Search This Blog

Wednesday, May 25, 2016

வீரப்பன்..


வீரப்பனாருக்கு ஒயிலாட்டம் ஆடத்தெரியும்; நாடகங்கள், தெருக்கூத்துகளில் நடித்துள்ளார்; திரைப்படத்துறையில் கூட ஒருமுறை முயற்சி செய்தார்; அதிரடி வேட்டைக்காரனாக இருந்தவர்; எந்த ஒரு மனிதர் போலவும் விலங்கு போலவும் குரலெழுப்பத் தெரியும்; தியானம், சில யோகாசனங்கள் செய்வார்; மரக்கட்டைகளை நுட்பமாக செதுக்கி உருவங்களும் செதுக்குவார்; குறிதவாமல் துல்லியமாக சுடத் தெரியும்;கன்னி வைத்து விலங்குகளைப் பிடிக்கும் நுட்பங்கள் தெரிந்தவர்; பள்ளி பக்கமே போகாதவர் என்றாலும், தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்; விலங்குகள் பறவைகள் நடமாட்டத்தை வைத்தே வேற்றுமனிதர் நடமாட்டத்தையும், காலநிலையையும் கணித்துவிடுவார்; சமையல் தெரியும்; நீச்சலிலும் வல்லவர்; மீன்பிடித்தல், மரமேறுதல், மலையேறுதல், திசையறிதல், எல்லாம் அத்துப்படி; ஒரு நாளைக்கு குறைந்தது 20கிமீ நகர்ந்து கொண்டேயிருப்பவர்; 3000சகிமீ காட்டில் தனியரசு செலுத்தியவர்; வெடிகுண்டு, கையெறி குண்டு, கண்ணிவெடி எல்லாம் செய்யத்தெரிந்தவர்; படைவியூகங்கள் வகுப்பது, படை நகர்வு, உளவு பார்ப்பது, மாறுவேடம் தரித்தல், நேரடி மோதல், தாக்குதல் தொடுப்பது, ஆயுதக் கொள்ளை என ஒரு படைத்தலைவருக்கான அத்தனை குணங்களும் அமையப்பெற்றவர்.
மூலிகை கண்டறிதல், மருந்து தயாரித்தல், பேச்சுத்திறமை, கமுக்கமான பணப் பரிமாற்றம், காட்டுவேளாண்மை, பொருள் கடத்தல், கமுக்கமான தகவல் தொடர்பு என அனைத்தையும் விரல்நுனியில் வைத்திருந்தவர்; இத்தகைய திறமைகள் இருந்ததால்தான் அவரால் 32வருடங்கள், இரு மாநிலக் காவல்துறை மற்றும் வனத்துறை, மத்திய ரிசர்வு படை,உள்நாட்டு வான்கண்கானிப்பு, காட்டுக் கொள்ளையர்கள், அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் அனைவரையும் எதிர்த்து புலிகள் ஆண்ட வன்னி அளவு பெரிய காட்டை ஆளமுடிந்தது;

1990களிலேயே வீரப்பனார் பற்றித் தகவல் தருவோருக்கு நாற்பத்தி நூறாயிரம்(40லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது; கர்நாடக அரசு வீரப்பனாரோடு போராட 70கோடி செலவளித்துள்ளது; தமிழகம் 40கோடி செலவளித்துள்ளது; இரு மாநிலங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 15,000 காவல் மற்றும் வனத்துறையினரை ஈடுபடுத்தி வந்தது; இத்தனைக்கும் வீரப்பனாரிடம் எப்போதும் 150பேருக்கு மேல் இருந்ததில்லை.
வீரப்பனாரின் கூட்டாளிகள் நால்வர் கர்நாடகாவில் பெல்காம் சிறையில் தூக்கில்போடப்படவுள்ளனர்; இது தமிழர்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ள பல செய்திகளில் ஒன்று; வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் பல நூறு மக்களை கொன்று கற்பழித்து கொடுமைப்படுத்திய அதிரடிப்படையும் அதன் அதிகாரிகளும் பணமும் பதவியும் பெற்று சுகமாக வாழ்கின்றனர்; 1993ல் வீரப்பனார் கன்னிவெடி வைத்து வெறியாட்டம் போட்டுவந்த அதிரடிப் படையின் தமிழக,கர்நாடக காவலர்கள் 22பேரைக் கொன்ற வழக்கில் மேற்கண்ட நால்வர் தண்டனை பெற்றுள்ளனர்; (ஆனால் 1994ல் ஜூன் 11 சின்னாம்பதி என்ற சிற்றூரை ஆயுதமுனையில் சுற்றிவளைத்து அந்த ஊரிலிருந்த அத்தனை இளம்பெண்களையும் கூட்டமாக கற்பழித்த அதிரடிப்படையினர் மீதான விசாரணை என்னவானது என்று யாருக்கும் கவலையில்லை; அவர்களெல்லாம் சுகபோகமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர்;இதில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் நூறுபேரை வீரப்பனார் தம்மோடு காட்டுக்குள் வைத்து கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தார்.

