ்ரீராமன்
பூசம் - சுப்பிரமணியன்
ஆயில்யம் - நாக தேவதைகள்
மகம் - சூரியன்,நரசிம்மன்
பூரம் - சூரியன்
உத்திரம் - சாஸ்தா,தன்வந்த்ரி
ஹஸ்தம் - மஹாவிஷ்ணு,
ராஜராஜேஷ்வரி
சித்திரை - மஹாலக்ஷ்மி
ஸ்வாதி - மஹாலக்ஷ்மி,ஹனுமன்
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - சிவன்
கேட்டை - ஹனுமன்
மூலம் - கணபதி
பூராடம் - ராஜராஜேஷ்வரி
உத்திராடம் - ஆதித்தியன்
திருவோணம் - மஹாவிஷ்ணு
அவிட்டம் - கணபதி
சதயம் - நாக தேவதைகள்
பூரட்டாதி - வராஹ மூர்த்தி
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி - மஹாவிஷ்ணு

நட்சத்திர அதிதேவதைகள்
******************************

அஸ்வினி - கணபதி,சரஸ்வதி
பரணி - துர்கை
கிருத்திகை - அக்னி தேவன்
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சந்திரன்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - தேவதைகள்
பூசம் - குரு
ஆயில்யம் - ஆதிசேஷன்
மகம் - சுக்கிரன்
பூரம் - பார்வதி
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சாஸ்தா
சித்திரை - விஸ்வகர்மா
ஸ்வாதி - வாயு
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - லக்ஷ்மி
கேட்டை - தேவேந்திரன்
மூலம் - அசுர தேவதைகள்
பூராடம் - வருணன்
உத்திராடம் - ஈஸ்வரன்,கணபதி
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வசுக்கள்,இந்திராணி
சதயம் - யமன்
பூரட்டாதி - குபேரன்
உத்திரட்டாதி - காமதேனு
ரேவதி - சனீஸ்வரன்

நட்சத்திர ஆதியந்த பரம நாழிகை
**************************************

அஸ்வினி - 65
பரணி - 56
கிருத்திகை - 56
ரோஹிணி - 56
மிருகசீரிடம் - 56
திருவாதிரை - 56
புனர்பூசம் - 62
பூசம் - 52
ஆயில்யம் - 56
மகம் - 54
பூரம் - 53
உத்திரம் - 56
ஹஸ்தம் - 57
சித்திரை - 60
ஸ்வாதி - 65
விசாகம் - 61
அனுசம் - 60
கேட்டை - 62
மூலம் - 63 ½
பூராடம் - 62
உத்திராடம் - 55
திருவோணம் - 65 ½
அவிட்டம் - 66 ½
சதயம் - 53 ½
பூரட்டாதி - 66 ½
உத்திரட்டாதி - 63 ½
ரேவதி - 64

நட்சத்திர நாடி
****************

அஸ்வினி - ஆதி
பரணி - மத்யா
கிருத்திகை - அந்த்யா
ரோஹிணி - அந்த்யா
மிருகசீரிடம் - மத்யா
திருவாதிரை - ஆதி
புனர்பூசம் - ஆதி
பூசம் - மத்யா
ஆயில்யம் - அந்த்யா
மகம் - அந்த்யா
பூரம் - மத்யா
உத்திரம் - ஆதி
ஹஸ்தம் - ஆதி
சித்திரை - மத்யா
ஸ்வாதி - அந்த்யா
விசாகம் - அந்த்யா
அனுசம் - மத்யா
கேட்டை - ஆதி
மூலம் - ஆதி
பூராடம் - மத்யா
உத்திராடம் - அந்த்யா
திருவோணம் - அந்த்யா
அவிட்டம் - மத்யா
சதயம் - ஆதி
பூரட்டாதி - ஆதி
உத்திரட்டாதி - மத்யா
ரேவதி - அந்த்யா

நட்சத்திர பஞ்சபக்ஷிகள்
***************************

அஸ்வினி - வல்லூறு
பரணி - வல்லூறு
கிருத்திகை - வல்லூறு
ரோஹிணி - வல்லூறு
மிருகசீரிடம் - வல்லூறு
திருவாதிரை - ஆந்தை
புனர்பூசம் - ஆந்தை
பூசம் - ஆந்தை
ஆயில்யம் - ஆந்தை
மகம் - ஆந்தை
பூரம் - ஆந்தை
உத்திரம் - காகம்
ஹஸ்தம் - காகம்
சித்திரை - காகம்
ஸ்வாதி - காகம்
விசாகம் - காகம்
அனுசம் - கோழி
கேட்டை - கோழி
மூலம் - கோழி
பூராடம் - கோழி
உத்திராடம் - கோழி
திருவோணம் - மயில்
அவிட்டம் - மயில்
சதயம் - மயில்
பூரட்டாதி - மயில்
உத்திரட்டாதி - மயில்
ரேவதி - மயில்

