Search This Blog

Thursday, May 8, 2014

மூலஸ்தானம்


 ஸ்ரீதரன்

மணிச்சத்தமே கந்தசாமிக் குருக்களின் வாழ்க்கையின் நிரந்தர அம்சம் என்று சொல்ல முடியாது. 'ஊரார்' என்று பலவாறாகவும் குறிப்பிட்டுப் பேசப்படுகிற அந்த மனிதக் கூட்டம் இந்தக் குருக்களின் இந்த முரண்பாட்டைப்பற்றிச் சந்தி, மதகு, வாய்க்காலடியே உரத்து விவாதித்துத் திட்டித் தீர்த்தாலும் மார்க்கண்டு அவரிடம் வந்து போவதும் ஓரம்சமாகி விட்டது. அவன் தரும் கள்ளில்தான் அவரது வாழ்க்கையின் மெய்மை யாவும் அடங்கியிருப்பதான ஒரு உணர்வு, அவருக்குச் சில வேளைகளில் எழுவதுண்டு. என்னவாயிருந்தாலும் குருக்களுக்கும் மார்க்கண்டுவுக்குமே தங்களுடைய பரஸ்பரத் தொடர்பு இந்தக் கள்ளைத் தாண்டி நிற்கும் நிலை தெரியும். மார்க்கண்டுவுக்கும் அவன் தரும் கள்ளுக்கும் தொடர்பில்லாமல் மார்க்கண்டுவின் தொழிற் பேட்டைக்கு- ஒரு பனந்தோப்பிற்கு- நடுவில் அந்தப் பிள்ளையார் கோவில் நிற்கிறது. பெரிதாக வர முயன்று தோற்றுப்போன முயற்சியில் கோபுரம், மதில் தங்கள் வழக்கமான நிலையையும் இழந்து, தேய்ந்துகுட்டிச் சுவராய் நிற்கிற நிலைமை நாலாந்திருவிழா நடக்கிற போது சிலருக்குத் தெரிவதுண்டு. அப்போதுதான்  நாலு அல்லது ஐந்து சிகரச் சோடினைகள் 'லைட் மெஷின்கள்', பதினைந்து இருபது கூட்டம் பெரிய மேளம், நாலைந்து கூட்டஞ் சின்ன மேளம் என்று புடவைக் கடைக்காரச் சிவசம்பு ஆயிரமாயிரமாய் இறைக்கும் போது, அதில் கால்வாசி இதைத் திருத்தப் போதுமே என்று சில வயது போனதுகள் யோசிப்பதுண்டு. அதுகளும் பெரிய மேளச் சின்ன மேள ரசனையிலும் வரும் சனத்திலும் சிந்தையை வைத்து, இந்த யோசனையைக் காற்றில் பறக்கவிட்டு இந்த ஒரு நாள் மாய மினுக்குகள் மறையப் பின்னர் விவாதிப்பதுண்டு. திருவிழாக் காலந் தவிர மோதக வடை ஆசைகள் கிளம்புகிற பொழுதும், அகஸ்மாத்தாகச் சுருட்டுக்காரர் பொன்னையர் கோவிலருகால் போகும் பொழுது கோவில் விளக்கெரியாததை அவர் காணும் போதுந்தான் பிள்ளையார் இருப்பது ஊருக்கே தெரிய வரும்.

முன்னதே ஐயரின் ஸ்திரத்துக்கும் ஜீவனத்துக்கும் ஆதாரம். பின்னது என்றால் இந்தப் பிராமணியைத் திட்டித் தீர்த்து ஒழிக்க மூர்க்கமான முயற்சிகள் நடைபெறும். இவைகளுக்கெல்லாம் புறம்பாகப் பேசாமல் மௌனியாக இருந்து எல்லாரும் திட்டித் தீர்த்த பின் மார்க்கண்டுவின் கள்ளில் கொஞ்சத்தை மிடறி அவனுடன் கதைத்த பின்னர் மௌனமாகத் தன் வீட்டினுள் நுழைந்து, செத்தது போல் கிடக்கும் வருஷத்துக் கொன்றாகத் தெய்வங் கொடுத்திருந்ததுகளைத் தாண்டி அடுத்ததையுந் தெய்வம் கொடுக்கப் பண்ணும் முயற்சியில் இந்த நாடகக்காரர்களின் கூச்சலை மறக்கடித்து விடுவார்.

இந்தத் தாமதக்காற்றில் அப்போதுதான் ஒரு தீப்பொறி மெல்லப் பற்றியது. சில காரணகாரிய ஆராய்ச்சிக்காரர்களின்  தேடித் திரிந்து பொறுக்கப்பட்ட காரணம் மார்க்கண்டுவின் தமையன் மகன் கிருஷ்ணன் சிவப்புச் சட்டைக்காரர்களுடன்  சேர்ந்து கொண்டான் என்பதாக இருந்தது. மார்க்கண்டுவாலோ விதிக்கப்பட்ட தவாளியில்- இயற்கையாக அவனுக்கே சரியாகப் புலப்படாமல், அடிமனதின் ஒரு மூலையில் வெள்ளாளன்களின் குடுமிகளின் சகல மயிர்களும் தன் கையில் இருக்கின்றனவென்பதாக உணர்ந்து சிலிர்த்தாலும் - அதையும் நடைமுறையில் நசுக்கி இயங்கி இயங்கியே ஷகோவிலுக்குள் போவதாமே| என்பதையும் அந்த ரீதியிலேதான் விருப்பு வெறுப்பின்றி எடுக்க முடிந்தது.

அந்த வருடத் திருவிழாத் தொடங்கியது. தொடங்குவதற்குச் சிறிது காலம் முன்னரே கசமுசவென்று இந்தக் கோவிலுக்குள் போகிற பிரச்சனை கிருஷ்ணனின் முயற்சியால் அவர்களுக்குள் எழுந்து பரவியது. தூரத்துச் சொந்தத்தில் பல அலைகளை எதிர்த்து நீந்தி, அடிக்கடி இடம் மாற்றுப் படுகிற ஆசிரியனாகிவிட்ட நடேசுவின் உதவியோடு கிழடு கட்டைகளை ஒத்துக் கொள்ளப்பண்ணுவதே பெரிதாகிப் போயிற்று.

மார்க்கண்டுவுக்கும் நடேசுவைப் பார்த்துத்தான் நம்பிக்கை வந்தது. கும்மிருட்டில் அந்தப் பனங்காட்டில் சலசலப்பு. வானத்து நட்சத்திரங்களின் மினுமினுப்பு இவைகளின் பின்னணியில் மார்க்கண்டு இதைக் குருக்களிடம் சொன்ன போது - அரைப்போதையின் தூக்க நிலையை உதறிச் சிலிர்த்தது.

                           - 2 -

'எட விசரா, இப்ப வாடா, நான் கூட்டிக்கொண்டுபோறன்.' என்று குருக்கள் சுருதியைக் கூட்டி விதிர்த்தார். வெறிப் பிடிவாதம் பிறகு சுருக்கென ஏறி 'வாடா' என்று கையைப் பிடித்துத் திரும்பவும் இழுத்தார். மார்க்கண்டுவுக்கு உதறல். கிருஷ்ணன் ஒருவரிடமும் சொல்லாதே என்றது ஞாபகத்துக்கு வந்தது. nkள்ள nkள்ள எல்லாவற்றையும் சொன்னபோது குருக்கள் வழக்கம்போல் அவரது மௌன உலகில் பிரவேசித்தார்.

'தர்ம கர்த்தா தம்பிமுத்துவின் பளபளப்புக் கண்ணாடிகளினூடாக நெருப்புக் கதிர்கள் பறந்து மார்க்கண்டுவைத் தீக்கிரையாக்கி...' சிலிர்க்கின்ற ஓர் உணர்வில் மார்க்கண்டுவின் குறைந்த சுருதிக் கதையின் சாரமும் சேர்ந்து வெறியை ஊட்டி அவருக்கே பழகிப்போன இயல்பில் அடங்குகின்றன.
அப்போதுதான் அந்த வருஷத் திருவிழா தொடங்கியது.

யாகசாலையில் புகையும், அந்த யாகசாலையில் மூலையில் இருக்கும் போத்தலிலிருந்து பிரிந்து சென்ற திரவமுஞ் சேர்ந்து குருக்கள் கண்ணைச் சிவப்பாக்குகின்றன. பத்ததி வாசிக்கிறவன் 'யாழ்தேவி' குருக்கள் 'ஸ்லோட்றெயின்' வேகமாற்றம் அதிகமாகி அதிகமாகி இடமாற்றமாகி மாறி குருக்கள் வடக்குக் கும்பத்தில் நிற்கும் போது பத்ததி 'ஓம் தெஷண கும்பாய நம| வில் நிற்கிறது. குருக்களின் மனதில் மனுஷியின் போனபிள்ளைப் பேற்றுக்கு தம்பிமுத்துவிடமே வாங்கிய கடனை இந்தத் திருவிழாவுடன் அடைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றிய விசாலமான ஆய்வு. அதில் இந்த மார்க்கண்டுவின் கதை முள்ளாகக் குத்திக் கத்திக் காயமாகிப் பெருத்துக் கொண்டே வருகிறது. வெளியில் கோயில் நாயனத்தின் தேய்ந்த உருக்குலைந்த 'கல்யாணி'  
  
அதற்கு இரண்டு பொருட்கள் ஒத்துப் போவதும் முரண்படுவதும் ஒரேயடியாக நடக்குமென்ற விசால தத்துவத்தை விளக்கு முயற்சியோ ஒரு மேளம். மனஞ் சூனியமாகி யாகசாலைக்கு வெளியே நிற்கிற கிழவிகள் கூட்டம், அங்குமிங்குமாகத் திரியும் அலுவல்காரர்கள், லவுட்ஸ்பீக்கரைக் காணுமிடத்திலெல்லாங் காணப்படக் கூடிய ஒரு பெடியன்கள் கூட்டம். வெளியில் கடலைக்காரர்கள் இவர்களின் பிரசன்னத்துடன் குருக்கள் மகன் பாலனுக்குந் திருவிழாத் தொடங்குகிறது. யாகசாலையில் புகையில் கண்ணைக் கசக்குகிறான். ஸ்கூலால் கூட்டிச் சென்று காட்டப் பட்ட சீமெந்து பாக்டரியின் ஞாபகம் வருகிறது.

இங்கே என்ன தயாரிக்கிறார்கள்.?

இந்த அப்பாவே மோசம்.. மூலையில் பார். ஓடியாடி அதையெடுத்து இதையெடுத்து- மடைப் பள்ளிக்குப் போகும் போது- அங்கே மடைப் பள்ளி ஐயர் நிற்கிறார். கோவில் மண்டபத்தின் மூலையில் அவன் தாய் குந்தியிருந்து கிழவி பொன்னம்மாவுடன் கதைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் தம்பி தங்கைகள் மண்டபத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சலசலப்புகளுக்கிடையில் கொடியேறுகிறது. ஓடியாடுபவர்களும் ஒரு கணம் கும்பிட்டுக் கொள்கிறார்கள். பூசை முடிந்து சுவாமி புறப்பாட்டுக்கான ஆயத்தங்கள் நடக்கின்றன. பாலனுக்கும் வேலை கடுமைதான். எனினும் சம்பாவனை தந்த உத்வேகத்தால், அதைத் தகப்பன் விசாரிக்காததால் அவன் மனதில் கடலை, ஐஸ்கிரீம் கனவுகள் நிரம்பி இந்தக் கடுமையை வெகுவாகக் குறைக்கின்றன. வசந்த மண்டபத்தில் 'சுவாமிக்கு' அலங்காரம் நடக்கிறது. வடிவாக இருக்கிறது.

வெளியே 'அரோகரா! அரோகரா!' என்ற சத்தம் கேட்கத் தொடங்கி வர வர வலுப்பெற்றுக் கொண்டே வர, அதில் இருந்த ஒரு வெறி நிரம்பிய கன்னித் தன்மை ஈர்க்க பாலன் வெளியே ஓடி வந்து பார்க்கிறான்.