அது 1997 ம் ஆண்டு. ஒரு முறை சந்தனக் கடத்தல் வீரப்பன், தவறுதலாக கானுயிர் புகைப்படக்காரர்கள் குருபகர் மற்றும் செனானியையும், வங்காளப் பேராசிரியர் மைத்தியையும்அரசு உயரதிகாரிகள் என்று தவறுதலாக நினைத்து கடத்திவிடுகிறான். இரண்டு வாரங்கள் கழித்து இருவரையும் விடுவிக்கிறான். சில மாதங்கள் கழித்து, வீரப்பனுடன் இருந்த 14 நாட்கள் அனுபவங்களை ‘சுதா’ என்னும் கன்னட வார இதழில் தொடராக எழுதுகிறார்கள். பின், “Birds, Beasts Bandits 14 Days With Veerappan” என்ற தலைப்பில் 2011 ம் ஆண்டு புத்தகமாக வருகிறது.
அதில், வீரப்பன் அவர்களுக்கு சொன்ன ஒரு கதையை குறிப்பிட்டுள்ளார்கள். அந்தக் கதை உண்மையில் வீரப்பனின் இன்னொரு இளகிய முகத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
யானையும், கடவுளும் பின்னே மனிதனும்:
குருபகர், செனானி மற்றும் வங்காளப் பேராசிரியர் மைத்திக்கும், வீரப்பனுக்கும் நடந்த உரையாடலில் வீரப்பன் இவ்வாறாக துவங்கி இருக்கிறான்…
“இந்தப் புவியில் மனிதனைப் போல் கொடூரக்காரர்கள் யாரும் இல்லை. மனிதன் பொய் சொல்லுவான், ஏமாற்றுவான்… ஏன் பழி வாங்குவான் மற்றும் நேர்மையற்ற செயலை செய்வான். மனிதன் யானைகளை பிடித்து சர்க்கசிற்கு விற்பான். யானையை கொடுமைப்படுத்தி பணம் காண்பான்… ஏன் அதன் முடி, தந்தம் என அனைத்தையும் விற்பான்.. உண்மையில் மனிதனைப் போல கொடுமைக்காரர்கள் யாரும் இல்லை…” என்று கூறி உள்ளான்.
வீரப்பனின் இந்த உரை, மூவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்து இருக்கிறது. வீரப்பன் குறித்து சொல்லப்பட்ட பிம்பம் வேறு. ஆனால் அவனது உரையாடல் இதற்கு நேரெதிராக இருந்து இருக்கிறது.
அப்போது வீரப்பன் சொன்ன கதை இது…
“ஒரு காலத்தில் கடவுளும் இந்த பூமியில்தான் சந்தோஷமாக சக ஜீவன்களுடன், இந்த பூமியில் உள்ள வளத்தை பங்கிட்டு வாழ்ந்தார். அவர்கள் இந்த இயற்கையுடன் குதூகலமாக வாழ்ந்தார்கள். ஒரு நாள் இப்புவியில் மனிதன் தோன்றினான். புவியில் இருந்த அமைதிக்கு தொந்தரவு கொடுத்தான்.
கடவுள் இதனால் கவலை உற்றார். அவர் மற்ற உயிரினங்களுடன் கலந்து ஆலோசித்தார். மனிதன் மிக மோசமான உயிரினம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அவனால் ஒரு காலமும் இயற்கையுடன் இயைந்து வாழ முடியாது. அதனால், நாம் பூமியைவிட்டு வெளியே சென்று விடலாம் என்று திட்டமிட்டனர்.
அப்போது, ஒரு யானைக் கூட்டம் கடவுளிடம் வந்தது. கடவுள், யானைகளிடம் தன் முடிவை சொன்னார். அப்போது யானை கடவுளிடம், “இது என்ன முட்டாள்தனமான முடிவு. மனிதன் பொடியன். அவனால் நம்மை என்ன செய்துவிட முடியும். நாம் ஏன் இந்த அழகுமிகுந்த மலரை, வானத்தை, காட்டை, ஆற்றைவிட்டுப் போக வேண்டும்…?” என்றது.
சினம் கொண்ட கடவுள், “நீங்கள் இங்கேயே தங்கி, உங்களை நீங்களே அழித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு சொர்க்கத்திற்கு சென்றார்.” என்று கதையை முடித்த வீரப்பன், பின் இவ்வாறு சொல்லி இருக்கிறான், “பாருங்கள் இப்போது… அந்த பாவப்பட்ட யானைக்கு என்ன ஆனது என்று…? அது சுதந்திரமாக சுற்ற, காடுகள் இல்லை. சர்க்கஸில் பிச்சை எடுத்து சாப்பிடுகிறது”என்று.
இந்தக் கதையும் வீரப்பனின் வாதமும், இந்த மூவரையும் குழப்பமடைய செய்திருக்கிறது.
உண்மையை சொன்னால் யாரும் நம்பபோவதில்லை:
அவர்களுடனான ஒரு உரையாடலின் போது, தேனீர் அருந்தியவாறே செனானியிடம், “இப்போது பந்திப்பூர் காட்டில் எத்தனை நீள தந்தமுள்ள யானைகள் இருக்கும்…?” என்று கேட்டு இருக்கிறான். அதற்கு செனானி, “ஏழு யானைகள் இருந்தாலே பெரிது. தந்தத்திற்காக தொடர்ந்து யானைகள் கொல்லப்பட்டு வருகின்றன. இப்போதெல்லாம் நீள தந்தமுள்ள யானைக் குட்டிகளை பார்ப்பதே அரிதாக இருக்கிறது…” என்றுள்ளார்.
அது மட்டுமல்லாமல் அவர் வீரப்பனிடம், “நீள தந்தமுள்ள யானைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. நீங்கள் இனி தந்தத்திற்காக யானைகளை கொல்லக்கூடாது…” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கு வீரப்பன் மெல்லிய குரலில், “நான் யானைகளைக் கொன்று பல ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், இதை நான் சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை.
சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டம் இந்த காட்டிற்கு வந்தது. அவர்களை பார்த்தவுடன் நான் கண்டு பிடித்துவிட்டேன், அவர்கள் யானையை வேட்டையாட தான் வந்திருக்கிறார்கள் என்று. அவர்களை எச்சரித்து அனுப்பினேன். ஆனால், அவர்கள் யானையை கொன்றுவிட்டார்கள். அவர்களை இன்னொருமுறை இக்காட்டில் பார்த்தால் சும்மாவிடமாட்டேன்” என்றுள்ளான்.
பின் ஒரு நீண்ட மெளனத்திற்கு பின், வீரப்பன், “இந்தக் காட்டில் எது நடந்தாலும், என்னையே குற்றம் சுமத்துகிறார்கள். வேட்டைக்காரர்கள் தைரியமாக யானையை வேட்டையாடி தந்தத்தை கடத்துகிறார்கள். ஆனால், நான் பழியை சுமக்கிறேன்….”
அப்போது செனானி குறுக்கிட்டு, “2000 யானைகளை வேட்டையாடி நீங்கள் தந்தத்தை கடத்தி உள்ளீர்கள் என்று ஊடகம் சொல்கிறதே…?” என்று வினவி உள்ளார்.
அதற்கு வீரப்பன். “அதுவெல்லாம் பொய். பிறர் செய்யும் குற்றங்கள் எப்போதும் என் தலையில் வந்து விழுகின்றன…”
இவ்வாறாக செல்கிறது அப்புத்தகம்.
வீரப்பனின் கதையும், வீரப்பன் கதையும்:
இப்போது ஏன் வீரப்பன் கதையும், வீரப்பனின் கதையும் என்கிறீர்களா… அல்லது ஏன் வீரப்பனை கதாநாயகனாக சித்தரித்து ஒரு கட்டுரை என்கிறீர்களா…? இல்லை, உண்மையாக வீரப்பனை கதாநாயகனாக சித்தரிக்கவில்லை. நிச்சயம் அவன் கொடுங்குற்றம் செய்தவன்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இப்போது மேற்கு தொடர்ச்சி மலைகளை வீரப்பனுக்கு முன், வீரப்பனுக்கு பின் என்று பிரித்துவிட முடியும். வீரப்பன் தன் கதையில் சொல்லியது போல் இப்போது உண்மையில் யானைகள் உலா வர இடம் இல்லை. மலைகள் முழுவதும் ஆக்கிரமிப்புகள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடக கோபிநத்தம் பகுதியில் நான் சந்தித்த வன உயர் அலுவலர், “முன்பு வீரப்பன் இருக்கும் பயத்தில், ரியல் எஸ்டேட் முதலைகள் இங்கு முதலீடு செய்ய தயங்கின. அப்போது காடு காடாக இருந்தது. ஆனால், இப்போது தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில்தான் காடு இருக்கிறது…” என்றார் மிகக் கவலையாக.
உண்மையில் வீரப்பன் பலியாடுதான். உண்மையான குற்றவாளிகள் இன்னும் தைரியமாக வெளியே சுற்றி கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேட்டூர், சத்தியமங்கலம் பகுதியைச் சுற்றி வீரப்பனாலும், காவல் துறையினராலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடியவன் என்ற முறையில் சொல்கிறேன். இது வரை வீரப்பன் குறித்து வந்த பதிவுகள் எதுவும் வீரப்பனை சரியாக பதிவுசெய்யவில்லை. இதற்கிடையே வரப்போகும் காவல் துறை அதிகாரி விஜயகுமாரின் புத்தகமும் காவல்துறையின் சார்பை சொல்வதாகதான் இருக்கப் போகிறது.
ஒரு வீரப்பனை அழித்துவிட்டோம். இப்போது ஓராயிரம் வீரப்பன்கள் உருவாகிவிட்டார்கள். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவது எப்போது… நாம் கானகத்தை காப்பது எப்போது…?