நட்சத்திர பஞ்சபூதங்கள்
***************************

அஸ்வினி - நிலம்
பரணி - நிலம்
கிருத்திகை - நிலம்
ரோஹிணி - நிலம்
மிருகசீரிடம் - நிலம்
திருவாதிரை - நீர்
புனர்பூசம் - நீர்
பூசம் - நீர்
ஆயில்யம் - நீர்
மகம் - நீர்
பூரம் - நீர்
உத்திரம் - நெருப்பு
ஹஸ்தம் - நெருப்பு
சித்திரை - நெருப்பு
ஸ்வாதி - நெருப்பு
விசாகம் - நெருப்பு
அனுசம் - நெருப்பு
கேட்டை - காற்று
மூலம் - காற்று
பூராடம் - காற்று
உத்திராடம் - காற்று
திருவோணம் - காற்று
அவிட்டம் - ஆகாயம்
சதயம் - ஆகாயம்
பூரட்டாதி - ஆகாயம்
உத்திரட்டாதி - ஆகாயம்
ரேவதி - ஆகாயம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்
***************************************

அஸ்வினி - அஸ்வத்தாமன்
பரணி - துரியோதனன்
கிருத்திகை - கார்த்திகேயன்
ரோஹிணி - கிருஷ்ணன்,பீமசேனன்
மிருகசீரிடம் - புருஷமிருகம்
திருவாதிரை - ருத்ரன், கருடன்,
ஆதிசங்கரர், ராமானுஜர்
புனர்பூசம் - ராமன்
பூசம் - பரதன்,தாமரை மலர்,
கிளி
ஆயில்யம் - தர்மராஜா,
லக்ஷ்மணன், சத்ருகணன்,
பலராமன்
மகம் - யமன்,சீதை,அர்ச்சுணன்
பூரம் - பார்வதி, மீனாட்சி,
ஆண்டாள்
உத்திரம் - மஹாலக்ஷ்மி, குரு.
ஹஸ்தம் - நகுலன்-சகாதேவன்,
லவ-குசன்
சித்திரை - வில்வ மரம்
ஸ்வாதி - நரசிம்மர்
விசாகம் - கணேசர்,முருகர்,
அனுசம் - நந்தனம்
கேட்டை - யுதிஸ்திரர்
மூலம் - அனுமன்,ராவணன்
பூராடம் - ப்ருஹஸ்பதி
உத்திராடம் - சல்யன்
திருவோணம் - வாமனன், விபீசனன்,
அங்காரகன்
அவிட்டம் - துந்துபி வாத்தியம்
சதயம் - வருணன்
பூரட்டாதி - கர்ணன், கின்னரன்,
குபேரன்
உத்திரட்டாதி - ஜடாயு,காமதேனு
ரேவதி - அபிமன்யு,சனிபகவான்

நட்சத்திரத்தொகை
*********************

அஸ்வினி - 3
பரணி - 3
கிருத்திகை - 6
ரோஹிணி - 5
மிருகசீரிடம் - 3
திருவாதிரை - 1
புனர்பூசம் - 2
பூசம் - 3
ஆயில்யம் - 6
மகம் - 5
பூரம் - 2
உத்திரம் - 2
ஹஸ்தம் - 5
சித்திரை - 1
ஸ்வாதி - 1
விசாகம் - 2
அனுசம் - 3
கேட்டை - 3
மூலம் - 9
பூராடம் - 4
உத்திராடம் - 4
திருவோணம் - 3
அவிட்டம் - 4
சதயம் - 6
பூரட்டாதி - 2
உத்திரட்டாதி - 2
ரேவதி - 3