- 3 - 

நடேசுவின் தலைமையில் ஒரு கூட்டம் கூப்பிய கரங்களுடன் கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் நடேசுவுக்கு அருகில் நடந்து வந்து கொண்டிருந்தான். கையில் கற்பூரத்துடன் பெண்கள். அதில் இளவயசுகளே அதிகம். மார்க்கண்டுவின் கையில் ஓர் அருச்சனைத் தட்டு, கோயிலை நெருங்க நெருங்க 'அரோகரா'வின் வெறி நிரம்பிய லயம் அவர்களில் உருவைத் தோற்றுவித்து மற்றவை எல்லாவற்றையும் அவர்கள் மனத்திலிருந்து ஒதுக்கி அழித்து அவர்களைப் புதியவர்களாக்கி இருந்தது.

பாலன் பார்க்கிறான்.

மார்க்கண்டுவின் மகன் சுந்தரமும் அக்கூட்டத்துடன் பரந்து வந்து கொண்டிருந்த சிறுவர்களுடன் ஒருவனாக வருவது தெரிந்தது. அவன் இடுப்பில் வெள்ளைத் துண்டு. அரோகராச் சத்தம் அந்தச் சிறுவர் மனதிலும் புகுந்து, அதன் சுருதியுடனும் லயத்துடனும் ஈடுபடுத்தி, அவர்களின், புதியதைப் பார்க்கப்போகிற ஆவலையும் ஒதுக்கி விடுகின்றன.

அந்தக் குட்டிச் சைனியம் தனக்கே உரித்தானதொரு கம்பீரத்துடன் கோவிலை மிக நெருங்கி வந்து வெளி வாசலைத் தாண்டி உள்ளே புகக் காலடி எடுத்து வைக்காத மட்டும் பரம்பரை பரம்பரையாகக் கற்பனையில் கூட இது தோன்றியிருக்காததால் இந்தச் சைனியத்தின் நோக்கம் மற்றவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் எல்லோரும் வெளிவாசலைத் தாண்டி மண்டபத்தில் பிரவேசித்தபோதே என்ன நடக்கிறது என்பது பலர் மண்டையில் ஏறியது.

'டோய்! கோவிலுக்கை உள்ளட்டுட்டாங்கள்' என்று யாரோ கத்திக் கொண்டோடுவது கேட்டது. வேறு பலரையுங் கூட்டி வரத்தான் திடு திடுமெனக் குறுக்குந் நெறுக்குமோடி சில கணங்களில் வேறோரணி திரண்டது.

மார்க்கண்டு அருச்சனைத் தட்டுடன் எல்லாரையும் விலக்கி முன்னேறி வருவதைப் பார்த்து அதை வாங்கினார். வாங்கும்போதே மண்டபத்தில் நின்ற கிழங்களின் மத்தியில் ஒரு கேவல் சத்தம் ஓடி வருபவர்களின் ஓசைக்கு ஓர் அவலச் சுருதியாய்ப் பெருகியது. முத்தாய்ப்பாக 'உந்தப் பிராமணியைப் பார்' என்ற குழறல் கேட்டது.

'ஓம் அத்திய பூர்வோத்தேவங்குண' என்று எதிரொலி மூலஸ்தானத்திலிருந்து கேட்கத் தொடங்கியது. அருச்சனை பாதி நடந்தேயிருக்காது, அதற்குள் பட்டாளம் திரண்டு தடி, மண்வெட்டிப் பிடிகளுடன் பிரவேசித்து 'ஓடுங்கோடா வெளியாலை' என்று அங்கிருந்த வெகு தீர்மானத்துடன் வந்திருந்தவர்களை நெட்டித் தள்ள முயற்சித்த போது, நடேசு பெருத்த குரலில் 'இங்கை இருக்கிற யாரிலையெண்டாலும் கை வைத்தால் நடக்கிற சேதி பிறகு தெரியும். நாங்கள் சமாதானமாய் ஆரையுங் குழப்பாமல் அமைதியாய்ச் சாமி கும்பிட வந்தனாங்கள். இது ஆண்டவன் சந்நதி  நாங்கள்...'

'டாய்! எங்களுக்குச் சொல்லுறாய்,' சுருட்டுக்காரப் பொன்னையர் மற்றவர்கள் வந்து சேர்ந்த துணிவில், நடேசுவின் தீர்மானமான குரல் ஏற்படுத்திய மௌனத்தையும் கலைய முழக்கினார்.

'அடியடா' என்று வெகு தீர்மானமாக உத்தரவிட்டுக்கொண்டு முன்னாலொன்று பாய்ந்தது.

இதற்குள் பெண்கள் ஓடத் தொடங்கினார்கள். இத்தனை களேபரத்தினுள்ளும் அருச்சனை நிற்கவில்லை. அடிக்கிறவனை அடித்துத் தள்ளுறவனைத் தள்ளிச் சனத்தைக் கலைக்க முயற்சி மும்முரம், நடேசுவுக்கும் கிருஷ்ணனுக்கும் விழுந்த அடியில் தள்ளாடித் தள்ளாடி இதைத் தடுக்க முயன்று கடைசியில் விழ, நிலத்தோடு தேய்த்து இழுத்துக் கொண்டு போய் வெளியே போட்டது. அத்தோடு மற்றவர்களும் உற்சாகமிழந்து வெளியே போகத் தலைப்பட்ட போது, மார்க்கண்டுவையும் அடித்துத் தள்ளித் துரத்துகிற போது....... சுந்தரம் பார்க்கிறான். 'ஐயோ அப்புவை அடிக்கினம்.......'

- 4 –

தம்பிமுத்து ஆக்ரோஷமாக வந்து பின்னால் நிற்பதைப் போல உணர்வு குருக்களுக்கு. திரும்பியே பார்க்காமல் அருச்சனையை முடித்து மூலஸ்தானத்திலிருந்து தட்டுடன் திரும்பி வந்தபோது இந்தக் களேபரங்கள் உச்ச நிலையில் இருந்தன.
திரும்பி இதைப் பார்க்கச் சகிக்கவொண்ணாமல் மூலஸ்தானத்துக்கே போய் விட்டார்.
 nkள்ளத்

சத்தங்கள் அடங்குவது யாரோ ஒருவரின் வருகை காரணமாகத்தான். தம்பிமுத்துவின் கண்ணாடிகளினூடாக நெருப்புப் பொறி பறப்பது நிதர்சனமாகத் தெரிந்தது. கறுப்புப் பின்னணியில் வெள்ளைச் சலவை வேட்டி, பொட்டு, இடுப்பு வரை தொங்குகிற சங்கிலி, இவற்றின் நேர்த்தியின் பின்னால் தெரிகிற அதிகாரம், செருக்கு இந்தக் கோபத்துக்குப் பின்னணி.

பொன்னையரின் வர்ணனையில் குருக்களின் செய்கைகளின் விபரங்கள் ஒன்றுக்குப் பத்தாகிப் பஞ்சாய் எண்ணையாய் அந்த நெருப்பில் விழ....

'ஓய் குருக்கள்' தர்மகர்த்தா போட்ட கூப்பாட்டில்  கூட்டத்தில் ஓர் அமைதியலை பாய்ந்து முன்னேறியது. வழக்கம் போலவே.... அவருந் தலை குனிந்து முன்னே வந்து நின்றார். வழக்கம் போலவே இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காய் முடியப்போகிறதைப் போலத் தோன்றத் தொடங்கத் தம்பிமுத்துவுக்குக் கோபம் நெருப்புக் கொழுந்து விட்டுக் கனல் கக்கிப் பெருகத் தொடங்கியது.

'ஓய் குருக்கள் உமக்கு அறிவில்லையே காணும். உந்தப் பள்ளர் நளவரிடைத் தட்டை வாங்கி மூலஸ்தானத்துக்கை கொண்டு போவிட்டீர்.....'

'அவர்கள்' உள்ளே வந்து விட்டதையும் அதை இத்தனை பேர் நின்றுந் தடுக்க முடியாமல் போனதையும் மறுகி வெடித்தார்.

'அருச்சனையெண்டால் ஆராளெண்டுந் தெரியேல்லைப்போலக் கிடக்கு' குருக்கள் தலையை நிமிர்த்திச் சிரித்தார்.

'ஏன்?' தம்பிமுத்துவுக்கு வெறியேறியது.

'நான் நினைச்சால் என்ன செய்வன் தெரியுமே  ஆய்.... தெரியுமோ என்டு கேக்கிறன்.....' குருக்களை நெருங்கினார். 'முதலாளி விடுங்கோ' பொன்னையர் மறித்தார். பாலன் பார்க்கிறான்.

'உவன் நாசமாய்ப்போக'

அவனது தாய் இடுப்பில் கைக்குழந்தையுடன்  வருகிறாள். அவள் முகத்தில் மரத்துப்போன பாவமே தெரிகிறது. தம்பிமுத்துவுக்குச்  சுரதி கூடுகிறது.

'இத்தனை காலமும் பொறுத்தாச்சு....'

நெருப்பு எரியத் தொடங்கிக் கனல் கக்கிப் புகையை விட்டுக் கடைசியாகத் தணல் காட்டும் நிலைக்கு வந்தது.

'ம் போனது போகட்டும் ஒரு பிராயச் சித்தத்துக்கு ஒழுங்கு படுத்தும்'

'என்னால் முடியாது. நான் செய்ய மாட்டேன்' குருக்களின் நிதானத்தில் உறுதி தெரிந்தது.

'என்ன காணும்' தனது கட்டளைகள் மீறப்படுவது, அதை இத்தனை சனங்களும் பார்ப்பது, அது வழக்கமில்லாததொன்றாய் இருப்பது  இவையெல்லாவற்றிற்கும் மேலாய் வேறொரு குருக்களையுங் கொண்டு வர முடியாத நிலையாய்க் கொடியும் ஏறி முடிந்தது, எல்லாம் சேர்ந்து தன்னை எரிப்பதைப் போல தம்பிமுத்துவுக்கு ஒரு உணர்வு. இந்த உணர்வு அவர் கண்களினூடாகப் பாய்ந்தது.....

'ம்ம் நான் கவனிச்சுக் கொள்ளுறன்' திரும்பி விறு விறென்று நடப்பதில் தெரிந்தது அவர் கோபம். பொன்னையர் அவரின் கார் வரைக்கும் பின்னால் ஓடினார். கூட்டத்தின் கவனம் கோவிலுக்குள் போனவர்கள் மீது திரும்பியது.

                        - 5 -

ஓடியவர்கள் போக நடேசு கிருஷ்ணன் இவர்களைக் கொண்ட ஒரு இளங் கூட்டம் கோவில் வாசலுக்கு வெளியே மிஞ்சியிருந்தது. நடேசுவுக்கும் கிருஷ்ணனுக்கும் அடியினால் அரை மயக்கம். இம்முறை சட்டக் கழுதைக்கு எட்ட நிற்கும் யோசனையில் சாத்வீகமாகவே இறுதிவரை பார்ப்பது என்பது தீர்க்கமான முடிவு. கூட்டம் இவர்களின் மீது பாய்ந்தது.

கணேசமூர்த்தி மாஸ்டர்- ஒரு முன்னை நாள் கொம்யூனிஸ்ட், இன்று முழுநேர அரசியல்வாதிகளுக்கும், வேலை தேடுபவர்கள் மாலை போடுபவர்கள் இவர்களுக்குமிடையில் நிற்கும் ஒரு அரைநேர மாஸ்டர்- தனது மனைவி பிள்ளைகள் சகிதம் அப்போதுதான், வந்து இந்தக் கலவரங்களைக் கண்டுங் காணாதது போல் கோவிலுக்குள்ளே போய்ப் பெரிய கும்பிடு போட்டார். கும்பிடும் போது, இதற்குத் தலைமை, அதோடு சம்பந்தப்பட்ட கட்சிச் சிக்கல்களின் பின்னணியில் தான் போய்த் தலையிடுவதன் விளைவுகளின் பிரதிபலன்களை மனம் ஆராய்ந்தது. காந்தி, மார்க்ஸ், ஏன்செல்ஸ், 1930ம் ஆண்டு நடந்த 'சமபந்தி போசனத்தில்' தான் இளைஞனாயிருக்கும்போது ஏற்ற பங்கு, இவைகளின் நினைவுகள் குழம்பாய்ப் பொங்கிச் சில கணங்களின் பின்னர், 'நீ கும்பிடு நான் உதுக்கை போயிட்டு வாறன்..'

'உதுக்கை நீங்களேன் போறியள்? இங்காலை வாங்கோ' என்று அவர் பாரியார் வழக்கமான கனத்துடனும் கண்டிப்புடனும் இரைய.....