– மு. நியாஸ் அகமது

தயவுசெய்து இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.


ஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு உகந்த விரதமாகிய ”சங்கடஹர சதுர்த்தி” விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் “ ஓம் “ எனும் ஓங்காரவடிவமாக விளங்குபவருமான 
ஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு உகந்த விரதமாகிய ”சங்கடஹர சதுர்த்தி” விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது ..

தங்களனைவரது சங்கடங்கள்யாவும் நீங்கி ஆயுள் .. அபிவிருத்தி .. பதவிஉயர்வு மற்றும் வாழ்வில் சந்தோஷம் என்றும் மிளிரவும் விக்னவிநாயகரைப் போற்றுகின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!

ஸ்ரீவிநாயகமூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்தபோதிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகமிக முக்கியமானது .. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காம் நாளான தேய்பிறை சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தியாகும் ..
சந்திரபகவான் தனது தோஷங்கள் நீங்கவும் .. தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப்பெருமானை நினைத்து கடும்தவம் செய்ய .. சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார் .. தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது .. அந்த நன்னாளைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம் ..
’சங்கடம் ’ என்றால் இக்கட்டு .. தொல்லைகள் .. கஷ்டங்கள் ..தடைகள் என்று அர்த்தம் ..
’ ஹர ‘ என்றால் நீக்குவது .. அழித்தல் என்று பொருள் ..

சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகரின் திருமுடியில் பிறைச்சந்திரனாகவும் .. நெற்றியில் முழுநிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறுபெற்றான் .. விநாயகருக்கு பாலச்சந்திரன் என்றும் பெயர் உண்டு .. மேலும் இந்த சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்கவேண்டிய முறையும் உண்டாகியது ..
வாழ்வில் கஷ்டநஷ்டங்கள் யாவும் நீங்கப்பெற்று .. வாழ்வாங்கு வாழ விக்னவிநாயகரைப் பணிவோமாக ! 
” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. MAY THIS DIVINE ' SADURTHI '
BRINGS YOU WITH SUCCESS IN ALL YOUR ENDEAVORS ..AND
MAY LORD GANAPATHY REMOVE ALL THE OBSTACLES IN YOUR LIFE TOO .. " JAI GANESHAAYA NAMAHA "
'ஜெய் மகாகால்; மகாகாலருக்கு ஜே!'

- உஜ்ஜயினிவாசிகள், ஒருவருக்கொருவர் முகமன் கூற உச்சரிக்கும் இந்த வாசகத்தைக் கேட்கும்போது நம் உடலும் உள்ளமும் சிலிர்க்கும்! அவர்களது உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் மகாகாலராகிய ஜோதிர்லிங்கமே உஜ்ஜயினியின் அதிபதி!