நட்சத்திர இருப்பிடம்
***********************

அஸ்வினி - ஊர்
பரணி - மரம்
கிருத்திகை - காடு
ரோஹிணி - காடிச்சால்
மிருகசீரிடம் - கட்டிலின் கீழ்
திருவாதிரை - நிற்கும் தேரின் கீழ்
புனர்பூசம் - நெற்குதிர்
பூசம் - மனை
ஆயில்யம் - குப்பை
மகம் - நெற்கதிர்
பூரம் - வீடு
உத்திரம் - ஜலம்
ஹஸ்தம் - ஜலக்கரை
சித்திரை - வயல்
ஸ்வாதி - பருத்தி
விசாகம் - முற்றம்
அனுசம் - பாழடைந்த காடு
கேட்டை - கடை
மூலம் - குதிரைலாயம்
பூராடம் - கூரை
உத்திராடம் - வண்ணான் துறை
திருவோணம் - கோயில்
அவிட்டம் - ஆலை
சதயம் - செக்கு
பூரட்டாதி - தெரு
உத்திரட்டாதி - அக்னி மூலை வீடு
ரேவதி - பூஞ்சோலை

நட்சத்திர குலம்
******************

அஸ்வினி - வைசியகுலம்
பரணி - நீச்ச குலம்
கிருத்திகை - பிரம்ம குலம்
ரோஹிணி - க்ஷத்திரிய குலம்
மிருகசீரிடம் - வேடர் குலம்
திருவாதிரை - இராட்சச குலம்
புனர்பூசம் - வைசியகுலம்
பூசம் - சூத்திர குலம்
ஆயில்யம் - நீச்ச குலம்
மகம் - க்ஷத்திரிய குலம்
பூரம் - பிரம்ம குலம்
உத்திரம் - சூத்திர குலம்
ஹஸ்தம் - வைசியகுலம்
சித்திரை - வேடர் குலம்
ஸ்வாதி - இராட்சச குலம்
விசாகம் - நீச்ச குலம்
அனுசம் - க்ஷத்திரிய குலம்
கேட்டை - வேடர் குலம்
மூலம் - இராட்சச குலம்
பூராடம் - பிரம்ம குலம்
உத்திராடம் - சூத்திர குலம்
அபிஜித் - வைசியகுலம்
திருவோணம் - நீச்ச குலம்
அவிட்டம் - வேடர் குலம்
சதயம் - இராட்சச குலம்
பூரட்டாதி - பிரம்ம குலம்
உத்திரட்டாதி - சூத்திர குலம்
ரேவதி - க்ஷத்திரிய குல

நட்சத்திர யோனி திரை
சுயாதிகாரம், நற்குணம், தைரியம், அழகு, ஊராதிக்கம், யஜமான் விருப்பம் போல் நடத்தல்

யானை
ராஜ மரியாதை, உடல் வலிமை, போகம், உற்சாகம்

பசு
பெண் மோகம்

ஆடு
விடா முயற்சி,பிரயாணத்தில் விருப்பம்,பிற பெண்கள் மீது மோகம்,பிறருக்கு உதவும் தன்மை,மனித நேயம்,வழக்குரைத்தல்

சர்ப்பம்(பாம்பு)
கோபம்,கொடூரமான பேச்சு,செய்நன்றி இல்லாமை,மந்த புத்தி

சுவானம்(நாய்)
முயற்சி,உற்சாகம்,வீரம்,உறவினருடன் பகை,பக்தி,பெற்றோரிடத்தில் அன்பு

மார்ச்சாரம்(பூனை)
சாமர்த்தியம்,இரக்கமில்லாமை,கெட்டவர் தொடர்பு,உணவில் விருப்பம்

மூக்ஷிகம்(எலி)
அதிக விவேகம்,மிகுந்த செல்வம்,தன்னடக்கம்,சுய நலம்,

சிங்கம்
நற்குணம்,நற்செயல்,குடும்பத்தைப்பாதுகாத்தல்,சுயதர்மம்,சதாச்சாரம்

மஹிசம்(எருமை)
மந்த புத்தி,வெகுஜன தொடர்பு,வெற்றி,ஆசை

வியாக்ரம்(புலி)
முகஸ்துதிக்கு மயங்குதல்,சுயாதிகாரம்,பொருளாசை,உறவுமேன்மை,

மான்
சுதந்திர போக்கு,பொறுமை,உண்மைபேசுதல்,நற்காரியங்கள் செய்தல்,தானதர்மம் செய்தல்,தைரியம்,சொந்தங்கள் மீது பாசம்

வானரம்(குரங்கு)
போகத்தில் விருப்பம்,உலோபக்குணம்,தீயசெயல்,பேராசை,தைரியம்,நல்லோர் தொடர்பு

கீரி பிறருக்கு உதவுதல்,செல்வமுடைமை,பெற்றோரிடத்தில் அன்பு,நல்வழியில் செல்தல்,நன்றி விசுவாசம் இல்லாமை நன்றி நன்றி

- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல் shiva shangar