ஐயர் வெளிவாசலுக்கு ஓடுவதைக் கண்டு மாஸ்டர் பின் தொடர்ந்தார்.

'நிப்பாட்டுங்கோ....' ஐயரின் சத்தம் எடுபட நேரமில்லை.

'நிப்பாட்டுங்கோ' மாஸ்டர் புகுந்தார்.

நிற்பாட்டி ஓய்வதற்குள் சத்தியாக்கிரகிகளில் சில இளவட்டங்கள் நடேசுவுக்கும் கிருஷ்ணனுக்கும் அடி விழுவதைப் பார்த்துச் சகியாமல் முதலில் தடுக்க முயன்று பிறகு அவர்களை எதிர்க்க முயன்று உலைய நேரிட்டது. கடைசியாய்க் கூட்டங் கலையவும் பொலிஸ் ஜீப்பொன்று வரவும் சரியாயிருந்தது.
அடுத்த நாள் காலை கோவில் வாசற் கதவு சாத்தப்பட்டிருந்தது. தம்பிமுத்துவின் உத்தரவுதான். இந்தக் கலவரங்கள் நடந்து தன் கோவிலுக்கும் பொலிஸ் காவல் வந்தது அவரது மனதில் கிளு கிளுப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இந்த ஐயரின் விவகாரம் மட்டும் முள்ளாய்க் குத்தி ஷஎன்ன செய்வது?| என்ற நிலைக்கு அவரைத் தள்ளியிருந்தது.

குருக்கள் காலையில் பார்த்தபோது, வெளி வாசற் கதவு பூட்டியிருந்தது. திருவிழாக்காரர் மகன் தெற்கு வாசற் கதவால் வருவதைப் பார்த்து....

'கதவு ஏன் பூட்டியிருக்குது.?'

புரியத் தொடங்க, nkள்ளக் குறுக்கும் நெடுக்குந் நாலைந்து தரம் நடந்து கடைசியாக எல்லாமே வெறுமையாகப் போகிற உணர்வுடன் வெளிவாசற் கதவை நோக்கி நடந்தார்.

ஒரு கணம்-தம்பிமுத்துவின் கண்ணாடிக்குள்ளிருந்து பொறி பறந்து தன்னைச் சுடுவது போல ஒரு உணர்வு. திறாங்கை  எடுத்து விட்டுக் கதவைத் திறந்த போது,

'ஐயரே உது என்ன.?' பொலிஸ்காரர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த பொன்னையர் குழறியபடி ஓடி வந்தார்.

'உமக்கு விசரே.? முதலாளி கண்டால் என்ன நடக்குந் தெரியுமோ?'

குருக்கள் பேசாமற் திரும்பி உள்ளே போகப் பொன்னையர் திகைத்துப் போய்க் கறுவியபடியே தம்பிமுத்துவின் வீட்டை நோக்கி ஓடினார். இன்ஸ்பெக்டருக்கு இது புதினம்.

- 6 -

பாலன் இங்குமங்குமாக ஓடியபடி வேலைகள் செய்து கொண்டிருக்கிறான். யாகசாலையில் எல்லாம் எடுத்து வைத்தாயிற்று. திருவிழாக்காரர் வர வேண்டியதுதான்.

'என்ன நடக்கப் போகிறது.?'

வெளியே தம்பிமுத்து பரிவாரமொன்றுடன் வருகிறார். சுருட்டுக்காரப் பொன்னையர் சொல்லிக் கொண்டு வருவது காதில் ஏறவில்லை. அவரின் ஒரு வெறித்த பார்வை கோபமென்பதே அகங்காரத்தின் ஒரு வெளியீடு என்பதை நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிறது.

'ஓய் குருக்கள்'

பத்ததி வாசிக்கும் ராமநாதன் குருக்களிடம் சடுதியாக ஓடினான். குருக்கள் கையைக் கட்டியபடியே வந்து நின்றார்.

'ஓய் இந்தக் கோவிலுக்கு நீரோ நானோ காணும் மனேஜ்மன்ற்?' ஒரு கண நேர மௌனத்தையுஞ் சகிக்க முடியவில்லை.

'ஓய் சொல்லுங் காணும்......' குருக்களை நெருங்கினார். அவருடைய வழக்கமான தாமதச் சேற்றில் ஒரு கணம் இறங்கிய குருக்கள் சுதாரித்துக் கொண்டு, சிலிர்த்துச் சிலிர்ப்பை மனதின் ஒரு மூலைக்குக் கொண்டு போய் அதையும் பொறுக்காமல்......

'நீர்தான்....' எதிர் பார்த்த இந்த விடையைக் கொண்டு கொஞ்சங் கொஞ்சமாய் அதைச் சுற்றித் தன் வாதங்களைப் பெரிதாக எழுப்பிக் குருக்களின் ஒழுங்கீனங்கள், அதைத் தான் 'குடும்பகாரன்' ரீதியில் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்த, தோரணைகள் இன்னும் அத்துடன் வேறு தனது பெருமைகள் இவைகளுக்கு வார்த்தை ரூபங்கள் கொடுத்துக் கொஞ்சமாய்ச் சத்தம் கூடி.... குருக்களை அழைப்பது பன்மையாக இருந்து ஒருமையாகும் நிலைக்கு வந்தது. நெருப்பு, கண்ணாடிக் கண்களுடாக இந்த முறை குருக்களைச் சுட்டது. குருக்கள் பாலனைப் பார்த்து,

'கத்தியைக் கொண்டு வா' பாலன் ஓடிப் போய் வந்தான்.

கத்தியால் தன் கங்கணத்தை அறுத்தார்.

'நீர் செய்யுறதைச்....' குருக்கள் போவதைக் கண்டு எல்லாரும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

'நான் பார்த்துக் கொள்ளுறன்.| பரிவாரம் திரும்புகிறது.

குருக்கள் வீட்டில் அமைதி கனத்துக் கல்லாய் நிரம்பியிருந்தது. பாலன் ஒரு மூலையிலிருந்து அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்பா ஒரு மூலையில், அம்மா ஒரு மூலையில் ஆளுக்கொருவராய்க் குந்தியிருக்கிறார்கள். அம்மாவின் முகஞ் சிவந்து வீங்கியிருக்கிறது. ஷஅப்பா இனி என்ன செய்யப் போகிறார்'

போன வருஷத்துப் பிள்ளைப் பேற்றுக் கடன். இந்த வருஷத்து இப்போதைய கடன், நாளை நடக்கப் போகும் பாடு இவையெல்லாஞ் சேர்ந்து அவர் மனதில் கோயில் மேளம் மாதிரியே அபத்தமாய் களையிட்டன. பூபாலு வெகு உற்சாகமாக வந்து கொண்டிருந்தான். கடை நெருக்கடியிலிருந்து கிடைத்த கொஞ்ச நேர விடுதலை, அவனுக்குத் தரப்பட்டிருக்கிற 'பவர்' இந்த மாத்திரைகள் நன்றாக வேலை செய்தன. ஐயர் வீடு நெருங்க நெருங்க அவனுக்குள்ளே ஒரு மிடுக்குக் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பெருத்து வியாபித்து.....

அவன் பட்டு வேட்டி சால்வையுடன் நாபிக்கமலம் வரை தொங்குகிற சங்கிலியுடன் நடந்து வருகிறான், கோயிலுக்குள் சனங்கள் - பெண்கள் - ஏராளம்.

                            - 7 -

'முதலாளி வாறார் விலத்துங்கோ....' கடையில் அவனுடன் நிற்கிற வட்டு சுப்பு - பெரிதாக வளர்ந்து - சனங்களை விலத்துகிறான்.

'ஓய் ஐயரே' குரல் தம்பிமுத்துவின் குரல் மாதிரியே சன்னமாய்க் கம்பீரமாய் ஒலிக்கிறது. ஐயர் நடுங்கியபடி ஓடி வருகிறார். கோவிலைச் சுற்றி வந்துகொண்டு ஒவ்வொன்றாய் ஐயரில் பாணம். பின்னால் ஒரு பட்டாளம் பெண்கள் அவனைப் பார்க்கிறார்கள்.

'உதென்ன காணும் உந்த விளக்கு?. உதைத் துடைப்பிக்கிறேல்லியே?'

'ஏன் இவ்வளவு நேரம்? பூசையைத் துடங்குமென் காணும்....' பெண்கள் பார்த்து ரசிக்கிறார்கள். அதில் தம்பிமுத்துவின் மகளும் நிற்கிறாள். அவள் இவனைப் பார்த்து ரசித்தபடியே அவனை நோக்கி வருகிறாள், வந்து....

பூபாலு ஐயர் வீட்டை நெருங்கி உள்ளே எட்டி 'ஐயா' என்றதுந்தான் மௌனம் கலைந்தது.

'முதலாளி உங்களை உடனே உந்தச் சங்கிலியைத் திருப்புறதுக்கு ஆயத்தமாக வரட்டாம். இல்லாட்டி நடக்கிறது தெரியுந்தானே?'

'சரி சரியோ தம்பி இந்தா வாறன்' அவனுக்கு அதில் இருந்த காரம் மணம் குணம் இவையொன்றுந் தெரிய நியாயமில்லை. கடை யோசனைகள் திரும்பவரப் போய் விட்டான். பத்திதி வாசிக்கும் ராமநாதன் நின்றால் மனுசியையும் பிள்ளைகளையும் அவள் தகப்பன் வீட்டிற்குத் தற்போதைக்கு அனுப்பலாமே என்று யோசித்தவராய்-

'என்ன இந்த ராமநாதனைக் காணேல்லை.?'

முணு முணுப்பு மனுஷி காதில் விழுந்து இயக்கத்தை ஏற்படுத்தியது. இந்த எரி மலைகளின் கொதிப்பு வெடிப்புகளைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போலவே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அடக்கினாள். ஐயர் சால்வையை உதறிப் போட்டுக் கொண்டு தீர்மானத்துடன் எழுந்து, ஒன்றையுங் கவனியாமல் வேகமாய் நடந்தார்.

'ஆரிட்ட கேக்கப் போறார்?'

கால்கள் அவரையும் அறியாமல் மார்க்கண்டுவின் கொட்டிலுக்கு இழுத்த போது பின்நேரம் இருந்த போதும் வழக்கத்துக்கு மாறான ஒரு துணிவு.

'ஐயா நீங்கள் போங்கோ நான் கொண்டாறன்......' மர்க்கண்டு நொண்டியபடி வெளியே வந்தான்.

'அது கிடக்கட்டும் இப்ப.......'

இந்தச் சங்கிலி விவகாரத்தைச் சொல்லி முடித்த போது மார்க்கண்டு யோசித்ததாய்த் தெரியவில்லை.
'போங்கோ நான் எல்லாம் கொண்டு வாறன்' ஐயர் திரும்பி விட்டார். மார்க்கண்டு இரண்டுடனுந்தான் வந்தான். மாலைச் சூரியன் மரமங்களினுதவியுடன் கோடுகள் கீறும் நேரம் பட்டணத்துக் கோவில் ஒன்றில் ஆள் தேவை என்று கொஞ்ச நாளைக்கு முன்னர் வந்து விசாரித்த விபரத்தைக் குருக்கள் சொன்னார்.

'மார்க்கண்டு ஒரு வருஷமாகுமடா'

'அதைப் பிறகு பார்ப்பம்'

                         - 8 -

தம்பிமுத்துவின் கடையை அடைந்த போது அவரே இரண்டு பேராகிப் போன மாதிரியொரு மப்பு உஷார். கடையில் அவரில்லை. தம்பிமுத்துவின் வீட்டுக்கே போன போது அங்கே......... 

ராமநாதன், அவன் தமையன் நடராஜனுடன் நிற்கிறான்.

'நடராஜனை உடனே இங்கே சேர்க்கக் கூட்டிக் கொண்டு வந்திட்டான் போல கிடக்கு'

ராமநாதனைக் குருக்கள் பார்க்க ராமநாதன் அப்பால் திரும்பிக் கொள்கிறான், நடராஜன் முழிக்கிறான்.
'என்ன காணும்....' தம்பிமுத்துவுக்குத் திரம்பவும் ஆக்ரோஷம் வருவதற்கான அறிகுறி அதில் போரில் வெல்லப் போகிறோமென்ற புகையுணர்வு குருக்கள் காசை மடியிலிருந்து அவிழ்த்து எடுக்க.....