கனகச்ருங்கா, குமுதவதி, குசஸ்தலி, பத்மாவதி, ப்ரதிகல்பா, போகவதி, அவந்திகா ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படும் உஜ்ஜயினி, தொன்மை வாய்ந்த- சரித்திரப் புகழ் பெற்ற திருத்தலம்.

அங்காரகனான செவ்வாய் பகவானின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் அவர் நவக்கிரக பதவி பெற்றது ஆகிய புராண சம்பவங்களுடன் தொடர்புடைய தலம் ஆதலால் உஜ்ஜயினியை, 'அங்காரக க்ஷேத்திரம்' என்றும் போற்றுவர்! அங்காரகனது பிறப்பு பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெவ்வேறு புராணங்களில் காணப்படுகின்றன.

உமாதேவி, இறைவனைப் பிரிந்திருந்த காலம். கல்லால மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார் ஈசன். இந்த நிலையில், அவரின் நெற்றிக் கண்ணில் இருந்து வழிந்த வியர்வைத் துளி ஒன்றை, கீழே விழாதபடி அப்படியே தாங்கிக் கொண்டாள் பூமாதேவி. அந்த வியர்வைத் துளியிலிருந்து தோன்றிய குழந்தையே மங்களன். இவனே அங்காரகன் எனப்பட்டான் என்றொரு கதை உண்டு.

சூரபதுமனால் தேவர்கள் துயருற்ற காலம்! 'அவனை அழிக்க வல்ல பலவான், சிவபெருமான் மூலம் தோன்ற வேண்டும்' என்றார் மகாவிஷ்ணு. அதன்படி தேவர்கள் அனைவரும் சிவபெருமானைக் காணச் சென்றனர். அவரோ கடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவரது தவம் கலைந்தால்தான் தங்களது எண்ணம் ஈடேறும் என்பதை உணர்ந்த இந்திரன், மன்மதனைத் தூண்டினான். மன்மதன் தனது மலர்க் கணைகளால் சிவபெருமானின் தவத்தைக் கலைத்தான். இதனால் கோபம் கொண்ட ஈசன், மன்மதனை தனது நெற்றிக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கினார்!

இதன் பிறகு சிவ- பார்வதியர் திருமணம் நடந்தேறியது. இந்த நிலையில், 'இவர்களுக்குப் பிறக்கப் போகும் அதிபராக்கிரம சாலியான குழந்தையால் தனது பதவிக்கு ஆபத்து நேருமோ!' என்று பயந்தான் இந்திரன். எனவே, சிவ- பார்வதியர் இணைவதைத் தடுக்க அக்னியை அனுப்பினான். ஆனால், சிவ பெருமானின் வீரியத்தை தாங்க முடியாத அக்னி பகவான், அவரிடம் சரணடைந்து

மன்னிப்பு வேண்டினான்.அவனிடம், கங்கையில் வீரியத்தைச் சேர்க்கும்படி கட்டளையிட்டார் சிவபெருமான். அக்னி தேவனும் அப்படியே செய்தான். அப்போது, உருவான குழந்தையே அங்காரகன் என்பது சிலரது கருத்து. ஆனால், 'அக்னி தேவனுக்கும் விகேசி என்பவளுக்கும் பிறந்தவனே அங்காரகன்' என்கிறது லிங்க புராணம்!

மச்ச புராணம் என்ன சொல்கிறது தெரியுமா?

தட்சன், தன் மகளான தாட்சா யணியை சிவபெருமானுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால், சிவனா ருக்கும் தட்சனுக்கும் இடையே பகை ஏற்பட்டது.

ஒரு முறை, பெரும் வேள்வி ஒன்றைத் துவக்கிய தட்சன், சிவனாருக்கு அழைப்பு அனுப்பாமல் அவரை அவமதித்தான். கோபம் கொண்ட சிவனார், தனது நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரரை உருவாக்கி, தட்சனை அழித்து வர அனுப்பினார். இதையடுத்து, தட்சன் மற்றும் அவனைச் சேர்ந்தவர்களை அழித்தார் வீரபத்திரர். அப்போது, வீரபத்திரரது ஆவேசத்தைக் கண்டு அதிர்ந்த தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரை சாந்தப்படுத்தினர். அவரும் சாந்தமானார். இந்த உருவமே அங்காரகன் என்கிறது மச்ச புராணம்.

மற்றுமொரு கதை...

வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர் பரத்வாஜ முனிவர். இவர், நர்மதை நதிக்கரையில் தவம் செய்து வந்தார். ஒரு நாள்... நர்மதையில் நீராடிக் கொண்டிருந்த தேவ மங்கை ஒருத்தியைக் கண்டு மோகித்த பரத்வாஜர், அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று, இல்லறம் நடத்தி

வந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததும் அந்தப் பெண் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ முனிவரும் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு, நர்மதைக் கரைக்குச் சென்று தவத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து, அந்தக் குழந்தையை பூமாதேவி

அரவணைத்து வளர்த்தாள். குழந்தை யின் மேனி, செந்நிறத்துடன் அக்னி போல் பிரகாசித்ததால், அவனுக்கு 'அங்காரகன்' என்று பெயர் சூட்டினாள்.

அங்காரகனுக்கு ஏழு வயதானது. ஒரு நாள், ''அம்மா, என் தந்தை யார்? அவரைக் காண ஆவலாக உள்ளது!'' என்று பூமாதேவியிடம் கேட்டான். உடனே, ''குழந்தாய்... உன் தந்தையின் பெயர் பரத்வாஜர்; மகரிஷிகளில் மகிமை பெற்றவர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்!'' என்ற பூமாதேவி, அவனுடன் பரத்வாஜரது ஆசிரமத்தை அடைந்தாள்.

அங்கு முனிவரைச் சந்தித்தவள், ''முனிவரே, இவனே தங்களின் மகன். உங்களைக் காண விரும்பியதால் இவனை இங்கு அழைத்து வந்தேன். தாங்கள் இவனை ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என வேண்டினாள். மிகவும் மகிழ்ந்த பரத்வாஜர், அன்புடன் தன் மகனை அணைத்துக் கொண்டார்.

அங்காரகன் தகுந்த வயதை அடைந்ததும், முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்கு களைச் செய்து வைத்து வேத அத்யயனத்தையும் ஆரம்பித்து வைத்தார் பரத்வாஜர். சதுர்வேதங்களை மிகக் குறுகிய காலத்திலேயே கசடறக் கற்றுத் தேர்ந்த அங்காரகன், இன்னும் பல கலைகளிலும் சிறந்து விளங்கினான்.

இதன் பிறகு... தான் சர்வ வல்லமை பெற விரும்புவதாகவும், தகுந்த வழி காட்டுமாறும் தந்தையிடம் பிரார்த்தித்தான். 'தவமே சிறந்த வழி' என்ற பரத்வாஜர், விநாயகரைக் குறித்து தவம் இருக்கும்படி அங்காரகனைப் பணித்தார். உரிய மந்திரங்களையும் அவனுக்கு உபதேசித்து அனுப்பி வைத்தார்.

அவந்தி நகரை அடுத்த அடர்ந்த வனத்தில் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நன்னாளில் தனது தவத்தைத் துவக்கினான். பல நூறு ஆண்டுகள் நீடித்த அங்காரகனின் தவத்துக்கு பலன் கிடைக்கும் காலம் கனிந்தது. மாசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில், அங்காரனுக்கு தரிசனம் தந்தார் ஆனைமுகத்தோன். அவரது பாத கமலங்களை பணிந்த அங்கார கன், விநாயகரை பலவாறு துதித்துப் போற்றினான். பிறகு, ''விக்னேஸ்வரா, தங்களிடம் சில வரங்களை யாசிக் கிறேன். அருள் புரியுங்கள்!'' என்று வேண்டினான்.

''அங்காரகனே, உனது அன்பினால் கட்டுண்டேன். விரும்பும் வரம் எதுவாயினும் தயங்காமல் கேள்!'' என்று லம்போதரன் திருவாய் மலர்ந் தருளினார்.

''விக்ன ராஜனே... நான், அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வ மங்களமான திரு உருவோடு தங்களைத் தரிசித்த என்னை எல்லோரும், 'மங்களன்' என்று அழைக்க வேண்டும். அத்துடன், தங்களது திவ்விய தரிசனம் கிடைத்த இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந்நாளில் உம்மை வணங்கும் அடியவர்களது இன்னல்களை நீக்கி அருள வேண்டும். என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும்!'' என்று பல வரங்களைக் கேட்டான் அங்காரகன்.

அவனை கனிவுடன் நோக்கிய கணபதி, ''அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன், என்னிடம் நீ அனுக்கிரகம் பெற்ற இந்த நாள், 'அங்காரக சதுர்த்தி'யாகப் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வணங்குபவர்களது விக்கினங்களை அடியோடு விலக்குவேன்!'' என்று அருளி மறைந்தார்.

விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்தப் புனித இடத்தில், கணேசர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அல்லும் பகலும் அவரை வழிபட்டு வந்தான் அங்காரகன். இதனால் இந்த விநாயகருக்கு, 'மங்கள விநாயகர்' என்ற பெயர் வந்தது.

இதன் பிறகு, விநாயகப் பெருமானின் அருளால், தேவலோகம் அடைந்த அங்காரகன், அங்கு அமிர்தம் பருகியதுடன்... விரைவிலேயே, நவக்கிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். அவனுக்கு உகந்த தினம் செவ்வாய்.

எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; விநாயகருக்கு மிக உகந்தது.

இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும். எனவே இந்த புனித தினம், சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்றது.

சங்கடஹர சதுர்த்தி விரத மகிமையை பல்வேறு நூல்கள் விளக்குகின்றன.

மாசி மாதம்- தேய் பிறையில்... செவ்வாய்க் கிழமையுடன் கூடி வரும் சதுர்த்தி திதி துவங்கி ஒரு வருட காலம் விதிப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

இந்த விரதத்தை துவங்கும் நாளன்று, சூரியன் உதிப்பதற்கு ஐந்து நாழிகைக்கு முன்பே உறக்கத்திலிருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து புண்ணிய நதியில் நீராட வேண்டும்.

பிறகு, சிவ சின்னங்களை அணிந்து கொண்டு விநாயகரை தியானிக்க வேண்டும்.

விநாயகரின் ஓரெழுத்து, ஆறெழுத்து மந்திரங்களில் ஏதாவது ஒன்றை... இவற்றை அறியாதவர்கள், விநாயகரின் புனித நாமங்களை அன்று முழுவதும் இடைவிடாமல் ஜபிக்க வேண்டும். உபவாசம் இருப்பதே மேல். அன்று இரவு உறங்குவதும் கூடாது. விநாயக புராணத்தைப் பாராயணம் செய்வது நல்லது.

இவ்வாறு இந்த அரிய விரதத்தை மன உறுதியோடு ஓராண்டு காலம் கடைப்பிடித்தால், இன்னல்கள் அகலும். செல்வம், கல்வி மற்றும் செல்வாக்கு ஓங்கும். கூன்- குருடு போன்ற குறைபாடுகள் நீங்கி நலம் பெறலாம். கடன்தொல்லை, நோய், பகை முதலானவை அகன்று நலமுடன் வாழலாம். இதுவே சங்கடஹர சதுர்த்தியின் சாரம்.