பிராமணிக்குக் காசு எங்கே கிடைச்சுது.?

'மணியம்' பட்டாசு புஸ்வாணமாவது போலத் தம்பிமுத்துவுக்குத் தெரிகிறது. மணியம் வந்து நோட்டையெடுத்து வரவு எழுதுகிறான். தம்பிமுத்து உள்ளே போய் அறையில் இரும்புப் பெட்டியிலிருந்து சங்கிலியைக் கொண்டு வருகிறார். காசை வைக்கத் திரும்பப் போகிறார்.

'தம்பி நடராஜா'

நடராஜ ஐயர் பார்க்கிறார்.

'தம்பி பிராயச்சித்த அபிஷேகமெல்லாம் ஆயத்தமோ?'

'ஓம்  ஓம்'

ராமநாதனின் இரண்டு உருவங்களுந் தெரிகின்றன.

'அதுக்கு முதலிலையடா அந்தா தெரியுமே....'

அவர் காட்டுந் திசையில் தம்பிமுத்துவின் இரும்புப் பெட்டி- அதில் காசை வைத்துக் கொண்ருக்கிறார்- தெரிகிறது.

'உதுக்கு உந்தப்பிராயச்சித்த அபிஷேகத்தைச் செய்யடா நான் வாறன்.'

ஒரு ஏளனப் புன்னகை தெரிந்தாலும் குருக்களின் மனதில் ஒன்றுமில்லை. அவர் பேசாமல் போகிறார்.


                                                        -----       -----        ------
                              
        தரிசனங்கள்  தொகுதி - மே, 1973.     

New hope for infertile men

Men’s skin cells were turned into immature sperm thanks to a new technique that could put an end to male infertility.
AlexMitt_sperm_shutterstock
Image: Alex Mitt/Shutterstock
There’s some promising news for men diagnosed with infertility – including the 1 percent who cannot produce any sperm.
Scientist removed skin cells from three infertile men and turned them into testicular stem cells. These were then injected into mice testes, where, surprisingly, they developed into early-stage sperm cells.
The researchers suspect that injecting testicular stem cells into infertile men’s testes will result in mature sperm cells.
"This work suggests these infertile men might have had testicular stem cells at some point, and the problem is that they cannot maintain them,” explained Allan Pacey, senior lecturer at Sheffield University, to the Guardian. “So if you can make iPS cells and put them back into the man, you might be able to keep enough in the testes for them to produce some sperm. You'll never restore them back to normal, but they might have a few months or years of making sperm that's enough to give them fertility back.”
The breakthough could be a game changer for men who are unable to make healthy sperm and for those that have lost their fertility due to cancer treatments.
Source: The Guardian

பூமாலை- ஆர். சூடாமணி

அன்புள்ள ரம்யா,

உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காக இல்லை. இப்படி இருக்கிறாயே என்பதற்காக. 

r-sudamani கடைசியில் உன் துக்கம்தான் என்ன? சிறு வயதில் உன் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தினாள். உன் அப்பா தனியாய் உன்னிடம் வந்து ''எனக்காகப் பொறுத்துக்கோம்மா ரமி! அப்பாவுக்கு உன்கிட்ட கொள்ளைப் பிரியம். ஆனா சித்தியை நான் கண்டிக்க முடியாது. அப்புறம் வீட்ல பிரளயம் தான் வரும். எனக்காகப் பொறுத்துக்கோ'' என்று சொல்வாரே தவிர உன்னைச் சித்தியின் கொடுமையிலிருந்து காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. உனக்கு நான்கு வயதாகும்வரை உன் அம்மா உயிரோடு இருந்தாள். ''என் பட்டுச்சுட்டி! என் செல்லக்குட்டி!'' என்றெல்லாம் கொஞ்சி உன் உள்ளங்கையில் அவள் முத்தமிடுவது ஏதோ கனவுபோல் உனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்தக் கையில் சித்தி சூடு போட்டாள் என்ற நினைவு தகிக்கிறது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை உன்னைச் சீராட்டிச் செல்லம் கொடுத்து உன் சுருள் முடியைச் சீவிக் கிருஷ்ணன் கொண்டை போட்டு அழகு பார்த்திருந்த அதே சித்தி, தனக்கு ஒரு மகன் பிறந்த பிறகு உன்னை வெறுத்துத் துன்புறுத்தலானாள் என்ற நினைவு அதை விட அதிகமாய்த் தகிக்கிறது.

அப்புறம் உன் கணவன்.

கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் உன் தர்க்கப் புலமையைக் கண்டு பிரமித்து உன்னை மணக்க விரும்பியவர். அவர் பெற்றோர் உன்னைப் பார்க்க வந்தபோது உன் சித்தி பேசியதையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறாய்.

''ரம்யாவையா பிடிச்சிருக்காம் உங்க பையனுக்கு? நிச்சயமாய் இந்த வீட்டு ரம்யாதானா?''

''ஆமாம்''

''அவ அவ்வளவு சேப்பு கூட இல்லையே? கிட்டத்திலேர்ந்து பார்த்தாரா?''

''அவ மேடைப் பேச்சில் அறிவு ததும் பித்தாம்..''

''குடித்தனம் பண்ணப் போற பெண்ணுக்கு எதுக்கு அறிவும் பேச்சும்? எதிர்த்து வாயாடவா?''

''ஏன் பார்க்கவும்தான் அழகாயிருக்கா!''

''அதுசரி. கழுதைகூட பருவத்தில் அழகாய்த் தானிருக்கும்...''

இது எதுவும் உன் நினைவிலிருந்து இன்றும் அழியவில்லை. இதுபோல் எத்தனையோ குரூரங்களைச் சித்தியிடம் சந்தித்து நீ உணர்ந்த நோவும் அவமானமும் கோபமும் இன்னும் மறக்கவில்லை. ஐம்பது வயதாகிறது உனக்கு!

நான்கு மாதங்கள் முன்பு நீ அரை நூற்றாண்டு முடித்த போது உன் கணவர் உனக்கு மல்லி மொக்கு டிஸைன் தங்க நெக்லஸ் வாங்கிப் பரிசளித்தார்.

''உனக்கும் நாட்டுக்கும் பிறந்தநாள் பொன்விழா. என் ரம்யாதேவிக்கு அன்பான வாழ்த்துக்கள்!''

அவர் முகத்தில் மலர்ச்சி. பல ஆண்டுகள் முன்பு முதல் முதலில் உன்னைக் கண்டு விரித்திருந்த அதே லயிப்பு.

நீ முகம் சுளித்தாய். எனக்கு எழுதியிருக்கிறாய்.

''ஆமாம். தங்க நகை பரிசளித்தால் ஏமாந்துவிடுவேனாக்கும்! பொன்விழா அது இது என்று அலங்காரமாய் பேசிவிட்டால் போதுமா? பேச்சில் இருக்கும் அன்பு மனசில் இருக்க வேணாமா? கண்தான் அலைகிறதே?''

அவர் மனசில் என்ன இருக்கிறதோ என்னமோ, உன் மனசில் ஊட்டி இன்னும் இருக்கிறது.

அப்போது உனக்கு இருபத்தைந்து வயது. நளினி மூன்று வயதுக் குழந்தை. உன் மடியில் நளினி. சுற்றிலும் உதக மண்டலத்தின் குளிர்ச்சி. தொலைவில் வானத்துக்கு அவாவுறும் யூகலிப்ட்ஸ் மரங்கள். பொட்டானிகல் கார்டனில் இருக்கிறாய். பூக்களஞ்சியத்தின் வர்ணக் கோலாகலம். டேலியா, பிட்டூனியா, கிளாடியோலஸ், சாமந்தி, ரோஜா, லார்க்ஸ்பர், பெயர்களை அடுக்குவதால் இன்பம் கூடுமா என்ன? இன்பம் ஒரு பரிபூரணம். கூடுவதோ குறைவதோ அதற்கில்லை. மேடுகளின் உச்சியிலுள்ள மரங்களின் இலைப் பின்னல் வெப்பத்தை வடிக்கட்டித் தணித்துத் தரும் மிருதுவான சூரிய ஒளி, சரிவுகளில் சறுக்கி விளையாடும் பட்டுக் குழந்தைகள். வண்ண வண்ண ஸ்வெட்டர்களுள் ரோஜாக் கன்னங்கள் குலுங்கப் பந்துகளாய் உருண்டு வரும் உற்சாக ஒளிக் குவியல்கள். அவர்களின் கலீர் கலீரென்ற சிரிப்பு.

நீ அழகின் நடுவில் அமர்ந்திருந்தாய்.

பிக்னிக் கூடையை திறந்து ·ப்ளாஸ்கிலிருந்து சூடான, மணமிக்க தேநீரை ஒரு கப்பில் வார்த்து உன்னிடம் புன்னகையோடு நீட்டினார் உன் கணவர்.

''களைப்பாத் தெரியறே ரமி. ஸ்நாக்ஸ் அப்புறம் சாப்பிடலாம். முதல்ல டீயைக் குடி.''

நீ கையை நீட்டினாய். உன்னை நோக்கியிருந்த அவர் விழிகள் கணநேரம் அசைந்தன. எங்கே பார்க்கிறார்? நீயும் தலையை லேசாய்த் திருப்ப, கண்ணைக் கட்டி நிறுத்தும் ஒரு வடிவம். பச்சை நிறச் சேலையில் அழகின் பூர்ண அருள் பெற்ற உருவம். கூந்தல் மல்லிகையைவிட வெள்ளையாய்ப் புன்னகை. உடனிருந்தவர்களிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள். இந்தத் தொலைவில் பேச்சு கேட்க வில்லை. ஆனால் இவள் பேசினால், அந்தப் பேச்சும் அழகாய்த்தானிருக்க வேண்டும் என்று எண்ண வைக்கும் தோற்றம்.

உன் முகத்தில் மலர்ச்சி மறைந்து சுருசுருவென்று கோபம் ஏறியது. ''எனக்கு டீயும் வேணாம் ஒரு இழவும் வேணாம்'' குழந்தையைப் பொத்தென்று தரையில் இறக்கிவிட்டு எழுந்து நடந்தாய்.

உன் மனசில் ஊட்டி இன்னும் மறையவில்லை. அதனால்தான் இப்போதுகூட உன் ஐம்பதாம் பிறந்த நாளுக்கு அவர் பரிசளிக்கும் போது ''பேச்சில் இருக்கிற அன்பு மனசில் இருக்க வேணாமா?'' என்று கேட்கத் தோன்றுகிறது உனக்கு.

எப்படி அழுது தள்ளியிருக்கிறாய் இதையெல்லாம் நினைவுகூர்ந்து! ''சுவரோ டாயினும் சொல்லி அழு என்பதற்கிணங்க எழுதுகிறேன்'' என்று பழமொழியை வேறு துணைக்கு அழைத்திருக்கிறாய். நான் சுவர் இல்லை ரம்யா, உன்னுள் இருக்கும் கண்ணாடி. உன்னை நீ என்னில் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த அழுகையெல்லாம் ஒரு பீடிகைதான், உச்ச அழுகைக்கு வருவதற்கு.

சித்தியின் பிள்ளை உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறான். ஒரு புது மனிதன் போல் தன்னை அறிமுகம் செய்து கொண்டபின்:

"அக்கா! சென்ற காலத்தில் ஏதேதோ நடந்திருக்கலாம். அது ஒன்றையும் மனசில் வைத்துக் கொள்ளாதே. என்னை மன்னித்து விடு. நான் உன் சகோதரன் என்ற உரிமையை என்னிடமிருந்து பறித்து விடாதே. அந்த உரிமையின் பேரில் உன் கருணையை எதிர்நோக்கும் தீனனாக, இந்த வேண்டுகோளை உன்முன் வைக்கிறேன்.

''அம்மாவுக்குத் தீவிர இருதய நோய். சில ஆண்டுகளாகச் சிகிச்சை அளித்து வந்தும் பயனில்லை. வால்வ் கோளாறு. இனி அறுவைச் சிகிச்சை செய்வதுதான் ஒரே நம்பிக்கை என்று டாக்டர்கள் ஒன்று போல் சொல்லிவிட்டார்கள்.