அங்காரகனால் துவக்கப்பட்ட சங்கடஹர சதுர்த்தி விரதமும், காலம் காலமாக அனுசரிக்கப் பட்டு வருவதை பல புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.

விப்ரதன் என்ற வேடன் முற்கல முனிவரிடம் கணேச மந்திர உபதேசம் பெற்று ஆயிரம் ஆண்டுகள் தியானித்தான். அதன் பலனாக 'புருசுண்டி' என்ற பெயரு டன், விநாயகரை குருவாகக் கொண்டு ஞானோபதேசம் பெற்று முக்தி அடைந்தான். அவன் அனுஷ்டித்தது சங்கடஹர சதுர்த்தி விரதம்.

அரசன் கிருதவீர்யன், அத்ரி முனிவரிடம் இந்த விரதத்தை உபதேசமாகப் பெற்று புத்திரப்பேறு எய்தி மகிழ்ந்தான். சூரசேனன் எனும் அரசன், இந்திரன் வாயிலாகக் கேட்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்று முக்தி அடைந்தான்.

பெற்ற அன்னையையே கொலை செய்த 'புதன்' எனும் அந்தணன், குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டான். இவன் மேல் இரக்கம் கொண்ட சூரசேன மகாராஜா... அந்தணனுக்கு, கணபதி மந்திரம் உபதேசித்து, சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்குமாறு பணித்தார். அதன்படியே செய்து நோய் நீங்கி பல்லாண்டு வாழ்ந்து முடிவில் முக்தி அடைந்தான் அந்தணன் புதன்.


கீர்த்திகள் பெற்ற செவ்வாய் கிரகத்துக்கு- அங்காரகனுக்கு, உஜ்ஜயினியின் (அவந்தி நகரம்)

வட எல்லையில் அவன் தோன்றிய இடத்திலேயே ஒரு திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கருவறைக் கடவுள் மங்கள்நாத் என்பர். மங்களகரமான உருவம் கொண்டவர் என்று பொருள்!

'அங்காரகன், சிவந்த மேனி, மார்பில் செம்மலர் மாலை துலங்க அழகிய திருமுடி தரித்து நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவன். வலது திருக்கரங்களில் ஒன்று அபயம் அருள மற்றொன்றில் சக்தி ஆயுதம். இடது திருக்கரங்களில் கதாயுதமும் சூலமும் திகழ்கின்றன. மேஷ வாகனம் கொண்ட இவன், சிம்ம வாகனத்திலும் காணப் பெற்றவன். இவனுக்கு மாலினி, சுசீலினி என்று இரு மனைவியர். எட்டுக் குதிரைகள் பூட்டிய பொன் தேரில் பவனி வரும் திருக்கோலம் கொண்டவன்' என்று அங்காரகனை வர்ணிக்கிறது ஒரு நூல்.

ஆனால் உஜ்ஜயினி மங்கள்நாத் ஆலயத்தில், 'பிண்டி' எனப்படும்... சிவலிங்கம் போன்ற அருவுருவமே உள்ளது. இதையே அங்காரகனின் திருவுருவமாகப் பாவித்து வழிபடுகின்றனர்.

அங்காரகன் கடுந்தவம் இயற்றி, கணேசர் தரிசனம் பெற்ற புனித இடத்தை, உஜ்ஜயினியின் தென் மேற்கில் இன்றும் காணலாம். 'ஜவாஸியா' எனும் கிராமத்திலுள்ள இந்த புனித இடத்தில் விநாயகருக்கு ஓர் ஆலயம் உண்டு. உஜ்ஜயினியில் உள்ள ஆறு கணபதி ஆலயங்களில் இதுவே சற்றுப் பெரியது.

விஸ்தாரமான பிராகாரத்துடன் திகழும் ஆலயத்தில் சந்நிதிக்கு எதிரில் யாக சாலை உள்ளது. இங்கு பக்தர்களால் தினமும் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. பிராகாரத்தில், ஆழ்கிணறு ஒன்றைக் காணலாம். இதை, 'பாணகங்கா தீர்த்தம்' என்கிறார்கள். இங்கு, புளிய மரமே ஸ்தல விருட்சம்!

இங்குள்ள கணபதி உருவம் அங்காரகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கின்றனர். ஆனால் சிலையின் வடிவமைப்பை ஆராய்ந்தால், சுயம்பு மூர்த்தியே என்ற முடிவுக்கு வரலாம். இந்த மூர்த்தியின் திருநாமம்- சிந்தாமணி விநாயகர். பாற்கடலில் கிடைத்த சிந்தாமணியைப் போன்று கேட்பதைத் தருபவர் என்பதால் இந்தப் பெயர்.

சங்கடஹர சதுர்த்தி துவங்கப்பட்ட புனித இடத்தில் குடிகொண்டிருக்கும் இந்த சிந்தாமணி விநாயகர் ஓர் அரிய வரப்ரசாதி என்பதில் ஐயமில்லை!

பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் பிள்ளையார் விரதம்!

செவ்வாய் பகவானுடன் தொடர்புடைய விநாயகர் வழிபாடு மற்றொன்றும் உண்டு! தமிழக கிராமப்புறங்களில் பெண்கள் மட்டுமே அனுசரிக்கும்- 'செவ்வாய் பிள்ளையார் கும்பிடுதல்!' என்ற விரதமே அது.

தை மற்றும் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் துவங்கி... 'இத்தனை செவ்வாய்' என்று நிச்சயம் செய்து, இந்த நோன்பை ஆரம்பிப்பார்கள். இந்த விரதத்தால் ஏற்படும் சப்தம்கூட ஆண்களுக்கு கேட்கக் கூடாது என்பது நியதி! தப்பித்தவறி இந்த விரத நைவேத்தியத்தை ஆண்கள் உட்கொண்டாலோ, நைவேத்திய பதார்த்தத்துக்காக மாவு இடிக்கும் சத்தத்தைக் கேட்டாலோ அவர்களது உடல்நலம் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை! எனவே, ஆண்கள் யாவரும் உறங்கச் சென்ற பிறகு அல்லது அவர்கள் வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் இந்த வழிபாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள்.

ஊர் பெண்கள் அனைவரும் ஆடவர் இல்லாத ஓர் இல்லத்தில் ஒன்று கூடுவர். ஒவ்வொருவரும் தங்களது பங்காகக் கொண்டுவந்த நெல்லை உரலில் இட்டு இடித்து அரிசியாக்குவர். பிறகு உமி களைந்து, அரிசியை மாவாக்கி வைத்துக் கொள்வர். இந்த மாவுடன், சிறு சிறு தேங்காய்த் துண்டுகளும் இளநீரும் கலந்து நன்றாகப் பிசைந்து 'அடை'களாகத் தட்டுவர். பிறகு வாணலியில் வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் அடைகளை வைத்து வேக வைப்பார்கள். மாவில் உப்பு சேர்க்க மாட்டார்கள். இதுவே நிவேதனம்!

பிறகு, கனாக்கன்றின் (பசுவின் ஆண் கன்று) சாணத்தால் பிள்ளையார் பிடித்து, புங்கை இலை, புளிய இலை மூலம் சுழல் அமைத்து, அதன் நடுவே சாணப் பிள்ளையாரை எழுந்தருளச் செய்வார்கள். தொடர்ந்து, விநாயக புராணத்தை ஒருவர் எடுத்துச் சொல்வார். கதை முடிந்ததும் தூப- தீப ஆராதனைகள் காட்டி, அடைகளை நிவேதனம் செய்து வழிபட்ட பிறகு, அந்தப் பிரசாதத்தை குழுமி இருப்போருக்கு விநியோகிப்பர். அதை அங்கேயே உண்ண வேண்டும்!

இதையடுத்து புங்கை- புளியந் தழைகள், வைக்கோல் மற்றும் பூஜை மலர்கள் ஆகியவற்றை, பொழுது விடிய நான்கு நாழிகைக்குள்ளேயே எடுத்துச் சென்று ஆற்றில் விட்டு விடுவார்கள். அத்துடன், பிள்ளையாரையும் வழியனுப்பிவிட்டு, நீராடிய பின்... வாய் பேசாமல், புனித மஞ்சள்- குங்குமம் அணிந்து, வெற்றிலை சுவைத்து அவரவர் இல்லத்துக்குச் செல்வர். அன்று முழுவதும் எவருக்கும் காசு- தானியம் தரமாட்டார்கள்.

ஆயுள் வளர்க்கும் அருகம்புல்!

'மூதணிடம்' என்றால் என்ன தெரியுமா? அருகம்புல்லின் வேறு பெயரே இது. இதன் அசல் பெயர் 'அகரம் புல்'!

ஒரு சந்தர்ப்பத்தில், மிகுந்த வெப்ப தேகம் கொண்ட அனலாசுரன் என்ற அசுரனை விழுங்கினார் விநாயகர். இதனால் அவரது திருமேனி தகித்தது! இந்த உஷ்ணத்தைப் போக்க விநாயகரை குளிர்வித்த பெருமைக்குரியது அருகம்புல். இதனால், அவருக்கே உரிய பத்ரமாக(தழை) திகழ்கிறது அருகம்புல். 'தூர்வா' என்றும் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கொண்டு கணபதியை பூஜிப்போர், நிலையான ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெறுவர்!

Did you know?