''என் பொருளாதார நிலை மோசமென்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் பணக்காரனுமில்லை. பட்டுப்போர்த்திய வைக்கோல் பொம்மையான மத்திய வர்க்கக் குடும்பஸ்தன். அறுதியிட்ட வருவாயில் செலவு போக சேமிப்பு அதிகமில்லை. நிச்சயமாக, தொடரும் வைத்திய செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் செழுமை இல்லை. அதற்காக விதவைத் தாயை கைவிட முடியுமா? அங்கே இங்கே கடன் வாங்கி பெரும்பாலும் பணம் புரட்டிவிட்டேன். ஆனால் சுமார் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தயவு செய்து தந்து உதவுவாயா? தொழிலதிபரான உன் கணவரின் செல்வச் செழிப்புப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தத் தொகை உனக்குப் பெரிசில்லை. கேட்கும் உரிமை எனக்கு இல்லை என்று நீ கருதலாம். ஆயினும் என் தாயின் உயிரைக் காப்பாற்ற - ஒரு மனித உயிரைக் காப்பாற்ற - இந்த நெருக்கடி சமயத்தில் இவ்வுதவியை நீ செய்வாயா அக்கா?''

''என்ன கொழுப்பு!'' என்று நீ வெகுண்டாய், ''அக்காவாவது ஆட்டுக்குட்டியாவது! எத்தனையோ காலமாய்த் தொடர்பு விட்டுப் போன ஒருவன் இப்போது உதவி தேவைப்படுகிறதென்று உறவு கொண்டாடுகிறானா?'' என்று பொங்கினாய். ''என் கணவரிடம் பணம் இருப்பது மாற்றாம் மாமியாருக்கு வைத்தியம் பார்க்கவா?'' என்று நினைத்துப் பொருமினாய்.

உன்னைக் கொடுமை செய்த சித்தி சாகக் கிடக்கிறாள் என்ற எண்ணம் இனிக்கிறது. சாகட்டும் என்று வஞ்சம் தீர்க்கும் எண்ணம் இனிக்கிறது.
பின்னே உனக்கென்ன பிரச்சினை? ''பணம் தர முடியாது'' என்று தம்பிக்கு எழுதிப் போட்டுவிட்டு உன் இனிப்பான எண்ணங்களை ரசித்து கொண்டிருக்க வேண்டியதுதானே? மாறாக, வாழ்க்கையில் உனக்குள்ள குறைகளையெல்லாம் பட்டியலிட்டு, போதாதற்கு உன் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மெனோபாஸ் தொல்லை போன்ற உடல் உபாதைகளையும் சொல்லி ஒரு பாட்டம் அழுதுவிட்டு ''நான் எத்தனை கஷ்டப்படுகிறேன்! இப்போதும் படுகிறேன். இந்நிலையில் அந்தப் பயல் வேறு பணம் கேட்டு என்னைத் தொந்தரவு செய்கிறானே! இது எனக்கு இழைக்கப்படும் அநீதியில்லையா?'' என்று தன்னிரக்கத்தில் புலம்பி, உன் மனசைக் கொட்டிக் காற்றில் எனக்கொரு கடிதம் எழுதியிருக்கிறாயே, இது ஏன்? உன் எண்ணத்தை நான் ஆமோதிக்க வேண்டும் என்பதற்காகவா? என் ஆமோதிப்பு உனக்கு அத்தனை முக்கியமா?

ஆனால் எனக்குக் குமட்டுகிறது ரம்யா? வருஷக்கணக்காய் வெறும் குப்பையாகவே மனசில் சேர்த்து வைத்திருக்கிறாயே! எப்படி இதனோடு வாழ்கிறாய்? இந்த மக்கிய நாற்றம் அருவருப்பாயில்லையா?''

கசப்பும் வெறுப்புமாக எண்ணங்கள், வெறும் குப்பைகள், மனசில் எடுத்து வைத்துக் கொள்ள உனக்குப் பூக்களே கிடைக்கவில்லையா ரம்யா? அதாவது, நல்ல விஷயங்களோ இனிய நினைவுகளோ ஏதுமில்லையா?

அம்மா முத்தமிட்ட உள்ளங்கையிலே சித்தி சூடு போட்டாள் என்று ஏழு வயதில் நடந்ததை ஐம்பது வயதிலும் அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு அழுதிருக்கிறாய். வரிசையைக் கொஞ்சம் மாற்றிப் பாரேன்! சித்தி சூடு போட்ட உள்ளங்கையில் அம்மா முத்தமிட்டிருந்தாள். இப்படி நினைத்து அந்த இனிமையில் ஆழ்ந்து போகலாமே! குப்பையைத் தள்ளு, பூவை எடுத்துக் கொள்.

தனக்கொரு மகன் பிறந்த பின் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தலானாள் என்பதை ஏன் நினைக்கிறாய்? தனக்கொரு மகன் பிறக்கும் வரை உன்னிடம் பாசத்தைப் பொழிந்தாள் என்பதை நினைத்துக் கொள்ளேன் இன்னொரு பூ.

சித்தி உன்னை வெறுத்தாள் என்பதை விட்டுவிட்டு, அப்பாவின் அன்பு உனக்கு எப்போதும் இருந்து என்பதை மனசில் பதித்துக் கொள். குழந்தையான உன்னிடம் இரவில் வந்து உன்னைக் கையிலேந்திக் கண்ணைத் துடைத்து, ''உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி?'' என்று நெஞ்சுருகப் பாடிக் கதை சொல்லிப் படுக்க வைத்துத் தட்டித் தூங்கச் செய்வாரே... அந்த நினைவை உன்னுடன் பத்திரப்படுத்திக்கொள். ஆமாம். அப்பா சித்தியின் கொடுமையிலிருந்து உன்னைக் காப்பாற்றவில்லை என்பதை வெகு அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறாயே, அப்பாவைப் பற்றிய இந்த நல்ல நினைவை ஏன் குறிப்பிடவில்லை?

உன் சித்தியின் விஷப் பேச்சால் உன் கல்யாணம் ஒன்றும் நின்று போய்விட வில்லையே! பேச்சுப் போட்டியில் உன் அறிவை வியந்தவர் இன்றுவரை உன்னிடம் அன்பு மாறாமல்தான் இருக்கிறார். அவர் கண் அழகிய பெண்ணின் பக்கமாய் அலைந்ததாம், பைத்தியமா உனக்கு? அழகை அதன் எந்த வெளிப்பாட்டிலும் ரசிப்பது என்பது மனித இயல்பு. ஊட்டியின் பசுமையான எழில் சூழலில் பச்சை ஆடையுடுத்து நின்றவள் அந்தக் கணம் அவ்விடத்தின் உயிர்நாடியாக, அதன் அழகுக்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பாகத் தோன்றியிருக்கலாம். ஏன் கூடாது? உன்னிடம் அவர் அன்பின் ஆந்தரிகம் என்றாவது மாறியதுண்டா? விகல்பமில்லாத அந்தப் பார்வையால் முகம் சுளித்த நீ அதற்குப் பதில் அந்த இடத்தின் வண்ண மலர்களும் பட்டுக் குழந்தைகளும் தண்ணென்ற காற்றும் மெத்தென்ற கதிரொளியு மான அழகிய சூழ்நிலையின் இனிமையை மனசில் தேக்கியிருக்கலாமே! உன் மடியில் குழந்தையோடு நீயே அழகின் மடியில் அமர்ந்திருந்த இன்பம் உன் மனசில் புகவில்லை. தேநீர் எடுத்து நீட்டிய அவர் அக்கறை, அந்த இன்பத்தின் ஒரு பாகமாய் உனக்குத் தோன்றவில்லை. அவர் கண் அலைந்தது என்று ஒரு கசப்பைத்தான் உள்வாங்கிக் கொண்டாய்.

வேறு நினைவுகளுக்கு எத்தனை சந்தர்ப்பங்கள் இருக்கின்றன! டை·பாய்ட் ஜுரத்தில் நீ படுத்தபோது இரவு பகல் பாராது அவர் உனக்குப் பணிவிடை செய்ததும், நீ விரும்பிக் கேட்டிருந்த புத்தகத்தைக் கொட்டும் மழையில் ஊரெல்லாம் அலைந்து தேடி எங்கோ நகர்க் கோடியில் ஒரு சிறு சந்துக்கடையில் கண்டுபிடித்து வாங்கி வந்து உன் கையில் வைத்து உன் முகம் மலர்வதைக் கண்டு பூரித்து நின்றதும்... இவை போன்ற எதுவும் உன் நினைவில் தங்கவில்லை. ஊட்டிக் கசப்பு ஒன்றைத்தான் இத்தனை ஆண்டு களும் நெஞ்சில் காப்பாற்றி வைத்திருக்கிறாய். குப்பை சேர்ப்பதில்தான் உனக்கு எத்தனை ஆசை!

உனக்கென்ன குறைச்சல் ரம்யா? வளமான வாழ்க்கை, அன்பான கணவன், எம்.எஸ்ஸி., எம்.சி.ஏ, முடித்து வெளிநாட்டில் கணிப் பொறி உயர்நிலைக் கல்வி பயிலும் அறிவுமிக்க மகள். எத்தனை பூக்கள் உனக்கு!

எனினும் நீ புலம்புகிறாய். இப்போது உன் முக்கியப் புலம்பல், உன்னைக் கொடுமை செய்த சித்தியின் வைத்தியத்துக்காக அவள் பிள்ளை உன்னிடம் பணவுதவி கேட்பது உனக்கு இழைக்கப்படும் அநீதி என்பது. அவள் உயிர் பிழைக்க நீ ஏன் உதவ வேண்டும்? அவள் செத்தால் உனக்கென்ன? சொல்லப்போனால் அது உனக்கு மகிழ்ச்சியல்லவா தரும்?

இருப்பினும், உடனடியாய்த் தம்பிக்கு ஒரு மறுப்புக் கடிதம் எழுதிப் போடாமல் என் ஆமோதிப்புக்காகக் காத்திருந்து காலம் தாழ்த்துகிறாய். அப்படியானால் உன் முடிவைப் பற்றி உனக்கே மூலையில் எங்கோ ஒரு சிறு சந்தேகம் இருக்கிறதென்று அர்த்தமா?

ஆபத்து என்று கேட்கும் போது உதவ மறுத்தால் அது உனக்குள் எங்கேயோ உறுத்தும் போல் தோன்றுகிறது. அதுதானே? அவள் இறந்தால் நீ சந்தோஷப்படுவாய் என்ற நினைப்பைவிட அதிக கனமாயிருக்கிறதா இந்த உறுத்தல்?

'இல்லை!' என்று கூவுகிறாய். 'பணம் அனுப்ப முடியாது என்று இப்போதே அவனுக்கு எழுதிவிடுகிறேன்' காகிதமும் பேனாவுமாய் மேஜையடியில் உட்கார்ந்து விட்டாய்.

ஒரு நிமிஷம் பொறு ரம்யா. நான் சொல்லும் மிச்சத்தையும் கேட்டபிறகு எழுது. ப்ளீஸ். எனக்காக.

''சரி, சொல்லு!''

நமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களுடன் வாழ்வது சுலபமான காரியமா?

''இல்லை, ஒரு போதும் இல்லை...''

கடைசி மூச்சுவரை நாம் நம்மோடு தானே வாழ்ந்தாக வேண்டும் ரம்யா?

'ஆமாம்'.

அப்படியானால் நம்மை நமக்குப் பிடிக்க வேண்டியது எவ்வளவு அவசியம்!

'நீ என்ன சொல்ல வருகிறாய்?'

நீ காப்பாற்றியிருக்கக்கூடிய ஒரு மனித உயிர் உதவி கிடைக்காததால் இறந்து போயிற்று என்றால் அதன் பிறகு உன்னை உனக்குப் பிடிக்குமா? உன்னோடு நீ வாழ சகிப்பாயா?''

சிறிது நேரம் வரை உன்னிடம் பேச்சில்லை. அசைவில்லை. சுவரை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாய். பிறகு பேனாவை மெல்ல மூடி வைக்கிறாய். நெற்றியில் கைபதித்து யோசனையில் ஆழ்கிறாய்.

உன்னை வெறுப்பவளுக்கு இந்த உதவியைச் செய்தாயானால் அதில் உனக்குப் பெரிய லாபம் இருக்கிறது ரம்யா. வெறுப்பு, கசப்பு என்றெல்லாம் மனசில் நீ சேர்த்து வைத்திருக்கும் குப்பை கூளங்கள் அனைத் தையும் இந்த ஒரே செயல் ஒரே வீச்சில் பெருக்கித் தள்ளித் துப்புரவாக்கிவிடும். அப்படிச் சுத்தமாகிய இடத்தில், நீ இதுவரை புறக்கணித்து வந்துள்ள நல்ல நினைவுகளை - அந்தப் பூக்களை எடுத்து வந்து வைத்துக் கொள்ளலாம். அவற்றை அழகான மாலையாய்த் தொடுக்கலாம். சித்திக்கு உதவி செய்வதன் மூலம் கசப்புத் தளை உடைந்து நீ பெறும் விடுதலையுணர்வு அந்தப் பூமாலையில் ஒரு பாரிஜாத மலர்போல் நடு நாயகமாய் விளங்கும். எனக்கும், குப்பையின் மக்கிய நாற்றம் நீங்கிப் பூமணம் கமழும் உன் மனசில் குடியிருப்பது கொஞ்சம் வசதியாய் இருக்கும்.

மீண்டும் பேனாவை எடுத்துத் திறக்கிறாய். மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொள்கிறாய். என்ன எழுதப் போகிறாய்?

உனக்குப் பதில் சொன்னதோடு என் வேலை முடிந்தது. இனி உன் இஷ்டம். வரட்டுமா ரம்யா?

உன் பிரிய
ரம்யா
******
நன்றி : ஒன்பது சகோதரிகள்
(உலகப் பெண் எழுத்தாளர் சிறுகதைகள்),தொகுப்பாசிரியர் : முனைவர் சுபாசு
சிந்தியன் பதிப்பகம், நந்தனம், சென்னை 35.

Young blood infusions could reverse ageing

Researchers injected young blood into old mice and saw rejuvenating effects in the mice’s brain function, muscle strength and stamina.
SuraNualpradid_blood_shutterstock
Image: Sura Nualpradid/Shutterstock
Chemicals found in young blood may have dramatic rejuvenating effects, according to three new studies published last week.

Two studies were conducted at Harvard University. One of them found young blood infusions rejuvenate the brain and muscles of older mice because chemicals in young blood improve circulation and help to increase the number of neural stem cells.

The second study found that young blood restores muscle tissue in older mice, increasing exercise endurance and strength. This is due to the protein GDF11, which is more abundant in young blood than in ‘old’ blood.

Amy Wagers, who was involved in the two Harvard studies, told The Guardian that there is good reason to believe a similar approach could combat the effects of ageing in humans, but more research still needs to be conducted.

The third study came out of the University of California and revealed that young blood infusions strengthened the connections in the hippocampus, making brain cells ‘talk’ to each other more effectively and reversing the impairments seen in the older brain, such as difficulty concentrating and bad memory.
Although the results are promising and the possibility of having similar outcomes in humans is very real, Saul Villeda, lead researcher of this study told The Guardian: “I wish our manuscript could come with a big caption that says 'Do not try this at home'. We need a clinical trial to see if this applies to humans, and to see if there are effects that we don't want."
Source: The Guardian

My humanity is bound up in yours, for we can only be human together. ©Desmond Tutu


எரிசக்தியைச் சேமிக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்போம்- டத்தோ டாக்டர் ந. மாரிமுத்து

பொருட்களின் விலையேற்றத்தால் அவதிவுறும் மக்களுக்கு அதிகம் பணம் சம்பாதிப்பது அல்லது செலவினங்களைக் குறைப்பது என இரண்டு வழிகள் உள்ளன.

ஆனால், பணம் சம்பாதிக்க நேரம் குறைவாக இருப்பதானால் முதல் வழியைக் கடைப்பிடிப்பதில் சற்று சிரமம். செலவினங்களை குறைக்கும் வழிமுறை எளிதானதாகவும் வழக்கமான பழக்கத்தில் உள்ளதாலும் இரண்டாவது முறையைக் கடைப்பிடிப்பது மிக எளிது.

இவ்வழிமுறைகளை வீட்டிலிருந்தே செய்யலாம். மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்துவதின் வழி மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கலாம்.

மின்சாரத்தை விவேகமான முறையில் பயன்படுத்துவதால் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியும் என்பதனை ஒரு பணி திட்டத்தின் வழி மருடி, பாரம், சரவாக் தேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.

மலேசிய பயனீட்டாளர் சம்மேளனத்தின் (போம்கா) இணை உறுப்பினர்களாக இருக்கும் மலேசிய நீர் மற்றும் எரிசக்தி பயனீட்டாளர் அமைப்பும் மலேசிய தரப்பாடு பயனீட்டாளர் சங்கமும் இணைந்து நடத்திய விவேக எரிசக்தி பயன்பாடு எனும் போட்டியில் இந்தத் பணி திட்டம் வெற்றி பெற்றது.

இத்திட்டத்தின் வாயிலாக இரண்டு மாதத்தில் அவர்கள் பள்ளியில் சுமார் 70 சதவீத மின்சார பயன்பாட்டைக் குறைந்துள்ளனர் இம்மாணவர்கள்.

இதில் மிகச் சுவாரசியமான செய்தி என்னவென்றால், மிகவும் எளிமையான மற்றும் வழக்கத்தில் உள்ள வழிமுறைகளைக் கடைப்பிடித்ததன் வாயிலாக இப்பணிதிட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். உதாரணத்திற்கு ஆசிரியர் அலுவகத்திலும் பள்ளியில் உள்ள இதர அலுவகத்திலும் உள்ள குளிரூட்டு சாதனத்தை 24 பாகை செல்சியஸ்யாக குறைந்து மின்சாரத்தின் பயன்பாட்டைக் குறைந்துள்ளனர்.

இதற்கு முன்பு, அதிகமான அலுவலக அறைகளில் குளிரூட்டு சாதனத்தின் வெப்பத்தை தேவையான அளவில் வைப்பதில்லை. மிக குளிர் நிலையான 16 பாகை செல்சியஸ்சில் வைப்பதால் அதிகமாக மின்சக்தி விரயமாகிறது.

நமது அரசாங்கமும் இந்நிலைமையை மாற்றும் முயற்சியில், அரசாங்க அலுவகங்களில் 23-24 பாகை செல்சியஸ் அளவில் மட்டுமே வைக்க வேண்டும் என சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

மற்றவர்களும் இந்த மாணவர்களின் திட்டத்தை ஓர் எடுத்துக்காட்டாக கொண்டு மழைக்காலங்களில் குளிரூட்டு சாதனங்களை அடைத்து விட்டு, காற்றாடியைப் பயன்படுத்தலாம். ஜன்னல்களைத் திறந்து விட்டால் அறையில் காற்றோட்டம் அதிகமாகி வெப்பத்தைக் குறைக்கும்.

இதனைத் தவிர, இம்மாணவர்கள் வகுப்பறைகளில் வெளிர் நிற சாயங்களைப் பூசியுள்ளனர். வெளிர் நிற சாயங்களைப் பூசுவதன் மூலம் வகுப்பறை சற்றும் வெளிச்சமாக இருக்கும். அதன் வழி நாம் மின் விளக்குகளைத் அனாவசியமாக எரிய விட வேண்டியதில்லை.

அம்மாணவர்களின் செயலைப் பெற்றோர்களும் ஒரு வழிக்காட்டியாக எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதன் வழி அன்றாட வாழ்வில் ஏற்படும் தேவையில்லா செலவைக் குறைக்கலாம்.

உலக அளவில் நடக்கும் மற்றொரு விரயம் என்னவென்றால் தொலைக்காட்சி மற்றும் தொலைக்காட்சி கேபிள் டிக்கோடரைப் பயன்படுத்தாத போது அதன் விசையை அணைக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். தயார் நிலையில் இருக்கும் டிக்கோடர் சுமார் 85 முதல் 90 சதவீத மின்சக்தியைப் பயன்படுத்துகின்றது. ஓர் இரவு அல்லது ஒரு நாள் முழுவதும் அணைக்காத போது எவ்வளவு மின்சக்தி விரயமாகிறது என்பதை நினைத்து பாருங்கள்.

அதனைத் தவிர மற்ற மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்தாத போது அதன் விசையை அணைத்து வைக்க வேண்டும். மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகு அதன் ப்ளாக்கை அகற்றி விடுவது நல்லது. ஏனெனில், விசையை அடைந்த பிறகும் ப்ளாக்கை அகற்றவில்லையென்றால் மின் ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

அது மட்டுமின்றி ப்ளாக்கை அகற்றி வைப்பதின் மூலம் இடி இடிக்கும் போது ஏற்படும் மின் சேதத்தைத் தடுப்பதோடு மட்டுமின்றி மின்சாரப் பொருட்களைப் பாதுகாக்க முடியும்.

மின் விளக்கு மற்றும் மின்விசிறியை அணைப்பது மிக எளிதான ஒரு காரியம் என்பதோடு குடும்பத்தோடு அதனைக் கடைப்பிடிக்கலாம். 30 நிமிடத்திற்கு மேல் கணினி மற்றும் மற்ற மின்சாரப் பொருட்களை அடைக்காமல் இருத்தல் கூடாது. அதன் ப்ளாக்கையும் அகற்றி விட வேண்டும்.

மின்சாரப் பொருட்களை வாங்கும் போது மிக கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். மின்சாரத்தையைச் சேமிக்க உதவும் பொருட்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு எல்சிடி திரைகள், கலிமாத்தான் விளக்குகள் போன்றவை மின்சக்தியைக் சிக்கனப்படுத்தும்

அலுவலகம், வீடு வெளியூர் என்று எங்கிருந்தாலும் மின்சக்தியைச் சேமிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் கண்டிப்பாக நம்மால் நம் நாட்டின் மின்சார உற்பத்தியின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். குறைந்தது இப்போது இருக்கும் நிலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். விவேகமான மின்சார பயன்பாட்டினால் பைங்குடில் விளைவுகளைத் தடுக்க முடியும். அதன் வழி சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டைத் தவிர்க்க முடியும். விவேகமான மின்சார பயன்பாடு மின்சாரத்தின் விலையேற்றத்தைக் குறைகிறது.

எவ்வளவு நாள் தான் பெட்ரோனாஸ் இயற்கை எரிவாயுக்கு, 66 விழுக்காடு உதவித் தொகையை வழங்கும்? மின்சார உற்பத்திக்கு இயற்கை எரிவாயு தேவைபடுவதால் சந்தை விலையில் அதன் விலை உயர்வாக உள்ளது.

நம் என்னவென்றால், மின்சாரத்தின் விலை ஏறிக் கொண்டே போகிறது என இங்கே புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

மக்கள் மத்தியில் விவேகமான மின்சாரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நமது அரசாங்கம் பல விதமான ஆராய்ச்சிகள் மற்றும் மானிய தொகை என செய்துள்ளது. மேலும் மலேசிய எரிசக்தி ஆணையம், மின்சாரப் பொருட்களில் விவேகமான மின்சாரப் பயன்பாடு மற்றும் பாதுகாப்புத்தரத்தை அங்கீகரித்து எரிச்சக்தி திறன் முத்திரையைத் தோற்றுவித்துள்ளது.

பல பேர்க்கு எரிசக்தி திறன் முத்திரையின் பயன்பாடு தெரிவதில்லை. மின்சாரக் கடையில் பணி புரியும் பணியாளர்களுக்கும் அது தெரியாததுதான் மிக வருத்தமான விஷயம்.

ஆதலால், இன்றையில் இருந்து மின்சக்தியை சேமிக்க ஆரம்பிப்போம்! எரிசக்தி சேமிப்பு, பண சேமிப்பு!

நன்றி - டத்தோ டாக்டர் மாரிமுத்து நடேசன்,
மலேசிய பயனீட்டாளர் சம்மேளனத்தின் தலைவர்

Say something about this pic !


You will not believe your eyes!!!!!!!

This video is about an island in the ocean at 2000 km from any other coast line.
Nobody lives, only birds and yet ...............
You will not believe your eyes!!!!!!!

This film should be seen by the entire world, please don't throw anything into the sea. Unbelievable, just look at the consequences!!!!!

கடைசியில் விடை கிடைத்தது!

அசாதாரண மனிதர்கள்!