Tuesday, May 24, 2016

ஔவையார்



ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை நோக்குங்கல், அவர் 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. இவர் தந்தையார் பகவன் எனவும் தாய் ஆதி எனவும், அவர்களுக்கு ஏழாவது குழந்தையாக ஒளவை பாணரகத்தில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு கானப்படுகிறது.
ஆயினும் இவரின் படைப்புகளின் காலக்கட்டங்களை இன்ன பிற புலவர்களின் காலக்கட்டங்களோடு ஒப்பிட்டு நோக்குங்கால், ஒள‌வை பிராட்டியார் காலத்தை வென்று வாழ்ந்தவர் என்று கணிக்க முடிகிறது. இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசன் அதியமான் நெடுமான் அஞ்சி ஒள‌வைக்கு ஈந்த மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக்கனி கதையும் கூறப்படுகின்றது.
இத்தமிழ் மூதாட்டியின் பெயர் சிறப்பினை நோக்குங்கால், அகர வரிசையில் பதினோராம் எழுத்தாகிய "ஔ" எனும் எழுத்தில துவங்கும் ஒளவை என்ற பெயர் அவ்வா என்ற சொல்லின் திரிபாக கருதப்படுகிறது. அதன் பொருள் மூதாட்டி அல்லது தவப்பெண் என்பதாகும் என்று பழந்தமிழ் அகராதி பகர்கிறது. அத்துடன் பிந்தையகாலத்தில் ஒளவை எனும் சொல், வயது அல்லது அறிவாற்றல் ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்றவர்க்கு வழங்கப்படும் குறியீடாகவும் அமைந்துள்ளது. இதிலிருந்தே பெரும் சிறப்பு வாய்ந்த தமிழ்ப்புலவி இவர் என்பது வெள்ளிடைமலை.
சிரஞ்சீவியாக வாழ்ந்தவர் ஒளவை என்று எண்ணப்பட்டாலும், வரலாற்று ஆசிரியர்களின் கூற்றின்படி மூன்று பெண்புலவர்கள் 12ம் நூற்றாண்டுக்கு முன் ஒள‌வை எனும் பெயருடனும் ஒருமித்த குணாதிசயங்களோடும், புலமையோடும் வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்தனர், கவி பாடிச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி முதலாம் ஒள‌வை கடைச்சங்க காலத்தில் வள்ளுவர், நக்கீரர் போன்றோரின் காலக்கட்டத்தில் வாழந்ததாகவும், இரண்டாம் ஒள‌வை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும் மூன்றாமவர் கம்பர், புகழேந்தி, செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்தார் என்றும் சான்று பகர்கின்றனர்.இவையன்றி 14ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்கு மத்தியிலான காலக்கட்டத்தில் மேலும் இரண்டு ஔவைகள் வாழ்ந்தனர் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். ஓர் ஒளவை 14ஆம் அல்லது 15ஆம் நூற்றாண்டிலும் அடுத்தவர் 18ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த இரு ஒளவைகளின் வாழ்க்கைக் குறிப்புக்கள் முழுமையாகக் பெறப்படவில்லை.
ஔவையின் தோற்றப்பொலிவுப் பற்றி விவரிக்கையில் அறியப்படும் தகவல்கள் யாதெனில் ஔவை என்பவர் ஒரு விறலி (அதாவது ஒரு பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டுபவள் விறலி என்று அழைக்கப்படுபவராவார்). இவர் மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். இவர் மைதீட்டிய கண்களும் வாட்டமான நெற்றியும் அமைந்தவராக அறியப்படுகிறார். மேலும் எடுப்பான இலுப்பில் அழகிய அணிகலன்களையும் அணிந்திருந்தார் என அறியப்படுகிறார்.
மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை வாரி வழங்கிய அவ்வையின் பொதுச் சிறப்பியல்புகள் என சில விசயங்கள் கூறப்படுவதுண்டு. அவையாவன ஒளவையானவர் பிறவியிலேயே தமிழறிவுடன் பிறந்தவர், பெற்றோரிடத்தில் வளராதவர், பாணரகத்தில் வளர்ந்தவர்,சிவபரத்துவம் தெளிந்தவர், வரகவித்துவம் வாய்க்கப்பெற்றவர்.இலௌகிகம்,வைதிகம் இரண்டும் தெரிந்தவர். உள்ளம்,உண்மை,மொழி ஆகியவற்றில் உயர்ந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் புரிந்தவர். தமிழ் நாடு முழுதும் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் வெகுநாட்கள் வாழ்ந்தவர். பலரை பற்றி கவிபாடிப் பரிசு பெற்றவர். சிறியோராயினும், வறியோராயினும் தமக்கு பரிசு ஈந்தவரை பெரியோராய் மதித்துப் பாடியவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பாராமுகம் காட்டியவரையும், பாடலருமை அறியா மூடரையும் வெறுத்துப் பாடிய‌வர். மேற்கூறிய சிறப்பியல்புகள் அனைத்து ஔவைகளிலும் ஒருமித்து இருந்ததாகக் கூறப்படுகிறது


தமிழ் பாட்டி ஔவையார் - குறிப்புகள்

தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான "ஆத்திசூடி"க்கு உண்டு.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

தமிழ்ப்பாட்டி
"தமிழ்த்தாத்தா" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள்.

வரலாறு
ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.

அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்; அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.

காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் "தமிழறியும் பெருமாள்" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.

சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச் செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை.

வரலாற்று ஆய்வு
ஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்:

சங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான். அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான். இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார் காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். "ஒளவை குறள்" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம். சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் "விநாயகர் அகவலை"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும்.

கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

அதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார்.

இவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார்.

நூல்களின் சிறப்பு
மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.

சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.

"பதஞ்சலி யோகசூத்திர"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

"ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது.

"கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.

ஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன.

"மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.

"நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.

இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச்
சங்கத்தின் தலைவர் "இறையனார்" என்னும் "திரிபுரம் எரித்த
விரிசடைக்கடவுளின்" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை
ஒளவையார் பெற்றிருக்கிறார்.

Monday, May 23, 2016

Phytotherapy (herbal treatments)


Herbs have been used as drugs since ages, their medicinal powers were discovered either by experimenting or by chance. Now the medical agents in the herbs are used either directly or after some processing stages. There are also some synthetic and semi-synthetic medicines based on herbs (which currently constitute 95 % of all medicines on the market). Whatever the medicine is, either herbal or chemical, it is always better to choose the natural ones, to be careful and not to use any medicines unless that is really needed. The reason is that most medicines are in fact poisons but, when used in proper doses and in proper circumstances, they exhibit meditional qualities.

As far as the way a medicine acts and its side effects, natural (herbal) ones are always the best because those synthetic and semi-synthetic contain chemical substances that result in the liver over heating and make the liver tired. Live is one of the biggest organs in the body and, according to its functions, it can be considered one of the most important organs.

All medicines that we take, all chemicals that we breathe in with the air or preservatives in the food are subjected to metabolism in the liver and after a series of chemical processes in the liver are thrown away from the body either through the kidneys or via other ways (breathing, bile, skin, etc.). As a result, most chemicals are harmful to the liver, kidneys and other organs.

The most essential function of the liver is to provide energy to our everyday activities (both physical and mental). But the liver gets tired because of the medicines we use, chemicals in the food and in the air, etc. and cannot properly perform its functions. Also, because of the effect of those chemicals, toxic elements (free radicals) are formed in other cells of the body. As a result, one develops acute illnesses, like tiredness, stress, anger, headache as well as chronical, like early ageing, skin paleness, sluggishness, baldness.

Here we are going to explain how all kinds of our daily activities (taking herbal and chemical drugs, nutrition, using of cosmetics, lifestyle) affect our body and, as a result, our physical, emotional and spiritual being. We will explain how we can cure illnesses and improve our health most naturally without using any chemicals, just with the help of phytotherapy, natural nutrition and other natural methods.
How to prepare herbal teas: http://www.sahajayogaportal.org/…/fytother…/herbal-teas.html