அது ஒரு நாலு வயதுக் குழந்தை. ஆசை ஆசையாய் அந்தக் குழந்தையை அலங்காரம் செய்து பள்ளிக்கூடம் அனுப்பினாள் அம்மா. அந்தக் குழந்தைக்கு கொஞ்சம் காது மந்தம். ‘டாமி’ என்பது குழந்தையின் செல்லப் பெயர். மனம் நிறைய கனவுகளுடன் அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய தாயாருக்கு நெஞ்சு நிறைய சோகங்களை பரிசளித்தார் ஓர் ஆசிரியை.

மூன்று மாதம் பள்ளிக்கூடம் சென்று வந்த அந்தக் குழந்தையின் சட்டைப்பையில் ஒரு காகிதத்தை திணித்து அனுப்பியிருந்தார் ஆசிரியை. “படிப்பதற்கு இலாயக்கற்ற முட்டாள் உங்கள் டாமி. இவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்பித் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று அதில் எழுதியிருந்தது. குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு அந்தத் தாய் சொன்னாள், “என் மகன் அறிவாளி. நானே படிக்க வைப்பேன். அறிவாளி ஆக்குவேன்” என்று ஆவேசமாக முடிவெடுத்தாள். “படிக்கலாயக்கில்லை” என்று முத்திரை குத்தப்பட்ட அந்த பையனைப் பற்றி, அவன் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றைக்குக் கூடப் பிள்ளைகள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த முட்டாள் டாமிதான் 1093 கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன். பள்ளிக்கூடம் போகாத பையனைப் பற்றி பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக இன்று பாடம் நடக்கிறது போதுமா? சாதாரண மனிதர்களே அசாதாரணர்கள்.

எடிசனுடைய அறுபத்து ஏழாவது வயதில் அவருக்கு நேர்ந்த விபத்து தாங்கக்கூடியதே அல்ல. பாடுபட்டு அவர் உருவாக்கிய பல லட்சம் பொறுமான அவரது ஆய்வுக்கூடம், தொழிற்சாலை பற்றி எரிந்தது. இன்ஷீரன்ஸ் தொகையோ அதிகம் வராது. பற்றி எரியும் தொழிற்கூடத்தைப் பார்த்து எடிசன் சொன்னார். “நல்லது. என் தவறுகள் யாவும் எரிந்து போயின. என் பிழைகள் யாவும் கருகிவிட்டன. இந்த அழிவிலும் ஒரு நன்மை இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. இனி ஒரு புதிய தொடக்கம் உண்டு” என்றார். இந்த தீ விபத்து நடந்த மூன்றே வாரத்தில் அவர் ‘போனோகிராப்’ என்பதைக் கண்டுபிடித்தார்

தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள்

முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை பகிரவும் !

1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" ...யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லதுhttp://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.

3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற* 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே
8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/

9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

This 'fishy' plastic is a solution to a huge problem

A new bioplastic made from the second-most abundant organic material on Earth may help to stop plastic pollution.
WyssInstitute_plastic
Image: Wyss Institute

Look around you. Count all the objects that are made out of plastic. Most of them will end up buried in landfills – and some will take up to 1,000 years to degrade.
Chitosan, a form of chitin, is a polysaccharide found in the shells of shrimps and some insects. Chitin from shrimp shells is usually discarded or used in fertilisers, but researchers at the Wyss Institute have used a novel method to transform it into a bioplastic that is cheap and easy to make.
The chitosan bioplastic can be used to make 3D objects, such as plastic cups, cutlery and even diapers, using traditional casting or injection-moulding, explained the researchers in a news release. Best part: the material breaks down just a few weeks after being discarded, becoming a nutrient-rich fertiliser.
“There is an urgent need in many industries for sustainable materials that can be mass produced,” Wyss Director Donald E. Ingber said. “Our scalable manufacturing method shows that chitosan, which is readily available and inexpensive, can serve as a viable bioplastic that could potentially be used instead of conventional plastics for numerous industrial applications.”
Every year we produce about 300 million tons of plastic per year and recycle just 3 percent. This bioplastic can change it forever.

Basement Details

செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு

இது உலகின் முதன்முதல் அனைத்துவகை ஊடகங்களின் முழுவதுமான மிகஎளிதானதுமான  திரைப்படங்களின் முன்தயாரிப்பு அமைவாகும் இதனைhttp://celtx.com/index.html என்ற இதனுடைய வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இது திரைப்படம் ,ஒளிஒலிப்படம், ஆவணப்படம், நாடகம் ,கதை, நகைச்சுவை படக்கதை, விளம்பரம், விளையாட்டு படம், இசைப்படம் ,வானொலி போன்ற அனைத்துவகை ஊடகங்களின்  முன்தயாரிப்பு பணியான திரைக்கதை வசனம் எழுதுதல் கதாபாத்திரங்களை உருவாக்குதல் படப்பிடிப்ப பணிகளை திட்டமிடுதல் ஆகியவற்றிற்கு உதவுகின்றது ஆயினும் இவையனைத்தையும் குழப்பமேதுமில்லாமல் மிகச்சரியாக துல்லியமாக செய்கின்றது

நம்முடைய எண்ணவோட்டங்களின் வேகத்திற்கேற்ப அருவிகொட்டுவதை போன்று நம்முடைய கருத்துகளை தடையேதுமில்லாமல் மிகவேகமாக ஊடகங்களின் முன்தயாரிப்பு பணிகளை செய்து பாதுகாப்பாக சேமித்து ஐபோனிலும் ஐபேடிலும்  சரிபார்த்துகொள்ளும் வசதி இதிலுள்ளது தற்பேது 30 க்குமேற்பட்ட மொழிகளில் இதனை பயன்படுத்த அனுமதிக்கின்றது
சின்னத்திரை(பெரியதிரை)ப்படம் ,நாடகம், ஆவணப்படம்,விளம்பரபடம்,நகைச்சுவை படக்கதை,கதை ஆகியவற்றிற்கான செந்தரத்திற்கேற்ப உரையாடலை(வசனம்) எழுதுவதற்காக இதிலுள்ள Scripts என்ற கருவி பயன்படுகின்றது இந்த கருவியின்மூலம் ஆரம்ப வடிவமைப்பு உரையை தானாக பூர்த்தி செய்து கொள்ளுதல் ,பக்கமுடிவு, இரட்டைநெடுவரிசை பத்தியமைப்பு, காட்சி நிருவாகம், குறிப்புகளை உள்ளிணைத்தல் பக்கத்தலைப்பை உருவாக்குதல் ,எழுத்துபிழை சரிபார்ப்பு, உரையாடலை ஏற்றுமதிசெய்தல் ,இறக்குமதிசெய்தல் ,ப்பிடிஎஃப்,ஹெச்ட்டிஎமஎல் வடிவமைப்பில் உரையாடல் அறிக்கையை தயாரித்தல்  Text/HTML வடிவமைப்பிற்கு ஏற்றுமதி செய்தல், இறக்குமதி செய்தல் போன்ற பணி்களை செய்துகொள்ளமுடியும்
மேலும் நாம்உருவாக்கிய நம்முடைய திரைக்கதை வசனத்தை வேறுயாரும் மாற்றம் செய்யாமல் பூட்டி பாதுகாத்திடலாம் தேவையானவர்களை மட்டும் இதில் திருத்தம் செய்ய அனுமதிக்கலாம்
ஹாலிவுட் செந்தரத்தில் உரையாடலுக்குள் மற்றொரு உரையாடலாக அமைத்திடலாம் அதுமட்டுமல்லாது  நாடகவடிவமைப்பில் இருக்கும் ஒரு உரையாடலை திரைப் படத்திற்கு ஏற்றவாறு Adapt To என்ற பொத்தானை சொடுக்குவதன்மூலம் மிக எளிதாக மாற்றியமைத்து கொள்ளலாம்
LaTex எனும் ஆராய்ச்சியாளருக்கு மட்டும் பயன்படும் பயன்பாட்டினை பயன்படுத்தி  செந்தரமான காட்சிஎண், உரையாடல் எண் , தாளின் அளவு ஆகியவற்றை பராமரித்து  வெளியிடுவதற்கு இதிலுள்ள TypeSet/PDF என்ற கருவி  பயன்படுகின்றது

காட்சித்தலைப்பிற்கேற்ப உரையாடலை வகைபடுத்திட இதிலுள்ளIndex Cards என்ற வசதி பயன்படுகின்றது

காட்சியின்இடம் ,காட்சியமைப்பு, கதாபாத்திரங்கள்  என்பன போன்ற  32 தயாரிப்பு உறுப்புகளின் வகைகளை கொண்டு ஒரு கதையை உருவாக்குவதற்கு Story Development Forms என்ற வசதி பயன்படுகின்றது

இதில் இயல்புநிலைில் தயாராகஇருக்கும் மாதிரி திரைக்கதைவடிவமைப்பு நமக்கு பிடிக்கவில்லை யெனில் Template Engineஎன்ற கருவியின் மூலம் நாமே வேறுஒரு மாதிரியை உருவாக்கி சேமி்த்து கொள்ளலாம்

திரைக்கதை வசனம் உருவாக்கியவுடன் இதன் அடுத்த கட்டத்திற்கு செல்லுமுன் அதுஎவ்வாறு இருக்கும் என  Storyboarding என்ற கருவியை பயன்படுத்தி அதிலுள்ள உருவங்களைகொண்டு படப்பிடப்பு போன்று திரைக்காட்சிகளை போன்று முன்னோட்டம் பார்த்து தேவையான மாற்றங்களை செய்து மேம்படுத்திகொள்ளலாம்
ஒளியமைப்பிற்கேற்றவாறு விளக்குகளை எங்கெங்கு அமைக்கவேண்டும்  படப்பிடிப்பு கருவியை எங்குவைத்தால் காட்சி நன்றாக இருக்கும் என திட்டமிட்டு அமைத்திட Sketch Tool என்பது பயன்படுகின்றது
படத்தயாரிப்பிற்கு என்னென்ன பொருட்கள் எவ்வெப்போது தேவையென பட்டியல் தயார் செய்திடுவதற்காக Catalogs என்ற  கருவி பயன்படுகின்றது

மற்ற பயன்பாடுகளில் உருவாக்கப்பட்ட விரிதாள் அட்டவனை, உருவப்படம் உரையாடல் போன்றவைகளை உள்ளினைத்திட  External Documents என்ற  கருவி பயன்படுகின்றது

எந்தெந்த நடிக ர்எவ்வெப்போது அழைத்து பயன்படுத்தி கொள்ளவேண்டும் அதைப்போன்று படப்பிடிப்பிற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பன போன்றவைகளை கூட திட்டமிடுவதற்கு  Just In Time என்ற  கருவி பயன்படுகின்றது

வேறுஏதேனும் வசதிவேண்டுமானாலும் இதிலுள்ள Add-Ons துனைகொண்டு சேர்த்துகொள்ளலாம் இதனுடைய மூலக்குறிமுறை பதிவிறக்கம்செய்வதற்குhttp://download.celtx.com/source/celtx-2-9-1-src.tar.bz2   என்ற இதனுடைய வலைதளத்திலிருந்து செல்க THANKShttp://vikupficwa.wordpress.com/

குறும்பட டிப்ஸ் / இடறுகுழிகள்:

10 நிமிடப்படம்தானே ரெண்டு மணி நேரத்தில் எடுத்து முடித்துவிடலாம் என்று முதன்முதலில் படமெடுக்க கிளம்புபவர்கள் அது எத்தனை தவறான கருத்து என்பதை முதல் 30 நிமிடத்திலேயே உணர்ந்துவிடுவார்கள். ஒரு படம் எடுப்பது ஒரு தனிநபர் காரியமல்ல, ஒரு குழுவினராய் செயலாற்றி நிறைவேற்ற வேண்டிய கூட்டுப்பணி. அதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் குழுவினர் முழுவதுமே பாதிப்புக்குள்ளாவார்கள். அதனால்தான் ஒரு சரியான செயல்திட்டம் வகுப்பது மிக முக்கியமாகிறது. எனக்கு தெரிந்த டிப்ஸ் மற்றும் இடர்களை முடிந்தவரை பட்டியலிட்டிருக்கிறேன்.

1. திரைக்கதையை முடிந்தவரை அதற்குரிய வடிவத்திலேயே எழுதப்பழகுங்கள். அதையே மற்றவர்களுடன் கருத்து பரிமாற்றத்திற்கும் பயன்படுத்துங்கள். செல்டெக்ஸ் போன்ற இலவச மென்பொருட்களை பயன்படுத்துவது செலவை குறைப்பதுடன் திட்டமிடுதலுக்கும் பல நல்ல செயலிகளை கொண்டுள்ளது. ஒரு பக்க கதை படத்தில் ஒரு நிமிட நேரத்திற்கு ஒடும். ஒரு பக்கத்தை காட்சிப்படுத்த ஒன்னரை - இரண்டு மணிநேரங்கள் பிடிக்கும். அதனால் செல்டெக்ஸில் ஐந்து பக்க திரைக்கதை, முடிவில் 5 நிமிடம் ஓடும் படமாக வரும். அதை படம்பிடித்து முடிக்க எட்டு முதல் பத்து மணிநேரம் வரை பிடிக்கும்.

2. ஒரு கதாபாத்திரத்தின் வசனம் 10-12 வார்த்தைக்கு மிகாமல் பார்த்து கொள்ளுங்கள். படக்குழுவினரும், நடிகர்களும் பெரும்பாலும் தொழில்முறை கலைஞர்களாக இல்லாதபட்சத்தில், ஆறு - எட்டு வார்த்தைக்கு மேற்ப்பட்ட வசனங்களை இயல்பாக ஏற்ற இறக்கத்துடன் நீங்கள் நினைக்கும் வகையில் பேச வைப்பது மிகவும் கடினம். அதனால் வசனங்களின் அளவை குறைப்பது நல்லது. மேலும் பெரிய வசனங்கள் காட்சிகளை நீளமடையவைத்து பார்வையாலர்களை சலிப்பைடைய வைக்கும்.

3. காட்சிக்கோணங்களையும், காட்சி வரிசையையும் முன்தயாரிப்பிலேயே முடிவு செய்து கொள்ளுங்கள். படப்பிடிப்பு சம்யத்தில் லைட்டிங், கேமராவின் குறைபாடுகள் போன்றவற்றால் சில காட்சிகளின் அமைப்பு கோணங்களை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாவிட்டாலும், முன்னரே தீர்மானிப்பது படப்பிடிப்பு நேர அலைச்சல்களையும் கருத்து மோதல்களையும் தவிர்க்கலாம்.

4. படப்பிடிப்பில் நேரும் டெக்னிக்கல் விசயங்களை பிற்சேர்க்கையில் சரிபடுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணமே வரக்கூடாது. குறிப்பாக நிறங்கள், லைட்டிங் போன்ற சமாச்சாரங்களை பிற்சேர்க்கையில் சரிபடுத்திவிடலாம் என்ற நினைப்பிற்கு இடம் தரக்கூடாது. பிற்சேர்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பதை படப்பிடிப்பிற்கு முன்னரே முடிவு செய்திருக்க வேண்டும்.

5. நண்பர்களுடன் சேர்ந்து படம் எடுத்தாலும் அவர்களுடைய நேரம், பங்களிப்பு ஆகிவற்றை பற்றி முன்பே வரையறுத்து கூறிவிடுங்கள். யாராருக்கு எந்த துறை, எந்தவிதமான பங்களிப்பு, மற்றவர்களுடன் இருக்கும் சார்புநிலை ஆகிவற்றை முன்பே விலக்கிவிடுதல் நலம். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் 15-30 நிமிடங்கள் இதை தெளிவுபடுத்திவிடுவது நல்ல வாடிக்கை. நண்பர்களின் பங்களிப்பிற்கு தக்க அங்கீகரிப்பை செலுத்தவும் மறக்ககூடாது.

6. படக்கோணங்களை ஒளிப்பதிவாளரிடம் முன்னரே பேசி தெளிவுபடுத்திவிடுங்கள். ஒளி அமைப்பிற்கும் படக்கருவியை வைக்க தகுந்த இடம் போன்றவற்றை அவர் தயார் செய்ய அது உதவும்.

7. குறும்படங்களில் பங்கேற்பவர்களுக்கு பணம் கொடுக்க நம் பட்ஜெட் ஒத்து வராவிட்டாலும், கலைஞர்களுக்கு குறைந்தபட்ச உணவவையாவது வழங்குவதற்க்கான பட்ஜெட் செய்வது பண்பு.

8. ஒரு காட்சி/கோணத்தைப்பற்றி சந்தேகம் இருந்தால், படப்பிடிப்பிற்கு முன்பே டெஸ்ட் சூட் செய்துவிடுவது நல்லது. படப்பிடிப்பில் டெஸ்ட் செய்துகொண்டிருந்தால் குழுவினருக்கு டைரக்டர் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும்.

9. முடிந்தால் கலைஞர்களின் திறமையை கண்டறிய ஆடிசன் வைப்பது நல்லது. அப்படி ஆடிசன் நடக்கும் போது கையில் உள்ள சிறிய கேமராவாகினும் அதை படம்பிடித்து கொள்ளுங்கள். பின்னர் சரியான கலைஞர்களை தேர்ந்தெடுக்க உகர்ந்ததாக இருக்கும்.

10. ரிகர்சல் / ஒத்திகை பார்ப்பது மிகவும் அவசியம். முடிந்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே ஒத்திகை நடப்பது சிறப்பு. பெரும்பான்மையான கலைஞர்கள் இதை பொழுதுபோக்காக செய்ய வருவதால் ஒத்திகை அவர்களுடைய பங்களிப்பை மேன்மைபடுத்த உதவும். ஒத்திகையையும் படம்பிடித்தால் தவறுகளை திருத்த உதவும்.

முக்கியமான கட்டளையாக -

டைரக்டர்தான் கேப்டன் என்பதை தீவிரமாக செயல்படுத்துங்கள். சினிமா / படப்பிடிப்பு என்பது நம் மக்கள் அதீத விருப்பு கொண்டுள்ள ஒரு விசயம். படப்பிடிப்பை பார்வையிட வந்த நண்பருக்கு கூட காட்சி அமைப்பில் சில கருத்துகள் இருக்கலாம், டெண்டுலகருக்கே கிரிகெட் கற்றுத்தரும் துடிப்புடன் களத்தில் குதிக்க தயாராக நண்பர்கள் சுற்றிலும் இருக்கலாம். நடிகர்களின் நடிப்பை பற்றிய மாற்றங்களை சொல்ல நினைக்கலாம். ஆனால் அதை டைரக்டரிடமோ அவரது உதவியாளரிடமோ தெரிவிக்கலாமோ அன்றி, படக்குழுவினரையும், நடிகர்களையும் வெளி நபர்களோ மற்ற படக்குழுவினடிடத்திலோ நேரடியாக கருத்து / மாற்றங்களை சொல்ல அனுமதித்தல் கூடாது. டைரக்டர் மட்டுமே மொத்த குழுவினரையும் வழிநடத்தவேண்டும். நீங்கள் டைரக்டராக இல்லாத பட்சத்தில் இதையே கடைப்பிடித்து டைரக்டரின் பேச்சுக்கு மதிப்பளியுங்கள்.

குறும்படத்திற்கு இத்தனை திட்டங்களா என்று தளர்ந்துவிடாதீர்கள், முன்பே சொன்னது போல இந்த திட்டங்களை எல்லாம் அப்படியே கடைப்பிடிக்க வேண்டியதில்லை. முடிந்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு ஒரு முறை சென்று பார்வையாளராக சென்றி கவனித்துவிட்டு வாருங்கள்.

இனி என்ன, குறும்படம் எடுக்க கேமராவை கையில எடுத்துட்டீங்களா? அதான் தப்பு... அப்ப கட்டுரையை இன்னொருக்கா முதல்ல இருந்து படிங்க!

ருத்ர ஜபம்

மஹாபாரதத்தில் வேதவியாசர் அர்ஜுனனை பார்த்து "எவன் ஒருவன் வைகறைத் துயிலெழுந்து மனத்தூய்மையோடு ருத்ர ஜபம் செய்கின்றானோ அவன் இவ்வுலகில் அடைய முடியாத ஐஸ்வர்யம் எண்று எதுவும் இல்லை" என்று சொல்கிறார்.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துனையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லாஉயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோவில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோவில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

உலக அளவில்... முதல்முறையாக... சூர்யா படத்திற்கு மட்டும்! ரெட் ட்ராகன் டிஜிட்டல் கேமரா

உலக அளவில்... முதல்முறையாக... சூர்யா படத்திற்கு மட்டும்!

உலக அளவில் முதல்முறையாக சூர்யா நடிக்கும் படத்திற்கு ரெட் ட்ராகன் டிஜிட்டல் கேமரா பயன்படுத்துக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

சூர்யா - லிங்குசாமி இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், நவம்பர் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி உள்ளது.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இந்தப் படத்திற்காக டெஸ்ட் ஷூட் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்திற்காக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ஹாலிவுட்டில் கூட இதுவரை பயன்படுத்தாத ரெட் ட்ராகன் டிஜிட்டல் கேமராவுடன், ஆன்ஜினியக்ஸ் லென்ஸ் வைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இவருக்குப் பிறகு ஹாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர்களான ரிட்லி, ஸ்காட் உள்ளிட்டவர்கள் பயன்படுத்த இருக்கிறார்கள். இந்தப் புதிய முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

'இந்த முயற்சி முதல்முறையாக சென்னையில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து துவங்கி இருக்கிறேன்' என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் லிங்குசாமி, 'எனக்கு சூர்யாவுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. 'வேட்டை' படத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் கதையை மிகவும் நிதானதமாகத் தயார் செய்திருக்கிறேன். தற்போது நிறைய இளைஞர்கள் வித்தியாசமான கதைகள் மூலமாக அசரடிக்கிறார்கள்.

அவர்களுடன் போட்டி போடும் வகையில் இந்தப் படத்தின் கதையை அமைத்திருக்கிறேன். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன், நாயகியாக சமந்தா, இசைக்கு யுவன், எடிட்டிங் ஆண்டனி என முன்னணி நபர்களை வைத்து படத்தினை உருவாக்க இருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.

'இந்தப் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. சின்ன வயதில் 'தளபதி' படத்தில் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவைப் பார்த்து வியந்திருக்கிறேன். தற்போது அவர் என்னுடைய படத்திற்கு உலக அளவில் இதுவரை யாருமே உபயோகிக்காத கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்வது சந்தோஷமாக இருக்கிறது' என்கிறார் சூர்யா.

அடுத்த வருடம் மே மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை..!


100 மெகாபிக்சல் கேமராவை கண்டுபிடித்து சீன மின்னனுவியல் நிறுவனம் ஒன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கேமராவால் வானியல் அளவீடுகளையும், இயற்கை பேரழிவுகளையும் தெளிவாக படம் எடுக்க முடியும். சர்வதேச அளவில் பல வழி போக்குவரத்து முறைகளை பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த கேமரா உதவும். சீன அரசின் அறிவியல் ஆய்வுகழகத்தின் கீழ் இயங்கும் ஒளிதரன் மின்னணு நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.

கேமரா குறைவான எடையுடன் சுமார் 20 செ.மீ. அகலத்துடன் உள்ளது. மைனஸ் 20 டிகிரி முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையிலும் இந்த கேமரா இயங்கும். மிகவும் நவீனமான ஒளிப்பதிவும், உயர்திறன் தகவல் சேமிப்பு திறனும் உள்ள இந்த கேமராவிற்கு IOE3 கான்பான் என்று பெயரிடப்பட்டது. வானியல் தொலைவு இயக்க ஆய்வில் இந்த கேமரா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நிறுவனம் 81 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி!

தொப்பைஇரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறவேண்டும்.
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும்
பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.
மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்
தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.
அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்

Elephant Rock, Heimaey, Iceland

TCM( transcranial magnetic stimulation) therapy for depression

In TCM ( transcranial magnetic stimulation) therapy, an electromagnet is applied to the left side of the forehead. This induces currents in neurons in the left prefrontal cortex--where brain imaging studies have shown a deficit in activity in depressed patients.
It is thought that this can induce activity and blood flow to this area, but also causes changes in areas deeper in the brain (responsible for mood regulation) to which neurons in the cortex connect. Side effects of TCM tend to be mild, especially compared to antidepressants, and the most common complaint is a mild headache, Simpson said.
Transcranial Magnetic Stimulation 
A schematic showing how TMS stimulates the left prefrontal cortex, activating areas deeper in the brain. 
Neurostar